நிரந்தர பக்கங்கள்

12/10/2008

நாகரீகத்தைத் தொலைத்த பெயரிலி

போன மாதம் முரளி என்பவர் ஒபாமா அமெரிக்காவின் எத்தனையாவது ஜனாதிபதி என்பதை ஆங்கிலத்தில் எப்படிக் கேட்பது என்று என்னைக் கேள்வி கேட்ட இப்பதிவுக்கு நான் கீழ்கண்டவாறு பதிலளித்தேன்.

“//டோண்டு சார், ஒபாமா அமெரிக்காவின் எத்தனையாவது ஜனாதிபதி என்று[Photo] என் அமெரிக்க நன்பனிடம் கேட்கவேண்டும்.//
1. "How many Presidents were there prior to Obama?"
அல்லது
2. Where does Obama come in the sequence of American Presidents?
ஆனால் இந்த கேள்வி இன்னொரு இடத்தில் வேறு உதாரணத்துடன் வந்தது.
Where does Bill Clinton come in the sequence of American presidents?
அதற்கு வந்த ஒரு பதில்: In the case of Bill Clinton, in the ante room of the Oval Office.
பதில் புரியாதவர்களுக்கு புரிந்தவர்கள் விளக்கலாம், ஆனால் மைதானம் முழுக்க அவர்கள் துரத்தி துரத்தி உதைக்கப்பட்டால் என்னை கேக்கப்படாது. ))
ரொம்ப இரண்டாம்பட்சமான மூன்றாம் பதில்:
3. How manyeth President is Barak Obama?
இதையும் மற்ற மொழி பெயர்ப்புகளையும் வைத்து நான் ஏற்கனவே போட்ட பதிவு இதோ.”

“//ஜெர்மன் / பிரெஞ்சு மொழிப்பெயர்ப்பாளராக இருந்தாலும், அவரால் இந்த தமிழ்-ஆங்கில மொழிப்பெயர்ப்பு செய்ய முடியும் என நம்புகிறேன்..//
நான் தமிழ் மொழி பெயர்ப்பாளன் கூட என்பதை மறந்தீர்களா”?

இந்த இரண்டு பின்னூட்டங்களுடன் இப்பதிவுடன் எனது வேலை முடிந்தது என இருந்து விட்டேன். பிறகு எதேச்சையாக சில நாட்களுக்கு முன்னால் அப்பதிவை மீண்டும் பார்த்து திடுக்கிட்டேன். நான் சுட்டியளித்திருந்த எனது டிசம்பர் 2006 பதிவில் வந்த ஒரு தமிழ் வாக்கியத்துக்கான பெயரிலியின் எதிர்வினையை இங்கு தருவதற்கு முன் அந்த வாக்கியத்தையே பார்ப்போம்.

"எந்தக் கடையில் அவள் பூ வாங்கினாளோ, அடுத்த மாசமே பொறந்தாத்துக்கே திரும்பி வந்துட்டா". இதற்கான ஆங்கில மொழிபெயர்ப்பை சம்பந்தப்பட்ட அப்பதிவிலேயே பார்க்கலாம். இப்பதிவில் நான் கூற வருவது முற்றிலும் வேறு.

வெறும் மொழிவிளையாட்டாக போய்க்கொண்டிருந்த இப்பதிவில் பெயரிலி இடும் பின்னூட்டம் இதோ.

-/பெயரிலி. said...
//இப்போது மேலே கூறிய "எந்தக் கடையில் அவ்ள் பூ வாங்கினாளோ, அடுத்த மாசமே பொறந்தாத்துக்கே திரும்பி வந்துட்டா" என்ற வாக்கியத்துக்கான//

இது டோண்டுவின் மகளுக்கு, இந்து ராமின் மகளுக்கு, சோ ராமசாமியின் நிகழ்ந்தால், எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவிருக்கும் என்பதை ஏறக்குறைய இப்படியான ஈழத்தமிழ்ப்பெண்களின் பலரின் தந்தைகளின் உளநிலையை அறிந்தவன் என்றவளவிலே தெரிவித்துக்கொள்கிறேன் - அப்பெண்களுக்காகத் தனிப்பட்டவளவிலே பரிதாபம் ஏற்படுகின்றபோதிலுங்கூட.
நவம்பர் 7, 2008 5:09

இது என்ன விபரீத ஆசை இந்த பெயரிலிக்கு? பதிவர் எண்ணில் க்ளிக் செய்து பார்த்தால் ப்ரொஃபைல் மறைக்கப்பட்டுள்ளது. சரி போலியாக இருக்கும் என விட்டுவிட்டேன். ஆனால் அதே பெயரிலி எனது போலி டோண்டுவை நான் சந்தித்தது பற்றி இட்ட பதிவிலும் பின்னூட்டம் இட்டிருந்தார். அதிலும் பெயரிலியின் ப்ரொஃபைல் மறைக்கப்பட்டுள்ளது. ஆனால் இரு பிளாக்கர் எண்களும் ஒன்றே என்பதை பிரசித்தி பெற்ற எலிக்குட்டி சோதனை மூலம் அறிந்தேன்.

பெயரிலிக்கு என்னமோ ஆகிவிட்டது என்றுதான் கூற வேண்டும். அதே சமயம் இந்த மிக அனாகரிகமான பின்னூட்டத்தை ஒரு மாதத்துக்கும் மேலாக வைத்து அழகு பார்க்கும் முரளியின் நாகரிகமும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. நான் சொல்ல நினைத்ததை நண்பர் என்றென்றும் அன்புடன் பாலா அதே பதிவில் தனது பின்னூட்டம் மூலம் தெரிவித்து விட்டார். அது இதோ:

enRenRum-anbudan.BALA said...
//இது டோண்டுவின் மகளுக்கு, இந்து ராமின் மகளுக்கு, சோ ராமசாமியின் நிகழ்ந்தால், எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவிருக்கும்
//
இம்மாதிரி (தனிப்பட்ட அளவில்) ஒருவரின் மகள் பொட்டிழக்க வேண்டும் என்று பேசுவதை வன்மையாக கண்டிக்கிறேன்.
அப்படி சொன்ன பின்னர், எதற்கு "தனிப்பட்டவளவிலே பரிதாபம் ஏற்படுகின்றபோதிலுங்கூட." என்று ஒரு போலி அனுதாபம் ????
This comment is in Utter bad taste, whether it is from பெயரிலி or some போலி :-(
டிசம்பர் 9, 2008 10:28

அன்புடன்,
டோண்டு ராகவன்

61 comments:

  1. திரு டோண்டு அவர்களுக்கு , தவறாக எண்ண வேண்டாம்.. அழகு பார்க்கும் வேலையெல்லாம் நிச்சயம் செய்ய இல்லை..

    நீங்களே சொன்னது போல மொழிவிளையாட்டாகவே இந்த பதிவு போட்டேன், உண்மையிலேயே இந்த கேள்விக்கான பதிலை மொழிப்பெயர்ப்பாளரான உங்களிடம் கேட்டு பதில் பெறும் நோக்கம் மட்டுமே. நீங்கள் பதில் அளித்தவுடன் , உங்களுக்கு நன்றி சொல்லி பதில் போட்டுவிட்டு பிறகு அந்த பதிவையே மறந்துவிட்டேன்..

    அங்கே தொடர்ந்து வந்த கமென்ட்ஸ் என்னவென்று படிக்கவில்லை.

    பதிவின் நோக்கமான உங்களின் பதில் கிடைத்ததால், பின்னர் அந்த பதிவை சென்று பார்க்கவே இல்லை..

    மேலும் வேலை பளு காரணமாக அடிக்கடி பதிவுக்கு வரமுடியாததால் கமென்ட் மாடரேஷன் எடுத்துவிட்டேன்.. இதுவும் அது போன்ற ஒரு கருத்து வருவதற்கான காரணமாக அமைந்துவிட்டது..

    இவை மட்டுமே காரணமேயன்றி உங்களை பற்றிய தவறான கருத்தினை பதிவில் வைத்திருக்கவேண்டும் என்ற நோக்கம் இல்லை..

    உங்களின் இந்த பதிவு பார்த்த பின்னரே எனக்கு அங்கே அப்படி ஒரு கருத்து இருப்பதை பார்த்தேன்.. உடனடியாக நீக்குகிறேன்... அது பெயரிலியோ, போலியோ.. யாராகினும், இப்படி ஒரு கருத்து போட்டது தவறு, கண்டிக்கத்தக்கது..

    நன்றி , புரிந்துக்கொள்வீர் என நம்புகிறேன்..

    //அதே சமயம் இந்த மிக அனாகரிகமான பின்னூட்டத்தை ஒரு மாதத்துக்கும் மேலாக வைத்து அழகு பார்க்கும் முரளியின் நாகரிகமும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை//


    அந்த கருத்தை படித்த உங்களின் மனநிலை எப்படி இருக்கும் என்று புரிகிறது, அதே நேரத்தில் என்ன காரணத்தால் அந்த கருத்து அங்கே அழிக்கப்படாமல் உள்ளது என்று தெரிந்துக்கொண்டு பின்னர் இப்படி ஒரு கருத்தை நீங்கள் சொல்லியிருக்கலாம்.. உணர்ச்சிவேகத்தில் என் நாகரீகம் பற்றி இப்படி பொதுவாக எழுதியது சற்று வருத்தமே

    முரளி

    ReplyDelete
  2. இதற்குத்தான் பின்னூட்ட மட்டுறுத்தல் வேண்டுமென்கிறது. இல்லாவிட்டால் சாவியை கையோடு எடுத்து போக சோம்பல்பட்டு மிதியடியின் கீழேயே வைத்து விட்டுப் போகும் வீட்டுக்காரரின் நிலைதான் வரும்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  3. அந்த அனாகரிக பின்னூட்டத்தை நீக்கிய முரளிக்கு என் நன்றி.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  4. லக்கிலுக் சிஸ்டம் சொதப்புவதால் பிளாக்கரில் அவரால் பின்னூட்டம் இட இயலவில்லை. ஆகவே எனக்கு மின்னஞ்சலாக அனுப்பியதை அவர் அனுமதியுடன் போடுகிறேன்.

    On 12/10/08, xxxxx@xxxx wrote:
    நாகரீகத்தைத் தொலைத்த பெயரிலி - பதிவுக்கான பின்னூட்டம்...

    இந்தப் பதிவு கடுமையான அதிர்ச்சியைத் தருகிறது.

    இதுவரை தமிழிணையத்தில் நாம் கண்ட வார்த்தை வன்முறைகளை விடவெல்லாம் மிக மோசமான வன்முறை இது. சிந்தனைரீதியாக ஒரு தகப்பனை முடக்கிப் போட நினைக்கும் அற்பச்செயல் இது. எத்தனையோ பேர் எத்தனையோ பேரை எப்படி எப்படியெல்லாமோ தாக்கிக் கொண்டிருக்கிறோம். ஆபாசத் தாக்குதல்களும் இதே இணையத்தில் நடந்ததுண்டு. ஆபாச அர்ச்சனைகளை காணும்போது கூட அருவருப்பு தான் வருமே தவிர இதுபோல அதிர்ச்சி வராது.

    நானும், டோண்டு அவர்களும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வது கூட தமிழிணைய உலகப் பிரசித்தமே. அதுவும் கூட பிரச்சினைகளின், இருவரின் சார்புநிலைகளின் அடிப்படையில் தானே தவிர்த்து, குடும்பரீதியாக மோசமாக தாக்கிக் கொண்டதில்லை. இனிமேல் தாக்கப் போவதும் இல்லை. இந்த தாலியறுப்பு கண்ணறாவி விவகாரத்தில் டோண்டு சாருக்கு என்னுடைய அறம்சார்ந்த ஆதரவினை மனப்பூர்வமாக வழங்குகிறேன்.

    இவ்வளவு தரம் தாழ்ந்த, அநாகரிகமான ஒரு பின்னூட்டத்தை (ஒரிஜினல்) பெயரிலி தான் இட்டிருந்தாரென்றால் அவருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்! (கண்டனம் தெரிவிப்பது பைசாவுக்கு பிரயோஜனமில்லை என்பதால்)

    - லக்கிலுக்

    ReplyDelete
  5. நன்றி லக்கிலுக்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  6. டோண்டுசார் பின்னூட்டம் இட்டது பெயரிலியோ..போலியோ..யாராயிருந்தாலும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

    ReplyDelete
  7. டோண்டு சார், அந்த கருத்து என் பதிவில் இருந்து நீக்கப்பட்டது..

    அப்படி ஒரு கருத்து சொன்னவர் மேல் உள்ள கோவத்தில் இந்த பதிவு என்றாலும், அந்த கருத்து என் பதிவில் 1 மாதமாக மற்றவர்கள் பார்க்கும் படி இருந்ததும் உங்களுக்கு வருத்தம்/கோவம் ஏற்படுத்தி இருக்கலாம்..

    மாதத்திற்கு 150 - 200 பேர் மட்டுமே வந்து செல்லும் என் பதிவில் (அதிலும் அந்த குறிப்பிட்ட பதிவுக்கு 25 - 30 பேர் தான் வந்தார்கள்) அது இருப்பதே தங்களுக்கு வருத்தமாக இருந்தது என்கிற போது, இப்போது உங்கள் பதிவில் அந்த கருத்தினை வைத்துள்ளீர்கள் .. உங்கள் பதிவுக்கு ஒரு நாளைக்கே 200- 300 பேர் வருகிறார்கள்.. என் பதிவில் அந்த கருத்தை கண்டுக்கொள்ளக்கூட ஆள் இல்லாமல் போயிருக்கலாம்.. ஆனால் உங்களை போன்ற பிரபலாமான பதிவரின் பதிவில்... ??

    அந்த கருத்து உங்கள் பதிவில் இருக்கவேண்டுமா , வேண்டாமா என்பதை நீங்கள் தான் முடிவுசெய்ய வேண்டும்..

    ReplyDelete
  8. நீங்கள் எலிக்குட்டி சோதனை செய்திருக்கிறீர்கள். ஆனாலும், அவருக்குத் தனிமடல் அனுப்பி ஊர்ஜிதப்படுத்திக் கொண்டிருக்கலாமே.

    பெயரிலிதான் என்றால், பிரபல பதிவர்களே இப்படி எழுதுவது கடும் கண்டனத்திற்குரியது.

    ReplyDelete
  9. பதிவு இட்டது இட்டதுதான். முதலில் ஷாக்காக இருந்தாலும் இந்த அநாகரிக செயலை கண்டித்தே ஆகவேண்டும். அது அப்படியே இருக்கட்டும்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  10. //முரளி said...
    டோண்டு சார், அந்த கருத்து என் பதிவில் இருந்து நீக்கப்பட்டது..

    அப்படி ஒரு கருத்து சொன்னவர் மேல் உள்ள கோவத்தில் இந்த பதிவு என்றாலும், அந்த கருத்து என் பதிவில் 1 மாதமாக மற்றவர்கள் பார்க்கும் படி இருந்ததும் உங்களுக்கு வருத்தம்/கோவம் ஏற்படுத்தி இருக்கலாம்..

    மாதத்திற்கு 150 - 200 பேர் மட்டுமே வந்து செல்லும் என் பதிவில் (அதிலும் அந்த குறிப்பிட்ட பதிவுக்கு 25 - 30 பேர் தான் வந்தார்கள்) அது இருப்பதே தங்களுக்கு வருத்தமாக இருந்தது என்கிற போது, இப்போது உங்கள் பதிவில் அந்த கருத்தினை வைத்துள்ளீர்கள் .. உங்கள் பதிவுக்கு ஒரு நாளைக்கே 200- 300 பேர் வருகிறார்கள்.. என் பதிவில் அந்த கருத்தை கண்டுக்கொள்ளக்கூட ஆள் இல்லாமல் போயிருக்கலாம்.. ஆனால் உங்களை போன்ற பிரபலாமான பதிவரின் பதிவில்... ??

    அந்த கருத்து உங்கள் பதிவில் இருக்கவேண்டுமா , வேண்டாமா என்பதை நீங்கள் தான் முடிவுசெய்ய வேண்டும்..//

    எல்லோர் மனதையும் வேதனைப்படுத்தும்
    அந்த வாசகங்களை
    எடுத்துவிடலாமே.

    ReplyDelete
  11. இந்த அநாகரிக செயலை கண்டித்தே ஆகவேண்டும்!

    Despicable!

    No sentient being would do this...

    ReplyDelete
  12. இந்த அநாகரிக செயலை வன்மையாக கண்டிக்க வேண்டும். :( very BAD

    ReplyDelete
  13. போலி போயி பெயரிலி வந்தது டும்..டும்....டும்..டும்....

    ReplyDelete
  14. //அது அப்படியே இருக்கட்டும்//

    இப்படித்தான் அதுவும் ஆரம்பிச்சது.. மறுபடியுமாஆஆஆஆஆ???????

    ம்ஹூம் ஒன்னியும் சொல்லிக்கரதுக்கு இல்லே.

    ReplyDelete
  15. if only prabhakaran makes a surrender eezham girls will have peace and harmony in life and can reain heir pou - i is a piy peyarili is unaware of his!!
    sorry one alphabe is no okay!! and peyarili needs lessons in decency!!

    ReplyDelete
  16. //sorry one alphabe is no okay!!//.
    I see that you wanted to say "sorry one alphabet is not okay"!!
    It is clear that the letter t is missing in your keyboard. Copy the t from here and paste it wherever required.

    Regards,
    Dondu N. Raghavan

    ReplyDelete
  17. டோண்டுவின் இந்தப் பதிவைப் படித்து விட்டு, பெயரிலியின்

    http://wandererwaves.blogspot.com/2008/12/blog-post.html

    இந்தப் பதிவையும் படித்து விட்டு எழுதுகிறேன்.

    சமீபத்திய ஈழ நிகழ்வுகளின் விளைவாக புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களின் துயரத்தில் சிதறுண்ட மனநிலையை தமிழகத்துத் தமிழர்கள் புரிந்து கொள்வது என்பது இயலாத காரியம்.

    விடுதலைப் புலிகளை ஆதரிக்காதவன் + ஒரு பெண்ணுக்குத் தகப்பன் என்ற முறையில் சொல்கிறேன். இதைப் போன்ற ஒரு உணர்ச்சி வெளிப்பாட்டினைப் பொறுத்து மன்னிப்பதே (மன்னிப்பு வேண்டப்படாவிடினும்) தமிழகத்துத் தமிழர்கள் செய்யக் கூடிய மிகக் குறைந்தபட்ச செயல்.

    ஶ்ரீகாந்த்.

    ReplyDelete
  18. வருத்தம் தரும் செய்தி தான்,
    மீண்டும் இம்மாதிரியான பின்னூட்டங்கள் பெரும் அயர்ச்சியை தருகின்றன.

    ReplyDelete
  19. A similar comment is published in badri's blog too in november.

    http://thoughtsintamil.blogspot.com/2008/10/2.html#comments

    ReplyDelete
  20. (டோண்டுவின்)வால்-பையா,

    //கே : "இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்று தமிழக முதல்வர் கூறுவதன் மூலம், விடுதலைப் புலிகளுக்கு அவர் உதவுகிறார்' – என்று ஜெயலலிதா கூறியுள்ளது பற்றி?

    ப : இலங்கை அரசு நடத்துகிற ராணுவத் தாக்குதல், விடுதலைப் புலிகளை எதிர்த்துத்தான். அந்தப் போர் நிறுத்தப்பட வேண்டும் என்று கூறுவது
    – "விடுதலைப் புலிகள் தாக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும்' என்பதுதான். ஜெயலலிதா கூறியுள்ளது நியாயமே.

    +++++++++++++++++++++++++++++++

    இப்போது டோண்டு ராகவன். மேலே சொன்ன சோவின் எந்த கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை? அப்படி உடன்பாடு இல்லை என்று கூற ஒரு கருத்துமே இல்லை.

    //

    //http://dondu.blogspot.com/2008/10/blog-post_28.html//

    எத்தனை திமிர்.. என்னவோ அங்கே போர் நிறுத்தம் செய்வது புலிகளுக்கு மட்டுமே சாதகம் என்று பேசியிருக்கிறாரே.. அப்போ அங்கே கிளஸ்டர் குண்டு வெடித்து செத்த பிஞ்சுக் குழந்தைகளெல்லாம் விடுதலைப்புலிகளா? பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்கூடத்தில் குண்டு வீசிக் கூட்டம் கூட்டமாக கொல்கிறானே அந்த அநியாயமான இனவொழிப்புப் போரைத் தானே இங்கே தமிழ் உணர்வாளர்கள் நிறுத்தச் சொல்கிறார்கள்?

    இப்படித் திமிர்த்தனமாக இந்தாள் எழுதிக் கொண்டிருந்த போது நீரென்ன சிரைக்கப் போயிருந்தீரா?

    ReplyDelete
  21. //வாழ்க்கையை கவியாய் செய்தோனுக்கு இன்று 126வது பிறந்ததினம்..

    தேடிச் சோறுநிதந் தின்று
    பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
    மனம் வாடித் துன்பமிக உழன்று
    பிறர் வாடப் பல செயல்கள் செய்து
    நரை கூடிப் கிழப்பருவம் எய்தி
    கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
    பல வேடிக்கை மனிதரைப் போலே
    நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?//


    to day is thesiyakaviyin 126 birthday

    ilankai thmizar innal theerkkapadavendum
    ithil maarrukkaruththu yaarukkum illai
    atharkaaka thanimanithathaakuthil
    thavirkkalaame
    ini nadappathu nallavaiyaay irukkattume

    ReplyDelete
  22. //நானும், டோண்டு அவர்களும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வது கூட தமிழிணைய உலகப் பிரசித்தமே. அதுவும் கூட பிரச்சினைகளின், இருவரின் சார்புநிலைகளின் அடிப்படையில் தானே தவிர்த்து, குடும்பரீதியாக மோசமாக தாக்கிக் கொண்டதில்லை. இனிமேல் தாக்கப் போவதும் இல்லை.//

    லக்கிலுக்கும் டோண்டு ஐயாவும் நல்ல நண்பர்கள் என்பதைதெரிந்து கொண்டதால் தான் அந்தப் பெரியவர் பெயரிலி

    உங்களையும் தாக்கியிருக்கிறார்.
    அவர் உண்மைத்தமிழனையும் விடவில்லை.


    http://wandererwaves.blogspot.com/2008/12/blog-post.html


    விடுதலைப்புலிகளின் மேலும் அதன் தலைவர் பிரபாகரன் மேலும் இருந்த நல்லெண்னம்,மதிப்பு பொதுவாக,பாரதப் பிரதமர் ராஜிவ் அவர்களின் கொடுர மரணம் அதுவும் தாய்த் தமிழக மண்ணில் விடுதலைபுலிகலால் நடத்தப் பட்டது சந்தேகத்துக்கு இடமின்றி நிருபிக்கப்பட்டதால்,குறைய ஆரம்பித்தை யாரும் மறுக்க முடியாது.

    திமுக தலைவர் கூட இதை பலமுறை சொல்லியிருக்கிறார்.
    மதிமுக தலைவரை திமுக விலிருந்து வெளியேற்றியதில் கூட விடுதலை புலிகளின் தலியீடு உள்ளதாய் கலைஞராலே சொல்லப் பட்டதை யாரும் மறந்திருக்க முடியாது.

    விடுதலை புலிகளின் செயல் பாடுகள் பற்றி இலங்கை வாழ் தமிழர்களே பலவிதமாய் செய்திகள் சொல்கின்றனர்.

    கருத்துகள் சொல்வதற்கு யாருக்கும் உரிமை உண்டு.

    மேலும் விடுதலை புலிகள் பொது மக்களை கேடயமாய்ப் பயன் படுத்துவதாகவும் டோண்டு சாரின் பதிவுகளில் பல பின்னூட்டங்கள் வந்தது.

    இந்தப் பின்னூட்டங்கள் உண்மையில்லை என்றால் விடுதலை புலியின் ஆதரளவாளர்கள் மறுத்து தகவல்களை அளித்து இருக்கலாமே.

    அதை விடுத்து டோண்டு/துக்ளக் சோ/ஹிண்டு ராம் அவ்ர்கள் மீது இப்படியொரு வெடி குண்டுத் தாக்குதல்
    இது தான் தமிழர் பண்பாடா?

    சரி தவறு நடந்து விட்டது ஒரு மன வருத்தம் தெரிவிக்கலாமே?

    ஆனால் அவரும் அவரது நண்பர்களும் இன்னும் தீவிரமாய்
    anti dondu பிரச்சாரத்தை முடுக்கிவிடுகிறார்களே.

    http://sathirir.blogspot.com/2008/12/blog-post.html

    ReplyDelete
  23. பெயரலிக்கு என் கண்டங்கள். புலிகளை ஆதரிக்காவிட்டால் பதிவர்களின் குடும்பங்களை கேவலமாக எழுதுவேன் என்று சொல்வதே ஒரு பாசிச தன்மை தான்.

    ReplyDelete
  24. பெயரிலி என்ற இணைய போராளி, சாத்திரி என்ற இலவச சஞ்சிகையில் காசு வேண்டி புனை கதைகளை எழுதும் எழுத்தாளர்.

    சாத்திரி சுய இன்மபமாக சுயமாக யோசித்து புனை கதைகளை எழுதி ஐரோப்பா வாழ் தமிழர்களை மிரட்டி யுரோ வேண்டுவது தெரிந்த விடயமே.

    இதை போல கேவலமான மனித மிருங்கங்கள் இருப்பதால் இன்னமும் தமிழ் ஈழம் பகல் கனவாகவே தொடர்கிறது,

    ReplyDelete
  25. தலயிடியும் காச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும் சூப்பரப்பூ சூப்பர் தொடரவும்..........

    ReplyDelete
  26. விடுங்க சார், பெயரலில் தமிழ்மணத்தை நடத்தும் குழுவில் இருப்பதால் , தான் மட்டுமே தமிழுக்கு உரிமையாளர் போல எழுதுவார்.

    அவர் கருத்துகளை அவரே சீரியஸாக எடுத்துகொள்வதில்லை.

    ReplyDelete
  27. //Anonymous said...
    (டோண்டுவின்)வால்-பையா,

    //கே : "இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்று தமிழக முதல்வர் கூறுவதன் மூலம், விடுதலைப் புலிகளுக்கு அவர் உதவுகிறார்' – என்று ஜெயலலிதா கூறியுள்ளது பற்றி?

    ப : இலங்கை அரசு நடத்துகிற ராணுவத் தாக்குதல், விடுதலைப் புலிகளை எதிர்த்துத்தான். அந்தப் போர் நிறுத்தப்பட வேண்டும் என்று கூறுவது
    – "விடுதலைப் புலிகள் தாக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும்' என்பதுதான். ஜெயலலிதா கூறியுள்ளது நியாயமே


    வால் பையன் சார்
    உங்களை டோண்டுவின் சிஷ்யன் என்று சொன்னதிற்கு வானத்துக்கும் பூமிக்கும் குதித்தீர்களே
    ( இதைச் சொன்னதற்கு என் மீது தனி மனிதத் தாக்குதல் தொடங்கி விடமாட்டீர்களே-)

    இப்ப என்ன பண்ணுவீங்க

    புதுப் பட்டம்
    (டோண்டுவின்)வால்-பையா

    (please don't think otherwise-just for fun)

    ReplyDelete
  28. //சமீபத்திய ஈழ நிகழ்வுகளின் விளைவாக புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களின் துயரத்தில் சிதறுண்ட மனநிலையை தமிழகத்துத் தமிழர்கள் புரிந்து கொள்வது என்பது இயலாத காரியம்.//

    துயரம் சரி. சிதறுண்ட மனநிலையை எப்படி கண்டுபிடித்தீர்கள் ஸ்ரீகாந்த்? பெயரிலியின் பதிவிலிருந்து ஒரு மேற்கோள். மீண்டும் வாசித்துப் பாருங்கள்.

    "உண்மையாக வன்புணரப்பட்ட பெண்களின் வேதனை உங்களுக்கு உறைக்கவில்லை; உண்மையாக கணவர்களைக் கொல்லக்கொடுத்த பெண்களின் வேதனை உங்களுக்கு உறைக்கவில்லை; உண்மையாக குண்டுமாரியிலே சின்னாபின்னமான பிஞ்சுகளின் வேதனை உங்களுக்கு உறைக்கவில்லை. அடுத்தவர்களின் அநாதரவான நிலை பற்றிய அநாமதேயமான ஆட்களின் கேள்விகளுக்குப் பதில் போடுவதிலிருந்து துக்ளக் சோவினை ஆமோதிப்பதெல்லாம் உங்களுக்கு சாதாரண ஈழமக்களின் இக்கையறுநிலையெல்லாம் எல்லாம் விடுதலைப்புலிகளை வீழ்த்தி மடிப்பதாக மகிழ்ச்சி. ஆனால், பேச்சுக்கான ஓர் உதாரணத்துக்கு, தேர்ந்தெடுத்து இப்படியாக, "உங்கள் மகள் வன்புணரப்பட்டால், கணவனை இழந்தால், குழந்தை மடிந்தால்" என்று எழுதினால் மட்டும், மனம் சக்கரைப்புக்கையாய் வெந்து நீங்களும் உங்கள் சாதி சனங்களும் நரகக்கொதிப்பரையிலே நரராக மாண்டுவிடுவீர்களாக்கும்."

    சிதறுண்ட மனநிலையில் இவ்வளவு தெளிவாக எழுத முடியுமா?

    //இதைப் போன்ற ஒரு உணர்ச்சி வெளிப்பாட்டினைப் பொறுத்து மன்னிப்பதே (மன்னிப்பு வேண்டப்படாவிடினும்) தமிழகத்துத் தமிழர்கள் செய்யக் கூடிய மிகக் குறைந்தபட்ச செயல்.//

    இந்த patronizing திமிர் கண்டனத்துக்குரியது. மஹாத்மாவாகத் மாறத்துடிக்கும் உம்மைவிட "பாதிக்கப்பட்ட" டோண்டுவும், அவருக்கு ஆதரவாக புழுங்குபவர்களும் நேர்மையானவர்கள்.

    ReplyDelete
  29. //(டோண்டுவின்)வால்-பையா,
    இப்படித் திமிர்த்தனமாக இந்தாள் எழுதிக் கொண்டிருந்த போது நீரென்ன சிரைக்கப் போயிருந்தீரா? //

    இலங்கை பிரச்சனையை பொறுத்த வரை இது வரை நான் ஒன்றும் சொல்லியதில்லை, காரணம் இங்கே உட்கார்ந்து சிரைத்து கொண்டிருப்பவர்களுக்கு அங்கே என்ன நடக்கிறது என்று தெரியாது.

    இலங்கை தமிழர்களுக்குள்ளே விடுதலை புலிகளை ஆதரிப்பதா, வேண்டாமா என்ற கருத்து வேறுபாடு இருக்கும் போது, நான் என்ன ஐ.நா வின் தூதுவனா அதை பற்றி கருத்து சொல்ல அவரவர் கருத்து அவரவர்களூக்கு.

    இந்தியா காலணி ஆதிக்கத்தின் கீழ் இருக்கையில் இந்திய மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து போராடினர். சந்திரபோஸ் ஆயுதம் ஏந்தி, காந்தி அமைதி புரட்சியால்.
    எது வெற்றி பெற்றது என்பதை விட யார் போராடினார்கள் என்பது முக்கியம், அனைவரும் இந்தியர்கள்.

    வெளிநாட்டில் இருந்து யாரும் குரல் கொடுக்கவில்லை, தென் ஆப்பிரிக்காவில் இருந்த காந்தி கூட இந்தியா வந்தார் போராட

    நிற்க, வெளி நாட்டில் வாழும் உங்களை போல் உள்ள அனானிகள் அங்கே என்ன செய்து இருக்குகிறீர்கள். வெறும் டயலாக் மட்டும் விட்டு கொண்டிருக்காமல் இலங்கை சென்று போராடலாமே!

    ஒருவேளை கவிதை பாடியே சிங்களவனை கொன்று விடுவீர்களே என்னவோ!

    இங்கே நடக்கும் உண்ணவிரதமும், மனித சங்கிலியும் இலங்கையில் ஒரு கல்லை கூட அசைக்காது என்று எல்லா அரசியல்வாதிகளுக்கும் தெரியும், தெரிந்தும் சிம்பதி கிரியேட் பண்ண அரசியல் ஸ்டண்ட் நடத்தும் கீழ்தரமான அரசியல்வாதிகள் மத்தியில் டோண்டு ஒன்றும் குறைந்தவரல்ல

    ReplyDelete
  30. //அங்கே கிளஸ்டர் குண்டு வெடித்து செத்த பிஞ்சுக் குழந்தைகளெல்லாம் விடுதலைப்புலிகளா? பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்கூடத்தில் குண்டு வீசிக் கூட்டம் கூட்டமாக கொல்கிறானே அந்த அநியாயமான இனவொழிப்புப் போரைத் தானே இங்கே தமிழ் உணர்வாளர்கள் நிறுத்தச் சொல்கிறார்கள்?//

    இதற்க்காக கண்டிக்க வேண்டியது சிங்கள அரசை டோண்டுவை அல்ல.

    விடுதலை புலிகள் மட்டும் சிங்கள ராணூவத்துடன் மட்டுமா சண்டையிடுகிறார்கள். மனித வெடிகுண்டின் மூலம் அப்பாவி சிங்களவனும் தான் கொல்ல படுகிறான். அதெல்லாம் உங்களுக்கு தெரியாதா?
    உயிர் கொல்லுதல் என்பதே தவறு, அதில் என் பக்கம் என்ன உன் பக்கம் என்ன?

    ReplyDelete
  31. //வால் பையன் சார்
    உங்களை டோண்டுவின் சிஷ்யன் என்று சொன்னதிற்கு வானத்துக்கும் பூமிக்கும் குதித்தீர்களே
    ( இதைச் சொன்னதற்கு என் மீது தனி மனிதத் தாக்குதல் தொடங்கி விடமாட்டீர்களே-)//

    எதையும் ஆராயாமல் நம்பும் ஆன்மீகவாதியள்ள நான், எனக்கும் டோண்டுவுக்கும் ஏகப்பட்ட கருத்து வேறுபாடுகள் உண்டு. அதற்க்காக நாங்கள் குடுமிபிடி சண்டை போட்டு கொள்ள வேண்டுமா என்ன?

    நான் விளக்கம் கொடுத்த காரணம் இயேசு வருகிறார் பாணியில் டோண்டு வருகிறார் என்று மிகைப்படுத்தியதால், மற்றபடி அவரது வியாபார தந்திரங்களை சொல்லி தருவதென்றால் அவருக்கு சிஷ்யனாக இருக்க தயார் என்று அப்போதே சொல்லி விட்டேனே!

    என்னை டோண்டுவின் (வால்)பையா என்று கூப்பிட்டாலும் எனக்கு வருத்தமில்லை

    ReplyDelete
  32. அனானி,

    //இந்த patronizing திமிர் கண்டனத்துக்குரியது.//

    என்னுடைய empathy உங்களுக்குப் patronizing attitude என்று தோன்றினால், நான் என்ன செய்ய இயலும்?

    பரவாயில்லை.

    ஶ்ரீகாந்த்

    ReplyDelete
  33. //
    என்னுடைய empathy உங்களுக்குப் patronizing attitude என்று தோன்றினால், நான் என்ன செய்ய இயலும்?
    //

    உங்களுடையது empathy அல்ல. Emphatic concern.

    Empathic concern may produce an altruistic motivation to reduce the other person's distress.

    I guess we all know what altruism means.

    ReplyDelete
  34. //கே : "இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்று தமிழக முதல்வர் கூறுவதன் மூலம், விடுதலைப் புலிகளுக்கு அவர் உதவுகிறார்' – என்று ஜெயலலிதா கூறியுள்ளது பற்றி?

    ப : இலங்கை அரசு நடத்துகிற ராணுவத் தாக்குதல், விடுதலைப் புலிகளை எதிர்த்துத்தான். அந்தப் போர் நிறுத்தப்பட வேண்டும் என்று கூறுவது
    – "விடுதலைப் புலிகள் தாக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும்' என்பதுதான். ஜெயலலிதா கூறியுள்ளது நியாயமே.//

    நீங்கள் கூறுகிற விடுதலைப் புலிகளுக்கெதிரான இலங்கை அரசு நடத்துகிற ராணுவத் தாக்குதலில் பெரும்பாலும் அப்பாவி பொது மக்கள் அல்லவா பாதிக்கப் படுகிறார்கள். எக்காரணம் கொண்டும் உலகின் எந்த மூலையில் நடக்கும் எந்த ஆயுதப் போரையும் தயவு செய்து நியாயப்படுத்தாதீர்கள்.

    ReplyDelete
  35. ஸ்ரீகாந்த்,

    //என்னுடைய empathy உங்களுக்குப் patronizing attitude என்று தோன்றினால், நான் என்ன செய்ய இயலும்?//

    உங்களை empathize செய்யவைக்கும் இப்பிரச்சினையின் முக்கோணச் சிக்கலில் ஒரு புள்ளியான புலிகளை ஆதரிக்கவில்லை என்றும் தெளிவாகவே சொல்கிறீர்கள். சரி வேறு யாரை ஆதரிக்கிறீர்கள் அல்லது மீதி இரண்டு புள்ளிகளைப் (இலங்கை அரசு, இந்திய அரசு) பற்றிய உங்கள் நிலைப்பாடு என்ன என்பதையும் தெளிவுபடுத்தினால் உங்கள் empathyயின் ஆழ, அகலங்களை புரிந்துகொள்வேன் என்று நினைக்கிறேன். அஃதில்லாமல், "புலிகளை ஆதரிக்கவில்லை" என்று கறாராக சொல்லிக்கொள்வதோடு மட்டும் நிறுத்திக்கொண்டால், என் முந்தைய கணிப்பில் மாற்றமேதுமில்லை. மன்னிக்கவும். அதற்கு, சோ, ராம், டோண்டு வகையறாக்களிடமிருந்து வெளிப்படும் வடிகட்டாத வெறுப்பே பரவாயில்லை.

    ReplyDelete
  36. //இதற்குத்தான் பின்னூட்ட மட்டுறுத்தல் வேண்டுமென்கிறது. இல்லாவிட்டால் சாவியை கையோடு எடுத்து போக சோம்பல்பட்டு மிதியடியின் கீழேயே வைத்து விட்டுப் போகும் வீட்டுக்காரரின் நிலைதான் வரும். //

    இது எனக்கு புரியவில்லை டோண்டு சார். வீட்டுக்கும் பதிவுக்கும் என்ன சம்பந்தம்? வீட்டை பூட்டி சாவியை மிதியடி கீழே வைத்தால்? போய் வந்து பார்த்தால், ஒரு வேளை
    வீட்டில் உள்ள பொருட்கள் களவு போய் ஒருவர் துன்பப்பட நேரலாம்.

    சரி, ஆனால் அப்படிப்பட்ட நிலையில் நான் இப்போது இல்லையே..

    அப்படி ஒரு கருத்து வந்ததுக்கு நான் கவனிக்காது விட்டது ஒரு காரணம் என்று வருத்தம் தெரிவித்து, உங்களின் உணர்வுக்கு மதிப்பளித்து, நீக்கினேன்.. (நீங்கள் அதை வைத்துள்ள போதும்).. அது தவிர்த்து நான் எந்த விதத்திலும் வீடு களவு கொடுத்தது போல ஆகவில்லை.. ஆகவேண்டிய அவசியமும் இல்லையே.. காரணம் , வீட்டுக்கும் , பதிவுக்கும் எனக்கு வித்தியாசம் தெரிகிறது..

    பதிவில் மட்டுறுத்தல் இல்லை என்பதும், வீட்டை பூட்டி சாவியை மிதியடி கீழே வைப்பவன் நிலையும் என்ற ஒப்பீடும் பொருந்தவேயில்லை..

    வீட்டுக்கும் , பதிவுக்கும் வித்தியாசம் தெரியாது, எப்போதும் பதிவுலகமே கதி என்று இருந்து,தினமும் வருகை கவுன்டரை செக் செய்து கொண்டும், கமென்ட் போட்டவரின் எண்ணிகையை குறித்துக்கொண்டே இருப்பவர்களுக்கு வேண்டுமென்றால் இந்த உதாரணம் பொருந்தலாம் என்பது என் கருத்து.. நான் அந்த அளவுக்கு பதிவுலகில் ஊறிவிடவில்லை சார்,

    ReplyDelete
  37. //சரி, ஆனால் அப்படிப்பட்ட நிலையில் நான் இப்போது இல்லையே..//
    உங்கள் நாகரிகத்தை கேள்வி கேட்கும் நிலையைத்தான் கூறினேன். மறுபடியும் கூறுவேன், மட்டுறுத்தல் வைத்தல் நலம். இல்லாவிட்டால் பதிவு சம்பந்தமான உங்கள் நோக்கம் முடிந்ததும் அதன் கமெண்ட் வசதியை நீக்கிவிடவும்.

    இன்னொன்று. நான் வேறு இடத்தில் கூறியபடி உங்கள் பின்னூட்டம் ஒரு மாதம் வரை அப்படியே இருந்திருக்கிறது. என் கண்ணிலும் பட்டுவிட்டு நான் பதிவும் போட்டுவிட்டேன். பிறகு அப்பின்னூட்டத்தை நீங்கள் வைத்தால் என்ன, எடுத்தால் என்ன? எல்லாமே ஒன்றுதான்.

    உங்களை நான் அப்பின்னூட்டத்தை எடுக்கச் சொல்லி கேட்கவேயில்லையே. நானே அதை பதிவாக போட்ட பிறகு அது தேவையர்ற செயல்.

    // நான் அந்த அளவுக்கு பதிவுலகில் ஊறிவிடவில்லை சார்//
    அதுக்காக ஒருமாசமா பாக்காமலேயே இருப்பது ரொம்ப ஓவர் சார். உங்களுக்கு சைபர் கிரைமின் விதிகள் தெரியவில்லை என நினைக்கிறேன். உங்கள் தளத்தில் உள்ள விஷயங்களுக்கு நீங்கள்தான் பொறுப்பு.

    உங்கள் பின்னூட்டங்கள் உங்கள் மின்னஞ்சலுக்கு வருமாறு செட்டிங் செய்து கொள்ளவும்.

    இதையெல்லாம் நான் கூறுவது இந்த விஷயத்துக்கு மட்டுமல்ல, எல்லா விஷ்யங்களுக்குமே பொருந்தும்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  38. //வால்பையன் said...
    //(டோண்டுவின்)வால்-பையா,
    இப்படித் திமிர்த்தனமாக இந்தாள் எழுதிக் கொண்டிருந்த போது நீரென்ன சிரைக்கப் போயிருந்தீரா? //

    இலங்கை பிரச்சனையை பொறுத்த வரை இது வரை நான் ஒன்றும் சொல்லியதில்லை, காரணம் இங்கே உட்கார்ந்து சிரைத்து கொண்டிருப்பவர்களுக்கு அங்கே என்ன நடக்கிறது என்று தெரியாது.

    இலங்கை தமிழர்களுக்குள்ளே விடுதலை புலிகளை ஆதரிப்பதா, வேண்டாமா என்ற கருத்து வேறுபாடு இருக்கும் போது, நான் என்ன ஐ.நா வின் தூதுவனா அதை பற்றி கருத்து சொல்ல அவரவர் கருத்து அவரவர்களூக்கு.

    இந்தியா காலணி ஆதிக்கத்தின் கீழ் இருக்கையில் இந்திய மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து போராடினர். சந்திரபோஸ் ஆயுதம் ஏந்தி, காந்தி அமைதி புரட்சியால்.
    எது வெற்றி பெற்றது என்பதை விட யார் போராடினார்கள் என்பது முக்கியம், அனைவரும் இந்தியர்கள்.

    வெளிநாட்டில் இருந்து யாரும் குரல் கொடுக்கவில்லை, தென் ஆப்பிரிக்காவில் இருந்த காந்தி கூட இந்தியா வந்தார் போராட

    நிற்க, வெளி நாட்டில் வாழும் உங்களை போல் உள்ள அனானிகள் அங்கே என்ன செய்து இருக்குகிறீர்கள். வெறும் டயலாக் மட்டும் விட்டு கொண்டிருக்காமல் இலங்கை சென்று போராடலாமே!

    ஒருவேளை கவிதை பாடியே சிங்களவனை கொன்று விடுவீர்களே என்னவோ!

    இங்கே நடக்கும் உண்ணவிரதமும், மனித சங்கிலியும் இலங்கையில் ஒரு கல்லை கூட அசைக்காது என்று எல்லா அரசியல்வாதிகளுக்கும் தெரியும், தெரிந்தும் சிம்பதி கிரியேட் பண்ண அரசியல் ஸ்டண்ட் நடத்தும் கீழ்தரமான //

    சிங்களராணுவத்தினால் கொல்லப்படுவது புலிகள்தான் சதாரணமக்கள் அல்ல என்கிறான் சோமாரி என்ற பார்ப்பன், அதை ஆதரிக்கிறான் டோண்டு என்ற பார்ப்பன் அதுபற்றி தனக்கு கருத்து எதுவும் இல்லை என்கிறான், தனது மகள் தாலி அறுந்தால் மட்டுமே தனக்கு கருத்து உண்டு என்றுகூறும் பார்பண் மோசமில்லை நல்லவன் என்று கூறுகிறாய் நீ, முதலிம் நீநல்லவானா என சொல்.

    ReplyDelete
  39. //சிங்களராணுவத்தினால் கொல்லப்படுவது புலிகள்தான் சதாரணமக்கள் அல்ல என்கிறான் சோமாரி என்ற பார்ப்பன், அதை ஆதரிக்கிறான் டோண்டு என்ற பார்ப்பன் அதுபற்றி தனக்கு கருத்து எதுவும் இல்லை என்கிறான், தனது மகள் தாலி அறுந்தால் மட்டுமே தனக்கு கருத்து உண்டு என்றுகூறும் பார்பண் மோசமில்லை நல்லவன் என்று கூறுகிறாய் நீ, //

    சிங்கள ராணுவத்தால் ஈழத்தமிழர்கள் கொல்லப்படது உண்மை, அதற்க்காக நான் வருந்துகிறேன்.

    நிற்க, நான் வருத்தப்பட்டால் அவன் கொல்வதை நிறுத்த போகிறானா?
    அதை தடுத்து நிறுத்தும் அதிகாரம் யாருக்கு இருக்கிறதோ அவர்களல்லவா முதலில் வருத்த படவேண்டும்.

    மனிதர்களுக்கு சாதி அடையாளம் பார்த்து பழகும் வழக்கம் எனக்கில்லை, அது அவசியமுமில்லை, உங்களுக்கு அந்த பழக்கமிருந்தால் நல்ல டாக்டரை பார்க்கவும்


    //முதலிம் நீநல்லவானா என சொல். //

    தெரியலேயேப்பா

    நாயகன் மியூசிக்கோடு படிக்கவும்

    ReplyDelete
  40. வருத்தம் தெரிவிக்கு நீர் அதை ஒத்த கருத்துடைய டோண்டு மோசமில்லை என கூறுவது வியப்பாக இருக்கிறது.

    ReplyDelete
  41. //சிங்கள ராணுவத்தால் ஈழத்தமிழர்கள் கொல்லப்படது உண்மை, அதற்க்காக நான் வருந்துகிறேன்.//
    இப்படி நீர் கூறுகிறீர் சோமாறி இல்லை என்கிறார், டோண்டு அக்கருத்தை ஆமோதிக்கிறார், நீர் டோண்டுவை ஆதரிக்கிறீர் விசித்திரமாக இருக்கிறது யார்டாக்டரை பார்க்கவேண்டும்?

    ReplyDelete
  42. சிங்கள ராணுவத்தால் புலிகள் மட்டுமே கொல்லப்படுகின்றனர் என்று நான் எங்குமே கூறவில்லை. ஒரு ராணுவ நடவடிக்கையில் அப்பாவிகள் உயிரும் பலி ஆவது தவிர்க்க முடியாது. அதிலும் புலிகள் வேண்டுமென்றே சாதாரண மக்களை தங்களுக்கு கேடயமாக அமைத்து கொள்ளும் கேடு கெட்ட செயலைச் செய்கின்றனர்.

    மக்களை யுத்த பிராந்தியத்திலிருந்து பத்திரமான இடங்களுக்கு குடிபெயர்வதை அவர்கள்தான் தடுக்கின்றனர்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  43. //dondu(#11168674346665545885) said...
    சிங்கள ராணுவத்தால் புலிகள் மட்டுமே கொல்லப்படுகின்றனர் என்று நான் எங்குமே கூறவில்லை. ஒரு ராணுவ நடவடிக்கையில் அப்பாவிகள் உயிரும் பலி ஆவது தவிர்க்க முடியாது. அதிலும் புலிகள் வேண்டுமென்றே சாதாரண மக்களை தங்களுக்கு கேடயமாக அமைத்து கொள்ளும் கேடு கெட்ட செயலைச் செய்கின்றனர்.

    மக்களை யுத்த பிராந்தியத்திலிருந்து பத்திரமான இடங்களுக்கு குடிபெயர்வதை அவர்கள்தான் தடுக்கின்றனர்.

    அன்புடன்,//

    இதைத்தான் கஸ்மீரத்து நண்பர்களும் மும்பையில் செய்தார்கள், கஸ்மீரில் கற்பழிக்கப்பட்ட தமது தோழிகளுக்காக மும்பை போரில் ராணுவத்துடன் சேர்ந்து பல பொதுமக்களும் கொல்லப்படார்கள் போர் என்றால் பொதுமக்கள் இழப்பு சகசம்தானே, இப்படி நானும்சோமாறிமாதிரி பொய் சொல்லலாமா?

    ReplyDelete
  44. //Anonymous said...

    //சிங்கள ராணுவத்தால் ஈழத்தமிழர்கள் கொல்லப்படது உண்மை, அதற்க்காக நான் வருந்துகிறேன்.//
    இப்படி நீர் கூறுகிறீர் சோமாறி இல்லை என்கிறார், டோண்டு அக்கருத்தை ஆமோதிக்கிறார், நீர் டோண்டுவை ஆதரிக்கிறீர் விசித்திரமாக இருக்கிறது யார்டாக்டரை பார்க்கவேண்டும்?//


    டோண்டு எதை சொன்னாலும் அது சரியாகத் தான் இருக்கும் என்று எங்கேயாவது நான் சொல்லியிருக்கேனா?

    ஆதரிப்பது என்றால் கொள்கை ரீதியாகவா!

    நீங்களும் உங்க கொள்கை மண்ணாங்கட்டியும்னு தூக்கி போட்டு பல வருசமாச்சி,

    முதலில் என் பதிவுகளையும், இங்கே என் எல்லா பின்னூட்டங்களையும் முழுதாக படித்துவிட்டு வாருங்கள், அப்புறம் தெரியும் யார் டாக்டரிடம் போகனும் என்று

    ReplyDelete
  45. // Anonymous said...

    வருத்தம் தெரிவிக்கு நீர் அதை ஒத்த கருத்துடைய டோண்டு மோசமில்லை என கூறுவது வியப்பாக இருக்கிறது.//

    கருத்துகளையும் அதை சொன்ன மனிதரையும் ஒருங்கே பார்க்கும் கெட்ட பழக்கம் எனக்கில்லை.

    வர்ணாசிரமத்தில் நம்பிக்கை கொண்ட ராஜாஜியும், பெரியாரும் நண்பர்கள் தான். அது போல் தான் இதுவும்.

    அவர் கொள்கைகளுக்கு நான் கொடி பிடிக்கவில்லை.

    அவரது கருத்துகள் உங்களுக்கு ஏற்புடயதில்லை என்றால் கருத்தாடல் செய்யுங்கள், நான் செய்ய என்ன இருக்கிறது

    ReplyDelete
  46. //இதைத்தான் கஸ்மீரத்து நண்பர்களும் மும்பையில் செய்தார்கள்//
    அவர்களை நண்பர்கள் என்று சொல்லும் உங்க மாதிரி தேச துரோகிங்களுக்கெல்லாம் நான் ஏன் பதில் சொல்லணும்?

    டோண்டு ராகவன்

    ReplyDelete
  47. சிங்கள ராணுவத்தாரால் ஈழத் தமிழர்கள் கொல்லப்படுவதை இங்கு நானோ சோவோ மறுக்கவில்லை. அதற்கு முக்கிய பொறுப்பு அப்பாவி மக்களை மனிதக் கேடயமாக பயன்படுத்தும் புலிகள்தான். அதை முதலில் மனதில் வைக்கவும்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  48. டோண்டு.

    அனானி சொன்னதற்கு நேரடியாக பதில் சொல்லலாமே.ஏன் பம்முகிறீர்?

    ReplyDelete
  49. யாரும் பம்மவில்லை. தேச துரோகிகளிடம் அப்படித்தான் பேசுவேன்.

    டோண்டு ராகவன்

    ReplyDelete
  50. சாத்திரி என்பவர் என்னைக் கேள்வி கேட்டு போட்ட பதிவில் நான் இட்ட இப்பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்துள்ளது. பார்க்க: http://sathirir.blogspot.com/2008/12/blog-post_305.html

    “பொது மக்கள சண்டை நடக்கும் இடங்களை விட்டு வேறிடம் செல்வதிலிருந்து தடுக்கும் புலிகள் செயல்பாடுதான் மக்களை கேடயமாக பயன்படுத்தி கொள்கிறார்கள் என்று கூறப்படுகிறது. யுத்தம் என்று வந்து விட்டால் குண்டு போடும்போது இது தவிர்க்க முடியாது அல்லவா.

    ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவை மட்டுமா கொன்றார்கள் புலிகள்? Collateral damage என்று கேள்விப்பட்டதில்லையா நீங்கள்?

    தற்கால யுத்தம் என்றால் என்னவென்று எனக்கும் தெரியும். இப்போதைக்கு நான் புலிகள் மீதுதான் அதிகம் தவறு காணுகிறேன்”.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  51. //யுத்தம் என்று வந்து விட்டால் குண்டு போடும்போது இது தவிர்க்க முடியாது அல்லவா. //
    அப்ப பம்பாயில் நடந்ததும் தவிர்க்கமுடியாதது என ஏற்று கொள்கிறீர்களா??
    காஸ்மீரிகள் பம்பாயில் தாக்குத நடத்தவில்லை, காஸ்மீர் முஸ்லீம்களின் நண்பர்கள் என சொல்லிக்கொள்ளும் பாகிஸ்தான் முஸ்லீம்களே தாக்குதலை நாடத்தினார்கள் அவர்களது நண்பர்கள் என்றுதான் சொன்னேன் அல்லாது எனது நண்பர்கள் என்று நான் சொல்லவில்லை,
    புலிகள்தான் மக்களை இடம்பெயராமல் தடுக்கிறார்கள் என்றால் போர்மும்முரமாக நடக்கும் கிளிநொச்சியில் இருந்து ஏன் மக்களை ஒட்டு மொத்தமாக இடம் பெயர அனுமதித்தார்கள், அவர்கள் எந்த பத்திரிகையாளரையும் தடுப்பது இல்லை உங்களுக்கும், சோவிற்க்கும்,இந்து ராமிற்க்கும் தைரியம் இருந்தால், சீறீலங்காஅரசு அனுமதித்தால் அங்கு சென்று நீங்களே நேரடியாக நிலைமையை அறியமுடியும். இப்படித்தான் இந்திய ராணுவம் இலங்கையில் சண்டை போட்டபோதும் சோமாறி சொல்லிச்சுது இந்திய ராணுவத்தினர் தமிழர்களுக்கு பாதுகாப்பாத்தான் இருக்கிறாகள் புலிகள்தான் தமிழ்மக்களை கொலை செய்கிறார்கள் என்று. அதை ஒத்ததுதான் புலிகள்மக்களை கேடயமாக பாவிக்கிறார்கள் என்பது ,அங்கு என்ன கத்திசண்டையாநடக்கிறது வாணத்தில் இருந்து போடும் குண்டுக்கும், பலதுராமைல்களுக்கு அப்பால் இருந்து ஏவப்படும் ஆட்லறிகளுக்கும் மக்களை எப்படி கேட்யமாக பாவிப்பது,கிளிநொச்சி எல்லையில் மக்களை பட்டிபோல் அடைத்து வைத்து மக்கள் பின்னால் இருந்தா குண்டு எறிகிறார்கள். எதையும் ஆரய்ந்து பார்க்கவேண்டும்.

    ReplyDelete
  52. ஸ்ரீகாந்த்,

    இப்பொழுதுதான் பெயரிலியின் பதிவையும், இந்தப் பதிவையும் படித்து முடிக்கிறேன்.

    போன வாரம் சோபா சக்தியின் பதிவையும் படித்தேன். அப்பொழுதும் கருத்துச் சொல்ல ஆரம்பித்து, முழுமையாக எழுத நேரமின்மையால் கொஞ்சம் எழுதியதையும் அனுப்பாமல் விட்டு விட்டேன். அங்கும் உங்களுடைய கருத்து இரண்டு மூன்று வரிகளே இருந்ததால் உங்களுக்கும் என்னைப் போல் முழுமையாக எழுத இயலாத நேரமின்மை காரணமாயிருக்கலாம் என்று நினைத்தேன். ஆனாலும் இரண்டு வரிகள் எழுதினாலும் அங்கு (புலிகளுக்கில்லாத) இலங்கை அரசிற்கு மட்டுமே இருக்கும் அங்கீகாரத்தைச் சுட்டியிருந்தீர்கள். இங்கும் இரண்டு வரிகள் எழுதினாலும் அவற்றில் புலிகளை ஆதரிக்காதவன் என்று தெளிவாக அறிவிக்கிறீர்கள்.

    "‘இந்து’ ராம், ‘துக்ளக்’ சோ போன்ற ஊடகக் கிரிமினல்கள்" என்று சோபாசக்தி குறிப்பிடுவதை உங்களுக்குக் கருத்தில்லையா?

    "சுதந்திர இலங்கையில் இந்திய இராணுவம் இருதடவைகள் கால் பதித்துள்ளது. இருதடவைகளும் இந்திய இராணுவம் இலங்கை மண்ணில் இரத்தச் சுவடுகளையே விட்டுச் சென்றது. ........1987ல் இலங்கைக்கு வந்த இந்திய அமைதிப்படையினர் கொன்ற உயிர்களுக்கும் அவர்களால் பாலியல் சித்திரவதை செய்யப்பட்ட பெண்களுக்கும் அடித்த கொள்ளைக்கும் கொழுத்திய வீடுகளிற்கும் கணக்கே கிடையாது..........கடலில் கொல்லப்படும் மீனவர்கள் விவகாரம் குறித்து இலங்கை அரசுக்கும் இந்திய அரசுக்கும் பரஸ்பரப் புரிந்துணர்வு உள்ளது." என்றெல்லாம் சோபாசக்தி எழுதியிருந்தாரே அது பற்றி உங்கள் கருத்தென்ன?

    சோபாசக்தி எழுதிய கருத்துடன் உடன்படுவீர்களென்றால், ஊடகக் கிரிமினல்களை ஆதரிக்க வில்லை என்றும், இந்திய அரசின் பயங்கரவாதத்தை-கொலைவெறியை-கபடநாடகத்தை ஆதரிக்கவில்லை என்றும் ஏன் நீங்கள் சொல்லுவதில்லை. எப்படி புலிகளை ஆதரிக்காததை இரண்டு வரிப் பின்னூட்டங்களில் கூட டிஸ்கிளைய்மராக பறை சாற்றிக் கொண்டிருக்கிறீர்களோ, அதே போல் செய்யத் தோன்றவில்லை.

    நீங்கள் அவற்றை ஆதரிக்கிறீர்கள் என்று வெளிப்படையாக டோண்டு மாதிரி சொல்லி விட்டுப் போங்கள். சோ-இராம்-தினமலர் பார்ப்பனியப் பயங்கரவாத அரசியலை நீங்கள் ஆதரிப்பதால்தான் ஈழத்தில் அப்பாவி தமிழர்கள் கொல்லப் படுவதும், பெண்கள் வன்புணரப்படுவதும் புலிகளின் மேலான யுத்தமாக அல்லது பக்கவிளைவுகளாக உங்கள் கண்களுக்குத் தெரிகிறது. அதனால்தான் உங்களுக்கு டோண்டுவின் குடும்பத்தினர் மேல் இருக்கும் sensitivity ஈழத்துப் பெண்கள் மேல் இல்லை. பெயரிலியின் அதிர்ச்சி வைத்தியம் உங்களுக்கு மனச்சிதறலாகத் தோன்றுகிறது.

    உங்களிடம் டோண்டுவை விட அதிகப் புரிதலை எதிர்பார்த்தேன். ஈழத்தில் அப்பாவிப் பெண்களின் வன்புணரலை ஆதரித்து எழுதிய டோண்டுவின் மனிதத்தன்மையற்ற ஈனத்தனமான இன்பத்தை விட்டுவிட்டீர்கள். டோண்டுவை உணரவைக்க முடியுமென்று தேவையில்லாமல் கற்பனை செய்து எழுதிய பெயரிலியின் *நாகரீகமில்லா* வார்த்தைகளைச் சரியாகப் பயன் படுத்திக் கொண்ட டோண்டுவின் சுயபச்சாதாப விளம்பரத்துக்கு வேறு சிலரைப் போல் நீங்களும் பலியாகி விட்டீர்கள். இதைத்தான் அனானியும் சுட்டிக் காட்டியிருக்கிறார் என நினைக்கிறேன்.

    நீண்ட நாட்களுக்குப் பிறகு வாக்குவாதத்தில் சந்திப்போமென நினைக்கவில்லை :-(

    நன்றி - சொ. சங்கரபாண்டி

    ReplyDelete
  53. // ஈழத்தில் அப்பாவிப் பெண்களின் வன்புணரலை ஆதரித்து எழுதிய டோண்டுவின் மனிதத்தன்மையற்ற ஈனத்தனமான இன்பத்தை விட்டுவிட்டீர்கள். //
    உளறலுக்கு ஒரு அளவு வேண்டும் சங்கரபாண்டி அவர்களே. ஈழத்து பெண்களின் வன்புணரலை நான் எங்கே ஆதரித்தேன்? அப்பாவி மக்களை கேடயமாக உபயோகித்து, சகதமிழ்போராளிக் குழுக்களை கொன்று குவித்த புலிகளின் செயல்பாட்டால்தான் நடக்கக்கூடாததெல்லாம் நடக்கிறது என்றுதான் நான் எழுதியுள்ளேன்.

    வன்புணரல் என எடுத்து கொண்டால் உங்கள் அருமை நண்பர் பெயரிலியும் நீங்களும் மட்டுமே என் பெண்ணின் வன்புணரலுக்காக கடவுளை வேண்டி நிற்கும் அநாகரிகச் செயலை செய்கிறீர்கள். உங்களை போன்ற ஜாட்டான்களின் பேச்சையெல்லாம் நான் மதிப்பதிற்கில்லை.

    டோண்டு ராகவன்

    ReplyDelete
  54. டோண்டு ஐயா,

    ஆசிரியர் சுப்பையா அவர்களின் இந்தப் பதிவைப் பார்க்கவும்.

    நல்லது நடக்கட்டும்.

    http://devakottai.blogspot.com/2008/12/blog-post_12.html

    ReplyDelete
  55. என்ன ஆச்சு இவர்களுக்கு.

    1.http://govikannan.blogspot.com/2008/12/blog-post_12.html
    2.http://tvpravi.blogspot.com/2008/12/blog-post_10.html

    பதிவுலகம் எங்கே செல்கிறது சாமி
    ஒன்னுமே புரியலே

    ஆசிரியர் சுப்பையா சாரின் அட்வைசை கேளுங்க பிளிஸ்


    http://devakottai.blogspot.com/2008/12/blog-post_12.html

    ReplyDelete
  56. பெரிய யோக்கியன் மாதிரி இங்கு அறச்சீற்றம் காமிக்கும் முட்டாக் ** மற்றவர்கள் பிலாக்கில் போய் எதுக்கு பூள் பத்தியெல்லாம் வாந்தி எடுக்கிறான்னு தெரியல!!!

    வேஷம் போடும் பொறம்போக்கு நாய் !

    ReplyDelete
  57. போன வாரம் சோபா சக்தியின் பதிவையும் படித்தேன். அப்பொழுதும் கருத்துச் சொல்ல ஆரம்பித்து, முழுமையாக எழுத நேரமின்மையால் கொஞ்சம் எழுதியதையும் அனுப்பாமல் விட்டு விட்டேன். அங்கும் உங்களுடைய கருத்து இரண்டு மூன்று வரிகளே இருந்ததால் உங்களுக்கும் என்னைப் போல் முழுமையாக எழுத இயலாத நேரமின்மை காரணமாயிருக்கலாம் என்று நினைத்தேன். ஆனாலும் இரண்டு வரிகள் எழுதினாலும் அங்கு (புலிகளுக்கில்லாத) இலங்கை அரசிற்கு மட்டுமே இருக்கும் அங்கீகாரத்தைச் சுட்டியிருந்தீர்கள். இங்கும் இரண்டு வரிகள் எழுதினாலும் அவற்றில் புலிகளை ஆதரிக்காதவன் என்று தெளிவாக அறிவிக்கிறீர்கள்.

    "‘இந்து’ ராம், ‘துக்ளக்’ சோ போன்ற ஊடகக் கிரிமினல்கள்" என்று சோபாசக்தி குறிப்பிடுவதை உங்களுக்குக் கருத்தில்லையா?

    சாரே என்ன இவருக்கும் உங்களை போல வேல வெட்டி இல்லாம இலங்கை ஈழம் என்று எல்லா பதிவுளும் வாந்தி எடுக்க வேண்டுமா?

    //"சுதந்திர இலங்கையில் இந்திய இராணுவம் இருதடவைகள் கால் பதித்துள்ளது. இருதடவைகளும் இந்திய இராணுவம் இலங்கை மண்ணில் இரத்தச் சுவடுகளையே விட்டுச் சென்றது. ....//

    ஆமாம் போர் என்றால் இரத்தசுவடுதான் .இது கூட தெரியாதா.
    புலிகள் கொன்றால் வீராம் இலங்கை ரானுவம் செய்தால் இன வெறி. நல்லா இருக்கு கதை


    ..//..1987ல் இலங்கைக்கு வந்த இந்திய அமைதிப்படையினர் கொன்ற உயிர்களுக்கும் அவர்களால் பாலியல் சித்திரவதை செய்யப்பட்ட பெண்களுக்கும் அடித்த கொள்ளைக்கும் கொழுத்திய வீடுகளிற்கும் கணக்கே கிடையாது..........கடலில் கொல்லப்படும் மீனவர்கள் விவகாரம் குறித்து இலங்கை அரசுக்கும் இந்திய அரசுக்கும் பரஸ்பரப் புரிந்துணர்வு உள்ளது." என்றெல்லாம் சோபாசக்தி எழுதியிருந்தாரே அது பற்றி உங்கள் கருத்தென்ன?//

    ஆமாம் அவர் கருத்து தெரிந்தால் ஈழம் வந்து விடும். பிரபாகரன் பங்கரை விட்டு வந்து விடுவார்.

    //சோபாசக்தி எழுதிய கருத்துடன் உடன்படுவீர்களென்றால், ஊடகக் கிரிமினல்களை ஆதரிக்க வில்லை என்றும், இந்திய அரசின் பயங்கரவாதத்தை-கொலைவெறியை-கபடநாடகத்தை ஆதரிக்கவில்லை என்றும் ஏன் நீங்கள் சொல்லுவதில்லை. எப்படி புலிகளை ஆதரிக்காததை இரண்டு வரிப் பின்னூட்டங்களில் கூட டிஸ்கிளைய்மராக பறை சாற்றிக் கொண்டிருக்கிறீர்களோ, அதே போல் செய்யத் தோன்றவில்லை.//

    உங்களை போனற மண்டை காலி கேசு என்ன சொன்னாலும் ஒத்துக்க போவதில்லை. அப்புறம் எதுக்கு கேள்விகள்

    //நீங்கள் அவற்றை ஆதரிக்கிறீர்கள் என்று வெளிப்படையாக டோண்டு மாதிரி சொல்லி விட்டுப் போங்கள். சோ-இராம்-தினமலர் பார்ப்பனியப் பயங்கரவாத அரசியலை நீங்கள் ஆதரிப்பதால்தான் ஈழத்தில் அப்பாவி தமிழர்கள் கொல்லப் படுவதும், பெண்கள் வன்புணரப்படுவதும் புலிகளின் மேலான யுத்தமாக அல்லது பக்கவிளைவுகளாக உங்கள் கண்களுக்குத் தெரிகிறது. அதனால்தான் உங்களுக்கு டோண்டுவின் குடும்பத்தினர் மேல் இருக்கும் sensitivity ஈழத்துப் பெண்கள் மேல் இல்லை. பெயரிலியின் அதிர்ச்சி வைத்தியம் உங்களுக்கு மனச்சிதறலாகத் தோன்றுகிறது.//

    நானும் அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கிறேன்

    பெயரலி மகன் தற்கொலை வெடிகுண்டு கட்டி கொண்டு சாகட்டும். அல்லது சயனைட் கடித்து பரலோகம் போகட்டும்
    நிங்களும் உங்கள் மனைவி குடும்பமும் கிளிநோச்சி சென்று போரில் அகபட்டடு சயனைட் கடித்து சாகுவிராக

    எப்படி இருக்கு நம்ம அதிர்ச்சி வைத்தியம்?

    உங்களிடம் டோண்டுவை விட அதிகப் புரிதலை எதிர்பார்த்தேன். ஈழத்தில் அப்பாவிப் பெண்களின் வன்புணரலை ஆதரித்து எழுதிய டோண்டுவின் மனிதத்தன்மையற்ற ஈனத்தனமான இன்பத்தை விட்டுவிட்டீர்கள். டோண்டுவை உணரவைக்க முடியுமென்று தேவையில்லாமல் கற்பனை செய்து எழுதிய பெயரிலியின் *நாகரீகமில்லா* வார்த்தைகளைச் சரியாகப் பயன் படுத்திக் கொண்ட டோண்டுவின் சுயபச்சாதாப விளம்பரத்துக்கு வேறு சிலரைப் போல் நீங்களும் பலியாகி விட்டீர்கள். இதைத்தான் அனானியும் சுட்டிக் காட்டியிருக்கிறார் என நினைக்கிறேன்.

    நீண்ட நாட்களுக்குப் பிறகு வாக்குவாதத்தில் சந்திப்போமென நினைக்கவில்லை :-(


    அய்யோ பாவம்

    நன்றி - சொ. சங்கரபாண்டி

    ReplyDelete
  58. அமரர் ராசீவ் காந்தி மரணத்தை பேசி நீலி கண்ணீர் வடித்து ஒப்பாரி வைக்கும் 'டோண்டு வகைறாக்களே'[ அதே போல் காந்தியை சுட்டு கொன்ற கோட்சே வை பற்றியோ அன்னை இந்திரா காந்தியின் சாவை பற்றியோ யாரவது பேசுவீர்களா? தியாந்து சிங்கு என்ற சீக்கிய இனத்தவனால் தான் அன்னை இந்திராகாந்தி சுடப்பட்டார் கொல்லப்பட்டார் என ஒரு அவாளுக்கோ பேச இந்த நாட்டில் தைரியமோ திரணியொ உண்டா? வீடு தேடி வந்து உன் பயிரை இறைத்துவிடுவான் சீக்கியன்!

    அவனுடைய மனைவி நாடாளுமன்ற உறுப்பினராக வைத்து அழகு பார்ப்பதன் காரணம் என்ன? மன்னிப்பு கேட்பதென்ன? தமிழன் இளிச்சவாயன் என்பதாகும்..

    தமிழா இன உணர்வு கொள்! அது தெரியவில்லை என்றால் அடுத்தவனை பார்த்தாவது கற்றுக் கொள்!
    ஒரு சீக்கியனை பார்த்து ஒரு மராத்தியனை பார்த்து உன்னை வருடம் தோறும் இன்ஸ்டால் மெண்டில் அடிக்கும் கன்னடனை பார்த்து.. இவ்வளவு ஏன்?
    சோமாறி+பொந்து ராம்+செயலலிதா+சப்புற மணிசாமி +மணி ஆட்டும் ஐயர் இவர்களுடைய ஒற்றுமையை பாராட தமிழா! நம்மால் மட்டும் ஒற்றுமையாக இருக்க முடியாதா?

    ReplyDelete
  59. Sorry to type in english....


    Niruthungappa sandaiya.....

    Thuu

    ReplyDelete
  60. @வேலூர் வரதராஜ்
    தயவு செய்து பெயரிலி மற்றும் சங்கரபாண்டிக்கு எதிர் சாபங்கள் வேண்டாம். அப்புறம் அவர்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்?

    @பச்சைத் தமிழன்
    கோட்சேயோ, பியாந்த் சிங்கோ தூக்கிலிடப்பட்டு விட்டனர். பிரபாகரன் இன்னும் தேடப்பட்டு வரும் கொலை குற்றவாளி. மாட்டிக் கொண்டால் தூக்கு தண்டனை பெறவேண்டியவர். ஆகவே உங்கள் ஒப்பீடு சரியில்லை.

    அன்புடன்,
    டோண்டு ராகவன

    ReplyDelete
  61. //வால்பையன் - நிற்க, வெளி நாட்டில் வாழும் உங்களை போல் உள்ள அனானிகள் அங்கே என்ன செய்து இருக்குகிறீர்கள். வெறும் டயலாக் மட்டும் விட்டு கொண்டிருக்காமல் இலங்கை சென்று போராடலாமே!//
    மாட்டோம். எங்களுக்கு இது ஒரு பொழுது போக்கு. டோண்டு, ராம் , சோ ,புதிதாக உண்மைதமிழன் இவர்களுக்கு எதிராக ஸ்டண்ட் டயலாக் விட்டுக்கொண்டிருப்பது.

    ReplyDelete