11/21/2011

டோண்டு பதில்கள் - 21.11.2011 முன்கூட்டியே, (ஆனால் இதுதான் கடைசி பதில்கள் பதிவு, ஆளை விடுங்கள்)

pt
டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
1.உயரமான தொலைக்காட்சி கோபுரம்: ஜப்பான் கின்னஸ் சாதனை
2.டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு
3.லோக்பால் வரம்புக்குள் சிபிஐ: ஹசாரே குழு
4.கூடங்குளம்: பேச்சு தோல்வி
5.அமெரிக்க நிறுவனங்களின் அச்சம் நீக்கப்படும்: மன்மோகன்
6.1996 உலகக் கோப்பையில் சூதாட்டம்?
7.மருந்துகளின் விலையை மிக அதிகமாக உயர்த்தக்கூடாது: உச்ச நீதிமன்றம்
8.சிம்பு பற்றி தவறான வதந்திகள் பரப்புகிறார்கள்: டி.ராஜேந்தர்
9.விலை உயர்வைக் குறைக்க மனம் இருந்தால் மார்க்கம் உண்டு: கருணாநிதி
10.தமிழக காங்கிரஸை பலப்படுத்துங்கள்: ஞானதேசிகனுக்கு சோனியா காந்தி உத்தரவு
ரமணா
1.தமிழக்த்தில் பஸ்,பால் கட்டணங்கள் அதீத உயர்வு?
2.அத்வானியின் ரத யாத்திரை வெற்றியா?
3.ராகுல் மாயா பைட் எப்படி?
4.காங் மம்தா ஊடல் பற்றி?
5.ஞானதேசிகன் காங்கிரசை கரை சேர்ப்பார?
6.விஜயகாந்த் போராட்டம் ஜெவை எதிர்த்து?
7.அதிமுகவின் மக்கள் செல்வாக்கு இனி?
8.சுக்கிராமுக்கு ஜெயில்?
9.சச்சின் அதிரடி 100/100 பற்றி?
10.பாமக வின் எதிர்காலம்?

ஏம்பா பிடி மற்றும் ரமணா, நீங்கள் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? டோண்டு ராகவன் என்ன காதில் பூ வைத்துக் கொண்டிருக்கிறானா? அவனுக்கு வேறு உருப்படியான வேலைகளும் உண்டு என்பதை புரிந்து கொள்ளுங்கள். அவற்றை செய்கிறானோ இல்லையோ உங்க்ளது கேனத்தனமான கேள்விகள் அவனுக்கு தேவையில்லை. கேள்விகளே தேவை இல்லை என ஒரு ஸ்டெப் முன்சென்று கூறி விடுகிறேன்.

பல முறை பலர் குறிப்பிட்டு விட்டார்கள், அவர்கள் இருவரும் ஒரே நபர், அதுதான் டோண்டு ராகவன் என. அது நிச்சயமாக டோண்டு ராகவன் இல்லை ஆனால் இருவரும் ஒரே நபர்தான் என மட்டும் நினைக்கிறேன். கேள்விகளையாவது புத்திசாலித்தனமாக கேட்கிறீர்களா? இணையத்தில் ஏதாவது செய்தி பக்கத்திற்கு போய் காப்பி பேஸ்ட் செய்து கேள்விகள் அனுப்புகிறீர்கள். சரி, பதில்கள் போட்டால், எதுவுமே நடக்காதது மாதிரி மேலும் கேள்விகள். நானும் ஏதோ பொழுது போகின்றதே என பதிலளிக்கிறேன். ஆனால் எனது பொறுமை இவ்வளவுதான், இதற்கு மேல் இல்லை. எது எப்படியாயினும் பதில்களை மூட்டை கட்டுகிறேன். போட்ட பதிவுகள்? அவை இருக்கட்டும், கேனத்தனமாக இருக்கின்றன கேள்விகள் என்றாலும்.

ரமணாவுக்கு வலைப்பூ இல்லை அதே சமயம், பிடிக்கு ப்ரொஃபைலே இல்லை.

மேலும் கேள்விகள் வந்தால் அவை மட்டுறுத்தலில் தடை செய்யப்படும். எல்லா விஷயங்களும் முடிவுக்கு வரவேண்டியதுதான்.

கொலை வெறியுடன்,
டோண்டு ராகவன்

11/17/2011

டோண்டு பதில்கள் - 17.11.2011

BalHanuman
கேள்வி-1. உங்களை நீங்களே பாராட்டிக் கொள்வதாக இருந்தால் எதற்காகப் பாராட்டிக் கொள்வீர்கள்?
பதில்: ரொம்ப சங்கடமான கேள்வி. அதே போன்ற இன்னொரு, ஆனால் இதனுடன் சம்பந்தமான கேள்வி, “நீங்கள் கற்றவற்றைப் பட்டியலிடுங்கள்” என்பதே. இக்கேள்விக்கு விடையாக பட்டியலிடும்போது பெரிய பட்டியலாக வந்து விட்டால் அதை வைத்துக் கொண்டு என்னைத்தானே பாராட்டிக் கொள்ள இயலுமா என பார்க்க2 வேண்டும்.

ஆனால் அந்தோ அவ்வாறு பட்டியலிடும்போது ரொம்பவும் தேற மாட்டேங்கறதே. இதைத்தான் கற்றது கைம்மண்ணளவுன்னு ஔவை பாட்டி சொன்னாருன்னு நினைக்கிறேன்.

ஆகவே ஆளை விடுங்கள், இந்த ஆட்டத்துக்கு நான் வரவில்லை.

கேள்வி-2. குடும்ப அதிகார மையப் போட்டியில் கனிமொழி வீழ்ந்துவிட்டால்...?
பதில்: ஒருவர் வீழ்ந்தால் வேறு இன்னொருவர் ஜெயிப்பார்தானே, அவரும் தன் குடும்பத்தைச் சேர்ந்தவர்தானேன்னு விட்டுவிட வேண்டியதுதான், அவ்வ்வ்வ்.

கேள்வி-3. கட்சிக்காகவும் உறவுகளுக்காகவும் தான் நான் எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு ஜெயிலில் இருந்து வருகிறேன் என்று கனிமொழி கூறியிருக்கிறாரே?
பதில்: பேரம் இன்னும் முடியவில்லை என நினைக்கிறேன்.


pt
டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
கேள்வி-4. கனிமொழி ஜாமீன் விவகாரம்: நீதி தாமதப்படுகிறது - கருணாநிதி வேதனை
பதில்: ஆம், நீதி தாமதபடுகிறதுதான். சட்டுபுட்டென கேசை முடித்தோமா, கனிமொழியை உள்ளே தள்ளினோமா சில ஆண்டுகளுக்கு, என இருக்க வேண்டாமா?

கேள்வி-5. 90 கிமீ வேகத்துக்கு மேல் போகக்கூடாது ஆம்னி பஸ்களுக்கு ஐகோர்ட் தடை
பதில்: ஆம்னி பஸ் டிரைவர்கள் மேல் அவரவர் முதலாளிகளால் தரப்படும் நிர்ப்பந்தம் பற்றியும் யோசிக்க வேண்டும். ரெஸ்ட் தராது, ஒரு ஆளையே வரிசையாக ட்ரிப்புகளுக்கு பயன்படுத்துவது வேறு இருக்கிறது. வேகமாகச் செல்ல வேண்டியது அவருக்கான கட்டாயம்.

கேள்வி-6. இந்தியா & பாகிஸ்தான் உறவில் புதிய அத்தியாயம் ஏற்படும்
பதில்: பிளாஸ் பேக் போல பின்னால் செல்லும் விஷயம் ஏதும் இருக்காது என நம்புவோமா.

கேள்வி-7. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், சீன ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்ட பிரச்னை: மோடி கவலை!
பதில்: தேசபக்தியுடைய யாருமே பட வேண்டிய கவலைதானே. ஆகவே மோடியும் படுகிறார்.

கேள்வி-8. ஆர்க்டிக் பனிப்பாறைகள் 4 ஆண்டில் உருகும் : ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை
பதில்: பங்களா தேஷ், போன்ற பல நாடுகள் கடலில் மூழ்கும் அபாயம் உண்டு.


ரமணா
9. கிங்பிஸருக்கு அரசு பண உதவி சரியா?
பதில்: கமர்ஷியலாக அதை நியாயப்படுத்த முடிந்தால், பரவாயில்லை. ஆனால் உதாருக்காக அல்லவா மல்லய்யா செயல்படுவது போலத் தோன்றுகிறது?

10. பொதுத்துறைகள் இனி?
பதில்: வெறுமனே வெட்டி வேலைகளை உருவாக்காது இருந்தாலே பொதுத் துறைகள் உருப்பட்டு விடும். ஆனால் அதற்கான வாய்ப்புகள் கம்மி என்றுதான் அஞ்சுகிறேன்.

11. இந்தியா வங்கிகளின் எதிர்காலம்?
பதில்: அன்னிய வங்கிகளின் பிடியில் அகப்படாமல் இருந்தாலே போதும்.

12. அதிமுக காங் கூட்டணி கனியுமா?
பதில்: தமிழக ஊசல் விளையாட்டில் அதன் முறைதான் இப்போது.

13. அமெரிக்காவில் கலாமுக்கு சோதனை?
பதில்: நாமும் நம் பங்குக்கு பில் கிளிண்டன், ரசீது கிச்சா (நன்றி கிரேசி மோகன் அவர்களே) ஆகியோரை சோதித்தால் ஆயிற்று.

14. பெட்ரோலிய நிறுவனங்கள்‍‍‍... நஷ்டம் என்பது போலி கணக்கா?
பதில்: போலி இல்லை என்றுதான் நினைக்கிறேன்.

15. ராகுல் காங்கிரஸின் செயல் தலைவர் ஆவது பற்றி?
பதில்: நேரு குடும்பத்தையே பிடித்துக் கொண்டு தொங்குவது காங்கிரசுக்கு அவமானமே.

16. 2ஜி வழக்கு என்னவாகும்?
பதில்: வழக்கைத் துவங்கி விட்டார்கள் என படித்த நினைவு இருக்கிறதே.

17. கூடன்குளம் யாருக்கு இறுதி வெற்றி கிடைக்கும்?
பதில்: வெற்றி மக்கள் நலனுக்கு கிடைத்தால் சந்தோஷமே.

18. அரசு டீவியில் சன் டீவி எப்படி சாத்யம்?
பதில்: இப்போதைக்கு சாத்தியம் இல்லைதான்.


மேலும் கேள்விகள் வந்தால் அடுத்த வாரம் சந்திப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

11/13/2011

மன்னிக்கவும் இது politically correct பதிவு இல்லை

மொழிபெயர்ப்பு தலைவாசலாம் ப்ரோஸ்.காம்-ல் நான் எனது பழைய மன்ற இடுகைகளை புரட்டிக் கொண்டிருந்தபோது இந்த இடுகை கண்ணில் பட்டது. அதன் தமிழாக்கம் இங்கே.

இதை நான் எதேச்சையாகக் கண்டேன். ரஷ்ய மன்றங்களை ஸ்க்ரால் செய்தபோது இது ஆங்கிலத்தில் இருந்தது. அந்த மன்ற இடுகைக்கு 220-க்கும் மேல் பின்னூட்டங்கள். (ரஷ்ய இடுகையின் சுட்டியை மறந்து விட்டேன், மன்னிக்கவும்). உங்களுடன் இதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ழ்சி அடைகிறேன்.

சந்தைப்படுத்தல் என்றால் என்ன? (நீங்கள் ஒரு பெண்).
ஒரு பார்ட்டியில் அழகான வாலிபனை பார்க்கிறீர்கள். அவனை நேரடியாகவே அணுகி, "என்னுடன் படுத்தால் சந்தோஷம் நிச்சயம்" என்கிறீர்கள், இது நேரடி சந்தைப்படுத்தல்.

ஒரு பார்ட்டியில் உங்கள் நண்பர்களுடன் கலந்து கொள்கிறீர்கள். அப்போது ஒரு அழகான வாலிபனை பார்க்கிறீர்கள். அவனை உங்கள் நண்பர்களில் ஒருவர் அணுகி உங்களைக் காண்பித்து, "அவளுடன் படுத்தால் சந்தோஷம் நிச்சயம்" என்கிறார். இது விளம்பரம்.

ஒரு பார்ட்டியில் அழகான வாலிபனை பார்க்கிறீர்கள். அவனை அணுகி அவனது தொலைபேசி எண்ணைப் பெறுகிறீர்கள். அடுத்த நாள் அவனை ஃபோனில் கூப்பிட்டு, "என்னுடன் படுத்தால் சந்தோஷம் நிச்சயம்" என்கிறீர்கள், இது டெலிமார்க்கெட்டிங்.

ஒரு பார்ட்டியில் அழகான வாலிபனை பார்க்கிறீர்கள். உங்கள் புடவைத் தலைப்பை சரி செய்து கொண்டு, அவனிடம் செல்கிறீர்கள். அவனுக்காக கூல்ட்ரிங்க் வாங்கி கொடுக்கிறீர்கள். அவன் டையை அட்ஜஸ்ட் செய்யும்போது “தற்செயலாக” உங்கள் மார்பகம் அவன் முழங்கையில் உரசுகிறது. பிறகு, "அட சொல்ல மறந்து விட்டேன், என்னுடன் படுத்தால் சந்தோஷம் நிச்சயம்” என்கிறீர்கள். இது பப்ளிக் ரிலேஷன்ஸ்.

ஒரு பார்ட்டியில் அழகான வாலிபனை பார்க்கிறீர்கள். அவனே உங்களிடம் வந்து, “உன்னோடு படுத்தால் சந்தோஷம் நிச்சயம்னு எல்லோரும் சொல்லறாங்களே” ன்னு சொல்லறான். இது பிராண்ட் அங்கீகாரம்.

ஒரு பார்ட்டியில் அழகான வாலிபனை பார்க்கிறீர்கள். அவனை உங்கள் தோழியுடன் செல்லுமாறு அவனுக்கு கூறுகிறீர்கள். நீங்கள் ஒரு விற்பனை பிரதிநிதி.

உங்கள் தோழியால் அவனுக்கு மகிழ்ச்சி இல்லை. அவன் உங்களை அழைக்கிறான். இதுதான் டெக்னிக்கல் சப்போர்ட்.

நீங்கள் ஒரு பார்ட்டிக்கு செல்கிறீர்கள். திடீரென அங்கு பல அழகான வாலிபர்கள் இருக்கக் கூடும் என உங்களுக்குத் தோன்றுகிறது. ஆகவே ஒரு உயரமான மேஜை மீது ஏறிக் கொண்டு, “என்னுடன் படுத்தால் சந்தோஷம் நிச்சயம்” என்று உரக்கக் கூவுகிறீர்கள். அது ஸ்பாம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

11/11/2011

மகாநாடுகளில் நடக்கும் திருட்டுகள்

எனது ஆங்கில வலைப்பூவில் நான் பின் தொடரும் வலைப்பூக்களில் நான் குறிப்பிடுபவரது வலைப்பூவும் ஒன்று. அவரது இந்த இடுகையே எனது இப்பதிவுக்கு தூண்டுகோலாக அமைந்தது. அந்த இடுகையிலிருந்து சில வரிகள்.
“One member of the Business Practices listserv was furious when her computer bag was stolen out of the room where the listserv was holding a happy hour. She had placed it on the floor next to the bartender station. After reporting the theft to hotel security, they found it 15 minutes later “on the 3rd floor, in an empty closed room, with all the zippers opened, conference materials left alone but [the] laptop was gone.” She was then upset with the way the hotel handled the situation because they would not give her the incident report because it was “confidential Marriott property,” claimed they did not have security cameras (although they initially told her they would check the cameras) and did not reported the incident to the police. She felt the Marriott was covering the incident up and asked people to contact her if they saw any suspicious activity.

OK, first of all, shame on her for leaving her bag unattended. I always remind the first-time conference attendees to be aware of their valuables and to look back when they leave their seat, room, etc. to make sure they have not left anything behind. I never let my laptop or purse out of my sight – or in fact out of my hands or off my shoulder. I would never in a million years leave it unattended next to a bartender station or anywhere else. The fact is that hotels in general are public locations, and anyone can come in off the street and blend into the crowd”.

ஆக திருட்டுகளுக்கு முக்கிய காரணமே இம்மாதிரி பொது இடங்களுக்கு செல்பவர்கள் தத்தம் பொருட்களை பாதுகாப்பதில் அதீத அக்கறையின்மையைக் காட்டுவதுதான். ஹோட்டல்களில் சாப்பிட வரும் பலர் தங்கள் செல்பேசியை டேபிள் மீது வைத்து விட்டு கைகழுவ செல்கிறார்கள். திரும்பி வருவதற்குள் யாரோ ஆட்டையை போட்டுவிட, அவர் குய்யோ முறையோ என கத்துவது மட்டும் குறையாது. பலருக்கு பல முறை இவ்வாறு நடந்திருப்பதை பார்த்தபின்னாலும் பலர் இம்மாதிரி கூமுட்டைத்தனத்துடன் செய்வது நடந்து கொண்டுதான் இருக்கிறது.

இது போன்ற ஒரு விஷயத்தை நண்பர் பத்ரி அவர்கள் எழுதியது என் நினைவுக்கு வந்தது. அவருக்கு ஃபோன் போட்டு கேட்டதில் உலகச் செம்மொழி மாநாட்டில் நடந்ததைத்தான் தான் எழுதியதாக குறிப்பிட்டதாகக் கூறினார். அவர் பதிவு மாநாட்டு ஏற்பாட்டளர்கள் செய்த சொதப்பல்களை அதிகம் குறிவைத்தது. அதில் வந்த பின்னூட்டங்கள் பல மாநாட்டுக்கு வந்தவர்களது செயல்பாடுகளையும் புட்டு புட்டு வைத்தன. நோய்க்கூறு மனநிலை என்னும் தலைப்பிட்டு வந்த அவரது அப்பதிவிலிருந்து சில வரிகள்:

“கையேந்திக் கேட்பது என்பது ஒரு நோய்க்கூறு மனநிலை. அதுவும் அந்தப் பொருளால் தனக்கு ஏதேனும் பயன் உள்ளதா என்பதைப் பற்றி துளியும் புரிந்துகொள்ளாது, வேண்டும், வேண்டும், கொடு, கொடு என்று பறப்பது நோய்க்கூறு மனநிலை. தனக்கு வேண்டியதைக் கொடுத்துவிட்டார்கள் என்றபின்னும் மேலும் மேலும் கொடுங்கள் (என் மாமனுக்கு ஒண்ணு, என் மச்சானுக்கு ஒண்ணு, என் கூட்டாளிக்கு ஒண்ணு) என்று கையேந்துவதும் நோய்க்கூறு மனநிலைதான். கீழே வைத்துள்ள பொருள்களை உரியவர் அனுமதி இன்றி எடுத்துச் செல்வது நோய்க்கூறு மனநிலை. யாரும் இல்லாத நிலையில் பொருளைத் திருடுவது அதீத நோய்க்கூறு மனநிலை.

கோவை செம்மொழி மாநாட்டில் இவை அனைத்தையும் பார்த்தேன்.

இணையக் கண்காட்சியில் நாங்கள் வாடகைக்கு எடுத்து வைத்திருந்த இரண்டு கணினிகளில் ஒன்றைக் களவாடி விட்டார்கள். இரவு கண்காட்சி முடிந்து, அடுத்த நாள் காலையில் வண்டியில் கட்டி எடுத்துப்போவதற்குமுன்னதாகவே களவாடிவிட்டார்கள். NHM Writer, NHM Converter அடங்கிய 3,000 சிடிக்களை வைத்திருந்தோம். அதில் 1,000-ஐ விநியோகித்திருந்தோம். காலையில் பார்த்தால் 700-தான் மீதம். சுமார் 1,300 சிடிக்கள் அடங்கிய பெட்டிகளை எடுத்துப்போய்விட்டார்கள். அதனை ஆளுக்கு ஒன்றாக கணினி வைத்திருப்போரிடம் சேர்த்தார்கள் என்றால் பயன் கொண்டதாக இருக்கும்.

தமிழ் இணைய மாநாட்டு வளாகத்தில் இந்தியத் தமிழர் முதல் வெளிநாட்டுத் தமிழர் வரை, படித்த பேராசிரியர்கள் முதல் பாமர துப்புறவுத் தொழிலாளர் முதல், கையேந்தி கையேந்தி, இலவசமாக அதைக் கொடு, இதைக் கொடு என்று பறக்காவட்டியாகப் பறந்து அலைந்ததைப் பார்க்க வெட்கமாக இருந்தது. செம்மொழி மாநாட்டில் பங்கேற்க வந்திருந்த பலர் அடித்துப் பிடித்துக்கொண்டு கிடைத்ததையெல்லாம் சேகரிக்க விரும்பியதன் பலனாக, தமிழ் இணைய மாநாட்டுக்கு வந்தவர்களுக்குக் கொடுக்க என்று வைத்திருந்த மாநாட்டுக் கட்டுரைகள், சிடி அடங்கிய பைகளை பாதுகாக்கவேண்டியிருந்தது. இதனால் தமிழ் இணைய மாநாட்டுப் பேராளர்களுக்குக் கடும் கோபம். பெயர்களைப் பரிசீலித்து, கையெழுத்து போட்டு வாங்குங்கள் என்றால், பலர் பொய்க் கையெழுத்துகளைப் போட்டு பைகளைத் திருடிச் சென்றனர்”.


அப்பதிவில் சில பின்னூட்டங்கள்:

“அரவிந்தன் said...
பயிலரங்கில் நான் வைத்திருந்த குறிப்பேடு வந்திருந்த பொதுமக்களால் எடுத்துச்செல்லப்பட்டுவிட்டது.இருமுறை என்னோட டேட்டா கார்டு திருடு போகும்நிலை இருந்தது.நான் சற்று உஷாராக இருந்ததால் தப்பித்தது .

நான் படிப்பதற்காக வாங்கி வைத்திருந்த தினசரிகளை கேட்டு வாங்கி சென்றனர். மேஜையில் இருந்த அனைத்தையும் எடுத்து சென்றனர். அவ்வளவு ஏன் நான் சாப்பிட மேஜையில் வைத்திருந்த நேந்தரங்கா சிப்ஸை கூட விட்டு வைக்கவில்லை.:(
TUE JUN 29, 11:41:00 AM IST

நேந்த்ரங்கா வறுவலைக்கூடவா விட்டு வைக்கவில்லை எனக்கேட்பது முரளிமனோகர். :))

Badri said...
அரவிந்தன்: இன்னும் பலவற்றை நான் எழுதவில்லை. சாப்பாட்டு அரங்கில், தேநீர் வழங்கும் இடத்தில் நடந்தவை போன்ற அசிங்கங்களை எங்கும் பார்க்கவில்லை. மாடரேஷன் என்பதே இல்லாமல், வாங்கி வாங்கிச் சாப்பிட்டது; எக்கச்சக்கமாக தட்டில் நிரப்பிக்கொண்டு வீணடித்துக் குப்பையில் போட்டது...

எத்தனை எத்தனையோ பென் டிரைவ்கள் களவாடப்பட்டன. இலவசமாகப் பயன்படுத்த வைத்திருந்த கணினிகளின் ஆப்டிகல் மவுஸ்களைத் ‘தள்ள’ முயற்சி செய்தனர். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

இலவசம் என்ற வார்த்தை எந்த அளவுக்கு நம் மக்களை ஆட்டிவைக்கிறது! திருடுதல் என்பது எவ்வளவு ஈனத்தனமான செயல் என்பதை எப்படி அறியாமல் இருக்கிறார்கள்? ஐயன் திருவள்ளுவன் என்று வாய் கிழியப் பேசுவது இதற்காகத்தானா?

தமிழர்களின் ஒட்டுமொத்தக் கயவாளித்தனத்தை ஒரே இடத்தில் காண உதவியது ‘உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு’.
===
ஆனால் இவற்றையும் மீறி பல நல்ல விஷயங்கள் நடந்துள்ளன. அவைபற்றி எழுதுவதற்குமுன் கோபத்தைத் தணித்துக்கொள்ளவே இந்தப் பதிவு.
TUE JUN 29, 12:03:00 PM IST

இம்மாதிரி இடங்களில் நான் இப்பதிவின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட ஜாக்கிரதை உணர்வு பன்மடங்காக இருத்தல் அவசியம் எனக்கூறவும் வேண்டுமோ?

சில செய்ய வேண்டிய / செய்யக்கூடாத செயல்கள்
அப்போதுதான் உங்கள் பொருட்களை இழக்காமல் இருப்பீர்கள்.

1. பொது இடங்களுக்கு செல்லும்போது தேவையானவற்றை மட்டும் எடுத்து செல்லுங்கள். சில இடங்களில் செல்பேசியைக் கூட உள்ளே எடுத்து செல்ல முடியாது (அதுவும் அது கேமிரா வசதியோடு இருந்தால் கேட்கவே வேண்டாம்). நான் வாடிக்கையாளரது அலுவலகத்தில் அன்றைய தினத்துக்கு வேலை செய்வதற்காக செல்லும்போது செல்பேசி அவசியம் தேவை. அதே சமயம் அது கேமிரா செல்பேசியாக இல்லாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்வதும் அவசியம்.
துக்ளக் ஆண்டுவிழா கூட்டங்களில் போலீசார் கெடுபிடி செய்வார்கள். ஆகவே அங்கெல்லாம் நான் செல்பேசியே எடுத்துச் செல்வதில்லை.

2. செல்பேசிக்கே அந்த கதி என்றால், லேப்டாப் பற்றி கேட்கவா வேண்டும்? எந்த இடத்திலும் அதை வைத்து விட்டு அப்பால் செல்வதைத் தவிர்க்க வேண்டும். டேட்டா கார்ட், பவர் கார்ட் ஆகியவற்றையும் கண்போல பாதுகாக்க வேண்டும் எனக்கூறவும் வேண்டுமா?

ஜெயமோகன் ஆர்கனைஸ் செய்த ஊட்டி இலக்கிய மாநாட்டுக்கு நான் செல்லாததற்கு முக்கியக் காரணமே லேப்டாப் பாதுகாப்பு பற்றிய எனது கவலைதான். எனது மொழிபெயர்ப்பு வேலைகள் தொடர்ச்சியாக வருபவை. ஆகவே லேப்டாப் எடுத்துச் செல்வதைத் தவிர்ப்பது என்னும் பேச்சுக்கே இடமில்லை.

3. மின்ரயில் பயணங்களில் செல்லும்போது சிலர் செல்பேசியை இரவல் கேட்பார்கள், அவசரமாக ஒருவரைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்றும், தங்களது செல்பேசியில் சார்ஜ் தீர்ந்தது என்றும் பொய் சொல்வார்கள். அழுத்தமாக அக்கோரிக்கைகளை நிராகரிப்பதுதான் நலம். இல்லாவிட்டால் ஒரு ரயில் நிலையம் வந்ததும் பேசிக் கொண்டே இறங்கிச் சென்று விடுவார்கள். எனது நண்பனின் செல்பேசி அப்படித்தான் பறி போயிற்று.

4. செல்பேசிகளை வெறுமனே சட்டை பாக்கெட்டில் வைப்பது சரியில்லை. எதற்காகவேனும் குனிந்தால் செல்பேசி கீழே விழும் வாய்ப்பு அதிகம். நான் செய்வது போல வாரில் அதை கட்டி பாக்கெட்டில் வைத்து, வாரை கழுத்தில் மாட்டிக் கொள்வது நலம். பார்க்க படம்:


பை தி வே இந்த படத்தைப் பார்த்துத்தான் ஜ்யோவ்ராம் சுந்தர் பூணூல் போட்டிருக்கிறாரா என அனாவஸ்ய கேள்வியை எழுப்பி என்னிடம் வாங்கிக் கட்டிக்கொண்டு போனார் ஒரு சோகால்ட் இணைய தாசில்தார். ஆகவே நான் இப்போது காட்டும் போட்டோவில் எனது செல்பேசியை நான் எவ்வாறு வைத்திருக்கிறேன் என்பதை மட்டும் பாருங்கள். பூணல் ஆராய்ச்சி எல்லாம் வாணாம்.

இன்னும் எவ்வளவோ சொல்லலாம். ஆனால் இப்போதைக்கு இவ்வளவுதான்.

நீதி: அல்லாவை நம்பு. ஆனால் அதே சமயம் ஒட்டகத்தையும் பாதுகாப்பாக கட்டி வைக்கவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்











11/10/2011

டோண்டு பதில்கள் - 10.11.2011



ரமணா
கேள்வி-1. கனிமொழி இனி?
பதில்: ஒரு தகுதியுமின்றி மஞ்சத் துண்டின் மகள் என்ற ஒரு காரணத்துக்காகவே தூக்கி நிறுத்தப்பட்ட அவர் இப்போது அதே காரணத்துக்காகவே சிறுமைபடுவதும் காலத்தின் விளையாட்டே.

கேள்வி-2. திமுகவில் ஸ்டாலினுக்கு எதிர்ப்பா?
பதில்: அது எப்போதுமே இருந்துதான் வந்திருக்கிறது, நீறு பூத்த நெருப்பாக. மேலே என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க வேண்டியுள்ளது.

கேள்வி-3. கமாடிடி ஆன்லயின் டிரெடிங் தடை செய்யப்படுமா?
பதில்: வால் பையன் பதில் சொல்லட்டும் இக்கேள்விக்கு.

கேள்வி-4. மீண்டும் அமைச்சரவை மாற்றம் பற்றி?
பதில்: ஜெயலலிதா அப்படியேதான் இருக்கிறார். மகாபாரதத்தில் சொல்லப்பட்ட கைவல்ய நீதியை அவர் பயன்படுத்துகிறார். அது திருதிராஷ்டரனுக்கு கூறப்பட்டது. உலகில் உள்ள எந்த அநீதியாக இருந்தாலும் அது உனக்கு சாதகமாக இருந்தால் அதைப் பயன்படுத்திக் கொள் என்ற ரேஞ்சில் போகும் அது. சோ அவர்கள் எழுதிய மகாபாரதத்தின் வெர்ஷனில் அது வருகிறது.

அதே நீதிதான் அரசன் தன்னைச் சுற்றியிருப்பவர்களை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும், யாரும் தான் சாஸ்வதம் என நினைக்கும்படி விட்டுவிடக்கூடாது எனக் கூறுகிறது. ஜெ செய்வதும் அதுதான்.

5. அதிகாரிகளின் அடிக்கடி மாறுதல் பற்றி?
பதில்: கைவல்ய நீதி, முந்தைய கேள்வியை பார்க்கவும்.

கேள்வி-6. பெங்களூர் வழக்கு என்னவாகும்?
பதில்: நீதி தன் கடமையை செய்யும் என எதிர்பார்க்கிறேன்.

கேள்வி-7. அடுத்து மம்தா என்ன செய்வார்?
பதில்: அவருக்கே அது தெரியாது. டோண்டு ராகவனுக்கு எப்படி தெரியும்?

கேள்வி-8. சீமானின் புரட்சிப் பேச்சு மக்களை கவர்கிறதா?
பதில்: எங்கே சினிமாவிலா?

9. கூடன்குளம் சுமுகமாய் முடியுமா?
பதில்: சுமுகமாக முடிவதை விட, மக்களது தேவை, பாதுகாபு ஆகிய இரண்டும் ஊர்ஜிதம் செய்யும் நிலைதான் வேண்டும்.

கேள்வி-10. பெட்ரோல் விலை உயர்வுக்கு தி.மு.க திடீர் எதிர்ப்பு ஏன்?
பதில்: மத்திய மந்திரி சபையிலிருந்து திமுக விலகும் என நினைக்கிறேன்.


pt
KINDLY ANSWER THE FOLLOWING QUESTIONS IN DONDU'S STYLE:
கேள்வி-11. How can you drop a raw egg onto a concrete floor without cracking it?
பதில்: முட்டையை எப்படி, எவ்வளவு உயரத்திலிருந்து போட்டாலும் கான்க்ரீட் தரை விரிசல் விடாது.

கேள்வி-12. If it took eight men ten hours to build a wall,how long would it take four men to build it?
பதில்: அதான் அந்த சுவரை ஏற்கனவேயே எட்டு பேர் கட்டிட்டாங்களே, இப்போ நாலு பேர் எதுக்கு அதை மறுபடியும் கட்டணுமாம்? கொழுப்பா?

கேள்வி-13. If you had 3 apples and 4 oranges in one hand and four apples and three oranges in the other hand, what would you have?
பதில்: Two full hands.

கேள்வி-14. How can you lift an elephant with one hand?
பதில்: முதலில் ஒரு கையாவது இருக்கும் யானையை கொண்டு வாருங்கள், நான் அதை தூக்கிக் காண்பிக்கிறேன்.

கேள்வி-15. How can a man go eight days without sleep?
பதில்: இரவில் மட்டும் தூங்கினால் போகிறது. எப்படியும் பகலில் தூங்கக் கூடாது என கௌடில்யர் அர்த்த சாஸ்திரத்தில் கூறியுள்ளதாக முரளி மனோகர் எனக்கு சொல்கிறான்.

கேள்வி-16. If you throw a red stone into the blue sea what it will become?
பதில்: முழுகிப் போகும்.

கேள்வி-17. What looks like half apple?
பதில்: The other half.

கேள்வி-18. Bay of Bengal is in which state?
பதில்: In liquid state.

டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
கேள்வி-19. பெட்ரோல் விலை உயர்வு சரியே: மன்மோகன்

பதில்: அவர் வேறு என்ன கூற முடியும்?

கேள்வி-20. நூலகத்தை இடமாற்றுவது அண்ணாவுக்குச் செய்யும் அவமதிப்பு
பதில்: வேறு பல பிரச்சினைகள் இருக்கும்போது அண்ணாவின் பெயரை இழுப்பது உளறலாகத்தான் படுகிறது.

கேள்வி-21. மத்திய அரசில் இருந்து வெளியேறுவோம்: மம்தா பானர்ஜி
பதில்: சரியான அரசியல்வாதியின் பேச்சு. பாம்பு கீரி சண்டை விடுவேன் எனக் கூறிக் கொண்டே கடைசி வரை போக்கு காட்டும் போங்கு.

கேள்வி-22. டீசலுக்கும் விலைக் கட்டுப்பாடு கூடாது: முதன்மைப் பொருளாதார ஆலோசகர் கருத்து
பதில்: காலத்தின் கட்டாயம்.

கேள்வி-23. லோக்பால் மசோதாவை சிதைக்காதீர்கள்: ஹசாரே குழு
பதில்: அவ்வாறு செய்யாவிட்டால் ஊழல்வாதிகளின் வாழ்வு சிதைந்து விடுமே.

மேலும் கேள்விகள் வந்தால் அடுத்த வாரம் சந்திப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
பின்குறிப்பு: பதிவை பார்டருக்குள் போட எனக்கு உதவியது இப்பதிவின் சொந்தக்காரர். அவருக்கு என் நன்றிகள் உரித்தாகுக.

11/07/2011

ஜெயா டிவி ஜாக்பாட்டில் டோண்டு ராகவன் பங்கேற்றால் வெற்றி வாய்ப்பு அதிகம்

டிஸ்கி: தலைப்பை பிறகு நிரூபிக்கிறேன்.

எங்கள் மொழிபெயர்ப்பாளர் தலைவாசலாம் ப்ரோஸ்.காம்-ல் அவ்வப்போது ஓட்டெடுப்புகள் நடைபெறும். உதாரணத்துக்கு, Have you ever found any (new) clients on Facebook? என்று கேள்வி கேட்டு விடைகள் சாய்ஸாக (No), (I'm not on Facebook), (Yes), (Other) தந்திருந்தார்கள்.

இம்மாதிரி பல கருத்து கணிப்பு ஓட்டெடுப்புகள் நடக்கும். உதாரணத்துக்கு, உங்களுக்கு இந்த ஆண்டு எத்தனை புது வாடிக்கையாளர்கள் கிடைத்தனர்? சாய்ஸ்கள் (0-2), (3-5), (> 5). இது ஒரு நல்ல கேள்வி. என்னைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்கள் ஏதேனும் ஒரே ஒரு வாடிக்கையாளரை பிடித்துக் கொண்டு தொங்குவது ஆரோக்கியமானதல்ல. திடீரென அந்த வாடிக்கையாளர் ஏதேனும் காரணத்துக்காக வேலை தரவியலவில்லையென்றால், (திவாலாவது, அவரது தேவைகள் மாறுவது முதலிய காரணங்கள்), எனது கதை கந்தலாகி விடும். அந்த வகையில் நான் ரொம்பவுமே துடியாக செயல்பட்டு புது வாடிக்கையாளர்களை தேடும் முயற்சியில் இருப்பேன்.

எனது 36 ஆண்டுகால மொழிபெயர்ப்பாளர் வாழ்க்கையில் 19 ஆண்டுகளுக்கு ஒரு வாடிக்கையாளர் தொடர்ந்திருக்கிறார். அது ஒரு ரிகார்ட். இன்ஸ்டாக் எனப்படும் அந்த அமைப்பு மத்திய அரசின் கீழ் இயங்குகிறது. அவர்களது வெளி மொழிபெயர்ப்பாளர்களின் பட்டியலில் நான் பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் மொழிகளுக்காக இருந்திருக்கிறேன்.

ஐந்து ஆண்டுகள் மட்டுமே இருந்த ஒரு வாடிக்கையாளர் தயவால்தான் சென்னைக்கு வந்து பல மாதங்களுக்கு கௌரவமாக தாக்கு பிடித்து சென்னை வாடிக்கையாளருடன் வலிமையான நிலையில் இருந்து பேரம் பேச முடிந்தது.

இப்போதைய பெரிய வாடிக்கையாளர் நான்கு ஆண்டுகளாக இருந்து வருகிறார், ரெகுலரான வேலை. இம்மாதிரி கூறிக் கொண்டே போகலாம். ஆனால் புது வாடிக்கையாளர்களை பிடிப்பது காலத்தின் கட்டாயமே.

இப்போது மேலே குறிப்பிட்டுள்ள கருத்து கணிப்புகளுக்கு வருகிறேன். நான் ஒவ்வொரு முறையும் எனது கருத்தை பதிவு செய்கிறேன். 90% எனது விடையே டாப்பாக இருந்திருக்கிறது. அதாவது என்னைப் போன்றே கருத்து கொண்டவர்கள் அதிகமே. இதை நான் கடந்த நூற்றுக்கும் மேலான கருத்து கணிப்பில் கண்டுகொண்டேன்.

இப்போது ஜெயா டிவி ஜாக்பாட்டுக்கு செல்வோம். கேள்விகளுக்கு விடை அளிப்பது அவ்வளவு முக்கியமல்ல. அதே விடையை மக்களில் எவ்வளவு பேர் கூறியுள்ளனர் என்பதுதான் முக்கியம். “மக்கள் என்ன சொல்லறாங்கன்னு பாப்போம்” என கூறி ரிசல்டுகளை காண்பிக்கும்போது எல்லோருமே ஆவலுடன் பார்ப்போம்.

ஆகவேதான் கூறுகிறேன், ப்ரோஸ்-ன் கருத்து கணிப்புகள் விஷயத்தில் எனது பதில்கள் கிட்டத்தட்ட எப்போதுமே டாப்பில் வருகின்றன எனக் கூறிவிட்டேன். அதே போல ஜெயா டிவி நிகழ்ச்சியில் நான் தரும் விடைகளும் மெஜாரிட்டி மக்களாலும் கூறப்படும்.

ஆகவேதான் கூறுகிறேன், ஜெயா டிவி ஜாக்பாட்டில் டோண்டு ராகவன் பங்கேற்றால் வெற்றி வாய்ப்பு அதிகம். :)))))

அன்புடன்,
டோண்டு ராகவன்

11/03/2011

டோண்டு பதில்கள் - 03.11.2011

pt
டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
கேள்வி-1. சீன ஊடுருவல்: அந்தமான் தீவுகளில் பாதுகாப்பை அதிகரிக்கிறது இந்தியா
பதில்: இப்போதே டூ லேட்டாக இருக்குமோ எனக் கவலையாக இருக்கிறது.

கேள்வி-2. மத்திய அமைச்சர்களின் எரிபொருள் செலவு ரூ.3.67 கோடி
பதில்: அது பற்றி படிக்கும் மக்களின் வயிறும் எரிகிறதே.

கேள்வி-3. பறிபோகிறது பரம்பிக்குளம் அணை? கேரள அரசின் அடுத்த "அட்டாக்'
பதில்: தண்ணீர் விஷயத்தில் அண்டை மாநிலம் என்ன, அண்டை மாவட்டத்தையே நம்ப முடியாதுதானே.

கேள்வி-4. மாற்றான் தாய் பிள்ளை போல் நடத்துகிறது : அணுஉலை எதிர்ப்பு குழு தலைவர் பேச்சு
பதில்: அரசியல் கலந்தால் இம்மாதிரி நடத்தைகளும் அவற்றுக்கான எதிர்வினைகளும் வரத்தானே செய்யும்.

கேள்வி-5. அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு: தமிழகத்தில் விரைவில் திட்டம் துவக்கம்
பதில்: நல்ல விஷயம்தான், ஆனால் விவரங்களை பதிக்கும்போது ஏனோ தானோ என பதிக்காமல் கவனத்துடன் இருப்பது நலம். முகவரி பதிப்பதிலேயே கோளாறு செய்துதானே ரேஷன் கார்டு, எலெக்‌ஷன் அடையாள அட்டை எல்லாவற்றிலும் பிரச்சினை வருகிறது. அம்மாதிரி இல்லாமல் பார்த்துக் கொண்டாலே போதுமே.

கேள்வி-6. நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டதில் "ஊழல்': 3 மாதங்களில் "பல்' இளித்த ரோடுகள்
பதில்: வழமையான செய்திதானே.

கேள்வி-7. ஒன்றிய தலைவர் பதவி அ.தி.மு.க., வில் குடுமிபிடி
பதில்: பிணம் கிடக்கும் இடங்களில் கழுகுகள் வட்டமிடும் என்னும் பொருள்பட ஆங்கிலச் சொலவடை உண்டு. (Wheresoever the carcase is, there will the eagles be gathered together).

கேள்வி-8. பயணிகளுக்குக் கொடுத்த அறிவுரையை ஆஸ்திரேலியா திரும்பப்பெற இந்தியா வலியுறுத்தல்
பதில்: இவ்வாறு கேட்பது இந்தியாவுக்கு அவமானம். தமது பிரஜைகளின் பாதுகாப்பு குறித்து அந்தந்த நாடுகள் கவலைப்படாமல் வேறு யார் படுவார்களாம்?

கேள்வி-9. லிபியர்கள் தன்னை விரும்பியதாக கடைசி வரை நம்பினார் கடாபி: பாதுகாவலர்
பதில்: ராஸ்புடீன் என்னும் போலி குரு ரஷ்யாவின் கடைசி ஜார் மன்னனை தன் கைப்பொம்மையாக்கி ஆட்டினான். அப்போதைய பல ரஷ்ய பிரபுக்கள் அவனைக் கொல்ல சதித்திட்டம் தீட்டினர்.

அப்போது என்ன நடந்தது என்பதை Richard Armour என்னும் ஆங்கில எழுத்தாளர் தனது It all started with Marx என்னும் புத்தகத்தில் இவ்வாறு எழுதுகிறார் நினைவிலிருந்து தருகிறேன்).

They stabbed him, Rasputin did not die.
They gunned him, he did not die.
They poisoned him, he did not die.
They drowned him and then he died of broken heart, suddenly aware of his unpopularity.

கேள்வி-10. கிரண் பேடி அறக்கட்டளை நிர்வாகி விலகல்
பதில்: இவருடைய பயண ஏற்பாடுகளை கவனிக்க என ஒரு தனி ஏஜென்சியா? என்னவோ இடிக்கிறதே.


ரமணா
கேள்வி-11. அஜித் சிங்கின் வருகை அழகிரிக்கு சிக்கலா?
பதில்: ஏன், கருணாநிதி அவரையும் வாரிசாகத் தேர்ந்தெடுத்து விட்டாரா என்ன?

கேள்வி-12. பருவ மழை இந்த ஆண்டு எப்படி?
பதில்: போன ஆண்டை விட இந்த ஆண்டு பரவாயில்லை என்று கூறுகிறார்கள்.

கேள்வி-13. டெல்லியில் தீபாவளி குடிகாரர்களில் 40 % பெண்களாமே?
பதில்: அவர்களில் கணிசமானோர் தத்தம் கணவரால் கம்பெல் செய்யப்பட்டு, பார்ட்டிகளில் குடிக்க வைக்கப்பட்டிருப்பார்கள். அவர்களும் இப்போது குருவையே மிஞ்சிய சிஷ்யைகளாகிவிட, கணவர்கள் பேய் முழி முழிக்கிறார்கள்.

கேள்வி-14. அடுத்த தேர்தலில் உதிரிக்கட்சிகளின் நிலை?
பதில்: அவரவர் பலம் தெரிந்தால் தெளிவு என்பது தானே பிறந்து விடுமல்லவா?

கேள்வி-15. வைக்கோ திருந்தவில்லை எனும் திமுக தலைவர் கருணாநிதியின் குற்றச்சாட்டு பற்றி?
பதில்: பூட்ட கேசெல்லாம் மற்றவர்கள் திருந்துவது பற்றி கவலைப்படுவது செனிலிடியையே காட்டுகிறது.

கேள்வி-16. உள்ளாட்சி தேர்தலில் உள்ளடி வேலை என சொல்லும் உண்மைத் தமிழன்?
பதில்: அவருக்கு ஏதேனும் பின்னணி தெரிந்திருக்கும் என நம்புகிறேன்.

கேள்வி-17. கேபிடலிஸம் தோல்வியை நோக்கியா?
பதில்: மனவாடு கேப்பிடலிசத்துக்கு தோல்வி என வேண்டுமானால் கூறுங்கள்.

கேள்வி-18. விலைவாசி குறையுமா?
பதில்: யானை வாயில் போன கரும்பு திரும்பக் கிடைக்குமா?

கேள்வி-19. மக்கள் பெருக்கம் இப்படி போனால் பூமி தாங்குமா?
பதில்: தாங்காமல் கீழே விழுந்து விடுமா? அப்படியானால் எங்கே விழும்?

கேள்வி-20. ஊரை ஏமாற்றி பகல் கொள்ளை அடிக்கும் வல்லான்களுக்கு வால் பிடிக்கும் ஊழல் சக்திகளுக்கு இனி எதிர்காலம்?
பதில்: வல்லான்கள்தானே! தப்பிக்க வழி தேட மாட்டார்களா என்ன?

மேலும் கேள்விகள் வந்தால் அடுத்த வாரம் சந்திப்போம்.


அன்புடன்,
டோண்டு ராகவன்

11/02/2011

தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க! (கவனித்தாயிற்று)

டிஸ்கியை கடைசியில் தருகிறேன்.

தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க!

ஓட்டு எந்திரத்திற்கு (அட நம்ம வாக்காளர்கள்தான்..) ஒரு சின்ன தகவல்..

குஜராத் அரசு சமீபத்தில் சிறந்த அரசுக்கான விருதை, சர்வதேச அரசாங்க விருது வழங்கும் கவுன்சிலிடமிருந்து பெற்றுள்ளது.
இந்த கவுன்சில் குஜராத் அரசிற்கு உலகத்திலேயே இரண்டாவது(2 ) சிறந்த அரசு என்ற விருதை வழங்கி கவுரவித்துள்ளது..

இதற்கு ஒரு இந்தியராக சந்தோசப்படும் அதே வேளையில் தமிழர்களாக நாம் வெட்கப்படவேண்டியுள்ளது.

ஏனென்றால்,
குஜராத்தில் இலவசங்கள் கிடையாது,
ஓட்டுக்கு பணம் கிடையாது.
டாஸ்மாக் கிடையாது(மது விலக்கு அமல்படுத்தப்பட்ட மாநிலம்).
கரண்ட் கட் கிடையாது.
இத்தனைக்கும் மேலாக மத்திய அரசில் அங்கமோ,பங்கோ கிடையாது.



இதே நிலைதான் தற்போதைய பீகார் அரசுக்கும்...


குஜராத் அரசின் பத்து வருடத்திற்கு முந்தைய
உலகவங்கியில் வாங்கப்பட்ட கடன் தொகை- ரூ.50,000 கோடிகள்.
(ராசா கொளையடித்ததை விட கொஞ்சம் கம்மிதான்!)

ஆனால்... இன்று..

அதே குஜராத் அரசு உலகவங்கியில் கடன் தொகை செலுத்தியது போக
கையிருப்பாக வைத்திருக்கும் தொகை 1 லட்சம் கோடிகள்.

மீண்டும் உங்கள் நினைவிற்கு..

1. குஜராத்தில் இலவசங்கள் கிடையாது,
2. ஓட்டுக்கு பணம் கிடையாது.
3. டாஸ்மாக் கிடையாது(மது விலக்கு அமல்படுத்தப்பட்ட மாநிலம்) .
4. கரண்ட் கட் கிடையாது.
[இத்தனைக்கும் மேலாக மத்திய அரசில் அங்கமோ,பங்கோ கிடையாது].
5. மாநிலத்தின் அத்தனை பெண்களுக்கும் படிப்பறிவு கொடுக்கிறது.
6. இந்தியாவின் 15% ஏற்றுமதி குஜராத்திலிருந்து செல்கிறது.
7.இந்திய பங்குச்சந்தையின் 30% பங்குகள் குஜராத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளன.
8. TATA, Hyundai, Ford, Reliance, Honda இன்னும் பிற குஜராத்தில் உள்ளன.
9. இந்தியாவின் No-1 மாநிலம் (தொழில், பொருளாதாரம், மக்களின் வாழ்க்கைத்தரம், உள்கட்டமைப்பு, வருமானம், சட்டம்/ஒழுங்கு)


நாமும் No-1 தான் (பிச்சை எடுத்து,இலவசங்களை வாங்கி, ஓட்டுக்கு பணம் வாங்கி,உழைத்து சாப்பிடாமல் தமிழனின் தன்மானத்தை விற்பதில்)

அடுத்த 20 வருடங்களில் குஜராத் ஒரு குட்டி சிங்கப்பூராக மாறப்போகிறது.

நம் மாநிலத்தின் நிலை??

அடுத்த 5 ஆண்டுகளில் கருணாநிதியின் குடும்பம் நிஜ சிங்கப்பூரை விலைக்கு வாங்கிவிடும். (நல்ல வேளையாக இப்போதைக்கு மஞ்சத் துண்டு குடும்பத்துக்கு மக்கள் செக் வைத்துள்ளனர். சீக்கிரம் பட்டா பட்டி டிராயரை போட்டுவிட்டு அவிங்களை களி திங்க வச்சாத்தான் தமிழர் மனம் ஆறும்).

இப்பொழுது நீங்கள் தேர்ந்தெடுக்க போவது மாநில அரசை நியமிக்கபோகும் சாதாரண தேர்தல் அல்ல.

மாறாக நம் தீர்ப்பு உலக மக்களால் திரும்பி பார்க்கப்பட வேண்டும்.

இது அநியாய,அராஜக ஆட்சிக்கு நாம் அளிக்கும் சம்மட்டி அடியாக இருக்க வேண்டும்
(சம்மட்டி அடி கொடுத்தாயிற்று, மேலே சொன்னதை எல்லாம் மக்களும் நினைத்திருக்க வேண்டும்).

இதில் நாம் தவறிழைத்தாலோ,அடிபணிந்தாலோ,ஏமாந்தாலோ ஒரு மிகப்பெரும் வரலாற்று பிழை செய்தவர்களாகி விடுவோம் (நல்ல வேளை அவ்வாறு செய்யவில்லை).
உலகம் நம்மை காரி உமிழும் [அதுவும் இப்போதைக்கு இல்லை:))].

நல்ல வரலாறு படைப்போம்.நன்றி! (அதற்கான அடி எடுத்து வைத்தாயிற்று).

டிஸ்கி: இதை நான் ஏப்ரல் மாதத்தில் டிராஃப்டில் போட்டுவிட்டு மறந்து விட்டேன். இன்று எதேச்சையாக பார்த்தேன். இற்றைப்படுத்தி இப்போது போடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

சுவனப்பிரியனுக்காக சேர்த்தது. அவருக்கான பதிலை பின்னூட்டப் பெட்டியில் போட இயலவில்லை. ஆகவே இச்சேர்க்கை:

@சுவனப்பிரியன்
மோதிக்கு எதிராக பேசுங்கள் நாங்கள் துணையாக இருக்கிறோம் என ப. சிதம்பரம் வகையறாக்கள் கூறியாகி விட்டது. இன்னும் அவருக்கு பயப்படுகிறார்கள் என உதார் விட்டால் எப்படி?

2002, மற்றும் 2007 பொது தேர்தலில் எலெக்ஷன் கமிஷனும் அதன் அப்போதைய கோமாளி கமிஷனர்களும் காங்கிரஸ் பூத் ஏஜெண்டாக செயல்பட்டதை மறந்தீர்களா?

பின்னே எப்படி மோதியின் மிரட்டல் பற்றிப் பேசுகிறீர்கள்?

அது சரி கோத்ரா கரசேவகர்களை எரித்த விஷயம் பற்றி மூச்சே இல்லை? அதை ஆதரிக்கிறீர்களா?

அந்த நேரத்தில் மகாத்மா காந்தியே முதன் மந்திரியாக இருந்திருந்தாலும் கலவரம் வெடித்திருக்குமே.

மோதியின் மேல் ஊழல் புகார் கூற முடியாமல் பொய்யையே கூறினால் அது உண்மையாகுமா?

மற்றும் ஏழை முஸ்லிம் வாக்காளர்?

மோதி பற்றி சுஹேல் சேத் என்னும் பிற மாநில இசுலாமியர் எழுதியதை கீழே தருகிறேன். இதில் நான் என வருவது சுஹேல் சேத்.

”முதலில் சில விஷயங்களை தெளிவுபடுத்துவேன்: மற்ற எல்லோரையும் விட மோடிக்கு எதிராக நான் பல கட்டுரைகளை எழுதியுள்ளேன். அவற்றில் கோத்ரா நிகழ்வுக்கு பிறகு நடந்த கலவரங்களை மோடி கையாண்ட விதம் பற்றி பல விமரிசனங்கள் தந்துள்ளேன். தற்கால ஹிட்லர் என மோடியைப் பற்றி குறிப்பிட்டுள்ளேன். கோத்ரா அவர் மேல் மட்டுமல்ல, நாட்டின் அரசியல் வர்க்கத்தின் மீதே ஒரு களங்கமாக இருக்கும் என்றும் கூறியுள்ளேன். கோத்ரா விவகாரத்துக்காக நாடு பெரிய விலையைத் தரவேண்டிய்ருக்கும் என்று இன்னமும் கூறுவேன்.

விஷயம் என்னவென்றால் அதற்கப்புறம் காலம் தன் வழியில் செல்ல ஆரம்பித்து விட்டது. மோடியும்தான் மாறிவிட்டார். மதவாதத்துக்காக குற்றம் சாட்டப்படுபவர்களில் மோடி மட்டும் தனியாக இல்லை. கூடவே மற்ற அரசியல்வாதிகளும் உள்ளனர். மதசார்பற்ற அரசியலை நடத்துவதாக விதந்தோதப்படும் காங்கிரஸ் ஆட்சியில்தான் 1984-ல் சீக்கியர்கள் மேல் கொலைவெறித் தாக்குதல்கள் நடந்தன. 3500-க்கும் அதிகமாக சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். அதாவது குஜராத்தில் கொல்லப்பட்டவர்களை விட மூன்று மடங்கு.

மறுக்க முடியாத விஷயம் என்னவென்றால், மோடியை விட இந்திய அரசியல் வானில் வல்லவர் யாரும் இல்லை என்பதுதான். மூன்று வாரங்கள் முன்னால் நான் அஹமதாபாத் சென்றிருந்தேன். YPO (Young President's Organisation) கூட்டத்தில் பங்கெடுக்கவே நான் சென்றிருந்தேன். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மோடி அவர்களை சந்திக்கலாம் என முடிவு செய்தேன். அங்கு செல்வதற்கு முந்தைய மாலைதான் அவருக்கு டெலிஃபோன் செய்து பேசினேன். நான் அங்கு வந்து சேரும் நாள் அன்றே அவரை பார்க்க அனுமதி தந்தார். அதுவும் அவர் அலுவலகத்தில் அல்ல, அவர் இல்லத்தில்தான். எளிமையின் உருவம் மோடி.

இந்த விஷயத்தில் சோனியா, மாயாவதி போன்றவர்கள் மோடியிடமிருந்து பாடம் கற்பது நல்லது. மீட்டிங்கில் மோடியை சுற்றி எந்த அள்ளக்கைகளும் இல்லை. நாங்கள் இருவர் மட்டுமே. தேனீரை ஊற்றுவதற்காக ஒரு வேலையாள் அவ்வளவே. மோடியிடமிருந்து நேர்மறை எண்ணங்கள் வந்த வண்ணம் இருந்தன. குஜராத்தின் முன்னேற்றம், மறுமலர்ச்சி, அதன் மக்களின் வாழ்க்கைத் தரத்தின் மேம்பாடு அவற்றையெல்லாம் எடுத்துரைக்கும்போது அவர் வெளியிட்ட மகிழ்ச்சி ஆகியவற்றை அந்த எண்ணங்கள் பிரதிலித்தன. சில உதாரணங்கள்: சிங்கப்பூர்வாசிகள் அருந்தும் பாலில் கிட்டத்தட்ட முழு அளவு குஜராத்திலிருந்து வருகிறது. அதே போல ஆஃப்கானிஸ்தானில் உண்ணப்படும் தக்காளி, கனடாவில் உட்கொள்ளப்படும் உருளைக்கிழங்கு போன்ற எல்லாமே குஜராத்தில் விளைந்தவை. அதே சமயம் தொழிற்சாலைகளும் அவற்றில் உற்பத்தியாகும் பொருட்களும் மோடியின் முன்னுரிமைகளில் உண்டு.

ஒரு குழந்தையின் குதூகலத்துடன் அவர் அருகிலுள்ள மேஜையிலிருந்து GIFT என்று அறியப்படும் குஜராத்தில் அமையவிருக்கும் புது தொழில் நகரத்தைப் பற்றிய புத்தகத்தை எனக்கு காட்டினார். சபர்மதி நதியின் கரையில் வரப்போகும் இந்த நகரம் துபாயையும் ஹாங்காங்கையும் ஜுஜூபி என்று சொல்ல வைக்கும். பை தி வே குஜராத்தில் உள்ள நதிகளை இணைத்து மோடி அவர்கள் சபர்மதியின் தண்ணீர் பற்றக்குறையை தீர்த்து வைத்துள்ளார்.

ரத்தன் டாட்டாவின் புது நானோ கார் தொழிற்சாலை பர்றியும் அவர் பேசினார். டாட்டா அவர்களிடம் பார்சிக்காரர்கள் முதலில் குஜராத்தில் வந்த போது நடந்த நிகழ்ச்சியை எடுத்து கூறி அவரை உணர்ச்சிக்குவியலாக்கியதையும் சொன்னார். அக்கதை பின்வருமாறு: பார்சிகள் முதல் முதலில் குஜராத்தில் வந்தபோது குஜராத் அரசர் அவர்களுக்கு ஒரு டம்ளர் நிறைய பால் கொடுத்து அனுப்பினாராம். அதாவது ஏற்கனவே குஜராத் ஹவுஸ்ஃபுல், அவர்களுக்கு இடமில்லை என்று கோடி காட்டியுள்ளார். பார்சிக்காரர்களோ அந்தப் பாலில் சர்க்கரையை கலந்து திருப்பி அனுப்ப, அரசர் மனம் மாறினாராம். அதாவது சர்க்கரை போல பார்சிக்காரர்கள் குஜராத்தின் தரத்தை உயர்த்துவார்கள் என்பதுதான் அவர்கள் செய்ததன் பொருள்.

நரேந்தர் மோடி முன்னேற்றப் பாதையில் செல்லும் அவசரத்தில் உள்ளார். அவரை விட்டால் பிஜேபிக்கு அத்வானியைத் தவிர வேறு பெரிய தலைவர்கள் இல்லை என்பதுதான் நிஜம். தீவிரவாதத்தை ஒழிக்க அரசியல் சாராத கடும் நடவடிக்கைகள் வேண்டும் என அவர் உறுதியாக நம்புகிறார். தில்லியில் குண்டு வெடிக்கலாம் என்பதை அவர் முன்கூட்டியே பிரதமருக்கு கூறியும் தக்க ஏற்பாடுகள் செய்யாது கோட்டை விட்டனர் என்று வருந்தினார் அவர். அவரது இந்த உறுதியை நான் விதந்தோதுகிறேன். தீவிரவாதத்தை சகித்து கொள்ள கிஞ்சித்தும் அவர் விரும்பவில்லை என்பது அவர் நடவடிக்கைகளிலிருந்து தெரிகிறது. சிறுபான்மையினரை அழிக்க அவர் முயல்கிறார் என சிலர் குதர்க்கமாக பேசினாலும் அவர் என்னவோ தெளிவாகத்தான் உள்ளார். சட்ட ஒழுங்கில் அவர் எந்த சமரசமும் செய்வதாக இல்லை.

மோடியின் வீட்டிலிருந்து திரும்பும்போது கார் டிரைவரிடம் மோடி பற்றி பேசினேன். மோடி கடவுள் என்னும் ரேஞ்சில் அவர் பேசினார். மோடிக்கு முன்னால் குஜராத்தில் ஒன்றுமே சரியாக இல்லை. சரியான சாலைகள் இல்லை, மின்சாரம் இல்லை, கட்டுமான வசதிகள் இல்லை. ஆனால் இன்றோ மின்சாரத்தில் உபரி உற்பத்தியை குஜராத் எட்டியுள்ளது. இந்தியாவில் மற்ற எல்லா மாநிலங்களுக்கும் சேர்ந்தாற்போல் வரும் புது தொழில்களை விட அதிகமாக குஜராத்தில் வருகின்றன. பன்னாட்டு நிறுவனக்கள் முதலீடு செய்ய அதிகம் விரும்பும் மானிலம் குஜராத். அதே சமயம் அரசின் செயல்பாடுகளில் இருக்கும் நேர்மை மற்ற மானிலங்களில் இல்லை.

YPO (Young President's Organisation) உறுப்பினர்கள் கூட்டத்துக்கு பிறகு அவர்களில் பலரிடம் மோடி பற்றி கேட்க எல்லோருமே ஒருமுகமாக மோடியை கடவுள் என்றே கூறினர்.

மேலும் அவர்கள் கூறியதாவது. ஐந்து மோடிகள் இருந்தால் இந்தியா மிகச் சிறந்த நாடாக உருவெடுக்கும் என்று. இது குஜராத்திய மிகைப்படுத்தலா என்று தெரியாது. ஆனால் ஒன்று நிச்சயம். அவரது குறைபாடுகளையும் மீறி நாட்டில் நல்ல மாறுதல்களை கொண்டுவர மோடி போன்றவர்கள் இன்றியமையானவர்கள். இன்னும் பல மோடிகள் நாட்டுக்கு தேவை”!

மீண்டும் டோண்டு ராகவன். இதையெல்லாம் நான் எப்போதோ பதிவாக போட்டாகி விட்டது:

சும்மா குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டுவதை நிறுத்துங்கள்.

ஹாஜியார் நலமா? அவருக்கு என் வணக்கங்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

11/01/2011

மொழிபெயர்ப்பாளர்கள் பற்றி மற்றவர் வைத்திருக்கும் சில வேடிக்கையான எண்ணங்கள்

எனது இந்தப் பதிவில் இது பற்றி பின்னால் தனிப் பதிவு போடப்போவதாக கூறியிருந்தேன். ஆகவே இப்பதிவு.

முதலில் அந்த ஸ்ரீலங்கா வாடிக்கையாளரையே எடுத்துக் கொள்வோம்.

1. துபாஷி வேலை விட்டு விட்டு நடந்தது. எனது குழுவினருடன் காரில் சென்று பல சப்ளையர்களை கண்டு அவர்கள் பேசுவதற்கு துணையாக துபாஷி செய்ய வேண்டியிருந்தது. அப்போதுதான் அந்த வாடிக்கையாளர் கூறினார், “நடுவில் சும்மாத்தானே இருக்கிறீர்கள். அந்த நேரத்துக்கு நீங்கள் சார்ஜ் செய்யக் கூடாது” என்றார். என் சக மொழிபெயர்ப்பாளர் என்னைப் பார்க்க, நான் புன்முறுவலுடன் கூறினேன், “அப்படியானால் அவ்வாறு சும்மா இருக்கும் நேரத்தில் நாங்கள் வீடுவரைக்கும் சென்று வருகிறோம். நீங்கள் கார் ஏற்பாடு செய்யுங்கள்” எனக் கூற அவர் அமைதியானார். நாங்கள் வந்து விட்டோம், எங்க்ளை பயன் படுத்திக் கொள்வது மகனே உன் சமத்து. என்பதுதான் அதற்கு பொருள்.

2. ரெசிடன்சி டவர்ஸில் நல்ல 5-ஸ்டார் டின்னர் தருவதற்காகவாவது நாங்க்ள் ரேட்டைக் குறைக்க வேண்டும் எனக்கூற, “வேலை நேரத்தில் சாப்பாடு போடுவது ஒப்பந்தத்தில் ஒரு பாகம். ஆகவே அதையெல்லாம் இங்கு கொண்டு வரலாகாது. மேலும் இந்தியக் குடியரசு தலைவர் மாளிகையில் டின்னர் சாப்பிட்ட டோண்டு ராகவனுக்கு ரெசிடன்சி டவர்ஸ் எல்லாம் ஜுஜூபியே என்று ஒரு போடு போட்டதும்தான் அவர் அடங்கினார்.

3. அடிமாட்டு விலைக்கு கறவை மாட்டை எதிர்பார்ப்பவர்கள் பற்றி நான் எழுதியதை சுட்டி மூலம் பார்த்து கொள்ளுங்கள்.

4. இரு மொழிகளையும் பேசத் தெரிந்தவர்களுக்கு அவற்றிடையே மொழி பெயர்ப்புக்கு எந்தக் கஷ்டமும் இருக்காது. இது மிகப் பரவலாக இருக்கும் தவறான நம்பிக்கை. பேசுவது வேறு, எழுத்து மூலம் மொழி பெயர்ப்பது வேறு. இது தெரியாமல் சந்தியில் நிற்பவர்கள் அனேகம்.

5. கணினி மூலம் மொழிபெயர்க்க மென்பொருட்கள் உள்ளன. ஆனால் அவை கண்றாவி மொழி பெயர்ப்புகள் என்பதை யார் கூறுவது.

6. இந்த அழகில் அவ்வாறு மெஷின் டிரான்ஸ்லேஷனை நாங்கள் பிழை திருத்த வேண்டும் எனக் கேட்பார்கள். நான் உடனே எகிறி குதித்து அங்கிருந்து ஓடி விடுவேன்.

7. ஜெர்மன் மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழி பெயர்ப்பவர் ஆங்கிலத்திலிருந்து ஜெர்மனுக்கும் மொழி பெயர்க்கவியலும். இன்னொரு லூசுத்தனமான நம்பிக்கை. உலக் அளவில் மொழி பெயர்ப்பு என்பது அன்னிய மொழியிலிருந்து தாய் மொழிக்குத்தான் செய்ய வேண்டும் என்பது ஒரு கோல்டன் விதி. விதி விலக்குகள் உண்டு என்றாலும் சாதாரணமாக அவ்வாறு செய்வதைத் தவிர்க்க வேண்டும்தான்.

8. முதல் டிராஃப்டிலேயே நல்ல மொழிபெயர்ப்பு வர வேண்டும். வரவே வராது. பல முறை ரிவைஸ் செய்ய வேண்டியிருக்கும்.

9. அதிக பக்கங்கள் கொண்ட வேலைக்கு டிஸ்கவுண்ட் தரவேண்டும். இதை நான் ஒப்புக் கொண்டதே இல்லை. எவ்வளவு பக்கங்கள் இருந்தால் என்ன, கடைசி பக்கத்துக்கும் முதல் பக்கம் போலவே முழு கவனம் தேவைப்படும். Economy of scale இங்கு செல்லாது.

10. ஒரு பெரிய மேன்யுவலை பத்து பேர் சேர்ந்து பல நாட்கள் வேலை செய்து உருவாக்கியிருப்பார்கள். ஆனால் அதன் மொழிபெயர்ப்பு மட்டும் நேற்றைக்கே வேண்டும் என்பார்கள். நான் இதற்கு இடம் அளிக்க மாட்டேன் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

இவ்வாறு கூறிக் கொண்டே போகலாம். இப்போதைக்கு போதும் என நிறுத்திக் கொள்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது