நிரந்தர பக்கங்கள்

1/01/2009

டோண்டு பதில்கள் 01.01.2009

பலமுறை பலர் கேட்டதற்கிணங்கி இனிமேல் டோண்டு பதில்கள் பதிவை ஒவ்வொரு வியாழனுக்கும் மாற்றுவேன். மேலும் நாளை ஜனவரி 1 வேறு. அடுத்த பதிவுகள் இனிமேல் ஒவ்வொரு விழாயனன்றும் வந்து விடும். (“அடப்போய்யா, பெரிசுக்கு நாளைக்கு என்ன பதிவு போடுவதென்று தெரியாததால் இம்மாதிரி சீன் காட்டுகிறது” என்று கூவும் முரளி மனோஹரா, உனக்கும், மற்ற பதிவுலக நண்பர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!)

நக்கீரன் பாண்டியன்:
2008 ஆண்டில் உங்களை:
1. மகிழ்ச்சிப்படுத்திய செய்தி/நிகழ்ச்சி

பதில்: எனது தாய்மொழி தரும் உற்சாகம் - 3 பதிவில் அதை குறிப்பிட்டுள்ளேன்.

2. கவலைப்படுத்திய செய்தி/நிகழ்ச்சி
பதில்: குழந்தைத் தொழிலாளர் பிரச்சினை பற்றி நான் இட்ட இப்பதிவில் அதை நீங்கள் பார்க்கலாம்.

3. போடா ஜாட்டான் என்று நினைத்த செய்தி/நிகழ்ச்சி
பதில்: எதிர்பாராது வந்த தாக்குதலின் எதிர்வினையாக நான் போட்ட பதிவை விட வேறு என்ன நல்ல உதாரணம் நீங்கள் கேட்டதற்கு இருக்க இயலும்?

4. எதிர்பார்த்து நடந்த நிகழ்ச்சி/செய்தி
பதில்: மேலே முதல் கேள்விக்கு பதில் தந்ததேதான் இங்கும். பிளாட்டினம் உறுப்பாண்மை பெற வேண்டும், அதுவும் சென்ற ஆண்டு (2007) பெற்றது போலவே என நினைத்தேன். அது நடந்தது, அதுவும் அடுத்த மூன்றாண்டுகளுக்கு.

5. எதிர்பாராமல் நடந்த நிகழ்ச்சி/செய்தி
பதில்: இந்தக் கேள்வி பதில் பதிவுகள் விளையாட்டாக ஆரம்பித்தது இப்படி பிரபலம் அடையும் என நினைக்கவேயில்லை.

6. எதிர்பார்த்து நடக்காத நிகழ்ச்சி/செய்தி
பதில்: அப்படி என்று சொல்லிக் கொள்ள விசேஷமாக இல்லை. பஸ் சீக்கிரம் வரும் என நினைத்தேன், ஆனால் ரொம்பவும் நேரம் ஆயிற்று என்ற ரேஞ்சில் கூறுவது எல்லாம் இதில் வராதுதானே?

7. நீங்கள் எழுதிய பதிவில் மிகவும் பிடித்தது (முதல் பரிசு)
பதில்: போலி டோண்டுவுடனான யுத்தம் ஒரு முடிவுக்கு வந்தது பற்றிய இப்பதிவு. It wins hands down!

8. நிறைய பின்னுட்டங்களையும் பார்வைகளையும் பெற்ற பதிவு
பதில்: இந்த ஆண்டின் கடைசி டோண்டு பதில்கள் பதிவு (137 பின்னூட்டங்கள்) மிக அதிக பின்னூட்டங்கள் பெற்றது. ஆனால் பார்வைகள் என்று கேட்டால், பதில் கூற இயலாது. ஏனெனில் எனது பார்வைகள் கவுண்டர் மொத்தமாகத்தான் எண்ணும். ஒரு குறிப்பிட்ட பதிவுக்கான எண்ணிக்கை என்று அதில் பார்க்க இயலாது. ஆனால் ஒன்று கூறலாம். பொதுவாக கேள்வி பதில்கள் பதிவுகள் வரும்போது ஹிட்டுகள் கூடும். சராசரியாக இருக்கும் 600-க்கும் மேல் 1000-1100 வரை கூட சில சமயங்களில் ஒரே நாளில் ஹிட்டுகள் வந்துள்ளன. சர்ச்சைக்குரிய விஷயங்கள் எழுதினால் அவ்வாறு நடக்கும்.

9. யாரும் கண்டு கொள்ளாத பதிவு (0 பின்னூட்டம்)
பதில்: அப்படி ஒரு பதிவும் இல்லை. மினிமம் 3 பின்னூட்டங்கள். ஆனால் 12.09.2008-க்கான கேள்விகள் ஒன்றுமே வராததால் அந்த தேதிக்கான பதில்கள் பதிவு வரவில்லை.

10. பிறர் எழுதிய பதிவில் உங்களை மிகவும் ஆச்சரியப்படுத்திய பதிவு/பதிவர்
பதில்: ஜெயமோகன். அவரைப் பற்றி நான் இட்ட பதிவுகளில் ஒன்று இதோ.

நக்கீரன் பாண்டியன்:
டோண்டு பதில்களில்:
1. மொத்தம் கேட்கப்பட்ட கேள்விகள்?

பதில்: அது இருக்கும் ஆயிரத்துக்கும் மேல். ஒவ்வொரு பதிவாக போய் பார்க்க வேண்டும். அதிலும் எண்ணிக்கை வரிசையில் இருக்காது. ஒருவரது கேள்விகள் 10 என வைத்து கொள்வோம். அடுத்தவர் கேள்விகள் ஆரம்பிக்கும்போது மறுபடியும் என்ணிக்கை ஒன்றிலிருந்து ஆரம்பிக்கும். ஆகவே இப்போது போய் எண்ணுவது அலுப்படையச் செய்யும் வேலை.

2. அதிகம் கேள்வி கேட்ட பதிவாளர்?
பதில்: மதிப்புக்குரிய ராஜ கம்பீர, ராஜ மார்த்தாண்ட, ராஜ குலோத்துங்க அனானி அவர்கள்.

3. பதிலளிக்காமல் விட்ட கேள்விகள் எத்தனை?
பதில்: சாதாரணமாக ஆட்சேபகரமான கேள்விகளை மட்டுறுத்தும்போதே விலக்கி விடுவேன். அதையும் மீறி வந்ததில் எனக்கு தெரிந்து ஐந்துக்கும் குறைவான கேள்விகளுக்கு பதிலளிக்க விருப்பமில்லை என்னும் பதிலை கூறியுள்ளேன்.

4. என்ன காரணம்?
பதில்: ஏனெனில் அவை சிலரது தனிப்பட்ட வாழ்க்கை சம்பந்தமாக கேட்கப்பட்டவை. அம்மாதிரி கேள்விகளுக்கு சோ அவர்களோ, டோண்டு ராகவனோ பதிலளிக்க மாட்டார்கள் என முரளி மனோஹர் பிரகடனம் செய்கிறான்.

5. அனைத்து பதிவிலும் கேள்வி கேட்டவர் யாராவது உண்டா?
பதில்: மதிப்புக்குரிய ராஜ கம்பீர, ராஜ மார்த்தாண்ட, ராஜ குலோத்துங்க அனானி அவர்கள்.
6. கேள்வி கேட்டவர், பதிலை பார்த்து பின்னூட்டம் விடவில்லை என்பது வாடிக்கையா?
பதில்: வாடிக்கை இல்லை. இரண்டு முறைகள் மிக வெளிப்படையாக நடந்துள்ளது. முதலாதவதாக சம்பந்தப்பட்ட இஸ்மாயில் என்பவர் கேட்டு கொண்டதற்கிணங்க அவருடைய 18 கேள்விகளுக்கு தனிப்பதிவில் பதிலளித்தேன். ஆனால் அவர் அதை கண்டுகொள்ளவேயில்லை. அவருக்கு என்ன நிர்ப்பந்தமோ தெரியவில்லை. அதே போல ஜோதிபாரதி என்பவரும் தனது பதிவில் தான் கேட்ட கேள்விகளை ஒருவர் சுட்டு எனக்கு அனுப்பியதாகவும், ஆகவே நான் அவர் பதிவில்தான் பதில் தர வேண்டும் என கேட்டு கொண்டார். அவரிடம் நான் என்னிட கேள்விகள் எங்கிருந்து வந்தாலும் அவற்றுக்கு பதிலளிக்க முயற்சிப்பேன் என்றும், அவரது பதிவிலும் பதில்களை நகல் செய்து ஒட்டுகிறேன் என்று கூறி அவ்வாறே செய்தேன். ஆனால் அவரிடமிருந்தும் எதிர்வினைகள் ஏதும் இல்லை.

7. உசுப்பேத்தும் கேள்விகளை தவிர்க்காமல் விட்டு விட்டோமே என நினைத்து உண்டா?
பதில்: இல்லை

8. கேள்விபதில் இது மாதிரி தொடர்ந்து வேறு யாராவது பதிவு போடுகிறார்களா?
பதில்: எனக்கு தெரியாது.

9. அவரிடம் நீங்கள் கேள்வி கேட்ட அனுபவம் இருக்கிறதா?
பதில்: இக்கேள்வியே எழவில்லை.

10. இது எத்தனையாவது கேள்வி பதில்? (பதிவு-ஆரம்பத்திலிருந்து கணக்கிடவும்).
பதில்: 47-வது.


அனானி (இவரது முதல் 25 கேள்விகள் போன வாரம் பதிலளிக்கப்பட்டன. அவரேதான் இங்கும் கேள்வி கேட்கிறார் என்பதை உணர்த்தவே கேள்வி எண்களை மாற்றாது வைக்கிறேன்):
26.சின்னத்திரையும், சினிமாவும் இன்றைய கலாச்சார சீரழிவின் அடையாளங்களா?
பதில்: அப்படித்தான் நானும் நினைக்கிறேன். ஒன்றை பார்த்து இன்னொன்று நடக்கிறது. இது ஒரு விஷச்சுற்று

27.இந்திய அரசியல் 2009 ல் எந்த திசையில் செல்லும்?
பதில்: இந்திய அரசியல் நிஷாப்புயல் போல. எப்போது எங்கு செல்லும் என்பது தெரியாது. ஆகவே இக்கேள்விக்கு சரியான விடை 2010-ன் முதல் டோண்டு பதில்கள் பதிவில் பதிலளிப்பேன்.

28.கலைஞரின் சாதுரியம் ஜெயலலிதாவின் சாதுரியம்-ஒப்பிடுக?
பதில்: இருவருமே ஒரு மாதிரிதான். அவர்களது சாதுர்யமானவை என்று அழைக்கப்படும் செயல்கள் பல எரிச்சலையே விளைவிக்கின்றன.

29. சென்னை நகரப் பேருந்துகளில் இன்றைய முன்னேற்றம் எப்படி?
பதில்: தாழ்தள பேருந்துகள் அதிகரித்து சாமானிய வண்டிகள் குறைந்து சாமானியர்கள் அவதிப்படுவதே அதிகம்.

30.தமிழக காங்கிரசார் அதிமுக பக்கம் சாய்கிறார்களா?
பதில்: தமிழக காங்கிரசாருக்கு என்ன செல்வாக்கு கட்சியில்? சோனியா சொல்படித்தானே அங்கு எல்லாமே நடக்கிறது?

31.இந்தியாவில் பெட்ரோல் விலை குறையமா? குறையாதா?
பதில்: என் நண்பனுக்கு ஃபோன் செய்து கேட்டதில் சில நாட்களுக்கு முன்னால் பெட்ரோல் விலை 5 ரூபாய் லிட்டருக்கு குறைந்ததாக கூறினான். இனிமேலும் குறையும், லோக்சபா தேர்தலுக்கு சில நாட்கள் முன்னால்.

32.தமிழ்கப் பெண்கள் அதிகமாய் நகை வாங்குவது சரியா?
பதில்: தமிழக பெண்கள் என்று என்ன, இந்தியப் பெண்களுக்கே நகை மோகம் உண்டு. அவை ஆத்திர அவசரத்துக்கு உதவுவதும் இம்மாதிரி அவற்றை அதிகம் வாங்கும் காரணங்களில் ஒன்றே. அது தவறு என எவ்வாறு கூறுவது?
33. தமிழகத்தில் கோஆப்டெக்ஸின் நிலை எப்படியுள்ளது?
பதில்: நன்றாகத்தான் உள்ளது என என் வீட்டம்மா தெரிவிக்கிறார். இந்த அழகில் அவருக்கு தான் புடவைகள் வாங்கி பல நாட்கள் ஆகிவிட்டன என்பது சட்டென்று நினைவுக்கு வர, அடுத்த சில நாட்களில் ஒரு விஜயம் கடைகளுக்கு உண்டு என்பதையும் எனக்கு தெரிவித்தார். தேவையா எனக்கு இந்த கேள்வி?

34. கனிமொழி- தமிழச்சி- யார் முந்துகிறார்கள்?
பதில்: யார் முந்தினால் என்ன, சாதாரண மக்களுக்கு இதில் என்ன பயன்?

35. வரும் புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் கலந்து ஜமாய்ப்பீர்களா?
பதில்: எப்போதுமே இம்மாதிரி கொண்டாட்டங்களுக்கு சென்றதில்லை, செல்லப் போவதும் இல்லை. கால விரயம்.

36. கனிமொழி மத்திய அமைச்சராக வாய்ப்பு இனி உண்டா?
பதில்: அடுத்த தேர்தலே வந்து விடப்போகிறது. இப்போது போய் மந்திரியானால் தேவலையா ஆகாவிட்டால் தேவலையா?

37. சென்னையில் வசதி படைத்தோர் பண்ணை வீடுகள் வாங்கிப் போட்டார்களே,அவை இப்போது?
பதில்: அவையெல்லாம் அதே இடங்களில்தான் உள்ளன, ஆனால் மதிப்பிழந்து.

38. பணத்தை அமுக்குவதில் அதிகாரிகள் டாப்பா, அரசியல்வாதி டாப்பா?
பதில்: முயல் (அமைச்சர்கள்) ஆமை (அதிகாரிகள்) கதைதான், ஆனால் இங்கு எப்போதுமே முயல்தான் ஜெயிக்கும்.

39. சென்னை கடற்கரை ஜோடிகள் இரவிலும், உலாவும் இடமாகிறதே?
பதில்: பகலில் உலாவவில்லை என எப்படி கூறுகிறீர்கள்?

40. 90 நாள் முன்பதிவு முறை இரயில்வேயில் உள்ளதை பயன்படுத்தி சிலர் கொள்ளை அடிக்கிறார்களே?
பதில்: கொள்ளையடிப்பவர்கள் எம்மாதிரி ஏற்பாடு கொண்டு வந்தாலும் கொள்ளை அடிப்பார்கள். அளிப்பு அதிகமானால் தானே இம்மாதிரி விஷயங்கள் குறையும். இப்போதெல்லாம் யாராவது லேண்ட்லைன் தொலைபேசிகளுக்காக அதிகம் துட்டு தருகிறார்களா?

41. பறவைக் காய்ச்சல் நாமக்கல் கோழிப் பண்ணைகளை பாடாய்படுத்துகிறதே?
பதில்: கோழிப்பண்ணைகளை நடத்துவது என்பது இம்மாதிரியான அபாயம் நிறைந்த தொழில்தானே. அதற்கு நாமக்கல் என்ன, சேலம் என்ன?

42. சின்னத் திரையில் பெண்கள் அழாத சீரியல்கள் வருமா?
பதில்: கடலில் அலைகள் ஓயுமா?

43. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களின் நாத்திகர்களின் முடக்குவாதம் இப்போது அதிகமாய் காணவில்லையே?
பதில்: நிரந்தர நாத்திகனோ நிரந்தர ஆத்திகனோ எங்கும் கிடையாது

44. அரசியல் கட்சிகளின் பொதுக்குழு, செயற்குழு பற்றி சொல்லுக?
பதில்: அனேகமாக எல்லா கட்சிகளிலும் தலைவரின் அல்லக்கைகள் அதிகமாக இருக்கும் இடமே செயற்குழு. ஆனால் அதற்குத்தான் அதிகாரம் அதிகம். பொதுக்குழுவில் அல்லக்கைகளை விட இளிச்சவாயர்கள் அதிகம்.

45. மயிலை எஸ்விசேகர் இனி என்ன செய்வார் அரசியலில்?
பதில்: அவருக்கென்ன ராஜா. மாயாவதி கட்சியில் சேரப்போவதாக சொல்லிக்கொள்கிறார்கள். இல்லாவிட்டால் இருக்கவே இருக்கின்றன அவரது நாடகங்கள்.

46.பிஹார் லாலுவின் ரயில்வே அமைச்சு செயல்பாடு எப்படி?
பதில்: யாருமே எதிர்ப்பர்த்திருக்க முடியாத அளவுக்கு அது லாபம் ஈட்டும் துறையாக மாறியதற்கான கிரெடிட் லாலுவுக்குத்தான் செல்ல வேண்டும்.

47. கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் எல்லோருக்கும் எப்போதும் 7.5 நாட்டு சனி போலுள்ளதே?
பதில்: டிஷ் ஆண்டென்னாக்கள் விலை இன்னும் குறையும் என எதிர்ப்பார்க்கிறேன். அது நடந்து விட்டால் கேபிளாவது ஆப்பரேட்டராவது. எதற்கு பதிவர் கேபிள் சங்கரையும் இது பற்றி கேட்டு விடுவது நலம்.`

48. ரஜினி 1 கோடி கொடுத்து ஆரம்பித்து வைப்பதாய் சொன்ன நதி நீர் இணைப்பு?
பதில்: ஒரு கோடியை வைத்து என்ன செய்ய, நாக்கு வழிக்கவா?

49.தகவல் அறியும் உரிமைச் சட்டம் தமிழ் நாட்டில் பயன் பெறுகிறதா?
பதில்: டிராஃபிக் ராமசாமியைத்தான் கேட்க வேண்டும்.

50. மருத்துவர் ராமதாஸ் மதுவுக்கு எதிராக தீவிரமாக இறங்கியிருக்கிறாரே மருத்துவர் ஐயாவுக்கு இதில் அரசியல் ஆதாயம் இருக்குமா?
பதில்: நான் ஏற்கனவே பல முறை கூறியதுதான். பூரணமதுவிலக்கு எப்போதுமே சாத்தியமாக இருந்ததில்லை. இதில் மருத்துவருக்கு சில ஓட்டு வேட்டைகள் வெற்றியடையலாம்.

[இந்த அனானியின் 100 கேள்விகளில் இதுவரை 50-க்கு பதிலளித்தாகி விட்டது. மீதி 50 அடுத்த பதிவு(களில்)]

ஸ்ரீராம்:
கறுப்புச் சட்டை காவலர் கி.வீரமணி, எண்சோதிடப்படி தனது திருநாமத்தை, மீ.கி.வீரமணி என்று மாற்றியுள்ளதாய் தினமலர் சொல்லுகிறதே: 1. பகுத்தறிவு வாதங்களெல்லாம் பக்தியை நோக்கியா? 2. சோதிட நம்பிக்கையில் தொடங்கும் சீர்திருத்தம் கடவுள் நம்பிக்கையில் முடியுமா? வீரமணியாருக்கு வயதாவதுதான் காரணமா?
பதில்: இரு கேள்விகளுக்கும் பதில் ஒன்றுதான். மீ என்பது அவர் தாயின் பெயரையே குறிக்கிறது என்று அவர் கூறிய பிறகு இக்கேள்விகளுக்கு அவசியமே இல்லை.

3. காங்கிரஸ்-அதிமுக கூட்டணி என்ற வதந்தி என்றவுடன் கலைஞர் வீரமணி, திரு, மருத்துவர் மேல் சட்டம் பாயும் என்கிறாரே?
பதில்: கலைஞர் கவலை அவருக்குத்தானே தெரியும். மருத்துவரும் அதிமுகவுடன் சேர்ந்து கொண்டால் தேர்தலில் திமுக உதை வாங்குவது நிச்சயம்தானே.

எம். கண்ணன்
1. குமுதத்தின் சேர்மன் எஸ்.ஏ.பி புதல்வர் ஜவஹர் பழனியப்பன் கருணாநிதியை சந்தித்து ஒரே செண்டி டயலாக் எல்லாம் விட்டு வந்திருப்பதை சுதாங்கன் கிழி கிழி என கிழித்திருக்கிறாரே ? உமது எண்ணம் என்ன ? படிக்க: http://sudhanganin.blogspot.com/2008/12/blog-post_26.html
பதில்: பணம் பத்தும் செய்யும். வண்டி ஒரு நாள் ஓடம் ஏறும், ஓடமும் ஒரு நாள் வண்டியேறும்.

2. துக்ளக் சத்யா எப்படி இருப்பார் ? அவரது புகைப்படம் இதுவரை வெளியானதுண்டா? (அப்படி ஒருவர் இருக்கிறாரா இல்லை சோ புனைப்பெயரில் எழுதுகிறாரா ?)
பதில்: நிச்சயம் இருக்கிறார். துக்ளக் ஆண்டுவிழா கூட்டங்களில் அவரையும் சோ அவர்கள் அறிமுகப்படுத்தியுள்ளார் என்று எனது ஞாபகம்.

3. மொட்டை மாடிக் கூட்டம் கூட்டி, வெறும் காபி, பக்கோடா வைத்தே புத்தகம் வெளியிட்டு - பெரிய விழா/ஹால் செலவில்லாமல் கிழக்கு பதிப்பகம் சாமர்த்தியம் எப்படி?
பதில்: இதில் ஒரு சாமர்த்தியத்தையும் நான் பார்க்கவில்லை. அப்பதிப்பகத்தின் நேர மேலாண்மையையே அது பிரதிபலிக்கிறது. மேலும் அங்கு நடக்கும் புத்தக வெளியீட்டு கூட்டங்களில் ஏற்படும் ஆத்ம திருப்தியே அலாதிதான்.

4. சாரு நிவேதிதாவைச் சந்தித்தால் என்னென்ன கேள்விகள் கேட்க விருப்பம்?
பதில்: சந்தித்தேனே, கிழக்கு பதிப்பகம் மொட்டைமாடி கூட்டத்தில். கேள்விகளும் கேட்டேனே.

5. அரி-கிரி அசெம்பிளி பாஸ்கியும் சோவைப் போல முடி வளராதவரா? இல்லை வாராவாரம் மொட்டை அடித்துக் கொள்பவரா?
பதில்: தெரியவில்லையே. அவரைத்தான் கேட்க வேண்டும். அப்படி கேட்டு அவர் “மயிரே போச்சு” என்று பதில் கூறினால் என்ன செய்வது?

6. பெரும்பாலான தமிழ் டிவி சேனல்கள் இரவில் 9.30 அல்லது 10.00 மணிக்குப் பிறகு காமெடி நிகழ்ச்சிகளையே ஒளிபரப்புகின்றனவே? இது ஒரு விதத்தில் தூங்கப் போகுமுன் ஒரு லேசான உணர்வோடு செல்ல மனதை தயார் செய்கிறது என்றாலும் மீண்டும் மீண்டும் அதே காட்சிகளையே கட்டுகின்றனரே? ஏன் பழைய படங்களிலிருந்து (நாகேஷ், சந்திரபாபு, பாலையா, சிவாஜி..) காட்சிகள் காண்பிப்பதில்லை?
பதில்: அதானே, ஏன் செய்வதில்லை? சேனல்கள் கண்டிப்பாக இந்த விஷயத்தில் தங்களைத் திருத்திக் கொள்ள வேண்டும் என உங்களுடன் சேர்ந்து நானும் குரல் தருவேன்.

7. சன் டிவியில் வரும் 9.30 மணி ராதிகாவின் அரசி சீரியலில் - தமிழக அரசியல் சம்பவங்களை / நடப்புகளை கிண்டல் அல்லது விமர்சனம் செய்யும் வகையில் வசனங்கள் வருகிறதே ? இது சரத்குமாரின்/ராதிகாவின் சொந்த முடிவா இல்லை இதற்குப்பின் கலாநிதி மாறனின் உள்குத்து இருக்குமா?
பதில்: அரசி எல்லாம் ஒரு சீரியலா? ஒரே அறுவை. நான் பார்ப்பதில்லை. ஆகவே நீங்கள் சொல்வது பற்றி நான் ஒன்றும் கூறுவதற்கில்லை. ஆனால் சித்தியில் ஒரு சீன் இவ்வாறு வந்தது. கலைஞரை நல்ளிரவில் கைது செய்த சீனை காட்டினார்கள். ஆனால் அங்கு சித்திக்கு டப்பிங்காக சிவகுமார் (சித்தப்பா) ஐயோ ஐயோ என கத்தினார்.

8. சரத் ரெட்டியை (கலைஞர் டிவி) அடிக்கும் அளவிற்கு சகோதரர்களுக்கு அவ்வளவு துணிவு வந்துவிட்டதா என்ன?
பதில்: அப்புறம் சகோதரர்களையே மன்னிப்பு கேட்க வைத்தாராமே, லக்கிலுக் சொன்னார். மேலும் கேள்விப்பட்டது, சரத் கை எலும்பு முறிவு உண்மையில்லையாம். காலெலும்புதான் முறிந்ததாம்.

9. தமிழ் இணைய உலகத்தில் ஒரு காலத்தில் பிராமண எதிர்ப்புகளை போராடி வந்த நியுஜெர்சி அருண் வைத்தியநாதன், தற்போது சிநேகா, பிரசன்னாவை வைத்து 'அச்சமுண்டு அச்சமுண்டு' தமிழ்ப்படம் எடுத்து வருகிறார். அவரது பழைய பதிவுகளைப் படித்ததுண்டா ? கொஞ்சம் உங்கள் எண்ண சாயலில் இல்லை? உங்கள் கமென்ட்டும் அந்தப்பதிவில் உள்ளது.
http://arunhere.com/pathivu/?p=24
(என்ன தான் சொன்னாலும், தமிழ் மொழிக்காக ஆங்கிலப் பலகைகளில் தார் பூசுவதோ அல்லது இந்தி எழுத்துக்களில் சாணியடிப்பதையோ என்னால் ‘ஆஹா…சபாஷ்’ என்று கைதட்டி வரவேற்க முடியாது. அதே போல, பார்ப்பனீயம், பார்ப்பனர்கள் என்று தமிழகத்தில் எழுப்பப்படும் கோஷங்களை வலைப்பதிவுகளில் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி எழுதப்படும் போது, பல்லாயிரம் மைல்கள் கடந்து வந்து, பல தரப்பட்ட கலாச்சாரம் மற்றும் மக்களோடு பழகி வரும் என்னால் சிரிக்கத்தான் முடிகிறது. அதற்காக நான் பூணூல் அணியமாட்டேன் என்றோ அல்லது சடங்குகள் சம்பிரதாயங்களில் ஈடுபடமாட்டேன் என்றோ சொல்லவில்லை. யாரையும் எந்த விதத்திலும் ‘டிஸ்டர்ப்’ செய்யாத எந்த சடங்குகளிலும், சம்பிரதாயங்களிலும் எனக்கு வருத்தமோ கோபமோ கிடையாது. அது போன்ற விஷயங்களை நான் செய்து கொண்டு தானிருப்பேன். ஏனென்றால், அது எனது குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும், எனக்கும் திருப்தியைத் தரும் சமாச்சாரம்)

பதில்: நான் தமிழ் பதிவுகள் படிக்க ஆரம்பித்தபோது அவர் பதிவுகள் என்னால் மிகவும் விரும்பி படிக்கப்பட்டவை. என்ன பிறகு அவர் வேறு விஷயங்களில் பிசியாகி ஒதுங்கி கொண்டார். அது தமிழ்ப்பதிவுகளுக்கு இழப்புதான்.

10. வைரமுத்து எழுதிய திரைப்பாடல்களில் உங்களுக்குப் பிடித்த பாடல்கள் / வரிகள் என்ன ? ஏன்?
பதில்: கருத்தம்மாவில் வரும் “போறாளே பொன்னுத்தாயி, பொலபஒலவென்று கண்ணீர் விட்டு” என்ற சோகமான பாடலின் வரிகள்தான் என்னைக் கவர்ந்தன. காரணம் இப்பதிவில் வேறு உதாரணங்களுடன் தந்துள்ளேன். அப்பாடலையும் கேளுங்களேன்.


சுவனப்பிரியன்:
1. 'ஒரு உயிரிலிருந்துதான் மற்றொரு உயிரினம் உருவாக முடியும்' என்பது அறிவியலார் பொதுவாக ஒத்துக் கொண்ட உண்மை. ஆனால் பரிணாமவியலோ உலகம் முழுவதும் உயிரற்றப் பொருட்களான கற்பாறைகள் மண்,வாயு ஆகியன நிரம்பி இருந்த போது காற்று, மழை, மற்றும் மின்னல் ஆகியவற்றின் பல பொருட்களின் கூட்டு விளைவால் உயிர் உண்டானது என்கிறது. இரண்டு கருத்துக்களில் ஏதோ ஒன்றுதான் உண்மையாக இருக்க முடியும். இதற்கான உங்களின் விளக்கம் என்ன?
பதில்: அறிவியலின் ஒரு முக்கிய விஷயமே எந்த கண்டுபிடிப்பும் நிரந்தரமாகக் கோலோச்சுவதில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் அப்போதைய பிரசித்தி பெற்ற அறிவியலாளர் கூறியது என்னவென்றால், வான் பயணம் சாத்தியமே இல்லையென்று. அப்படி முடியும் என்றால் கடவுள் மனிதனுக்கு இறக்கைகள் தந்திருப்பான் என்பதேயாகும். இப்போது கூட க்ளோனிங் ஆராய்ச்சிகள் கடவுளாவதற்கு மனிதனின் முயற்சிகள் எனக்கூறி பலர் எதிர்க்கின்றனரே. மேலும் நீங்கள் சொன்ன “இரண்டு கருத்துக்களில் ஏதோ ஒன்றுதான் உண்மையாக இருக்க முடியும்” என்ற வாக்கியமும் முழு உண்மையல்ல. உதாரணத்துக்கு ஒளி என்பது அலையா பொருளா என்பதற்கு இரண்டுமே சரி என்ற பதில் வந்தது. இன்னும் ஆய்வுகள் நடப்பதால் இதற்கு மேல் நாம் என்ன சொன்னாலும் அபத்தமாக போகும் வாய்ப்பு உண்டு.

2. ஜீன்களை ஆராய்ந்த அறிவியலார் மனித இனம் அனைத்தும் ஒரு தாயின் வயிற்றிலிருந்து பிறந்து பிறகு பல்கிப் பெருகியதாக கண்டுபிடித்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பு பற்றி பரிணாமவியல் சொல்வது என்ன?
பதில்: அந்த முதல் தாய் எங்கிருந்து வந்தாள் என்பது பற்றித்தான் அது பேசுகிறது என நினைக்கிறேன்.

3. 'ஆற்றலை ஒரு போதும் உருவாக்கவும் முடியாது. அழிக்கவும் முடியாது. ஆயினும் மாற்றி அமைக்கவே முடியும்' - ஐன்ஸ்டீன். ஒரு பொருளைப் படைப்பதற்கு ஆற்றல் மிகவும் இன்றியமையாதது. மனிதனைப் படைத்தது இறைவன் தன்னகத்தே கொண்ட ஆற்றலினால் என்கின்றனர் ஆன்மீகவாதிகள். இல்லை... மனிதனாலும் படைக்க முடியும் என்கின்றனர் நாத்திகவாதிகளும் பரிணாமவியலாரும். இது உண்மையானால் அண்டசராசரங்கள் அடங்கிய இப்பேரண்டத்திலிருந்து எந்த ஒன்றையும் எவ்விதத்திலும் பயன்படுத்தாமல் சுத்த சூன்யத்திலிருந்து சுயமாக (இறைவன் படைப்புகளில் கை வைக்காது) சொந்த ஆற்றலைப் பயன்படுத்தி ஒரு சிறிய அணுவையேனும் படைத்துக் காட்ட முடியுமா?
பதில்: அதற்கு ஒன்றுமில்லாத நிலைக்கு அல்லவா போக வேண்டும்? நீங்கள் விரும்பினாலும் அதை செய்ய இயலாதே. அறிவியல் என்பது இன்னும் அபிவிருத்தியில்தான் உள்ளது. சில முன்னேற்றங்கள், பல பின்னடைவுகள் என்ற ரீதியில் போய்க்கொண்டிருக்கிறது. இப்போது ஒரு குகையின் உள்ளே செல்கிறோம். குகையின் அடுத்த வாயில் இன்னும் கண்ணுக்கு தெரியவில்லை என்பதே நிஜம்.

4. நமக்குள் இருக்கும் உயிர் எங்கிருந்து வருகிறது? உயிரின் உதயம் எவ்வாறு நிகழ்கிறது? மனிதனின் இறப்புக்குப் பின் எங்கு செல்கிறது?
பதில்: இக்கேள்வியை வைத்துத்தானே மனித உலகமே ஆரம்பத்திலிருந்து போராடி வருகிறது. வியாழக்கிழமைக்குள் அதற்கு விடையளிக்க இயலுமா?

5. மனிதனுக்குப் பிறகு பரிணாமம் அடைந்து நாம் என்னவாகப் போகிறோம்? அது எப்போது என்பதையும் தெரிவிக்க முடியுமா?
பதில்: தேவர்களாவோமோ, அசுரர்கள ஆவோமா காலம்தான் பதில் கூற வேண்டும். இங்குள்ள பல பதிவர்கள் அசுரர்களாவதே மேல் என்ற முடிவில் இருக்கிரார்கள் போலிருக்கிறதே.

6. எந்த ஒரு கோட்பாடும் நிரூபிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். டார்வினின் கோட்பாடுகளில் எத்தனை கோட்பாடுகள் அறிவியல் ரீதியாக நிரூபிக்கப் பட்டுள்ளன?
பதில்: நிரூபிக்கப்பட்ட பிறகு அது கோட்பாடு அல்ல, அறிவியல் விதியாகிறது. டார்வின் கோட்பாடுகளின் நிரூபணம் சம்பந்தமாக சண்டை மண்டை உடைகிறது. சாண் ஏறினால் முழம் சறுக்குகிறது.

7. மனிதன் தனது உடல் அமைப்பால் மனிதன் என்ற பெருமையைப் பெறவில்லை. பகுத்தறிவால்தான் பெறுகிறான். உடல் வளர்ச்சி, உடல் அமைப்பில் மாறுதல் என்பதற்குத்தான் டார்வின் காரண காரியங்களைக் கூறுகிறார். பகுத்தறிவு இல்லாத உயிரினம் பகுத்தறிவு உள்ளதாக மாறுவதற்குரிய சூழல் நிர்பந்தம் எது என்று பரிணாமவியல் கூறும் தத்துவம் என்ன?
பதில்: இதை குருட்டுத்தனமான தெரிவு (blind selection) என்று கூறுவார்கள். எல்லா உயிரினங்களுமே தத்தம் இருத்தலுக்காக போராடுகின்றன. திறன் அல்லாதவற்றை இயற்கை கருணையின்றி நீக்குகிறது. இதை ஒரு அல்பமான உதாரணமாக கூறலாம். பழைய திரைப்பாடல்கள் நமக்கு நன்றாக காதுகளுக்கு கேட்பதன் காரணமே காலப்போக்கில் நல்ல பாடல்களே நிலைத்து நின்றதால்தான். எண்ணற்ற அடாசு பாடல்கள் இப்போராட்டத்தில் அழிய நேர்ந்தது. அவ்வளவே. ஒரு பாடலாசிரியர் தனது எல்லா பாடல்களையுமே ஒரே அர்ப்பணிப்புடனேயே இயற்றியிருப்பார். அத்தருணத்தில் எது நிலைக்கும் என யாராலும் கூறியிருக்க இயலாது என்பதே நிஜம். அதுதான் உயிரினக்களின் survival of the fittest கோட்பாட்டிலும் வெளிப்படுகிறது.


அனானிT:
1. இந்தி எதிர்ப்பு போராட்டம் என்று முன்பு நடத்தப்பட்ட கூத்தில் இரண்டு போலீஸ்காரர்கள் தீக்கிறையாக்கப்பட்டார்களாமே? இன்றைக்கு பேருந்து எரிப்பு வழக்கை குறை சொல்லும் தி.மு.க. குண்டர்கள் அன்றைக்கு (சமீபத்தில்?) அறுபதுகளிலேயே போலீஸ்காரர்களையே பிடித்து பஞ்சாலைக்குள் தள்ளி உயிருடன் கொளுத்திய கதை தமிழகத்தில் மறைக்கப்பட்டது ஏன்? அது குறித்து மேல் விபரங்கள் எதுவும் தெரியுமா?
பதில்: இது என்ன குழந்தைத்தனமான கேள்வி. தனக்கு என்றால் ஒரு நியாயம், பிறர்க்கு என்றால் வேறு ஒரு நியாயம் என்று இருப்பது மனித இயல்புதானே.

2. இராமாயணம் என்பது ஆரியர் - திராவிடர் போராட்டம் என்று பிரபல வரலாற்று ஆசிரியர் எல்லாம் அறுதியிட்டுக் கூறியிருக்கின்றனர். பா.ஜ.க., இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். வகையறாக்கள் தூக்கிப் பிடிக்கும் விவேகானந்தர்கூட இதே கருத்தைத் தான் கூறியிருக்கிறார்! உங்கள் பதில்?
பதில்: எல்லா காவியங்களுக்குமே அடிப்படையான நிகழ்ச்சி என ஒன்று இருந்திருக்க வேண்டும். அதைத்தான் இங்கும் குறிப்பிட்டுள்ளனர். ஆரியர் - திராவிடர் என்கிறீர்கள். அவர்கள் இப்போது ஆரியர் - திராவிடராக இருப்பவர்களா அல்லது வேறு யாரோவா? ராமரை பார்ப்பனன், ராவணன் திராவிடன் என்பவர்கள், ராமர் சத்திரியர், ராவணனே பார்ப்பனன் என்றதும் சங்கடமான மௌனம் காக்கின்றனர். பெரியார் பற்றி ஒரு கதை சொல்வார்கள். அதாவது அவர் தனது பெயரை ராமசாமியிலிருந்து ராவணசாமியாக மாற்ற எண்ணினாராம். பிறகு ராவணன் பார்ப்பனன் என்று கேள்விப்பட்டதும் அத்தீர்மானத்தை சட்டென நழுவ விட்டாராம்.


நக்கீரன் பாண்டியன்:
உலகத்தில் பொதுவாக ஒரு குடும்பத்தில் ஒரு தாய் தந்தையருக்கு பிள்ளைகளாய்ப் பிறக்கும் சகோதரர்களுக்கு ஒரே உணவுப் பழக்கம், ஒரே சுற்றுப் புறச் சூழ்நிலை, ஒரே கல்வி முறை அளிக்கபட்டு வளர்க்கப்படுக்கின்றனர். வளர்ந்து ஆளாய் பின்னர் ஓரே தாய் வயிற்றில் பிறந்தை முழுவதுமாய் மறந்து ரத்த சம்பத்தையும் நினையாமல் பங்காளிகளாய் மாறி சிறு சிறு வாய்ச் சண்டையில் ஆரம்பித்து கோர்ட் கேசுன்னு உருமாறி சில சமயங்களில் கொலை பாதகங்களில் இறங்கி உயிர்ப் பலி நிகழ்வுகள் கூட நடை பெறுகிறதே. இந்த சண்டைகள் சச்சரவுகள் மோதல்கள் தாக்குதல்கள் இருப்பவன் இல்லாதவன் நடுத்திர வர்க்கம் எங்கும் வியாபித்து உள்ளதற்கு என்ன காரணம்? அ) ஜாதகக் குறைபாடா? ஆ)போன ஜென்ம பலனா?
இ)விதிப் பயனா? ஈ)இயற்கையின் சித்து விளயாட்டா? உ)23 குரோமோசங்களின் குழறுபடியா?
ஊ)ஆண்டவனின் தண்டனையா? எ)நவக் கிரகங்களின் பாதிப்பா? ஏ)குரங்கிலிருந்து வந்ததாலா? ஐ)------------------?

பதில்: இதற்கான பதிலை அவரவர் மனபாவத்திற்கேற்ப மேலே சொன்ன தெரிவுகளிலிருந்து எடுத்து கொள்ளலாம். ஆனால் அவை உள்ளன. அதுதான் உடனே தெரியும் உண்மை. சொந்த தாய்மாமனையே மணம் புரிந்து கொண்ட பெண்ணுக்கும் மாமியார் கொடுமை உண்டு என்றால் அந்த இடத்தில் அப்பெண்ணின் பாட்டி என்பதைவிட மாமியார் என்பவளே ஏற்றம் பெறுகிறாள் என்றுதானே அர்த்தம்? முன்பின் தெரியாதவனுடன் ஏற்படும் விரோதத்தை விட பல மடங்கு கூடப் பிறந்தவர்களுடன் விரோதம் ஏற்படுகிறதே எப்படி? சரி, நேரம் கிடைக்கும்போது இது பற்றி பதிவே போட்டால் போச்சு.


மெட்ராஸ்காரன்:
1. சோதிடம் பற்றி உங்கள் நிலைப்பாடு என்ன? சரியாக/தவறாக கணிக்கப்பட்ட எதிர்க்காலம் உங்கள் அனுபவத்தில் உண்டா?
பதில்: சோதிடம் பற்றி பதிவு போட்டுள்ளேனே.

2. நாடி சோதிடம் பற்றி உங்கள் கருத்து என்ன? அது பற்றி ஏதேனும் தகவல்கள் உங்களிடம் உண்டா? (Itஇது பற்றி பதிவு போட முடிந்தால் ரொம்பவும் உத்தமம். அப்படி செய்தால் நான் தன்யனாவேன்)
பதில்: கருத்து ஏதுமில்லை, எனது இப்பதிவில் அதை குறிப்பிட்டதைத் தவிர. மற்றப்படி இது பற்றி தனிப்பதிவு ஒன்று பதிவர் சுப்பையா ஏற்கனவே போட்டு விட்டார்.

3. Bomb blast in Bangalore , Ahmedabad, Mumbai attack all happening in very short intervals (periods).It is quite obvious that we are missing a major link in combating terrorism. Do you think our goverment has learnt any lesson? Any specific measures being carried out in Gujarat to your knowledge?
பதில்: தம் மேல் ராக்கெட் தாக்குதல் நடத்திய ஹமாசுக்கு பதிலடி தரும் இஸ்ரவேலர்களை குறை கூறுவதிலிருந்தே தெரியவில்லையா இந்திய அரசு பாடம் எதுவும் கற்கவில்லை என்று? குஜராத்தில் என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள் என்று கேட்பதைவிட மத்திய அரசு மோடியின் கைகளை எப்படியெல்லாம் கட்டிப் போடுகிறது என்பதைப் பாருங்கள்.

4. சோ அவர்கள் "வாஷிங்டனில் நல்லத்தம்பி" படித்திருக்கிறீர்களா? இவ்வளவு ஆண்டுகள் கழித்தும் அது இன்னமும் இக்காலத்துக்கும் பொருத்தமாக இருப்பதை கவனித்தீர்களா?
பதில்: ஆகா, அது சமீபத்தில் 1972-ல் துக்ளக்கில் தொடராக வந்தபோதே படித்துள்ளேன். ரிச்சர்ட் பர்ட்டன் நல்லத்தம்பி எடுக்கும் படத்தில் நடித்து கென்னடி இறந்ததற்காக புலம்பும் காட்சியின் படப்பிடிப்பில் அமெரிக்கர்கள் கேலி செய்ய என்றெல்லாம் கதை போகிறது. அதிலும் பிசாசு முக்கண்ணன் (பூதலிங்கம்) தூள்.


கிரிதரன். வெ.:
1) வர்ணாஸ்ரமத்தின் நோக்கம் என்ன? மக்களை அவரவர் செய்யும் தொழிலுக்கேற்ப பிரிக்கும் செயல் என நினைக்கிறேன்.
பதில்: மேலோட்டமாக சரிதான். அப்படித்தான் ஆரம்பித்தது. பிறகு காலப்போக்கில் இம்மாதிரி ஆகிவிட்டது. சமூகவியல் படித்த எல்லோருமே ஒன்றை உணர்ந்திருப்பார்கள். எந்த ஒரு மக்கள் கூட்டத்தை எடுத்து கொண்டாலும் அதில் உள்ளவர்கள் வேவ்வேறு திறமைகளுடன் இருப்பதை பார்த்திருப்பார்கள். ஆக ஒரு சமூகம் நன்றாக நடக்க அவரவருக்கு நன்கு வரும் வேலையை செய்தால் முன்னேற்றம் நிச்சயம். Aldous Huxley எழுதிய The Brave New World படித்தால் நான் கூற வருவது புரியும். அதில் ஐந்து ஜாதிகள் வருகின்றன. ஆல்ஃபா, பீட்டா, காம்மா, டெல்டா, இப்ஸிலான் என்று அவற்றுக்கு பெயர். ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொரு வேலை. அந்த ஐந்து ஜாதிகளை சேர்ந்த ஒவ்வொருவருமே தத்தம் ஜாதியின் நிலையில் திருப்தியாகவே இருப்பார்கள். ஆனால் இந்த திருப்தி காலக்கட்டத்தில் குறையும் என்பது சரித்திரம் நமக்கு புகட்டும் பாடம்.

2) அந்தந்த ஜாதியினர் குறிப்பிட்ட வேலைதான் செய்ய வேண்டும் என ஏன் ஏற்பட்டது?
பதில்: இம்மாதிரியான வரைமுறை ஒட்டுமொத்த நலனுக்காக முதலில் உருவாகியது. பிறகு பிறழ்ந்தது மனித இயற்கையால் வந்தது. ஒரு ராக்கெட் செலுத்தும் இடத்துக்கு போய் பார்த்திருக்கிறீர்களா? அங்கு பலர் பாரமான பளுக்களை தள்ளும் வேலையில் இருப்பார்கள். சிலர் கண்ட்ரோல் பேனல் முன்னால் ஏ.சி. அறையில் அமர்ந்திருப்பார்கள். பளு தூக்குபவரை கொண்டு போய் கண்ட்ரோல் பேனல் இருக்கும் ஏ.சி.அறையில் வைத்தாலோ, கண்ட்ரோல் பேனலருகில் இருப்பவரை பளு தூக்க வைத்தாலோ கெட்டது குடி. அதைத்தான் மாவோவின் கீழ் கலாச்சார புரட்சியில் மற்றும் கம்போடியாவில் Pol Pot ஆட்சியில் செய்து பார்த்ததில் நாடே சர்வ நாசம் அடைந்தது.

3) இசுலாமியர்களில் யார் வேண்டுமானாலும் குரானை கையாளலாம். ஆனால் நமது மதத்திலோ சிலரைத் தவிர பார்ப்பனருக்கு கூட வேதம் எளிதில் கிட்டாத தூரத்திலேயே உள்ளது. எனது சகோதரனின் நண்பன் வைதிகத்தை பாடமாக படிக்கிறான். அதற்காக வடமொழி கற்கிறான். மாணவர்களுக்கு எல்லா 4 வெறுமனே அவற்றை மனப்பாடமாக மட்டும்தான் கற்று தருகிறார்கள் என்றான். வேதங்களும் கற்பிப்பதில்லை என்று அறிந்தேன். மந்திரங்களின் பொருளையும் கற்று தருவதில்லையாம். இப்படி இருந்தால் ஒரு சாதாரண மனிதன் எப்போதுதான் வேதங்களின் பெருமைகளை அறிவது?
பதில்: இசுலாமியர்கள் பற்றி தெரியாது.
வேதங்கள் கடல் மாதிரி. அவற்றைக் கற்க ஒரு ஆயுள் போதாது. உங்கள் நண்பர் சேர்ந்த கோர்ஸ் சிலபசில் அவ்வளவுதான் வைத்திருப்பார்கள். அதையாவது அவர் ஒழுங்காக கற்று கொண்டு வரட்டுமே.

4) சோஷலிசம்?
பதில்: பல நூற்றாண்டுகளாக டெவலப் ஆகிக்கொண்டிருக்கும் இக்கோட்பாடு பற்றிய இக்கேள்விக்கு வரும் வியாழனுக்குள் பதிலை எதிர்பார்ப்பது ஓவரோ ஓவர்.

5) எவ்வளவு "ism"கள் உள்ளன?
பதில்: அவை எண்ணற்றவை. ஒவ்வொரு கருத்தின் ஆங்கில வார்த்தைக்கும் ism சேர்ந்தால் அது ஒரு இஸம், போதுமா? உதாரணம்: Brahmin --> Brahminism, Dondu --> Donduism and so on.

மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்
பின் குறிப்பு: இவ்வாண்டு வியாழனில் ஆரம்பித்து திசம்பர் 31-ஆம் தேதி மறுபடியும் வியாழனில் முடிகிறது. இம்மாதிரி டோண்டு பதில்கள் பதிவோடு ஆண்டு ஆரம்பித்து அதே பதிவோடு முடியப்போவது வரும் 2015, 2026, 2037, 2043, 2054 and so on ஆண்டுகளில்தான் என்பதை நான் கூற என்னுடன் மெதுவாக ஒட்டிக் கொண்ட இந்தத் திறமையே உதவியுள்ளது!!).

73 comments:

  1. ஐயா அவர்களுக்கு,


    நன்றி.


    அன்புடன்,
    நக்கீரன் பாண்டியன்.

    ReplyDelete
  2. What a pleasant surprise!

    thank
    you
    sir
    thank
    you
    very
    much

    ramakrishnahari.

    ReplyDelete
  3. /1. மகிழ்ச்சிப்படுத்திய செய்தி/நிகழ்ச்சி
    பதில்: எனது தாய்மொழி தரும் உற்சாகம் - 3 பதிவில் அதை குறிப்பிட்டுள்ளேன்/


    உங்களின் விடா முயற்சி,தெளிவான சிந்தனை,அச்சமில்லாத் தன்மை,பிறரை புரியவக்கும் திறமை 2009 ல் மேலும் வளர்ந்து , மெருகு கூடி தமிழ்மணத்திற்கு அழகு சேர்க்கட்டும்.

    ReplyDelete
  4. /2. கவலைப்படுத்திய செய்தி/நிகழ்ச்சி
    பதில்: குழந்தைத் தொழிலாளர் பிரச்சினை பற்றி நான் இட்ட இப்பதிவில் அதை நீங்கள் பார்க்கலாம்/


    படிக்க வேண்டிய வயதில் குடும்ப பாரம் தூக்கி குழந்தை தொழிலாளராய் துன்பத்தில் உழலும் 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களின் கண்ணிர்க் கதைகள் கல் நெஞ்சையும் கரைக்கும்.

    நெருப்பை அணைக்க தண்ணிர் யார் தருவார்?

    இந்த சமுதாய அவலம் 2009 லாவது மறுமா?

    ReplyDelete
  5. /3. போடா ஜாட்டான் என்று நினைத்த செய்தி/நிகழ்ச்சி
    பதில்: எதிர்பாராது வந்த தாக்குதலின் எதிர்வினையாக நான் போட்ட பதிவை விட வேறு என்ன நல்ல உதாரணம் நீங்கள் கேட்டதற்கு இருக்க இயலும்?//


    இந்த தனிமனிதத் தாக்குதல்
    இல்லாத புதிய பதிவுலகம் 2009 ல் தொடங்குமா?

    ReplyDelete
  6. /4. எதிர்பார்த்து நடந்த நிகழ்ச்சி/செய்தி
    பதில்: மேலே முதல் கேள்விக்கு பதில் தந்ததேதான் இங்கும். பிளாட்டினம் உறுப்பாண்மை பெற வேண்டும், அதுவும் சென்ற ஆண்டு (2007) பெற்றது போலவே என நினைத்தேன். அது நடந்தது, அதுவும் அடுத்த மூன்றாண்டுகளுக்கு//


    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete
  8. /5. எதிர்பாராமல் நடந்த நிகழ்ச்சி/செய்தி
    பதில்: இந்தக் கேள்வி பதில் பதிவுகள் விளையாட்டாக ஆரம்பித்தது இப்படி பிரபலம் அடையும் என நினைக்கவேயில்லை./



    டோண்டு பதில்கள் - 14.03.2008 அன்று

    தொடங்கப் பட்ட முதல் பதிவுக்கும், 46 பதிவுகளை சிறப்பாக கடந்த இன்றய வெற்றிகரமான 47வது பதிவுக்கும்

    இந்த ஐடியாவை கொடுத்த பெயர் குறிப்பிட விரும்பாத நண்பருக்கும்

    அனைவரது நன்றி.


    அவருக்கு எக்ஸ் என்று பெயர் வைத்து அவர் இட்ட கேள்விகளுடனேயே ஆரம்பித்தீர்கள்.

    அதுதான் ஒரு அழகான,வீரம் ததும்பும் பெயரை அவரது வழி வருபவர்களுக்கு சூட்டியுள்ளீர்களே.

    /மதிப்புக்குரிய ராஜ கம்பீர, ராஜ மார்த்தாண்ட, ராஜ குலோத்துங்க அனானி அவர்கள்/

    உள்குத்து மாதிரி தெரிகிறது.

    அனானிகள் கோபித்துக் கொள்ள வேண்டாம்.


    சும்மா லூலாயி மாதிரி

    ReplyDelete
  9. /6. எதிர்பார்த்து நடக்காத நிகழ்ச்சி/செய்தி
    பதில்: அப்படி என்று சொல்லிக் கொள்ள விசேஷமாக இல்லை. பஸ் சீக்கிரம் வரும் என நினைத்தேன், ஆனால் ரொம்பவும் நேரம் ஆயிற்று என்ற ரேஞ்சில் கூறுவது எல்லாம் இதில் வராதுதானே/


    Prepare for the Worst; Hope for the Best

    என்று சொல்வார்களே!


    கடந்த கால துன்பங்களை எண்ணி வருந்தாமல்
    எதிர் கால பயங்களில் முழுவதும் மூழ்காமல்
    நிகழ்கால நிதர்சனங்களை ரசித்து அனுபவிப்போம்.

    ReplyDelete
  10. /7. நீங்கள் எழுதிய பதிவில் மிகவும் பிடித்தது (முதல் பரிசு)
    பதில்: போலி டோண்டுவுடனான யுத்தம் ஒரு முடிவுக்கு வந்தது பற்றிய இப்பதிவு. It wins hands down!/


    தர்மத்தின் வாழ்வுதன்னை சூது கவ்வும்
    தர்மம் மீண்டும் வெல்லும்

    மீண்டும் கலியுகத்தில் மெய்ப்பிக்கப் பட்டுள்ளது

    பாராட்டுக்கள்.

    ReplyDelete
  11. /8. நிறைய பின்னுட்டங்களையும் பார்வைகளையும் பெற்ற பதிவு
    பதில்: இந்த ஆண்டின் கடைசி டோண்டு பதில்கள் பதிவு (137 பின்னூட்டங்கள்) மிக அதிக பின்னூட்டங்கள் பெற்றது. ஆனால் பார்வைகள் என்று கேட்டால், பதில் கூற இயலாது. ஏனெனில் எனது பார்வைகள் கவுண்டர் மொத்தமாகத்தான் எண்ணும். ஒரு குறிப்பிட்ட பதிவுக்கான எண்ணிக்கை என்று அதில் பார்க்க இயலாது. ஆனால் ஒன்று கூறலாம். பொதுவாக கேள்வி பதில்கள் பதிவுகள் வரும்போது ஹிட்டுகள் கூடும். சராசரியாக இருக்கும் 600-க்கும் மேல் 1000-1100 வரை கூட சில சமயங்களில் ஒரே நாளில் ஹிட்டுகள் வந்துள்ளன. சர்ச்சைக்குரிய விஷயங்கள் எழுதினால் அவ்வாறு நடக்கும்.//


    46 வது பதிவு போல் இனி வரும் வியாழக்கிழமை பதிவுகளும் தமிழ்மண சூடு இடுகை தேர்வாலும்,வாசகர் பரிந்துரையாலும், மென் மேலும் அதிகப் பார்வையாளர்களால் வாசிக்கப் படுவதற்கு , தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர் துணையிருப்பார்.

    ReplyDelete
  12. /9. யாரும் கண்டு கொள்ளாத பதிவு (0 பின்னூட்டம்)
    பதில்: அப்படி ஒரு பதிவும் இல்லை. மினிமம் 3 பின்னூட்டங்கள். ஆனால் 12.09.2008-க்கான கேள்விகள் ஒன்றுமே வராததால் அந்த தேதிக்கான பதில்கள் பதிவு வரவில்லை/

    தமிழ் மணத்தில் பல நல்ல பதிவர்களின் பதிவுகளில் உள்ள பல நல்ல செய்திகள் , பார்வையாளர்களால் பார்க்கப் படமாலேயே மறைவுப் பள்ளத்தாக்கில் மறைந்து ,மறக்கப் படுவது வாடிக்கையாய் உள்ளது. சில மொக்கை பதிவுகள்,வாசகரை சுண்டி இழுக்கும் பதிவு தலைப்புகள், பாலுணர்வை தூண்டும் பதிவுத் தலைப்புகள் ,நல்ல பதிவுகளை முழுங்கி விடுகின்றன.

    2009 லாவது இவற்றிற்கு விடிவுகாலம் வருமா?

    இந்தக் குறை தீர்க்க

    எவர் வருவாரோ!

    எப்ப வருவாரோ!

    ReplyDelete
  13. /10. பிறர் எழுதிய பதிவில் உங்களை மிகவும் ஆச்சரியப்படுத்திய பதிவு/பதிவர்
    பதில்: ஜெயமோகன். அவரைப் பற்றி நான் இட்ட பதிவுகளில் ஒன்று இதோ./


    ஜெயமோகன் பதிவுகளில் உள்ள சிறப்பானவற்றை தொகுத்து வழங்கியது போல்

    பிற உங்களை கவர்ந்த பிரபல பதிவர்களின் பதிவுகளில் ,தாங்கள் படிக்கும் சிறப்பான பதிவுகளின் சாராம்சத்தை சுருக்கமாய் கொடுத்தால்,உங்கள் பதிவுகளுக்கு நாளும் வந்து போகும் 600-700 வாசகர்கள் நன்மை பெறுவர்களே.

    நீங்கள் பல சுட்டி கொடுத்துள்ளீர்கள், இருந்தாலும் இந்த வேண்டுகோளை பரிசீலிக்கவும்.


    டோண்டு பதில்கள் மாதிரி

    டோண்டுவை கவர்ந்த நிகழ்வுகள்/செய்திகள்

    புதிய தொடர் வாரம் ஒரு முறை பதிவு மலரட்டுமே!

    ReplyDelete
  14. //டோண்டுவை கவர்ந்த நிகழ்வுகள்/செய்திகள்//
    அருமையான யோசனை. நன்றி. ஒரு வேளை நீங்கள்தான் மிஸ்டர் எக்ஸோ?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  15. Thanks for translating my questions in to Thamizh. But one request: My father's name is Mr. R. Venkatesan. So better refer me as "கிரிதரன்.வெ"

    ReplyDelete
  16. உடனே இனிஷியலை நீங்கள் கேட்டபடி சரியாக எழுதியுள்ளேன் கிரிதரன்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  17. Dondu Sir,

    Thanks a lot for your responses. Wishing you a great & successful year ahead :)

    ReplyDelete
  18. intha vara kelvi pathil piramaatham saar

    ReplyDelete
  19. //உடனே இனிஷியலை நீங்கள் கேட்டபடி சரியாக எழுதியுள்ளேன் கிரிதரன்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்//

    Thanks a lot.

    ReplyDelete
  20. . மகிழ்ச்சிப்படுத்திய செய்தி/நிகழ்ச்சி
    பதில்: எனது தாய்மொழி தரும் உற்சாகம் - 3 பதிவில் அதை குறிப்பிட்டுள்ளேன்.




    இதுக்கு வாத்யாருக்கு டாங்க்ஸ்

    ReplyDelete
  21. 6. எதிர்பார்த்து நடக்காத நிகழ்ச்சி/செய்தி
    பதில்: அப்படி என்று சொல்லிக் கொள்ள விசேஷமாக இல்லை. பஸ் சீக்கிரம் வரும் என நினைத்தேன், ஆனால் ரொம்பவும் நேரம் ஆயிற்று என்ற ரேஞ்சில் கூறுவது எல்லாம் இதில் வராதுதானே?//


    படு சூப்பரு சாரே

    ReplyDelete
  22. நிறைய பின்னுட்டங்களையும் பார்வைகளையும் பெற்ற பதிவு
    பதில்: இந்த ஆண்டின் கடைசி டோண்டு பதில்கள் பதிவு (137 பின்னூட்டங்கள்) மிக அதிக பின்னூட்டங்கள் பெற்றது. ஆனால் பார்வைகள் என்று கேட்டால், பதில் கூற இயலாது. ஏனெனில் எனது பார்வைகள் கவுண்டர் மொத்தமாகத்தான் எண்ணும். ஒரு குறிப்பிட்ட பதிவுக்கான எண்ணிக்கை என்று அதில் பார்க்க இயலாது. ஆனால் ஒன்று கூறலாம். பொதுவாக கேள்வி பதில்கள் பதிவுகள் வரும்போது ஹிட்டுகள் கூடும். சராசரியாக இருக்கும் 600-க்கும் மேல் 1000-1100 வரை கூட சில சமயங்களில் ஒரே நாளில் ஹிட்டுகள் வந்துள்ளன. சர்ச்சைக்குரிய விஷயங்கள் எழுதினால் அவ்வாறு நடக்கும்.



    எம்சியாரு படம் ஒடினாப்புலே

    ReplyDelete
  23. யாரும் கண்டு கொள்ளாத பதிவு (0 பின்னூட்டம்)
    பதில்: அப்படி ஒரு பதிவும் இல்லை. மினிமம் 3 பின்னூட்டங்கள். ஆனால் 12.09.2008-க்கான கேள்விகள் ஒன்றுமே வராததால் அந்த தேதிக்கான பதில்கள் பதிவு வரவில்லை


    அன்னாத்த ஜாதி சன்ம் இருக்கு

    ReplyDelete
  24. 7. நீங்கள் எழுதிய பதிவில் மிகவும் பிடித்தது (முதல் பரிசு)
    பதில்: போலி டோண்டுவுடனான யுத்தம் ஒரு முடிவுக்கு வந்தது பற்றிய இப்பதிவு. It wins hands down!
    அது படு பேசாரான கேசே

    ReplyDelete
  25. 2. அதிகம் கேள்வி கேட்ட பதிவாளர்?
    பதில்: மதிப்புக்குரிய ராஜ கம்பீர, ராஜ மார்த்தாண்ட, ராஜ குலோத்துங்க அனானி அவர்கள்


    சாமியோவ்!

    ReplyDelete
  26. . கேள்வி கேட்டவர், பதிலை பார்த்து பின்னூட்டம் விடவில்லை என்பது வாடிக்கையா?
    பதில்: வாடிக்கை இல்லை. இரண்டு முறைகள் மிக வெளிப்படையாக நடந்துள்ளது. முதலாதவதாக சம்பந்தப்பட்ட இஸ்மாயில் என்பவர் கேட்டு கொண்டதற்கிணங்க அவருடைய 18 கேள்விகளுக்கு தனிப்பதிவில் பதிலளித்தேன். ஆனால் அவர் அதை கண்டுகொள்ளவேயில்லை. அவருக்கு என்ன நிர்ப்பந்தமோ தெரியவில்லை. அதே போல ஜோதிபாரதி என்பவரும் தனது பதிவில் தான் கேட்ட கேள்விகளை ஒருவர் சுட்டு எனக்கு அனுப்பியதாகவும், ஆகவே நான் அவர் பதிவில்தான் பதில் தர வேண்டும் என கேட்டு கொண்டார். அவரிடம் நான் என்னிட கேள்விகள் எங்கிருந்து வந்தாலும் அவற்றுக்கு பதிலளிக்க முயற்சிப்பேன் என்றும், அவரது பதிவிலும் பதில்களை நகல் செய்து ஒட்டுகிறேன் என்று கூறி அவ்வாறே செய்தேன். ஆனால் அவரிடமிருந்தும் எதிர்வினைகள் ஏதும் இல்லை.



    சும்மக் காச்சுமா?

    ReplyDelete
  27. 8. கேள்விபதில் இது மாதிரி தொடர்ந்து வேறு யாராவது பதிவு போடுகிறார்களா?
    பதில்: எனக்கு தெரியாது


    கோவை காட்டு ஆபிசர் லதானந்த் சாரு போடுராறு

    http://lathananthpakkam.blogspot.com

    ReplyDelete
  28. 10. இது எத்தனையாவது கேள்வி பதில்? (பதிவு-ஆரம்பத்திலிருந்து கணக்கிடவும்).
    பதில்: 47-வது

    ஆயிரமாய் பெருவட்டும்

    ReplyDelete
  29. 3. பதிலளிக்காமல் விட்ட கேள்விகள் எத்தனை?
    பதில்: சாதாரணமாக ஆட்சேபகரமான கேள்விகளை மட்டுறுத்தும்போதே விலக்கி விடுவேன். அதையும் மீறி வந்ததில் எனக்கு தெரிந்து ஐந்துக்கும் குறைவான கேள்விகளுக்கு பதிலளிக்க விருப்பமில்லை என்னும் பதிலை கூறியுள்ளேன்.


    டக்கலகடி வேலை

    ReplyDelete
  30. கறுப்புச் சட்டை காவலர் கி.வீரமணி, எண்சோதிடப்படி தனது திருநாமத்தை, மீ.கி.வீரமணி என்று மாற்றியுள்ளதாய் தினமலர் சொல்லுகிறதே: 1. பகுத்தறிவு வாதங்களெல்லாம் பக்தியை நோக்கியா? 2. சோதிட நம்பிக்கையில் தொடங்கும் சீர்திருத்தம் கடவுள் நம்பிக்கையில் முடியுமா? வீரமணியாருக்கு வயதாவதுதான் காரணமா?
    பதில்: இரு கேள்விகளுக்கும் பதில் ஒன்றுதான். மீ என்பது அவர் தாயின் பெயரையே குறிக்கிறது என்று அவர் கூறிய பிறகு இக்கேள்விகளுக்கு அவசியமே இல்லை.


    பெரிய மனுசர் பெரிய மனுசர் தானுங்கோ

    ReplyDelete
  31. 3. காங்கிரஸ்-அதிமுக கூட்டணி என்ற வதந்தி என்றவுடன் கலைஞர் வீரமணி, திரு, மருத்துவர் மேல் சட்டம் பாயும் என்கிறாரே?
    பதில்: கலைஞர் கவலை அவருக்குத்தானே தெரியும். மருத்துவரும் அதிமுகவுடன் சேர்ந்து கொண்டால் தேர்தலில் திமுக உதை வாங்குவது நிச்சயம்தானே.

    நிசமாவா சொல்லுரீக

    ReplyDelete
  32. எம். கண்ணன்
    1. குமுதத்தின் சேர்மன் எஸ்.ஏ.பி புதல்வர் ஜவஹர் பழனியப்பன் கருணாநிதியை சந்தித்து ஒரே செண்டி டயலாக் எல்லாம் விட்டு வந்திருப்பதை சுதாங்கன் கிழி கிழி என கிழித்திருக்கிறாரே ? உமது எண்ணம் என்ன ? படிக்க: http://sudhanganin.blogspot.com/2008/12/blog-post_26.html
    பதில்: பணம் பத்தும் செய்யும். வண்டி ஒரு நாள் ஓடம் ஏறும், ஓடமும் ஒரு நாள் வண்டியேறும்.

    சுதாங்கரு இன்னொரு ஞானியா சாரே

    ReplyDelete
  33. . சாரு நிவேதிதாவைச் சந்தித்தால் என்னென்ன கேள்விகள் கேட்க விருப்பம்?
    பதில்: சந்தித்தேனே, கிழக்கு பதிப்பகம் மொட்டைமாடி கூட்டத்தில். கேள்விகளும் கேட்டேனே.

    படி ஜோக்கான மேட்டரு

    ReplyDelete
  34. 7. சன் டிவியில் வரும் 9.30 மணி ராதிகாவின் அரசி சீரியலில் - தமிழக அரசியல் சம்பவங்களை / நடப்புகளை கிண்டல் அல்லது விமர்சனம் செய்யும் வகையில் வசனங்கள் வருகிறதே ? இது சரத்குமாரின்/ராதிகாவின் சொந்த முடிவா இல்லை இதற்குப்பின் கலாநிதி மாறனின் உள்குத்து இருக்குமா?
    பதில்: அரசி எல்லாம் ஒரு சீரியலா? ஒரே அறுவை. நான் பார்ப்பதில்லை. ஆகவே நீங்கள் சொல்வது பற்றி நான் ஒன்றும் கூறுவதற்கில்லை. ஆனால் சித்தியில் ஒரு சீன் இவ்வாறு வந்தது. கலைஞரை நல்ளிரவில் கைது செய்த சீனை காட்டினார்கள். ஆனால் அங்கு சித்திக்கு டப்பிங்காக சிவகுமார் (சித்தப்பா) ஐயோ ஐயோ என கத்தினார்

    சித்தாப்பவின் பலம் தெரியுமா

    ReplyDelete
  35. சரத் ரெட்டியை (கலைஞர் டிவி) அடிக்கும் அளவிற்கு சகோதரர்களுக்கு அவ்வளவு துணிவு வந்துவிட்டதா என்ன?
    பதில்: அப்புறம் சகோதரர்களையே மன்னிப்பு கேட்க வைத்தாராமே, லக்கிலுக் சொன்னார். மேலும் கேள்விப்பட்டது, சரத் கை எலும்பு முறிவு உண்மையில்லையாம். காலெலும்புதான் முறிந்ததாம்.


    கிரம்த்தில சொல்லுவாக
    நீரடித்து நீர் விலகவா போவுது

    ReplyDelete
  36. பதில்: நான் தமிழ் பதிவுகள் படிக்க ஆரம்பித்தபோது அவர் பதிவுகள் என்னால் மிகவும் விரும்பி படிக்கப்பட்டவை. என்ன பிறகு அவர் வேறு விஷயங்களில் பிசியாகி ஒதுங்கி கொண்டார். அது தமிழ்ப்பதிவுகளுக்கு இழப்புதான்


    இப்பத்தான் ஆர்வி இருக்காரே

    ReplyDelete
  37. வைரமுத்து எழுதிய திரைப்பாடல்களில் உங்களுக்குப் பிடித்த பாடல்கள் / வரிகள் என்ன ? ஏன்?
    பதில்: கருத்தம்மாவில் வரும் “போறாளே பொன்னுத்தாயி, பொலபஒலவென்று கண்ணீர் விட்டு” என்ற சோகமான பாடலின் வரிகள்தான் என்னைக் கவர்ந்தன. காரணம் இப்பதிவில் வேறு உதாரணங்களுடன் தந்துள்ளேன். அப்பாடலையும் கேளுங்களேன்


    கவி வைரமுத்து பெரிய பாட்டு மன்னரு இல்லையா?

    ReplyDelete
  38. இராமாயணம் என்பது ஆரியர் - திராவிடர் போராட்டம் என்று பிரபல வரலாற்று ஆசிரியர் எல்லாம் அறுதியிட்டுக் கூறியிருக்கின்றனர். பா.ஜ.க., இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். வகையறாக்கள் தூக்கிப் பிடிக்கும் விவேகானந்தர்கூட இதே கருத்தைத் தான் கூறியிருக்கிறார்! உங்கள் பதில்?
    பதில்: எல்லா காவியங்களுக்குமே அடிப்படையான நிகழ்ச்சி என ஒன்று இருந்திருக்க வேண்டும். அதைத்தான் இங்கும் குறிப்பிட்டுள்ளனர். ஆரியர் - திராவிடர் என்கிறீர்கள். அவர்கள் இப்போது ஆரியர் - திராவிடராக இருப்பவர்களா அல்லது வேறு யாரோவா? ராமரை பார்ப்பனன், ராவணன் திராவிடன் என்பவர்கள், ராமர் சத்திரியர், ராவணனே பார்ப்பனன் என்றதும் சங்கடமான மௌனம் காக்கின்றனர். பெரியார் பற்றி ஒரு கதை சொல்வார்கள். அதாவது அவர் தனது பெயரை ராமசாமியிலிருந்து ராவணசாமியாக மாற்ற எண்ணினாராம். பிறகு ராவணன் பார்ப்பனன் என்று கேள்விப்பட்டதும் அத்தீர்மானத்தை சட்டென நழுவ விட்டாராம்.


    ராமரு பூணுல் போட்ட சத்த்ரியரா?

    ReplyDelete
  39. உலகத்தில் பொதுவாக ஒரு குடும்பத்தில் ஒரு தாய் தந்தையருக்கு பிள்ளைகளாய்ப் பிறக்கும் சகோதரர்களுக்கு ஒரே உணவுப் பழக்கம், ஒரே சுற்றுப் புறச் சூழ்நிலை, ஒரே கல்வி முறை அளிக்கபட்டு வளர்க்கப்படுக்கின்றனர். வளர்ந்து ஆளாய் பின்னர் ஓரே தாய் வயிற்றில் பிறந்தை முழுவதுமாய் மறந்து ரத்த சம்பத்தையும் நினையாமல் பங்காளிகளாய் மாறி சிறு சிறு வாய்ச் சண்டையில் ஆரம்பித்து கோர்ட் கேசுன்னு உருமாறி சில சமயங்களில் கொலை பாதகங்களில் இறங்கி உயிர்ப் பலி நிகழ்வுகள் கூட நடை பெறுகிறதே. இந்த சண்டைகள் சச்சரவுகள் மோதல்கள் தாக்குதல்கள் இருப்பவன் இல்லாதவன் நடுத்திர வர்க்கம் எங்கும் வியாபித்து உள்ளதற்கு என்ன காரணம்? அ) ஜாதகக் குறைபாடா? ஆ)போன ஜென்ம பலனா?
    இ)விதிப் பயனா? ஈ)இயற்கையின் சித்து விளயாட்டா? உ)23 குரோமோசங்களின் குழறுபடியா?
    ஊ)ஆண்டவனின் தண்டனையா? எ)நவக் கிரகங்களின் பாதிப்பா? ஏ)குரங்கிலிருந்து வந்ததாலா? ஐ)------------------?
    பதில்: இதற்கான பதிலை அவரவர் மனபாவத்திற்கேற்ப மேலே சொன்ன தெரிவுகளிலிருந்து எடுத்து கொள்ளலாம். ஆனால் அவை உள்ளன. அதுதான் உடனே தெரியும் உண்மை. சொந்த தாய்மாமனையே மணம் புரிந்து கொண்ட பெண்ணுக்கும் மாமியார் கொடுமை உண்டு என்றால் அந்த இடத்தில் அப்பெண்ணின் பாட்டி என்பதைவிட மாமியார் என்பவளே ஏற்றம் பெறுகிறாள் என்றுதானே அர்த்தம்? முன்பின் தெரியாதவனுடன் ஏற்படும் விரோதத்தை விட பல மடங்கு கூடப் பிறந்தவர்களுடன் விரோதம் ஏற்படுகிறதே எப்படி? சரி, நேரம் கிடைக்கும்போது இது பற்றி பதிவே போட்டால் போச்சு.


    எங்க பட்டிக்காட்டுலே சொல்லுவாக

    பத்து வயசு வரைக்கும் தான் தம்பி
    பத்து வயசுக்கு மேலே பங்காளி

    ReplyDelete
  40. சோதிடம் பற்றி உங்கள் நிலைப்பாடு என்ன? சரியாக/தவறாக கணிக்கப்பட்ட எதிர்க்காலம் உங்கள் அனுபவத்தில் உண்டா?
    பதில்: சோதிடம் பற்றி பதிவு போட்டுள்ளேனே.


    கிராமதிலே கூட சோசியரு இப்ப ரொம்ப பிசியாம்

    ReplyDelete
  41. நாடி சோதிடம் பற்றி உங்கள் கருத்து என்ன? அது பற்றி ஏதேனும் தகவல்கள் உங்களிடம் உண்டா? (Itஇது பற்றி பதிவு போட முடிந்தால் ரொம்பவும் உத்தமம். அப்படி செய்தால் நான் தன்யனாவேன்)
    பதில்: கருத்து ஏதுமில்லை, எனது இப்பதிவில் அதை குறிப்பிட்டதைத் தவிர. மற்றப்படி இது பற்றி தனிப்பதிவு ஒன்று பதிவர் சுப்பையா ஏற்கனவே போட்டு விட்டார்


    வைத்தீஸ்வர்ன் கோயிலண்டை போயி பாக்கணும்
    எம்மாங் கூட்டம் கூடுது

    ReplyDelete
  42. Bomb blast in Bangalore , Ahmedabad, Mumbai attack all happening in very short intervals (periods).It is quite obvious that we are missing a major link in combating terrorism. Do you think our goverment has learnt any lesson? Any specific measures being carried out in Gujarat to your knowledge?
    பதில்: தம் மேல் ராக்கெட் தாக்குதல் நடத்திய ஹமாசுக்கு பதிலடி தரும் இஸ்ரவேலர்களை குறை கூறுவதிலிருந்தே தெரியவில்லையா இந்திய அரசு பாடம் எதுவும் கற்கவில்லை என்று? குஜராத்தில் என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள் என்று கேட்பதைவிட மத்திய அரசு மோடியின் கைகளை எப்படியெல்லாம் கட்டிப் போடுகிறது என்பதைப் பாருங்கள்.


    மோடி சாரு கில்லாடி தான்

    ReplyDelete
  43. இவ்வாண்டு வியாழனில் ஆரம்பித்து திசம்பர் 31-ஆம் தேதி மறுபடியும் வியாழனில் முடிகிறது. இம்மாதிரி டோண்டு பதில்கள் பதிவோடு ஆண்டு ஆரம்பித்து அதே பதிவோடு முடியப்போவது வரும் 2015, 2026, 2037, 2043, 2054 and so on ஆண்டுகளில்தான் என்பதை நான் கூற என்னுடன் மெதுவாக ஒட்டிக் கொண்ட இந்தத் திறமையே உதவியுள்ளது!!).


    சபாசு!

    ReplyDelete
  44. ஸ்ரீராமபிரானின் பக்தன் அனுமனின் ஆலயங்களுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் ஆண்டுக்கு ஆண்டு கூடி கொண்டே வருகிறதே பார்த்தீர்களா?

    கம்ப ராமயணத்தில் வரும் மானிட கற்பு,தெய்வீக கற்பு,அரக்க கற்பு பற்றி விளக்கம் பக்தி பிரசங்கத்தில் கேட்டுள்ளிர்களா?

    அயோத்தி சென்று இருக்கீறிர்களா?

    அங்கு இப்போது ராமர் கோவில் கட்டும் சாதுக்களின் நிலை எப்படி யுள்ளது.

    புரான காலத்தோடு தொடர்பு உள்ள சராயு நதியில் ஸ்நானம் பண்ணியுள்ளீர்களா?

    தாம்பிராஸின் செயல் பாடு எப்படியுள்ளது?

    பிராமனர் தமிழக ஜனத் தொகையில் எத்தனை சதவிகிதம் உள்ளனர் என்ற அறிவிக்கப் படும் தகவல் முன்னுக்குப் பின் முரணாய் உள்ளதே?

    சிறு சிறு கோவில்களில் சொற்ப மாத ஊதியம் பெற்று கொண்டு கஷ்ட ஜீவனம் நடத்தும்,ஏழை பிராமணர்களின் குழந்தைக்கு இட ஒதுக்கீட்டு சலுகை அளிக்கும் முயற்சி வெற்றி பெறுமா?


    அரசு இந்துக் கோவில்களை மட்டும் தன் பராமரிப்பில் வைத்து இருப்பது மாறுமா?


    கடவுள் நம்மபிக்கை அற்ற திமுக கட்சியினர் கோவில் அறங்காவலராய் இருப்பதை நினைக்கும் போது.?

    ReplyDelete
  45. /பதில்: அறிவியலின் ஒரு முக்கிய விஷயமே எந்த கண்டுபிடிப்பும் நிரந்தரமாகக் கோலோச்சுவதில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் அப்போதைய பிரசித்தி பெற்ற அறிவியலாளர் கூறியது என்னவென்றால், வான் பயணம் சாத்தியமே இல்லையென்று. அப்படி முடியும் என்றால் கடவுள் மனிதனுக்கு இறக்கைகள் தந்திருப்பான் என்பதேயாகும். இப்போது கூட க்ளோனிங் ஆராய்ச்சிகள் கடவுளாவதற்கு மனிதனின் முயற்சிகள் எனக்கூறி பலர் எதிர்க்கின்றனரே. மேலும் நீங்கள் சொன்ன “இரண்டு கருத்துக்களில் ஏதோ ஒன்றுதான் உண்மையாக இருக்க முடியும்” என்ற வாக்கியமும் முழு உண்மையல்ல. உதாரணத்துக்கு ஒளி என்பது அலையா பொருளா என்பதற்கு இரண்டுமே சரி என்ற பதில் வந்தது. இன்னும் ஆய்வுகள் நடப்பதால் இதற்கு மேல் நாம் என்ன சொன்னாலும் அபத்தமாக போகும் வாய்ப்பு உண்டு./


    எம்மாம் பெரிய விசயம்
    னேச்சர் மின்னாடி நாம சூசுபிதானே
    சமுத்திரத் ஜலம் முன்னாலே மனுச ஜென்ம், பீச்சாண்ட உள்ளா மணல் மாதிரி தானே சாரு

    ReplyDelete
  46. /26.சின்னத்திரையும், சினிமாவும் இன்றைய கலாச்சார சீரழிவின் அடையாளங்களா?
    பதில்: அப்படித்தான் நானும் நினைக்கிறேன். ஒன்றை பார்த்து இன்னொன்று நடக்கிறது. இது ஒரு விஷச்சுற்று/

    நம்ம டமிழ் நாட்டு கட்சி அரசியலுக்கு பேஸ்மெண்ட் அதானே!

    ReplyDelete
  47. /இந்திய அரசியல் 2009 ல் எந்த திசையில் செல்லும்?
    பதில்: இந்திய அரசியல் நிஷாப்புயல் போல. எப்போது எங்கு செல்லும் என்பது தெரியாது. ஆகவே இக்கேள்விக்கு சரியான விடை 2010-ன் முதல் டோண்டு பதில்கள் பதிவில் பதிலளிப்பேன்./

    இது உட்டாலக்கடி பதிலு

    ReplyDelete
  48. /கலைஞரின் சாதுரியம் ஜெயலலிதாவின் சாதுரியம்-ஒப்பிடுக?
    பதில்: இருவருமே ஒரு மாதிரிதான். அவர்களது சாதுர்யமானவை என்று அழைக்கப்படும் செயல்கள் பல எரிச்சலையே விளைவிக்கின்றன./

    விசயகாந்து கட்சியிலே சேர்ந்துகின்னு....

    ReplyDelete
  49. /சென்னை நகரப் பேருந்துகளில் இன்றைய முன்னேற்றம் எப்படி?
    பதில்: தாழ்தள பேருந்துகள் அதிகரித்து சாமானிய வண்டிகள் குறைந்து சாமானியர்கள் அவதிப்படுவதே அதிகம்/

    அப்புறமா டிக்கட்டு சார்ச்சு எப்படி ஏத்துறது?

    ReplyDelete
  50. /தமிழக காங்கிரசார் அதிமுக பக்கம் சாய்கிறார்களா?
    பதில்: தமிழக காங்கிரசாருக்கு என்ன செல்வாக்கு கட்சியில்? சோனியா சொல்படித்தானே அங்கு எல்லாமே நடக்கிறது?//


    எல்லாம் அம்மா தாயே
    கருணை காட்டு தனே

    புயப்பு ஒடா வேணாம்

    ReplyDelete
  51. To Dondu's Q&A:
    1) What is your opinion on Babri Masjid by Hindu activists? I fell it is as crude as Hindu's temple destruction by Mughal Kings.

    2) Do you see any difference between PMK & Co. saying "A Thamizhan only can rule Thamizh Nadu" and Sivasena's vulgarity towards Non-Marathas?

    ReplyDelete
  52. 3) How can a person attain Brahmanism? By birth or by behavior. (Note: In the movie Sri Raghavendra, Thalaivar Rajinikanth referred one can attain Brahmanism by behavior. Of course it is the view of Sri Raghavendra Swamigal.)

    4) Why there is no way for one to convert himself in to Hindu? Why we are encouraging accepting others in to our Hinduism?

    ReplyDelete
  53. ஆண்டாள் திருப்பாவையும்
    அறுபத்து ஒன்பதும் கம்மும்
    இணைந்து வருவது டோண்டு சார்
    பதிவிலேதான்!

    ReplyDelete
  54. Sorry, in my 4th question I missed a "not" and it changed the whole meaning:

    4) Why there is no way for one to convert himself in to Hindu? Why we are not encouraging accepting others in to our Hinduism?

    ReplyDelete
  55. //Sorry, in my 4th question I missed a "not" and it changed the whole meaning://
    பரவாயில்லை. நான் முதலிலேயே அதை கவனித்து விட்டேன். அடுத்த பதில்கள் பதிவின் வரைவில் சரியாக மாற்றி சேர்த்து விட்டேன்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  56. /////Sethu Raman said...
    ஆண்டாள் திருப்பாவையும்
    அறுபத்து ஒன்பதும் கம்மும்
    இணைந்து வருவது டோண்டு சார்
    பதிவிலேதான்!/////

    !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  57. கேள்வி பதில்கள் வியாழக்கிழமையில் வருவது மகிழ்ச்சியே!

    ReplyDelete
  58. //கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களின் நாத்திகர்களின் முடக்குவாதம் இப்போது அதிகமாய் காணவில்லையே?
    பதில்: நிரந்தர நாத்திகனோ நிரந்தர ஆத்திகனோ எங்கும் கிடையாது//

    அமைதியாக இருந்தால் இப்படி சொல்வதா!

    யாரங்கே!! எடு என் வாளை போருக்கு புறப்பட வேண்டும்!

    ReplyDelete
  59. //தனக்கு என்றால் ஒரு நியாயம், பிறர்க்கு என்றால் வேறு ஒரு நியாயம் என்று இருப்பது மனித இயல்புதானே.//

    இது மனித இயல்பல்ல
    கழக இயல்பு!

    ReplyDelete
  60. //பளு தூக்குபவரை கொண்டு போய் கண்ட்ரோல் பேனல் இருக்கும் ஏ.சி.அறையில் வைத்தாலோ, கண்ட்ரோல் பேனலருகில் இருப்பவரை பளு தூக்க வைத்தாலோ கெட்டது குடி.//

    ஆனால் ரெண்டு பேருமே சோறுதான் திங்குறாங்க,

    ReplyDelete
  61. புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  62. மஹாராஜா, உங்களுக்கு "வாள்" எல்லாம் பிடிக்கத் தெரியாதே! "வால்" தானே கேட்டீர்கள். உங்களுக்கு வர வர "ல" உச்சரிப்பு வரவே மாட்டேங்குது. கீழ் கண்ட சொற்களை காலையில் எழுந்ததும் பத்து முறை சொல்லி விட்டு பாயை சுருட்டவும். (எல்லாம் "ல" பயிற்ச்சிக்குத் தான்)
    கால்
    பால்
    மால்
    வேல்
    தோல்
    கந்தல்
    நன்றி மன்னா ! நீ "வால்" க

    ReplyDelete
  63. //Anonymous said...
    மஹாராஜா, உங்களுக்கு "வாள்" எல்லாம் பிடிக்கத் தெரியாதே! "வால்" தானே கேட்டீர்கள். உங்களுக்கு வர வர "ல" உச்சரிப்பு வரவே மாட்டேங்குது. கீழ் கண்ட சொற்களை காலையில் எழுந்ததும் பத்து முறை சொல்லி விட்டு பாயை சுருட்டவும். (எல்லாம் "ல" பயிற்ச்சிக்குத் தான்)
    கால்
    பால்
    மால்
    வேல்
    தோல்
    கந்தல்
    நன்றி மன்னா ! நீ "வால்" க//

    அன்புசால் நண்பருக்கு,

    தமிழில் எழுதும் போது நான் செய்யும் ல,ள,ழ குறைகளை சுட்டிக் காட்டியதற்கு நன்றி.

    ல்- பல்லாக்கு தூக்குவோர் சங்க வல்லுனர் தேர்தலில் செயலராய் தேர்வு பெற்ற நல்ல தம்பியை ,வல்லப மகராஜாவிடம் ,அழைத்துச்சென்ற ,முக்கிய அமைச்சர் வில்லாளன்,பல பரிசுப் பொதிகளை பெற்றுத் தந்த நல்ல நிகழ்வினை பார்த்து பரவசம் அடைந்த மக்கள் அம்மன் கோவிலில் கொடை விழாவில் வில்லுப் பாட்டுப் பாடி ஆனந்தப் பட்டனர்.

    இனி தட்டச்சு செய்யும் போது கொஞ்சம் கவனம் செலுத்துகிறேன்.

    இந்தக் குறைக்கு காரணங்கள்.

    இது எனது குறையை சமாளிக்கும் விதமாய் அல்ல.

    1.பொதுவாய் வேகமாய் தட்டச்சு செய்வதால்
    2.ஈ கலப்பையில் ஷிப்ட் கீயின் பயன்பாடு கொஞ்சம் தடுமாற்றுகிறது.
    3.தமிழ் தட்டச்சோ, ஆங்கிலத் தட்டச்சோ படிக்காததால்
    4.எல்லாவற்றிற்கும் மேலே ஒரு சில வார்த்தைகள் சற்று குழப்பமாய் இருப்பதால்(படிக்கும் காலங்களில் தமிழில் அவ்வளவு கவனம் இல்லாததால்)


    இறுதியாக குறைகளை சுட்டிக் காட்டிய அன்பு நண்பருக்கு
    மீண்டும் நன்றி.

    நல்ல தமிழோடு மீண்டும் சந்திக்க
    இன்றே பயிற்சியை தொடங்குகிறேன்.

    என்றும் அன்பன்

    ReplyDelete
  64. வாள் கேட்டது நான்!
    இங்கே வேற யாரோ சண்டை போட்டு கொண்டிருக்கிறார்கள்.

    என்னிடம் ஏற்கனவே வால் இருப்பதால் நான் இங்கே கேட்டது வாள்.

    கூகுள் வழங்கும் வசதில் தட்டச்சு செய்யும் போது இம்மாதிரியான லகர எழுத்து பிழைகள் வருவது அதிகம்.

    அதனை சுட்டி காட்டி கேலி செய்வதை விட அவசரத்தில் தவறாக தட்டச்சு செய்து விட்டீர்கள் என நாகரிகத்துடன் சுட்டி காட்டினால் நண்பர்கள் குற்றஉணர்வு இல்லாமல் திருந்துவார்கள்!

    ReplyDelete
  65. //வால்பையன் said...
    வாள் கேட்டது நான்!
    இங்கே வேற யாரோ சண்டை போட்டு கொண்டிருக்கிறார்கள்.

    என்னிடம் ஏற்கனவே வால் இருப்பதால் நான் இங்கே கேட்டது வாள்.

    கூகுள் வழங்கும் வசதில் தட்டச்சு செய்யும் போது இம்மாதிரியான லகர எழுத்து பிழைகள் வருவது அதிகம்.

    அதனை சுட்டி காட்டி கேலி செய்வதை விட அவசரத்தில் தவறாக தட்டச்சு செய்து விட்டீர்கள் என நாகரிகத்துடன் சுட்டி காட்டினால் நண்பர்கள் குற்றஉணர்வு இல்லாமல் திருந்துவார்கள்!//

    சரியான நாட்டாமை தீர்ப்பு

    ரொம்ப நாளாய் இந்தப் பக்கம் ஆளை கானோம்.

    வெளியூர் பயணமா?


    டோண்டு அவர்களுடன் வால்பையயனின் சென்னை சந்திப்பு பற்றி பதிவு போடுவதாகச் சொல்லியதை மறந்து போச்ச?

    ReplyDelete
  66. //டோண்டு அவர்களுடன் வால்பையயனின் சென்னை சந்திப்பு பற்றி பதிவு போடுவதாகச் சொல்லியதை மறந்து போச்ச?//


    when?

    ReplyDelete
  67. மதிப்பிற்குரிய வால் அய்யா சமூகத்திற்கு,
    //நல்ல தமிழோடு மீண்டும் சந்திக்க
    இன்றே பயிற்சியை தொடங்குகிறேன்// என்ற இந்த பதிலைப் பார்த்தவுடன் நானே குளம்பிப் போய்விட்டேன். இவ்வளவு பனிவா வால் மஹாராஜா இருந்ததே இல்லையேன்னு. கடைசிலே நீங்களே வந்து தெளிவாக்கிட்டீங்க , நன்றி வால் ராசா.

    //வாள் கேட்டது நான்!
    இங்கே வேற யாரோ சண்டை போட்டு கொண்டிருக்கிறார்கள்.//

    நான் வால் பயிற்ச்சி செய்ய சொன்னேன் , அதுக்கு அந்த அனானி சரி செய்றேன்னு சொன்னார், இதுல எங்க மவராசா சன்டை வந்தது.
    தட்டச்சில் பிழை வருவதில்ல நம்மளுக்கு சரியா உச்சரிக்கத் தெரியாததால் தான் பிழை மன்னா!
    அது போவட்டும் விடுங்க ராசா, நம்ம வாளுக்கு சானை பிடிக்க நீங்கள் எடுத்துப் போகாதீர்கள் . நீங்கள் "வாளை" சானை பிடி என்பதற்கு வாலை என்று உச்சரிப்பீர்கள். அவன் உங்கள் வாலை சானை பிடித்து விடாமல் இருக்க வேண்டுமே ! அதற்குத்தான்.
    குறைந்த நாளில் நிறைந்த பலன் வேன்டுமேனில் அதிகாலையில் மொட்டைமாடியில் ஏறி நின்று "லகலக லக " என்று கத்திப் கத்தி பிராக்டீஸ் செய்யங்கள் அய்யா.

    அரசே இது கேலி அல்ல உங்கள் மேல் உங்கள் வால் மேலுள்ள அக்கறை தான்
    உங்கள்
    வாலில்லாத தம்பி

    ReplyDelete
  68. என்ன கொடுமை சரவணன், வால் கிட்ட இ-கலப்பை இல்லையா? கூகிளை நம்பிகிட்ட இத்த்னை நாள் கம்பெனி நடக்குது. டவுன்லோடு செய்ய எம்மா நேரமாகிடப் போகுது.
    வாலில்லாத தம்பி.

    ReplyDelete
  69. //என்ன கொடுமை சரவணன், வால் கிட்ட இ-கலப்பை இல்லையா? கூகிளை நம்பிகிட்ட இத்த்னை நாள் கம்பெனி நடக்குது. டவுன்லோடு செய்ய எம்மா நேரமாகிடப் போகுது.
    வாலில்லாத தம்பி.//


    பதிவர்களுக்குள் சண்டை வேண்டாமே!

    அதுவும் வால்பையன் ரொம்ப நல்லவர்

    அவருடைய கமாடிட்டி டிரெடிங்லே வல்லவர்

    பதிவுலக பதிவாளர் அனைவருக்கும் தோழர்

    டோண்டு ஐயாவின் நீண்டகால நண்பர்

    ReplyDelete
  70. // Anonymous said...
    //Anonymous said...
    மஹாராஜா, உங்களுக்கு "வாள்" எல்லாம் பிடிக்கத் தெரியாதே! "வால்" தானே கேட்டீர்கள். உங்களுக்கு வர வர "ல" உச்சரிப்பு வரவே மாட்டேங்குது. கீழ் கண்ட சொற்களை காலையில் எழுந்ததும் பத்து முறை சொல்லி விட்டு பாயை சுருட்டவும். (எல்லாம் "ல" பயிற்ச்சிக்குத் தான்)
    கால்
    பால்
    மால்
    வேல்
    தோல்
    கந்தல்
    நன்றி மன்னா ! நீ "வால்" க//

    அன்புசால் நண்பருக்கு,

    தமிழில் எழுதும் போது நான் செய்யும் ல,ள,ழ குறைகளை சுட்டிக் காட்டியதற்கு நன்றி.

    ல்- பல்லாக்கு தூக்குவோர் சங்க வல்லுனர் தேர்தலில் செயலராய் தேர்வு பெற்ற நல்ல தம்பியை ,வல்லப மகராஜாவிடம் ,அழைத்துச்சென்ற ,முக்கிய அமைச்சர் வில்லாளன்,பல பரிசுப் பொதிகளை பெற்றுத் தந்த நல்ல நிகழ்வினை பார்த்து பரவசம் அடைந்த மக்கள் அம்மன் கோவிலில் கொடை விழாவில் வில்லுப் பாட்டுப் பாடி ஆனந்தப் பட்டனர்.

    இனி தட்டச்சு செய்யும் போது கொஞ்சம் கவனம் செலுத்துகிறேன்.

    இந்தக் குறைக்கு காரணங்கள்.

    இது எனது குறையை சமாளிக்கும் விதமாய் அல்ல.

    1.பொதுவாய் வேகமாய் தட்டச்சு செய்வதால்
    2.ஈ கலப்பையில் ஷிப்ட் கீயின் பயன்பாடு கொஞ்சம் தடுமாற்றுகிறது.
    3.தமிழ் தட்டச்சோ, ஆங்கிலத் தட்டச்சோ படிக்காததால்
    4.எல்லாவற்றிற்கும் மேலே ஒரு சில வார்த்தைகள் சற்று குழப்பமாய் இருப்பதால்(படிக்கும் காலங்களில் தமிழில் அவ்வளவு கவனம் இல்லாததால்)


    இறுதியாக குறைகளை சுட்டிக் காட்டிய அன்பு நண்பருக்கு
    மீண்டும் நன்றி.

    நல்ல தமிழோடு மீண்டும் சந்திக்க
    இன்றே பயிற்சியை தொடங்குகிறேன்.

    என்றும் அன்பன்//

    //வால்பையன் said...
    வாள் கேட்டது நான்!
    இங்கே வேற யாரோ சண்டை போட்டு கொண்டிருக்கிறார்கள்.

    என்னிடம் ஏற்கனவே வால் இருப்பதால் நான் இங்கே கேட்டது வாள்.

    கூகுள் வழங்கும் வசதில் தட்டச்சு செய்யும் போது இம்மாதிரியான லகர எழுத்து பிழைகள் வருவது அதிகம்.

    அதனை சுட்டி காட்டி கேலி செய்வதை விட அவசரத்தில் தவறாக தட்டச்சு செய்து விட்டீர்கள் என நாகரிகத்துடன் சுட்டி காட்டினால் நண்பர்கள் குற்றஉணர்வு இல்லாமல் திருந்துவார்கள்//


    ///என்ன கொடுமை சரவணன், வால் கிட்ட இ-கலப்பை இல்லையா? கூகிளை நம்பிகிட்ட இத்த்னை நாள் கம்பெனி நடக்குது. டவுன்லோடு செய்ய எம்மா நேரமாகிடப் போகுது.
    வாலில்லாத தம்பி///




    வாலில்லாத தம்பி வாலுள்ள அண்ணாவிடம் ஏதோ சொல்ல
    அதற்கு வேறு ஒருவர் நீண்ட தன்னிலை விளக்கம் கொடுக்க
    அதற்கு வால்பையனும் மறு மொழி கொடுக்க,அதை வாலில்லாத தம்பி
    அதற்கு சூடாய் பதில் கொடுக்க




    டோண்டு ஐயா உதவிக்கு வங்காளேன்

    சச்சரவு தீர்த்து கைகுலக்கட்டும் அண்ணாவும் தம்பியும்

    ReplyDelete
  71. தமிழ், தமில், தமிள்

    இது தான் என்னோட அடுத்த பதிவு!!

    ReplyDelete
  72. அய்யாஅனானி, நீர் எந்த ஊர் அய்யா , அட்ரஸ் சொன்னா வந்து காலில் விழுந்து கும்பிடுறேன். என்னால முடியல. வெளி உலகம் என்றால் என்ன என்று உமக்குத் தெரியுமா ! சும்மா ஏன்யா இப்படி உளறிக் கொட்டுகிறீர். டோன்டு சாரின் பதிவுகளில் நீர் பண்ணுகிற பின்னூட்ட அட்டகாசங்களில் சில கீழே.

    1) டோன்டு சார் உங்களைப் பற்றி அந்தப் பதிவில் தப்பாய் எழுதுகிறார்கள் இந்தப்
    பதிவில் எழுதுகிறார்கள்.

    2)சார் சரியான அடி கொடுங்கள் சார் அவர்களுக்கு என்பது.
    3) ரெஸ்பெக்டடு சார் என்று அட்ரஸ் பன்னுவது.(த‌ப்பில்லை ஆனால் அந்நிய‌மாக‌ இருக்கிற‌து)


    4) ஆ..ஊ. ‍ன்னா நான் ஏதாவ‌து த‌ப்பா சொல்லிட்ட‌னா ம‌ன்னிச்சுக்கோங்க‌ என்ப‌து.

    5) ந‌கைச்சுவை எது சீரிய‌ஸ் எது என்று புரிந்து கொள்ளமால் எல்லார் ம‌ண்டையைஉய்ம் உருட்டுவ‌து
    6) டோன்டு சார் , வால்பையன் போன்றவர்க்ளுக்கு வாய் கை இருக்கிறது என்று புரியாமல் நடுவில் வந்து குழப்புவது.

    இப்போ நான் உங்களுக்கு கொடுத்திருப்பது தான் சீரியஸ் பதில்.எது சீரியஸ் எது நகைச்சுவை என்று விபரம் தெரிந்தயாரிடமாவது கேட்டு விட்டு பின்னூட்டம் இடுங்கள்.

    வால் பையனிடம் நான் செய்து கொன்டிருப்பதற்கு பெயர் வம்பு. ஆனால் உங்க ரிப்ளைய படித்தவுடன் "வால்" மஹாராஜா இது சீரியஸ் தான் என்று நினைத்தது தான் இங்கே நகைச்சுவை.


    வாலில்லாத தம்பி.

    ReplyDelete
  73. 5) "Emperuman" Ramanujar converted many so-called "lower" caste people to Brhamins and absorped them to Vaishanavam. So one can become Brahmin by some other way other than by his/her birth. Am I right?

    ReplyDelete