10/17/2010

செய்வினை, சூன்யம் வைத்தல் ஆகிய மூட நம்பிக்கைகளுக்கு ஒரு மரண அடி

பதிவர் வெங்கட் அவர்களின் பதிவுகளை படித்து ரொம்ப நாட்களாயிற்றே என அவற்றை ஸ்க்ரோல் செய்தபோது பில்லி சூனியம் போட்டி பற்றிய தொலைக்காட்சியின் விவரம் அடங்கிய இப்பதிவு கிடைத்தது.

அதிலிருந்து இந்த உரலுக்கும் சுட்டி கிடைத்தது.

வீடியோ வேண்டும் என்றால் தங்களுக்கு எழுதுமாறு மின்னஞ்சல் முகவரியும் தந்திருந்தார்கள். எதற்கும் இருக்கட்டும் என்று யூட்யூப்பில் முயற்சி செய்து இந்த வீடியோவை எம்பெட் செய்ய முடிந்தது. அதன் பிற பகுதிகளை சம்பந்தப்பட்ட வீடியோ பக்கத்திலிருந்தே செல்லலாம்.



பில்லி, சூனியம் எல்லாம் 99% ஏமாற்றுவேலைதான் என்பதை எத்தனை முறை சொன்னாலும் நம் ஜனங்கள் புரிந்து கொள்வதே இல்லை.

அதே போல கடவுளுக்கும் நமக்கும் இடையில் தேவையின்றி குருக்களை வரவிடுவதால் பிரச்சினைகள்தான் முளைக்கிறது என்பதையும் புரிந்து கொள்ளல் அவசியம். அதற்காக குரு என்பவரே வேண்டாம் எனச் சொல்லவில்லை. ஆனால் குருவைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் வேண்டும். சித்து வேலைகள் செய்து பிரமிக்கச் செய்பவர்கள் ஒருபோதும் சரியான குருவாக ஆக முடியாது.

புட்டபர்த்தி சாய்பாபா கையில் விபூதி வரவழைக்கும் வித்தையை டி.சி. சர்க்கார் போன்ற பல மந்திரவாதிகள் செய்து காண்பித்தும் நம் மக்களின் அறியாமையை என்னவென்று சொல்வது. மக்களை விடுங்கள், பகுத்தறிவு பாசறையிலிருந்து வந்த மந்திரிகளும் அவரிடமிருந்து மோதிரம் பெற போட்டி போட்டதை என்னவென்று கூறுவது?

சாயிபாபா சம்பந்தப்பட்ட வீடியோவை யூட்யூப்பில் அடையாளம் காட்டிய ரஹீம் கஸாலி அவர்களுக்கு நன்றி:



அன்புடன்,
டோண்டு ராகவன்

88 comments:

pichaikaaran said...

”புட்டபர்த்தி சாய்பாபா கையில் விபூதி வரவழைக்கும் வித்தையை டி.சி. சர்க்கார் போன்ற பல மந்திரவாதிகள் செய்து காண்பித்தும் நம் மக்களின் அறியாமையை என்னவென்று சொல்வது. ”
சாய் பாபா விபூதி வரவழைப்பதில் பிரமித்துதான் , அவரை கோடிக்கணக்கானோர் வணங்குகிறார்கள் என நினைக்கும் உங்கள் அறியாமையை என்னவென்று சொல்வது...

movithan said...

தலைப்பே சூப்பர்.
கெட்டுப்போகிறேன்,முடிஞ்சாத் தடுத்துப்பாரு என்று முண்டிக்கொண்டு நிற்கிற மனிதர்களை,என்னதான் செய்யமுடியும்.

இன்னும் எத்தனை பெரியார் வந்தாலும் மூடநம்பிக்கை உள்ளவனை திருத்தமுடியாது.

வால்பையன் said...

//சாய் பாபா விபூதி வரவழைப்பதில் பிரமித்துதான் , அவரை கோடிக்கணக்கானோர் வணங்குகிறார்கள் என நினைக்கும் உங்கள் அறியாமையை என்னவென்று சொல்வது..//


அடடே அப்படியா!

அந்த ஹிப்பி தலையன் ஒரு ஹோமோ, ஒருவேளை அதுக்காக போவாங்களோ!?

வால்பையன் said...

//இன்னும் எத்தனை பெரியார் வந்தாலும் மூடநம்பிக்கை உள்ளவனை திருத்தமுடியாது//

பெரியார் தவிர யார் சொன்னாலும் திருந்த மாட்டோம்னு இருந்தா அப்படி தான் ஆகும்!

வால்பையன் said...

//பில்லி, சூனியம் எல்லாம் 99% ஏமாற்றுவேலைதான் என்பதை எத்தனை முறை சொன்னாலும் நம் ஜனங்கள் புரிந்து கொள்வதே இல்லை.//

100% ஏமாற்றுவேலை தான்!

அருள் said...

சித்துவேலைகளை நம்புங்கள் என்று புட்டபர்த்தி சாய்பாபா கூறவில்லை. அதனடிப்படையில் அவரது பக்தர்கள் அவரை பின்பற்றவும் இல்லை. பில்லி, சூனியத்திற்கும் சாய்பாபாவுக்கும் எந்த தொடர்பும் அல்ல.

"பார்ப்பான் இருபிறப்பாளன் மற்றவர்கள் ஒருபிறப்பாளர்" என்றுபேசுவதைவிடவா பெரிய மூடநம்பிக்கை இருக்கிறது.

வால்பையன் said...

//சித்துவேலைகளை நம்புங்கள் என்று புட்டபர்த்தி சாய்பாபா கூறவில்லை. அதனடிப்படையில் அவரது பக்தர்கள் அவரை பின்பற்றவும் இல்லை. பில்லி, சூனியத்திற்கும் சாய்பாபாவுக்கும் எந்த தொடர்பும் அல்ல.//

ஹிப்பித்தலையன் எந்த சித்து வேலையும் செய்ததில்லையாக்கும்! நீங்க தமிழ் ஓவியா மாதிரி பழைய பெரியார் பேச்சுகளையெல்லாம் எடுத்து பேஸ்ட் பண்ணதா ஞாபகம்! இப்போ கட்சி மாறிட்டிங்களா!?


//"பார்ப்பான் இருபிறப்பாளன் மற்றவர்கள் ஒருபிறப்பாளர்" என்றுபேசுவதைவிடவா பெரிய மூடநம்பிக்கை இருக்கிறது. //


ஆமா, நமக்கு நாட்டில் எது நடந்தாலும் கவலையில்லை, பாப்பான் மட்டும் நிம்மதியா இருக்கக்கூடாது, வன்னியனுக்கு சாதி வெறி இருக்கலாம், அது பிறப்புரிமை, ஆனா பாப்பானுக்கு இருந்தா நாம விடக்கூடாது, சூப்பர் கொள்கை அருள் இப்படியே இருங்க

Anonymous said...

வன்னியன் தலித் வாயில் பீ திணித்த்துவிட்டு பாப்பான் இருபிறப்பாளன்னு சொன்னதுனால தான் நான் பீ திணிப்பு வேலையை செய்தேன்னு சொன்னா எல்லோரும் நம்பணுமாம். இப்படிப்பட்ட கேவலமான மனநிலையில் சில மேல்ஜாதி வர்க்கத்து ஜாதிவெறியர்கள் இருப்பதுவே தலித்துகளின் கீழ் நிலைக்குக் காரணம் என்பது தெரிகிறது.

Anonymous said...

//
"பார்ப்பான் இருபிறப்பாளன் மற்றவர்கள் ஒருபிறப்பாளர்" என்றுபேசுவதைவிடவா பெரிய மூடநம்பிக்கை இருக்கிறது.
//

பேசுவது மூடநம்பிக்கை அல்ல. அது வெறும் முட்டாள் தனமான பேச்சு.

இன்னும் அதையே சொல்லிக்கொண்டு திரியும் பகுத்தறிவுப் பன்னாடைகள் அதை நம்பிக்கொண்டு இருப்பது தான் "மூட நம்பிக்கை".

ரஹீம் கஸ்ஸாலி said...

செய்வினையால் ஒரு ம------ரும் புடுங்கமுடியாது. அப்படி இருந்தால் இந்த உலகத்தில் யாருமேஉயிரோடு இருக்க முடியாது. அப்படி ஓன்று இருக்குமானால், இந்நேரம் பின்லேடனுக்கு புஷ்ஷும் புஷ்ஷுக்கு பின்லேடனும் செய்வினை வைத்துகொண்டு செத்திருப்பார்கள். உலகம் நிம்மதியாக இருந்திருக்கும்.

ரஹீம் கஸ்ஸாலி said...

அய்யா எனக்கொரு சந்தேகம், செய்வினை என்ற பெயரில் ஒரு ஆளை நேரடியாக வைத்து கொண்டே என்னன்னவோ செய்தும் ஒன்றையுமே புடுங்க முடியலையே? ஆளே இல்லாமல் முடியையும், காலடி மண்ணையும் வைத்துக்கொண்டு செய்வினை செய்வேன் என்று சொல்லும் டுபாக்கூர் பார்டிகளை செருப்பால் அடித்தால் என்ன?

ராம்ஜி_யாஹூ said...

that tv reporter's lecture is nonsense, long. soi stopped to watch

Anonymous said...

Sai baba is avatar of God.. if u dont like him, just leave him alone.. dont use derogatory words such as hippy thalayan etc... dont worry he will bless these kind of ppl also

Venkat said...

Sir,
adhenna 99% ?

Anonymous said...

ஹலோ வாலு. எங்க கடவுளை பார்த்து ஹிப்பி தலையன்னு சொன்னீங்க...அவன் மன்னிக்கவும் அவர் வாயிலிருந்து லிங்கத்தை வரவழைச்சு உங்க வாயில திநிச்சுடுவோம் ஜாக்கிரதை. வேணும்னா, பன்னாடை தலையன், பரட்டை தலையன்னு சொல்லுங்க..ஆமா.

wondering ... said...

is this really dondu or his account h4ck3d ?

anyway, well said ...

Anonymous said...

டோண்டு,

நபிகள் நாயகம் சல்லல்லாஹூ அலைஹிவஸல்லம், இது மாதிரி சூனியம் வைப்பது, மேஜிக் செய்வது எல்லாம் உண்மை என்று கூறியிருக்கிறார்கள். அதே போல, அந்த மேஜிக் சூனியம் வைப்பதற்கு மாற்றாக ஏழு பேரீச்சம் பழங்களை சாப்பிட அறிவுறுத்தியிருக்கிறார்கள். பேரீச்சம் பழத்தை தின்றுவிட்டு விஷத்தை குடித்தாலும் ஒன்றும் செய்யாது என்று தெரிவித்திருக்கிறார்கள்.
Bukhari 007.071.664
Narrated Saud
I heard Allah’s Apostle saying, “If Somebody takes seven ‘Ajwa dates in the morning, neither magic nor poison will hurt him that day.”

Anonymous said...

//
ஹலோ வாலு. எங்க கடவுளை பார்த்து ஹிப்பி தலையன்னு சொன்னீங்க...அவன் மன்னிக்கவும் அவர் வாயிலிருந்து லிங்கத்தை வரவழைச்சு உங்க வாயில திநிச்சுடுவோம் ஜாக்கிரதை. வேணும்னா, பன்னாடை தலையன், பரட்டை தலையன்னு சொல்லுங்க..ஆமா.
//

எவன் வாயில் எதைத் திணிக்கலாம். அதுக்கு பார்ப்பானை கைகாட்டிவிட்டு தப்பலாம் எனபதே குறியாக பலர் அலைகிறார்கள் போலும்.

guna said...

"செய்வினை, சூன்யம் வைத்தல் ஆகிய மூட நம்பிக்கைகளுக்கு ஒரு மரண அடி" PLEASE NOTE THE POINT) change the topic

அந்த ஹிப்பி தலையன் ஒரு ஹோமோ, ஒருவேளை அதுக்காக போவாங்களோ!?
வேணும்னா, பன்னாடை தலையன், பரட்டை தலையன்னு சொல்லுங்க..ஆமா. (

NO said...

அன்பான நண்பர் திரு டோண்டு,

ஏமாற்று வித்தைகள் செய்து ஆள் சேர்ப்பது எல்லா எடத்திலயும்தான். சாமி பெயர்சொல்லி பித்தலாட்டம் செய்வது கடுவுள் நம்ப்பிக்கையாளர்கள் என்றால், பொய்யான ஒரு சொர்க்கம் இவ்வுலகத்திலேயே நாங்கள் செய்தோம், செய்வோம், செய்கின்றோம் என்று மாய்மாலம் காட்டுவது மார்க்ஸ் மற்றும் மாவோ நம்பிக்கையாளர்கள். நீங்கள் சோவியத் மற்றும் சீன பிரச்சார துண்டுகளையும் மற்றும் முழு நீள படங்களையும் பார்த்தால் இந்த சாமி ஆட்டம் போடும் சர்வ மத சாம்பிரானிகளுக்கும் நம்ம புரட்சி வந்தாச்சு பாடல் பாடும் பொய்யர்களுக்கும் வித்தியாசம் அதிகம் இல்லை என்று தெரியும்.

சாய்பாபா விபூதி எடுப்பதைகூட உண்மை என்று நம்புவோர் இருக்கிறார்களா என்ற கேள்விக்கு பதில், மாவோ மற்றும் ஸ்டாலின் மக்கள் நலத்திற்க்காக ஆட்சி நடத்தினார்கள், மக்களும் நல்லா இருந்தார்கள் என்று நம்பும் கூட்டம் இருக்கும் பொழுது, அது பெரிய விடயம் இல்லை.

If still a few people can believe that Stalin and Mao's mass murders destruction and total anhilaton of millions did not happen and that too inspite of overhelming evidence of all forms including their own writings, its not a big surprise if charlatans and magicians still continue to have so many followers.

இந்த மந்திரவாதிகளை நம்பும் வியாதி இந்தியாவில் மட்டும் இல்லை. எல்லா இடங்களிலும், மதங்களிலும் மிக பரவலாகவே உள்ளன. இதில் தமாஷ்
என்னவென்றால் ஏதோ இந்து மதத்தில் மட்டும்தான் இந்த வேலைகள் நடக்கிறது என்று கூவிக்கொண்டு, பகுத்தறிவு பேசி கொள்கை கூப்பாடு போடுபவர்கள்
யார் என்று பார்த்தால், இதே மாதிரி தமாஷுகளை கொண்ட நம்பிக்கைகளை உள்ளே வைத்துக்கொண்டு நாடகம் ஆடுபவர்களே. அதாவது கடைந்தெடுத்த மதவாதிகள்.

சதக்கத்துல்லாஹ் said...

தினந்தோறும் ஏழு பேரீத்தம்பழங்களை சாப்பிட்டால் விஷமும் அண்டாது, சூன்யமும் அண்டாது என்ற நபிபெருமானார் பொன்மொழியை பார்த்து பரவசமடைந்தேன். அவர் சொன்னால் பொய்யாக இருக்கவே இருக்காது. ஆகவே எந்த ஒரு முஸ்லீமுக்கும் ஏழு பேரீச்சம்பழங்களை கொடுத்துவிட்டு விஷத்தை கொடுத்து பாருங்கள். விஷம் ஒன்றும் பண்ணாது.

சதுக்க பூதம் said...

//பில்லி, சூனியம் எல்லாம் 99% ஏமாற்றுவேலைதான் என்பதை எத்தனை முறை சொன்னாலும் நம் ஜனங்கள் புரிந்து கொள்வதே இல்லை.//
சரியாக சொன்னீர்கள். கோவிலில் வேலை பார்ப்பவரை கோவிலிலேயே கொலை செய்து விட்டு ஜெயிலில் கலி திண்ற சாமியார்கள் அரசியல்வாதிகளிடம் பணம் கற்ந்து கொண்டு அதர்வண வேத அடிப்படையில் கருப்பு சட்டை அணிந்து கொண்டு தனக்கு எதிர் கோஷ்டி அரசியல்வாதிகளுக்கு செய்வினை செய்விக்கிறேன் என்ற போர்வையில் அம்மாவாசை நடு நிசி யாகம் செய்யும் போலி குருமார்கள் இன்னும் இருக்க தானே செய்கிறார்கள். அதுவும் பரம்பரை பரம்பரையாக மடம் வைத்திருக்கிறேன் பேர்வழி என்ற பெயரில் பல தலைமுறைகளாக மக்களை ஏமாற்றி கொண்டுதான் இருக்கிறார்கள். இது போன்ற போலிக்களை ஒழிக்க பெரியார் வரவேண்டும் என்று மக்கள் காத்திருக்க கூடாது

ரஹீம் கஸ்ஸாலி said...

சாய் பாபா பற்றி இதையும் பாருங்க.. http://ragariz.blogspot.com/2010/10/blog-post_18.html.

NO said...

//இது போன்ற போலிக்களை ஒழிக்க பெரியார் வரவேண்டும்//

பெரியார் போலிகளை எங்கே ஒழித்தார், அவர் பெயரை சொல்லி சொத்து சேர்க்கும் போலிகள் அல்லவா வளர்ந்து உள்ளார்கள்? எப்படி ஒரு மதமோ அல்லது அதற்காக பேசும் சாமியாரோ/ தூதரோ/ புனிதரோ என்னதான் முதலில் நல்லது நடப்பதற்காக ஒரு கூட்டத்தை சேர்த்தாலும், அவர்கள்
நல்லவர்களாகவே இருந்தாலும், சிறிது காலத்தில் "நாங்கள் மட்டுமே ஸ்பெஷல்" என்ற நிலைமைக்கு வந்து மாற்றார்களை வெறுக்கும் சமுதாயமாக மாறிவிடும். இந்த மாறுதலை, அதன் துவேஷ சிந்தனைகளை வைத்துதான் அந்த மதமோ அதன் புனிதர்களோ நமக்கு வேண்டியது இல்லை என்று கடவுள் மறுப்பாளர்கள் முடிவெடுக்கிறார்கள். அதாவது என்னதான் நல்ல எண்ணங்களுடன் கூட்டம் சேர்க்கபட்டாலும், கோட்பாடுகள் உருவாக்கப்பட்டது என்றாலும், அதனின் இன்றைய வீரியம் சமுதாயத்திற்கு கேடு விளைவிக்கும் என்றால், அந்த வழிமுறைகள் தேவை இல்லை, அது கற்பிக்கும் கடவுள் மற்றும் புனிதர்களும் தேவை இல்லை என்று சொல்ல வேண்டியிருக்கும். அந்த வழியில் பார்த்தால் மார்க்ஸ்ய மற்றும் பெரியாரிய இயக்கங்களும் இந்த அளவுகோலைதான் வைக்கவேண்டும். ஏனென்றால் அவற்றின் இன்றைய "சாதனைகள்" என்று பார்த்தல் நம் கண்ணின் முன்னே தெரியும் விளைவுகள்தான்! ஆதலால் அதுவும் தேவை இல்லாததுதான்! ஆதலால் இவர்கள் எல்லாம் மறுபடியும் வராமல் இருப்பதே நிம்மதி!

NO said...

//சாய் பாபா பற்றி இதையும் பாருங்க.. //

நான் சொல்லி முடிக்கவில்லை அதற்குள் இந்த பின்னூடத்தை இட்டிருக்கிறார் திரு ரஹீம் கஜாலி என்ற நண்பர்.
சரி, மூட நம்பிக்கைகளை எதிர்க்கும் இந்த சிந்தனையாளர் யாராக இருக்கும் என்று அவரின் தளத்தை பொய் பார்த்தால், தன்னின் மதத்தை பற்றி பிரச்சாரம் செய்யும் ஒரு பகுதியையும் அவரின் தளத்தில் வைத்திருக்கிறார். அந்த பிரச்சார எழுத்துகளில் கடைந்தெடுத்த மத வெறி பிடித்த மத கட்சிகளின் பெயர் மற்றும் அவரின் அறிக்கைகள் போன்றவை எல்லாம் இருக்கிறது.

இப்படி ஒரு பற்றாளராக இருப்பது ஒன்றும் தவறு கிடையாது. அது அவரின் உரிமை. சந்தகமே இல்லை. ஆனால் பிரச்சனை, இப்பேற்பட்ட மத பற்றாளராக இருந்து கொண்டு, அதாவது, ஆதரமிலா நம்பிக்கைகளை அடித்தளமாக கொண்ட ஒரு வழிமுறையை (இது எல்லா மதங்களுக்கும் இசம்களுக்கும் பொருந்தும்)
தீவிரமாக பின்பற்றும் ஒருவர், சாய்பாபாவை பற்றி பேசுவது தமாஷிலும் தாமாஷு!!

மதவெறியர்கள் பகுத்தறிவு பேசுகிறார்களாம்!!! போய் உங்க சாய் பாபாக்களை முதலில் சுத்தம் செய்து விட்டு, உங்கள் நம்பிக்கைகளில் உலவும் கட்டு கதைகளுக்கு முற்று புள்ளி வைத்து விட்டு பிறகு மற்ற மதங்களை பற்றி பேசவும்!

( இதை கேட்டவுடன் மதவாதிகள் எல்லாம் முதலில் சொல்லுவது, எங்கள் மதத்தில் எது கட்டுக்கதை, நாங்கள் கூறுவதுதான் பகுத்தறிவு என்பதுதான். ஆனால் இவர்கள் எல்லோருடைய புத்தகங்களையும் படித்து பார்த்தால் அதில் இருக்கும் தாமாஷுகள், அதாவது, செத்த பிறகு எழும்புவது, புஷ்பக விமானம் பறப்பது, குரங்கு பாலம் கட்டுவது, குதிரை மேல் உட்கார்ந்து சொர்கத்திற்கு டிரிப் போவது, குகையில் தேவதை வந்து பேசுவது, போன்ற எல்லா பகுத்தறிவு சார்ந்த சாமாசாரங்களும் கிடைக்கும். அந்த தாமாஷுகளை பார்த்தால் சாய்பாபா செய்வது ஜுஜுபி! ஆதலால் முதலில் போய் அந்த மந்திரங்கள பொய் எண்டு சொல்லி விட்டு சாய்பாபாவின் மேல் கல்லடித்தால், மூட நம்பிக்கைகளை உண்மையாகவே எதிர்ப்பவர் என்று நம்பலாம். இல்லை என்றால் வெறும் பொய்யர்தான்)

pichaikaaran said...

ஹிப்பித்தலையன் எந்த சித்து வேலையும் செய்ததில்லையாக்கும்"

அவர் செய்கிறாரா இல்லையா என்பது பிரச்சினை அல்ல.. டெண்டுல்கர் உள்ளிட்ட பலர் அவரை நாடி செல்வது , சித்து வேலைகளுக்காகவோ அல்லது மீடியாக்கள் பரப்பும் சில அவதூறு காரனங்களுக்காவோ அல்ல

pichaikaaran said...

"அந்த ஹிப்பி தலையன் ஒரு ஹோமோ, ஒருவேளை அதுக்காக போவாங்களோ!?"
ஹா ஹா... நண்பரே... வாழ்க்கை என்பது அது மட்டும்தான் என மீடியாக்கள் நமக்கு சொல்லி தந்து இருப்பதால், இப்படி கேட்க தோன்றுகிறது..
அதற்காக போக ஆயிரம் இடங்கள் இருக்கும்போது, ஏன் அவரை தேடி செல்கிறார்கள் என அங்கு எல்பவர்களை கேட்டு பாருங்கள்... பிரபல்களை கேட்க முடியாவிட்டாலும் , வேறு யாரையாவது கேட்டு பாருங்கள்..
வெறும் பரபரப்பு மீடியாவை நம்பாதீர்கள்... இது போன்ற வம்பு பேச்சுக்கள் நமக்கு எந்த விதத்திலும் உதவாது...

அருள் said...

மனிதர்கள் எல்லோரும் ஒற்றைத்தன்மையுடன் இருக்க முடியாது. கடவுள் மறுப்பாளனாக இருப்பதும் கடவுள் நம்பிக்கையுடன் இருப்பதும் - இந்த இரண்டுக்குள் பலவேறுபட்ட நிலைபாடுகள் இருப்பதும் இயல்பான ஒன்றுதான்.

பன்முகத்தன்மை என்பது மனித இனத்தின் இயல்பு. இதனை ஒற்றைத்தன்மையாக மாற்ற வேண்டும் என்று நினைத்தால் அது வன்முறையே ஆகும்.

புட்டப்பர்த்தி சாய்பாபா, மேல்மருவத்தூர் அடிகளார், அறிவுத்திருக்கோயில் வேதாத்திரி மகரிஷி போன்ற இறைநம்பிக்கை கோட்பாடுகள் எல்லாம் அவரவரின் நம்பிக்கையோடு தொடர்புடையவை. இவற்றால் மற்றவர்களுக்கு எதுவும் சிக்கல் வந்ததாகத் தெரியவில்லை.

குறிப்பாக, இவர்கள் மற்ற நம்பிக்கைகளை இழிவுபடுத்தியதாகவோ, சாதி ஏற்றத்தாழ்வுகளை வலியுறுத்தியதாகவோ தெரியவில்லை.

வால்பையன் said...

//ஹிப்பித்தலையன் எந்த சித்து வேலையும் செய்ததில்லையாக்கும்"

அவர் செய்கிறாரா இல்லையா என்பது பிரச்சினை அல்ல.. டெண்டுல்கர் உள்ளிட்ட பலர் அவரை நாடி செல்வது , சித்து வேலைகளுக்காகவோ அல்லது மீடியாக்கள் பரப்பும் சில அவதூறு காரனங்களுக்காவோ அல்ல //

டெண்டுல்கர் போறாரு, நயண்டுல்கர் போறாருங்கிறதுக்காக ஹிப்பித்தலயன் நல்லவன் ஆகிட முடியாது, பேசிக்காவே மனுசனுக்கு ஒரு பயம் இருக்கு, தன் புகழை தக்க வைச்சுக்கனும், பணத்தை தக்க வச்சுக்கனும், ஆரோக்கியமா இருக்கனும்னு!

ஓரளவுக்கு பணம் இருக்குறவன் ஹாஸ்பிடலுக்கு போவான், அநியாயத்துக்கு பணம் இருக்குறவன், எல்லாத்துகிட்டயும் போவான்! ஆனா அப்படிஅவுங்க புத்தி கெட்டு போறதால தான் அப்பாவி மக்களும் சேர்ந்து ஏமாறுராங்க!

ஹிப்பிதலையன் விபூதி கொடுப்பது, செயின் கொடுப்பது, லிங்கத்தை வாயில் வைத்து சூப்புவது ஸாரி துப்புவது என பல வேலைகளையும் ஏமாற்றி தான் செய்கிறான் என்பது நிரூபிக்கபட்ட உண்மை!

நான் அப்படி தான் பந்தயம் கட்டி இன்னும் ஏமாறுவேன் பாரு என்று இருப்பவர்களை யார் தான் என்ன செய்ய முடியும்!

வால்பையன் said...

@

மனிதர்கள் எல்லோரும் ஒற்றைத்தன்மையுடன் இருக்க முடியாது. கடவுள் மறுப்பாளனாக இருப்பதும் கடவுள் நம்பிக்கையுடன் இருப்பதும் - இந்த இரண்டுக்குள் பலவேறுபட்ட நிலைபாடுகள் இருப்பதும் இயல்பான ஒன்றுதான்.//

அதே போல் இயல்பு நிலை என உங்களால் பார்பனீயத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது, என்னால் வன்னிய சாதி வெறியையும் ஏற்றுக்கொள்ள முடியாது!
வெறும் கடவுள் நம்பிக்கை புறத்தில் கேடு விளைவிப்பதில்லை, ஆனால் பொந்து மதத்தில் இருக்கும் வர்ணாசிரம அடுக்குகளையும் சேர்ந்து இருக்கும் நம்பிக்கை கண்டிப்பாக இடித்துரைக்கபட வேண்டியது!


//பன்முகத்தன்மை என்பது மனித இனத்தின் இயல்பு. இதனை ஒற்றைத்தன்மையாக மாற்ற வேண்டும் என்று நினைத்தால் அது வன்முறையே ஆகும்.//

பன்முகதன்மையும் எதில் காட்டுகிறோம் என்பதில் இருக்கு அது! எல்லாவற்றிலும் பன்முகத்தன்மையை ஏற்று கொள்ள முடியாது நண்பரே!

//புட்டப்பர்த்தி சாய்பாபா, மேல்மருவத்தூர் அடிகளார், அறிவுத்திருக்கோயில் வேதாத்திரி மகரிஷி போன்ற இறைநம்பிக்கை கோட்பாடுகள் எல்லாம் அவரவரின் நம்பிக்கையோடு தொடர்புடையவை. இவற்றால் மற்றவர்களுக்கு எதுவும் சிக்கல் வந்ததாகத் தெரியவில்லை.//

அடிகளார், அறிவுத்திருக்கோவில்!

வாவ், அடுத்து பெரியாருக்கு கோவில்.

சிக்கல் இப்போது வரவில்லை, ஒரு நாள் என் நம்பிக்கை பெருசு, என் பூசாரி தான் பெருசு என்று வரும் அன்று உங்கள் வீட்டு முற்றத்தில் சிக்கல் வரும் போது தெரியும் ஏன், தனிமனித துதி வேண்டாமென்று சொன்னார்கள் என்று!

அருள் said...

// //ஹிப்பித்தலயன் நல்லவன் ஆகிட முடியாது// //

சாய்பாபா மீது குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை. (புட்டப்பர்த்தியில் முன்பு நடந்த ஒரு துக்க நிகழ்வு ஒரு விபத்து மட்டுமே). கெட்டவராக அடையாளம் காணப்படாதவர் எதற்காக நல்லவர் என்று புதிதாகப் பேர் எடுக்கவேண்டும்?

// //பேசிக்காவே மனுசனுக்கு ஒரு பயம் இருக்கு, தன் புகழை தக்க வைச்சுக்கனும், பணத்தை தக்க வச்சுக்கனும், ஆரோக்கியமா இருக்கனும்னு!// //

புகழ், பணம் என்கிறவற்றில் சாய்பாபாவுக்கு பெரிய பிடிப்பு இருப்பதாக அவரை பின்பற்றுவோர் கருதுவதாகத் தெரியவில்லை. பிரதமர், ஜனாதிபதியெல்லாம் தேடிச்சென்று பார்க்கும் அவர் கருணாநிதியைத் தேடிவந்தது ஒரு எடுத்துக்காட்டு (அதுவும் தமிழக அரசின் குடிநீர் திட்டத்திற்கு உதவ.)

// //இன்னும் ஏமாறுவேன் பாரு என்று இருப்பவர்களை யார் தான் என்ன செய்ய முடியும்// //

சாய்பாபாவிடம் யாரேனும் எதையாவது இழந்திருக்கிறார்களா? அவர் யாரையாவது ஏமாற்றியிருக்கிறாரா? அப்படிப்பட்ட குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை.

Anonymous said...

ஜோ அமலவன்,ராயப்பன், பிரனாண்டஸ் போன்றவர்கள் எங்கிருந்தாலும் உடன் ஒடி வரவும். கருத்துகளை கொட்ட களம் கண்ட வேங்கையென வந்திருங்கப்பா

ஏனப்பன்

வால்பையன் said...

//சாய்பாபா மீது குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை. (புட்டப்பர்த்தியில் முன்பு நடந்த ஒரு துக்க நிகழ்வு ஒரு விபத்து மட்டுமே). கெட்டவராக அடையாளம் காணப்படாதவர் எதற்காக நல்லவர் என்று புதிதாகப் பேர் எடுக்கவேண்டும்?//

ங்கொய்யால, வாழை இலையில கக்கா போகுற சங்கராசாரியையும் நல்லவன்னு சொல்விங்க போலயே! ம்ஹும் மாட்டிங்க, ஏன்னா அந்தாள் பாப்பான்,உங்களுக்கு பாப்பானை தவிர வேறு யார் தப்பு பண்ணாலும் ஒகே தான் போல! வாழ்க உமது கொள்கை!

//புகழ், பணம் என்கிறவற்றில் சாய்பாபாவுக்கு பெரிய பிடிப்பு இருப்பதாக அவரை பின்பற்றுவோர் கருதுவதாகத் தெரியவில்லை. பிரதமர், ஜனாதிபதியெல்லாம் தேடிச்சென்று பார்க்கும் அவர் கருணாநிதியைத் தேடிவந்தது ஒரு எடுத்துக்காட்டு (அதுவும் தமிழக அரசின் குடிநீர் திட்டத்திற்கு உதவ.)//

நல்ல புரிதல்,

நான் ஹிப்பிதலையனுக்கா புகழ் பயம்னு சொன்னேன், அவனை தேடிப்போகும் ஆடுகளுக்கு பயம்னு சொன்னேன்!, குடிநீர் திட்டத்துக்கு அவன் அப்பன் வீட்டு காசை கொடுத்த மாதிரி ரொம்ப விசனப்பட்டுகிறீங்க, நாம கட்டுற வரியை ஒழுங்கா பயன்படுத்தினாலே போதும், எவன் கிட்டயும் கை ஏந்த வேண்டியதில்லை, இலவச சரக்கு மட்டும் தான் இன்னும் கொடுக்க ஆரம்பிக்கல, அதுவும் சீக்கிரம் வந்துரும்!



//சாய்பாபாவிடம் யாரேனும் எதையாவது இழந்திருக்கிறார்களா? அவர் யாரையாவது ஏமாற்றியிருக்கிறாரா? அப்படிப்பட்ட குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை. //


....ம்புற மாதிரி கனவு காண்பவன் வெளீயே சொல்ல மாட்டான்னு உங்களுக்கு தெரியாதா அருள்!

சுழியம் said...

புட்டப்பர்த்தி சாயிபாபாவைப் பற்றி ரஹீம் கசாலி சொல்வார். டோண்டு போடுவார்.

ஆனால், அயாளுடைய நபிக்கு வஹி வந்தது எப்படி, ஏசு தண்ணீரில் நடந்தது எப்படி, உலகில் முதன்முதலில் கள்ளச்சாராயத்தை ஏசு காய்ச்சியது சரியா என்பது போன்ற கேள்விகளைத்தான் ரஹீம் கசாலியும் கேட்கச் சொல்ல மாட்டார். வேறு யார் கேட்டாலும், டோண்டு போட மாட்டார்.

எந்த மூட நம்பிக்கைக்கு நாம் மரண அடி கொடுக்க முடியும், எந்த மூட நம்பிக்கையால் நமக்கு மரண அடி கிடைக்கும் என்பது டோண்டுவிற்குத் தெரியும். Streetwise.

இப்படி ஒரு பக்கம் மட்டும் சேம்சைட் கோல் போடுவது கோழைத்தனம் என்று சொல்பவர்கள் எல்லாம் இந்துத்துவ அடிப்படைவாதிகள் என்று அறிவீர்களாக. :)

அருள் said...

// //இயல்பு நிலை என உங்களால் பார்பனீயத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது, என்னால் வன்னிய சாதி வெறியையும் ஏற்றுக்கொள்ள முடியாது!// //

"பார்ப்பனீயம் - வன்னியர் சாதி" என்ற இரண்டையும் ஒன்றைப்போல பேசுவது சரியல்ல. இன்றைய நிலையில் தந்தை பெரியார் கோரிய "அவரவர் வகுப்பு எண்ணிக்கைக்கு ஏற்ப சரிசம பங்கு" என்கிற விகிதாச்சார பங்கீட்டை ஏற்கும் சாதிகள் - இந்த ஏற்பாட்டினை எதிற்கும் சாதிகள் என இரண்டாக பிரித்தே பேசவேண்டும்.

அளவுக்கதிகமாக தின்று கொழுப்பவனும் - தேவையான அளவு உணவு கிடைக்காதவனும் ஒன்று அல்ல.

// //ஒரு நாள் என் நம்பிக்கை பெருசு, என் பூசாரி தான் பெருசு என்று வரும் அன்று உங்கள் வீட்டு முற்றத்தில் சிக்கல் வரும் போது தெரியும் ஏன், தனிமனித துதி வேண்டாமென்று சொன்னார்கள் என்று!// //

நீங்கள் சொல்வது நாளைய சிக்கல் அல்ல. இப்போதே மதங்கள் ஒவ்வொன்றும் தம்மைத்தாமே தூக்கிப்பிடிக்கின்றன, அதற்காக மதநம்பிக்கையே கூடாது என்று கூறிவிட முடியாது. அவரவர்க்கு அவரவர் நம்பிக்கை பெரிது - அவர்கள் அடுத்தவர் நம்பிக்கையில் மூக்கை நுழைக்காதவரையில் எந்த சிக்கலும் இல்லை.

அரசியல் கட்சிகள் எல்லாமே மிதமிஞ்சிய தனிநபர் துதிபாடலை செய்கின்றன. அதற்காக அரசியல் கட்சிகளே தேவையில்லை என்று கூறிவிட முடியுமா? ஜனநாயக அமைப்பில் அரசியல் கட்சிகள் இல்லாது போனால் அரசாங்கமே இருக்கது. அப்புறம் அரசுவழங்கும் எண்ணற்ற அடிப்படை சேவைகள், பாதுகாப்பு, அமைதி, நாடு - எதுவுமே இருக்காது. அதாவது, ஜனநாயக அமைப்பில் அரசியல் கட்சிகள் இல்லாதுபோனால், மனித வாழ்வே சாத்தியமில்லாது போய்விடும்.

ரஹீம் கஸ்ஸாலி said...

நண்பர் NO அவர்கள் என்னை பற்றி காரசாரமாக பின்னூட்டமிட்டிருந்தார். என் தளத்தில் நான் சார்ந்திருக்கும் இஸ்லாம் பற்றி இணைப்பு கொடுத்ததால் நான் மதவெறி உள்ளவன் என்றால், இப்போது என்னை சாடி இருக்கும் நீங்கள் யார்?
முதலில் ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள். இந்துக்களை தாக்க வேண்டுமென்று இந்தப்பதிவை அய்யா டோண்டு அவர்கள் எழுதவில்லை. இவர்களை போல போலிகளிடம் ஏமாற வேண்டாம் என்று தான் எழுதியுள்ளார். இவர்களை தாக்கி எழுதினால் இந்துக்களை தாக்கி எழுதியதாக நீங்கள் நினைக்க காரணம், இவர்களைப்போல போலிகளை இந்து மதத்தின் அத்தாரிட்டியாக நீங்கள் நினைப்பதால்தானே?

//நான் சொல்லி முடிக்கவில்லை அதற்குள் இந்த பின்னூடத்தை இட்டிருக்கிறார் திரு ரஹீம் கஜாலி என்ற நண்பர்.
சரி, மூட நம்பிக்கைகளை எதிர்க்கும் இந்த சிந்தனையாளர் யாராக இருக்கும் என்று அவரின் தளத்தை பொய் பார்த்தால், தன்னின் மதத்தை பற்றி பிரச்சாரம் செய்யும் ஒரு பகுதியையும் அவரின் தளத்தில் வைத்திருக்கிறார். அந்த பிரச்சார எழுத்துகளில் கடைந்தெடுத்த மத வெறி பிடித்த மத கட்சிகளின் பெயர் மற்றும் அவரின் அறிக்கைகள் போன்றவை எல்லாம் இருக்கிறது. //

நீங்கள் கண்ட இஸ்லாமிய தளங்களில் எங்கே மாற்று மதத்தினரை தாக்கியிருக்கிறார்கள். இஸ்லாத்திலும் புரை யோடி இருக்கின்ற தர்கா வழிபாடு, இறந்தவர்களுக்கு சடங்கு செய்தல், தட்டு தாயத்து, கறுப்புக்கயிறு, சந்தனக்கூடு. பில்லி, சூன்யம். ஜாதகம்,ஜோதிடம்,தாலி, போன்ற மூடநம்பிக்கைகள் மிகுந்த அனாச்சாரங்களை தடுத்துதான் எழுதியுள்ளார்கள். அது எப்படி மதவெறி ஆகும். அதே நேரம் அவர்களை நாங்கள் கடவுள் என்று சொல்வதுமில்லை, அவர்களும் வெறுங்கையில் சங்கிலி வரவைத்து எங்களை வசீகரிக்க்கவுமில்லை.

//மதவெறியர்கள் பகுத்தறிவு பேசுகிறார்களாம்!!! போய் உங்க சாய் பாபாக்களை முதலில் சுத்தம் செய்து விட்டு, உங்கள் நம்பிக்கைகளில் உலவும் கட்டு கதைகளுக்கு முற்று புள்ளி வைத்து விட்டு பிறகு மற்ற மதங்களை பற்றி பேசவும்!//

மூட நம்பிக்கை எங்கிருந்தாலும் தவறுதான். எங்களிடையே ஒரு சில புரோகித முல்லாக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் வருமானத்திற்காக ஏதாவது செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.அவர்கள் யாரும் மக்களின் அறியாமையை பயன்படுத்தி சாய்பாபா போல கோடீஸ்வரர்கள் ஆகவில்லை. இருந்தாலும் அவர்களையும் சாடித்தான் வருகிறோம். கடவுளை மறுப்பவர்கள் மட்டும் பகுத்தறிவு வாதிகள் இல்லை. இவர்களைப்போல போலிசாமியார்களை கடவுள் என்று வணங்கும் மக்களின் அறியாமையை விலககுவதும்தான் பகுத்தறிவு.
இறுதியாக ஓன்று நான் சாய்பாபாவை மட்டுமல்ல....இஸ்லாத்தில் இருக்கும் சாய்பாபாக்களையும் தோலுரித்து காட்ட தயாராக இருக்கிறேன். அப்படிப்பட்ட செய்தி உங்களிடம் இருந்தால் அனுப்புங்களேன் அதையும் பிரசுரம் செய்கிறேன்.

ரஹீம் கஸ்ஸாலி said...
This comment has been removed by the author.
ரஹீம் கஸ்ஸாலி said...
This comment has been removed by the author.
திகக்காரன் said...

@ அருள்

என்ன ஆச்சு அருள் உங்களுக்கு?

இப்படிச் சொல்லி இருக்கிறீர்கள்:

//பன்முகத்தன்மை என்பது மனித இனத்தின் இயல்பு. இதனை ஒற்றைத்தன்மையாக மாற்ற வேண்டும் என்று நினைத்தால் அது வன்முறையே ஆகும்.
//

எப்போது இந்துத்துவவாதியாக மாறினீர்கள்?

அவர்கள்தான் பன்மைத்தன்மைக்கு ஆதரவாகப் பேசுவார்கள்.

எல்லாம் அறிந்த ஈவேரா கனவில் வந்து தொந்தரவு செய்யப் போகிறார்.

Packirisamy N said...

//Raheem - இஸ்லாத்தில் இருக்கும் சாய்பாபாக்களையும் தோலுரித்து காட்ட தயாராக இருக்கிறேன். அப்படிப்பட்ட செய்தி உங்களிடம் இருந்தால் அனுப்புங்களேன் அதையும் பிரசுரம் செய்கிறேன்.//

Explain by your "Pahuththarivu !!!" , how one can tell to kill someone for drawing a sketch of the Mohammad, and all of you accept that?

Samy

NO said...

// இஸ்லாத்தில் இருக்கும் சாய்பாபாக்களையும் தோலுரித்து காட்ட தயாராக இருக்கிறேன். அப்படிப்பட்ட செய்தி உங்களிடம் இருந்தால் அனுப்புங்களேன் அதையும் பிரசுரம் செய்கிறேன்.//

சாய்பாபா விபூதி மற்றும் லிங்கம் எடுத்து மாஜிக் ஷோ நடத்தி தான் கடவுளின் அதிகாரபூர்வ பிரதிநிதி என்று கூறிக்கொள்கிறார். அவரின் சீடர்களும் அதையே சொல்லுகின்றனர். இது தவறு என்று உங்களைபோன்ற பகுத்தறிவுள்ள மூட நம்பிக்கை ஒழிப்பாளர்கள் கூறுகிறீர்கள். அதாவது மாஜிக் காட்டுவது பொய். லிங்கம் எடுப்பது பொய். ஆனால் குகையில் தேவதை வருவது, காதில் கடவுளின் கட்டளைகளை கூறி மறைந்து போவது, குதிரையில் சொர்கத்துக்கு
பறப்பது, விலாவாரியாக ஜன்னா என்ற சொர்க்கம் பற்றி நேரில் பார்த்தது போல பேசுவது போன்றவை எல்லாம் உண்மை, பகுத்தறிவு. இன்னும் நிறைய சொல்லலாம். ஆனால் பாருங்கள் எல்லா நம்பிக்கைகளும், வழிபாடுகளும் இந்த மாதிரி மாஜிக் காட்சிகளால்தான் தொடங்கியது. எல்லா மத சாய் பாபாக்களை
தோலுரிக்க வேண்டுமென்றால் முதலில் அந்த எல்லா மத தொடக்க கதைகளை மற்றும் தொடங்கியவர் சொன்னதாக சொல்லப்படுபவைகளை மற்றும் அவர்கள் செய்ததாக சொல்லப்படுபவைகளை சீர்த்தூகிப்பார்த்தாலே போதும். நீங்கள் இந்து மத சாய்பாபாவின் செயல்களை விமர்சிக்கும் பொழுது காட்டும் அதே நம்பிக்கை இன்மையை உங்கள் மத தொடக்க கதைகளுக்கு காட்டினாலே போதும். தோலுரிப்பு தொடங்கிவிடும். ஆனால் பாருங்கள் அது எல்லோராலும் முடியாது.

இதையெல்லாம் ஏன் சொல்லுகிறேன் என்றால் அவரவர் அவர்தம் மதங்களை பற்றி மட்டும் பேசி மாற்றான் மதம் மற்றும் நம்பிக்கைகளை நையாண்டி செய்யாமல் இருந்தாலே போதும். பிரச்னை வராது. எவன் ஒருவன் ஒரு மதத்தை பற்றுடன் பின்பற்றுகிறானோ, அதில் இருக்கும் கதைகளை மற்றும் அதை சொல்லிய மத புனிதர்களை உண்மை என்று நம்புகிறானோ, அவன் மற்ற மதங்கள் பொய் என்று விமர்சிக்கும் மற்றும் கேலி செய்யும் தகுதியை இழந்து விடுகிறான். ஏனென்றால் பி சி சர்காரின் சிஷ்யர்கள், ப்ரொபசர் பாகியநாத் (இவர் ஒரு மிக பெரிய ஒரு மஜிசியன்) ஒரு போலி, நாங்கள்தான் உண்மை என்று எப்படி கூற முடியாதோ, சாய் பாபா போலி, எங்க புனிதர் உண்மை என்றும் கூற முடியாதோ. எல்லாமே நம்பிக்கை சார்ந்ததுதான். உண்மைகளை சார்ந்தது அல்ல.

இந்த பிரச்சனை வரும் என்று தெரிந்துதான் உங்களின் மத புத்தகத்தில் தெளிவாக ஒன்று இருக்கிறது.

Chapter 109 of the Quran. "Say: O you that reject faith! I do not worship that which you worship, nor will you worship that which I worship. And I will not worship that which you have been wont to worship, nor will you worship that which I worship. To you be your Way (or religion) and to me mine." (Quran 109:1-6)

இவ்வளவு தெளிவாக உங்களின் மத புத்தகத்தில் மாற்றானின் நம்பிக்கைகளை இழிவு படுத்தாதே என்று இருக்கும் பொழுது உங்களை போன்ற வகாபிகள்
உள்ளே புகுந்து குட்டையை குழப்புவது ஏனோ? சுமார் இருபது வருடத்துக்கு முன் வரை, இந்து மதத்தை கிண்டல் அடிக்கும் இஸ்லாமியரை ஒரு சிலரை
தவிர நான் பார்த்ததே இல்லை. In fact, எனக்கு தெரிந்த பல இஸ்லாமிய நண்பர்கள், பரந்த பார்வையுடன், மற்ற வழிமுறைகளை பற்றி நன்கு தெரிந்தவர்களாகவே இருந்தார்கள். அதாவது, இஸ்லாமிய மதத்தின் மேல் மிகுந்த பற்றுள்ளவர்களாக இருந்தாலும், இந்து மதத்தின் மீது ஒரு காழ்ப்புணர்ச்சியுடன் அவ்வளவாக இருந்ததில்லை (நான் சொல்லுவது சராசிரி இஸ்லாமியரை பற்றி).

ஆனால் இன்று நிலை மாறிக்கொண்டிருக்கிறது. இஸ்லாமை கைப்பற்றி வேறுமாதிரி கொண்டு செல்லும் எண்ணத்தில் பலர் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். எண்ணை பணம் இதற்க்கு உதவுகிறது. மற்று மத துவேஷம் இதில்தான் தொடங்குகிறது. பாகிஸ்தானிய இஸ்லாமியமும் (இங்கு இப்பொழுது நடந்துகொண்டிருக்கும் யுத்தம், அதாவது சூபிகளுக்கும் வகாபிகளுக்கும், மிக கொடூரமாக பொய் கொண்டிருக்கிறது) இதனுடன் சேர்ந்து,
இஸ்லாமிற்கு ஒரு புது கதையாடலை உருவாக்கி கொண்டிருக்கிறது.

இந்த தீவிரவாத எண்ணங்கள் இந்தியாவில், குறிப்பாக, தமிழகத்தில் மற்றும் கேரளத்தில் மிக வேகமாக இருக்குமதி செய்து கொண்டிருக்கிறார்கள்.

அதனின் tip of the iceberg தான் நண்பர் திரு கஜாலி போன்றவர்களும், அவர் ஆராதிக்கும் மதவெறி கூட்டங்களும்.

Anonymous said...

//NO-ஆனால் குகையில் தேவதை வருவது, காதில் கடவுளின் கட்டளைகளை கூறி மறைந்து போவது, குதிரையில் சொர்கத்துக்கு
பறப்பது, விலாவாரியாக ஜன்னா என்ற சொர்க்கம் பற்றி நேரில் பார்த்தது போல பேசுவது போன்றவை எல்லாம் உண்மை, பகுத்தறிவு//

Good analysis.

NO said...

//இஸ்லாத்திலும் புரை யோடி இருக்கின்ற தர்கா வழிபாடு, இறந்தவர்களுக்கு சடங்கு செய்தல், தட்டு தாயத்து, கறுப்புக்கயிறு, சந்தனக்கூடு......//

மேலே நண்பர் திரு கசாலி சொல்லியது. அதாவது தர்கா வழிமுறை தவறு என்று. இதற்க்கு நான் பதில் சொல்ல முடியாது ஏனென்றால் நான் இஸ்லாமியன் இல்லை. ஆதலால் இதைப்பற்றி நடந்த ஒரு மிக சிறிய விவாதத்தின் தமிழாக்கம் இங்கே! இது ஒரு இஸ்லாமிய உரையாடல். அதாவது பாகிஸ்தானிய இஸ்லாமியர் சிலர் டான் (Dawn) பத்திர்கையில் செய்த பின்னூட்ட விவாதத்தின் தமிழாக்கம். முதல் பாய்ண்டை சொல்லுபவர் ஹலோ என்ற பெயர்கொண்ட நண்பர் திரு கஜாலியை போன்ற ஒரு வகாபி. அதற்க்கு காட்டமாக பதில் அளிக்கும் சராசிரி இஸ்லாமியர்கள்!

ஹெலோ என்பவர்:

தற்கொலை தாக்குதல்களை எந்த விதத்திலும் ஞாயப்படுத்த முடியாது. இருந்தாலும் ஒரு நிமிடம் நிதானித்து யோசித்து பார்த்தால் பாகிஸ்தானில் உள்ள இந்த தர்கா வணங்குமுறை முதலில் நிறுத்தப்படவேண்டும் ஏனென்றால் மற்ற இஸ்லாமிய நாடுகளிலும் அது தடை செய்யப்பட்டு பல காலம் ஆகிவிட்டது. நம்முடைய வணக்கங்களை கடவுளிடம் நேரடியாக செய்யவேண்டும், தர்காக்களும் மற்ற இடங்களும் இதற்க்கு தேவை இல்லை. இது நிறுத்தப்படவேண்டும்.

ஆயிஷா கான்:

ஏன் தடை செய்யவேண்டும்? ஒருவர் தன் வழியில் தனக்கு சரி என்று பட்ட வழிமுறையில் கும்பிடுதலை ஏன் தடை செய்யவேண்டும்?
இஸ்லாமிய நாடுகளில் இந்த தடை இருக்கிறது என்று எந்த இஸ்லாமிய நாடுகளை பற்றி சொல்லுகிறீர்கள்? இந்தோனேசியாவா, பங்களாதேஷா மற்றும் அதிக இஸ்லாமியர் இருக்கும் தேசங்களிலா? இங்கே எல்லாம் தர்கா வழிபாடிற்கு ஒரு தடையும் இல்லையே?
இப்படி சிந்திக்கும் நீங்கள் நேராக சௌதி அராபிய செல்ல வேண்டியதுதானே. அங்கே மட்டும்தானே இதற்கெல்லாம் தடை! அந்த எண்ணத்தில்தானே இதை நீங்கள் சொல்லுகிறீர்கள்? நீங்கள் பேசுவதை பார்த்தால் நீங்கள் தெற்கு ஆசியாவை சேர்ந்தவராக தெரியவில்லை. இங்கே இஸ்லாமியர்கள் மிகுந்த சகிபுத்தன்மையுடந்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்! உங்களை போன்ற எண்ணம் கொண்டவர்கள் இல்லை நாங்கள்!

அலி என்பவர்:

அப்படி போடுங்கள் ஆயிஷா! இங்கேதான் தெற்கு ஆசிய மகளிருக்கும் கிழக்கு ஆசிய மகளிருக்கும் உள்ள வித்தியாசம். இவர்கள் மனிதில் பட்டதை தயக்கமின்றி பயமின்றி பேசுகிறார்கள்!

----------
எங்கே நம்ம ஊறு ஆயிஷாக்கள் மற்றும் அலிகள்? அவர்கள் வந்து இந்து வகாபிகளுக்கு பதில் அள்ளிக்க வேண்டும்! இந்துக்களோ அல்லது வேற்று மதக்கரர்களோ சொன்னால் வேறு மாதிரி ஆகிவிடும்!

pichaikaaran said...

"ஆனால் குகையில் தேவதை வருவது, காதில் கடவுளின் கட்டளைகளை கூறி மறைந்து போவது, குதிரையில் சொர்கத்துக்கு பறப்பது, விலாவாரியாக ஜன்னா என்ற சொர்க்கம் பற்றி நேரில் பார்த்தது போல பேசுவது போன்றவை எல்லாம் உண்மை"
எல்லா மதத்திலும் அற்புதங்கள் உண்டு.. அதை கிண்டல் செய்வது மனித தன்மை அல்ல... அந்தந்த மத நூல்கள், குரும்மர்களுக்கு உணமையாக இருந்தால் அவரவர்களுக்கு நல்லது..

உதாரணமாக, சாய் பாபா திரு நீறை தட்டில் இருந்து எடுத்து தருகிறாரா.. கையில் மறைத்து வைத்து எடுத்து தருகிறாரா என்பது அவர் பக்தர்களுக்கு முக்கியத்துவம் இல்லாத ஒன்று.. அவர்களுக்கு ஆன்மீக முன்னேற்றம் கிடைத்ததா, மன நிம்மதி கிடைத்த எனபதுதான் அவர்களை பொறுத்தவரை முக்கியம்./.
மற்றவர்கள் இதை பட்டு கவலை பட்டு பயன் இல்லை.. மற்றவர்கள் தத்தம் நம்பிக்கை படி இருந்து விட்டு போகட்டுமே.. தேவையில்லாமல் அவதூறு பேச்சில் இறங்குவது, அவர்கள் நம்பிக்கையை மற்றவர்கள் கிண்டல் செய்யும் நிலைக்கு கொண்டு வரத்தான் உதவும்.. ஆக அவர்கள் தம் நம்பிக்கைக்கே துரோகம் செய்தவர்கள் ஆகிறார்கள்..
வேண்டாம் இந்த விளையாட்டு.. ஒவ்வொருவரும் அவரவர் குருமார்களிடம், மத நூல்களில் இருக்கும் நல்ல விஷயங்களை , அனுபவங்க்களை பகிர்ந்து கொள்வோம்.. எல்லோரும் பயன் பெறுவோம்...

Anonymous said...

டோண்டுப்பய்யா என்ன எனக்குமா பயம், இல்லை வாலப்பரை புகழ்ந்தது புடிக்கிலியா ?

ஏனப்பன்

NKS.ஹாஜா மைதீன் said...

ஏமாற்று வேலைக்கு சிறந்த உதாரணம் இது.....அவ்ளோதான் விஷயம்.....இது எந்த மதத்தையும் புண்படுத்தவில்லை.....எந்த ஒரு மதத்தை பற்றியும் யாரும் குறை கூற வேண்டாம்....இதைத்தான் இஸ்லாமும் சொல்கிறது.....அனால் இது ஒரு தனிப்பட்ட நபரின் பித்து வேலை.....நம்புபவர்கள் நம்பலாம்.....நம்பி ஏமாறலாம்...

வால்பையன் said...

//சாய் பாபா திரு நீறை தட்டில் இருந்து எடுத்து தருகிறாரா.. கையில் மறைத்து வைத்து எடுத்து தருகிறாரா என்பது அவர் பக்தர்களுக்கு முக்கியத்துவம் இல்லாத ஒன்று.. அவர்களுக்கு ஆன்மீக முன்னேற்றம் கிடைத்ததா, மன நிம்மதி கிடைத்த எனபதுதான் அவர்களை பொறுத்தவரை முக்கியம்.//

எவன் எப்படி நாசமாபோனால் என்ன, நான் நல்லாயிருக்கேன் என்ற பார்வையில் பார்த்தால் நீங்கள் சொல்வது சரிதான்!

கொஞ்சம் யோசித்து பாருங்கள், எந்த குழந்தைக்காவது ஹிப்பிதலையனிடம் விபூதி வங்கினால் மனநிம்மதி கிடைக்கும் என தெரியுமா?, அந்த குழந்தையை கூட்டி போய் அதன் மனதில் அவ்வாறு விதைக்கிறார்கள், இது எல்லா மதத்திற்கும் பொருந்தும்!, உங்கள் மனதிற்கான நிம்மதியை வெளியே தேடினால் நீங்களே தொலைந்து போனவர் என அர்த்தம் ஆகிறது!

இருந்தா என்ன விடு என வாதத்தை முடிப்பதை விட அது ஏன் இருக்கு என விவாதிப்பதே அடுத்த கட்ட நகர்தலுக்கான வழி!

அருள் said...

திகக்காரன் said...

// //எப்போது இந்துத்துவவாதியாக மாறினீர்கள்? அவர்கள்தான் பன்மைத்தன்மைக்கு ஆதரவாகப் பேசுவார்கள்.// //

இந்துத்வ பயங்கரவாதிகள் குறித்து உங்களுக்கு எதுவுமே தெரியாதா?

ஏக இந்தியா (ஒற்றை அகண்ட பாரதம்), ஒரே மக்கள் (இந்துக்கள்), ஒரே மதம் (இந்து), ஒரே மொழி (சமற்கிருதத் தழுவலான இந்தி) என்பதுதான் இந்துத்வ வாதிகளின் கொள்கை.

To keep up the purity of the Race and its culture, Germany shocked the world by her purging the country of the Semitic races—the Jews. Race pride at its highest has been manifested here. Germany has also shown how well nigh impossible it is for Races and cultures, having differences going to the root, to be assimilated into one united whole, a good lesson for us in Hindustan to learn and profit by.

– Madhavrao Golwalkar, "We, or Our Nation Defined"

ரஹீம் கஸ்ஸாலி said...

நண்பர் NO அவர்களுக்கு, நான் எங்கே உங்கள் மதத்தைப்பற்றியும்,உங்கள் கடவுளர்களை பற்றியும், மதம் சார்ந்த நம்பிக்கைகளை பற்றியும், வேதங்களைபற்றியும் விமர்சனம் செய்துள்ளேன். இல்லியே, நீங்கள்தான் என் மதம் சார்ந்த நம்பிக்கைகளை விமர்சித்துள்ளீர்கள். மதம் சார்ந்த நம்பிக்கைகள் என்பது வேறு, மூட நம்பிக்கைகள் என்பது வேறு, நான் அதைத்தான் சுட்டிகாட்டினேன். உங்கள் கடவுளை நீங்கள் வணங்குவதை யாரும் விமர்சிக்க முடியாது. அது அவரவர் வழிபாட்டு உரிமை. உங்கள் மதம் உங்களுக்கு என்மதம் எனக்கு என்று மட்டும் குரான் சொல்லவில்லை." நீங்கள் மாற்று மத கடவுள்களை விமர்சிக்காதீர்கள். அப்படி விமர்சித்தால் அவர்களும் அறியாமையின் காரணமாக என்னை விமர்சிப்பார்கள்" என்று கூட அல்லாஹ் கூறுகிறான். அப்படி இருக்குபோது நானெப்படி விமர்சிப்பேன்?. போலிகளிடம் ஏமாறாதீர்கள் என்று தானே கூறினேன். அப்புறம் தர்கா வழிபாடை பற்றி ஒரு உரையாடலை சொல்லியிருந்தீர்கள். இஸ்லாம் ஒருபோதும் தர்கா வழிபாட்டை ஆதரிக்கவில்லை. அடக்க தலங்களை வணக்க தலங்களாக ஆக்கிக்கொள்ளதீர்கள் என்றும், அடக்க தளங்கள் மீது கட்டிடம் கட்டுவதும், தொழுகை நடத்துவதும் தடுக்கப்பட்டுள்ளது என்றும் நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள். இதையும் மீறி வழிபடுவது என்பது மூட நம்பிக்கை தானே. அதையும் எதிர்த்துதான் குரல் கொடுக்கிறோம். அதையும் மீறி நாங்கள் கெட்டுத்தான் போவோம். நீங்கள் என்னடா கேள்விகேட்பது என்பவரலை நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது. ஸாரி

NKS.ஹாஜா மைதீன் said...

இந்த பித்து வேலையை காட்டியதற்காக ரஹீம் கசாலி, அண்ணன் டோண்டு அவர்களுக்கு நன்றி.... நீங்கள் சொல்வது சரிதான் ....சாய்பாபாவின் பித்து வேலையை பற்றி கூறினால் சில நண்பர்கள் அதை சரி என வாதிடுவது போல இங்கே சண்டை போடுகிறார்கள்....இதை இங்கே அடுத்தவர்களை திட்டாமல் கருத்து கூற வேண்டும்.....

அருள் said...

ரஹீம் கஸாலி said...

// //டோண்டு..இவர்களை போல போலிகளிடம் ஏமாற வேண்டாம் என்று தான் எழுதியுள்ளார். இவர்களை தாக்கி எழுதினால் இந்துக்களை தாக்கி எழுதியதாக நீங்கள் நினைக்க காரணம், இவர்களைப்போல போலிகளை இந்து மதத்தின் அத்தாரிட்டியாக நீங்கள் நினைப்பதால்தானே?// //

மிக சிக்கலான ஒரு விஷயத்தை மிகச்சாதாரணமாக பேசுகிறீர்கள்!!!

இந்து மதத்தில் ஏதேனும் ஒரு சாமியார் போலி என்று முடிவு செய்வது யார்?

இந்து மதத்தின் உண்மையான அத்தாரிட்டி யார்?

NO said...

// மதம் சார்ந்த நம்பிக்கைகள் என்பது வேறு, மூட நம்பிக்கைகள் என்பது வேறு,//
நண்பர் திரு கஜாலி, எது மதம் சார்ந்த நம்பிக்கை, எது மூட நம்பிக்கை? அதை உறுதி செய்வது யார்? ஒரு உண்மையான நாத்தீகனை கேட்டால், அல்லது ஒரு தீவிர மாற்று மத பற்றாளரை (கிருத்துவர் அல்லது இந்து) கேட்டால் நீங்கள் கும்பிடுவதும், உங்கள் மத தோற்றமும், உங்கள் புத்தகமும், அதில் உள்ள கதைகளும் எல்லாமே அவரை பொறுத்துவரை மூட நம்பிக்கைதான் என்று கூறுவார்!

//...இதையும் மீறி வழிபடுவது என்பது மூட நம்பிக்கை தானே. ....//
நீங்க உங்க மதத்தினுள் எது மூட நம்பிக்கை, எது மூடமில்லா நம்பிக்கை என்று எப்படி வேண்டுமானாலும் விளக்கம் வைத்துக்கொள்ளுங்கள்! அது உங்கள் இஷ்டம்! ஆனால் வேற்று மத விடயத்தில் தலை இடாதீர்கள்! சித்து வேலை செய்யறானோ , பித்து வேலை செய்யறானோ! அதை நாங்க பார்த்து கொள்கிறோம்! எங்க ஆளுங்க பல பேரு இருக்காங்க காட்டமா பேச!

//சாய்பாபாவின் பித்து வேலையை பற்றி கூறினால் சில நண்பர்கள் அதை சரி என வாதிடுவது //
அப்படி யாரும் வாதிடவில்லை நண்பரே! அவ்வளவு பகுத்தறி பேசும் ஒருவர், அதாவது பின்னூட்டமிடும் ஒருவர் எத்தகையவர் என்று தெரிந்ததால் வந்ததுதான் இது!

Anonymous said...

வாலப்பசாமி ! ஏன் இந்த மெளனம் ?

pichaikaaran said...

"விவாதிப்பதே அடுத்த கட்ட நகர்தலுக்கான வழி"

நண்பரே.. ஒருவர் எதை சுட்டி காட்டுகிறார் என்பதில் வேண்டுமானால் விவாதம் செய்யலாம்.. சுட்டிக்காட்டும் அவர் விரலை பற்றி விவாதித்து பயன் இல்லை... நேர விரயம்தான்..

ஆன்மிகத்தை பொறுத்தவரை, ஒரு குரு தவறான ஆளாக இருந்தாலும் கூட , சீடன் சரியான ஆளாக இருந்தால் இலக்கை அடைவான் என்பது வரல்லாற்று ஏடுகளில் பதிந்து கிடைக்கின்றன..
சரி, ஆன்மிகத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்றால், இந்த டாபிக்கை விவாதிக்கும் ஒவ்வொரு நொடியும் வீண்தான்.. எல்லோரும் தன்னை வந்து பார்க்க வேண்டும் என் அவர் வர்புருத்துகிறாரா.. அவரை நம்புவர்கள் நம்பட்டும்..நல்லதோ,கேட்டதோ அவர்கள் அனுபவிக்கட்டும்.. நமக்கென்ன...

ஒரு விஷயம் உறுதி... அற்புதங்களை எதிர்பார்த்து செல்பவர்கள், எந்த ஒரு குருவிடமோ, மதத்திலோ, நீண்ட நாள் இருக்க மாட்டர்கள்..எனவே அற்புதம் செய்து ஆட்களை சேர்ப்பார் என்ற பயம் வேண்டாம்...

அருள் said...

டோண்டு சார் பில்லி சூனியம் பற்றி பேசுவதாகக் கூறி, கடைசியில் மதங்கள் அல்லது சாமியார்களின் "அற்புதங்கள் நிகழ்த்தும் செயலை" அதனோடு போட்டு குழப்பிவிட்டார். இப்போது இதனுடன் பகுத்தறிவை வேறு சேர்த்து கும்மியடிக்கிறார்கள்.

கடவுள் மறுப்பு கொள்கையை மெய்யாக நம்பும் அன்பர்கள் சாய் பாபாவையோ, அல்லது எந்த ஒரு மதநம்பிக்கையையோ விமர்சனம் செய்வதில் நியாயமிருக்கிறது. அவர்களுக்கு அதற்கான உரிமை, தார்மீக பலம் இருக்கிறது.

ஆனால், கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் இதையெல்லாம் குற்றம் சாட்டுவதில் உள்ள நியாயம் புரியவில்லை.

அனுமன் மூலிகை மலையை அடியோடு பெயர்த்து தூக்கியதை நம்பமுடிகிறது. கிருஷ்ணன் மலையையே குடையாகப் பிடித்ததை நம்பமுடிகிறது. வாமன பார்ப்பான் உலகையே தனது மூன்று காலடிகளால் அளந்ததை நம்பமுடிகிறது: ஆனால், சாய்பாபா கைகளால் விபூதியை வரவழைத்தால் மட்டும் நம்பமுடியவில்லையா? (அதாவது, அவரைப் பின்பற்றுவோர் அதை நம்பினால் மற்றவர்களுக்கு அதில் என்ன பிரச்சினை?)

மத நம்பிக்கையும் கடவுள் நம்பிக்கையும் இல்லாத ஒரு உலகம் ஒருபோதும் சாத்தியமாகப் போவது இல்லை. மறுபுறம் தனக்குப் பிடித்த ஒரு மதத்தையோ, நம்பிக்கையையோ பின்பற்ற உலகின் எல்லா மனிதர்களுக்கும் உரிமை உண்டு. இது சர்வதேச சட்டங்கள் அங்கீகரித்துள்ள ஒரு அடிப்படை உரிமை.

எனவே, ஒருவரது மதமோ, நம்பிக்கையோ அடுத்தவரின் மதத்திலோ, நம்பிக்கையிலோ தலையிடாதவரை - அடுத்தவர் உரிமையை பறிக்காதவரை - சாய் பாபாவை நம்புவதானாலும் வேறு எந்த நம்பிக்கையானாலும் அவரவர் அளவில் அது சரியானதே.

வால்பையன் said...

//வாலப்பசாமி ! ஏன் இந்த மெளனம் ? //


யாரைச்சொல்றிங்க, என்னை இல்ல தானே!

வால்பையன் said...

//எல்லோரும் தன்னை வந்து பார்க்க வேண்டும் என் அவர் வர்புருத்துகிறாரா.. அவரை நம்புவர்கள் நம்பட்டும்..நல்லதோ,கேட்டதோ அவர்கள் அனுபவிக்கட்டும்.. நமக்கென்ன..//

ஆம், நமகென்ன
எவன் செத்தால் நமகென்ன,
எவன் நாசமாய் போனால் நமகென்ன,
ந்வன் எக்கேடு கெட்டு போனால் நமகென்ன!

நமக்கு தான் இங்கே வயிறு நிரபி விட்டதே, சமூகமாவது, சாக்கடையாவது நாறி கிடக்கட்டும், நாம் மூக்கை பொத்தி கொண்டு நகர்வோம், வேறு யாராவது இளிச்சவாயன் வருவான் அதை சுத்தம் செய்ய!

சரி தானே பார்வையாளன்!
(பேரு சரியா தான் வச்சிருக்கிங்க)

வால்பையன் said...

//மத நம்பிக்கையும் கடவுள் நம்பிக்கையும் இல்லாத ஒரு உலகம் ஒருபோதும் சாத்தியமாகப் போவது இல்லை.//

கேடு கெட்ட மனித ஜந்துயை விட வேறு எந்த விலங்காவது மணி அடித்து பூஜை செய்து கொண்டிருக்கிறதா அருள்!

//தனக்குப் பிடித்த ஒரு மதத்தையோ, நம்பிக்கையையோ பின்பற்ற உலகின் எல்லா மனிதர்களுக்கும் உரிமை உண்டு. இது சர்வதேச சட்டங்கள் அங்கீகரித்துள்ள ஒரு அடிப்படை உரிமை.//

இந்து மதத்தில் தான் வர்ணாசிரமும், பார்பனீய படிக்கட்டும் இருக்கு, அதை கடைபிடிக்கும் பார்ப்பானை மட்டும் உங்களால் எப்படி கேள்வி கேட்க முடியுது அருள்! சரி எப்பயிருந்து சாமியார் ஆனிங்க, யாராவது வாயில் இருந்து லிங்கம் எடுத்து கொடுத்துட்டாங்களா!?

//ஒருவரது மதமோ, நம்பிக்கையோ அடுத்தவரின் மதத்திலோ, நம்பிக்கையிலோ தலையிடாதவரை - அடுத்தவர் உரிமையை பறிக்காதவரை - சாய் பாபாவை நம்புவதானாலும் வேறு எந்த நம்பிக்கையானாலும் அவரவர் அளவில் அது சரியானதே. //

இந்து மதத்துக்கு சாய்பாபா மாதிரி, சில இஸ்லாமியர்கள் பின் லேடனின் சொல் கேட்டு நடக்கிறார்கள், அவர்களை மட்டும் ஏன் அமெரிக்கா வேட்டையாடி கொண்டிருக்கிரது, மனித உரிமை காப்பாளர் அருள் அதையெல்லாம் தட்டி கேட்கலாமே!

சிறு வயது பெண்ணிடம் அதுவும் வயதுக்கு வராத பெண்ணிடம் உறவு கொண்டால் எயிட்ஸ் வராதுன்னு ஒரு கபோதி நம்புதுன்னு வச்சுக்குவோம், அவரவர் நம்பிக்கை தவறில்லைன்னு விட்டுடலாமா!?

நரபலி கொடுத்தால் புதையல் வருதுன்னு நம்புறவனை கூப்பிட்டு அவன் நம்பிக்கைக்கு பாராட்டு பத்திரம் கொடுக்கலாமா!?

அருள் said...

// //இந்து மதத்தில் தான் வர்ணாசிரமும், பார்பனீய படிக்கட்டும் இருக்கு, அதை கடைபிடிக்கும் பார்ப்பானை மட்டும் உங்களால் எப்படி கேள்வி கேட்க முடியுது அருள்!// //

// //சில இஸ்லாமியர்கள் பின் லேடனின் சொல் கேட்டு நடக்கிறார்கள்// //

// //சிறு வயது பெண்ணிடம் அதுவும் வயதுக்கு வராத பெண்ணிடம் உறவு கொண்டால் எயிட்ஸ் வராதுன்னு ஒரு கபோதி நம்புதுன்னு வச்சுக்குவோம், அவரவர் நம்பிக்கை தவறில்லைன்னு விட்டுடலாமா!?
நரபலி கொடுத்தால் புதையல் வருதுன்னு நம்புறவனை கூப்பிட்டு அவன் நம்பிக்கைக்கு பாராட்டு பத்திரம் கொடுக்கலாமா!?// //

நான் கூறியது இதுதான்: "ஒருவரது மதமோ, நம்பிக்கையோ அடுத்தவரின் மதத்திலோ, நம்பிக்கையிலோ தலையிடாதவரை - ""அடுத்தவர் உரிமையை பறிக்காதவரை"" - சாய் பாபாவை நம்புவதானாலும் வேறு எந்த நம்பிக்கையானாலும் அவரவர் அளவில் அது சரியானதே". இதுவே எனது கருத்து.

ஆனால் நீங்கள் குறிப்பிடும் - "வர்ணாசிரமம், பார்பனீய படிக்கட்டு, பின் லேடனின் சொல், வயதுக்கு வராத பெண்ணிடம் உறவு, நரபலி" - இவை எல்லாமும் அடுத்தவர் உரிமையை பறிப்பதாக, மனித உரிமைக்கு எதிரானதாக இருக்கிறது.

உலகின் பெரும்பாலான அமைப்புகள், அனைத்து நாடுகள், எல்லா மனித உரிமை போராளிகளாலும் ஏற்றுக்கொள்ளப்படும் ஆவணம் "ஐ.நா. சர்வதேச மனித உரிமைப் பிரகடனம்" (UN Universal Declaration of Human Rights) ஆகும். இதன் 18ஆவது பிரிவு:

"சிந்தனைச் சுதந்திரம், மனசாட்சி சுதந்திரம், மதச்சுதந்திரம் ஆகியனவற்றிற்கு ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு.

ஒருவர் தமது மதத்தை அல்லது நம்பிக்கையை மாற்றுவதற்கான சுதந்திரமும், போதனை, பயில்நெறி, வழிபாடு, கடைபிடித்தல் என்பன மூலமும் - தத்தமது மதத்தை அல்லது நம்பிக்கையைத் தனியாகவும், வேறொருவருடன் கூடியும், பகிரங்கமாகவும் தனிப்பட்ட முறையிலும் வெளிப்படுத்துவதற்கான சுதந்திரமும் அடங்கும்" என்கிறது.

UN Universal Declaration of Human Rights

English: http://www.un.org/en/documents/udhr/index.shtml
தமிழில்: http://www.ohchr.org/EN/UDHR/Pages/Language.aspx?LangID=tcv

உலகம் ஏற்றுக்கொண்ட நியாயத்தைத்தான் நான் குறிப்பிடுகின்றேன்.

Anonymous said...

dondu sir and raheem ji.indha makkal ippadithaan
therinje pallathil vizhuvaargal.
avangalee ezumbi varattum .

வால்பையன் said...

அருள்

தன்னை ஒருவன் உயர்சாதியாக நினைத்து கொள்வது(நீங்கள் வன்னியன் உயர்சாதி என்று நினைத்து கொள்வது போல்)அவர்களது உரிமை, அதனால் யாருக்கும் எந்த தீங்கும் இல்லை என்று விட்டு விடலாமா!?

அப்படியானால் பார்பானை நோண்டுவது ஏன்!?

வால்பையன் said...

//உலகின் பெரும்பாலான அமைப்புகள், அனைத்து நாடுகள், எல்லா மனித உரிமை போராளிகளாலும் ஏற்றுக்கொள்ளப்படும் ஆவணம் "ஐ.நா. சர்வதேச மனித உரிமைப் பிரகடனம்" (UN Universal Declaration of Human Rights) ஆகும். இதன் 18ஆவது பிரிவு: //

புண்ணாக்கு சட்டம், மனிதனுக்கு மனிதனால் இயற்றப்பட்டது தான் சட்டம், ஒரு காலத்தில் ஆகவே ஆகாது என மறுக்கப்பட்டது இன்று ஏற்று கொள்ளப்படுகிறது, அது போல் ஆன விசயம் ஒதுக்க வேண்டியதும் இயல்பு தான்!

வால்பையன் said...

//"சிந்தனைச் சுதந்திரம், மனசாட்சி சுதந்திரம், மதச்சுதந்திரம் ஆகியனவற்றிற்கு ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு. //

நீங்கள் வன்னியன் என்பதும், இந்து என்பதும் வளர்ந்து நீங்களே தெரிந்து கொண்டீர்களா அல்லது உங்கள் பெற்றோர் திணித்தார்களா!?

இன்னொருத்தர் சொல்லி அதை பின் தொடர்வதற்கு பெயர் தான் சுதந்திரமா, அப்படியானால் சுய அறிவு என்று ஒன்று இல்லைவே இல்லையா!?

வால்பையன் said...

//உலகம் ஏற்றுக்கொண்ட நியாயத்தைத்தான் நான் குறிப்பிடுகின்றேன். //


உலகத்துக்கே போயிட்டிங்களே அருள்!

அந்த சட்டத்தில் வன்னியனுக்கு இட ஒதுக்கீடு கண்டிப்பா கொடுக்கனும்னு எந்த பக்கத்தில் இருக்குன்னு அப்படியே லிங்க் கொடுங்களேன்!

எனகென்னமோ பாப்பானை விட நீங்க தான் டேஞ்சர் போல தெரியுது!

Anonymous said...

//Arul-நான் கூறியது இதுதான்: "ஒருவரது மதமோ, நம்பிக்கையோ அடுத்தவரின் மதத்திலோ, நம்பிக்கையிலோ தலையிடாதவரை - ""அடுத்தவர் உரிமையை பறிக்காதவரை"" - சாய் பாபாவை நம்புவதானாலும் வேறு எந்த நம்பிக்கையானாலும் அவரவர் அளவில் அது சரியானதே". இதுவே எனது கருத்து.//

Based on Arul -
If you can cheat someone, using his ignorance it is alright. Because the victim is not suffering. As long as the victim does not understand his situation you can cheat him. Excellent attitude, to become a politician. Better do not give education to people. If not they will start asking questions. Teach children how to worship someone as God. They will continue the attitude to adulthood.
Sridhar.

அருள் said...

// //உலகத்துக்கே போயிட்டிங்களே அருள்! அந்த சட்டத்தில் வன்னியனுக்கு இட ஒதுக்கீடு கண்டிப்பா கொடுக்கனும்னு எந்த பக்கத்தில் இருக்குன்னு அப்படியே லிங்க் கொடுங்களேன்!// //

Affirmative Action as an International Human Rights Dialogue:

The words affirmative action do not appear in the 1948 Universal Declaration of Human Rights, the foundation document for contemporary human rights discourse. The declaration does, however, contain two intellectual anchors for affirmative action.

First, the declaration repeatedly endorses the principle of human equality. Second, it declares that everyone has the right to work, to an adequate standard of living, and to education. The declaration does not command that all will share equally, but it does suggest strongly that there are minimum levels of employment, education, and subsistence that all should share.

If a nation finds that citizens of one race or sex or religion endure a markedly inadequate standard of living, then, the declaration suggests, it has an obligation to uncover the cause of, and respond to, that endurance.

http://www.brookings.edu/articles/2000/winter_politics_ginsburg.aspx

Affirmative Action = சாதிவாரி இடஒதுக்கீடு = வன்னியருக்கு இடஒதுக்கீடு

அருள் said...

// //நீங்கள் வன்னியன் என்பதும், இந்து என்பதும் வளர்ந்து நீங்களே தெரிந்து கொண்டீர்களா அல்லது உங்கள் பெற்றோர் திணித்தார்களா!? இன்னொருத்தர் சொல்லி அதை பின் தொடர்வதற்கு பெயர் தான் சுதந்திரமா, அப்படியானால் சுய அறிவு என்று ஒன்று இல்லைவே இல்லையா!?// //

"சுய அறிவு" என்று நீங்கள் எதைக் குறிப்பிடுகிறீர் என்று தெரியவில்லை.

மனிதர்களின் "அறிவு" பெரும்பாலும் அடுத்தவரை கேட்டு, பார்த்து, படித்துதான் வருகிறது. நாம் பேசுகிற மொழி, நாம் அணிகிற உடை, நாம் உண்ணும் உணவு எல்லாமே நமக்கு முன் இருந்தோர் வடிவமைத்தவைதான். எதையும் நமக்கு நாமே உருவாக்கிவிடவில்லை. நாம் உருவாக்குவதைவிட நாம் தேர்வுசெய்வதுதான் நம்முடைய அறிவாக இருக்கிறது.

எனவே, மனிதனுக்கு இருக்க வேண்டியது சுய அறிவு என்பதைவிட, பகுத்தறிவே தேவை என்று கொள்ளலாம்.

"""மனிதன் என்பதற்கே பொருள், விஷயங்களை ஆராய்ந்து, நன்மை தீமை எனபதை உணர்ந்து, சகல துறைகளிலும் மேலும் மேலும் வளர்ச்சி அடைகிற தன்மை உடையவன் என்பதேயாகும்....

நமக்கு அறிவு இருக்கிறது; அனுபவம் இருக்கிறது; ஆராயும் திறன் இருக்கிறது. அவற்றைக்கொண்டு எந்தச் சங்கதி ஆனாலும் ஆராய்ந்து பார்த்துதான் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்துகொள்ள வேண்டும்.""" தந்தை பெரியார் - 'விடுதலை' 27.3.1951

அதேசமயம் - ஒருவன் பிறருக்கும் தனக்கும் குறிப்பிடத்தக்க பாதிப்பு ஏதுமில்லாத வகையில், ஒரு நம்பிக்கையையோ மதத்தையோ பின்பற்றுவதில் என்ன தவறு? அப்படிப்பட்ட உரிமை மனிதர்களுக்கு உண்டா ? இல்லையா?

அருள் said...

வால்பையன் said...

// //புண்ணாக்கு சட்டம், மனிதனுக்கு மனிதனால் இயற்றப்பட்டது தான் சட்டம், ஒரு காலத்தில் ஆகவே ஆகாது என மறுக்கப்பட்டது இன்று ஏற்று கொள்ளப்படுகிறது, அது போல் ஆன விசயம் ஒதுக்க வேண்டியதும் இயல்பு தான்!// //

Sridhar said...

// //Based on Arul - If you can cheat someone, using his ignorance it is alright. Because the victim is not suffering. As long as the victim does not understand his situation you can cheat him.// //

மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரம் அனைவருக்கும் உண்டு. தான் விரும்பும் மதம் அல்லது நம்பிக்கையை பின்பற்றுவது, அதிலிருந்து வெளியேறி வேறு மதம் அல்லது நம்பிக்கையை கைக்கொள்வது, தான் எந்த மதத்தையும் சேர்ந்தவன் அல்ல என்று சொல்வது - இவை எல்லாம் மனித உரிமைதான்.

(You have the right to profess your religion freely, to change it, and to practise it either on your own or with other people.)

அதேசமயம் மதம் சார்ந்த மனித உரிமைகளை, மற்ற மனித உரிமைகளுடன் சேர்த்துதான் பார்க்கவேண்டும். எனவே, ஏமாற்றுவது, துன்புறுத்துவது, சுரண்டுவது போன்ற எல்லாமும் மத அடிப்படையில் நடந்தாலும் வேறு எந்தவகையில் நடந்தாலும் அது மனித உரிமைக்கு எதிரானதுதான்.

விரிவாக இங்கே காண்க:

Declaration on the Elimination of All Forms of Intolerance and of Discrimination Based on Religion or Belief

http://www2.ohchr.org/english/law/religion.htm

Declaration of Principles on Tolerance

http://www.unesco.org/cpp/uk/declarations/tolerance.pdf

Universal Declaration of Human Rights, Article 18

http://www.un.org/cyberschoolbus/humanrights/declaration/18.asp

Freedom of religion

http://en.wikipedia.org/wiki/Freedom_of_religion

pichaikaaran said...

"Based on Arul -
If you can cheat someone, using his ignorance it is alright"

No .. Mr. Arul did not say that.. If Those who are in public office fails to do their duty , it means they are cheating people..

But a individual, let him be a guru or writer , says some thing or do some thing which we cant accept , does not mean he is chaeting.. we dont accept his action..thats all...
How can we say he is cheating ..

If one gets money and fails to do the return , that means he is cheating...
a saamiyaar is punishable only if they harms others.. Just put forward an idea is not cheating..
compartivly the politicians are more harmful than this saamiyaars...
But since saamiyaars are easy targets we criticize them ..thats all ..

pichaikaaran said...

வால் பையன் பையன் அவர்களே.. உங்கள் பதிவுகளை படித்து இருக்கிறேன்.. இரசிகன, தொண்டன், பக்தன் என அனைவரும் ஒன்றுதான் என்ற உங்கள் கருத்து எனக்கு உடன்பாடுதான்.. எவரையும் சாராமல் இருப்பதுதான் சிறந்தது என அறிவேன்..
ஆனால் இங்கு நடக்கும் விவாதத்தை எது சிறந்தது என என்ற திக்கில் நடத்தாமல், ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நடத்தல் என்ற திக்கில் இட்டு செல்வதே என் நோக்கம்..

இஸ்லாமியர் என்றால் இப்படித்தான் என சிலருக்கும், கிறிஸ்தவம் என்றால் இப்படிதான் என்றும் , இந்து என்றால் இப்படித்தான் என ஒரு பொது புத்தி அந்த மதங்களை பற்றி அறியாதவர்களிடம் இருக்கும்..இதுதான் எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம்..

இந்த சாமியார் விவகாரத்திலும், ஒரு சாமியாரிடம் செல்பவர்கள் எல்லோரும் அற்புதங்களில் மயங்கித்தான் செல்கிறார்கள் என நினைப்பது ஒரு பொது புத்தி.. எனவேதான் , ஒரு விடியோவை காட்டி, ...பாருங்கள் , உங்கள் சாமியார் ஏமாற்றுகிறார் என சொல்லி அவர்களுக்கு அறிவூட்டுவதாக எண்ணுகிறோம்..
உண்மையில் ஒரு சாமியாரிடம் ஒருவர் செல்கிறார் என்றால் அதற்கு காரணம் இதையும் மீறி பலவும் இருக்கும்.. அதை புரிந்து கொள்ள முயல வேண்டும்..
அதே போல ஒரு குறு தான் நல்வாழ்வு காட்ட முடியும் என நினைப்பவர்கள், கோயில் வழிப்பாட்டில் ஈடுபடுவர்களை ஒன்றம் தெரியாதவர்கள் என நினைக்க கூடாதது.. நாத்திகம் பேசுபவர்கள் , போதிய அறிவு அற்றவர்கள் என தவறாக நினைக்க கூடாது,...

அதே போல சாமியாரிடம் செல்பவர்கள் முட்டாள்கள் போலவும், வேறு வழிபாட்டு தளங்களுக்கு செல்பவர்கள் மேதைகள் போலவும் பேசுவது தவறு..
என்னை பொறுத்தவரை, எதுவுமே தேவை அற்றது என நினைக்கிறேன்.. அனால் அப்படி போக விரும்புவது தவறு என சொல்ல மாட்டேன்..

pichaikaaran said...

கடைசியாக நான் சொல்ல விரும்புவது ஒன்றுதான்.. எல்லா இடத்திலும் தவறுகள் இருக்கின்றன.. தத்தம் தவறுகளை அவரவர் திருத்திக்கொள்ள பார்க்க வேண்டும்.. ஒவ்வொருவரும் "மற்றவர்கள்தான் முட்டாள்கள், அவர்கள்தான் திருந்த வேண்டும்" என நினைத்தால் எந்த மாற்றமும் வராது...

மதுரைவீரன் said...

"மனிதர்களின் "அறிவு" பெரும்பாலும் அடுத்தவரை கேட்டு, பார்த்து, படித்துதான் வருகிறது. நாம் பேசுகிற மொழி, நாம் அணிகிற உடை, நாம் உண்ணும் உணவு எல்லாமே நமக்கு முன் இருந்தோர் வடிவமைத்தவைதான். எதையும் நமக்கு நாமே உருவாக்கிவிடவில்லை. நாம் உருவாக்குவதைவிட நாம் தேர்வுசெய்வதுதான் நம்முடைய அறிவாக இருக்கிறது. எனவே, மனிதனுக்கு இருக்க வேண்டியது சுய அறிவு என்பதைவிட, பகுத்தறிவே தேவை என்று கொள்ளலாம்." - அருமையான கருத்து அருள். வால் பையனின் கேள்விக்கு இது மிகப் பொருத்தமான, நிதானமான் பதில். ஒரு கட்டத்துக்குப் பின் வால்பையன் வீம்புக்காக வாதடுவது போல் தான் தெரிகிறது.

ஆனாலும் சொல்லாமல் இருக்க முடியவில்லை. வேண்டாமென்றுதான் நினைத்தேன்; அடக்க முடியவில்லை. கேட்டு விடுகிறேன். மனிதனுக்குத் தேவை பகுத்தறிவு என்று நீங்களே சொன்ன பிறகு கேட்காமல் இருக்க முடியவில்லை. முதலில் பகுத்தறிவு என்றால் என்ன? சில வாரங்களுக்கு அல்லது மாதங்களுக்கு முன், டோண்டு அவர்கள் ஏதோ ஒரு பதிவின் பின்னூட்டங்களில், இராமதாசு அவர்கள், தனது மகனுக்காக பா.உ பதவிக்காக திமுகவிடம் போய் நின்றார் என்று கூறிய போது, தாங்கள், அன்புமணிக்கு என்று யாரும் பதவி கேட்கவில்லை பொதுவாகத்தான், பா.ம.கவுக்குத்தான் என்று வாதிட்டது பகுத்தறிந்தா அல்லது அறியாமலா? அது போனாலும், ஒவ்வொரு தின, வார, மா இதழுக்கும், அன்புமணிக்கு பா.உ பதவி தராமல் திமுக நம்பிக்கை துரோகம் செய்து விட்டதாக, மருத்துவரவர்கள் காட்டு கத்தல் கத்தினாரே, அப்போதாவது, உங்களால் அன்புமணிக்காகத்தான் அந்த பா.உ பதவி கேட்கப்பட்டது என்று பகுத்தறிய முடிந்ததா? சரி அது போனாலும், வெறும் 2 வாரங்களுக்கு முன்பு வரை கூ கருணாநிதி அவர்களை 'குண்டக்க மண்டக்க' திட்டி விட்டு (ஆனாலும் நித்தமும் "அரசியலில் நிரந்தர..." வசனத்தைக் கூறிக் கொண்டிருந்து விட்டு), இப்போது வெட்கமே இல்லாமல் கருணாநிதி அவர்களிடம் சரணாகதி அடைந்து விட்ட மருத்துவர் இராமதாசு அவர்களைப் பார்த்தபின்பும், ஐயா அவர்களுக்கு கொள்கை என்று ஒன்று இருக்கிறது என்று உங்கள் பகுத்தறிவு நம்புகிறதா?

மதத்தின் பெயரைச் சொல்லி ஏமாற்றுவது இருக்கட்டும், சாதியின் பெயரால், கொள்கை என்ற பெயரால், கேட்பவனிடமெல்லாம் "கேப்பையிலிருந்து நெய் வடிகிறது" என்று கூறிக்கொண்டிருக்கும், இராமதாசு, கருணாநிதி, ஜெ மற்றும் வீரமணிக்களிடமிருந்து நாம் பகுத்தறிய வேண்டும் என்று தோன்றுகிறது. பகுத்தறிவு பற்றி டோண்டு அவர்களின் ஒவ்வொரு பதிவிலும்(அது எது பற்றியதாக இருந்தாலும்) தவறாமல் வந்து சொந்தக் கருத்தையோ அல்லது cut and paste முறையிலான கருத்தையோ முன் வைக்கும் தாங்களும் அதற்கு முன் வரவேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

பிகு: முதல் பத்தியில் நான் கூறியிருப்பது பகடி அல்ல. நிஜமாகவே அது உங்களுக்கான பாராட்டுத்தான்.

மதுரைவீரன் said...

"மனிதர்களின் "அறிவு" பெரும்பாலும் அடுத்தவரை கேட்டு, பார்த்து, படித்துதான் வருகிறது. நாம் பேசுகிற மொழி, நாம் அணிகிற உடை, நாம் உண்ணும் உணவு எல்லாமே நமக்கு முன் இருந்தோர் வடிவமைத்தவைதான். எதையும் நமக்கு நாமே உருவாக்கிவிடவில்லை. நாம் உருவாக்குவதைவிட நாம் தேர்வுசெய்வதுதான் நம்முடைய அறிவாக இருக்கிறது. எனவே, மனிதனுக்கு இருக்க வேண்டியது சுய அறிவு என்பதைவிட, பகுத்தறிவே தேவை என்று கொள்ளலாம்." - அருமையான கருத்து அருள். வால் பையனின் கேள்விக்கு இது மிகப் பொருத்தமான, நிதானமான் பதில். ஒரு கட்டத்துக்குப் பின் வால்பையன் வீம்புக்காக வாதடுவது போல் தான் தெரிகிறது.

ஆனாலும் சொல்லாமல் இருக்க முடியவில்லை. வேண்டாமென்றுதான் நினைத்தேன்; அடக்க முடியவில்லை. கேட்டு விடுகிறேன். மனிதனுக்குத் தேவை பகுத்தறிவு என்று நீங்களே சொன்ன பிறகு கேட்காமல் இருக்க முடியவில்லை. முதலில் பகுத்தறிவு என்றால் என்ன? சில வாரங்களுக்கு அல்லது மாதங்களுக்கு முன், டோண்டு அவர்கள் ஏதோ ஒரு பதிவின் பின்னூட்டங்களில், இராமதாசு அவர்கள், தனது மகனுக்காக பா.உ பதவிக்காக திமுகவிடம் போய் நின்றார் என்று கூறிய போது, தாங்கள், அன்புமணிக்கு என்று யாரும் பதவி கேட்கவில்லை பொதுவாகத்தான், பா.ம.கவுக்குத்தான் என்று வாதிட்டது பகுத்தறிந்தா அல்லது அறியாமலா? அது போனாலும், ஒவ்வொரு தின, வார, மா இதழுக்கும், அன்புமணிக்கு பா.உ பதவி தராமல் திமுக நம்பிக்கை துரோகம் செய்து விட்டதாக, மருத்துவரவர்கள் காட்டு கத்தல் கத்தினாரே, அப்போதாவது, உங்களால் அன்புமணிக்காகத்தான் அந்த பா.உ பதவி கேட்கப்பட்டது என்று பகுத்தறிய முடிந்ததா? சரி அது போனாலும், வெறும் 2 வாரங்களுக்கு முன்பு வரை கூ கருணாநிதி அவர்களை 'குண்டக்க மண்டக்க' திட்டி விட்டு (ஆனாலும் நித்தமும் "அரசியலில் நிரந்தர..." வசனத்தைக் கூறிக் கொண்டிருந்து விட்டு), இப்போது வெட்கமே இல்லாமல் கருணாநிதி அவர்களிடம் சரணாகதி அடைந்து விட்ட மருத்துவர் இராமதாசு அவர்களைப் பார்த்தபின்பும், ஐயா அவர்களுக்கு கொள்கை என்று ஒன்று இருக்கிறது என்று உங்கள் பகுத்தறிவு நம்புகிறதா?

மதத்தின் பெயரைச் சொல்லி ஏமாற்றுவது இருக்கட்டும், சாதியின் பெயரால், கொள்கை என்ற பெயரால், கேட்பவனிடமெல்லாம் "கேப்பையிலிருந்து நெய் வடிகிறது" என்று கூறிக்கொண்டிருக்கும், இராமதாசு, கருணாநிதி, ஜெ மற்றும் வீரமணிக்களிடமிருந்து நாம் பகுத்தறிய வேண்டும் என்று தோன்றுகிறது. பகுத்தறிவு பற்றி டோண்டு அவர்களின் ஒவ்வொரு பதிவிலும்(அது எது பற்றியதாக இருந்தாலும்) தவறாமல் வந்து சொந்தக் கருத்தையோ அல்லது cut and paste முறையிலான கருத்தையோ முன் வைக்கும் தாங்களும் அதற்கு முன் வரவேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

மதுரைவீரன் said...

"மனிதர்களின் "அறிவு" பெரும்பாலும் அடுத்தவரை கேட்டு, பார்த்து, படித்துதான் வருகிறது. நாம் பேசுகிற மொழி, நாம் அணிகிற உடை, நாம் உண்ணும் உணவு எல்லாமே நமக்கு முன் இருந்தோர் வடிவமைத்தவைதான். எதையும் நமக்கு நாமே உருவாக்கிவிடவில்லை. நாம் உருவாக்குவதைவிட நாம் தேர்வுசெய்வதுதான் நம்முடைய அறிவாக இருக்கிறது. எனவே, மனிதனுக்கு இருக்க வேண்டியது சுய அறிவு என்பதைவிட, பகுத்தறிவே தேவை என்று கொள்ளலாம்." - அருமையான கருத்து அருள். வால் பையனின் கேள்விக்கு இது மிகப் பொருத்தமான, நிதானமான் பதில். ஒரு கட்டத்துக்குப் பின் வால்பையன் வீம்புக்காக வாதடுவது போல் தான் தெரிகிறது.

ஆனாலும் சொல்லாமல் இருக்க முடியவில்லை. வேண்டாமென்றுதான் நினைத்தேன்; அடக்க முடியவில்லை. கேட்டு விடுகிறேன். மனிதனுக்குத் தேவை பகுத்தறிவு என்று நீங்களே சொன்ன பிறகு கேட்காமல் இருக்க முடியவில்லை. முதலில் பகுத்தறிவு என்றால் என்ன? சில வாரங்களுக்கு அல்லது மாதங்களுக்கு முன், டோண்டு அவர்கள் ஏதோ ஒரு பதிவின் பின்னூட்டங்களில், இராமதாசு அவர்கள், தனது மகனுக்காக பா.உ பதவிக்காக திமுகவிடம் போய் நின்றார் என்று கூறிய போது, தாங்கள், அன்புமணிக்கு என்று யாரும் பதவி கேட்கவில்லை பொதுவாகத்தான், பா.ம.கவுக்குத்தான் என்று வாதிட்டது பகுத்தறிந்தா அல்லது அறியாமலா? அது போனாலும், ஒவ்வொரு தின, வார, மா இதழுக்கும், அன்புமணிக்கு பா.உ பதவி தராமல் திமுக நம்பிக்கை துரோகம் செய்து விட்டதாக, மருத்துவரவர்கள் காட்டு கத்தல் கத்தினாரே, அப்போதாவது, உங்களால் அன்புமணிக்காகத்தான் அந்த பா.உ பதவி கேட்கப்பட்டது என்று பகுத்தறிய முடிந்ததா? சரி அது போனாலும், வெறும் 2 வாரங்களுக்கு முன்பு வரை கூ கருணாநிதி அவர்களை 'குண்டக்க மண்டக்க' திட்டி விட்டு (ஆனாலும் நித்தமும் "அரசியலில் நிரந்தர..." வசனத்தைக் கூறிக் கொண்டிருந்து விட்டு), இப்போது வெட்கமே இல்லாமல் கருணாநிதி அவர்களிடம் சரணாகதி அடைந்து விட்ட மருத்துவர் இராமதாசு அவர்களைப் பார்த்தபின்பும், ஐயா அவர்களுக்கு கொள்கை என்று ஒன்று இருக்கிறது என்று உங்கள் பகுத்தறிவு நம்புகிறதா?

மதுரைவீரன் said...

மதத்தின் பெயரைச் சொல்லி ஏமாற்றுவது இருக்கட்டும், சாதியின் பெயரால், கொள்கை என்ற பெயரால், கேட்பவனிடமெல்லாம் "கேப்பையிலிருந்து நெய் வடிகிறது" என்று கூறிக்கொண்டிருக்கும், இராமதாசு, கருணாநிதி, ஜெ மற்றும் வீரமணிக்களிடமிருந்து நாம் பகுத்தறிய வேண்டும் என்று தோன்றுகிறது. பகுத்தறிவு பற்றி டோண்டு அவர்களின் ஒவ்வொரு பதிவிலும்(அது எது பற்றியதாக இருந்தாலும்) தவறாமல் வந்து சொந்தக் கருத்தையோ அல்லது cut and paste முறையிலான கருத்தையோ முன் வைக்கும் தாங்களும் அதற்கு முன் வரவேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

பிகு: முந்தைய பின்னுட்டட்த்தின் முதல் பத்தியில் நான் கூறியிருப்பது பகடி அல்ல. நிஜமாகவே அது உங்களுக்கான பாராட்டுத்தான்.

வால்பையன் said...

// உங்கள் சாமியார் ஏமாற்றுகிறார் என சொல்லி அவர்களுக்கு அறிவூட்டுவதாக எண்ணுகிறோம்..
உண்மையில் ஒரு சாமியாரிடம் ஒருவர் செல்கிறார் என்றால் அதற்கு காரணம் இதையும் மீறி பலவும் இருக்கும்.//

ஒரே காரணம் தான்,

அரசியல்நிலைப்பாடு.

நமக்கு எதாவது ஒரு கிளை வேண்டும் பிடித்து தொங்க, அது கடவுளாகவோ, கட்சித்தலைவனாகவோ, நடிகனாகவோ இருக்கலாம்!

ஒருவன் பிராடு என்று சுட்டிக்காட்டுவதால், காட்டுபவர் இன்னொருவர் மீதிருக்கும் பற்றுதலால் தான் அப்படி செய்கிறார் என சொல்வது தான் பொதுபுத்தி!, நீங்கள் சொல்வது போல் இங்கு நடக்கும் விவாதங்கள் பொதுபுத்தியில் நடப்பதில்லை

வால்பையன் said...

//அதே போல சாமியாரிடம் செல்பவர்கள் முட்டாள்கள் போலவும், வேறு வழிபாட்டு தளங்களுக்கு செல்பவர்கள் மேதைகள் போலவும் பேசுவது தவறு..//

வேறு வழிபாட்டு தளங்களுக்கு செல்பவர்கள் மேதைகள் என்று நான் எங்கே சொன்னேன்!

மேலும் நான் யாரையும் முட்டாள் என்று சொல்லவில்லை, விழிப்புணர்ச்சியற்ற அறியாமை வேறு, முட்டாள்தனம் வேறு!

வால்பையன் said...

// தந்தை பெரியார் - 'விடுதலை' 27.3.1951//


உங்களை நினைச்சாலே எனக்கு புல்லரிக்குது அருள்!

pichaikaaran said...

"நமக்கு எதாவது ஒரு கிளை வேண்டும் பிடித்து தொங்க, அது கடவுளாகவோ, கட்சித்தலைவனாகவோ, நடிகனாகவோ இருக்கலாம்!"


அருமை... இதை உணர்ந்து விட்டால் உலகில் பாதி பிரச்சினை தீர்ந்து விடும்..

ஆனால் இந்த மன நிலை யாரும் போதித்து வராது.. உங்கள் கருத்தை ஏற்கிறேன்.. இதை கருத்து என்ன்று கூட சொல்ல முடியாது . ஓர் உண்மை என சொல்லலாம்..

ஆனால் இங்கு நடக்கும விவாதத்தை ஒரு பார்வையாளனாக பார்த்தால், உண்மையை அறியும் ஆர்வத்தை விட , உன் சாமி தப்பு, என் சாமி சிறந்தது, மூடர்களே , மனம் திருந்து எங்கள் வழிக்கு வாருங்கள் என சொல்லும் ஆர்வமும், எங்கள் ஜாதியை சார்ந்த , பாரம்பரிய குரு மார்கள் சிறந்தவர்கள்.. இவாள் வந்து எல்லாத்தையும் கெடுத்துட்டா என சொல்ல விரும்பும் ஆர்வமும் தெரியும்.. கவனித்து பாருங்கள்..
அதாவது தான் பிடித்து தொங்கும் கிளை சரியானது என்ற எண்ணம் சாய் பாபா பக்தர்கள் உட்பட அனைவரிடமே இருக்கும்..


மாற்றத்தை நம்மிடமிரிந்துதான் தொடங்க முடியும்.. எனவே ஒவ்வொரு பிரிவினரும் தம்மிடம் உள்ள குறைகள் என்ன பார்த்து , அவரவர்கள் திருத்தி கொன்டால், உலகமே திருந்திவிடும்..
நீங்களும் நானும் சாய் பாபா தவறு செய்கிறார் என பேசி கொண்டு இருப்பது பயனற்றது.. அவர் பக்தர்கள் இப்படி விவாதிததால் பயன் உண்டு..

அதே நேரத்தில் டோண்டு சார் சார்ந்த இனத்திலும் தவறுகளால் இருக்கலாம்..அதை அவர் சுட்டி காட்டி, இதை நீக்க இப்படி செய்ய போகிறோம் என்று பேசினால் பயன் உண்டு..

நடைமுறையில், அவர் சார்ந்த இனத்தின் தவறுகளை மற்றவர்கள் பேசுவதால் அது சில சமயங்களில் துவேஷமாக தோற்றமளிக்கிறது..
ஆக நம் தவறுகளை நாம் திருத்தினால் அது பாசிடிவ் சிக்னல்.. மற்றவர் தவறுகளை திருத்த முயன்றால் அது பயனற்ற முயற்சி

அருள் said...

மதுரைவீரன் said...

// //இராமதாசு அவர்கள், தனது மகனுக்காக பா.உ பதவிக்காக திமுகவிடம் போய் நின்றார் என்று கூறிய போது, தாங்கள், அன்புமணிக்கு என்று யாரும் பதவி கேட்கவில்லை பொதுவாகத்தான், பா.ம.கவுக்குத்தான் என்று வாதிட்டது பகுத்தறிந்தா அல்லது அறியாமலா? // //

"நமக்கு அறிவு இருக்கிறது; அனுபவம் இருக்கிறது; ஆராயும் திறன் இருக்கிறது. அவற்றைக்கொண்டு எந்தச் சங்கதி ஆனாலும் ஆராய்ந்து பார்த்துதான் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்துகொள்ள வேண்டும்" என்றார் தந்தை பெரியார். இத்தகைய பகுத்தறிவுக்கு முரணாக பா.ம.க'வுக்கு நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் கேட்டதைக் குறிப்பிட முடியாது.

பா.ம.க'வுக்கு சட்டமன்றத்தில் 18 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களது ஆதரவையும் சேர்த்துதான் இதற்கு முந்தைய மேலவைத் தேர்தல்களில் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். எனவே, இந்த தேர்தலில் ஒரு உறுப்பினர் பதவி பா.ம.க'வுக்கு கோரப்பட்டது. இத்தகைய ஒரு கோரிக்கையை பா.ம.க வைக்கக்கூடாது என்றோ, அதற்கான உரிமை அந்த கட்சிக்கு இல்லை என்றோ எவரும் வாதிட முடியாது. (அதேசமயம் அதனைத் தரமுடியாது என்று கூறுவது தி.மு.க'வின் விருப்பம்).

நான் ஏற்கனவே கூறியிருப்பது போல, 'பா.ம.க'வுக்கு ஒரு இடம் என்பதுதான் கோரிக்கை. மருத்துவர் அன்புமணி அவர்களுக்காக என்று ஒருபோதும் கேட்கவில்லை. அதேசமயம் அவ்வாறு ஒரு இடம் அளிக்கப்பட்டிருந்தால் - அது மருத்துவர் அன்புமணி அவர்களுக்கே அளிக்கப்பட்டிருக்கும் என்பது 'லாஜிகல்' முடிவு. அதாவது, அந்த நாடாளுமன்ற உறுப்பினர் இடம் மருத்துவர் அன்புமணி அவர்களுக்கு என்று பா.ம.க.முடிவெடுத்திருக்கும்.

படுத்துக்கொண்டு போர்த்தினால் என்ன? போர்த்திக்கொண்டு படுத்தால் என்ன? என்று நீங்கள் கேட்கலாம்! மருத்துவர் அன்புமணி அவர்களுக்காக ஏன் கேட்கிறீர்கள்? என்று முதல்வர் கலைஞர் கூட கேட்டதாக தகவல் உண்டு (அதாவது, அவரும் அப்படித்தான் புரிந்துகொண்டிருந்தார்). ஆனால், பா.ம.க'வுக்கும் தி.மு.க'வுக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகளில் மருத்துவர் அன்புமணி அவர்களுக்காக என்று ஒருபோதும் கேட்கப்படவில்லை.

ஆக, "மருத்துவர் அன்புமணி அவர்களுக்காக" என்பது ஒரு பொது புரிதல். அது உண்மையும் கூட. ஆனால், பா.ம.க'வுக்கும் தி.மு.க'வுக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகளில் "மருத்துவர் அன்புமணி அவர்களுக்காக" என்று ஒருபோதும் கேட்கப்படவில்லை

அருள் said...

மதுரைவீரன் said...

// //வெறும் 2 வாரங்களுக்கு முன்பு வரை கருணாநிதி அவர்களை 'குண்டக்க மண்டக்க' திட்டி விட்டு' இப்போது வெட்கமே இல்லாமல் கருணாநிதி அவர்களிடம் சரணாகதி அடைந்து விட்ட மருத்துவர் இராமதாசு அவர்களைப் பார்த்தபின்பும், ஐயா அவர்களுக்கு கொள்கை என்று ஒன்று இருக்கிறது என்று உங்கள் பகுத்தறிவு நம்புகிறதா?// //

தி.மு.க தலைவர் கருணாநிதியிடம் இப்போது மருத்துவர் இராமதாசு அவர்கள் சரணடைந்துவிட்டதாக நீங்கள் கூறுவது வியப்பாக இருக்கிறது. அதுபோன்று எந்த ஒரு நிகழ்வும் நடக்கவில்லை. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி மருத்துவர் இராமதாசு அவர்கள் முதல்வரை சந்தித்தார். இது ஒரு இயல்பான நிகழ்வு.

"தமிழ்நாட்டின் 69 % இட ஒதுக்கீட்டு முறையைக் காப்பாற்றவேண்டும். அதனை சாதிவாரி மக்கள்தொகை அளவிற்கேற்ப இன்னும் அதிகமாக்க வேண்டும்" என்பது பா.ம.க'வின் கொள்கை. அந்தக் கோள்கையை வலியுறுத்தும் வகையில்தான், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி மருத்துவர் இராமதாசு அவர்கள் முதல்வரை சந்தித்தார்.

மருத்துவர் இராமதாசு அவர்களது கோரிக்கையை ஏற்று நீதியரசர் ஜனார்த்தனம் அவர்களிடம் முதல்வரும் ஆலோசனைக்கேட்டுள்ளார். சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஈடுபாடு கோண்டுள்ள நீதியரசரும் சரியான ஆலோசனையையே தருவார் என்பதில் சந்தேகம் இல்லை. எனவே, மருத்துவர் இராமதாசு அவர்களின் கொள்கை வெற்றி பெறும்.

எனவே "ஐயா அவர்களுக்கு கொள்கை என்று ஒன்று இருக்கிறது என்று எனது பகுத்தறிவு நம்புவதில்" வியப்பொன்றும் இல்லை.

அருள் said...

மதுரைவீரன் said...

// //மதத்தின் பெயரைச் சொல்லி ஏமாற்றுவது இருக்கட்டும், சாதியின் பெயரால், கொள்கை என்ற பெயரால், கேட்பவனிடமெல்லாம் "கேப்பையிலிருந்து நெய் வடிகிறது" என்று கூறிக்கொண்டிருக்கும், இராமதாசு, கருணாநிதி, ஜெ மற்றும் வீரமணிக்களிடமிருந்து நாம் பகுத்தறிய வேண்டும் என்று தோன்றுகிறது. பகுத்தறிவு பற்றி டோண்டு அவர்களின் ஒவ்வொரு பதிவிலும்(அது எது பற்றியதாக இருந்தாலும்) தவறாமல் வந்து சொந்தக் கருத்தையோ அல்லது cut and paste முறையிலான கருத்தையோ முன் வைக்கும் தாங்களும் அதற்கு முன் வரவேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.// //

கருணாநிதி, ஜெ, வீரமணி, மருத்துவர் இராமதாசு ஆகியோரிடமிருந்து பகுத்தறிய வேண்டும் என்று நீங்கள் எதனைக்குறிப்பிடுகிறீர்கள் என்று தெரியவில்லை. கருணாநிதி மற்றும் ஜெ இடையே கொள்கையளவில் என்ன வேறுபாடு இருக்கிறது? என்று எனக்கு சரியாக பிடிபடுவது இல்லை.

வீரமணி ஒரு நிலைபாட்டினைக் கொண்டு செயல்படுகிறார். மருத்துவர் இராமதாசு அவர்களுக்கும் ஒரு நிலைபாடு இருக்கிறது. இதனை "சாதியின் பெயரால், கொள்கை என்ற பெயரால், கேட்பவனிடமெல்லாம் கேப்பையிலிருந்து நெய் வடிகிறது என்று கூறிக்கொண்டிருக்கும்" செயலாக நான் நினைக்கவில்லை.

மருத்துவர் இராமதாசு அவர்களின் போராட்ட களம் என்பது கற்பனையோ, நம்பமுடியாததோ அல்ல. அது மெய்யான விடுதலைக்கான பாதை என்று நான் நம்புகிறேன். அதற்காக என்னாலான வேலையை செய்வது நான் வகுத்துக்கொண்ட பாதை. இது பகுத்தறிவுக்கு எதிரானது அல்ல.

வால்பையன் said...

//மருத்துவர் இராமதாசு அவர்களின் போராட்ட களம் என்பது கற்பனையோ, நம்பமுடியாததோ அல்ல. அது மெய்யான விடுதலைக்கான பாதை என்று நான் நம்புகிறேன். //


யாருக்கு, யார்கிட்ட இருந்து விடுதலை!

உங்களுக்கு கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா!?

அருள் said...

வால்பையன் said...

// //யாருக்கு, யார்கிட்ட இருந்து விடுதலை! உங்களுக்கு கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா!?// //

மனசாட்சி இருப்பதால்தான் மருத்துவரைப் பின் தொடர்கிறோம்.

விடுதலை என்பது அடிப்படையில் இரண்டுவகையானது: 1. தேவைகளிலிருந்து விடுதலை (Freedom from Want) - சமூக, பொருளாதார, கலாச்சார விடுதலை இவை. 2. அச்சத்திலிருந்து விடுதலை (Freedom from Fear) - குடிமை மற்றும் அரசியல் விடுதலை இவையாகும்.

தமிழ்நாட்டின் பெரும்பான்மை மக்களான வன்னியர், தலித், பிற்படுத்தப்பட்ட மக்கள் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு இத்தகைய உரிமைகளுள் பெரும்பாலானவை கிடைக்காதவண்ணம் தடுத்து நிற்கும் ஆதிக்க சாதி சிறுபான்மைக் கூட்டத்திடமிருந்து விடுதலை அடைவதே பா.ம.க'வின் நோக்கம்.

மதுரைவீரன் said...

மருத்துவர் இராமதாசு அவர்களின் போராட்ட களம் என்பது கற்பனையோ, நம்பமுடியாததோ அல்ல. அது மெய்யான விடுதலைக்கான பாதை என்று நான் நம்புகிறேன். அதற்காக என்னாலான வேலையை செய்வது நான் வகுத்துக்கொண்ட பாதை. இது பகுத்தறிவுக்கு எதிரானது அல்ல.
அருள், எனக்குத்தான் பகுத்தறிவு இன்னும் வளரவில்லை நீங்க அடிச்சு ஆடுங்க.

Suresh Ram said...

அருள் said...
" ஆதிக்க சாதி சிறுபான்மை "

வன்னியர் சாதி ஆதிக்க சாதியா என்பது குறித்து பலருக்கும் தெரிவதில்லை.
கொளத்தூர் வட்டாரத்தில் கோலேச்சும் வன்னிய சாதிவெறி!
http://www.vinavu.com/2010/05/11/kolathur-dalith/

அருள் said...

Suresh Ram said...

// //வன்னியர் சாதி ஆதிக்க சாதியா என்பது குறித்து பலருக்கும் தெரிவதில்லை.// //

வன்னியர்கள் ஆதிக்கம் செய்கின்றனர் என்பது கற்பனையான குற்றச்சாட்டு.

ஒருகாலத்தில் தாழ்த்தப்பட்டவர்களைவிட வன்னியர்கள் உயர்ந்தவர்கள் என்று வன்னியர்களால் நம்பப்பட்டது. ஆனால், வன்னியர் சங்கம் மற்றும் மருத்துவர் அய்யா அவர்களின் பிரச்சாரத்திற்கு பின்னர் அந்த நிலை படிப்படியாக மாறிவருகிறது.

ஆதிக்கம் என்பது 'நீ தாழ்ந்தவன் - நான் உயர்ந்தவன்' என்பது மட்டுமல்ல. கல்வி, வேலை, பொருளாதாரம், அதிகாரம் என அனைத்து நிலைகளிலும் வளம், வாய்ப்பு, அதிகாரத்தில் யார் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்பதே உண்மையான ஆதிக்கம்.

இன்றய நிலையில், சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தி - தமிழ்நாட்டின் "வளம், வாய்ப்பு, அதிகாரம்" அனைத்தும் அவரவர் சாதி மக்கள் தொகைக்கேற்ப பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் - என்கிற நிலைபாட்டை ஏற்கும் சாதிகள் ஆதிக்கத்திற்கு எதிரான சாதிகள்.

சாதிவாரிக் கணக்கெடுப்பையும் வகுப்புவாரிப் பங்கீட்டையும் எதிற்கும் சாதிகள் ஆதிக்க சாதிகள்.

pichaikaaran said...

"அதிகாரத்தில் யார் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்பதே உண்மையான ஆதிக்கம்"

அவாள் ஆதிக்கம்தான் அதிகம் என்பது தெரிந்த விஷயம்தான்..

ஆன்மீகத்தை ஏற்க மறுப்பது வேறு விஷயம்..
ஆன்மீகத்தை ஏற்பவர்களில், குருமார்களை நாடும் பிரிவை மட்டும் பார்த்தால் கூட அதில் அவாள் ஆதிக்கம் இருக்கிறது என்பதே உண்மை..

அவாள் இனத்தை சேர்ந்த சாமியார்களின் சர்ச்சையில் அடக்கு வாசிக்கும் ஊடகங்கள் , அவாள் இனத்தை சாராத சாமியார்கள் என்றால் அவதூறை பரப்புவதும், அதை நம்பும் அப்பாவிகள் அதை நம்பி ஒரு பொது புத்தியில் ஐக்கிய்மாவதும் இங்கு நடப்பதுதானே..

ஊடகம் தனியார்துறை வசம் இருந்தாலும், அதில் கூட அவாள் ஆதிக்கம் செலுத்துவதே சிந்தனை சீர்கேட்டிற்கு காரணம்..

டோண்டு சார் உள்ளிட்ட பல பிராமணர்கள் மிகவும் மரியாதைக்கு உரியவர்கள்.. அது வேறு..
பார்பனீயம் என்பதுதான் தவறு ...

பார்பனீயம் சிந்தனையை , பிராமணர் அல்லாதவர்களும் அப்பாவித்தனமாக பரப்ப கூடும் என்பதால்தான் , இதை ஆபத்து என எச்சரித்தார் பேரறிஞர் அண்ணா அவர்கள்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது