tag:blogger.com,1999:blog-9067462.post111196397468564120..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: இரட்டை டம்ளர் முறைdondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger57125tag:blogger.com,1999:blog-9067462.post-49131519963238583372012-08-01T14:26:03.088+05:302012-08-01T14:26:03.088+05:30பொருளாதாரத்தில் முன்னேறிய தலித் அதே இனத்தை சேர்ந்த...பொருளாதாரத்தில் முன்னேறிய தலித் அதே இனத்தை சேர்ந்த பொருளாதரத்தில் பின்தங்கியவர்களை அடிமை மனப்பான்மையோடு நடத்தும் சூழ்நிலையில் போராட்டத்தை யாரை நோக்கி தொடர்வது.மேலும் பெரும்பான்மையோரிடம் உள்ள சோம்பேறிதனமே அடிமைகளை எப்படி உருவாக்குவது என்று சிந்திக்க தூண்டுகிறது என நினைக்கிறேன்.விலங்குகளை தவிர இழப்பதற்கு என்ன இருக்கிறது என்ற எண்ணம் வராமலிருக்கக் காரணம் விலங்குகளை தவிர்த்தும் ஏதோ இருக்கிறது என்பதாகத் தானே இருக்கும்.நீங்கள் வளர்ந்த விதம் உங்களை பகிஷ்கரிப்பு போன்ற அகிம்சை வழியில் சிந்திக்கத் தூண்டுகிறது.இதற்கு சைக்கிளிலேயே வருகிறேன் என்று ஒரு சம்பவத்தில் கூறியதை உதாரணமாக கொள்ளலாம்.அதனை உடற்பயிற்சியாய் எடுத்துக் கொள்ளலாம் என நீங்கள் சமாதானாமாக்கி கொண்டீர்கள்.இந்த மனநிலை பாதிக்கப் படுபவர்களிடம் குறைவுதானே.பின்வாங்குதல் அவமானதாக கருதப்படுகிறதே ஒழிய அதுவும் ஒரு போர்தந்திரம் என கற்பிக்க படவில்லை.இலக்கை நோக்கிய தொடர்ச்சியான அகிம்சை போராட்டம் இழப்பு குறைந்த ஒரு போர் என நான் நினைக்கிறேன்.இலக்கை நோக்கிய பயணம் சீர்குலையும் வண்ணம் இடையில் மாமிசம்,மது,மாது என எத்தனை இடைஞ்சல்களை உருவாக்கியுள்ளது வர்ணாசிரமம்(கோபம் கொள்ளாதீர்கள்). இப்போது எனக்கே தெரியவில்லை எதனை நோக்கி இந்த பின்னூட்டத்தை எழுத ஆரம்பித்தேன். இப்போது எங்கே நிற்கிறேன் என்று.பொருளாதாரத்தில் வரும் "vicious circle of poverty" போன்றது தான் இதுவும்.சுகத்திற்கு அடிமை பட்ட மனம் அடிமை தனத்தினை ஆதரிக்கவே செய்யும்.இது இட ஒதுக்கீட்டினால் மேன்மையடைந்த தாழ்த்த பட்டோர்களிடமும் இருக்கிறது.தாழ்த்தப்பட்ட அரசு ஊழியர்கள் தங்கள் சம்பளம்,பணி உயர்வு போன்றவற்றிக்கு அணிதிரண்டு போராடுவது போல் தங்கள் இன உயர்விற்கு அணி திரள்கிறார்களா?.சேக்காளிhttps://www.blogger.com/profile/07121995889524404912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1168223880101667702007-01-08T08:08:00.000+05:302007-01-08T08:08:00.000+05:30தருமி அவர்களது இப்பதிவில் நான் இட்ட இந்தப் பின்னூட...தருமி அவர்களது <A HREF="http://dharumi.blogspot.com/2006/12/194-lets-hit-nail.html" REL="nofollow">இப்பதிவில்</A> நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது.<BR/><BR/>தலித்துகள் அடக்குமுறைக்கு உள்ளாகிறார்கள் என்பது உண்மையே. அதே போல 19/ஆம் நூற்றாண்டின் இறுதியில் நாடார்கள் அடக்குமுறைக்கு உள்ளானதும் சரித்திர உண்மையே. இப்போது பார்ப்பனர்கள் உள்ளாவதும் நடக்கிறதுதான்.<BR/><BR/>அதை சம்பந்தப்பட்ட சாதியினர் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதையும் பார்ப்போமா?<BR/><BR/>முதலில் நாடார்கள். அவர்கள் அடக்குமுறைக்கு உள்ளான காலத்தில் சமுதாய பிரக்ஞை என்றெல்லாம் ரொம்ப கிடையாது. தாழ்த்தப்பட்ட சாதியினரை ஒடுக்குவது என்பது சர்வ சாதாரணமாக நடைபெற்றது. அந்தக் காலக் கட்டத்தில் மிகக் கொடுமையான முறையில் அடக்கப்பட்ட நாடார்கள், இனிமேல் அடங்கிக் கிடப்பதில்லை என தீர்மானித்தனர். தனிப்பட்ட மன வேறுபாடுகளைக் கண்டுகொள்ளாமல் ஒன்றுபட்டனர். தங்கள் சமுதாய விஷயங்களைத் தாங்களே தீர்த்துக் கொள்ளத் தலைப்பட்டனர். <BR/><BR/>நான் ஏற்கனவே இட்ட, <A HREF="http://dondu.blogspot.com/2006/11/3.html" REL="nofollow">காமராஜ் அவர்கள் பற்றிய ஒரு பதிவில்</A> தங்கள் குழந்தைகள் படிக்க வேண்டும் என்ற அவாவில் ஒவ்வொரு நாடார் குடும்பத்தினரிடமும் ஒரு பிடியரிசி தினமும் பெற்று அதை சேர்த்து, விற்று, பள்ளிகளை நிறுவியதை குறிப்பிட்டுள்ளேன். பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் படித்தது இப்பள்ளியில்தான். பல பத்தாண்டுகள் போராடி வந்த நாடார்கள் இப்போது இருக்கும் நிலையைப் பாருங்கள். <BR/><BR/>பார்ப்பனர்கள் விஷயம் வேறு. அவர்கள் அதிகம் ஒடுக்கப்பட்டது தமிழகத்தில் மட்டுமே. அதுவும் ஏனைய உயர்சாதியினர் தாங்கள் தலித்துகளை வன்கொடுமை செய்வதை மக்கள் கவனத்திலிருந்து திசை திருப்புவதே அதன் முக்கிய நோக்கம். ஆனால் பார்ப்பனர்கள் இந்த விளையாட்டுக்கு வரத் தயாராயில்லை. இங்கு வாய்ப்புகள் குறைவா போடா ஜாட்டான் என்று வேறு இடங்களுக்கு செல்கின்றனர். நான் எனது <A HREF="http://dondu.blogspot.com/2006/03/blog-post_17.html" REL="nofollow">இப்பதிவில்</A> கூறியது போலத்தான் நடக்கிறது.<BR/><BR/>ஆனால் தலித்துகள்? முதலில் அவர்கள் ஒன்றுபட வேண்டும். அவர்களுக்குள்ளேயே ஏற்றத்தாழ்வுகள் உண்டு. அதை மறக்க வேண்டும். நிலைமையின் தீவிரம் புரிந்து செயலாற்ற வேண்டும். தன் கையே தனக்குதவி என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு முன்னுதாரணமாக நாடார்கள் உள்ளனர். பெருநகரங்களில் வாழும் பொருள் வசதி படைத்த தலித்துகள் கிராமங்களில் ஒடுக்கப்படும் தங்கள் சகோதரர்களை மறக்கலாகாது. அவர்களையும் நகரங்களுக்கு குடிப்பெயரச் செய்து வேலை தேட உதவி புரிய வேண்டும். முக்கியமாக இவை எல்லாம் நட்க்கும்வரை குடிப்பதில்லை என்று உறுதி செய்து கொள்ள வேண்டும். பல இடங்களில் பிள்ளைகளை, பெண்களை வேலைக்கனுப்பி அவர்கள் கூலியை குடித்தே அழிக்கும் ஆண்கள் திருந்தவேண்டும்.<BR/><BR/>அவமானங்களை ஒருக்காலும் பொறுக்கலாகாது. <A HREF="http://dondu.blogspot.com/2006/03/blog-post_08.html" REL="nofollow">இரட்டை தம்ளர் முறையை எதிர்க்கொள்ள நான் போட்ட பதிவை </A>படித்த ஒரு தலித் என்னிடம் அரசே அந்த டீக்கடைகளை பொதுப் பணத்திலிருந்து நிறுவித் தர வேண்டும் என்று கூறினார். இது அவர்களது கௌரவத்துக்கு அழகல்ல என்று நான் கூறியதை அவர் புரிந்து கொள்ளவில்லை. அதற்கு வந்த பின்னூட்டங்களும் எல்லாமே மற்றவர்கள்தான் செய்ய வேண்டும் என்று தலித்துகளை அவமானப்படுத்துவது போன்ற பின்னூட்டங்களையே தந்தனர். ஆக, தலித்துகள் முன்னால் இருக்கும் பிரச்சினை மிக பயங்கரமான அளவில் உள்ளது.<BR/><BR/>மறுபடியும் கூறுவேன். தலித்துகள் முன்னேற வேண்டும் அவ்வளவுதான். அதற்கு நான் கூறிய யோசனை முதலில் சுயமரியாதையை வளர்த்துக் கொள்ளுங்கள் என்று. இழிவு செய்யும் கிராமச் சூழ்நிலையை விட்டு விலகுங்கள். எதுவாயினும் பாதிக்கப்பட்டவர்களாக எதாவது செய்தால்தான் முன்னேற முடியும் என்று நான் அவர்களிடம் கூறுவேன். அது வேண்டாம் மற்றவர்கள்தான் எங்களுக்கு உதவ வேண்டும் என்று அவர் சோர்ந்திருப்பாராயின் ஒன்றும் காரியத்துக்காகாது என்பதுதான் நான் கூற விரும்புவது.<BR/><BR/>இப்பின்னூட்டத்தின் நகலை இரட்டை தம்ளர் முறை பற்றி இட்ட <A HREF="http://dondu.blogspot.com/2006/03/blog-post_08.html" REL="nofollow">எனது பதிவில் </A>பின்னூட்டமாக இடுவேன்.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1143222905334609522006-03-24T23:25:00.000+05:302006-03-24T23:25:00.000+05:30"உங்களுக்கு சுய நிர்ப்பந்தங்கள் இருந்த மாதிரி தலித..."உங்களுக்கு சுய நிர்ப்பந்தங்கள் இருந்த மாதிரி தலித்துகளுக்கும் இருக்கும்தானே."<BR/><BR/>So what? That is life, struggling against the odds, the more there are problems, the more resolute one should be. <BR/><BR/>You may have thousand and one reasons for not doing a thing to uplift yourself but at the end of the day, you will suffer if you don't look after yourself.<BR/><BR/>Regards,<BR/>Dondu N.Raghavandondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1143222557644103822006-03-24T23:19:00.000+05:302006-03-24T23:19:00.000+05:30\\\\\ மேற்கொண்ட இட மாற்றம் வேலை மாற்றம் எல்லாமே நா...\\\\\ மேற்கொண்ட இட மாற்றம் வேலை மாற்றம் எல்லாமே நான் என் நலனுக்காக எடுத்த முடிவுகள்தான். ஐ.டி.பி.எல்லில் இருக்க முடிந்த வரை இருந்ததும் என்னுடைய நலன்களுக்கு ஏற்ப எடுத்த முடிவுதான். நான் எங்குமே ஒடுக்கப்படவில்லை. ....\<BR/><BR/>நீங்கள் ஒடுக்கப்பட்டீர்கள்.அதனால்தான் அவ்வாறு செய்தீர்கள் என்று நான் சொல்லவில்லை.<BR/>உங்களுக்கு சுய நிர்ப்பந்தங்கள் இருந்த மாதிரி தலித்துகளுக்கும் இருக்கும்தானே.<BR/><BR/>அப்பாடா! இனிமேல் அடுத்த வருடம் இதையே நீங்கள் மீள் பதிவு செய்யும்போது பின்னூட்டம் இட்டால் போதும்! நிறைய வேலை இருக்கிறது. மற்ற பதிவு பின்னூட்டத்திற்கெல்லாம் பதில் போட வேண்டும்!சாமான்யன் Siva(stocksiva.blogspot.com)https://www.blogger.com/profile/08877847954128133090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1143119530179056042006-03-23T18:42:00.000+05:302006-03-23T18:42:00.000+05:30"நமக்கு ஒரு நியாயம். அடுததவர்க்கு ஒரு நியாயமா?"இந்..."நமக்கு ஒரு நியாயம். அடுததவர்க்கு ஒரு நியாயமா?"<BR/>இந்தப் பதிவு தலித்துகள் இரட்டை டம்ளர் முறையில்ருந்து எப்படி மீண்டு வருவது என்பது பற்றி. நான் கூறியது அதிலிருந்து வெளி வர பாதிக்கப்பட்டவர் முயற்சி செய்ய வேண்டும் என்பது. எதிர் கருத்துடையவர்கள் கூறுவது அரசுதான் எல்லாம் செய்ய வேண்டும் என்று. நான் கூறுவது அவ்வாறு 57 ஆண்டுகளாகப் பார்த்து என்ன முன்னேற்றம் வந்தது என்று.<BR/><BR/>நான் மேலும் இப்போத்கு கூறுவது, உங்களிடம் ஏதாவது புது யோசனை இருந்தால் கூறுங்கள் என்று. அதை விடுத்து என்னுடைய உதாரணத்தை எல்லாம் ஏன் இழுக்க வேண்டும்? நான் இப்போது கூறுகிறேன், நான் மேற்கொண்ட இட மாற்றம் வேலை மாற்றம் எல்லாமே நான் என் நலனுக்காக எடுத்த முடிவுகள்தான். ஐ.டி.பி.எல்லில் இருக்க முடிந்த வரை இருந்ததும் என்னுடைய நலன்களுக்கு ஏற்ப எடுத்த முடிவுதான். நான் எங்குமே ஒடுக்கப்படவில்லை. <BR/><BR/>நான் செய்தது என்னவென்றால் அசௌகரியமான சூழ்நிலை வந்தபோது அதை எனக்கு சாதகமாகவே மாற்றிக் கொண்டதுதான்.<BR/><BR/>டீக்கடை யோசனை கூறியதன் காரணமே குறைந்த முதலீட்டில் செய்யலாம், இரட்டை டம்ளர் அவமானத்தைத் தடுக்கலாம் என்பதாலேயே. கிராமத்தை விட்டு நகருக்கு வந்து சலூன் வைத்த நாவிதர்கள் ஒகோ என்று பொருள் ஈட்டுகிறார்கள். நகரத்திற்கு வந்து என் வீட்டின் அருகில் இஸ்திரி போடும் வண்ணார் ஜாதியினர் ஒரு நாளைக்கு 500 ரூபாய்க்கு குறைவில்லாது டர்ண் ஓவர் சாதிக்கிறார்கள். செலவு போக கண்டிப்பாக 400 ரூபாய்கள் தேறும். எங்கு முன்னேற முடியுமோ அங்கு செல்லுங்கள் என்றுதான் கூறுவேன். அவர்கள் நகரத்துக்கு வந்தால் இங்கிருப்பவர்கள் என்ன செய்வார்கள் என்பதெல்லாம் மேக்ரொ கவலைகள். முன்னேறத் துடிப்பவர்கள் படவேண்டியக் கவலைகள் அல்ல.<BR/><BR/>மறுபடியும் கூறுவேன். தலித்துகள் முன்னேற வேண்டும் அவ்வளவுதான். அதற்கு நான் கூறிய யோசனை முதலில் சுயமரியாதையை வளர்த்துக் கொள்ளுங்கள் என்று. இழிவு செய்யும் கிராமச் சூழ்நிலையை விட்டு விலகுங்கள். எதுவாயினும் பாதிக்கப்பட்டவர்களாக எதாவது செய்தால்தான் முன்னேற முடியும் என்று நான் அவர்களிடம் கூறுவேன். அது வேண்டாம் மற்றவர்கள்தான் எங்களுக்கு உதவ வேண்டும் என்று அவர் சோர்ந்திருப்பாராயின் ஒன்றும் காரியத்துக்காகாது என்பதுதான் நான் கூற விரும்புவது. <BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1143118342823721742006-03-23T18:22:00.000+05:302006-03-23T18:22:00.000+05:30இதில் உனர்ச்சிவயப்படுவதற்க்கு என்ன இருக்கிறது? எப்...இதில் உனர்ச்சிவயப்படுவதற்க்கு என்ன இருக்கிறது? எப்படி செய்ய வென்டும் என்பது முக்கியம்தான். நம்மாலே ஒரு காரியம்(Changing Job/Shifting Residence from one town to other) முடியாதபோது அதையே அடுததவரை செய்யச் சொல்வது என்ன நியாயம் என்பதுதான் கேள்வி.நமக்கு ஒரு நியாயம். அடுததவர்க்கு ஒரு நியாயமா?<BR/>என்னால் முடியாதவற்றை நன் எப்போதுமே யோசனையாக சொல்லமாட்டேன்.<BR/>நீங்கள் கூறுகிறீர்கள்<BR/>////*<BR/>அவர்கள் எங்கே நான் கூறிய மாதிரி செய்து முன்னேறிவிடப் போகிறர்களே என்று நீங்கள் கவலைப்படுவதாகத்தான் எனக்கு இப்போது படுகிறது. ***////<BR/>நல்ல வேடிக்கை<BR/>தலித்துக்கள் நகரத்துக்கு வந்தால் என் போன்ரவற்களுக்குத்தன் வேலை போகப்போகிறது.<BR/>அதனல்தான் நான் கவலைபடுவதக எடுத்துக்கொள்ளுங்கள்சாமான்யன் Siva(stocksiva.blogspot.com)https://www.blogger.com/profile/08877847954128133090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1143035536100609762006-03-22T19:22:00.000+05:302006-03-22T19:22:00.000+05:30சிவா அவர்களே, நீங்கள் தேவையில்லாமல் உணர்ச்சிவசப்பட...சிவா அவர்களே, நீங்கள் தேவையில்லாமல் உணர்ச்சிவசப்படுகிறீர்கள். வாதத்தில் வெற்றிபெறுவது இங்கு நோக்கம் இல்லை. தலித்துகள் முன்னேற வேண்டும், அவ்வளவுதான்.<BR/><BR/>"நீங்கள் சொல்வது <BR/>\\\\ நாடார்கள் முன்னேறினார்களே அதே இரட்டை தம்ளர் முறையை எதிர்த்து. அவர்களை கொன்றா போட்டுவிட்டார்கள்? \\\\<BR/>இது எப்படி நடந்தது என்று முழு விபரங்கள் தெரியாமல்,அதையே தலித்துகளுக்கும் பொருத்தி பார்ப்பது சரியல்ல. நாடார்களின் எண்ணிக்கை <BR/>மற்றும் தொழில்(வியாபாரம்) காரணமாக இருக்கலாம்."<BR/>உங்களுக்கு மட்டும் முழு விபரம் தெரிந்து விட்டதா என்ன? இருக்கலாம் என்றெல்லாம் கூறுவதைவிட அதை செயல்படுத்துவதுதான் முக்கியம். ஒரு காரியத்தை ஏன் செய்யக்கூடாது என்று பக்கம் பக்கமாகக் குறிப்புகள் எழுதுவதைவிட, அக்காரியம் எப்படிச் செய்யப்பட வேண்டும் என்று மட்டும் கூறவும் என்று காமராஜ் அவர்கள் கூறியதைப் பற்றி நான் இப்பதிவில் போட்டிருப்பதைப் படிக்கவும். <BR/><BR/>நாடார்கள் என்ன செய்தார்கள் என்பதை பற்றி நான் மேலே இட்டப் பின்னூட்டத்தைப் பார்க்கவும். (March 08, 2006 7:24 PM).<BR/><BR/>கிராமத்தை விட்டு வரவேண்டும் என்று நான் கூறுவது அவர்கள் நிலையில் மாற்றம் வரவேண்டும் என்பதற்காக. எல்லோரும் உடனே வந்துவிடப்போவதில்லை. இது அதன் போக்கிலேயே நடக்க வேண்டியதுதான். நகரத்தில் இருப்பவர் எங்கு போவார் என்பது பற்றி கிராமத்தில் இருப்பவர் ஏன் கவலைப்பட வேண்டும்? அவரைப் பற்றி இதுவரை யாராவது கவலைப்பட்டார்களா என்ன? முதலில் ஏதாவது நடக்கட்டும் பிறகு பிரச்சினைகள் வந்தால் பார்த்துக் கொள்ளலாம்.<BR/><BR/>"சென்னையில் அதிகப்படியான மக்களை குறைக்க, ஏற்கனவே சென்னையில் இருப்பவர்களை, கிராமத்துக்கு அனுப்ப வேண்டியதுதான்.அப்படி <BR/>அனுப்பப்படுபவர்களில் முதல் குழுவுக்கு நீங்கள்தான் தலைவர் என்று சொல்ல வேண்டியது இல்லை!!!"<BR/>அவ்வாறு நடக்க இது என்ன போல்பாட்டின் கம்போடியாவா என்ன? திறமை இருப்பவன் பிழைத்துக் கொள்கிறான். அது பற்றி இங்கு எதற்கு பேச வேண்டும். தலித்துகளின் அவமானமான இரட்டை கிளாஸ் முறை ஒழியவேண்டும். அதற்கு நான் ஆலோசனை கொடுத்தேன். ஏற்கனவே செயல்படுத்தப்பட்டதே என்பதையும் காட்டியாகி விட்டது. அவர்கள் எங்கே நான் கூறிய மாதிரி செய்து முன்னேறிவிடப் போகிறர்களே என்று நீங்கள் கவலைப்படுவதாகத்தான் எனக்கு இப்போது படுகிறது.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1143033227849190122006-03-22T18:43:00.000+05:302006-03-22T18:43:00.000+05:30இப்போதுதான் விவாதம் சரியான திசையில் போய்க்கொண்டிரு...இப்போதுதான் விவாதம் சரியான திசையில் போய்க்கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன்.<BR/><BR/>நீங்கள் சொல்வது <BR/>\\\\ முடிந்த வரைக்கும் அவர்கள் நகரங்களுக்கு வரட்டும். கிராமப் புறங்களில் வேலைக்கு ஆள் கிடைக்காமல் குறைந்தாலே இருப்பவர்களை இழக்க <BR/><BR/>பயந்து அவர்களின் நிலையை உயர்த்தலாம் \\\<BR/><BR/>ஆஹா! மிக நல்ல யோசனை. ஏற்கனவே நகரத்தில் அந்த வேலையைச் செய்து கொண்டிருப்பவர் எங்கே போவார்? <BR/>அரசாங்கத்தால் அதே மாதிரி வேலையை கொடுக்க முடியாது. ஏற்கனவே, நகராட்சி,ஊராட்சிகளால்(நகர சுத்தி தொழிலாளர்களுக்கு) சம்பளம் <BR/><BR/>கொடுக்க முடியாமல் திணறிக் கொண்டிக்கிறார்கள்.<BR/><BR/>மெத்தப் படித்த நமக்கு வேண்டுமானால், வேறு வேலை தேடி வேறு ஊறுக்குச் செல்வது எளிதாக இருக்கலாம்.<BR/><BR/>உங்களையே எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு மொழி பெயர்ப்பாளர் வேலை நன்றாகத் தெரிந்து இருந்தும், அதில் கிடைக்கும் வருமானம் <BR/>அரசாங்க வேலையைவிட மிக அதிகம் என்று தெரிந்து இருந்தும், உங்களால் அரசாங்க வேலையை விட்டு விட்டு அதை முழு நேர வேலையாக <BR/>செய்ய முடியவில்லையே. ஏன்? உங்கள் கூற்றுப்படி டெல்லியிருந்து சென்னைக்கு வருவதற்கு தயக்கம் இருந்ததுதானே? ஏனெனில், அப்போது,<BR/>சென்னையில் client யாரும் தெரியாது.Internet/Email இருந்ததால் பிழைத்தீர்.இல்லையேன்றால், (client வேலையின் இரகசியம் காக்க) டெல்லிக்கு <BR/><BR/>விமானத்தில் சென்றுதான் வேலை செய்ய வேண்டி இருந்துதிருக்கும்!<BR/><BR/>இந்தியாவில் 60-70% மக்கள் கிராமங்கலில்தான் வசிக்கிறார்கள்.இது தமிழகத்துக்கும் பொருந்தும். பெரும்பாலும் சென்னைக்குத்தான் போக வேண்டும். <BR/><BR/>ஏற்கனவே சாலை,குடிநீர் என்று ஏகப்பட்ட பிரச்னைகளில் சிக்கியிருக்கும் சென்னைக்கு இது தேவைதான்!!! அதனால்,மக்கள் கிராமங்களிலிருந்து <BR/>நகரங்களுக்கு இடம் பெயர்வதை தடுக்க,கிராமங்களிலேயே வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.<BR/><BR/>அதற்கும், ஒரு மாற்று இருக்கிறது. சமத்துவபுரம் மாதிரி தனியாக நகரத்தை சென்னைக்கு அருகில் அமைத்து, எல்லா வசதிகளையும் செய்து தர <BR/>வேண்டும். வேறு யார்? அரசாங்கம்தான்.<BR/><BR/>சென்னையில் அதிகப்படியான மக்களை குறைக்க, ஏற்கனவே சென்னையில் இருப்பவர்களை, கிராமத்துக்கு அனுப்ப வேண்டியதுதான்.அப்படி <BR/>அனுப்பப்படுபவர்களில் முதல் குழுவுக்கு நீங்கள்தான் தலைவர் என்று சொல்ல வேண்டியது இல்லை!!!<BR/><BR/>நீங்கள் சொல்வது <BR/>\\\\ நாடார்கள் முன்னேறினார்களே அதே இரட்டை தம்ளர் முறையை எதிர்த்து. அவர்களை கொன்றா போட்டுவிட்டார்கள்? \\\\<BR/>இது எப்படி நடந்தது என்று முழு விபரங்கள் தெரியாமல்,அதையே தலித்துகளுக்கும் பொருத்தி பார்ப்பது சரியல்ல. நாடார்களின் எண்ணிக்கை <BR/>மற்றும் தொழில்(வியாபாரம்) காரணமாக இருக்கலாம்.சாமான்யன் Siva(stocksiva.blogspot.com)https://www.blogger.com/profile/08877847954128133090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1142980360057705892006-03-22T04:02:00.000+05:302006-03-22T04:02:00.000+05:30"டீக்கடை போடலாம்; ஆளையும் சேர்த்தேல்லே கொளுத்திப் ..."டீக்கடை போடலாம்; ஆளையும் சேர்த்தேல்லே கொளுத்திப் போடுவாங்க!!!!,பொலிசும் அவங்க பக்கம் தானே; தற்கொலை என்னு கேஸ் முடிங்சுடும். டீக்கடைக் குடும்பம் தெருவில்."<BR/>அப்படிங்களா. நாடார்கள் முன்னேறினார்களே அதே இரட்டை தம்ளர் முறையை எதிர்த்து. அவர்களை கொன்றா போட்டுவிட்டார்கள்?<BR/><BR/>கஷ்டம் என்று பார்த்தால் எல்லாமே கஷ்டம்தான். காரியத்தில் முதலில் இறங்கவேண்டும் அல்லவா. டீக்கடை என்பது போராட்டத்தின் ஒரு குறியீடே. சுயமரியாதையைப் பெற என்ன செய்யவேண்டுமோ அதை செய்யாமல் ஒன்றும் நடக்காது. <BR/><BR/>தலித் தலைவர்கள் முதலில் மனம் வைக்க வேண்டும். ஏதேனும் ஓரிடத்தில் சிறிய துவக்கம் செய்ய வேண்டும். தமிழகத்தின் கண் முழுக்க அத்துவக்கத்தின் மேல் இருக்கட்டும். அப்போது பார்க்கலாம், யார் கொளுத்துகிறார்கள் என்று.<BR/><BR/>இரட்டை டம்ளர் டீக்கடைகளை தவிர்ப்பது சண்டை இல்லாமல் செய்தாலே பாதி பிரச்சினை தீருமே. முடிந்த வரைக்கும் அவர்கள் நகரங்களுக்கு வரட்டும். கிராமப் புறங்களில் வேலைக்கு ஆள் கிடைக்காமல் குறைந்தாலே இருப்பவர்களை இழக்க பயந்து அவர்களின் நிலையை உயர்த்தலாம் அல்லவா. அடிமை வாழ்வைத் தவிர கிராமங்கள் அவர்களுக்கு வேறு என்ன தருகின்றன?<BR/><BR/>இந்த இடத்தில் சங்கராச்சாரியாரை எதற்கு இழுத்து பிரச்சினையை திசை திருப்ப வேண்டும்? <BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1142977551479572082006-03-22T03:15:00.000+05:302006-03-22T03:15:00.000+05:30நீங்கள் கூறும் கஷ்டங்கள் இல்லாமல் இல்லை சிவா அவர்க...நீங்கள் கூறும் கஷ்டங்கள் இல்லாமல் இல்லை சிவா அவர்களே. ஆகவேதான் என்னுடைய ஆலோசனையை இம்மாதிரி முன்வைத்தேன்:<BR/><BR/>"இந்த அவமானம் ஒழிய வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் என்பதை ஆராய வேண்டும்.<BR/><BR/>இதனால் நேரடியாகப் பாதிக்கப்படுபவர்கள் தங்கள் தரப்பிலிருந்தே ஏதாவது செய்ய முடியுமா? உதாரணத்துக்கு அம்மாதிரி இரட்டை தம்ளர் கடைகளில் டீ வாங்காமல் தவிர்த்தல். பொருளாதார பகிஷ்காரம் ஒரு சக்தி வாய்ந்த ஆயுதம் அல்லவா? முடியுமா என்று தைரியமில்லாமல் பார்ப்பதை விட முடிய வேண்டும் என்று உறுதியுடன் இருக்க வேண்டாமா? அவர்களே தங்கள் குடியிருப்பில் ஒரு சிறு டீக்கடை அமைத்துக் கொண்டு அங்குதான் டீ குடிப்பது என்றுக் கட்டுப்பாட்டுடன் இருந்தால் என்ன நடக்கும்? மற்றவர்கள் தங்களுக்காக ஏதேனும் செய்வார்கள் என்று எதிர்ப் பார்ப்பதை விட்டு விட்டு எங்காவது ஒரு இடத்தில் துவங்கி வெற்றி பெற்றால் அதுவே அரசின் பல சட்டங்களை விட அதிகப் பாதுகாப்பு தரும் என நம்புகிறேன். இட ஒதுக்கீடு பெற்று முன்னுக்கு வருபவர்கள் தாங்கள் பெறும் சம்பளத்தில் ஒரு சிறு பகுதியைக் கொடுத்தாலே கணிசமானத் தொகை வருமே. அவர்களின் பிரதிநிதிகள் இம்மாதிரி யோசிக்க ஆரம்பித்தாலே ஒரு உத்வேகம் பிறக்காதா?" <BR/><BR/>இதையும் சொன்னேன்:<BR/><BR/>"என்னுடைய ஆசை என்னவென்றால், திருமா போன்ற தலைவர்கள் தேர்தல் வரும் இச்சமயத்தில் நான் கூறிய யோசனையை செயல்படுத்திப் பார்க்கலாம். ஏதேனும் ஓரிடத்தில் தனி டீக்கடை வந்தால்கூட நல்லதுதான். தேர்தல் நேரத்தில் தலித்துகளை விரோதித்துக் கொள்ள யாவரும் தயங்குவர். இதுவே திட்டத்தை ஆரம்பிக்க ஒரு நல்ல தருணம்." <BR/><BR/>பின்னூட்டமிட்டப் பலரும் அரசே சட்டத்தை இன்னும் கடுமையாகச் செயல்படுத்தவேண்டும் என்று கூறினர். அவர்களுக்கு நான் கூறுவது இதுதான். "57 ஆண்டுகளாக செய்யாததையா இப்போது அரசு செய்யும் என எதிர்பார்க்கிறீர்கள்."<BR/><BR/>ஏற்கனவே நாடார்களின் உதாரணம் கண்முன்னால் இருக்கும்போது என்ன தயக்கம்?<BR/><BR/>தனி டீக்கடையை ஒரு சண்டையின்றி மௌனமாக செய்வதே பலன் தரும்.<BR/><BR/>நீங்கள் கூறுகிறீர்கள்: "எங்கும் பாதிக்கப்பட்டவர்தான் முதல் அடி எடுத்து வைக்க வேண்டும் என்பதில் 2வது கருத்து இல்லை."<BR/>அதைத்தான் நானும் கூறினேன்.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1142971725463148562006-03-22T01:38:00.000+05:302006-03-22T01:38:00.000+05:30நான் நேற்று இட்ட பின்னூட்டத்தின் தொடர்ச்சி[நேற்றுந...நான் நேற்று இட்ட பின்னூட்டத்தின் <BR/><BR/>தொடர்ச்சி[நேற்றுநேரமாகிவிட்டபடியால் <BR/><BR/>தொடற முடியவில்லை].அதனால் இதை <BR/><BR/>அதன் தொடற்சியாகப் போடவும்.<BR/><BR/>நீங்க சொன்ன வழிமுறை இத்தனை <BR/><BR/>வருடங்களாக தலித்துகளுக்கு தெரியாமல் <BR/><BR/>போயிருக்குமா?<BR/><BR/>எல்லா இடங்களிலும் தலித்துகள் பலவீனமாக இருக்கும்போது ஆதிக்க சாதியினரை எதிர்த்து செயெல்படுத்துவது எப்படி சாத்தியாமாகும்? <BR/><BR/>வெங்கட்டின் கருத்துடன் ஒத்துப் போகிறேன். எங்கும் பாதிக்கப்பட்டவர்தான் முதல் அடி எடுத்து வைக்க வேண்டும் என்பதில் 2வது கருத்து இல்லைசாமான்யன் Siva(stocksiva.blogspot.com)https://www.blogger.com/profile/08877847954128133090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1142879745761491712006-03-21T00:05:00.000+05:302006-03-21T00:05:00.000+05:30டோண்டு அவர்களே, தாங்கள் யோசனை மிக்க சரியானதே. அதனா...டோண்டு அவர்களே, தாங்கள் யோசனை மிக்க சரியானதே. அதனால்தான், எங்களூரில் நடந்தவற்றையும் என் பின்னோட்டத்தில் சேர்த்தேன். என்னிடம் ஒரு பழக்கம் - எதையுமே செயல்படுத்துதலில் உள்ள கஷ்ட்,நஷ்டங்களை பார்ப்பது.அவ்வளவுதான்.சாமான்யன் Siva(stocksiva.blogspot.com)https://www.blogger.com/profile/08877847954128133090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1142819113193490492006-03-20T07:15:00.000+05:302006-03-20T07:15:00.000+05:30எனக்கு கே.ஜி. சுப்பிரமணியன் என்பவரிடமிருந்து வந்த ...எனக்கு கே.ஜி. சுப்பிரமணியன் என்பவரிடமிருந்து வந்த மின்னஞ்சலை கீழே தருகிறேன். அவர் த்ங்கிலீஷில் தட்டச்சு செய்ததி தமிழுக்கு மாற்றியுள்ளேன்.<BR/><BR/>Dear Dondu,<BR/><BR/>நான் ஒரு தமிழ்மணம் ரசிகன். (கடந்த மூன்று மாதங்களாக)<BR/>தங்களின் பல பதிவுகளை ரசித்திருக்கிறேன். <BR/>இந்தப் பதிவில் தாங்கள் இரட்டை டம்ளர் முறை பற்றி பேசினாலும், இது சமூகத்தில் மிகவும் தாழ்ந்த நிலையில் உள்ளவர்களின் முன்னேற்றம் பற்றிய உங்கள் எண்ணத்தின் வெளிப்பாடாக, அதற்கான ஒரு செயல் முறையாக இதை முன் வைக்கிறீர்கள் என்று புரிந்து கொள்கிறேன். <BR/> <BR/>இவ்வாறு கீழ்நிலையில் உள்ளோர் பெருமளவு முன்னேற்றம் காண முடியாமல் இருப்பதற்கு மிக முக்கிய காரணம் என்று நான் கருதுவது லஞ்ச ஊழல்தான் (CORRUPTION).<BR/> <BR/>அரசு எவ்வளவோ முயற்சிகள் எடுத்தாலும், திட்டங்கள் கொண்டு வந்தாலும், அதன் பலன்கள் உரியவருக்கு போய் சேராமல், வழிலேயே சுருட்டப்பட்டுவிடுவது, இவர்களின் நிலையில் பெரும் மாற்றம் ஏற்படாமல் இருப்பதற்கு காரணமாக இருக்கிறது.<BR/> <BR/>அரசு செய்வது போதாது என்பது உண்மை. ஆனால் இதுவரை செய்யப்பட்ட முயற்சிக்கும் கிடைத்த பலனுக்கும் சம்பந்தம் இல்லை என்னும் அளவுக்கு நிலைமை இருப்பதற்கு மிக முக்கியக் காரணம் லஞ்ச ஊழல்தான். (I remember that Rajiv gandhi once commented that only 15% of the money allocated/spent on such schemes actually reach the true beneficiaries)<BR/> <BR/>கல்வி, அதன் மூலம் கிடைக்கக் கூடிய அறிவு, வாய்ப்புகள், இவற்றின் பலனாக பெறக்கூடிய பொருளாதார முன்னேற்றம் ஆகியவையே, இம்மக்களின் முன்னேற்றத்துக்கும, அவர்களின் நிலை உயர்வதற்கும் வழி செய்ய முடியும். <BR/><BR/>சாதி சான்றிதழ் வாங்குவது முதல், கிராம சுகாதார மையங்களில் மருத்துவர்கள் மற்றும் மருந்துகள் இல்லாமல் இருப்பதற்கு, பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாமல் இருப்பது என்று கல்வி, உடல்நலம் போன்ற அடிப்படை வசதிகூட இவர்களுக்கு கிடைக்காமல் போய் விடுகிறது. <BR/>40 ஆண்டு கால திராவிட ஆட்சியில், தமிழகத்தில் லஞ்ச ஊழல் ஒரு அருங்கலையாக பரிணாமித்திருக்கிறது. இப்பிரச்சினை குறித்துப் பேசுவோர் ஏன் இதைபற்றிப் பேசுவதில்லை என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.<BR/> <BR/>அதே நேரத்தில் அவரவர் முன்னேற்றத்துக்கு அவரவர்கள்தான் முயற்சி எடுக்க வேண்டும் என்ற தங்கள் கருத்தில் நான் உடன்படுகிறேன். மற்ற முன்னேறியவர்கள் (எந்த சாதியாக இருந்தாலும்) அதற்கான உதவிகளை செய்ய முன் வர வேண்டும்.<BR/> <BR/>எல்லோரும் வாழட்டும். இந்தியா வளமான, வலிமையான நாடாக உருவெடுக்கட்டும்.<BR/> <BR/>K.G.Subbramaniandondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1142739679398494522006-03-19T09:11:00.000+05:302006-03-19T09:11:00.000+05:30தங்கமணி அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின...தங்கமணி அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://bhaarathi.net/ntmani/?p=214<BR/><BR/>குடுகுடுப்பை அவர்களே,<BR/><BR/>தனிமனிதத் தாக்குதலா, என் தரப்பிலிருந்தா? சத்தியமாக அப்படியெல்லாம் இல்லை. அப்படிப் போடு அவர்களின் பதிவிலிருந்தே நான் மேற்கோள் காட்டுகிறேன்:<BR/>"எங்கள் பக்கத்தில் (திண்டுக்கல், தேனி, கம்பம், போடி பகுதிகளில்)சொந்தத்தை காரணம் காட்டியோ... சொத்தை காரணம் காட்டியோ., குடும்பத்தில் உள்ள வயதானவர்களை உறவினர் அல்லாது வெளியில் எடுக்கும் பெண் பேண (கவனிக்க) மாட்டார் என்றோ , வயதென்பதையும் அப்பெண்ணின் உணர்வென்பதையும் மறுத்து நடக்கும் திருமணங்கள் அதிகம் (அதிகமென்ன? முக்கால்வாசி அப்படிப்பட்டதுதான்). சிறிய பெண்ணை பாசம் என்ற துருப்புச் சீட்டை பயன்படுத்தி., வயதானவர்களுக்கோ அல்லது குடித்து குடல் வெந்து போன ஒருவனை வெளியில் இருந்து யாரும் மணம் செய்ய வரவில்லையெனில், சொந்தமாவது கைவிடக்கூடாது என்ற நோக்கிலோ தெரிந்தே படு குழியில் தள்ளுவதைப் போல மணம் செய்து தருகின்றனர். இதில் படித்த குடும்பம், படிக்காத குடும்பம் என்றெல்லாம் பிரிவில்லை. இந்த சாபக்கேடு இன்று வரை தொடர்வது மனதைக் தைக்கும் வேதனை. அதை எதிர்த்து கேட்கும் துணிவிருந்தும்., சொந்தங்களை மறுத்த குற்ற உணர்வு தடுக்கின்றது. எல்லாவற்றையும் மீறி, தொலை பேசும் போது "அம்மா...!, நல்லாருக்கியாடா சாமி?" என்கிற கரகரப்பான, நெகிழ்ச்சிக் குரலைக் கேட்டு கண்டிக்க முடியவில்லை. கண்ணீரே வருகிறது."<BR/>பார்க்க: http://tamilkudumbam.blogspot.com/2005/12/blog-post_26.html<BR/><BR/>இப்பின்னூட்டத்தையும் உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதை காண்பிக்கும் வண்ணம் அதன் நகலை நான் இப்போது குறிப்பிட்ட அந்தப் பதிவில் பின்னூட்டமாக இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/03/blog-post_08.html<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1142714793074055232006-03-19T02:16:00.000+05:302006-03-19T02:16:00.000+05:30சிவனடியார் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்...சிவனடியார் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://sivanadiyar.blogspot.com/ <BR/><BR/>யாரும் யாருக்கும் கட்டளை போடவில்லை சிவனடியார் அவர்களே.<BR/><BR/>"கட்டளை என்பது வீரம் அவர்களுக்கு தெரியாது அவர்களிடத்தே கிடையாது.அவர்கள் இங்கு செய்யும் வேலையின் பெயர் "சொறிதல்"<BR/><BR/>ஒரு குழுவாக சேர்ந்து கொண்டு எல்லா தலித் பிரச்சினைக்கும் பார்ப்பனரே காரணம், மற்ற உயர்சாதியினர் இல்லை என்று ஜல்லியடிக்கிறீர்களே, அதுதான் சொறிதல். <BR/><BR/>இப்பின்னூட்டத்தையும் உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதை காண்பிக்கும் வண்ணம் அதன் நகலை நான் இப்போது குறிப்பிட்ட அந்தப் பதிவில் பின்னூட்டமாக இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/03/blog-post_08.html<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1142713985599720162006-03-19T02:03:00.000+05:302006-03-19T02:03:00.000+05:30"திரும்பவும் இரட்டை தம்ளர் பிரச்னைக்கு வருகிறேன்.இ..."திரும்பவும் இரட்டை தம்ளர் பிரச்னைக்கு வருகிறேன்.இதில் தலித்துகள் தாங்களாகவே எதைச் செய்தாலும்,வயிற்றுப் பிழைப்புக்கு மற்றவரை(உயர் சாதி) சார்ந்து இருக்கும்வரை தன்னிச்சையாக எதுவும்செய்ய இயலாது என்பது என் கருத்து."<BR/>செய்வது சுலபம் என்று யார் கூறியது. அதனால்தான் சண்டை போடாமல் அமைதியாக உங்கள் இடத்தில் கடை போட்டுக் கொள்ளுங்கள் என்று கூறினேன். ஒரு காரியம் ஏன் செய்ய முடியாது என்பதற்கு பக்கம் பக்கமாக எழுதலாம். ஆனால் அந்தக் காரியம் செய்யப்பட வேண்டும். எப்படி என்றுதான் யோசிக்க வேண்டும். இல்லாவிட்டால் 58 ஆண்டுகளாக இருக்கும் நிலைதான் தொடரும்.<BR/><BR/>நாடார்கள் முன்னேறியதைப் பார்த்து அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளத்தான் ஆலோசனை கூறினேன். தியேட்டர் முதலாளி வழிக்கு வந்த கதையும் நீங்கள் எழுதியதுதானே சிவா அவர்களே. <BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1142713617049544642006-03-19T01:56:00.000+05:302006-03-19T01:56:00.000+05:30தங்கமணி அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின...தங்கமணி அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://bhaarathi.net/ntmani/?p=214<BR/><BR/>"ஆகா அடுத்தத ஆரம்பிச்சாச்சா?., தேர்தல்ல நின்னு வென்று வந்தாரா?. எத்தனை வருடம் அவர் காங்கிரஸைக் காப்பாற்றினார்?. 16 ஆண்டு காலம் தலைவராக இருந்து காங்கிரஸின் சொத்தாக இருந்தார்., நீங்கள் பெயர் கூட குறிப்பிட விரும்பாத தமிழர். அதையாவது ஒத்துக் கொள்வீர்களா? இல்லை…"<BR/>ஏற்கனவே சொன்னதுதான். கவர்னர் ஜெனரலாக இருந்துவிட்டு வந்தவரை இவர்கள்தான் காலில் விழுந்து அழைத்து வந்தனர். இரண்டு வருடம் காப்பாற்றினார். கட்சிக்காரன் யாரும் தேவையின்றி கோட்டைக்கு வரக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். அந்த இரண்டு வருடத்தில் பலமுறை அதிருப்தியாளர்கள் டெல்லிக்கு காவடி எடுத்துப் பார்த்தனர். நேரு அவர்கள் போட்ட போட்டில் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என திரும்ப ஓடி வந்தனர்.<BR/><BR/>சென்னை நகரம் புதிதாக உண்டான ஆந்திரப் பிரதேசத்துக்கு போய் விடாமல் காப்பாற்றிக் கொடுத்தவர். மேலும், நான் மட்டுமா அந்தத் தமிழரின் பெயரைக் கூறவில்லை? நீங்களும்தான் கூறவில்லை. 1954-லிருந்து அந்தத் தமிழர் செய்த தொண்டை யாரால் மறுக்க முடியும்?<BR/><BR/>"யாரும் கட்டளையிட்டு என்னால் எதுவும் செய்ய முடியாது., போடும் போது வந்து படித்துக் கொள்ளுங்கள்."<BR/>அப்படியே செய்தால் போயிற்று. உங்கள் வீட்டுப் பெரியவர்கள் ஆணாதிக்கம் செய்தவர்கள் என்பது நீங்கள் எழுதிய பதிவுகளிலிருந்தே புலப்பட்டு விட்டது. இப்போது ஜாதி விஷயத்தில் என்ன கதை விடப் போகிறீர்கள் என்பதையும் பார்த்து விடுவோமே.<BR/><BR/>இப்பின்னூட்டத்தையும் உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதை காண்பிக்கும் வண்ணம் அதன் நகலை நான் இப்போது குறிப்பிட்ட அந்தப் பதிவில் பின்னூட்டமாக இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/03/blog-post_08.html<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1142622536472103162006-03-18T00:38:00.000+05:302006-03-18T00:38:00.000+05:30தலித்துகள் அவர்ககளே தனிக்கடை வைத்துக்கொள்வது அவர்க...தலித்துகள் அவர்ககளே தனிக்கடை வைத்துக்கொள்வது அவர்களுக்கு உதவலாம். ஆனால் திரும்பவும் யாரை எதிர்த்து கடை வைத்தார்களோ அவர்களுடைய தயவில்தான் தான் தினசரி வாழ்க்கையை நடத்த வேண்டியிருக்கிறது - அவர்களிடம்தான் வேலை செய்து பிழைக்க வேண்டியுள்ளது. தலித்துகள் தன் பகுதியில் பெரும்பான்மையாக இருக்கும்போதும் பொருளாதாரத்தில் மற்றவர்களைச்(உயர் சாதி) சார்ந்து இல்லாமல் இருக்கும்போதும்தான் இது சாத்தியமாகும்.<BR/><BR/>நிற்க.<BR/>15-20 வருடத்திற்குமுன் நடந்தது. எங்களூரில் நாங்கள்தான் பெரும்பான்மையினர். அடி,தடி,காவல் நிலையம் என்று போகத் தயங்குபவர்கள்.ஆனால், சினிமா தியேட்டர் முதலாளிகளெல்லாம் வேறு சாதியினர். இதற்கெல்லாம் அஞ்சாதவர்கள். அவர்கள் எப்போதாவது தகராறு செய்தால், யாரும் அவர்களுடைய சினிமா தியேட்டர்களுக்கு போகக் கூடாது என்று ஊர் கட்டுப்பாடு வைத்து விடுவார்கள்.மீறிப்போவர்களுக்கு அபராதம்தான். <BR/><BR/>அப்புறம் என்ன, சம்பத்தப்பட்ட தியேட்டர் முதலாளி மன்னிப்பு கேட்டு அபராதம் கட்டிவிட்டு ஊர் கட்டுப்பாடை மீட்டுச் செல்வார்..இப்போது கேபிள் டிவி வந்தபின் நிலைமை எப்படி என்றூ தெரியவில்லை<BR/><BR/>கடந்த பல வருடங்களாக 3 தனி(Reserve) பஞ்சாயத்துக்களுக்கு தேர்தல் கேலிக்க்க்கூத்தாகத்தான் நடக்கிறது.<BR/><BR/>இதற்க்கும் அதே காரணம்தான்.<BR/><BR/>திரும்பவும் இரட்டை தம்ளர் பிரச்னைக்கு வருகிறேன்.இதில் தலித்துகள் தாங்களாகவே எதைச் செய்தாலும்,வயிற்றுப் பிழைப்புக்கு மற்றவரை(உயர் சாதி) சார்ந்து இருக்கும்வரை தன்னிச்சையாக எதுவும்செய்ய இயலாது என்பது என் கருத்து.சாமான்யன் Siva(stocksiva.blogspot.com)https://www.blogger.com/profile/08877847954128133090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1142469782260266512006-03-16T06:13:00.000+05:302006-03-16T06:13:00.000+05:30தங்கமணி அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின...தங்கமணி அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://bhaarathi.net/ntmani/?p=214<BR/><BR/>அப்பிடிப்போடு அவர்களே,<BR/><BR/>"அரசியல் துறவறம் மேற்கொண்டு, வீட்டில் இருந்தவர்களையெல்லாம் மீண்டும் அழைத்து வந்து போட்டியே இல்லாமல் சிம்மாசனத்தில் அமர வைத்தார் ஒரு தமிழர். இது உங்களுக்கு நன்றாகத் தெரிந்த ஒரு உதாரணம் என்பதால் சொல்கிறேன். அவரை அன்றிலிருந்து இன்று வரை இராஜாஜிதான் பிடிக்காவிட்டாலும் இராஜாஜி பிடிக்காத தலைவர் என்றுதான் எழுதுதிக்கொண்டிருக்கிறோம்., பிடிக்கவில்லையென்றால் ஈ.வே.ராமசாமி நாயக்கர் என எழுதுகிறார்களே., அவர்களைப் போல் இராசகோபாலச்சாரியார் என எழுதவில்லை."<BR/><BR/>அந்த நேரத்தில் காங்கிரஸை காப்பாற்ற அவரின்றி வேறு வழியில்லை என்றுதான் ராஜாஜி அவர்கள் நீங்கள் குறிப்பிடும் தமிழராலும், நேரு அவர்களாலும் மற்றவர்களாலும் வரவழைக்கப்பட்டார். இரண்டு வருடம் திறமையாக பணியாற்றிய அந்தக் கிழவரை காங்கிரஸில் இருந்த அதிருப்தி கோஷ்டியனர் எவ்வாறு படுத்தினர் என்பதை நான் அக்காலத்தில் வெளியான கல்கி பத்திரிகைகளை சமீபத்தில் படித்து தெரிந்து கொண்டேன்.<BR/><BR/>இராஜகோபாலாச்சரியார் என்றோ ஈவேரா அவர்கள் என்றோ எழுதுவதில் என்ன தவறு இருக்க முடியும்? அது சரி, ராஜாஜி அவர்களை குல்லுக பட்டர் என்று திமுகவினர் அழைத்தனரே அதை ஏன் குறிப்பிடாமல் விட்டு விட்டீர்கள்?<BR/><BR/>தலித்துகள் முன்னேற வேண்டும் என்றுதானே நானும் கூறுகிறேன். அவர்கள் தங்கள் சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள இரட்டை தம்ளர் முறையை எதிர்த்து எவ்வாறு செயல்படுவது என்று பதிவு போட்டுள்ளேனே, பார்க்கவில்லையா? அதில் வரும் பின்னூட்டங்களையும் பாருங்கள்.<BR/><BR/>"முன்னேறுங்கள் அடுத்தவர்களை மிதிக்காமல், அவமானப்படுத்தாமல்."<BR/>எங்களவர்களுக்கு படித்து முன்னேருவதுதான் முக்கியம். வெட்டித்தனமாக மற்றவரை மிதிக்கவோ அவமானப்படுத்தவோ எங்களிடம் நேரம் இல்லை.<BR/><BR/>"தாழ்வு மனப்பான்மை??!! அப்படின்னா என்னா??"<BR/>ஓபன் காம்பெடிஷன் என்றாலே சிலிர்த்து பார்ப்பன எதிர்ப்பு கோஷங்களை வைக்கிறீர்களே, அதுதான் தாழ்வு மனப்பான்மை.<BR/><BR/>நீங்கள் வெளிநாட்டில் உள்ளீர்கள். இந்த ஊர் மூன்றாம்தர அரசியல்வாதிகள் செய்வதுபோல எல்லா கஷ்டங்களுக்கும் பார்ப்பனரே காரணம் என்று திசை திருப்பாதீர்கள். உங்கள் வீட்டுப் பெரியவர்களையே கேளுங்கள், அவர்கள் ஊரில் யார் அதிகம் ஜாதி பார்க்கிறார்கள் என்று. அது சம்பந்தமாக ஏதோ பதிவு போடுவதாகக் கூறினீர்களே, இன்னும் நேரம் வரவில்லையோ? <BR/><BR/>இப்பின்னூட்டத்தையும் உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதை காண்பிக்கும் வண்ணம் அதன் நகலை நான் இப்போது குறிப்பிட்ட அந்தப் பதிவில் பின்னூட்டமாக இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/03/blog-post_08.html<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1142334905695544642006-03-14T16:45:00.000+05:302006-03-14T16:45:00.000+05:30வாருங்கள் தருமி அவர்களே. நீங்கள் இங்கு நகலிட்ட வெங...வாருங்கள் தருமி அவர்களே. நீங்கள் இங்கு நகலிட்ட வெங்கட் அவர்களின் பின்னூட்டத்துக்கு நான் கொடுத்த பதில் இன்னும் மட்டுறுத்தப்படவில்லை. அது மேலே இப்பதிவிலும் பின்னூட்டமாக நகலிடப்பட்டுள்ளது. அதை முதலில் பாருங்கள். <BR/><BR/>இப்போது சில விஷயங்களை க்ளியராக பேசிடுவோம்.<BR/><BR/>"ஆண்டாண்டு காலமாக அடக்கிவைக்கைப்பட்டிருந்த தலித்துகளுக்கு பிற சமுதாயங்கள் நேரடி உதவியளிக்கக் கடமைப்பட்டிருக்கின்றன (அந்த உதவியை அளிக்க முற்படுவதன் மூலம் அந்தந்த சமூகங்களுக்கு ஏற்படும் சிலபல இழப்புகளையும் உள்ளிட்டு)."<BR/>கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் இதே அணுகுமுறையைத்தானே கடந்த 55 வருடங்களாகப் பார்த்து வந்திருக்கிறோம்? என்ன முன்னேற்றம் ஏற்பட்டு விட்டது?<BR/><BR/>மேலே இன்னொரு பின்னூட்டத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.<BR/>"தீண்டாமைக் கொடுமையை எதிர் கொண்டு வெற்றி கொண்ட சமுதாயம் உள்ளது.<BR/>இன்று தமிழகத்தில் நாடார் சமுதாயம் மற்றவர்கள் மதிக்கக் கூடிய நிலையில் இன்று உள்ளது.<BR/>ஆனால் 150 வருடங்களுக்கு முன்பு நிலைமை இப்படி இல்லை. நாடார்களுக்கும் இரட்டை டம்ளர்தான்."<BR/>அவர்களும் மற்றவர்கள் செய்யட்டும் என்று காத்திருந்தால் அதே இழிந்த நிலையில்தான் இருக்க வேண்டும் அல்லவா? அது பற்றி என்ன கூறுவீர்கள்?<BR/><BR/>இஸ்ரேல் வந்த உதாரணத்தையும் கூறினேனே? <BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1142333885531463982006-03-14T16:28:00.000+05:302006-03-14T16:28:00.000+05:30டோண்டு,இந்தப் பின்னூட்டமும் ஒரு மீள்பதிவே. இப்பின்...டோண்டு,<BR/>இந்தப் பின்னூட்டமும் ஒரு மீள்பதிவே. இப்பின்னூட்டத்தை http://domesticatedonion.net/tamil/?p=17<BR/>- அங்கிருந்து 'லவட்டிக் கொண்டு'வந்திருக்கிறேன். நான் முழுமையாக இப்பின்னூட்டத்தோடு உடன்படுவதால் இதை இங்கே அப்படியே தந்துள்ளேன். வெங்கட்டிற்கு இதில் உடன்பாடாயிருக்குமென்றே நினைக்கிறேன்.<BR/><BR/>venkat (blog author) says:<BR/>Added on March 13th, 2006 at 10:21 pm <BR/><BR/><BR/>டோண்டு, நான் சொல்ல வந்ததைத் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். <BR/><BR/>நான் ஒருப்போதும் தலித்துகளுக்கான தீர்வை அவர்களே உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று சொல்ல மாட்டேன். (இரட்டைத் தம்ளர் முறையை அவர்களாகவே புறக்கணித்து வெற்றி காணமுடியாது). ஆண்டாண்டு காலமாக அடக்கிவைக்கைப்பட்டிருந்த தலித்துகளுக்கு பிற சமுதாயங்கள் நேரடி உதவியளிக்கக் கடமைப்பட்டிருக்கின்றன (அந்த உதவியை அளிக்க முற்படுவதன் மூலம் அந்தந்த சமூகங்களுக்கு ஏற்படும் சிலபல இழப்புகளையும் உள்ளிட்டு). <BR/><BR/>என் பதிவில் நான் தெளிவாகச் சொல்லியிருப்பது “அரசாங்கத்தையும், அரசியல் கட்சிகளையும் வற்புறுத்த வேண்டும்”. இதில் எங்கும் அவர்களாகவே எல்லா கருவிகளையும் உருவாக்கிக் கொண்டு உய்ய வேண்டும் என்று சொல்லவில்லை. ஒரு குறிப்பிட்ட கால எல்லைக்குள் அந்தக் கருவிகளை உருவாக்கிக் கொடுப்பது அரசின் கடமை என்பது என் தீர்வு (உருவாக்கிக் கொடுப்பது என்று எழுதும்பொழுது வேதனையாகத்தான் இருக்கிறது. அதை ஏன் உருவாக்கி ‘தலித்துகள் கையில்’ கொடுக்கவேண்டும் என்ற நிலையே அபத்தமானது. ஆனால் இது வலிதரும் உண்மை. தீர்வின் முதல்கட்டமாக மட்டுமே நான் இதைப் பார்க்கிறேன். அதாவது இப்பொழுதிருக்கும் தொழிலாளிகளிடம் கருவிகள் கொடுப்பது. கருவிகள் வரவர இத்தொழில்களின் இழிவு குறைந்து பிற சமூகங்களும் பங்கெடுக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்). <BR/><BR/>மற்றபடி இரட்டைத் தம்ளர் முறை போன்ற அபத்தத்தின் உச்சகட்டத்தை அரசின் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவதுதான் மிகச் சரியானது. இதில் எனக்கு மாற்று கருத்தில்லை. இதில் எந்தவிதமான தார்மீகத் தவறுகளும்கூட இல்லையென்றுதான் நான் நம்புகிறேன்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1142332642724009622006-03-14T16:07:00.000+05:302006-03-14T16:07:00.000+05:30பின்னூட்டத்துக்கு நன்றி சீனு அவர்களே. ஆனால் இந்தப்...பின்னூட்டத்துக்கு நன்றி சீனு அவர்களே. <BR/><BR/>ஆனால் இந்தப் பதிவு இட ஒதுக்கீடு பற்றி அல்ல. தலித்துகள் தங்கள் சுய மரியாதையை தாங்களே உயர்த்திக் கொள்வது பற்றித்தான் நான் இங்கு பேச வந்தேன். காசு கொடுத்து டீக்கடைகளில் அவமானப்படுவதை விடுத்து தாங்களே டீக்கடை அமைத்துக் கொள்வதை பற்றித்தான் இங்கு பேச்சு. <BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1142318173699884172006-03-14T12:06:00.000+05:302006-03-14T12:06:00.000+05:30"பசிப்பவனுக்கு மீனை கொடுப்பதை விட மீன் பிடிக்க கத்..."பசிப்பவனுக்கு மீனை கொடுப்பதை விட மீன் பிடிக்க கத்துக் கொடு" என்று ஒரு சீனப் பழமொழி உண்டு. இடஒதுக்கீடு என்பது பசிப்பவனுக்கு மீனை கொடுப்பதைப் போலத்தான்.<BR/><BR/>சீனு.சீனுhttps://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1142312487320677472006-03-14T10:31:00.000+05:302006-03-14T10:31:00.000+05:30பவெங்கட் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட பின்னூட்ட...பவெங்கட் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட பின்னூட்டம் இதோ. பார்க்க: http://domesticatedonion.net/tamil/?p=17<BR/><BR/><BR/>"மற்றபடி இரட்டைத் தம்ளர் முறை போன்ற அபத்தத்தின் உச்சகட்டத்தை அரசின் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவதுதான் மிகச் சரியானது. இதில் எனக்கு மாற்று கருத்தில்லை."<BR/><BR/>நீங்கள் சொன்ன இந்த முறையை கடந்த 55 ஆண்டுகளாக செயல்படுத்த முடிந்ததா? நான் கூறியது லேட்டரல் திங்கிங் என்ற குறுக்கு வெட்டு முறையில் யோசிப்பதேயாகும். ஏற்கனவே நாடார் சமூகங்கள் செய்ததுதான். அவர்கள் செய்ததை ஏன் மற்றவர்களும் சிந்திக்கக் கூடாது? நேரடியாக எதிர்ப்பது பலன் தரவில்லையென்றால் வேறு வழிகளில் சிந்திப்பதுதானே முறை?<BR/><BR/>யுத்தம் என்று வந்தால் எல்லா வழிகளிலும் செய்து பார்ப்பதுதான் முறை. குதிரைக்கு கண் பக்கம் கூடு போடுவதுபோல இருக்கக் கூடாது. <BR/><BR/>இந்தப் பின்னூட்டத்தையும் உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதற்கு அடையாளமாக அதன் நகலை என்னுடைய மேலே குறிப்பிட்ட இரட்டை தம்ளர் பதிவில் பின்னூட்டமாக இடுவேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/03/blog-post_08.html<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1142301567545912882006-03-14T07:29:00.000+05:302006-03-14T07:29:00.000+05:30ப்வெங்கட் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட பின்னூட்...ப்வெங்கட் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட பின்னூட்டம் இதோ. பார்க்க: http://domesticatedonion.net/tamil/?p=17<BR/><BR/>வெங்கட் அவர்களே,<BR/><BR/>மிக நல்ல பதிவை அளித்துள்ளீர்கள். தங்களுக்கு கிடைக்கும் அவமானங்களிலிருந்து மீண்டு வர தலித்துகளே முயற்சி செய்ய வேண்டும் என்பதைக் கூறும் முகமாக நான் தலித்துகளை முதலில் இரட்டை தம்ளர் முறை செயலில் இருக்கும் டீக்கடைகளை பகிஷ்கரித்து தங்களுக்கான டீக்கடைகளை தாங்களே அமைத்துக் கொள்ளும்படிக் கூறினேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/03/blog-post_08.html<BR/><BR/>அதற்கு வந்தப் பின்னூட்டங்கள் முக்கால்வாசி எதிர்மறையாகவே இருந்தன. இத்தனைக்கும் நான் கூறிய யோசனைக்கு ரொம்ப முதலீடு எல்லாம் தேவையில்லை. இருப்பினும் இதெல்லாம் நடக்காத காரியம் என்றே பலர் பின்னூட்டமிட்டு அரசுதான் தீர்வு தர வேண்டும் என்று கூறினர். ஆனால் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.<BR/><BR/>நீங்கள் கூறுவது போல இயந்திரங்களை உபயோகித்து வேலை செய்தால் அவ்வேலைகளை செய்ய பலர் முன்வருவார்கள் என்றுதான் தோன்றுகிறது. இங்கு கூட எக்ஸ்னோரா அமைப்பு மூலம் குப்பை அள்ளுவதை தனியார்மயமாக்கியதற்கு நகராட்சியில் வேலை செய்யும் பல ஸ்வீப்பர்கள் தங்கள் வேலை வாய்ப்பு போய் விடுவதாக எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஆனாலும் அவர்கள் தனியாரிடம் வேலை செய்யத் தயாராக இல்லை. ஏனெனில் அரசு ஊழியர் என்ற பெயரை அவர்கள் இழக்கத் தயாராக இல்லை. பிரச்சினைதான். <BR/><BR/>பேங்குகளில் கணினி அறிமுகமானபோதும் இவ்வாறுதான் யூனியன்கள் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால் இப்போது பல பேங்குகளில் தேவையற்ற ஸ்டாஃப் குறைந்தாலும், வேலை பாட்டுக்கு நடக்கிறது. அதே நிலை மற்ற இடங்களிலும் நடக்கும் என்றே எதிர்பார்ப்போம்.<BR/><BR/>இந்தப் பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதற்கு அடையாளமாக அதன் நகலை என்னுடைய மேலே குறிப்பிட்ட இரட்டை தம்ளர் பதிவில் பின்னூட்டமாக இடுவேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/03/blog-post_08.html<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.com