நிரந்தர பக்கங்கள்

6/03/2010

சாதியே கூடாது என்னும் பதிவர்கள் அடிக்கும் கூத்து

சாதி என்பதே ஏதோ சொல்லக்கூடாத வார்த்தை என கூத்தடிக்கும் பதிவர்களுக்காகவே இப்பதிவு.

எதற்கு இந்த ஆஷாடபூதித்தனம்? சாதி என்பது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஏதேனும் ஒரு முறையில் இருந்து வந்திருக்கிறது என்றால், அதற்கு பலமான சமூக காரணங்கள் இருந்திருக்க வேண்டும்தானே. அதையெல்லாம் மனதில் கொள்ளாது அதனால் விளையும் சில சங்கடங்களை மட்டும் மனதிலிருத்தி, அதை அப்படியே ஒழிக்க வேண்டும் எனக்கூறுவது தவறு என்பதை விட பிராக்டிகல் இல்லை என்றுதான் கூறவேண்டும்.

நான் ஏற்கனவேயே பலமுறை கூறியபடி அவரவர் வீட்டில் கல்யாணம் வீட்டுப் பெரியவர்களால் நிச்சயம் செய்யப்படும்போது சுய சாதியில்தான் வரன் தேடுகின்றனர். அப்படியின்றி ஆரம்ப ஜோரில் கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்களின் குழந்தைகள் படும்பாடு அக்குழந்தைகள் கல்யாண வயதுக்கு வரும்போது வெளிப்படையாக தெரிகிறது. அதையெல்லாம் கூட விட்டு விடுவோம், ஏனெனில் பலமுறை கூறப்பட்டுள்ளவை, ஆகவே இன்னொரு முறை கூறி எப்பயனும் இல்லை.

அதே போல சாதி ஒழிப்புக்காக பாடுபடுவதாக பொய்யுரைக்கும் கட்சிகளும் கூட தேர்தல் சமயத்தில் தங்கள் வேட்பாளர்களின் சாதி அவர்கள் கேட்கும் தொகுதிக்கு மேட்ச் ஆகிறதா என்றுதான் பார்க்கின்றனர்.

அதே சாதி மேட்டர் நமது பதிவுலகில் படுத்தும் பாட்டையும் பார்ப்போம்.

பார்வதி அம்மாள் மேட்டரில் டோண்டு ராகவன் பதிவு போட்டானா? அவ்வளவுதான் சீறி எழும் சாதி எதிர்ப்பு செம்மல்கள் முதலில் அடையாளப்படுத்துவது அவனது பார்ப்பன சாதியைத்தான். இது ஒன்றும் ரகசியமில்லைதான், ஆனால் அவர்களது பார்ப்பன வெறுப்புதான் அப்படி வெளியே வருகிறது. அதற்கு முக்கியக்காரணமே அந்தந்த சாதியினர் தம் குழந்தைகளுக்கு சிறுவயதிலிருந்தே சொல்லிக் கொடுத்ததுதான். பாப்பானுங்களெல்லாம் அப்படித்தான் என சர்வ சாதாரணமாகக் கூறிவிடும் அம்மாதிரி சாதிபுத்தியுடன் செயல்படும் பெரியவர்களை பார்த்து வளர்ந்த அக்குழந்தைகளில் பலர் இப்போது பதிவர்கள். அவர்கள் வேறு எப்படி எழுதுவார்கள்?

பார்ப்பனர் யாரும் தளத்தில் அப்போது இல்லை என்றால் என்ன செய்வார்கள்? பதிவர் வளர்மதி செய்தது போல செய்வதும் உண்டு. சுகுணா திவாகரிடமிருந்து கடனாக வாங்கிய கணிசமான தொகையை திருப்பித்தர மனமில்லையென்றால் என்ன செய்யலாம்? ஆகா கிடைத்து விட்டதே சாக்கு? சுகுணா பிள்ளைமார் சாதியை சார்ந்தவர். அவர் சாதிப்புத்தியைத்தான் காட்டுகிறார். கூடவே போனசாக சுகுணாவின் தோழர் வரவனையானும் பிள்ளைமார் என உண்மையுரைத்தால் வம்புக்கு அலைபவர்கள் வேண்டாம் என்றா கூறப்போகிறார்கள் என்பதும் அவரது அனுமானமாக இருக்க வேண்டும். (இன்னும் க்டன் திருப்பித் தரப்படவில்லை).

அதுவரை தெரியாது இருந்த சுகுணா திவாகர் மற்றும் வரவனையானின் பிள்ளை சாதி வேர்கள் தெரிந்ததுதான் மிச்சம். மற்றவரை வாய் கூசாது பாப்பான், பாப்பார புத்தி என்றெல்லாம் ஏசும், போலி டோண்டு தன் வீட்டுப் பெண்களையும் திட்டினால் கூட அவனுக்கு கருத்து சுதந்திரம் அளிக்க வேண்டும் என்றெல்லாம் பேசிய சுகுணாவே தன்னையும் சாதிபுத்தி எனத ஒருவன் திட்டியபோது மனம் ஒடிந்து பதிவுலகையே விட்டுப் போகிறேன் என்று கூத்தும் நடந்து முடிந்ததில் அவரது இரட்டைநிலை வெளியில் வந்ததுதான் மிச்சம். அதே சமயம் உத்தபுரம் விவகாரத்தில் தனது சாதியினர் செய்த வன்கொடுமை பற்றி அவர் பேசியதாகத் தெரியவில்லையே என்ற உண்மையும் மனதில் படுகிறது.

சமயம் கிடைக்கும்போதெல்லாம் பாப்பான் பாப்பான் என திட்டிய அருள் என்னும் பெருந்தகை ஒரு படையாச்சி என்பது வினவு பதிவு ஒன்றில் அவர் இட்ட பின்னூட்டங்களிலிருந்து தெரிய வர, நான் அதுகுறித்து போட்ட இப்பதிவில் வந்து மேலும் தனது வன்னிய பாசத்தை வெளிப்படுத்திய அவரது வண்டவாளம் மேலும் தண்டவாளமேறியது இன்னொரு தமாஷ்.

நர்சிம் சந்தனமுல்லை விவகாரம் இன்னொரு eye opener. அது பற்றிய வினவின் பதிவில் நர்சிம் பார்ப்பனர், பைத்தியக்காரன் என்னும் சிவராமன் இன்னொரு பார்ப்பனர், ஜ்யோவ்ராம் சுந்தர் பார்ப்பனர் (ஏற்கனவே தெரிந்த விஷயம்தான்), சாருநிவேதிதாவின் மனைவி பார்ப்பனர், இன்று நர்சிம்முக்கு ஆதரவு தரும் யுவகிருஷ்ணா, அதிஷா, இரும்புத்திரை… ஆகியோர் சாருநிவேதிதாவின் அபிமானிகள் என்ற காரணத்திற்காகவே நர்சிம்மை வெட்கம், நேர்மை, சுரணையின்றி ஆதரிக்கிறார்கள் என்றெல்லாம் தாராளமாக ‘உண்மைகள்’ அவிழ்த்துவிடப்பட்டுள்ளன.

ஆனால் சந்தனமுல்லையின் சாதியை கூறாது கவனமாக தவிர்த்துவிட்டது வினவின் அப்பதிவு. அதனால் என்ன அவர் வன்னியர் என்பதை எதிர் கேம்ப் போட்டுக் கொடுத்தது மட்டுமின்றை ஆர்கூட்டில் வன்னியர்கள் குழுவிலும் இருக்கிறார் என்றும் கூறிவிட்டதே. சிவராம் பார்ப்பனீய சிந்தனைகள் இல்லை என வினவு கூறினாலும் அப்படியில்லை என சுகுணா திவாகர் பிள்ளைவாள் அழுத்தம் திருத்தமாக கூறிவிடுகிறார்.

இப்போது என்னவென்றால் யார் யாரை தாக்குகிறார்கள் என்பதே புரியவில்லை. இந்த அழகில் சிவராமன் நர்சிமிடம் கணிசமான கடன் வாங்கியுள்ளார் என்பது வேறு தெரிய வருகிறது. நர்சிம்மின் முதுகில் குத்திய பின்னால் அவர் அந்தக் கடனையெல்லாம் கொடுத்துவிடுவாரா அல்லது இன்னொரு வளர்மதியின் கதை வருமா என்பதை பார்க்க வேண்டியுள்ளது. தன் ந்ண்பரானாலும் அவரை கண்டித்தேன் என பெருமையாகக் கூறிக்கொள்ளும் சிவராமன் தனது நண்பனுக்கு சந்தனமுல்லையால் ஓராண்டுக்கும் மேலாக வந்த டார்ச்சர் பற்றி கணமேனும் நினைத்துப் பார்த்ததாகத் தெரியவில்லை.

மேலும் உதாரணங்கள் கொடுத்துக் கொண்டே போகலாம், ஆனால் எனக்கே போர் அடிக்கிறது. ஆகவே இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். ஒரே ஒரு வார்த்தை. சாதியே பார்க்காதவர்கள் என கூறிக்கொள்ளும் பெருந்தகைகள் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்வது நலம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்


பின்சேர்க்கை
நான் இப்பதிவை இட்ட பிறகுதான் ஜ்யோவ்ராம் சுந்தர் மற்றும் பைத்தியக்காரனின் லேட்டஸ்ட் பதிவுகளை படித்தேன்.

சிவராமுக்குத்தான் எத்தனை இழப்புகள்? தேவையா பைத்தியக்காரன் உங்களுக்கு இதெல்லாம்? நர்சிமிடம் பணம் ‘கடனாக வாங்கியதை’ குறிப்பிட்டதும் நீங்களே. நர்சிம் இதுவரை எங்கும் அதை சொன்னதாக நான் அறியவில்லை. இப்போது அதை நீங்கள் திருப்பித் தருவதைத் தவிர வேறு வழியில்லை. அதற்கு வினவோ சந்தனமுல்லையோ உங்களுக்கு உதவப் போகிறார்களா?

ஒரு சகபார்ப்பனரை இகழ்வதில் அப்படி என்ன மகிழ்ச்சி? அதனால் எல்லாம் உங்களுக்கு இணைய தாசில்தார்கள் ஏதேனும் சான்றிதழ் தந்துவிடப் போகிறார்களா? ஆனால் ஒன்று உங்களை திட்டவும் அதே இணைய தாசில்தார்கள் நீங்கள் பார்ப்பான் என்பதை உபயோகப்படுத்திக் கொள்ளுவார்கள். ஆணாதிக்கம் பார்ப்பனருக்கு மட்டும் உரியதா? மற்ற சாதிக்கார ஆண்கள் அத்தனைபேரும் பெண்ணிய வாதிகளா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

201 comments:

  1. //அவர்களது பார்ப்பன வெறுப்புதான் அப்படி வெளியே வருகிறது. அதற்கு முக்கியக்காரணமே அந்தந்த சாதியினர் தம் குழந்தைகளுக்கு சிறுவயதிலிருந்தே சொல்லிக் கொடுத்ததுதான். //
    இப்பகூட பாருங்க இந்த கம்யுனிஷ சொம்பு தூக்கிகள் பாதிக்கப் பட்டது ஒரு பார்ப்பனன் என்றால் இவ்வளவு எரிய விஷமாக ஆக்கியிருக்க மாட்டாங்க.

    ReplyDelete
  2. மொத்தமாக பார்த்தால் இந்த பதிவு பதிவுலகின் உண்மையென்றாலும் பதிவுலகின் அழகைக் கெடுக்கிறது

    ReplyDelete
  3. இந்த கோவிக் கண்ணன் என்பவர் யாதவர் சாதி என்று linked மூலம் ஒருவர் கூறினார் எந்தளவு உண்மையென்று அவரே மறுமொழியிடுவார் என நம்பலாம்.

    ReplyDelete
  4. திரு. ராகவன்,

    இந்த பதிவு சாதி அடையாளங்களை தவிர்க்க இயலாது என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. அதற்கு என் கண்டனங்கள்.

    கீழ்தர சாதி அரசியல் செய்பவர்களையும் செய்ய முனைபவர்களையும் உதாரணமாக காட்ட இயலாது.

    சாதி அடையாளம் காட்டாத பேர்கள் பெரும்பான்மையோர் இருக்கிறார்கள்.

    அன்புடன்,
    சபரிநாதன் அர்த்தநாரி.

    ReplyDelete
  5. சாதி என்பது உயர்வு தாழ்வு குறிக்கும் இழி சொல்லாகிவிட்டது.. அதனால்தான் சாதி குறித்து பேசவேண்டாம் என சொல்கிறோம்.. தனிப் பட்ட கருத்துகளுக்கு சாதி லேபில் ஒட்டி ஆதரவாளர்களை பேருக்கும் தந்திரம் கீழ்த்தரமானது இல்லையா.

    வினவில் எழுதிய சிவராமன் தான் சார்ந்த சாதியை மட்டமாக எழுதுகிறார்.., அதன் தலைவர் மருதய்யன் அவர் சார்ந்த சாதியை திட்டும் குழுவுக்கு தலைவர்..?

    தனிப்பட்ட வக்கிரங்கள் சாதிப் பெயரால் அலங்கரிக்கப் படுகிறது.. இது அசிங்கமாக இருக்கிறது என்பதால்தான் சாதியை இழுக்க வேண்டாம் என்கிறோம்..

    ReplyDelete
  6. இன்றைக்கு பேசுவதற்கு ஒரு டாபிக் ஆரம்பிச்சுட்டார்..

    நடத்துங்கப்பா

    ReplyDelete
  7. கீழ் சாதி,
    மேல் சாதி,
    நடு சாதி,
    ஆண் சாதி,
    பெண் சாதி
    என்ற எல்லா சாதிகளையும் மறந்து ..

    கையில் பேனா பிடிக்கும் சாதி என
    ஒற்றை குடையின் கீழ் வாழ முயற்சிக்கலாமே தோழர்களே.....

    ReplyDelete
  8. //smart said...

    இந்த கோவிக் கண்ணன் என்பவர் யாதவர் சாதி என்று linked மூலம் ஒருவர் கூறினார் எந்தளவு உண்மையென்று அவரே மறுமொழியிடுவார் என நம்பலாம். //

    ஆகா.....அந்த ஒருவருக்கு என் மலத்தின் நிறம் என்ன என்று கூட ஊகமாக தெரியும் போல இருக்கு.

    ReplyDelete
  9. @கோவி கண்ணன்
    உங்களை பற்றி வந்த பின்னூட்டத்தை மிகத் தயக்கத்துடன் வெளியிட்டேன். அது அனானி பின்னூட்டமாக இருந்திருந்தால் ரிஜக்ட் செய்திருப்பேன்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  10. /இந்த பதிவு சாதி அடையாளங்களை தவிர்க்க இயலாது என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. அதற்கு என் கண்டனங்கள்./

    திரு சபரிநாதன் சொல்லியிருப்பது ஒரு உடோபியன் கனவாக மட்டுமே எனக்குப் படுகிறது!

    சாதீயப் பிடிமானம் அல்லது சுயசாதி அபிமானம் என்பது வெறும் போர்வை, முகமூடி மட்டும் தான்! மிகக் குறைந்த தருணங்களில் மட்டுமே அது ஒரு பாதுகாப்பு உணர்வைத் தருவதாக, ஒரு நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கிறது.

    சாதீய உணர்வைப் பயன்படுத்திக் கொள்பவர்கள், எதோ தங்களுடைய சாதிக்கு இன்னார் அல்லது இன்ன சாதியினரால் என்னவோ பெரிய தீங்கு இழைக்கப் பட்டுவிட்டது போல ஒரு சித்திரத்தை ஏற்படுத்தி, ஒரு கும்பலின் ஆவேசத்தைத் தூண்டிவிட்டு, அதன் மறைவில் தங்களுடைய காரியத்தை சாதித்துக் கொள்கிறார்கள்.

    வேடிக்கை என்னவென்றால், இவர்கள் அத்தனை பேரும் தாங்கள் சாதீய உணர்வே இல்லாதவர்கள் போலவும், சாதீய மறுப்பாளர்கள் மாதிரியும் போடுகிற வேஷம் தான்!

    இங்கே இரண்டு அல்லது மூன்று பதிவர்களுக்கிடையில் நடந்த ஈகோ பிரச்சினை, என்னென்ன வகையில் ஊதி ஊதிப் பெரிதாக்க முடியுமோ அத்தனை வகையிலும் முயற்சி செய்யப்பட்டு, அதன் கனம் தாங்க முடியாமல் அதுவாகவே படுத்து விட்டது!

    ஊதப்பட்ட நிறைய விஷயங்களில் சாதியும் ஒன்று, அவ்வளவு தான்!

    ஒரு பதிவர் அல்லது வலைப்பதிவைப் புறக்கணிக்க வேண்டும் என்று இரண்டு தரப்பு ஆதரவாளர்களுமே கேட்டது உச்சபட்ச காமெடியாகிப் போனதை இன்னமும் எவரும் புரிந்து கொண்டமாதிரித் தெரியவில்லை.

    இன்னொரு பதிவர் சந்திப்பில் எல்லாம் சரியாகிப்போய் விடும்! ஆஹா!வடை போச்சே என்று குரல்கள் கேட்கும்! அப்புறம் இப்படி ஒருத்தரை ஒருத்தர் முதுகில் குத்துகிற வேலை மறுபடியும் ஆரம்பிக்கும்!

    அது பாட்டுக்கு அது!

    வெங்காயம்!

    இது பாட்டுக்கு இது!

    ReplyDelete
  11. // dondu(#11168674346665545885) said...

    @கோவி கண்ணன்
    உங்களை பற்றி வந்த பின்னூட்டத்தை மிகத் தயக்கத்துடன் வெளியிட்டேன். //

    விளக்கத்திற்கு நன்றி !

    ReplyDelete
  12. டோண்டு, ஜாதீய உணர்ச்சிகள் மறைவதற்கு இன்னும் சில ஜெனரேஷன்கள் ஆகும் என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால் முப்பாட்டன் காலத்தில் இருந்ததை விட இன்று ஜாதியின் தாக்கம் குறைந்திருக்கிறது என்பதும் உண்மைதானே? அப்படி குறைந்திருப்பதற்கு காரணம் ஜாதி தவறு ஜாதி தவறு என்று சொல்லிக் கொண்டே இருந்ததுதானே? என்னை விட பல வருஷ அனுபவம் உள்ள உங்களுக்கு தெரியாததா? அப்படி இருக்கும்போது ஜாதியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற தொனியில் நீங்கள் எழுதி இருப்பது ஆச்சரியமாக இருக்கிறதே?

    வினவு குழுவினர் ரேவேர்சே காஸ்டீசம் பார்ப்பவர்கள் என்பது என்ன புது விஷயமா? அந்த மாதிரி நாலு பேர் இருந்தால் ஜாதி தவறான விஷயம் என்று உண்மையாக நினைப்பவர்கள் நாலாயிரம் பேர் இருப்பார்கள் என்றுதான் நான் அனுமானிக்கிறேன். இந்த நாலாயிரம் பேரில் மூவாயிரம் பேர் சொந்த ஜாதியில் கல்யாணம் செய்து கொண்டிருக்கலாம். நினைப்பதை எல்லாம் செய்துவிடும் அளவுக்கு நம் சமூக குடும்ப அமைப்புகளில் சுதந்திரம் இல்லை என்பது உங்களுக்கு தெரிந்ததே. அவர்கள் பிள்ளைகள் தலை எடுக்கும்போது இது இரண்டாயிரமாக குறையும் என்று நம்புகிறேன்...

    ReplyDelete
  13. இது தெரியாம ஒரு ஆளு சாதிகள் இல்லையடி பாப்பான்னு பாடிடருங்க...
    அவர மன்னிச்சிருங்க.....

    வி.சுப்பு

    ReplyDelete
  14. only male and female, so minus vote for your article., not for you

    ReplyDelete
  15. @ஷர்புதீன்
    அப்படிச் சொல்லித்தானே திருநங்கைகளை ஒதுக்கி வைத்துள்ளனர்?

    பை தி வே நீங்கள் ஷியாவா, சுன்னியா, அஹமதியாவா, மரைக்காயரா, சூஃபியா?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  16. //ஆனால் முப்பாட்டன் காலத்தில் இருந்ததை விட இன்று ஜாதியின் தாக்கம் குறைந்திருக்கிறது என்பதும் உண்மைதானே?//
    இல்லை, அப்படி ஒரு தோற்றம் மட்டுமே.

    //அப்படி குறைந்திருப்பதற்கு காரணம் ஜாதி தவறு ஜாதி தவறு என்று சொல்லிக் கொண்டே இருந்ததுதானே?//
    ஒரு வாதத்துக்கு சரி என வைத்துக் கொண்டாலும் அதற்கு பொருளாதார காரணங்களும், வாழ்வில் அவரவருக்கு ஏற்படும் மன அழுத்தங்களுமே அதற்கு காரணம்.

    ஆனால் முதல் வாய்ப்பிலேயே சாதி வந்து குதித்து விடுகிறது.

    அது ஒழிய வேண்டும் என்று நீங்கள் சொல்லும் அதே நேரத்தில் அதனால் பல சமூக நன்மைகளும் விளைந்திருப்பதால்தான் அது இன்னும் நிலைத்திருக்கிறது என நினைப்பவர்களும் உண்டு.

    மேலும் குழு அமைப்பது என்பது மனிதனின் அடிப்படை குணம். இது உலகளாவிய பிரச்சினை.

    ஓடும் நதியில் எதிர் நீச்சல் ஏன் போட வேண்டும்? நீரோட்டத்தோடேயே போய் மெதுவாக அக்கரையில் ஏறுவதுதான் புத்திசாலித்தனம்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  17. Dondu Sir
    I had written a comment in suguna's latest post about Sivaraman saying the same point.Till last evening , he never published it.

    Suguna Diwakar also revealed Valarmathi caste as Mudaliar and made reference to his sexual orientation.Also, because jyovaram sundar supported valarmathi, he revealed jyovaram's caste too!

    Now, he has revealed sanadamullai caste as vanniyar and also revealed caste of balabarathi,badri etc.

    why should he reveal caste of ppl who attack him rather than attack their points? the same hypocrite who defended poli dondu's right to make remarks again other people's mothers cant handle critical remarks against him and responds by revealing the caste of his critics!!!

    All these people under periyarist mask are casteist to the core as reflected by their remarks.

    I put a similar comment on suguna's blog which he has not released.

    ReplyDelete
  18. இன்றைய உலகில் அதுவும் இந்தக் காலகட்டத்தில் ஜாதி என்பது ஒரே அடியாகத் தள்ள முடிந்த விஷயம் இல்லைதான்.ஆனாலும் ஜாதியை தத்தம் வீட்டுக்களுள்ளும் குடும்பங்களுக்குள்ளும் வைத்து விட்டு வெளியே வரலாமே. குறிப்பாக உயர்வு தாழ்வு என்ற அளவுகோல்களை விட்டுவிடலாமே!பல பேர்களின் சிந்தனை அவரவர் சமூகங்களினால் பாதிக்கப் படுகிறது என்றாலும் அவற்றைக் கட்டுப்படுத்துவதில் நாம் படித்த படிப்பிற்கும் நாம் அடைந்த அனுபவங்கட்கும் பெரும் பங்கு இருக்க வேண்டும். பதிவர்கள் பலரின் பதிவுகள் இவர்கள் படித்தவர்கள் தானா என்ற ஐயத்தை ஏற்படுத்தும் விதமாக இருக்கின்றன.
    ---பணிவரையன்

    ReplyDelete
  19. நண்பர் டோண்டு,

    இதில் வருத்தப்பட வேண்டிய விடயம், நடுநிலை பதிவர்கள் என்று நாம் நினைக்கும் சிலரே, சமயம் கிடைக்கும் பொழுது ஜாதி முத்திரை குத்தி தூற்ற விழைகிறார்கள்! இதில் லேட்டஸ்ட் என்ட்ரி திரு வால் பையன்! நான் யாரென்பதே அவருக்கென்ன, யாருக்கும் தெரியாது! நான் ஆணா, பெண்ணா தமிழனா, தெலுங்கா, கருப்பா, சிவப்பா, இந்துவா, பௌத்தனா, ரெட்டியாரா, தேவரா, ஐயரா, அருந்ததியரா, நாயுடுவா, பள்ளரா, படுகரா, நாயக்கரா இல்லை வேறு எதாவதா, என்பது கூட ஒருவருக்கும் தெரியாத பொழுது, அவர் மட்டும் நான் பார்பனர் என்று சொல்லி திட்ட ஆரம்பித்து விட்டார்! கேட்டால் அதற்க்கு ஒரு விளக்கமும் கொடுப்பார்! நல்ல முற்போக்காளர்!

    நாண்பர் ஆர்வி,

    நீங்கள் சொல்லுவதில் பாதிதான் சரி! ஒருவர் தன்னுடைய ஜாதிபெயரை, தனிநபராக சொல்லுவதில் வேண்டுமானாலும் ஒரு வெட்கம் ஏற்ப்பட்டிருக்கலாம்! ஆனால் குழுவாக சேரும்பொழுது, அதுவே முதன்மை பெற்று மிக வீரியமாக படம் எடுத்து நிற்கிறது! ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் இது மாதிரி இல்லை! ஏனென்றால், இன்று நாம் பார்க்கும் "ஜாதிகளின் வடிவம்" அப்பொழுது இல்லை! சின்ன சின்ன பிரிவுகள் எல்லாம் consolidate ஆகிவிட்டன, தங்களின் இருப்பை பெரிதாக காட்டிக்கொள்ள!! அதற்க்கு உதவியது ஜாதி மறுப்பு பேசி ஆனால் அதை மட்டும் ஊக்குவித்த கூட்டங்களே!!

    ReplyDelete
  20. Another hypocrite is Senthazal Ravi.
    He had written a punaivu on Valarmathi sometime back and later deleted it.When Valar pointed this out recently, he said he realized his mistake after these years!!!

    Why cant Narsim also realize his mistake in same time period(say after 2 years) and give a comment like Ravi after 2-3 years? That is also kosher, right?

    ReplyDelete
  21. சாதிகள் ஒழியா என்பது ஒரு pessimisstic thought.

    சாதிகள் மதங்களின் வழியாகவே ஊடுருவின. இன்று மதங்கள் அவற்றை அனாதையாக விட்டுவிட்டன போல நடிக்கின்றன. மதங்களின் எழுதப்பட்டது எழுதப்பட்டதே. But it is dormant. That is all.

    மதவாதிகள் மாறமாட்டார்கள். ஆனால் காலத்துக்குத் தக்க அடக்கிவாசிப்பார்கள்.

    அரசியல்வாதிகளே இன்று சாதிகளை வளர்க்கிறார்கள். அதில் ஆதாயமிருப்பதால். சாதியினரும் விரும்புகிறார்கள் அந்த ஆதாயத்தில் ஒரு பங்கு அல்லது பெரும்பங்கு அவர்களுக்கும் கிடைப்பதால்.

    பதிவர்களிடையே நடக்கும் சாதிப்பிணக்குகள் - ஒரே வகை. பார்ப்பனர்-பார்ப்பனரல்லாதோர்.

    இதற்கும் அரசியல்வாதிகள் வளர்க்கும் சாதிகளுக்கும் தொடர்பில்லை. இது historical prejudice or historical animosity. Both are valid.

    சாதிகள் ஒழியுமா?

    ஒழியும். நவீன வாழ்க்கை வசதிகள் பெருகி அனைவரும் அவைகளுக்கு அடிபோடும்போது எல்லாம் பறந்துவிடும்.

    Single goal for all will corrode caste divisions. Brahmins will lose their hold in the religion voluntarily because it will be a hindrance to enjoy life.

    Urbanise villages more and more. Industrialise general life deeply.

    Sweep Tamilnadu with dense materialism.

    Castes will become the casualty.

    டோண்டு ராகவனுக்கு சிண்டுமுடிய subject கிடைக்காது.

    ReplyDelete
  22. // //சமயம் கிடைக்கும்போதெல்லாம் பாப்பான் பாப்பான் என திட்டிய அருள் என்னும் பெருந்தகை ஒரு படையாச்சி என்பது வினவு பதிவு ஒன்றில் அவர் இட்ட பின்னூட்டங்களிலிருந்து தெரிய வர, நான் அதுகுறித்து போட்ட இப்பதிவில் வந்து மேலும் தனது வன்னிய பாசத்தை வெளிப்படுத்திய அவரது வண்டவாளம் மேலும் தண்டவாளமேறியது இன்னொரு தமாஷ்// //

    நீங்கள் சொல்கிற எல்லாம் புரிகிறது. ஆனால், /அவரது வண்டவாளம் மேலும் தண்டவாளமேறியது/ என்பது மட்டும் தான் புரியவில்லை.

    வன்னியருக்காக பேசினால், பார்ப்பானை எதிர்த்து பேசக்கூடாது'ன்னு மனுதர்மத்துல இருக்கா என்ன?

    ReplyDelete
  23. //திரு சபரிநாதன் சொல்லியிருப்பது ஒரு உடோபியன் கனவாக மட்டுமே எனக்குப் படுகிறது!//

    உடோபியன் கனவும் உயர்ந்ததே. ஆனால் ”சாதி என்றாவது ஒழியும்” என்பது கனவல்ல என்பது எனக்கு தெரியும் ;)

    A utopia is an imaginative account of a perfect society or ideal commonwealth

    http://en.wikipedia.org/wiki/Utopia
    [வார்த்தை அறிமுகத்திற்கு நன்றி]

    1. வெளி நாடு வாழ் தமிழர்கள் எத்தணை பேர் சாதியை பிடித்து தொங்கி கொண்டிருக்கிறார்கள் ?
    2. தமிழ்நாட்டில் அலுவலக காரணங்களுக்காக மட்டுமே சாதி நினைவுறுத்தப்படும் மக்கள் நிறைய இருக்கின்றனர்.
    3. அன்று ஒடுக்கபட்ட மக்களையும் தெரியும் இன்று யாரும் சாதி பெயர் சொல்லி திட்டினால் 7 வருட தண்டனை உண்டு என்ற நிஜமும் தெரியும்.

    இதுவே நனவாகும் நிஜம்.

    ReplyDelete
  24. dondu(#11168674346665545885) said...

    @ஷர்புதீன் பை தி வே நீங்கள் ஷியாவா, சுன்னியா, அஹமதியாவா, மரைக்காயரா, சூஃபியா?///

    இது வம்புடன் கேட்கப்பட்ட கேள்வி...

    ReplyDelete
  25. வினவு என்பது ஒரு தனி நபர் இல்லை
    மண்டபத்தில் எழுதிக் கொடுப்பதை வெளியிடும் ஒரு அமைப்பு அவ்வளவுதான்.
    தியாகுவுக்கு நர்சிம் தண்ணி கொடுப்பதை நிறுத்தி விட்டதால் கோபம் கூடவே கொடுத்த பணத்தையும் திருப்பிக் கேட்டதால் .
    அதனால் பைத்தியக்காரன் சந்தில் புகுந்து சிந்து பாடி விட்டார்.
    மொத்தத்தில் நாறியது சந்தனமுல்லைதான்

    ReplyDelete
  26. க்ரெக்ட்.

    புலம்பெயர்ந்த தமிழர்களிடையே, ‘நாம் தமிழர்’ என்ற உணர்வுதான் இருக்கிறது. அங்கு சாதிகள் இல்லை.

    இன்னும் சொல்லப்போனால், பிஜி, டிரினிடாட், போன்ற நாடுகளில், Indian-origin people என்ற ஒட்டுமொத்தமான உணர்வு ஆகி, தமிழர்கள் பிற இந்தியர்களோடு கலந்து சாதிகளே இல்லெயென்றாகி விட்டது. இதை பாண்டே (முன்னால் டிரினிடாட் பிரதமர்) சொன்னார் ஒரு பேட்டியில்.

    இன்னிலையே சவுத் ஆப்பிரிக்காவிலும்.

    அமெரிக்காவிலும் இப்படி ஆகும் இன்னும் சில நூற்றாண்டுகள் செல்லின்.

    ReplyDelete
  27. //பை தி வே நீங்கள் ஷியாவா, சுன்னியா, அஹமதியாவா, மரைக்காயரா, சூஃபியா?//

    Lol...

    ReplyDelete
  28. அருள் படையாச்சி,

    நல்ல மாட்டுக்கு ஒரு சூடு.

    ReplyDelete
  29. //நான் ஏற்கனவேயே பலமுறை கூறியபடி அவரவர் வீட்டில் கல்யாணம் வீட்டுப் பெரியவர்களால் நிச்சயம் செய்யப்படும்போது சுய சாதியில்தான் வரன் தேடுகின்றனர். அப்படியின்றி ஆரம்ப ஜோரில் கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்களின் குழந்தைகள் படும்பாடு அக்குழந்தைகள் கல்யாண வயதுக்கு வரும்போது வெளிப்படையாக தெரிகிறது. அதையெல்லாம் கூட விட்டு விடுவோம், ஏனெனில் பலமுறை கூறப்பட்டுள்ளவை, ஆகவே இன்னொரு முறை கூறி எப்பயனும் இல்லை.//

    You are wrong. Both my parents are different caste and now i also married a girl from a different caste. I or my friends like me never face any problem in getting a girl. So it may be problem to whom want to get married in specific caste and with lots of conditions and expectations like dowry, job etc. If you really want a girl who loves you truly then caste is not at all a consideration.

    ReplyDelete
  30. //
    அன்று ஒடுக்கபட்ட மக்களையும் தெரியும் இன்று யாரும் சாதி பெயர் சொல்லி திட்டினால் 7 வருட தண்டனை உண்டு என்ற நிஜமும் தெரியும்.
    //

    நீங்கள் ஒருவரை பார்ப்பானப் பன்னாடை என்று திட்டலாம், ஒரு மணி நேரம் கூட ஜெயில் தண்டனை கிடைக்காது. இது தான் உண்மை.

    அப்படி ஜாதிப் பெயரைச் சொல்லித் திட்டினால் தண்டனை உண்டு என்று சொன்னால், வினவு, மிதக்கும் கக்கூஸ் குசுநா திவாகர், மற்றும் இன்னபிற பெரியார் கு.ந க்கள் எல்லாம் ஆயுட்காலம் முழுதும் ஜெயிலில் களி திங்கவேண்டியிருக்கும். அவ்வளவு முறை ஜாதியைச் சொல்லித் திட்டியிருக்கிறார்கள் அந்த ஜாதி வெறி பிடித்த மாவோ, ஸ்டாலின், பீ தின்னும் கம்யூனிஸ்டு பெரியாரிஸ்டு நாய்கள்.

    ReplyDelete
  31. //ஆனால் சந்தனமுல்லையின் சாதியை கூறாது கவனமாக தவிர்த்துவிட்டது வினவின் அப்பதிவு//

    அவர் மிகவும் பிற்படுத்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்த்வர் என எழுதியிருக்கிறது வினவு.

    இதற்கு மேல் வேறு எப்படி எழுதவேண்டும்?

    ஜாதிகளில் உயர்ந்த ஜாதியைச்சேர்ந்த்வர் என்றாலே போதும் - அன்னார் பார்ப்பனர் என்று எல்லாரும் புரிந்து கொள்வார்.

    அது போல இவர் வன்னியர் என்று எல்லாரும் புரிந்து கொள்வார்கள்.

    ReplyDelete
  32. Sabarinathan Arthanari,koottanchoru கூறிய கருத்துகளே என்னுடையதும்.

    ReplyDelete
  33. //அவர் மிகவும் பிற்படுத்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்த்வர் என எழுதியிருக்கிறது வினவு.//

    வாங்க வாங்க உங்கள் வரவு நல்வரவாகுக.

    நல்ல எழுதி தள்ளுகிறீர்கள். சூப்போரொ சூப்பர்.

    ReplyDelete
  34. Anonymous said...

    // //அருள் படையாச்சி,

    நல்ல மாட்டுக்கு ஒரு சூடு.// //

    பசுமாட்டுக்கா, எருமை மாட்டுக்கா?

    கோமாதா பசு மாட்டுக்கு சூடு போட்டா உங்களுக்கு பிடிக்காதே, அது பசுவதை பாவம் ஆகிவிடுமே - அதனாலதான் கேட்டேன்.

    ReplyDelete
  35. பல பதிவுகளில் பதிந்ததையே இங்கேயும் பதிந்து வைக்க விரும்புகிறேன்....

    ஜாதி,மதம்,இனம், வர்க்கம் என்கிற பெயரால் பிரிவினையை ஏற்படுத்தும் இந்த கும்பல், போலி டோண்டுவின் பாலிஷ் செய்யப் பட்ட வடிவமே!

    யார் எதை எழுத வேண்டும் என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் இங்கே எவருக்கும் இல்லை....

    ReplyDelete
  36. //
    பசுமாட்டுக்கா, எருமை மாட்டுக்கா?
    //

    அருள் படையாச்சி,

    அதெல்லாம் சூடு சொறனையிருக்குறவனுக்குத் தெரியும். ஒனக்குப் தெரியல்லன்னா அதுக்கு பசுவோ, எறுமையோ என்ன செய்ய முடியும் ?

    ReplyDelete
  37. டோண்டு சார்,

    ஒரு பதிவில் எத்தனை பேரை கோர்த்து விட்டு இருக்கிறீர்கள்...

    வளர்மதி - சுகுனா
    சுகுனா - பைத்தியகாரன்
    பைத்தியகாரன் - சுந்தர்
    பைத்தியகாரன் - பார்பபன எதிர்ப்பாளர்கள்

    வளர்மதி - பிள்ளைமார்
    சுகுனா = பிள்ளைமார்

    எத்தனை மோசடிகள் செய்த... குரூர பதிவெழுதிய ஒருவர் பார்ப்பனர் என்பதற்காக நியாயபடுத்தி கொண்டுள்ளீர்கள்... இது கேவலமான ஜாதி வெறி அசிங்கமாக தெரியவில்லை... நீங்கள் எத்தனை காலம் ஆனாலும் ஆதிக்க வெறியில் இருந்து திருந்த போவதில்லை...

    இதே நியாயம் போலிக்கும் பேச முடியாமல்... பொங்கி எழுந்தீர்களே? இப்போது போலி செய்த அதே குரூரத்தை செய்தது உங்கள் இன பார்ப்பனர் என்றால் நியாயமோ?

    ReplyDelete
  38. //குரூர பதிவெழுதிய ஒருவர் பார்ப்பனர் என்பதற்காக நியாயபடுத்தி கொண்டுள்ளீர்கள்..//
    மடத்தனமாகவெல்லாம் பேசக்கூடாது. ஆணாதிக்க பதிவுதான் ஒப்புக் கொள்ளுகிறேன். ஆனால் அது என்ன பார்ப்பனீய ஆணாதிக்கம்? என்னவோ கவுண்டனுங்க, படையாச்சிங்க, முதலியாருங்க அவங்க ஆருகிட்டவுமே ஆணாதிக்கமே இல்லாத மாதிரி இது என்ன எழவு பிதற்றல்?

    உம்முடைய பார்ப்பன வெறுப்புதான் இதில் தெரிகிறது.

    டோண்டு ராகவன்

    ReplyDelete
  39. //
    வினவு என்பது ஒரு தனி நபர் இல்லை
    மண்டபத்தில் எழுதிக் கொடுப்பதை வெளியிடும் ஒரு அமைப்பு அவ்வளவுதான்.
    //

    அந்த அமைப்பு எவ்வளவு பெரிய அமைப்பு ஐயா ?

    ஒரு 10 பேர் இருப்பாய்ங்களா ? 10 பன்னாடைகள் சேர்ந்து 10 ஆயிரம் பேர் இருப்பது போல் ஏன் சீன் போடுகிறார்கள் ?

    சுய புத்தியும் கிடையாது சொல்புத்தியும் இல்லாத, வேலை வெட்டியில்லாத பரீட்சையில் காப்பியடித்தே பாசான ஒரு முட்டாள் குரூப். இதுவரை அவனுங்கள தனியாவோ, குருப்பாவோ அவிங்களப் பெத்தவங்க கூட இவ்வளவு சீரியச எடுத்துப் பேசியிருக்க மாட்டாங்க.. அவிங்கள இவ்வளவு நாள் நீங்கள்ல்லாம் சீரியஸா எடுத்ததே அவிங்களுக்கு அவிங்க வாழ்க்கையில் ஆகப்பெரிய சாதனை.

    இப்பவாவது தெரிந்துகொள்ளுங்கள். மாவோ ஸ்டாலின் கம்யூனிசம் சமத்துவம் என்று எவனாவது சொன்னால் செருப்பைக் கழட்டி அவன் வாயிலேயே மொத்துங்க. இல்லாட்டி அவன் நம் மண்டையில் மிளகாய் அரைப்பான்.

    இந்த மாதிரி கம்யூனிசக் கன்றாவிகள் எல்லாம் தமிழ் வலைப்பதிவு உலகை ஆக்கிரமித்துக்கொண்டு யார் முற்போக்குவாதி, யார் பிற்போக்குவாதி என்று சான்றிதழ் கொடுத்தால் .......உருப்பட்டா மாதிரிதான்.

    ReplyDelete
  40. http://www.youtube.com/watch?v=BUVYLUV_MHI&NR=1

    ReplyDelete
  41. நான் வன்னியர்களுக்கு ஆதரவாக எழுதினேன் என்பதற்காக //வன்னிய பாசத்தை வெளிப்படுத்திய அவரது வண்டவாளம் மேலும் தண்டவாளமேறியது// என்று எழுதினார் டோண்டு.

    இன்னொரு 'அனதை அனானி' //நல்ல மாட்டுக்கு ஒரு சூடு.// என்று எழுதுகிறார்.

    இதெல்லாம் என்ன பிதற்றல் என்று தெரியவில்லை. நான் என்னுடைய கருத்தை எழுதினேன். எந்த இடத்திலும் நான் என் கருத்தை மாற்றிக்கொள்ளவில்லை. இதில், வண்டவாளம் மேலும் தண்டவாளமேறியது எங்கே? மாட்டுக்கு ஒரு சூடு விழுந்தது எப்படி?

    ReplyDelete
  42. பெரும்பான்மை பதிவர்கள் மனதில் எவ்வளவு துவேஷத்தை வைத்துக் கொண்டு வெளியில் எவ்வளவு போலி பதிவுகளை Hitஆவதற்காக எழுதியுள்ளார்கள்!
    இதே தமிழ் பதிவர்கள் தான் பிரபாகரன் தலைமையிலான புலிகளால் பல தமிழர்கள் கொல்லப்பட்டபோதும், இறுதியில் தங்கள் பாதுகாப்பிற்காக தன் சொந்த மக்களையே புலிகள் பலி கொடுத்த போதும் இன்றுவரை பிரபாகரன் புலி தான் இலங்கை தமிழர்களுடைய ஒரு பாதுகாப்பு என்று எழுதுபவர்கள். எவ்வளவோ தமிழ் தாய்மார்கள் இலங்கையில் சிகிச்சை பெறும் போது பார்வதி அம்மாள் என்ற ஒருவரின் தாயார் மட்டும் இந்தியாவில் இருந்து திருப்பி அனுப்புபட்டதற்கு தமிழ்நாடு தமிழ் பதிவர்கள் டோண்டுவை திட்டிதீர்த்ததையும் நினைத்து பார்க்கிறேன்.

    ReplyDelete
  43. வினவு கூட்டம், பார்ப்பன கூட்டம் - இரண்டும் ஒன்றுக்கு ஒன்று முரணான/எதிரான கூட்டம் என்று நான் நம்பவில்லை.

    ReplyDelete
  44. @அருள்
    பார்ப்பனர்கள் வன்கொடுமை செய்தார்கள் என ஒரு பயலும் நாக்கின் மேல் பல்லை போட்டு பேச இயலாது இருக்கும் நிலையிலேயே பார்ப்பனர் 100% சாதி வெறியர் என பொறுப்பின்றி பொதுப்படையாக பேசிய வன்னியகுலக்கொழுந்தான தாங்கள் வன்னியர் செய்த வன்கொடுமைக்கு மட்டும் ஏதோ சிலர் மட்டும்தான் செய்தார்கள் என்றெல்லாம் சப்பைக்கட்டு கட்டியபோதே அது வரை நீங்கள் வன்னியர் என மறைத்து வைத்ததை நீங்களே உளறிவிட்டீர்கள்.

    பிறகு உங்களுக்கு எல்லோரும் ஆப்பு அடித்ததையே பலர் இங்கு அவ்வாறு குறிப்பிடுகிறார்கள்.

    டோண்டு ராகவன்

    ReplyDelete
  45. டோண்டு ராகவன் Said...

    // //அது வரை நீங்கள் வன்னியர் என மறைத்து வைத்ததை நீங்களே உளறிவிட்டீர்கள்// //

    நான் எப்போ மறைத்து வைத்தேன்?

    ஓஹோ... பதிவுலகில் எழுத்ததொடங்கும்போதே யார் என்ன சாதி என்று சொல்லிவிட்டுதான் எழுத வேண்டுமோ?

    ReplyDelete
  46. by using the SMALL BELL,u have spoiled the tamil community!
    DONTU,just tell me,whether u have seen any poonool tilting the land?

    ReplyDelete
  47. //just tell me,whether u have seen any poonool tilting the land?//
    What nonsense are you blabbering? Who can "tilt" the land? Not even Hercules can do it.

    Dondu N. Raghavan

    ReplyDelete
  48. வன்கொடுமை என்றால் அருவாளைத்தூக்கி வெட்டுவது மட்டுமல்ல; வீடுகளைக் கொழுத்துவது மட்டுமல்ல. மற்றவகைகளிலும் காட்டலாம்.

    பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்வது என்பது not just rape only.

    Sexual harassment includes, mere double meaning talk also.

    GOI has issued a list of what constitutes sexual harassments, and therein, only one is rape. Else? All minor and major type.

    இதைப்போலவே, ஒருவனை ஜாதி சொல்லி ஒதுங்கிப்போ என்றாலே அது வன்கொடுமையாகும்.

    But I agree, in this, today Tamil paarppnars are the mildest in causing casteist slurs.

    அதற்கு காரணம் என்றுமே பார்ப்பனர்களுக்கு அதிகாரத்தைக்கண்டு பயம் உண்டு.

    Fear of law; fear of punishments for violation of law.

    That is good.

    But, that should not be the reason for not insulting dalits.

    மனத்தால், தலித்துகளை சமமாக ஏற்றுக்கொள்ளவேண்டும். அதை அவர்கள் செய்தார்கள் என்பதற்கு ஏதாவது நிகழ்ச்சியுண்டா என்றால்,

    டோண்டு எதிர் கேள்வி கேட்பார்:

    படையாச்சி செய்தானா?
    முதலி செய்தானா?
    தேவர் செய்தானா?
    நாடார், செட்டி செய்தானா?

    என்றுதான்.

    வாழ்க்கையில் சமம் என்பதைக்கூட கொடுத்துவிடுவார்கள்.

    பெருமாள் முன் சமம் என்பதைக் கொடுக்கவே மாட்டாரகள் ஐயங்கார்கள்.

    என்னைப்பொறுத்தவரை, இதுவெ ஒரு பெரிய வன்கொடுமையாகும்.

    ReplyDelete
  49. ////அஹமது இர்ஷாத் said...

    dondu(#11168674346665545885) said...

    @ஷர்புதீன் பை தி வே நீங்கள் ஷியாவா, சுன்னியா, அஹமதியாவா, மரைக்காயரா, சூஃபியா?///

    இது வம்புடன் கேட்கப்பட்ட கேள்வி... ////



    இப்படி கோபப்படுவதால் தான் , பிரச்சனை புள்ளி ஆரம்பமாகிறது .உண்மையான கேள்வி விடை தேடுவோம் ...

    ReplyDelete
  50. அதற்காக ஜாதிகளை மிக நிச்சயமாக ஆதரிக்க வில்லை . ஏதோ ஒரு வழியில் ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று

    ReplyDelete
  51. //அருள் said...


    நான் எப்போ மறைத்து வைத்தேன்?

    ஓஹோ... பதிவுலகில் எழுத்ததொடங்கும்போதே யார் என்ன சாதி என்று சொல்லிவிட்டுதான் எழுத வேண்டுமோ?////


    மிக நியாயமான கேள்வி , பதில் என்னவோ ?

    ReplyDelete
  52. //பார்ப்பனர்கள் வன்கொடுமை செய்தார்கள் என ஒரு பயலும் நாக்கின் மேல் பல்லை போட்டு பேச இயலாது//

    ஸ்ரீரங்கத்தில் பெரியநம்பியை ஜாதிபிரஷ்டம் ஏன் பண்ணினாங்க. அவர் ஆளவந்தாரின் தாழ்த்தப்பட்ட இன சிஷ்யனின் இறப்பில் பண்ணின காரியம் தானே.

    ReplyDelete
  53. //
    வினவு கூட்டம், பார்ப்பன கூட்டம் - இரண்டும் ஒன்றுக்கு ஒன்று முரணான/எதிரான கூட்டம் என்று நான் நம்பவில்லை.
    //

    தோடா...
    இத்த மட்டும் நீ வெனவு கையாண்ட சொன்னீன்னு வெச்சுக்கோ...

    அங்க உனக்கு தர்ம அடி நிச்சயம்.

    ReplyDelete
  54. டோண்டு!
    சாதியை ஒழிக்க வேண்டுமெனில் பிறப்புச் சான்றிதழ் முதற்கொண்டு சாதி பற்றி எங்கும் குறிப்பிட கூடாது. எந்த ஆவணங்களிலும் குழந்தை பிறந்ததில் இருந்து சாதியை குறிப்பிடக் கூடாது. கல்வி வேலை வாய்ப்பு போன்ற எல்லா இடங்களிலும் தகுதி ஒன்றினையே அடிப்படையாக வைத்து தேர்வு செய்திடவேண்டும்.
    சுதந்திரம் வாங்கி இவ்வளவு காலம் ஆகி நியாயப் படி சாதிகளுக்கான் ஒதுக்கீடுகள் குறைந்திருக்கவேண்டுமே? ஆனால் மேன்மேலும் கூடிக்கொண்டேயல்லாவா போகிறது. சாதி என்பது குஷடரோகம் போன்றது. சாதி அழுகலைக் காட்டி சலுகை பிச்சை எடுக்க அனவரும் வெட்கப்படும் நாளே சாதி ஒழிந்த திருநாள்.

    உடனே எனக்குப் பார்ப்பன முத்திரியோ மேல்சாதி முத்திரையோ குத்திவிடாதீர்கள்.

    ReplyDelete
  55. //
    மனத்தால், தலித்துகளை சமமாக ஏற்றுக்கொள்ளவேண்டும். அதை அவர்கள் செய்தார்கள் என்பதற்கு ஏதாவது நிகழ்ச்சியுண்டா என்றால்,
    //

    ஒருவன் உங்களை மதிக்கவில்லை என்று தெரிந்த பின்னும் அவனது மதிப்பை நீங்கள் ஏன் பெறத் துடிக்கவேண்டும் ?

    அவன் உங்களைக் கோவிலுக்குள் விடவில்லையா, நீங்கள் கோயில் கட்டிக்கொண்டு உங்கள் மதிப்பை ஏத்திக்கொள்ளுங்கள்.

    டீ க்கடையில் தனி கிளாஸ் கொடுத்தால் தனியாக நீங்களே டீ க்கடை வைத்துக்கொண்டு உங்கள் மதிப்பை மேம்படுத்திக்கொள்ளுங்கள்.

    ஏன் அடுத்தவன் தன்னை அவனுக்குச் சமமாக மதிக்கவேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறீர்கள். உங்களை நீங்களே கீழாக நினைப்பதனால் தான் அங்கீகாரத்துக்கு ஏங்குகிறீர்கள் ?

    ReplyDelete
  56. //ஸ்ரீரங்கத்தில் பெரியநம்பியை ஜாதிபிரஷ்டம் ஏன் பண்ணினாங்க. அவர் ஆளவந்தாரின் தாழ்த்தப்பட்ட இன சிஷ்யனின் இறப்பில் பண்ணின காரியம் தானே.//
    இன்னும் பின்னல போயி திரேதாயுகத்துக்கெல்லாம் போவதுதானே.

    இன்றைய இந்தியா பற்றி பேசவும்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  57. @ஜோ அமலன்
    பெருமாள் கோவிலில் என்ன நடக்கிறது நடக்கவில்லை என்றெல்லாம் கவலைப்படுவதை விட்டு கிறித்துவ தேவாலயங்களில் தலித் கிறித்துவர்களை மற்ற சாதி கிறித்துவர்கள் ஒடுக்குவது பற்றி பேசுங்கள்.

    பாதிரிமார்கள் சிறுவர் சிறுமியரை பாலியல் பலாத்காரம் செய்வது பற்றி கவலைப்படுங்கள். இந்துக்கள் விஷயத்தில் நீங்கள் தேவையில்லை.

    டோண்டு ராகவன்

    ReplyDelete
  58. //சாதி என்பது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஏதேனும் ஒரு முறையில் இருந்து வந்திருக்கிறது என்றால், அதற்கு பலமான சமூக காரணங்கள் இருந்திருக்க வேண்டும்தானே//

    கொலை,கொள்ளை,வன் புணர்ச்சி, ஓரினபுணர்ச்சி எல்லாம் கூட ஏதேனும் ஒரு முறையில் இருந்து வந்திருக்கிறது என்றால், அதற்கு பலமான சமூக காரணங்கள் இருந்திருக்க வேண்டும்தானே

    பி.கு: ஓம்கார் ஸ்வாமிகள் மாதிரி மறுமொழியை நீக்காது பதிலளிப்பீர்கள் என்று நம்புகிறேன்

    ReplyDelete
  59. ஸ்மார்ட்டு,
    கண்ணன் சாரோட சாதி தெரிஞ்சுட்டா வவுறு ரொம்பிருமா?
    "ஜாதி ந பூச்சோ சாதூ கி பூச் லீஜீயே க்யான்.
    மோல் கரோ தல்வார் கா ரஹன் தோ ம்யான்"

    ஒரு நல்ல ஆசாமிய பார்த்தா அவரோட ஞானத்தை விசாரி. சாதியை விசாரிக்காதே
    கத்திய பார்த்தா கத்தியோட கூர்மைய பரீட்சித்து பார்
    உறைய தூக்கி போடு

    ReplyDelete
  60. /////////
    //குரூர பதிவெழுதிய ஒருவர் பார்ப்பனர் என்பதற்காக நியாயபடுத்தி கொண்டுள்ளீர்கள்..//
    மடத்தனமாகவெல்லாம் பேசக்கூடாது. ஆணாதிக்க பதிவுதான் ஒப்புக் கொள்ளுகிறேன். ஆனால் அது என்ன பார்ப்பனீய ஆணாதிக்கம்? என்னவோ கவுண்டனுங்க, படையாச்சிங்க, முதலியாருங்க அவங்க ஆருகிட்டவுமே ஆணாதிக்கமே இல்லாத மாதிரி இது என்ன எழவு பிதற்றல்?

    உம்முடைய பார்ப்பன வெறுப்புதான் இதில் தெரிகிறது.

    டோண்டு ராகவன்
    ////////

    If you have read Narsim's story and still talk like this, you really need help. Narsim talks about his family as some high dignified one and mentions that pookkaari is from a low caste. Thats exactly what Tamilkural is referring here.

    You are a caste-chavnist! You can never understand how you are wrong. If you have seen the movie "A Beautiful Mind", you would realize that a person needs a lot of courage to realize his own mistake. You are not Dr.Nash, so its impossible for you.

    ReplyDelete
  61. யதிராஜ சம்பத் குமார்June 03, 2010 7:35 PM

    ஸ்ரீரங்கத்தில் பெரியநம்பியை ஜாதிபிரஷ்டம் ஏன் பண்ணினாங்க.//

    இது என்ன புது தகவல்? திருக்கச்சி நம்பிகளையும், பெரிய நம்பிகளையும் குழப்பிக்கறீங்க போலருக்கே? ராமானுஜர் அதுக்கு பரிகாரமா தஞ்சமாம்பாளை பர்மனெண்டா பிறந்த வீட்டுக்கு அனுப்பிச்சதையும் சொன்னா உங்கள நடுநிலையாளரா கருதலாம். எப்பவுமே ஒருபக்கத்தை மட்டுமே சொல்றீங்களே ஜெகந்நாதன்??

    ReplyDelete
  62. திரு.ராகவன்,

    //நான் ஏற்கனவேயே பலமுறை கூறியபடி அவரவர் வீட்டில் கல்யாணம் வீட்டுப் பெரியவர்களால் நிச்சயம் செய்யப்படும்போது சுய சாதியில்தான் வரன் தேடுகின்றனர். அப்படியின்றி ஆரம்ப ஜோரில் கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்களின் குழந்தைகள் படும்பாடு அக்குழந்தைகள் கல்யாண வயதுக்கு வரும்போது வெளிப்படையாக தெரிகிறது. அதையெல்லாம் கூட விட்டு விடுவோம், ஏனெனில் பலமுறை கூறப்பட்டுள்ளவை, ஆகவே இன்னொரு முறை கூறி எப்பயனும் இல்லை.//


    உண்மையில் சுய சாதி திருமணங்களில் ஏற்படும் மனதாங்கல்கள் மற்றும் வரதட்சணை வாங்கல் மற்றும் பெண் அடிமைத்தனம் என பல்வேறு பிற்போக்குத்தனங்கள் இருக்கவே செய்கின்றன. இதில் எப்படி சாதிக் கலப்புத் திருமணம் செய்பவருக்கு மட்டும் 'அதிக' கஷ்டம் ஏற்படும் ? பொருளாராத ரீதியில் நல்ல நிலையில் இருக்கும் பலருக்கும் சாதி கலப்பு திருமணங்களே உகந்ததாக இருக்கிறது என்பதை நடைமுறையில் பார்க்கிறேன். இவர்களே பல முறை காதல் திருமணமும் செய்து கொள்கின்றனர். கஷ்டப்படுபவர்கலெல்லாம் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களாகத் தான் இருக்கிறார்கள்.

    ReplyDelete
  63. //இது என்ன புது தகவல்? திருக்கச்சி நம்பிகளையும், பெரிய நம்பிகளையும் குழப்பிக்கறீங்க போலருக்கே? ராமானுஜர் அதுக்கு பரிகாரமா தஞ்சமாம்பாளை பர்மனெண்டா பிறந்த வீட்டுக்கு அனுப்பிச்சதையும் சொன்னா உங்கள நடுநிலையாளரா கருதலாம். எப்பவுமே ஒருபக்கத்தை மட்டுமே சொல்றீங்களே ஜெகந்நாதன்??
    ///

    நான் சொன்னது ஸ்ரீரங்கத்துல நட்ந்தது. வேற ஒன்னும் இல்லை

    ReplyDelete
  64. Anonymous said...

    //
    வினவு கூட்டம், பார்ப்பன கூட்டம் - இரண்டும் ஒன்றுக்கு ஒன்று முரணான/எதிரான கூட்டம் என்று நான் நம்பவில்லை.
    //

    தோடா...
    இத்த மட்டும் நீ வெனவு கையாண்ட சொன்னீன்னு வெச்சுக்கோ...

    அங்க உனக்கு தர்ம அடி நிச்சயம்.// //

    எங்கெல்லாம் பார்ப்பன தலைமை இருக்கிறதோ, அங்கெல்லாம் நேரடியாகவோ, மரைமுகமாகவோ பார்ப்பனீய சதியும் இருக்கும். இதுதான் பொது விதி, ஒருசில விதிவிலக்குகளும் இருக்கலாம்.

    வினவு விதியா, விதிவிலக்கா - என்பது விஷயம் தெரிந்தவர்களுக்குதான் தெரியும்

    ReplyDelete
  65. // அஹமது இர்ஷாத் said...
    இது வம்புடன் கேட்கப்பட்ட கேள்வி...//

    இதுல வம்பு என்ன இருக்குன்னு தெரியல...

    கொஞ்சம் விளக்கி சொன்னீங்கன்னா டோண்டு-க்கு கண்டனம் தெரிவிக்காலாம். விளக்குவீர்களா?

    ReplyDelete
  66. //
    கொலை,கொள்ளை,வன் புணர்ச்சி, ஓரினபுணர்ச்சி எல்லாம் கூட ஏதேனும் ஒரு முறையில் இருந்து வந்திருக்கிறது என்றால், அதற்கு பலமான சமூக காரணங்கள் இருந்திருக்க வேண்டும்தானே
    //

    அதற்கும் பலமான காரணம் இருக்கத்தானே செய்கிறது...சித்தூர் முரிகேசன் ?

    கொலை செய்பவன் போலீஸிடம் மாட்டும் போது அவனது மொடிவ் என்ன என்பதை நிறுவினால் தானே கோர்ட்டில் கேஸ் ஜெயிக்க முடியும். மோடிவ் இல்லாத கொலைகளுக்கு தூக்கு எல்லாம் கொடுக்க முடியாது.

    கொள்ளை, கற்பழிப்பு, எல்லாமே அப்படித்தான்.

    ஓரினப்புணர்ச்சி சட்டப்படி குற்றம் இல்லை.

    ReplyDelete
  67. ஐயா வேலையத்த வெட்டி ஆபிசர்களா..

    போய் புள்ளங்கள படிக்க வையுங்க..

    அடுப்படியில் போய் சமையலுக்கு உதவி பண்ணுங்க..

    சமைச்சு முடிஞ்சதும் மூக்கு முட்ட துன்னுட்டு படுத்து தூங்குங்க ...

    தூக்கம் வரலன்னா, மொட்ட மாடி போய் நாளைக்கு ஆபீஸ் போய் யாரை திட்டலாம், யார் கிட்டேயிருந்து திட்டு வாங்கலாம், யாருக்கு ஆப்பு வைக்கலாம், அதுவும் இல்லைனா நீங்க வேலை பாக்கிற கம்பெனிய எப்படி இழுத்து மூடலாம்ன்னு யோசிங்க ....

    வேலை வெட்டி இல்லாம சாதிய பத்தி பேசிகிட்டு இருந்தவங்க, இப்போ மதத்தையும் பற்றி பேச ஆரம்பிச்ட்டாங்க ..

    சாதி கலவரத்தையும் தூண்டி விட்டுட்டு இப்போ மதக் கலவரத்தையும் தூண்டப் போறாங்க.
    மக்களே கவனம்.

    ReplyDelete
  68. அருவி said...

    // //சாதியை ஒழிக்க வேண்டுமெனில் பிறப்புச் சான்றிதழ் முதற்கொண்டு சாதி பற்றி எங்கும் குறிப்பிட கூடாது. எந்த ஆவணங்களிலும் குழந்தை பிறந்ததில் இருந்து சாதியை குறிப்பிடக் கூடாது. கல்வி வேலை வாய்ப்பு போன்ற எல்லா இடங்களிலும் தகுதி ஒன்றினையே அடிப்படையாக வைத்து தேர்வு செய்திடவேண்டும்.// //

    இது ஒரு 'அக்மார்க்' பார்ப்பன சதி.

    ஏற்றத்தாழ்வு இருக்கும் வரை, அதற்கு காரணமான சாதி அடையாளத்தை மறைப்பது - அடக்குமுறையையும் சுரண்டலையும் தொடரவே வழிசெய்யும்.

    ஆதிக்க சாதிகள் அவர்களின் சாதி அடையாளத்தை கைவிடுவதில் ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதிகள் அடையாளத்தை கைவிடுவதால் - உரிமைகள்தான் பறிபோகும்.

    ReplyDelete
  69. //கொலை,கொள்ளை,வன் புணர்ச்சி, ஓரினபுணர்ச்சி எல்லாம் கூட ஏதேனும் ஒரு முறையில் இருந்து வந்திருக்கிறது என்றால், அதற்கு பலமான சமூக காரணங்கள் இருந்திருக்க வேண்டும்தானே//
    அவை சமூக காரணங்களால் வரவில்லை. அவை அடிப்படையாகவே மனிதனின் உணர்வுகள். அவற்றையெல்லாம் கண்ட்ரோல் செய்துதான் சமூகமே உருவாயிற்று. வாழு வாழ விடு தத்துவங்கள் கூர்மை பெற்றன. அவ்வாறு சமூகங்கள் இருந்த காலத்தில் குழுக்களாக செயல்படுவதில் பல ஆதாயங்கள் உண்டாயின. அவை இன்னும் இருக்கின்றன. ஆகவே சாதிகள்.

    நீங்கள் சொல்லும் கொலை, கொள்ளை, வன் புணர்ச்சி, ஓரினபுணர்ச்சி எல்லாம் இன்னும் இருக்கிறதென்றால் அவை மிகவும் பலம் வாய்ந்த அடிப்படை உணர்வுகள். அவற்றுடன் போராடிக் கொண்டேயிருப்பதைத் தவிர வேறு வழி இல்லை. ஆனால் சாதி என்பது அப்படியில்லை. குழுவாக்கமே. உலகமெங்கும் பல ரூபங்களில் அது உள்ளது. செழிக்கிற காரணமே அதை பாவிப்பவர்களுக்கு கிட்டும் ஆதாயமே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  70. // Jo Amalan Rayen Fernando said...
    வாழ்க்கையில் சமம் என்பதைக்கூட கொடுத்துவிடுவார்கள்.

    பெருமாள் முன் சமம் என்பதைக் கொடுக்கவே மாட்டாரகள் ஐயங்கார்கள்.//

    அப்போ திருப்பாணாழ்வார், உறங்கவில்லி தாசர்(ராமானுஜரின் சிஷ்யர்), திருக்கச்சிநம்பிகள்(ராமானுஜரின் ஆச்சாரியர்களில் ஒருவர்) இவங்கல்லாம் யாரு.

    முதல்ல நீங்க என்ன பண்ணுங்க உங்க ஆளுங்கள்-ல சில பிரிவினர் இறந்த பிறகு ஏன் இன்னும் பல ஊர்கள்-ல உங்க இனத்துல உள்ள உயர் பிரிவினரின் இடுகாட்டுல புதைக்க விடுரதில்லன்னு கொஞ்ச சொல்லுங்க.

    இன்னம் தெளிவா சொல்லணுமுன்ன எல்லாருக்கு கை இருக்கு வசதிபடுரப்போ முதுக சுத்தம் செஞ்சுக்குவாங்க. உங்களுக்கு (ஆடு நனயிதேன்னு ஓநாய் அழுகிற) அந்த கவலையே வேண்டாம்.

    Awaiting for a constructive reply from you

    ReplyDelete
  71. //சாதி என்பது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஏதேனும் ஒரு முறையில் இருந்து வந்திருக்கிறது என்றால், அதற்கு பலமான சமூக காரணங்கள் இருந்திருக்க வேண்டும்தானே

    This is first time I don't agree with your point of view, only reason for this system is each small communities tries to maintain social and political gain over other communities. any well educated and broad minded person should see beyond this.

    //ஆனால் முப்பாட்டன் காலத்தில் இருந்ததை விட இன்று ஜாதியின் தாக்கம் குறைந்திருக்கிறது என்பதும் உண்மைதானே?அப்படி குறைந்திருப்பதற்கு காரணம் ஜாதி தவறு ஜாதி தவறு என்று சொல்லிக் கொண்டே இருந்ததுதானே?

    True, for example in USA every kid is thought not to think based on color, any one even mentioning anything about your or other persons ethnicity is considered racist. because of this within 60 years there is so much improvement in people and the way they look at others. I wish this happens in our india.

    I am against anybody who attacks others or defends himself with caste identity, If I had the super power I will erase everyone's memory to forget their own caste :) then only they will not look at others as different from them.

    ReplyDelete
  72. அருள் said...
    //ஆனால் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதிகள் அடையாளத்தை கைவிடுவதால் - உரிமைகள்தான் பறிபோகும்.//


    உங்க ஜாதி உயரனுமுன்னு நீங்க நினைக்கிறது நியாமான ஆசை. ஆனா உங்க ஜாதி மட்டுமே உயரனுமுன்னு நீங்க நினைக்கிறது ரெம்ப தப்பு. இவ்வளவு பேசுறீங்களே உங்க வியாபாரத்துல ஒன்னுமே தெரியாத உங்க ஜாதிக்காரர வேலைக்கு வசுபீங்கள இல்ல வேலை தெரிஞ்ச அடுத்த ஜாதிக்காரனை வேலைக்கு வைப்பீங்களா? இதுல முன்னவர வச்சிபென்னு சொன்னீங்கன்ன பச்சை பொய்ன்னு ஊரே காரி துப்பும்.

    ஒன்னு மாவா சட்டில இருக்கணும் இல்லைனா எண்ணைல வெந்து சாப்டறதுக்கு பக்குவபட்ட பணியாரமா இருக்கணும். அரைவேக்காட இருந்தா வயித்துக்கு ஒத்துகாதுன்னு தூக்கி குப்பையில போட்டுருவாங்க.

    நீங்க எப்படி தெரியுமா மூணாவது வகை அதுவும் அறைவேக்கடுன்னு சொல்லி ஒதுக்ரவண உங்க 'சுயநீதி' அடிப்படைல திட்டுற தப்பை செய்யுற வகை. மாத்திமாத்தி பேசுற நபர தலைவருன்னு சொல்லு தொண்டை கிழிய கத்துற நீங்கல்லாம் அப்படிதான்.

    இதுக்கு ஒரே வார்த்தைல உங்களுக்கு
    பதில் சொல்லணுமுன்னா அடுத்தவன் வாழ்றத பாத்து வர்ற வயிதெரிச்சல்.

    ReplyDelete
  73. converse said...

    // //உங்க வியாபாரத்துல ஒன்னுமே தெரியாத உங்க ஜாதிக்காரர வேலைக்கு வசுபீங்கள இல்ல வேலை தெரிஞ்ச அடுத்த ஜாதிக்காரனை வேலைக்கு வைப்பீங்களா?...ஒன்னு மாவா சட்டில இருக்கணும் இல்லைனா எண்ணைல வெந்து சாப்டறதுக்கு பக்குவபட்ட பணியாரமா இருக்கணும். // //

    அறிவாளித்தனமா பேசரதா நீங்களே நினைச்சுகிட்டா அதுக்கு நான் ஒன்னும் செய்ய முடியாது.

    உரிமை என்று நாங்கள் சொல்வது - வகுப்புவாரி பிரதிநித்துவம். அதாவது மக்கள் தொகை விழுக்காட்டுக்கு ஏற்ப பங்கு. அந்த பங்கை அந்த சாதியில இருக்கிற 'தகுதி' படைச்சவனுக்கு கொடுக்கனும்'கிறதுதான். இதுல எங்க இருக்கு உங்க வெந்த பணியாரம், வேகாத பணியாரம் கதை எல்லாம்.

    வாத்தியார் வேளையில இடஒதுக்கீடுன்னா - அது B.Ed படிச்சு பாஸ் பண்ணினவனுக்கு தானே. மாடுமேய்க்கிறவனுக்கு இல்லையே.

    அதுசரி, சிதம்பரம் நடராசர் கோயில்'ல (சின்ன) மணியாட்டுர தீட்சிதர்கள் எல்லாம் - சட்டியில இருக்குற மாவா? வெந்த ப்ணியாரமா? - கொஞம் விளக்குங்களேன்.

    ReplyDelete
  74. அருள் said...
    //ஆனால் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதிகள் அடையாளத்தை கைவிடுவதால் - உரிமைகள்தான் பறிபோகும்.//

    உங்க வசதிக்கு ஏற்றார்போல மேல ஒரு dialogue குடுத்துருக்கீங்க பாருங்க அத தான் சொன்னேன்.

    //அறிவாளித்தனமா பேசரதா நீங்களே நினைச்சுகிட்டா அதுக்கு நான் ஒன்னும் செய்ய முடியாது.//

    ஜாதிய வச்சு மேல வரணுமுன்னு நீங்க நினைக்கிறப்போவே தெரியுது நீங்க ஒன்னுமே உருபடிய செய்ய மாடீங்கன்னு தெரிஞ்சு தான் உங்க லெவெலுக்கு கேள்வி கேட்டேன். அதுக்கு முதல்ல பதில் சொல்லுங்க...


    //அதுசரி, சிதம்பரம் நடராசர் கோயில்'ல (சின்ன) மணியாட்டுர தீட்சிதர்கள் எல்லாம் - சட்டியில இருக்குற மாவா? வெந்த ப்ணியாரமா? -
    கொஞம் விளக்குங்களேன்.//

    அவுங்க எப்படின்னு தெரியாது. ஆனா நீங்க எந்தவகைளையும் அரைவேக்காடு தான். அறைவேக்காடுன்னு கூட முழுசா சொல்ல முடியாது(!?) எந்த விசயத்தையும் ஒரே பக்கமா பாத்து பேசுரவருன்னு சொல்லலாம்.

    //அந்த பங்கை அந்த சாதியில இருக்கிற 'தகுதி' படைச்சவனுக்கு கொடுக்கனும்'கிறதுதான்//

    தகுதி இருக்குறவனுக்கு interview போன தன்னாலேயே கிடைக்கும்.
    அது ஒன்னும் MP சீட் இல்ல ஜால்ரா அடிச்சு வாங்குறதுக்கு.

    ReplyDelete
  75. //
    True, for example in USA every kid is thought not to think based on color, any one even mentioning anything about your or other persons ethnicity is considered racist. because of this within 60 years there is so much improvement in people and the way they look at others.
    //


    Race is not equal to caste. That being said, racism is still there. It did not disappear completely. Why ?

    ReplyDelete
  76. converse said...

    // //இதுக்கு ஒரே வார்த்தைல உங்களுக்கு
    பதில் சொல்லணுமுன்னா அடுத்தவன் வாழ்றத பாத்து வர்ற வயிதெரிச்சல்.// //

    உண்மையாகவே வயித்தெரிச்சல்தான்.

    பார்ப்பான் எல்லாம் சொந்த உழைப்புல மேல வந்த சாதியா இருந்தா வயிறு எரியாது. ஆனால், மற்றவங்களை சுரண்டியும், ஏமாற்றியும் மேலவந்த கூட்டத்த பார்த்தா - வயிறு எரியத்தானே செய்யும்.

    ஏகலைவன் வில்வித்தயை அழித்தது, சம்புகனோட தலைய வெட்டியது, மாவலிமன்னனை நயவஞகமாக கொன்றது - என வரலாறு நெடுகிலும் துரோகம் பித்தலாட்டம்தானே.

    மன்னராட்சிகாலத்துல - எங்க ஆளுங்க சண்டைபோட்டு போரில் வெற்றிபெற்றால் - வெற்றியை கொண்டாட மன்னர்கள் பொன்னும், பொருளும், நிலமும் பரிசாக கொடுத்தது பார்ப்பானுக்கு தானே.

    வெள்ளைகாரன் காலத்துல, பார்ப்பான் பெற்றிருந்த உயர் இடத்தை பயன்படுத்தி, வெள்ளையர்களுடன் இருந்த நெருக்கத்தை பயன்படுத்தி - அதிகாரமிக்க பதவிகளையும் நிலத்தையும் அபகரிக்கவில்லையா?

    சுதந்திர நாட்டில் - இடஒதுக்கீடு சட்டங்களை எல்லாம் பார்ப்பன நீதிபதிகள், செல்லாததாக ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள்

    இப்போதும் - The HINDU, தினமலர், சோ, சுப்ரமணியசாமி, வக்கீல் விஜயன்'ன்னு' சில பார்ப்பனர்கள் உட்கார்ந்துகொண்டு மற்றவர்களுக்கு ஒன்றும் கிடைக்காமல் தடுத்துக்கொண்டிருக்க வில்லையா? (69% இட ஒதுக்கீட்டின் கதி என்ன? ஒவ்வொருவருடமும் பார்ப்பான் நீதிமன்றத்துக்கு போய் இடைக்கால் தடை வாங்கிகொண்டுதானே இருக்கான்)

    சிலபேர் செய்யும் இந்த அக்கிறமங்களை பெரும்பான்மை கூட்டத்தால தடுக்கமுடியலையே என்று நினைக்கும் போது உண்மையாகவே வயித்தெரிச்சல்தான்.

    ReplyDelete
  77. //அவர் மட்டும் நான் பார்பனர் என்று சொல்லி திட்ட ஆரம்பித்து விட்டார்! கேட்டால் அதற்க்கு ஒரு விளக்கமும் கொடுப்பார்! நல்ல முற்போக்காளர்! //
    நண்பர் நோ அவர்களே, வால் பையன், தான் எருமை என்று அவரே ஒப்புதல் வாக்குமுலத்தை எனது தளத்தில் வெளியிட்டுள்ளதால் அவரின் சாதியை நீங்கள் எளிதில் கணித்துக் கொள்ளலாம்.

    ReplyDelete
  78. /ஸ்ரீரங்கத்தில் பெரியநம்பியை ஜாதிபிரஷ்டம் ஏன் பண்ணினாங்க. அவர் ஆளவந்தாரின் தாழ்த்தப்பட்ட இன சிஷ்யனின் இறப்பில் பண்ணின காரியம் தானே./

    ஜெய்சங்கர் ஜெகநாதன்!

    பாதிக் கிணறு தாண்டுவது என்பது இது தான்! கதையின் முதல் பாதியை மட்டும் சொல்லி விட்டு, மறுபாதியை மறந்து விட்டீர்களே! சேர்த்தே பார்த்திருந்தால்,நீங்கள் கற்பிக்க வந்த விதமே தவறானது என்றும் புரிந்திருக்குமே!

    மாறநேர் நம்பி என்ற தாழ்ந்த குலத்து வைணவருடைய இறுதிக் கடன்களை எடுத்துச் செய்கிறார் பெரிய நம்பி. அதற்காக அவரை ஒதுக்கி வைத்தார்கள் என்ற வரை சரிதான். அடுத்த பாதியில் அதற்கு அப்புறம் என்ன நடந்தது என்பதும் இருக்கிறது.

    அரங்கனுடைய தேர் பெரியநம்பி வீட்டு வாசலில் வீதியில் வருகிற தருணம், பெரிய நம்பியின் மகள் தரையில் விழுந்து வழியை மறிக்கிறாள். அரங்கா! என் தந்தை செய்தது சரியானால் உன் தேர் இந்த இடத்தை விட்டு நகராது என்று அரங்கனைத் துனைக்கழைக்கிறாள். எத்தனையோ பேர், எத்தனையோ முயற்சி செய்தும் தேர் அந்த இடத்தை விட்டு நகராமல் இருப்பதைப் பார்த்த எல்லோரும் அரங்கனின் திருவுள்ளக் குறிப்பை, தங்களுடைய தவறை உணர்ந்து,பெரிய நம்பியையே தேரில் ஏற்றிக் கொண்டு, தங்களுடைய ஒதுக்கும் முடிவைக் கைவிட்டார்கள், அதற்குப் பிறகு தேர் ஒரு தடையுமில்லாமல் நகர்ந்து நிலை சேர்ந்தது என்றும் இருக்கிறது.

    திருப்பாணாழ்வார் கதையிலும் அப்படித் தான்! ஒதுங்கிப் போ என்று சொன்னவரையே, தன்னுடைய தோளில் சுமந்து கொண்டு அரங்கன் சன்னதிக்குக் கொண்டு வர வைத்த நிகழ்வும் சொல்லப் பட்டிருக்கிறது. வெறும் புனைவு என்று சொல்லி விட்டுப் போக முடியாத படிக்கு, ஒரு சமத்துவ நிலையைக் குறிப்பாக உணர்த்துகிற விதமும் இருக்கிறது.

    இதற்கும், இப்போது இங்கே பதிவில் நடக்கும் விவாதத்துக்கும் என்ன சம்பந்தம்?

    ReplyDelete
  79. //
    இதற்கும், இப்போது இங்கே பதிவில் நடக்கும் விவாதத்துக்கும் என்ன சம்பந்தம்?
    //

    சம்பந்தம் எல்லாம் தேவையா ?

    A parpaan can be blamed for anything under the sun.

    ReplyDelete
  80. தொடர்வதற்க்காக

    ReplyDelete
  81. @ஷர்புதீன்
    அப்படிச் சொல்லித்தானே திருநங்கைகளை ஒதுக்கி வைத்துள்ளனர்?

    பை தி வே நீங்கள் ஷியாவா, சுன்னியா, அஹமதியாவா, மரைக்காயரா, சூஃபியா?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    Dear Mr. Ragavan

    May Almighty shower His blessing on you and your family members.

    Thank you for raising the questions about Islam.

    To answer your questions, I request you to kindly read the Quran and Prophet's way of life. Both are available in Tamil and all major languages.
    Just for a short answer please see the links,
    http://www.youtube.com/watch?v=duGDdEDz5Es
    http://www.youtube.com/watch?v=2_DR1W0o4zE
    http://www.youtube.com/watch?v=rgMEbtE2ryA&feature=related

    Hope the above link can help you. Please let us know, if you need more help to understand Islam.

    Thank you

    Yours brother

    ReplyDelete
  82. //வஜ்ரா said...
    Race is not equal to caste. That being said, racism is still there. It did not disappear completely. Why ?

    Why do you think Race is not equal to caste? tell me one good reason on how discrimination is different from one form to another.

    of-course I am not saying it disappeared, but it got into such low level in just 60 years (from segregation to integration in USA), we should not talk as of its matter of fact. only when we talk strong against it things will improve.

    ReplyDelete
  83. Hi annani brother

    There is no mention of Islam here anyware, except from you. Try not to catch fish in the pond.

    ReplyDelete
  84. // Anonymous said...
    Dear Mr. Ragavan

    May Almighty shower His blessing on you and your family members.

    Thank you for raising the questions about Islam.

    To answer your questions, I request you to kindly read the Quran and Prophet's way of life. Both are available in Tamil and all major languages.
    Just for a short answer please see the links,
    http://www.youtube.com/watch?v=duGDdEDz5Es
    http://www.youtube.com/watch?v=2_DR1W0o4zE
    http://www.youtube.com/watch?v=rgMEbtE2ryA&feature=related

    Hope the above link can help you. Please let us know, if you need more help to understand Islam.

    Thank you

    Yours brother
    //

    OK. Went thro the videos.
    One question What your holy text says about the treatment of non-muslims or the infidels

    ReplyDelete
  85. பைத்தியக்காரனின் இப்பதிவில் எனது இப்பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது, பார்க்க: http://naayakan.blogspot.com/2010/06/blog-post_03.html

    தேவையா பைத்தியக்காரன் உங்களுக்கு இதெல்லாம்? நர்சிமிடம் பணம் ‘கடனாக வாங்கியதை’ குறிப்பிட்டதும் நீங்களே. நர்சிம் இதுவரை எங்கும் அதை சொன்னதாக நான் அறியவில்லை. இப்போது அதை நீங்கள் திருப்பித் தருவதைத் தவிர வேறு வழியில்லை. அதற்கு வினவோ சந்தனமுல்லையோ உங்களுக்கு உதவப் போகிறார்களா?

    ஒரு சகபார்ப்பனரை இகழ்வதில் அப்படி என்ன மகிழ்ச்சி? அதனால் எல்லாம் உங்களுக்கு இணைய தாசில்தார்கள் ஏதேனும் சான்றிதழ் தந்துவிடப் போகிறார்களா? ஆனால் ஒன்று உங்களை திட்டவும் அதே இணைய தாசில்தார்கள் நீங்கள் பார்ப்பான் என்பதை உபயோகப்படுத்திக் கொள்ளுவார்கள். ஆணாதிக்கம் பார்ப்பனருக்கு மட்டும் உரியதா? மற்ற சாதிக்கார ஆண்கள் அத்தனைபேரும் பெண்ணிய வாதிகளா?

    பை தி வே எங்குமே நீங்கள் கடனைத் திருப்பித் தரப்போவதாக நீங்களோ அல்லது வேறு யாரோ குறிப்பிட்டதாக பார்த்த நினைவில்லை.

    வளர்மதி என்னும் முதலியாருக்கு கடன் கொடுத்த விவகாரத்தை சுகுணா பிள்ளைவாள் டாம் டாம் அடித்ததை போல சிவராமன் என்னும் பார்ப்பனர் விஷயத்தில் நர்சிம் என்னும் பார்ப்பனர் செய்யவில்லை, ஏனெனில் அவர் ஒரு பார்ப்பன ஜெண்டில்மேன்.

    இந்தப் பின்னூட்டத்தின் நகல் எனது இப்பதிவிலும் பின்னூட்டமாக இடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2010/06/blog-post_03.html

    டோண்டு ராகவன்

    ReplyDelete
  86. // Anonymous said...
    Dear Mr. Ragavan

    May Almighty shower His blessing on you and your family members.

    Thank you for raising the questions about Islam.

    To answer your questions, I request you to kindly read the Quran and Prophet's way of life. Both are available in Tamil and all major languages.
    Just for a short answer please see the links,
    http://www.youtube.com/watch?v=duGDdEDz5Es
    http://www.youtube.com/watch?v=2_DR1W0o4zE
    http://www.youtube.com/watch?v=rgMEbtE2ryA&feature=related

    Hope the above link can help you. Please let us know, if you need more help to understand Islam.

    Thank you

    Yours brother
    //

    plz go thro the video

    islam tamil

    ReplyDelete
  87. For long time,we have a system where "white durai's " and their slaves (african blacks and asian browns) are part of the society .Every body agrees that white durai's are the one who has taken the world in to new stage,they invented everything( even this Internet and this blog).few might say Indians invented 0.do you really think its a big deal for white durai's to invent this 0?. I completely agree that we need them for a better world that is the reason we have one white lady who heads the CONG.few people are saying whites and browns are equal or in some case browns are better than white.how can that be ? for so many years Whites have ruled the world. even if some whites works in low job in some brown's company , other browns should give more respect to white than the boss of the company.
    when you support caste system ,i know you will support this too!


    -one Brown slave

    ReplyDelete
  88. உண்மை கசக்கும்; ஆனால் மாற்றமுடியாதது
    1 ஜாதி எதிர்ப்பு=பார்ப்பன எதிர்ப்பு
    2.ஜாதிகள்=நிரந்தரம்.காதல்,(கலப்பு) திருமணங்கள் மட்டுமே இதை ஒழிக்க உதவும்.
    3 பார்பன எதிர்ப்பிற்கு காரணம்=அச்சம்
    4 கீழ்ஜாதி எதிர்ப்பிற்கு காரணம்=ஆதிக்க மனப்பான்மை
    5 மேற்கண்ட இரண்டிற்கும் காரணம்=அருள் போன்ற ஜாதி ஹிந்துக்கள்.
    6 வலைத்தளங்கள் =அவரவர் வீடுகள்.அங்கே அந்தந்த உரிமையாளர்கள் வைத்ததே சட்டம்.
    வாதங்களால் எந்த பயனும் இல்லை.
    7 நர்சிம் பிரச்சினைக்கு காரணம் =நர்சிம்
    (சாரி டோண்டு!உங்கள் ஒட்டக கதை உபமானம் இங்கு சரிபடாது;)
    இம்மாதிரி பிரச்சினைகளுக்கு வால்பையன் அணுகுமுறைதான் சிறந்தது.(முளையிலேயே கிள்ளிவிடுவது..)
    8 வினவு தளத்தின் உண்மையான பெயர்=வசவு .
    9 இவர்கள் genre: வெறுப்பாளிகள்.
    10 இவர்கள் குணம்:கதிரின் கீழ் உள்ள அனைத்தையும் குற்றம் சொல்லி வசைபாடுவது
    நன்றி

    ReplyDelete
  89. //7 நர்சிம் பிரச்சினைக்கு காரணம் =நர்சிம்
    (சாரி டோண்டு!உங்கள் ஒட்டக கதை உபமானம் இங்கு சரிபடாது;)//
    அதாவது சந்தன்முல்லை, விஜி எல்லோரும் அப்பழுக்கற்ற தேவதைகள் என்கிறீர்களா? அவர்கள் என்ன நர்சிமுக்கு மச்சினிச்சிகளா?

    //இம்மாதிரி பிரச்சினைகளுக்கு வால்பையன் அணுகுமுறைதான் சிறந்தது.(முளையிலேயே கிள்ளிவிடுவது..)//
    நானும் ஒட்டகத்துக்கு அதைத்தான் சொன்னேன், முளையிலேயே அப்பெண் பதிவர்களை வைக்க வேண்டிய இடத்தில் வைத்திருக்க வேண்டும். அவ்வளவு காலம் பொறுமையாக இருந்திருக்கக் கூடாது.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  90. Good that Suguna Diwakar revealed that sandana mullai was a member of vanniyar caste group in Orkut.Otherwise, these people would have acted as if they are angels and only Narsim was the culprit.

    i suspect that Viji(mayil), Sandanamullai and some people who had some kind of prejudice against Narsim operated as a group for quite sometime, constantly making fun of him.If you attack or criticize his works, that is fine.But you can't cast aspersions on a person's character saying that he gave money for his interview to be published, degrading the person who interviewed too.That was a cheap shot on a person's character rather than a critique of his writings.

    ReplyDelete
  91. //பாதிரிமார்கள் சிறுவர் சிறுமியரை பாலியல் பலாத்காரம் செய்வது பற்றி கவலைப்படுங்கள். இந்துக்கள் விஷயத்தில் நீங்கள் தேவையில்லை.
    //

    இங்கு பார்ப்பனீய ஆதிக்கம்’ என்று நர்சிம்-வினவு லடாய் வைத்து, நீங்கள் எதிர் பதிவு போட்டதால், பார்ப்பனர்கள், பார்ப்பனீயம், இந்துமதம் போன்றவை பேசப்படுகின்றன.

    ஆராவது, அல்லது வினவு- கிருத்துவப்பாதிரிகள் என்று லடாய் வந்தால், அப்போது நீங்கள் ஒரு பதிவு போட்டால், கிருத்துவப்பாதிரிகள் எங்கே எப்போது ஆரிடம் பாலியல் பலாத்காரம் பண்ணினார்கள் என்று பேசலாம். நானும் அங்கு ஆஜராகிறேன்.

    இந்து மதம் டோண்டு ராகவ வடகலை ஐயங்காரின் ஏகபோக உரிமையல்ல். மற்றவர் எவருக்கும் அவ்வுரிமை தரப்படவில்லை.

    மாறாக, நீ பேசாதே, தலையிடாதே என்று சொல்வது தலிபானித்தனம்.

    இந்து மதம் இசுலாமியக்கொள்கைத்தனததை (அதாவது தீவிரவாதிகள் சொல்லும் வண்ணம்) கொண்டதல்ல்.

    ஒன்று சொல்லலாம்: ”என் பதிவில் என் மதத்தை நீ விமர்சிக்காதே; (எங்கள் மதம் என்று சொல்லக்கூடாது, ஏனெனில் அனைத்து இந்துக்கள் சார்பாக பேச ஆருக்கும் உரிமையில்லை)வேறெங்காவது வைத்துக்க்கொள்...” என்று சொன்னால் சரி.

    ReplyDelete
  92. யதிராஜ சம்பத்குமார், கிருஸ்ணமூர்த்தி, மற்றும் டோண்டு ராகவன்!

    நான் ஐயங்கார்கள் எனக்குறிப்பிடுவது பாமரமக்களின் ஒரு பிரிவினரையே. நான் அவர்களைச்சுட்டிக்காட்டியவுடன், நீங்கள் வரிசையாக:

    1.திருப்பாணாழ்வார்; 2. ஆளவந்தார் 3, இராமுனுஜர் 4. மாற்னேரி நம்பிகள் 4. பெரியநம்பிகள் என அடுக்கிவிட்டீர்கள். அவர்கள் வாழ்க்கையில் எப்படி சாதிகளைவிட்டாரகள் எனக்காட்டி, ஐயங்கார்களுக்கு defense தேடுகிறீர்கள்.

    (திருமழிசையாழ்வாரை விட்டுவிட்டீர்கள் - அவரை ஐயங்காரகள் எப்படி துவேசம் பண்ணினார்கள் என்பதை ஏன் எழுதவில்லை? அக்கதையையும் அவர் அவரைத் துவேசம் பண்ணிய பார்ப்பனரை பற்றி பாடியதை நான் எழுதட்டுமா? டோண்டு ராகவகன் கேட்டால் போடுகிறேன்)

    முதலில் சிரிவைணவத்தின் பேருண்மை (மொத்தமாக் இந்துமத்த்த்தின் என்றும் சொல்ல்லாம்) உங்களுக்கு ஆரும் சொல்லவில்லை போலும். அது இதுவே.

    ஆழ்வார்கள், ஆச்சாரியர்கள் பரமஞானிகள். அவர்களுக்கு சாதிகள் கிடையா. அவர்கள் பூணூல் போடுவது கிடையாது.

    சாதிகள் உமக்கும் எமக்கும் மட்டுமே. அதன்படி நான் சுட்டும் பாமர ஐயங்கார்களுக்கு மட்டுமே.

    இந்தப்பேருண்மை ஆளவந்தாரின் திருவாய்வழியே வரும்:

    அக்கதை வருமாறு:

    அடுத்த மடலில்

    ReplyDelete
  93. //இந்து மதம் டோண்டு ராகவ வடகலை ஐயங்காரின் ஏகபோக உரிமையல்ல//
    ஆனால் இந்த வலைப்பூ அவனுடையது மட்டுமே. எங்கள் மதத்தைப் பாற்றி பேச உமக்கு அருகதையில்லை. நீர் வெளி ஆள். ஆகவே அத்தகைய உமது பின்னூட்டங்கள் இங்கு நிராகரிக்கப்படுகின்றன. வேறெங்காவது போய் உமது ஒப்பாரியை வைத்துக் கொள்ளும்.

    டோண்டு ராகவன்

    ReplyDelete
  94. "ஆராவது, அல்லது வினவு- கிருத்துவப்பாதிரிகள் என்று லடாய் வந்தால், அப்போது நீங்கள் ஒரு பதிவு போட்டால், கிருத்துவப்பாதிரிகள் எங்கே எப்போது ஆரிடம் பாலியல் பலாத்காரம் பண்ணினார்கள் என்று பேசலாம். நானும் அங்கு ஆஜராகிறேன்"

    Good Idea. Please, you first start one, if you are a true Christian. I will come and give you good suggestions.

    ReplyDelete
  95. டோண்டு ராகவன் Said...

    // //முளையிலேயே அப்பெண் பதிவர்களை வைக்க வேண்டிய இடத்தில் வைத்திருக்க வேண்டும்// //

    அப்பாடா, 'சோ'வும், மனுவும் பேசுகிறார்கள்

    ReplyDelete
  96. அஸ்ஸலாமு அலைக்கும்,
    அன்பு சகோதரர் டோண்டு ராகவன்,
    //பை தி வே நீங்கள் ஷியாவா, சுன்னியா, அஹமதியாவா, மரைக்காயரா, சூஃபியா?
    அன்புடன்,
    டோண்டு ராகவன்//
    நீங்கள் மேலே குறிப்பிட்டிருக்கின்ற ஷியா, சன்னி, மரைக்காயர், சூபி எல்லாம் இந்து மதத்தில் உள்ள சாதிகள் போன்று நீங்கள் எண்ணியதே தவறு. இஸ்லாத்தின் அடிப்படைகளான குர்ஆனையும் ஹதீசையும் ஒழுங்காக படிக்காததின் விளைவு நீங்கள் மேலே குறிப்பிட்டவர்கள். ஆனால் இந்து மதத்தின் சாதிகள் பிறப்பின் அடிப்படையில் வருபவை. ஒரு ஷியாவோ, ஒரு அஹமதியோ ஒரு மரைக்காயரோ குர்ஆனை மற்றும் ஹதீஸை சரியாக படித்தால் "முஸ்லிம்கள்" என்ற குடையின் கீழ் இவர்கள் அனைவரும் வந்து விடுவார்கள். நான் கூட சூபியிசத்தில் சிறு வயதில் நம்பிக்கை வைத்திருந்தவன். எங்கள் குடும்பமே சூபியிச நம்பிக்கையில் ஊறித்திளைத்த குடும்பம். அதாவது உங்களின் புரிதலின்படி நான் முன்னர் சூபி. பின்னர் குர்ஆனை சரியாக புரிந்து படித்தேன். சூபி என்ற அடையாளம் என்னை விட்டு ஓடி விட்டது. இப்போது நான் முஸ்லிம் மட்டுமே.

    ஒரு தலித் வேதத்தை சரியாக புரிந்து படித்து விட்டதால் எங்காவது அய்யராக மாறியிருக்கின்றாரா? அவ்வளவு ஏன் ஒரு தலித் வன்னியராகவோ தேவராகவோ தான் மாறிவிட முடியுமா? ஒரு வேளை தலித் தன்னை புதுசா அய்யருக்கு கன்வர்ட் ஆகிட்டேன் என்று சொன்னாலும் டோண்டு அய்யங்கார்வாள் சமூகத்தினர் அந்த தலித்துக்கு பெண் கொடுத்து மணமுடிப்பார்களா? ஒரு ஷியாவால் ஒரு சூபியால் ஒரு மரைக்காயரால் வேற எந்த ஒன்றுக்கும் மாற முடிகின்றதே? பின்னர் எப்படி ஷியா சூபி மரைக்காயர் லாம் சாதியாக இருக்க முடியும்???? ஷியா சூபி மரைக்காயர் அஹமதியா எல்லாம் புரிதலில் ஏற்பட்ட தவறு. புரிந்தால் சரி செய்யப்பட்டு விடும். சூபியா இருந்த நான் புரிந்ததால் சரியானேன். ஆனால் அய்யர், தலித் , தேவர், வன்னியர், யாதவர் எல்லாம் பிறப்பினாலே வருவது. கூடிய வரையில் சாதியை இந்துக்கள் மறைக்கலாமே தவிர ஒழிக்க முடியாது. ஒருவன் வேண்டாமென்றாலும் சாகும் வரை போகாது இந்த சாதி. அய்யங்கார்வாள் கேள்வியை அர்த்தமுள்ளதா கேளுங்கோ இனிமே. ஓகே

    ReplyDelete
  97. @அருள்
    முதல் சீண்டல்கள் அப்பெண் பதிவர்களிடமிருந்து வந்ததால்தான் நான் அப்படிச் சொன்னேன். உடனே அதை பெண்ணை ஒடுக்கும் விஷயமாக இண்டெர்ப்ரெட் செய்வது உங்களது அரிவாளை எடுக்கும் வன்னிய சாதிபுத்தி.

    டோண்டு ராகவன்

    ReplyDelete
  98. அஹமதியார்களை இசுலாமியரே இல்லை என ஃபத்வா போட முடிகிறது. அரபு தேசங்களில் வகுப்பு மாறி செய்யும் திருமணங்கள் அங்கீகாரம் மறுக்கப்பட்டு கொலையும் செய்யப்படுகின்றன. பல ஜமாத்துகள் இம்மாதிரி விஷயங்களில் ஆக்டிவாக உள்ளன.

    அது சரி ஷியா சுன்னியாகவோ, சுன்னி ஷியாவாகவோ மாற முடியுமா? ஈராக்கில் நடப்பதென்ன? உங்கள் மதம் பற்றிக் கவலைப்படுங்கள். எங்கள் மதத்தை நாங்கள் பார்த்து கொள்ளுகிறோம்.

    நான் நினைத்தால் எவ்வளவோ ஆதாரங்கள் உங்கள் மதத்துக்கெதிராக கலெக்ட் செய்ய முடியும். நமக்கு வேண்டாம் மாற்றார் விவகாரம் என நான் எனது வேலையை பார்த்துக் கொண்டு போகிறேன்.

    டோண்டு ராகவன்

    ReplyDelete
  99. அஸ்ஸலாமு அலைக்கும்,
    அன்பு சகோதரர் டோண்டு ராகவன்,
    நான் மேலே சொன்னதை நன்றாக மறுமுறையும் வாசிக்கவும் டோண்டு. இஸ்லாத்தின் அடிப்படை குர்ஆன் ஹதீஸ் மட்டுமே. ஷியா, சன்னி, மரக்காயர் , சூபி லாம் வேண்டுமானால் மாற்றக் கூடியது. அப்படி மாறியதற்கு ஆயிரம் உதாரணங்கள் உண்டு அய்யங்கார். ஆனால் தலித் அய்யங்காராக மாறிய வரலாறு உண்டா? சாகும் வரை போகாது இந்த சாதி என்பது தானே நிதர்சனம். டோண்டு நீங்கள் லாவகமாக திசை திருப்ப முயற்சிக்கின்றீர்கள் இதை இந்து - முஸ்லிம் பிரச்சினையென்று. நீங்கள் எழுப்பிய கேள்வியை மறுமுறை படித்து பாருங்களேன். முதலில் இது சாதி என்று நீங்கள் சொன்னது எந்த அடிப்படையில். வேறு எங்கேயும் தாவாமல் இதற்கு நேர்மையாக பதில் சொல்லுங்க டோண்டு. பிறகு மற்றதை பேசுவோம்.
    //பை தி வே நீங்கள் ஷியாவா, சுன்னியா, அஹமதியாவா, மரைக்காயரா, சூஃபியா?
    அன்புடன்,
    டோண்டு ராகவன்//
    இந்த உங்களுடைய பின்னூட்டத்திற்கு நான் என்னுடைய் முதல் பின்னூட்டத்தினில் சொன்ன பதில் சரி தானே . பை தி வே டுடே ஃப்ரைடே. ஸோ ஐ அம் கோஇங் டு மஸ்ஜித். பை பை சி யு லேட்டர்.

    ReplyDelete
  100. //
    மேற்கண்ட இரண்டிற்கும் காரணம்=அருள் போன்ற ஜாதி ஹிந்துக்கள்.
    //

    அருள் ஒரு இந்துவே அல்ல என்பது என் தீர்க்கமான எண்ணம். அவர் சிலுவை தாங்கியாக இருக்க நிறைய வாய்ப்புகள் உள்ளன.

    ReplyDelete
  101. //
    Why do you think Race is not equal to caste? tell me one good reason on how discrimination is different from one form to another.
    //

    For the simple reason that there is nothing called "race mobility" but there is "caste mobility".

    ReplyDelete
  102. Dear sir

    Enough. Please do not waste your time on this issue. This is a never ending topic.

    Close this, before someone comes with a -----. Because rules are not the same. They can talk about others. We should not talk about them.

    ReplyDelete
  103. // பி.ஏ.ஷேக் தாவூத் said...
    ஷியா, சன்னி, மரைக்காயர், சூபி எல்லாம் இந்து மதத்தில் உள்ள சாதிகள் போன்று நீங்கள் எண்ணியதே தவறு//

    அஸ்ஸலாமு அலைக்கும் தாவூத் பாய்...

    மேலே கூறிய பிரிவுகள் என்னன்னு நீங்க கொஞ்சம் விளக்கினீங்கன்ன நல்ல இருக்கும்.

    அப்படியே தாலாக் சொன்ன பிறகு மூணு மாசத்துக்கு மட்டும் ஜீவனாம்சம் குடுக்கிறது பத்தியும் கொஞ்சம் புரியிறமாதிரி சொன்னீங்கன்னா (ஏனெனில் நாங்க குரான் படிச்சதில்ல) நல்லாருக்கும்.

    அப்படியே கீழ உள்ள சுட்டில உள்ள வீடியோ-க்கும் எங்களுக்கு புரியிறமாதிரி பதில் சொல்லுங்க.
    வீடியோ-வுக்கு இங்கே க்ளிக்கவும்

    ReplyDelete
  104. // பி.ஏ.ஷேக் தாவூத் said...///

    அப்பறம் இன்னொரு விஷயம் இங்கருந்து புனித பயணம் போற இஸ்லாமியர்கள ஏன் அரபி மக்கள் ஃபக்கிர்ன்னு சொல்லுறாங்க; ஏழை தேசத்திலருந்து வருகின்றதாலையா இல்ல அரபி மக்களான இங்குள்ளவங்க தான் உண்மையான முஸ்லிம்க்ரதாலையா ?

    Expecting your reply to the point and in constructive manner

    ReplyDelete
  105. //
    மேற்கண்ட இரண்டிற்கும் காரணம்=அருள் போன்ற ஜாதி ஹிந்துக்கள்.
    //

    அருள் ஒரு இந்துவே அல்ல என்பது என் தீர்க்கமான எண்ணம். அவர் சிலுவை தாங்கியாக இருக்க நிறைய வாய்ப்புகள் உள்ளன.// //

    "அருள் ஒரு இந்துவே அல்ல" என்று சொன்னதற்கு மிக்க நன்றி. "சிலுவை தாங்கியாக இருக்க நிறைய வாய்ப்புகள் உள்ளன" என்பது தவறு. (மானங்கெட்டு போய் இந்துவா இருப்பாதைவிட, கிறித்துவரா இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும்)

    சரி, அது போகட்டும். என்னோட குல தெய்வம் "குட்டியாண்டவர்". இந்த சாமி இந்துக்களின் முப்பத்து முக்கோடி தேவர்களில் எந்த மூலையிலும் இல்லை. ஆனால், அரசியல் சட்டப்படி நான் இந்து என்கிற நிலையை பார்ப்பனர்கள் ஏற்படுத்தி விட்டார்க்ள்.

    எனவே, நான் ஒரு இந்துவாக இருப்பது என்னுடைய தவறு அல்ல. (இதுபோல இந்து இல்லாத எல்லோரையும் மதத்தைவிட்டு நீக்கிட்டா - இந்துமதம் இந்தியாவில் ஒரு மைனாரிட்டி மதமாக ஆகிவிடும்).

    ReplyDelete
  106. யாரை யார் குறை சொல்வது என்று ஒரு வரைமுறை இல்லையா? இஸ்லாமியர்களை குறைசொல்லும் அளவுக்கு பார்ப்பனர்கள் வந்திருப்பது வேடிக்கைதான்.

    ReplyDelete
  107. http://vodpod.com/watch/3720146-nazism-vs-islam

    ReplyDelete
  108. Please see the following:
    http://vodpod.com/watch/3720162-the-ancient-allah?u=mideastpro&c=mideastpro

    ReplyDelete
  109. அஸ்ஸலாமு அலைக்கும்
    அன்பு சகோதர / சகோதரிகளே,
    ஷியா, சூபி, அஹமதி, மரைக்காயர் லாம் சரியா குர்ஆன் ஹதீஸை புரிந்து படிக்காததில் வந்தது என்று மேலே உள்ள இரண்டு பின்னூட்டங்களிலும் தெளிவா சொல்லியிருக்கின்றேனே. புரிந்தால் சரி செய்யப்பட்டு விடும். அதற்கு உதாரணமாக நானே இருக்கின்றேன். சரியாக புரிந்தால் தொலைந்து விடும் மேலே குறிப்பட்டவை. ஆனால் தலித், அய்யங்கார், அய்யர், தேவர், வன்னியர், யாதவர் எல்லாம் பிறப்பின் அடிப்படையில் வருவது. யாராச்சும் ஒருத்தர் தலித்திலிருந்து அய்யராக மாறிட்டேன் என்ற உதாரணத்தை காட்டுங்கள். மற்றபடி திசை திருப்பப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்கப்பட மாட்டாது.

    ReplyDelete
  110. நீங்கள் அடிக்கடி உணர்ச்சி வசப்படுவது போல தெரிகிறது டோண்டு!
    மச்சினி போன்ற சொற்கள் தேவையில்லாமல் பல பிரச்சினைகளை உருவாகக்கூடும்.
    Now coming to your Camel example:
    ஒரு ஒட்டகத்தின் செயலுக்கும் ஒரு மனிதனின் செயலுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது எனவேதான் அந்த உபமானம் சரியானது அல்ல எனக்கூறினேன்.
    நான் வசிக்கும் குடியிருப்பில் ஒருவர் தன் வாகனத்தை வேண்டுமென்றோ (அ) தெரியாமலோ என் வாகனத்திற்கு முன்னால் தொடர்ந்து நிறுத்தி எனக்கு தொந்திரவு கொடுத்தால்,நான் அதைப்பற்றி எல்லா அங்கத்தினர்களிடமும் முன்னமேயே சொல்லி அவர்கள் ஆதரவைப்பெறவேண்டும்.பிறகு ஒரு நாள் உணர்ச்சிவசப்பட்டு,அவனை கன்னா பின்னா என திட்டி விடலாம்.அனைவரது ஆதரவும் எனக்குத்தான் இருக்கும்.மாறாக நான் வாய் மூடி இருந்து விட்டு பிறகு திடீரென ஒருனால் அவனை பார்த்து bastard என திட்டினால,நான் சொன்ன வார்த்தை தான் நிற்குமே ஒழிய உண்மையான பிரச்சினை அங்கு மறைந்து விடும்.
    நர்சிம் மின் approach was highly emotion driven and amateurish.யாரோ விரித்த வலையில் மாட்டிக்கொண்டு விட்டார்.வேறு என்ன சொல்ல?

    ReplyDelete
  111. டொண்டு, நீங்கள் சரியாக கேட்கவில்லை: Syed, ashraf, non ashraf ajlaf பற்றி கேட்டு இருக்க வேண்டும்!

    ReplyDelete
  112. பி.ஏ.ஷேக் தாவூத்,

    பிறப்பால் non-syed ஆன ஒருவர் syed ஆகமுடியுமா?

    ReplyDelete
  113. @Jo Amalan
    I was very clear in telling you that in this blog post dealing with caste problems in our Hindu community, outsiders' comments are no longer welcome.

    Please feel free to open a blog post of your own and express your views there.

    Regards,
    Dondu N. Raghavan

    ReplyDelete
  114. நான் இந்துதான் , ஆனால் நீங்கள் இந்து மதத்திற்கு சேவை செய்வதாக நான் கருதவில்லை. சாதிகளுக்குள் இருக்கும் சண்டையை வளர்க்க முயல்பவர்களுக்கு நீங்கள் பலிகடா

    ReplyDelete
  115. @குடுகுடுப்பை
    நான் இந்து மதத்துக்கு சேவை புரிவதாக எங்கு சொன்னேன்? சாதி வேண்டாம் எனக்கூறும் பதிவர்களின் போல்த்தனத்தைத்தான் உரித்தேன். அதைத்தான் உம்மை மாதிரி சில அரைகுறை பேர்வழிகள் நான் பார்ப்பன சாதியை தூக்கிப் பிடிப்பதாக உளறிக் கொண்டிருக்கிறீர்கள்.

    நான் இப்பதிவில் கூறியவை தகவல் பூர்வமாக தவறு என்று உங்களால் காட்ட முடிந்தால் காட்டுங்கள். இல்லாவிட்டால் உங்கள் பதிவிலேயே மண்புழு வேலைகள் செய்து கொண்டிருங்கள்.

    டோண்டு ராகவன்

    ReplyDelete
  116. dondu(#11168674346665545885) said...
    @குடுகுடுப்பை
    நான் இந்து மதத்துக்கு சேவை புரிவதாக எங்கு சொன்னேன்? சாதி வேண்டாம் எனக்கூறும் பதிவர்களின் போல்த்தனத்தைத்தான் உரித்தேன். அதைத்தான் உம்மை மாதிரி சில அரைகுறை பேர்வழிகள் நான் பார்ப்பன சாதியை தூக்கிப் பிடிப்பதாக உளறிக் கொண்டிருக்கிறீர்கள்.

    நான் இப்பதிவில் கூறியவை தகவல் பூர்வமாக தவறு என்று உங்களால் காட்ட முடிந்தால் காட்டுங்கள். இல்லாவிட்டால் உங்கள் பதிவிலேயே மண்புழு வேலைகள் செய்து கொண்டிருங்கள்.
    //
    நன்றி என்னுடைய மண்புழு போன்ற பதிவுகள் அவரவர் சாதியை தூக்கிப்பிடிக்காமல் / டிபெண்ட் சமத்துவம் அடையும் எண்ணத்தில் எழுதப்பட்டது. நீங்களும் நானும் ஒருவரை ஒருவர் அரைகுறை என்ற புரிதலில் மட்டும் ஒன்றுபடுகிறோம்.

    ReplyDelete
  117. // அருள் said...

    சரி, அது போகட்டும். என்னோட குல தெய்வம் "குட்டியாண்டவர்". இந்த சாமி இந்துக்களின் முப்பத்து முக்கோடி தேவர்களில் எந்த மூலையிலும் இல்லை. ஆனால், அரசியல் சட்டப்படி நான் இந்து என்கிற நிலையை பார்ப்பனர்கள் ஏற்படுத்தி விட்டார்க்ள்.//

    இதான், இதான், இதுதான் நான் உங்கள அரைவேக்காடு-ன்னு சொல்லுறத தடுத்து வச்சிருந்தது. இப்போ நீங்களே சொல்ல வச்சிட்டீங்க. முப்பத்து முக்கோடி தேவர்களில் எந்த மூலையிலும் இல்லை-ன்னு சொல்லுரீங்கள்ள உங்களுக்கு அதுல எத்தனை கோடி தெய்வங்களோட பேரு தெரியும். சும்மா ஒரு விசயத்த பத்தி நுனிப்புல் மேஞ்சிட்டு பேசகூடாது. உங்களுக்கு ஒரு க்ளு. குட்டிஆண்டவர குலதெய்வமா கும்புடுரவங்க வீட்டுல யாரவது ஒருத்தருக்கு பேருல குட்டின்னு சேர்ப்பாங்க. உதாரணம் குட்டி கணேசன், குட்டி தங்கம் குட்டிஆண்டி.

    சந்தேகமா இருக்கா அப்படியே பஸ் புடிச்சு புதுக்கோட்டை, காரைக்குடி ஏரியா பக்கம் வந்து பாருங்க தெரியும்.

    //இதுபோல இந்து இல்லாத எல்லோரையும் மதத்தைவிட்டு நீக்கிட்டா - இந்துமதம் இந்தியாவில் ஒரு மைனாரிட்டி மதமாக ஆகிவிடும்

    OK. நோ ப்ரோப்ளேம். இன்னைல இருந்து வன்னியர்கள் ஹிந்துக்கள் இல்லப்பா. போதுமா திருப்தியா.

    ReplyDelete
  118. //
    இஸ்லாமியர்களை குறைசொல்லும் அளவுக்கு பார்ப்பனர்கள் வந்திருப்பது வேடிக்கைதான்.
    //

    இசுலாமியன்னா என்ன புனிதப்பசுவா ?

    அட்டைக்கத்திச் சண்டையில பார்ப்பான கத்தி, இஸ்லாமிய கத்தியாம்ல...வன்னிய கத்தி கத்துது.

    ReplyDelete
  119. converse said...

    // //முப்பத்து முக்கோடி தேவர்களில் எந்த மூலையிலும் இல்லை-ன்னு சொல்லுரீங்கள்ள உங்களுக்கு அதுல எத்தனை கோடி தெய்வங்களோட பேரு தெரியும். சும்மா ஒரு விசயத்த பத்தி நுனிப்புல் மேஞ்சிட்டு பேசகூடாது. உங்களுக்கு ஒரு க்ளு.// //

    அடிப்புல் வரைக்கும் மேயுர அறிவாளியே - எனக்கு கொஞ்சம் முப்பத்து முக்கோடி தேவர்களின் லிஸ்ட்'ட அனுப்புங்களேன்.

    அதுல என்னோட குலதெய்வம் இருக்கான்னு 'ரிசல்ட்' பார்த்துக்கிறேன்.

    ReplyDelete
  120. விரும்பியே கெடுகிறது உள்ளம் . விரும்பாமல் கெடுக்கிறது சில

    ReplyDelete
  121. சிவராமன் வாங்கிய பணத்துக்கு வினவோ, சந்தனமுல்லையோ ஏன் உதவி செய்யனும்!?

    ReplyDelete
  122. //சாதி அடையாளம் காட்டாத பேர்கள் பெரும்பான்மையோர் இருக்கிறார்கள்.//


    சரியா சொன்னிங்க சபரி!

    ReplyDelete
  123. @வால்பையன்
    அந்தக் கேள்வியை பைத்தியக்காரனிடம்தான் கேட்டேன். அந்தாள் எக்கச்சக்கமாக நர்சிமிடம் கடன் வாங்கியிருக்கிறார். இப்போது அதை திருப்பித்தரும் வக்கில்லாததால் இம்மாதிரி டிராமா போடுகிறார் என்கிறேன் நான்.

    தொகை என்ன என்று அறிந்தால் நீங்கள் மிரண்டு விடுவீர்கள். ஆனால் அந்தாள் உப்பு போட்டு சாபிடுகிறவராக இருந்தால் இன்னேரம் தந்திருக்க வேண்டும். எனக்குத் தெரிந்து இதுவரை இல்லை.

    ஆகவே அவசரப்பட்டு அவருக்கு முற்போக்காளர் என்றெல்லாம் பட்டம் தரவேண்டாம்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  124. //அவசரப்பட்டு அவருக்கு முற்போக்காளர் என்றெல்லாம் பட்டம் தரவேண்டாம்.//


    நான் அந்த பட்டமெல்லாம் தரலியே!
    நர்சிம் குறித்தான பதிவில் ஏகபட்ட இடைச்சொருகல் ஏன் என்று அவரிடமே கேள்வி கேட்டிருக்கேனே!, அவரே சரியான மனநிலையில் எழுதிய பதிவு போல் இல்லை அது!


    வினவு தளத்தில் அந்த விசயத்தை சாதி பிரச்சனை ஆக்கியதும் எனக்கு உடன்பாடில்லை, யாராக இருந்தாலும் கண்டிக்கப்பட வேண்டியவர்களே!.

    சந்தனமுல்லை அவர்கள் பதிவு போட்ருக்காங்க, இனி நர்சிம் பதிவு போட்டு விளக்கனும், இடையில் சாதி எங்கிருந்து வருது!

    ReplyDelete
  125. //
    மானங்கெட்டு போய் இந்துவா இருப்பாதைவிட, கிறித்துவரா இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும்
    //

    நீயெல்லாம் இந்துவா இல்லன்னு இப்ப யார் அழுதா ?

    கிருத்துவனா போயித்தொலைய வேண்டியது தானே. ஒன்னைய யாராவது புடிச்சு வெச்சிருக்கானுங்களா ?

    ReplyDelete
  126. //
    அந்தாள் உப்பு போட்டு சாபிடுகிறவராக இருந்தால் இன்னேரம் தந்திருக்க வேண்டும்.
    //

    உப்பு போட்டால் சோரு தின்பவர்களுக்குத் தான் உறைக்கும்.

    மலம் தின்னிகளுக்கு அதெல்லாம் தெரிய வாய்ப்பில்லை.

    ReplyDelete
  127. \\நீங்கள் மேலே குறிப்பிட்டிருக்கின்ற ஷியா, சன்னி, மரைக்காயர், சூபி எல்லாம் இந்து மதத்தில் உள்ள சாதிகள் போன்று நீங்கள் எண்ணியதே தவறு. இஸ்லாத்தின் அடிப்படைகளான குர்ஆனையும் ஹதீசையும் ஒழுங்காக படிக்காததின் விளைவு நீங்கள் மேலே குறிப்பிட்டவர்கள்.//

    அப்படிஎன்றால் கீழே இருப்பவை யாவை?

    from http://muslim.matrimonialsindia.com: Muslim Groom by Caste

    • Ansari
    • Arain
    • Awan
    • Bohra
    • Dawoodi Bohra
    • Dekkani
    • Dudekula
    • Ehle-Hadith
    • Hanabali
    • Hanafi
    • Ismaili
    • Khoja
    • Labbai
    • Lebbai
    • Lodhi
    • Malik
    • Mapila
    • Maraicar
    • Memon
    • Mugal
    • Mughal
    • Other-Muslim
    • Pathan
    • Quresh
    • Qureshi
    • Rajput
    • Rowther
    • Salafi
    • Shafi
    • Sheikh
    • Shia
    • Siddiqui
    • Sunni Hanafi
    • Sunni Malik
    • Sunni Shafi
    • Syed

    ReplyDelete
  128. மதுரைக்காரன்June 04, 2010 5:55 PM

    //
    அடிப்புல் வரைக்கும் மேயுர அறிவாளியே - எனக்கு கொஞ்சம் முப்பத்து முக்கோடி தேவர்களின் லிஸ்ட்'ட அனுப்புங்களேன்.

    அதுல என்னோட குலதெய்வம் இருக்கான்னு 'ரிசல்ட்' பார்த்துக்கிறேன்.
    //

    அதுல இல்லைன்னு மொதல்லையே ரிசல்ட் சொன்னது நீ.
    அது எப்படி ஒனக்கு மட்டும் லிஸ்ட் இல்லாமலேயே ரிசல்ட் தெரிஞ்சது ? அதுக்கு பதில் சொல்லு வெண்டரு...

    ReplyDelete
  129. அஸ்ஸலாமு அலைக்கும்
    அன்பின் சகோதரர் டோண்டு ராகவன்,
    ஹிந்து மதத்தின் உள்பிரச்சனைகளில் தலையிட வேண்டிய அவசியம் என்றைக்குமே எனக்கு ஏற்பட்டதில்லை. அது எனக்கு தேவையுமில்லை. உங்கள் மத பிரச்சனை. அதை நீங்களே தீர்த்துக் கொள்ளுங்கள். ஆனால் நீங்கள் தான் தேவையில்லாமல் இஸ்லாத்திலும் சாதிகள் இருப்பது போன்ற ஒரு பின்னூட்டத்தை போட்டீர்கள். அதற்கு தான் நான் பதில் சொன்னேன் இஸ்லாத்தில் சாதிகள் இல்லையென்று . நீங்கள் இந்த பின்னூட்டத்தை போடவில்லையெனில் இங்கு வந்து பின்னூட்டமிட வேண்டிய தேவை எனக்கு வந்திருக்காது. பிறர் வந்து பின்னூட்டம் போட வேண்டிய தேவை இல்லை என்று சொல்லுகின்ற தாங்கள் அதே கண்ணியத்துடன் எங்களைப் பற்றிய பின்னூட்டங்களையும் அனுமதிக்க கூடாது. அது தான் சரியான வழிமுறையாகும். மதியாதார் வாசலை என்றைக்கும் மிதிக்க ஆசைப்பட்டதில்லை சகோதரரே.

    ReplyDelete
  130. ஷேக் தாவூத்
    இஸ்லாம் பற்றி சிலர் கேள்வி கேட்டுள்ளனர். அதற்கான பதிலைத் தந்தால் அப்பின்னூட்டத்தை கண்டிப்பாக அனுமதிக்கிறேன். அதுதான் நியாயமும் கூட.

    இஸ்லாமின் பிரிவுகள் பற்றிய விவரங்கள் தரப்பட்டன.

    இஸ்லாம் மதத்தின்மீது எனக்கு மதிப்பு உண்டு.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்
    சென்னை புதுக்கல்லூரி மாணவன்

    ReplyDelete
  131. Anonymous said...

    // //
    //
    மானங்கெட்டு போய் இந்துவா இருப்பாதைவிட, கிறித்துவரா இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும்
    //

    நீயெல்லாம் இந்துவா இல்லன்னு இப்ப யார் அழுதா ?

    கிருத்துவனா போயித்தொலைய வேண்டியது தானே. ஒன்னைய யாராவது புடிச்சு வெச்சிருக்கானுங்களா ?// //

    நான் இந்துன்னு சொல்லிக்கலை. ஆனால், எவனெல்லாம் முஸ்லீம், கிறிஸ்துவன், சீக்கியன், பார்சி இல்லையோ - அவனெல்லாம் இந்துன்னு உங்க இந்திய அரசியல் சட்டத்துல சொல்லப்பட்டிருக்கு.

    இந்தியாவில் 'எனக்கு எந்த மதமும் இல்லை'ன்னு ஒருத்தன் சொன்னால் - இந்திய சட்டப்படி அவன் ஒரு இந்து.

    /ஒன்னைய யாராவது புடிச்சு வெச்சிருக்கானுங்களா/ன்னு கேட்டா, ஆமாம் புடிச்சுதான் வச்சிருக்கீங்க.

    ReplyDelete
  132. அஸ்ஸலாமு அலைக்கும்
    அன்பின் சகோதரர் டோண்டு ராகவன் (புதுக்கல்லூரி மாணவர்),
    உங்களுடைய மதிப்பிற்கு மிக்க நன்றி.
    நான் மிகத் தெளிவாக விளக்கி விட்டேன் இஸ்லாத்தின் அடிப்படையில் சாதியே இல்லையென. அதற்கு உதாரணங்களையும் தெளிவாக கூறி விட்டேன். பிறப்பபின் அடிப்படையில் வேறுபாடு என்பதே இஸ்லாத்தில் அறவே கிடையாது. மாறாக செயல்களின் அடிப்படையில் தான் அவனுடைய மதிப்பு கணக்கீடு செய்யப்படும் இஸ்லாத்தில்.

    நீங்கள் பிற மதத்துவர் வந்து இங்கு பின்னூட்டமிட தேவையில்லையென ஒரு கருத்தை முன் வைத்த போதே என்னுடைய பின்னூட்டத்தை அனுப்பி விட்டேன். இனிமேல் இங்கு பின்னூட்டமிட மாட்டேன் என்று. ஆனால் அதை நீங்கள் வெளியிடவே இல்லை. தொடர்ந்து எம்முடைய கருத்துக்கு எதிர் கருத்து சொல்லும் பின்னூட்டங்கள் மட்டும் வந்து கொண்டிருந்தன. ஆகையால் தான் அதே பின்னூட்டத்தை மீண்டும் போட்டேன். இனிமேல் இங்கு எந்த ஒரு உரையாடலும் தொடர்வதற்கில்லை. சுயமரியாதை மிகவும் முக்கியம் ராகவையங்கார். இந்த பின்னூட்டத்தை வெளியிடுவீர்கள் என்று நம்புகின்றேன்.

    (குறிப்பு: பொதுவாக ஜவ்வாக இழுக்கும் இத்தகைய எழுத்து பரிமாற்றங்களை என்றுமே நான் விரும்பியதில்லை. இதை பலமுறை என்னுடைய வலைப்பூவில் தெரிவித்திருக்கின்றேன். எவருக்கும் இது குறித்து உரையாட விரும்பினால் நேரடி உரையாடலாக வைத்துக் கொள்ளலாம். என்னுடைய மின்னஞ்சல் முகவரி pasdawood@gmail.com )

    ReplyDelete
  133. மதுரைக்காரன் said...

    // //
    //
    அடிப்புல் வரைக்கும் மேயுர அறிவாளியே - எனக்கு கொஞ்சம் முப்பத்து முக்கோடி தேவர்களின் லிஸ்ட்'ட அனுப்புங்களேன்.

    அதுல என்னோட குலதெய்வம் இருக்கான்னு 'ரிசல்ட்' பார்த்துக்கிறேன்.
    //

    அதுல இல்லைன்னு மொதல்லையே ரிசல்ட் சொன்னது நீ.
    அது எப்படி ஒனக்கு மட்டும் லிஸ்ட் இல்லாமலேயே ரிசல்ட் தெரிஞ்சது ? அதுக்கு பதில் சொல்லு வெண்டரு..// //

    பதில்தான வேணும்...

    முப்பத்து முக்கோடி தேவர்களின் லிஸ்ட்'டை பார்ப்பனர்கள் தமிழ்நாட்டில் புகுத்துவதற்கு முன்பே - எங்களுக்கு குல தெய்வம் இருந்தது.

    அதாவது, கிராம சாமிகள் எல்லாம் - ஆரிய கடவுள்'களுக்கு 'சீனியர்'.

    அதனால, உங்க முப்பத்து முக்கோடி தேவர்களின் லிஸ்ட்'ட பார்த்து, அதுல என்னோட குலதெய்வம் இருக்கான்னு தேடவேண்டிய தேவையே எனக்கு இல்லை.

    இங்க 'ரிசல்ட்' என்பது - உங்க மாதிரி ஆளுங்க தெரிஞ்சிக்கனும்'னுதான்.

    ReplyDelete
  134. @ஷேக் தாவூத்
    அது உங்கள் விருப்பம். ஆனால் வேறு இசுலாமியர்கள் பதிலளிக்க விரும்பலாம் அல்லவா. அவர்களுக்காக அக்கேள்விகள்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  135. அருள் அவர்களுக்கு,

    //உங்க இந்திய அரசியல் சட்டத்துல சொல்லப்பட்டிருக்கு.//

    அது என்ன `உங்க' இந்திய அரசியல் சட்டம்?

    அப்படி என்றால் அருளுக்கு என்று தனியாக வேறு இந்திய அரசியல் சட்டம் இருக்கிறதா?

    ReplyDelete
  136. //நான் இந்துன்னு சொல்லிக்கலை. ஆனால், எவனெல்லாம் முஸ்லீம், கிறிஸ்துவன், சீக்கியன், பார்சி இல்லையோ - அவனெல்லாம் இந்துன்னு உங்க இந்திய அரசியல் சட்டத்துல சொல்லப்பட்டிருக்கு.
    //
    என்னது, உங்க அரசியல் சட்டமா சார் நீங்க யோசிச்சுதான் பேசுறீங்களா? உங்க மருத்துவர என்னடான்னா 7 வருசத்துக்கு முன்னாடி(ஏன் இப்போவும் வாய்ப்பு கிடைக்கிற போதெல்லாம்) தமிழ்நாட்ட ரெண்டா பிரிடான்னு ஒரு முத்த உதிர்த்தாரு; நீங்க உங்க அரசியல் சட்டமுன்னு பேசுறீங்க. சரியான பிரிவினைவாத கூட்டமா இருப்பீங்க போலருக்கே. இந்த லெட்சனத்துல உங்களுக்கு உங்களோட இனமக்கள்தொகை அடிட்படைல அரசாங்க வேலை குடுத்தா நல்ல பாப்பீங்கயா நாட்ட பிரிக்கிற வேலைய. உங்கள வன்னியர்ந்னு சொல்லுறத விட naxalite, maosit-ன்னு சொல்லுறது ரெம்ப பொருத்தமா இருக்குமுன்னு நினைக்கிறேன். வெளில இருந்து வர்ற தீவிரவாதிய விட உள்ளுக்குள்ள இருக்குற உங்கள மாதிரி தேசப்பற்றில்லாத பிரிவினைவாதிகள் ரெம்ப ஆபத்தனவங்க.

    //அடிப்புல் வரைக்கும் மேயுர அறிவாளியே - எனக்கு கொஞ்சம் முப்பத்து முக்கோடி தேவர்களின் லிஸ்ட்'ட அனுப்புங்களேன்.
    அதுல என்னோட குலதெய்வம் இருக்கான்னு 'ரிசல்ட்' பார்த்துக்கிறேன்.//

    சுயமா தேடிக்கனும்கிற தன்முனைப்பு இல்லாத, நோகம நோன்பு வைக்க பாக்குரவங்களுக்கெல்லாம் தர்றதில்லை. உங்களுக்கு குடுத்த clue-வை வச்சு உங்க வீடு பெரியவங்ககிட்ட கேட்டு பாருங்க சொல்லுவாங்க. இல்ல அதையும் நாங்க வந்து கேட்டு சொல்லுங்கன்னு நீங்க சொன்னாலும் ஆச்சரியமில்ல.

    ReplyDelete
  137. // அருள் said...
    அதாவது, கிராம சாமிகள் எல்லாம் - ஆரிய கடவுள்'களுக்கு 'சீனியர்'. //

    கடவுளையும் நீங்க விட்டு வைக்க மாட்டீங்களா ? என்ன கொடுமை சார்.

    //அதனால, உங்க முப்பத்து முக்கோடி தேவர்களின் லிஸ்ட்'ட பார்த்து, அதுல என்னோட குலதெய்வம் இருக்கான்னு தேடவேண்டிய தேவையே எனக்கு இல்லை.//

    அஸ்க்கு புஸ்க்கு ஆசை தோசை அப்பள வடை... தோடா, நாங்க இருக்குன்னு சொன்ன உடனே இருக்குறதை தெரிஞ்சிகிட்டு ஏமாத்தபாக்குறீங்க. இந்த காப்பி அடிக்கிற திறமை தான் உங்க 'தகுதி'யா?

    //இங்க 'ரிசல்ட்' என்பது - உங்க மாதிரி ஆளுங்க தெரிஞ்சிக்கனும்'னுதான்.//

    எங்களுக்கு தெரிஞ்சத திரும்பவும் நாங்க எதுக்குங்க திரும்ப தெரிஞ்சிக்கணும்.

    ReplyDelete
  138. I used to support lot of your views, today it ends...

    Today when I was discussing this issue with my Roommate, I asked him "What is your caste?" he proudly answered "Indian". I wish you guys could do the same.

    ReplyDelete
  139. If you wish publish the following as post for debate

    அட..அட.அட பதிவுலக நாட்டாமைகள் அட்டகாசத் தீர்ப்பெழுதி விட்டார்கள்..மன்னிப்புக் கேட்க வேண்டுமாம்..பொதுவில் வைத்து..பதிவர் கூட்டத்தில்..ஏன் என்கிறேன்? ஏதோ இவர்கள் பெண்ணியத்துக்கு மாபெரும் வெற்றி தேடித்தந்து விட்டது போல பீற்றிப் பதிவு போட்டுக் கொள்ளவா? இதன் மூலம் யுகப் புரட்சிக்கு வித்திட்டு விட்டது போல் மாயத் தோற்றம் உண்டாக்கவா? அப்படி நேர்மையான ஒரு எண்ணத்துடன் இந்தத் தீர்ப்பை வினவு கூட்டம் சொன்னதாக இருந்தால் லீனா மணிமேகலையையும் அதே கூட்டத்தில் வரவழைத்து இவர்களும் அவரிடம் பகிரங்க மன்னிப்பைக் கோரட்டும்..பின் சொல்லட்டும் அடுத்தவர்க்கு தீர்ப்பு

    மன்னிப்பு மனப்பூர்வமானது என்ற பட்சத்தில் பாதிக்கப் பட்ட இரு தரப்பும் சில பொது நண்பர்கள் முன்னிலையில் சந்தித்து எண்ணங்களைப் பரிமாரிக் கொண்டாலே போதுமானது. ஏன் எண்ணங்கணைப் பரிமாரி என்று எழுதுகிறேனென்றால்-சந்தன முல்லை நர்சிமின் மன்னிப்பை ஏற்க வேண்டும் என்ற கட்டாயமில்லை.( நான் மறக்கவும் மாட்டேன் மன்னிக்கவும் மாட்டேன் என ஏற்கனவே தன் பதிவில் சொல்லியுள்ளார்) அதுவிமில்லாமல் மன்னிப்பு கோரும் ஒரு பதிவையும் இட்டு அதைத் தன் பதிவில் சைட் பாரில் போட்டு வைத்துக் கொள்ளட்டும்-நேர்மையாக.

    அதை விடுத்து பதிவர் கூட்டம் அதில் மன்னிப்பு என்பதெல்லாம் இன்றைய சூழலில் வினவு கும்பலின் காழ்ப்புணர்வுக்கும் ,திட்டமிட்ட வன்முறைக்கும் தான் வழிவகுக்கும்- உதாரணம் லீனா மணிமேகலையின் கூட்டம். எனக்கென்னவோ அதற்கான திட்டமிடுதல்கள் இருப்பதான சந்தேகம் உண்டு.

    contd....

    ReplyDelete
  140. இன்று நண்பன் குடும்பம் என்பதால் வரிந்து வரிந்து பதிவும் பின்னூட்டமும் போட்டுக் கொண்டலையும் பதிவர் ,இதே போல பெண் பதிவரும் அவர் குடும்பமும் வருத்தப்படும் படி கிண்டல் செய்த பதிவர் . அந்தப் பாதிக்கப் பட்ட பெண் நானும் என் குடும்பமும் இப்படித்தானே காயப்பட்டோம் என்று சொன்னால் அதற்கு "இப்போது" இவர் "மானசீகமாக மன்னிப்புக் கேட்கிறாராம் " அவரும் முதலில் ஒரு பதிவர் கூட்டம் போட்டு அந்தப் பதிவர் குடும்பத்திடம் தெண்டனிடட்டும் அப்புறம் பேசலாம் கட்டப் பஞ்சாயத்து அடுத்தவர் கேசில்.இந்த லட்சணத்தி ஒர்உ கருத்து சொல்லுவாராமாம் அதை 6 மாசத்தில் மாத்திக் கொள்வாராம்.நல்ல லட்சணம்தான்.

    அதனால் திரும்பவும் சொல்கிறேன் மன்னிப்பு என்பதெல்லாம் இன்வால்வ்ட் பதிவர்களுக்குள்ளாக இருந்து , விஷயம் முடிந்து விட்டது என்று பதிவு மூலமாக அடுத்தவர்க்குச் சொன்னால் போதுமானது.அது விடுத்து கழிவிரக்கம் மேலிட எவன் எது சொன்னாலும் கேட்கிறேன் என்று பலியாடு போல் எங்கும் போய் எதுவும் செய்யத் தயாராக இருந்தால் இந்த அளவுக்கு சுய பச்சாதாபம் கொள்ளச் செய்யும் ஒரு செயலை , அது திருத்தப் படவே முடியாத தவறாக இன்று உணர்ந்து அதற்கு பரிகாரமாக எதுவும் செய்யும் நிலையில் இருந்தால் என்னை ப்ரவோக் பண்ணியதால் இப்படிச் செய்தேன் என்கிற உங்களது இதுநாள் வரையான சால்ஜாப்பும் பொய்யாகிறது, எனவே Narsim, Go ahead & Do whatever they say, You Deserve it "

    ReplyDelete
  141. 148 அப்பாவிப் பொதுமக்களை ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரயிலை தட்ம் புரளச் செய்ததன் மூலம் கொன்று குவித்து விட்டு "சாரி தவறாகிவிட்டது" என மன்னிப்பு கேட்டும் பிறகு "நாங்கள் செய்யவில்லை" என்று புரட்டியும் பேசும் கம்யூனிச்ட் கும்பலுக்கு எந்த விஷயத்திலும் தீர்ப்பு சொல்லும் தகுதி எந்தக் காலத்திலும் இல்லை..முடித்துக் கொள்கிறோம் - முடிவு ஞாயமாக இருந்தால் என்று பதிவிடும் இந்தக் கபடதாரிகள் எதையுமே முடிக்க மாட்டார்கள்..விட மாட்டார்கள் என்பது வரலாறு. இதில் வேட்டையாடப் போகும் ஆடுகளை வினையம் பேசி அழைக்கும் ஓனாய்கள் போல உண்மைத்தமிழன் வேணுமானால் முன்னின்று பதிவர் கூட்டம் கூட்டட்டும் என்று தூண்டில் வேறு.இந்த மடத்தனமான யோசனைக்கு உண்மைத் தமிழனோ வேறு பதிவர்களோ அல்பப் பெருமைக்கு ஆசைப் பட்டு துணை போகக் கூடாது.கூட்டத்தில் எதேனும் விபரீதம் நடந்தால் நீங்களே பொருப்பு / பொருப்பாக்கப் படுவீர்கள்.

    கண்டிப்பாக நர்சிமோ அல்லது கார்க்கியோ கூட்டத்தில் மன்னிப்பு கேட்கிறேன் என்று போவது நல்லதல்ல. தத்துவம் பேசுபவனெல்லாம் தனக்கென்று ஒன்று வரும் போது கோவம் வந்தால் "இருட்டு சந்தில் திருட்டுத் தனமாக மூக்கில்தான் குத்துவான் " என்பது பதிவுலக பாடம்.அந்த ஞாயவானும் வந்தது தார்மீக ஆதரவு ஒப்பாரி சொல்லி விட்டுத்தான் போனார் வினவு கும்பலின் பதிவில்.அடுத்தவனை திட்டம் போட்டு வரவழைத்து கொல்லுமளவுக்கு செல்வதை விட கொல்லுவேனனென்று கோவத்தில் சொல்வது தப்பா சார் ? ( உடனே எந்த வெண்ணையாவது நான் "கொல்வேனென்று " சொன்னதை ஞாயப்படுத்துகிறேன் என வழித்துக் கொண்டு வர வேண்டாம்..எழுதியது புரியாவிட்டால் விலகி நின்று வேடிக்கை மட்டும் பார்.)

    ...contd

    ReplyDelete
  142. //"What is your caste?" he proudly answered "Indian". I wish you guys could do the same.//
    So what? That is a politically correct statement. The same man will sing a different tune under other circumstances.

    Say, his caste enjoys some reservation privileges in the matter of college admissions? will he not avail of that? He will have to declare his caste there.

    If he wants to stand for elections in a constituency on behalf of his political party, he will have to satisfy the party high command that his caste has better chances in the constituency and so on.

    Therefore, I am not impressed.

    From your image I think that you are quite a young man. It is quite possible that my experience is more than your age.

    Regards,
    Dondu N. Raghavan

    ReplyDelete
  143. பதிவர் சந்திப்பில் மன்னிப்பு என்பதெல்லாம் வினவு அடியாட்களின் சூழ்ச்சி. இது புரியாமல் நர்சிம் மற்றும் கார்க்கி போகக் கூடாது.

    லீனாவை மேடையில் அசிங்கப் படுத்தி அடிக்கப் பாய்ந்த இந்தக் கம்மிகள் இவர்களையும் அடிக்கப் பாய்வார்கள்.

    எனக்கு இந்த அசிங்கங்களின் நடவடிக்கைகளில் சில தெரியும் என்பதால் எழுதுகிறேன். ஊரை இரண்டுபடுத்தி அதில் குளிர் காய்வதே இந்தக் கம்மிகளின் பொழப்பு. இந்தப் பொழப்புக்குப் பேசாம ஊ......து பத்தி வித்துப் பொழைக்கலாம்.

    பெண்ணுரிமை புண்ணாக்கு என்று பேசும் வினாவுக் கும்பல் லீனா மணிமேகலை விஷயத்தில் செய்தது என்ன? மஹா அயோக்கியர்களான மார்க்ச்சையும் லெனினையும் ஸ்டாலினையும் குறித்த கவிதைக்கே அந்த மாதிரி புடைத்துக் கொண்டு எழுதிய வினவு கும்பல், நர்சிம் எழுதிய அந்த ஏற்றுக் கொள்ள முடியாத புனைவுக்கு சாதி முலாம் பூசி தங்கள் நீண்ட நாளைய அரிப்பைத் தீர்த்திருக்கிறார்கள்.

    பைத்தியக்காரனின் அந்த பணம் - மலம் வார்த்தைகள் உச்சகட்டப பொறாமை. யாருக்கும் பணம் மரத்திலிருந்து கிடைப்பதில்லை. நர்சிம்மின் படிப்பு மற்றும் உழைப்பு அவருக்குப் பணத்தைக் கொட்டுகின்றன.

    ஒரு இளங்கலைப் பட்டத்தைக் கூட முடிக்க முடியாமல் தான் தோன்றியாகத் திரிந்து ஏதோ பத்திரிகையில் குப்பை கொட்டும் சிவராமனுக்கு, சுந்தர் அவர்கள் நர்சிம் பணம் புரட்ட எப்படிக் கஷ்டப் பட்டார் என்று எழுதியது புரியாது.

    இன்னமும் நிறைய இருக்கிறது. எழுத நேரம் இல்லை. நான் தமிழ் வலைத் தளங்களை கடந்த ஆறு வருடமாகப் படித்து வரும் ஒரு சாதாரண அன்புடன் அனானி.

    ReplyDelete
  144. Sandanamullai says that she is not casteist just because she is in vanniyar community for orkut.she has added she is also in orkut community for actresses as an explanation!

    if that is acceptable, then ppl who put poonool & admire Trisha can be absolved being casteist by vinavu group!!!

    ReplyDelete
  145. converse said...

    // //அப்படி என்றால் அருளுக்கு என்று தனியாக வேறு இந்திய அரசியல் சட்டம் இருக்கிறதா?// //

    இந்திய நாடு என்பது பார்ப்பனர்கள் பார்ப்பனர்களுக்காக உருவாக்கி வைத்திருக்கும் ஒரு கட்டமைப்பு. இதை நான் எதற்கு என்னுடைய நாடு என பீத்திக்கொள்ள வேண்டும்.

    அரசியல் சட்டம் என்பது மனுதர்மத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டு, எங்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது. இந்த லட்சணத்தில் 'அடிமைகளுக்கு என்று தனியாக சட்டம்' தேவையா என்ன?

    ReplyDelete
  146. converse said...

    // //உங்க மருத்துவர என்னடான்னா 7 வருசத்துக்கு முன்னாடி(ஏன் இப்போவும் வாய்ப்பு கிடைக்கிற போதெல்லாம்) தமிழ்நாட்ட ரெண்டா பிரிடான்னு ஒரு முத்த உதிர்த்தாரு; நீங்க உங்க அரசியல் சட்டமுன்னு பேசுறீங்க. சரியான பிரிவினைவாத கூட்டமா இருப்பீங்க போலருக்கே.// //

    "தமிழ்நாட்ட ரெண்டா பிரிடான்னு" சொல்வது எந்தவிதத்துல பிரிவினை? எந்த விதத்துல சட்டவிரோதம்னு யாராவது விளக்க முடியுமா?

    பிரின்னு சொன்னாலே அது பிரிவினையா? பஸ்'ல கண்டக்டர் சில்லரை இல்லைன்னு 10 ரூபாயை இரண்டு பேருகிட்ட கொடுத்து பிரிச்சு எடுத்துக்க சொன்னா - அவர் பிரிவினையை தூண்டுகிறார்'னு உள்ள பிடிச்சு போடுவீங்களோ?

    ReplyDelete
  147. /*ஆனால் இந்த வலைப்பூ அவனுடையது மட்டுமே. எங்கள் மதத்தைப் பாற்றி பேச உமக்கு அருகதையில்லை. நீர் வெளி ஆள். ஆகவே அத்தகைய உமது பின்னூட்டங்கள் இங்கு நிராகரிக்கப்படுகின்றன. வேறெங்காவது போய் உமது ஒப்பாரியை வைத்துக் கொள்ளும்.
    */


    /*
    உடனே அதை பெண்ணை ஒடுக்கும் விஷயமாக இண்டெர்ப்ரெட் செய்வது உங்களது அரிவாளை எடுக்கும் வன்னிய சாதிபுத்தி.
    */

    Both of these are very very good replies. I really appreciate it. Hats off to you!!.

    ReplyDelete
  148. 04, 2010 1:25 PM

    அருள் said...
    யாரை யார் குறை சொல்வது என்று ஒரு வரைமுறை இல்லையா? இஸ்லாமியர்களை குறைசொல்லும் அளவுக்கு பார்ப்பனர்கள் வந்திருப்பது வேடிக்கைதான்.
    ---------------------------------

    How come a Jathi veriyan, maram Vetti, Dalit slaughter Vanniya casteist can talk and belittle brahmins? that is the most ridiculous thing.

    ReplyDelete
  149. I used to support lot of your views, today it ends...

    Today when I was discussing this issue with my Roommate, I asked him "What is your caste?" he proudly answered "Indian". I wish you guys could do the same.

    ===================================
    Great view. I support you. I wish every one is like your room mate.

    But i have lost hope.This is not going to happen in my life time or yours or my great great grand kids.

    Only way for this to happen is to eliminate caste based reservation and go in for income based reservation but with casteist veriyans like Arul, Bastard Ramadoss, Karunanidhi, Lalu,Mayawati and ninconpopps like Jeyalalitha,MMS there is no light at the end of the tunnel.

    ReplyDelete
  150. அருள் said...
    converse said...

    // //அப்படி என்றால் அருளுக்கு என்று தனியாக வேறு இந்திய அரசியல் சட்டம் இருக்கிறதா?// //

    இந்திய நாடு என்பது பார்ப்பனர்கள் பார்ப்பனர்களுக்காக உருவாக்கி வைத்திருக்கும் ஒரு கட்டமைப்பு. இதை நான் எதற்கு என்னுடைய நாடு என பீத்திக்கொள்ள வேண்டும்.

    ==================================

    You .... then get out of india. Jump into the ocean and cross over to the cemetry called elam.

    ReplyDelete
  151. 04, 2010 9:45 PM
    அருள் said..

    தமிழ்நாட்ட ரெண்டா பிரிடான்னு" சொல்வது எந்தவிதத்துல பிரிவினை? எந்த விதத்துல சட்டவிரோதம்னு யாராவது விளக்க முடியுமா?
    ===================================

    Of all the things Ramadoss stands for, i really really appreciate him and support him with full might on this. If TN is separated, the people of north and south TN will fight among themselves and will not work against India's integrity. I wish this bifurication of TN happens soon, very very soon.

    ReplyDelete
  152. //
    I asked him "What is your caste?" he proudly answered "Indian". I wish you guys could do the same.
    //

    Everybody wishes that everybody else does the same as your room mate. But the truth is nobody wants to "do" it.

    Why should i deny my son, grand son or their sons and grandsons the right to secure lower marks in exams and still get a seat in top colleges ?

    ReplyDelete
  153. //
    இந்திய நாடு என்பது பார்ப்பனர்கள் பார்ப்பனர்களுக்காக உருவாக்கி வைத்திருக்கும் ஒரு கட்டமைப்பு. இதை நான் எதற்கு என்னுடைய நாடு என பீத்திக்கொள்ள வேண்டும்.
    //
    அருள் படையாச்சி/வன்னியர்,

    பிடிக்காத நாட்டுல உங்களை யார் பிடித்து வைத்திருக்கிறார்கள். நீங்கள் எல்லாம் இந்தியராக இருக்கவேண்டும் என்று யார் அழுதது ?

    ReplyDelete
  154. கீற்று பதிவில் ஒருவர் எழுதியதிலிருந்து...
    --

    டார்பரில் உள்ள கருப்பின முஸ்லீம்களை வெள்ளை அரபிய முஸ்லீம்கள் நன்றாக வாழவைக்கிறார்கள் போலிருக்கிறதே! எப்படி? கருப்பின முஸ்லீம் பெண்களை கற்பழித்தும், ஆண்களையும் பெண்களையும் குழந்தைகளையும் கொன்றும், அவர்களது வாழ்விடங்களிலிருந்து துரத்தி அந்த நிலங்களை ஆக்கிரமித்தும் அரபிய முஸ்லீம்கள் “வாழ வைக்கிறார்களே” அது போலவா?

    எந்த இணையப்பக்கத்தை எடுத்தாலும் மரைக்காயர்கள், லெப்பைகள் ஆகியோர் அரபிய முஸ்லீம்கள் என்றுதானே இருக்கிறது. எந்த இடத்தில் அவர்கள் இந்திய முஸ்லீம்கள் என்று இருக்கிறது? இந்து மதத்திலிருந்து பிரிந்து சென்றவர்கள் ஏன் மூன்று ஜாதிகளாக ஆகவேண்டும்? எல்லோரும் ஒரே முஸ்லீம்கள் என்று இருக்கவேண்டியதுதானே? நாசுவன் ஜாதி என்று ஏன் தனி முஸ்லீம் ஜாதி இருக்கிறது? இதுவரை எத்தனை மரைக்காயர்கள் நாசுவ முஸ்லிம் ஜாதியிலிருந்து திருமணம் செய்திருக்கிறார்கள் என்று காட்டமுடியுமா?

    பட்டாணி முஸ்லீம் பெண்மணி நாசுவன் ஜாதி ஆணுக்கு திருமணம் செய்து வைத்திருப்பதை காட்டுங்கள். அதன் பிறகு இறைவன் முன் மட்டுமல்ல, மனிதர்கள் முன்னும் முஸ்லீம்கள் அனைவரும் சமம் என்று தெரிந்துகொள்வோம். ஆமாம், ஏன் அரபிய பெண் ஒருத்தியை திருமணம் செய்த இந்திய ஆணுக்கு அரபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டது? சாதாரண அரபியனை திருமணம் செய்த சவூத் அரச குடும்ப பெண்மணி அந்த குடும்பத்தாலேயே கொல்லப்பட்டார்? அது இனவெறி ஜாதி வெறி இல்லையா?

    அரபியாவிலேயே ஜாதி வெறி தலைவிரித்தாடுகிறது என்று அவர் சொன்னால் அவர் மீது ஏன் கோபப்படுகிறீர்கள்? துருக்கியிலும் அரபியாவிலுமே ஜாதி வெறி ஆயிரம் வருடங்களாக போகவில்லை என்றால், எப்படி இஸ்லாமில் சேர்ந்ததும் இந்தியாவில் ஜாதி வெறி போகும்? சொல்லுங்களேன்.


    ஹதீஸ் குரான் வசனங்களை வைத்துத்தான், அவர்கள் இஸ்லாமில் ஜாதி உண்டு, அடிமைகளை வைத்திருக்கலாம், ஜாதி பார்த்து, குலம் பார்த்துத்தான் பெண்களை கல்யாணம் பண்ணித்தரவேண்டும் என்று சொல்கிறார்கள்?

    கஃபா என்பது இஸ்லாமில் உள்ள ஜாதிமுறை என்றுதான் குரான் ஹதீஸ் வைத்து ஆதாரப்பூர்வமாக எழுதியிருக்கிறார்களே இணையப்பகத்தில். உங்கள் உலேமாக்களும் இதனைத்தான் சொல்கிறார்கள் என்று ஆரிப் முகமதுகான் சொல்கிறார் http://timesofindia.indiatimes.com/home/sunday-toi/special-report/Divorced-from-the-will-of-God/articleshow/5783067.cms Section 117 (3) of the AIMPLB compendium differentiates between Muslims of Arab and non-Arab origin. It provides that “regard shall be had in respect of descent among the Arabs especially Quraysh and those non-Arab families who have preserved their descent. People in the rest of the non-Arab world are mutually equal” aimplb என்பது ஆல் இந்தியா முஸ்லிம் பர்சனல் லா போர்டு. இதில் செக்‌ஷன் 117(3) இல் அரபியர்களுக்கு ம்ட்டுமே வம்சாவளி பெருமை உண்டு. மற்றவர்கள் அனைவருக்கும் வம்சாவளி பெருமை கிடையாது என்று இந்தியர்களை கேவலப்படுத்துகிறது. இதனைத்தானே ரஹிம் மரைக்காயரும் சொல்கிறார்? அரபியர்களான மரைக்காயர்கள் ராவுத்தர்களுக்கு மட்டுமே குலப்பெருமை உண்டு. மற்றவர்களெல்லாம் கீழ்ஜாதி ஒரே லெவல் என்று சொல்கிறார். அவரை முஸ்லீம் இல்லை என்று நீங்கள் சொல்கிறீர்கள். ஆல் இந்தியா முஸ்லிம் பர்சனல் லா போர்டில் இருப்பவர்களும் இந்துத்துவா ஆட்களா?

    சாதியை ஒழித்தேன். இனிமேல் குரேஷி அன்சாரி எல்லாம் கிடையாது என்று நபி சொல்லியிருக்கிறாரா என்றுதான் ரஹிம் அய்யா கேட்டிருக்கிறாரே? அவருக்கு பதில் சொல்லலாமே? அப்படி அவர் சொல்லவில்லை என்றால், அவற்றை ஒழிக்கவில்லை என்றுதானே பொருள்? அதனால்தானே இவ்வளவு காலமாக அன்சாரி, குரேஷி என்று ஆயிரக்கணக்கான ஜாதிப்பெயர்களுடன் அரபியர்கள் அலைகிறார்கள்? இஸ்லாம் அவற்றை ஒழித்துவிட்டது என்றால் ஏன் இவ்வளவு பேர்கள் தான் குரேய்ஷி, தான் அன்சாரி, தான் சையிது, தான் இந்த ஜாதி என்று அரபியர்களிலிருந்து துருக்கியர்களிலிருந்து எல்லோரும் அலைகிறார்கள்? ஒரு மேல்ஜாதி பெண், கீழ் ஜாதியை சேர்ந்த ஒரு ஆணை திருமணம் செய்தால், அரபியா,துருக்கி, ஈராக் போன்ற இஸ்லாமிய நாடுகளில் அந்த பெண்ணின் குடும்பத்தாலேயே கொல்லப்படுகிறாள். அதற்கு ஹானர் கில்லிங் (அதாவது கௌரவக்கொலை) என்று பெயர். ஜாதியை இஸ்லாம் ஒழித்துவிட்டது என்று நீங்கள் சொல்லும் பொய்யை அந்த அரபியர்கள், துருக்கியர்களிடம் போய் சொல்லுங்கள். அந்த பெண்கள் கொல்லப்படுவது நிற்கும். அரபியாவிலேயே ஜாதி ஒழியவில்லை. இங்கே புழுக வந்துவிட்டார்கள்.

    ReplyDelete
  155. \\பிரின்னு சொன்னாலே அது பிரிவினையா? பஸ்'ல கண்டக்டர் சில்லரை இல்லைன்னு 10 ரூபாயை இரண்டு பேருகிட்ட கொடுத்து பிரிச்சு எடுத்துக்க சொன்னா - அவர் பிரிவினையை தூண்டுகிறார்'னு உள்ள பிடிச்சு போடுவீங்களோ?//

    ராமதாசு மரம் வெட்டும்போது இவரோட மூளையையும் சேர்த்து வேட்டிப்புட்டார் போல. பாவம். கண்டக்டரு 10 ரூவாய பிரிக்கச் சொல்றதையும் மரம் வெட்டி தமிழ்நாட்டைப் பிரிக்கச் சொல்றதையும் கூமுட்டத் தனமா கம்பேர் பண்ணியிருக்காரு அரு(றுவா)ளு. அருளு, நீங்க மெரிட்ல இடம் வாங்கினிங்களா இல்ல இட ஒதுக்கீட்டுல அம்புமணி மாறி கும்பலோட கும்பலா இடம் வாங்கினிங்களா?

    ReplyDelete
  156. Dear Mr. Srinivasan and Converse

    Thank you for raising the questions about non-muslims treatment in Islam. I saw your videos and once again please watch this videos to get an idea

    http://www.youtube.com/watch?v=SKlSLKMMT8Q

    http://www.youtube.com/watch?v=qLr-0UBHEBU&feature=related

    http://www.youtube.com/watch?v=0NdmPQVhI2U

    The above videos are just a explanation not a complete answer. If you wish to understand the issues, please read Quran and Prophetic life (available in all the Indian languages). The reason we are requesting you to read Quran is to understand the issues from original and authentic source. Hope you can read. If you wish you can get free books or reading materials in your desired language from "postallibrary@gmail.com".

    Dear Mr. Ragavan

    Thank you for your respectful view about Islam and I am happy to know that your old student of New College. As you said, We are living in multicultural society with different beliefs. Let us try to understand and respect others views and beliefs, so that we can
    live a peaceful life in plural society and built a better India/world.

    Thank you once again all the brothers who respond and happy to help you to understand the Islam.

    Yours brother.

    ReplyDelete
  157. ஜாதியை ஒழிக்க வேண்டும் என்று இடது கையால் கோசம் இட்டுக்கொண்டே வலது கையால் ஜாதி வாரி ஓதிக்கீடுக்கு விண்ணப்பம் தருவது தான் இன்றைய நிலை. [வலதுகையை நான் பயன் படுத்தியதான் இடது கையால் ஜாதியை ஒழி என்று எனக்கு மற்றவரைப்போல போய் சொல்லத் தெரியாது. ]

    **நான் கேட்டதற்கு சாதிவாரியாக கணக்கெடுத்துதான் ஜாதியை ஒழிப்போம் என்கிறார் தமிழ் ஓவியா ** LOL

    ReplyDelete
  158. //ஒரு நல்ல ஆசாமிய பார்த்தா அவரோட ஞானத்தை விசாரி. சாதியை விசாரிக்காதே
    கத்திய பார்த்தா கத்தியோட கூர்மைய பரீட்சித்து பார்
    உறைய தூக்கி போடு//
    சரிங்கண்ணே பதிவோட நோக்கமே மத்தவுங்ககிட்டயிருக்க அழுக்க காட்டனு நினைக்கிறேன். அதான் என்னால முடிஞ்சா தூண்டில் போட்டேன்.

    ReplyDelete
  159. //அவர்கள் என்ன நர்சிமுக்கு மச்சினிச்சிகளா//

    பாலியல் பலாத்காரத்திற்கு ஆட்பட்ட எந்த பெண்ணைப் பற்றியும் இப்படித்தான் திண்ணைப் பேச்சில் வம்பு பேசுவார்கள். ‘இவ ஒழுங்கா இழுத்து போத்திட்டு இருந்தா மத்தவன் ஏன் பாக்குறான்... வேணும் நல்லா வேணும்...’.

    அந்தப் பாதிக்கப்பட்ட பெண் நம்ம வீட்டுப் பெண்ணா இருந்தால் மட்டுமே அந்த வலி புரியும்.

    நீங்கள் ஜாதி பற்றி எழுதுகிறீர்கள் என்று ஒரு போலி உங்களுக்கு மன உளைச்சல் கொடுத்த போதும் இதே காரணத்தைதான் முன் வைத்தார்கள். ‘அவருக்கு விளம்பர மோகம்... நல்லா வேணும் அவருக்கு’...

    மிகவும் ஆபாசமான, ஒருதலைபட்சமான, கேவலமான நிலை எடுத்துள்ளீர்கள்.

    அதென்ன மனைவியின் சகோதரி மட்டும் கிண்டல் செய்தால் வாழ்த்துவீர்கள், பொது இடத்தில் வேறு யாராவது கிண்டல் செய்தால் ‘கண்ணைக் காட்டுறா... கையக் காட்டுறா’... எவ்வளவு வக்கிரம் பிடிச்ச ஆபாசமான சிந்தனை? உங்கள் லாஜிக்படி மச்சினிச்சி என்றால் கையக் கண்ணை காட்டலாம். வேறு பெண்கள் காட்டினால் அவிசாரி தேவிடியா... என் மச்சினிகளை நான் எப்பொழுதும் அப்படிப் பார்ப்பதில்லை என்று சொல்லி விடைபெறுகிறேன்.

    இதற்கு வஜ்ரா போன்றவர்கள் கண்டனம் தெரிவிக்காதது இன்னும் வருத்தம்.

    ReplyDelete
  160. @அனானி

    ஏற்கனவேயே சுமுக உறவு இன்றி புகைச்சல் இருக்கும் இடத்தில் ஏன் இம்மாதிரியான கிண்டல்கள் என்ற பொருளில்தான் கேட்கப்பட்டது.

    ஒரு எழுத்தாளர் பழைய புத்தகங்களிலிருந்து காப்பி அடிக்கிறார் என்று அவதூறாக எழுதுவது அவரை வேசி என சொல்வதற்கு சமம் என்பதையும் மறக்கக் கூடாது. பல நாள் பொறுமை ஒரு நாள் வெடித்தது அவ்வளவே.

    கூடவே சகட்டுமேனிக்கு கடனை வாங்கி திருப்பித் தரமுடியாத இன்னொரு பதிவர் இதில் வேண்டுமென்றே புகுந்து தனக்கு கடன் கொடுத்தவரை அசிங்கப்படுத்தியிருக்கிறார். இன்னும் பல விஷயங்கள் ஐஸ்கட்டியின் மறைக்கப்பட்ட 90% பகுதி போல உள்ளன.

    ஆகவே சும்மா சேற்றையெல்லாம் அனானி பெயரில் அடித்து விளையாடும் கம்மனாட்டி கபோதிகள் அமைதி காக்கவும். தைரியம் இருந்தால் நேரில் உண்மையான பிளாக்கராக லாக் இன் செய்து வரவும்.

    டோண்டு ராகவன்

    ReplyDelete
  161. அனானியாக கமெண்ட் போடுவதற்குதானே அந்த ஆப்ஷனை வைத்திருக்கிறீர்கள்? இல்லையென்றால் வந்திருக்கவே மாட்டேனே. இதே பதிவிலேயே பல அனானி கமெண்டுகளும் இருக்கின்றனவே.

    //சுமுக உறவு இன்றி//

    அதான் சொல்லிட்டீங்களே பதிவுலகில் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் சுமுக உறவு என்றால் மாமன் மச்சினிச்சியாக இருக்க வேண்டும். இல்லயென்றால் சஙறுத்துபுடுவேன்... தேவடியா என்று வசை பாடுவார்கள். அவர்களை பார்ப்பன ஜெண்டில்மெனே என்று சொம்படிப்போம் என்று.

    ஒரு எழுத்தாளரை கூட வேசி என்று சொல்ல அவர் எழுத்தை காப்பி செய்தார் என்றுதான் சொல்வார்கள் என்று நீங்கள் சொல்கிறீர்கள். அதே அளவுகோலை உங்கள் பார்ப்பன ஜெண்டில்மேனும் கடைபிடித்து முல்லையின் எழுத்தெல்லாம் காப்பியடிக்கப்பட்டது என்று சொல்லலாமே. ‘அவ பொறப்பு அப்படி’ன்னு சொல்லி புனைவாக வக்கிரபடுத்த வேண்டுமா? அதை நீங்கள் இப்படி நியாயபடுடுத்த வேண்டுமா?

    // கம்மனாட்டி கபோதிகள் //

    புரிந்தது ஐயா. நன்றி

    ReplyDelete
  162. //டோண்டுவாகிய நான் வாழ்வில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது பற்றி நானே முட்டி, மோதித் தெரிந்துக் கொண்டதைப் பற்றி உங்களிடம் கூற ஆசைப்படுகிறேன். புதிதாக மற்றவரிடமிருந்து கற்கவும் ஆசை.//

    இதற்கும் நீங்கள் ‘கம்மனாட்டி கபோதி’ என்று திட்டியதற்கும் தொடர்புபடுத்தி பார்க்கிறேன். இதானா நீங்கள் கற்றது? நல்லது.

    ReplyDelete
  163. //பல நாள் பொறுமை ஒரு நாள் வெடித்தது அவ்வளவே//

    இப்படி வாய்வார்த்தையாக சொல்கிறீர்களே தவிர என்ன நடந்தது என்று உங்களுக்காவது தெரியுமா? அல்லது அவர் கதை எழுதிய மாதிரி ‘கைய காட்டினா கண்ணைக் காட்டினா’ வகை செய்திகள்தானா?

    அப்படி என்ன சீண்டிவிட்டார்கள் என்று பொங்கியெழுந்து தெவடியா.. ஊ.....பி திரியறா (அவர் எழுதியதுதான்) என்றெல்லாம் எழுதினாராம்? பொறுமையின் எல்லை இதானா? மச்சினி என்றால் அதெல்லாம் செய்யலாமா? உங்கள் உறவுகள் பற்றிய புரிதல்கள் மிகவும் ஆச்சர்யமானதாக இருக்கிறது.

    இதே வாதம் போலி டோண்டு பாலும் வைக்கப்பட்டது. ‘பல நாள் பொறுமை பொங்கி எழுந்துவிட்டான்..என்ன தப்பு?’ என்று. அப்பொழுது வேதனை நமக்கு. இப்ப வேதனை வேறு யாரோ ஒருவருக்குதானே.

    உண்மையில் நீங்கள் கஸ்மால கம்மனாட்டி என்று சொன்னபோது கோவம் வரவில்லை. எங்கெ ‘மச்சினி, மச்சினன்’ என்று சொல்லி கேவலபடுத்திவிடுவீர்களோ என்று பயமாக இருந்தது.

    பார்ப்பன ஜெண்ட்ல்மேன்களுக்கு நமஸ்காரம். விடைபெறும் கஸ்மால கம்மனாட்டி.

    ReplyDelete
  164. திட்டுவதற்காக ஒரே ஒரு பின்னூட்டம் மட்டும் வெளியிட்டு விட்டீர்கள் போல. சரி.

    ReplyDelete
  165. Anonymous said...

    // //
    \\பிரின்னு சொன்னாலே அது பிரிவினையா? பஸ்'ல கண்டக்டர் சில்லரை இல்லைன்னு 10 ரூபாயை இரண்டு பேருகிட்ட கொடுத்து பிரிச்சு எடுத்துக்க சொன்னா - அவர் பிரிவினையை தூண்டுகிறார்'னு உள்ள பிடிச்சு போடுவீங்களோ?//

    ராமதாசு மரம் வெட்டும்போது இவரோட மூளையையும் சேர்த்து வேட்டிப்புட்டார் போல. பாவம். கண்டக்டரு 10 ரூவாய பிரிக்கச் சொல்றதையும் மரம் வெட்டி தமிழ்நாட்டைப் பிரிக்கச் சொல்றதையும் கூமுட்டத் தனமா கம்பேர் பண்ணியிருக்காரு அரு(றுவா)ளு.// //

    அனாதை அனானி அவர்களுக்கு.

    தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க சொல்வதையும், இந்தியாவை பிரிக்க சொல்வதையும் கூமுட்டத் தனமா நீர் மட்டும் கம்பேர் பண்ணலாமா?

    உங்க அரசியல் சட்டத்த நீங்களே படிக்கிறது இல்லையா? மாநிலத்தை பிரிக்க நாடாளுமன்றத்துல சாதாரண பெரும்பான்மை இருந்தா போதும், ஆனால், இந்தியாவின் எல்லையை மாற்ற முடியவே முடியாது. இதுதான் உங்க சட்டம். - இந்த இரண்டு பிரிவினையும் ஒன்னா?

    சரி, சரி - உங்களுக்கு மூளை இருந்தாதான வெட்ரதுக்கு?

    ReplyDelete
  166. smart said...

    // //ஜாதியை ஒழிக்க வேண்டும் என்று இடது கையால் கோசம் இட்டுக்கொண்டே வலது கையால் ஜாதி வாரி ஓதிக்கீடுக்கு விண்ணப்பம் தருவது தான் இன்றைய நிலை.

    **நான் கேட்டதற்கு சாதிவாரியாக கணக்கெடுத்துதான் ஜாதியை ஒழிப்போம் என்கிறார் தமிழ் ஓவியா ** // //

    இதில் என்ன முரண்பாட்டைக் கண்டீர்கள்?

    சாதிவாரி கணக்கெடுப்பு என்பது ஒவ்வொரு வகுப்பாரும் எவ்வளவு சதவீதம் இருக்கின்றனர் என்பதைச் சரிபார்த்து இருக்கின்ற அதிகாரங்களை சரிசமமாகப் பகிர்ந்தளிப்பதுதானே தவிர சாதிபார்த்து சம்பந்தம் செய்து வைக்க அல்ல.

    சமூக நீதி என்பது மேட்டைத் தகர்த்து பள்ளத்தை நிரப்புவது.

    பள்ளத்தை மறைத்து மேட்டைத் தக்கவைத்துக்கொள்வது அல்ல.

    ReplyDelete
  167. // அருள் said...
    பிரின்னு சொன்னாலே அது பிரிவினையா? பஸ்'ல கண்டக்டர் சில்லரை இல்லைன்னு 10 ரூபாயை இரண்டு பேருகிட்ட கொடுத்து பிரிச்சு எடுத்துக்க சொன்னா - அவர் பிரிவினையை தூண்டுகிறார்'னு உள்ள பிடிச்சு போடுவீங்களோ?//

    உதாரணம் ரெம்ப மட்டமா இருக்கு அருள். இதைதான் மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுறதுன்னு சொல்லுறது. சரியான காமெடி பீஸ்-ஆ இருப்பீங்க போல.

    ReplyDelete
  168. // அருள் said...
    சமூக நீதி என்பது மேட்டைத் தகர்த்து பள்ளத்தை நிரப்புவது.//

    Dr.அம்பேத்கர், நாராயண குரு முதலானவங்க சொன்ன சமூகநீதிக்கு விரோதமா இருக்கே. உங்க 'சமூகநீதி' தத்துவத்தை தெளிவா சொல்ல போனா புதுசா ஒன்ன உருவாக்குவதைவிட இருக்குத கெடுத்து குட்டிசுவரக்கு-ன்னு சொல்ல வர்றீங்க. இன்னம் விளக்கமா சொல்லனுமுன்னா வீடோ, தொழிற்சாலையோ, பள்ளிகூடமோ, கோவிலோ இருக்குற இடத்துக்கு பக்கத்துல காலி மனை இருந்தா பக்கத்துல இருக்குற கட்டிடத்த இடிச்சு தரைமட்டமாக்கிட்டு ரெண்டயுமே காலி மனையா மாத்தசொல்லுறீங்க.

    சபாஷ் எப்படிங்க இப்படி உருபுடவே உருபுடாத என்னங்கள யோசனைன்க்ரா பேருல வாய் கூசாம சொல்லுறீங்க. நீங்க காமெடி பீஸ் இல்ல மகா மட்டமான ட்ராஜெடி பீஸ்.

    ReplyDelete
  169. ஏறக்குறைய 200 ஆண்டுகளாக நம்முடைய (வன்னியர்களுடைய) சமுதாய நிலையையும், உழைப்பையும் உரிந்து கொண்டு வன்னியர்களின் அறியாமையை பயன் படுத்தி ஏயித்து கொண்டிருந்த இவர்கள் இதுவும் பேசுவார்கள் இன்னமும் பேசுவார்கள். மனித இனத்தின் இரத்தத்தை உருஞ்சும் அட்டை இனம் இவர்கள்.

    மருத்துவர் ராமதாசால் இந்த இனம் விழித்துக்கொண்டது என்று எண்ணி பொருமுகிறார்கள் நாய்கள்.

    காலம் உங்களுக்கு பதில் சொல்லும். Judgement day is not far .

    இனமானம் உள்ள இன்னொரு வன்னிய குல சத்ரியன்,

    பாலா
    9486457303

    ReplyDelete
  170. converse said...

    // //Dர்.அம்பேத்கர், நாராயண குரு முதலானவங்க சொன்ன சமூகநீதிக்கு விரோதமா இருக்கே.// //

    அவங்க அப்படி என்னத்த சொன்னாஙக?

    "பதவிகள் வழங்குவதில், உத்தியோகம் வழங்குவதில் அரசாங்கம் எந்தச்சாதியாருக்கும், எந்த மதத்தினருக்கும் பாரபட்சம் காட்டக்கூடாது.

    ஒவ்வொரு சாதிக்கும், ஒவ்வொரு மதத்திற்கும் அதைச் சேர்ந்த மக்கள் எண்ணிக்கை எவ்வளவு இருக்கிறதோ அந்த எண்ணிக்கை விகிதப்படி பதவி, உத்தியோகம் முதலியவைகளை வழங்கவேண்டும்" இது 5.3.1969 இல் தந்தை பெரியார் எழுதிய விடுதலை தலையங்கம்.

    ReplyDelete
  171. குழந்தே சமத்தா மம்மு சாப்பிடுமா !
    ஒரு கத சொல்லட்டா?
    தமிழ்நாடு,தமிழ்நாடு ன்னு ஒரு ஊரு இருந்திச்சாம்
    அங்கன எப்போ பாத்தாலும் ஜாதி சண்டையாம்; வாரிசு சண்டையாம்;
    ஈழத்தமிழர் சண்டையாம்;
    அப்போ அங்க அருள் அருள் ன்னு ஒரு
    முனிவர் வந்தாராம்!
    வந்து எல்லா பிரச்சினைக்கும் தீர்வா
    தமிழ்நாட்டை ஆறு துண்டாப் பிரிச்சாராம்
    பிரிச்சு
    ஒரு துண்டு ஸ்டாலினுக்கு
    ஒரு துண்டு அழகிரிக்கு
    ஒரு துண்டு அன்புமணிக்கு
    ஒரு துண்டு திருமாவளவனுக்கு
    ஒரு துண்டு வைகோவிற்கு
    ன்னு கொடுத்துட்டாராம்
    அப்போரம் எல்லாரும் சண்டசச்சரவு இல்லாமே சந்தோஷமா வாழ்நதாங்களாம்!
    அம்புட்டுதான்;
    கத முடிஞ்சுது
    கத்தரிக்கா காச்சுது!!

    ReplyDelete
  172. இந்தியா என்ற நாட்டின் இறையாண்மை மீதும் அரசியல் சட்டத்தின் மீதும் நம்பிக்கையில்லாத நாய்க்கெல்லாம் இட ஒதுக்கீடு கொடுக்க முடியாது.

    ReplyDelete
  173. //04, 2010 9:45 PM
    அருள் said..

    தமிழ்நாட்ட ரெண்டா பிரிடான்னு" சொல்வது எந்தவிதத்துல பிரிவினை? எந்த விதத்துல சட்டவிரோதம்னு யாராவது விளக்க முடியுமா?
    ===================================

    Of all the things Ramadoss stands for, i really really appreciate him and support him with full might on this. If TN is separated, the people of north and south TN will fight among themselves and will not work against India's integrity. I wish this bifurication of TN happens soon, very very soon.//

    Dude,

    Is this loyalty to India or hatred to Tamils?

    You better vacate Tamilnadu.

    ReplyDelete
  174. // அருள் said...

    //"பதவிகள் வழங்குவதில், உத்தியோகம் வழங்குவதில் அரசாங்கம் எந்தச்சாதியாருக்கும், எந்த மதத்தினருக்கும் பாரபட்சம் காட்டக்கூடாது.//

    Dr.அம்பேத்கர் இட ஒதுக்கீட்டு சட்டம் 50 வருசத்துக்கு(அதாவது 1956-இலிருந்து) மட்டும் நடைமுறைல இருந்த போதுமுன்னு சொன்னாரு. அப்போன்ன 2006-லையே இட ஒதுக்கேட்ட ரத்து செய்திருக்கொனும். இப்போவும் ஒன்னும் அதுனால தப்பில்ல இந்த நிமிஷமே அத பண்ணட்டும்.

    //ஒவ்வொரு சாதிக்கும், ஒவ்வொரு மதத்திற்கும் அதைச் சேர்ந்த மக்கள் எண்ணிக்கை எவ்வளவு இருக்கிறதோ அந்த எண்ணிக்கை விகிதப்படி பதவி, உத்தியோகம் முதலியவைகளை வழங்கவேண்டும்" இது 5.3.1969 இல் தந்தை பெரியார் எழுதிய விடுதலை தலையங்கம்.//

    பெரியார் தமிழ் ஒரு காட்டுமிராண்டி பாஷைன்னு சொன்னாரு. பொண்ணுங்களுக்கு கற்பு வேண்டாமுன்னு சொன்னாரு. இது ரெண்டையும் நீங்க ஒத்துகிட்ட அவரு சொன்னதெல்லாம் அப்படியே செய்யலாம். உங்களுக்கு எப்படி வசதி.

    ReplyDelete
  175. Anonymous said...

    // //இந்தியா என்ற நாட்டின் இறையாண்மை மீதும் அரசியல் சட்டத்தின் மீதும் நம்பிக்கையில்லாத நாய்க்கெல்லாம் இட ஒதுக்கீடு கொடுக்க முடியாது.// //

    நீங்கள் எங்களுக்கு கொடுப்பதா? வேடிக்கைதான்.

    பிச்சை எடுப்பது யாருடைய குலதர்மம்?

    ஆதிக்க சாதியினரின் அதிகார ஆக்கிரமிப்பை தகர்த்து - பெரும்பான்மை சமூகத்தினர் ஆட்சி அதிகாரத்தை பிடிக்கும் காலம் விரைவில் வரும். அப்போது எங்களது உரிமையை நாங்களே எடுத்துக்கொள்வோம்.

    ReplyDelete
  176. //
    பிச்சை எடுப்பது யாருடைய குலதர்மம்?
    //

    பெருமாளின் குலதர்மம் பிச்சை எடுப்பது.

    அனுமாரின் குலதர்மம் அதை பிடுங்கித் தின்பது.

    ReplyDelete
  177. //ஆதிக்க சாதியினரின் அதிகார ஆக்கிரமிப்பை தகர்த்து - பெரும்பான்மை சமூகத்தினர் ஆட்சி அதிகாரத்தை பிடிக்கும் காலம் விரைவில் வரும். //

    அதற்கு முன்னால் ஆதிக்க ஜாதியினரின் வரிப்பனத்தில் தானே நீங்கள் ஒதுக்கீடு பெற்று படிக்கிறீர்கள், பிள்ளைகுட்டிகளைப் படிக்க வைக்கிறீர்கள்! அத்தகைய ஒதுக்கீட்டை துறந்து விட்டு இந்த வீராப்பை பேசுங்கள். ஆதிக்க ஜாதியினரின் வரிப்பனத்தில் கிடைத்த வருமானத்தில் தானே உங்களைப் போன்றவர்கள் அரசு உத்யோகத்தில் சம்பளம் வாங்குகிறீர்கள். ஒதுக்கீட்டில் கிடைத்த அந்த வேலையை உதறிதள்ளி விட்டு வீராப்பு பேசுங்கள். MBC என்று ஒதுக்கீட்டில் உங்களுக்கு கிடைக்கும் எல்லா சௌகரியங்களும் இந்தியா முழுவதுமுள்ள ஆதிக்க சாதியினரின் வரிப்பனத்திலிருந்து போடப்படும் பிச்சை என்பதை மறக்காமல் வீராப்பு பேசுங்கள். நேரடியாக பிச்சை எடுக்காமல் ஒதுக்கீடு என்ற போர்வையில் அரசாங்கம் மூலமாக பிச்சை வாங்குகிறீர்கள் அதை வேண்டாம் என்று சொல்லிவிட்டு வீராப்பு பேசுங்கள் பார்க்கலாம்.

    ReplyDelete
  178. hayyram said...

    // //MBC என்று ஒதுக்கீட்டில் உங்களுக்கு கிடைக்கும் எல்லா சௌகரியங்களும் இந்தியா முழுவதுமுள்ள ஆதிக்க சாதியினரின் வரிப்பனத்திலிருந்து போடப்படும் பிச்சை என்பதை மறக்காமல் வீராப்பு பேசுங்கள். // //

    மிகத்தவறான ஆதாரமற்ற வாதம்.

    மக்கள்தொகைக்கு ஏற்ப ஒவ்வொரு சமூகமும் நாட்டின் வருமானத்தில் பங்கு வகிக்கிறது. அப்படி பார்த்தால் ஓ.பி.சி வகுப்பினருக்கு - அவர்களின் பங்களிப்புக்கு ஏற்ப அவர்களுக்கான பங்கு இன்னும் கிடைக்கவில்லை என்பதே உண்மை. MBCக்கும் இது பொருந்தும்.

    பார்ர்ப்பனர்கள் தங்களது பங்களிப்பைவிட பன்மடங்கு அதிகமாக அபகரிக்கின்றனர்.

    ReplyDelete
  179. // அருள் said...
    பார்ர்ப்பனர்கள் தங்களது பங்களிப்பைவிட பன்மடங்கு அதிகமாக அபகரிக்கின்றனர்.
    //

    இல்லாத எதிரிய இருட்டுல தேடி சாகுற கூட்டத்துல ஒருத்தனா நீ.. keep it up. எங்களுக்கு உன்ன மாதிரி ஆளுங்கள வச்சு நல்ல பொழுதுபோக்கு.

    உனக்கும் வறண்ட எலும்புத்துண்ட கடிச்சதுல வர்ற ரத்தம் எலும்புல வர்ற ரத்தமுன்னு நினைச்சு சந்தோஷ படுற நாய்க்கும் வித்தியாசம் இல்லப்பு.

    ReplyDelete
  180. Yvonne said...

    // //இல்லாத எதிரிய இருட்டுல தேடி சாகுற கூட்டத்துல ஒருத்தனா நீ..// //

    இல்லாத எதிரியா...? அதுதான் எல்லா இடத்திலும் 'ஆக்கிரமித்து' இருக்கிறீர்களே!

    பத்திரிகை, தொலைக்காட்சி, அதிகாரமிக்க உயர்பதவிகள், அமைச்சரவை, நீதிமன்றம் எல்லா இடங்களிலும்.

    நீங்கள் இல்லாத இடம் என்பது குடிசை, பொதுகழிப்பிடம், விவசாய நிலம், சாலையோர வசிப்பிடம் போன்ற 'அதிகாரமில்லாத' இடங்கள் மட்டும்தானே.

    ReplyDelete
  181. \\பத்திரிகை, தொலைக்காட்சி, அதிகாரமிக்க உயர்பதவிகள், அமைச்சரவை, நீதிமன்றம் எல்லா இடங்களிலும்.//

    அதுக்கென்ன இப்போ? திறமை இருக்கு, அறிவு இருக்கு, மந்திரி ஆகுறான், அமைச்சராகுறான். எம் பி பி எஸ் படிச்சு கோட்டு சூட்டு போட்ட ஒரே காரணத்துக்காக, எந்தப் பார்ப்பானாவது மத்திய சுகாதாரத் துறை அமைச்சராகியிருக்கானா? இட ஒதுக்கீடு வேணும் வேணும்னு ஜஸ்ட் பாஸ் பண்ணிட்டு எந்தப் பதவில எப்படித் தாக்குப் பிடிப்ப? தகுதியும் திறமையும் இருந்தா எதுக்கு அறிவாலயத்துக்குப் போயி கால்ல விழணும்? மக்கள சந்திச்சு ஜெயிக்க வக்கில்லாமத் தானே கொல்லைப் புறம் வழியா வந்த? எதுக்கு இந்த வீண் பேச்சு?

    கொஞ்ச காலத்துக்கு முன்னாடி தமிழ்நாடு டி என் பி எஸ் ஸி ல ஒரு வன்னியர் உக்கார்ந்துட்டு இருக்குற எல்லாப் பதவியையும் வன்னியருக்கே குடுக்கப் பார்த்தார். அவரோட ஆரம்ப கால கல்லூரி முதல்வர் பதவில எப்படியெல்லாம் சாதி வெறி புடிச்சு அலஞ்சாருன்னு உனக்கு சொல்லணுமா?
    அந்த ஊருக்குப் பக்கத்துல இருக்குற கள்ளர்களோட கூட்டு செர்ந்து இந்த ஆளு பண்ணின அழிச்சாட்டியம் பத்தி சொல்லணுமா அருளு? அது எப்படிய்யா தலித்துக்கு எதிரா போகணும்னா மத்த ஆதிக்க சாதி கூட வெக்கமில்லாம கூட்டு வச்சுக்கறீங்க? வெக்கமா இல்ல?
    ஒரு சின்ன க்ளூ; தென் தமிழகத்துல ஒர் அரசு கல்லூரி முதல்வரா இருந்து பின்னாடி சென்னை மாநிலக் கல்லூரிக்குப் போனாரு. மரம் வெட்டியோட தொந்தரவு தாங்காம இவருக்கு டி என் பி எஸ் ஸி ல பதவி குடுத்தாங்க. போதுமா?

    அருளு உனக்கு உண்மையாவே அக்கறை இருந்தா போயி உங்க சாதி சனத்த மரம் வெட்டி கிட்டயிருந்து காப்பாத்து. அப்படியே உங்க ஊருல இருக்குற தலித் மக்களுக்கு உங்காளுங்களால அருவா வெட்டு விழாம இருக்க ஏதாவது செய்யி. இல்லன்னா பொத்திட்டு இருந்து இங்க வந்து கும்மு வாங்கு.

    ReplyDelete
  182. \\அது எப்படிய்யா தலித்துக்கு எதிரா போகணும்னா மத்த ஆதிக்க சாதி கூட வெக்கமில்லாம கூட்டு வச்சுக்கறீங்க? வெக்கமா இல்ல?//

    கொஞ்ச நாளைக்கு முன்னாடி முக்குலத்தோர் சேதுரமனோட மரம் வெட்டி எதுக்கு கை கோத்தாரு? தமிழ் நாட்ட துண்டாடுறதுல அப்படி என்ன அருளு சந்தோஷம்? உரிமை உரிமைன்னு பீத்துறியே வன்னியர் மட்டும் தான் முதன் முதலா தோன்றின இனமா? யாரோ ஒருத்தன் கிட்ட இருந்துதானே நீ பறிச்ச? முன்னாடி நீ செஞ்சத இப்போ உனக்கு இன்னொருத்தன் பண்ணுறான். எதுக்கு உனக்கு மட்டும் கோவம் வருது? நெலத்தைப் புடுங்குனாங்க அதப் புடுங்குனாங்கன்னு தெனம் தெனம் ஒப்பாரி வைக்கிறியே, அந்த நெலமெல்லாம் யாரு அப்பன் வீட்டு சொத்து? மரம் வெட்டி செர்த்திருக்குற சொத்தெல்லாம் யார் அப்பன் வீட்டு சொத்து? படிச்சு தேறமையோட இருக்குற பார்ப்பான் கிட்ட இருந்து எதப் புடுங்கனும்னு உனக்கு ஆசை? முடிஞ்சா பார்ப்பான் கூட நேர் வழில போட்டி போடு. இல்லைன்னா மறுபடியும் பொத்திட்டு பெயாமக் கெட. புரியுதா அருளு? உனக்கெங்க இதெல்லாம் புரியப் போகுது? கொல்லைப் புறமா ஆய் போற மாதிரி பாராளுமன்றம் போறவங்களுக்கு ஜால்ரா அடிக்கிற உன் கிட்ட எல்லாம் பேசுறது வேஸ்ட் கண்ணா வேஸ்ட்.

    ReplyDelete
  183. //நீங்கள் இல்லாத இடம் என்பது குடிசை, பொதுகழிப்பிடம், விவசாய நிலம், சாலையோர வசிப்பிடம் போன்ற 'அதிகாரமில்லாத' இடங்கள் மட்டும்தானே// நீங்க மட்டும் கார்பரேஷன் கக்கூஸ்ல தான் குடியிருக்கீங்களாகும்? தலிதுங்கள மலம் தின்ன வெச்சிட்டு பாப்பான் மேல பழியப்போட்டு கலைஞர் கிட்ட ஒரு பதவிக்கு கால்ல விழுகிற நீங்கள்லாம் பாப்பான பத்தி பேசவே யோக்கியதை இல்லாதவங்க. ஒதுக்கீட்டுல மேல வந்து வீராப்பு பேசர உன்னை விட எந்த சமூக ஆதரவும் இல்லாம முன்னுக்கு வர்ர பாப்பான் உண்மையான திறமைசாலி. ஆவன கக்கூஸ்ல வாழ வெக்கனும்னு நீ ஆசைப் படற. உன் ஜாதி வெறிக்கு பாப்பான் மேல பழிய போடுற. என்ன ஆள்யா நீ?

    ReplyDelete
  184. //நீங்கள் இல்லாத இடம் என்பது குடிசை, பொதுகழிப்பிடம், விவசாய நிலம், சாலையோர வசிப்பிடம் போன்ற 'அதிகாரமில்லாத' இடங்கள் மட்டும்தானே//

    அருளு நீ வீம்புக்கு ஊம்பிசாகுரவ்ன்னு நல்லாவே உன் கமெண்ட்ஸ்-சை படிச்சா தெரியுது. அது என்ன நீங்க தமிழ்நாட்டையே ஒருகாலத்துல ஆண்ட மாதிரி பில்ட்-அப் குடுக்குற. தேவரும், கள்ளரும், மறவரும்( சோழர், பாண்டியர் ), , நாயக்கரும்(நாயக்க மன்னர்), சரபோஜி(தஞ்சாவூர்) தான் இந்த மண்ணை ஆண்டது. படைல மூணாவது இடத்துல நின்னு (உப தளபதி - கிட்ட தட்ட ஊர்காவல் லெவல்-ல - அதுவும் ஏதோ கொஞ்ச பேரு - மத்ததெல்லாம் படை வீரர்கள் ). சந்தேகமிருந்தா கல்வெட்டு சம்பந்தமான புஸ்தகங்கள எடுத்து படி. அப்பறம் அது என்ன நீயெல்லாம் தகுதிய பத்தி பேசுறது. ஏன்யா மேலேர்ந்து ஒருத்தன் கட்டளையா சொல்லுறத செய்யிறதுக்கு ஒரு தகுதி வேணுமா என்ன ? உங்கள்ளுங்கள பத்தி நீங்களே ரெம்ப டூ மச்-ஆ நினைச்சுக்க கூடாது.
    ஆண்டவனுங்க நாங்களே அதெல்லாம் பழைய கதைன்னு விட்டுட்டு தொழில், வேலை-ன்னு வந்துட்டோம் படைல சொன்னது செஞ்சுகிட்டிருந்த ஆளுங்க நீ எதுக்கு புடுக்கறுந்த ஆட்டு குட்டியாட்டம் குதிக்கிற. அவேரேஜ் மார்க்ல பாசாயிட்டு கோட்டு போட்டவன்லாம் டாக்டராயிட முடியாது. நீயெல்லாம் ஆடுனா அப்பறம் நாங்கல்லாம் முழு வீச்சுல அருவாள தூக்கிருவோம். மரத்த வெட்டிபுட்டு சௌண்டு விடுறவனுங்க இல்ல நாங்க; ஆளையே கமுக்கமா முடிச்சிட்டு அடுத்த வேலை சோத்துக்கு வீட்டுல வச்சி குடுக்குற ஆட்டுகால் சூப்ப குடிச்சிட்டு சாவகாசமா கட்டில போட்டு வேப்பமரத்து காத்த வாங்குரவைய்ங்க.

    வக்காளி ரெம்ப துள்ளுரீங்கடா உன்கொய்யா மரம் வெட்டுனப்பவே நாங்க அவன் சோலிய முடிச்சிருந்தா இப்போ இவ்வளவு பேச மாட்டீங்கடா. அந்தாளு எம்.ஜி.ஆர் அத கெடுத்தாரு.

    - மதுரக்காரன்

    ReplyDelete
  185. hayyram said...

    // //எந்த சமூக ஆதரவும் இல்லாம முன்னுக்கு வர்ர பாப்பான் உண்மையான திறமைசாலி.// //

    முகேஷ் அம்பானி, ராகுல்காந்தி இவங்கல்லாம் சொந்த திறமையால உயர்ந்தவங்களா? அவங்க பெற்றோர்கள் பெரிய ஆளா இருந்ததால - இவங்க இப்போ பெரிய இடத்துல இருக்காங்க - இதுல இவங்க பங்கு கொஞ்சம்தான்.

    அதுபோலதான் 'பார்ப்பான்களின்' முதல் இடமும். ஒரேஒரு வித்தியாசம் - பழைய பார்ப்பனின் சதி இப்போதைய பார்ப்பான உச்சத்துல வச்சிருக்கு.

    1ஆவது கிலோமீட்டர்ல இருந்து 10ஆவது கிலோமீட்டருக்கு ஓடிவருகிறவன் திறமையும் - 9ஆவது கிலோமீட்டர்ல இருந்து அதே இடத்துக்கு வருகிறவன் திறமையும் ஒன்னா?

    உண்மையிலேயே பார்ப்பனர்கள் திறமைசாலிகளா இருந்திருந்தா - இன்றைய இந்தியா இவ்வளவு கேவலமா இருந்திருக்காது.

    பார்ப்பன திறமை என்பது மற்றவர்கள் உழைப்பை தான் திருடியதும் - மற்றவர்களை கொஞ்சமும் முன்னுக்கு வராவிடாமல் தடுத்ததும்தான்

    ReplyDelete
  186. Dear Arul

    What would you do, if you are a bramnan?

    ReplyDelete
  187. நான் பிராமணன் ஆனால்June 07, 2010 1:04 PM

    //Dear Arul

    What would you do, if you are a bramnan? //

    I'll monopolize the limited resource to myself and my community. I'll ensure the resource is neither expanded nor it is shared with others. I'll ridicule others that I gain the right through merit despite the fact being otherwise. I'll always expect government to provide me succour as I can't stand on my own. I'd use all possible tricks available in the book to sustain my stranglehold over common resources.

    ReplyDelete
  188. Forward thinking BrahminJune 07, 2010 1:15 PM

    //Dear Arul

    What would you do, if you are a bramnan?//

    I won't depend *only* on government resources. Most importantly, I would say poda jaattan to government.

    I would support/urge wealthy brahmins like Tambras, The Hindu group, TVS group, India Cements group, Vikatan group, Dinamalar group and foreign settled brethern to start charitable educational institutions exclusively for Brahmins. Will use influence/connections to tie up with world's premier institutions like Harward, Standford, Berkely to ensure Brahmins get the best education.

    ReplyDelete
  189. When the case of extending reservation in IITs and IIMs came up in 2006, the counsel representing the forward communities argued that the population of BCs is based on 1931 census. now when the question of including caste in the census arises, the same FCs are against it arguing that including caste in the census is very difficult(when iris scans of the whole population can be stored in database, it seems collecting caste details is difficult). A double standard unnoticed.

    ReplyDelete
  190. //அதுபோலதான் 'பார்ப்பான்களின்' முதல் இடமும். ஒரேஒரு வித்தியாசம் - பழைய பார்ப்பனின் சதி இப்போதைய பார்ப்பான உச்சத்துல வச்சிருக்கு.//

    ஓஹோ அப்படீன்ன இப்போ உச்சத்தில இருக்கிற எல்லா ஜாதிக்காரர்களும் அதே போல சதி செஞ்சி தான் மேல வந்திருக்காங்கன்னு ஒத்துக்குரீங்களா? அதாவது உச்சத்துக்கு வந்த மருத்துவர் உட்பட வன்னியர்கள் எல்லாருமே சதியால் தான் முன்னுக்கு வந்திருக்கீங்க. உழைப்பால இல்ல. சரிதானே!

    ReplyDelete
  191. I am a Vadagalai Brahmin and Chennai is really not a place for Brahmins. We are supposed to face all slang which people of castes other than Brahmins use, and move away with a smiling face. As is mentioned by Mr. Dondo Rhaghavan being a Brahmin is really a bane in Tamil nadu and is not so in North India.

    One thing I should mention here is lack of unity in Brahmins has sent them to this state. If they unite and put their foot down like Mr. Dondu Raghavan, they will not be treated like downlings.

    ReplyDelete
  192. //இதில் என்ன முரண்பாட்டைக் கண்டீர்கள்?

    சாதிவாரி கணக்கெடுப்பு என்பது ஒவ்வொரு வகுப்பாரும் எவ்வளவு சதவீதம் இருக்கின்றனர் என்பதைச் சரிபார்த்து இருக்கின்ற அதிகாரங்களை சரிசமமாகப் பகிர்ந்தளிப்பதுதானே தவிர சாதிபார்த்து சம்பந்தம் செய்து வைக்க அல்ல.
    //
    சார் அருள், இப்படித்தானே அந்த காலத்தில் சமமா வேலைகளைப் பிரிக்க தொழில் ரீதியாக சாதி வந்துச்சு... சரி அதவிடுங்க,
    இப்ப சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்து சமமா பகிர்ந்துக் கொடுப்பீங்களா இல்ல சம்மந்தப் பட்டவங்களுக்கு மட்டும் பகிர்ந்துக் கொடுப்பீங்களா?

    ReplyDelete
  193. //ஓஹோ அப்படீன்ன இப்போ உச்சத்தில இருக்கிற எல்லா ஜாதிக்காரர்களும் அதே போல சதி செஞ்சி தான் மேல வந்திருக்காங்கன்னு ஒத்துக்குரீங்களா? அதாவது உச்சத்துக்கு வந்த மருத்துவர் உட்பட வன்னியர்கள் எல்லாருமே சதியால் தான் முன்னுக்கு வந்திருக்கீங்க. உழைப்பால இல்ல. சரிதானே//
    hayram அண்ணே,
    அருள் அப்படின்னு ஒருத்தரால அவரோட ஜாதியையும் சேர்த்து வச்சுப் பேசுவது வீணான பகையைத் தான் உண்டு பண்ணும். நீங்க நல்ல நோட் பண்ணீங்கனா இவரு டோண்டு சாரோட பதிவுக்கு தான் மெனக்கட்டுவந்து சண்டை போடுறாரு பாவம். ஒரு வேளை இவரோட ஹாபிய இருக்குமோ

    ReplyDelete
  194. //தேவரும், கள்ளரும், மறவரும்( சோழர், பாண்டியர் )//

    //உங்கள்ளுங்கள பத்தி நீங்களே ரெம்ப டூ மச்-ஆ நினைச்சுக்க கூடாது.//

    கேள்வியும் பதிலும் ஒரே பதிவில் இருக்கு.... :)

    ReplyDelete
  195. //நீயெல்லாம் ஆடுனா அப்பறம் நாங்கல்லாம் முழு வீச்சுல அருவாள தூக்கிருவோம்.//

    முன்னாபின்ன அருவா தூக்கி இருக்கீங்களாடா ?? ஓ!! அருவா தூக்கிக்கிட்டு போறது என்பது அருவாவுக்கு சொந்தக்காரன் பார்க்காத போது தூக்கிக்கிட்டு போறதா??!! சரியா சொல்லி இருக்க...... திருடுவது உங்கள்(முக்குல தோர்)குல தொழில் என்பது வரலாற்று உண்மை.....


    //வக்காளி ரெம்ப துள்ளுரீங்கடா உன்கொய்யா மரம் வெட்டுனப்பவே நாங்க அவன் சோலிய முடிச்சிருந்தா இப்போ இவ்வளவு பேச மாட்டீங்கடா. அந்தாளு எம்.ஜி.ஆர் அத கெடுத்தாரு.//

    டேய் லூசு பயலே...சாலை மறியல் போராட்டம் நடக்கும் போது எம்.ஜி.யார் அமெரிக்கவுல இருந்தாரு..... இதுல கூட பொய் தான் சொல்லுவீங்களடா??!! :)

    அது சரி, வன்னியர்களை தான் க்ஷத்ரியர்ணு அரசு பதிவுல இருக்கு.....சேர, பல்லவ மன்னர்கள் அக்னி குல க்ஷத்ரியர்கள்...தமிழ் நாடு சாதி பட்டியலில்...வன்னியர்களை தான் அக்னி குல க்ஷத்ரியர்ணு சொல்லி இருக்கு...

    http://ncbc.nic.in/backward-classes/tamilnadu.html


    Vanniyakula Kshatriya (including Vanniya, Vanniyar, Vannia Gounder, Gounder or Kander, Padayachi, Palli and Agnikula Kshatriya)

    முக்குலத்தோர் சோழ பாண்டியர்ணு சொன்ன??!!!!...அப்படின்னா எந்த இடத்துலையும் சூரிய குல க்ஷத்ரியர், சந்திர குல க்ஷத்ரியர்ணு இல்லையே??!!!! குறிப்பா உங்கள க்ஷத்ரியனே சொல்லலையே??? தமிழ் நாட்டை ஆண்ட சேர, சோழ,பாண்டிய, பல்லவ மன்னர்கள் எல்லாம் க்ஷத்ரியர்கள் தான்....மவனே....நீங்க (முக்குலதோர்) க்ஷத்ரியனே இல்ல..அப்புறம் எப்படிடா கூச்சமே இல்லாம இப்படி பொய் சொல்லிக்கிட்டு திரியறீங்க??? தூ..இது எல்லாம் ஒரு பொழப்பு.......

    -
    க்ஷத்ரியர்

    ReplyDelete
  196. உடனே, முக்குல தோர் சே து பதி மன்னர், மருத்து சகோதரர்கள், கள்ளன் குல தொண்டைமான் அப்படின்னு சொல்லுவீங்க......

    அதற்க்கும் பதில் இருக்கு..

    போரில் ஈடுபடுவதனால் அல்லது அரசாட்சிக்கு வந்துவிடுவதால் மட்டும் க்ஷத்ரிய அந்தஸ்து கிடைத்து விடாது. மன்னர் கொடுப்பாராயின் இடையிரு வகையோருக்கும் படையும் ஆயுதமும் வழங்கப்படும் என்பது தொல்காப்பியம் குறிப்பிடும் மரபு. இருப்பினும் அவர்கள் வைசியர்களாகவும் சூத்திரர்களாகவுமே இருப்பார்களேயன்றி க்ஷத்ரியர் ஆகிவிடமுடியாது.

    சேதுபதி, மருதுசகோதரர்கள், கள்ளன் குல தொண்டைமான்.....போன்றவர்களுக்கு இது சரியாக பொருந்தும்.

    இன்னொரு விசயம்... தொண்டை மண்டலம் ஆண்ட தொண்டைமான் மன்னர்களுக்கும் இந்த கள்ளன் குல தொண்டைமானுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை..... பல்லவ நாட்டை ஆண்ட கருணாகார தொண்டைமானை வன்னியர் என்று தான் கம்பரின் சிலையெழுபது சொல்கிறது....

    அதனால் தான் தமிழ் நாடு சாதி பட்டியலில் இவர்கள் குறிப்பிட்டு கள்ளன் குல தொண்டைமான் என்று போட பட்டிருக்கிறது......

    ReplyDelete
  197. //
    அருளு நீ வீம்புக்கு ஊம்பிசாகுரவ்ன்னு நல்லாவே உன் கமெண்ட்ஸ்-சை படிச்சா தெரியுது. அது என்ன நீங்க தமிழ்நாட்டையே ஒருகாலத்துல ஆண்ட மாதிரி பில்ட்-அப் குடுக்குற. தேவரும், கள்ளரும், மறவரும்( சோழர், பாண்டியர் ), , நாயக்கரும்(நாயக்க மன்னர்), சரபோஜி(தஞ்சாவூர்) தான் இந்த மண்ணை ஆண்டது. படைல மூணாவது இடத்துல நின்னு (உப தளபதி - கிட்ட தட்ட ஊர்காவல் லெவல்-ல - அதுவும் ஏதோ கொஞ்ச பேரு - மத்ததெல்லாம் படை வீரர்கள் ). //

    Mr. Dontu, தெரிஞ்சா பேசுங்க ... சம்புவராயர் மன்னர்கள் யார் ? இவர்கள் படையாட்சி வம்சம் வந்த வன்னியர்கள் .. கடவரயர்கள் வன்னியர்கள் .... காடவராயர் வம்சம் வந்தவனே கோப்பெருஞ்சிங்க பல்லவன் .. கோப்பெருஞ்சிங்கன் , சேரன் சோழன், பாண்டியனுக்கு சிம்ம சொப்பனமாய் விளங்கியவன் ... சோழனையும், பாண்டியனையும் தோற்கடித்து சேந்தமங்களம் சிறையில் அடைத்து , தன வாழ்நாள் முழுதும் தமிழகத்தை ஒரு குடை நிழலில் ஆண்டவன் .... பல்லவர்கள் வன்னியர்கள் .... தொண்டைமண்டலம் ஆண்ட காந்தவராயர் , சேந்தவராயர் வன்னியர்கள் ...அதனால்தான் இவர்களுக்கு பல்லவராயர் , தொண்டைமான் என்ற பட்டங்கள் .. கடாரம் வரை படை எடுத்த படை தளபதியின் பெயர் கருணாகர தொண்டைமான் வன்னியர் .. சோழர்கள் வன்னியர்கள் ... பிச்சாவரம் சோழர்கள் மட்டுமே சிதம்பரம் கோவிலில் முடி சூட்ட முடியும் .. இவர்களே சோழர்களின் வாரிசு மறவாதீர் .. பிச்சாவரம் சோழர்களை வன்னியர்கள் என்றுதான் இன்றளவும் சொல்லபடுகிறது ... சேரரும் , பல்லவரும் அக்னி குல க்ஷத்ரியர் ... அக்னி குல கஷ்தரியர் என்பது , வன்னியரை மட்டுமே சொல்வார்கள் .. வன்னிய குல க்ஷத்ரியர் (அல்லது )அக்னி குல க்ஷத்ரியர் .. சந்தேகம் இருந்தால் , தமிழகத்தின் சாதி பட்டியலை பார்க்கவும் .. ஈழம் ஆண்ட பண்டார வன்னியன் வன்னியர்தானே .. பாண்டியனின் சிம்மாசனத்தின் சமமான அந்தஸ்த்து பெற்றவர்கள் மதுரை பக்கம் வாழ்ந்த , சிவகிரி பாளையக்காரர் , ஏழாயிரம் பண்ணை போன்றவர்கள் வன்னியர்கள் ...
    வன்னியரை பற்றி எதுமே தெரியாமால் , ஏதோ பிதற்றவேண்டுமே என்று சொல்ல வேண்டாம் .. நீ என்ன சொனாலும் சரி , தமிழக அரசாங்கம் , வன்னியரை மட்டும்தான் ஆண்ட சாதி என்று சொல்லி , க்ஷத்ரியர் பட்டம் கொடுத்துள்ளது ... வட தமிழகத்தில் நாயக்கர்களும் , தங்களை வன்னியர் என்றுதான் சொல்லுவர் ... சந்தேகம் இருந்தால் ,காஞ்சிபுரம் , செங்கல்பட்டு பக்கம் போய் பார்க்கவும் .. வன்னியர்க்கு சோழகனார் ,சேரனார் ,செம்பியர், பாண்டியனார் ,தொண்டைமான் ,பல்லவராயர் , படையாட்சி போன்று இன்னும் பல பட்டம் உண்டு.... கடை ஏழு வல்லகல் வன்னியர்கள் ... இவர்களில் ஒருவரான வல் வில் ஓரியை பற்றி கம்பர் "வன்னியர் எடுத்த வில்லே வில் " என்று பாடினார் ...வல் வில் ஓரியும் , அதியமானும் உறவுக்காரகள் .. வல் வில் ஓரி இறந்தவுடன் ,அவரை கொன்றவர்களை கூண்டோடு அழித்தவந்தான் அதியமான் ... அதியமான் இன்றைய தர்மபுரியை ஆண்டவன் .. இவர்கள் சேரனின் வழி வந்தவர்கள் ... ஆகா சேர , சோழ , பல்லவ , சம்புவரைய மன்னர்கள் வன்னிய்ழ்ர் வழி வந்தவர்கள் ... பாண்டியர் மட்டுமே மறவர் வழி வந்தவர் ... பல்லவரின் படையையும் பள்ளி படை என்றுதான் கூறுவார்கள் .. பள்ளி இனம் பூணூல் அணிந்திருப்பார்கள் .. இன்றும் இவர்கள் தென் ஆர்க்காடு பகுதிகளில் இருக்கிறார்கள் ... வன்னியர்களின் பட்டங்களின் பார்த்து விட்டு , அவர்களின் வரலாறை கீட்டு விட்டு , பிறகு வந்து எழுதுங்கள் ..

    ReplyDelete
  198. @வசந்த் படையாச்சி
    அது டோண்டுவின் கமெண்ட் அல்ல்.

    ஆக, வன்னியர்களும் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். ஆக, என்ன காரணத்துக்கு அவர்களுக்கு இட ஒதுக்கீடு தேவை?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  199. //ஆக, வன்னியர்களும் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். ஆக, என்ன காரணத்துக்கு அவர்களுக்கு இட ஒதுக்கீடு தேவை?//

    வன்னியர்கள் பெரும்பான்மையுள்ள சமூகம் .. இவர்கள் அனைவரும் கல்வி அறிவு பெற வேண்டும் .அரசு வேலை பெற வேண்டும் .. உயர் நீதிமன்ற நீதிபதிகளில் ,12 பேர் ஆதி திராவிடர்கள் .. எப்படி முடிந்தது ? இடஒதுக்கீடு தானே காரணம் .. . இடஒதுக்கீடு என்ற பெயரில் நாங்கள் 21 பேர் உயிர் நீத்து வாங்கிய அந்த MBC quotavai இன்று நாங்கள மட்டும் அனுபவிக்க வில்லை . எங்களோடு சேர்ந்து 107 சாதிகள் உள்ளனர் ..இதன் விளைவு , வன்னியர்கள் ஒரே ஒரு நீதிபதிதான் உள்ளார்....அதற்காகத்தான் தனி இடஒதுக்கீடு தேவை .

    ReplyDelete