நிரந்தர பக்கங்கள்

8/11/2010

பெரியாரை வீரமணி & குழுவினர் கேவலப்படுத்தினரா???

தமிழச்சியின் இப்பதிவு சிந்தனைக்கு உரியது. அதை இங்கே எல்லோரும் அறிய தருவேன்.

பெரியாரை கேவலப்படுத்தும் வீரமணி&கோ

“3- வருடங்களுக்கு முன்பு தமிழில் வெளியான பெரியார் திரைப்படம் தற்போது இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளீட்ட மூன்று மொழிகளிலும் மீண்டும் திரையிடப்பட்டிருக்கிறது. நேற்று ஆந்திராவில் விசேஷ காட்சியை ஸ்டாலீன் தொடங்கி வைத்ததாக பல தமிழ் பத்திரிகைகளில் படங்களுடன் செய்தி வெளியிட்டிருந்தன.

தினதந்தி நாளிதழில் மட்டும் ஆந்திராவில் வெளியிடப்பட்ட பெரியார் படத்திற்கு, "ஈ.வெ.இராமசாமி நாயக்கர்" என்று பெயர் மாற்றி வைத்திருப்பதை குறிப்பிட்டிருக்கிறது.

வாழ்நாள் முழுவதும் சாதிக்கு எதிராக போராடிய போராளியின் படத்திற்கு சாதிப் பெயரா?

"பிராமணாள்" காஃபி கிளப் என்று பெயர்பலகை இருக்கிறதே அதில் சாதிப் பெயரை அழிக்க வேண்டும்; எல்லோரும் தின்கிற இடத்தில் "பிராமணாள்" என்று இருந்தால் அந்த இடத்தில் ஜாதி இருப்பதாகத் தானே அர்த்தம்? 1956-இலும் இருக்கிறது என்றால் குறும்பு தானே?

என்று ஆவேசப்பட்ட பெரியாருக்கு....

´நாயக்கர்´ பட்டம் கொடுத்து ஊமைக் குசும்பு வேலை பார்க்கிறாரா வீரமணி”?


இப்போது டோண்டு ராகவன். இதிலிருந்து எனக்குள் எழும் கேள்விகள்:
1. உண்மையிலேயே தெலுங்கு வெர்ஷனுக்கு அத்தலைப்பா? (ஆமாம்)
2. இதில் வீரமணி எங்கிருந்து வந்தார்? இப்படம் அவராலா எடுக்கப்பட்டது? (யாராவது சொலூங்கப்பூ)

அன்புடன்,
டோண்டு ராகவன்

30 comments:

  1. இது ஆசிரியர் வீரமணி தயாரித்த படம்தான்.

    தெலுங்கில் இராமசாமி நாயக்கர் என்றுதானே இருக்கிறது - "இராமசாமி நாயுடு" என்று இல்லையே?

    அப்படியானால் - இதில் குற்றம்காண பெரிதாக எதுவும் இல்லை.

    ReplyDelete
  2. ஈ.வே.ராமசாமி நாயக்கர் தான் பலீஜா நாயுடுங்கறதை அவரே மறைக்கவில்லை. அப்புறம் நீங்க என்ன வக்காலத்து?

    நாயக்கருங்கறது பலீஜா நாயுடுக்கள் தங்களை அழைத்துக் கொண்ட பெயர்.

    அது சரி, உங்க கூற்றுப்படி நாயுடுன்னு இருந்தாத்தான் தப்பு, நாயக்கர்னா பரவாயில்லையா?

    அதாவது நாயக்கரைவிட நாயுடு மட்டம்னு நினைக்கிறீங்களா?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  3. ஊருக்குத்தான் அறிவுரை

    ReplyDelete
  4. நாயக்கர் என்பது தமிழ் நாட்டில் பயன்படுத்தப்படும் சொல். வடக்கு மாவட்டங்களில் வன்னியர்களில் பலரும் கூட நாயக்கர்தான்.

    ஆனால், ஆந்திராவில் 'நாயுடு'தான் அதிகம் பயன்படுத்தும் சொல்லாக இருக்கிறது.

    ReplyDelete
  5. நெளிந்து ஓடறதெல்லாம் வாணாம் அருள்.

    நாயக்கர் மட்டும் சாதிப்பெயர் இல்லையா?

    அதைத்தானே பெரியாரும் துறந்தார் எனக் கூறிக் கொள்கிறார்கள்?

    சப்ஜக்டுக்கு வாங்க முதல்லே. அப்புறமா கோலத்தின் இடுக்குகளில் நுழையும் வேலையை வெச்சுக்கலாம்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  6. வெங்காயம்....இதெல்லாம் ஒரு மேட்டரா ? உமது பார்ப்பணீய வெறியை வன்மையாக கண்டிக்கிறேன்...போவீரா வேலையை பார்த்துக்கிட்டு..அவங்க எங்க தப்பு பண்ணுவாங்கன்னு நாக்கை தொங்க போட்டு கிட்டு அலைகிறீரே....அவங்க அப்படித்தான்யா...

    ReplyDelete
  7. ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கேன் ராகவன்

    ReplyDelete
  8. "நான் அடிக்கடி கொள்கையில் மாற்றமடைபவன் என்று சொல்லப்படுகிறது. உண்மையாக இருக்கலாம். நீங்கள் அதை ஏன் கவனிக்கிறீர்கள்? ஒரு மனிதன் அவன் பிறந்தது முதல் இன்றுவரை திருடிக்கொண்டே இருக்கின்ற ஒரே நிலைக்காரன் என்று சொல்லப்பட்டால், அவன் மகா யோக்கியனா? எந்த மனிதனும் ஒரே நிலையில் இருக்கவேண்டும் என்று நீங்கள் ஏன் ஆசைப்படுகிறீர்கள்? அதனால் உங்களுக்கு என்ன இலாபம்? மாறுதல் முற்போக்குள்ளதா, பிற்போக்குள்ளதா? அதனால் மக்களுக்கு நன்மையா? தீமையா? என்பன போன்றவைகளைக் கவனிக்க வேண்டியதுதான் அறிவாளிகளின் கடமையாகும்."

    --தந்தை பெரியார், குடிஅரசு 11.10.1931

    சாதி அடையாளங்களை முற்றிலுமாக ஒழிக்கவேண்டும் என்று தந்தை பெரியார் கருதினார். அதில் ஒரு அங்கமாக 1931 ஆம் ஆண்டு சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது, யாரும் சாதியை சொல்லக்கூடாது என்றும் அவர் கோரினார். ஆனால், அந்தக் காலம் இப்போது காலாவதியாகிவிட்டது.

    இன்று (11.08.2010) இந்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பிற்கு உத்தரவிட்டுள்ளது. இதனை எல்லா பெரியார் இயக்கங்களும் வரவேற்கின்றன. சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது எல்லோரும் அவரவர் சாதியை சொல்ல வேண்டும் என்பது பெரியார் இயக்கங்களின் கோரிக்கையாகவே மாறிவிட்டது.

    ""மாறுதல்கள் காலத்திற்கும், பகுத்தறிவிற்கும் நாட்டின் முற்போக்கிற்கும் ஏற்றாற்போல நடந்துதான் தீரும். எனவே, நான் மாறூதலடைந்துவிட்டேன் என்று சொல்லப்படுவதில் வெட்கப்படுவதில்லை. நாளை நான் எப்படி மாறப்போகிறேன் என்பது எனக்கே தெரியாது. ஆகையால், நான் சொல்வதைக் கண்மூடித்தன்மாய் நம்பாதீர்கள்"" என்றார் தந்தைப் பெரியார்.

    எனவே, யார் எந்த அடிப்படையில் 'இராமசாமி நாயக்கர்' என்று படத்திற்கு பெயரிட்டிருந்தாலும் - இன்றைய காலக்கட்டத்தில் இதில் பெரிய வேறுபாடு எதுவும் இல்லை. இதில் ஒரு குற்றமும் இல்லை.

    ReplyDelete
  9. Sorry to go out of topic:
    =========================
    Aryan Invasion Theory Is false:

    http://www.raceandhistory.com/cgi-bin/forum/webbbs_config.pl/read/1040

    . To quote Dr. Ambedkar: "The theory of [Aryan] invasion is an invention. It is a perversion of scientific investigation, it is not allowed to evolve out of facts.... It falls to the ground at every point.”

    ReplyDelete
  10. அருள்...பிரச்சனை பெரியார் மேற்கோள் காட்டியதல்ல.....

    ReplyDelete
  11. //""மாறுதல்கள் காலத்திற்கும், பகுத்தறிவிற்கும் நாட்டின் முற்போக்கிற்கும் ஏற்றாற்போல நடந்துதான் தீரும். எனவே, நான் மாறூதலடைந்துவிட்டேன் என்று சொல்லப்படுவதில் வெட்கப்படுவதில்லை. நாளை நான் எப்படி மாறப்போகிறேன் என்பது எனக்கே தெரியாது. ஆகையால், நான் சொல்வதைக் கண்மூடித்தன்மாய் நம்பாதீர்கள்"" என்றார் தந்தைப் பெரியார்.
    //

    பரந்து விரிந்து இருக்கும் வல்லம் சாம்ராஜ்யத்திற்கு சமர்ப்பணம்

    ReplyDelete
  12. @மணிஜீ
    அதான் அருள் படையாச்சி கோலத்துக்குள்ள நுழையப் பாக்கிறாருன்னு சொன்னேன். அவருக்கு புரியாதா நீங்க சொல்றது?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  13. சாதீவாரி கணக்கெடுப்புக்கும் இதற்கும் என்ன தொடர்பு? கொஞ்சம் விளக்க முடியுமா?

    ReplyDelete
  14. எல்லா பெரியார் இயக்கங்களும்??????????


    எத்தனை அத்தாரிட்டிகள் பெரியாருக்கு ?

    ReplyDelete
  15. சமூக நீதி காத்த வீராங்கனை என்ற ஒரு பாத்திரம் சம்பந்தமில்லாமல் நினைவுக்கு வருகிறது ...கூடவே ..ஜால்ரா சத்தமும்..பெரியார் சொன்னது சரிதான்

    ReplyDelete
  16. மணிஜீ...... said...

    // //சாதீவாரி கணக்கெடுப்புக்கும் இதற்கும் என்ன தொடர்பு? கொஞ்சம் விளக்க முடியுமா?// //

    சாதீவாரி அல்ல, சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு.

    1931 ஆம் ஆண்டின் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை தந்தை பெரியார் கடுமையாக எதிர்த்தார். ஆனால், பெரியாரைப் பின்பற்றுவோர் இன்று அதனை நடத்தக்கோரி போராடுகின்றனர்.

    பெரியாரின் கருத்துகளை அப்படியே ஏற்கவேண்டிய தேவை இல்லை. பெரியார் கூறியது போன்று, சாதி அடையாளத்தை மறைக்கவேண்டிய தேவை இன்றைய காலகட்டத்தில் இல்லை. எனவே, பெரியார் படத்துக்கு இராமசாமி என்று பெயர்வைத்தால் என்ன? இராமசாமி நாயக்கர் என்று வைத்தால் என்ன? - இரண்டும் ஒன்றுதான்.

    இராமசாமி என்று வைத்தால் - இராமாயணப் படம் என்று தோன்றவும் வாய்ப்புண்டு.

    ReplyDelete
  17. அட சார் ராமசாமி கூட நல்லபடியா நடந்துகிட்டரா தள்ளாத வயசுல சின்னபொண்ண கல்யாணம் பண்ணாரு பொதுமக்கள் கிட்ட எனக்கு வாரிசு வேணும் அதுதான் கல்யாணம் பண்ணினேன் சொன்னார்.என் கூட இருக்கிறவங்க மேல நம்பிக்க இல்லைன்னு சொன்னார் .சார் ஜாதி பேர் சொல்லி கூட்டம் போட்டது துட்டு பாக்கத்தான் சார்.ராமசாமி கூட்டத்துல பேசுனஒரு ரேட் அவரு கூட படம் எடுத்துக்கணுமா அதுக்கு ஒரு ரேட்,என் சார் நமீதா கடைதிறக்க விசிட் பண்ணினா ரேட் கேட்பதற்க்கும் விதியாசம் ஏதும் இல்லை.சார் இந்த ராமசாமி பேர் சொல்லி அரசியல் பன்னிய ஒரு நபர் கூட ஜாதிய ஒழிக்கவில்லை மாறாக ஜாதியை வளர்க்கவே செய்கின்றனர் ஜாதி ஒழிந்தாலும் ரமசம்ய் குருப் அலம்பல் நிக்காது சார்

    ReplyDelete
  18. Only when brahmins use caste name at the end of their name it is a offense that is punishable by death.

    How is it an issue if innocous periyar uses it at the end of his name? Why are people making it a big issue? It is not same as a brahmin using his caste name. Brahmins only should not use caste identity like poonal inside their briefs.

    This clearly shows that dondu is a big caste.

    ReplyDelete
  19. ஆதங்கம் அய்யாசாமிAugust 12, 2010 11:14 AM

    \\எனவே, பெரியார் படத்துக்கு இராமசாமி என்று பெயர்வைத்தால் என்ன? இராமசாமி நாயக்கர் என்று வைத்தால் என்ன? - இரண்டும் ஒன்றுதான்.

    இராமசாமி என்று வைத்தால் - இராமாயணப் படம் என்று தோன்றவும் வாய்ப்புண்டு.//

    ஏம்பா அருளு.. நீ பொறந்ததிலிருந்தே இப்படி லூசு மாதிரி பேசிகினு இருக்கியா, இல்ல நடுவில இப்படி ஆயிட்டியா.. எதுக்கும் நல்ல மெண்டல் டாக்டர பாருப்பா..

    ReplyDelete
  20. வலைஞன்August 12, 2010 12:04 PM

    அருள்:

    உங்கள் எண்ணப்படி,
    பெரியார் கொள்கை என்பது:

    பார்ப்பனர்களை அழிக்கும் வரை ஜாதியை எதிர்ப்போம்
    அவர்கள் அழிந்த பின்
    ஜாதியை வளர்ப்போம்!

    என்ன சரியா?

    எனவே இப்போ வளர்க்கும் காலம் வந்துவிட்டது!

    ஜமாய்ங்க!!

    ReplyDelete
  21. வலைஞன் said...

    // //பார்ப்பனர்களை அழிக்கும் வரை ஜாதியை எதிர்ப்போம். அவர்கள் அழிந்த பின் ஜாதியை வளர்ப்போம்!

    என்ன சரியா?// //

    சரியல்ல.

    பார்ப்பனர்களை அழிக்க வேண்டும் என்பது எமது கொள்கை அல்ல. BC/MBC/SC/ST பிரிவினருக்கான உரிய உரிமைகள் முழுவதுமாக அளிக்கப்பட வேண்டும் என்பதே எமது நொக்கம்.

    "வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்பது ஒரு தேசத்தின், ஆட்சியின் பொது உரிமையும், அந்தநாட்டின் குடிமக்களின் உரிமை சகலமும் எல்லா வகுப்பாரும் ஏற்றத்தாழ்வின்றிச் சமமாய் அடைய வேண்டியதென்பதுதான்."

    தந்தை பெரியார், குடிஅரசு 22.11.1925

    அனைவருக்கும் சமஉரிமை எனும்போது - அதில் பார்ப்பனர்களும் உள்ளடங்குவர்.

    ReplyDelete
  22. // எதுக்கும் நல்ல மெண்டல் டாக்டர பாருப்பா.//

    thailapura docotra???

    ReplyDelete
  23. இப்போ பெரியாருக்கு சாதி பெயர் சூட்டியாச்சு! அடுத்து வடை, மாலை சாத்தி கோவில் கட்டி கும்பிடுங்க!

    @ அருள்

    சப்பை கட்டு கட்டுறதுக்கு வேற மேட்டர் கிடைக்கலையா உங்களுக்கு? டோண்டு என்ன எழுதுனாலும் இப்படியா? இல்லை வீரமணி என்ன செஞ்சாலும் அப்படியா?

    ReplyDelete
  24. அய்யா தந்தை பெரியவர் அவர்களை ராஜாஜி நாயக்கர் ன்னு கூப்பிட்டார். சில பேரு ராமசாமி ன்னு கூப்பிட்டார்கள். ஒரு சிலர் வந்து சாமியே இல்லன்கிருன்கே அப்புறம் ஏன் உங்க பேருல சாமின்னு வருதுன்னு கேட்டாங்க. உனக்கு ராமசாமின்னு கூப்பிட புடிக்கலன்ன மசுருன்னு கூப்பிடுன்னு சொன்னவர் தான் பெரியார். இப்போவும் அததான் சொல்லுறோம் உங்களுக்கு நாயக்கர் வச்சது தப்ப இருந்த எப்படி வேணுனாலும் கூப்பிடுக்கோ அய்யா சொன்ன மாறி.
    http://paraneetharan-myweb.blogspot.com/2010/08/blog-post_6511.html

    ReplyDelete
  25. //உனக்கு ராமசாமின்னு கூப்பிட புடிக்கலன்ன மசுருன்னு கூப்பிடுன்னு சொன்னவர் தான் பெரியார்.//
    ஆக, வீரமணி ஐயா பெரியார் மசுராக நினைத்த சாதிப் பெயரை அவருக்கே வைத்து விட்டார் அப்படித்தானே?

    ஐயோ பாவம். பெரியாரை இதைவிட யாரால் அவமானப்படுத்த முடியும்?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  26. சாதி வாரிக் கணக்கெடுப்பை பற்றி அதன் அனுகூலங்கள், அதன் நோக்கங்கள் பற்றி பதிவு போடுங்களேன். ஏற்கனவே போட்டுட்டிருந்தா link குடுங்க.

    ReplyDelete
  27. /**********

    ஐயோ பாவம். பெரியாரை இதைவிட யாரால் அவமானப்படுத்த முடியும்?************/

    அய்யா ராகவன் அவர்களே, மசுரா நினைத்த பெயரை ஆசிரியர் அவர்கள் வைத்தாற? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பாருங்கள். இன்னும் படம் முழுமையாக முடிவடையாத நிலையில் உள்ளது. படம் வெளி வரும்போது மூக்கறுபட போவது இப்போது விமர்சனம் செய்பவர்கள்தான். அதுவரை நீங்க எப்படி வேணாலும் வைத்து கொள்ளலாம்.

    பெரியாரை பாதுகாப்பது பற்றி யாரும் திராவிடர் கழகத்திருக்கும் அதன் தலைமைக்கும் சொல்லிதர தேவை இல்லை. ஆசிரியர் எப்பொழுது எதனை செய்யவேண்டும் என்று தெரியும். இது ஒன்றும் காஞ்சி சங்கரமடம் இல்லை. பெண்களை கையை பிடித்து இழுத்து ஆசைக்கு இணங்க வைத்து அவமானப்பட்டு நிக்க. உங்கள் ஆலோசனைகளை ஜெயந்திரரிடமும், விஜயேந்திரரிடம் சொல்லுன்கள். வேண்டுமானால் துணைக்கு தேவனாதனையும் அலைத்துகொளுங்கள். அவாள் தான் உங்கள் பார்ப்பன இனத்தையே அவமானப்படுத்தி பாதாளத்தில் கொண்டு போய் செர்த்துள்ளால். பாவாம் உங்கள் நிலைமை.

    ReplyDelete
  28. எல்லாரும் போய் துணி வங்கும் கடைஇகு நாயுடு ஹால் என்று பெயர் வைத்திருக்கிறனே ஒருவன். அதனை ஏன் பெரியாரொ அவருடைய ஜிஞ்ஜாக்களோ எதிர்க்கவில்லை?
    நாயுடு என்பதாலா?

    ReplyDelete
  29. MR. DONDU,
    PAPPANS SHOULD NOT TELL ANY OPINION
    ABOUT ANYTHING.
    THEY ARE NOT ELIGIBLE TO LIVE ALSO.
    EVEN ARUL & CO'S GRANDFATHER AND GREAT GRAND FATHER DID ANY MISTAKE, IT IS BECAUSE OF PAPPANS ONLY. BASE ON THIS THEORY, PLEASE WRITE ANYTHING.
    KODIKKALAKODI. SAUDI ARABIA.

    ReplyDelete
  30. ///// எதுக்கும் நல்ல மெண்டல் டாக்டர பாருப்பா.//

    thailapura docotra??? ////

    wrong.these guys should consult only the famous Chennai based veterinary doctor with rather long beard.

    ReplyDelete