நிரந்தர பக்கங்கள்

12/23/2008

கூடை வச்சுண்டிருக்கிறவங்களுக்கெல்லாம் பெட்ரோமேக்ஸ் லைட் கொடுக்கறதில்ல

இன்று எதேச்சையாக யூ ட்யூப் பார்க்கும்போது கண்ணில் பட்ட வீடியோ இது. வைதேகி காத்திருந்தாள் படத்தில் வந்த கவுண்டமணி செந்தில் க்ளிப்பிங். நீங்களும் ரசிக்கலாம். அதுவும் கவுண்டமணி கடையில் அடிவயிற்றிலிருந்து ஆங்காரம் வர அதை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு தலைப்பில் வரும் பஞ்ச்லைனை கூறுவது சூப்பரோ சூப்பர். அச்சமயம் செந்தில் எங்கே? அவர் பறந்து பத்து நிமிஷம் ஆச்சே!

புதுக்கோட்டுக்கு ஜூட்!

அன்புடன்,
டோண்டு ராகவன்

22 comments:

  1. பெட்ரோமேக்ஸ் லைட்டே தான் வேணுமா?

    ReplyDelete
  2. யூ டியூப் பார்க்கிறதுக்கெல்லாம் உங்களுக்கு நேரமிருக்கிறதா என்ன?ஆச்சரியம்தான்!

    ReplyDelete
  3. யூ ட்யூப்தான் எனக்கு ஒரே பொழுதுபோக்கு. அவ்வப்போது போட்டு பார்ப்பேன், அதுவும் காமெடி காட்சிகள் என்றால் பிடிக்கும். சில சமயம் மொழிபெயர்ப்பில் சட்டென வார்த்தைகள் கிடைக்காது. அச்சமயம் யூ ட்யூப்பே துணை. சில நிமிடங்களுக்கு பிறகு வேலைக்கு திரும்பினால் தோன்றாத அந்த வார்த்தையும் முக்கால்வாசி சமயங்களில் நினைவுக்கு வந்திருக்கும்.

    அதன் தாக்கமாகவே சன் டி.வி.யின் காமெடி சேனலுக்காக சன் டைரக்ட் டிஷ் சேனலை நாடுபவர்கள் எண்ணிக்கை குறைந்தது. இலவசமாக கிடைப்பதற்கு ஏன் மெனக்கெட்டு காசு கொடுக்க வேண்டும் என்ற ரேஞ்சில் பார்வையாளர்கள் யோசித்து விட்டனர்.

    இது பற்றியும் நான் இட்ட பதிவைப் பார்க்க http://dondu.blogspot.com/2008/10/blog-post_13.html

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  4. சூப்பர் காமெடி.

    இதே படத்துலே இன்னொரு இடத்திலே கவுண்ட்ஸ் சொல்வாரு - ரங்கனாதன்ற பேருக்கெல்லாம் சைக்கிள் கொடுக்கறதில்லேன்னு...

    இது நான் அடிக்கடி சொல்லும் ஜோக்.. ஏன்னு சொல்லுங்க...

    ஹிஹி.. என் மாமனார் பேரு அதுதான்... :-))

    ReplyDelete
  5. //இது நான் அடிக்கடி சொல்லும் ஜோக்.. ஏன்னு சொல்லுங்க...

    ஹிஹி.. என் மாமனார் பேரு அதுதான்... :-))//

    அதுதான் உங்க வீட்டம்மாவிடம் உங்களுக்கு அதிகம் அடி வாங்கிக் கொடுக்கும் ஜோக்காகவும் இருக்கும் போலிருக்கே. :)))))))))

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  6. இந்த படத்தில் எனக்கு பிடித்த காமெடி,
    மனசு கஷ்டமாய் இருக்கும் போது பொண்டாட்டிக்கு மல்லிகைபூவும், அல்வாவும் வாங்கி தருவது தான்

    ReplyDelete
  7. //
    "கூடை வச்சுண்டிருக்கிறவங்களுக்கெல்லாம் //

    கூடை வச்சிருக்கறவங்களுக்கு...;-))

    ReplyDelete
  8. //கூடை வச்சிருக்கறவங்களுக்கு...//

    கூடை வச்சிக்கிட்டுருக்கிறவங்களுக்கு.. ;) ;)

    ReplyDelete
  9. I)
    கவுண்டன் செந்திலிடம்

    ஏண்டா எப்போ பாத்தாலும் மூஞ்சில சாணி அப்புன மாதிரியே சுத்திட்டு இருக்க
    -----------------------------------
    II)

    செந்தில் கவுண்டனிடம்

    அண்ணே ஒங்க சம்சாரம் ஒங்க அளவு இல்ல

    கவுண்டன் செந்திலிடம்

    ஆமா அவ கொஞ்சம் குள்ளம்

    ReplyDelete
  10. Please try to see this comedy also in youtube.

    படம் - கோவில்

    வடிவேலு & சிம்பு

    சிம்பு : அய்யோ, யம்மா .....

    வடிவேலு : டேய் ... ஏண்டா நடுராத்திரில கத்துற ......

    சிம்பு : அது ஒண்ணும் இல்ல சித்தப்பா ... பேசாம தூங்குங்க ....

    வடிவேலு : ஏண்டா, நடு ராத்திரில .... தூக்கத்துல இந்த மாதிரி கத்துனா
    எதுனா விஷயம் இல்லாமயா இருக்கும் ... என்னன்னு சொல்லுடா .....

    சிம்பு : அது ஒண்ணும் இல்ல சித்தப்பா ... அந்த சைக்கிள் சூசை இல்ல ...
    அவன் உங்கள வெட்டிட்டறான்.... அதான் கத்திட்டேன்...

    வடிவேலு : சைக்கிள் சூசை என்னிய ஏண்டா வெட்றான் ......

    சிம்பு : அது என்னன்னா, நான் அவரோட பொண்ண லவ் பண்றேன் இல்ல, அதான் ...

    வடிவேலு : டேய் ....அவரு பொண்ண நீ லவ் பண்ணினா அவன் ஒன்னியதானடா
    வெட்டணும் ... என்னிய ஏண்டா வெட்டணும் ...... ஏதோ கனவுன்னாலும் அதுல ஒரு
    நியாயம் வேண்டாமாடா ????

    ReplyDelete
  11. //புதுக்கோட்டுக்கு ஜூட்!

    அன்புடன்,
    டோண்டு ராகவன்


    .))))))))))))))

    ReplyDelete
  12. கோவில் படம் காமெடியும் பார்த்தேன். நீங்களும் பாருங்கள் http://in.youtube.com/watch?v=yezsyFneid8

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  13. 1.உயர் வகுப்பு ஏழைகளுக்கு இடஒதுக்கீடு எப்போது?,
    மத்திய அரசுக்கு மாயாவதி அவர்களின் கேள்வி வரும் தேர்தலில் முற்பட்டோரின் வாக்குவங்கியை,தென் இந்தியாவில்,குறிப்பாய் தமிழகத்தில் தன் பக்கம் ஈர்க்குமா?
    2.சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்க்கும் ஜெ.,வுடன் கூட்டணி ஏன்?
    சீதாராம் யெச்சூரியை பார்த்து திமுக தலைவர் கருணாநிதி அவர்களின் கேள்வி நியாயம்
    தானே?
    3.திருமங்கலம் தேர்தலில் மு.க. அழகிரி அவர்கள், லதா அதியமான் மனுத் தாக்கல் சமயத்தில் உடன் சென்றது,திமுக வேட்பாளர் தேர்வில் இருந்த கசப்பு மறைந்து விட்டதை காட்டுகிறதா?
    4.இலங்கையில் தமிழரினப் படுகொலைக்கு காரணமாய் சொல்லப்படும் சி‌ங்கள அர‌‌சி‌ற்கு, ஆதரவ‌‌ளி‌க்கு‌ம் கா‌ங்‌கிர‌ஸ் அரசின் செயலை மதுரை நெடுமாற‌ன் க‌ண்டன‌ம்
    செய்துள்ளாரே?
    5.பம்பாய் தீவிரவாதிகளின் தாக்குதல் தொடர்பாய், இந்திய ராணுவம் எந்த நேரத்திலும் பாகிஸ்தானை தாக்கலாம் என்று செய்தி பரவுவதால் பாகிஸ்தானில் போர் பயம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், என்ன நடக்கலாம் என எண்ணுகிறீர்கள்?
    6. 2008 ஆண்டு முடியும் போது -உலகப்புகழ் பெற்ற பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் நுரையீரல் நோயால் பாதிக்கப் பட்டு உயிருக்குப் போராடி வருகிறார்.புகழ் பெற்றவர்கள் ஏன் தன் உடல் நலனில் அக்கறை செலுத்துவதில்லை?
    7.பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அவர்களின் உயிர்க் கொள்கையாம்
    மதுவிலக்கை தமிழகத்தில் படிப்படியாக அமல்படுத்தவேன் எனும் முதல்வர் கருணாநிதி அவர்களின் பேச்சு,திமுக,பாமக மீண்டும் தமிழக அரசியல் வானில் நெருங்கிறதா?
    8.பொடாவுக்கு இணையா இந்த இரண்டு சட்டங்கள்

    தேசியப் புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) மசோதா, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு திருத்த மசோதா (யு.ஏ.பி.ஏ.)
    9.மங்களூர் இடைத்தேர்தலை நடத்தாமல் திருமங்கலம் தேர்தலை நடத்த கலைஞர் அவர்கள்தான் காரணம் என்று மதிமுக தலைவர் வைகோ அவர்களின், கு‌ற்ற‌ம்சா‌ட்டில் உண்மையுண்டா?
    10.அதள பாதாளத்திற்கு சென்றுள்ள,ரியல் எஸ்டேட் வாணிபத்தை கரை சேர்க்க அரசு அறிவித்துள்ள வீட்டுக் கடன் வங்கி வட்டிக் குறைப்பு கம்மி என்பது சரியா?

    ReplyDelete
  14. வால்பையன் பார்வைக்கு
    ---------------------
    அவரின் பதில்?

    இந்தியாவில் உள்ளவர்கள் மட்டுமல்ல, அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் உள்ள இந்தியர்களும் ஜோதிடக்காரர்களை நாடிவருவது அதிகரித்துள்ளது என்று மீனா கபூர் கூறுகிறார். அந்த சந்தையில் ஏற்பட்ட நெருக்கடி ஜோதிடச் சந்தையில் நல்ல வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. புதிய ஜோதிட இணைய தளங்கள் உருவாகியுள்ளன. இணைய தளங்களை வடிவமைப்பவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. ஜோதிடம் சொல்வதற்கான கட்டணமும் அதிகரித்து விட்டது. ஒரு கேள்விக்கு பத்து ரூபாய் என்று வாங்கிக்கொண்டிருந்த பல இணைய தளங்கள் தற்போது அதை 200 ரூபாயாக மாற்றி விட்டன.

    ReplyDelete
  15. // Anonymous said...

    வால்பையன் பார்வைக்கு
    ---------------------
    அவரின் பதில்?//

    எனக்கு ஒண்ணுமே புரியலைங்கண்ணா?

    யார் எனக்கு பதில் சொன்னது?
    என்ன கேள்விக்கு?

    ReplyDelete
  16. 1. கோவி.கண்ணன் தான் ரமணா என்பது உங்களுக்கு தெரியுமா?

    ReplyDelete
  17. கோவி கண்ணன் ரமணா என நான் நினைக்கவில்லை.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  18. Anonymous said...
    1. கோவி.கண்ணன் தான் ரமணா என்பது உங்களுக்கு தெரியுமா?



    dondu(#11168674346665545885) said...
    கோவி கண்ணன் ரமணா என நான் நினைக்கவில்லை.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்//

    ""உண்மை எது பொய் எதுன்னு ஒண்ணும் புரியல - நம்ம கண்ணை நம்மாலே நம்ப முடியலே''

    ReplyDelete
  19. Anonymous said...
    1. கோவி.கண்ணன் தான் ரமணா என்பது உங்களுக்கு தெரியுமா


    ivar yethaivassu solkiraar dondu saar?
    neengkal maruthullathu yentha adipadaiyil?

    ReplyDelete
  20. //Anonymous said...
    1. கோவி.கண்ணன் தான் ரமணா என்பது உங்களுக்கு தெரியுமா?


    அட்ரா சக்கை!
    அட்ரா சக்கை!
    அட்ரா சக்கை!
    அட்ரா சக்கை!
    அட்ரா சக்கை!
    அட்ரா சக்கை!
    அட்ரா சக்கை!
    அட்ரா சக்கை!
    அட்ரா சக்கை!
    அட்ரா சக்கை!

    ReplyDelete
  21. கோவி கண்ணன் ரமணா என்னும் பெயரில் வர எந்த காரணமும் நான் காணவில்லை. ஆகவேதான் கூறுகிறேன், கோவியை நான் அறிவேன், அவர் ரமணா இல்லை.

    அன்புஅட்ன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  22. //கோவி.கண்ணன் said...
    // ILA said...
    //தகாத இடத்துல தகாத ஆளப் பார்த்ததும் தகாதது நடக்கப் போகுதுன்னு//
    நீங்க யாருங்க ‘தகாத’ன்னு தப்பாச் சொல்ல. இந்த மாதிரி பதிவுகள்ல இப்படிப்பேசறத நிறுத்துங்க. இங்கே யாரும் கெட்டவங்க இல்லே. திருந்துங்க!

    //dondu(#11168674346665545885) said...
    கோவி கண்ணன் ரமணா என்னும் பெயரில் வர எந்த காரணமும் நான் காணவில்லை. ஆகவேதான் கூறுகிறேன், கோவியை நான் அறிவேன், அவர் ரமணா இல்லை.

    அன்புஅட்ன்,
    டோண்டு ராகவன்//



    //


    ம் கேட்க நல்லா இருக்கு, அந்த எண்ணத்தில் பெரியவரின் பதிவுக்கு பின்னூட்டினேன். அப்பறம் அனானிகளோ அல்லது அவரே அனானியாகவோ....விருப்பப்படி போட்டு போட்டு தாக்கினாங்க. இது உங்களுக்கு தேவையான்னு சிலர் கேட்டாங்க, இப்ப அங்கெல்லாம் போக யோசனையாத்தான் இருக்கு.//


    mr.Kovi antha sikkankuniyaa partiya vivathaththai marakkavillai polirukkke.

    ReplyDelete