நிரந்தர பக்கங்கள்

2/27/2008

இதெல்லாம் ஒரு பிழைப்பா கோவி கண்ணன்?

இன்று அதிகாலையில் எழுந்து இணைய இணைப்பை போட்டபோது தில்லா என்ற பெயரில் ஒரு பதிவர் போட்ட பின்னூட்டத்தைப் பார்த்தேன். அது இதோ:
தில்லா has left a new comment on your post "துக்ளக் 38-ஆம் ஆண்டுவிழா கூட்டத்தின் வீடியோக்கள் வ...":
காலம்
எந்த விதியும் இதற்குள் அடக்கம், விதிகள் காலத்தால் மாறும் !
இத்தனை நாளு டோண்டு ராகவனை திட்டி அசிங்கமா ஆபாசமா பதிவு போட்டுவிட்டு அப்படியே சைக்கிள் கேப்பில ஏரோப்பிளேன் சீ சீ
இதுக்கு பொறுமையா நிதானமா நாட்டுகிட்டு செத்துட்டு போவலாம்.
காலம்
எந்த விதியும் இதற்குள் அடக்கம், விதிகள் காலத்தால் மாறும் !
இது கருத்து கந்தசாமி அய்யா பதிவில் போட்ட பின்னோட்டம் கண்டிப்பா வராது நீங்க இந்த பிண்ணோட்டதை தடையில்லாமல் வெளியிடவும்.
Publish this comment.
Reject this comment.
Moderate comments for this blog
இந்தப் பின்னூட்டத்தை நான் நிராகரித்தேன், காரணம் அது அந்தப் பதிவுக்கு சம்பந்தமில்லாதது. அதன் பிறகுதான் தமிழ்மணம் சென்றேன். உங்கள் உளறல் பதிவைப் பார்த்தேன். அபோதுதான் அந்தப் பின்னூட்டத்தின் நோக்கம் புரிந்தது.

கருத்து கந்தசாமியாக இருந்து நீங்கள் செயல்பட்டதை பற்றி இம்மாதிரி உங்கள் பழைய தோழர்கள் உங்களை கும்முவதை பார்த்து எனக்கே சற்று பரிதாபமாகத்தான் இருந்தது, ஆனால் இப்போது அப்பரிதாபம் சுத்தமாக மறைந்து விட்டது. உங்களை விடுவதாக இல்லை. அதற்கு முன்னால் நீங்கள் செந்தழல் ரவி பற்றி எழுதிய விஷயங்களை டீல் செய்து விட்டு வருகிறேன்.

"நீங்கள் தான் போலியைக் கண்டுபிடிக்கச் செந்தழல் ரவி என்பவரிடம் சொன்னதாகவும், அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்று சொல்லி, எனது மகளைப் பற்றி ஆபாசாமாக எழுதினாலும் கண்டு கொள்ள மாட்டேன் என்று சொல்லி இருந்தீர்களா"?
கண்டிப்பாக இல்லை. செந்தழல் ரவி அவ்வப்போது தான் போலியை கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளைப் பற்றி என்னிடம் கூறி வந்தது உண்மைதான். ஆனால் தான் அதற்காக என்னென்ன எழுதுவார் என்றெல்லாம் என்னிடம் கூறவில்லை. நானும் கேட்கவில்லை. இப்போது கூட அவர் என் மகளைப் பற்றி ஆபாசமாக எழுதினார் என்பதை நம்பவில்லை. என் மகளைப் பற்றி வந்ததெல்லாம் மூர்த்தியின் கைங்கர்யமே. அவனது எழுத்து நடை எனக்கு தெரியும். செந்தழல் ரவியை பற்றி மூர்த்தி எழுதியதெல்லாம் தன் மேல் உள்ள குற்றச்சாட்டுகளை சற்றே அவர் மேலும் போடுவதற்கே. நான் இதற்கு இடம் தரவில்லை. எனது பதிவுகளில் பாருங்கள் புரியும். உதாரணத்துக்கு ஷ்டாஸி பற்றிய பதிவு. அதிலிருந்து இங்கு ஒரு பகுதியை நகலெடுத்து ஒட்டுகிறேன்.
"ஷ்டாஸிதான் இப்பதிவுக்கான விஷயம். அதிலும் முக்கியமாக அதன் ஆவணங்களில் வெளியான பல ரகசியங்கள். இவ்வமைப்பு ஒரு பெரிய தகவல் மையத்தையே தன்னுள் வைத்துக் கொண்டிருந்திருக்கிறது. அதற்கு செய்தி அளித்தவர்கள் நாட்டின் குடிமக்களில் கணிசமான பகுதியினர். பெற்றோரைப் பற்றி பிள்ளைகள் தத்தம் வீடுகளில் பெற்றோர் எந்த டிவி சானலை பார்க்கின்றனர், என்னென்ன ரேடியோ நிகழ்ச்சிகள் கேட்கின்றனர். வீட்டில் தங்களுக்குள் என்ன பேசிக் கொள்கின்றனர், இத்யாதி, இத்யாதி என்றெல்லாம் கூறினர். அதே போல பக்கத்து வீட்டு மாமா, எதிர்வீட்டு சித்தப்பா என்ன செய்தார் என்பதும் கூறப்பட்டன. நண்பன் மேற்கு ஜெர்மனி பேப்பர்களுக்கு தனது பின்னூட்டத்தை மாற்றுப் பெயரில் கடிதங்களாகப் போட்டதும் இந்த உளவு விஷயங்களிலிருந்து தப்பவில்லை. வெளிநாட்டுகாரர்கள் கிழக்கு ஜெர்மனிக்காக உளவு செய்ததும் வெளிவந்தன.

சோவியத் யூனியன் மறைந்து கே.ஜி.பி. கலைக்கப்பட்ட போது கூட கேரள கம்யூனிஸ்டு தலைவர்கள் சோவியத் யூனியனிடமிருந்து பணம் பெற்றதும் வெளியில் வந்ததையும், அதை அக்காலக் கட்டங்களில் ஹிந்துஸ்தான் டைம்ஸில் படித்ததையும் இங்கு போகிறபோக்கில் குறிப்பிட்டு விட்டுப் போகிறேன்.

இப்பதிவின் முக்கியக் கருப்பொருளுக்கு வருகிறேன். ஷ்டாஸி ரகசியங்கள் வெளியானதும் பல குடும்பங்கள், நண்பர்கள் வட்டாரங்களில் பூகம்பங்கள் ஏற்பட்டன. யாரைத்தான் நம்புவதோ எனத்துவண்டான் ஒருவன், அவன் பெயரும் இன்னொரு ஷ்டாஸி ஆவணத்திலிருந்து வெளிவரும் வரை. பிறகு அசடு வழிந்தான். ஓரளவுக்கு மேல் எதுவும் பழகிப் போகும், ஊரே சிரித்தால் கல்யாணம் என்ற கோட்பாட்டில் மறப்போம் (ரொம்ப கஷ்டம்) மன்னிப்போம் (சற்றே சுலபம்) என மனதைத் தேற்றிக் கொண்டனர். அதுதான் முக்கியம். வேவு பார்த்தது என்னவோ உண்மைதான், கண்டனத்துக்குரியதுதான். ஆனால் முக்கிய எதிரி ஸ்டாஸிதான், அதுவும் அதை உருவாக்கிய கிழக்கு ஜெர்மன் அரசும் ஒழிந்தன என்பதே முக்கியம் என்பதை மக்கள் நல்ல வேளையாக நினைவில் வைத்துக் கொண்டனர். ஆகவே பைத்தியமாகாமல் பலர் தப்பித்தனர். வாழ்க்கை தொடர்ந்தது. பொருளாதார சிக்கல்களை சமாளிக்கவே நேரம் இல்லாத போது இதையெல்லாம் எவ்வளவு நேரத்துக்குத்தான் பார்த்து கொண்டிருப்பது"?

மறுபடியும் கூறுகிறேன், செந்தழல் ரவி என் மகளைப் பற்றி அசிங்கமாக எழுதவில்லை. அப்படியே அவர் எழுதினார் என நிரூபணமானாலும் அவரை மன்னிக்கிறேன். ஹாரி பாட்டர் கதைகளில் வரும் ஸ்னேப் போல அவர் செயல்பட்டார். அதற்கு மிகுந்த மனவுறுதி வேண்டும். அது அவரிடம் இருந்தது. அவ்வளவுதான் விஷயம்.

மேலும், லட்சக்கணக்கில் ராம நாமம் எழுதும் ராமபக்தையான என் மகளை யாரும் எதுவும் செய்து விடமுடியாது. அதே சமயம் என் மனைவியை அவரது இஷ்ட தெய்வம் லட்சுமி நரசிம்ம ஸ்வாமி காப்பாறுவார். ஆகவே ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதையாக நீங்கள் கவலை கொள்வதை விட்டொழியுங்கள். அவ்வாறெல்லாம் அசிங்கமாக எழுதிய மூர்த்திக்கு இன்னும் வக்காலத்து வாங்குவது குறித்து வெட்கி முக்காடு போட்டு கொள்ளுங்கள்.

இத்தருணத்தில் இன்னொன்றையும் கூற ஆசைபடுகிறேன். ஷ்டாஸி பதிவு செந்தழல் ரவிக்கு மட்டுமல்ல. மூர்த்தியால் ப்ளாக்மெயில் செய்யப்பட்டு அவனுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்த மற்றவருக்கும் அதன் மூலம் வாய்ப்பு தந்தேன். முக்கியமாக லக்கிலுக்குக்கு. எனக்கு வேண்டியதெல்லாம் போலி டோண்டுவாக செயல்பட்ட மூர்த்தியை வெளிப்படுத்தி காறி உமிழ்ந்து வெளியில் குப்பைத் தொட்டியில் தூக்கிப் போடுவதே. அது நடந்து விட்டது. அது போதும் எனக்கு.

//அனானியாக இந்த கேள்வியை பின்னூட்டத்தில் கேட்காமல் ஒரு பதிவாக உங்கள் கேள்வியை கேட்டதற்கு பாராட்டுகள், இருப்பினும் சபை கருதி சில கடின வார்த்தைகளை தவிர்த்திருக்கலாம் .//
வால்பையன் அவர்களே, சபை நாகரிகம் எல்லாம் கோவி கண்ணன் அகராதியில் கிடையாது. அவர் இன்னும் மோசமாக எழுதுவார். அவரது தரம் அவ்வளவுதான்.

இப்போது உங்களிடம் வருகிறேன். உங்களால் உங்கள் உருவத்தை கண்ணாடியில் பார்க்க முடிகிறதா? வெட்கமாக இல்லை? இல்லை என்றால் அதற்காக ஆச்சரியமும் படமாட்டேன் என்றும் கூறத்தான் வேண்டியுள்ளது.

துக்ளக் மீட்டிங்கில் எஸ்.கே. அவர்களை சந்தித்ததைப் பற்றி அப்பதிவின் ஆரம்பத்திலேயே கூறியிருந்தேன்.
//சற்றே தமிழ்மணம் விஷயங்கள் பேசினோம்.//
அதாவது முக்கியமாக உங்களைப் பற்றித்தான். விடாது கருப்புதான் மூர்த்தி என்பது உங்களுக்கு ஏற்கனவே தெரியும் என்றும் அந்த விஷயத்தில்தான் உங்களுடன் அவருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது என்றும் என்பதை அவர் வருத்தத்துடன் கூறினார். எனக்கு அது புதிய விஷயம் இல்லையாதலால் வியப்பை வெளிப்படுத்தவில்லை. தேவையில்லாமல் இதை எழுத வேண்டாமே என்று அப்பதிவில் குறிப்பிடாது விட்டேன். இப்போது அதை எழுதும் தருணம் வந்ததாலேயே எழுதுகிறேன்.

வெறுமனே முரளி மனோஹர் என்ற ஒரு புனைப்பெயரில் நான் எழுதியதற்கே இவ்வளவு தார்மீகக் கோபம் காட்டி எழுதி, கேலி செய்த நீங்கள் கருப்பு விஷயத்தில் இன்னும் மூர்த்திக்கே வக்காலத்து வாங்கி, அவன்தான் போலியா என்று இன்னும் சந்தேகம் கிளப்புவதன் காரணம் ஒன்று மட்டும்தான். அதுதான் உங்களது பார்ப்பன வெறுப்பு.

Let us call a spade a spade.

பார்ப்பன நண்பர்கள் உங்களுக்கு இருப்பதாக கூறிக்கொண்டாலும் உங்கள் வெறுப்பினால் அவர்களை போலியிடம் போட்டு கொடுத்ததைப் பற்றியும் படித்தேன். முக்கியமாக எஸ்கே அவர்களைத்தான் இங்கு குறிப்பிடுகிறேன். எப்படி அதற்கு மனம் வந்தது கோவி கண்ணன்?

திருந்துங்கள் கோவி கண்ணன். காலம் உங்களை மன்னிக்கட்டும். இதை நான் உங்களுக்கு பின்னூட்டமாக போடாததற்கு இரண்டு காரனங்கள் உண்டு. ஒன்று நீங்கள் இதை மறைப்பீர்கள். ஏற்கனவே எனக்கு பலமுறை செய்ததுதான். இன்னொன்று எனக்கு இப்போது உங்கள் பதிவில் வந்து அதை இட விருப்பம் இல்லை.

டோண்டு ராகவன்

31 comments:

  1. பார்ப்பன நண்பர்கள் உங்களுக்கு இருப்பதாக கூறிக்கொண்டாலும் உங்கள் வெறுப்பினால் அவர்களை போலியிடம் போட்டு கொடுத்ததைப் பற்றியும் படித்தேன். முக்கியமாக எஸ்கே அவர்களைத்தான் இங்கு குறிப்பிடுகிறேன். எப்படி அதற்கு மனம் வந்தது கோவி கண்ணன்
    எனக்கு இதில் ஆதியும் தெரியாது அந்தமும் தெரியாது , இருந்தாலும் கடைசி பத்திக்கு முந்திய பத்தியில் சொல்லிய மாதிரி இல்லை கோவியார் - எனக்கு தெரிந்தவரை

    எங்கோ குழப்பம்.

    ReplyDelete
  2. இதில் என்ன குழப்பம் வடுவூர் குமார் அவர்களே? போலி டோண்டுவை இகழ்ந்து எழுதியவர்களில் பலரும் ஒரு கட்டத்தில் அவனது பார்ப்பன எதிர்ப்புக்காகவே அவனை ஆதரித்ததாகக் கோடி காட்டினரே. அப்படியெல்லாம் இல்லை, எல்லா சாதியினரையும் வர்ஜாவர்ஜமில்லாமல் திட்டுவான் என்பதை அறிந்ததும் அவர்கள் எதிர்ப்புக்கு காரணம் என்பதையும் அவர்கள் மறைமுகமாகக் கூறியிருந்தனர்.

    மறுபடியும் சொல்ல வேண்டியுள்ளது.

    Let us call a spade a spade.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  3. //துக்ளக் மீட்டிங்கில் எஸ்.கே. அவர்களை சந்தித்ததைப் பற்றி அப்பதிவின் ஆரம்பத்திலேயே கூறியிருந்தேன்.
    //சற்றே தமிழ்மணம் விஷயங்கள் பேசினோம்.//
    அதாவது முக்கியமாக உங்களைப் பற்றித்தான். விடாது கருப்புதான் மூர்த்தி என்பது உங்களுக்கு ஏற்கனவே தெரியும் என்றும் அந்த விஷயத்தில்தான் உங்களுடன் அவருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது என்றும் என்பதை அவர் வருத்தத்துடன் கூறினார். எனக்கு அது புதிய விஷயம் இல்லையாதலால் வியப்பை வெளிப்படுத்தவில்லை//

    வணக்கம் திரு. டோண்டு .
    தங்களது இந்த வரிகள் எனக்கு அதிர்ச்சி அளித்தது.
    நான் தங்களை திரு. சோ மீட்டிங்கில் சந்தித்ததையோ, விடாது கருப்பு, மூர்த்தி, கோவி. கண்ணன் இவர்களைப் பற்றிய பேச்சு வந்ததோ இல்லையென நான் சொல்லவில்லை.
    ஆனால், வி.க. தான் மூர்த்தி என நான் தெரிந்து கொண்டதாகவும், அதுதான் எனக்கும் கோவி. கண்ணனுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டுக்குக் காரணம் என சொல்லியிருப்பதை மனசாட்சியுடன் மறுக்கிறேன்.

    இது பற்றிய அவரது கருத்துக்கும், இந்த விஷயத்தில் கோவி.கண்ணனுடைய நிலைப்பாடுக்கும் இடையேஇருந்த அவரது அணுகுமுறையே எங்கள் இருவரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டுக்குக் காரணம்.

    அதை விவரித்துக் கூற இங்கே நான் விரும்பவில்லை.

    எனக்கு மூர்த்தி என்பவரைப் பற்றி எதுவும் எப்போதும் தெரியாது.
    வி. க. என்ற ஒருவர் ஒருமுறை நான் சிங்கையில் இருந்த போது என்னைப் பார்க்க விரும்பினார் ஆனால் வரவில்லை.அவ்வளவுதான் இதில் எனக்குள்ள ஈடுபாடு.

    நீங்களும் நானும் அந்த மீட்டிங்கில் சந்தித்ததே ஒரு தற்செயலான நிகழ்வு என்பதையும் இப்போது குறிப்பிட விரும்புகிறேன்.

    இதில் எனக்கு வேறு எந்த ஈடுபாடும் இல்லை.
    என்னை இதில் இழுக்கவும் வேண்டாம்.
    தங்கள் புரிதலுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  4. எஸ்கே அவர்களே,

    நாம் சந்தித்தது தற்செயலாகவே நடந்தது. அதில் ஒன்றும் சந்தேகம் இல்லைதான். மற்றப்படி உங்கள் சங்கடத்தைப் புரிந்து கொள்கிறேன். அதிலும் துக்ளக் பதிவுக்கு நீங்கள் எதுவும் பின்னூட்டம் இடாததையும் இங்கு சேர்த்து பார்க்கிறேன்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  5. கண்டிப்பாக உங்கள் குடும்பத்தினரை பற்றி நான் எழுதவில்லை என்ற உங்களது நம்பிக்கைக்கு நன்றி...

    எழுதினேன் என்றால் எங்கே / என்ன எழுதினேன் என்பதை கோவி.கண்ணன் சொல்லட்டும்...

    இனிமேலும் நல்லவராக நடிக்க முயல்வது கோவி.கண்ணனுக்கு அழகல்ல...

    பேசாமல் உண்மையை ஒத்துக்கொண்டு போய்விடலாம்...

    கோவி.கண்ணன் உருவாக்கிய சட்னிவடை பதிவில் இருப்பதை விட அது கேவலமானது அல்ல...

    ReplyDelete
  6. Oh No Not Again, I am bored of this Poli Issue. Dondu Sir, Please Write something interesting as usual. Leave alone this psycho murthi.

    ReplyDelete
  7. போலியுடன் மின்னஞ்சல் மூலம் தொடர்பில் இருந்தேன் என்று சொல்ல வந்தேனே ஒழிய, போலிப்பதிவான டூண்டு பதிவை திறந்து அதில் எழுதினேன் என்று எப்போதும் சொல்லவில்லை...

    அப்படி ஒரு வாய்ப்பு கோவி.கண்ணன் போல எனக்கு கிடைத்திருந்தால் எல்லா பதிவையும் அழித்து தள்ளியிருப்பேன்...(ஏன் என்னுடைய குடும்பம் பற்றிக்கூடத்தான் டூண்டு பதிவில் வந்தது ?? )

    ஆனால் கோவி.கண்ணன் - என்னமோ நான் தான் போலி தளத்தையே நடத்தி வந்ததாகவும் அதில் நான் கண்ணாபின்னாவென எழுத டோண்டு பர்மிஷன் கொடுத்ததாகவும் உளறிக்கொட்டி திசை திருப்பல் வேலை செய்ய முயல்கிறார்...

    போலிப்பதிவின் பாஸ்வேர்டை ப்ரூட்போர்ஸ் மூலம் நான் கண்டுபிடிக்க முயன்றது முத்து தமிழினி உட்பட அனைவருக்கும் தெரியும்...விசாரித்துக்கொள்ளலாம்...

    கோவிக்கண்ணனால் தன்னால் இனியும் வேடம் போட முடியும் என்று நம்புவது நகைப்புக்குரியது :)))

    ReplyDelete
  8. டோண்டு சார் உலகத்தில் இந்த கோவி கண்ணன் தான் மட்டுமே ஒரே ஒரு உத்தமன் போல நடித்த நடிப்பை அனைத்தையும் தோல் உறித்தற்க்கு நன்றி

    வடுவூர் குமார் என்ன குழப்பம்? போலி டோண்டு உங்களை பல முறை இகழ்ந்து எழுதிய போது தனிபட்ட தகவல்களை சொன்னானே மறந்து விட்டதா?

    ReplyDelete
  9. அடிச்சு ஆடுங்க :!!!!!!!

    ReplyDelete
  10. தேவை இல்லாமல் உங்களை வம்புக்கு இழுந்த கோவியாருக்கு உங்கள் பதிவு சம்ம சாட்டையடி.

    ReplyDelete
  11. கேடி இன்னொரு பதிவு போட்டு இருக்குது, இவர் ரொம்ப நல்லவர் தான் என்று எண்ணும் அளவில் அது இருக்குது ஹா ஹா ஹா ஹா

    ReplyDelete
  12. மூர்த்தியிடம் முழுமையான தொடர்புள்ள கோவி.கண்ணன் அதனை தனது பதிவில் ஒத்துக்கொண்டுள்ளார்.

    ////மூர்த்தி போலி டோண்டு என்று நான் தெரிந்தே பழகியதாக எங்கேயும் எவரிடமும் ஆதாரம் கிடையாது.////

    இந்த அளவுக்கு சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்ள யாராலும் முடியாது..

    கோவிகண்ணன் சொல்லும் இந்த மேட்டர் பொய். மூர்த்தி எப்போதும் தான் போலி டோண்டு என்று சொல்லிக்கொண்டு யாரிடமும் பழகியதில்லை என்பதால் தைரியமாக இந்த மேட்டரை எடுத்துவிடுகிறார்.

    அவரிடம் நேரடியாக இந்த பதிவின் மூலம் (அல்லது தனி பதிவின் மூலம்) கேளுங்கள்.

    போலி டோண்டுடன் அவர் பழகியதற்கான ஆதாரத்தை வெளியிட்டால் அவர் என்ன பதில் தருவார் ? வலைப்பதிவினை விட்டு ஓடுவாரா ? அல்லது வாழை மரத்தில் தூக்கு போட்டுக்கொள்வாரா ?

    விடாது கருப்பு தான் மூர்த்தி என்று தெரியுமாம். அமுக தளத்தின் பாஸ்வேர்டு இவரிடம் தான் இருந்ததாம். ஆனால் போலி டோண்டுவுக்கும் இந்த தளங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று நினைத்துகொண்டிருந்தாராம்.

    வலைப்பதிவர்கள் என்ன வாயில் விரல் வைத்து சப்பிக்கொண்டிருக்கிறார்களா, இன்னும் இவரை நம்ப ?

    ராஜாவனஜ், வீயெஸ்கே போன்றவர்களை - வாருங்கள் விடாது கருப்புவை சந்திக்கலாம் என்று மூர்த்தியை அறிமுகம் செய்துவைத்தவர் இந்த கோவியார்.

    பொட்டீக்கடை சிங்கப்பூர் சென்றபோது கோவியாரின் அழைப்பை மறுத்துவிட்டார்.

    போலி டோண்டுவாக இயங்கிய மூர்த்தி, சட்னிவடை, ஆதிசேஷன், இன்றைக்கும் தமிழ்மணத்தில் இயங்கும் வஞ்சூர், ரத்னேஷ் போன்ற பதிவுகள் எழுதியபோது அதனை பிரபலப்படுத்த தன்னுடைய தளத்தில் இருந்து தொடுப்பு கொடுப்பது, தன்னுடைய நன்பர்களுக்கு மடல் அனுப்புவது என்று செய்தவர் கோவியார்.

    இந்த பொழப்புக்கு, பிச்சையெடுக்கலாம். தூ.

    ReplyDelete
  13. ஆட்டம் இனிதான் ஆரம்பம்.
    தப்பு செய்தவர்கள் ஓட்டம் தொடங்கட்டும்
    பதிவர்கள் ஜாதி ஒற்றுமையில் நாட்டம் கொள்ளட்டும்
    பார்ப்பானை மட்டும் பழிப்பதை தவிர்க்கட்டும்
    மனிதனாய் வாழ திட்டம் தொடங்கட்டும்

    ReplyDelete
  14. een intha dondu saru romba uthamara? avaru mattum thamizaiyum thiravidaraiyum thittavillaiyaa? poliyal than
    thaakkappattathu pola pesum dondu avargalin leelaigal? yaar ketpathu?

    komanan (madippakkam)

    ReplyDelete
  15. //அல்லது வாழை மரத்தில் தூக்கு போட்டுக்கொள்வாரா ?//

    அதென்ன சார் வாழை மரத்தில் தூக்கு போட்டுகொள்வது ?
    வாழை மரம் இதுக்கு workout ஆகுமா... மரம் சாஞ்சிருமே..

    //இந்த பொழப்புக்கு, பிச்சையெடுக்கலாம். தூ.//
    சார் பிச்சை எடுப்பவர்களை நீங்கள் கேவலபடுத்துறீங்க. பிச்சகாரங்க கோவி.குண்ணன் போல அசிங்கமா எதுவும் செய்வதில்லை.

    ReplyDelete
  16. டோண்டு தமிழை திட்டியது என்பது பச்ச பொய்.

    //avaru mattum .. thiravidaraiyum thittavillaiyaa? //

    தப்பு செய்பவனை திட்டாமல் என்ன தாங்க சொல்லுறியா..

    //poliyal than
    thaakkappattathu pola pesum dondu avargalin leelaigal? yaar ketpathu?//

    டோண்டு செய்த லீலைகளுக்கு நீ உடந்தை மாதிரி பேசற, என்னயா செய்தார் அவர் ? சும்மா பசை அடிக்காதே கோமனா

    போய் வேற வேல இருந்தா பாரும்

    ReplyDelete
  17. எது எப்படியோ கருத்து கந்தசாமி தன் தவறுகளை உணர்ந்து திருந்தினால் எங்கள் டோண்டு அய்யா மன்னிப்பார்

    ReplyDelete
  18. பாலா என்ற பின்னோட்டம் மட்டும் போடும் பதிவரை 'ஜெயராமன்' என்று குன்சாக தனது காழ்புணர்சியால் கண்டுபுடிக்க தெரிந்த கருத்து சாருக்கு மூர்த்தி போலி என்பதே தெரியவே தெரியாதாம் :))))

    ReplyDelete
  19. டோண்டு சார் சும்மா சொல்ல கூடாது எங்க வீட்டு பிள்ளை எம்ஜிஆர் போல சாட்டையை சுழட்டி அடிச்சு பட்டையை கிளப்பி இருக்கீங்க

    ReplyDelete
  20. டோண்டு சார் அனானிகளுக்கு மதிப்பு அளித்து பதில் சொல்ல மாட்டீர்களா?

    ReplyDelete
  21. //பாலா என்ற பின்னோட்டம் மட்டும் போடும் பதிவரை 'ஜெயராமன்' என்று குன்சாக தனது காழ்புணர்சியால் கண்டுபுடிக்க தெரிந்த கருத்து சாருக்கு மூர்த்தி போலி என்பதே தெரியவே தெரியாதாம் :))))//

    :)))))))))))
    என்ன கொடுமை கண்ணன் இது ?

    ReplyDelete
  22. அனானிகளுக்கு பதில் தராத டோண்டு சாருக்கு கண்டனம்

    இப்படிக்கு
    டோண்டு வெறியர் மன்றம்
    ஜோகன்பாரு
    மலேசியா

    ReplyDelete
  23. டோண்டு அய்யா , கேடி சமீபத்திய பதிவில் ஓவரா க்ளிசரின் போட்டு ஓப்பாரி வைச்சுருக்காரு பாத்தீங்களா?

    ReplyDelete
  24. //பாலா என்ற பின்னோட்டம் மட்டும் போடும் பதிவரை 'ஜெயராமன்' என்று குன்சாக தனது காழ்புணர்சியால் கண்டுபுடிக்க தெரிந்த கருத்து சாருக்கு மூர்த்தி போலி என்பதே தெரியவே தெரியாதாம் :))))//

    தூங்குபவரை எழுப்பலாம் ஆனால் தூங்குவரை போல நடிப்பவரை எழுப்ப முடியாது

    ReplyDelete
  25. மூர்த்தி என்ற கசடை அழித்த பின்பும் அவனை மீண்டும் மீண்டும் தூணடி விட்டு புறமுதுகோட செய்யும் இருவரில் ஒருவர் கோவியார், மற்றவரும் இருக்கிறார்.

    ReplyDelete
  26. கேடி குண்டனின் 'நான் அவனில்லை' மழுப்பல்கள். அனைவரும் ரசித்து சிரிக்க

    1. செல்லா வெளியிட்ட ஆடியோவில் இருப்பது மூர்த்தியின் குரல்தான்.அதில் இருப்பது கெட்ட வார்த்தைகள்தான்.ஆனாலும் மூர்த்தி அவனில்லை.

    2.விடாது கருப்பு என்பது மூர்த்திதான்.தமிழ்மணத்தில் இருந்து விடாது கருப்பு துரத்தப்பட்டதும் இதனால்தான்.ஆனாலும் மூர்த்தி அவனில்லை.

    3.அமுக பாஸ்வர்ட் இருப்பது உண்மை.ஆனாலும் அது என்னுடையதில்லை.

    4.மூர்த்தியின் அடுத்த கட்டுரைகளுக்கு ஆலோசனை கொடுக்கும் அளவு நெருக்கம் உண்டு(செந்தழலார் இதற்கு சாட் ஆதாரம் உண்டு என கூறியிருக்கிறார்.இதை கேடி குண்டனும் மறுக்கவில்லை)...ஆனாலும் மூர்த்தி அவனில்லை.....

    5.சட்னிவடை பதிவை துவக்கி தமிழ்மணம் துவங்கி ஓசை செல்லா வரை அனைவரையும் வசைபாடியது கேடி குண்டனும் மூர்த்தியும். ஆனாலும் மூர்த்தி அவனில்லை.

    6.ஆதிசேஷன்,சதுர்வேதி பதிவுகளை துவக்கியது கேடிகுண்டனும் மூர்த்தியும்..ஆனாலும் மூர்த்தி அவனில்லை.

    7.குழலி/விஎஸ்கே/ரவி/செல்லா என பதிவர்களின் தனிப்பட்ட தகவல்களை மூர்த்தியிடம் போட்டுகொடுத்தது கேடிகுண்டன்.ஆனாலும் மூர்த்தி அவனில்லை.

    இதை எல்லாம் கேட்டால்....

    செல்லா சொன்னமாதிரி அம்மணக்குண்டியுடன் இருப்பவன் வேட்டியை எடுத்து முகத்தை மறைத்த கதைதான் ஞாபகத்துக்கு வருகிறது.

    டோண்டு கேட்ட கேள்வியை நானும் வழிமொழிகிறேன்.

    இதுவும் ஒரு பிழைப்பாடா கேடி குண்டா?

    ஆள்காட்டி வேலை செய்து பிழைப்பதை விட நீ பிச்சை எடுத்தாவது பிழைக்கலாமே?கொஞ்சம் கவுரவமாவது எஞ்சியிருக்குமே?

    த்த்த்த்த்த் தூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ

    ReplyDelete
  27. தேவையில்லாமல் பழைய குப்பையை கிளற காரணம் என்ன என்பதையும் கோவி கண்ணன் அவர்கள் வெளியிட வேண்டும்.

    வால்பையன்

    ReplyDelete
  28. //அனானிகளுக்கு பதில் தராத டோண்டு சாருக்கு கண்டனம்//
    பதில் தரக்கூடாது என்றெல்லாம் இல்லை அனானி அவர்களே. ஒரு முக்கியமான மொழிபெயர்ப்பு வேலையில் இருப்பதால் வெறுமனே பின்னூட்டங்களை அனுமதித்து வந்ததே பெரும்பாலான வகையில் நடந்தது.

    பதிவர் பாலா பின்னூட்டங்கள் போடும்போது ஒரு ஆதாரமும் இன்றி ஜயராமன் என்று அழைக்கத் துணிந்தவர் இங்கு மூர்த்திக்கு இவ்வளவு சந்தேகத்தின் பலனைக் கொடுப்பது ஆச்சரியமாகவே உள்ளது.

    வால்பையன் அவர்களே, உங்கள் கேள்விக்கு அவரால் என்ன பதில் தர முடியும், போலி டோண்டுவின் மேல் உள்ள குற்றச்சாட்டை பரவலாக பலர் மேல் கூறவேண்டும் என்ற நிர்ப்பந்தத்தைத் தவிர?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  29. ///வீரபத்திரன் said...
    கேடி குண்டனின் 'நான் அவனில்லை' மழுப்பல்கள். அனைவரும் ரசித்து சிரிக்க
    ////

    Pattaya Kilappittaar Mr.Veera. Super.

    ReplyDelete
  30. கோவி கண்ணன் என்னதான் நடித்தாலும் யாரும் இவனை நம்ம போவதில்லை :)))

    பாவம் எப்படி இருந்தவன் இப்படி ஆயிட்டான் :))))

    ReplyDelete