ஹிந்தியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தல்
ஹிந்தி/உருது மொழிகளை நான் சித்தி மொழி என்றே குறிப்பிடுவேன். அதாவது அன்னையின் தங்கை. மௌஸீ என்பார்கள். அதன் பொருள் தாயைப் போன்றவள் என்பதாகும். ஒரு குழந்தைகளின் அன்னை இறந்து விட்டால், அன்னையின் தங்கையையே அவர்களது அப்பாவுக்கு கட்டி வைப்பதும் ஒரு பழக்கமே. அதாவது தனது அக்காவின் குழந்தைகளை மாற்றாந்தாய் போலன்றி உண்மையாகவே அன்புடனும் அக்கறையுடனும் பார்த்துக் கொள்வாள் என்பதே அதன் தாத்பர்யம். நிற்க.
அவ்வாறு சித்தி மொழி எனக்கூறிவரும் நான் இத்தனை ஆண்டுகாலத்தில் ஒரு முறை கூட ஹிந்தியிலிருந்து தமிழுக்கு மொழி பெயர்த்ததில்லை. சான்ஸ் கிடைக்கவில்லை அல்லது அவ்வாறு வந்த வாய்ப்புகளையும் தவிர்த்தேன். காரணம் ஹிந்தியில் உள்ள எழுத்துக்களே. க, ச, ட, த ஆகியவை தலா நான்கு உச்சரிப்பில் உள்ளன. அவற்றில் எனக்கு எப்போதுமே தகராறுதான்.
இருப்பினும் ஒரு பிரபல வங்கியின் ரூரல் துறையிலிருந்து ஒரு மொழிபெயர்ப்புக்கான வாய்ப்பு வந்தது. அந்த வங்கியின் கிராம சேவைகளை காட்டும் வண்ணம் போஸ்டர்கள், படக்கதைகள் ஆகியவை. இம்முறை துணிச்சலுடன் ஏற்றுக் கொண்டேன். அடாடா மொழிபெயர்ப்பு வேலை தன்னைப் போல ஸ்மூத்தாக சென்றது. ஹிந்தியிலிருந்து தமிழுக்கான மொழிபெயர்ப்பு இய்ல்பாகவே வந்தது.
என்ன, சில மாறுதல்கள் செய்ய வேண்டியிருந்தது. சூரஜ் தமிழில் முருகன் ஆனார், அவர் மனைவி ரூபா வள்ளி என அழைக்கப்பட்டார், அவர்கள் மகள் ஜூஹி மேகலாவானாள். அவர்கள் ஊர் ராம்புர் புதூராயிற்று. கண்ஷ்யாம் கணேசன் ஆனார்.
இந்த வேலையில் மொழி பெயர்ப்பை விட DTP வேலைதான் அதிக. அதையும் செய்தேன் என வைத்துக் கொள்ளுங்கள்.
மொத்தத்தில் நல்ல அனுபவம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஆஹா இது ஒரு நல்ல அனுபவம்தான்
ReplyDeletenice experience... please read my blog www.rishvan.com and leave your comments.
ReplyDelete