tag:blogger.com,1999:blog-9067462.post5717534305495025857..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: டோண்டு பதில்கள் 26.09.2008dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-9067462.post-69902142141281831452008-09-28T07:00:00.000+05:302008-09-28T07:00:00.000+05:30//இதையும் நீங்கள் உங்கள் பதிலில் சேர்த்திருக்கலாம்...//இதையும் நீங்கள் உங்கள் பதிலில் சேர்த்திருக்கலாம்//<BR/>அடுத்த தேர்தலில் இந்திரா வெற்றி பெற்றதை கூறியுள்ளேனே. திமுக பற்றி கூறாததற்கு காரணம் பதில் இந்திராவை குறித்து மட்டுமே என்பதால். அக்கட்சி செய்த கோமாளித்தனத்தை பற்றி கூற இது சந்தர்ப்பம் அல்ல. <BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-12661423462791872872008-09-28T02:51:00.000+05:302008-09-28T02:51:00.000+05:30அவசரகால நிலை பிரகடனப்படுத்தலுக்குப்பின் நடந்த தேர்...அவசரகால நிலை பிரகடனப்படுத்தலுக்குப்பின் நடந்த தேர்தலில் இந்திரா தோற்றாலும்..வென்ற..எதிர்க்கட்சி கூட்டணிகள் ஒற்றுமை இல்லாததால்தான்..அவரால் மீண்டும் ஆட்சிக்கு வரமுடிந்தது. இந்திராவை எதிர்த்த தி.மு.க. பின் நேருவின் மகளே வருக..நிலையான ஆட்சி தருக..என்ற கோமாளி கோஷத்தையும் கேட்க முடிந்தது.,இதையும் நீங்கள் உங்கள் பதிலில் சேர்த்திருக்கலாம்.T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-44755849216412660902008-09-27T21:55:00.000+05:302008-09-27T21:55:00.000+05:30//Blogger SP.VR. SUBBIAH said... /////5. நானோ ...//Blogger SP.VR. SUBBIAH said...<BR/><BR/> /////5. நானோ கார் வந்தால் யாருக்கு லாபம் யாருக்கு நஷ்டம். மம்தாவின் போராட்டம் தொடர்பான உங்கள் கருத்து என்ன?<BR/> பதில்: மேற்கு வங்கத்திற்கு பெரிய கெடுதலை செய்துள்ளார் மம்தா. டாடா நானோ திட்டத்தை தம்மிடம் வரவழைக்க மற்ற மானிலங்களுக்கிடையே பலத்த போட்டி. டாட்டாவுக்கே இக்கஹ்டி என்றால் மற்ற தொழிலதிபர்களும் மேற்கு வங்கத்திற்கு செல்ல பயப்படுவார்களே. ஆகவே கண்ணுக்கு தெரியாத நஷ்டங்கள் பல அம்மானிலத்துக்கு இந்த அம்மையாரின் தயவால் வந்து விட்டது.///<BR/><BR/> இதை அந்த மாநிலத்துக்காரர்கள் உணர்ந்து அந்த அம்மணியைக் கட்டம் கட்ட வேண்டும்! எங்கே செய்யப்போகிறார்கள்//<BR/><BR/>இண்டியா டுடேவோ அவுட்லூகோ படித்தது..<BR/><BR/>நானோ கார் வந்தால் மாருதி, ஹூண்டாய் கார் நிறுவனங்கள் விற்பனை பாதிக்கபடும் என்பதால் அவர்கள் மம்தாவை தூண்டி விடுகிறார்கள் ( தூண்டி விடுகிறார்கள் என்றால் கரண்சி பசையை அடித்து விடுகிறார்கள் என்று அர்த்தம் கொள்க)<BR/><BR/>இன்று வரை டாடா நானோவிற்க்கு மாற்றாக இந்த நிறுவனங்களில் இருந்து எந்த வித காரும் வரவில்லை.. ஆராய்சி கூட மந்த கதியில் தான் நடக்கிறது..<BR/><BR/>நாளை டாடா நானோ <BR/><BR/>கர்நாடகா வந்தால் தேவகவுடா இதை நாடகைத்தை ஆடுவார்<BR/><BR/>மகாராச்சிடிரம் வந்தால் அப்போது எது எதிர் கட்சியோ அது தப்பாட்டம் போடும்<BR/><BR/>தமிழ்நாடு என்றால் ஜெயலலிதா இதே மம்தா வேலையை செய்வார்.<BR/><BR/>குஜராஜ் மாநிலமே டாடா தொழிற்சாலை குடிபுக சரியான மாநிலம் என்று தோன்றுகிறது. அங்கு எதிர்கட்சிகள் என்றாலும் பணத்துக்காக இதை போல தப்பாட்டம் ஆடுவதில்லைஆதவன்https://www.blogger.com/profile/05187877506237993006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-28366809345687934952008-09-27T19:09:00.000+05:302008-09-27T19:09:00.000+05:30அய்யா, இந்திரா காந்தி ஆரம்ப கட்டங்களில் வெளியுறவு ...அய்யா,<BR/><BR/> இந்திரா காந்தி ஆரம்ப கட்டங்களில் வெளியுறவு துறை தொடர்பான கொள்கைகளில் சில தவறுகள் செய்திருக்கலாம். காரணம், அவர் தந்தை ரோஜாவின் ராஜா விட்டு சென்ற " இந்தோ-சீனி பாய்பாய்" போன்ற கொள்கைகளை முற்றிலும் விலக்கிவிட்டு ஆட்சி செய்ய முடியாது. தமிழ் திரையுலகில் திரைகுடும்பத்திலிருந்து வெளிவரும் கதாநாயகர்கள் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கீன்றார்கள்? அதே போல் அவர் தந்தையார் பாதைப்படி பதவியேற்றபின், தடாலென்று கொள்கைகளை மாற்ற முடிய இயலவில்லை. <BR/><BR/> கிஸீங்கர்-நிக்ஸன் உரையாடல்களை கேட்டிருக்கின்றீர்களா? இது தொடர்ந்து வருகின்ற பின்னுாட்டங்கள் மிக சுவாரஸ்மாக போய் கொண்டிருக்கின்றன. மேலும் இது பற்றி விவாதிப்பதற்கு நிறைய இருக்கின்றது. இது பற்றி தனி பதிவே போடலாம், இல்லையா அய்யா? அல்லது தொடர்ந்து இதிலேயே தொடரலாமா?<BR/><BR/>joshAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-55772448601866163442008-09-27T17:06:00.000+05:302008-09-27T17:06:00.000+05:30`என்னதான் கோபம் இருந்தாலும் நேருவையும் புட்டோவையும...`என்னதான் கோபம் இருந்தாலும் நேருவையும் புட்டோவையும் அவன் என்று ஒருமையில் அழைத்திருக்க வேண்டாம்.`<BR/><BR/>நான் சொந்த கருத்தை எழுதுகிரேனே தவிற, எதோ மேடை பிரசங்கமோ, நேர்காணலோ, லோக்சபா பேச்சோ, சரிதிர தீஸிசோ இல்லை. அதனால் ஒருமையில் எழுதுவது தவறில்லை என நினைக்கிறேன். ஒருமை/பன்மை உபயோகம் சூழலைப் பொருத்தது.. <BR/><BR/>`கொரியா போரில் இதே போல வடகொரியர்களை தென்கொரியாவிலிருந்து துரத்திய ஜெனெரல் மக் ஆர்தர் அத்துடன் திருப்தியடையாது அவர்களை வடகொரியா வரை துரத்தி சென்றார். அங்கு போரின் திசையே மாறியது. அப்போது ஏற்பட்ட இரண்டுங்கெட்டான் நிலை இன்னும் நீடிக்கிறது`<BR/><BR/><BR/>கொரியா போர் வேறு. அங்கு அமெரிக்கர்களும் வெளி நாட்டு துருப்புகள்தான் ; கொரியாவில் தன் ஆதரவாளர்களை ஆதரிக்க சென்றது. அதனால் வட-தென் கொரிய பிரச்சினை சர்வதேச பிரச்சினையாகி விட்டது. . அமெரிக்கா 10,000 மைலகள் வந்து மற்றொரு நாட்டில் சண்டை போட்டால், நான் ஏன் என் கொல்லைப் புரத்திலேயே என் ஆதரவாளர்களுக்கக போர் புரியக்கூடாது என்று, சீனா கொரியா உள்ளெ புகுந்து, அமெரிக்கர்களை துரத்தியது. கொரியா போர் சீனாவின் மாஸ்டர் ஸ்ட்ரோக். கொரியப் போர்னால் தான், அமெரிக்கா அதன்பிறகு, சீனாவுடன் பயபக்தியுடன் நடந்தது. கொரியா இன்று இந்த நிலையில் இருக்கலாம், ஆனால் அது சீனாவின் ஆற்றலையும், மனோதைரியத்தையும் உலகுக்கு சாற்றியது. 1971ல் இன்னும் 2 வாரம் போர் நிலைத்திருந்தால், மற்ற நாடுகள் ஒன்றும் செயதிருக்க முடியாது. நான் மற்றநாடுகளின் போர் புரிய மாட்டேன் என்பது சோப்ளாங்கி எண்ணம்.<BR/><BR/>ஏன் இன்று இந்தியாவை பேரரசாக சர்வதேச அரசுகள் ஏற்றுக் கொள்ள தயங்குகிறனர்? ஏனெனில் தன் ராணுவ பலத்தை உபயோகித்து, தன் சுற்றுவட்டத்தில் அமைதியை காக்க முடியாமல், ரொம்ப நாட்களாக காஷ்மீர் பிரச்சினையை வளரவிட்டு தன் எல்லைப் புரத்தையே சீர் செய்ய முடியாத - அல்லது மனோபலம் இல்லாத நாட்டை - ஏன் மற்றவர்கள் வல்லரசாக ஏற்கவேண்டும்? அது வல்லரசின் அடையாளம் அல்ல.<BR/><BR/>இன்று ரஷ்யா ஜார்ஜியாவில் படையெடுத்து , தன் நாட்டு நலத்தை பாதுகாக்கிறென் என சொல்லி, பாதி ஜார்ஜியாவையே விழுங்கி விட்டது. ரஷ்யா செயதது தப்பா, சரியா என்று வாதம் புரியலாம்.. ஆனால் வல்லரசுகள், தங்கள் பலத்தை உபயோகித்து, தங்கள் நலத்த்தை உலக அளவில் நிலைநிருத்துவதற்கு தயங்குவதில்லை. அப்படி செய்யாவிட்டல் அவை வல்லரசுகளே அல்ல.<BR/><BR/> <BR/>விஜயராகவன்வன்பாக்கம் விஜயராகவன்https://www.blogger.com/profile/16336764407971993989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-63458955065386332302008-09-27T16:15:00.000+05:302008-09-27T16:15:00.000+05:30விஜயராகவன் அவர்களே,என்னதான் கோபம் இருந்தாலும் நேரு...விஜயராகவன் அவர்களே,<BR/><BR/>என்னதான் கோபம் இருந்தாலும் நேருவையும் புட்டோவையும் அவன் என்று ஒருமையில் அழைத்திருக்க வேண்டாம். மற்றப்படி உங்கள் கருத்தில் ஆட்சேபிக்க வேறு ஏதும் இல்லை.<BR/><BR/>அதே சமயம் 1971-ல் இந்தியாவின் நிலைமையும் அவ்வளவு வலியதாக இல்லை. பங்களாதேஷில் உள்ளூர் மக்களின் ஒத்துழைப்பு முழுக்கவுமே கிட்டியது. மேலும் காஷ்மீர் மேல் தாக்குதல் செய்ய இயலாதபடி சோவியத் யூனியன் இந்தியாவின் கையை கட்டிப் போட்டது. இந்திரா போர் நிறுத்தம் அறிவித்ததை ஒரு மாஸ்டர் ஸ்ட்ரோக்காகவே பார்க்கிறேன். <BR/><BR/>கொரியா போரில் இதே போல வடகொரியர்களை தென்கொரியாவிலிருந்து துரத்திய ஜெனெரல் மக் ஆர்தர் அத்துடன் திருப்தியடையாது அவர்களை வடகொரியா வரை துரத்தி சென்றார். அங்கு போரின் திசையே மாறியது. அப்போது ஏற்பட்ட இரண்டுங்கெட்டான் நிலை இன்னும் நீடிக்கிறது.<BR/><BR/>ஆக எப்போது சண்டையை நிறுத்த வேண்டும் என்பதும் ஒரு யுக்தியே.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-32205761714989333472008-09-27T15:36:00.000+05:302008-09-27T15:36:00.000+05:30` இப்போது இந்திரா காந்தி புத்திசாலித்தனமான காரியம்...` இப்போது இந்திரா காந்தி புத்திசாலித்தனமான காரியம் செய்தார். ஒரு தலைப் பட்சமாக யுத்த நிறுத்தத்தை அறிவித்தார்.`<BR/><BR/>சார், இந்திரா காந்தி பாகிஸ்தான் போரில் இன்னும் பெரிய பரிசை இழந்து விட்டர் - இரண்டு தடவை.<BR/><BR/><BR/>டிசம்பர் 15ல், இந்தியா தானாகவே போர் நிறுத்திய போது, பாகிஸ்தான் ராணுவ நிலமை படு மோசமாக இருந்த்தது. பாகிஸ்தான் கையில் போர் நடத்த வேண்டிய சாமாஙல் இல்லை. போர் விம்மனங்களும், டாங்கிகளும் ஒடுவதற்கு முக்கியம் பெட்ரோல். இந்தியா போர் நிருத்திய போது, பாகிஸ்தான் கையில் 1 வாரம் பெட்ரோல் தான் இருந்தது. இந்தியா போரை இன்னும் ஒரு வாரம் நடத்தியிருந்தால், பாகிஸ்தான் ராணுவம் மொத்தமாக குலைந்திருக்கும். உடனே, இந்தியா காஷ்மீரிலிருந்து பாகிஸ்தானை மொத்தமா வெளியேற்றியிரிக்கலாம். 1948ச், பாகிஸ்தான் காஷ்மீரை ஆக்கிரமித்து, 40% காஷ்மீரை தன் கையில் வைத்துள்ளனர் என்பதை மறக்காதீர்கள்.. ஆனால் இந்திராவிற்கோ, அவளது தன்ந்தைக்கொ ஒரு Strategic view இல்லை. அதனால் ஒரு வெற்றியின் மேல், மற்றோரு வெற்றி போட்டு ரொம்ப கால பிரச்சினைகளை முடிக்க தவறி விட்டனர்.<BR/><BR/>சரி, ராணுவ நடவடிக்கை எடுக்க தவறினாலும், , அடுத்த வழி ராஜதந்திர முறையில் வந்தது. இந்தியா கையில் 93000 பாகிஸ்தான் ராணுவ கைதிகள். அவர்கலை விடுவிக்க, புட்டோ சிம்லா பேச்சில் ஈடுபட்டான். அதற்காக என்ன வேணாலும் செய்ய தயாராக இருந்தான். பாகிஸ்தான் பேய் இந்தியா கையில் வகையாக மாட்டிக் கொண்டது. அப்போது, காஷ்மீர் பிரச்சினைக்கு கடைசியாக ஒரு முடிவு கொண்டுவந்திருக்கலாம்.. அந்த வாய்ப்பையும் இந்திரா நழுவ விட்டார். இந்திரா என்ன செய்திருக்க வேண்டும்? காஷ்மீரிலிருந்து பாகிஸ்தான் படை முற்றுமாக வெளியேராவிட்டால், ஒரு ட்ரீடியும் ஒப்பமாட்டேன் என திட்ட வட்டமாக சொல்லியுருக்க வேண்டும். புட்டோவின், வாய்பேச்சை நம்பி, போர் கைதிகளை திருப்பி அனுப்பி விட்டார்.<BR/><BR/>1971-72ல், காஷ்மீர் பிரச்சினை முடிவை, இரு முறை நழுவ விட்ட பெருமை அவரை சாரும். <BR/><BR/>ஜவகர்லால் நேரு, இந்திய ராணுவம் காஷ்மீரில் பாகிஸ்தான் துருப்புகளை முற்றிலும் வெளியேற்றும் தறுவாயில், ஐ.நா. சென்று காரியத்தை கெடுத்தான். அப்பனைப் போல் மகள். <BR/><BR/>தன் சுய பலத்தில், தன் கை ஒங்கி நிற்க்கும் போது, கத்தியை கீழே இரக்காமல், எதிரியை ஓட விட்ட புத்திசாலிகள்.<BR/><BR/>விஜயராகவன்வன்பாக்கம் விஜயராகவன்https://www.blogger.com/profile/16336764407971993989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-60500404486650116312008-09-27T15:12:00.000+05:302008-09-27T15:12:00.000+05:30நன்றி அனானி. நஸ்ருதீன்ஷாதான். அமிதாப் பச்சன் அல்ல....நன்றி அனானி. நஸ்ருதீன்ஷாதான். அமிதாப் பச்சன் அல்ல. உடனே திருத்தி விடுகிறேன்.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-57834031488612533582008-09-27T15:02:00.000+05:302008-09-27T15:02:00.000+05:30//அனுபம் கேரும் அமிதாப் பச்சனும் போட்டி போட்டு நடி...//அனுபம் கேரும் அமிதாப் பச்சனும் போட்டி போட்டு நடித்துள்ளார்கள் என கேள்விப்பட்டேன்.//<BR/><BR/>அமிதாப்பச்சன் அல்ல.. நஸ்ருதீன்ஷா..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-20365223850691082142008-09-27T09:24:00.000+05:302008-09-27T09:24:00.000+05:30/////5. நானோ கார் வந்தால் யாருக்கு லாபம் யாருக்கு .../////5. நானோ கார் வந்தால் யாருக்கு லாபம் யாருக்கு நஷ்டம். மம்தாவின் போராட்டம் தொடர்பான உங்கள் கருத்து என்ன?<BR/>பதில்: மேற்கு வங்கத்திற்கு பெரிய கெடுதலை செய்துள்ளார் மம்தா. டாடா நானோ திட்டத்தை தம்மிடம் வரவழைக்க மற்ற மானிலங்களுக்கிடையே பலத்த போட்டி. டாட்டாவுக்கே இக்கஹ்டி என்றால் மற்ற தொழிலதிபர்களும் மேற்கு வங்கத்திற்கு செல்ல பயப்படுவார்களே. ஆகவே கண்ணுக்கு தெரியாத நஷ்டங்கள் பல அம்மானிலத்துக்கு இந்த அம்மையாரின் தயவால் வந்து விட்டது.///<BR/><BR/>இதை அந்த மாநிலத்துக்காரர்கள் உணர்ந்து அந்த அம்மணியைக் கட்டம் கட்ட வேண்டும்! எங்கே செய்யப்போகிறார்கள்?SP.VR. SUBBIAHhttps://www.blogger.com/profile/04797764056136324660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-90991854710567840992008-09-27T09:06:00.000+05:302008-09-27T09:06:00.000+05:30//இந்தியாவின் வெளியுறவு துறை கொள்கையில் அவர் எடுத்...//இந்தியாவின் வெளியுறவு துறை கொள்கையில் அவர் எடுத்த சில துணிச்சலான முடிவுகள் தற்போது இருக்கும், இருந்த பிரதமர்களால் எடுக்க முடியவில்லை. இது பற்றியும் நீங்கள் எழுதவேண்டும்//.<BR/>இந்திரா அவர்கள் பற்றி நான் எழுதிய <A HREF="http://dondu.blogspot.com/2007/04/legacy-4.html" REL="nofollow">இப்பதிவிலிருந்து</A>:<BR/>"அவருடைய தந்தைக்கு இயற்கையாகவே அமைந்த முகராசியை இவர் மெதுவாக உருவாக்கிக் கொண்டார். ஆனால் ஒன்று நினைவில் வைக்க வேண்டும். நேரு அவர்கள் என்னதான் முகராசியுடன் இருந்தாலும் மற்றவர்களையும் மதித்து அவர்களை தன்னுடன் அரவணைத்து சென்றார். இந்திராவிடம் அந்த அரவணைக்கும் தன்மை இல்லை. தன்னை சுற்றியிருப்பவர்களை சுத்தவிட்டு தனக்கு ஆதரவு தருபவர்களுக்கு மட்டும் பொறுப்புகள் தந்தார். சற்றே சுதந்திர மனப்பான்மையுடன் செயல்பட்டவர்களுக்கு அவர் மனதில் இடமில்லை. மெதுவாக அடுத்த சில ஆண்டுகளுக்குள் வெளிப்பட இருந்த சர்வாதிகாரி இப்போதுதான் உருவாகத் தொடங்கினார்.<BR/><BR/>இந்த காலக்கட்டத்தில் உலக அரங்கில் பல முக்கிய விஷயங்கள் நடந்தன.<BR/><BR/>1967-ஆம் ஆண்டு ஜூன் மாதம் அரபு-இஸ்ரவேல ஆறு நாள் யுத்தம் நடந்தது. வழ்க்கம்போல இந்தியா பாலஸ்தீனியர்களுக்கு ஜால்ரா அடித்தது. இருப்பினும் இஸ்ரேல் உலகையே பிரமிக்க வைக்கும் வெற்றியைப் பெற்றது. அப்போது மட்டும் இந்தியா இஸ்ரேலுடன் ஒத்துழைத்திருந்தால் மிக நல்ல பலன் கிடைத்திருந்திருக்கும். ஆனால் எவ்வளவோ பல மாறுதல்களை அரசியல் அணுகுமுறையில் கொண்டு வந்த இந்திரா அவர்கள் இங்கு நேரு அவர்களின் செயல்பாட்டையே தொடர்ந்தார்.<BR/><BR/>அமெரிக்கா வியட்னாம் விவகாரத்தில் மேலும் மேலும் ஆழமாக சிக்க ஆரம்பித்தது. நடுநிலை கொள்கை என்ற பெயரில் இந்தியா அமெரிக்காவை சாடியது. அதனால் பல நலன்களை இழந்தது. அதே சமயம் 1968-ல் செக்கோஸ்லாவோக்கியாவை சோவியத் யூனியன் ஆக்கிரமித்த போது அதை கண்டிக்க வக்கின்றி இந்தியா விளக்கெண்ணெய் நிலையை எடுத்தது. இதனால் இந்தியாவின் தார்மீக நிலை கேலிக்குள்ளானதுதான் மிச்சம். <BR/><BR/>நடுநிலைமை என்ற பெயரில் அமெரிக்காவை சாடி, சோவியத் யூனியனை துதிப்பதில் இந்தியா முன்னிலை வகித்தது. அதே சமயம் அமெரிக்காவிடம் உதவி கேட்பதும் நிற்கவில்லை. அதுபாட்டுக்கு தனியாக நடந்தது. சராசரி இந்தியர்கள் அரசின் இந்த இரட்டை நிலையை கண்டு வெட்கித் தலை குனிந்தனர். இந்தியாவைக் கண்டாலே வெளிநாடுகளில் இளப்பமாயிற்று.<BR/><BR/>சோஷலிசம் என்ற உருப்படாத தத்துவத்தை நேருவிடமிருந்து பெற்ற இந்திரா அவ்ர்கள் அதை இன்னும் கற்பனை செய்ய முடியாத அபத்தங்களின் உயரத்துக்கு கொண்டு சென்றார். நிதி மந்திரியாக இருந்த மொரார்ஜி அவர்கள் சொன்ன உருப்படியான யோசனைகள் அலட்சியப்படுத்தப்பட்டன. சோஷலிசம் என்ற பெயரில் பணக்காரர்களுக்கு அதிக வரி விதித்ததில் பல விரும்பத்தகாத விளைவுகள் ஏற்பட்டன. ஒரு காலக் கட்டத்தில் ஒருவருக்கு பத்து லட்சம் ரூபாய் ஆண்டு வருமானம் இருந்தால் அவர் வரிகளுக்குப் பிறகு எடுத்து செல்வது வெறும் 35,000 ரூபாயாகவே இருந்தது. இதை இந்திரா அவர்கள் பெருமையாக வேறு கூறிக் கொண்டார். இருப்பவர் இல்லாதவர் இடையே உள்ள இடைவெளியை குறைக்க பணக்காரர்களை ஏழையாக்குவதுதான் நடந்தது. அதனால் யாருக்கும் உழைத்து அதிக பணம் சம்பாதிக்கும் எண்ணம் இல்லாமல் போனது.<BR/><BR/>இம்மாதிரியே நிலைமை சீர்குலைந்து போக, மே மாதம் 1969-ல் குடியரசுத் தலைவர் ஜாகிர் ஹுஸைன் மறைந்தார். இது ஒரு மைல்கல் இந்திய சரித்திரத்தில். இதன் பிறகு இந்திரா அவர்களின் சுயலாப செய்கைகள் அதிகரிக்க ஆரம்பித்தன".<BR/><BR/>இப்போது இன்னொரு <A HREF="http://dondu.blogspot.com/2007/04/legacy-5.html" REL="nofollow">பதிவிலிருந்து</A>:<BR/>"சங்கடங்களை சந்தித்த இந்திரா காந்தி அவர்கள் ஒரேயடியாக தனது அரசியல் எதிரிகளையெல்லாம் கட்சியிலிருந்து ஓரம் கட்ட நினைத்தார். அதற்கு அவர் எடுத்து கொண்ட அஸ்திரம் சுயேச்சையாக குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளராக நின்ற வி.வி. கிரிக்கு ஆதரவளிக்க எடுத்த முடிவு. தானே முன்மொழிந்து கட்சியின் அதிகார பூர்வ வேட்பாளராக சஞ்சீவ ரெட்டியை நிறுத்திய இந்திராவே தனது கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தத்தம் மனசாட்சியின்படி ஓட்டளிக்க சொன்னார். நிகழ்கால அரசியலில் இதற்கு முன்னால் நடக்காத நிகழ்ச்சி அது. காங்கிரஸ் கட்சியே இரண்டாகப் பிளந்தது. ஸ்தாபன காங்கிரஸ், ஆட்சியில் இருந்த காங்கிரஸ் என்று இரண்டானது. இரண்டாவதின் தலைவராக இந்திரா விளங்கினார். வெவ்வேறு துறையில் வேலை செய்த எளிய மக்களை வாடகைக்கு எடுத்த லாரிகளில் வரவழைத்து, பிரியாணி அளித்து தனது இல்லத்துக்கு முன்னால் தனக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்கள் செய்ய வைத்தார். இச்செயல் முறை பிற்காலத்தில் தமிழகத்தில் இரு திராவிடக் கட்சிகளாலும் வெவ்வேறு சமயங்களில் இன்னமும் நடத்தப்படுவதும் இந்திரா அவ்ர்களின் லெகசிதான் என்பதைக் கூறவும் வேண்டுமா? திடீரென 1971-ல் ஒரு ஆண்டுக்கு முன்னாலே பாராளுமன்ற தேர்தலுக்கு வழி செய்தார். இந்திராவின் தயவில் பதவிக்கு வந்த கிரி அவர்கள் இம்மென்றால் பத்து கையெழுத்துகள் போடவும் தயாராக இருந்தார். ரப்பர் ஸ்டாம்ப் என்ற செல்லப் பெயருக்கும் பாத்திரமானார். <BR/><BR/>அதே சமயம் அவருடன் கூட்டு வைத்துக் கொண்டிருந்த தி.மு.க.வும் அதே மாதிரி சட்ட சபை தேர்தல் நடத்தும்படி பரிந்துரை செய்தது. இப்போது நடந்ததுதான் வேதனை தரும் செயல். சட்டசபை தேர்தலில் இந்திரா காங்கிரசுக்கு ஒரு சீட்டு கூட இல்லை. பாராளுமன்ற தேர்தலுக்கான சீட்டுகளிலேயே இந்திரா குறியாக இருந்தார். இதற்கு பிறகு காங்கிரசோ மற்ற தேசீய கட்சிகளோ தமிழகத்தை பொருத்தவரை செல்லாக் காசாகவே போயின. இதற்கு முக்கியக் காரணமே இந்திராவின் அப்போதைய சுயநல அடிப்படையில் எடுத்த முடிவுகளே. ஆக, இந்த லெகசியும் தமிழ்நாட்டை பொருத்தவரை இந்திராவுடையதுதான்".<BR/><BR/>நீங்கள் கூறுவது போல வெளிவிவகார கொள்கைகளில் அவர் ஒன்றும் அதிகம் சோபிக்கவில்லை. அதில் பெற்ற ஒரே வெற்றியான <A HREF="http://dondu.blogspot.com/2007/04/legacy-6.html" REL="nofollow">பங்களாதேஷ் யுத்தம் பற்றி நான் எழுதிய பதிவிலிருந்து</A>:<BR/>"1971 மார்ச்சிலேயே வங்கதேசப் பிரச்சினை ஆரம்பமாகி விட்டது. அதற்கு சற்று முன்புதான் (1970) பாக்கிஸ்தான் பொதுத் தேர்தல் நடந்து முடிந்திருந்தது. அப்போது கிழக்கு பாக்கிஸ்தான் என்று அழைக்கப்பட்டு வந்த வங்க தேசத்தில் ஷேக் முஜிபூர் கட்சியான அவாமி லீகுக்கும் மேற்கு பாகிஸ்தானில் புட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கும் அதிக சீட்டுகள் கிடைத்தன. இருப்பினும் வங்க தேச எம்பிக்கள் முழுமையான பாகிஸ்தானில் பெரும்பான்மை பெற்றிருந்ததால் முஜிபூர்தான் பிரதமராகியிருந்திருக்க வேண்டும். ஆனால் பஞ்சாபியர் டாமினேட் செய்த பாகிஸ்தானுக்கு ஒரு வங்க தேசத்தவர் பிரதமராக வருவது அவர்களால் சகிக்க முடியாமல் இருந்தது.<BR/><BR/>ஆகவே மேற்கு பாகிஸ்தானியர் முஜிபூர் ரஹ்மானின் கட்சி பதவி ஏற்க முடியாதபடி அழுகினி ஆட்டம் ஆடினர். யாஹ்யா கான் முஜிபுரை மார்ச் 25, 1971-ல் கைது செய்து மேற்கு பாக்கிஸ்தானுக்கு கொண்டு சென்றார். அதற்கு அடுத்த நாளிலிருந்து கிழக்கு பாக்கிஸ்தானில் அகோர அடக்குமுறை ஆரம்பமாயிற்று. கிழக்கு பாகிஸ்தானின் கசாப்புக்காரன் என்று பெயர் பெற்ற டிக்கா கானின் அட்டூழியம் கொடி கட்டி பிறந்தது. மதத்தால் மட்டும் நாட்டை ஒன்றாக வைக்க முடியாது என்பது சந்தேகத்துக்கிடமின்றி நிரூபிக்கப் பட்டது. இந்தியாவிலிருந்து இசுலாமியர் பாகிஸ்தானை பிரித்து சென்று 1947-48-ல் நடந்த கலவரங்கள் எல்லாமே தவிக்கப்பட்டிருக்கக் கூடியவை என்பதும் நிரூபணமாயிற்று. வெவ்வேறு நாடுகளில் இருந்த பாகிஸ்தான் தூதரகங்களிலிருந்து கிழக்கு பாகிஸ்தானை சேர்ந்த அதிகாரிகள் சாரி சாரியாக வெளியேறி இந்தியத் தூதரகங்களில் அடைக்கலம் புகுந்தனர். பாகிஸ்தான் மானம் கப்பலேறியது. நாட்டைப் பிரிவினை செய்த இரு தேசக் கோட்பாடு அடிப்படையிலேயே தவறு என்று அப்போது அவர்களில் பலர் கூறினர். <BR/><BR/>இசுலாமியரே இசுலாமியரைக் கொன்ற கூத்தும் நடைபெற்றது. இந்தியாவோ சுமார் 100-120 லட்சம் அகதிகள் வருகையால் மூச்சு திணறியது. இந்த தருணத்தில் இந்திரா அவர்கள் திறமையாகச் செயல்பட்டதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். யாஹ்யா கான் திமிருடன் வெளி நாட்டு நிருபர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில் தன் இந்திராவை நேரில் பார்த்தால், "வாயை மூடு பொட்டச்சி. எங்க அகதிகளை திருப்பி அனுப்பு" (shut up woman, and let my refugees return) என்று கூறப்போவதாகக் கூறினார். இதைவிட ஒருவர் ஆணாதிக்கத்துடன் பேசியிருந்திருக்க முடியாது. ஆனால் அதே திமிர் பிடித்த ஆண் இந்த வலிமையான பெண்மணியிடம் மண்டியிட நேர்ந்தது. <BR/><BR/>டிசம்பர் 4 அன்று ஆரம்பித்த யுத்தம், கிழக்கு பாகிஸ்தானில் 16-ஆம் தேதி முடிவுக்கு வந்தது. கிழக்கு பாகிஸ்தானின் இராணுவத் தலைவர் ஜெனெரல் நியாஜி இந்திய ராணுவத் தலைவர் அரோராவிடம் சரணடைந்தார். பாக்கிஸ்தானின் சுமார் 93000 துருப்புகள் இந்தியரிடம் போர் கைதியாக மாட்டிக் கொண்டனர். இப்போது இந்திரா காந்தி புத்திசாலித்தனமான காரியம் செய்தார். ஒரு தலைப் பட்சமாக யுத்த நிறுத்தத்தை அறிவித்தார். பாக்கிஸ்தான் மிகுந்த மனகிலேசத்திலும் அவமானத்திலும் இருந்தது. அதற்கு மேலே யுத்தம் செய்யும் தைரியம் இல்லை. ஆகவே போர் நிறுத்தம் கடைசியில் அமுலுக்கு வந்தது. அப்போது ஜெர்மானிய பத்திரிகையான Der Spiegel "Niederlage gegen Indien" (இந்தியாவிடம் படுதோல்வி) என்ற தலைப்பில் ஒரு இஷ்யூவே போட்டது. <BR/><BR/>ஷேக் முஜிபுர் ரஹ்மான் மேற்கு பாகிஸ்தான் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு வங்க தேசம் இந்தியா வழியாக சென்றார். ஆக, வங்க தேசம் உருவாவதில் இந்தியாவின், முக்கியமாக இந்திராவின், பங்கு ஒரு சரித்திர உண்மை. இந்தியாவைப் பொருத்தவரை 1962-ல் சீனாவிடம் தோல்வி, 1965-ல் பாகிஸ்தானுடன் ஒரு மாதிரி குழப்பமான சண்டை. அதற்கு பிறகு முதன் முறையாக சந்தேகத்துக்கிடமேயில்லாத ஒரு வெற்றி. அப்போது இந்திரா அவர்கள் புகழ் உச்சியில் இருந்தார். எதிர்க்கட்சித் தலைவர் வாஜ்பேயீ அவர்கள் இந்திராவை துர்க்கா என்றார்".<BR/><BR/>ஒட்டுமொத்தமாக பார்த்தால் இந்திரா அவர்களது விஷயத்தில் கெடுதிகளே அதிகம்.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-88512209090390933542008-09-26T23:56:00.000+05:302008-09-26T23:56:00.000+05:30அய்யா,எமர்ஜென்சி காலத்தில் நான் பிறக்கவில்லை. பிறக...அய்யா,<BR/><BR/>எமர்ஜென்சி காலத்தில் நான் பிறக்கவில்லை. பிறகு படித்து தெரிந்து கொண்டதன் முலம் திருமதி இந்திரா காந்தி-ஐ போல ஒரு துணிவான பிரதமர் இருந்ததில்லை என தெரிகிறது. இந்தியாவின் வெளியுறவு துறை கொள்கையில் அவர் எடுத்த சில துணிச்சலான முடிவுகள் தற்போது இருக்கும், இருந்த பிரதமர்களால் எடுக்க முடியவில்லை. இது பற்றியும் நீங்கள் எழுதவேண்டும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-842505401512166752008-09-26T10:45:00.000+05:302008-09-26T10:45:00.000+05:30//சோ அவர்கள் பெண்மை மிக்க காரியத்தை செய்தார் என்று...//சோ அவர்கள் பெண்மை மிக்க காரியத்தை செய்தார் என்று கூற ஆசைப்படுகிறீர்களா?//<BR/>ஐயா, இதைச் செய்ய துணிச்சல் தான் மிகுந்திருக்கவேண்டும்.<BR/><BR/>//அப்படியானால் மேலாண்மை என்பதை<BR/>எவ்வாறு எடுத்து கொள்வீர்கள்?//<BR/><BR/>மேலாண்மை என்பது பால் சார்ந்து குறிக்கப்படுவதல்ல என எண்ணுகிறேன். அவ்வாரிருப்பின், வேறுசொல் பயன்படுத்த வேண்டும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-38701112952658665902008-09-26T10:30:00.000+05:302008-09-26T10:30:00.000+05:301. தி.மு.க வை தோற்றுவித்த அண்ணா காலத்திலிருந்து இன...1. தி.மு.க வை தோற்றுவித்த அண்<BR/>ணா காலத்திலிருந்து இன்று வரை எத்தனை பெண்கள் அந்தக் கட்சியிலிருந்து மந்திரி பதவி வகித்திருக்கிறார்கள் ? (சொந்தக்காரர்கள், பெண்டாட்டிகள், வைப்பாட்டிகள் எல்லாம் சேர்த்து ஒரு கணக்கு சொல்லவும்).<BR/><BR/><BR/>2. நானாவதி கமிஷன் ரிப்போர்ட் பற்றி ?<BR/><BR/>அது என்ன "அதை எப்படி நிச்சயமாக தெரிந்து கொள்வது என்பதுதான் 64000 டாலருக்கான கேள்வி. "<BR/><BR/>64000 $ ஐ விட அதிக பணம் வேண்டாமா ? மில்லியன் டாலர் கேள்வி என்பது தானே புழக்கத்தில் உள்ள சொற்றொடர் ?வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-54878214715438676872008-09-26T09:43:00.000+05:302008-09-26T09:43:00.000+05:30பதில்கள் சுவாரஸ்யமாக இருந்தன நன்றிபதில்கள் சுவாரஸ்யமாக இருந்தன <BR/>நன்றிவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-16995072815350233242008-09-26T08:37:00.000+05:302008-09-26T08:37:00.000+05:30//அந்த நேரத்தில் துக்ளக் ஆசிரியர் சோ அவர்கள் ஒரு ஆ...//அந்த நேரத்தில் துக்ளக் ஆசிரியர் சோ அவர்கள் ஒரு ஆண்மை மிக்க காரியத்தை செய்தார்.//<BR/>//மிகவும் பிற்போக்கான ஆணாதிக்கச் சொல்லாடால்//<BR/><BR/>சோ அவர்கள் பெண்மை மிக்க காரியத்தை செய்தார் என்று கூற ஆசைப்படுகிறீர்களா?<BR/><BR/>அப்படியானால் மேலாண்மை என்பதை<BR/>எவ்வாறு எடுத்து கொள்வீர்கள்? <BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-46456928818891294302008-09-26T08:16:00.000+05:302008-09-26T08:16:00.000+05:30SirWhat is that $64000 biz?Interesting Q&A.Als...Sir<BR/><BR/>What is that $64000 biz?<BR/><BR/>Interesting Q&A.<BR/><BR/>Also the thing on Palin - you too? (Zardari's escapades!)<BR/><BR/>Mathan (AV) should learn from you!<BR/><BR/>Cheers!Rameshhttps://www.blogger.com/profile/15137641431193133043noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-43805004329214861512008-09-26T07:43:00.000+05:302008-09-26T07:43:00.000+05:30//அந்த நேரத்தில் துக்ளக் ஆசிரியர் சோ அவர்கள் ஒரு ஆ...//அந்த நேரத்தில் துக்ளக் ஆசிரியர் சோ அவர்கள் ஒரு ஆண்மை மிக்க காரியத்தை செய்தார்.//<BR/><BR/>மிகவும் பிற்போக்கான ஆணாதிக்கச் சொல்லாடால்.Anonymousnoreply@blogger.com