நிரந்தர பக்கங்கள்

11/08/2006

இரண்டு ஆண்டுகள் முடிந்தன

சரியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் அதாவது 8.11.2004 அன்று எனது முதல் பதிவை வெளியிட்டேன். இது 321-வது பதிவு. அக்டோபரிலேயே பிளாக்கர் கணக்கைப் பெற்றாலும் முதல் இடுகையிட்டதைத்தான் நான் எனது வலைப்பதிவு வாழ்க்கையின் தொடக்கமாகப் பார்க்கிறேன்.

இப்போதுதான் முதலாம் ஆண்டு நிறைவு பகுதியை போட்டாற்போலிருக்கிறது, அதற்குள் ஒரு ஆண்டு ஓடிவிட்டது. அப்பதிவு 173-ஆம் பதிவு. அப்போது வெள்ளம் வீட்டினுள் நுழைந்து கொண்டிருந்தது. ஆகவே ஒரு நாள் முந்தியே போட்டு விட்டேன். போன ஆண்டு மூன்று முறை வெள்ளம் உள்ளே வந்தது. இம்முறை என் உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதன் அருளால் இதுவரை தப்பித்தேன். பிறகு அவன் விட்ட வழி.

ஓராண்டுக்கும் மேலாக என்னைப் பீடித்த பிரச்சினையை புறங்கையால் ஒதுக்கி முன்னேற முடிந்ததும் அவன் அருளாலேயே. எனது தமிழ் சீரடைந்ததற்கு நான் எனது வலைப்பூவிலும் மற்றவர் பதிவுகளில் இட்டப் பின்னூட்டங்களிலும் தட்டச்சு செய்த லட்சக்கான சொற்களே காரணம். அவை பலரை சென்றடைய உதவி செய்த தமிழ்மணத்தின் சேவை மதிப்பிட முடியாத அருமையான சேவை.

இதில் எழுந்த விவாதங்களில் உற்சாகத்துடன் பங்கெடுத்தது எனது மனதின் வயதை என்றும் 25-லேயே இருக்க வைத்தது. கடவுள் கிருபை இருந்தால் இதையெல்லாம் தொடர்ந்து செய்து படுத்துவேன் என்பதை அன்புடன் கூறிக் கொண்டு இப்பதிவை இங்கு பூர்த்தி செய்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

33 comments:

  1. நன்றி குழலி மற்றும் துளசி அவர்களே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. நன்றி ஓகை அவர்களே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  4. வாழ்த்துகள் டோண்டு சார்.

    ReplyDelete
  5. Thanks my dear angry young man.

    Regards,
    Dondu N.Raghavan

    ReplyDelete
  6. நன்றி செந்தில் குமரன் அவர்களே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  7. வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் டோண்டு சார்.

    "ஓராண்டுக்கும் மேலாக என்னைப் பீடித்த பிரச்சினையை புறங்கையால் ஒதுக்கி முன்னேற முடிந்ததும் அவன் அருளாலேயே."
    அவன் பக்தனான உங்களுக்கு அவன் அருள் எப்போதும் உண்டு டோண்டு சார்.

    கிருஷ்ணன்

    ReplyDelete
  8. நன்றி கிருஷ்ணன் அவர்களே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள் டோண்டு சார்....

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள் !!

    ReplyDelete
  11. நன்றி மௌல்ஸ் மற்றும் மணியன் அவர்களே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  12. இன்னும் இருநூறு ஆண்டுகளுக்கு பதிவுபோட வாழ்த்துக்கள்.....

    ReplyDelete
  13. வாழ்த்துக்கள் டோண்டு சார்.

    ReplyDelete
  14. நன்றி லக்கிலுக் மற்றும் எக்ஸ் அவர்களே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  15. வாழ்த்துக்கள் டோண்டுசார்.

    ReplyDelete
  16. வாழ்த்துகள் டோண்டு அவர்களே
    தொடரட்டும் தங்கள் தமிழ் பணி:-)

    ReplyDelete
  17. வாழ்த்துக்கள்.

    //இதில் எழுந்த விவாதங்களில் உற்சாகத்துடன் பங்கெடுத்தது எனது மனதின் வயதை என்றும் 25-லேயே இருக்க வைத்தது. கடவுள் கிருபை இருந்தால் இதையெல்லாம் தொடர்ந்து செய்து படுத்துவேன் என்பதை அன்புடன் கூறிக் கொண்டு இப்பதிவை இங்கு பூர்த்தி செய்கிறேன்.
    //
    :)))

    ReplyDelete
  18. வாழ்த்துகள் டோண்டு அவர்களே

    ReplyDelete
  19. நன்றி, ஹரிஹரன், மதுமிதா, என்றென்றும் அன்புடன் பாலா மற்றும் செல்வன் அவர்களே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  20. நன்றி சந்தோஷ் அவர்களே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  21. இன்னும் பல ஆண்டுகளுக்கு பதிவு போடுங்கள் சார். ஒரு நாளைக்கு ஒன்று என்றாலும் கூட வருட முழுதும் உங்களால் பதிவு போட முடியும் என்பதை நான் பல காலங்களாகவே பார்த்து வருகிறேன்.

    அன்பன்,
    முகம்மது யூனுஸ்

    ReplyDelete
  22. நன்றி முகம்மது யூனுஸ் அவர்களே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  23. சார்..

    இதை நான் எப்படியோ நேற்று படிக்க தவறிவிட்டேன் என்று நினைக்கிறேன்..

    இரண்டாண்டுகள் தொடர்ந்து எழுதி சாதனை ப(டு)டைத்திருக்கிறீர்கள்..

    கவலைப் படாமல் தொடர்ந்து படுத்துங்கள்..

    வாழ்த்துக்கள்:)

    ReplyDelete
  24. மிக்க நன்றி ஜோசஃப் சார். அப்படியே படுத்தினால் போயிற்று.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  25. நன்றி பிரகாஷ் அவர்களே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  26. very well done.

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  27. நன்றி BadNewsIndia அவர்களே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  28. வாழ்த்துக்கள் சார்! You have been a trend setter. Thanks for sharing your experiences and your opinions.

    ReplyDelete
  29. மனமார்ந்த வாழ்த்துக்கள் டோண்டு சார்.

    கட்டபொம்மன்

    ReplyDelete