tag:blogger.com,1999:blog-9067462.post3802432345780225448..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: "சந்தோஷமா கடன் வாங்குங்க"dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-9067462.post-63169217064981972952007-07-13T16:30:00.000+05:302007-07-13T16:30:00.000+05:30//குறளுக்கு பொருள்?யாராவது முத்தமிழ் வித்தகரிடம் க...//குறளுக்கு பொருள்?<BR/>யாராவது முத்தமிழ் வித்தகரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளவும்.//<BR/><BR/>செகா ஃபைட்டா! <BR/>டோண்டு ரைட்டா!<BR/>வாடா வாடா<BR/>சூடா வாங்கிக்கடா!<BR/><BR/>இணைய்த்திலிருந்து சுட்டது. நன்றி கூகிள்!<BR/><BR/>உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்<BR/>வடுக்காண வற்றாகும் கீழ்<BR/>- பொருட்பால், அதிகாரம்: 108. கயமை, குறள்: 1079<BR/><BR/>பிறர் நண்றாக உடுப்பதையும் உண்பதையும் கண்டால், பொறாமை கொண்டு அவர்மீது குற்றம் காணத்துடிப்பான் கீழ்மகன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-28863588742064612302007-07-13T15:57:00.000+05:302007-07-13T15:57:00.000+05:30//அடச்சீ சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னா ரொம்பதான்!!!...//அடச்சீ சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னா ரொம்பதான்!!!<BR/>சும்மா கிட அற்பப் பதரே. நீயே ஓசி தண்ணி, சிகரெட், கோழி பார்ட்டி. உன்கிட்ட எவனாச்சும் ஜாமீன் கையெழுத்து கேப்பானா? வேனாம் வேனாம்.//<BR/>கேட்டாலும் கிடைக்காதுங்கறது வேற விஷயம். இருந்தாலும் என்ன ஆச்சரியம்! இப்போதுதான் நான் மொழிபெயர்ப்பு சரிபார்த்த திருக்குறளை இங்கு பதிலாக அளிக்கிறேன். <BR/><BR/>"உடுப்பதூம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்<BR/>வடுக்காண வற்றாகும் கீழ்" - குறள் எண் 1079<BR/>திருவள்ளுவர் பதிவர் சந்திப்புக்கு வந்திருப்பாரோ? குறளுக்கு பொருள்?<BR/>யாராவது முத்தமிழ் வித்தகரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளவும்.<BR/><BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-11974074608084328512007-07-13T14:35:00.001+05:302007-07-13T14:35:00.001+05:30//எதிரியை அவ்வளவு மடையனாக நினைப்பது போர் யுக்திக்க...//எதிரியை அவ்வளவு மடையனாக நினைப்பது போர் யுக்திக்கு ஒத்து வராது சிறுவனே.<BR/><BR/>டோண்டு ராகவன்//<BR/><BR/>சிறப்பான விமர்சனம் அளித்துள்ளீர்கள் டோண்டு அவர்களேAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-52079659444318641362007-07-13T14:35:00.000+05:302007-07-13T14:35:00.000+05:30//எதிரியை அவ்வளவு மடையனாக நினைப்பது போர் யுக்திக்க...//எதிரியை அவ்வளவு மடையனாக நினைப்பது போர் யுக்திக்கு ஒத்து வராது சிறுவனே.<BR/>//<BR/><BR/>அடச்சீ சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னா ரொம்பதான்!!!<BR/><BR/>சும்மா கிட அற்பப் பதரே. நீயே ஓசி தண்ணி, சிகரெட், கோழி பார்ட்டி. உன்கிட்ட எவனாச்சும் ஜாமீன் கையெழுத்து கேப்பானா? வேனாம் வேனாம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-85021026428762515762007-07-13T14:27:00.000+05:302007-07-13T14:27:00.000+05:30//எனக்கு கடன் வாங்கனும். எனக்கு ஜாமீன் கையெழுத்து ...//எனக்கு கடன் வாங்கனும். எனக்கு ஜாமீன் கையெழுத்து போடுறியா நோண்டு மாமா?//<BR/>எதிரியை அவ்வளவு மடையனாக நினைப்பது போர் யுக்திக்கு ஒத்து வராது சிறுவனே.<BR/><BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-35805660508778480772007-07-13T14:21:00.000+05:302007-07-13T14:21:00.000+05:30எனக்கு கடன் வாங்கனும். எனக்கு ஜாமீன் கையெழுத்து போ...எனக்கு கடன் வாங்கனும். எனக்கு ஜாமீன் கையெழுத்து போடுறியா நோண்டு மாமா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-23142434664138476122007-07-13T11:55:00.000+05:302007-07-13T11:55:00.000+05:30//நீங்கள் மூன்று வருடங்கள் கழித்து கடனைத் திருப்பி...//நீங்கள் மூன்று வருடங்கள் கழித்து கடனைத் திருப்பித் தருவதற்காகத்தான் இந்த வட்டி விகிதத்தை நாங்கள் நிர்ணயித்தோம். இப்போது திடீர் என்று முன்கூட்டியே கடனை திருப்பி செலுத்தினால் அந்த வட்டி இழப்பை மீண்டும் வேறொருவருக்கு கடன் வழங்கித்தானே ஈடுகட்ட வேண்டும்? அந்த இடைப்பட்ட காலத்தில் ஏற்படும் இழப்பை ஈடுகட்டத்தான் ஒரு சதவிகித அபராத வட்டி வசூலிக்கப்படுகிறது என்கின்றன வங்கிகள்//<BR/><BR/>இது முல்லா நசிருத்தீனை ஞாபகப்படுத்துகிறது. ஒரு சமயம் அவரது நண்பன் ஒருவன் அவரிடம் ஐந்து பொற்காசுகள் கடனாகக் கேட்டானாம். அவன் யோக்கியமானவன் இல்லை. ஆகவே கடனைத் திருப்பித் தருவானா என்பதும் நிச்சயமில்லை. இருந்தாலும் முல்லா கடன் தந்தார். <BR/><BR/>என்ன ஆச்சரியம்? குறித்த காலத்தில் பணம் ஒழுங்காக வந்தது. முல்லா சிந்தனையில் ஆழ்ந்தார். <BR/><BR/>அடுத்த முறை அதே போல நண்பன் வந்தான். இம்முறை 30 பொற்காசுகள் கேட்டான். முல்லா மறுத்து விட்டார். காரணம் கேட்டதற்கு "நீ என்னை ஏமாற்றி விட்டாய்" என்றார். நண்பன் வியப்புடன் என்ன ஏமாற்றினேன் என்று கேட்க, முல்லாவின் பதில்:<BR/><BR/>"நீ பணத்தைத் திருப்பித் தர மாட்டாய் என எண்ணினேன். ஆனால் திருப்பித் தந்து என் நம்பிக்கையில் மண்ணையள்ளிப் போட்டாய்".<BR/><BR/>இது எப்படி இருக்கு?<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-10748098986641723832007-07-13T11:43:00.000+05:302007-07-13T11:43:00.000+05:30ஜோசஃப் அவர்கள் எனது இந்த விமரிசனத்துக்கு பதிலாக தன...ஜோசஃப் அவர்கள் எனது இந்த விமரிசனத்துக்கு பதிலாக தனது பதிவு ஒன்றையே இட்டுள்ளார். அது இதோ:<BR/>முதலில் என்னுடைய 'சந்தோஷமா கடன் வாங்குங்க' புத்தகத்திற்கு மதிப்புரை எழுதிய நண்பர் ராகவன் அவர்களுக்கு மிக்க நன்றி.<BR/><BR/>இனி அவர் தன்னுடைய மதிப்புரையில் எழுப்பியிருந்த சில கேள்விகளுக்கு என்னாலான விளக்கங்கள்:<BR/><BR/>'கடன்பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான்....' இதை கம்பர் எழுதியதாகத்தான் பலரும் கருதுகிறார்கள் என்பது உங்களுடைய பதிவில் வந்த பின்னூட்டங்களில் ஒருவரைத் தவிர யாரும் மறுக்காமல் விட்டதிலிருந்தே தெரிகிறது. இருப்பினும் தவற்றை அடுத்த பதிவில் திருத்திவிடுகிறேன். சுட்டிக்காட்டியதற்கு நன்றி.<BR/><BR/>இத்தகைய புத்தகங்களில் காணப்படும் பலவீனங்கள் என்று நீங்கள் கூறியிருப்பது சரிதான். ஆனால் அடுத்துவரும் பதிப்புகளில் (editions) அன்றைய வழக்கத்திலிருப்பவற்றை அளிப்பதன் மூலம் சரிசெய்துவிட முடியும் என்று கருதுகிறேன்.<BR/><BR/>அதேபோன்று அவற்றில் அளிக்கப்படும் புள்ளி விவரங்களும், மாதிரிகளும் கூட சம்பந்தப்பட்ட வாசகர்களை மட்டுமே ஈர்க்கும். கடன் வாங்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இப்புத்தகத்தை அணுகுபவர்களுக்கு இது நிச்சயம் பயனளிக்கும் என்பது என் கருத்து. மற்றபடி பொழுதுபோக்குக்காக படிப்பவர்களை இது அவ்வளவாக ஈர்க்காது. <BR/><BR/>என்னுடைய வங்கியின் பயிற்சிக் கல்லூரியில் முதல்வராக இருந்த காலத்தில் இத்தகைய வழிமுறைகளை விரிவாக பாடமாக எடுத்த பயிற்சி இந்த புத்தகத்தை எழுத மிகவும் உதவியது என்றால் மிகையாகாது. ஆனால் அப்போதும், 'போரடிக்குது சார்.' என்று முணுமுணுத்தவர்களும் இருக்கத்தான் செய்தார்கள். இப்போதும் இப்புத்தகத்தை படிக்கும் சில வாசகர்களுக்கு இப்படி தோன்றலாம். <BR/><BR/>ஆனால் கடன் வாங்குபவர்கள் flat rate மற்றும் Interest on reducing balances என்ற இருவகை வட்டி வசூலிக்கும் முறைகளில் உள்ள வேறுபாடுகளை தெளிவாக உணர்ந்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே அளிக்கப்பட்ட மாதிரிகள் அவை. ஆனால் புதிய தலைமுறை வங்கிகள் சிலவற்றில் பணியாற்றும் சில நண்பர்கள் இப்படி generalise செய்தது சரியா என்று கேட்டதென்னவோ உண்மை. என்னுடைய மாதிரிகள் அவர்கள் கடைபிடிக்கும் முறையை குறைகூறும் முயற்சியல்ல என்று பதிலளித்தேன். கடன் வாங்கும் சாதாரணியர்கள் (laymen) இந்த பாகுபாட்டை நிச்சயம் உணர்ந்திருக்க வேண்டும் என்று நான் நினைத்ததால் அவற்றை அளிப்பது என முடிவெடுத்தேன். <BR/><BR/>குறைபாடுகள்:<BR/><BR/>Index: புத்தகத்தின் இறுதியில் அளித்திருக்கலாம். இதற்கு தேவையான மென்பொருள் என்னிடம் இல்லை. பதிப்பகத்தாரின் உதவியுடன் அடுத்த பதிவில் தர முயல்கிறேன்.<BR/><BR/>Telemarketing: இதற்கென தனி அத்தியாயம் வேண்டும் என்பது உண்மைதான். அடுத்த பதிவில் தருவதற்கு முயல்கிறேன்.<BR/><BR/>Preclosure: இதையும் விரிவாக கூறுவதற்கு ஒரு தனி அத்தியாயம் தேவை. சுருக்கமாக கூற வேண்டுமென்றால் இது வங்கிகள் கடைபிடிக்கும் Asset- Liability Management (ALM) Policyஐ பொறுத்து அமைந்திருக்கும் எனலாம். வங்கிகள் தங்களுடைய சேமிப்பு மற்றும் கடன் திட்டங்களுக்கு நிர்ணயிக்கும் வட்டி விகிதம் அதனதன் காலத்தைப் பொறுத்தும் வங்கியின் ALM கொள்கைக்கு ஏற்றவாறும் அமைந்திருக்கும். நீங்கள் மூன்று வருடங்கள் கழித்து கடனைத் திருப்பித் தருவதற்காகத்தான் இந்த வட்டி விகிதத்தை நாங்கள் நிர்ணயித்தோம். இப்போது திடீர் என்று முன்கூட்டியே கடனை திருப்பி செலுத்தினால் அந்த வட்டி இழப்பை மீண்டும் வேறொருவருக்கு கடன் வழங்கித்தானே ஈடுகட்ட வேண்டும்? அந்த இடைப்பட்ட காலத்தில் ஏற்படும் இழப்பை ஈடுகட்டத்தான் ஒரு சதவிகித அபராத வட்டி வசூலிக்கப்படுகிறது என்கின்றன வங்கிகள். <BR/><BR/>Interest on deposits: இதுவும் ஒரு ALM exerciseதான். வங்கிகள் எப்போதுமே நீண்ட கால சேமிப்பை விரும்புவதில்லை. இதற்கு முக்கிய காரணம் அன்றாடம் மாறி வரும் நாட்டின் பொருளாதார கொள்கைதான். நம்முடைய நாட்டின் பொருளாதரம் உலக சந்தையுடன் இணைக்கப்பட்டதிலிருந்து (இது ஒரு தாராள பொருளாதார கொள்கையின் விளைவு என்றும் கூறலாம்) உலக சந்தையில் ஏற்படும் மாற்றங்களுக்கு உள்ளாகிறது என்பதும் ஒரு காரணம். இன்றிலிருந்து மூன்று வருடங்களில் பணச் சந்தையில் என்னென்ன மாற்றங்கள் வரும் என்று முன்கூட்டியே கணிக்கவியலாத அளவிற்கு பொருளாதாரம் ஒரு நிச்சயமற்றதன்மையைக் கொண்டுள்ளது. ஆகவேதான் குறுகியக் கால சேமிப்புகளுக்கு அதிக வட்டியும் நீண்டகால சேமிப்புகளுக்கு குறைந்த வட்டியும் அளிக்கப்படுகின்றது. நீண்டகால கடன் திட்டங்களுக்கு குறைந்த வட்டி விகிதம் விதிக்கப்படுவதற்கு இதுவும் ஒரு காரணம். <BR/><BR/>கடன் பெற்றவர்களின் புகைப்படங்கள் வெளியிடுவது: இதில் எனக்கு அவ்வளவாக உடன்பாடில்லை. எங்களுடைய வங்கி ஒருபோதும் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டதில்லை. இதை சற்று கூர்ந்து கவனியுங்கள். நடுத்தர மக்களுடைய அதுவும் பெரும்பாலும் சிறு வணிகம் செய்வோர், குடியிருக்க வீடு வாங்க கடன் பெற்றவர்களுடைய புகைப்படங்களே வெளியிடப்படுகின்றன. நடுத்தர மற்றும் பெரு வணிகர்கள், தொழிலதிபர்களுடைய புகைப்படங்களை வெளியிடட்டும் பார்க்கலாம். <BR/><BR/>கடன் விழாக்கள்: எனக்கு இன்னும் முப்பது மாத காலம் பணிக்காலம் உள்ளதே:-)<BR/><BR/>மேலும் இத்தகைய சர்ச்சைக்குரிய கருத்துக்களை புத்தகமாக வெளியிடுவதற்கு எந்த பதிப்பகத்தாரும் முன்வர தயங்குவார்கள் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். ஒருவேளை எழுத்தாளரே அவருடைய சொந்த செலவில் புத்தகத்தை வெளியிட்டு அதனால் ஏற்படும் பின்விளைவுகளை சந்திக்க தயார் என்றால், இது சாத்தியமாகலாம். அந்த அளவுக்கு நெஞ்சுறுதி எனக்கு இல்லை.. பணவசதியைப் பற்றி கேட்கவே வேண்டாம்.<BR/><BR/>கடன்களை ரத்து செய்வதால் வங்கிகளுக்கு ஏற்படும் இழப்பைப் பற்றி அறியாதவர்களா நம் தலைவர்கள்? அதுதான் இன்றைய நிர்பந்தம். ஆகவேதான் இதை அரசியல் என்று கூறி தள்ளிவிடுகிறோம்.<BR/><BR/>இந்த நீண்ட விளக்கத்தை பின்னூட்டமாக இடுவது சிரமம் என்பதால்தான் தனிப்பதிவாக வெளியிட முன்வந்தேன் டூண்டுக்கு பயந்து அல்ல:-)<BR/>மீண்டும் மதிப்புரை எழுதிய சீனியர் ராகவன் அவர்களுக்கு நன்றி. <BR/>அன்புடன்,<BR/>டிபிஆர். ஜோசஃப்<BR/><BR/>அதற்கான எனது எதிர்வினைகள் பின்வருமாறு:<BR/><BR/>//ஆகவேதான் குறுகியக் கால சேமிப்புகளுக்கு அதிக வட்டியும் நீண்டகால சேமிப்புகளுக்கு குறைந்த வட்டியும் அளிக்கப்படுகின்றது.//<BR/>அதற்கு பேசாமல் இத்தனை ஆண்டுகளுக்கு மேல் டிபாசிட் ஏற்பதற்கு இல்லை என்றே விகிதங்களை போட்டு விடலாமே. நான் இதைக் கூறுவதற்கு ஒரு காரணம் உள்ளது. ஒருவர் யதார்த்தமாக 5 ஆண்டுகள் என பழைய ஞாபகத்தில் கடன் புதுப்பித்தலுக்கான படிவத்தில் குறிப்பிட, பேங்கும் அப்படியே ஏற்றுக் கொண்டு குறைந்த வட்டிக்கு போட்டு விட்டது. அவ்வாறு செய்யாது இந்த சூட்சுமத்தை விளக்குவது மேலாளரின் தார்மீகக் கடமையில்லையா? மேலும் எதற்கு இந்த சனியன் பிடித்த குறைந்த வட்டி காலங்களை அனுமதிக்க வேண்டும்? ஏமாறுபவர் ஏமாறட்டும் என்று விட்டு விடுவதைப் போல அல்லவா இது உள்ளது?<BR/><BR/>//என்னுடைய வங்கியின் பயிற்சிக் கல்லூரியில் முதல்வராக இருந்த காலத்தில் இத்தகைய வழிமுறைகளை விரிவாக பாடமாக எடுத்த பயிற்சி இந்த புத்தகத்தை எழுத மிகவும் உதவியது என்றால் மிகையாகாது. ஆனால் அப்போதும், 'போரடிக்குது சார்.' என்று முணுமுணுத்தவர்களும் இருக்கத்தான் செய்தார்கள். இப்போதும் இப்புத்தகத்தை படிக்கும் சில வாசகர்களுக்கு இப்படி தோன்றலாம்.//<BR/>எனக்கு நிச்சயம் போரடிக்கவில்லை. நான் ஏற்கனவே உங்கள் திரும்பிப் பார்க்கிறேன் பதிவில் வேறு கோணத்திலிருந்து பார்த்தவன் என்பதால் போர் அடிக்கவில்லை என்பது நிஜம்.<BR/><BR/>//நீங்கள் மூன்று வருடங்கள் கழித்து கடனைத் திருப்பித் தருவதற்காகத்தான் இந்த வட்டி விகிதத்தை நாங்கள் நிர்ணயித்தோம். இப்போது திடீர் என்று முன்கூட்டியே கடனை திருப்பி செலுத்தினால் அந்த வட்டி இழப்பை மீண்டும் வேறொருவருக்கு கடன் வழங்கித்தானே ஈடுகட்ட வேண்டும்? அந்த இடைப்பட்ட காலத்தில் ஏற்படும் இழப்பை ஈடுகட்டத்தான் ஒரு சதவிகித அபராத வட்டி வசூலிக்கப்படுகிறது என்கின்றன வங்கிகள்//<BR/><BR/>இது போங்குத்தனமான வாதமாகத்தான் படுகிறது. அரசு வங்கிகள் preclosure-ஐ அனுமதிக்கும் போது தனியார் வங்கிகளுக்கு ஏன் இந்த வேலை? வாடிக்கையாளர் கடனிலேயே இருக்க வேண்டும் என விரும்புவது போல இல்லை?<BR/><BR/>மற்றப்படி நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு நிறுவனத்தால் பண்டிகை கடன்களைப் பற்றி குறிப்பிட்டிருந்தேனே? தொகை அல்பமானதாக இருக்கலாம், ஆனால் விதி முறைகள் கேலிக் கூத்தாக உள்ளன. <BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-47009622894112252112007-07-08T19:10:00.000+05:302007-07-08T19:10:00.000+05:30-ஜோசஃப் சார் எனது அருமை நண்பர் என்பது உண்மையே. -ஜோ...-ஜோசஃப் சார் எனது அருமை நண்பர் என்பது உண்மையே. -<BR/><BR/>ஜோசப் மட்டுமல்ல விடாது கருப்பைக்கூட நீங்கள் அருமை நண்பராகத்தான் நினைக்கிறீர்கள். <BR/><BR/>ஆனால், ஜோசப் உங்களை அப்படி நினைக்கிறாரா என்பது ...... ஹி ஹி ஹிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-55916931156271027692007-07-05T11:40:00.000+05:302007-07-05T11:40:00.000+05:30சமயம் கிடைத்தால் வாங்கிப் படிக்கிறேன் சார்.சமயம் கிடைத்தால் வாங்கிப் படிக்கிறேன் சார்.Madhu Ramanujamhttps://www.blogger.com/profile/13589844732775016131noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-42519255142656890742007-07-02T16:25:00.000+05:302007-07-02T16:25:00.000+05:30ஜோசப் சாருக்கு வாழ்த்துக்கள்.பத்ரிக்கும் வாழ்த்துக...ஜோசப் சாருக்கு வாழ்த்துக்கள்.பத்ரிக்கும் வாழ்த்துக்கள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-13840987253772771412007-07-02T16:23:00.000+05:302007-07-02T16:23:00.000+05:30http://tvpravi.blogspot.com/2007/07/blog-post_02.h...http://tvpravi.blogspot.com/2007/07/blog-post_02.html<BR/><BR/>Senthazal Ravi Rocks :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-21782068863195519012007-07-02T16:22:00.000+05:302007-07-02T16:22:00.000+05:30Very good review Mr Dondu.continue your service to...Very good review Mr Dondu.<BR/>continue your service to tamil blog world .Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-18590533128993023522007-07-02T16:07:00.000+05:302007-07-02T16:07:00.000+05:30கடைசியாக வந்த நாட்டாமை பின்னூட்டம் போலியானது.கடைசியாக வந்த நாட்டாமை பின்னூட்டம் போலியானது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-43580877578142121282007-07-02T15:57:00.000+05:302007-07-02T15:57:00.000+05:30"நாட்டாமை said... மதிப்புரையாக பத்திரிக்கையில் வெள..."நாட்டாமை said... <BR/>மதிப்புரையாக பத்திரிக்கையில் வெளியிடும் அளவுக்கு சிறப்பான விமர்சனம் அளித்துள்ளீர்கள் டோண்டு அவர்களே"<BR/><BR/>இது நீங்களே போட்டுக்கொண்ட பின்னூட்டமா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-19703881516687094672007-07-02T15:55:00.000+05:302007-07-02T15:55:00.000+05:30//எவன் திட்டுவான் என்கிறீர்கள்? எதற்கு?//vera yaru...//எவன் திட்டுவான் என்கிறீர்கள்? எதற்கு?//<BR/><BR/>vera yaru thittuvanga? ungaloda malaysian pangali dhaanAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-58531117979795655642007-07-02T15:36:00.000+05:302007-07-02T15:36:00.000+05:30கார் வாங்க வேண்டாம், தேவையில்லா கடன் வேண்டாம் என்ப...கார் வாங்க வேண்டாம், தேவையில்லா கடன் வேண்டாம் என்பதுக்கெல்லாம் பதிவுகள் போட்டு வரும் உங்களுக்கு, "சந்தோஷமா கடன் வாங்குங்க"ங்கற புத்தகத்தை எப்படி புகழ மனசு வந்தது? நண்பரோட புத்தகங்கறதுதான் அதுக்கு காரணமா?<BR/>ஷம்சுத்தீன்<BR/><BR/>ஜோசஃப் சார் எனது அருமை நண்பர் என்பது உண்மையே. அது அவருடைய புத்தகத்தை பார்த்ததுமே வாங்க வைத்ததின் முக்கியக் காரணங்களில் ஒன்று. ஏற்கனவே ஜோசஃப் சாரின் எழுத்து எனக்கு பரிச்சயம், ஆகவே அதுவும் இன்னொரு காரணம். மற்றப்படி, அவர் புத்தகத்தை புகழக் காரணம் அப்புத்தகம் நிஜமாகவே அருமையானதாக இருப்பதுதான்.<BR/>_________________________________<BR/><BR/>//குறை கண்டுபிடிக்கணும்னே கடைசீல பட்டியல் போட்டாப்புல இருக்கு?//<BR/>கேட்பதற்கு தமாஷா இருக்கு.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-12738691031859072972007-07-02T15:26:00.000+05:302007-07-02T15:26:00.000+05:30//idhu ippo romba mukkiyamo. badriyaiyum avan asin...//idhu ippo romba mukkiyamo. badriyaiyum avan asinga asingamaa thittanumaa?//<BR/><BR/>எவன் திட்டுவான் என்கிறீர்கள்? எதற்கு?<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-15175282937942018262007-07-02T15:21:00.000+05:302007-07-02T15:21:00.000+05:30//இப்போதுதான் பத்ரி அவர்களிடம் பேசி சிறந்த தயாரிபு...//இப்போதுதான் பத்ரி அவர்களிடம் பேசி சிறந்த தயாரிபுக்கான பாராட்டை தெரிவித்தேன்.//<BR/><BR/>idhu ippo romba mukkiyamo. badriyaiyum avan asinga asingamaa thittanumaa?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-90793415591830298552007-07-02T13:35:00.000+05:302007-07-02T13:35:00.000+05:30athellam TBR bank-la kodukkathathunala avar aarvam...<--- இப்போதெல்லாம் டெலிமார்கெட்டிங்கில் போன் போட்டு கடன் வாங்குமாறு தொந்திரவு செய்கிறார்கள். ஆனால் அவர்களிடம் மாட்டிக் கொண்டால் கந்து வட்டியையே நாணச் செய்யும் அளவுக்கு செயல்பாடுகள் உள்ளன. அவற்றையெல்லாம் குறிப்பிட்டு வாசகர்களை உஷார்படுத்தியிருக்கலாம் என எனக்கு படுகிறது ---><BR/><BR/>athellam TBR bank-la kodukkathathunala avar aarvam kaattamal irunthirukkalam.சாமான்யன் Siva(stocksiva.blogspot.com)https://www.blogger.com/profile/08877847954128133090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-16299762874716731872007-07-01T09:11:00.000+05:302007-07-01T09:11:00.000+05:30Dear Raghavan Sir,Since I had to leave the City on...Dear Raghavan Sir,<BR/><BR/>Since I had to leave the City on an urgent work on Friday evening I could not read your post till you called me yesterday.<BR/><BR/>I'll post my reply to some of your queriers on my return. Thanks for your review.<BR/><BR/>Regards,<BR/>tbrjosephடிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-58280343489028622832007-07-01T07:00:00.000+05:302007-07-01T07:00:00.000+05:30குறை கண்டுபிடிக்கணும்னே கடைசீல பட்டியல் போட்டாப்பு...குறை கண்டுபிடிக்கணும்னே கடைசீல பட்டியல் போட்டாப்புல இருக்கு?<BR/><BR/>திருவொத்தியூர் திருவள்ளுவன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-70171610835019331132007-07-01T06:57:00.000+05:302007-07-01T06:57:00.000+05:30கார் வாங்க வேண்டாம், தேவையில்லா கடன் வேண்டாம் என்ப...கார் வாங்க வேண்டாம், தேவையில்லா கடன் வேண்டாம் என்பதுக்கெல்லாம் பதிவுகள் போட்டு வரும் உங்களுக்கு, "சந்தோஷமா கடன் வாங்குங்க"ங்கற புத்தகத்தை எப்படி புகழ மனசு வந்தது? நண்பரோட புத்தகங்கறதுதான் அதுக்கு காரணமா?<BR/><BR/>ஷம்சுத்தீன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-76866237645767258572007-06-30T13:48:00.000+05:302007-06-30T13:48:00.000+05:30ஜோசப் சாருக்கு வாழ்த்துக்கள்.பத்ரிக்கும் வாழ்த்துக...ஜோசப் சாருக்கு வாழ்த்துக்கள்.பத்ரிக்கும் வாழ்த்துக்கள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-4130974960243817822007-06-30T13:43:00.000+05:302007-06-30T13:43:00.000+05:30நன்றி நாட்டாமை அவர்களே. புத்தகம் மிக அழகாக உருவாக்...நன்றி நாட்டாமை அவர்களே. புத்தகம் மிக அழகாக உருவாக்கப்பட்டுள்ளது. கிழக்கு பதிப்பகத்துக்கும் பாராட்டுகள். அதை மதிப்புரையில் கூற மறந்து விட்டேன். <BR/><BR/>இப்போதுதான் பத்ரி அவர்களிடம் பேசி சிறந்த தயாரிபுக்கான பாராட்டை தெரிவித்தேன்.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.com