நிரந்தர பக்கங்கள்

6/17/2012

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 17.06.2012

கூகள் குரோம் ரொம்பவுமே படுத்துகிறது
இந்த உலாவி வந்தது முதல் நான் அதை பயன்படுத்தி வந்திருக்கிறேன். இதுவரை பிரச்சினை இருந்ததில்லை. ஆனால் (நிஜமாகவே) சமீபகாலமாக அது அவ்வப்போது திடீரென கிராஷ் ஆகி முழு கணினியே ரீபூட் ஆகிறது. அச்சமயம் ஏதேனும் வேர்ட் அல்லது பிற கோப்புகள் திறந்திருந்தால் சிக்கல் அதிகமாகிறது.

இது சம்பந்தமாக கூகளிட்டு பார்த்ததில் பலருக்கும் (63 லட்சங்கள் மேல் ஹிட்டுகள்) இதே பிரச்சினை இருந்து வந்திருக்கிறது. சரி என இண்டெர்னெட் எக்ஸ்ப்ளோரரை பாவிக்கலாம் என்றால் பிளாக்கர்தெளிவாகவே கூறுகிறது, ”வாணாம் அதை பிளாக்கர் இப்போது சப்போர்ட் செய்வதில்லை கூகள் குரோமுக்கே போ” என்று.

நெருப்பு நரியை நான் எனது பிசினெஸ் மின்னஞ்சலுக்கு மட்டுமே பயன்படுத்துகிறேன். பிளாக்கருக்கான மின்னஞ்சல் வேறு. ஆகவே இரண்டையும் ஒன்றாக நெருப்பு நரியில் பயன்படுத்த இயலவில்லை. இப்பிரச்சினை சம்பந்த்மாக இங்கு கூறப்படுவது எனக்கு புரியவில்லை.

என்ன செய்வது?

புதுக்கோட்டை இடைதேர்தல்
எதிர்பார்த்தது போலவே அதிமுக வெற்றி. திமுக ஆட்சி காலத்தில் பர்கூர் தொகுதி இடைதேர்தலில் அதிமுக போட்டியிடாமல் ஒதுங்கியதற்கு என்ன காரணங்களோ அதே காரணங்கள்தான் இப்போது திமுக போட்டியிடாமல் போனதற்கும் கூறப்படுகின்றன.

ஒன்றுக்கொன்று ஊழலில் சளைத்தவை இல்லை, இவ்விரு கட்சிகளும்.

சந்தடி சாக்கில் டெபாசிட்டாவது கிடைத்ததே என சந்தோஷப்படுகிறது தேதிமுக.

ஆந்திராவில் இடைதேர்தல்
ஆளும் கட்சி படுதோல்வி அடைந்திருப்பது ஆறுதலாக உளளது. அதற்காக ஜெகன்மோகன் ரெட்டி நல்லவர் என்றெல்லாம் சொல்ல மாட்டேன். பொது தேர்தல் வரட்டும், இருக்கு தமாஷ்.

யாருடைய கலை?
ஜெயமோகனின் இது சம்பந்தமான பதிவு சிந்தனையைத் தூண்டுகிறது.

அவர் கூறுகிறார்:
கலையும் இலக்கியமும் மெய்யியலும் ஒரு சமூகத்தின் உச்சியில் நிகழ்பவை. ஏதோ ஒருவகையில் மூலதனம் மையத்தில் குவிந்து அதனால் உருவாக்கப்பட்ட ஒரு சமூகக்கட்டுமானமே அவற்றை உருவாக்கிப் பேண முடியும்.
அந்த மூலதனக்குவிப்பை சமூக உருவாக்கத்தின் இன்றியமையாத ஒரு செயல்பாடாக காணலாம். செல்வம் அவ்வாறு குவிக்கப்படுகையிலேயே அது மூலதனமாகிறது. மூலதனமே சமூகத்தை உருவாக்கமுடியும். நாமறியும் எல்லாமே அவ்வாறு உருவாகிவந்தவைதான்.
அதையே கீழ்மட்டத்தில் உழைப்பாளிகளால் உருவாக்கப்பட்ட செல்வம் அதிகாரத்தால் சுரண்டப்பட்டு மையத்தில் குவிக்கப்படுகிறது என்றும் சொல்லலாம். அந்தக்கோணத்தில் பார்த்தால் உலகில் உள்ள எல்லா கலைகளும் எல்லா சிந்தனைகளும் எல்லா சமூகக் கட்டமைப்புகளும் சுரண்டல் மூலம் உருவாக்கப்பட்டவைதான்.
இடதுசாரிகள் தங்களுக்குச் சௌகரியமான முறையில் இந்த பார்வையை விரித்துக்கொள்வார்கள். அதைத்தான் நான் சுட்டிக்காட்டினேன். தங்களுக்குப் பிடிக்காத ஒன்றை, தாங்கள் அழிக்க விரும்பும் ஒன்றை அவர்கள் சுரண்டலின் சின்னம் என்பார்கள் தங்களுக்கு பிடித்தமானவையும் தாங்கள் உருவாக்குபவையும் எல்லாமே அதேபோல சுரண்டலின் மூலம் உருவானவை அல்லவா என சிந்திப்பதை வசதியாக விட்டுவிடுவார்கள்”.
அதானே. கம்யூனிசத்தை தொழிலாள வர்க்கத்தின் சர்வாதிகாரம் என்றுதானே கம்யூனிஸ்டுகள் கூறிவந்தனர்? உக்ரைனில் நடந்த நிலப்புரட்சிக்கு பின்னால் எத்தனை லட்சக்கணக்கான சாவுகள்?

வினவின் கள்ள மௌனம்
இப்போது வினவின் இச்செயல்பாடு நினைவுக்கு வருகிறது.
வேலை வேண்டுமா கொலை செய் என்னும் பதிவில் உலகமயமாக்கலால் போட்டி மிகுந்து கொலைகள் அதிகமாகின்றன என பொருள்பட எழுதிய அப்பதிவில் நான் கம்யூனிச உதாரணத்துடன் பின்னூட்டமிட்டால், என் பின்னூட்டத்துக்கு பிறகு வேறு பின்னூட்டம் லேது.

அதே போல இந்திய நடுத்தர வர்க்கம் வீட்டு வேலைக்காரர்களை கொடுமைபடுத்துகிறது என்று கூறும் பதிவில் நான் இந்திய நடுத்தரவர்க்கத்தை மட்டும் ஏன் குறி வைக்கிறீர்கள், உங்கள் தலைப்பே தவறு என்று இட்ட பின்னூட்டத்துக்கும் பதில் இல்லை.

கம்யூனிச அரசுகள் ரொட்டீனாக செய்யும் உளவு வேலைகளை மறந்து, வீட்டு வாடகைக்காரகளின் தகவல்களை போலீசுக்கு தர வேண்டும் என அதிமுக அரசு ஆணையிட்டதை கண்டித்து அதை பாசிச அரசு என அழைத்த இப்பதிவில் நான் இட்ட பின்னூட்டங்களுக்கு வினவின் அல்லக்கைகளே பதிலளித்தனர். வினவு புத்திசாலித்தனமாக வழக்கம்போல கள்ள மௌனம் சாதித்து விட்டது.

அன்புடன்,
டோண்டு ராகவன்





4 comments:

  1. Try using EPIC browser or try using latest Internet explorer

    ReplyDelete
  2. As was expected, you are back to square no.1, writing on politics. You left writing on what happened to Rama, Sita in uthara kanda of Ramayana ???

    subbu thatha

    ReplyDelete
  3. //
    நெருப்பு நரியை நான் எனது பிசினெஸ் மின்னஞ்சலுக்கு மட்டுமே பயன்படுத்துகிறேன். பிளாக்கருக்கான மின்னஞ்சல் வேறு. ஆகவே இரண்டையும் ஒன்றாக நெருப்பு நரியில் பயன்படுத்த இயலவில்லை. இப்பிரச்சினை சம்பந்த்மாக இங்கு கூறப்படுவது எனக்கு புரியவில்லை.
    //

    இதெல்லாம் ரொம்பவுமே டெக்னிகல் விசயம் தான். இது சரியில்லையா...அடுத்தது வேறு உலாவியைப் பயன்படுத்தவேண்டியது தான்.

    பழையபடி இண்டர்னெட் எக்ஸ்ப்ளோரருக்கே திரும்பிவிடுங்கள். அல்லது ஓபெரா என்று ஒரு உலாவி உள்ளது. அதை பயன்படுத்திப் பார்க்கவும். ஒபெராவும் ஃபயர்ஃபாக்ஸ் போல உலாவி தான்.

    ReplyDelete
  4. இரண்டு மெயில் முகவரிகளும் ஜிமெயில் எனில் தனித்தனியாக வேறு வேறு டேப்களில் திறக்கலாமே...

    வலது மேல் மூலையில் செட்டிங்கில் பாருங்க..

    ReplyDelete