10/06/2006

Quia absurdum

தருமி அவர்களது இந்த இடுகை எனது இப்பதிவுக்கு தூண்டுகோலாக அமைந்தது. எல்லா மதங்கள் சம்பந்தமான அவரது சந்தேகங்கள் பிரசித்தமானவை. எனக்கும் பலமுறை அம்மாதிரி சந்தேகங்கள் வந்துள்ளன. ஆகவே அவரது இம்மாதிரி இடுகைகளை நான் சுவாரசியமாகப் படிப்பதுண்டு.

"ஆதாம் ஏடனில் தனிக்காட்டு ராஜாவாக இருக்கிறான். கடவுள் எல்லாம் உனக்கே என்று சொல்லி, பிறகு ஒரு 'rider' வைத்து விடுகிறார் - ஒரே ஒரு மரத்தின் கனியைப் புசிக்கக்கூடாதென்று! மீதிக்கதை எல்லோருக்கும் தெரியும்தானே. பாம்பு வருகிறது; ஏவாளை வார்த்தைகளால் ஏமாற்றுகிறது. தின்னக்கூடாதென சொல்லப்பட்ட கனி "அறிவு பெருவதற்கு விரும்பத்தக்கதாக இருந்ததாகக்" கூறப்படுகிறது. பிறகு அவர்கள் அந்தப் பழத்தைச் சாப்பிட்டு விட, கடவுள் "நீ எங்கிருக்கிறாய்:" என்று கேட்டார்."

இந்த விஷயத்தைப் பற்றித்தான் இந்தப் பதிவு. ஆதாம் மற்றும் ஏவாள் கடவுள் சொன்னபடி நடந்து அக்கனியை பறித்துண்ணாதிருந்தால் என்னவாகியிருக்கும்? சற்று கற்பனையை ஓட்டிப் பாருங்கள். முடியாவிட்டாலும் கவலையில்லை. ஏற்கனவே ஃபிரெஞ்சு எழுத்தாளர் Pierre Boulle இதை கற்பனை செய்து ஒரு அருமையான கதையை எழுதியுள்ளார். அது அவரது Quia Absurdum (Sur la Terre comme au Ciel) *சொர்க்கத்திலும் பூமியிலும் அபத்தங்கள்) என்ற சிறுகதை தொகுப்பில் வருகிறது. கதையின் பெயர் Quand le Serpent Échoua. (பாம்பு தோல்வியுற்றபோது).

இக்கதையில் ஆசிரியர் ஒரு விஷயத்தை முதலில் தெளிவுபடுத்துகிறார். அதாவது பழைய ஏற்பாட்டில் வரும் genesis நிகழ்வுகள் ஒவ்வொரு உலகிலும் அப்படியே வருகின்றது என்பதுதான் அது. இக்கதை ஆரம்பிக்கும்போது ஒரே நிகழ்வு பல்லாயிரக்கணக்கான முறை பல்லாயிரக்கணக்கான உலகில் நடந்து விட்டது. ஆகவே இந்த முறை பாம்புக்கு கூட கொஞ்சம் போர் அடிக்கிறது. ஏவாள் ஈடன் தோட்டத்தில் சந்தோஷமாகப் பாடிக் கொண்டிருக்கிறாள். பாம்பு அவளிடம் வந்து வேகமாகத் தான் சொல்வதை சொல்லி விட்டு அறிவுக் கனியை பறித்துண்ணும்படி ஏவாளுக்கு ஆசை காட்டி விட்டு தன் வழியே போக யத்தனிக்கும் போது, ஏவாள் இம்முறை கூறுகிறாள், "பாம்பே, நீ சொல்வதை நான் கேளேன், பரமபிதா எங்களுக்கு இக்கனியை பறிக்கக் கூடாது என்று ஆணையிட்டு விட்டார். ஆகவே நான் அக்கனியைத் தொடேன்" என்று கூற பாம்புக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. சரி ஆதாமிடமாவது போய் முயற்சி செய்ய, அவனோ அதை அடி அடி என்று அடித்து விரட்டி விடுகிறான்.

அன்று இரவு பரம பிதா வருகிறார். அவருக்குப் பல வேலைகள். நடுவில் இந்த வேலை வேறு, அதாவது ஆதாம் ஏவாளை ஈடன் தோட்டத்திலிருந்து வெளியேற்றுவது. "ஆதாம் எங்கிருக்கிறாய்?" என்று கோபம் கலந்த இடிக்குரலில் கேட்க, அவனோ "இங்கிருக்கிறேன் ஆண்டையே" என்று ஏவாளின் கையை பிடித்துக் கொண்டு தைரியமாக ஆடையின்றி அவர் முன் வந்து நிற்கிறான். "அக்கனியை பறித்தாயா" என்று சற்றே குறைந்த சப்தத்தில் வழக்கமான கேள்வியைக் கேட்க, "இல்லை ஆண்டே, அவ்வாறு செய்வோமா நாங்கள்" என்று கூற, பரமபிதாவுக்கு மூர்ச்சை வரும்போலாகி விட்டது. "சரி, சரி, ஜாக்கிரதையாக இருந்துக் கொள்" என்று சுரத்தேயில்லாமல் கூறிவிட்டு தன்னிடம் இருக்கும் சூப்பர் கணினியிடம் சென்று பார்க்கிறார். அதனிடம் நடந்ததை எழுதி உள்ளிட, அது மெதுவாகப் பேச ஆரம்பிக்கிறது. "இது என்ன சோதனை, இத்தனை உலகங்களிலும் சமத்தாக இருந்த ஆதாம் ஏவாள் இங்கு மட்டும் ஏன் படுத்துகிறார்கள்" என்று தனக்குத் தானே கேட்டுக் கொள்கிறது. பிறகு கூறுகிறது, "ஏவாள் இம்மாதிரி நடந்து கொள்வதற்கானச் சாத்தியக்கூறு ஒன்றின் கீழ் பத்து கோடி என்று நான் செட் செய்திருந்தேன். இது வரை நடக்காதது இப்போது நடந்து விட்டது".

"சரி இப்போது என்ன செய்யலாம்" என்று பரமபிதா கேட்க கணினி சற்று நேரம் கேட்கிறது. அதற்குள் இங்கு ஈடன் தோட்டத்தில் அனர்த்தம் ஆரம்பிக்கிறது. அக்கனியைப் பறிக்காததால் பாவம் புண்ணியம் பற்றிய அறிவே ஆதாம் ஏவாளிடம் சுத்தமாக இல்லை. ஏவாள் கையில் கிடைக்கும் பட்டாம்பூச்சிகளின் சிறகுகளை பிய்த்து ஆராய்கிறாள். ஆதாம் தோட்டத்திற்கே நெருப்பு வைக்கிறான். நேரம் செல்லச் செல்ல அவர்களது அட்டகாசங்கள் அதிகரிக்கின்றன. தோட்டத்தை விட்டு அவர்களை அனுப்பவும் முடியாது.

அப்போது பரமபிதாவின் புத்திரர் வருகிறார். "என்ன தந்தையே இப்படியாகி விட்டது, எப்போது இவர்கள் தோட்டத்தை விட்டு வெளியேறி, நான் சிலுவை சுமப்பது எல்லாம் நடக்கும்?" என்று அவர் தரப்புக்கு அவரும் கூற, பரம பிதா யோசனையில் ஆழ்கிறார். பிறகு வேறு வழியில்லாது புத்திரரிடம் ஒரு விஷயத்தைக் கூறுகிறார். அவரும் வேறு வழியின்றி அழகிய வாலிபன் உருவம் தரித்து, ஏவாளிடம் சென்று, அவள் மனதை மாற்றி அவளையும் ஆதாமையும் கனியைப் புசிக்கச் செய்கிறார். இப்போது பழைய ஏற்பாடுகள் நிகழ்ச்சிகள் தொடர்கின்றன.

இப்புத்தகத்தை நான் முப்பது வருடங்கள் முன்னால் படித்தேன். ஆகவே 100% அப்படியே கொடுத்தேன் எனக் கூறமுடியாது. ஆனால் பிளாட் அதுதான்.

இதே எழுத்தாளர் எழுதிய நாவல்தான் "Bridge on the river Quai". சர் அலெக் கினஸ் நடித்தது. அவரது பிரெஞ்சு நடை பிரமிக்கத் தக்கது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

25 comments:

தருமி said...

ஏதும் censor செய்து விட்டீர்களா என்ன? இளைஞன் எப்படி அதைச் சாதித்தான் என்றெல்லாம் சொல்லாமல் விட்டு விட்டீர்கள்?

dondu(#11168674346665545885) said...

ஆம் தருமி அவர்களே. இங்கு புத்திரர் காலை நட்சத்திரத்தின் (லூசிஃபர்) வேலையைச் செய்ய வேண்டியிருந்தது. அதுதான் ஆசிரியர் கூற நினைத்த அபத்தம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Bajji(#07096154083685964097) said...

கதை நன்றாக இருந்தது டோண்டு சார். உங்கள் பதிவுகளும் நன்றாக இருக்கின்றன.

கிருஷ்ணன்

dondu(#11168674346665545885) said...

நன்றி செர்வாண்டெஸ். டான் க்விக்ஸோட், சான்கோ பான்ஷா மற்றும் ரோசினாந்தே நலமா.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

"உங்களின் எந்த வார்த்தை வீச்சின் அர்த்ததிளும் அவர்களின் வாழ்க்கை அமையாதிருக்க இறைவனை இறைஞ்சுகிறேன்...."
ஆமென்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

இப்படி பாருங்கள் சந்திரா அவர்களே. பிறத்தல், வாழ்தல், போராடுதல் கடைசியில் இறத்தல் எல்லாமே வாழ்க்கையின் தவிர்க்க முடியாத நிகழ்வுகள். ஈடன் தோட்டத்திலேயே இருப்பதுதான் நிஜமான கொடுமை. உண்மை கூறப்போனால் கடவுள் ஆதாம் ஏவாளுக்கு நன்மையே செய்திருக்கிறார். சரியோ தவறோ சுயமுயற்சியே மேல் என்பதை கூறியிருக்கிறார்.

அதைப்போய் ஒரு சோகமாக விவரிப்பது நமது முதிர்ச்சியின்மையை காட்டுகிறது.

ராமர் காட்டுக்கு போகாதிருந்தால் அவதார நோக்கமான ராவண வதம் நடந்திருக்குமா? அதற்குத்தானே அந்த முக்கியத் தருணத்தில் கைகேயியின் மூளையை மாயை மூடியது. பிறகு விழித்துக் கொண்ட அவள் கதறுவது கல்லையும் உருக்குமே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

தினகர் அவர்களே, கட்டுகதையோ, இல்லையோ ஒரு நல்ல பாடம் தருகிறதல்லவா. பைபிள் கதைகள் பல உருவகக் கதைகள். நமது உபநிஷத்துகள் பற்றிக் கேட்கவே வேண்டாம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

"நாம் யாரும் பிறந்திருக்க மாட்டோம். ஆதாமும் ஏவாளும் ஜாலியாக ஏடனில் வாழ்ந்திருப்பார்கள். பிரசவ வலி என்பது இருந்திருக்காது."
ரொம்ப போர் அடித்திருக்கும் வாழ்க்கை. சுஜாதா அவர்கள் எழுதியுள்ளார், தான் இறந்த பிறகு நரகத்துக்கு போக விரும்புவதாக. ஏனெனில் சொர்கத்தில் நடக்கும் அகண்ட பஜனை ஒரு நாளைக்கு மேல் சகித்துக் கொள்ளக் கூடியது இல்லை என்று. அதிலும் ஒரு பாயிண்ட் இருக்கிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

"அதை பாவம், கடவுளுக்கெதிரான குற்றம் என்று தான் பைபிள் சொல்கிறது. நீங்கள் சொல்வது போல் சுயமுயற்சி என்று பைபிள் சொல்லவில்லை."
நீங்கள் கூறுவதும் சரிதான். நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

"Nobody argues that upanishads should replace biology text books in schools. But many fundamentalistis argue that darwin should not be taught in schools. Religion should have no place in school text books."
Yes, that is true. Especially in the USA. Isaac Asimov has written paasionately against such backward views.

Regards,
Dondu N.Raghavan

dondu(#11168674346665545885) said...

"சோ அவர்களும் நரகத்துக்கு தான் போக விரும்புவார். அங்கே தான் அனைத்து அரசியல்வாதிகளும் இருப்பார்கள்:-D அவர்கள் காலை வாரா விட்டால் அவருக்கு பொழுதே போகாது:-D"

அதானே, சோ அவர்களைப் பற்றி கூற மறந்து விட்டேனே.

சமீபத்தில் 1972-ல் பம்பாயில் அவர் நாடகங்கள் நடந்த போது எல்லா நாளும் போய் பார்த்தேன். அதில் ஒரு நாடகம், "இன்பக் கனா ஒன்று கண்டேன்". அதில் ஜாம்பஜார் ஜக்கு கெட்டப்பில் சோ வருவார். அவர் கனா காண ஆரம்பிப்பார்.

ஒரு தேசம். அதில் எல்லோரும் நல்லவர்கள். பொது நலனுக்காக அவரவருக்கு இடப்பட்ட வேலையை அவரவர் செய்வார்கள். தூய்ய வெள்ள உடை அணிந்து எப்போதை யாரை சந்தித்தாலும் ஒருவருக்கொருவர் வணக்கம் தெரிவித்துக் கொண்டு செல்வார்கள். ஆடியன்ஸுக்கு ஒரே அதிர்ச்சி, சோ நாடகத்துக்குத்தான் வந்தோமா என்று.

பிறகு தேர்தல் வரும். பதவி மோகம் வரும். கூத்துக்கள் வரும். டாக்டர் பட்டம் எல்லாம் ஒருவருக்கொருவர் கொடுத்துக் கொள்வார்கள். ஒரே கலகலப்புத்தான் போங்கள்.

கடைசியில் சோ பிடிவாதமாக விழித்துக் கொள்ள, நாடக மனிதர்கள் மறைவார்கள். சோ மட்டும் தனியாக ஸ்டேஜில் புலம்புவார். ஆனால் கடைசியாக சுதாரித்து, எல்லோரும் நல்லவர்களாக இருப்பதாகக் காட்டிய காட்சிகள் எவ்வளவு போர் அடித்தன என்பதை அவருக்கே உரித்தானக் குரலில் கூறி வைக்க, பார்வையாளர்களின் கரகோஷத்தில் பம்பாய் ஷண்முகானந்தா ஹாலே அதிர்ந்தது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

bala said...

டோண்டு அவர்கள் சொன்னது,

"பிறகு தேர்தல் வரும். பதவி மோகம் வரும். கூத்துக்கள் வரும். டாக்டர் பட்டம் எல்லாம் ஒருவருக்கொருவர் கொடுத்துக் கொள்வார்கள். ஒரே கலகலப்புத்தான் போங்கள்."

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.

இந்த பட்டம்,போஸ்டர்,கட் அவுட்,convoy of cars, கலாசாரம் ஏன்
தமிழ் நாட்டில் மட்டும் மிக அதிகமாக இருக்கு..இதற்க்கு மரபியல்/பரிணாமவளர்ச்சி ரீதியா ஏதாவது விளக்கம் இருக்கிறதா?

பாலா

Hariharan # 03985177737685368452 said...

//இந்த பட்டம்,போஸ்டர்,கட் அவுட்,convoy of cars, கலாசாரம் ஏன்
தமிழ் நாட்டில் மட்டும் மிக அதிகமாக இருக்கு..இதற்க்கு மரபியல்/பரிணாமவளர்ச்சி ரீதியா ஏதாவது விளக்கம் இருக்கிறதா?//

டோண்டு சார்,

இதற்கு தாங்கள் விளக்கமாக பதிவிட வேண்டுகிறேன்.

தங்களுடைய கிப்பூர் பதிவில் பின்னுட்டம் போட்டதிற்காக போலி இழிபிறவி வந்து மனவக்கிரப் ஈ மெயில் இரண்டு போட்டது!

உங்கள் சமாதான முயற்சிக்கான பலன் புரிந்து கொண்டேன். மனநோயாளியான இழிபிறவி போலிப்பயல் திருந்துவதாகப் படவில்லை.

அன்புடன்

ஹரிஹரன்

dondu(#11168674346665545885) said...

மனம் தளறாதீர்கள் ஹரிஹரன் அவர்களே. போலியார் சமாதானத்துக்கு வருவார் என்றுதான் நம்புகிறேன்.

தமிழ்நாட்டின் பந்தா கலாசாரத்தைப் பற்றி நீங்கள் சொன்னதுபோல பதிவு போட வேண்டியதுதான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

"இதற்க்கு மரபியல்/பரிணாமவளர்ச்சி ரீதியா ஏதாவது விளக்கம் இருக்கிறதா?"

அடக்கம் அமரருள் உய்க்கும் என்று கூறினார் ஐயன் திருவள்ளுவர். நான் என்ன நினைக்கிறேன் என்றால், இம்மாதிரி அறிவுரைகள் தேவைப்பட்டிருக்கின்றன அக்காலத்திலேயே. ஆகவேதான் ஐயனும் அதை வலியுறுத்தினார்.

தமிழக மக்கள் உணர்ச்சிவசப்படுபவர்கள். பொதுவாகவே தென்னிந்தியர்கள் அப்படித்தான், கேரளத்தவரைத் தவிர. அங்கெல்லாம் பிரேம் நசீர் போன்றவர்கள் தேர்தலில் நின்றிருந்தால் டெபாஸிட் கூட கிடைத்திராது. மற்ற 3 மானிலத்தவரும் 1000 கார்கள், வண்டி வண்டியாக மாலைகள் எல்லாவற்றுக்கும் மட்டுமே மயங்குகின்றனர். அவை இல்லாவிட்டால் சீந்துவதே இல்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Bajji(#07096154083685964097) said...

"டான் க்விக்ஸோட், சான்கோ பான்ஷா மற்றும் ரோசினாந்தே நலமா."

நீங்களும் டான் க்விக்ஸோட் பற்றி படித்திருக்கிறீர்களா? அவரைப் பற்றிப் பேசும்போது தீமைக்கு எதிராக யுத்தம் செய்தால் மட்டும் போதாது. அதையும் புத்திசாலித்தனமாகச் செய்ய வேண்டும் என்பதை படிப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று எங்கள் பேராசிரியர் தெய்வப்பிச்சை கூறியது ஞாபகத்துக்கு வந்தது.

கிருஷ்ணன்

dondu(#11168674346665545885) said...

டான் க்விக்ஸோட் ராட்சசக் காற்றாடிகளை அரக்கர்கள் என நினைத்து அதனுடன் மோதினான். அவன் ஒரு சுவாரசியமான முட்டாள். எது எப்படியாயியினும் அவன் தைரியத்தை பாராட்டுவோம்.

அவனை வைத்துத்தான் tilting at the windmills என்ற ஆங்கிலச் சொற்றொடர் உருவாயிற்று.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Muse (# 01429798200730556938) said...

அமைதியான முறையில் டாவின்ஸி கோட் படத்தை தடை செய்வதில் வெற்றி பெற்ற நாங்கள் இதுபோன்ற கருத்துக்களை வெளியிடும் புத்தகங்களையும், ப்ளாக்குகளையும் தடை செய்யுமாறு போராடப்போகிறோம்.

நாங்கள் சொல்லுவதைக் கேட்காவிட்டால்..........

அப்புறம் மற்றொரு அமைதி மார்க்கம்போல நாங்களும் மாறுவோம்.

Muse (# 01429798200730556938) said...

இந்த பட்டம்,போஸ்டர்,கட் அவுட்,convoy of cars, கலாசாரம் ஏன்
தமிழ் நாட்டில் மட்டும் மிக அதிகமாக இருக்கு..இதற்க்கு மரபியல்/பரிணாமவளர்ச்சி ரீதியா ஏதாவது விளக்கம் இருக்கிறதா?


ரிச்சர்ட் டாவ்க்கின்ஸ் அப்படித்தான் கூறுகிறார்.

dondu(#11168674346665545885) said...

"அப்புறம் மற்றொரு அமைதி மார்க்கம்போல நாங்களும் மாறுவோம்."
:)))))))))))))

ஆன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

"ரிச்சர்ட் டாவ்க்கின்ஸ் அப்படித்தான் கூறுகிறார்."
பெயரை ஆங்கில எழுத்தில் கொடுத்தால் கூகளண்ணன் துணை நாடுதல் எளிதாக இருக்கும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Muse (# 01429798200730556938) said...

ஆஸிரியர் பெயர்: Richard Dawkins

புத்தகத்தின் பெயர்: The Selfish Gene

dondu(#11168674346665545885) said...

மிக்க நன்றி ம்யூஸ் அவர்களே. முடிந்தால் புத்தகத்தைப் பெற முயற்சிக்கிறேன்.

"சுயநலம், ஒரு நல்ல குணம்" என்று பொருள்படும் தலைப்பில் ஏய்ன் ரேண்ட் எழுதியதைப் படித்திருக்கிறீர்களா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

bala said...

//மிக்க நன்றி ம்யூஸ் அவர்களே. முடிந்தால் புத்தகத்தைப் பெற முயற்சிக்கிறேன்.

"சுயநலம், ஒரு நல்ல குணம்" என்று பொருள்படும் தலைப்பில் ஏய்ன் ரேண்ட் எழுதியதைப் படித்திருக்கிறீர்களா//

Muse Thanks for the info..will try to read..

bala

Anonymous said...

The idea of the Son of God being forced to play the role of Lucifer, the Morning Star is just mind-boggling.

I have read that God's most favorite Archangel was this Lucifer. Another absurdity, which makes us think. There are wheels within wheels than?

Thangamma

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது