9/30/2011

தேவை இல்லாமல் சீன் போட்ட பலன்

அடேங்கப்பா எத்தனை பதிவுகள், எத்தனை கிண்டல்கள்!!!

ஆனால் சும்மா சொல்லக் கூடாது, கிண்டலுக்கு ஆளானவர்கள் வாயே திறக்காமல் வடிவேலு மாதிரி நல்லவர்கள் ஆனார்கள்.

நான் குறிப்பிடுவது எனது இப்பதிவைத்தான்.

இப்போதுதான் பலமுறை நானும் மற்றவர்களும் துருவித் துருவி கேட்ட பிறகு தமிழ் மணம் சாவகாசமாகக் கூறுகிறது, “அவை கட்டணப் பதிவுகள்” என. ஓக்கே இருக்கட்டுமே, கட்டணப் பதிவு என இரு வார்த்தைகளை சம்பந்தப்பட்ட பதிவின் மேல் வைத்தால் அதை கேள்வி கேட்க எங்களுக்கு பைத்தியமா பிடித்திருக்கிறது?

இது பற்றி தமிழ் மணம் அளித்த பதில்கள்.

//கேள்வி :சில பதிவர்கள் தமது மென்பொருள் அறிவை தவறாகப் பயன்படுத்தி, தமது இடுகைகள் மட்டும் பல நாட்களாகத் தொடர்ந்து தமிழ்மண முதல் பக்கத்தில் வருமாறு செய்து விடுகிறார்கள்
பதில் : நீங்கள் குறிப்பிடும் பதிவுகள் தமிழ்மணம் முகப்பில் தொடர்ந்து இருக்க விளம்பரம் செய்யப்பட்ட பதிவுகள். தமிழ்மணத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட சமீபத்தில் எழுதப்பட்ட இடுகைகள் மட்டுமே தமிழ்மணம் முகப்பில் தெரியும். அதனை யாரும் தவறாக பயன்படுத்துவதாக தெரியவில்லை//

டோண்டு ராகவன் on September 30th, 2011 6:10 am
அப்படி கட்டணச்சேவை என்றால் அது ஒருவித வர்ணப்பட்டையுடன் இருக்க வேண்டாமா? ஆனால் நான் சுட்டிய பதிவுகள் அவ்வாறு இல்லையே?
அன்புடன்,
டோண்டு ராகவன்//

//தமிழ்மணம் பல விதங்களில் விளம்பரங்கள் வழங்குகிறது. வர்ணப்பட்டையுடன் கூடிய விளம்பரங்களுக்கு கூடுதல் கட்டணம். வர்ணப்பட்டை இல்லாத விளம்பரங்களுக்கு குறைவான கட்டணம். சிலர் அதனைப் பயன்படுத்துகின்றனர்.
தமிழ்மணம் விளம்பரப் பக்கங்களில் அது குறித்த விபரங்கள் உள்ளன
http://www.tamilmanam.net/purchase_ads.php
http://tamilmanam.net/tamilmanam_paid_service.php//


விளம்பரங்களுக்கு குறைவான கட்டணம் செலுத்துபவர்களாகவே இருக்கட்டுமே, அதனால் என்ன? பதிவின் மேல் விளம்பரப் பதிவு என தமிழ்மண முகப்புப் பக்கத்தில் போட உங்களுக்கு என்ன தயக்கம்?

சம்பந்தப்பட்ட பதிவர்கள் தேவையின்றி அவதூறுக்கு ஆளானார்கள். ஆனால் அதிலும் தவறு அவர்கள் மீதுதான். தங்களது விளம்பரச் சேவை பதிவு என பதில் அளித்திருந்தால் தீர்ந்திருக்கும் விஷயம். ஆனால் அவ்வாறு செய்யாமல் அமுக்குனியாக இருந்து தாங்கள் என்னவோ மென்பொருள் நிபுணர்கள் என்ற ரேஞ்சில் சீன் போட்டால் இதுதான் நடக்கும்.

சரி சரி, ஆளை விடுங்கள். இதற்குத்தான் “நியாயமாக நடந்தால் போதாது, நியாயமாக இருப்பது வெளிப்படையாகவும் தெரிய வேண்டும்” எனக் கூறுகிறார்கள் போலும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

9/29/2011

டோண்டு பதில்கள் - 29.09.2011

pt
டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
கேள்வி-1. கூடங்குளம்: பிரதமரே இறுதி முடிவு எடுப்பார்: அமைச்சர் நாராயணசாமி

பதில்: சரிதான் உச்சா போவதற்குக் கூட சோனியாவின் அனுமதியை எதிர்பார்ப்பவரிடமிருந்து இத்தகைய எதிர்பார்ப்பா>

கேள்வி-2. கூடங்குளம் உண்ணாவிரதம் வாபஸ்: முதல்வரின் உறுதிமொழி ஏற்பு
பதில்: ஒருவர் மீசையிலும் மண் ஒட்டவில்லை எனும் திருப்திதான்

கேள்வி-3. தேர்தலை முறையாக நடத்த நீதிமன்றத்தை நாடுவோம்: ஸ்டாலின்
பதில்: எல்லாம் தனக்கு வந்தால்தான் தெரியும்.

கேள்வி-4. நான் பிரதமர் வேட்பாளர் அல்ல: அத்வானி சூசகம்
பதில்: அரசியல், அரசியல்

கேள்வி-5. தனித்தொகுதிகள் ஒதுக்கீடு செய்வதை அரசு முடிவு செய்யும்: ஆணையர் அய்யர்
பதில்: அது சுழற்சி முறையில் வரும் என நினைக்கிறேன்.

கேள்வி-6. A murderer is condemned to death. He has to choose between three rooms. The first is full of raging fires. The second is full of assassins with loaded guns. The third is full of lions that haven't eaten in 3 years. Which room is safest for him?
பதில்: Lions' room. They should all be dead if starving for 3 years.


கேள்வி-7. A woman shoots her husband. Then she holds him under water for over 5 minutes. Finally, she hangs him. But 5 minutes later they both go out together and enjoy a wonderful dinner together. How can this be?
பதில்: It is a Photo-shoot.

கேள்வி-8. What is black when you buy it, red when you use it, and grey when you throw it away?
பதில்: Matchstick.

கேள்வி-9. Can you name three consecutive days without using the words Wednesday, Friday, or Sunday?
பதில்: Yesterday, today and tomorroww.

கேள்வி-10. This is an unusual paragraph. I'm curious as to just how quickly you can find out what is so unusual about it. It looks so ordinary and plain that you would think nothing was wrong with it. In fact, nothing is wrong with it! It is highly unusual though. Study it and think about it, but you still may not find anything odd. But if you work at it a bit, you might find out. Try to do so without any coaching!
பதில்: There are no e's in that, everyone knows the trick.

ரமணா
கேள்வி-11. பதுங்கும் பங்குச்சந்தை சீறிப்பாயும் கமாடிடி சந்தை?
பதில்: அவை பற்றி மிகக்குறைவே அறிவுடைய டோண்டு ராகவனிடமா இக்கேள்வி??

கேள்வி-12. அன்னாவை அழைக்கும் பாகிஸ்தான் பற்றி?
பதில்: அங்கு போய் என்ன செய்வாராம்? சுதந்திரம் வந்த புதிதில் காந்திஜி பாகிஸ்தான் செல்ல விருப்பம் தெரிவித்திருந்தார் என்றால் அது வேறு விஷயம், வேறு பிரச்சினை.

தான் இன்னொரு காந்தி என நிறுவுவதற்காகவே அவர் முயலுகிறார்.

கேள்வி-13. தமிழக முதல்வரின் தற்கால செயல்பாடுகள் பற்றி?
பதில்: உண்மையான க்ரைசிஸ்கள் ஏதேனும் வந்தால்தான் அவரது முழுசெயல்பாடுகளை மதிப்பிட இயலும்.

கேள்வி-14. அமெரிக்கா,ஐரோப்பா இவைகளின் எதிர்காலப் பொருளாதாரம்?
பதில்: கேப்பிடலிசத்தில் ஏற்றமும் தாழ்வும் மாறி மாறி வரும். தவிர்க்க முடியாது.

கேள்வி-15. கூடங்குளம் அணுமின்நிலையம் தேவையா?
பதில்: இல்லை.


BalHanuman
கேள்வி-16. 'டெல்லி குண்டுவெடிப்புச் சம்பவத்தால் எனது இமேஜ் பாதிக்கப்பட்டுள்ளது’ என்று புலம்புகிறாரே ப.சிதம்பரம்?
பதில்: இல்லாத விஷயத்துக்கு ஏன் புலம்பல்கள்?

கேள்வி-17. நில மோசடித் தடுப்புப் பிரிவையே ரத்து செய்ய வேண்டும் என்று வழக்கு தாக்கல் செய்துள்ளதே தி.மு.க.?
பதில்: வன்கொடுமை தடுப்புச் ச்ட்டத்தையே எடுக்க வேண்டும் என மரம்வெட்டிக் க்ட்சித்தலைவர் கூறுவது போல உள்ளது.

இதைத்தான் என் அப்பன் குதிருக்குள் இல்லை என்பார்கள்.


மேலும் கேள்விகள் வந்தால் அடுத்த வாரம் சந்திப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

9/24/2011

தமிழ் நாடகப் பேராசிரியர், பம்மல் சம்பந்த முதலியார் - 2

தமிழ் நாடகப் பேராசிரியர், பம்மல் சம்பந்த முதலியார் பற்றிய எனது இன்னொரு பதிவு இங்கே

அப்பதிவை இட்டபோது அவரது நாடகமேடை நினைவுகளிலிருந்து எனது நினைவிலிருந்து எடுத்து எழுதினேன். ஆனால் சில நாட்களுக்கு முன்னால் எனக்கு அப்புத்தகமும், பலகாலமாக தேடி வந்த வேறு சில புத்தகங்களும் கிடைத்தது என் பாக்கியமே.

அவரது நாடக மேடை நினைவுகளை இப்போதுதான் படித்து முடித்தேன். நான் சில ஆண்டுகளுக்கு முன்னால் படித்த புத்தகத்துக்கும் இப்போதுதான் படித்து முடித்த புத்தகத்துக்கும் ஆறு வித்தியாசங்களுக்கும் மேலே உண்டு என்றுதான் நினைக்கிறேன்.

இப்போது படித்து முடித்தப் புத்தகம் 1932 வாக்கில் எழுதப்பட்டது, ஆனால் நான் முன்னால் படித்த புத்தகத்திலோ அதற்கு பிந்தையக் காலக் கட்டங்களும் சுட்டப்பட்டுள்ளன. மறுபடியும் கடையில் போய் பார்க்க வேண்டும். அது பற்றி பிறகு.

இப்போது இந்தப் புத்தகத்தை படித்ததும் எனது நினைவுகள் கிட்டத்தட்ட சரி என்ற நிலைக்குத்தான் வந்தேன். நாடக அரங்கங்களில் ஆபாசங்கள் என்னும் பதிவில் குறிப்பிட்ட ரோலக்ஸ் வாட்ச் ஒன்றுதான் எனது நினைவுகளுடன் ஒத்துப் போகவில்லை.

சம்பந்தம் முதலியாருக்கு துணைவி/காதலி பாத்திரங்களில் வந்த ரங்கவடிவேலு முதலியார், நாகரத்தினம் ஐயர் ஆகியோர் பற்றி அவர் தரும் விவரங்கள் புருவங்களைத் தூக்க வைக்கின்றன.

மனோகரன் நாடகத்தில் இவர் மனோகரனாக நடித்ததாலேயே ரங்கவடிவேலு விஜயாள் வேடம் தரித்தார், கர்ணன் நாடகத்தில் பானுமதியாக நாகரத்தினம் ஐயர் நடித்ததாலேயே இவர் துரியோதனன் வேடம் ஏற்க நேர்ந்தது, இவரும் அவரது பெண் ஜோடிகளாக வேடம் தரித்த ரங்க வடிவேலுவும் ஊடுவது பற்றி எல்லாம் படிக்கும்போது உண்மையான க்ணவன் மனைவி, நிஜக் காதலர்கள் கெட்டார்கள் போங்கள் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

இவ்வரிகளை ஒரு மனோதத்துவ நிபுணர் படித்தால் என்ன நினைப்பார் என்பதை என்னால் கற்பனை செய்ய முடிகிறது. சங்கடமாக உள்ளது.

இப்புத்தகத்தை படித்த போது இப்போது தோன்றிய விஷயத்தைக் கூறும் முன்னால் ஒரு சிறு டைவர்ஷன்.

பிரபல ஆங்கில நாவலாசிரியை ஜேன் ஆஸ்டன் பற்றிப் பேசுகையில் அவர் தனது சமகாலத்தில் நடந்த பிரெஞ்சு, அமெரிக்க மற்றும் தொழிற் புரட்சிகள் பற்றி தனது நாவல்களில் ஒன்றுமே கூறவில்லை. அது பற்றி பல விவாதங்கள் நடந்துள்ளன. அவை இப்போதைக்கு இங்கு வேண்டாம்.

அதே போல பாரதியார் கூட வீர பாண்டிய கட்டபொம்மன் பற்றி ஒன்றுமே எழுதாதற்கும் காரணங்கள் இருந்திருக்கும் அல்லவா? அது பற்றி இம்சை அரசன் புலிகேசி தூண்டிய நினைவுகள் என்னும் தலைப்பில் நான் இட்ட இடுகையில் நான் இவ்வாறு குறிப்பிட்டிருந்தேன்.

உதாரணத்துக்கு "வீரபாண்டிய கட்டபொம்மன்" படம் ஐம்பதுகளில் வெளியானபோது தமிழ்நாட்டில் எட்டையபுரத்தில் உள்ள தியேட்டர்களில் ஒன்றில்கூடத் திரையிடப்படவேயில்லை என்பது பத்திரிகை செய்தி. ஊர்கட்டுப்பாடுதான் அதற்குக் காரணம். தங்கள் மஹாராஜாவின் மீது அவ்வளவு பக்தி ஊர் மக்களுக்கு. ஒன்று இரண்டு மூன்று என்று கூறும்போது கூட, ஆறு, ஏழு, மஹாராஜா, ஒன்பது, பத்து என்றுதான் எண்ணுவார்களாம். ஏனெனில் எட்டு என்று கூறிவிட்டால் மஹாராஜாவைப் பெயர் வைத்துக் கூப்பிடுவதுபோல ஆகிவிடுமாம். அதனால்தான் பாரதியார் கூட தன் எழுத்துக்களில் வீர பாண்டிய கட்டபொம்மனைப் பற்றி ஒன்றும் குறிப்பிடவில்லை என நினைக்கிறேன். அக்காலக் கட்டங்களில் கட்டபொம்முவை கொள்ளைக்காரனாகத்தான் குறிப்பிட்டனர் பலர். பாரதியாரும் அவ்வாறே கருதியிருக்கலாம்.

சிறு டைவர்ஷன் முடிந்தது.

இப்புத்தகத்தில் முகத்தில் அறையும் எண்ணம் இதுதான். சுதந்திரப் போராட்டம் பற்றி ஒரு குறிப்புமே இல்லை. பல தமிழ் நாடகக் கலைஞர்கள் (கே.சாரங்கபாணி, கே.பி.சுந்தராம்பாள், நாகையா, டி.கே.சண்முகம், எஸ்.வி.சகஸ்ரநாமம், என்.எஸ். கிருஷ்ணன் ஆகியோர்) தத்தம் உயிரைப் பயணம் வைத்து சுதந்திர தாகம் எழுப்பும் நாடகங்களை போட்ட கால கட்டத்தில் இவரது குழு சௌகரியமாக அரசு சார்பில் இருந்து, கவர்னர் துரை மற்ற அரசு அதிகாரிகள் மனம் மகிழும் நாடகங்கள் போட்டு, ராவ் பகதூர், திவான் பகதூர், சர் பட்டங்களைப் பெறுவதிலேயே காலம் கழித்திருக்கிறது. இவரும் அரசு உத்தியோகத்தில் ஜட்ஜாக எல்லாம் இருந்து ஓய்வும் பெற்றுள்ளார்.

இது பற்றியும் மனோதத்துவ நிபுணர்கள் இப்போது என்ன கூறுவார்கள் என்பதை நினைத்தாலும் சுவாரசியமாகத்தான் இருக்கும்.

அது சரி, பம்மல் சம்பந்த முதலியார் அறிவார்ந்த சுயநலத்துடன் செயல்பட்டுள்ளார். அதில் என்ன குற்றம் காண இயலும் என்னால்? நானே அப்படித்தானே!

அன்புடன்,
டோண்டு ராகவன்

9/22/2011

டோண்டு பதில்கள் - 22.09.2011

pt
டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
கேள்வி:1. உள்ளாட்சித் தேர்தலில் திமுக தனித்துப் போட்டி: கருணாநிதி

பதில்: திமுக இப்போதிருக்கும் மோசமான நிலையில் அதனுடன் கூட்டு வைக்க தைரியம் தேவைப்படும். அது எக்கட்சியிடம் உள்ளது?

அது தெரிந்து கருணாநிதி இவ்வாறு கூறுவதை ஒரு டேமேஜை குறைக்கும் செயலாகவே (மீசையில் மண் ஒட்டவில்லை) பார்க்கிறேன்.

கேள்வி:2. தயாநிதி, கலாநிதியிடம் சி.பி.ஐ. விசாரணை
பதில்: முதலில் தயாநிதிக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் ஏதும் இல்லை என்னும் ரேஞ்சில் சொன்ன சிபிஐ இப்போது இவ்வாறு நடப்பது ஐயங்களை உருவாக்குகிறது. ஏதோ பெரிய ஆப்பு யாருக்கோ உறுதி எனத் தோன்றுகிறது.

கேள்வி:3. அரசு ஊழியர் மாதச் சம்பளத்துக்கு ரூ.25,751 கோடி: நிதியமைச்சர்
பதில்: புள்ளி விவரங்கள், புள்ளி விவரங்கள். அதைக் கட்டுப்படுத்த ஏதும் முயற்சி கூட இல்லையே.

கேள்வி:4. பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3 உயரும்?
பதில்: லிட்ட்ருக்கு 4 ரூபாய் உயரவில்லையே என சந்தோஷப்பட்டுக் கொல்ள வேண்டியதுதான்.

கேள்வி:5. சிறந்த நிர்வாகத்துக்கு குஜராத் உதாரணம்
பதில்: இதில் என்ன சந்தேகம்?

கேள்வி:6. நாட்டின் பாதுகாப்பில் நிச்சயமற்றநிலை: பிரதமர் கவலை
பதில்: பொறுப்பற்ற பிரதமர் இருக்கும் நிலையை எண்ணி, எண்ணி அதே பொறுப்பற்ற பிரதமர் வருந்துகிறாரா, பேஷ்.

கேள்வி:7. பிரதமர் வேட்பாளராக மோடி: அமெரிக்க அறிக்கைக்கு அத்வானி ஆதரவு
பதில்: பாஜகாவில் உள்ள பொறாமையாளர்களது வயிறெரியுமே.

கேள்வி:8. கனிமொழி, சரத்குமார் ஜாமீன் கோரி மீண்டும் மனு தாக்கல்: சி.பி.ஐ. எதிர்ப்பு
பதில்: இன்னும் கொஞ்சம் நாட்கள்தான் களி தின்னட்டுமே.

கேள்வி:9. வெளிச்சந்தைக்கு சவால் விடும் அரசின் இலவசப் பொருள்கள்
பதில்: அப்படி கொடுக்கப்பட்ட இலவச பொருட்களும் வெளிச்சந்தைக்கு வந்த பிறகு சவாலாவது ஒன்றாவது.

கேள்வி:10. கூடங்குளம் குறித்து அச்சம் வேண்டாம்: ஜெயலலிதா
பதில்: பொறுப்பற்ற பேச்சு. அஞ்சுவ தஞ்சாமை பேதமை அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில்.


ரமணா
கேள்வி:11. முன்னாள் முதல்வரின் இலவச திட்டம் இன்னாள் முதல்வரின் விலை இல்லாத் திட்டம் என்ன வேறுபாடு?
பதில்: லேபலில்தான் வேறுபாடு. இரண்டுமே சோம்பேறிகளை உருவாக்கும் திட்டமே.

கேள்வி:12. பெரியவர் கருணாநிதியை தேர்தலில் கைவிட்ட இலவச‌ டீவி யின் கதையை பார்த்த பிறகும் தமிழக் அரசின் விலை இல்லாத்திட்டம் ஜெயிக்க வைக்குமா அதிமுகாவை?
பதில்: திமுக பதவியில் இருக்கும் வரைக்கும் அதிமுகாவை பதவிக்கு கொண்டுவர வைக்க வேண்டும் என்ற ரேஞ்சுக்கு கருணாநிதி முயன்று வென்றார். இப்போது ஜெயலலிதாவின் முறை.

கேள்வி:13. ஒரு வேளை உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றால் என்ன வாகும் இந்த விலை இல்லாத்திட்டம்?
பதில்: அவ்வ்வ்வ்வ்.

கேள்வி:14. இதில் செலவளிக்கப் படும் 10,000 கோடியை அடிப்படை கட்டுமானத்திற்கு செல்வளித்தால் தமிழகம் இன்னுமொரு குஜராத் மாறுமே?
பதில்: அந்த அறிவு இருந்தால்தானே.

கேள்வி:15 .உங்கள் மோடி பிரதமரானால்?
பதில்: நாட்டுக்கு நல்லது.

கேள்வி:16. ஜான் பாண்டியன் விசயத்தில் சிபிஐ விசாரணை கோரி திருமாவளவன் ஆர்ப்பாட்டம் சரியா?
பதில்: இன்னுமா மக்கள் சிபிஐ பற்றி நம்பிக்கை கொண்டுள்ளனர்?

கேள்வி:17. மதிமுகவின் மாநாடு பற்றி?
பதில்: அக்கட்சியும் தனது இருத்தலை அவ்வப்போது அவ்வாறு காட்டிக் கொள்வது அவசியம்தானே.

கேள்வி:18. பெட்ரோல் விலை உயர்வு லிட்டர் ரூ. 100 ஆகிவிடும் போலுள்ளதே?
பதில்: அது உருவாக்கும் விலை உயர்வு விஷச்சக்கரம் கவலையை வரவழைக்கிறது.

கேள்வி:19. சொத்து குவிப்பு வழக்கில் பாதகமான தீர்ப்பு வந்தால்?
பதில்: பன்னீர்செல்வம் மீண்டும் முதல்வர்?

கேள்வி:20. அஜித்தின் மங்காத்தா பார்த்தீர்களா எப்படி உங்கள் பார்வையில்?
பதில்: பார்க்கவில்லை, ஆகவே கருத்தேதுமில்லை.

மேலும் கேள்விகள் வந்தால் அடுத்த வாரம் பார்ப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

9/21/2011

பாரதியாரும் கிருஷ்ணசாமி ஐயரும்

Explain with reference to context பற்றி நான் இட்ட இடுகையின் தொடர்ச்சியாகவும் இதை வைத்துக் கொள்ளலாம்.

சில நாட்கள் முன்னால் எதேச்சையாக பல புதையல்கள் கிடைத்தன. தி நகரில் பனகல் பூங்கா அருகில் உள்ள நியூ புக்லேண்ட் என்னும் புத்தகக் கடையில் நான் பல நாட்களாக தேடி வந்த உவேசா, பம்மல் சம்பந்த முதலியார், அஷ்டாவதானம் வீராசாமிச் செட்டியார், நாமக்கல் கவிஞர் வே. ராமலிங்கம் பிள்ளை, தொ.மு. பாஸ்கர தொண்டைமான் ஆகியோரது நூல்கள் கிடைத்தன.

இப்போது தமிழ் தாத்தா உவேசா அவர்களது உரைநடை நூல்களின் தொகுப்புகளை பார்த்து வருகிறேன். அவற்றில் நான் கண்டதின் ஒரு சிறு பகுதியை இங்கு இடுகையாக பதிப்பேன்.

மயிலை வடமொழிக் கல்லூரி, வெங்கடரமணா வைத்தியசாலை ஆகியவர்றின் தோற்றத்தில் பெரும் பங்கேற்றவர் திரு. வி. கிருஷ்ணசாமி ஐயர். வக்கீல், நீதிபதி ஆகிய பதவிகளில் செயலாக்கம் பெற்றவர். ஆங்கிலம் மற்றும் வடமொழிகளிலும் தமிழிலும் தேர்ச்சி பெர்றவர்.

அக்கால கட்டத்தில் ஒரு நிலை இருந்தது. ஆங்கிலம் நன்கு கற்றவர்கள், வடமொழி மீது அபிமானம் வைப்பவர்கள் ஆகியோர் தமிழை மதிக்க மாட்டார்கள் என்னும் பொது புத்தியைத்தான் குறிப்பிடுகிறேன் (இப்போது மட்டும் என்ன வாழுதாம் என முணுமுணுக்கிறான் முரளி மனோகர், லூசுல விடப்பா எனக் கூறுவது டோண்டு ராகவன்).

கிருஷ்ணசாமி ஐயர் ஒரு முறை சென்னை மாநிலக் கல்லூரி தமிழ்சங்கத்தின் கூட்டம் ஒன்றுக்கு தலைமை வகித்தார். மேலே கூற்ப்பட்ட பொது புத்தியை ஒட்டி, இவர் என்ன பெரிதாக தமிழ் பற்றி பேசிவிடப் போகிறார் என்றிருந்தனர் பலர். அக்கூட்டத்திற்கு வந்தவர்களில் மகாகவி சுப்பிரமணிய பாரதியும் ஒருவர்.

கிருஷ்ணசாமி ஐயர் தமிழில் உள்ள பெருமை வாய்ந்த நூல்களை அநாயாசமாக பட்டியலிடுவதுடன் பேச்சைத் துவங்கினார். திருக்குறளை திருவள்ளுவர் இயற்றியது இம்மொழியிலே, கம்ப ராமாயணமும் இம்மொழியிலே, நாயன்மார்களது தேவாரம், மாணிக்கவாசகரது திருவாசகம், ஆழ்வார்கள் அருளிய திவ்யப் பிரபந்தம் ஆகியவையும் இம்மொழியிலேதான். இம்மாதிரியே தமிழின் பெருமையை அப்பெரியவர் அனாயாசமாக அடுக்கினார்.

கேட்டவர் எல்லோரும் பிரமித்தனர், சுப்பிரமணியா பாரதியார் மகிழ்ச்சி அடைந்தார். பிறகு ஒரு தருணத்தில் இக்கருத்துக்களை வைத்து பாரதியார் இயற்றினார், எளிய நடைத் தமிழில் ஒரு பாடலை. அப்பாடல் இதோ,

செந்தமிழ் நாடென்னும் போதினிலே - எங்கள்
செந்தமிழ் நாடென்னும் போதினிலே - இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே
தந்தையர் நாடென்ற பேச்சினிலே ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே

வேதம் நிறைந்த தமிழ்நாடு
உயர் வீரம் செறிந்த தமிழ்நாடு
இளம் காதல் புரியம் அரம்பையர் போல் - இளங்
கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு - உயர்
வேதம் நிறைந்த தமிழ்நாடு

கல்வி சிறந்த தமிழ்நாடு
புகழ் கம்பன் பிறந்த தமிழ்நாடு
கல்வி சிறந்த தமிழ்நாடு
பல்விதமாயின சாத்திரத்தின் மணம்
பாரெங்கும் வீசும் தமிழ்நாடு

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு
நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரமென்றோர் - நெஞ்சை
அள்ளும் சிலப்பதிகாரமென்றோர் - மணி
யாரம் படைத்த தமிழ்நாடு

நீலத்திரைக் கடல் ஓரத்திலே நின்று
நித்தம் தவம் செய்யும் குமரி எல்லை
மாலவன் குன்றம் இவற்றிடையே - வட
மாலவன் குன்றம் இவற்றிடையே
மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு - புகழ்
மண்டிக் கிடக்கும் நம் தமிழ்நாடு

இப்பாடலைக் கேட்டு, அதில் தனது கருத்துகள் பொதிந்திருப்பதையும் கண்டு திரு கிருஷ்ணசாமி ஐயர் மிக மகிழ்ந்தார். அப்பாடலுடன் பாரதியாரின் மர்றப்பட்டல்களையும் தொகுத்து அச்சிடச் செய்து இலவசமாக வினியோகம் செய்தார். பாரதியாரை ஆதரித்தவர்களில் இவரும் ஒரு முக்கியமானவர்.


ஆதாரம்: டாக்டர் உவேசா அவர்களின் உரைநடைத் தொகுதி - (முதல் தொகுதி), பக்கங்கள் 107, 108 & 109.

அன்புடன்,
டோண்டு ராகவன்
டிஸ்கி: இந்த இடுகைக்கும் இது போன்று பின் வரக்கூடிய இடுகைகளுக்கும் “தமிழினிமை” என்னும் புது சுட்டியை உருவாக்குகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

9/20/2011

Higher principles

சமீபத்தில் 1961-ஆம் ஆண்டில் சென்னையில் நடத்தப்பட்ட ஒரு திரைப்பட விழாவில் இந்தப் படம் செக்கோஸ்லாவிக்கியா நாட்டின் தரப்பிலிருந்து திரையிடப்பட்டது. அண்ணாசாலை அண்ணா சிலைக்கருகே இருந்த நியூ எல்ஃபின்ஸ்டன் தியேட்டரில் அதை அக்கால கட்டத்தில் பார்த்த போது எனக்கு வயது கிட்டத்தட்ட 15. டிக்கெட் விலை 84 பைசா.

அப்படத்தின் பின்னணியில் இருந்த சரித்திர விவரங்கள் எனக்கு அப்போது தெரியாது. ஒரு முன்முடிவும் இன்றித்தான் அப்படத்தைப் பார்த்தேன். படம் முழுக்க செக் மொழியிலும் ஜெர்மானிய மொழியிலும் இருந்தது. ஆங்கிலத் துணை தலைப்புகளால்தான் கதைப் போக்கை நிர்ணயிக்க முடிந்தது. அப்படத்தின் யூ ட்யூப் சுட்டி கீழே.



அப்படத்தை இத்தனை ஆண்டுகளாக நினைவில் வைத்திருந்ததற்கு முக்கியக் காரணமே செக் மற்றும் ஜெர்மானிய மொழி வசனங்களைக் கேட்டதுதான். அத்தருணத்தில் தமிழ் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளை மட்டும் அறிந்திருந்த நான், முதன் தடவையாக ஜெர்மன் மற்றும் செக் மொழிகளை அவற்றைத் தாய்மொழியாக கொண்டவர்கள் மூலம் கேட்டேன். அவற்றில் ஜெர்மன் பேசும்போது ஏதோ சம்ஸ்கிருதம் கேட்பது போல இருந்தது.

இப்போது படத்துக்கு போவோம். இன்றுதான் (20.09.2011) முழு படத்தையும் யூ ட்யூப்பில் பார்த்தேன். முதலில் பார்த்த பல புரியாத விஷயங்கள், பின்னணிகள் இப்போது புரிந்தன. Reinhard Heydrich என்பவன் ஹிட்லரால் நியமிக்கப்பட்ட செக்கோஸ்லாவாக்கியாவின் முழு அதிகாரம் பெற்ற தலைவன். அவன் சொல்வதுதான் சட்டம். அவனை மே 1942 இறுதியில் கொல்ல முயற்சிக்கின்றனர் செக் போராளிகள். அதில் காயமுற்று அவன் ஜூன் 4-ஆம் தேதி இறந்து போகிறான். அந்தக் கொலைக்கு நாஜிக்கள் கொடூரமான முறையில் பழிதீர்க்கின்றனர். ஜூன் 3, 4 மற்றும் ஐந்தாம் தேதி நடந்த நிகழ்வுகளில் பள்ளியிறுதித் தேர்வு எழுதிக் கொண்டிருக்கும் 3 மாணவர்களும் பலியாகின்றனர். அதுதான் கதை.

அந்த சில நாட்களின் நிகழ்வுதான் படம் முழுக்க வருகிறது. பரீட்சைநேர ஜுரங்கள், காப்பி அடிப்பது ஆகியவை சகஜமாகவே காட்டப்ப்டுகின்றன. லாண்டிரி நடத்திப் பிழைக்கும் ஒரு பெண்மணி, அவள் மகன் (மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்ட மூவரில் ஒருவன், அந்த மகனின் வகுப்புத் தோழி, அவளது தந்தை (ஒரு வழக்கறிஞர்) ஆகியோர் மிக இயல்காக கதைக்குள் இணைக்கப்படுகின்றனர்.

ஹெய்ட்ரிச்சுக்கு பதிலாக நியமிக்கப்படுபவன் செக் மொழி, லத்தீன மொழிகள் ஆகியவற்றை நன்றாகவே பேசுகிறான். தங்க மீனை உயிருடன் பிடிக்கும் தனது சிறு மகனிடம், அந்த மீனை கொல்லாமல் குளத்தில் விடுமாறும் கூறுகிறான். மொத்தத்தில் நாம் அன்றாடம் காணும் சாதாரண மனிதன் மட்டுமே. இருப்பினும் ஒரு அல்ப காரணத்துக்காக மரணதண்டனை பெற்ற அந்த மூன்று மாணவர்கள் விஷயத்தில் கருணை காட்ட மறுத்து அவர்களும் இறக்கின்றனர்.

நேரம் இருந்தால் அப்படத்தை நிச்சயம் பார்க்கவும். அது கம்யூனிச பிரசாரம் அதிகம் உள்ளதாகக் கூறப்படுகிறது. அது என்னமோ உண்மையாக இருப்பதாகத்தான் எனக்கு படுகிறது. ஸ்டாலின், சோவியத் ஒன்றிய அரசு அதிகாரிகள் செய்விக்காத கொலைகளா? இருப்பினும் அதையெல்லாம் மறந்து இப்படத்தைப் பார்க்குமாறு சிபாரிசு செய்கிறேன்.

ஐம்பது ஆண்டுகள் கழித்து பார்த்த அப்படத்தில் பல காட்சிகளை அவை வருவதற்கு ஓரிரு நிமிடங்களுக்கு முன்னால் அவற்றுக்கான துணைத் தலைப்புகள் சேர்த்து என்னால் ஊகிக்க முடிந்தது. நான் 14 ஆண்டுகளுக்கு பின்னால் பார்த்த சபாஷ் மீனா, பத்துக் கட்டளைகள் ஆகிய படங்கள் விஷயத்தில் நடந்தது போலத்தான் இங்கும் நடந்தது. அதைக் குறிப்பிட்ட எனது ஜெயா டிவியின் நேர்காணல் இதோ.



அந்த ஜெயா டிவி பேட்டிக்கான மீதி வீடியோக்களை பார்க்க எனது இந்த இடுகைக்கு செல்லவும்,

அன்புடன்,
டோண்டு ராகவன்

9/17/2011

தமிழ் மணத்தில் சில பக்ஸ் (bugs)

சாதாரணமாக தமிழ் மணத்தில் ஒரு பதிவை இணைத்து அதைத் தமிழ்மணமும் ஏற்றுக்கொண்டால் அதன் முகப்பில் அப்பதிவின் விவரம் சுட்டியுடன் வரும். ஆனால் அடுத்த சில நிமிடங்களிலேயே அது பின்னால் வந்து கொண்டேயிருக்கும் புதிய பதிவுகளால் முகப்பிலிருந்து காணாமல் போகும்.

அதே சமயம் அப்பதிவுக்கு வரும் பின்னூட்டங்கள் வர வர அவையும் இற்றைப்படுத்தப்படும் ஆனால் மறுமொழிகள் என்னும் தலைப்பில் வரும்.

இப்போது நான் குறிப்பிடுவது இப்பதிவை. இது மட்டும் இம்மாதம் 6-ஆம் தேதியிலிருந்து தினமும் முதல் பக்கத்தில் வந்து கொண்டேயிருக்கிறது. இது ஒன்றும் அப்படியெல்லாம் கட்டணச் சேவையில் வருவதாகவும் தெரியவில்லை. பின்னூட்டம் எனப் பார்த்தாலும் நான் இட்ட ஒரே பின்னூட்டம் மட்டுமே காணப்படுகிறது. அது இதோ:

“dondu(#11168674346665545885) said...
அதென்ன உங்களது இந்தப் பதிவு மட்டும் விடாது தமிழ்மணத்தில் முதல் பக்கத்தில் இவ்வளவு நாட்களாக வருகிறது?

என்ன மந்திரம் போட்டீர்கள்”?

பதிவருக்கே விடை தெரியவில்லை என நினைக்கிறேன் அல்லது அது எப்படி எனக்கூறிவிட்டால் ஏல்லோரும் அவ்வாறே செய்கிறார்கள் என நினைக்கிறாரோ எனத் தெரியவில்லை.

சந்தடி சாக்கில் தமிழ்மணத்தில் காணும் இக்குறையையும் கூறிவிடுகிறேன். மறுமொழிகளை இற்றைப்படுத்துவதில் சில சமயம் லாஜிக் ஏதும் இல்லாமல் இருக்கிறது. எல்லா மறுமொழிக்களுமே உடனுக்குடன் இற்றைப்படுத்தப்பட்டது என்று கூறிட இயலாது. அதே சமயம் சிறிது சம்பந்தமே இன்றி பல நாட்களுக்கு முன்னால் இட்ட பின்னூட்டம் இற்றை படுத்தப்படுகிறது. இது பற்றி நான் தமிழ்மண நிர்வாகி ஒருவரிடமே கேள்வி வைத்தேன், பதில் கிடைக்கவில்லை.

அப்பதிவில் நான் இவ்வாறு குறிப்பிட்டேன், “பின்னூட்ட உயரெல்லை மீண்டும் வேண்டும் என லக்கிலுக் கூறினார். தற்காலிகமாகத்தான் அது நீக்கப்பட்டிருப்பதாக பதில் கூறப்பட்டது. ஏனெனில் 40 ப்ளஸ், 40 வரை என்றெல்லாம் வைப்பதால் தமிழ்மணப் பக்கம் திறக்க நேரமாகிறது என்று கூறப்பட்டது. இம்மாதிரி உயரெல்லையெல்லாம் காரியத்துக்காகாது என்று நான் கருத்து தெரிவித்தேன். மறுமொழியப்பட்ட பதிவுகள் இற்றைப்படுவது ஒரு ரெகுலரான செய்கையாக இல்லை என்றும், சில சமயம் எனது மறுமொழியப்பட்ட ஆக்கங்கள் சம்பந்தமேயின்றி சில நாட்களுக்கு பிறகு இற்றைப்படுவதை நானே கண்டதையும் கூறினேன். அதையும் கவனிப்பதாகக் கூறப்பட்டது”.

இன்னும் அதை கவனித்ததாகத் தெரியவில்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

9/15/2011

டோண்டு பதில்கள் - 15.09.2011

pt
டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
கேள்வி-1. ரேஷன் கார்டுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை

பதில்: நல்ல முயற்சிதான். ஆனால் முதலில் ரேஷன் கார்டுகளில் சரியான முகவரியை பதிப்பது பற்றி யோசிக்கட்டும். முகவரிச் சான்றாக பயன்பட வேண்டிய இந்த ஆவணம் ரேஷன் அதிகாரிகளின் அலட்சியத்தால் தொல்லையைத்தான் அதிகரிக்கிறது. எனது ரேஷன் கார்டில் ஏதோ ஒரு நாதாரி டேட்டா எண்ட்ரி ஆப்பரேட்டர் முகவரியை தவறாகக் குறிக்க, அதை செக் வேண்டிய நாதாரி அதிகாரி கண்ணை மூடிக் கொண்டு டிக் செய்ய, சரியான முகவரியை நான் பதிக்க படாதபாடு பட வேண்டியதாயிற்று.

தண்ணீர் வரி மதிப்பிடல் விஷயத்திலும் இதுவே நடந்தது பற்றி எழுதியுள்ளேன்.

கேள்வி-2. டில்லி ஐகோர்ட் வாசலில் பயங்கர குண்டு வெடிப்பு
பதில்: தேசத் துரோகி அஃப்சல் குருவை முன்னமேயே தூக்கில் போட்டிருந்தால் இந்த நிகழ்ச்சி நடந்திராது என்றுதான் கூற வேண்டும். அப்படித்தான் மக்ஃபூல் பட் என்னும் தீவிரவாதியை தூக்கு தண்டனைக் கைதியாக வெகு நாட்களுக்கு இழுக்கடித்து தூக்கில் போட்ட கூத்து பற்றியும் நான் எழுதியுள்ளது அப்படியே இருக்கிறது.

கேள்வி-3. திருச்சி இடைத்தேர்தலில் பா.ம.க., போட்டியில்லை: ராமதாஸ் தகவல்
பதில்: பாவம் என்னதான் செய்வார் அவர். எவ்வளவு நாளைக்குத்தான் அடி வாங்கியும் அழாமல் நடிப்பதாம்? அவ்வ்வ்வ்வ்வ்வ்.

கேள்வி-4. புற்றுநோய்க்கு மலச்சிக்கலும் காரணம்: டாக்டர்கள் தகவல்
பதில்: உண்மைதான், முக்கியமாக குடல் புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகரிக்கும் என கேள்விப்பட்டுள்ளேன். மருத்துவர் புரூனோ இது பற்றி சரியான தகவல் தர இயலும்.

கேள்வி-5. மார்ட்டின் வீட்டில் சி.பி.ஐ., "ரெய்டு”
பதில்: லாட்டரி அதிபர் லாட்டரி அடிக்கிறாரா?

கேள்வி-6. மத்திய அரசு நம்பகத் தன்மையை இழந்துவிட்டது: பாஜக
பதில்: எடியூரப்பா போன்றவர்களால் பாஜகாவும் நம்பகத் தன்மையை இழந்து விட்டது என்றுதான் கூற வேண்டும்.

கேள்வி-7. முதல்வரின் உழவர் பாதுகாப்புத் திட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு
பதில்: ஏட்டில் பார்க்க நன்றாகத்தான் உள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக ஒவ்வொரு முறையும் வைணவக் கோவில்களுக்கு நான் எனது கார்களில் தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் காரில் செல்லும்போதும் முதன் முறை பார்த்த வயல்களில் பிளாட்டுகளுக்கான குட்டிக் கற்கள் அதற்கு அடுத்த முறை படிப்படியாக குடியிருப்புகளாக மாறி வந்ததைப் பார்த்திருக்கிறேன். ஆக, விவசாயத் தொழில் மெதுவாக க்ஷீணிக்கிறது. யார் காரணம்?

கேள்வி-8. ஜன் லோக்பால் மசோதாவை எதிர்ப்பவர்களை எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்காதீர்: அண்ணா
பதில்: அடேங்கப்பா, ரொம்பத்தான் ஆசை அந்த மனிதருக்கு.

கேள்வி-9. திட்டத்தை மாற்றும் யாரும் இனி ஆட்சிக்கு வரமாட்டார்கள்: ஜெ.
பதில்: மாறுதல்கள்தான் மாறாமல் இருக்கின்றன என்பதை யாரேனும் அவருக்கு எடுத்துரைத்தால் சரிதான்.

கேள்வி-10. வழக்கு செலவிற்கு தலைமையை எதிர்பார்க்கக் கூடாது: கருணாநிதி
பதில்: அதான் பணம் கொள்ளையடித்தார்களே, அதிலிருந்து எடுத்து வழக்குகளை சந்திக்கட்டும் என அவர் நினைக்கிறாரோ என்னவோ.


ரமணா
கேள்வி-11. சட்டசபையில் அதிமுக முதல்வரின் பாய்ச்சல் தேமுதிக உறுப்பினர்மீது சரியா?
பதில்: தேமுதிக என்பது பிரதான எதிர்கட்சி. அதிமுகவுடன் கூட்டணி வைத்து இந்த நிலைக்கு வந்ததாலேயே அவர்கள் ஜெயலைதாவுக்கு ஜால்ரா அடிக்க அவர்கள் என்ன 1991-ல் எதிர்கட்சியாக வந்த காங்கிரசா என்ன? அந்த ஜால்ரா அடிக்காததால்தான் இந்தப் பாய்ச்சல்.

கேள்வி-12. சட்ட சபையில் ஜால்ரா சத்தம் அதிகமாவது நல்லதற்கா?
பதில்: இல்லை

கேள்வி-13. விஜயகாந்த் இப்படி இருந்தால் எப்படி அடுத்து ஆட்சியை பிடிப்பது?
பதில்: அவருக்கே அந்தக் கவலை இருப்பதாகத் தெரியவில்லையே.

கேள்வி-14. திமுகவின் சட்டசபை நடவடிக்கைகள் அவர்களது எதிர்காலத்தை பாதிக்காதா?
பதில்: கும்.

கேள்வி-15. தயாநிதி விசயத்தில் சிபிஐயின் நடவடிக்கை
பதில்: சொதப்பல், ஆனால் திட்டமிடப்பட்ட சொதப்பல்.

கேள்வி-16. சமச்சீர் கல்வி பாடங்கள் நன்றாக இருப்பதாய் மெட்ரிகுலேசனில் படிக்கும் பிள்ள‌‌களின் தாய்மார்கள் சொல்வது பற்றிய உண்மை என்ன?
பதில்: பிள்ளைகள் என்ன சொல்கிறார்கள் என்பதுதான் முக்கியம்.

கேள்வி-17. ஜான் பாண்டியன் முன்னாளில் அதிமுக ஆதரவாளராய்த் தானிருந்தார்?
பதில்: ஆமாம், ஆனால் அதுதான் அரசியல்.

கேள்வி-18. திமுக பெரும் புள்ளிகளின் கைது தொடர்கிறதே ஏதாவது உள் நோக்கம்?
பதில்: பெரும் புள்ளிகள் பெருங்கேடிகளாகவும் இருந்தால் என்ன செய்வதாம்.

கேள்வி-19. பரமக்குடி கலவரம் அதிமுகவின் உள்ளாட்சி தேர்தல் வெற்றியை பாதிக்குமா?
பதில்: அது அக்கலவரத்தை தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்தும் விதத்தைப் பொருத்து அமைவது.

கேள்வி-20. இறுதிச் சடங்கில் காந்திமதியை ஆத்தா ஆத்தா என வாய் நிறையக் கூப்பிட்டு வந்த கமல் மிஸ்ஸிங்?
பதில்: அப்படியா, வரவில்லையா? என்ன காரணமோ தெரியவில்லையே.

மேலும் கேள்விகள் வந்தால் அடுத்த வாரம் சந்திப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

9/14/2011

ஆடாம தோத்தோமடா

எனது கணினி குரு அனுப்பிய சில படங்கள் கீழே. அவை பலருக்கு வந்திருக்கும் மின்னஞ்சல்களாக, இங்கும் இருந்து விட்டு போகட்டுமே. கீதாசார்யன் (மற்றும் நான் ஏற்கனவேயே) சொன்ன மாதிரி, பலனை எதிர்பாராது அதை இங்கே இடும் கடமையை நிறைவேற்றுகிறேன்.


























சென்னை சூப்பர் கிங்ஸை ஜெயிக்க வைத்த நடிகர் விஜய் இங்கு மட்டும் உதவாமல் போனதேன்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

9/08/2011

டோண்டு பதில்கள் - 08.09.2011

pt
டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
கேள்வி-1. காங்கிரஸ் கட்சியின் வருமானம் "கிடுகிடு' உயர்வு : 2002ல் ரூ.62 கோடி; 2010ல் ரூ.496 கோடி

பதில்: எட்டு ஆண்டுக்ளில் விலைவாசிகளும் உயர்ந்திருக்கும் அல்லவா?

கேள்வி-2. "சென்னை சங்கமம்' நிகழ்ச்சிகளுக்கு அரசு பணம் ரூ.5 கோடி வீண்
பதில்: இப்போதாவது தமிழக மக்கள் திமுகவை தூக்கியெறிந்து அவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்தார்கள் என மகிழ்வோமாக.

கேள்வி-3. அப்சல் குருவுக்கு வக்காலத்து: ஒமருக்கு பா.ஜ., கண்டனம்
பதில்: வெறுமனே கண்டனம் செய்தால் போதாது, கடுமையாகவே கண்டனம் செய்ய வேண்டும்.

கேள்வி-4."மாஜி' பொன்முடி கம்பி எண்ணத் துவங்கினார் : அனிதாவுடன் கைதானவர் ஓட்டம்
பதில்: தப்பி ஓடியவரையும் பிடித்து கம்பி எண்ண வைப்பார்களா?

கேள்வி-5. பா.ஜ.,வில் ஐக்கியமாகிறார் ஆந்திரா ஜெகன் : காங்கிரசை காலி செய்ய "மாஸ்டர் பிளான்'
பதில்: எனக்கென்னவோ இதில் பாஜகாவும் காலியாகுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.

கேள்வி-6. DID YOU EVER WONDER WHY DIMES, QUARTERS AND HALF DOLLARS HAVE NOTCHES (MILLING), WHILE PENNIES AND NICKELS DO NOT?
பதில்: The US Mint began putting notches on the edges of coins containing gold and silver to discourage holders from shaving off small quantities of the precious metals. Dimes, quarters and half dollars are notched because they used to contain silver. Pennies and nickels aren't notched because the metals they contain are not valuable enough to shave.....

அதெல்லாம் இருக்கட்டும், முன்பெல்லாம் நம்மூர் ஒரணாக்கள், அரையணாக்கள், ஓட்டை காலணாக்கள், மேலும் மர்ற நாணயங்கள் அளவிலும் சரி வடிவிலும் சரி ஒன்றுக்கொன்று மாறுபட்டவையாக இருந்தன. ஆகவே ஒன்றுக்கு இன்னொன்றை குழப்பிக் கொள்வது என்ற பேச்சுக்கே இடமில்லை.

ஆனால் இப்போதோ 50 பைசா, ஒரு ரூபாய் மற்றும் ஐந்து ரூபாய் நாணயங்கள் குழப்பம் விளைவிக்கும் அளவுக்கு ஒன்று போலவே காட்சியளிக்கின்றன. மிண்ட் நாதாரிகள் என்ன மயிரையா பிடுங்குகிறார்கள்?

கேள்வி-7. WHY ARE MANY COIN BANKS SHAPED LIKE PIGS?
பதில்: They are actually shaped like pigs because they are called piggy banks. You see, In Middle English, "pygg" referred to a type of clay used for making household objects, such as jars. People often saved money in kitchen pots and jars made of pygg, called "pygg jars". By the 18th Century, the spelling of "pygg" had changed and the term "pygg jar" had evolved to "pig bank." This name caught on because the pig banks were mostly used by children, and a pig is a child-friendly shape that is easy to make out of clay. Once the meaning had transferred from the substance to the shape, piggy banks began to be made from other substances, including glass, plaster, and plastic.

கேள்வி-8.IN GOLF, WHERE DID THE TERM 'CADDIE' COME FROM?
பதில்: Back in the 16th century, Mary, Queen of Scotts ruled supreme. As such, she used to employ young nubile soldiers (cadets) as porters. God knows what else she employed them for, I could make some guesses but that's neither here nor there.

Anyhow, she must have been pretty cool because she liked to golf. Of course, while she was golfing she wasn't about to carry her own clubs so she used the young cadets to carry them for her. These cadets became known as her "caddies" and the word has stuck ever since.

கேள்வி-9.WHY IS SOMEONE WHO IS FEELING GREAT 'ON CLOUD NINE'?
பதில்: "The expression 'up on cloud nine' to describe a feeling of euphoric exaltation is based on actual terminology used by the U.S. Weather Bureau. Clouds are divided into classes and each class is divided into nine types. 'Cloud nine' is the cumulonimbus cloud that you often see building up in the sky in a hot summer afternoon. It may reach 30,000 to 40,000 feet, so if one is up on 'cloud nine,' one is high indeed. The popularity of 'cloud nine' as a catch phrase, though, may be credited to the 'Johnny Dollar' radio show of the 1950s. There was one recurring episode, like Fibber McGee's famous opening of the closet door. Every time the hero was knocked unconscious - which was often - he was transported to 'cloud nine.' There Johnny could start talking again." From "Morris Dictionary of Word and Phrase Origins" by William and Mary Morris (HarperCollins Publishers, New York, 1997).
See here.

கேள்வி-10.WHY ARE PEOPLE IN THE PUBLIC EYE SAID TO BE 'IN THE LIMELIGHT'?
பதில்: Limelight refers to a system of lighting invented in 1825 by a British army officer named Thomas Drummond. Drummond's
light was called "limelight" because it was produced by burning a cylinder of lime (calcium oxide) in an oxyhydrogen flame.
As the lime was oxidized by the flame, it produced an intense, brilliant light that could be directed into a beam by a glass lens.

Drummond's light was originally used to make distant survey stations more visible at night, but later it was also used in
lighthouses and for stage lighting. In the theatre it was used as a spotlight to direct the audience's attention to the most
important activities taking place on stage. Performers in this light were said to be "in the limelight," and when the expression
passed into general usage, it meant anyone at the centre of public attention. See here:

கேள்வி-11. WHY DO PEOPLE CLINK THEIR GLASSES BEFORE DRINKING A TOAST?
பதில்: ஆனந்த விகடனில் இது பற்றி ஒரு அட்டைப்பட ஜோக் வந்தது. எல்லோருக்கும் விஸ்கி/பீர்/வைன் சமமான அளவுல இருக்கான்னு பாத்துக்கறாங்க போலிருக்கு.

கேள்வி-12. WHY IS SHIFTING RESPONSIBILITY TO SOMEONE ELSE CALLED 'PASSING THE BUCK'?
பதில்: In card games, it was once customary to pass an item, called a buck, from player to player to indicate whose turn it was to deal. If a player didn't wish to assume the responsibility, he would 'pass the buck' to the next player.

அமெரிக்க குடியரசு தலைவரின் மேஜை மேல் “The buck stops here" என்னும் வாசகம் இருப்பதாக நான் படித்திருக்கிறேன்.

கேள்வி-13.WHY DO X'S AT THE END OF A LETTER SIGNIFY KISSES?
பதில்: This tradition started with the Medieval practice of allowing those who could not write to sign documents with an "X". This was done before witnesses, and the signer placed a kiss upon the "X" to show sincerity. This is how the kiss came to be synonymous with the letter "X", and how the "X" came to be commonly used at the end of letters as kiss symbols. இங்கு பார்க்கவும்.

கேள்வி-14. WHY ARE ZERO SCORES IN TENNIS CALLED 'LOVE'?
பதில்: வாத்தியார் மாணவர்களுக்கு பரீட்சை பேப்பரில் தரும் முட்டையிலிருந்து வந்தது இது. முட்டைக்கு ஃபிரெஞ்சில் l'oeuf என்பார்கள்.

கேள்வி-15. WHY DO MEN'S CLOTHES HAVE BUTTONS ON THE RIGHT WHILE WOMEN'S CLOTHES HAVE BUTTONS ON THE LEFT?
பதில்: சிரமம் பார்க்காது இங்கு போய் படித்து விடுங்களேன்.


ரமணா
கேள்வி-16. தயாநிதி அப்பழுக்கற்றவர் என சிபிஐ சொல்லிவிட்டது பற்றி?
பதில்: சிபிஐக்கு என்ன நிர்ப்பந்தமோ.

கேள்வி-17. தூக்குத் தண்டனை விசயத்தில் முதல்வரின் திடீர் மன மாற்றம்?
பதில்: இந்த விசயத்தில் எல்லோருமே தத்தம் இமேஜுக்காகத்தான் பார்க்கிறார்கள் என நினைக்கிறேன்.

கேள்வி-18. கலைஞரின் பாராட்டு முதல்வருக்கு நல்ல மாற்ற‌மில்லையா?
பதில்: ஒரு சமயம் டோண்டு ராகவன் யாருக்காவது நன்றி சொன்னால் சம்பந்தப்பட்டவர்கள் போலி டோண்டுவின் திட்டுகளுக்கு பயந்து அலறுவார்கள். அது போல இங்கு இருந்து தொலைக்கப் போகிறது!!!

கேள்வி-19. அழகிரி விசயத்தில் அடுத்து என்ன நடக்கும்?
பதில்: கைதுகள் எல்லாம் சரிதான். சட்டுபுட்டென்று வழக்குகளையும் முடிக்க வேண்டாமா. அதெல்லாம் நடந்தால் அழகிரி ஜெயிலுக்குள் நடக்கும் வாய்ப்பு உண்டு.

கேள்வி-20. ஆந்திராவில் பாஜகவின் தாமரை பெரிய அளவில் மலரும் போலுள்ள‌தே?
பதில்: கர்நாடகாவில் உள்ள எடியூரப்பா ஆட்சி அமைத்ததுபோல இல்லாமல் இருந்தால் சரிதான்.

கேள்வி-21. அமெரிக்காவின் முதல் பொருளாதார வீழ்ச்சி சமயம் இந்தியா தப்பித்தது இந்த அடர் கருப்பு பணத்தால்தான் என்பது பற்றி?
பதில்: ரூபாய் டாலர் மாற்றங்களை முழுமையாக அனுமதிக்காததாலும், வங்கிகளை முழுக்க முழுக்க தனியார்மயமாக்காததாலும், மற்ற சில காரணங்களாலும்தான் இந்தியா தப்பித்தது என நான் படித்துள்ளேன்.

கேள்வி-22. அஜித்தின் மங்காத்தாவின் வசூல் எந்திரனை மிஞ்சி விட்டதாமே?
பதில்: கேபிள் சங்கர் போன்றவர்களுக்கு போக வேண்டிய கேள்வி இது.

கேள்வி-23. சன் டீவி இல்லா அரசு டீவி ?
பதில்: சபாஷ் சரியான போட்டி.

கேள்வி-24. லேப்டாப்,மிக்ஸி,கிரண்டர்,ஃபேன் விலை குறையுமா தமிழகத்தில்?
பதில்: அரசு கொடுக்கும் இலவச பொருட்களை விற்பவர்களுக்கு குறைந்த விலைதான் கிடைக்கும். அதி குறிப்பிடுகிறீர்களா?

கேள்வி-25. சுப்பிரமணிய சாமியின் தொடர் மெளனம் தயாநிதி விசயத்தில் ?
பதில்: அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை அவரே இன்னும் முடிவு செய்யவில்லை என நினைக்கிறேன்.


BalHanuman
கேள்வி-26. தமிழகத்தின் புதிய கவர்னர் ரோசய்யா பற்றி?
பதில்: ஆந்திராவின் நெடுஞ்செழியன்.

கேள்வி-27. தி.மு.க. சமச்சீர் கல்வி வெற்றிவிழா கொண்டாடுவதில் ஏதாவது அர்த்தம் உள்ளதா?
பதில்: சமச்சீர் கல்வி அதிமுக திமுக இரண்டுக்குமே சருக்கல்தான்.


மீண்டும் கேள்விகள் வந்தால் அடுத்த வாரம் சந்திப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

9/04/2011

கருப்புப் பணமும் அடர் கருப்புப் பணமும்

சரவணா ஸ்டோர்ஸ் வருமானவரி ரெய்டில் பல கோடி ரூபாய்கள் கணக்கில் வராத பணம் சிக்கியது என்பது குறித்து ஒருவர் பேசியது எனது சிந்தனையைத் தூண்டியது.

அவரைப் பொருத்தவரை அவர் தெளிவாகவே இருந்தார். சரவணா ஸ்டோர்ஸ் தான் சம்பாதித்த பணத்துக்கு முழுமையாக வரி கட்டவில்லை, அதில் மிஞ்சிய பணம்தான் இது. கருப்புப் பணம்தான். ஆனால் உழைத்து சம்பாதித்தது அது.

ஆனால் அதே சமயம் ராசா, கனிமொழி ஆகியோர் ஈட்டியவை உழைத்து சம்பாதித்ததல்ல. ஆகவே அங்கு ரெய்ட் செய்து சிக்கக் கூடிய பணமும் கருப்புப் பணமே, ஆனால் அது அடர் கருப்புப் பணம் என்றார்.

அவர் மேலும் விளக்கினார். சரவணா ஸ்டோர்ஸ் விஷயத்தில் உண்மையிலேயே உழைத்து சம்பாதித்த பணம் என நிரூபித்து விட்டு, அபராதப் பணம் கட்டி விட்டு மிகுதி பணத்தை அவர்கள் வைத்துக் கொள்ளலாம். ஆனால் மேலே சொன்ன இன்னொரு கேசில் அவர்களது முழு கருப்புப் பணமும் கையகப்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் நியாயம்.

சம்பாதித்த பணம் முழுக்க கணக்கில் காட்டாமல் இருக்க வைக்கும் காரணங்களில் அரசு கொள்கைகளும் உண்டு. 1970-களில் ஒருவர் வருட வருமானம் 10 லட்சம் என இருந்தால் வரிகளுக்கு பிறகு அவருக்கு மிஞ்சுவது 35 ஆயிரம் மட்டுமே. அத்தருணத்தில் என்ன நடக்கும்? சிலர் அப்படியானும் சம்பாதிக்க வேண்டுமா எனக்கருதி வாளாவிருந்து விடுவர். மற்றும் சிலர் வரி ஏய்ப்பில் ஈடுபடுவர். அதற்காக வருமான வரி அதிகாரிகள் பெறும் வாய்க்கரிசி வேறு கருப்புப் பண புழக்கத்தில் சேரும். அதாவது கருப்புப் பணமும் அடர் கருப்புப் பணமும் உருவாகும். அதனால்தான் வரிவிகிதத்தையே குறைத்தனர்.

இன்னொரு வேடிக்கை தெரியுமா? லஞ்சப் பணம் என்றாலும் அதற்கும் வரி கட்ட வேண்டும் என்பது விதி. ஆனால் வரியை கட்டிவிட்டு தப்பிக்க முடியாது. சிறை தண்டனை வேறு உண்டு. இந்த நிலையில் அம்மாதிரி வரிகள் கிடைக்கும் என நினைக்கிறீர்கள்?

இதெல்லாம் தெரிந்துதான் அரசு அவ்வப்போது தன்னிச்சையாக வருவாயை தெரியப்படுத்தும் ஸ்கீம்களை (VDIS) கொண்டு வருகின்றனர். குறிப்பிட்ட காலத்துக்கு வருமானத்தின் மூலத்தைக் கூறாமல் 30% வரி கட்டினால் மன்னிப்பு அளிக்கப்படும். இம்மாதிரி கடைசியாக அறிவிக்கப்பட்டது 1997-ஆம் ஆண்டில்.

அடுத்த VDIS எப்போது வரும் என பலர் யோசித்து வருவதாகக் கேள்வி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

9/03/2011

அன்னா ஹசாரே பற்றி எனது தற்போதைய எண்ணங்கள்

எனது இப்பதிவில் நான் இவாறு எழுதியிருந்தேன். “இது பற்றி பலரும் எழுதி வைத்து விட்டார்கள். நான் முக்கியமாக படிப்பது சோ மற்றும் ஜெயமோகனையும்தான். இருவரது நிலைப்பாடுகளுமே ஒன்றுக்கொன்று முரணாக உள்ளன. இருவரது எண்ணங்களுமே அவற்றைப் படிக்கும்போது ஏற்றுக் கொள்ளத் தக்கதாகவே உள்ளன. மேலும் இன்புட்டுகளை பெற்றுதான் நான் கருத்து கூற வேண்டும். இப்போது நிலைமையை அவதானித்து வருகிறேன். பார்ப்போம்”.

அதற்கான சிமுலேஷனின் பின்னூட்டம் இவ்வாறு இருந்தது. “சோ அவர்களை நீங்கள் வெகு, வெகு உயர்ந்த பீடத்தில் வைத்திருப்பதால், இன்னமும் ஹன்னா ஹசாரே குறித்த அவரது கருத்தினைக் குறித்து உங்களுக்கு குழப்பம் இருக்கின்றது போலும். இப்படிப்பட்ட நிலையில் இருந்தால், நீங்கள் அவதானித்துக் கொண்டேதான் இருக்க வேண்டும். "சோ ஒன்றும் புனித பிம்பம் அல்ல, அவருக்கும் சறுக்கல்கள் ஏற்ப்டும். அவரும் ஒரு மனிதர்தானே. அதனால் சில, பல விஷயங்களில் உளறிக் கொட்டுவார்" என்று எண்ணத் தொடங்குங்கள். உங்களுக்குத் தெளிவு கிடைக்கும். அது சரி. சோவுடன் ஏதாவது ஒரு விஷயத்திலாவது முரண்படுகின்றீர்களா”?

அப்போது எனது பதில், “அப்படியெல்லாம் இல்லை. சோ அவர்களை நான் பல ஆண்டுகளாகவே அவதானித்து வருகிறேன். எண்பதுகளின் துவக்கத்தில் எல்லோருமே புலிகளை ஆதரித்தபோது அவர் மட்டும் எதிர் கருத்துக்களை கூறினார். ஆனால் அவர்தான் சரியாகக் கூறினார் என்பதை நான் பின்னால்தான் உணர்ந்தேன். அதே போலத்தான் வி.பி.சிங் விவகாரமும்.

எந்த ஒரு போராட்டமும் அதற்கான எதிர்ப்பையும் மீறித்தான் வர வேண்டும். அந்த வகையில் அன்னாவுக்கான எதிர்ப்புகளையும் நான் பார்க்கிறேன்.

ஏதாவது ஆரம்பியுங்கள் என ஜெயமோகன் கூறுவதும் ஏற்றுக் கொள்ளத் தக்கதே. சோ, ஜெயமோகன் இருவருமே என் மனதில் உயர் நிலையிலேயே வைக்கப்பட்டுள்ளனர்.

எனது அவதானம் நில்லாமல் நடக்கும்”.


இப்போது எனது அவதானத்தை மேலும் தொடர்கிறேன்.

நானும் சரி, சோவும் சரி அன்னாவை ஒரு விஷயத்தில் அதிகமாக சந்தேகிக்கிறோம். மற்ற விஷயங்கள் பற்றி பிறகு. அந்த ஒரு விஷயம் இதுதான். சோவின் வார்த்தைகளில், “இப்படியாகத்தானே, இந்த சேனல்கள் கொடுத்த ‘கீ’ நன்றாகவே வேலை செய்திருக்கிறது. அன்னா ஹஸாரேவே இதில் மயங்கிப் போய், தன்னுடைய இயக்கத்தை, ‘இது இரண்டாவது சுதந்திரப் போர்’ என்று வர்ணித்துக் கொண்டு விட்டார். மற்றவர்கள் ஜெயப்ரகாஷ் நாராயண் இயக்கத்தை மறந்து இருக்கலாம். இவர் மறக்கலாமா? ஊழலுக்கு எதிராக, ஜெ.பி. நடத்திய இயக்கத்திற்குக் கிட்டிய ஆதரவைக் கண்டு, அன்று பிரமித்தது – இன்றைய பிரதமரைப் போன்ற பலவீனமான ஆட்சியாளர் அல்ல – பலம் மிக்கவராகத் திகழ்ந்த இந்திரா காந்தி! மற்ற கட்சிகளை நம்பி நடத்தப்பட்டது அல்ல அவருடைய அரசு. அசுர பலம் பெற்றிருந்த அவரே திகைத்துப் போய், அரசுக்கு ஆபத்து என்று பயந்து, (ஒரு நீதிமன்ற உத்திரவும் சேர) எமர்ஜென்ஸியைக் கொண்டு வந்தார். பல தலைவர்கள், பத்தொன்பது மாதம் தனிமைச் சிறையில் இருந்தனர். ஜெ.பி. யின் அந்தப் போராட்டம் ‘இரண்டாவது சுதந்திரப் போர்’ என்று பின்னர் பாராட்டப்பட்டது. ஆனால், அன்னா ஹஸாரே அதை அமுக்கி விட்டு, தன் இயக்கத்திற்கு ‘இரண்டாவது சுதந்திரப் போர்’ என்று, தானே பட்டம் சூட்டுகிறார்!

சரி, மக்கள்? அன்னா ஹஸாரேவிடம் மன உறுதி இருந்தால், அவருடைய இயக்கத்தை நம்பலாம். ஆனால், தன்னுடைய உறுதியின்மையை, அவரே பிரகடனப்படுத்திக் கொண்டதை எப்படி மறப்பது?

குஜராத் அரசைப் பாராட்டி விட்டு – தன்னுடைய மதச்சார்பின்மை சகாக்கள் முணுமுணுத்த உடனே பயந்துபோய், ‘நான் அங்குள்ள முன்னேற்றத்தைத்தான் பாராட்டினேன். வேறு ஒன்றுமில்லை...’ என்று மழுப்பி – அப்போதும் மதச்சார்பின்மை கூட்டத்தின் முனகல்கள் ஓயாததால், ‘குஜராத்தில் மகா ஊழல். எதற்கெடுத்தாலும் லஞ்சம். எனக்கு இப்போதுதான், இங்கு வந்த பிறகுதான் இது தெரிந்தது’ என்று ஒரு குட்டிக்கரணம் அடித்து, கன்னத்தில் போட்டு கொண்டார் இவர்.

ஒன்று – காங்கிரஸ்காரர்கள் மாதிரி ‘குஜராத்தில் எல்லாமே அநீதி’ என்று கூறுகிற பிடிவாதமாவது இருக்க வேண்டும். அல்லது ‘இந்தியாவிற்கே முன் மாதிரி குஜராத்’ என்று கூறுகிற நேர்மைத் துணிவாவது வேண்டும். அதுவுமில்லாமல், இதுவுமில்லாமல், அப்படி ஒருநாள், இப்படி ஒருநாள் என்று பேசி, தன் ஆதரவைத் தக்க வைத்துக் கொள்ள முனைகிற இவரிடம், எப்படி மன உறுதியை எதிர்பார்ப்பது?


டோண்டு கூறுவது. சோவின் வார்த்தைகளில் ரூபாய்க்கு பதினாறணா நிஜம் உள்ளது.

ஜெயமோகனையே எடுத்துக் கொள்ளுங்கள். ஊழலற்ற அரசுகளை பற்றி ஒரே ஒரு வரி எழுதிவிட்டு அன்னா ஹசாரேயின் போராட்டத்தின் குணநலன்களை பற்றி எழுதுகிறார். ஊழலற்ற அரசு சம்பந்தமாக வெறுமனே நிதிஷ் குமார், நரேந்திர மோதி என ஒரே ஒரு வரி கூறிவிட்டு அப்பால் செல்கிறார்.

லோக்பால் ஏதுமில்லாமல் நரேந்திர மோதி அவர்கள் பத்தாண்டுகளுக்கும் மேலாக ஊழலற்ற அரசை தந்து வருவதை கண்டுகொண்டு, அவரது செயல்பாடுகளை ஆராய வேண்டாமா? எனது இப்பதிவில் நான் இவ்வாறு எழுதியிருந்தேன், “மஹாராஷ்டிரம் மற்றும் குஜராத் வழியில் செல்லும் நெடுஞ்சாலையில் குஜராத் பக்கத்தில் ஒரு எல்லை செக்போஸ்ட் உண்டு, மஹாராஷ்ட்ரா பக்கத்தில் ஒரு செக்போஸ்ட் உண்டு. இரண்டிலும் ஒரே அளவு வண்டிகள் போக்குவரத்துதான். குஜராத் தரப்பினர் சட்ட பூர்வமாக கலெக்ட் செய்வது மஹாராஷ்ட்ரா தரப்பில் உள்ளதை விட 239 கோடியே 60 லட்சம் ரூபாய் அதிகம்...” எவ்வளவு செக்போஸ்டுகள், எத்தனை பணம் அவற்றில் இன்வால்வ் ஆகின்றன முதலிய விஷயங்களை கவனித்தாலே மோதி அரசு செய்வது எத்தனை அரிதான விஷயம் என்பது புரியுமே. அவற்றையெல்லாம் முதலில் பாராட்டி விட்டு பிறகு செக்யூலர் ஜாட்டான்களின் கூச்சலுக்கு பயந்து அன்னா பின்வாங்கி முன்னுக்கு பின் முரணாக பேசும்போதே அன்னா என் பார்வையில் மிகவும் தாழ்ந்து விட்டார்.

இருப்பினும் அவரை நான் முழுமையாகவே பூட்ட கேஸ் என ஒதுக்காததன் காரணமே ஜெயமோகனின் எழுத்துகள்தான். அவர் என்ன கூறுகிறார் என்பதன் சாரமாக நான் இதைப் பார்க்கிறேன். அதாகப்பட்டது ஊழல் எதிர்ப்புக்கான நடவடிக்கைகளில் எங்காவது ஆரம்பிக்க வேண்டும், அதற்கான முதற்படிதான் லோக்பால் என்கிறார். சோ என்ன கூறுகிறார் என்றால், இம்மாதிரி புதுப்புது அமைப்புகளாக உருவாக்கிக் கொண்டே போனால் முடிவே இருக்காது என்பதுதான். இருவரும் அவரவர் நிலையில் ஒத்துக் கொள்ள வேண்டியவர்களாகத்தான் நான் பார்க்கிறேன்.

நான் முதலில் கூறியதுதான், அதாவது மாற்றங்கள் வரட்டும் அதே சமயம் அதற்கான எதிர்ப்புகளும் வரும், அவற்றையெல்லாம் சமாளித்து நிலையாக நிற்பவையே உண்மையான மாற்றங்கள் என்பதே அது.

மேலும் விஷயங்கள் தோன்றினால் இன்னொரு பதிவு போட்டு படுத்துவேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்


9/01/2011

டோண்டு பதில்கள் - 01.09.2011

pt
டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
கேள்வி-1. கருணாநிதிக்கு சட்டம் தெரியாது: பேரவையில் ஜெயலலிதா

பதில்: அப்படி பார்த்தால் சட்டம் முழுமையாக யாருக்குமே தெரிந்திருக்கும் என்று கூறக்கூட முடியாது. சட்டம் தெரிந்த வக்கீல்களுடன் ஆலோசித்து அப்போதைக்கு தங்கள் கேசுக்கு தேவையான சட்டத்தை அறிந்து கொள்வதிலேயே தாவு தீர்ந்து விடுகிறது.

ஜெயலலிதா கருணாநிதி பற்றி சொல்வது அவருக்கும் (ஜெயலலிதாவுக்கும்) பொருந்தும் என்றுதான் கூற வேண்டும்.

கேள்வி-2. மு.க. அழகிரி மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்: பண்ருட்டி ராமச்சந்திரன் கோரிக்கை
பதில்: அவர் சொல்வது நியாயமாகத்தான் உள்ளது. அழகிரி அவ்வாறு செய்வதால் சாட்சிகள் அச்சப்படலாம் என்பதும் உண்மையே. ஆனால் கட்சித் தலைவர் என்னும் முறையில் அவர் கைதியை பார்ப்பது சட்டப்படி தவறா என்று தெரியவில்லை.

கேள்வி-3. தில்லியில் நடிகர் விஜய் இன்று உண்ணாவிரதம்
பதில்: இருக்கட்டுமே, உடம்பு ஸ்லிம் ஆக இருப்பது நல்லதுதானே!

கேள்வி-4. அரசை விமர்சிக்க 6 மாத காலம் தேவை: விஜயகாந்த்
பதில்: பொறுப்பான பதில். இன்னும் மூன்று மாதம் கழித்து அவர் என்னதான் சொல்கிறார் என்பதைப் பார்ப்போமே.

கேள்வி-5. சிறை நிரப்பும் போராட்டம்: ஹசாரே அழைப்பு
பதில்: அவரது இந்த அழைப்பு சின்சியராக இருப்பதாகத்தான் எனக்கு தோன்றுகிறது.

கேள்வி-6. தூக்கு தண்டனையை நிறுத்த அதிகாரம் இல்லை: முதல்வர் விளக்கம்
பதில்: அது எனக்கு சரியாகத்தானே படுகிறது.

கேள்வி-7. இந்தியரின் உடல் உறுப்புகளை வெளிநாட்டினர் பெறத் தடை: விரைவில் அமலுக்கு வருகிறது திருத்தச் சட்டம்
பதில்: என்.ஆர்.ஐகளுக்கும் இது பொருந்துமா?

கேள்வி-8. தூக்கு தண்டனயை ரத்து செய்து திருந்தி வாழ அனுமதிக்க வேண்டும்: கருணாநிதி
பதில்: தான் ஆளும்கட்சியாக இருக்கும்போது ஒன்றைக் கூறுவதும், எதிர்க்கட்சியானதும் அதற்கு முற்றிலும் மாறானதைக் கூறுவதும் அரசியல்வாதிகளிடையே - முக்கியமாக கருணாநிதி & ஜெயலலிதாவுக்கு - சகஜமே.

கேள்வி-9. சாயத்தொழில் முடக்கத்தால் ஆயத்த ஆடை ஏற்றுமதி பாதிப்பு
பதில்: அவரவர் கவலை அவரவருக்கு.

கேள்வி-10. சென்னை அருகே உலகத் தரத்தில் புதிய நகரம்
பதில்: சோமாலியா தரத்தில் வைத்துவிட்டு அதுதான் உலகத் தரம் என சாதிக்காமல் இருந்தால் சரி.

ரமணா
கேள்வி-11. அதிமுக அரசின் 100 நாள் ஆட்சி பற்றி?
பதில்: கருணாநிதி அரசின் கோமாளித்தனமான ஆர்டரை சரி செய்தது முக்கிய சாதனை. திமுகவினரின் நில அபகரிப்புக்கு எதிரான வழக்குகளும் சாதனையே என அஞ்சாநெஞ்சன் என அழைக்கப்படும் அழகிரியே ஒத்துக் கொண்டுள்ளார்.

கேள்வி-12. இந்தியப் பிரதமரின் நிகழ் கால நிலை?
பதில்: வயல்களில் வைக்கப்படும் சோளக்கொல்லை பொம்மைகளை பார்த்தால் அவர் நினைவுதான் வருகிறது.

கேள்வி-13. அழகிரி ஸ்டாலின் யார் முந்துகிறார்கள்?
பதில்: இப்போதைக்கு ஸ்டாலின் கைதான் ஓங்கியுள்ளது என நினைக்கிறேன்.

கேள்வி-14. 2 ஜி வழக்கு எந்தத் திசையில்?
பதில்: அடுத்த திசைதிருப்பல் வராதவரை நல்ல திசையில்தான் செல்கிறது

கேள்வி-15. குஜராத் முதல்வர் மோடி பாரத பிரதமரானால்?
பதில்:இப்போதைக்கு அந்த சாத்தியக்கூறு தென்படாவிட்டாலும் அப்படி நடந்தால் நன்றாகத்தான் இருக்கும்.

கேள்வி-16. அஜித் நடிக்கும் மங்காத்தா சன் டீவியின் கைக்கு மாறியதன் மர்மம் என்ன‌ என்ன?
பதில்: இம்மாதிரியான கேள்விகளுக்கு பதிலளிக்க கேபிள் சங்கர் போன்ற விஷயமறிந்தவர்களால்தான் இயலும். இது பற்றி அவர் எழுதிய இப்பதிவைப் பார்க்கவும், அதற்கு மேல் நான் என்ன கூறிவிடப் போகிறேன்?

கேள்வி-17. தமிழக முதல்வரின் அதீத சலுகைகள் (இலவச புத்தகம், இலவச சீருடை, இலவச மடிக்கணினி, இலவச பை, இலவச உபகரண‌ங்கள், இலவச பஸ் பாஸ், சுத்தமான சூழல், ஆண்டுத்தேர்வு இல்லா நிலை உயர்த்தப்பட்ட கல்வி உதவித் தொகை மாணவர்களுக்கு‍: என்ன காரணம்?
பதில்: இந்தக் கிண்டல்தானே வாணாங்கறது. உங்களுக்கு நிஜமாவே தெரியாதா? அது சரி, எல்லோருமே மோதி மாதிரி அவரது ஊழலற்ற ஆட்சி அவருக்குக் கொடுக்கும் தன்னம்பிக்கையில் இருப்பார்களா என்ன?

கேள்வி-18. சட்ட சபையில் பன்ருட்டியாரின் ஜால்ரா கொஞ்சம் ஓவராயில்லை?
பதில்: யாருக்கு ஜால்ரான்னு தெரியல்லியே? விஜயகாந்துக்குன்னா புரிந்து கொள்ள முடியும். ஜெயலலிதாவுக்குன்னா விஜயகாந்த்துதான் புரிஞ்சுக்கோணும்.

கேள்வி-19. கலைஞரின் சோர்வுற்றிருக்கும் முகம் மலரும் வகையில் மீண்டும் திமுக ஆட்சிக்கு வருமா?
பதில்: அது ஜெயலலிதாவின் சொதப்பல்களை பொருத்துள்ளது.

கேள்வி-20. முன்னாள் தமிழர் தலைவர் கருணாநிதியின் குடும்பத்தினரின் சினிமா தயாரிப்பு இப்போது?
பதில்: 16-ஆம் கேள்விக்கான பதிலில் உள்ள இணைப்பை பாருங்கள்.

மீண்டும் கேள்விகள் வந்தால் அடுத்த வாரம் சந்திப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது