12/29/2008

ஜாதியின் தாக்கத்தை டோண்டு ராகவன் உணர்ந்த தருணங்கள்

எனது வலைப்பதிவர் சந்திப்பு பற்றிய பதிவில் பதிவர் ஆர்.வி. இவ்வாறு பின்னூட்டம் இட்டார்.
“நீங்கள் பார்ப்பனீயம், ஜாதீயம் பற்றி எழுதியதை பார்த்ததும் அட என்று வியந்தேன். ஏறக்குறைய இதே தோரணையில் ஒரு வாரம் முன் ஒரு போஸ்ட் எழுதி இருந்தேன். இளைஞரான உங்கள் வாழ்க்கையில் ஜாதி பற்றிய பிரக்ஞை எங்கே எல்லாம் குறுக்கிட்டிருக்கிறது? இதை பற்றி எழுதினால் என்னை போன்ற அரை கிழங்கள் கொஞ்சம் புரிந்து கொள்வோம்”. அவருக்கு நான் அளித்த பின்னூட்டத்திலிருந்து: “எனது வெளிப்படையான எண்ணங்கள் என்னும் பதிவில் நான் எழுதியதை அப்படியே இங்கு தருகிறேன். அதற்கான பின்னுட்டங்களைப் பார்க்க இங்கு செல்லவும்”:

அப்புறம் பார்த்தால் அவரே அதில் பின்னூட்டமும் இட்டிருக்கிறார் என்பதை கூறி விட்டு மறுபடியும் எழுதியுள்ளார், “ திருநெல்வேலிக்கே அல்வா விற்ற கதையாகிவிட்டது. உங்கள் மறுமொழியை பார்த்ததும், "பார்ப்பனராக பிறந்ததில் என்ன பெருமை" என்று நானே கேட்டிருந்த ஞாபகம் வந்தது. உங்களிடமே வந்து ப்ளாக் உலகில் பார்ப்பன வெறுப்பை பற்றி நான் எழுதியதை பார்க்க சொல்லி இருக்கிறேனே! நம் கருத்துகள் இங்கே ஒன்றுபட்டிருப்பது மகிழ்ச்சி. உங்கள் வாழ்க்கையில் ஜாதியின் தாக்கத்தை நீங்கள் உணர்ந்த தருணங்கள் என்னென்ன? அனுபவத்தில் மூத்தவர் என்ற முறையிலும், இளைஞர் என்ற முறையிலும், உங்கள் அனுபவங்கள் சுவாரசியமாக இருக்குமே”!

எனக்கும் அது சரி என படுவதால் எனது பின்னணியையும் கூறிவிடுகிறேன். முதற்கண் ஒன்று தெளிவுபடுத்துவேன். வடகலை ஐயங்காராக பிறந்ததற்கு நான் பெருமை படுகிறேன் என எழுதியதற்கு காரணமே இப்போதைய தமிழ் உலகில் பார்ப்பனன் என்பவனை இளப்பமாகவே பார்ப்பனரல்லாதவர்கள் நோக்குகின்றனர். அதற்கு பயந்து பல பார்ப்பனர் தாம் பார்ப்பனர் என்பதை அடக்கி வாசித்து, தேவையானால் தாங்களும் பார்ப்பனரை திட்டினால் காலணா பிரயோசனமில்லாத இணையதாசில்தார்களாக தம்மை நினைத்து கொள்ளும் சில பேர்வழிகளின் அங்கீகாரத்தைப் பெறுவதாக நினைத்து, ஆனால் அதே பேர்வழிகளின் இளப்பத்தை மேலும் சம்பாதித்து கொள்கின்றனர். அம்மாதிரி தயங்கும் பார்ப்பனரிடம் “ஐயா பார்ப்பனனாக பிறப்பதற்காகா ஏன் பயப்படுகிறீர்கள்? இது பெருமைக்குரிய விஷயம்தான்” என அடித்து கூறுவதே நான் எழுதியதன் நோக்கமாகும். மற்றப்படி பார்ப்பன சாதி மற்ற எந்த சாதியையும் விட சிறந்தது என நான் எங்குமே கூறியதில்லை.

ஓக்கே, எனது பின்னணிக்கு செல்வேன். நான் பொறியியல் கல்லூரியில் சமீபத்தில் 1963-ல் சேரும் வரை இம்மாதிரி சாதீய எண்ணங்கள் எதுவும் எனக்கில்லை. பிறந்து வளர்ந்த திருவல்லிக்கேணியில் உள்ள சூழலில் நான் இருந்ததால் நான் நானாகவே இருந்தேன். இது பற்றி ஏதேனும் எண்ணம் இருந்திருந்தாலும் இந்த சாதி ஒசத்தி, வேறொரு சாதி மட்டம் என்ற ரீதியில் யோசித்ததே இல்லை. பொறியியல் கல்லூரியில் சேருவதற்கான நேர்க்காணலில் கூட அப்போதைய தொழில்நுட்பக் கல்வி இயக்குனர் திரு முத்தையன் அவர்கள் என்னைப் பார்த்து "நீங்கள் பார்ப்பனரா?" என்று கேட்ட போது "ஆம் ஐயா" என்றேன். பார்ப்பனராக இருப்பதில் பெருமைப் படுகிறீரா?" என்ற அடுத்தக் கேள்விக்கு அவர் கண்களைப் பார்த்துக் கொண்டு பதிலளித்தேன் "நிச்சயமாக ஐயா" என்றேன். அவர் புன்னகை புரிந்த வண்ணம் இன்டர்வியூ முடிந்தது என்றார். வெளியில் வந்ததும் என்னுடன் கூட வந்தவர்கள் எனக்கு கண்டிப்பாக சங்குதான் என்றார்கள். "அடப் போடா மயிரே போச்சு" என்றேன். என்ன ஆச்சரியம்! தேர்வு கிடைத்தது. இந்த அழகில் ஏற்கனவே என் தந்தை சிபாரிசுக்குச் செல்ல மாட்டேன் என்று வேறு கூறியிருந்தார். ஆக, முத்தையன் அவர்கள் என் பதிலுக்காக கோபம் எல்லாம் படவில்லை. இதில் என்ன விசேஷம் என்றால் திரு. முத்தையன் பார்ப்பன எதிர்ப்பாளர் என்ற பேச்சு அப்போது உண்டு. அதில் உண்மையிருந்தாலும் அதை தனது முடிவுக்கு அடிப்படையாக வைத்து கொள்ளாதது அவர் பெருந்தன்மைதான் என்பதையும் இவ்விடத்தில் பதிவு செய்கிறேன்.

ஆனால் நான் கல்லூரியில் சேர்ந்ததுமே இந்த பார்ப்பன வெறுப்பை நேரடியாகவே அனுபவித்தேன். பல வேற்று சாதியினர், அதிலும் தெற்கு மாவட்டங்களிலிருந்து வந்தவர்கள் எங்களை போன்றவர்களிடம் வேண்டுமென்றே எங்கள் சாதியை மட்டம் தட்டுவார்கள். அதுவும் ஹாஸ்டலில் இருக்கும் மாணவர்கள் பாடு திண்டாட்டம்தான். நல்ல வேளையாக நான் டே ஸ்காலராக இருந்ததால் ரொம்ப கஷ்டமெல்லாம் படவில்லை. எனது நண்பர்கள் எல்லா சாதியிலிருந்தும் வந்தவர்கள். அவர்களும் டே ஸ்காலர்களே, அதுவும் திருவல்லிக்கேணியில் வசிப்பவர்களே. ஆக இப்படியே விளையாட்டாகவே கல்லூரிக்காலம் முடிந்தது.

1971-ல் பம்பாய்க்கு சென்று மூன்றரை ஆண்டுகள் இருந்ததில் இந்த பார்ப்பன வெறுப்பு என்னை அண்டவில்லை. ஏனெனில் தமிழ்நாட்டைத் தாண்டியதுமே பார்ப்பன வெறுப்பு கிட்டத்தட்ட மறைந்து விடுகிறது. பம்பாய்க்கு பிறகு அடுத்த 7 ஆண்டுகள் சென்னையில் வசித்தபோதும் நேரடியாக தாக்கம் ஏதும் இல்லை. 1981-லிருந்து 2001-வரை தில்லியில் இருந்தபோது பார்ப்பனர்களுக்கு மிகப்பெரிய மதிப்பே இருந்தது. உதாரணத்துக்கு ஒரு பிராம்மண புரோகிதர் பஞ்சக்கச்சம் அணிந்து, திருநீறோ திருமண்ணோ இட்டு சென்றால், “நமஸ்தே பண்டிட்ஜீ, ஆயியே பண்டிட்ஜீ” என்றெல்லாம் வட இந்தியர்கள் மரியாதையுடன் பேசுவார்கள். ஆக, இங்கும் எனக்கு எந்தவித தாக்கமும் இல்லை.

தாக்கம் என்று சீரியசாகக் கூறப்போனால் இங்கு திரும்ப வந்து வலைப்பூ தொடங்கியதும்தான் எனக் கூறவேண்டும். போலி டோண்டு பிரச்சினையே அதனால்தான் வந்தது என்பது எல்லோருக்குமே தெரியும். அதே சமயம் என் சார்பாக இருந்தவர்கள் பல சாதி மற்றும் மதங்களைச் சேர்ந்தவர்கள் என்பதையும் இங்கு கூறக் கடமைப்பட்டுள்ளேன்.

கிட்டத்தட்ட எல்லா நாளுமே பார்ப்பனர்களை தாக்கியே பல பதிவுகள் தமிழ்மணப்பக்கங்களில் காணக்கிடைக்கின்றன. உதாரணத்துக்கு இந்தப் பதிவர் போடும் பதிவுகள்.

தலித்துகள் மேல் வன்கொடுமையா, பார்ப்பனீயத்தைத் தாக்கி பதிவு போடுவார்கள். உள்ளே போய்ப் பார்த்தால் வன்கொடுமை செய்தது கவுண்டராகவோ, தேவராகவோ, வன்னியராகவோ, அல்லது வேறு யாராவதாகவோ பார்ப்பனர் அல்லாதவராக இருப்பார்கள். நான் கேட்பது இதுதான், “பின்னே ஏண்டா ஜாட்டான் பார்ப்பனீயம் எனக் கூறுகிறாய்? உயர்சாதீயம் என சொல் இருக்கிறதல்லவா, அதைக் கூறு” என்பதே. உடனே விளக்கெண்ணெய் விளக்கங்கள் வரும், அதாவது, “நாங்கள் பார்ப்பனியத்தைத்தான் எதிர்க்கிறோம், பார்ப்பனரை அல்ல” என்று. இங்கு அவர்கள் பார்ப்பனீயம் என்று உயர்சாதீயத்தையே கூறுகின்றனர். உயர்சாதீயம் என்ற ஒரு தனிச்சொல் இருக்கும்போது தேவையற்று பார்ப்பனீயம் என்று பேசி பார்ப்பனரை ஏன் இழிவுபடுத்த வேண்டும்? இப்போது என்ன நடக்கிறது என்றால் வன்கொடுமைகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட பார்ப்பனருக்கு மோட்டிவேஷன் இல்லாமல் போகிறது. என்ன வேண்டுமானாலும் அடித்து கொள்ளுங்கள் நாங்கள் ஓரமாக நிற்கிறோம் என்ற மனநிலையில்தான் பார்ப்பனர்கள் உள்ளனர்.

மோடிக்கு ஆதரவா, இஸ்ரேலுக்கு ஆதரவா, உடனே பார்ப்பனீயம் வந்துவிடுகிறது. இந்த நிலைப்பாடுகளுக்கும் பார்ப்பனீயத்துக்கும் என்ன சம்பந்தம் என்று பகுத்தறிவுடன் ஒரு கேள்வி கேட்டாலே அவர்களுடைய தீசிஸ் எல்லாம் காலி. அதுவும் இஸ்ரேலின் தீவிர ஆதரவாளனான என்னைப் போய் நாசிஸத்துக்கும் ஆதரவாளன் என அபத்தமாக சரித்திர அறிவேயில்லாது எழுதுவார்கள். ராமாயணத்தில் ஏதேனும் பிடிக்காத விஷயமா, உடனே அதை எழுதி விட்டு, பார்ப்பனர்களே பதில் கூறுங்கள் என்ற ரேஞ்சில்தான் விடுதலை போன்ற பத்திரிகைகள் எழுதுகின்றன. ஒரு பார்ப்பனன் திருடனாக இருந்து போலீசில் பிடிபட்டால் “பார்ப்பனத் திருடன்” என நீட்டி முழக்குவார்கள். அதையே வேற்று சாதிக்காரன் செய்தால் அப்போது சமரச சன்மார்க்கமாக வெறுமனே பெயரை மட்டும் போட்டு திருடன் எனக் கூறுவார்கள். கீழ்வெண்மணியில் தலித்துகளை ஒரு பார்ப்பன மிராசுதார் எரித்திருந்தால் பெரியார் என்ன மாதிரி ருத்ர தாண்டவம் ஆடியிருப்பார்?

நான் நேரடியாக பாதிக்கப்படாமல் பார்ப்பன வெறுப்பைப் பார்த்தது தியாகி வாஞ்சிநாதனனின் விதவைக்கு பென்ஷன் தரும் விஷயத்தில்தான். அவர் பார்ப்பனத்தி என்பதற்காகவே விடுதலை பத்திரிகை அவருக்கு பென்ஷன் தரக்கூடாது என்றெல்லாம் வரிந்து கட்டி எழுதியது. ஆஷ்துரை என்னதான் இருந்தாலும் கலெக்டராம், ஆகவே அவரை கொன்றது ராஜத்துரோகமாம். கொலையாளியின் விதவைக்கு பென்ஷன் தரக்கூடாது என்று மனதில் ஈரமேயில்லாது அப்பத்திரிகை எழுதியது. 60 ஆண்டுகள் விதவையாக கஷ்டப்பட்ட அப்பெண்மணி பென்ஷன் வாங்காமலேயே இறந்தார். அதுவும் என்னை பாதித்தது.

ஒன்று நிச்சயம். என்னுடன் நேரடியாக பழகியவர்களில் மா.சிவக்குமாரும் ஒருவர். அவர் ஒரு முறை என்னிடம் கூறியிருக்கிறார், “ஜாதிவெறி இல்லாதவர்களில் நீங்களும் ஒருவர்” என்று. இப்போதும் அதே கருத்துதான் வைத்திருப்பார் என நினைக்கிறேன். மற்றவர்களும் ஏறத்தாழ அந்த நிலைப்பாட்டுடனேயே இருப்பார்கள் என நம்புகிறேன். இணையத்தில் எனது இந்த மாதிரி பதிவுகள் கூட விருப்பு வெறுப்பின்றியே போடப்படுகின்றன. Setting the record straight என்ற வகையிலேயே அவை உள்ளன. ஆகவேதான் பதிவர் மீட்டிங்குகளிலும் என்னுடன் மனம் விட்டு பேசுபவர்கள் அதிகமே.

வேண்டுமென்றே இந்தத் தருணத்தில் பதிவை முடிக்கிறேன். வேறு ஏதாவது விளக்கங்கள் தேவையென்றால் பின்னூட்டமாகக் கேட்டால் அம்முறையிலேயே பதிலளிக்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

12/27/2008

தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு 27.12.2008

இந்த ஆண்டின் கடைசி வலைப்பதிவர் சந்திப்பு என வர்ணிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி இன்று (27.12.2008) மாலை 5 மணிக்கு தியாகராய நகர் நடேசன் பூங்காவில் ஆரம்பிப்பதாக நிகழ்ச்சி நிரல். எனது மின் ரயில் வண்டி மாம்பலம் ஸ்டேஷனுக்கு வரும்போது மாலை 04.55. ரங்கநாதன் தெருவை தாண்ட அடுத்த 10 நிமிடங்கள் ஆயிற்று. நான் சமீபத்தில் 1979 முதல் 1981 வரை வசித்த மோதிலால் தெரு, மற்றும் ராமானுஜம் தெரு வழியாக சென்று நடேசன் பூங்காவை அடையும்போது சந்திப்பு ஆரம்பம் ஆகிவிட்டிருந்தது.

நான் இம்முறை நோட்டு புத்தகம் ஏதும் கொண்டு செல்லாததால் எல்லாவற்றையும் நினைவிலிருந்து எழுத வேண்டிய கட்டாயம். வந்தவர்களின் பெயர் விவரங்கள் முழுமையானதாக இருக்காது என அஞ்சுகிறேன். ஆகவே பெயர் விட்டு போனவர்கள் பின்னூட்டம் மூலம் தத்தம் பெயர்களையோ தம் நண்பர்கள் பெயரையோ கூறினால் அவற்றையும் லிஸ்டில் ஏற்றுவேன்.

நான் பார்த்தவர்கள் அக்கினி பார்வை, லக்கிலுக், பாலபாரதி, தாமிரா, கடலையூர் செல்வம், அதிஷா, நர்சிம், முரளி கண்ணன், சென்சிபிள் சென், ஜோசஃப் பால்ராஜ், புதுகை அப்துல்லா, திரு, மதுரை கணேஷ், அத்திரி, இளவஞ்சி, கேபிள் சங்கர், தராசு, குகன், கார்க்கி, விவேக் (அக்கினி பார்வையின் நண்பர்), அன்பு, காவேரி கணேஷ், ஜியோராம் சுந்தர், ஊர்சுற்றி, ராஜராஜன், பாலு, பாபு (தமிழ்க்கணினி), ஸ்ரீ ஆகியோர். சில பெயர்களை எனக்கு டெலிஃபோனில் நான் கேட்டபோது ஞாபகப்படுத்திய லக்கிலுக்குக்கு நன்றி. இன்னும் சில பெயர்களை எனக்கு நினைவூட்டிய அத்திரியின் பதிவுக்கு நன்றி.

ஒரு மாறுதலுக்காக முரளி கண்ணன் அவர்கள் தனது பதிவில் விளையாட்டாக குறிப்பிட்ட நிகழ்ச்சி நிரலை எடுத்து பேசலாம் என விளையாட்டாக தீர்மானிக்கப்பட்டு மணமானவ்ர்கள் புலம்பலை தாமிரா அவர்கள் ஆரம்பிப்பார் என கூறப்பட அவர் தயங்க, சமீபத்தில் 1970களில் திருமணம் செய்துகொண்ட பதிவர்களும் இதுதொடர்பாக தங்களது அனுபவங்களை பகிர்ந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன் என தனது பதிவில் எழுதியிருந்த லக்கிலுக் ஆரம்பித்தார். கல்யாணம் அவசியமா என்பதிலிருந்து ஆரம்பித்து விவாதம் சென்றது. கல்யாணத்தைவிட சேர்ந்து வாழ்வதில் சம உரிமை பேணப்படுகிறது என பாலபாரதி (?) கூறினார். அம்மாதிரி சேர்ந்து வாழ்வது பெண்ணுக்கு பாதுகாப்பாக இருக்காது என நான் தெளிவாக கூறினேன். முந்தைய தலைமுறை வாழ்க்கை பற்றி என்னைக் கேட்க எனக்கு வயது 26 மட்டுமே ஆவதால், வேறு யாராவது வயதானவர்களை கேட்குமாறு அன்புடன் ஆலோசனை கூறினேன். தாம்பத்திய பிரச்சினைகள் எல்லா காலத்திலும் உண்டு என்றும், ஜொள்விடும் ஆண்கள் எல்லா காலத்திலும் இருந்து வந்திருக்கின்றனர் என்றும் கூறி சமீபத்தில் 1981-ல் விகடனில் வந்த சிவசங்கரி அவர்கள் எழுதிய பாலம் என்னும் தொடர்கதையில் வந்த ஒரு நிகழ்ச்சியை (கதைப்படி 1907-ல் நடந்தது) எடுத்து கூறினேன். அவ்வளவு காலமாக இருந்து வந்திருக்கிறது என்பதால் இந்த பழக்கவழக்கங்கள் அப்ப்டியே வைத்திருக்க வேண்டுமா என பால பாரதி கேட்டதற்கு நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அதுபாட்டுக்கு இருக்கும் என கூறினேன். எது எப்படியானாலும் துணை அவசியம் என முடிவுக்கு எல்லோரும் வர ஒருபதிவர் ஆணுக்கு ஆண் துணையாக இருக்கக் கூடாதா என்ற நெருப்பு போன்ற யோசனை கூற “அவனா நீயி” என அவரிடமிருந்து சற்றே ஒதுங்குவது போல பாவனை செய்யப்பட்டது.

குளிர் காலமாகையால் சட்டென்று இருள் சூழ்ந்தது. கூட கொசுத்தொல்லை வேறு. ஓரிடத்திலிருந்து பூங்காவின் இன்னொரு இடத்துக்கு போனாலும் அங்கும் தொல்லைதான்.

அடுத்த ஐட்டமாக வரும் பாராளுமன்றத் தேர்தல் சம்பந்தமாக பேச்சு வந்தது. இதையும் லக்கிலுக்கே துவக்கி வைத்தார். ஓரிரு மாதங்களுக்கு முன்னால் திமுகவுக்கு 40 இடங்களிலும் தோவி என்று தனக்கு தோன்றியதாகவும் ஆனால் பாதிக்கு பாதி என்ற அளவுக்கு நிலைமை தேறியிருப்பதாகவும் அவர் கூறினார். மத்தியில் பாஜக வரும் வாய்ப்பு இருக்கலாம் என கூறப்பட்டாலும் தமிழகத்தில் அதற்கு சங்குதான் என கூறப்பட்டது. பாஜக அனுதாபியான என்னிடம் இது பற்றி கேட்கப்பட்டபோது நானும் தமிழகத்தை பொருத்தவரை பாஜக அனாதைதான் என உறுதி செய்தேன்.

“ஏதாவதுசெய்யணும் பாஸ்” என சமூகத்திற்க்கு பதிவர்களின் பங்களிப்பு பற்றிய விவாதத்தை நர்சிம் தொடங்கி வைத்து பேசினார். பீச்சு பதிவர் கூட்டத்தை பற்றிய அவரது பதிவில் ஒரு அனானி “நீங்கள் கூடி என்ன கிழித்தீர்கள்” என அவருக்கு பின்னூட்டமிட்டதாகவும், அவருக்கு அப்போது தக்க பதிலைக் கூறினாலும் (“நீங்களே இதை சொல்ல அனானியாகத்தானே வந்தீர்கள்?), நிஜமாகவே நாம் ஏதாவது செய்ய வேண்டாமா என அவர் கேள்வி கேட்க, அதெல்லாம் சிறு சிறு குழுக்களாக செய்வதுதான் பிராக்டிகல் என்று கூறிய பாலபாரதி என்றென்றும் அன்புடன் பாலா (அந்தோணிமுத்துவுக்கு சக்கர நாற்காலி போன்ற உதவிகள்) மற்றும் செந்தழல் ரவி ஆகியோர் ஏற்கனவே செய்து வரும் தொண்டுகளையும் குறிப்பிட்டார்.

இதற்குள் நேரம் 7 மணிக்கு மேல் ஆகிவிட்டது. கொசுத்தொல்லை தாங்க முடியலை நாராயணா என்பதால் இடத்தை காலி செய்து பூங்காவுக்கு பின்னால் உள்ள டீக்கடைக்கு சென்றோம். அங்கு பல குழுக்களாக பிரிந்து டிஸ்கஷன் நடந்தது. பதிவர் தராசு திடீரென வந்து என்னிடம் மன்னிப்பு கோரினார். முதலில் திகைத்த நான் அவரிடம் விவரம் கேட்க அவர் எனது ஒரு தவறு இன்னொரு தவற்றை நியாயப்படுத்தாது என்ற தலைப்பில் நான் இட்ட பதிவுக்கு தான் இட்ட பின்னூட்டத்தை எனக்கு நினைவுபடுத்தினார். இதெல்லாம் ஒன்றுமேயில்லை என நான் அவரை ஆசுவாசப்படுத்தினேன். அதே சமயம் செக்‌ஷன் 498-A துர் உபயோகம் செய்யப்படுவதை எதிர்த்து பதிவுபோட்டவர் தனது உதாரணங்களில் ஜாக்கிரதையாக இல்லாததால் அவர் தனது கேசை தானே பலவீனப்படுத்தினார் என்பதை மறுபடியும் வலியுறுத்தினேன். இதே மாதிரித்தான் சாதிக் கொடுமைக்கு எதிராக எழுதுபவர்கள் எல்லா குழப்பங்களுக்கும் பார்ப்பனரே காரணம் என எழுதுவதன் மூலம் விவாதம் திசைதிரும்பிப் போவதையும் நான் அவரிடம் குறிப்பிட்டேன். அவ்வாறு செய்வதால் அவர்கள் கேசுகளுக்கு பார்ப்பனர் தர்க்கூடிய ஆதரவு கிடைக்காமல் போகிறது எனக் கூறி நான் எழுதிய சகபதிவாளர்களே உங்களுக்கு வேண்டியது என்ன என்னும் பதிவில் எழுதிய “சிலர் கூறலாம் நாங்கள் பார்ப்பனியத்தைத்தான் எதிர்க்கிறோம், பார்ப்பனரை அல்ல. பார்ப்பனியம் என்று உயர்சாதீயத்தையே கூறுகின்றனர். உயர்ச்சாதீயம் என்ற ஒரு தனிச்சொல் இருக்கும்போது தேவையற்று பார்ப்பனீயம் என்று பேசி பார்ப்பனரை ஏன் இழிவுபடுத்த வேண்டும்? இப்போது என்ன நடக்கிறது என்றால் வன்கொடுமைகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட பார்ப்பனருக்கு மோட்டிவேஷன் இல்லாமல் போகிறது. என்ன வேண்டுமானாலும் அடித்து கொள்ளுங்கள் நாங்கள் ஓரமாக நிற்கிறோம் என்ற மனநிலையில்தான் அவர்கள் உள்ளனர். இதே போல ஒரு பதிவர் தமிழிசைக்கு ஆதரவாக பதிவுபோடும்போது தேவையின்றி "தமிழில் பாட மறுக்கும் பாப்பாத்திகள்" என்று கொச்சையான தலைப்பை வைத்து பார்ப்பனரை இப்போதைய நிலைக்கு பொறுப்பாக்க முயற்சி செய்ததில், தமிழிசைக்கு ஆதரவு தெரிவிக்கும் குரல்கள் அப்பதிவில் அந்த அளவுக்கு பலமிழந்தன” என்னும் கருத்துக்களை இன்னொரு முறை வலியுறுத்தினேன்.

இப்போது இப்பதிவை நான் போடுவதற்கான உண்மை காரணத்துக்கு வருகிறேன். உண்மை கூறப்போனால் முதலில் பதிவுபோடும் எண்ணம் என்னிடம் சுத்தமாகவே இல்லை. ஆனால் கடலையூர் செல்வம் அவர்கள் நாடி ஜோசியம் பற்றி தனது அனுபவத்தைக் கூறினார். மனிதர் அந்த அனுபவத்தில் ஆடிப்போயுள்ளார். தான் டெக்ஸ்டைல் டெக்னாலஜி துறையில் வேலை செய்வது உட்பட பல விஷயங்கள் அவர் பெயருக்கு கிடைத்த ஓலையில் இருந்ததாகக் கூறி அதிசயித்தார். தான் பெரியார் பாசறையை சேர்ந்தவர் என்றும் நம்பிக்கையில்லாமலேயே சென்றதாகவும் இப்போது என்ன நினைப்பது எனத் தெரியவில்லை என்றும் கூறினார். அக்கினி பார்வையும் தனது அனுபவத்தை கூறினார். அவரது ஓலை திருச்சியில்தான் இருக்கும் என கூறப்பட்டதாகவும் தான் இன்னும் போய் பார்க்கவில்லை என்றும் அவர் கூறினார். சிங்கை பதிவர் ஜோசஃப் பால்ராஜ் அவர்களும் நாடி ஜோசியத்தில் தனது தாயின் முழுப்பெயரும் கூறப்பட்டது என்று அதிசயத்துடன் கூறினார். பேச்சு இப்போது “சிதம்பர ரகசியம்” சீரியல் பற்றி திரும்பியது. இந்திரா சவுந்திரராஜன் அவர்கள் எழுதியது. அதுவரை இந்த சந்திப்பைப் பற்றி பதிவு வேண்டான்மெனெ நினைத்தவன் போட்டு வைப்போம் என துணிந்தேன். “ஆக இந்த அறுவை பதிவுக்கு கடலையூர் செல்வமே பொறுப்பு” என கத்துகிறான் முரளி மனோஹர். நன்றாக கத்தட்டும். கிடக்கிறான் சின்னப் பயல்.

உலகத் தரம் வாய்ந்த படங்கள் பற்றி பேச்சு வந்தது. பருத்திவீரன் என்னும் படம் கண்டிப்பாக உலகத் தரம் வாய்ந்தது என லக்கிலுக் கூறினார். என்ன, பாடல்களை மட்டும் எடுத்து விட வேண்டும் என்றார். கில்லி படத்தில் த்ரிஷா ஓடி வந்து விஜய் மேல் தாவி ஏறுவதை 20 டேக்குகள் எடுத்தார்கள் என ஒரு பதிவர் அலுப்புடன் (பொறாமையுடனும்?) கூறினார். சண்டைக்காட்சி ஷூட்டிங் பார்க்க ஆசை தெரிவித்தார் இன்னொருவர்.

மணி ஒன்பது ஆனதும் ஒவ்வொருவராக விடைபெற்று செல்ல நானும் எனது மின் ரயில் வண்டியை பிடித்து மீனம்பாக்கம் சென்றேன். பதிவு ஆரம்பித்த நேரம் இரவு 10.23. இப்போது நேரம் 11.47. குட் நைட்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

12/26/2008

சரித்திரத்தின் இருண்ட பக்கத்திலிருந்து

இன்று காலை காஷ்யப குமரில்லா என்பவர் அனுப்பிய மின்னஞ்சல் வந்தது. அது எனக்கு சுவாரசியமாகப் பட்டது. ஆகவே அவர் கேட்டதற்கிணங்க இப்பதிவு போடப்படுகிறது. ஆங்கிலத்தில் ஏற்கனவே போட்டாயிற்று. சோவியத் யூனியனுக்கு சப்பைகட்டு கட்டுபவர்கள் இதனால் எல்லாம் மனம் மாறப்போவதில்லை. நடுநிலைமையில் உள்ளவர்களுக்காகவாவது இது பயன்படட்டும். அக்கால சோவியத் ஒன்றியத்திலிருந்து அமெரிக்காவுக்கு கட்சி மாறிய Yuri Bezmenov-ன் நேர்க்காணல் டேப்புகளை இன்னும் முழுமையாகப் பார்க்க நேரம் இல்லை. ஆனால் கூடிய சீக்கிரம் அதை செய்வேன். வந்த மின்னஞ்சலை அனுப்பியவர் முகவரி மறைத்து கீழே தடித்த சாய்வெழுத்துகளில் தருவேன்.

இப்போது மின்னஞ்சலின் தமிழாக்கம்.

from Kashyapa Kumarila
reply-to
to
date Fri, Dec 26, 2008 at 6:42 AM
subject Fw: Video: How communist subversion of India happened
mailed-by xxx.com
signed-by xxx.com

ஐயா,

கீழே கண்டுள்ளவற்றை உங்கள் வலைப்பூவில் பதிவாக மாற்ற இயலுமா?

நன்றி,
KK
----------------------------------------------------------------

Yuri Bezmenov கெ.ஜி.பி. பிரச்சார பிரிவில் பணி புரிந்தவர். தில்லியில் சோவியத் தூதரகத்தில் அறுபதுகளில் 1970 வரை பணி புரிந்தவர். அந்த ஆண்டு அவர் அமெரிக்காவுக்கு ஓடினார்.

எண்பதுகளின் ஆரம்பத்தில் அவரது தொலைகாட்சி நேர்காணல் ஒன்று ஒளிபரப்பப்பட்டது. அது யூ ட்யூப்பில் 9 பாகங்களாக வந்துள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் கம்யூனிஸ்டுகள் அந்த நாட்டை கவிழ்க்க என்னென்ன முயற்சிகள் எல்லாம் செய்கின்றனர் என்பதை இந்த நேர்க்காணல் சுட்டிக் காட்டுகிறது. இந்தியாவின் பத்திரிகைக்காரர்க, எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், அரசியல்வாதிகள் ஆகியோர் எவ்வாறெல்லாம் கம்யூனிசம் மற்றும் மார்க்சிசத்துக்கு தோதாக மூளைச்சலவை செய்யப்பட்டனர் என்பதையும் இதில் காணலாம். முக்கியமாக டேப்புகளின் 6, 7 மற்றும் 8-ஆம் பாகங்களை கூர்ந்து நோக்கவும். நம்மவர் பவிசு அதில் பல்லிளிக்கிறது.

ப்ளே லிஸ்ட்: http://www.youtube.com/view_play_list?p=96832BA85ECDC4FF

எல்லாவற்றையும் ஒத்து கொள்ளாவிட்டாலும் எவ்வாறெல்லாம் கம்யூனிஸ்டுகள் செயல்பட்டு நம்மூர் “முற்போக்காளர்கள், விடுதலைவாதிகள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள்” ஆகியோரை செதுக்கினர் என்பதையாவது பார்த்து அறியலாம்.

இப்போதைய இந்தியாவுக்கும் இது பொருந்தும். கிறித்துவ சர்ச்சுகள், அரபி முல்லாக்கள் ஆகியோரும் இம்மாதிரித்தான் செயல்பட்டு, குஹா போன்ற போலி மதசார்ப்பற்றவர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் அறிவுஜீவிகளை உருவாக்குகின்றனர்.


மீண்டும் டோண்டு ராகவன். நேர்க்காணல் 9 பகுதியாக பிரிக்கப்பட்டுள்ளது. அதில் சொல்லப்பட்டவை எழுத்து ரூபத்தில் கிழே கண்ட 3 உரல்களில் காணக்கிடைக்கின்றன. விருப்பமிருந்தால் அவற்றையும் பார்க்கவும்.

பகுதி 1
பகுதி 2
பகுதி 3

அவற்றைப் பார்த்தால் / படித்தால் நீங்கள் ஆச்சரியப்படுவது நிச்சயம்.

சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கு பிறகு இம்மாதிரி பல விஷயங்கள் வந்தன. இது பற்றி நான் ஏற்கனவே பதிவுகள் போட்டுள்ளேன். மனித இயற்கைக்கு புறம்பான ஒரு தத்துவம், சரித்திரம் உருவாகும்போது ஆகியவை இதில் அடங்கும். பை தி வே, கிழக்கு ஜெர்மனி விழுந்த பிறகு நான் இட்ட ஷ்டாஸி பற்றிய பதிவிலும் இதைத் தொட்டுள்ளேன். இது உலகளாவிய செயல்பாடு என்பதையும் அப்பதிவு காட்டியுள்ளது. முக்கியமாக இந்திய கம்யூனிஸ்டுகள் மற்றும் அறிவுஜீவிகள் அசடு வழிந்ததையும் காணக்காண மனம் பொருமுகிறது. இந்தியர்களின் ஒத்துழைப்பை மிக குறைந்த விலைக்கு சோவியத் யூனியன் பெற்றது என்பது சரித்திர உண்மை.

இப்போதைக்கு இவ்வளவுதான். நேரம் கிடைத்ததும் எல்லா டேப்புகளையும் முழுக்க கேட்டு தேவையானால் இன்னொரு முறை உங்கள் முன்னால் வருகிறேன்.

அதுவரைக்கும் வணக்கம் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
பின்குறிப்பு: ஒரு மாதிரியாக டேப்புகளின் எழுத்து வடிவை படித்தேன். மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.

டோண்டு பதில்கள் 26.12.2008

அனானி (19.12.2008 காலை 05.54-க்கு கேள்வி கேட்டவர்):
1. Please answer in detail.
It is learnt that Murasoli Maran did his higher studies with the help of the money support given by M.G.Ramachandran.
Some 20 years before his sons were having business in small scale.
Yesterday it is told that the enthiran, rajini-sankar mega project,worth Rupees 150,00,00,000 is going to be produced by the great brothers.
How it is possible in India that some middle class family legal heirs alone are able to reach the top to this extent, withih a span of 20 years?
Is this due to 1.Their hard work 2.Their luck 3.Their tricks 4.Their gimmicks 5.Their ambani-style?

பதில்: நீங்கள் சொன்ன ஐந்துமே வெவ்வேறு அளவில் செயல் புரிந்துள்ளன. முதலில் அதிர்ஷ்டத்தை எடுத்து கொள்வோம். சம்பந்தப்பட்ட குடும்பத்தில் பிறந்ததே அதிர்ஷ்டம். ஆனால் அந்த குடும்பம் அவ்வாறான நிலைக்கு வந்ததன் காரணம் அதன் மூத்த உறுப்பினர் கட்சியில் செய்த உழைப்பு. அவருடைய பல எதிரிகள் கட்சியிலிருந்து தாமே விலகியும், ஓரம் கட்டப்பட்டும் அவரது முன்னேற்றத்தை எளிதாக்கியுள்ளனர். மாறன் சகோதரர்கள் வெறும் அதிர்ஷ்டத்துடன் நின்று விடவில்லை. அப்படியிருந்திருந்தால் மு.க. முத்து ரேஞ்சில்தான் இருந்திருப்பார்கள். சன் டிவி குழுமம் அவர்கள் முழு உழைப்பையும் பிரதிபலிக்கிறது. அதை தக்க வைத்து கொள்ள தந்திரம், அலம்பல், பந்தா ஆகிய உத்திகளை பயன்படுத்தத்தான் வேண்டும்.


கிரிதரன்:
1) Have you read in Thuglak (24/12/2008 edition) for Mr. S. Gurumorrthy's article on comparing the America's economic strength in 1930 with 2008 on the basis of their social culture? What is your opinion on that?
பதில்: படித்தேன். சிந்தனையைத் தூண்டிய கட்டுரை. கருத்து என்னவோ எளிமையானதுதான். வரவுக்குள் செலவழித்து எதிர்க்காலத்துக்கு தேவையானதை சேமிப்பதற்கு ஈடாக எதுவுமே இல்லைதான்.


r:
1. There is one word in the English language that is always pronounced incorrectly. What is it?
பதில்: incorrectly

2. A boat has a ladder that has six rungs, each rung is one foot apart. The bottom rung is one foot from the water. The tide rises at 12 inches every 15 minutes. High tide peaks in one hour. When the tide is at it's highest, how many rungs are under water?
பதில்: படகுடன் கூட ஏணியும் மேலெழும்பும். நானே இக்கேள்வியை கேட்டுள்ளேன்.

3. Is half of two plus two equal to two or three?
பதில்: Three. Well, it seems that it could almost be either, but if you follow the mathematical orders of operation, division is performed before addition. So... half of two is one. Then add two, and the answer is three.

4. How much dirt would be in a hole 6 feet deep and 6 feet wide that has been dug with a square edged shovel?
பதில்: ஒன்றுமே இருக்காது. இருந்தால் அது ஓட்டையே அல்ல.

5. What is the significance of the following: The year is 1978, thirty-four minutes past noon on May 6th?
பதில்: நேரம்/மாதம்/தேதி/ஆண்டு என்ற அமெரிக்க முறையில் எழுதினால் இவ்வாறு வரும்:
12:34, 5/6/78.

6. If a farmer has 5 haystacks in one field and 4 haystacks in the other field, how many haystacks would he have if he combined them all in the center field?
பதில்: ஒன்று. எல்லா வைக்கோல் போர்களையும் ஒன்றாக வைத்தால் அது ஒரே போராகத்தானே ஆகும்.

7. What is it that goes up and goes down but does not move?
பதில்: அளக்கும் கருவிகளில் காட்டப்படும் அளவுகள். உதாரணம்: டெம்பரேச்சர்.

பை தி வே, இந்த உரலுக்கு நன்றி.


அனானிகள் கேள்வி கேட்டவை:
1. திருமங்கலம் இடைத்தேர்தலுக்கான திமுக தேர்தல் பணிக்குழுவில் இருந்து தாம் விலகுவதாக, மு.க.அழகிரி இன்று திடீரென அறிவித்திருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளதாம். இது என்ன ஐயா புதுக் கதை?
பதில்: பேரம் முதலில் சரியாகப் படியவில்லையாக இருந்திருக்கும். இப்போது படிந்து விட்டிருக்கும். வேறு என்ன காரணம் இருக்க இயலும்?

2. இலங்கை அகதிகளுக்கான வசதிகள் குறித்து தி.மு.க. அரசு மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை விஜயகாந்த் கூறியுள்ளதாகவும், அவர் கூறியவற்றின் உண்மைத் தன்மையை அறியாமல் பேட்டியாக 'ஆனந்த விகடன்' வெளியிட்டதாகவும் தமிழக முதல்வர் கருணாநிதி சாடியுள்ளார். எல்லோரும் சேர்ந்து வி.காந்தை இன்னுமொரு எம்ஜிஆர் ஆக்கிவிடுவார்களா?
பதில்: அதுதான் கருணாநிதியின் ராசி என்று அவரே பிற்காலத்தில் நொந்து கொண்டாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.

3. பாகிஸ்தானுக்கு எதிரான அனைத்து வித நடவடிக்கைகளையும் இந்தியா பரிசீலிக்கும் என வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி எச்சரித்துள்ள நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வரும் தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா விரைவில் விமானத் தாக்குதலை மேற்கொள்ளக் கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளநிலையில் இது மற்றுமொரு இந்தியா பாகிஸ்தான் போருக்கு வழிவைக்காதா?
பதில்: நீடித்த்த அளவில் போரை நடத்த இரு நாடுகளின் பொருளாதாரமுமே இடம் கொடுக்காது என்பதுதான் நிஜம்.

4. இந்து என்றால் திருடன் என்று கூறியவர் கூட மஞ்சள் துண்டணிந்து கொண்டு, சாயிபாபாவை வீட்டிற்கு வரவழைத்து தன்னுடைய அடிபொடிகளுடன் மோதிரம் வாங்கிக் கொள்கிறார்களே என்ன காரணம்?
பதில்: அதில் வேறு ஒரு அடிப்பொடி தனக்கு சாயிபாபா தந்தது போதாது என்ற பொருமல் வேறு பட்டுள்ளார்.

5. மிருகத்திலிருந்து மனிதனாக, மனிதனை பண்படுத்தியது பகுத்தறிவும், மதமும், ஆனால் இன்று மனிதனை மீண்டு மிருகமாக்கும் முயற்சிகள் கிட்டத்தட்ட வெற்றி கண்டு கொண்டிருப்பது போலி பகுத்தறிவும், போலி மதவாதமும் இல்லையா?
பதில்: ஆம்.

6. மூட நம்பிக்கைகளை ஒழிக்கவேண்டுமென மேடையில் ஒலிப்பவர்கள் கூட, தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு பின் வாசல் வழியே உள்ளே நுழைகிறார்களே என்ன காரணம்?
பதில்: தஞ்சை பெரிய கோவிலுக்கு சென்றால் பதவியிழப்பு நேரிடும் என்பது மூட நம்பிக்கைதான். ஆனால் அதை அலட்சியம் செய்து ஒரு அரசியல்வியாதி நிஜமாகவே பதவி இழந்தால் நீங்களா அப்பதவியை அவருக்கு திரும்பத் தருவீர்கள்? ஆகவே எதற்கு வம்பு என ஒதுங்கி போகின்றனர் போலும்.

7. தமிழீழ விடுதலையை ஆதரித்து பேசுவோரை கைது செய்ய வேண்டுமென தொடர்ந்து குரலெழுப்புவோர், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில், தமிழீழம் அமைவதில் எமக்கு உடன்பாடு இல்லையென்பதை தேர்தல் அறிக்கையாக முன் வைத்து அவர்கள் தேர்தலை சந்திக்க தயாரா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார் -திருமாவளவன். தலைவர் கலைஞருக்கு தொந்திரவு கொடுக்க மாட்டடேன் என்று சொல்லி கொண்டே திருமாவளவன் இப்படி செய்வது காங்கிரசாரையும் அதிமுக வையும் ஒரே அணிக்கு தள்ளிவிடாதா? இலங்கை விவகாரம் இங்கே கூட்டணிகளை சிக்கலாக்கிவிடுமா?
பதில்: அனுகூல சத்ரு.

8. வரும் ஜன 6 ந்தேதி முதல் சீனா/கொரியா நாடுகளில் தயாரிக்கப்பட்ட மொபைல்களில் சர்வேதசக் குறியீடு எண் இல்லாதவை இந்தியாவில் தடை செய்யப் படலாம் என்பது செய்தி.
அவற்றை முதலிலே தடை செய்திருந்தால் மக்களின் பொருளாதர இழப்பை தவிர்த்திருக்கலாமே? தும்பைவிட்டு வாலைபிடிக்கும் செயலல்லவா இது?

பதில்: அவ்வாறு தடை செய்யும்போதும் நம்ம அரசாங்கம் ஒரு காரியம் செய்யும். கையிருப்பில் இருக்கும் செல்போன்களை பலான பலான தேதிக்குள் விற்க அவகாசமும் அளிக்கும். இது அதீத கற்பனை அல்ல. பல அபாயகரமான மருந்துகளுக்கு இம்மாதிரி அரசு செய்துள்ளது. எல்லாமே யார் யாருக்கு எவ்வளவு வாய்க்கரிசி போடுகிறார்கள் என்பதை பொருத்தது.

அனானி (அவரது கேள்விகள் இப்பதிவிலிருந்து சுடப்பட்டவை என சம்பந்தப்பட்ட பதிவர் தெரிவித்துள்ளார். அது உண்மை என்பதை உறுதி செய்து கொண்டேன்)
1) வங்க தேச உதயம் எப்படி நடந்தது?
பதில்: வெறுமனே மதத்தை மட்டும் அடிப்படையாக வைத்து பாகிஸ்தானை உருவாக்கினார்கள். நடுவில் இந்தியா இருந்ததில் கிழக்கு மற்றும் மேற்கு பாகிஸ்தானுக்கிடையே ஆரம்பத்திலிருந்தே இடைவெளி விழுந்து விட்டது. நாடு உருவாகி 25 ஆண்டுகளுக்குள் பிளவுபட்டது துரதிர்ஷ்டமே. நடுவில் இருந்த இந்தியாவுக்கும் இது பல வகைகளில் சங்கடம் விளைவித்தது. ரோலர் கோஸ்டரில் செல்லும் பயணம் போல நிகழ்ச்சிகள் நடந்தன என்பதையும் மறக்கக் கூடாது. அப்படி உருவான பங்களாதேஷால் இந்தியாவுக்கு இப்போதும் தொல்லைதான். அதனாலேயே கூட இந்தியா இம்மாதிரி அண்டை நாட்டை துண்டாடும் நிகழ்ச்சியில் பங்கு பெறாதிருப்பதையே விரும்புகிறது என்று கூட சொல்லலாம்.

2) அன்னை இந்திராவைக் கொன்றவர்களை காங்கிரஸ் எப்படி நடத்தியது, நடத்துகிறது?
பதில்: குற்றவாளிகளாக காணப்பட்டவர்கள் தூக்கில் போடப்பட்டாயிற்று. ஆனால் இது ஒரு துன்பியல் சம்பவம் மட்டுமே என நீட்டி முழக்கும் பிரபாகரன் இன்னும் தேடப்படும் குற்றவாளி. மாட்டிக் கொண்டால் தூக்கு தண்டனை பெற வேண்டியவர். அவரைத் தலைவராக கொண்ட விடுதலைப் புலியினரை எப்படி ஏற்று கொள்வது?

3) காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாலய உள்துறை அமைச்சர் ஏன் பொற்கோவிலுக்கு எதிரே காலணிகளைத் துடைத்து வைத்தார்?
பதில்: அது அவரது மதநம்பிக்கை.

4) இந்திராவை கொன்ற சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர் இந்திய பிரதமராக முடிகிறது. காந்தியைக் கொன்ற கோட்சேயின் ஆர்.எஸ்.எஸ் -ஐ சேர்ந்தவர்கள் பிரதமராக உதவிப் பிரதமராக இருக்க முடிகிறது. ஏன் தமிழர்கள் இந்திய பிரதமர் ஆகமுடியவில்லை அல்லது யாரோ ஆக விடாமல் தடுக்கிறார்கள்?
பதில்: ஒரு காலக்கட்டத்தில் மூப்பனார் பிரதமராக வாய்ப்பு வந்தது. அப்போது முட்டுக்கட்டை போட்டவர் கலைஞர் என்று ஞாபகம்.

5) அகாலிதளம் மான் பிரிவு தலைவர் சிம்ரன்ஜித் சிங் மான் துப்பாக்கியுடன் பாராளுமன்றம் வருவேன் என்று சொல்கிறார். அவரும் இங்கு தானே குப்பை கொட்டினார். அவரை என்ன செய்தார்கள் காங்கிரஸ் ஆட்சியில்?
பதில்: ஒரு வேளை ஏதாவது செய்திருந்தால் அவர் மான் மாதிரி ஓடி எதிர்த்தரப்பில் சேர்ந்திருப்பார் என்ற பயமே காரணம். அப்படியேயிருந்தாலும் நடந்தது தவறுதான்.

6)கூறியத் அமைப்பினர் துப்பாக்கியுடன் தான் பேச்சு வார்த்தைக்கு வருவோம் என்கிறார்கள். அவர்களை காங்கிரஸ் அரசு என்ன செய்ய முடிந்தது?
பதில்: மிகவும் தவறான முன்னுதாரணமாக இது அமைந்ததற்கு அரசுதான் பொறுப்பு.

7) அசாமை ஆண்ட பிரபுல்ல குமார் மகந்தா உங்கள் பார்வையில் தீவிரவாதியா? அப்படி இருந்தால் அந்த மாநில மக்கள் அவரை எப்படி ஏற்றுக் கொண்டார்கள்?
பதில்: அசாம் பற்றி எனக்கு சரியாகத் தெரியாது. இருப்பினும் ஒன்று நிச்சயம். அவர் முறையாகத் தேர்தலில் நின்று ஜெயித்து முதல்வரானார். தனது எதிர் கோஷ்டிகளையெல்லாம் சகட்டுமேனிக்கு போட்டுத் தள்ளவில்லை.

8) இந்திரா கொலை முயற்சி, இராஜீவ் கொலை குற்றச்சாட்டு போன்றவற்றில் திமுகவுக்கு தொடர்பு உள்ளது என்று காங்கிரசார் பிரச்சாரம் செய்தனரே? பின்னர் அவர்களுடன் கூட்டணி வைத்தால் அது நியாயமா?
பதில்: அதெல்லாம் பார்த்து செயல்படும் நிலையிலா காங்கிரஸ் அல்லது பி.ஜே.பி. போன்ற கட்சிகளின் நிலை தமிழகத்தில் இருக்கிறது? ஐயோ பாவம் அவை. விட்டுவிடுங்கள்.

9) பல கொலைகளில் சம்பத்தப்பட்ட முன்னாளைய தீவிரவாத இயக்கம், பிரிவினை வாத இயக்கம் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவைச் சேர்ந்த சிபு சோரனை எப்படி காங்கிரஸ் அமைச்சரவையில் சர்ச்சைகளுக்கிடையில் சேர்க்க முடிந்தது?
பதில்: அரசியல்லே இதெல்லாம் சகஜமப்பா (நன்றி கவுண்டமணி)

10) அப்சல் என்னும் தண்டனை வழங்கப்பட்ட தீவிர வாதியை, தூக்கிலிடுவதை நிறுத்திவைக்க வேண்டி காஷ்மீர் முதலமைச்சர் குழாம் நபி ஆசாத் சப்பைக்கட்டுடன் பிரதமரைச் சந்திக்கலாமா?
பதில்: கவுண்டமணி சொன்னால் சொன்னதுதான்.

11) இராஜீவைத் முதுகில் தாக்கிய சிங்கள சிப்பாய்க்கு சிறிலங்கா அரசாங்கம் எவ்வளவு மரியாதை அளித்தது என்று தெரிந்தும் அவர்களோடு கொஞ்சிக் குலாவுவதில் காங்கிரஸ் அரசுக்கு என்ன மரியாதை அங்கு கிடைக்கும்? மரியாதை இல்லாத இடத்தில் பல்லிளிப்பது ஏனோ?
பதில்: அந்த சிப்பாய் செய்ததற்கு தண்டனை தந்தாயிற்று. அது முடிந்து வெளியிலும் அவன் வந்தாயிற்று. அயல் நாட்டு ராஜீய உறவுகளில் இதெல்லாம் மனதில் வைத்து கொண்டால் அரசு நடத்த இயலாது. நண்பனோ பகைவனோ ஒரு நாட்டுக்கு நிரந்தரம் அல்ல, அதன் அறிவார்ந்த தன்னலமே முக்கியம்.

12) கிழக்குத் தீமோர் இந்தோனேஷியாவில் இருந்து பிரிய முடிகிறது, ஏறக்குறைய அதே நிலை அல்லது அதைவிட மனித உரிமைகளை தரையில் போட்டு மிதிக்கும் நிகழ்வுதானே இன்று சிறிலங்காவில் நடந்து கொண்டிருக்கிறது? இவற்றையெல்லாம் சீர்தூக்கிப் பார்த்திருக்க வேண்டாமா?
பதில்: யார் பார்த்திருக்க வேண்டும் என்கிறீர்கள்?

ரமணா:
1. உயர் வகுப்பு ஏழைகளுக்கு இடஒதுக்கீடு எப்போது?,
மத்திய அரசுக்கு மாயாவதி அவர்களின் கேள்வி வரும் தேர்தலில் முற்பட்டோரின் வாக்குவங்கியை, தென் இந்தியாவில், குறிப்பாய் தமிழகத்தில் தன் பக்கம் ஈர்க்குமா?

பதில்: தெரியவில்லை. காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

2. சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்க்கும் ஜெ.வுடன் கூட்டணி ஏன் என்று சீதாராம் யெச்சூரியை பார்த்து திமுக தலைவர் கருணாநிதி அவர்களின் கேள்வி நியாயம்தானே?
பதில்: அதற்கு மேல் இன்னும் ஜோரான கேள்விகளை யெச்சூரி கருணாநிதி அவர்களைப் பார்த்து கேட்பாரே, அவையும் நியாயம்தானே?

3. திருமங்கலம் தேர்தலில் மு.க. அழகிரி அவர்கள், லதா அதியமான் மனுத் தாக்கல் சமயத்தில் உடன் சென்றது, திமுக வேட்பாளர் தேர்வில் இருந்த கசப்பு மறைந்து விட்டதை காட்டுகிறதா?
பதில்: இப்போதைக்கு பேரம் படிந்திருக்குமாக இருக்கும்.

4. இலங்கையில் தமிழரினப் படுகொலைக்கு காரணமாய் சொல்லப்படும் சி‌ங்கள அர‌‌சி‌ற்கு, ஆதரவ‌‌ளி‌க்கு‌ம் கா‌ங்‌கிர‌ஸ் அரசின் செயலை மதுரை நெடுமாற‌ன் க‌ண்டன‌ம் செய்துள்ளாரே?
பதில்: திமுக அரசையும் ஏதேனும் இம்மாதிரி கண்டனம் செய்துள்ளாரா, முக்கியமாக ராஜினாமா நாடகம் பற்றி?

5. பம்பாய் தீவிரவாதிகளின் தாக்குதல் தொடர்பாய், இந்திய ராணுவம் எந்த நேரத்திலும் பாகிஸ்தானை தாக்கலாம் என்று செய்தி பரவுவதால் பாகிஸ்தானில் போர் பயம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், என்ன நடக்கலாம் என எண்ணுகிறீர்கள்?
பதில்: இரு தேசங்களுக்குமே நீண்டகாலப் போர் பொருளாதார ரீதியில் கட்டுப்படியாகாது.

6. 2008 ஆண்டு முடியும் போது -உலகப்புகழ் பெற்ற பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடி வருகிறார்.புகழ் பெற்றவர்கள் ஏன் தன் உடல் நலனில் அக்கறை செலுத்துவதில்லை?
பதில்: கண்டிப்பாக செலுத்தியிருப்பார். என்ன, அதை ஓவராக செய்திருப்பார். பல மருந்துகளை விழுங்குவதும் ஆபத்தை வரவழைக்கும் விஷயம்தானே.

7. பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அவர்களின் உயிர்க் கொள்கையாம் மதுவிலக்கை தமிழகத்தில் படிப்படியாக அமல்படுத்தவேன் எனும் முதல்வர் கருணாநிதி அவர்களின் பேச்சு, திமுக, பாமக மீண்டும் தமிழக அரசியல் வானில் நெருங்கிறதா?
பதில்: ம்ன்னிக்கவும், முழு மதுவிலக்கு என்பது நட்க்காத விஷயம். இங்கு இவ்வளவு பேசும் பாமக தான் பலம் பொருந்திய எநிலையில் இருப்பதாக எண்ணியிருக்கும் பாண்டிச்சேரி மாநிலத்தில் இதை வலியுறுத்த இயலுமா? அதே சமயம் சமீபத்தில் 1972-ல் பலர் தடுத்தும் மீண்டும் குடிப்பழக்கத்தை இளைஞர்களுக்கு ஏற்படுத்தித் தந்த கருணாநிதி அவர்களை இவ்விஷயத்தில் நம்ப இயலாது.

8. பொடாவுக்கு இணையாகுமா இந்த இரண்டு சட்டங்கள், தேசியப் புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) மசோதா, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு திருத்த மசோதா (யு.ஏ.பி.ஏ.)?
பதில்: இணையாகாதுதான், இருப்பினும் இதுவாவது செய்ய மனம் வந்ததே என சோ அவர்கள் கூறுவதை நானும் ஆமோதிக்கிறேன்.

9.மங்களூர் இடைத்தேர்தலை நடத்தாமல் திருமங்கலம் தேர்தலை நடத்த கலைஞர் அவர்கள்தான் காரணம் என்று மதிமுக தலைவர் வைகோ அவர்களின், கு‌ற்ற‌ச்சா‌ட்டில் உண்மையுண்டா?
பதில்: என்னதான் இருந்தாலும் வைக்கோ கலைஞருடன் நெருங்கி பழகியவர் அல்லவா. கலைஞர் எப்போது என்ன முடிவு ஏன் எடுப்பார் என்பது அவருக்கு தெரியாமலா இருக்கும்.

10. அதலபாதாளத்திற்கு சென்றுள்ள ரியல் எஸ்டேட் வாணிபத்தை கரை சேர்க்க அரசு அறிவித்துள்ள வீட்டுக்கடன் வங்கிவட்டிக் குறைப்பு கம்மி என்பது சரியா?
பதில்: பலருக்கு வேலையே போயுள்ள நிலையில் குறைந்த வட்டிக்காக இருந்தாலும் கடனை வாங்கிக் கட்ட அவ்வளவு ஆர்வம் இருக்காதுதான்.

12. கலைஞரைவிட இரண்டு வயது மூத்த முதலியார்வாளுக்கு, அதிகாரம் இல்லாத பொதுச் செயலர் பதவிதான் பெரிசு, அதை விடமாடேன்,வேணா தம்பிக்கு உதவிதலைவர் கொடுங்க என்பது, காரியவாதித்தனத்தின் உச்சம் போல் தெரியவில்லையா?
பதில்: யார் அன்பழகனையா சொல்கிறீர்கள்? ஐயோ பாவம் அவர். ஏதோ இப்பதவியிலாவது இருந்து விட்டு போகட்டுமே. மேலும் தலைவரே தனது பதவியை விட்டுத்தர மனமில்லாமல் இருக்கும்போது அவரது உதாரணத்தைத்தான் இவரும் பின்பற்றுகிறார். என்ன தவறு?

13. கலைஞரே தனது தலைவர் பதவியை விட்டுத்தர தாராள மனதாய் இருக்கும் போது, 85 க்கு இருக்கும் பற்றற்ற தன்மை 87 க்கு இல்லை என்பது சரியா?
பதில்: அவர் மகனுக்கு அவர் விட்டுத் தருவதுதான் முறை. என்ன அவரது பற்றற்ற தன்மையா? காலை வேளையில் கிச்சு கிச்சு மூட்டாதீர்கள்.

14. கடைசியில் தளபதிக்கு பொருளாளர் பதவிதான் போலுள்ளது.வெண்னெய் திரண்டும் வரும் போது தாழியை உடைத்தவரை பற்றி தொண்டர்கள் என்ன நினைப்பார்கள்?
பதில்: யார் வீட்டு வெண்ணெய்? இவர் ஏன் விட்டுத்தர வேண்டும்? இது என்ன போங்கு?

15. கலைஞர் ஏன் முதலியாருக்கு இவ்வளவு சலுகை காட்டுகிறார், தனது முடிவுகளை அமலாக்குவதில், சிக்கல்களை ஏற்படுத்தும், தனி மனிதருக்கு?
பதில்: ஒரு வேளை இவரை சாக்காக வைத்து அழகிரிக்கு அதிக கோபம் வராமல் பார்த்து கொள்கிறாரோ தலைவர். அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கும்.

16. பொதுக்கூட்டத்தில் கலைஞரை தளபதியாய் ஏற்பேனே அன்றி, தலைவராய் ஏற்க மாட்டேன்.ஏன் என்றால் அப்படிச் செய்தால் என் மனைவி கூட மதிக்க மாட்டாள் என்றாரே! 40 ஆண்டானதால் கலைஞர் அதை மறந்துவிட்டு, அவரது செயல்களுக்கு செவி சாய்ப்பது ஏன்?
பதில்: 40 ஆண்டுகளுக்கு முன்னாலா? யு மீன் சமீபத்தில் 1968-ல்?


அனானி (24.12.2008 காலை 07.04-க்கு கேட்டவர்):
1. தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் திமுக, அதிமுக, மதிமுக, விஜயகாந்த் கட்சி, சரத்கட்சி, ராஜேந்திரர்கட்சி, கார்த்திக் கட்சி, இடதுசாரி மற்றும் வலதுசாரி, பாமக, காங்கிரஸ் உட்பட இடஒதுக்கீட்டுக் கொள்கையில், பொருளாதார அளவுகோல் இருக்கக் கூடாது என்று சொல்வதற்கும் இப்போதைய உங்களின் இந்தப் பதிவிற்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா?
பதில்: அப்பதிவில் குறிப்பிடப்பட்ட காமாட்சிநாதன் இட ஒதுக்கீடு பெற்று இந்த ஸ்காலர்ஷிப்பை பெறவில்லை. அதுவும் மத்திய அரசால் அவனது திறமைக்கு மட்டுமே கொடுக்கப்பட்டதில் மாநில அரசு போங்கு வேலை செய்ததுதான் புதுக்கோட்டுக்கு ஜூட். மற்றப்படி நீங்கள் இங்கு உதாரணம் காட்டும் அனைத்து கட்சிகளும் ஓட்டு அரசியலுக்காக கூறுவது அடாவடியே, அதை நீங்கள் சொல்லுவது போலெல்லாம் எடுத்து கொள்ள முடியாது.


அனானி (25.12.2008 காலை 07.19-க்கு கேட்டவர்:
கீழே கண்டுள்ளவற்றை உங்கள் ஸ்டைலில் உதாரணம் தந்து விளக்கவும்
பதில்: 1. மதவாதம்: இந்து மத துவேஷம்.
2. தமிழின உணர்வு: பார்ப்பன எதிர்ப்பு. அவர்கள் தமிழர்கள் அல்ல. தெலுங்கு நாயுடு, முதலியார், கன்னட பலிஜா நாயுடு ஆகியவர்கள் நம்மவர், மலையாளிகள் எம்.ஜி.ஆர். அவர்களைத் தவிர்த்து ஏனையோரை சேர்த்து கொள்ளலாம்.
3. தமிழ்ப்பற்று: ஆங்கில ஹிந்தி மொழி எதிர்ப்பு.
4. பகுத்தறிவு: வெவ்வேறு வெர்ஷன்களை உடைய ராமாயணங்க்ளிலிருந்து தமக்கு தேவையானதை தேர்ந்தெடுத்து காண்டக்ஸ்ட் பார்க்காது ராமரைத் தாக்குவது. தமிழர்களை துச்சமாக மதித்து தலைமைப் பொறுப்பு ஏற்க அவர்களுக்கு தகுதி இல்லை எனச் சொன்ன கன்னடியர் அதை எந்த காண்டக்ஸ்டில் சொன்னார் என்று பார்க்க வேண்டும் என அவருக்கு சப்பைக்கட்டு கட்டுவதற்காகத் தேடி நாக்கு தள்ள களைப்படைவது.
5. மதச்சார்பின்மை: இந்து மத துவேஷம், வேறென்ன? நோன்புக் கஞ்சிக்கு ஆதரவு, விபூதிக்கு கேலி மற்றும் கிண்டல் (சாய்பாபா தரும் மோதிரத்துடன் கூடிய விபூதி இதில் அடங்காது).


சேதுராமன்:
1. மீண்டும் கூவமா? முன்பே ஒரு தடவை "அழகுத் தமிழினில் பாட்டிசைத்து, தோணிகள் ஓட்டி விளையாடி" விட்டோம்! படகு குழாம்கள் மட்டும் மிஞ்சியிருக்கின்றன - எத்தனை கோடி செலவு??
பதில்: பழைய பிராஜக்டுகளை புதிப்பிப்பதும் நல்ல வியாபார யுக்தியே. :)))))))

2. அந்துலே விஷயம் உங்கள் அபிமான சோ ஒரு சின்ன பெட்டிக்குள் அடக்கி வாசித்திருக்கிறாரே! இவ்வளவு நடந்தும் எல்லோரும் மௌனம் சாதிப்பது, பழைய விவகாரங்களாலா?
பதில்: உண்மையை கூறப்போனால் அந்துலே இன்னும் அரசியலில் இருப்பதுதான் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அவரை பற்றிய கவனமே இத்தனை நாட்களாக இல்லை. திடீரென மறுபடியும் தன் இருப்பை காட்டிக்கொண்டுள்ளார். சோ அவர்களும் அவருக்கு எவ்வளவு முக்கியத்துவம் தரவேண்டுமோ அவ்வளவுதான் தந்திருக்கிறார். அதற்கு மேல் கூற அந்துலேயிடம் விசேஷம் என்ன இருக்கிறது?

3. மு.க.வின் புது டிஸ்கவரி - ராமாயணம் ஒரு சுற்றுலாக்கதை!! கூவத்தைப் பற்றிப் பேசும்போதும், கூடவே ராமாயணத்தையும் இழுக்க வேண்டுமா? ஒன்று பார்த்தீர்களா? கழகக் கண்மணிகளின் இந்த வேலைகளால் ராமாயணமும் இந்து மதமும் பிராபல்யமாகிக் கொண்டே இருக்கின்றன
பதில்: ராமர் இஞ்சினியரா என்று கேட்டவர் இப்போது ராமர் டூரிஸ்ட் கைடா என கேட்காமல் இருந்தால் சரி.


அனானி (25.09.2008 மாலை 04.09-க்கு கேட்டவர்:
1. எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வின் தற்போதைய நிலையென்ன?
பதில்: எந்த பயமும் ஒரே மாதிரி விடாது ஆட்சி செய்ய இயலாது. நாளடைவில் அது பழகிவிடும். முதலில் கேன்சரை கண்டு பயந்தனர். இப்போது சிகிச்சைகள் அதற்கு வந்து விட்டபோதிலும் இன்னும் அது அபாயகரமான நோய்தான். ஆனால் அது பற்றி முன்பு வந்தது போல சினிமாக்கள் வருகின்றனவா? எய்ட்ஸும் அது மாதிரித்தான். முதலில் அது என்ன என்று தெரியாமல் பயந்தனர். இப்போது அது புழக்கத்தில் வந்து பல காலம் ஆகிவிட்டது. ஆகவே ஒரு மாதிரி அதை மறந்து வேறு பயங்கள் படுகின்றனர். எய்ட்ஸை வெற்றி கொள்ள நிறைய உழைப்பு தேவைப்படும். அந்த நிலையில் மட்டும் அதைப் பிரச்சினையாக பார்க்க பழகிவிட்டனர் எனத் தோன்றுகிறது.

2. இலஞ்சம் வாங்கும் பெண் ஊழியர்கள் நாடு எங்கே போகிறது?
பதில்: ஊழலுக்கு ஆண் என்ன பெண் என்ன? ஆண்கள் லஞ்சம் வாங்கியதற்கும் அவர்தம் மனைவியர்/காதலிகளின் தேவைக்காகவும்தானே. இப்போது வாய்ப்பு கிடைத்ததில் பெண்களும் வாங்குகின்றனர்.

3. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் எப்படி, எங்கே இருக்கிறார்?
பதில்: ஏன் அவருக்கென்ன? நன்றாகத்தானே இருக்கிறார்? மறுபடியும் அவரை பிரதமர் வேட்பாளராக பாஜக தரப்பில் நிறுத்தலாமா என்று அக்கட்சியினர் சிலர் யோசிப்பதாக அறிகிறேன்.

4. மாநில அரசு அலுவலகங்களில் நடக்கும் ஊழல்கள் கொடிகட்டி பறக்கிறதே?
பதில்: மத்திய அரசு அலுவலகங்கள் ஊழலில் பின் தங்கியுள்ளன என்பதா உங்கள் வாதம்? அவற்றுக்கான கிரெடிட்டுகளைத் தர மறுப்பது அநியாயம்.

5.பாமக-சிறுத்தை உறவு இப்போது எப்படி?
பதில்: பாமகவே குழப்பத்தில் உள்ளது. இதில் விடுதலை சிறுத்தைகளை பற்றி நினைக்க எங்கே நேரம். பதிவர் குழலி இன்னும் ஆதண்டிக்கான பதிலை இக்கேள்விக்கு தர இயலும்.

6. மகளிருக்கு தொடர்ந்து அரசின் சலுகைகள், ஆண்கள் பாவமில்லையா?
பதில்: இப்படியெல்லாம் கேட்டால் நீங்கள் ஆணாதிக்கவாதியாக அடையாளம் காட்டப்படுவீர்கள். உஷார்.

7.மதவெறியர்கள், தீவிரவாதிகள் இவர்களை திருத்த என்ன வழி?
பதில்: முதலில் அவர்களுக்கு மட்டுமின்றி அவர்களுக்கு உதவுபவர்களுக்கும் தண்டனைகளை கடுமையாக்கினால் பாதி பிரச்சினை குறையும்.

8 .டி.ராஜேந்தர் எங்கே ஆளையே காணோம்?
பதில்: என்ன எங்கும் காணவில்லையா? கொஞ்ச நாளைக்காவது நாம் மச்சி, பச்சி, கச்சி ஆகிய இலக்கிய சொற்களைக் கேட்காது நிம்மதியாக இருப்போமே.

9. தே.மு.தி.க. விஜயகாந்திற்கு அவரது கட்சியின் செலவுகளுக்கு எங்கிருந்து பணம் வருகிறது? யார் கொடுக்கிறார்கள்?
பதில்: டமில் மக்கல் கொடுப்பதாக அவர் கூறலாம்.

10. காங்கிரஸ் - தி.மு.க. உறவு தொடருமா? பிரியுமா?
பதில்: பாராளுமன்றத் தேர்தலில் கூட்டணி நிச்சயம் இருக்கும். ஆனால் அதில் திமுக தோற்றால் காங்கிரஸ் அதிமுகாவை நாடும். திமுகவுக்கு அதிக சீட்டுகள் கிடைத்து காங்கிரஸ் மத்தியில் பிளாங்கியடித்தால், மந்திரி பதவி கிடைக்கும் போலிருந்தால் திமுக பாஜக ஒன்றும் தீண்டத்தகாத கட்சி இல்லையே என கூறி அக்கட்சியுடன் உறவு கொள்ளலாம். இதையெல்லாம் கூற ஒரு திறமையும் தேவையில்லையே பெரிசு எனக் கூறும் முரளி மனோஹர் சரியாகத்தான் பேசுகிறான்.

11. பிரதமர் மன்மோகன்சிங்கின் ஆட்சியை பாராட்டலாமா?
பதில்: பொருளாதார கொள்கைக்காகவும், அமெரிக்காவுடன் அணு ஆயுத ஒப்பந்தத்தை நிறைவேற்றியதற்காகவும் அந்த அரசை பாராட்டலாம்

12. நிகழ்காலத்தில் ஒரு நடிகையின் கணவனுக்கு கிடைக்கும் மரியாதை பார்த்தபிறகும் நடிகையை மணக்க முன் வருபர் நிலை?
பதில்: மரியாதை யாருக்கு வேண்டும், டப்பு கிடைக்கிறதா என்ற நிலை எடுப்பவர்களுக்கு பஞ்சம் ஏது இந்த நாட்டில்?

13. வில்லன் நடிகர் ரகுவரன் சாவு,பிற குடிகார நடிகர்களுக்கு ஒரு பாடமாகுமா?
பதில்: அவர் போதைப் பொருள் அதிகம் உட்கொண்டதால்தான் மரணம் அடைந்தார் என்றல்லவா கேள்விப்பட்டேன். எது எப்படியானாலும் அவருக்கு முன்னாலேயே பல நடிகர்கள் குடியால் சீரழிந்துள்ளனர். அவர்களைப் பார்த்தும் திருந்தாதவர்கள் ரகுவரனை மட்டும் பார்த்து திருந்துவார்கள் என ஏன் எதிர்ப்பார்க்க வேண்டும்?

14.பங்கு மார்க்கெட் மேலே போவதும் புரியவில்லை?கீழே வீழ்வது புரியவில்லயே? உங்களுக்கு எப்படி?
பதில்: எனக்கு பங்கு மார்க்கெட் எப்போதுமே புரிந்ததில்லை. ஆகவே அதில் நான் ஈடுபட்டதே இல்லை. மற்றப்படி இம்மாதிரி கேள்விகளுக்கெல்லாம் நண்பர் வால்பையன்தான் சரி.

15.பாராளுமன்றத் தேர்தல் முன்கூட்டியே வருமா?
பதில்: பிப்ரவரியில் வந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

16. கம்யூனிஸ்டுகள் மேற்கு வங்கத்தில் ஆட்சியை அங்குள்ள மக்கள் பாராட்டுகிறார்களா?
பதில்: பாராட்டுகிறார்களோ இல்லையோ ஓட்டு போட்டுவிடுகிறார்கள்.

17. தமிழக அரசின் வெள்ள நிவாரண உதவிகள் -2000-பணம்-10 கிலோ அரிசி அடுத்த தேர்தலில் திமுகவுக்கு கை கொடுக்குமா?
பதில்: அதிருக்கட்டும், அவை கிடைக்காதவரது கோபம் பற்றியும் யோசிக்கலாமே.

18. சென்னையில் மேம்பாலங்கள் பற்றிய வழக்கு என்னாச்சு?
பதில்: கிணற்றில் போட்ட கல்

19.ஒகேனக்கல் குடிநீர்த் திட்டத்தை முட்டுகட்டை போடும் கர்நாடக அரசை, மத்திய அரசு கண்டிக்காதது ஏன்?
பதில்: கர்நாடகாவில் எக்கட்சி ஆட்சியில் இருந்தாலும் தமிழகத்துக்கு அப்படித்தான் முட்டுக்கட்டை போடுவார்கள். இப்போது மத்திய அரசு கர்நாடக அரசை கண்டிக்கும் என நினைக்கவில்லை.

20. பூமிதானத் தலைவர் வினோபாவேவைப் போன்ற நல்ல மனதுக்காரர்கள் இந்தியாவில் யாராவது உள்ளனரா?
பதில்: பலர் உள்ளனர், விளம்பரம் இன்றி. இதே வினோபா நெருக்கடி நிலையை ஆதரித்தார் என்பதால் எனக்கு அவர் மேல் நல்ல அபிப்பிராயம் இல்லை.

21. 2008 ஆண்டில் வெற்றிகரமான எழுத்தாளர் என்று யாரைச் சொல்லலாம்?
பதில்: ஜே.கே.ரௌலிங் அவரது ஹாரி பாட்டர் புத்தகங்களுக்காக. தமிழில் ஜெயமோகன்.

22. 3 ஜி சேவையால் செல்போன் கட்டணங்கள் இனி கூடுமா அல்லது குறையுமா?
பதில்: குறையத்தான் வேண்டும்.

23. பொது இடங்களில் புகைபிடிப்பவரை தடை செய்யும் சட்டம்?
பதில்: போலீஸ்காரருக்கு மாதக்கடைசி வருமானத்துக்கு இன்னொரு வழி திறக்கப்பட்டுள்ளது.

24.கடன் அட்டை வாங்கி அல்லலுறுவர் பற்றி உங்கள் கருத்து?
பதில்: அவர்கள் முட்டாள்கள். வரவுக்கு மீறி செலவு செய்யத் தூண்டும் கடன் அட்டைகளை அவர்கள் வாங்கியிருக்கவே கூடாது. இப்பிரச்சினையை நான் எனது டெலிமர்க்கெட்டிங் என்னும் கூத்து என்ற பதிவில் போகிறபோக்கில் தொட்டுள்ளேன்.

25.ஒரு பக்கம் தொடர் மழை, மறுபக்கம் வறட்சி-பருவகாலத்தில் ஏன் இந்த மாற்றம்?
பதில்: இம்மாதிரி வானிலை குளறுபடிகள் எப்போதுமே உள்ளதுதான். என்ன, நமக்கு அது பற்றிய செய்திகள் தற்போதெல்லாம் உடனுக்குடன் கிடைக்கிறது. அவ்வளவே. பழங்காலங்களில் மக்கள் பாவம் செய்வதால் இம்மாதிரி நடக்கிறது என்றெல்லாம் ஃபிலிம் காட்டினார்கள். இப்போதெல்லாம் அப்பேச்சு குறைந்துள்ளது அவ்வளவே.


மீண்டும் அடுத்தவாரம் சந்திப்போமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

12/24/2008

புதுக்கோட்டுக்கு ஜூட் - 4

சமீபத்தில் 1963-64 கல்வியாண்டில் நான் சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து கொண்டிருக்கும்போது நடந்த விஷயம் ஒன்று ஞாபகத்துக்கு வருகிறது. அந்த ஆண்டு ஒரு நாள் பேப்பர்களில் National Merit Scholarship அறிவிப்பு செய்யப்பட்டது. அதாவது பி.யு.சி. பரீட்சையில் அதிக மதிப்பெண் பெற்ற முதல் 10 பேருக்கு மத்திய அரசு சார்பில் ஸ்காலர்ஷிப் வழங்கப்பட்டது. இதில் சம்பந்தப்பட்ட மாணவரின் பொருளாதார நிலை கணக்கில் எடுக்கப்படவில்லை. வெறுமனே திறமையின் அடிப்படையில் கொடுக்கப்பட்டது. அதாவது ஓட்டப் பந்தயத்தில் கப் தருவது போல என வைத்து கொள்ளுங்கள். இந்த லிஸ்டில் எனது நண்பன் காமாட்சிநாதனும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வந்தான். (அவன் ஆறாவது இடத்தில்).

இதில் என்ன விஷயம் என்றால் ஃபீஸ் கட்ட வேண்டியது இல்லை. ஆனால் ஏதாவது ஒரு ஆண்டில் கம்பார்ட்மெண்ட் வாங்கினால் அது நிறுத்தப்படும். பொருளாதார நிலை மற்றும் மெரிட் பார்த்து வழங்கப்பட்டது வேறு ஒரு ஸ்காலர்ஷிப், அதற்கு பெயர் Merit cum means scholarship. ஆனால் நான் இங்கு பேசுவது திறமையை மட்டும் அடிப்படையாகக் கொண்ட National Merit Scholarship. இதை ஸ்பான்சர் செய்தது மத்திய அரசு என்றாலும், வினியோகம் செய்ய வேண்டியது மாநில அரசுதான். அதில்தான் தமிழக அரசு ஒரு புதுக்கோட்டுக்கு ஜூட் வேலை செய்தது. இங்கும் சம்பந்தப்பட்ட மாணவரின் பெற்றோரின் சம்பளத்துக்கு வரைமுறை விதித்தது.

காமாட்சிநாதன் தன் தாத்தா பாட்டியுடன்தான் வசித்து வந்தான். அவன் தந்தைக்கு பெரிய சம்பளம் என்று சொல்லிக் கொள்ளும்படி இல்லை. தாத்தா பாட்டி கார் வைத்திருக்கும் அளவுக்கு வசதியானவர்கள். அவர்கள்தான் அவனுக்கு படிப்புக்கான ஃபீஸ் கட்டி வந்தனர். தந்தையை அணுகி அவரது சம்பளச் சான்றிதழை தந்து விண்ணப்பத்துடன் இணைத்தான். கோர்ஸ் முழுக்க ஸ்காலர்ஷிப்பிலேயே படித்து ஹானர்ஸ் கிரேடில் தேர்வு பெற்று சென்றான். பிற்காலத்தில் இது பற்றி அவன் என்னுடன் பேசினான். “ஒண்ணுமில்லைடா, நான் எனது திறமையால் மத்திய அரசிடம் பெற்றதை மாநில அரசு எனக்கு கொடுக்காமல் இருக்க பெரிய பிடுங்கி மாதிரி முயற்சி செய்தது. சாமி வரம் கொடுக்க பூஜாரி தடுத்த கதைதான் இது. அதற்காகவே முட்டாள்தனமான விதியை போட்டது. இம்மாதிரி விதிகள் மீறப்படுவதற்காகவே உள்ளன”. என்றான்.

யோசித்து பார்த்தால், அவன் ரொம்பவுமே பிராக்டிகல் என தெரிகிறது. இந்த விதியை எடுத்து கேஸ் போட்டிருக்கலாம். அதற்கெல்லாம் நேரம், பணம் ஆகியவை செலவழிக்க வேண்டியிருக்கும். அதற்காக முட்டாள்தனமாக பேசாமல் இருந்து, கிடைத்த சலுகையையும் விடக்கூடாது. அதற்கு அவன் செய்ததுதான் சரி.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

“அதெல்லாம் இருக்கட்டும்டா, இப்போ எதுக்கு மெனக்கெட்டு இதெல்லாம் ஞாபகத்துக்கு வரணும்” என்று கேட்கிறான் முரளி மனோஹர். நேற்று திடீரென காமாட்சிநாதனை பற்றி நினைத்தேன். அதனால்தான் இந்த நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

12/23/2008

கூடை வச்சுண்டிருக்கிறவங்களுக்கெல்லாம் பெட்ரோமேக்ஸ் லைட் கொடுக்கறதில்ல

இன்று எதேச்சையாக யூ ட்யூப் பார்க்கும்போது கண்ணில் பட்ட வீடியோ இது. வைதேகி காத்திருந்தாள் படத்தில் வந்த கவுண்டமணி செந்தில் க்ளிப்பிங். நீங்களும் ரசிக்கலாம். அதுவும் கவுண்டமணி கடையில் அடிவயிற்றிலிருந்து ஆங்காரம் வர அதை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு தலைப்பில் வரும் பஞ்ச்லைனை கூறுவது சூப்பரோ சூப்பர். அச்சமயம் செந்தில் எங்கே? அவர் பறந்து பத்து நிமிஷம் ஆச்சே!

புதுக்கோட்டுக்கு ஜூட்!

அன்புடன்,
டோண்டு ராகவன்

12/22/2008

சூடான இடுகைகள் பற்றிய சில வெளிப்படையான எண்ணங்கள்

நண்பர்கள் கோவி கண்ணன் மற்றும் லக்கிலுக் ஆகியோர் இது சம்பந்தமாக பதிவுகள் போட்டு விட்டனர். இப்போது டோண்டு ராகவனுடைய முறை என்று கூறி முரளி மனோஹர் ரொம்பவுமே படுத்துகிறான். ஆகவே நானும் உங்களைப் படுத்த வந்தேன், தன்னானா தன்னானா (பக்க வாத்தியம் உருமி மேளம்).

கோவி கண்ணன் தனது பதிவில் சொன்னது:
“கடந்த ஒரு வார காலத்தில் "பிரபல" பதிவர்கள் எழுதும் பதிவுகள் எதுவும் தமிழ்மணம் சூடான இடுகையில் வருவதில்லை, பதிவு திரட்டப்படுகிறது, ஆனால் சூடான இடுகையில் காட்டப்படவில்லை, கட்டம் கட்டப்பட்டதாக தெரிகிறது. எந்த அறிவிப்பும் இன்றிய நடவடிக்கையாக புரிகிறது”. பின்னாலேயே ஒரு பின்னூட்டத்தில் அவரே கூறினார், “அதிர்ஷ்டப் பார்வை எது எழுதினாலும் சூடாகும், அப்பறம் நம்ம அவதூறு ஆறுமுகம் பதிவும், வெள்ளிக்கிழமை கேள்வி பதில்கள் பதிவர் பதிவுகளும் காணும்”.

அதில் நான் இட்டப் பின்னூட்டம்:
“எக்ஸ்யூஸ் மீ, இங்கே என்ன நடக்குது?
உங்க பதிவின் விஷயம் பற்றி. நானும் கவனித்தேன். நீங்கள் சொல்வதுபோலத்தான் இருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு ஃபில்டர் செய்ய மென்பொருள் இருக்கிறதா என்பது தெரியவில்லை.
சமீபத்தில் 1960-களில் பேசும்படம் என்ற மாதப் பத்திரிகை வந்தது. அதில் ஆண்டுதோறும் சிறந்த நடிகர், நடிகையர், நகைச்சுவை நடிகர் என்றெல்லாம் தெரிவு செய்வார்கள். எல்லா ஆண்டும் சிவாஜி கணேசனே விடாது வந்ததால் மற்றவர்களுக்கும் சான்ஸ் தரவேண்டும் என்ற ரேஞ்சில் யோசித்து அவரை இது சம்பந்தமான பார்வையிலிருந்து விலக்கி வைத்தனர்”.

ஆக சந்தடி சாக்கில் நால்வரை (அடியேனையும் சேர்த்து) சிவாஜின் கணேசன் ரேஞ்சுக்கு உயர்த்தி விட்டதாக குற்றம் சாட்டும் முரளி மனோஹரை தற்போதைக்கு அலட்சியம் செய்கிறேன்.

முதலில் எனக்கு இது சம்பந்தமாக ஒரு க்யூரியாசிடி மட்டும் இருந்தது, அதாவது இம்மாதிரி செய்ய மென்பொருள் உண்டா என்பது பற்றி. அவ்வாறு செய்ய இயலும், வெறும் கோடிங் போதும் என்று கோவி அவர்கள் தெளிவுபடுத்தி விட்டார். இத்தருணத்தில் இன்னொரு விஷயஞானமும் பெற்றேன். அதாவது பின்னூட்டங்கள் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட பக்கங்களிலும் வரும் என்பதை. அது தெரிய நான் சில பைத்தியக்காரத்தனமான பின்னூட்டங்கள் போட வேண்டியிருந்தது. கோவியும் பொறுமையாக அதை எனக்கு விளக்கினார். ஆக, இந்த நிகழ்ச்சி எனக்கு புதிய தகவலைத் தந்தது.

இப்போது லக்கிலுக்கின் பதிவுக்கு வருவோம். அவருக்கே உரித்தான கிண்டல் நடையில் அவர் எழுதுகிறார்:

“முன்னணி திரட்டியில் முக்கியப் பதிவர்களின் பதிவுகள் சூடான இடுகைகளிலிருந்து விலக்கப்பட்டிருப்பதாக கோவி.கண்ணன் பதிவிட்டிருக்கிறார். அந்த திரட்டியின் நிர்வாகி அண்ணையோடு பிரச்சினை வந்தபோதே இதுபோன்ற நடவடிக்கைகளை எதிர்பார்த்தவன் என்பதால் எனக்கு ஏமாற்றம் எதுவுமில்லை. சில பேரை முற்போக்கானவர்கள் என்று நினைத்து ஏற்கனவே ஏமாந்துப் போனதாலும் இதுபோன்ற சிறுபிள்ளைத்தனமான, பிற்போக்கான, அல்பத்தனமான விஷயங்கள் எதுவும் இப்போது பெரியதாக பாதித்துவிடுவதில்லை.

திரட்டி அவ்வாறு செய்யாது என்று வாதிடுபவர்களை பாவம், பரிதாபம் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. மாயவரத்தான் என்பவருக்காக ஸ்பெஷல் கோடிங் உருவாக்கப்பட்டது ஏற்கனவே ஆதாரத்தோடு நிரூபிக்கப்பட்டிருக்கிறது. மாயவரத்தானுக்கு தனியாக புரோகிராமிங் செய்தவர்கள் கோவிக்கோ, செந்தழலுக்கோ, டோண்டுக்கோ, லக்கிக்கோ செய்யமாட்டார்கள் என நம்புவது மடத்தனம். சூடான இடுகைகள் தவறான நோக்கத்துக்காக பயன்படுத்தப்படுகிறது என்று தோன்றினால் சம்பந்தப்பட்ட பதிவை, தகுந்த காரணம் கூறி முடக்குவதில் தவறேதுமில்லை. என் பதிவை அவ்வாறு முடக்கி இருப்பார்களேயானால் அவர்களால் தகுந்த காரணம் கூறமுடியாது என்று உறுதியாக நம்புகிறேன். இப்போது நான் ஜட்டிக்கதைகள் எதுவும் எழுதுவதில்லை.

இந்த விஷயம் பொய்யென்று மறுக்க அவ்வப்போது ஒன்றிரண்டு பதிவுகளை சூடான இடுகைகளில் காட்டுவார்கள் என்று நினைக்கிறேன். தினமும் சூடான இடுகைகளாக கோழி முட்டை போடுவதைப் போல போட்டுத் தள்ளிய தோழர் அதிஷாவின் பதிவுகள் வாரத்துக்கு ஒன்றுதான் இப்போது சூடாகிறது என்பது இதற்கு தகுந்த உதாரணம். என் பதிவுக்கான ஹிட்ஸ் என்னவென்று எனக்கு மட்டுமல்ல, என் வலைப்பதிவின் முகப்பில் இருக்கும் கவுண்டரை பார்ப்பவர்கள் எல்லோருக்குமே தெரியும். அதுபோலவே சூடான இடுகைகளில் தற்போது இடம்பிடிக்கும் பதிவுகளின் ஹிட்ஸ் என்னவென்றும் எல்லோருக்கும் தெரியும் என்பதாலும், சூடான இடுகைகளில் இடம்பெறுவது பல்கலைக்கழகங்களில் கொடுக்கப்படும் டாக்டர் பட்டத்துக்கு இணையானது அல்ல என்பாதலும் சும்மா விட்டுத் தள்ளு மச்சி என்று விட்டுத் தள்ள வேண்டியது தான்.

இப்பதிவு சூடான இடுகைகளில் வரவே வராது என நம்புவதால் பதிவுக்கு தலைப்பூ சூடான இடுகை என்று வைத்திருக்கிறேன்”. பல்கலைக் கழகங்களில் நன்கு படித்து பரீட்சை பாஸ் செய்தபிறகு தரும் பட்டம் என அவர் குறிப்பிட்டிருந்தால் இன்னும் சரியாக இருந்திருக்கும் என நான் நினைக்கிறேன். மற்றப்படி அரசியல் வியாதிகளுக்கு பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர்களது மன அரிப்புக்கு சொரிந்து விட ஏற்ற வகையில் தரும் டாக்டர் பட்டம் ரொம்பவுமே கேவலமானது, சில சிறந்த விதிவிலக்கு தருணங்கள் தவிர.

“வாங்கய்யா வாங்க, கோவி கண்ணன், லக்கிலுக் அருமையா எழுதிட்டாங்க, நீ என்ன சொல்லப் போறே”? என்று சாலமன் பாப்பையா குரலில் கேட்கிறான் முரளி மனோஹர். என்ன சொல்வதற்கு இருக்கிறது? அவ்விருவரும் நான் கூற நினைத்ததை கூறிவிட்டனர். ஆகவே அவற்றை நானும் கூறியதாக எடுத்து கொண்டு மேலும் சில பார்வைகளைத் தரும் எண்ணத்தில் உள்ளேன்.

எனது நாகரிகத்தைத் தொலைத்த பெயரிலி என்னும் பதிவும் இந்த டெவலப்மெண்டுக்கு ஒரு காரணம் என நினைக்கிறேன். இது சம்பந்தமான சில விளக்கங்கள் அளிக்கக் கடமைப்பட்டுள்ளேன். நான் இப்பதிவே போட்டிருக்கக் கூடாது என்ற ரேஞ்சுக்கு பலர் எனக்கு அட்வைஸ் செய்தனர். எங்கோ மூலையில் ஒரு மாதத்துக்கும் மேலாக யாருமே பார்க்காத பெயரிலியின் பின்னூட்டத்தை நான் எல்லோருக்கும் வெளிச்சம் போட்டு காட்டியதாக, அப்பின்னூட்டத்தை கண்டுகொள்ளாது அசால்ட்டாக விட்டிருந்த சம்பந்தப்பட்ட பதிவரும் கூறினார். என்ன செய்வது, என் கண்களில் பட்டு தொலைத்து விட்டது. ஓசைப்படாமல் விஷம் இட்டு விட்டு எஸ்கேப் ஆனவரை நாமும் அவ்வாறே விட்டு விடவேண்டுமா? ஆகவேதான் பரவாயில்லை என நான் அதை வெளிக்கொணர்ந்தேன். முக்காடு போட்டு கொண்டு அப்பின்னூட்டத்தை இட்ட மகானுபாவர் வெளியே வர வேண்டியதாயிற்று. அவர் யார் எப்படிப்பட்டவர் என்பதும் வெளியில் தெரிந்தது. இப்போது எல்லாமே ஓப்ப்னாக வந்து விட்டது, அதுவும் நல்லதற்கே. மற்றப்படி தீவிர ராம பக்தையான எனது மகளுக்கு ஒரு கெடுதலும் வராது என்பதில் நான் உறுதியாகவே இருக்கிறேன். ஆகவே அந்த சாபம் என்னை பாதிக்கவில்லை. ஏன் இந்த விபரீத ஆசை இந்த மனிதருக்கு என்று மட்டும்தான் எழுதினேன். ஆக அப்பதிவை போட்டதில் வருத்தமில்லை. இந்தத் தருணத்தில் எனது கருத்துக்களை பல இடங்களில் தீவிரமாக மறுத்து எழுதிய/இன்னும் எழுதும் லக்கிலுக் தனது ஒரு பதிவின் மூலம் எனக்கு நல்ல சப்போர்ட் தந்ததற்கு அவருக்கு ஒரு சல்யூட். அவரது அப்பதிவுதான் அவரும் கட்டம் கட்டப்பட்டதற்கு காரணம் என நினைக்கும்போது எனக்கு சற்று வருத்தமே.

சரித்திரம் திரும்பும் என்று சொல்வார்கள். ஆனால் அவ்வாறு திரும்பும்போது சற்றே அபத்தமாக் இருக்கும் என்றும் கூறுவார்கள். அதாவது, “History repeats itself, first as tragedy, second as farce.” (Karl Marx). போலி விஷயத்திலும் அப்படித்தான் சாதாரண கருத்து வேறுபாடு ஆரம்பித்து மூன்றாண்டுகள் சூறாவளியாக நீடித்தது. அப்போதும் நான் அதை இக்னோர் செய்திருக்க வேண்டும் எனக் கூறியவர்கள் பலர் இருந்தனர். அத்தருணத்திலும் விடாது நான் சண்டை போட்டேன். அதனாலும், மற்ற நண்பர்கள் உதவியாலும் போலி முழுமையாக அடையாளம் காணப்பட்டு இடத்தை காலி செய்தான். இக்னோர் செய்திருந்தால் இன்னும் ஒரு புரையோடிய புண்ணாகத்தான் இருந்திருப்பான். இப்போதும் ஒரு கருத்து வேற்றுமைதான் ஒரு மூத்த பதிவரை என் மகளை சம்பந்தப்படுத்தி பின்னூட்டம் போட வைத்தது. ஆனால் போன முறை மாதிரி டெவலப் ஆகாது என நம்புகிறேன். பை தி வே, செந்தழல் ரவியை கட்டம் கட்டியதற்கு காரணம் தெரியவில்லை. யாரேனும் தெரிந்தால் சொல்லுங்கள்.

இம்மாதிரியான கட்டம் கட்டுவது புதுக்கோட்டுக்கு ஜூட்டுக்கு இன்னொரு நல்ல உதாரணம்.

இம்மாதிரி ஒவ்வொருவராக கட்டம் கட்டப்பட்டதை பார்த்ததும் பாக்கியராஜின் முந்தானை முடிச்சு படத்தில் ஒரு சீன் எனக்கு ஞாபகம் வந்தது. அது என்னவாக இருக்கும் என யாரேனும் ஊகிக்க இயலுமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

12/21/2008

நன்றி தமிழ் ஓவியா மற்றும் விடுதலை!

நான் ரொம்ப நாட்களாக தேடிக்கொண்டிருந்த விஷயத்தை தந்த தமிழ் ஓவியாவுக்கு நன்றி, கூடவே விடுதலைக்கும். முதலில் பதிவைப் படிப்போம், பிறகு நான் கூற நினைப்பதை கூறி விடுகிறேன்.

நான் ஏறக்குறைய சுமார் 50- ஆண்டு காலமாகவே பார்ப்பனரல்லாத"கீழ்மக்கள்"-பிற்படுத்தப்பட்ட மக்கள் நலனுக்குக் கேடாகப் பயன்படுத்தப்படும் எல்லா சாதன வாய்ப்புகளையும் ஒழிக்க வேண்டுமென்று பாடுபட்டு வருகிறேன். என்னுடைய பிரதான ஒரே தொண்டு இது தான். இனியும் என் வாழ்நாள் வரையிலும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிற தொண்டும் இதுதான். பார்ப்பனரால் ஏற்பட்டு வருகிற கொடுமைகள், அநீதிகள் குறிப்பிடத் தகுந்த அளவுக்காவது குறைந்திருக்கிற அளவுக்குச் செய்திருந்த போதிலும் அவை நிலைத்திருக்குமா என்று அய்யப்படுகிறேன்.

இவ்வளவு எடுத்துக் காட்டுவதற்கும் வெட்கப்படுகிறேன். தறுதலைகளும், பொறாமைக்காரர்களும், சொந்த எதிரிகளும், ஒரு பொது மனிதன் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டுமோ, அதை விட்டு குற்றம் குறைகூற வழி காணத் துடிக்கிறார்கள். இருந்தாலும் நான் இதை இவ்வளவு எடுத்துக்காட்டுகிறேன் என்றால், துரோகம் செய்து அயோக்கியனாய் வாழ வேண்டிய அவசியம் எனக்கு எந்தக் கட்டத்திலும் வந்ததில்லை என்பதை எடுத்துக் காட்டவே ஆகும். எல்லாத் துறைகளிலும் குறையாத அனுபவமும், திறமையும் உண்டு என்பதைக் கூறவுமேயாகும். எனது கருத்து மாறுதல்கள் எல்லாம் எனது கண்ணியமான அனுபவம் ஆராய்ச்சிக் கொண்டே இருக்குமே, தவிர பணம் சேர்க்கவோ, பதவி பெறவோ, பெரிய ஆள் ஆகவோ, இழிவை மறைத்துக் கொள்ளவோ, கடுகளவு கூடக் காரணம் கொண்டதாய் இருக்காது. இப்படிப்பட்ட என்னை இந்நாட்டு விடுதலைக்குக் குறுக்கேயிருந்தவன், துரோகம் செய்தவன் என்று சொல்லும் போது எவ்வளவு மனவுரம் இருந்தாலும் நிதானம் தவறவும் தூண்டுவதாகிறது. என் அபிப்பிராயத்தை மறுக்க உங்களுக்கு உரிமை உண்டு. ஆனால் என் அபிப்பிராயத்தை வெளியிட எனக்கு உரிமை உண்டு.

என்னைப் பொறுத்த வரையில் என்னைப் பின்பற்றி நடந்து வருபவர்கள் புத்திசாலிகளாய் இருக்க வேண்டுமென்ற கவலை எனக்குக் கிடையாது. தங்கள் அறிவை, ஆற்றலை மறந்து என் இலட்சியத்தை நிறைவேற்றிக் கொடுக்கக் கூடிய ஆட்கள் தான் எனக்குத் தேவையே ஒழிய, அவர்கள் புத்திசாலிகளா? முட்டாள்களா? பைத்தியக்காரர்களா? கெட்டிக்காரர்களா?என்பது பற்றி எனக்குக் கவலையில்லை.என் நண்பர் பா.வே. மாணிக்க நாயக்கர் ஈரோட்டில் எக்சிகியூடிவ் எஞ்சினியராக இருந்த போது தனக்கு இரு கொல்லர்கள் வேண்டுமென்றுக் கேட்கையில், அவர் சொன்னார். "கெட்டிக்காரர்களாயிருந்தால் இருவருக்குள்ளும் கெட்டிக்காரத்தனத்தனப் போட்டியால் வேலை கெட்டு விடும். அவர்களே எனக்கு யோசனை சொல்ல முந்தி என் திட்டம் ஆட்டம் கொடுத்து வேலை நடவாது. ஆகவே, நான் சொல்வதைப் புரிந்து அதன்படி வேலை செய்யக்கூடிய சுத்தி, சம்மட்டி பிடித்துப் பழகிய படிமானமுள்ள முட்டாளாயிருந்தால் போதும்" என்றார்.

ஆகவே தான் நான் நீடாமங்கலம் மாநாட்டிலும் தெளிவாகக் கூறினேன்.

என்னைப் பின்பற்றுபவர்கள் தங்கள் சொந்த பகுத்தறிவைக் கூட கொஞ்சம் தியாகம் செய்ய வேண்டுமென்று கூறினேன். யாராவது ஒருவன் (தலைமை ஏற்று) நடத்தக் கூடியவனாக இருக்க முடியுமே தவிர எல்லோரும் தலைவர்களாக முடியாது. மற்றவர்கள் தலைவர் இட்ட கட்டளைப்படி நடக்க வேண்டியவர்கள்தான்.தோழர்களே! நான் இப்போது ஒருபடி மேலாகவே சொல்லுகிறேன்.

நீங்கள் இந்த இயக்கத்தில் உள்ளவரை உங்கள் சொந்த பகுத்தறிவை மட்டுமல்ல; உங்கள் மனசாட்சி என்பதைக் கூட நீங்கள் மூட்டைக் கட்டி வைத்து விட வேண்டியது தான். கழகத்தில் சேரும் முன்பு நீங்கள் உங்கள் பகுத்தறிவு கொண்டு கழகக் கோட்பாடுகளை எவ்வளவு வேண்டுமானாலும் ஆராய்ந்து பார்க்கலாம்! என்னுடன் வாதாடலாம். ஆர அமர இருந்து யோசித்துப் பார்க்கலாம். ஆனால் உங்கள் மனசாட்சியும், பகுத்தறிவும் இடங்கொடுத்து கழகத்தில் சேர்ந்துவிட்டீர்களோ அப்போதிலிருந்து உங்கள் பகுத்தறிவையும், மனசாட்சியையும் ஒருபுறத்தில் ஒதுக்கி வைத்து விட்டுக் கழகக் கோட்பாடுகளை கண்மூடிப் பின்பற்ற வேண்டியது தான் முறை.

மனசாட்சியோ, சொந்த பகுத்தறிவோ, கழகக் கொள்கையை ஒப்புக் கொள்ள மறுக்குமானால் உடனே விலகிக் கொள்வதுதான் முறையே ஒழிய, உள்ளிருந்துக் கொண்டே குதர்க்கம் பேசித் திரிவது என்பது விஷத்தனமே ஆகும் என்பதைத் தெரிவித்துக் கொள்ள ஆசைப்படுகிறேன்.

சிலருக்கு நான் ஏதோ சர்வாதிகாரம் நடத்த முற்படுகிறேன் என்று தோன்றலாம். இது ஓரளவுக்கு சர்வாதிகாரம் என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் தோழர்களே! நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். "இந்தச் சர்வாதிகாரம் எதற்குப் பயன்படுகிறதென்று?" என்னுடைய சர்வாதிகாரத்தைக் கழக இலட்சியத்தின் வெற்றிக்காக பொது நன்மைக்காகப் பயன்படுகிறதே ஒழிய, எந்தச் சிறு அளவுக்கும், எனது சொந்தப் பெருமைக்காகவோ, ஒரு கடுகளவாவது எனது சொந்த நன்மைக்காகவோ பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதை நீங்கள் ஆராய்ந்து பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டுகிறேன்.

------------- 10-02-1963- அன்று பெரியார் தூத்துக்குடி மாநாட்டிலும் மற்றும் பல சமங்களில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு.- "விடுதலை"-10-02-1963.

மீண்டும் டோண்டு ராகவன்.

நான் ஜூலை 1949-ல் நடந்ததென்ன என்ற எனது பதிவில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தேன். “அச்சமயம் பலப் பொருந்தாத் திருமணங்கள் நடந்தன. அதாவது 50 வயதுக்காரர் 14 வயதுப் பெண்ணை மூன்றாம் அல்லது நான்காம் தாரமாகத் திருமணம் செய்துக் கொள்வது சர்வ சாதாரணம். இத்திருமணங்களை எதிர்த்து தி.க. ஒரு தார்மீகப் போராடமே நடத்தி வந்தது. பெரியார் அவர்களே அவற்றைக் கண்டித்து எழுதியும் இருக்கிறார். அச்சமயத்தில் பெரியார் இவ்வாறு செய்தது அக்கட்சியினரை ஒரு கேலிக்குரியப் பொருளாக்கி விட்டது. "எனக்கு புத்திசாலிகள் சீடர்களாகத் தேவையில்லை. முட்டாள்களே போதும்" என்று பெரியார் அக்காலக் கட்டத்தில் கூறியதாகவும் செய்திகள் படித்துள்ளேன்”. அதை படித்தபோது எங்கே எந்த சந்தர்ப்பத்தில் கூறினார் என்று சொல்ல என்னிடம் போதுமான சுட்டிகள் இல்லை. மேலே உள்ளது அக்குறையை போக்குகிறது. அது 1963-ல் கூறப்பட்டிருந்தாலும் 1949-லும் அதே கருத்தைத்தான் அவர் வைத்திருந்தார் என்பது வெள்ளிடைமலை.

அதாவது “நான் சொன்னேன் என்பதற்காக நீங்கள் அதை அப்படியே ஒப்பு கொள்ளாதீர்கள், உங்கள் பகுத்தறிவையும் உபயோகித்து கொள்ளவும்” என்று அவர் கூறியது தன் கட்சியில் இல்லாதவர்களுக்கு மட்டும்தான், அப்படித்தானே? மேலும், தமிழர்களைப் பற்றி பெரியார் அவர்கள் கூறியவை என்னும் தலைப்பில் வந்த எனது பதிவில் வந்த இந்த வரிகளையும் பார்ப்போம்: “"தமிழர் என்போர் பித்தலாட்டக்காரர்கள், கருங்காலிகள்!' -
சொன்னது யார்? ஆரியர்களா? தமிழை வெறுப்போர்களா? வட நாட்டுக்காரர்களா? சம்ஸ்கிருதுதத்தை தூக்கி வைத்துக் கொண்டு ஆடுபவர்களா? காஞ்சி மடாதிபதியா? மும்பை எக்ஸ்பிரஸ் எடுக்கும் கமலஹாசனா?

இல்லை ஐயா,. இல்லை, தமிழர்களின் தந்தை என்றும் பெரியார் என்றும் ஒரு கூட்டத்தினரால் அழைக்கப் படும் ஈ வெ ராமசாமி நாயக்கர் என்னும் கன்னடியர். இப்படிப் பட்ட ஒரு ஆசாமியை, தமிழர்களை கருங்காலிகள் என்று அழைத்தவரையே, தமிழைக் காட்டுமிராண்டி பாஷை என்று அழைத்தவரையே கொஞ்சம் கூட வெட்கமின்றி, மான ரோஷமின்றி, தமிழர் தலைவர் என்று ஒரு கூட்டம் அழைத்துக் கொண்டு ஊரை ஏமாற்றி வருகிறது. அவரது உண்மையான முகம் என்ன? அவர் தமிழர்களை பற்றி என்ன அபிப்ராயம் கொண்டிருந்தார்? மேலே படியுங்கள்.

'தமிழர் என்போர் பித்தலாட்டக்காரர்கள், கருங்காலிகள்!' -
ஈ.வே.ரா.வின் முழக்கம்

தமிழ்மொழி பிற்போக்கான மொழி, மூவாயிரம் ஆண்டு வரலாற்றுப் பெருமை கொண்ட தமிழில்
பெருமை கொள்ளும்படி, மூடநம்பிக்கை இல்லாத ஒரு நூலுமில்லை,
தொல்காப்பியர், வள்ளுவர், கம்பர் போன்ற வான்புகழ் கொண்ட தமிழ்ப்புலவர்கள் எல்லாம் ஹிந்துமத வெறியர்கள், ஆரிய அடிவருடிகள், துரோகிகள் என்றெல்லாம் முத்துக்களை உதிர்த்துவந்த ஈ.வே.ராமசாமி நாயக்கரை எதிர்த்து மனசாட்சி கொண்ட ஒரு தமிழனும் கொதித்து எழவில்லையா என்று இன்றைய இளைஞர்கள், தன்மானத் தமிழர்கள் ஆச்சரியப்படலாம். அப்படிக் கொதித்தெழுந்த பலர் இருந்தனர். ஆனால் அவர்களின் நியாயமான பேச்சுகள் எதுவுமே இன்று கிடைப்பதில்லை. பெருவாரி பத்திரிகைகள் அவற்றைப் பிரசுரிப்பதும் இல்லை.

சொல்லப் போனால் ஈவேராவின் தமிழ்மொழி மற்றும் தமிழ்மரபு வெறுப்பினைக் காலப்போக்கில்
உணர்ந்து கொண்ட அவர் தொண்டரடிப்பொடிகளில் சிலரே அவருக்கு எதிராகக் கொந்தளித்து
எழுந்ததும் இன்று திரிக்கப்பட்டுள்ள திராவிட வரலாற்றில் பதிவு செய்யப் படவில்லை.

உதாரணமாய் ம.வெங்கடேசன் அவர்கள், தனது ஈ வெ ராமசாமி நாயக்கரின் மறுபக்கம் என்னும் புத்தகத்தில், திரட்டியிருக் கொடுத்திருக்கும் மேலும் சில தகவல்களை இங்கு பார்க்கலாம். .

சிலம்புச்செல்வர் ம.பொ.சிவஞானம் அவர்கள் தமிழ்நாடு என்ற பெயரில் மாநிலம் அமையச் செய்த அறப்போராட்டங்களை அறவே வெறுத்து வந்தார் ஈவேரா. தமிழ்நாடு என்ற பெயரே அவருக்கு ஒவ்வாமல் இருந்தது. திராவிடநாடு என்ற பெயரைப் புறம்தள்ளிவிட்டு மபொசியின் தமிழரசுக் கழகம் 'தமிழ், தமிழர், தமிழ்நாடு' என்று முழக்கமிட்டு வந்தது ஈவேராவைக் கடும் கோபத்தில் ஆழ்த்தியது. இன்னதைத்தான் பேசுவது என்ற விவஸ்தை எப்போதும் இல்லாத நாயக்கர், மபொசியை மனதில் வைத்துக் கொண்டு ஒட்டுமொத்தமாய்த் தமிழர்களைத் திட்ட ஆரம்பித்தார்.

11.4.1947 தேதியிட்ட விடுதலையில் ஈவேரா எழுதியது:
"தமிழ்நாட்டைத் தனியாகப் பிரிக்க வேண்டும் என்பதும், தமிழரசு, தமிழர் ஆட்சி, தமிழ் மாகாணம்
என்றும் பேசப்படுவனயெல்லாம் நம்முடைய சக்தியைக் குலைப்பதற்காகவும், குறைப்பதற்காகவும் செய்யப் படுகின்ற காரியங்கள் என்பதை நீங்கள் உணர வேண்டும்." தொடர்ந்து மேடைகளில் தமிழர் என்போர் கருங்காலிகள், பித்தலாட்டக்காரர்கள் என்றெல்லாம் பேச ஆரம்பித்தார்.

ஈவேரா இப்படி மனம்போனபடி பொதுவாய்த் தமிழர்களை வைதுவருவதைக் கண்டித்து திருச்சி
முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள் ஒரு கட்டுரை எழுதினார்.

யார் இந்த கி.ஆ.பெ.?

ஈ.வே.ராமசாமி நாயக்கருடைய முன்னாள் சீடர்தான் அவர்.

ஈவேராவுடன் ஒன்றாகப் பணியாற்றிப் பின்பு கட்சியின் கொள்கைகளில் இருந்து ஈவேராமசாமி நாயக்கர் நழுவி விட்டதாகக் கூறி வெளிவந்தவர். தமிழுக்காக அரும்பாடு பட்டவர்.

அவர் 25.1.1948 அன்று தமிழர்நாடு என்ற ஏட்டில் வரைந்த கட்டுரை பின்வருமாறு:-

அண்மையில் சென்னை கோகலே ஹாலில் திரு.சி.டி.டி.அரசு அவர்கள் தலைமையில் நடைபெற்ற
கூட்டத்தில் 'தமிழர் என்பதும், தமிழர் கழகம் என்பதும், தமிழரசுக் கட்சி என்பதும், தமிழர் ராஜீயம்
என்பதும், தமிழ்நாடு தமிழருக்கே என்பதும் நமது முயற்சியைக் கெடுக்கும் சூழ்ச்சிகள்' என்று பெரியார் அழுத்தம் திருத்தமாகக் கூறியிருக்கிறார். இது ஏற்கனவே பத்திரிகைகளில் வெளி வந்திருக்கிறது.

இப்பொழுது 'தமிழர் என்போர் பித்தலாட்டக்காரர்கள், கருங்காலிகள்' என்று எழுதியும், பேசியும்
வருகிறார்கள். ஆகவே வேண்டுமென்றே திட்டம் போட்டு வைய முன்வந்திருப்பதாக நன்கு விளங்குகிறது.

இதனால் தமிழ், தமிழர், தமிழ்நாடு தமிழ் அரசு என்று கூறக்கூடாதென்றும், திராவிடம், திராவிடர்,
திராவிடக்கழகம், திராவிடநாடு, திராவிட அரசு என்றே கூறவேண்டுமென்றும் அவர்கள் விரும்புவதாகத் தெரிகிறது. இது தமிழ்நாட்டின் பெருமக்களுக்கு மாறுபட்ட கொள்கையாக இருந்து
வருகிறது. காரணம், ஆந்திர, மலையாள, கன்னட மக்களாகிய சுற்றியுள்ள மூன்று நாட்டினரும்
திராவிடர் எனக் கூறாமல் தங்கள் மொழியையும், நாட்டையுமே முன்னெடுத்துக் கூறிவரும்போது தமிழ்நாட்டு மக்கள் மட்டும் தங்கள் மொழியையும் நாட்டையும் பற்றி ஏன் கூறக்கூடாது? இதற்கு மாறுபட்டு இருப்பது எதன் பொருட்டு என்பது தமிழ் மக்களுக்கு விளங்கவில்லை.

எவ்விதமாயிருந்தாலும் மாறுபட்ட கருத்தும், கொள்கையும் உடையவர்களை பித்தலாட்டக்காரர்கள்,
கருங்காலிகள் என்று கூற வேண்டியது அவசியம்தானா என்பதையும் பெரியாரே எண்ணிப் பார்க்க
வேண்டும். ஒரு கழகத்தின் தலைவர் வாயிலிருந்து இக்கடுஞ்சொற்கள் வருவது நேர்மையானதுதானா
என்பதைப் பொதுமக்களே கருதிப்பார்க்க வேண்டும்.

ஆந்திர நாட்டுக்குச் சென்று, ஆந்திரர், ஆந்திரநாடு என்று சொல்பவர்களிடம், அவ்வாறு சொல்வோர்
பித்தலாட்டக் கருங்காலிகள் என்று இவர் இதுவரை சொல்லியிருக்கிறாரா?

கேரள நாட்டுக்குச் சென்று, கேரளர், கேரளநாடு என்று சொல்பவர்களிடம், அவ்வாறு சொல்வோர்
பித்தலாட்டக் கருங்காலிகள் என்று இவர் இதுவரை சொல்லியிருக்கிறாரா?

கன்னடிய நாட்டுக்குச் சென்று, கன்னடியர், கன்னடநாடு என்று சொல்பவர்களிடம், அவ்வாறு சொல்வோர் பித்தலாட்டக் கருங்காலிகள் என்று இவர் இதுவரை சொல்லியிருக்கிறாரா?

இனியேனும் சொல்வாரா?

இதுவரை சொல்லவில்லையென்றால் தமிழர், தமிழ்நாடு என்று சொல்லுகிறவர்களை மட்டும்
பித்தலாட்டக் கருங்காலிகள் என்று சொல்லுவானேன்?

பித்தலாட்டக்காரர்கள், கருங்காலிகள் என்று சும்மா சொல்லி விடுவது மட்டும் போதாது. காரணம் காட்டிக் கூறியிருக்க வேண்டும். அவ்வாறு கூறாதது அவர்களுடைய ஆத்திரத்தைக் காட்டுகிறதே தவிர உண்மையைக் காட்டுவதாக அறிவாளிகளால் ஒப்ப முடியாது.

மற்றொரு நண்பர், கிராமணியார் (ம.பொ.சி) அவர்களைத்தான் அவ்வாறு கூறியிருக்கிறார் என்று நினைத்து நமக்கு எழுதி இருக்கிறார். இது உண்மையானால் நேரடியாக எழுதி இருக்கலாமே! அப்படி இருந்தாலும் கூட கிராமணியார் ஒரு மாறுபட்ட கருத்தினர் என்பதற்காக அவரது தமிழ்ப்பற்றும், தமிழ்நாட்டுப்பற்றும் நமக்குத் தேவையில்லாமல் போய்விடுமா?

இதற்காக அவரைப் பித்தலாட்டக்காரர் என்றும் கருங்காலி என்றும் கூறுவது முறையா என்பதையும் அன்பர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

தமிழர் கழகத்தையும், தமிழரசுக் கழகத்தையும் நேரடியாகத் தாக்கி, தமிழ்ப்பற்று, தமிழ்நாட்டுப் பற்றுள்ள மக்களை வேண்டுமென்றே வைதிருக்கிறார் என்று முடிவாகத் தெரிகிறது.
இதை மெய்ப்பிக்க கழகம் என்ற சொல்லை எடுத்துவிட்டு, தமிழர், தமிழரசு என்று சுட்டிக்காட்டி வைத்திருப்பதே போதுமான சான்றாகும்.

நம்மைப் பொறுத்தவரையில் பெரியாரின் தன்மைக்கு இச்சொற்கள் ஏற்றதல்ல என்றே கூறுவோம்.
இப்போது கூறியதை அவர் திரும்பப் பெற வேண்டும். இன்றேல் தாம் கூறியதைக் காரணம் காட்டி மெய்ப்பிக்க வேண்டும். இதுவே தமிழர், தமிழரசு, தமிழ்நாடு தமிழருக்கே என்று கூறுகிற 'பித்தலாட்டக் கருங்காலி'களின் கோரிக்கையாகும்.

(நன்றி: புதிய தமிழகம் படைத்த வரலாறு - ம.பொ.சி)”

அவ்வாறு தான் போதித்த பகுத்தறிவை தனக்கெதிராக தன் சீடர்களே பிரயோகம் செய்வதை அவர் ஒத்து கொள்ளவில்லைதான். ஆனாலும் அவர் எந்த காண்டெக்ஸ்ட்களில் இப்பொருள் வருமாறு கூறி வந்தார் என்பதைப் பார்த்தோமானால் அவ்வாறு சீடர்கள் பேசுவதை தன்னால் தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்க இயலாது என்ற நிலையில்தான் என தெரியவருகிறது.

ஒரு சமயம் கதிர்வேல் பிள்ளை என்னும் ஏழைப்புலவர் அவரிடம் வந்திருக்கிறார். அவருக்கு அருந்த பால் கொடுத்திருக்கிறார். அதே சமயம் புலவர்கள் எல்லோருமே பிச்சைக்காரர்கள்தானே என்ற தொனியில் பேச அப்புலவரோ அவர் கொடுத்தப் பாலை வாயில் விரல்விட்டு வாந்தி எடுத்துவிட்டு அப்புறம் சென்றார். அந்த நிகழ்ச்சியைப் பற்றிப் பேசும் பெரியார் அவர்களே "கதிர்வேல் பிள்ளை என்னும் வாயாடிப் புலவர்" என்று அவரைப் பற்றிக் குறிப்பிடுகிறார். இப்போது கூறுங்கள், தான் பிச்சை போடுகிறோம், அதைப் பெறுபவன் அதை அவமானத்துடன் சேர்ந்துதான் விழுங்க வேண்டும் என்ற இவரின் மனோபாவம்தானே இங்கு முன்னால் தெரிகிறது?

பெண்ணுரிமையை பேசியவரே தனது சொந்த வாழ்க்கையில் ஆணாதிக்க மனோபாவத்துடன் நடந்து கொண்டதை அவரே ஒத்துக் கொண்டது பற்றி நான் இட்ட விடாது கருப்புவுக்கு நன்றி
என்ற தலைப்பில் வந்த இப்பதிவில்
வரும் சில வரிகளைப் பார்க்கலாம். “பெண்கள் சுதந்திர விஷயமாகவும், பெண்கள் பெருமை விஷயமாகவும் பிறத்தியாருக்கு நான் எவ்வளவு பேசுகிறேனோ போதிக்கிறேனோ அதில் நூற்றில் ஒரு பங்கு வீதமாவது என்னருமை நாகம்மாள் விஷயத்தில் நான் நடந்து கொண்டிருந்தேன் என்று சொல்லிக் கொள்ள எனக்கு முழு யோக்கியதை இல்லை.

ஆனால், நாகம்மாளோ பெண் அடிமை விஷயமாகவும் ஆண் உயர்வு விஷயமாகவும், சாஸ்திர புராணங்களில் எவ்வளவு கொடுமையாகவும் மூர்க்கமாகவும் குறிப்பிட்டிருந்ததோ அவற்றுள் ஒன்றுக்குப் பத்தாக நடந்து கொண்டிருந்தார் என்பதையும் அதை நான் ஏற்றுக் கொண்டிருந்தேன் என்பதையும் மிகுந்த வெட்கத்துடன் வெளியிடுகிறேன்.

நாகம்மாள் உயிர் வாழ்ந்ததும், வாழ ஆசைப்பட்டதும் எனக்காகவே ஒழிய தனக்காக அல்ல என்பதை நான் ஒவ்வொரு விநாடியும் நன்றாய் உணர்ந்து வந்தேன். இவைகளுக்கெல்லம்ம் நான் சொல்லக்கூடிய ஏதாவதொரு சமாதானம் உண்டென்றால் அது வெகு சிறிய சமாதானமேயாகும்.
அதென்னவென்றால், நாகம்மாளின் இவ்வளவு காரியங்களையும் நான் பொதுநல சேவையில் ஈடுபட்ட பிறகு பொதுநலக் காரியங்களுக்கும், சிறப்பாகச் சுயமரியாதை இயக்கத்திற்குமே பயன்படுத்தி வந்தேன் என்பதுதான். நான் காங்கிரசிலிருக்கும் போது, நாகம்மாள், மறியல் விஷயங்களிலும் வைக்கம் சத்தியாகிரக விஷயத்திலும், சுயமரியாதை இயக்கத்திலும் ஒத்துழைத்து வந்தது உலகம் அறிந்ததாகும்.

ஆகவே, நாகம்மாள் மறைந்தது எனக்கு ஒரு அடிமை போயிற்றென்று சொல்லட்டுமா? ஆதரவு போயிற்றென்று சொல்லட்டுமா? இன்பம் போயிற்றென்று சொல்லட்டுமா? உணர்ச்சி போயிற்றென்று சொல்லட்டுமா? ஊக்கம் போயிற்றென்று சொல்லட்டுமா? எல்லாம் போயிற்றென்று சொல்லட்டுமா? எதுவும் விளங்கவில்லையே! எது எப்படியிருந்த போதிலும், நாகம்மாள் மறைவு ஒரு அதிசய காரியமல்ல. நாகம்மாள் இயற்கையை எய்தினார். இதிலொன்றும் அதிசயமில்லை.

ஆதலால், நாகம்மாள் மறைவால் எனக்கு அதிக சுதந்திரம் ஏற்பட்டதுடன் "குடும்பத் தொல்லை' ஒழிந்தது என்கின்ற ஓர் உயர் பதவியையும் அடைய இடமேற்பட்டது.

இது நிற்க. நாகம்மாள் மறைவை நான் எவ்வளவு மகிழ்ச்சியான காரியத்திற்கும் லாபமான காரியத்திற்கும் பயன்படுத்திக் கொள்கின்றேனோ, அந்த மாதிரி எனது மறைவையோ எனது நலிவையோ நாகம்மாள் உபயோகப்படுத்திக் கொள்ளமாட்டார். அதற்கு நேர்ரெதிரியடையாக்குவதற்காக உபயோகித்துக் கொள்வார். ஆதலால், நாகம்மாள் நலத்தைக் கோரியும், நாகம்மாள் எனக்கு முன் மறைந்தது எவ்வளவோ நன்மை”. ஒரு கையறு நிலையில் அவர் எழுதிய இவ்வரிகள்தான் என்னை அவர்மேல் பெருமதிப்பு கொள்ளச் செய்தன என்பதையும் இங்கு இன்னொரு முறை வலியுறுத்துவேன். “மகாத்மா காந்தி அவர்கள் தனது சத்திய சோதனையில் தன்னைப் பற்றி பல குறைகளை வெளிப்படையாக எழுதியதற்கு எவ்வகையிலும் பெரியார் அவர்கள் மேலே எழுதியது நேர்மையில் சிறிதும் குறைந்ததல்ல. உண்மையிலேயே அவர் பெரியார்தான். அவரை அப்படிப்பட்ட வரிகளை எழுத வைத்த உத்தமப் பெண்மணியான அமரர் நாகம்மாள் பற்றி கூறவே வேண்டாம். மறுபடியும் கூறுகிறேன், ஈவேரா அவர்கள் உண்மையிலேயே பெரியார்தான்”.

இப்பதிவை முடிப்பதற்கு முன்னால் தமிழ் ஓவியாவின் பதிவிலிருந்து சில வரிகள்: “கழகத்தில் சேரும் முன்பு நீங்கள் உங்கள் பகுத்தறிவு கொண்டு கழகக் கோட்பாடுகளை எவ்வளவு வேண்டுமானாலும் ஆராய்ந்து பார்க்கலாம்! என்னுடன் வாதாடலாம். ஆர அமர இருந்து யோசித்துப் பார்க்கலாம். ஆனால் உங்கள் மனசாட்சியும், பகுத்தறிவும் இடங்கொடுத்து கழகத்தில் சேர்ந்துவிட்டீர்களோ அப்போதிலிருந்து உங்கள் பகுத்தறிவையும், மனசாட்சியையும் ஒருபுறத்தில் ஒதுக்கி வைத்து விட்டுக் கழகக் கோட்பாடுகளை கண்மூடிப் பின்பற்ற வேண்டியது தான் முறை”. அப்படியே இசுலாமிய மதக் கொள்கைதான். ஒரு தடவை உள்ளே வந்தவர்கள் வெளியே போவதை அங்கும் விரும்புவதில்லை. ஆனால் ஒரே ஒரு பெரிய வித்தியாசம், பெரியார் விஷயத்தில். விட்டுப் போனவர்களுக்கெதிராக ஃபத்வா எல்லாம் போடப்படுவதில்லை. திட்டுவதோடு சரி.

சரி, எனக்கு ஒரு சந்தேகம். ஹிந்து என்றால் திருடன் என்னும் பொருள் என்று பாரசீக மொழி அகராதியை வைத்து பேசுபவர்கள் ஏன் இன்னும் அதே மதத்தில் இருந்து லோல்பட வேண்டும்?
“மனசாட்சியோ, சொந்த பகுத்தறிவோ, கழகக் கொள்கையை ஒப்புக் கொள்ள மறுக்குமானால் உடனே விலகிக் கொள்வதுதான் முறையே ஒழிய, உள்ளிருந்துக் கொண்டே குதர்க்கம் பேசித் திரிவது என்பது விஷத்தனமே ஆகும் என்பதைத் தெரிவித்துக் கொள்ள ஆசைப்படுகிறேன்” என பெரியார் அவர்களே கூறியது வேறு இங்கு நினைவுக்கு வந்து தொலைக்கிறது.

இப்போது முரளி மனோஹர் கூறுவதாவது “அப்படியெல்லாம் மதத்தை விட்டுப் போனால் அவரது சந்ததியினர் பெறும் இடஒதுக்கீடு சலுகைகள் பறிபோய்விடுமே, அவற்றை நீயா வாங்கித் தருவே பெரிசு”? Your point is well noted, Murali! :)))

அன்புடன்,
டோண்டு ராகவன்

12/19/2008

டோண்டு பதில்கள் 19.12.2008

அனானி r (12.12.2008 காலை 07.33-க்கு கேட்டவர்)
1. கவுண்டமணி ஹோட்டலில் அமர்ந்து 200-ரூபாய் பெறுமான லன்ச் ஆர்டர் செய்தார். அவரது வேலையாள் செந்தில் அந்த பக்கம் வந்தார். “பாஸ் சாப்பாடு சாப்பிடவா வந்தீங்க”? என்று கேட்க, “ஏண்டா கோமுட்டித் தலையா, பின்னே ஹோட்டலுக்கு பாட்டு கேக்கவா வருவான்”? என்று கவுண்டமணி எகிறினார். பிறகு செந்தில் சுதாரித்து கொண்டு, சாப்பாட்டுத் தட்டை ஒரு பாத்திரத்தை கவிழ்த்து மூடினார். "பாஸ் 20 ரூபா பெட்டு வைக்கிறேன். உங்களோட இந்த சாப்பாட்டை பாத்திரம், மேஜை, அது இருக்கும் தட்டு ஆகிய எதையும் தொடாமல் சாப்பிடுவேன். யார் உதவியும் எனக்கு இதற்காக தேவையில்லை. என்ன சொல்லறீங்க”? என்று கேட்டார். "இந்த பெட்டை நான் ஏத்துக்கிறேன்” என கவுண்டமணி உடனடியாக கூறினார். பெட்டில் யார் ஜெயித்தது? எவ்வாறு?
பதில்: கவுண்டமணி மேலே பேசும் முன்னால் கோவை சரளா அங்கு ஓடிவந்து, அவர் காதில் ஏதோ கிசுகிசுக்கிறார். கவுண்டமணி உடனே செந்திலை பார்த்து, “டேய் கோமுட்டித் தலையா, ஓடிப்போயிடு. இல்லேன்னா உன் சங்கை கடிச்சு துப்பிடுவேன். நல்ல வேளையா சரளா எனக்கு ஞாபகப்படுத்தினா. இன்னும் அந்த வாழைப்பழ கணக்கு புரியாமல் நொந்து நூடுல்ஸ் ஆயிட்டேன். ஓடிப்பொயிடு” என்று கூறிவிட்டு சாப்பிட ஆரம்பிக்கிறார். ஓசி சாப்பாடு கிடைக்காத வருத்தத்தில் செந்தில் அங்கிருந்து செல்கிறார்.
“பெரிசுக்கு விடை தெரியல்லை, அதனாலே பம்முது” என்று கூறும் முரளி மனோஹரை அலட்சியம் செய்கிறேன்.


நக்கீரன் பாண்டியன்:
1. திருவாளர் சோ அவர்களின் நாடகக்குழு இப்போது போடும் நாடகங்களுக்கு மக்கள் ஆதரவு முன்பு மாதிரி இருக்கிறதா?
பதில்: சோ அவர்கள் இப்போதெல்லாம் நாடகம் போடுவதில்லை என்றுதான் நினைக்கிறேன். அவர் குழுவினரில் எல்லோருக்குமே வயதாகி விட்டது. அப்படியும் ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு முறை நாடகம் ஒரு பிரத்தியேக நிகழ்ச்சியில் போட்டதாக அறிந்தேன். நண்பர் டி.வி. ராதாகிருஷ்ணன் அவர்கள் அதை பற்றி இன்னும் துல்லியமாகக் கூற இயலும். அவர் சௌம்யா நாடகக் குழுவின் முக்கிய அங்கம்.

2. அவரது துக்ளக் விற்பனையில் ஒரு காலத்தில் சக்கை போடு போட்டதே, இப்போது சர்குலேசன் எப்படி?
பதில்: துக்ளக் சர்குலேஷன் 2005 ஜனவரியில் துக்ளக் ஆண்டுவிழா கூட்டத்தில் அவர் தெரிவித்தபடி 75000.

3. துக்ளக் பத்திரிகையின் பேப்பர் தரம் பற்றிக் கூட சிலர் ரொம்ப அட்வெர்ஸாக கமெண்ட் அடித்தார்களே. விற்பனை, விமர்சகர்கள் சொல்வது போல் குறைவு இல்லை என்றால் பேப்பர் தரத்தைகூட்ட ஏது தடை?
பதில்: பேப்பர் ஏன் தரமில்லை என நான் யோசித்ததே இல்லை. உள்ளடக்கத்தின் உயர்ந்த தரம் என்னை அதையெல்லாம் யோசிக்க விட்டதில்லை. இது பற்றி நண்பர் லக்கிலுக் மேலதிகத் துல்லியத் தகவல் தருவார், ஊடக/விளம்பரத் துறையில் உள்ளவர் அல்லவா?

4. உங்களின் இந்த பதிவுகளை துக்ளக் ஆசிரியர் சோ அவர்கள் படிப்பதுண்டா?
தன்னை பற்றி பதிவுகளில் வரும் விமர்சனங்களை பற்றி உங்களுடன் ஏதாவது சொல்வாரா?
பதில்: நான் சோ அவர்களை சமீபத்தில் 1970-லிருந்து நன்றாக அறிவேன். என்ன, அவருக்குத்தான் எப்போதுமே என்னைத் தெரியாது. :)))

5. அவர் ஏதாவது பதிவில் எழுதுகிறாரா?
பதில்: நான் அதுபற்றி கேள்விப்பட்டதில்லை. ஒருமுறை அவருடன் தொலைபேசினேன். அவருக்கு ஒரு தகவல் தெரிவிக்க அவரது மின்னஞ்சல் முகவரி கேட்ட போது அவர் கணினி வேலைகளையெல்லாம் மற்றவர்கள்தான் பார்த்து கொள்கிறார்கள் என்று கூறிவிட்டார்.

6. சமீபத்தில் அவரைச் சந்தித்து உண்டா?
பதில்: இல்லை, நேரில் சந்தித்து பேசவும் ஆசையில்லை. தூரத்திலிருந்தே அவர் செய்யும் மகத்தான காரியங்களை ரசித்து வருகிறேன்.

7. தொலைபேசி/கடித/மின்னஞ்சல் தொடர்பு உண்டா?
பதில்: கிடையாது

8. பொதுவாக நடுத்தரக் குடுப்பங்களில் 60 வயதை தாண்டியதும் ஞாபகக்குறைவு, செயல் பாட்டுக் குறைவு, உடல் நலக் குறைவு,முடிவெடுக்கும் ஆற்றல் குறையும் தன்மை சர்வ சாதாரணமாய் இருக்கும் போது அரசியல்வாதிகள்/பெரும் ஆலை அதிபர்கள் /மத குருக்கள், ஆன்மீகச் செம்மல்கள்/பத்திரிக்கை யாளர்கள்/வக்கீல்கள்/ஆடிட்டர்கள்/டாக்டர்கள்/விஞ்ஞானிகள்/பேராசிரியர்கள்/சினிமா,டீவி ,விளம்பரத்துறை போன்ற ஊடகங்களில் தலமைப் பொறுப்பாளர்கள்/பதிவுலக ஜாம்பவான்கள் ஆகியோரில் புகழ் பெற்ற பெரியவர்கள் 60,70 வயதை கடந்த பிறகும் தூள் கிளப்புகிறார்களே இது எப்படி சாத்யமாகிறது?
பதில்: அப்படியெல்லாம் பொதுப்படையாகக் கூற இயலாது. ஒன்று சொல்லலாம், நீங்கள் உதாரணம் காட்டிய நபர்கள் மேலே குறிப்பிட்ட குணநலன்கள் இல்லையென்றால் வெற்றி பெற்றிருக்கவே முடியாது. ஆனால் சாதாரண வாழ்க்கையில் அவை இல்லாமலும் வாழ்ந்துவிட்டு போக இயலும். ஆகவே உங்கள் கண்களில் அவர்கள் படுவதில்லை. பழைய சினிமா பாடல்கள் மாதிரி இல்லையென்று சொல்வார்கள். அப்பாடல்கள் காலத்தை மீறி புகழ் பெற்றவை. அவைதான் நினைவில் இருக்கும். அவற்றுடன் சம்பந்தப்பட்ட காலங்களில் இருந்த அடாசு பாடல்கள் எல்லாம் மறந்து போய் விட்டன. ஆனால் தற்காலப் பாடல்கள் எல்லாமே இப்போதைக்கு உள்ளன, அடாசு பாடல்களையும் சேர்த்து. இன்னும் பல ஆண்டுகள் கடந்த பிறகு இப்போதைய நல்ல பாடல்கள் அதே மாதிரி மனதில் நிற்கும். ஒரு வகையான டார்வின் கோட்பாடு என வைத்து கொள்ளலாமே. அதாவது வலிமையுள்ளதே வெற்றி பெறும், ஆகவே மனதிலும் நிற்கும்.

ஜியோவ்ராம் சுந்தர்:
1. நீங்கள் எழுதும் எல்லாப் பதிவுகளுமே மொக்கையாக இருந்தாலும் சில பதிவுகளுக்கு மட்டுமே 'மொக்கை' என ஏன் குறிச்சொல் இடுகிறீர்கள்?
பதில்: அதில் ஒரு சூட்சுமம் உண்டு. நான் மொக்கை என குறியீடு தரும் பதிவுகள் மொக்கை போட வேண்டும் என்ற எண்ணத்தில் சிரமப்பட்டு போடபட்டவை. ஆகவே அவற்றுக்கு அந்தக் குறியீடு. மற்றவை அனாயாசமாக மொக்கையாக வந்திருக்குமாக இருந்திருக்கும். ஆகவே அவற்றுக்கு அந்த அங்கீகாரம் தர இயலாது. நான் எப்போதும் முயற்சி செய்து சாதிப்பதையே விரும்புவேன்.


கிரிதரன்:
1. I saw your post on SuperStar Rajini's political stand. But Mr. Cho has solid belief in integrity and political power that our Thalaivar Superstar holds. Please comment.
பதில்: ரஜனி அரசியலுக்கு வருவார் என்று பெரிதாய் எனக்கு நம்பிக்கை இல்லை. இந்த ஒரு விஷயத்தில் சோ அவர்கள் ரஜனி மேல் தேவைக்கதிமாக நம்பிக்கை வைத்திருக்கிறார் எனத் தோன்றுகிறது.

2) What is your personal stand on Superstar's ideas on political things? I assume that you had a chance to read his direct interviews to AaVi, Kumudham and so many media.
பதில்: ரஜனி நான் பார்த்தவரை நிதானமாகத்தான் உள்ளார். புத்திசாலியாக இருந்தால் மற்றவர்கள் கொம்பு சீவுவதை எல்லாம் இனம் கண்டு ஒதுக்க வேண்டும்.

3) You made a harsh comment about fans of Superstar in your last Q&A section. Yes, there are so many people willing to make money if he heads in to politics. But in his last meet with his fans he made this impossible because he clearly mentioned not to expect money from him for doing welfare. Also there are so many fans doing welfare and changed a lot.
பதில்: ரசிகர் மன்றம் என்பது டீஃபால்ட்டாக உபயோகமற்ற அமைப்பு என நான் நினைக்கிறேன்.

அனானி (13.12.2008 இரவு 09.12-க்கு கேட்டவர்):
1. பிரபாகரன் வழமை போல இந்த வருட மாவீரர் தின பேச்சில் இந்தியாவோடு உறவுகளை புதுப்பிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறாரே? பிரபாகரன் ஏன் இதை போல வருடா வருடம் இந்தியாவிடம் கெஞ்சுவதை வாடிக்கையாக வைத்து இருக்கிறார்?
பதில்: அவர் கெஞ்சுகிறார் என்றெல்லாம் உங்களால் சொந்தப் பெயர் அடையாளத்துடன் வந்து கூற இயலுமா?

2. பிரபாகரன் பிள்ளைகள் ஏன் தற்கொலை குண்டுதாரிகளாக போகவில்லை?
பதில்: பிரபாகரனைத்தான் கேட்க வேண்டும்.

3. ஈழ தமிழ் மக்களின் மீது 50 வருட பொருளாதார தடை என்பது உண்மையா?
பதில்: ஈழம் இப்போது யுத்த சூழ்நிலையில் உள்ளது. யுத்த சமயத்தில் பொருளாதார முன்னேற்றம் எங்கிருந்து வரும்?

4. இந்த ஈழ போரால் பல ஈழ தமிழர்களின் ஐரோப்பா கனவுகள் பலித்தது என்பது உண்மையா?
பதில்: இல்லை நான் அப்படி நினைக்கவில்லை. புலிகள் தலைமை என்பது அவர்கள் செய்த துரதிர்ஷ்டம். உயிர் தப்பித்து ஓடும்போது கிடைக்கும் தேசங்களுக்குத்தான் செல்வார்கள். துயரநிலையில் இருக்கும் அவர்கள் ஐரோப்பிய கனவு எல்லாம் காண்கிறார்கள் எனக் கூறுவது தவிர்ப்பது நலம்.

5. சொகுசாக புலத்தில் இருந்து கொண்டு கற்பழிப்பு கொலை என்று பேசுபவர்கள் மன நிலை எப்படி இருக்கும்?
பதில்: அவ்வாறான கற்பழிப்பு மற்றும் கொலைகளில் தானோ தன்னவர்களோ பாதிக்கப்படாதவரை அமைதியாகவே இருக்கும்.

6. கண்முண்ணே நடந்த கற்பழிப்புகளை தடுக்க முடியாமல் புலத்துக்கு ஓடி வந்து சொகுசு வாழ்க்கையில் இதை எல்லாம் புறம் பேசுவது சரியா?
பதில்: அந்த கஷ்டமே படாத நாமெல்லாம் அதை பழித்துப் பேசுவதும் நியாயமே இல்லைதானே. நிஜமாகவே கஷ்டப்பட்ட அந்த இருவரைப் பார்த்ததும் எனக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை என்பதுதானே நிஜம்.

7. தமிழ் ஈழம் என்பது சாத்தியமா?
பதில்: தமிழ் ஈழம் வரும் என்பது இப்போதைக்கு கஷ்டமான குறிக்கோளாகத்தான் படுகிறது.

8. பிரபாகரனுக்கு பின்னர் ஈழ போராட்டம் ஓய்ந்து விடுமா?
பதில்: நிலைமை குழப்ப நிலையில் உள்ளது. ஒன்றும் கூற இயலாது.

9. யாழ்ப்பாண மக்கள் பூ நகரி வழியாக தரைபாதை திறக்கபட்டபோது மூன்று சக்கர ஓட்டுநர்கள் வரவேற்று ஊர்வலம் நடாத்தியது ஈழ போராட்டம் தொய்வு அடைந்து விட்டது என்று ஏற்று கொள்ளலாமா?
பதில்: இந்த நிகழ்ச்சி பற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறேன். ஆகவே கருத்து தெரிவிப்பதற்கில்லை.

10. தமிழ் நாட்டு மக்களுக்கு இது வரை நெடுமாறன் செய்த நல்காரியங்கள் ஏதாவது உண்டா?
பதில்: படகில் ஏறிப்போனார். ஆனால் திரும்பி வந்துவிட்டார் என சிலர் அங்கலாய்ப்பதாக நம்பத்தகாத வட்டாரங்கள் கூறுகின்றன.


ஜூனியர் முரளி மனோஹர் (பதிலளிப்பது முரளி மனோஹர்):
1. காமகதைகள் எழுதுவர்கள் தங்களின் கதைகளை தம் குடும்ப உறுப்பினர்களுக்கு படிக்க கொடுப்பார்களா?
பதில்: எனக்கு எப்படித் தெரியும்? நான் வெறுமனே காமக்கதைகள் படிப்பவன் மட்டுமே. இது பற்றி பெரிசு இப்பதிவில் எழுதியுள்ளது. நான் படிப்பது குடும்பத்தினருக்கு தெரியாமல்தான்.

2. மாற்று எழுத்துக்கள் என்றால் என்ன?
பதில்: பின் நவீனத்துவ எழுத்துக்களைத்தான் குறிக்கிறாங்க போல.

3. ஏன் உங்கள் பதிவுக்கு தமிழ்மண டூல் பாரில் அதிக நெகடிவ் ஓட்டுகள் விழுகின்றன? ஆனால் அதிக ஹிட்ஸ் என கவுண்டர் காட்டுகிறதே
பதில்: அவர்களும் படித்த பின்னர்தானே நெகடிவ் குத்து இடுவார்கள்? அதனால ஹிட் கவுண்டர் தானே ஏறிடுது.

4.நீங்கள் தமிழ் பதிவு எழுதுவதை விட்டு விடலாம் என்று என்றாவது ஒரு நிமிடவாவது தோன்றியதா?
பதில்: பெரிசுக்கு அப்ப்டியெல்லாம் எப்போதுமே தோணினதில்லை என்பது மட்டும் எனக்கு தெரியும். அது பதிவு எழுத வந்ததுக்காக பலர் என்றென்றும் அன்புடன் பாலாவை திட்டுவதாக ராய்ட்டர் செய்திகள் கூறுகின்றன.

5. வாரணம் ஆயிரம் பாடல்கள் எப்படி?
பதில்: படமும் பார்க்கவில்லை, பாடல்களையும் கேட்கவில்லை.

6. இந்து தினசர் பெங்களூரில் 2 ரூபா ஹைதராபத்தில் 1.50 பைசா . ஆனால் சென்னையில் மட்டும் மாறுபட்ட விலை..அதே பக்கங்கள் அதே செய்திகள் அதே தாளின் தரம்.காரணம் என்ன?
பதில்: நிலவும் சந்தைப் போட்டியின் நிதரிசனம்.

7. இந்து தினசரி படிப்பவர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டதா?
பதில்: அப்படித்தான் தோன்றுகிறது.

8. தினகரன் - தினமலர்..ஆறு வித்தியாசங்கள் கண்டுபிடிக்க
பதில்: இரண்டையுமே நான் படிப்பதில்லை.

9. தினதந்தி இன்னமும் தமிழகத்தின் முதன்மையான தினசரியாக இருந்தும் குவாலிட்டி இல்லாத தாளில் தருகிறார்களே
பதில்: ரிட்சாக்காரர்களையும் பத்திரிகை படிக்கும் வழக்கத்துக்கு உட்படுத்தியது அப்பத்திரிக்கை. செய்தி உள்ளடக்கம்தானே முக்கியம்? பேப்பர் தரத்தை உயர்த்தினால் விலையையும் உயர்த்த வேண்டியிருக்கும். பல ஏழை மக்கள் பாதிக்கப்படுவார்கள் என பத்திரிகை நினைத்திருக்கலாம்.

10. நாட்டின் தலைநகர் தில்லியில் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையை விட மின்சாரத்தடை அதிகமாமே?
பதில்: அப்படியெல்லாம் இல்லை என என தில்லியில் வசிக்கும் எனது உறவினர் கூறிவிட்டார். இக்கேள்விக்கு பதிலளிக்கவே நான் அவருக்கு போன் செய்து கேட்டேன்.

11. கூடங்குளம் அணுமின்திட்டம் திறக்கபட்டால் தமிழ்நாட்டின் மின் பற்றாக்குறை தீருமா?
பதில்: அணுமின் திட்டம் விஷயத்தில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். தொழில் நுட்பத்தை தருவது ரஷ்யர்கள் என்பதுதான் கவலையளிக்கும் விஷயம்.

12. அது என்ன மத்திய அரசின் மின்சார தொகுப்பு கொஞ்சம் விளக்க முடியுமா?
பதில்: எல்லா மாநிலங்களின் மின்வாரியங்களையும் இணைத்து மின்சாரம் கொடுக்கல் வாங்கல் செய்வது இந்தத் தொகுப்பின் வேலை. இந்த வாக்கியத்தில் உள்ள ஒவ்வொரு சொல்லுக்கு பின்னாலும் பல இணைக்கப்பட விஷயங்கள் உள்ளன. இந்த உரலுக்கு சென்றால் மேலும் பார்க்கலாம்.

13. கர்நாடாகவிற்க்கு நெய்வேலியில் இருந்துதான் மின்சாரம் செல்கிறதா?
பதில்: நெய்வேலியிலிருந்தும் செல்கிறது என்று வேண்டுமானால் கூறலாம்.

அனானி (14.12.2208, பிற்பகல் 12.45க்கு கேட்டவர்)
1. What happened to the mega tender of bsnl in respect of gsm expansion?
பதில்: இது பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது.

2. What is ADC charges hitherto paid by private operators to bsnl?
பதில்: நான் புரிந்து கொண்டது வரை கூறுவேன். access deficit charge (ADC)என்றால் என்ன என்பதை முதலில் பார்ப்போம். கிராமங்களில் லேண்ட்லைன் டெலிஃபோன் வசதி தருவதற்கு பி.எஸ்.என்.எல். மட்டுமே உண்டு. தனியார் சேவை அளிப்பவர்கள் அதிக வருவாய் வரும் சேவைகளிலே பிசியாக இருந்தார்கள். கிராமப்புறங்களில் இருப்பவர்களுக்கும் வசதி வேண்டும். ஆகவே தனியார் சேவை அளிப்பவர்கள் இந்த சார்ஜ் தர வேண்டியிருந்தது. கடந்த அக்டோபரில் அதை எடுத்து விட்டார்கள் என படித்தேன். இப்போது நிலைமை தெரியவில்லை. செல் போன் உபயோகங்கம் மிகவும் அதிகரித்து, ஏழை எளியமக்களும் அதை உபயோகிக்கும் நிலையில் இந்த சார்ஜை விதிப்பது அவர்களையும் பாதிக்கும் என ஒரு கருத்தும் தெரிவிக்கப்பட்டது.

3. After the abolition of that,it is told by controlling authorities that the cell rate will come down.isn't?
பதில்: அது இல்லாமல் போவதால் வரும் லாபம் மக்களுக்கும் போய் சேர வேண்டும் என்றால் செல்போன் ரேட்டுகளை குறைக்கத்தானே வேண்டும்.

4. In the news papers (frequently) it is being written that the private operators are not paying the due amounts to bsnl( for using the network of bsnl) in due dates, quoting some legal points.Is it justifiable?
பதில்: ஒரு வியாபாரி நியாயமாக இருப்பான் என நம்பினால் மட்டும் போதாது. அரசும் விழிப்புடன் இருந்து அவன் போங்குத்தனமாக ஏதேனும் செய்யாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

5. Having huge infrastructure , plenty of trained work force and executives ,when bsnl will become the leader in mobile sector?
பதில்: பி.எஸ்.என்.எல்.-ன் கைகளை அரசியல்வியாதிகள் கட்டிப்போடாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

கிரிதரன்:
1) What is your opinion on Bush's connection with 9/11? There was a movie called “9/11” (I am not sure about the movie name) released to thrash American government.
பதில்: அந்தப் படத்தை நான் பார்க்கவில்லை. அதில் என்ன கூறியுள்ளார்கள்? புஷ்தான் 9/11-க்கு காரணம் என்றா? அமெரிக்காவில் இம்மாதிரி படங்கள் சர்வ சாதாரணம். கென்னடியின் கொலையை ஜான்சன்தான் செய்வித்தார் என்று அக்காலக்கட்டத்தில் ஒரு நாடகம் ஓடியது. அதுதான் அமெரிக்கா. நம்மூர் மாதிரி இதற்கெல்லாம் ஆட்டோ வராது.

2) If 9/11 was just a drama to attack IRAQ to conquer it for oil wealth, then how come we are trusting USA in our terrorist attack 26/11?
பதில்: 9/11 ஒரு டிராமா என்று ஒன்றும் தெரியாதவர்கள்தான் கூறுவார்கள். அது நடந்து விட்டது. நடந்த கெட்ட விஷயத்தை தனக்கு சாதகமாக புஷ் மாற்றிக் கொண்டார் என்று வேண்டுமானால் கூறலாம்.

3) Many banks/departments under private sector in US are taking recourse to the control of government. So America's basic core ideas is being changed. Please comment.
பதில்: சாதாரணமான ஜுரம் கூட வராமல் இருந்த ஒரு மனிதனுக்கு திடீரென உடம்புக்கு வந்தால் திக்குமுக்காடி போய்விடுவான். அதுதான் அமெரிக்கா விஷயத்தில் நடக்கிறது. எனது அபிமான நாடான அமெரிக்கா என்னும் தேசத்தின் கஷ்டம் சீக்கிரம் நீங்க வேண்டும் என்று என் உள்ளங்கவர் கள்வன் தென் திருப்பேரை மகரநெடுங்குழைகாதனைப் பிரார்த்திக்கிறேன்.

4) I heard Albert Einstein and Google's CEO are Jewish. Is it so?
பதில்: ஐன்ஷ்டைன் என்னவோ யூதர்தான். இரண்டாமவர் பற்றி எனக்கு தெரியாது.

5) Jewish always live in groups. Also they won't encourage getting marriage outside their religion. Please authenticate this news.
பதில்: ஒருவர் யூதராவதற்கு தாய்வழி உறவுதான் முக்கியம். கல்யாண விஷயமாக நீங்கள் கூறுவது இப்போதெல்லாம் அவ்வளவாக நடப்பதில்லை. ஆச்சாரம் மிகுந்த யூதர்களும் உண்டு. யூதமதக் கோட்பாடே தெரியாத யூதர்களும் உண்டு.


எம். கண்ணன்:
1) எந்த எந்த பிராண்டு சரக்கு என்ன மாதிரி போதையையும், நறுமணத்தையும் (!) தரும் ? (காண்டு கஜேந்திரனுக்கான கேள்வி உங்களுக்கு ரீடைரக்ட் ஆகிவிட்டது :-) )
கிங் ஃபிஷர் முதல் ஓல்ட் மாங்க், ரெட் லேபல், ஷீவாஸ் ரீகல், வோட்கா, ரம், பிராந்தி, விஸ்கி, என்ன எல்லா வகைகளையும் தொட்டுக் காட்டினால் நன்று.

பதில்: இதனை இவனால் முடிக்கும் என உணர்ந்து அதனை அவன்கண் விடல் என்பது போல கூறும் வள்ளுவப் பெருந்தகையின் வாக்குக்கு மதிப்பளிக்க விரும்புவதாலும், இந்த விஷயங்களில் நிபுணர் வால்பையன் இருக்க வேறு யாரும் ஆதண்டிக்காக தகவல் கூற இயலாது என்பதாலும் நான் வால்பையனுக்கு போன் போட்டு கேட்டு கொண்டதற்கிணங்கி அவர் அளித்த பதில் இதோ (காண்டு கஜேந்திரன் எல்லாம் வாழ்ச்சவடாலோடு சரி. வெறுமனே தம்ஸ் அப் போட்டதுமே கிக் ஏறிவிடுவதாக கேள்வி, அதாவது வடிவேலு வெறும் தண்ணீர் பாக்கெட்டை உடைத்து குடித்து அலம்பல் செய்வது போல, படத்தின் பெயரை நண்பர் லக்கிலுக் தெரிவிக்குமாறு கேட்டு கொள்கிறேன்):
பீர்= இந்தியாவில் கிடைக்கும் பீர்கள் அனைத்தும் குறைந்த ஆல்ஹகால் கொண்டவை, புளிப்பும், கசப்பும் கலந்த சுவை, குளிராக இல்லையென்றால் கசப்பே பிரதானம்.

ரம்= கசப்பு தன்மையுடையது, கருப்பு நிறத்தில் கசாயம் போல இருப்பதால், பெரும்பாலான தொழிலாலர்கள் இதைத்தான் விரும்புகிறார்கள். உடல் அலுப்பை தீர்க்கும் இதன் போதையே அதற்கு காரணம். ஜ்யோவ்ராம் சுந்தர் என்ன அடிப்பார்னு எனக்கு தெரியாது.


பிராந்தி= லேசான இனிப்பும், தொண்டையை பிடிக்கும் அமிலத்தன்மையும் உடையது, தங்க நிறத்தில் இருப்பதால் இதுதான் எனது விருப்ப சரக்கு. அடிமையாக்கிவிடும் போதை கொண்டது. சில சரக்குகள் அலர்ஜியை கொடுக்கலாம். சுகர் இருப்பவர்கள் இதை தவிர்க்க வேண்டும்

விஸ்கி= அளவாக சாப்பிட்டால் மருந்து என்று பெயர் வாங்கியது, அதே தங்க நிறம் இனிப்பும், புளிப்பும் கலந்த சுவை. பெரிதாக வாசம் இருக்காது, அப்படியே இருந்தாலும் அது சரக்கு வாடை போலவே இருக்காது(காஸ்ட்லி சரக்கு மட்டும்) இந்தியாவில் கிடைப்பது மால்ட் விஸ்கி.

வோட்கா= தண்ணீர் போல இருந்தாலும் கசப்புத் தன்மையுடயது, அதை போக்க ஆரஞ்ச், ஆப்பிள் என்று வாசம் சேர்த்திருப்பார்கள், இதில் எனக்கு அவ்வளவு பரிச்சயம் இல்லை

ஜின்= பார்ப்பதற்க்கு வோட்கா போலவே இருக்கும், ஆனால் கசப்புடன் புளிப்பு சுவையுடயது, இது பெண்களுக்கானது என்றும் சொல்வார்கள், காரணம் இது அதிக காட்டமில்லாதது, இதை குடித்தால் ஆண்மை குறைவு ஏற்படும் என்று சொல்வார்கள், அது தவறான தகவல்; மேலே கூறப்பட்டுள்ள எந்தச் சரக்கை அடித்தாலும் ஆண்மை குறைவு ஏற்ப்படலாம்.

ரெட் லேபல், ஷீவாஸ் ரீகல், போன்றவை விஸ்கியிலேயே ஸ்காட்ச் வகையை சார்ந்தவை முறையே பதப்படுத்தி வைத்திருக்கும் வருடங்களை பொறுத்து அதன் தரம். மால்ட் விஸ்கியை விட காரம் குறைவாக இருக்கும், வாசம் தூக்கலாக இருக்கும்.

இது என் அனுபவம் மட்டுமே! எனக்கு கசப்பாக தெரிவது உங்களுக்கு இனிப்பாக தெரியலாம்.

நன்றி வால்பையன் அவர்களே. எனக்கு பிடித்தது ப்ளடிமேரி. பியர் பரவாயில்லை. விஸ்கி எப்போதாவது அடிப்பதுதான், சோடா மட்டும் ஐஸ்கட்டிகள் சேர்த்து, மிகவும் மிதமாக.

2) கமல் நற்பணிமன்ற தலைவராக (பல ஆண்டுகள்) இருந்த ர.குணசீலனை கமல் தூக்கியது - சரிதானே ? கமலின் தனிப்பட்ட வாழ்க்கையை ர.கு வெளியே சொல்லலாம் என்ற பயம் கமலுக்கு இல்லையா?
பதில்: I have got an extraordinary lack of interest in these accursed fan clubs. Period.

3) யாத்ராவுக்கே 2 வயசாகப்போகுது - இன்னும் ஐஸ்வர்யா ராயுடன் நடிக்க வேண்டும் என ரஜினி அடம்பிடிப்பது ஏன் ? அதுவும் ஐஸ்வர்யா ராய்க்கு நடிப்பு வராது + அழகும் தற்போது கெட்டுவிட்ட நிலையில்?
பதில்: அது யாத்ராவின் பிரச்சினை. மற்றப்படி ஐஸ்வர்யா ராயின் நடிப்பை யார் பார்க்கிறார்கள்?

4) சுஜாதா எழுதிய தொடர்கதைகளிலேயே (வார இதழ்களில் வந்த) உங்களுக்குப் பிடித்த தொடர்கதை எது ஏன் ? எந்தக் கதையை மீண்டும் மீண்டும் படித்ததுண்டு? அதில் ஜெயராஜ்
ஓவியம் இருந்திருந்தால் எந்த ஓவியம் பெஸ்ட்?

பதில்: எல்லாமே பிடிக்கும். ஆனால் நான் முதலில் கவரப்பட்டது “நைலான் கயிறு” நாவலால்தான். முதல் காதல் அல்லவா, அதன் இடமே தனி.

5. அன்புமணி ராமதாஸ் தமிழக முதலமைச்சரானால் தமிழகத்திலிருந்து சிகரெட்டையும் மதுவையும் ஒழித்துவிட ஆசைப் படுகிறார். முடியுமா? உங்கள் நிலை என்ன?
பதில்: முடியாது. தமிழகத்தை விடுங்கள். பாமக தனது கோட்டையாக கருதும் புதுச்சேரியில் அதை செய்ய முயற்சிக்கட்டும், அங்கு ஆட்சிக்கு வந்தால்.

6. தற்போதைய பெண் திரைப்பாடல் பாடகிகளின் குரல்கள் பெரும்பாலும் ஆண் குரல் போன்றே இருக்கிறதே ? ஒரு சுசீலா, ஜானகி, சித்ரா, வாணி ஜெயராம், ஜென்சி, உமா ரமணன், சாதனா சர்கம், ஷ்ரேயா கோஷல் போன்ற இனிமை காணக் கிடைப்பது அரிதாகி வருகிறதே? இதற்கு என்ன காரணம்?
பதில்: வாத்தியங்களின் ஓசைகளில் பெண்குரல் காணாமல் போய்விட்டது.


ரமணா:
1.ஸ்பெக்டரம் ஊழல் அடுத்த தேர்தலில் வில்லனாய் பிரசன்னமாய் ஆளும் கூட்டணியை பாடாய் படுத்தும் போலுள்ளதே?
பதில்: அதாவது அது முடிந்துபோன கதை எனக் கலைஞர் கூறிவிட்டாலும் அவ்வாறு விடாது தமிழக மக்கள் அவர் நோக்கில் அல்பமாக நடந்து கொள்வார்கள் என நினைக்கிறீர்கள் அல்லவா? அப்படித்தான் நானும் நினைக்கிறேன்.

2.கலைஞர்-அவரது பிரதான உதவியாளர் ஷண்முகநாதன் பிரிவு-தலைவரின் குடும்ப ஓற்றுமை சந்தோஷத்தை சற்று குறைத்துவிடும் போலுள்ளதே?
பதில்: Blood is thicker than water.

3. பா.ஜ.க திருமங்கல தேர்தலில் மறைமுகமாய் அதிமுக பக்கம் சாயும் போலுள்ளதே?
பதில்: தமிழகத்தில் பா.ஜ.க. ஒரு ஐயோ பாவம் கட்சி. அது யார் பக்கம் சாய்ந்தால் என்ன?

4. பா.ம.க தி.மு.க-வுக்கு பிடி கொடுக்காது போலுள்ளதே?
பதில்: அந்தோ, காடுவெட்டி குருவை விடுதலை செய்தது வீண்தானா? ஆ, ஐயோ!!!!

5.ஒருவேளை அரசின் மீது உள்ளதாய் சொல்லப்படும் கோபத்தால் மக்கள் அதிமுகவை வெற்றி பெறச் செய்து விட்டால் காங்கிரஸ் தி.மு.கவை கை கழுவிவிடும் போலுள்ளதே?
பதில்: பார்லிமெண்ட் தேர்தலில் அதிமுகவுக்கு அதிக சீட் கிடைத்து, திமுக பிளாங்கி அடித்தால் நீங்கள் சொன்னது நடக்குமாகத்தன் இருக்கும்.

6. விஜயகாந்தும் திருமங்கலத் தொகுதியில் பெரும்பான்மை உள்ள சமுகத்தாரையே வேட்பாளாராக நிறுத்தி உள்ளதால் அவருக்கும் தன் கட்சியின் செல்வாக்கு மேல் முழு நம்பிக்கை இல்லாதது போலுள்ளதே?
பதில்: அவர் வேகமாக அரசியல்வாதியாகி வருகிறார் என்பதைத்தான் அது காட்டுகிறது.

7. சரத் குமார் அரசியல் சதுரங்கத்தில் பின் தங்குகிறார் போலுள்ளதே?
பதில்: அதற்கெல்லாம் உழைக்க சித்தப்பாவுக்கு நேரம் இல்லை.

8.சன் குழுமம், குடும்ப ஓற்றுமைக்குப் பின் தொழிலில் விஸ்வரூபம் எடுக்கும் போலுள்ளதே?
பதில்: அப்படியென்றால் அப்பத்தைப் பங்கிடுவது சுமுகமாக நடந்தது என பொருள். அப்பத்தை கைவிட்ட பூனைகளாக மக்கள் இருக்கின்றனர்.

9.மீண்டும் தளபதி ஸ்டாலினுக்கு முடிசூட்டும் முயற்சிகள் தொடங்கிவிடும் போலுள்ளதே?
பதில்: ராஜராஜ சோழனுக்கு பிறகு ராஜேந்திர சோழன் பட்டத்துக்கு வந்தபோது அவனுக்கு வயது 50. சென்ற கார்த்திகை மாதத்தில் இங்கிலாந்து வேல்ஸ் இளவரசருக்கு 60 வயது நிரம்பியது.

10. மதுரை அழகிரியாரின் திடீர் சமாதானம் திமுகவுக்கு போட்டியே இல்லை என்ற நிலையை உருவாக்கிவிடும் போலுள்ளதே?
பதில்: இது ஸ்டாலினுக்கு தெரியுமா?


கிருஷ்ணன்:
1. Can you enlighten me abut Satyam-Maytas aborted takeover?
பதில்: இந்த உரலுக்கு செல்லவும்.

2. India cricket tour of Pakistan has been called off - comments please.
பதில்: ஆதரிக்க வேண்டிய செயல். இப்போது பாகிஸ்தானுக்கு நமது டீம் செல்வது உசிதம் இல்லை.

3. Mumbai, Delhi, Chennai - if you have to select only one city to live in, which one will you choose?
பதில்: சந்தேகமே இல்லை, சென்னைதான். இந்த மூன்று நகரங்களிலும் நான் வசித்திருக்கிறேன். 20 ஆண்டுகாலப் பிரிவுக்கு பிறகு மறுபடியும் சென்னைக்கு சமீபத்தில் 2001-ல் வந்தேன். இனிமேல் இந்த நகரத்தை விட்டு போவதாக இல்லை.

4. Ananda Vikatan's standard is plummeting - agree or disagree?
பதில்: ஒத்து கொள்கிறேன்.

5. Hope you are following Badri Seshadri's posts on Pakistan. What is your opinion ? Do you agree with Badri when he says we have to economically help Pakistan?
பதில்: நிச்சயம் படிக்கிறேன். உங்கள் பின்னூட்டங்களையும் பார்த்தேன். நிதானமாக அழுத்தம் திருத்தமாக வாதங்களை வைப்பதில் பத்ரி திறமையானவ்ர். ஆனால் பாகிஸ்தானுக்கு நாம் கடன் தரவேண்டும் என கூறுவது ஓவர்.

மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது