நிரந்தர பக்கங்கள்

2/08/2011

பிராமணர்கள் சோம்பேறிகளா, ஒரு ஆய்வு

//வன்னியர்கள் காலம் காலமாக உழைக்கும் பரம்பரையினர். பார்ப்பனர்களைப் போன்று அடுத்தவர் உழைப்பில் வாழ்ந்த 'உஞ்சவிருத்தி' கூட்டம் அல்ல.//

கட் அண்ட் பேஸ்ட் புகழ் பதிவர் அருள் அடிக்கடி திருவாய் மலர்ந்தருளும் வார்த்தைகளில் மேலே உள்ளனவும் அடிக்கடி வரும்.

தெரியாமல்தான் கேட்கிறேன், அப்புறம் ஏனய்யா உங்கள் வீட்டுத் திருமணங்களுக்கு அவர்களை வருந்தி வருந்தி அழைக்கிறீர்கள்? அருளின் அண்ணனின் மணமே அவ்வாறு நிகழ்ந்ததுதான். அது ஏன், நாத்திகச் செம்மல்கள் என தம்மைப் பற்றி பீற்றிக் கொள்ளும் பல பதிவர்கள் வீட்டிலும் அதே நிலை. அதைச் சொன்னால் மட்டும் கோபம் எங்கெங்கிருந்தோ பிடுங்கிக் கொண்டு வரும் என்பதை இப்போதைக்கு விட்டு விடுவோம்.

இப்போது கலைஞர் சுப்பிரமணியம் சுவாமிக்கு லீகல் நோட்டீஸ் அனுப்பியதும் அவரது பார்ப்பன வக்கீல்கள் மூலம்தான் என அறிகிறேன் (இல்லையென்றால் யாராவது சொல்லுங்கப்பூ).

சாதி முறையை தமிழகத்துக்கு கொண்டு வந்தது பார்ப்பனரே என்று ஒரு பிதற்றல் இப்போது அடிக்கடி கேட்கக் கிடைக்கிறது. அட முட்டாள்களே பாப்பான் சொன்னான் என்றால் மத்தவங்களுக்கு எங்கேடா மூளை மேயப் போயிருந்தது? உண்மை என்னவென்றால் சாதி முறை காலத்தின் கட்டாயம். அது எல்லோருக்கும் உதவியாக இருந்தது. இப்போதும் இருந்து வருகிறது. இப்போது எந்த மரம் வெட்டியும் அதை ஊர்ஜிதம் செய்வார்.

அக்காலகட்டங்களில் மன்னர்கள் ஏன் பார்ப்பனர்களை ஆதரித்தனர்? ஜெயமோகன் இது பற்றி தனது ராஜராஜ சோழன் பதிவில் அருமையாக விளக்கியுள்ளார். அவர் எழுதியதன் ஒரு பகுதி இங்கே.

அன்று பிராமணர்களுக்கு சலுகைகள் காட்டப்பட்டனவா? ஆம். ஆனால் ஏன்? இப்படி ஒரு வரியை ஆவேசமாக பதிவுசெய்பவர்கள் ஏன் என்ற வினாவை நோக்கியல்லவா சென்றிருக்கவேண்டும்? அப்படிச் சென்றிருந்தால் அவர்கள் மார்க்ஸிய நோக்கு சார்ந்த வரலாற்றாய்வின் பிதாமகரான டி.டி. கோஸாம்பியைச் சென்று சேர்ந்திருப்பார். இந்தியா முழுக்க மன்னர்கள் கோயில்கள் கட்டி அங்கே பிராமணர்களுக்கு நிலமும் ஊர்களும் அளித்து குடியேற்றுவது ஒரு வழக்கமாகவே இருந்துள்ளது. அது ஒரு முக்கியமான அரசியல்-பொருளியல் நடவடிக்கை என்கிறார் கோஸாம்பி.

படையெடுப்புகள் மற்றும் அடக்குமுறைகள்மூலம் உருவாக்கமுடியாத அதிகாரத்தை கோயில்கள் மற்றும் பிராமணர்கள் மூலம் எளிதில் உருவாக்கலாம் என அன்றைய மன்னர்கள் அறிந்திருந்தார்கள். தனக்கு வரிவசூலுக்கு உதவாத, தங்கள் ஆதிக்கத்துக்கு முழுக்க ஒத்துவராத, நிலத்தை பிராமணர்களுக்கு வழங்கி அவர்கள் அங்கே வேரூன்றிய பின் மெல்ல அங்கே கோயில்கள் கட்டுவது இந்திய மன்னர்களின் வழக்கம் என்கிறார் கோஸாம்பி.

கோஸாம்பியின் பார்வையில், அன்று மக்களுக்கு தேவையாக இருந்த மூன்று ஞானங்கள் பிராமணர்களிடம் இருந்தன. ஒன்று மதஞானம். இதைக்கொண்டு பிராமணர்கள் வெவ்வேறு வழிபாட்டு வழக்கம் கொண்ட மக்களை ஒன்றாக திரட்டினார்கள். இரண்டு, சோதிட ஞானம். இது விவசாயத்துக்குரிய வானிலை ஞானமாகவும் அன்றாட வாழ்க்கைக்கான நாளறிவாகவும் அவர்களுக்கு உதவியது. மூன்று தர்மசாஸ்திரங்கள் குறித்த ஞானம். இது பல இனக்குழுக்களுக்கு நடுவே பொதுவான அறங்களை உருவாக்க உதவியது.

பழங்காலம் முதலே பிராமணர் மீது மக்களுக்கிருந்த மரியாதையை நாம் சங்க இலக்கியங்களில் காணலாம். அவர்கள் சொன்னால் போர்கள் கூட சமாதானம் ஆயின. அவர்களை ஆறலைக்கள்வர்கள் கூட கொல்வதில்லை. அந்த மதிப்பை பயன்படுத்தி மன்னராட்சிக்குள் வராத இனக்குழுக்களை உள்ளே இழுப்பதே பெருமன்னர்கள் பிராமணர்களுக்கு ஆதரவு கொடுத்தமைக்குக் காரணம். பிராமணர்கள் பதிலுக்கு தாங்கள் செல்லுமிடங்களில் இனக்குழுக்கள் நடுவே பூசல்களை இல்லாமலாக்கி அவர்களை ஒன்றாக தொகுத்து மன்னர்களுக்கு விசுவாசமானவர்களாக ஆக்கி வரிவசூலை சாத்தியமாக்கினார்கள்.

சோழர் காலகட்டத்தில் தொடர்ச்சியாக புதிய வேளாண்நிலங்கள் உருவாக்கப்பட்டன. இன்றைய தமிழகத்தின் நஞ்சை நிலங்களில் பெரும்பகுதி அப்போது உருவானதே. அவ்வாறு நிலங்கள் ஊர்களாக ஆனபோது அங்கே கோயில்களை நிறுவி, அக்கோயில்கள் அனைத்திலும் ஒரேவகையான ஆகமமுறை பூசைகளை அமைத்து ,அவற்றை ஆற்ற பிராமணர்களை குடியமர்த்தி ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ள இறுக்கமான ஒரு அமைப்பை ராஜராஜன் உருவாக்கினார். அவரது ஆட்சிக்கீழ் இருந்த ஆலயங்கள் அனைத்திலும் மாறுபட்ட பூசைமுறைகள் தடைசெய்யப்பட்டு ஆகமமுறை கட்டாயமாக்கப்பட்டது. இந்த ஆதிக்கக் கட்டமைப்புக்கு பிராமணர் தேவைப்பட்டார்கள். ஆகவே அவர்கள் பேணப்பட்டு சலுகையளிக்கப்பட்டார்கள்.

இந்தியா பல்வேறு இனங்களும் இனக்குழுக்களும் அரசுகளும் கொண்ட நிலவெளியாக இருந்தது. பரஸ்பர ஐயங்களும் போர்களும் நிகழ்ந்த மண். அவர்கள் நடுவே ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் உருவாக்கக்கூடிய இன்னொரு தரப்புக்கான தேவை இருந்தது. பேரரசுகளை உருவாக்கக்கூடிய மன்னர்களுக்கு அத்தேவை இருந்தது போலவே குட்டிக்குட்டி ஆட்சியாளர்களுக்கும் இனக்குழு தலைவர்களுக்கும்கூட அந்த தேவை இருந்தது. அதைச்செய்யக் கூடியவர்களாக வரலாற்றின் ஆரம்பத்திலேயே பிராமணர்கள் உருவாகி வந்தார்கள். தங்களை அவர்கள் வன்முறை அற்றவர்களாகவும் முழுக்கமுழுக்க கல்வி சார்ந்தவர்களாகவும் உருவாக்கிக்கொண்டிருந்தது அதற்குக் காரணமாக அமைந்தது.

ஒன்றை நினைவில் வையுங்கள் ஒரு சமூகமே தங்களை கொண்டாடும்படிச் செய்து அச்சமூகத்தை பற்பல நூற்றாண்டுகளாக தங்களுக்கு அடிமையாக இருக்கச்செய்து சுரண்டிக்கொண்டே இருக்கும் அளவுக்கு பிராமணர்கள் இந்திரஜாலம் தெரிந்த மாயாவிகள் அல்ல. அப்படி அவர்கள் தலைமுறை தலைமுறையாகச் சுரண்டவும் அதை உணராமல் கும்பிட்டு காணிக்கை கொடுத்துக்கொண்டே இருக்கும் அளவுக்கு நம் முன்னோர்கள் மண்ணாந்தைகளும் அல்ல. கிட்டத்தட்ட பிராமணர்கள் ஆற்றிய அதே பணியை [சமரசம் தூது] பௌத்த சமண மதத்துறவிகளும் ஆற்றியிருக்கிறார்கள். அவர்களையும் மன்னர்கள் பேணியிருக்கிறார்கள். பெரும் நிதிகளும் சலுகைகளும் அளிக்கப்பட்டிருக்கின்றன. அந்த அகிம்சை மதங்கள் பேரரசுகளை உருவாக்க உதவாதபோது அவற்றுக்கான ஆதரவு குறைந்து பிராமணர்கள் மீண்டும் ஆதரவு பெற்றார்கள்.

அதாவது பிராமணர்கள் பேணப்பட்டது நம் முன்னோர்களின் ஏமாளித்தனத்தால் அல்ல, அவர்களுக்கு பிராமணர்களின் சேவை தேவையாக இருந்தமையால்தான். அந்த மனநிலையும் பிராமணார்களின் சேவையும் இன்றும் கூட அப்படியே நீடிக்கிறது. இத்தனை பிராமண எதிர்ப்பரசியல் வந்தும்கூட இன்றும் பெரும் வணிகர்களும் அரசியல்வாதிகளும் பிராமணர்களையே நம்பி தூதர்களாகவும் சமசரக்காரர்களாகவும் பயன்படுத்துகிறார்கள். இதில் பிராமண எதிர்ப்பரசியல் நடத்தும் அரசியல்கட்சிகளும் தலைவர்களுமே முதலிடம் வகிக்கிறார்கள், விசாரித்துப்பாருங்கள். இந்த சமூகத்தேவை அன்று இன்னும் பெரிதாக இருந்திருக்கும். அன்று சைவ, வைணவ மத நம்பிக்கை இன்னும் வலுவானதாகவும் மக்களை கட்டுப்படுத்தி இணைக்கக் கூடியதாகவும் இருந்தது. ஆகவே ராஜராஜன் போன்றவர்கள் பிராமணர்களை போற்றினார்கள்.

ஆம், பிராமணர்களும் கோயில்களும் ஆதிக்கத்தின் கருவிகளே. ஆனால் இந்த ஆதிக்கம் தவிர்க்கமுடியாதது, நிகழ்ந்தேயாக வேண்டியது என்பதே கோஸாம்பி கூற்று. இதே காலகட்டத்தில் உலகின் மற்றப் பகுதிகளில் ஈவிரக்கமற்ற இனஅழித்தொழிப்பு மூலம் ஆதிக்கம் உருவானது என்பதை இதனுடன் நாம் ஒப்பிடவேண்டும். இந்திய மன்னர்கள் பிராமணர்களையும் பௌத்த சமணத்துறவிகளையும் பயன்படுத்தி நிகழ்த்திய ஆதிக்கம் என்பது சாத்வீகமானது. அழிவு அற்றது. அந்த மக்களின் பண்பாடுகள் கூட அழிக்கப்படவில்லை, அவை மைய பண்பாட்டுச்சரடு ஒன்றால் தொகுக்கப்பட்டன. இது தேவையில்லை என்றால் வரலாற்றில் நமக்குக் கிடைக்கும் அடுத்த வழி பரிபூரண அழித்தொழிப்பும் வன்முறையும்தான். இந்த வழியை வன்முறை என்பவர்கள் இதைவிட் பலமடங்கு வன்முறைமூலம் உருவான ஒருங்கிணைத்தலை நியாயப்படுத்தும் தரப்புகளின் குரலாக ஒலிக்கும் அபத்தத்தையும் நாம் காணலாம்.

உலகம் முழுக்க நிலவுடைமைச்சமூகத்தில் பூசகர்கள் பெரும் செல்வாக்குடன் இருந்திருக்கிறார்கள். நிலவுடைமைச் சமூகத்தை கட்டமைக்கும் கருத்தியல்களையும் நம்பிக்கைகளையும் சமூகத்தில் நிலைநாட்ட அவர்கள் இன்றியமையாதவர்கள். ஆனால் உலகிலேயே பூசகர்கள் குறைவான அதிகாரத்துடன் இருந்தது இந்தியாவில்தான். இங்கே பிராமணர்கள் நேரடி அதிகாரத்தைக் கையாளவில்லை. அவர்களுக்கு சலுகைகள் அளிக்கப்பட்டனவே ஒழிய நிலம் ,நிதி மீது அதிகாரம் அளிக்கப்படவில்லை. அது மன்னர்கள் மற்றும் வேளாளர் மற்றும் போர்ச்ச்சாதியினர் கைகளிலேயே இருந்தது. இதே காலகட்டத்தில் ஐரோப்பா மதகுருக்களின் நேரடி வன்முறை சார்ந்த அதிகாரத்தில் ஆழ்ந்து கிடந்தது என்பதை நினைவுகூர வேண்டும்.

சோழர்காலகட்டத்தில் பிராமண ஆதிக்கம் உருவானது பற்றி மேடைகளில் பேசுவோர் அக்காலத்தில்தான் இன்றும் நீடிக்கும் வேளாள ஆதிக்கம் வலுவாக நிலைநாட்டப்பட்டது என்றும் அதே ஆய்வாளர்கள் சொல்வதை தவிர்த்துவிடுகிறார்கள். நிலங்கள் வேளாண்மைக்குக் கொண்டு வரும் தோறும் நிலநிர்வாகம் செய்யும் சாதிகளின் ஆதிக்கம் வளர்ந்தது. புதிய நில உடைமையாளர்கள் உருவாகி அவர்கள் வேளாளர்கள் என்று பொது அடையாளத்துக்குள் வந்தபடியே இருந்தார்கள். ஒருகட்டத்தில் தமிழக வேளாண் நிலம் முழுக்கவே வேளாளர் மற்றும் அவர்களின் மத அமைப்பான சைவ மடங்களின் கைகளுக்குச் சென்று அப்படியே பிரிட்டிஷ் ஆட்சி வரும் வரை நீடித்தது. தமிழகத்தில் கிட்டத்தட்ட ஆயிரம் வருடம் வேளாளர் வகித்த அதிகாரத்தின் துளியைக் கூட பிராமணர்கள் ருசிக்க நேர்ந்ததில்லை என்பதே உண்மை.

பிராமணர்கள் சோழர் காலத்தில் அமைச்சுப் பதவிகளில் இருந்திருக்கிறார்கள். ஆனால் பரவலாக அவர்களுக்கு அதிகாரத்தில் பங்கிருக்கவில்லை. அவர்கள் அதிகாரத்தை ருசிக்க ஆரம்பித்தது உண்மையில் நாயக்கர் காலகட்டத்தில்தான். ஆனால் அதுகூட தெலுங்குபிராமணர்கள்தான். பிரிட்டிஷார் வந்தபின் ஆங்கிலக்கல்விமூலம் பிரிடிஷாருட்ன் ஒத்துழைத்தே பிராமணர் நேரடி அதிகாரத்தை அடைந்தார்கள். அதைக்கொண்டு அவர்கள் வேளாளர்களுக்கு எதிராகவும் செயல்பட்டார்கள். அந்தக் கசப்பே தமிழகத்திலும் கேரளத்திலும் பிராமண எதிர்ப்பரசியலுக்கு வித்திட்டது. அதை ஆரம்பித்தவர்கள் வேளாளர்களும் அவர்களின் கேரள வடிவமான நாயர்களும்தான்.


மீண்டும் டோண்டு ராகவன். உடல் உழைப்பு இல்லாத மூளைவேலை என்றால் அவ்வளவு மட்டமா? அப்படி பார்த்தால் கிறித்துவ பாதிரியார்கள், இசுலாமிய, யூத குருமார்கள் ஆகியோரைய்ம்தான் சாட வேண்டும். விஷயம் என்னவென்றால் மக்கள் கூடும் எல்லா இடங்களிலும் இம்மாதிரியான உழைப்புப் பங்கீடு இருந்தே தீரும். மூளை உழைப்புக்காரனுக்கு எல்லாமே எளிது என்றால் ஏன் எல்லாருமே அப்படிப் போகக் கூடாது? எல்லாவர்றுக்கும் அவரவரது மனப் போக்கே காரணம். அதை வைத்துத்தான் நம் தேசத்தில் வர்ணங்கள் தோன்றின. தேவைக்கேற்ப அந்த பாகுபாடுகள் ரிஃபைன் ஆகிக் கொண்டே சென்றன.

இப்போதைய சாதிகளை எல்லாம் எடுத்து விட்டாலும் எதிர்காலதில் அதுவே வேறு ரூபத்தில் வரும் என்பதை சமீபத்தில் 1957-ல் எழுத்தாளர் நாடோடி நகைச்சுவையுடன் பதிவு செய்தார்.

அதிலிருந்து சில வரிகள்: (இங்கு நிகழ்வுகள் 2957-ஆம் ஆண்டு வருவன என்பதை நினைவில் வைக்கவும்)

அன்றிரவு தங்குவதற்காக ஹோட்டலுக்கு போகலாம் என்றால் ஒவ்வொரு ஜாதிக்கும் தனித்தனி ஹோட்டலாக இருந்தது. ஆக வக்கீலும் எழுத்தாளரும் வெவ்வேறு ஹோட்டல்களில் தங்க வேண்டி வருகிறது. எழுத்தாளர் நாடோடி தங்கியிருந்த ஹோட்டலில் உள்ள இன்னொரு எழுத்தாளர் அப்போதைய ஜாதிக் கட்டுப்பாடு பற்றி விளக்குகிறார். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் வர்ணாசிரமம் வந்து அதிலிருந்து ஜாதிகள் வந்ததை விளக்குகிறார். பிறகு அவற்றின் கட்டுக்கோப்பு குலைந்து போனதால் யார் வேண்டுமானாலும் எந்தக் குலத்தொழிலையும் செய்யலாம் என நிலை ஏற்பட, சம்பளம் அதிகம் வராத தொழில்களுக்கு ஆட்கள் கிடைக்காது, சம்பளம் அதிகம் கிடைக்கும் வேலைகளுக்கு ஒட்டுமொத்தமாக ஜனங்கள் போய் விழ அங்கு வேலையில்லாத் திண்டாட்டம் வந்தது. ஆகவே 500 ஆண்டுகளுக்கு முன்னால் அப்போது நிலவிய தொழில்களின் அடிப்படையில் மீண்டும் ஜாதிகளை வகுத்து ஒரு ஜாதிக்காரர் இன்னொரு ஜாதிக்காரரின் வேலையை செய்யக்கூடாது என்ற நிலை நிறுவப்பட்டது.

ஜாதிப் பிரிவுகள் இருந்தனவே தவிர இந்த ஜாதிதான் உயர்ந்தது இன்னொரு ஜாதி தாழ்ந்தது என்ற எண்ணங்களும் வராமல் பார்த்து கொள்ளப்பட்டன. தலைமுறை தலைமுறையாக ஒரு குறிப்பிட்ட ஜாதியினர் ஒரு தொழிலை மட்டும் செய்ததால் அத்தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. ஆகவேதான் ஒரு ஜாதியினர் இன்னொரு ஜாதியினரைத் தொடுவது கூட குற்றமாகக் கருதப்பட்டது. போலீஸ் ஜாதியைச் சார்ந்தவர்கள் திருடர்களை பிடிக்கும்போது மட்டும் தங்கள் தொழில் தர்மப்படி அவர்களைத் தொடலாம். பிறகு தீட்டு கழிய அவர்கள் குளிப்பதற்கு சோப்பு டவல் எல்லாம் வழங்கப்படும். திருடர்களும் போலீஸ் ஜாதியினர தங்களைத் தொட்டு விட்டதால் அவர்களும் குளிப்பார்கள்.

இதையெல்லாம் கேட்ட நாடோடிக்கு தலைசுற்றி தெரியாத்தனமாக தான் 1957-லிருந்து வருவதாகக் கூற, “பைத்தியம் டோய்” எனக் கூறி எல்லோரும் அவரை அடிக்க வருகின்றனர். திடீரென விழித்துக் கொள்ளும் நாடோடி தான் 1957-லேயே இருப்பதை உணர்ந்த் நிம்மதி அடைகிறார்.

மனிதர்களுக்குள் குழுமனப்பான்மை என்பது இயற்கையாகவே வரும். ஆனால் அதற்காக இம்மாதிரி ஜாதி என்றெல்லாம் சொல்வது ஓவர் என்பவர்கள் சரித்திரத்தை பற்றி சரியாக அறியாதவர்கள். இப்போது கூட பார்க்கிறோமே, டாக்டர்களின் பிள்ளைகள் பெற்றோர்கள் அறிவுரைப்படி டாக்டர்கள் ஆகின்றனர். அதே மாதிரித்தான் மற்ற தொழில்களிலும்.

இதையெல்லாம் ஒத்துக் கொள்வதும் ஒத்துக் கொள்ளாததும் அவரவர் விருப்பம். ஆனால் நாடோடியின் இந்தக் கட்டுரை நல்ல முறையில் நகைச்சுவையுடன் எழுதப்பட்டுள்ளது.


அன்புடன்,
டோண்டு ராகவன்

138 comments:

  1. I endorse to say that if we can match with anyone when it comes to work and we never shrug to do work.

    ReplyDelete
  2. உண்மை என்னவென்றால் சாதி முறை காலத்தின் கட்டாயம். அது எல்லோருக்கும் உதவியாக இருந்தது................/////////////////



    இது அதிக பிரசிங்கிதனம் ............


    இப்போ என்ன மைக்கு .................. இட ஒதுக்கீடு பத்தி கேவலமா உங்க ஆளுங்க பேசுறாங்க இதுவும் கால தோட கட்டாயம்ன்னு போத்திக்கிட்டு போக வேண்டியது தானே ................................

    ReplyDelete
  3. காந்தியோட சத்திய சோதனையில் தென ஆப்பிரிக்காவில் ஒரு தமிழர் வாயில் வைக்கோல் வைத்துக்கோண்டு பேசினதா(ஜாதி கொடுமை) எழுதியிருக்கார்.

    தமிழகத்தில் எங்க இல்லை ஜாதி கொடுமை அந்த காலத்தில். (இப்போ எங்கேயும் அந்த அளவுக்கு இல்லை).அக்ரஹாரத்தில் ஒரு தாழ்த்தப்பட்டவர் நுழைய முடியாத காலகட்டம் போன நூற்றாண்டு என்பதை நீங்கள் மறுக்க முடியாது

    ReplyDelete
  4. //அவரது ஆட்சிக்கீழ் இருந்த ஆலயங்கள் அனைத்திலும் மாறுபட்ட பூசைமுறைகள் தடைசெய்யப்பட்டு ஆகமமுறை கட்டாயமாக்கப்பட்டது. இந்த ஆதிக்கக் கட்டமைப்புக்கு பிராமணர் தேவைப்பட்டார்கள். ஆகவே அவர்கள் பேணப்பட்டு சலுகையளிக்கப்பட்டார்கள்.// என்னய்யா கொடுமை இது. பாடம் படிக்க சலுகை இல்லியாம், விவசாயம் செய்ய சலுகை இல்லியாம். மனுஷன் செத்துப்போனாலும் பார்த்துக்கிட்டு இருக்குற சிலைக்கு பூச பண்றவனுக்கு சலுகையா? அதையும் ஒரு பெரிய விஷயமின்னு சொல்ல பொறப்பட்டு வந்திட்டிங்க..யாகம் பண்ணா மழை வரதுங்க. மரம் வளர்த்ததால்தான் வரும். இவனுங்க பண்ற யாகத்துல அது வருமாம் இது வருமாம்!! அடேங்கப்பா!! கேக்குறவன் கேணயனா இருந்த எருமை கூட ஏரோபிளேன் ஓட்டுமாம்.

    ReplyDelete
  5. உடல் உழைப்பு இல்லாத மூளைவேலை என்றால் அவ்வளவு மட்டமா? அப்படி பார்த்தால் கிறித்துவ பாதிரியார்கள், இசுலாமிய, யூத குருமார்கள் ஆகியோரைய்ம்தான் சாட வேண்டும்.......................//////////////////////////////


    அவர்கள் எல்லாம் சமுதாயத்திற்கு குறைந்த பட்ச நன்மைகள் செய்தவர்கள் ...
    ஒரு மருத்துவ மனை கல்விக்கூடம் என்று எதாவது ஆனால் பிக்காளிகள் நீங்கள் என்ன செய்தீர்கள் ?
    சுரண்டி கொல்வதி தவிர ............................

    ReplyDelete
  6. //அக்ரஹாரத்தில் ஒரு தாழ்த்தப்பட்டவர் நுழைய முடியாத காலகட்டம் போன நூற்றாண்டு என்பதை நீங்கள் மறுக்க முடியாது//
    அது போன நூற்றாண்டுதானே, அதுவும் போன நூற்றாண்டின் ஆரம்பத்தில். அப்போது எங்குமே தாழ்த்தப்பட்டவர்கள் செல்ல முடியாது.

    ஆனால் இப்போதும் வன்னியர்கள் போன்ற பிசி/ஓபிசிக்கள் தலித்துக்கு அதைத்தானே செய்கின்றனர்? அவர்களது தெருவில் தலித்துகள் சைக்கிளில் செல்லக் கூடாது, காலில் செருப்பு போடக்கூடாது, கண்ட தேவியில் தேர் இழுக்கக் கூடாது. உண்டா இல்லையா? அதையெல்லாம் உங்களால் மறுக்க முடியுமா? அக்ரஹாரங்களே இல்லை என்னும் நிலைக்கு கிராமங்களில் நிலைமை என்பதையும் மறுக்க முடியுமா?

    குருட்டுத்தனமாக பார்ப்பன எதிர்ப்பாளர்கள் கூறியதை ஆதரிக்காதீர்கள்.

    கொஞ்சம் சுயபுத்தியுடன் செயல்படுவது நலம்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  7. //இதுவும் கால தோட கட்டாயம்ன்னு போத்திக்கிட்டு போக வேண்டியது தானே//
    ஏன் ஐயா போக வேண்டும்? எல்லா மயித்துக்கும் நீங்க பாப்பானை திட்டுவீங்க அப்போ அவங்க வாயில விரலை வெச்சுக்கிட்டு நிக்கணுமா?

    நான் கூறியதன் சரித்திர உண்மையை உம்மால் மறுக்க முடியுமா எனப் பார்க்கவும்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  8. பிராமணர்கள் பதிலுக்கு தாங்கள் செல்லுமிடங்களில் இனக்குழுக்கள் நடுவே பூசல்களை இல்லாமலாக்கி அவர்களை ஒன்றாக தொகுத்து மன்னர்களுக்கு விசுவாசமானவர்களாக ஆக்கி வரிவசூலை சாத்தியமாக்கினார்கள்...................../////////////////////////////

    அட கேவலமே பூசல்கள் உருவாக்கினவர்களே இந்த நாய்கள் தான் அது வரை மனுஷன் மனிதனாக மட்டும் பார்க்க பட்டான் இவனுக மட்டும் .......................வேண்டாம் நான் ரொம்ப கோவகாரன் நிறுத்திக்கிறேன் ......................

    ReplyDelete
  9. //யாகம் பண்ணா மழை வரதுங்க. மரம் வளர்த்ததால்தான் வரும். //
    மரம் வெட்டினால் வருமா மழை?

    பதிவு என்ன சொல்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். அதில் கூறப்பட்ட விஷயத்துக்கு வாருங்கள். பழங்காலத்தை இக்காலக் கண்ணாடி கொண்டு பார்த்தால் காரியத்துக்காது

    அப்போ பாதிரியார்கள், காஜிகள் ஆகியோர் எல்லோருமே சோம்பேறிகள்தானா? சொல்லிப் பாருங்களேன் உங்கள் கிறித்துவ இசுலாமிய தோழர் தோழிகளிடம்.

    டோண்டு ராகவன்

    ReplyDelete
  10. ஏன் ஐயா போக வேண்டும்? எல்லா மயித்துக்கும் நீங்க பாப்பானை திட்டுவீங்க அப்போ அவங்க வாயில விரலை வெச்சுக்கிட்டு நிக்கணுமா?

    நான் கூறியதன் சரித்திர உண்மையை உம்மால் மறுக்க முடியுமா எனப் பார்க்கவும்.................////////////////

    என்னால் மறுக்க முடியம் பார்பன குடியிருப்பு பல்லவர் காலத்தில் இருந்து இப்போதைக்கு இருக்கும் நிலை வரைக்கும் என்னால் விளக்க முடியும் சும்மா வெட்டியா இல்ல ..........

    ReplyDelete
  11. //அட கேவலமே பூசல்கள் உருவாக்கினவர்களே இந்த நாய்கள் தான் அது வரை மனுஷன் மனிதனாக மட்டும் பார்க்க பட்டான் இவனுக மட்டும் .......................வேண்டாம் நான் ரொம்ப கோவகாரன் //
    அடப்போய்யா வெத்துவேட்டு. யாரிடம் உதார் காட்டுகிறீர்?

    சரி பாப்பான்தான் சாதியைச் சொன்னாங்கறீங்க. மத்த சாதிக்காரங்க அதை எதிர்க்கறதுதானே? மயிரையா பிடுங்கினாங்க? எல்லோருக்கும் சாதகம் இருந்ததில்லையா?

    இப்போ மட்டும் தலித்துகளை வன்கொடுமை செய்யும் பிசிகளையும் ஓபிசிகளையும் எங்காவது தட்டிக் கேட்கும் துப்பிருக்கா உமக்கு?

    யார் கண்டது உமது சாதியும் வன்கொடுமைதான் செய்யும்னு நினைக்கிறேன்.

    டோண்டு ராகவன்

    ReplyDelete
  12. >சாதி முறை காலத்தின் கட்டாயம். >அது எல்லோருக்கும் உதவியாக >இருந்தது. இப்போதும் இருந்து >வருகிறது.

    என்ன வில்லத்தனம்! சாதி முறை இப்போது எப்படி உதவிகரமாக இருந்து வருகிறது? இட ஒதுக்கீடு, அரசியல் என்றல்லாம் சொல்லக் கூடாது.

    ReplyDelete
  13. bold and excellant post.a very convincing and factual attemt.the argument putforth is unassailable.thanks to jayamohan and dondu.a very timely post.welldone dondu,sir.
    radhakrishnan,madurai.

    ReplyDelete
  14. நான் ஒரு தெளிவான வரலாற்று பார்வை உள்ள ஒரு மனிதன் நான் நாத்திகவாதி கிடையாது. குழப்பி கொள்ள வேண்டாம் .......

    ReplyDelete
  15. >டாக்டர்களின் பிள்ளைகள் >பெற்றோர்கள் அறிவுரைப்படி >டாக்டர்கள் ஆகின்றனர். அதே >மாதிரித்தான் மற்ற தொழில்களிலும்.

    மோசமான எடுத்துக்காட்டு. இதை துப்புரவு பணி செய்பவருடன் பொருத்திப் பார்க்க முடியுமா உங்களால்?

    விரும்பி ஏற்றுக்கொள்வது வேறு, திணிக்கப் படுவது வேறு!

    ReplyDelete
  16. //நான் ஒரு தெளிவான வரலாற்று பார்வை உள்ள ஒரு மனிதன் நான் நாத்திகவாதி கிடையாது. குழப்பி கொள்ள வேண்டாம் //

    //என்னால் மறுக்க முடியம் பார்பன குடியிருப்பு பல்லவர் காலத்தில் இருந்து இப்போதைக்கு இருக்கும் நிலை வரைக்கும் என்னால் விளக்க முடியும் சும்மா வெட்டியா இல்ல ..........//

    சும்மா சொல்லாதீங்க, செய்யுங்க. நீங்க பதிவராகி 3 வருஷத்துக்கு மேலே ஆச்சு, மொக்கைப் பதிவுங்களை போடறதை விட்டுட்டு இம்மாதிரி சரித்திர பிரக்ஞையோட பதிவு போடுங்களேன், முடிந்தால்.

    டோண்டு ராகவன்

    ReplyDelete
  17. //என்ன வில்லத்தனம்! சாதி முறை இப்போது எப்படி உதவிகரமாக இருந்து வருகிறது? இட ஒதுக்கீடு, அரசியல் என்றல்லாம் சொல்லக் கூடாது.//
    நான் சொல்லவில்லை, அருள் சொல்லுவார்.
    பை தி வே ஒவ்வொரு சாதியினரும் திருமண மையம் திறந்து வைத்திருக்கிறார்களே, அது என்ன வெறுமனே வெட்டியான வேலைக்கா?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  18. கடைசி வரைக்கும் சாதியை வைத்தே காலத்தை ஓட்டும் ஆசையா உங்களுக்கு? வேண்டாம் சார் .மனிதனை மனிதனாக பார்க்கும் பக்குவம் வேண்டும் இங்கே பார்பான்னு எவனாவது சொன்னா எப்படி கோபம் வருமோ அப்படி தான் எந்த ஜாதியாக இருந்தாலும் .
    ஒரு காலத்தில் நீங்க பெரிய ஆளு ஆனா இப்போ கத வேற மாதிரி இப்போ உங்களுக்கு எப்படி வலிக்கிறதோ அந்த காலத்தில் அவங்களுக்கும் அப்படிதான் வலிச்சிருக்கும் ..................

    ReplyDelete
  19. சும்மா சொல்லாதீங்க, செய்யுங்க. நீங்க பதிவராகி 3 வருஷத்துக்கு மேலே ஆச்சு, மொக்கைப் பதிவுங்களை போடறதை விட்டுட்டு இம்மாதிரி சரித்திர பிரக்ஞையோட பதிவு போடுங்களேன், முடிந்தால்......................////////////////////////////////////////////

    நான் பதிவு போட்டு மூணு மாதங்கள் தான் ஆகிறது .................
    நான் சென்னை தான் எந்த விவாதத்திற்கும் நான் தயார் ........................

    ReplyDelete
  20. //விரும்பி ஏற்றுக்கொள்வது வேறு, திணிக்கப் படுவது வேறு//
    யாரும் அவர்கள் மேல் அந்த வேலையைத் திணிக்கவில்லை. அவர்களிலும் பையன்கள் பெண்கள் படித்த பின்பு இந்த வேலைகளைச் செய்வதில்லை.

    அதன்றி தினசரி சம்பாதிக்கும் பணத்தில் குடித்து விட்டு கிடப்பவர்களது பிள்ளைகள் படிக்க வாய்ப்பின்றி போவதால் அவர்களும் இத்தொழிலுக்கு வருகிறார்கள். அம்மாதிரி வர வற்புறுத்துவர்கள் சம்பந்தப்பட்ட குழந்தைகளின் பெற்றோரே.

    தலித்துகளின் தலைவர்கள் எனச்சொல்லிக் கொள்ளும் திருமா போன்றவர்கள் ஜீன்ஸ் ரெய்பேக் ஷூ ஆகியவற்றைத் தனக்கு மாட்டிக் கொள்ளும் ஆர்வத்தில் ஒரு பங்கையும் தங்கள் இன ஏழைகளௌக்கு செய்கிறார்களா என்பதை பாருங்கள். அவர்களுக்குள்ளேயும் சாதி ஏர்றத் தாழ்வுகள் உண்டு.

    அவர்களை விட மிகக் கீழ்நிலையில் இருந்த நாடார்கள் சாதி ஒற்றுமையுடன் இருந்து இப்போது முன்னேறியிருக்கும்போது இஅவர்கள் மட்டும் ஏன் இப்படி என்பதை விருப்பு வெறுப்பின்றி யோசித்தீர்களா?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  21. தலித்துகளின் தலைவர்கள் எனச்சொல்லிக் கொள்ளும் திருமா போன்றவர்கள் ஜீன்ஸ் ரெய்பேக் ஷூ ஆகியவற்றைத் தனக்கு மாட்டிக் கொள்ளும் ஆர்வத்தில் ஒரு பங்கையும் தங்கள் இன ஏழைகளௌக்கு செய்கிறார்களா என்பதை பாருங்கள்........///////////////////////////

    'ஏன் சார் ஜீன்சும் ரீபாக் ஷூவும் உங்கள் கண்ணை உறுத்துதா பாருங்கப்பா இவங்க பார்வைய .......................

    ReplyDelete
  22. //நான் பதிவு போட்டு மூணு மாதங்கள் தான் ஆகிறது .................//
    நீங்க பிளாக்கர் நவம்பர் 2007-லிருந்துன்னு உங்க பிரொஃபைல் சொல்லுதே. அதுக்கு என்ன செய்ய?

    //கடைசி வரைக்கும் சாதியை வைத்தே காலத்தை ஓட்டும் ஆசையா உங்களுக்கு? வேண்டாம் சார். மனிதனை மனிதனாக பார்க்கும் பக்குவம் வேண்டும் இங்கே பார்பான்னு எவனாவது சொன்னா எப்படி கோபம் வருமோ அப்படி தான் எந்த ஜாதியாக இருந்தாலும்.//
    நான் சொல்ல வந்ததே சாதியின் சரித்திரத்தைக் கூறுவதே. சரித்திரம் முக்கியம் அமைச்சரே.

    //ஒரு காலத்தில் நீங்க பெரிய ஆளு ஆனா இப்போ கத வேற மாதிரி இப்போ உங்களுக்கு எப்படி வலிக்கிறதோ அந்த காலத்தில் அவங்களுக்கும் அப்படிதான் வலிச்சிருக்கும்//
    அப்படியா, வன்கொடுமை எங்கே நடந்தாலும், அதை செய்யறவன் பிசி ஓபிசியா இருந்தாலும் பார்ப்பனீயம்னு சொல்லறாங்களே, அதை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?

    சாதி எங்கேதான் இல்லை? மணியம்மையாரைத் திருமணம் செய்வதைத் தவிர்த்து அவரை வைத்துக் கொள்ளுமாறு அண்ணாத்துரை கூற, ஈ.வே. ராமசாமி நாயக்கர் அந்தாள் தன் முதலியார் சாதி புத்தியை காட்டி விட்டர்னு சொன்னதெல்லாம் வெறும் விளையாட்டா? சாதி என்பது ஆழப் பதிந்த விஷயம். அதனால் அனுகூலங்கள் இருப்பதாலேயே அது இன்னமும் நிற்கிறது என்னும் சரித்திர உண்மையைத்தான் இப்பதிவு காட்டுகிறது. ஜெயமோகன் சொன்னது போல இங்கு பின்னூட்டம் போட்ட பலருக்கு பாவ்லோவின் நாயின் எதிர்வினைதான் வருகிறது, அதாவது பாப்பானைத் திட்டுன்னு.

    ஆகவே இந்த சண்டைக்கார பாப்பான் அதுக்கெல்லாம் அசர மாட்டான்னு சொல்லிக் கொள்கிறேன்.

    டோண்டு ராகவன்

    ReplyDelete
  23. அதன்றி தினசரி சம்பாதிக்கும் பணத்தில் குடித்து விட்டு கிடப்பவர்களது பிள்ளைகள் படிக்க வாய்ப்பின்றி போவதால்......//////////////////

    இதை சொல்ல உங்களுக்கு சங்கடமாக இல்லை ? கல்வியை மறைத்து வைத்து வேதம் படிப்பவனது காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்ற வேண்டும் என்று சொல்லி அதனால் கிடைக்கும் நன்மையை முழுவதும் அனுபவித்து விட்டு வெட்கம் இல்லாமல் இப்போது சொல்கிறீர்கள் அவர்களுக்கு தகுதி இல்லை என்று ....

    ReplyDelete
  24. //
    அக்ரஹாரத்தில் ஒரு தாழ்த்தப்பட்டவர் நுழைய முடியாத காலகட்டம் போன நூற்றாண்டு என்பதை நீங்கள் மறுக்க முடியாது
    //

    மேல் சாதி தெருவுக்குள் கீழ்சாதி செருப்பில்லாமல் போவது இந்த நூற்றாண்டிலும் நடந்துகொண்டிருக்கிறதே.

    அக்ரகாரத்தை பொதுவுடமையாக்கி உங்கள் தெருவை மட்டும் தனியுடமையாக்கிக்கொள்வது தான் இன்றைய சமூக நீதி.

    ReplyDelete
  25. சாதி முறை எல்லாருக்கும் பயன் உள்ளதாக இருந்ததுன்னு சொல்றிங்க்களே...

    அது எப்படி...

    ஒரு வேளை அடக்குமுறைக்கு வசதியாக இருந்ததா ?

    அப்படி இருந்தா அடக்கபடுபவர்கள் சாதிகளே இல்லாத காலத்தில் .. தொடக்க காலத்தில் இதை எப்படி ஏற்று கொண்டார்கள் ?

    உதாரணமாக எல்லாரும் சமமாய் இருக்கும் ஒரு சமுதாயத்தில் .. சதியை கொண்டுவர வேண்டும் என்றால் .. சிலரை மேல் சாதி, சிலரை கீழ்சாதி என்று பிரிக்க வேண்டும்...


    மேல்சாதி என்றால் ஏற்றுக்கொள்ளூவர்கள்...
    இன்னையிலிருந்து நீ கீழ் சாதின்னு சொன்னா எப்படி ஏற்றுகொள்வார்கள் ?


    இந்த சாதி எப்படி உபயோகமாக இருந்தது...இருகிறதுண்ணு விளக்குங்க தயவுசெய்து ?

    ReplyDelete
  26. //இதை சொல்ல உங்களுக்கு சங்கடமாக இல்லை ? கல்வியை மறைத்து வைத்து வேதம் படிப்பவனது காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்ற வேண்டும் என்று சொல்லி அதனால் கிடைக்கும் நன்மையை முழுவதும் அனுபவித்து விட்டு வெட்கம் இல்லாமல் இப்போது சொல்கிறீர்கள் அவர்களுக்கு தகுதி இல்லை என்று//

    என்ன முட்டாள்தனமான பேச்சு! திரேதா யுக காலத்தையெல்லாம் ஏன் இழுக்கிறீர்கள். அதுவும் சொன்னது மனு, அவர் பார்ப்பனர் இல்லை.

    இப்போதைய நிலை பற்றிப் பேசுங்கள். நீங்கள் கூறுவது தலித்துகள் முன்னேறிவிடுவார்களோ என்ற கவலையைத்தான் உணர்த்துகிறது.

    நான் கூறியது தகுதி இல்லை என்றல்ல. அதற்கான முனைப்பு இல்லை என்பதையே, அதை மறுக்க முடியாது.

    //'ஏன் சார் ஜீன்சும் ரீபாக் ஷூவும் உங்கள் கண்ணை உறுத்துதா பாருங்கப்பா இவங்க பார்வைய .......//
    தாராளமா போடட்டுமே. அதே சமயம் அவர் தலித்துகள் நலனிலும் அக்கறை வைக்கட்டுமே. தலைக்கு மேலே இந்த வேலை இருக்க, மற்ற வெளிவிஷயங்களை பார்த்து நேரத்தை ஏன் வீணடிக்கணும்?

    டோண்டு ராகவன்

    ReplyDelete
  27. //இந்த சாதி எப்படி உபயோகமாக இருந்தது...இருகிறதுண்ணு விளக்குங்க தயவுசெய்து ?//
    ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அது இருந்து வந்திருக்கிறது என்பதே போதுமே, நான் கூறியதை நிரூபிக்க?

    அந்தந்த காலகட்டங்களுக்கென்று நடைமுறைகள் உண்டு. அவ்வாறாகவே சாதியும் இருந்திருக்கிறது. மனிதனுக்கு குழு அமைக்கும் மனோபாவம் தவிர்க்க முடியாதது. அது இப்போதும் செல்லுபடியாகிறது. அவ்வளவே.

    சாதி வேண்டாம் என பம்முகிறவர்கள் பத்திரிகைகளில் சாதி சார்ந்த திருமண விளம்பரங்களைப் பார்க்கவும்? அவ்வாறு வேண்டாம் என்பவர்களே முக்கால்வாசி நேரங்களில் தத்தம் முறைப் பெண் முறைப் பையன் எனப் பார்த்துத்தான் திருமணமே செய்து கொள்கிறார்கள். அவர்கள் புத்திசாலிகள்.

    அவர்களது பேச்சில் மயங்கி சில அசடுகள் சாதி விட்டு திருமணம் செய்து கொள்ள, அவர்களது சந்ததியினர் இப்போது திருமணத்துக்கு சரியான இடம் கிடைக்காமல் இன்னும் அவதிப் படுகின்றனரே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  28. //
    சாதிகளே இல்லாத காலத்தில் .. தொடக்க காலத்தில் இதை எப்படி ஏற்று கொண்டார்கள் ?

    உதாரணமாக எல்லாரும் சமமாய் இருக்கும் ஒரு சமுதாயத்தில் .. சதியை கொண்டுவர வேண்டும் என்றால் .. சிலரை மேல் சாதி, சிலரை கீழ்சாதி என்று பிரிக்க வேண்டும்...


    மேல்சாதி என்றால் ஏற்றுக்கொள்ளூவர்கள்...
    இன்னையிலிருந்து நீ கீழ் சாதின்னு சொன்னா எப்படி ஏற்றுகொள்வார்கள் ?

    //

    முதலில் அப்படி ஒரு காலாம் இருந்தது என்பதை எப்படி நீங்கள் கூறுகிறீர்கள் ?

    இப்பொழுதே உங்களால் சிலரை கீழ்சாதி என்றால் ஏற்கமுடியவில்லை...இணையத்தில் சண்டை போடுகிறீர்கள். ஒரு சிறு தயிர்சாதக்கூட்டம் வந்து சொன்னவுடன் அந்த காலத்தில் ஏற்றுக்கொண்டுவிட்டார்களா என்றெல்லாம் கேட்கத் தோன்றவில்லையா உங்களுக்கு ?

    ReplyDelete
  29. எவனோ ஒரு கோசம்பி எழுதிவைத்தாலோ ஜெய மோகன் பிதற்றியதாலோ வரலாறு திரும்பி விடபோவதில்லை. போய் வேலையை பாருங்கப்பா...
    இறப்பை குறித்த அச்சம், இறந்த பின் என்ன என்ற கேள்வி தான் அந்தணர்களை அண்டி இருக்க செய்தது. மற்ற காரணங்கள் எல்லாம் அதற்கு பிறகு தான்.
    எது எப்படி இருந்தாலும் பிராமணர்கள் அரசர்களை தங்கள் கைக்குள் அடக்க பல்வேறு உக்திகளை கையாண்டு இருக்கிறார்கள்.

    தனது அண்ணனை கொன்ற அந்தணர்களையும், அவரின் சுற்றத்தார் அனைவரையும் நாடு கடத்திய ராஜா ராஜன் அது குறித்து மிகுந்த அச்சம் கொண்டதன் விளைவே மிகபெரும் கற்றளி எழுப்பி தன சாபத்தை போக்கி கொண்டது வரலாறு.

    ReplyDelete
  30. @அஞ்சா சிங்கம்
    @Vinoth
    @ஞாஞளஙலாழன்

    மிகச்சரியான கருத்துக்களை தெரிவித்துள்ளீர்கள். பாராட்டுக்கள், நன்றி

    இன்றைக்கும் 'தானே எல்லோரிலும் உயர்ந்த சாதி' என்று சாதிப்பெருமையை பீற்றிக்கொள்ளும் வகையில் பூணூல் போட்டிருப்பது பார்ப்பனர்கள்தான். (மற்ற சிலசாதியினரும் பார்ப்பானைக் காப்பியடித்தாலும், அது பார்ப்பானால் அங்கீகரிக்கப்பட்டது அல்ல)

    பார்ப்பனர்கள் ஒருபோதும் திருந்த மாட்டார்கள், திருத்தப்படுவார்கள்.

    ReplyDelete
  31. "ஸ்நாதமஸ்வம் கஜமத்தம்
    ரிஷபம் காமமோஹிதம்
    சூத்தரம் சரசம்யுக்தம் தூரதப் பரிவர்ஜ்ஜையேல்"-

    குளிப்பாட்டிய குதிரையையும், மதங்கொண்ட யானையையும், காம விகாரங்கொண்ட காளை மாட்டையும், எழுத்துத் தெரிந்த சூத்திரனையும்,
    பக்கத்தில் சேர்க்கக் கூடாது.

    "ஜப ஸ்தப தீர்த்தயாத்திர,
    பிவர்ஜ்ஜய மந்தர சாதனம்,
    தேவரதனம் சசய்வஸ்தீரீ
    சூத்திர பததானிஷள்."

    ஜபம், தவசு, தீர்த்தயாத்திரை, சன்னியாசம், கடவுள், தோத்திரம், ஆதாரனை- இந்தக் காரியங்கள் பெண்களும், சூத்திரர்களும் ஒருபோதும் செய்யக் கூடாது.

    "நைவ சாஸ்திரம் படேநைவ
    சுருணுயாத் வைதிகாஷரம்
    நஸ்நாயாது தயால் பூர்வம்
    தபோ மந்திரஞ் சுவர்ஜ்ஜயேல்."-

    சூத்திரன் ஒருக்காலும் சாஸ்திரம் படிக்கவோ, வேதத்தைக் கேட்கவோ கூடாது. அவன் சூரிய உதயத்திற்கு முன் குளிக்கவும், மந்திரம் ஜெபிக்கவும், தபசு செய்யவும் கண்டிப்பாய்க் கூடாது.

    ReplyDelete
  32. //இந்த சாதி எப்படி உபயோகமாக இருந்தது...இருகிறதுண்ணு விளக்குங்க தயவுசெய்து ?//
    >ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அது >இருந்து வந்திருக்கிறது என்பதே >போதுமே, நான் கூறியதை நிரூபிக்க?

    இது கேள்விக்கான பதில் அல்ல. "எல்லாருக்கும்" உபயோகப்படுகிற ஒரு விசயம் தான் நெடுநாள் நீடித்திருக்கும் என்பது தவறான வாதம்..எனிவே அதை விட்டுத் தள்ளுங்கள். சாதி முறையின் தற்போதைய பயன்பாடு என்ன என்ற எனது கேள்விக்கு தாங்கள் இன்னும் சரியான பதில் தரவில்லை. (ப்ளாக் கிட் ரேட், இட ஒதுக்கீடு, அரசியல், திருமண நிலையங்கள் இதெல்லாம் சரியான பதில் அல்ல என்பது உங்களுக்கேத் தெரியும்)

    ReplyDelete
  33. அப்போ பாதிரியார்கள், காஜிகள் ஆகியோர் எல்லோருமே சோம்பேறிகள்தானா? சொல்லிப் பாருங்களேன் உங்கள் கிறித்துவ இசுலாமிய தோழர் தோழிகளிடம்.
    //
    ஆமாம் அவர்களும் சோம்பேறிகள்தான்,ஆனால் பார்ப்பனர்கள் சோம்பேறி தான் வாரிசு உரிமையாக்கிக்கொண்டதுதான் தவறு. அதை இன்னமும் சரி என்பது அயோக்கியத்தனம். உதாரணம் அனைத்து சாதி அர்ச்சகர் எதிர்ப்பு செய்யும் பார்ப்பனர்கள் சமூக விரோதிகள்.இந்து மதம் மாறிக்கொண்டே இருக்கவேண்டும். கடவுளோ/கோவிலோ இல்லாமல் மனிதன் இருக்கப்போவதில்லை, ஆகம விதிப்படி பார்ப்பான் பூஜை செய்யவேண்டும் என்ற ஒரு பயம் உருவாக்கப்பட்டுள்ளது,பயம் மாறுமா என்று தெரியவில்லை, பூசை செய்வது பார்ப்பனரின் பிறப்பு உரிமை அல்ல. அது மாறியே ஆகவேண்டும், அதை உணர்ந்த பார்ப்பனர்களும் உண்டு.உணராமால் தங்களை பிறப்பால் பிராமணர்(உயர்ந்தவன்) என்று அம்பிகளும் இங்குண்டு, அவர்கள் மாற்றப்படவேண்டும்.

    ReplyDelete
  34. அருள் அவர்கட்கு, சாதீயம் பார்ப்பனர்களால் கட்டமைப்பட்டிருக்கலாம், ஆனால் இன்றைக்கு மத்திய தர சாதியினரால் தாழ்த்தப்பட்டவர்களின் செய்யப்படும் அடக்குமுறைக்கு பார்ப்பனர்களை குறை சொல்வது தவறு, அது மத்திய தர சாதியினரிடம் இருக்கும் சாதீய அழுக்கு அதனை அவர்களே திருத்திக்கொள்ளவேண்டும் அல்லது தாழ்த்தப்பட்ட மக்களால் செருப்பால் அடிக்கப்படவேண்டும்.

    ReplyDelete
  35. இப்போதும் பல கோவிலக்ளில் பார்ப்பனர் இல்லாதவரும் பூஜை செய்கிறார்கள். அதுக்கென்ன இப்போ?

    இப்போ பூஜை செய்வதில் பார்ப்பனர்களே அக்கறை காட்டுவதில்லை என்பதே நிஜம்.

    இப்போ பிரச்சினையே வேற. அவனவனுக்கு நல்ல படிப்பு வேண்டும், நல்ல உத்தியோகம் பெற வேண்டும் அவ்வளவே.

    எல்லாம் அவரவர் மனப்பாங்குப்படி நடக்கும்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  36. dondu(#11168674346665545885) said...
    இப்போதும் பல கோவிலக்ளில் பார்ப்பனர் இல்லாதவரும் பூஜை செய்கிறார்கள். அதுக்கென்ன இப்போ?

    இப்போ பூஜை செய்வதில் பார்ப்பனர்களே அக்கறை காட்டுவதில்லை என்பதே நிஜம்.

    இப்போ பிரச்சினையே வேற. அவனவனுக்கு நல்ல படிப்பு வேண்டும், நல்ல உத்தியோகம் பெற வேண்டும் அவ்வளவே.

    எல்லாம் அவரவர் மனப்பாங்குப்படி நடக்கும்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்
    //
    இது கால மாற்றத்தில் நடப்பதுதான், ஆனால் சில மாற்றங்கள் காஞ்சி மடத்திலிருந்து ஆரம்பிக்கப்படவேண்டும்.அனைத்து சாதி அர்ச்சகர்களை எதிர்ப்பவர்களை யார் தண்டிப்பது.?

    ReplyDelete
  37. சாதிக்கொடுமையால் பார்ப்பனர் அல்லாத சாதிகள் ஒவ்வோன்றும் ஒவ்வோரு அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டு மக்களில் பெரும்பான்மையினராக உள்ள வன்னியர், முக்குலத்தோர், நாடார், மீனவர் உள்ளிட்ட பல சாதிகள் அவர்களது மக்கள்தொகை விழுக்காட்டிற்கு ஏற்ற அளவில் இன்றைக்கும் சென்னை ஐ.ஐ.டி'யில் படிக்கவில்லை. ஆனால், மக்கள் தொகையில் 3% கூட இல்லாத பார்ப்பனர்கள் அளவுக்கு அதிகமாகவே இடம்பெற்றுள்ளனர்.

    இதற்கு காரணம் - தனித்தன்மையான அறிவோ, திறமையோ காரணம் அல்ல. காலம்காலமாக அடுத்தவர் உழைப்பைச் சுரண்டி கொழுத்ததே உண்மையான காரணம் ஆகும்.

    ReplyDelete
  38. சாதிக்கொடுமையால் கடந்த 2000 ஆண்டுகளாக ஒவ்வொரு சாதியும் ஒவ்வொரு பணி/தொழிலில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    அந்த வகையில், பார்ப்பனர் அல்லாத சாதிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான வேலையில் ஈடுபட்டனர். இதனால், தனிப்பட்ட வகையில் அந்த சாதியினர் பாதிப்படைந்த போதிலும் - சமூகத்திற்கு அனைவரும் பயன்பட்டனர். தலித்துகள், வன்னியர், மீனவர், நாடார், தச்சர், கொல்லர் என எந்த சாதியை எடுத்தாலும், அவர்களால் தமிழ்நாடும் மக்களும் பயனடைந்தனர்.

    ஆனால், இந்த பட்டியலில் - பார்ப்பனர்களால் கிடைத்த பலன் என்று எதையாவது குறிப்பிட முடியுமா? பார்ப்பனரின் குலத்தொழிலால் தமிழ்நாடும் மக்களும் எந்த வகையிலாவது பயனடைந்தது உண்டா?

    ReplyDelete
  39. //ஜெயமோகன் சொன்னது போல இங்கு பின்னூட்டம் போட்ட பலருக்கு பாவ்லோவின் நாயின் எதிர்வினைதான் வருகிறது, அதாவது பாப்பானைத் திட்டுன்னு.//
    எழுந்து நின்று இருகரம் கூப்பி வழிமொழிகிறேன். விவாதத்துக்குத் தயார் என்று இங்கே உதார் விடும் பலரும் பேச ஆரம்பித்தால் ஈவேரா சொன்னார், அவருக்கு ஒண்ணுக்குக் குழாய் மாட்டிவிட்டவர் சொன்னார் என்பார்களே தவிர எதையும் படித்து ஆய்ந்து தெளிந்து பேசுவோர் எவருமில்லை.

    ரசியல் ஏகாதிபத்தியம் முதற்கொண்டு சமுதாய ஏற்றத் தாழ்வுகள், வழிபாட்டு முறைகள் வரை அனைத்தையும் நம் நாட்டு self-styled அறிவு ஜீவிகள், கடன் வாங்கிய மேற்கத்தியக் கண்ணாடி வழியாகவே பார்த்து “இது என்னய்யா இந்து மதத்துல ஒரே கூத்தாயிருக்கு?” என்று பெருங்காமெடி செய்யும் காலிப் பெருங்காய டப்பாக்கள் தான்!

    புராணமித்யேவ ந ஸாது ஸர்வம்
    ந சாபி காவ்யம் நவமித்யவத்யம்|
    ஸந்த: ப்ரீக்ஷ்யான் யதரத் பஜந்தே
    மூட: ப்ரபத்ய யனேய புத்தி:||
    (மாளவிகாக்னி மித்ரம் 1.2)

    இதன் பொருள்:

    பழமை போற்றத்தக்கதுமல்ல. புதுமை தூற்றத்தக்கதுமல்ல. எந்த மாற்றத்தையும் அறிஞர்கள் ஆராய்ந்து ஏற்கிறார்கள். மூடர்கள் பிறர் நம்பிக்கையை ஏற்கிறார்கள்.

    இதையே திருவள்ளுவர் எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்றார். இல்லாதவர்களிடம் பேசி என்ன பயன்?

    @ ஜெராக்ஸ் அருள்: எந்த தளத்திலிருந்து காப்பி அடிக்கிறீர்கள்? சுட்டி தரவும்!!!

    ReplyDelete
  40. எதிர்காலத்தில் சாதி வர்றது இருக்கட்டும், இப்போ ஏன் உங்களுக்கு சாதி தேவை!

    சாதி இல்லைனா பூனூல் போட முடியாதுன்னா?

    அய்யங்காருன்னா கிளை ஒன்று முளைத்திருக்கும் என்ற நம்பிக்கை உடைந்து விடும் என்பதாலா!?

    ReplyDelete
  41. //போன நூற்றாண்டின் ஆரம்பத்தில். அப்போது எங்குமே தாழ்த்தப்பட்டவர்கள் செல்ல முடியாது.//

    எங்குமே போக முடியாதா!?
    என்ன கொடுமை சார் இது? அவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என உருவாக்கி விட்டதே பார்பனர்கள் தான், அவர்களே வருத்தப்படுவது ஆச்சர்யமாக இருக்கிறது!

    ReplyDelete
  42. இங்கே உதார் விடும் பலரும் பேச ஆரம்பித்தால் ஈவேரா சொன்னார்,//
    அம்பி அதெல்லாம் கிடக்கட்டும் நீர் உம்மை பிராமணர் என்று சொல்லிக்கொள்கிறீர், அதற்கான காரணம் என்ன? மற்ற மனிதர்களை விட நீர் எந்த விதத்தில் உயர்ந்தவன்.

    ReplyDelete
  43. குடுகுடுப்பை said...

    // //ஆகம விதிப்படி பார்ப்பான் பூஜை செய்யவேண்டும் என்ற ஒரு பயம் உருவாக்கப்பட்டுள்ளது,பயம் மாறுமா என்று தெரியவில்லை, பூசை செய்வது பார்ப்பனரின் பிறப்பு உரிமை அல்ல. அது மாறியே ஆகவேண்டும்// //

    இதனை திருவாளர்கள் டோண்டு, அருண் அம்பி, வஜ்ரா ஆகியோர் ஏற்கிறார்களா?

    ReplyDelete
  44. டோண்டு சார்!

    //சரி பாப்பான்தான் சாதியைச் சொன்னாங்கறீங்க. மத்த சாதிக்காரங்க அதை எதிர்க்கறதுதானே? மயிரையா பிடுங்கினாங்க? எல்லோருக்கும் சாதகம் இருந்ததில்லையா?

    இப்போ மட்டும் தலித்துகளை வன்கொடுமை செய்யும் பிசிகளையும் ஓபிசிகளையும் எங்காவது தட்டிக் கேட்கும் துப்பிருக்கா உமக்கு?

    யார் கண்டது உமது சாதியும் வன்கொடுமைதான் செய்யும்னு நினைக்கிறேன்.//

    கூல் டவுன்! என்ன இவ்வளவு கோபம்!

    யாருக்கும் பிரச்னை இல்லாமல் ஒரு தீர்வு இருக்கிறது. தீண்டாமையை வெறுப்பவர்கள் பேசாமல் இஸ்லாத்துக்கு சென்று விட வேண்டியதுதான். நிரந்தரமான தீர்வு இதுதான். இது கசப்பாக இருந்தாலும் வேறு வழியில்லை. இது அல்லாது வேறு எந்த முயற்ச்சியும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் ஒரு முடிவை எட்டப் போவதில்லை.

    ReplyDelete
  45. //இதற்கு காரணம் - தனித்தன்மையான அறிவோ, திறமையோ காரணம் அல்ல. காலம்காலமாக அடுத்தவர் உழைப்பைச் சுரண்டி கொழுத்ததே உண்மையான காரணம் ஆகும்.//

    ஒரு பேச்சுக்கு பார்ப்பனர் அதை முற்காலதில் செய்தார்கள் என்று கொண்டாலும், அதை இப்போது செய்ய துடிக்கும் பச்சோந்தி வன்னிய கும்பலை வேரருத்து வீழ்த்தி தலித்துளை காக்கும் கடமை தற்போதைய பார்பனருக்கு உண்டு.

    தற்போது அடுத்தவர் உழைப்பில் உண்டு கொழுக்கும் பச்சோந்தி வன்னிய கும்பல் திருந்தமாட்டார்கள், திருத்தபடுவார்கள்.

    ReplyDelete
  46. //ஆனால், இந்த பட்டியலில் - பார்ப்பனர்களால் கிடைத்த பலன் என்று எதையாவது குறிப்பிட முடியுமா? பார்ப்பனரின் குலத்தொழிலால் தமிழ்நாடும் மக்களும் எந்த வகையிலாவது பயனடைந்தது உண்டா?//

    பச்சோந்தி வன்னிய கும்பல் பண்ணும் கேடு கெட்ட அரசியல் மற்றும் வன்கொடுமை குலத்தொழிலால் தமிழ்நாடும் மக்களும் எந்த வகையில் அவதி படுகிறார்கள் என்று சொல்ல நா கூசுகிறது. அதை பார்க்கும் போது பார்ப்பனர் மக்கள் நலனில் கொண்ட அக்கறை பண்மடங்கு மேல்.

    ReplyDelete
  47. //... என உருவாக்கி விட்டதே பார்பனர்கள் தான்..//

    இந்த கட்டுக்கதையை எல்லாம் இல்லை என்று உடைத்து ரொம்ப நாள் ஆச்சு. புதுசா எதாவது இருந்தா சொல்லுங்க.

    ReplyDelete
  48. இன்று ஆசிரியர் "சேவையை" (தொழில் என்று சொல்லி அதை இன்னமும் மலிவு செய்ய விரும்ப வில்லை) எடுத்து கொண்டால், மற்ற சாதியினர் தான் அதிகம் (ஒதுக்கீட்டுக்கு நன்றி).

    மற்ற சாதி ஆசிரியர்கள் எவ்வளவு விழுக்காடு அதை நல்ல மாணவர்களை உருவாக்கிற புனிதமான சேவையாக செய்கிறார்கள், எவ்வளவு விழக்காடு அதை தொழிலாக விற்கிறார்கள் என்று இங்கு கூச்சல் போடும் அட்டை கத்தி பயில்வான்கள் மனம் திறந்து சொல்வார்களா.

    ReplyDelete
  49. Dondu Sir,

    We support you always in all ways....you rock...again and again...

    Ask all these idiots...to get married to (or give son or daughter) to SCs and STs....everyone will run away...this is all only for others...and preaching...Eve Ra Perian...is a fraud...they dont know that....

    For vanniyars...sc and st always enemies...whole world knows....

    ReplyDelete
  50. ஒரு பிராமணனாய் பிறந்தவன் சோம்பேறி அல்ல ! என்னைப் போல ! ஆனால் தான் ஒரு பிராமணன் கர்வம் கொண்டு கொக்கரிக்கும் அனைத்து பிராமணனும் சோம்பேறிகளே !!! அவர்களது தொந்தியை வைத்துக் கண்டுபிடித்துவிடலாம்..........

    ReplyDelete
  51. //அம்பி அதெல்லாம் கிடக்கட்டும் நீர் உம்மை பிராமணர் என்று சொல்லிக்கொள்கிறீர், அதற்கான காரணம் என்ன? //
    ப்ராமணன் என்பதில் நான் பெருமை கொள்கிறேன். அதனால் பிறருக்கு எறிகிறது என்றால் நான் எப்படிப் பொறுப்பாவேன். அவனவனுக்கு அவனவன் உயர்ந்தவன். அடுத்தவனை மட்டம் தட்டிவிட்டு அதோ அவன் சொன்னான் அதனால் நான் செய்தேன் என்பதே இப்போது பிரச்சினை.
    //மற்ற மனிதர்களை விட நீர் எந்த விதத்தில் உயர்ந்தவன்.//
    பணம், புகழ, புத்திசாலித்தனம் என்று ஆரம்பித்து மனிதர்களுக்கு இருக்கும் பல வித உயர்வுகளில் எதை நீர் குறிப்பிடுகிறீர்? உயர்வு என்பது பற்றிஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதத்தில் கருத்து இருக்கும். அதைத் தெளிவாக விளக்கத் தனிப் பதிவு போடவேண்டும்!!

    ReplyDelete
  52. //அம்பி அதெல்லாம் கிடக்கட்டும் நீர் உம்மை பிராமணர் என்று சொல்லிக்கொள்கிறீர், அதற்கான காரணம் என்ன? //
    ப்ராமணன் என்பதில் நான் பெருமை கொள்கிறேன். அதனால் பிறருக்கு எறிகிறது என்றால் நான் எப்படிப் பொறுப்பாவேன். அவனவனுக்கு அவனவன் உயர்ந்தவன். அடுத்தவனை மட்டம் தட்டிவிட்டு அதோ அவன் சொன்னான் அதனால் நான் செய்தேன் என்பதே இப்போது பிரச்சினை. //

    பிராமணன் என்று சொல்வது வர்ணாசிரப்படி பிறப்பால் உயந்தவன். அய்யராகவோ/அய்யங்கரவோ பிறந்ததால் நீங்கள் அப்படி பிராமணர் என்றால் சூத்திரன்,பஞ்சமன் இவர்களையெல்லாம் மட்டம் தட்டியவரே உங்களை உயர்ந்தவர் என்று சொல்லிக்கொள்பவர் இது வெட்க்ககேடானது, இதில் எப்படி சாதிகளுக்குள் சமத்துவம் உருவாக்கமுடியும். இது சரி என்றால் சுவனப்பிரியன்களின் அழைப்பு தொடரத்தான் செய்யும்.

    ReplyDelete
  53. //யாருக்கும் பிரச்னை இல்லாமல் ஒரு தீர்வு இருக்கிறது. தீண்டாமையை வெறுப்பவர்கள் பேசாமல் இஸ்லாத்துக்கு சென்று விட வேண்டியதுதான். நிரந்தரமான தீர்வு இதுதான். இது கசப்பாக இருந்தாலும் வேறு வழியில்லை. இது அல்லாது வேறு எந்த முயற்ச்சியும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் ஒரு முடிவை எட்டப் போவதில்லை. //


    யாருய்யா இது பீடி பத்த வைக்க கொள்ளிகட்டை வித்துகிட்டு இருக்குறது?

    ReplyDelete
  54. //... என உருவாக்கி விட்டதே பார்பனர்கள் தான்..//

    இந்த கட்டுக்கதையை எல்லாம் இல்லை என்று உடைத்து ரொம்ப நாள் ஆச்சு. புதுசா எதாவது இருந்தா சொல்லுங்க. //


    ஆ எஸ்!

    புழுகி ஏமாத்துனதெல்லாம் போதும், உண்மையை சொல்லுங்க, அதிகமன சாதி பற்று இங்கே யாருக்கு அதிகம்!?

    ReplyDelete
  55. //ஒரு பேச்சுக்கு பார்ப்பனர் அதை முற்காலதில் செய்தார்கள் என்று கொண்டாலும், அதை இப்போது செய்ய துடிக்கும் பச்சோந்தி வன்னிய கும்பலை வேரருத்து வீழ்த்தி தலித்துளை காக்கும் கடமை தற்போதைய பார்பனருக்கு உண்டு.//

    வன்னியன் என்றில்லை எந்த சுன்னியனாக இருந்தாலும் சாதி வெறியோட திரிந்தால் எல்லோரும் சேர்ந்து தான் காயடிக்கனும்!

    ReplyDelete
  56. //பார்ப்பனர் மக்கள் நலனில் கொண்ட அக்கறை பண்மடங்கு மேல். //


    யாரோ ஒருவர் மக்களுக்காகிஅ வாழ்ந்திருக்கலாம்! அதுக்காக சும்மா புளுகக்கூடாது, எஸ்வி.சேகர் உண்மையிலேயே மக்களுக்காக வாழ்பவர் என்றால் ஏன் அத்தனை கட்சி மாறனும்!

    ReplyDelete
  57. //உண்மையை சொல்லுங்க, அதிகமான சாதி பற்று இங்கே யாருக்கு அதிகம்!?//
    தலித்து பெண்களை பம்புசெட் ரூமுக்குள் இழுத்துச் சென்று கற்பழிக்கும் வன்னியர் (அதிலும் அதைச் செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்து மதத்துக்கு திரும்ப விழையும் கிறித்துவ வன்னியர்கள்), உத்தபுரத்தில் சுவர் எழுப்பிய பிள்ளைமார் (அவர்களைக் கண்டிக்க வாயில்லாத அந்தச் சாதியை சார்ந்த பதிவர்கள்), கண்டதேவித் தேரை இழுக்கவிடாது செய்யும் சாதியினர், மற்றப்படி நாளொரு வண்ணம் பொழுதொரு வண்ணமாக வன்கொடுமை செய்யும் பிசிக்கள் ஓபிசிக்கள் ஆகியோருக்குத்தான் சாதிவெறி இங்கு.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  58. வால் ?

    //ஆ எஸ்!

    புழுகி ஏமாத்துனதெல்லாம் போதும்..//,

    நீங்க சொல்லறதெல்லாம் உண்மை, நாங்க சொல்லறது புழுகியா இருந்தா அந்த புழுகிய தொடர்ந்து செஞ்சுக்கிட்டே தான் இருப்போம்.

    //உண்மையை சொல்லுங்க, அதிகமன சாதி பற்று இங்கே யாருக்கு அதிகம்!?//

    உண்மையா சொல்லுங்க அது உங்களுக்கு தெரியாது?

    இருந்தாலும் சொல்லறேன், இன்றலவில் பார்ப்பனர்களுக்கு இருக்கும் சாதிப்பற்று மற்ற சாதியினருக்கு இருக்கும் அளவை கொண்டே நிர்ணயிக்க படுகிறது.

    தன் குறைகளை மறைக்க, சுய இன்பத்துக்காக ஒரு சாதியை குறை கூறி, அவர்களை அழிக்க நினைக்கும் ஓனாய்களை ஓட ஓட விரட்டுகிற வரையில் இதற்க்கு ஓய்வே கிடையாது. (இது தான் 'ஓ' போடறது என்பதா :-) )

    ReplyDelete
  59. //யாரோ ஒருவர் மக்களுக்காகிஅ வாழ்ந்திருக்கலாம்!//

    அதையே இப்படி நினைக்கலாம் இல்ல,

    "யாரோ ஒருவர் மக்களுக்காக வாழாமல் இருந்திருக்கலாம்"

    We are looking ahead for the day when this rotten society comes out of the mentality that exceptions are not rule and try to see a wholistic view.

    ReplyDelete
  60. டொண்டு சார் சொல்றதைப் பார்த்தால், ஒரு பார்ப்ப்னரின் வீட்டுக்கு ஒரு தலித்து நேராகப்போய் பெண்ணைக்கேட்கலாமே தன் பையனுக்குக் கட்டி வைக்க?

    ReplyDelete
  61. இல்லாதா பிராமணனை சோ இராமசாமி தேடியதைப் போன்றே இல்லாத பிராமணனன் சோம்பேறியான்னு ஒரு ஆய்'வு

    :)

    வாழ்க வளர்க !

    ReplyDelete
  62. திருநெல்வேலி மாவட்டத்தில் புகழ்பெற்ற கோவில்கள் அதிகம்.
    பொதுவாய் சின்ன நகரங்கள்,கிராமங்களில் கூட அக்ரஹாரம்
    இரண்டு மூன்று இருக்கும்.

    குறிப்பாய் "என்பீல்டு" மோட்டார் சைக்கிள் தொழிற்சாலை நிறுவனர் ஈஸ்வரன் அவர்களின் சொந்த கிராமமான கல்லிடைக் குறிச்சியில் 18 அக்ரஹாரம் இருந்தது.இந்த ஊர் உளுந்து அப்பளத்திற்கு பேர் பெற்றது.பரணி போற்றும் ஜீவ நதி தமிரபரணி எனும் புண்ணிய நதிகரையில் உள்ள அழகு கொஞ்சும் நகரம்.

    மிகவும் தொண்டுள்ள மனம் படைத்தவரான "சிம்சன் குருப்ஸ்" அதிபர் ராமகிருஷ்ணன் அவர்களின் சொந்த ஊரான ஆழ்வாற்குறிச்சிக்கு பக்கத்தில் உள்ளது.

    தேசியக் கவி பாரதியாரின் மனைவியின் பிறந்த ஊரான கடையத்துக்கு பக்கத்தில் உள்ளது.

    எல்லாம் தென்றல் தவழும் மேற்கு மலைத்தொடர் அடிவார அழகு நகர்களாகும்.

    கோவிலை சுற்றியுள்ள தெருக்களில் பார்ப்பனர்கள் ஒழுங்கு முறையில்,எல்லோரும் போற்றும் வகையில் வாழ்ந்து வந்தனர்.
    அந்தத் தெருக்களில் போவோர் மிகுந்த பய பக்தியுடன் போய் வருவர்.
    பிற ஜாதியினர் பார்ப்பன ஆண்களை "சாமி" எனவே உயர்வாய் அழைத்துப் பேசுவர்.
    பெண்களை மரியாதையாய் "மாமி" என அழைப்பர்.
    நில புலங்கள் மிகுந்து இருந்ததால்,பொதுவாய் பிராமணர்கள் தாராள மனதாய் இருப்பது வாடிக்கை.
    உலகில் நல்லதும் கெட்டதும் பரவிக் கிடப்பது போல், அதில் ஒரு சிறு பகுதியினர் சற்று ஆணவத்துடன் பிறரை மட்டம் தட்டியும் ,சிறு சிறு துன்பங்கள் கொடுத்தும் வாழ்ந்து இருந்தனர் என்பதை மறுக்க முடியாது.
    பெரும்பான்மை சமுகம் நல்ல மனத்துடன்,தயாள சிந்தனையுடன் இருக்கும் போது இந்தக் கடந்த கால சிறு சிறு தவறுகளை பூதக் கண்ணாடி கொண்டு இன்று பார்த்து "பார்ப்பன துவேஷத்தை" இன்னும் தங்களின் வாழ்வியல் ஆதாரம் போல் பாவித்து அதை ஒரு பெரும் தொடர் பிரச்சாரமாய் செய்பவர்களுக்கு, டோண்டு ராகவன் அவர்களின் இந்தப் பதிவுகள் விளக்கம் தந்து,சற்று அவர்களின் கண்ணைத் திறந்தால் நாட்டிற்கும், தமிழ் போற்றும் பதிவுலகத்துக்கும் மிக நல்லது.

    அவர்கள் தெளிவாய்ச் சொல்லியுள்ளார்கள் "தான் எந்த இடத்திலும் பிராமண ஜாதியினர் பிற சாதிகளைவிட உயர்ந்தவர்கள் என்று சொல்லவில்லை என்று ஆணித்தரமாய் சொல்லியுள்ள பிறகும், நாகரிகம் காப்பது தானே தமிழனின் உலகம் போற்றும் பண்பு.

    ஒரு உண்மைத் தகவல்

    இன்றைய அக்ரஹாரங்களின் நிலை

    இங்குள்ள பிராமணர்கள் சென்னை,பம்பாய்,கல்கத்தா,டெல்லி போன்ற பெரிய நகரங்களுக்கு குடி பெயர்ந்து விட்டனர்.காரணம் நான் சொல்ல வேண்டியதில்லை.
    அக்ரஹாரங்கள் உண்மையான வாழும் சமத்துவபுரமாய் மாறிவிட்டது.
    இந்துக்களில் உள்ள எல்லா ஜாதியினரும்,இஸ்லாமியர்,கிருத்துவர் அனைவரும் அங்குள்ள பெரிய பெரிய வீடுகளை விலைக்கு வாங்கி பெருமையுடன் வாழ்ந்து வருவதை காணலாம்.

    ஆம் பெரிய வீடுகள் என்றால் வீட்டின் வாசல் ஒரு தெருவில் இருக்கும் மற்றொரு தெருவில் வீட்டின் பின் கதவு இருக்கும்.வீட்டின் நீளம் 100 அடி முதல் 200 அடி வரை இருக்கும்.

    பார்ப்பனரின் பரம்பரை சொத்துக்களும், கடின உழைப்பால் வாங்கப் பட்ட நில புலன்களும் இன்று அவர்கள் கையை விட்டு போய் விட்டன்.

    இன்று அவர்களில் பெரும்பாலோர்,ஜாதி வெறி கிஞ்சிற்றும் இல்லாமல்
    எல்லா ஜாதியினரையும்.பிற மதத்தினரையும் கடவுளின் படைப்பு, ஆண்டவனின் அன்புக் குழந்தைகள் எனப் போற்றி ஒற்றுமையாய் வாழும் இந்த "காஸ்மோபாலிட்டன்" வாழ்வு முறையில் ,பழங்கதை வேண்டாம் என டோண்டு ஐயா அவர்கள் சொல்வதை அவரது வயதுக்கும் ஆழங்கால் பட்ட அறிவுக்கும், அனுபவத்திற்கும் மதிப்பு கொடுத்தும், அனைத்து பதிவுலக் பதிவர்களும்,பின்னூட்ட பண்பாளர்களும், வாசகச் செம்மல்களும், அன்புகளுமிய ஆர்வலர்களும் ஒரு சங்கல்பம் எடுத்து
    "ஒன்றே குலம் ஒருவனே தெய்வம் "என்பது பதிவுலகில் எங்கும் ஒங்கி ஒலித்து சிறந்து பரவி மலர்ந்து மணம் வீசட்டும் அன்பர்களே.


    அன்புடன்

    திருநெல்வேலி சுவாமி.

    நான் பார்ப்பன வகுப்பை சார்ந்தவன் அல்ல
    எனது 5 வயது முதல் 20 வது வரை உள்ள காலக் கட்டத்தில் பெரும் பகுதி
    அக்ரஹாரத் தெருக்களில் வாழ்ந்ததாலும் ,பார்ப்பன நண்பர்களோடு பெரும்பகுதியினரிடம் பழகிய பழக்கத்தையும் வைத்து மேலெ யுள்ள கருத்தை பதிந்துள்ளேண்.

    ReplyDelete
  63. எங்கள் வீட்டில் கடந்த 20 வருடமாக ஒரு அரிஜனப் பெண்தான் வீட்டு வேலை செய்து வருகிறார். வீட்டில் சமையல் கட்டு முதல் அனைத்து இடங்களுக்கும் சுதந்திரமாக செல்ல உரிமை பெற்றவர். நாங்கள் தீண்டாமை பாராட்டுவதில்லை. எங்கள் கிராமத்தில் 90 சதவீதம அவர்களுக்கு வேலை கொடுத்தும் வருகிறோம். எனக்கு தெரிந்து கடந்த 40 வருடமாக எந்த ஒரு பிரச்னையும் வந்ததில்லை.

    எங்கள் கிராமத்துக்கு பக்கத்திலேயே செட்டியார்கள் அதிகம் வசிக்கும் கிராமம் உண்டு. 'வாங்க பாய்' என்று அன்போடு எங்களிடம் பழகும் செட்டியார்கள் அரிசனங்களை வீட்டுக்குள் அனுமதிப்பதில்லை. ஒருமையில் பேசி அவர்களை கிராமத்துக்குள்ளேயே அனுமதிப்பதில்லை. என்னைக் கேட்டால் பிராமணர்களை விட அரிசனங்களிடம் அதிகம் சாதி வித்தியாசம் காட்டுவது மற்ற சாதிகள்தான் என்பேன்.

    ReplyDelete
  64. http://dharumi.blogspot.com/2010/05/blog-post.html


    இந்த கட்டுரைக்கு உங்களால் பதில் சொல்ல முடியுமா?

    ReplyDelete
  65. நாட்டிலே எத்தனையோ பிரச்சனைகள் இருக்கும் போது திரும்பத் திரும்ப இதையே விவாதிப்பதில் என்ன பலன் கிடைக்கப் போகிறது?
    ஜாதிய வன்முறைகள் எங்கே யாரால் எப்படி நடைபெறுகிறது என்பது ஊடகங்கள் வாயிலாக செய்திகளாக வந்து கொண்டு தானே இருக்கிறது? இங்கே பாய்ந்து பாய்ந்து விவாதிக்கும் அனைவருக்கும் தெரிந்தது தானே.
    உண்மையா சொல்லணும்னா இந்த மாதிரி ஜாதிய பிராமண த்வேஷங்களை இயல்பு வாழ்க்கையில் நேரடியாக அனுபவித்ததே இல்லை. இப்படி ஒன்றின் வீரியமே இணையத்தின் மூலமே தெரிய வந்தது. அதே மாதிரி தான் மத ரீதியான த்வேஷங்களும். இணையம் படித்தவர்களின் தளமாக ஆரோக்கியமாக இருப்பதாகத் தெரியவில்லை. சமுதாயத்தின் மிகப் பெரிய பிளவுக்கு வழி வகுக்கும் என்றே தோன்றுகிறது.

    சமுதாயத்தின் பிற பிரச்சனைகளை பற்றி விவாதிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். பொதுவாக எல்லோராலும் அல்லது பெரும்பான்மையாக ஒத்துக் கொள்ளக் கூடிய பிரச்சனைகளை அலசினால் உபயோகமாக இருக்கும். பதிவர்கள் ஜாதிய மத ரீதியாக பிரிந்து கருத்து மோதல்களில் ஈடுபடுவது ஆரோக்கியமானதல்ல. யாரு எதை ஆரம்பித்து வைத்தார்கள் என்ற வரலாறு இப்போ முக்கியமில்லை. இப்போ என்ன செய்கிறோம் இனிமே என்ன செய்யணும் ? அது தான் முக்கியம்.

    ReplyDelete
  66. எனது 5 வயது முதல் 20 வது வரை உள்ள காலக் கட்டத்தில் பெரும் பகுதி
    அக்ரஹாரத் தெருக்களில் வாழ்ந்ததாலும் ,பார்ப்பன நண்பர்களோடு பெரும்பகுதியினரிடம் பழகிய பழக்கத்தையும் வைத்து மேலெ யுள்ள கருத்தை பதிந்துள்ளேண்.

    //


    நெல்லை சுவாமியார், அந்த சிறுவய்திலோ அதறகப்பாலோ, கடையம், கடையநல்லூர், தென்காசி, நெல்லை போன்ற ஊர்களில் மிருகங்களைப்போல நடத்தப்பட்ட தலித்துகள் வாழ்ந்த சேரிகளில் வாழ்ந்திருந்தால்,

    இங்கு வேறுவிதமாக எழுதியிருப்பார்.

    எல்லாம் காலக்கொடுமை.

    இப்பவும் கெட்டுப்போகல. மதுரை ரயில்வே ஸ்டேசனுக்கு எத்தாப்பல் உள்ள அம்பேதகர் காலனியில் நுழைந்தால்,

    சுவாமி உணமை மனிதனாக வெளியே வருவார்.

    அச்சேரிகளிலும் இறைவன் உண்டு; அகரங்களில் மட்டுமல்ன். என்று மாபெரும் உணமை அவருக்குப் புலனாகும்.

    ReplyDelete
  67. உத்தபுரத்தில் சுவர் எழுப்பிய பிள்ளைமார் (அவர்களைக் கண்டிக்க வாயில்லாத அந்தச் சாதியை சார்ந்த பதிவர்கள்),
    அய்யா பொது கோவில் என்றால் யார் வேண்டுமானாலும் நுழையலாம் , ஆனால் எனது வீட்டில் உள்ள பூஜைஅறையில் யார் நுழைய வேண்டும் என்று நாந்தான் தீர்மானிக்க வேண்டும் , அது போலதான் உத்தபுரத்தில் பிள்ளைமார்களுக்கு சொந்தமான இடத்தில் அவர்கள் காசில் கட்டிய கோயிலுக்கு யார் யார் வர வேண்டும் என்று வரையறுக்க அவர்களுக்கு உரிமை உண்டு, அதில் யாரும் தலையிட முடியாது ,

    ReplyDelete
  68. ‘கள் கொண்டிக் குடிப்பாக்கம்” என்பது மதுரைக் காஞ்சி (137) யில் பயிலும்
    ஓர் அடி ‘. கள்ளாகிய உணவினை யுடைய இழிந்த குடிகளையுடைய சீறூர்” என்பது நச்சினார்க்கினியர் இவ்வடிக்குக் கூறும் உரை ஆகும். உழைக்கும் மக்களான களமரும் உழவரும் தம் வேலைக் களைப்பை மறத்தற் பொருட்டுக் கள் உண்டனர். இது குறித்துச் சங்க இலக்கியங்கள் விரிவாகக் கூறுகின்றன. கள் உண்ணும் களமர்களை இழிந்த குடிகள் என்று இகழ்வதும், அவர்கள் வாழ்ந்த பகுதிகளைத் தனியாக ஒதுக்கி வைப்பதும் ஆகிய செயல்கள் சங்க காலத்தில் நிகழ்ந்ததனைச் சங்க இலக்கியங்கள் தெளிவாகக் காட்டுகின்றன.


    http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=14...

    களமசேரி ( HMT) இன்றும் கேரளத்தில் உள்ளது. நிலப்பிரபுத்துவ முறை மேலோங்கியிருந்த ஜப்பான் போன்ற ஆசிய நாடுகள் பலவற்றிலும் இனப்பாகுபாட்டு முறை பரவலாக இருந்ததைக் காண முடிகிறது.

    இணையத்தில் தகவல்கள் உள்ளன. நடுநிலைமையோடு வரலாற்றை ஆராய்வது நல்லது


    தேவ்

    ReplyDelete
  69. //அய்யராகவோ/அய்யங்கரவோ பிறந்ததால் நீங்கள் அப்படி பிராமணர் என்றால் சூத்திரன்,பஞ்சமன் இவர்களையெல்லாம் மட்டம் தட்டியவரே உங்களை உயர்ந்தவர் என்று சொல்லிக்கொள்பவர் இது வெட்க்ககேடானது, இதில் எப்படி சாதிகளுக்குள் சமத்துவம் உருவாக்கமுடியும்.//
    There is no clarity in what you're trying to say குடுகுடுப்பை. ஜக்கம்மாவை நன்றாக வேண்டிக்கொண்டு கொஞ்சம் தெளிவாகச் சொல்லுங்கள். நான் பதில் சொல்கிறேன்.

    ReplyDelete
  70. virutcham said...

    // //உண்மையா சொல்லணும்னா இந்த மாதிரி ஜாதிய பிராமண த்வேஷங்களை இயல்பு வாழ்க்கையில் நேரடியாக அனுபவித்ததே இல்லை.// //

    இதுதான் உண்மை.

    அதாவது, பார்ப்பன துவேசம் என்பதாக நடைமுறையில் எதுவும் இல்லை. சாதிக்கொடுமைகளாலும் அதனால் ஏற்பட்ட கேடுகளாலும் பார்ப்பனர்கள் ஒருபோதும் பாதிக்கப்பட்டது இல்லை.

    சாதிய அமைப்பால் 'இலாபத்தை மட்டுமே' அடைந்த கூட்டம் பார்ப்பனர்கள் மட்டும்தான்.

    "ஜாதிய த்வேஷங்களை இயல்பு வாழ்க்கையில் நேரடியாக அனுபவித்ததே இல்லை" என்று இதுபோன்று BC/MBC/தலித் மக்களில் எவராவது சொல்லி கேள்விபட்டது உண்டா?

    பார்ப்பன துவேசம் என்பதற்கு நேர் எதிராக - பார்ப்பனர் அல்லாதோருக்கு எதிரான துவேசத்தில் பார்ப்பன சமூகம் மூழ்கி கிடக்கிறது - அதன் வெளிப்பாடே, சோ, சு.சுவாமி, தினமலர், உச்சநீதி மன்ற நீதிபதிகள் (அப்புறம் திரு. டோண்டு) எல்லாம்.

    ReplyDelete
  71. vijay_dl said...

    // //உத்தபுரத்தில் பிள்ளைமார்களுக்கு சொந்தமான இடத்தில் அவர்கள் காசில் கட்டிய கோயிலுக்கு யார் யார் வர வேண்டும் என்று வரையறுக்க அவர்களுக்கு உரிமை உண்டு, அதில் யாரும் தலையிட முடியாது// //

    நீங்கள் தரும் தகவல் உண்மையாக இருக்குமானால், நீங்கள் பார்ப்பனர்களை விட மிகமிகமிக உயர்வானவர்கள். உங்களை குற்றம் சொல்ல பார்ப்பனர்களுக்கு மயிரிழை அளவு கூட தகுதி இல்லை.

    ஏனெனில், மற்றவர்களால் கட்டப்பட்ட கோவில்களில் (எ.கா. சிதம்பரம் நடராசர் ஆலயம்) உட்கார்ந்து கொண்டு, அதன் கருவரைக்குள் பார்ப்பனர் அல்லாத வேறு எவருமே நுழையக்கூடாது என்று சாதிப்பவர்கள் பார்ப்பனர்கள்.

    ReplyDelete
  72. vijay_dl said...
    உத்தபுரத்தில் சுவர் எழுப்பிய பிள்ளைமார் (அவர்களைக் கண்டிக்க வாயில்லாத அந்தச் சாதியை சார்ந்த பதிவர்கள்),
    அய்யா பொது கோவில் என்றால் யார் வேண்டுமானாலும் நுழையலாம் , ஆனால் எனது வீட்டில் உள்ள பூஜைஅறையில் யார் நுழைய வேண்டும் என்று நாந்தான் தீர்மானிக்க வேண்டும் , அது போலதான் உத்தபுரத்தில் பிள்ளைமார்களுக்கு சொந்தமான இடத்தில் அவர்கள் காசில் கட்டிய கோயிலுக்கு யார் யார் வர வேண்டும் என்று வரையறுக்க அவர்களுக்கு உரிமை உண்டு, அதில் யாரும் தலையிட முடியாது ,
    //

    மேலே எழுதியிருப்பவரின் மனநிலை சமூகத்துக்கு மிகவும் ஆபத்தானது.சமூகத்தின் ஒரு பகுதியினர் உரிமை கேட்டு போராடுகின்றனர், உரிமை மறுக்கும் தரப்புகள் திருந்தி விட்டுக்கொடுப்பதே நல்லது, இல்லையென்றால் மிகவும் ஆபத்தாகவே முடியும்.

    ReplyDelete
  73. //அய்யராகவோ/அய்யங்கரவோ பிறந்ததால் நீங்கள் அப்படி பிராமணர் என்றால் சூத்திரன்,பஞ்சமன் இவர்களையெல்லாம் மட்டம் தட்டியவரே உங்களை உயர்ந்தவர் என்று சொல்லிக்கொள்பவர் இது வெட்க்ககேடானது, இதில் எப்படி சாதிகளுக்குள் சமத்துவம் உருவாக்கமுடியும்.//
    There is no clarity in what you're trying to say குடுகுடுப்பை. ஜக்கம்மாவை நன்றாக வேண்டிக்கொண்டு கொஞ்சம் தெளிவாகச் சொல்லுங்கள். நான் பதில் சொல்கிறேன்.
    //
    பிறப்பால் பிராமணன் என்று உண்டா? அப்படி இல்லையெனில் தங்களை நீங்கள் எந்தவிதத்தில் பிராமணன் என்று அழைத்துக்கொள்கிறீர்கள். நெற்றியில் பிறந்தவம்சம் நீங்கள் என்று கருதுகிறீர்களா? இதற்கு மேலும் புரியவில்லை என்றால் நான் ஒன்றும் சொல்லமுடியாது.

    ReplyDelete
  74. //பார்ப்பன துவேசம் என்பதற்கு நேர் எதிராக - பார்ப்பனர் அல்லாதோருக்கு எதிரான துவேசத்தில் பார்ப்பன சமூகம் மூழ்கி கிடக்கிறது - அதன் வெளிப்பாடே, சோ, சு.சுவாமி, தினமலர், உச்சநீதி மன்ற நீதிபதிகள் (அப்புறம் திரு. டோண்டு) எல்லாம்.//

    ஒரு இடத்திலாவது தலித்துகள் வன்னியர்களின் வாயில் மலத்தை திணித்த வரலாறு உண்டா.

    தலித்துகளின் துவேசத்தில் வன்னிய சமூகம் மூழ்கி கிடக்கிறது. அதன் வெளிப்பாடே ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், வன்னிய சமூகம், அருள் எல்லாம்.

    ReplyDelete
  75. //நீங்கள் தரும் தகவல் உண்மையாக இருக்குமானால்,//

    நாங்கள் தரும் உண்மை உதாரணங்களால் (எ.கா மலம் திணித்தல், பாலியல் பலாத்காரம்) பச்சோந்தி வன்னியர்கள் ஒரு மயிரிழை கூட மற்ற சாதியினரை குறை கூற அருகதை இல்லை.

    ReplyDelete
  76. @arul

    நான் இந்தத் தலைப்பில் தொடர்ந்து விவாதிக்க விரும்பவில்லை. இருந்தாலும் நான் சொன்னதை அப்படியே திரித்து தனக்கு சாதகமாக எழுதுவதை கண்டிக்கிறேன்.

    //ஜாதிய வன்முறைகள் எங்கே யாரால் எப்படி நடைபெறுகிறது என்பது ஊடகங்கள் வாயிலாக செய்திகளாக வந்து கொண்டு தானே இருக்கிறது? இங்கே பாய்ந்து பாய்ந்து விவாதிக்கும் அனைவருக்கும் தெரிந்தது தானே.


    உண்மையா சொல்லணும்னா இந்த மாதிரி ஜாதிய பிராமண த்வேஷங்களை இயல்பு வாழ்க்கையில் நேரடியாக அனுபவித்ததே இல்லை.//

    இதில் முதல் பாதியை விட்டு விட்டு இரெண்டாம் பாதியை எடுத்துக் கொண்டு சாமர்த்தியமாக பேச வேண்டாம். பிராமண த்வேஷதை அனுபவிக்க வில்லை என்றால் ஜாதிய த்வேஷங்களை செய்ததும் இல்லை என்பதும் உள்ளடங்கும்.

    நான் பொதுத் தளத்தில் இதை திரும்பத் திரும்ப விவாதிக்க வேண்டாம் என்று சொல்லுவதே உங்களை மாதிரி மூளை சலவை செய்யப் பட்ட நிலையில் விவாதிப்பவர்களோடு விவாதிப்பது வீண். அதை விடுத்து பொது நலன் குறித்த விவாதங்களை செய்யலாமே என்று தான்.

    ReplyDelete
  77. உத்தபுரத்தில் சுவர் எழுப்பிய பிள்ளைமார் (அவர்களைக் கண்டிக்க வாயில்லாத அந்தச் சாதியை சார்ந்த பதிவர்கள்),
    அய்யா பொது கோவில் என்றால் யார் வேண்டுமானாலும் நுழையலாம் , ஆனால் எனது வீட்டில் உள்ள பூஜைஅறையில் யார் நுழைய வேண்டும் என்று நாந்தான் தீர்மானிக்க வேண்டும் , அது போலதான் உத்தபுரத்தில் பிள்ளைமார்களுக்கு சொந்தமான இடத்தில் அவர்கள் காசில் கட்டிய கோயிலுக்கு யார் யார் வர வேண்டும் என்று வரையறுக்க அவர்களுக்கு உரிமை உண்டு, அதில் யாரும் தலையிட முடியாது ,
    //

    மேலே எழுதியிருப்பவரின் மனநிலை சமூகத்துக்கு மிகவும் ஆபத்தானது.சமூகத்தின் ஒரு பகுதியினர் உரிமை கேட்டு போராடுகின்றனர், உரிமை மறுக்கும் தரப்புகள் திருந்தி விட்டுக்கொடுப்பதே நல்லது, இல்லையென்றால் மிகவும் ஆபத்தாகவே முடியு "

    குடுகுடுப்பை என்கிற அவசரகுடுகைக்கு
    தாரளமாக உரிமை கேளுங்கள் யார் உங்களை வேண்டாம் என்றது , ஆனால் உரிமை என்றால் என்ன என்று தெரிந்து கொள்ளுங்கள் , உங்களுக்கு சொந்தமான ஒன்று இன்னொருவர் அபகரித்து வைத்து இருந்தால் அதனை நீங்கள் கேட்கலாம் அல்லது பொது சொத்தில் உங்கள் பங்கினை கேட்கலாம் அது உரிமை ஆனால் எனது சொத்தில் நீங்கள் பங்கு கேட்பது எப்படி உரிமை ஆகும், பிரச்னை என்ன என்று தெரிந்து கொள்ளாமலே உங்கள் இஷ்டத்திற்கு எதாவது உளறாதிர்கள், உண்மை தெரிய வேண்டுமானால் அங்கு சென்று கேளுங்கள்,

    ReplyDelete
  78. ம்ம்ம்.. நீங்கள் எதிர்பார்த்தது நடந்து கொண்டு இருக்கிறது (நிறையவே ஹிட்டுகள் மற்றும் கமெண்டுகள் ) வாழ்த்துகள். இந்த காலத்திலும் இந்த மாதிரி மடத்தனமான கட்டுரை எழுதுவதற்கும் தைரியம் வேண்டும் தான். கண்டிப்பாக புத்தியுள்ள எந்த பிராமணனும் உங்கள் கட்டுரையை பார்த்தால் வெட்கமும் சங்கடமும் படுவான்.

    ReplyDelete
  79. //எங்கள் கிராமத்துக்கு பக்கத்திலேயே செட்டியார்கள் அதிகம் வசிக்கும் கிராமம் உண்டு. 'வாங்க பாய்' என்று அன்போடு எங்களிடம் பழகும் செட்டியார்கள் அரிசனங்களை வீட்டுக்குள் அனுமதிப்பதில்லை.//

    i also think the same. more than brahmins it is the other caste hindus who are into casteism.
    i feel that most brahmins (exception : few brahmins like dondu) are not taking caste system seriously nowa days.

    ReplyDelete
  80. //யாருக்கும் பிரச்னை இல்லாமல் ஒரு தீர்வு இருக்கிறது. தீண்டாமையை வெறுப்பவர்கள் பேசாமல் இஸ்லாத்துக்கு சென்று விட வேண்டியதுதான். நிரந்தரமான தீர்வு இதுதான். இது கசப்பாக இருந்தாலும் வேறு வழியில்லை. இது அல்லாது வேறு எந்த முயற்ச்சியும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் ஒரு முடிவை எட்டப் போவதில்லை//


    முதலில் உங்கள் மதத்தில் உள்ள சன்னி/ஷியா பிரச்சனையை தீர்த்துக்கொள்ளுங்கள்.சன்னி முஸ்ஸிம்களை ஷியா முஸ்ஸிம்கள் கொல்வதும், ஷியா முஸ்ஸிம்களை சன்னி முஸ்ஸிம்கள் கொல்வதும்( அதுவும் பள்ளிவாசல் உள்ளெயெ) படுகேவலம்....

    ReplyDelete
  81. renga said...

    // //முதலில் உங்கள் மதத்தில் உள்ள சன்னி/ஷியா பிரச்சனையை தீர்த்துக்கொள்ளுங்கள்// //

    இசுலாத்தின் உள் சிக்கல்களும் இந்து மதத்தின் தீண்டாமை/சாதி ஏற்றத்தாழ்வும் ஒன்று அல்ல. இந்து மதத்தின் மகா கேடுகளை உலகின் எந்த மதத்தின் தீமைகளுடனும் ஒப்பிட முடியாது.

    இந்துவாக இருந்து சாதிக்கொடுமைகளால் பாதிப்படையும் ஒருவர், இந்து மதத்தை விட்டு வேறு மதத்திற்கு சென்றால் - அதனால் அவருக்கு பயன் தான். ஒப்பீட்டளவில் இழப்பு எதுவும் இருக்காது.

    ReplyDelete
  82. குடுகுடுப்பை என்கிற அவசரகுடுகைக்கு
    தாரளமாக உரிமை கேளுங்கள் யார் உங்களை வேண்டாம் என்றது , ஆனால் உரிமை என்றால் என்ன என்று தெரிந்து கொள்ளுங்கள் , உங்களுக்கு சொந்தமான ஒன்று இன்னொருவர் அபகரித்து வைத்து இருந்தால் அதனை நீங்கள் கேட்கலாம் அல்லது பொது சொத்தில் உங்கள் பங்கினை கேட்கலாம் அது உரிமை ஆனால் எனது சொத்தில் நீங்கள் பங்கு கேட்பது எப்படி உரிமை ஆகும், பிரச்னை என்ன என்று தெரிந்து கொள்ளாமலே உங்கள் இஷ்டத்திற்கு எதாவது உளறாதிர்கள், உண்மை தெரிய வேண்டுமானால் அங்கு சென்று கேளுங்கள்,
    //
    கோவில் என்பது பொதுவானதாக இருக்கவேண்டும் அது என்ன தன் சாதிக்கு மட்டும் கட்டுவது. எல்லாருக்கும் பொதுவாக கட்டாதது எது? சாதி வெறி?அங்கேதான் உங்கள் மனநிலை சரியில்லை. தாழ்த்தப்பட்டவனின் வரி கேளுங்கள் கண்டிப்பாக கட்டுவான், வேண்டுமென்றே ஒதுக்கிவிட்டு நியாயம் வேறா?

    ReplyDelete
  83. அருள் said...
    renga said...

    // //முதலில் உங்கள் மதத்தில் உள்ள சன்னி/ஷியா பிரச்சனையை தீர்த்துக்கொள்ளுங்கள்// //

    இசுலாத்தின் உள் சிக்கல்களும் இந்து மதத்தின் தீண்டாமை/சாதி ஏற்றத்தாழ்வும் ஒன்று அல்ல. இந்து மதத்தின் மகா கேடுகளை உலகின் எந்த மதத்தின் தீமைகளுடனும் ஒப்பிட முடியாது.

    இந்துவாக இருந்து சாதிக்கொடுமைகளால் பாதிப்படையும் ஒருவர், இந்து மதத்தை விட்டு வேறு மதத்திற்கு சென்றால் - அதனால் அவருக்கு பயன் தான். ஒப்பீட்டளவில் இழப்பு எதுவும் இருக்காது.
    //
    :)))))))
    நாட்டார் தெய்வ வழிபாட்டை ஆதரிக்கும் ஒருவன் ஒரே இறைவன் என்ற கொள்கைகளை ஆதரிப்பது நகைப்புக்குரியது. இங்கே இருக்கும் குப்பைகள் களையப்படவேண்டும்.அதற்கு பார்ப்பனரை மட்டும் திட்டினால போதாது, உங்கள் தவறையும் உணரவேண்டும்.

    ReplyDelete
  84. குடுகுடுப்பை said...

    // //நாட்டார் தெய்வ வழிபாட்டை ஆதரிக்கும் ஒருவன் ஒரே இறைவன் என்ற கொள்கைகளை ஆதரிப்பது நகைப்புக்குரியது. இங்கே இருக்கும் குப்பைகள் களையப்படவேண்டும்.// //

    ஒரே ஒரு இறைவனா... அல்லது நூற்றுக்கணக்கான இறைவன்காளா... என்பது குறித்து நான் ஏன் கவலைப்பட வேண்டும்?

    நாட்டர் தெய்வ நம்பிக்கையில் குல தெய்வ நம்பிக்கை என்பதும் கூட ஒருவகையில் ஒரு இறைவன் நம்பிக்கைதான். (எல்லோருக்கும் அவரவர் அன்னை ஒரே ஒருவர்தானே!)

    அவரவர் நம்பிக்கை அவரவர்க்கு. அடுத்தவரை இகழாமல், அடுத்தவர் உரிமையை அபகரிக்காமல் - யாருக்கு எந்த நம்பிக்கை இருந்தாலும் - அதில் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை.

    இந்து மதத்திற்குள் குப்பை அள்ளுவதில் எனக்கு விருப்பம் இல்லை. அது சாத்தியமும் இல்லை.

    ReplyDelete
  85. //பிறப்பால் பிராமணன் என்று உண்டா? அப்படி இல்லையெனில் தங்களை நீங்கள் எந்தவிதத்தில் பிராமணன் என்று அழைத்துக்கொள்கிறீர்கள்.//

    பிறப்பால் பிராமணன் கிடையாது. உபநயனம் நடந்து நிதயகர்ம அனுஷ்டானங்களைச் செய்யத்துவங்கிய பின்னரே ஒருவன் அந்தணன் ஆகிறான். நித்யகர்மானுஷ்டானங்களைச் செய்பவன் கடவுளை நோக்கிய பயணத்தில் முன்னிற்கிறான். அந்த வழியில் அவன் உயர்ந்தவனே!

    ப்ரம்மத்தை உணரும் நிலையை அடைய என்க்கு விதிக்கப்பட்ட நித்ய கர்ம அனுஷ்டானங்களை நான் செய்கிறேன், அதனால் என்னை ப்ராமணன் என்று அழைத்துக் கொள்கிறேன்!

    ReplyDelete
  86. //அருள் said...

    இசுலாத்தின் உள் சிக்கல்களும் இந்து மதத்தின் தீண்டாமை/சாதி ஏற்றத்தாழ்வும் ஒன்று அல்ல. இந்து மதத்தின் மகா கேடுகளை உலகின் எந்த மதத்தின் தீமைகளுடனும் ஒப்பிட முடியாது.//

    எத்தனை மதங்களை ஆராய்ந்து பார்த்து இந்த முடிவு எடுத்தீர்கள்? என்னென்ன விதங்களில் ஆராய்ந்தீர்கள்? விளக்கவும். அல்லது சுட்ட இடத்தின் சுட்டி தரவும்...

    ReplyDelete
  87. // அருள் said...
    இந்து மதத்திற்குள் குப்பை அள்ளுவதில் எனக்கு விருப்பம் இல்லை.//

    உங்களைப் போன்ற வன்கொடுமை ஆதரவாளகளும், ஈயடிச்சான் காப்பிகளும் போனாலே இந்துமதம் சுத்தமாகிவிடும்! இருக்குமிடத்தில் கழிந்துவிட்டு இங்கே நாறுகிறதே, பக்கத்து வீட்டுக்குப் போகலாமா என்று பார்க்கும் முட்டாள் நீங்கள்!!

    ஈவேரா தனக்குக் காங்கிரசில் மரியாதை கிடைக்காத அஜீரணத்தில் எடுத்த வாந்தியை வழித்து நக்கிவிட்டு மீண்டும் அரைகுறையாகக் கக்குவதைத் தவிர வேறென்ன செய்கிறீர்கள் நீங்கள்??

    ReplyDelete
  88. அவரவர் நம்பிக்கை அவரவர்க்கு. அடுத்தவரை இகழாமல்//
    எந்தெந்த மதங்கள் அடுத்தவர்களின் நம்பிக்கையை இகழாமல் இருக்கிறது.? அது சாத்தியமும் அல்ல என்றே கருதுகிறேன். நாட்டார் குலதெயவத்துக்கு படைத்த பணியாரம் சாத்தானுக்கு படைக்கப்பட்டது என்று சொல்வது இகழ்தலா இல்லை புகழ்தலா? பாகனிசம் என்பது அரசியல் நோக்கமற்ற இறை நம்பிக்கை அதில் குறைகள் நிறைய இருக்கும் ஏனென்றால் அது அரசியல் நோக்கமற்ற குருட்டு நம்பிக்கை, ஓரிறைத்தத்துவங்கள் அப்படி அல்ல அதன் நோக்கம் அரசியல்,ஆளுமை.

    ReplyDelete
  89. ப்ரம்மத்தை உணரும் நிலையை அடைய என்க்கு விதிக்கப்பட்ட நித்ய கர்ம அனுஷ்டானங்களை நான் செய்கிறேன், அதனால் என்னை ப்ராமணன் என்று அழைத்துக் கொள்கிறேன்!
    //
    இப்படின்னா என்னன்னே தெரியாத இந்து பிராமணன் ஆகவே முடியாது? சிலவற்றை இங்கே பேசினால் வெறும் வாய்ப்பேச்சாகி விடும். இந்தியா வந்து உங்களை சந்திக்க நேர்ந்தால் பேசுவோம்.

    ReplyDelete
  90. ப்ரம்மத்தை உணரும் நிலையை அடைய என்க்கு விதிக்கப்பட்ட நித்ய கர்ம அனுஷ்டானங்களை நான் செய்கிறேன், அதனால் என்னை ப்ராமணன் என்று அழைத்துக் கொள்கிறேன்!
    //
    உங்களை அடுத்தவன் பீ அள்ளுவதற்காக ஒரு சாதியை உருவாக்கிய அதில் பிறக்கச்செய்து பீ அள்ளுவதையே உங்களுக்கு நித்ய கர்மமாக இறைவன் படைத்து பிராமணன் என்று அழைத்துக்கொள்ளச்செய்ய பிரம்மனை வேண்டுகிறேன்.

    ReplyDelete
  91. http://www.vinavu.com/2011/02/10/hrpc-thiruvannamalai/

    பார்ப்பனர்களின் கருத்து என்ன?

    ReplyDelete
  92. //இப்படின்னா என்னன்னே தெரியாத இந்து பிராமணன் ஆகவே முடியாது?//
    தெரிந்து கொள்ள வெவ்வேறு வழிகள் உள்ளன. ஞானசம்பந்தர் மட்டுமா சிவனடியார்? வாதவூராரில் துவங்கி பலர் இல்லையா? அவரவர்க்கு எந்த வழி நன்றாக வருகிறதோ அதில் போகவேண்டியது தான். நான் போகும் வழி உங்களுக்குப் புரியவில்லை என்பதால் என் வழி பழிக்குரியதல்ல.

    //உங்களை அடுத்தவன் பீ அள்ளுவதற்காக ஒரு சாதியை உருவாக்கிய அதில் பிறக்கச்செய்து//
    வரலாறு அறியாமல் பேசாதீர்கள்! அடுத்தவன் பீ அள்ளும் சாதி என்பது ஆந்திரர் படையெடுப்போடு வந்த விஷயம். ஐரோப்பியர் கடைப்பிடித்த விஷயம். நம் நாட்டில் ஆதியில் அப்படிப்பட்ட பழக்கம் இருந்ததில்லை.

    ReplyDelete
  93. இங்கு பின்னூட்டமிட்ட பார்ப்பனர்களை வெறுப்பவர்கள் பதிவில் கூறப்பட்ட பின்புலனை கண்டு கொள்ளாமலேயே பேசுகின்றனர். அதை மீண்டும் நினைவுபடுத்துகிறேன்.

    1. சிறுபான்மையிலேயே எப்போது இருந்து வந்திருக்கும் பார்ப்பனர்களது சொற்களை அப்படியே மற்றவர் காரணமின்றி கேட்கச் செய்ய பார்ப்பனர்கள் அவ்வளவு மந்திரவாதிகள் அல்ல.
    2. அதே போல அவர்கள் சொன்னதைக் கேட்ட மன்னர்களும் மற்றவர்களும் மன்ணாந்தைகள் அல்ல, அவர்கள் தத்தம் நலமறிந்தே பணியாற்றினர்.

    3. ஜெயமோகன் இதைத்தான் அழகாக உதாரணங்களுடன் கூறினார்.

    4. எந்த நிறுவனத்திலுமே பெர்சொனல் டிபார்ட்மெண்ட் என்று இருக்கும். அதில் வேலை செய்பவர்கள் நிறுவனத்தில் வேலை செய்யும் எல்லோருக்குமான சட்டதிட்டங்களை செயல்படுத்துவர். அம்மாதிரித்தான் பிராமணர்களும், சட்டத்திட்டங்களை உருவாக்கியது மன்னர்கள் நிலையில் இருக்கும் கம்பெனி நிர்வாகம்தான். இருப்பினும் பெர்சனல் துறையில் இருப்பவர்களை யாருக்குமே பிடிக்காது என்பது நடைமுறைதான்.

    5. அதை மனசாட்சியுள்ள யாருமே ஒத்துக் கொள்வார்கள், அருள் போன்ற எதிர்மறை எண்ணக்காரர்கள் தவிர.

    6. இந்த பாயிண்டுகளையெல்லாம் பொறுமையுடன் விளக்கும் ஆர்.எஸ்., அருண் அம்பி ஆகியோருக்கு என் பாராட்டுகள்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  94. Arun Ambie said...

    // //பிறப்பால் பிராமணன் கிடையாது. உபநயனம் நடந்து நிதயகர்ம அனுஷ்டானங்களைச் செய்யத்துவங்கிய பின்னரே ஒருவன் அந்தணன் ஆகிறான்.// //

    BC/MBC/தலித் வகுப்பில் பிறந்த எவராவது ஒருவர் "உபநயனம் நடந்து நிதயகர்ம அனுஷ்டானங்களைச் செய்யத்துவங்கிய பின்னர் பார்ப்பனர் ஆக" முடியுமா? அதற்கு வாய்ப்பு உள்ளதா?

    அப்பாடி ஏதாவது ஒரு நிகழ்வு, எப்போதாவது, எங்காவது நடந்துள்ளதா?

    ReplyDelete
  95. Arun Ambie said...

    // //உங்களைப் போன்ற வன்கொடுமை ஆதரவாளகளும், ஈயடிச்சான் காப்பிகளும் போனாலே இந்துமதம் சுத்தமாகிவிடும்!// //

    நான் இந்து மதத்தில் இருப்பதாகவே கருதவில்லை. ஏனெனில் "இந்துமதம் என்பது இதுதான்" என்று இதுவரை ஒரு வரையறையே வகுக்கப்படவில்லை.

    இந்து மதத்தில் எவரும் விரும்பி சேர்ந்ததாக கருதமுடியாது. இந்தியாவில் இருந்த மக்கள் இந்துக்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். அவ்வளவுதான் (இசுலாம், கிறித்தவம் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொண்டவர்கள் தப்பித்தார்கள்)

    இந்து மதத்தை விட்டு போவது என்றால் என்ன? எப்படி? என்று யாராவது விவரம் தெரிந்தவர்கள் தயவுசெய்து விளக்குங்களேன்.

    ReplyDelete
  96. //நான் இந்து மதத்தில் இருப்பதாகவே கருதவில்லை. ஏனெனில் "இந்துமதம் என்பது இதுதான்" என்று இதுவரை ஒரு வரையறையே வகுக்கப்படவில்லை.//

    ஆனாலும் அதில் இருப்பதாகக் காட்டிக் கொண்டு உம்மைப் போன்றவர்கள் இட ஒதுக்கீட்டு பிச்சை பெறுகிறார்கள். அதைப் பெறுவதே by definition நீர் இந்து மதத்தில் இருப்பதற்கு சாட்சி. உதார் எல்லாம் விடாதீர்கள்.

    உம்மைப் போன்றவர்களை யாரும் மதம் மாற விடாமல் தடுக்கவில்லை.

    போங்களேன் இஸ்லாமிய மதத்த்க்கு. அங்கெல்லாம் போய் அம்மதத்துக்கு எதிராகப் பேசினால் முக்கியமான எதையாவது வெட்டி விடுவார்கள். எங்களைப் பொருத்தவரை நீர் வெளியேறுவது good riddance.

    டோண்டு ராகவன்

    ReplyDelete
  97. டோண்டு ராகவன் Said...

    // //உம்மைப் போன்றவர்களை யாரும் மதம் மாற விடாமல் தடுக்கவில்லை.// //

    நாங்கள் எதற்காக மதம் மாறவேண்டும். நாங்கள் ஏதாவது ஒரு மதத்தில் இருந்தால்தானே மாறுவதற்கு.

    ReplyDelete
  98. @அருள்
    வன்னியப் படையாச்சிகள் இந்து மதத்தில் இருப்பதால்தான் இட ஒதுக்கீடே பெறுகிறார்கள். அவ்வாறு இருக்கும் பட்சத்தில் நீங்கள் இந்துதான். என்ன அழுது புரண்டாலும் அதை மாற்ற முடியாது.

    இந்த மதத்தில் நீங்கள் இருப்பதாகக் கருதப்படுவதால்தான் இட ஒதுக்கீட்டு பிச்சை அரசிடமிருந்து ஓபிசி அல்லது பிசி என்ற தகுதியில் கிடைக்கிறது. அதை பிச்சைக்காரத்தனமாக பெற்று அனுபவிக்கும் வரை வாயை ரொம்ப விடாதீர்கள்.

    டோண்டு ராகவன்

    ReplyDelete
  99. டோண்டு ராகவன் Said...

    // //இந்த மதத்தில் நீங்கள் இருப்பதாகக் கருதப்படுவதால்தான் இட ஒதுக்கீட்டு பிச்சை அரசிடமிருந்து ஓபிசி அல்லது பிசி என்ற தகுதியில் கிடைக்கிறது.// //

    இடஒதுக்கீடு யாரிடமிருந்து பிச்சையாக பெறப்படுகிறது? பார்ப்பனர்களிடமிருந்தா?

    எங்களுடைய நாடு, எங்களுடைய உரிமை. அதனை எவரிடமும் கையேந்தி பெறவேண்டிய தேவை மண்ணின் மைந்தர்களுக்கு இல்லை.

    இந்து மதத்தில் இருந்தால் இடஒதுக்கீடு, இல்லாவிட்டால் இல்லை என்பது பார்ப்பனர்களின் பயத்தால் உருவான ஒரு நிலைப்பாடு. இது "எல்லோரும் மதத்தைக் காலிசெய்துவிட்டு ஓடிவிடுவார்களோ" என்கிற இந்துமதக் காப்பாளர்களின் பயத்தையே வெளிப்படுத்துகிறது.

    மதத்திற்கும் இடஒதுக்கீட்டிற்கும் என்ன தொடர்பு? மனதோடும் பண்பாட்டுடனும் தொடர்புடைய ஒரு நம்பிக்கைக்கும் இடஒதுக்கீட்டு உரிமையை அளிப்பதற்கும் எதற்காக முடிச்சு போட்டுள்ளார்கள்? இடஒதுக்கீடு கொடுத்து மதத்தைக் காப்பாற்ற வேண்டிய கேவலமான நிலையில் இந்து மதம் இருப்பதையே இது எடுத்துக்காட்டுகிறது.

    நல்லவேளையாக - தமிழ்நாட்டில் இசுலாமியர்களுக்கும் தனி ஒதுக்கீடு வந்துள்ளது. இனி எல்லாம் மாறும்.

    ReplyDelete
  100. டோண்டு ராகவன் Said...

    // //வன்னியப் படையாச்சிகள் இந்து மதத்தில் இருப்பதால்தான் இட ஒதுக்கீடே பெறுகிறார்கள்.// //

    திருவாளர் டோண்டு அவர்களே. எல்லாம் தெரிந்தவர் போன்று பேசாதீர்.

    வன்னியர்கள் இந்து மதத்தில் இல்லை என்று சொன்னாலும் அதனால் இடஒதுக்கீட்டிற்கு ஒரு கேடும் வராது. வன்னியர்களின் இடஒதுக்கீட்டு உரிமையை உங்கள் சட்டங்களால் ஒருபோதும் மறுக்க முடியாது.

    இந்து மதத்தில் இல்லை என்று வெளிப்படையாக அறிவித்துள்ள திராவிடர் கழகத்தினரில் ஒரே ஒருவரது இடஒதுக்கீட்டு உரிமையைக்கூட உங்கள் சட்டங்களால் மறுக்க முடியவில்லை.

    இப்படி, கையாலாகாத - ஆண்மையற்ற மதத்திற்காக வீரவசனம் பேசுவது இழுக்கு.

    ReplyDelete
  101. //மதத்திற்கும் இடஒதுக்கீட்டிற்கும் என்ன தொடர்பு?//
    அதை ஏன் எங்களிடம் கேட்கிறீர்? சட்டம் போட்ட அரசை கேள்வி கேட்கவும்.

    அதற்கேற்ப இருந்து இட ஒதுக்கீடு பெறும் படையாச்சிகள் இந்துக்களே.

    இதில் பார்ப்பனர்கள் எங்கிருந்து வந்தார்கள்? போய் இசை வேளாளரை வேண்டுமானால் கேட்கவும்.

    அவரும் இந்து என்றால் திருடன் எனக்கூறிக் கொண்டே அவரது குடும்பத்தினரின் இட ஒதுக்கீட்டு பிச்சைக்காக அதிலேயே உழல்கிறார்.

    போகும்போது அவரையும் அழைத்துச் செல்லவும்.

    அதுதான் உம்முடைய இடம். அதாவது நீங்கள் டீஃபால்ட் இந்து. அது கூடாது என்றால் இசுலாமிய மதத்துக்கு செல்லவும். அதை விட்டு பெறும் பிச்சையை உரிமை என்றால் அது அதிகாரப் பிச்சையாகத்தான் எல்லோருக்கும் படும்.

    டோண்டு ராகவன்

    ReplyDelete
  102. //வன்னியர்கள் இந்து மதத்தில் இல்லை என்று சொன்னாலும்//
    அத்தைக்கு மீசை முளைச்ச கதைதான். அன்புமணி, அவரது உறவினர்கள் ஆகியோரது வேட்பு மனுவில் இந்து இல்லை எனக் குறிப்பிட்டுள்ளனரா?

    டோண்டு ராகவன்

    ReplyDelete
  103. டோண்டு ராகவன் Said...

    // //நீங்கள் டீஃபால்ட் இந்து. அது கூடாது என்றால் இசுலாமிய மதத்துக்கு செல்லவும்// //

    "நானும் ரவுடிதான்" என்று வடிவேலு பேசுவது போன்று இருக்கிறது.

    எங்களது இறை நம்பிக்கைக்கு நீங்கள் "டீஃபால்ட் இந்து" என்று பெயர் வைக்கிறீர்கள். "இந்தியாவில் இந்து என்பவன் ஒரு சிறுபான்மை" என்கிற உண்மையை மறைக்க பார்ப்பனர்கள் செய்த சதி இது.

    இந்தக்கூத்தில் நாங்கள் எதற்கு இசுலாத்திற்கு மாறவேண்டும். நாங்கள் நாங்களாக இருக்கிறோம். செருப்புக்காக காலை வெட்டும் தேவை எதுவும் எங்களுக்கு இல்லை.

    உலகில் எல்லா மதத்திற்கும் ஒரு வரையறை இருக்கிறது. அப்படி ஒரு definition'ஐ முடிந்தால் இந்து மதத்திற்கும் உருவாக்குங்கள். அன்றைக்கே உங்கள் மதம் ஒரு சிறுபான்மை மதம் ஆகிவிடும்.

    முடிந்தால் விளக்குங்களேன் - இந்து என்பவன் யார்?

    ReplyDelete
  104. @டோண்டு ராகவன்

    உங்கள் நிலையைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது.

    சட்டமன்ற உறுப்பினர் பீட்டர் அல்போன்சு தன்னை ஒரு கிறித்தவர் என்று அவரே கூறிக்கொள்கிறார். சட்டப்படியும் அவர் கிறித்தவர்தான்.

    சட்டமன்ற உறுப்பினர் மைதீன்கான் தன்னை ஒரு இசுலாமியர் என்று அவரே கூறிக்கொள்கிறார். சட்டப்படியும் அவர் இசுலாமியர்தான்.

    ஆனால், கருணாநிதியோ வீரமணியோ தம்மை இந்து என்று கூறிக்கொள்ளவில்லை. பார்ப்பனக்கூட்டத்தினர் எல்லாம் "கருணாநிதியும் வீரமணியும் இந்து மதத்தின் எதிரிகள்" என்று பிரச்சாரம் வேறு செய்கிறீர்கள்.

    ஆனால் சட்டப்படி அவர்கள் இந்துக்கள்.

    இப்படி ஒரு கேவலமான நிலையில் உலகில் எந்த மதமாவது இருக்கிறதா?

    ReplyDelete
  105. //ஆனால், கருணாநிதியோ வீரமணியோ தம்மை இந்து என்று கூறிக்கொள்ளவில்லை.//
    அப்படியா, கருணாநிதி தனது வேட்பு மனுவில் என்ன குறிப்பிட்டுக் கொண்டுள்ளார்? வீரமணி யாதவர் தனது குடும்பத்தினருக்கு இட ஒதுக்கீடு வேண்டாம் என்று கூறி விட்டாரா?

    //முடிந்தால் விளக்குங்களேன் - இந்து என்பவன் யார்?//
    நீங்கள்தான் இந்து மதத்தில் இல்லையே? (பிச்சைக்காரர் என்பது அப்படியே உள்ளது, அதை மாற்ற இயலாது)

    ஆகவே தம்மையே வெளி ஆளாக அறிவித்துக் கொண்டவருக்கு எங்கள் மதம் பற்றி பேச உரிமை இல்லை. ஆகவே உங்கள் பின்னூட்டங்கள் இந்த மத விஷயத்தில் அனுமதிக்கப் பட மாட்டாது.

    ஜோ அமலன் ஃபெர்னாண்டோ நிலைதான் உமக்கு. அவரை நீக்கியாயிற்று. இப்போது உம்மையும் நீக்குகிறேன், இந்து மதம் பற்றிய பின்னூட்டங்களை எனது பதிவில் தடை செய்வதன் மூலம், அதுவும் ஒரு குற்ற உணர்ச்சியும் இன்றி. நீங்களே அதற்கான சாக்கை எடுத்துக் கொடுத்து விட்டீர்கள்.

    எனக்கு தலைக்கு மேல் வேலை இருக்கிறது. ஆகவே உம்மை entertain செய்யும் வேலை மிச்சம் என்பதில் மகிழ்ச்சியே.

    டோண்டு ராகவன்

    ReplyDelete
  106. கோவில் என்பது பொதுவானதாக இருக்கவேண்டும் அது என்ன தன் சாதிக்கு மட்டும் கட்டுவது. எல்லாருக்கும் பொதுவாக கட்டாதது எது? சாதி வெறி?அங்கேதான் உங்கள் மனநிலை சரியில்லை. தாழ்த்தப்பட்டவனின் வரி கேளுங்கள் கண்டிப்பாக கட்டுவான், வேண்டுமென்றே ஒதுக்கிவிட்டு நியாயம் வேறா?

    வன்னிய கிறித்துவர்களின் சர்ச்சில் தாழ்த்தப்பட்டவர்கள் வர கூடாது என்று தடுத்து துப்பாக்கி சூடு வரை சென்ற வெரையூரில் பொய் நியாயம் பேச முடியுமா உங்களால் , இந்த மசூதிக்கு நீ வராதே அங்கே நான் வர மாட்டேன் என்று தடுக்கும் முஸ்லிம்களிடம் உரிமை பேசுவிர்களா ? முடியாது ஏனேன்றால் அவர்களிடம் பயம் , ஊருக்கு இளிச்சவாயன் நாங்கதானே , கடவுள் நம்பிக்கை உள்ள எந்த அமைப்பும் வரட்டும் ஆனால் மார்க்சிஸ்டுகளும் நாத்திகர்களும் எதற்கு போராட கோயில் வர வேண்டும் , இல்லாத கடவுளுக்காக இவர்கள் ஏன் போராட வேண்டும் ,
    நோக்கம் எல்லாம் குழப்பம் விளைவிக்கதானே தவிர வேறு என்ன இருக்க முடியும் ,

    ReplyDelete
  107. நாத்திகமும் இந்து மதம் தானே. அருளுக்கு ஏன் அனுமதி இல்லை

    ReplyDelete
  108. //நாத்திகமும் இந்து மதம் தானே. அருளுக்கு ஏன் அனுமதி இல்லை//
    தான் இந்து மதத்தில் இல்லை என அருளே கூறிவிட்டப் பிறகு அதுதான் சாக்கு என அவரை தடுத்து விட்டேன்.

    ஆளை விடுங்கள்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  109. ஜோ அமலன் ஃபெர்னாண்டோ ,அருள் இரண்டு பேரும் இல்லாத உங்க ப்லொக் கண்ணில்லாத குருடு. அவங்களுக்கு ஒரு ரசிகர் மன்றமே இருக்கு.

    ReplyDelete
  110. \\\\\\\\\BC/MBC/தலித் வகுப்பில் பிறந்த எவராவது ஒருவர் "உபநயனம் நடந்து நிதயகர்ம அனுஷ்டானங்களைச் செய்யத்துவங்கிய பின்னர் பார்ப்பனர் ஆக" முடியுமா? அதற்கு வாய்ப்பு உள்ளதா?\\\\\\\\\
    உள்ளதே, ஸ்ரீ சுப்ரமண்யபாரதியார் தலித்தாகிய ஸ்ரீ கனகசுப்புரத்தினத்திற்கு உபநயனம் செய்தது ஊரறிந்த விஷயமாயிற்றே. அன்புள்ள அருளுக்கு தெரியாதா? ஹரித்வாரில் காயத்ரி பரிவார் எல்லோருக்கும் பூணூல் போட்டு விடுகிறார்களே? தெரியாதா?தெரியவில்லை என்று கூருங்கள் ந்யாயம்.

    ReplyDelete
  111. //ஜோ அமலன் ஃபெர்னாண்டோ ,அருள் இரண்டு பேரும் இல்லாத உங்க ப்லொக் கண்ணில்லாத குருடு. அவங்களுக்கு ஒரு ரசிகர் மன்றமே இருக்கு.//
    அதெல்லாம் நான் ஹிட் கவுண்டர், தமிழ்மணம் வரிசைப்படுத்தல் ஆகிய விட்ஜெட்டுகளை வைத்திருந்தபோது வேண்டுமானால் இருந்திருக்கலாம்.

    ஆனால் நான் அவை எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விட்டேனே. இனிமேல் விவாதம் குருட்ட்ப் பூனை விட்டத்தில் பாய்ந்தது போல இருக்க வேண்டாம் என்ற எண்ணத்தில் அந்த விதண்டா வாதம் செய்பவர்களை கட்டுப்படுத்தினேன்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  112. ஜாதீய வன்மத்தோடு நித்தம் குறை கூறும் ஒருவரின் கூற்றிற்கு ஒரு நீண்ட பதிவா... தேவை இல்லாத பிரச்சினையில் நாய் பேய் என்று திட்டிக்கொண்டு ஆற்றல் முழுவதும் வீணாக தொலைக்கிறார்களே எனும் அங்கலாய்ப்பில் பின்னூட்டத்திலும் நுழையவில்லை..விருச்சம் போன்றவர் களின் கருத்தை கண்டிப்பாக பாராட்ட வேண்டும்... விருச்சம் கூறியதுபோல் இயல்பான வாழ்வில் இவ்வளவு துவேஷம் கண்டிப்பாக இல்லை.

    நல்ல முடிவெடுத்தீர்கள்... ஜாதி துவேஷமும் வன்மத்தையும் ஒதுக்கியதின் முலம் உங்கள் வலைப்பூ இனி ஆக்க பூர்வமாக இருக்கும்....

    ReplyDelete
  113. வன்னிய கிறித்துவர்களின் சர்ச்சில் தாழ்த்தப்பட்டவர்கள் வர கூடாது என்று தடுத்து துப்பாக்கி சூடு வரை சென்ற வெரையூரில் பொய் நியாயம் பேச முடியுமா உங்களால் , இந்த மசூதிக்கு நீ வராதே அங்கே நான் வர மாட்டேன் என்று தடுக்கும் முஸ்லிம்களிடம் உரிமை பேசுவிர்களா ? முடியாது ஏனேன்றால் அவர்களிடம் பயம் , ஊருக்கு இளிச்சவாயன் நாங்கதானே , கடவுள் நம்பிக்கை உள்ள எந்த அமைப்பும் வரட்டும் ஆனால் மார்க்சிஸ்டுகளும் நாத்திகர்களும் எதற்கு போராட கோயில் வர வேண்டும் , இல்லாத கடவுளுக்காக இவர்கள் ஏன் போராட வேண்டும் ,
    நோக்கம் எல்லாம் குழப்பம் விளைவிக்கதானே தவிர வேறு என்ன இருக்க முடியும் ,
    //
    தேவையில்லாத விசயத்தில் எனக்கு தலையிட விருப்பமில்லை, நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ நான் ஒரு இந்து என்றே என்னை நினைக்கிறேன். அதில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்வதே என் விருப்பம்.

    ReplyDelete
  114. //வன்னியர்கள் இந்து மதத்தில் இல்லை என்று சொன்னாலும் அதனால் இடஒதுக்கீட்டிற்கு ஒரு கேடும் வராது. வன்னியர்களின் இடஒதுக்கீட்டு உரிமையை உங்கள் சட்டங்களால் ஒருபோதும் மறுக்க முடியாது.//

    தான் ஒரு கூமுட்டை என்று அடிக்கடி நிரூபித்துக் கொண்டிருக்கும் அருள் சற்றே சிந்திக்கத்தக்க புத்தி பெறுவாராக! இப்படிப்பட்ட ஜீவராசிகளை நம்பி அரசியல் நடத்தும் மாலடிமை பாவம் பரிதாபத்துக்குரியவர் தான். இவர்களின் தலைவர் வேறு எப்படி இருப்பார்???

    ReplyDelete
  115. //
    அம்மதத்துக்கு எதிராகப் பேசினால் முக்கியமான எதையாவது வெட்டி விடுவார்கள். எங்களைப் பொருத்தவரை நீர் வெளியேறுவது good riddance.

    டோண்டு ராகவன்
    //
    அங்கே உள்ளே போனாலே பாதி வெட்டிவிடுவார்கள். ஓவரா பேசினா முழுசா வெட்டிவிடுவார்கள்.

    நம்மாட்கள் எல்லாம் நாலு பொண்டாட்டி கட்டுறதுக்கும் ஒட்டக பிரியாணி தின்றதுக்கும் தானே அங்கே போறானுங்க...

    ReplyDelete
  116. //தேவையில்லாத விசயத்தில் எனக்கு தலையிட விருப்பமில்லை, நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ நான் ஒரு இந்து என்றே என்னை நினைக்கிறேன். அதில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்வதே என் விருப்பம்.//
    அதுக்காக இந்து மதத்தை திட்டற மாற்று மதத்தவங்களை எல்லாம் விட்டு விட முடியாது. பார்ப்பனரை பழிக்கும் வெத்துவேட்டு வன்னியரையும் விடுவதாக இல்லை. நான் ஏற்கனவேயே அறிவித்த யுத்த அறிவிப்பு அப்படியே உள்ளது.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  117. //jaisankar jaganathan said...
    ஜோ அமலன் ஃபெர்னாண்டோ ,அருள் இரண்டு பேரும் இல்லாத உங்க ப்லொக் கண்ணில்லாத குருடு. அவங்களுக்கு ஒரு ரசிகர் மன்றமே இருக்கு.//
    குமரிமுத்துவுக்குக் கூடத்தான் ரசிகர் மன்றம் இருக்கிறது? அதற்காக எவ்வளவு நேரம் தான் அந்த "இஹ்ஹாஹாஹாஹாஹா" சிரிப்பைக் கேட்டுக் கொண்டிருக்க முடியும்? அதுபோலத்தான் அருளும். அவர் லாஜிக் இல்லாத காமெடி செய்கிறார், சிரிப்பு வருகிறது, பொழுது போகிறது என்பதற்காக அதையே ரசித்துக் கொண்டிருக்க முடியுமா?

    ReplyDelete
  118. அதுக்காக இந்து மதத்தை திட்டற மாற்று மதத்தவங்களை எல்லாம் விட்டு விட முடியாது//
    விமர்சனத்தை ஏற்றுக்கொள்ளாத மதங்களும் மற்றவைகளை விமர்சிப்பது தெரிந்ததே,அவைகளுக்கு பதில் கொடுக்கும் அதே வேளையில் யார் விமர்சித்தாலும் உண்மைகள் இருப்பின் ஏற்றுக்கொண்டு அவைகளை களைவதுதான் சிறந்தது.பார்ப்பனர்களின் மீது எனக்கும் விமர்சனம் உண்டு,அதே விமர்சனம் மற்றைய மத்திய தர சாதியினர் மீதும் உண்டு என் நோக்கம் சண்டை வளர்ப்பதல்ல தவறுகள் திருத்திக்கொள்வது.

    ReplyDelete
  119. //பார்ப்பனர்களின் மீது எனக்கும் விமர்சனம் உண்டு,அதே விமர்சனம் மற்றைய மத்திய தர சாதியினர் மீதும் உண்டு என் நோக்கம் சண்டை வளர்ப்பதல்ல தவறுகள் திருத்திக்கொள்வது.//
    மிக நல்லது. சரியான கொள்கை. ஆனால் ஈவேரா கக்கி வைத்ததை நக்கிவிட்டு வரலற்றுத் தெளிவில்லாது பேசும் சிலரை ஆராயாது அப்படியே ஏற்றுக் கொள்ளும் உங்கள் modus operandi shows that you're konwingly or unknowingly attempting to throw the baby along with the bathwater.
    சுத்தம் செய்ய வேண்டும் என்றால் முதலில் எது குப்பை என்று தெளிய வேண்டும்.

    ReplyDelete
  120. ஜோ அமலன்,அருள் இல்லாத டோண்டு பதிவை எப்படி ரசிக்க முடியும். திரும்ப அவங்களை இன்வைட் பண்ணுங்க. என் வேண்டுகோள்

    ReplyDelete
  121. அம்பி
    நீங்கள் பெரியாரையொ நான் சங்கராச்சாரி/பிராமணத்துவத்தை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.பெரியார் என்ற சாதாரண மனிதரின் கலகம் நன்மையையே விளைவித்தது என்பது என் கருத்து.பெரியாரை விமர்சனத்தோடு என்னால் ஒரு மனிதனாக ஏற்றுக்கொள்ளமுடியும், ஆனால் சங்கராச்சாரிகளை ஏற்றுக்கொள்ளமுடியாது. ஆர்வி அவர்களின் பதிவு ஒன்று முடிந்தால் லிங்க் தருகிறேன்.

    ReplyDelete
  122. சுத்தம் செய்ய வேண்டும் என்றால் முதலில் எது குப்பை என்று தெளிய வேண்டும்.
    //
    சாதிகளை ஒழிக்க ஒரே நாளில் முடியாது, ஆனால் சமநிலை/நீர்த்துபோகச்செயதல் அதனை நோக்கிய வெற்றியை அடைதலே இந்து இயக்கங்களில் நோக்கமாக இருக்கவேண்டும்.நான் தெளிவுடன்தான் இருக்கிறேன், நீங்கள்தான் பெரியார் வெறுப்பில் இருக்கிறீர்கள்.பிராமணன் என்று சொல்லிக்கொள்பவருக்கு வெறுப்பு இருக்கலாமா?

    ReplyDelete
  123. அருள் அனுமதிக்கப்படவேண்டும், கருத்து ரீதியாகத்தானே மோதுகிறார்.

    ReplyDelete
  124. அருளை அனுமதிப்பது உங்கள் உரிமை. முந்திய பின்னூட்டத்தின் தொடர்ச்சி

    ReplyDelete
  125. //நாத்திகமும் இந்து மதம் தானே. அருளுக்கு ஏன் அனுமதி இல்லை //

    இது என்ன புதுக்கதை!
    கடவுள் மறுப்பாளர்கள் அனைவரும் இந்துக்களா!?

    ReplyDelete
  126. பிராமணர்கள் சோம்பேறிகளா என்பது இருக்கட்டும், அதை ஆய்வு செய்யும் நபர் உண்மையிலே வேலையோட தான் இருக்காரா அல்லது பொழுது போகாமல் நாற்காலியை தேய்த்து கொண்டிருக்கீறாரா!?
    இந்த லட்சனத்தில் ஹிட் கவுண்டரை தூக்கி விட்டதை வேறு அடிக்கடி சொல்லி காட்டுகிறார்!

    தெளிவுற விவாதிப்பதில் ஒரு நியாயம் இருக்கு, வெட்டி விவாதம் செய்வது வெறுப்பா இருக்கு!

    ReplyDelete
  127. // வால்பையன் said...
    இது என்ன புதுக்கதை!
    கடவுள் மறுப்பாளர்கள் அனைவரும் இந்துக்களா!?//

    வால் இந்து மதத்தில் நாத்திகமும் ஒரு பிரிவுதான்

    ReplyDelete
  128. கன்னித் தமிழ் காவலன்,செம்மொழி மாநாடு கண்டோன்,நேர்மையின் பிற்ப்பிடம்,மக்கள் சேவையிலே தன்னை தொலைத்த தூயவன்,ஒடுக்கபட்டோரின் ஒளிவிளக்கு,ஆதிக்க சக்திகளுக்கு சிம்ம சொப்பனமாய் காட்சி தருவோன்,

    நல்லோன்,நம்மவன்,நம்ம்பிக்கை நட்சத்திரம்,
    65 ஆண்டு கலையுக சேவை
    75 ஆண்டு அரசியல் சேவை
    85 ஆண்டு மக்கள் சேவை

    ஆற்றியோனின் அறிவு சார் ஆட்சியை அபகரிக்க ஆதிக்க சக்திகளின் சதி தான் இந்தப் பதிவு.

    கழகக் கூட்டணிக்குள் குழப்பம்,மாற்றுக் கடசியின் கூட்டணி வெற்றிக் கூட்டணி என கோயபல்ஸ் பிரச்சாரம்.
    ஏ தமிழினமே இவர்களின் மாய் மாலங்களால் இனியொரு தடவை ஏமாந்து விடாதே

    பொய்க் குற்ற்ச் சட்டுக்கள் ஆயிரம் சொல்லட்டும்

    நாம் பெற்று உள்ள சலுகைகளை தட்டிப் பறிக்க நினைப்போருக்கு
    சரியான பதிலடி கொடுக்க தயராயிரு!
    நம் சாதனைத் தேரில் வெற்றி பவனி வரும் தலைவனின் புகழ் பாடு!

    தேனினும் இனிய செய்தி: தேமுதிகவும் தலைவரின் புகழ்பாட தொடங்கிய பத்திரிக்கை செய்தி கண்டு அவாளெல்லாம் கலக்கம்.

    திராவிடனுக்குள் கலகம் இனி நடக்காது.

    கைபர் கணவாய் வழியாய் வந்தோரை
    வழி அனுப்பும் நாள் வந்து விட்டதோ!

    ReplyDelete
  129. //நான் தெளிவுடன்தான் இருக்கிறேன், நீங்கள்தான் பெரியார் வெறுப்பில் இருக்கிறீர்கள்.//
    கீழ் வெண்மணியில் தாழ்த்தப்பட்ட மனிதர்கள் எரிக்கப்பட்ட போது அது கூலித்தகராறு தான், கம்யூனிஸ்டுகளைத் தடை செய்தால் சரியாகிவிடும் என்றார் ஈவேரா. கூலி உயர்வு கேட்ட தொழிலாளர்களைக் கொளுத்தியது பிரச்சினையே அல்ல என்று பேசிய ஒருவர், தமிழைக் காட்டு மிராண்டி பாஷை என்று அழைத்த ஒருவர், ஐயரை வைத்துக் அறுபதாம் கல்யாணம் செய்கிறார் என்று நாட்டுக்கோட்டைச் செட்டியாரைத் திட்டிவிட்டு செட்டியார் பணம் கொடுத்ததும் திட்டியதை வாபஸ் வாங்கி எழுதச் சொன்னவர், சொத்து தம்பி சம்பத்துக்குப் போய்விடுமே என்று 72 வயதில் 26 வயதுப் பெண்ணை மணந்தார், ஆனால் மற்றவர்களுக்கு என்று வரும் போது கல்யாணம் பெண்ணடிமைத்தனம், அது தேவையில்லை என்றார். இவ்வாறான 'பெருமை'களுக்குப் பாத்தியதைப்பட்ட கன்னட நாயக்கரை தமிழனாகிய நான் மதிக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. ஈவேரா என்ற மனிதர் மீது எனக்கு வெறுப்பும் இல்லை. அவர் பேசிய முன்னுக்குப் பின் முரணான பேச்சுக்கள், அரைகுறையாகத் தெரிந்து கொண்டு உளறிவிட்டு அதுவே சரி என்று அடித்துப் பேசியவிதம், ஆகிய அறிவுக்கொவ்வாத செயல்கள் மீதே எனக்கு வெறுப்பு. (Hope the last couple of sentences make a "politically correct" statement!!)

    //பிராமணன் என்று சொல்லிக்கொள்பவருக்கு வெறுப்பு இருக்கலாமா?//
    விருப்பு வெறுப்பில்லாது தன் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்த அந்தணர்களை வம்பிழுத்து பூணூலை அறுப்பதும், திருப்பி அடிக்கமாட்டார்கள் என்பதாலேயே அவர்களை அடிப்பதும், அந்தணப் பெண்களை பொதுவுடமையாக்கு என்று செய்தும் பேசியும் ப்ராமணர்களின் கோபத்தை-வெறுப்பைத் தூண்டியது பரமார்த்த குரு ஈவேராவும் அவரது சீடகோடிகளும். எது நடந்தாலும் மழுங்கலாக உட்கார்ந்திருப்பவன் தான் அந்தணன் என்று எங்கே யார் சொல்லியிருக்கிறார்கள்? கோபம் வெறுப்பு ஆகியன இருக்கலாம். அந்த உணர்ச்சிகளின் போக்கில் தன் போகாமல் திடமாக இருந்து தேவைப்படும் போது உணர்ச்சிகளைப் பயன் படுத்திவிட்டு அவற்றிலிருந்து மனதை வெளியே கொண்டுவருபவனே ப்ராமணன். இப்படிப்பட்ட நிலைக்குத்தான் சந்த்யா வந்தனம் உள்ளிட்ட நித்ய கர்மானுஷ்டானங்கள் ப்ராமணனைப் பயிற்றுவிக்கின்றன.

    ReplyDelete
  130. //அருள் அனுமதிக்கப்படவேண்டும், கருத்து ரீதியாகத்தானே மோதுகிறார்.//
    அருள் விதண்டாவாதி. பிறர் கருத்தைக் கேட்டு அதற்கு பதில் கருத்துச் சொல்லிப் பேசுவது வாதம். யார் சொல்வதையும் ஏற்க மாட்டேன். சொந்தமாகவும் பேசமாட்டேன் எதைப் பேசினாலுன் பதிலுக்கு 1920-30களின் விடுதலை, குடிஅரசு இதழ்களை ஜெராக்ஸ் எடுத்து எடுத்து ஒட்டுவேன் என்று செய்வதற்குப் பெயர் வாதம் அல்ல. இருந்தாலும் அருள் இருந்தால் பொழுது போகும். ஆபீஸ் டென்ஷன்களில் இருந்து மாலை/இரவு வேளைகளில் ஒரு ரிலாக்ஸேஷன். கவுண்டமணி செந்தில் மாதிரி ஜோவும் அருளும் இருந்தார்கள். காமெடி ட்ராக்கை டோண்டு ஐயா எடிட் பண்ணிவிட்டாரே!!

    ReplyDelete
  131. கருணாநிதி அவர்களின் துள்ளல் வசனத்துடன் வந்ததாய் பெரும் விளம்பரம் செய்யப்பட்ட பா.விஜயின் இளைஞன் திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாதாதன் காரணம்?



    இதனால்
    தயாரிப்பாளரின் நிலை?

    கருணாநிதி அவர்களின் மனம்?

    சுய லாபத்திற்காக பாராட்டிப் பேசிய திரை பிரபலங்கள் நிலை?


    விஜய்கள் என்ன நினைப்பார்கள்?
    `

    ReplyDelete
  132. //ரமணா said...
    கருணாநிதி அவர்களின் துள்ளல் வசனத்துடன் வந்ததாய் பெரும் விளம்பரம் செய்யப்பட்ட பா.விஜயின் இளைஞன் திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாதாதன் காரணம்?//

    அதனாலென்ன... “தல”க்கு தான் நாக்பூர் பட விழாவில் இளைஞன் படத்திற்காக சிறந்த வசனகர்த்தா அவார்ட் தந்து விட்டார்களே...

    ReplyDelete
  133. எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே! தந்தைபெரியார் - "விடுதலை" 15-2-1973

    இது எப்படி இருக்கு?

    ReplyDelete
  134. //jaisankar jaganathan said...
    ஜோ அமலன்,அருள் இல்லாத டோண்டு பதிவை எப்படி ரசிக்க முடியும். திரும்ப அவங்களை இன்வைட் பண்ணுங்க. என் வேண்டுகோள் //

    கவுண்டமணி செந்திலான அமலன்-அருள் போனாலென்ன? எழில் அரசு என்ற பெயரில் ஒரு கஞ்சா கருப்பு வந்துவிட்டாரே!!! ஆக மொத்தத்தில் Dondus dos and dontsல் காமெடிக்குப் பஞ்சமில்லை!!

    ReplyDelete
  135. சாதிக்கொடுமையால் பார்ப்பனர் அல்லாத சாதிகள் ஒவ்வோன்றும் ஒவ்வோரு அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டு மக்களில் பெரும்பான்மையினராக உள்ள வன்னியர், முக்குலத்தோர், நாடார், மீனவர் உள்ளிட்ட பல சாதிகள் அவர்களது மக்கள்தொகை விழுக்காட்டிற்கு ஏற்ற அளவில் இன்றைக்கும் சென்னை ஐ.ஐ.டி'யில் படிக்கவில்லை. ஆனால், மக்கள் தொகையில் 3% கூட இல்லாத பார்ப்பனர்கள் அளவுக்கு அதிகமாகவே இடம்பெற்றுள்ளனர்.

    இதற்கு காரணம் - தனித்தன்மையான அறிவோ, திறமையோ காரணம் அல்ல. காலம்காலமாக அடுத்தவர் உழைப்பைச் சுரண்டி கொழுத்ததே உண்மையான காரணம் ஆகும்.//
    ha ha ha, very funny, people who are afraid to write exams blame others, very funny indeed, you cant even think of entering into IIT, its the place of intelligence, you lack in it lot... better luck

    ReplyDelete
  136. Anja Singham and others please dont fight we are hindus,christians and muslims are laughing at us for this only.they have lots of caste among themselves but it doesnt come out but we fight among ourselves thats the fate.
    There is nothing called caste system in hinduism it was just divided based on work we do,MANU DHARMAM was written by non-brahmin but its for all.
    Anna,Karuna and odrzz fought for Kula Kalvi system brought forwarded by Brahmin Rajaji but see After Karuna,Stalin and his big bunch of family members are waiting to loot TN.Why should we fight,i am a brahmin,i scored very high marks in Plus Two but didnt get in reputed college because of reservation,i have no issues but i want my seat to goto another hindu only not odr religion fellas.Dont wori even my next generation will not ask merit based seat in India but i still want that seat to goto another hindu only.

    ReplyDelete
  137. But i second what Dondu sir said inspite of all reservations we still want to be Forward Caste only and we wouldnt run after Indian Govt for reservations.We are very confident individuals unlike people who want to live the life only by reservations,but my only concern is reservation should be given only for HINDUS and DEF not OTHER RELIGION FELLOWS.

    ReplyDelete