12/26/2008

டோண்டு பதில்கள் 26.12.2008

அனானி (19.12.2008 காலை 05.54-க்கு கேள்வி கேட்டவர்):
1. Please answer in detail.
It is learnt that Murasoli Maran did his higher studies with the help of the money support given by M.G.Ramachandran.
Some 20 years before his sons were having business in small scale.
Yesterday it is told that the enthiran, rajini-sankar mega project,worth Rupees 150,00,00,000 is going to be produced by the great brothers.
How it is possible in India that some middle class family legal heirs alone are able to reach the top to this extent, withih a span of 20 years?
Is this due to 1.Their hard work 2.Their luck 3.Their tricks 4.Their gimmicks 5.Their ambani-style?

பதில்: நீங்கள் சொன்ன ஐந்துமே வெவ்வேறு அளவில் செயல் புரிந்துள்ளன. முதலில் அதிர்ஷ்டத்தை எடுத்து கொள்வோம். சம்பந்தப்பட்ட குடும்பத்தில் பிறந்ததே அதிர்ஷ்டம். ஆனால் அந்த குடும்பம் அவ்வாறான நிலைக்கு வந்ததன் காரணம் அதன் மூத்த உறுப்பினர் கட்சியில் செய்த உழைப்பு. அவருடைய பல எதிரிகள் கட்சியிலிருந்து தாமே விலகியும், ஓரம் கட்டப்பட்டும் அவரது முன்னேற்றத்தை எளிதாக்கியுள்ளனர். மாறன் சகோதரர்கள் வெறும் அதிர்ஷ்டத்துடன் நின்று விடவில்லை. அப்படியிருந்திருந்தால் மு.க. முத்து ரேஞ்சில்தான் இருந்திருப்பார்கள். சன் டிவி குழுமம் அவர்கள் முழு உழைப்பையும் பிரதிபலிக்கிறது. அதை தக்க வைத்து கொள்ள தந்திரம், அலம்பல், பந்தா ஆகிய உத்திகளை பயன்படுத்தத்தான் வேண்டும்.


கிரிதரன்:
1) Have you read in Thuglak (24/12/2008 edition) for Mr. S. Gurumorrthy's article on comparing the America's economic strength in 1930 with 2008 on the basis of their social culture? What is your opinion on that?
பதில்: படித்தேன். சிந்தனையைத் தூண்டிய கட்டுரை. கருத்து என்னவோ எளிமையானதுதான். வரவுக்குள் செலவழித்து எதிர்க்காலத்துக்கு தேவையானதை சேமிப்பதற்கு ஈடாக எதுவுமே இல்லைதான்.


r:
1. There is one word in the English language that is always pronounced incorrectly. What is it?
பதில்: incorrectly

2. A boat has a ladder that has six rungs, each rung is one foot apart. The bottom rung is one foot from the water. The tide rises at 12 inches every 15 minutes. High tide peaks in one hour. When the tide is at it's highest, how many rungs are under water?
பதில்: படகுடன் கூட ஏணியும் மேலெழும்பும். நானே இக்கேள்வியை கேட்டுள்ளேன்.

3. Is half of two plus two equal to two or three?
பதில்: Three. Well, it seems that it could almost be either, but if you follow the mathematical orders of operation, division is performed before addition. So... half of two is one. Then add two, and the answer is three.

4. How much dirt would be in a hole 6 feet deep and 6 feet wide that has been dug with a square edged shovel?
பதில்: ஒன்றுமே இருக்காது. இருந்தால் அது ஓட்டையே அல்ல.

5. What is the significance of the following: The year is 1978, thirty-four minutes past noon on May 6th?
பதில்: நேரம்/மாதம்/தேதி/ஆண்டு என்ற அமெரிக்க முறையில் எழுதினால் இவ்வாறு வரும்:
12:34, 5/6/78.

6. If a farmer has 5 haystacks in one field and 4 haystacks in the other field, how many haystacks would he have if he combined them all in the center field?
பதில்: ஒன்று. எல்லா வைக்கோல் போர்களையும் ஒன்றாக வைத்தால் அது ஒரே போராகத்தானே ஆகும்.

7. What is it that goes up and goes down but does not move?
பதில்: அளக்கும் கருவிகளில் காட்டப்படும் அளவுகள். உதாரணம்: டெம்பரேச்சர்.

பை தி வே, இந்த உரலுக்கு நன்றி.


அனானிகள் கேள்வி கேட்டவை:
1. திருமங்கலம் இடைத்தேர்தலுக்கான திமுக தேர்தல் பணிக்குழுவில் இருந்து தாம் விலகுவதாக, மு.க.அழகிரி இன்று திடீரென அறிவித்திருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளதாம். இது என்ன ஐயா புதுக் கதை?
பதில்: பேரம் முதலில் சரியாகப் படியவில்லையாக இருந்திருக்கும். இப்போது படிந்து விட்டிருக்கும். வேறு என்ன காரணம் இருக்க இயலும்?

2. இலங்கை அகதிகளுக்கான வசதிகள் குறித்து தி.மு.க. அரசு மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை விஜயகாந்த் கூறியுள்ளதாகவும், அவர் கூறியவற்றின் உண்மைத் தன்மையை அறியாமல் பேட்டியாக 'ஆனந்த விகடன்' வெளியிட்டதாகவும் தமிழக முதல்வர் கருணாநிதி சாடியுள்ளார். எல்லோரும் சேர்ந்து வி.காந்தை இன்னுமொரு எம்ஜிஆர் ஆக்கிவிடுவார்களா?
பதில்: அதுதான் கருணாநிதியின் ராசி என்று அவரே பிற்காலத்தில் நொந்து கொண்டாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.

3. பாகிஸ்தானுக்கு எதிரான அனைத்து வித நடவடிக்கைகளையும் இந்தியா பரிசீலிக்கும் என வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி எச்சரித்துள்ள நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வரும் தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா விரைவில் விமானத் தாக்குதலை மேற்கொள்ளக் கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளநிலையில் இது மற்றுமொரு இந்தியா பாகிஸ்தான் போருக்கு வழிவைக்காதா?
பதில்: நீடித்த்த அளவில் போரை நடத்த இரு நாடுகளின் பொருளாதாரமுமே இடம் கொடுக்காது என்பதுதான் நிஜம்.

4. இந்து என்றால் திருடன் என்று கூறியவர் கூட மஞ்சள் துண்டணிந்து கொண்டு, சாயிபாபாவை வீட்டிற்கு வரவழைத்து தன்னுடைய அடிபொடிகளுடன் மோதிரம் வாங்கிக் கொள்கிறார்களே என்ன காரணம்?
பதில்: அதில் வேறு ஒரு அடிப்பொடி தனக்கு சாயிபாபா தந்தது போதாது என்ற பொருமல் வேறு பட்டுள்ளார்.

5. மிருகத்திலிருந்து மனிதனாக, மனிதனை பண்படுத்தியது பகுத்தறிவும், மதமும், ஆனால் இன்று மனிதனை மீண்டு மிருகமாக்கும் முயற்சிகள் கிட்டத்தட்ட வெற்றி கண்டு கொண்டிருப்பது போலி பகுத்தறிவும், போலி மதவாதமும் இல்லையா?
பதில்: ஆம்.

6. மூட நம்பிக்கைகளை ஒழிக்கவேண்டுமென மேடையில் ஒலிப்பவர்கள் கூட, தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு பின் வாசல் வழியே உள்ளே நுழைகிறார்களே என்ன காரணம்?
பதில்: தஞ்சை பெரிய கோவிலுக்கு சென்றால் பதவியிழப்பு நேரிடும் என்பது மூட நம்பிக்கைதான். ஆனால் அதை அலட்சியம் செய்து ஒரு அரசியல்வியாதி நிஜமாகவே பதவி இழந்தால் நீங்களா அப்பதவியை அவருக்கு திரும்பத் தருவீர்கள்? ஆகவே எதற்கு வம்பு என ஒதுங்கி போகின்றனர் போலும்.

7. தமிழீழ விடுதலையை ஆதரித்து பேசுவோரை கைது செய்ய வேண்டுமென தொடர்ந்து குரலெழுப்புவோர், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில், தமிழீழம் அமைவதில் எமக்கு உடன்பாடு இல்லையென்பதை தேர்தல் அறிக்கையாக முன் வைத்து அவர்கள் தேர்தலை சந்திக்க தயாரா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார் -திருமாவளவன். தலைவர் கலைஞருக்கு தொந்திரவு கொடுக்க மாட்டடேன் என்று சொல்லி கொண்டே திருமாவளவன் இப்படி செய்வது காங்கிரசாரையும் அதிமுக வையும் ஒரே அணிக்கு தள்ளிவிடாதா? இலங்கை விவகாரம் இங்கே கூட்டணிகளை சிக்கலாக்கிவிடுமா?
பதில்: அனுகூல சத்ரு.

8. வரும் ஜன 6 ந்தேதி முதல் சீனா/கொரியா நாடுகளில் தயாரிக்கப்பட்ட மொபைல்களில் சர்வேதசக் குறியீடு எண் இல்லாதவை இந்தியாவில் தடை செய்யப் படலாம் என்பது செய்தி.
அவற்றை முதலிலே தடை செய்திருந்தால் மக்களின் பொருளாதர இழப்பை தவிர்த்திருக்கலாமே? தும்பைவிட்டு வாலைபிடிக்கும் செயலல்லவா இது?

பதில்: அவ்வாறு தடை செய்யும்போதும் நம்ம அரசாங்கம் ஒரு காரியம் செய்யும். கையிருப்பில் இருக்கும் செல்போன்களை பலான பலான தேதிக்குள் விற்க அவகாசமும் அளிக்கும். இது அதீத கற்பனை அல்ல. பல அபாயகரமான மருந்துகளுக்கு இம்மாதிரி அரசு செய்துள்ளது. எல்லாமே யார் யாருக்கு எவ்வளவு வாய்க்கரிசி போடுகிறார்கள் என்பதை பொருத்தது.

அனானி (அவரது கேள்விகள் இப்பதிவிலிருந்து சுடப்பட்டவை என சம்பந்தப்பட்ட பதிவர் தெரிவித்துள்ளார். அது உண்மை என்பதை உறுதி செய்து கொண்டேன்)
1) வங்க தேச உதயம் எப்படி நடந்தது?
பதில்: வெறுமனே மதத்தை மட்டும் அடிப்படையாக வைத்து பாகிஸ்தானை உருவாக்கினார்கள். நடுவில் இந்தியா இருந்ததில் கிழக்கு மற்றும் மேற்கு பாகிஸ்தானுக்கிடையே ஆரம்பத்திலிருந்தே இடைவெளி விழுந்து விட்டது. நாடு உருவாகி 25 ஆண்டுகளுக்குள் பிளவுபட்டது துரதிர்ஷ்டமே. நடுவில் இருந்த இந்தியாவுக்கும் இது பல வகைகளில் சங்கடம் விளைவித்தது. ரோலர் கோஸ்டரில் செல்லும் பயணம் போல நிகழ்ச்சிகள் நடந்தன என்பதையும் மறக்கக் கூடாது. அப்படி உருவான பங்களாதேஷால் இந்தியாவுக்கு இப்போதும் தொல்லைதான். அதனாலேயே கூட இந்தியா இம்மாதிரி அண்டை நாட்டை துண்டாடும் நிகழ்ச்சியில் பங்கு பெறாதிருப்பதையே விரும்புகிறது என்று கூட சொல்லலாம்.

2) அன்னை இந்திராவைக் கொன்றவர்களை காங்கிரஸ் எப்படி நடத்தியது, நடத்துகிறது?
பதில்: குற்றவாளிகளாக காணப்பட்டவர்கள் தூக்கில் போடப்பட்டாயிற்று. ஆனால் இது ஒரு துன்பியல் சம்பவம் மட்டுமே என நீட்டி முழக்கும் பிரபாகரன் இன்னும் தேடப்படும் குற்றவாளி. மாட்டிக் கொண்டால் தூக்கு தண்டனை பெற வேண்டியவர். அவரைத் தலைவராக கொண்ட விடுதலைப் புலியினரை எப்படி ஏற்று கொள்வது?

3) காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாலய உள்துறை அமைச்சர் ஏன் பொற்கோவிலுக்கு எதிரே காலணிகளைத் துடைத்து வைத்தார்?
பதில்: அது அவரது மதநம்பிக்கை.

4) இந்திராவை கொன்ற சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர் இந்திய பிரதமராக முடிகிறது. காந்தியைக் கொன்ற கோட்சேயின் ஆர்.எஸ்.எஸ் -ஐ சேர்ந்தவர்கள் பிரதமராக உதவிப் பிரதமராக இருக்க முடிகிறது. ஏன் தமிழர்கள் இந்திய பிரதமர் ஆகமுடியவில்லை அல்லது யாரோ ஆக விடாமல் தடுக்கிறார்கள்?
பதில்: ஒரு காலக்கட்டத்தில் மூப்பனார் பிரதமராக வாய்ப்பு வந்தது. அப்போது முட்டுக்கட்டை போட்டவர் கலைஞர் என்று ஞாபகம்.

5) அகாலிதளம் மான் பிரிவு தலைவர் சிம்ரன்ஜித் சிங் மான் துப்பாக்கியுடன் பாராளுமன்றம் வருவேன் என்று சொல்கிறார். அவரும் இங்கு தானே குப்பை கொட்டினார். அவரை என்ன செய்தார்கள் காங்கிரஸ் ஆட்சியில்?
பதில்: ஒரு வேளை ஏதாவது செய்திருந்தால் அவர் மான் மாதிரி ஓடி எதிர்த்தரப்பில் சேர்ந்திருப்பார் என்ற பயமே காரணம். அப்படியேயிருந்தாலும் நடந்தது தவறுதான்.

6)கூறியத் அமைப்பினர் துப்பாக்கியுடன் தான் பேச்சு வார்த்தைக்கு வருவோம் என்கிறார்கள். அவர்களை காங்கிரஸ் அரசு என்ன செய்ய முடிந்தது?
பதில்: மிகவும் தவறான முன்னுதாரணமாக இது அமைந்ததற்கு அரசுதான் பொறுப்பு.

7) அசாமை ஆண்ட பிரபுல்ல குமார் மகந்தா உங்கள் பார்வையில் தீவிரவாதியா? அப்படி இருந்தால் அந்த மாநில மக்கள் அவரை எப்படி ஏற்றுக் கொண்டார்கள்?
பதில்: அசாம் பற்றி எனக்கு சரியாகத் தெரியாது. இருப்பினும் ஒன்று நிச்சயம். அவர் முறையாகத் தேர்தலில் நின்று ஜெயித்து முதல்வரானார். தனது எதிர் கோஷ்டிகளையெல்லாம் சகட்டுமேனிக்கு போட்டுத் தள்ளவில்லை.

8) இந்திரா கொலை முயற்சி, இராஜீவ் கொலை குற்றச்சாட்டு போன்றவற்றில் திமுகவுக்கு தொடர்பு உள்ளது என்று காங்கிரசார் பிரச்சாரம் செய்தனரே? பின்னர் அவர்களுடன் கூட்டணி வைத்தால் அது நியாயமா?
பதில்: அதெல்லாம் பார்த்து செயல்படும் நிலையிலா காங்கிரஸ் அல்லது பி.ஜே.பி. போன்ற கட்சிகளின் நிலை தமிழகத்தில் இருக்கிறது? ஐயோ பாவம் அவை. விட்டுவிடுங்கள்.

9) பல கொலைகளில் சம்பத்தப்பட்ட முன்னாளைய தீவிரவாத இயக்கம், பிரிவினை வாத இயக்கம் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவைச் சேர்ந்த சிபு சோரனை எப்படி காங்கிரஸ் அமைச்சரவையில் சர்ச்சைகளுக்கிடையில் சேர்க்க முடிந்தது?
பதில்: அரசியல்லே இதெல்லாம் சகஜமப்பா (நன்றி கவுண்டமணி)

10) அப்சல் என்னும் தண்டனை வழங்கப்பட்ட தீவிர வாதியை, தூக்கிலிடுவதை நிறுத்திவைக்க வேண்டி காஷ்மீர் முதலமைச்சர் குழாம் நபி ஆசாத் சப்பைக்கட்டுடன் பிரதமரைச் சந்திக்கலாமா?
பதில்: கவுண்டமணி சொன்னால் சொன்னதுதான்.

11) இராஜீவைத் முதுகில் தாக்கிய சிங்கள சிப்பாய்க்கு சிறிலங்கா அரசாங்கம் எவ்வளவு மரியாதை அளித்தது என்று தெரிந்தும் அவர்களோடு கொஞ்சிக் குலாவுவதில் காங்கிரஸ் அரசுக்கு என்ன மரியாதை அங்கு கிடைக்கும்? மரியாதை இல்லாத இடத்தில் பல்லிளிப்பது ஏனோ?
பதில்: அந்த சிப்பாய் செய்ததற்கு தண்டனை தந்தாயிற்று. அது முடிந்து வெளியிலும் அவன் வந்தாயிற்று. அயல் நாட்டு ராஜீய உறவுகளில் இதெல்லாம் மனதில் வைத்து கொண்டால் அரசு நடத்த இயலாது. நண்பனோ பகைவனோ ஒரு நாட்டுக்கு நிரந்தரம் அல்ல, அதன் அறிவார்ந்த தன்னலமே முக்கியம்.

12) கிழக்குத் தீமோர் இந்தோனேஷியாவில் இருந்து பிரிய முடிகிறது, ஏறக்குறைய அதே நிலை அல்லது அதைவிட மனித உரிமைகளை தரையில் போட்டு மிதிக்கும் நிகழ்வுதானே இன்று சிறிலங்காவில் நடந்து கொண்டிருக்கிறது? இவற்றையெல்லாம் சீர்தூக்கிப் பார்த்திருக்க வேண்டாமா?
பதில்: யார் பார்த்திருக்க வேண்டும் என்கிறீர்கள்?

ரமணா:
1. உயர் வகுப்பு ஏழைகளுக்கு இடஒதுக்கீடு எப்போது?,
மத்திய அரசுக்கு மாயாவதி அவர்களின் கேள்வி வரும் தேர்தலில் முற்பட்டோரின் வாக்குவங்கியை, தென் இந்தியாவில், குறிப்பாய் தமிழகத்தில் தன் பக்கம் ஈர்க்குமா?

பதில்: தெரியவில்லை. காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

2. சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்க்கும் ஜெ.வுடன் கூட்டணி ஏன் என்று சீதாராம் யெச்சூரியை பார்த்து திமுக தலைவர் கருணாநிதி அவர்களின் கேள்வி நியாயம்தானே?
பதில்: அதற்கு மேல் இன்னும் ஜோரான கேள்விகளை யெச்சூரி கருணாநிதி அவர்களைப் பார்த்து கேட்பாரே, அவையும் நியாயம்தானே?

3. திருமங்கலம் தேர்தலில் மு.க. அழகிரி அவர்கள், லதா அதியமான் மனுத் தாக்கல் சமயத்தில் உடன் சென்றது, திமுக வேட்பாளர் தேர்வில் இருந்த கசப்பு மறைந்து விட்டதை காட்டுகிறதா?
பதில்: இப்போதைக்கு பேரம் படிந்திருக்குமாக இருக்கும்.

4. இலங்கையில் தமிழரினப் படுகொலைக்கு காரணமாய் சொல்லப்படும் சி‌ங்கள அர‌‌சி‌ற்கு, ஆதரவ‌‌ளி‌க்கு‌ம் கா‌ங்‌கிர‌ஸ் அரசின் செயலை மதுரை நெடுமாற‌ன் க‌ண்டன‌ம் செய்துள்ளாரே?
பதில்: திமுக அரசையும் ஏதேனும் இம்மாதிரி கண்டனம் செய்துள்ளாரா, முக்கியமாக ராஜினாமா நாடகம் பற்றி?

5. பம்பாய் தீவிரவாதிகளின் தாக்குதல் தொடர்பாய், இந்திய ராணுவம் எந்த நேரத்திலும் பாகிஸ்தானை தாக்கலாம் என்று செய்தி பரவுவதால் பாகிஸ்தானில் போர் பயம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், என்ன நடக்கலாம் என எண்ணுகிறீர்கள்?
பதில்: இரு தேசங்களுக்குமே நீண்டகாலப் போர் பொருளாதார ரீதியில் கட்டுப்படியாகாது.

6. 2008 ஆண்டு முடியும் போது -உலகப்புகழ் பெற்ற பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடி வருகிறார்.புகழ் பெற்றவர்கள் ஏன் தன் உடல் நலனில் அக்கறை செலுத்துவதில்லை?
பதில்: கண்டிப்பாக செலுத்தியிருப்பார். என்ன, அதை ஓவராக செய்திருப்பார். பல மருந்துகளை விழுங்குவதும் ஆபத்தை வரவழைக்கும் விஷயம்தானே.

7. பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அவர்களின் உயிர்க் கொள்கையாம் மதுவிலக்கை தமிழகத்தில் படிப்படியாக அமல்படுத்தவேன் எனும் முதல்வர் கருணாநிதி அவர்களின் பேச்சு, திமுக, பாமக மீண்டும் தமிழக அரசியல் வானில் நெருங்கிறதா?
பதில்: ம்ன்னிக்கவும், முழு மதுவிலக்கு என்பது நட்க்காத விஷயம். இங்கு இவ்வளவு பேசும் பாமக தான் பலம் பொருந்திய எநிலையில் இருப்பதாக எண்ணியிருக்கும் பாண்டிச்சேரி மாநிலத்தில் இதை வலியுறுத்த இயலுமா? அதே சமயம் சமீபத்தில் 1972-ல் பலர் தடுத்தும் மீண்டும் குடிப்பழக்கத்தை இளைஞர்களுக்கு ஏற்படுத்தித் தந்த கருணாநிதி அவர்களை இவ்விஷயத்தில் நம்ப இயலாது.

8. பொடாவுக்கு இணையாகுமா இந்த இரண்டு சட்டங்கள், தேசியப் புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) மசோதா, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு திருத்த மசோதா (யு.ஏ.பி.ஏ.)?
பதில்: இணையாகாதுதான், இருப்பினும் இதுவாவது செய்ய மனம் வந்ததே என சோ அவர்கள் கூறுவதை நானும் ஆமோதிக்கிறேன்.

9.மங்களூர் இடைத்தேர்தலை நடத்தாமல் திருமங்கலம் தேர்தலை நடத்த கலைஞர் அவர்கள்தான் காரணம் என்று மதிமுக தலைவர் வைகோ அவர்களின், கு‌ற்ற‌ச்சா‌ட்டில் உண்மையுண்டா?
பதில்: என்னதான் இருந்தாலும் வைக்கோ கலைஞருடன் நெருங்கி பழகியவர் அல்லவா. கலைஞர் எப்போது என்ன முடிவு ஏன் எடுப்பார் என்பது அவருக்கு தெரியாமலா இருக்கும்.

10. அதலபாதாளத்திற்கு சென்றுள்ள ரியல் எஸ்டேட் வாணிபத்தை கரை சேர்க்க அரசு அறிவித்துள்ள வீட்டுக்கடன் வங்கிவட்டிக் குறைப்பு கம்மி என்பது சரியா?
பதில்: பலருக்கு வேலையே போயுள்ள நிலையில் குறைந்த வட்டிக்காக இருந்தாலும் கடனை வாங்கிக் கட்ட அவ்வளவு ஆர்வம் இருக்காதுதான்.

12. கலைஞரைவிட இரண்டு வயது மூத்த முதலியார்வாளுக்கு, அதிகாரம் இல்லாத பொதுச் செயலர் பதவிதான் பெரிசு, அதை விடமாடேன்,வேணா தம்பிக்கு உதவிதலைவர் கொடுங்க என்பது, காரியவாதித்தனத்தின் உச்சம் போல் தெரியவில்லையா?
பதில்: யார் அன்பழகனையா சொல்கிறீர்கள்? ஐயோ பாவம் அவர். ஏதோ இப்பதவியிலாவது இருந்து விட்டு போகட்டுமே. மேலும் தலைவரே தனது பதவியை விட்டுத்தர மனமில்லாமல் இருக்கும்போது அவரது உதாரணத்தைத்தான் இவரும் பின்பற்றுகிறார். என்ன தவறு?

13. கலைஞரே தனது தலைவர் பதவியை விட்டுத்தர தாராள மனதாய் இருக்கும் போது, 85 க்கு இருக்கும் பற்றற்ற தன்மை 87 க்கு இல்லை என்பது சரியா?
பதில்: அவர் மகனுக்கு அவர் விட்டுத் தருவதுதான் முறை. என்ன அவரது பற்றற்ற தன்மையா? காலை வேளையில் கிச்சு கிச்சு மூட்டாதீர்கள்.

14. கடைசியில் தளபதிக்கு பொருளாளர் பதவிதான் போலுள்ளது.வெண்னெய் திரண்டும் வரும் போது தாழியை உடைத்தவரை பற்றி தொண்டர்கள் என்ன நினைப்பார்கள்?
பதில்: யார் வீட்டு வெண்ணெய்? இவர் ஏன் விட்டுத்தர வேண்டும்? இது என்ன போங்கு?

15. கலைஞர் ஏன் முதலியாருக்கு இவ்வளவு சலுகை காட்டுகிறார், தனது முடிவுகளை அமலாக்குவதில், சிக்கல்களை ஏற்படுத்தும், தனி மனிதருக்கு?
பதில்: ஒரு வேளை இவரை சாக்காக வைத்து அழகிரிக்கு அதிக கோபம் வராமல் பார்த்து கொள்கிறாரோ தலைவர். அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கும்.

16. பொதுக்கூட்டத்தில் கலைஞரை தளபதியாய் ஏற்பேனே அன்றி, தலைவராய் ஏற்க மாட்டேன்.ஏன் என்றால் அப்படிச் செய்தால் என் மனைவி கூட மதிக்க மாட்டாள் என்றாரே! 40 ஆண்டானதால் கலைஞர் அதை மறந்துவிட்டு, அவரது செயல்களுக்கு செவி சாய்ப்பது ஏன்?
பதில்: 40 ஆண்டுகளுக்கு முன்னாலா? யு மீன் சமீபத்தில் 1968-ல்?


அனானி (24.12.2008 காலை 07.04-க்கு கேட்டவர்):
1. தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் திமுக, அதிமுக, மதிமுக, விஜயகாந்த் கட்சி, சரத்கட்சி, ராஜேந்திரர்கட்சி, கார்த்திக் கட்சி, இடதுசாரி மற்றும் வலதுசாரி, பாமக, காங்கிரஸ் உட்பட இடஒதுக்கீட்டுக் கொள்கையில், பொருளாதார அளவுகோல் இருக்கக் கூடாது என்று சொல்வதற்கும் இப்போதைய உங்களின் இந்தப் பதிவிற்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா?
பதில்: அப்பதிவில் குறிப்பிடப்பட்ட காமாட்சிநாதன் இட ஒதுக்கீடு பெற்று இந்த ஸ்காலர்ஷிப்பை பெறவில்லை. அதுவும் மத்திய அரசால் அவனது திறமைக்கு மட்டுமே கொடுக்கப்பட்டதில் மாநில அரசு போங்கு வேலை செய்ததுதான் புதுக்கோட்டுக்கு ஜூட். மற்றப்படி நீங்கள் இங்கு உதாரணம் காட்டும் அனைத்து கட்சிகளும் ஓட்டு அரசியலுக்காக கூறுவது அடாவடியே, அதை நீங்கள் சொல்லுவது போலெல்லாம் எடுத்து கொள்ள முடியாது.


அனானி (25.12.2008 காலை 07.19-க்கு கேட்டவர்:
கீழே கண்டுள்ளவற்றை உங்கள் ஸ்டைலில் உதாரணம் தந்து விளக்கவும்
பதில்: 1. மதவாதம்: இந்து மத துவேஷம்.
2. தமிழின உணர்வு: பார்ப்பன எதிர்ப்பு. அவர்கள் தமிழர்கள் அல்ல. தெலுங்கு நாயுடு, முதலியார், கன்னட பலிஜா நாயுடு ஆகியவர்கள் நம்மவர், மலையாளிகள் எம்.ஜி.ஆர். அவர்களைத் தவிர்த்து ஏனையோரை சேர்த்து கொள்ளலாம்.
3. தமிழ்ப்பற்று: ஆங்கில ஹிந்தி மொழி எதிர்ப்பு.
4. பகுத்தறிவு: வெவ்வேறு வெர்ஷன்களை உடைய ராமாயணங்க்ளிலிருந்து தமக்கு தேவையானதை தேர்ந்தெடுத்து காண்டக்ஸ்ட் பார்க்காது ராமரைத் தாக்குவது. தமிழர்களை துச்சமாக மதித்து தலைமைப் பொறுப்பு ஏற்க அவர்களுக்கு தகுதி இல்லை எனச் சொன்ன கன்னடியர் அதை எந்த காண்டக்ஸ்டில் சொன்னார் என்று பார்க்க வேண்டும் என அவருக்கு சப்பைக்கட்டு கட்டுவதற்காகத் தேடி நாக்கு தள்ள களைப்படைவது.
5. மதச்சார்பின்மை: இந்து மத துவேஷம், வேறென்ன? நோன்புக் கஞ்சிக்கு ஆதரவு, விபூதிக்கு கேலி மற்றும் கிண்டல் (சாய்பாபா தரும் மோதிரத்துடன் கூடிய விபூதி இதில் அடங்காது).


சேதுராமன்:
1. மீண்டும் கூவமா? முன்பே ஒரு தடவை "அழகுத் தமிழினில் பாட்டிசைத்து, தோணிகள் ஓட்டி விளையாடி" விட்டோம்! படகு குழாம்கள் மட்டும் மிஞ்சியிருக்கின்றன - எத்தனை கோடி செலவு??
பதில்: பழைய பிராஜக்டுகளை புதிப்பிப்பதும் நல்ல வியாபார யுக்தியே. :)))))))

2. அந்துலே விஷயம் உங்கள் அபிமான சோ ஒரு சின்ன பெட்டிக்குள் அடக்கி வாசித்திருக்கிறாரே! இவ்வளவு நடந்தும் எல்லோரும் மௌனம் சாதிப்பது, பழைய விவகாரங்களாலா?
பதில்: உண்மையை கூறப்போனால் அந்துலே இன்னும் அரசியலில் இருப்பதுதான் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அவரை பற்றிய கவனமே இத்தனை நாட்களாக இல்லை. திடீரென மறுபடியும் தன் இருப்பை காட்டிக்கொண்டுள்ளார். சோ அவர்களும் அவருக்கு எவ்வளவு முக்கியத்துவம் தரவேண்டுமோ அவ்வளவுதான் தந்திருக்கிறார். அதற்கு மேல் கூற அந்துலேயிடம் விசேஷம் என்ன இருக்கிறது?

3. மு.க.வின் புது டிஸ்கவரி - ராமாயணம் ஒரு சுற்றுலாக்கதை!! கூவத்தைப் பற்றிப் பேசும்போதும், கூடவே ராமாயணத்தையும் இழுக்க வேண்டுமா? ஒன்று பார்த்தீர்களா? கழகக் கண்மணிகளின் இந்த வேலைகளால் ராமாயணமும் இந்து மதமும் பிராபல்யமாகிக் கொண்டே இருக்கின்றன
பதில்: ராமர் இஞ்சினியரா என்று கேட்டவர் இப்போது ராமர் டூரிஸ்ட் கைடா என கேட்காமல் இருந்தால் சரி.


அனானி (25.09.2008 மாலை 04.09-க்கு கேட்டவர்:
1. எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வின் தற்போதைய நிலையென்ன?
பதில்: எந்த பயமும் ஒரே மாதிரி விடாது ஆட்சி செய்ய இயலாது. நாளடைவில் அது பழகிவிடும். முதலில் கேன்சரை கண்டு பயந்தனர். இப்போது சிகிச்சைகள் அதற்கு வந்து விட்டபோதிலும் இன்னும் அது அபாயகரமான நோய்தான். ஆனால் அது பற்றி முன்பு வந்தது போல சினிமாக்கள் வருகின்றனவா? எய்ட்ஸும் அது மாதிரித்தான். முதலில் அது என்ன என்று தெரியாமல் பயந்தனர். இப்போது அது புழக்கத்தில் வந்து பல காலம் ஆகிவிட்டது. ஆகவே ஒரு மாதிரி அதை மறந்து வேறு பயங்கள் படுகின்றனர். எய்ட்ஸை வெற்றி கொள்ள நிறைய உழைப்பு தேவைப்படும். அந்த நிலையில் மட்டும் அதைப் பிரச்சினையாக பார்க்க பழகிவிட்டனர் எனத் தோன்றுகிறது.

2. இலஞ்சம் வாங்கும் பெண் ஊழியர்கள் நாடு எங்கே போகிறது?
பதில்: ஊழலுக்கு ஆண் என்ன பெண் என்ன? ஆண்கள் லஞ்சம் வாங்கியதற்கும் அவர்தம் மனைவியர்/காதலிகளின் தேவைக்காகவும்தானே. இப்போது வாய்ப்பு கிடைத்ததில் பெண்களும் வாங்குகின்றனர்.

3. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் எப்படி, எங்கே இருக்கிறார்?
பதில்: ஏன் அவருக்கென்ன? நன்றாகத்தானே இருக்கிறார்? மறுபடியும் அவரை பிரதமர் வேட்பாளராக பாஜக தரப்பில் நிறுத்தலாமா என்று அக்கட்சியினர் சிலர் யோசிப்பதாக அறிகிறேன்.

4. மாநில அரசு அலுவலகங்களில் நடக்கும் ஊழல்கள் கொடிகட்டி பறக்கிறதே?
பதில்: மத்திய அரசு அலுவலகங்கள் ஊழலில் பின் தங்கியுள்ளன என்பதா உங்கள் வாதம்? அவற்றுக்கான கிரெடிட்டுகளைத் தர மறுப்பது அநியாயம்.

5.பாமக-சிறுத்தை உறவு இப்போது எப்படி?
பதில்: பாமகவே குழப்பத்தில் உள்ளது. இதில் விடுதலை சிறுத்தைகளை பற்றி நினைக்க எங்கே நேரம். பதிவர் குழலி இன்னும் ஆதண்டிக்கான பதிலை இக்கேள்விக்கு தர இயலும்.

6. மகளிருக்கு தொடர்ந்து அரசின் சலுகைகள், ஆண்கள் பாவமில்லையா?
பதில்: இப்படியெல்லாம் கேட்டால் நீங்கள் ஆணாதிக்கவாதியாக அடையாளம் காட்டப்படுவீர்கள். உஷார்.

7.மதவெறியர்கள், தீவிரவாதிகள் இவர்களை திருத்த என்ன வழி?
பதில்: முதலில் அவர்களுக்கு மட்டுமின்றி அவர்களுக்கு உதவுபவர்களுக்கும் தண்டனைகளை கடுமையாக்கினால் பாதி பிரச்சினை குறையும்.

8 .டி.ராஜேந்தர் எங்கே ஆளையே காணோம்?
பதில்: என்ன எங்கும் காணவில்லையா? கொஞ்ச நாளைக்காவது நாம் மச்சி, பச்சி, கச்சி ஆகிய இலக்கிய சொற்களைக் கேட்காது நிம்மதியாக இருப்போமே.

9. தே.மு.தி.க. விஜயகாந்திற்கு அவரது கட்சியின் செலவுகளுக்கு எங்கிருந்து பணம் வருகிறது? யார் கொடுக்கிறார்கள்?
பதில்: டமில் மக்கல் கொடுப்பதாக அவர் கூறலாம்.

10. காங்கிரஸ் - தி.மு.க. உறவு தொடருமா? பிரியுமா?
பதில்: பாராளுமன்றத் தேர்தலில் கூட்டணி நிச்சயம் இருக்கும். ஆனால் அதில் திமுக தோற்றால் காங்கிரஸ் அதிமுகாவை நாடும். திமுகவுக்கு அதிக சீட்டுகள் கிடைத்து காங்கிரஸ் மத்தியில் பிளாங்கியடித்தால், மந்திரி பதவி கிடைக்கும் போலிருந்தால் திமுக பாஜக ஒன்றும் தீண்டத்தகாத கட்சி இல்லையே என கூறி அக்கட்சியுடன் உறவு கொள்ளலாம். இதையெல்லாம் கூற ஒரு திறமையும் தேவையில்லையே பெரிசு எனக் கூறும் முரளி மனோஹர் சரியாகத்தான் பேசுகிறான்.

11. பிரதமர் மன்மோகன்சிங்கின் ஆட்சியை பாராட்டலாமா?
பதில்: பொருளாதார கொள்கைக்காகவும், அமெரிக்காவுடன் அணு ஆயுத ஒப்பந்தத்தை நிறைவேற்றியதற்காகவும் அந்த அரசை பாராட்டலாம்

12. நிகழ்காலத்தில் ஒரு நடிகையின் கணவனுக்கு கிடைக்கும் மரியாதை பார்த்தபிறகும் நடிகையை மணக்க முன் வருபர் நிலை?
பதில்: மரியாதை யாருக்கு வேண்டும், டப்பு கிடைக்கிறதா என்ற நிலை எடுப்பவர்களுக்கு பஞ்சம் ஏது இந்த நாட்டில்?

13. வில்லன் நடிகர் ரகுவரன் சாவு,பிற குடிகார நடிகர்களுக்கு ஒரு பாடமாகுமா?
பதில்: அவர் போதைப் பொருள் அதிகம் உட்கொண்டதால்தான் மரணம் அடைந்தார் என்றல்லவா கேள்விப்பட்டேன். எது எப்படியானாலும் அவருக்கு முன்னாலேயே பல நடிகர்கள் குடியால் சீரழிந்துள்ளனர். அவர்களைப் பார்த்தும் திருந்தாதவர்கள் ரகுவரனை மட்டும் பார்த்து திருந்துவார்கள் என ஏன் எதிர்ப்பார்க்க வேண்டும்?

14.பங்கு மார்க்கெட் மேலே போவதும் புரியவில்லை?கீழே வீழ்வது புரியவில்லயே? உங்களுக்கு எப்படி?
பதில்: எனக்கு பங்கு மார்க்கெட் எப்போதுமே புரிந்ததில்லை. ஆகவே அதில் நான் ஈடுபட்டதே இல்லை. மற்றப்படி இம்மாதிரி கேள்விகளுக்கெல்லாம் நண்பர் வால்பையன்தான் சரி.

15.பாராளுமன்றத் தேர்தல் முன்கூட்டியே வருமா?
பதில்: பிப்ரவரியில் வந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

16. கம்யூனிஸ்டுகள் மேற்கு வங்கத்தில் ஆட்சியை அங்குள்ள மக்கள் பாராட்டுகிறார்களா?
பதில்: பாராட்டுகிறார்களோ இல்லையோ ஓட்டு போட்டுவிடுகிறார்கள்.

17. தமிழக அரசின் வெள்ள நிவாரண உதவிகள் -2000-பணம்-10 கிலோ அரிசி அடுத்த தேர்தலில் திமுகவுக்கு கை கொடுக்குமா?
பதில்: அதிருக்கட்டும், அவை கிடைக்காதவரது கோபம் பற்றியும் யோசிக்கலாமே.

18. சென்னையில் மேம்பாலங்கள் பற்றிய வழக்கு என்னாச்சு?
பதில்: கிணற்றில் போட்ட கல்

19.ஒகேனக்கல் குடிநீர்த் திட்டத்தை முட்டுகட்டை போடும் கர்நாடக அரசை, மத்திய அரசு கண்டிக்காதது ஏன்?
பதில்: கர்நாடகாவில் எக்கட்சி ஆட்சியில் இருந்தாலும் தமிழகத்துக்கு அப்படித்தான் முட்டுக்கட்டை போடுவார்கள். இப்போது மத்திய அரசு கர்நாடக அரசை கண்டிக்கும் என நினைக்கவில்லை.

20. பூமிதானத் தலைவர் வினோபாவேவைப் போன்ற நல்ல மனதுக்காரர்கள் இந்தியாவில் யாராவது உள்ளனரா?
பதில்: பலர் உள்ளனர், விளம்பரம் இன்றி. இதே வினோபா நெருக்கடி நிலையை ஆதரித்தார் என்பதால் எனக்கு அவர் மேல் நல்ல அபிப்பிராயம் இல்லை.

21. 2008 ஆண்டில் வெற்றிகரமான எழுத்தாளர் என்று யாரைச் சொல்லலாம்?
பதில்: ஜே.கே.ரௌலிங் அவரது ஹாரி பாட்டர் புத்தகங்களுக்காக. தமிழில் ஜெயமோகன்.

22. 3 ஜி சேவையால் செல்போன் கட்டணங்கள் இனி கூடுமா அல்லது குறையுமா?
பதில்: குறையத்தான் வேண்டும்.

23. பொது இடங்களில் புகைபிடிப்பவரை தடை செய்யும் சட்டம்?
பதில்: போலீஸ்காரருக்கு மாதக்கடைசி வருமானத்துக்கு இன்னொரு வழி திறக்கப்பட்டுள்ளது.

24.கடன் அட்டை வாங்கி அல்லலுறுவர் பற்றி உங்கள் கருத்து?
பதில்: அவர்கள் முட்டாள்கள். வரவுக்கு மீறி செலவு செய்யத் தூண்டும் கடன் அட்டைகளை அவர்கள் வாங்கியிருக்கவே கூடாது. இப்பிரச்சினையை நான் எனது டெலிமர்க்கெட்டிங் என்னும் கூத்து என்ற பதிவில் போகிறபோக்கில் தொட்டுள்ளேன்.

25.ஒரு பக்கம் தொடர் மழை, மறுபக்கம் வறட்சி-பருவகாலத்தில் ஏன் இந்த மாற்றம்?
பதில்: இம்மாதிரி வானிலை குளறுபடிகள் எப்போதுமே உள்ளதுதான். என்ன, நமக்கு அது பற்றிய செய்திகள் தற்போதெல்லாம் உடனுக்குடன் கிடைக்கிறது. அவ்வளவே. பழங்காலங்களில் மக்கள் பாவம் செய்வதால் இம்மாதிரி நடக்கிறது என்றெல்லாம் ஃபிலிம் காட்டினார்கள். இப்போதெல்லாம் அப்பேச்சு குறைந்துள்ளது அவ்வளவே.


மீண்டும் அடுத்தவாரம் சந்திப்போமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

137 comments:

Unknown said...

For the past 5 weeks , Dondu's Q & A is published exatly at 0500 a.m.( ie . 28-11-2008)


Hats off to Sri Dondu Ragavan

-ramakrishnahari


WISHING
YOU
A
NEW
YEAR
FILLED
WITH
NEW
HOPE
NEW
JOY
AND
NEW
BEGINNINGS


- ramakrishnahari and
all well-wishers.

dondu(#11168674346665545885) said...

@ராமகிருஷ்ணஹரி
இது ஒன்றும் பிரும்மவித்தையே இல்லை. பிளாக்கரில் இந்த வசதி உண்டு. எந்த ஒரு இடுகையும் வரும் நாட்களில் எப்போது எத்தனை மணிக்கு வெளியாக வேண்டும் என்பதை செட் செய்து வைக்க இயலும்.

கேள்வி பதில்களை பொருத்தவரை இப்போதெல்லாம் வியாழன் இரவு 11 மணியளவில் எல்லா வேலைகளையும் முடித்து வெள்ளி காலை 5 மணிக்கு வருமாறு செட் செய்து விடுகிறேன். அதுபாட்டுக்கு கில்லி மாதிரி வந்து விடும், நான் கணினி பக்கமே போகாமல் இருந்தாலும் கூட.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Unknown said...

Respected Dondu sir,

Some 6 months back I was fortunate enough to participate in a special Bhajan conducted by one sathu from North India.(Gujarat)

In that he has preached to chant as follows.

jai
rama
krishna
hari

jai
rama
krishna
hari

jai
rama
krishna
hari

101 times daily

He further told ,in this kaliyuga
chanting god's name will relieve you from all your worries and problems and elevate you to a state of ecstasy.

-ramakrishnahari.


wishing you all the best

Anonymous said...

//மாறன் சகோதரர்கள் வெறும் அதிர்ஷ்டத்துடன் நின்று விடவில்லை. அப்படியிருந்திருந்தால் மு.க. முத்து ரேஞ்சில்தான் இருந்திருப்பார்கள். சன் டிவி குழுமம் அவர்கள் முழு உழைப்பையும் பிரதிபலிக்கிறது. அதை தக்க வைத்து கொள்ள தந்திரம், அலம்பல், பந்தா ஆகிய உத்திகளை பயன்படுத்தத்தான் வேண்டும்.//


பலே உத்திகள்:

1.பக்கத்துக் கடைக்காரனை தானே முதலில் மிரட்டுதல்
2.பணியவில்லை அடியாட்களை வைத்து மிரட்டுதல்
3.கொஞ்சம் பணம் கொடுத்து ஒதுங்கிப் போ என சொல்லுதல்
4.முரண்டு பண்ணிலால் ஏதாவது சாக்கை வைத்து கடையை அடித்து நொறுக்குதல்
5.அரசன் கூட சேர்ந்து கொண்டு உண்டு இல்லை என்று பண்ணுதல்.


இவைகளைதான் வியாபரத்தில் உத்திகள்,தந்திரங்கள்,திறமைகள்,பிழைக்கத் தெரிந்தவன் என்று இந்த உலகமும்,தாங்களும் பாராட்டினால்

----------------------------

இவர்களையும் விட்டு விடுங்களேன்.
இவர்களை மட்டும் விரட்டி விரட்டி சமுகம் பிடிக்கிறதே
( ஒரு பேச்சுக்ககாக சொல்கிறேன். இந்த பாதக செயல்களை ஞாயப்படுத்த வில்லை-ஒரு விவதாத்துக்காக மட்டும் எடுத்துக் கொள்ளவும்)

1.லஞ்சம் வாங்கும் அலுவலர்கள்
2.திருட்டு,கொள்ளையை தொழிலாய் கொண்டுள்ள வறியவர்கள்
3.அடுத்தவர் சொத்தை பொய் கையெழுத்து போட்டு, லவட்டுபவர்கள்
4.கள்ள மார்க்கட் திறமை சாலிகள்
5.கலப்பட மகா ராஜாக்கள்
6.பதுக்கல் செய்யும் பலவான்கள்
7.மணல் கொள்ளையர்கள்
8.தண்ணீர் உறீஞ்சு திருடர்கள்
9.மின்சாரத் கன்னக் கோலர்கள்.
10 .வரியேய்ப்பு செய்யும் சாமர்த்திய சாலிகள்.


மனதில் கைவைத்து சொல்லுங்கள்

வாழ்க்கையின் ஆரம்பத்தில் சாப்பாட்டிற்கே வழியின்றி,படிப்பு அறிவு ஏதும் இல்லாமல் தனது ஆரம்ப கால வாழ்க்கயை தொடங்கிய பலர் கடினமாய் உழைத்து இன்று சதாரண நிலையிலே இருக்கும் போது ஒரு சிலர் மட்டும் ,மகா கோடிஸ்வரர்களாய் ,தொழில் அதிபர்களாய்,ஆலை அதிபர்களாய் நகர்வலம் வருகிறர்களே அவர்கள் அத்துணை பேரும் கடின உழைப்பை மட்டடும் வைத்தா இந்த அதி உச்ச நிலைக்கு உயர்ந்தார்கள்?


சட்டத்து உட்பட்டா அத்துணை செல்வமும் சிலரிடம் குவிகிறது.

தவறுகள் பெரிய லெவலில் செய்யப் படும்போது அதற்கு மகுடம் சூட்டி அழகு பார்க்கிறதே உலகம்.

இவர்கள் நம்மை ஏமாற்றலாம்

மகர நெடுங்குழைக்காதரை ஏமாற்ற முடியுமா?

அரசன் அன்று கொல்வதில்லை( அதுதான் பங்கு கிடைத்துவிடுகிறதே)

ஆனால்
தெய்வம் ...........?

Anonymous said...

கறுப்புச் சட்டை காவலர் கி.வீரமணி, எண்சோதிடப்படி தனது திருநாமத்தை,
மீ.கி.வீரமணி என்று மாற்றியுள்ள தாய் தினமலர் சொல்லுகிறதே

பகுத்தறிவு வாதங்களெல்லாம் பக்தியை நோக்கியா?

சோதிட நம்பிக்கையில் தொடங்கும் சீர்திருத்தம் கடவுள் நம்பிக்கையில் முடியுமா?
வீரமணியாருக்கு வயதாவதுதான் காரணமா?


காங்கிரஸ்-அதிமுக கூட்டணி என்ற வதந்தி என்றவுடன் கலைஞர் வீரமணி,திரு,மருத்துவர் மேல் சட்டம் பாயும் என்கிறாரே?

ஆளவந்தான் said...

//
@ராமகிருஷ்ணஹரி
இது ஒன்றும் பிரும்மவித்தையே இல்லை. பிளாக்கரில் இந்த வசதி உண்டு. எந்த ஒரு இடுகையும் வரும் நாட்களில் எப்போது எத்தனை மணிக்கு வெளியாக வேண்டும் என்பதை செட் செய்து வைக்க இயலும்.
//
பிரம்ம வித்தை இல்ல தான்.. ஆனால் அதை நல்லா நோட் பண்ணியிருக்காருல.. பாரட்டியே ஆகனும்.


//
எப்போது எத்தனை மணிக்கு வெளியாக வேண்டும் என்பதை செட் செய்து வைக்க இயலும்.
//
தகவலுக்கு நன்றி

Anonymous said...

//வாழ்க்கையின் ஆரம்பத்தில் சாப்பாட்டிற்கே வழியின்றி,படிப்பு அறிவு ஏதும் இல்லாமல் தனது ஆரம்ப கால வாழ்க்கயை தொடங்கிய பலர் கடினமாய் உழைத்து இன்று சதாரண நிலையிலே இருக்கும் போது ஒரு சிலர் மட்டும் ,மகா கோடிஸ்வரர்களாய் ,தொழில் அதிபர்களாய்,ஆலை அதிபர்களாய் நகர்வலம் வருகிறர்களே அவர்கள் அத்துணை பேரும் கடின உழைப்பை மட்டடும் வைத்தா இந்த அதி உச்ச நிலைக்கு உயர்ந்தார்கள்?


சட்டத்து உட்பட்டா அத்துணை செல்வமும் சிலரிடம் குவிகிறது.

தவறுகள் பெரிய லெவலில் செய்யப் படும்போது அதற்கு மகுடம் சூட்டி அழகு பார்க்கிறதே உலகம்//


அம்பானியைச் சொல்கிறாரோ?

ஹிந்தி அபிசேக் பச்சனின் குரு படம் பார்த்திருப்பாரோ?

தொலைதொடர்புச் சேவையில் அரசுத்துறைக்கு நியாயமாய் கொடுக்கவேண்டிய , துட்டு கொடுக்காமல்
ஜகா வாங்குவோரையா?


முதலில் சட்டத்தை மீறு
கொழுத்த லாபம் வந்ததும்
சட்ட மீறலை சட்டமாக்கு

இது எல்லாம் இங்கே வாடிக்கைதானே.

ஆளவந்தான் said...

//கறுப்புச் சட்டை காவலர் கி.வீரமணி, எண்சோதிடப்படி தனது திருநாமத்தை,
மீ.கி.வீரமணி என்று மாற்றியுள்ள தாய் தினமலர் சொல்லுகிறதே
//
அதை தான் இங்கே ஒரு பதிவர் பொறிந்து தள்ளியுள்ளார்

சுட்டி இங்கே

Anonymous said...

//கலைஞரே தனது தலைவர் பதவியை விட்டுத்தர தாராள மனதாய் இருக்கும் போது, 85 க்கு இருக்கும் பற்றற்ற தன்மை 87 க்கு இல்லை என்பது சரியா?
பதில்: அவர் மகனுக்கு அவர் விட்டுத் தருவதுதான் முறை. என்ன அவரது பற்றற்ற தன்மையா? காலை வேளையில் கிச்சு கிச்சு மூட்டாதீர்கள்.//

கலைஞர், அன்பழகனார் பொதுச் செயலளர் பதவியை தளபதிக்கு விட்டுத்தர மனமில்லை என்ற தகவல் கேட்டதும்,கலைஞர்,அன்பழகனாரின் இல்லத்திற்கே சென்று,"அண்ணாத்தை நிங்கள் வேண்டுமென்றால் திமுகவின் தலைவராய் இருங்கள்" என்று சொன்னதாய் கு. ரிப்போர்டர் சொல்லியுள்ளது.

சரி , டோண்டு ஐயா,
ஒரு சந்தேகம்

அறையில் அவர்கள் இருவரும் கதைவை மூடிக் கொண்டு, ரகசியமாய் பேசியது எல்லாம் எப்படி இந்த பத்திரிக்கையாளர்களுக்கு தெரிகிறது.
யார் போட்டுக் கொடுக்கிறார்கள்.

என்ன கொஞ்சம் கண் காது வைத்து எழுதிவிடுகிறார்கள்.
ஆனலும் அவர்கள்து கணிப்புகள்,கண்டுபிடிப்புகள் பெரும்பாலும் அரங்கேறிவிடுகிறதே.

Anonymous said...

If Dinamalar writes "Veeramani" has changed his initial because of numerology, then his allakkais get angry here in tamil blogdom.

Do they have guts to say exact -so-called their paguththarivu reason for Karunanidhi's yellow color shawl?!

Anonymous said...

//: நீங்கள் சொன்ன ஐந்துமே வெவ்வேறு அளவில் செயல் புரிந்துள்ளன. முதலில் அதிர்ஷ்டத்தை எடுத்து கொள்வோம். சம்பந்தப்பட்ட குடும்பத்தில் பிறந்ததே அதிர்ஷ்டம். ஆனால் அந்த குடும்பம் அவ்வாறான நிலைக்கு வந்ததன் காரணம் அதன் மூத்த உறுப்பினர் கட்சியில் செய்த உழைப்பு. அவருடைய பல எதிரிகள் கட்சியிலிருந்து தாமே விலகியும், ஓரம் கட்டப்பட்டும் அவரது முன்னேற்றத்தை எளிதாக்கியுள்ளனர். மாறன் சகோதரர்கள் வெறும் அதிர்ஷ்டத்துடன் நின்று விடவில்லை. அப்படியிருந்திருந்தால் மு.க. முத்து ரேஞ்சில்தான் இருந்திருப்பார்கள். சன் டிவி குழுமம் அவர்கள் முழு உழைப்பையும் பிரதிபலிக்கிறது. அதை தக்க வைத்து கொள்ள தந்திரம், அலம்பல், பந்தா ஆகிய உத்திகளை பயன்படுத்தத்தான் வேண்டும்//

ஒரே கொழப்பமாயிருக்கே

Anonymous said...

//If Dinamalar writes "Veeramani" has changed his initial because of numerology, then his allakkais get angry here in tamil blogdom.

Do they have guts to say exact -so-called their paguththarivu reason for Karunanidhi's yellow color shawl?!//

அப்படி போடு சிங்கக்குட்டியே

Anonymous said...

//அதை தான் இங்கே ஒரு பதிவர் பொறிந்து தள்ளியுள்ளார்

சுட்டி இங்கே//

மெய்யாலுமா?
இப்பதான தலைவரு, ஸ்டாம்பு விழாவிலே, தி.மலரை, குஷியா பாராட்டினாரே!
அதுக்குள்ளே
கவுத்துட்டங்கிளே! .

Anonymous said...

//படித்தேன். சிந்தனையைத் தூண்டிய கட்டுரை. கருத்து என்னவோ எளிமையானதுதான். வரவுக்குள் செலவழித்து எதிர்க்காலத்துக்கு தேவையானதை சேமிப்பதற்கு ஈடாக எதுவுமே இல்லைதான்//


வரவு எட்டணா
செலவு பத்தணா
கட்சியில் அமெரிக்க
கதை தான்

Anonymous said...

//பை தி வே, இந்த உரலுக்கு நன்றி. //


வாத்யாரே கொன்னுட்டீங்க!

Anonymous said...

//படகுடன் கூட ஏணியும் மேலெழும்பும். நானே இக்கேள்வியை கேட்டுள்ளேன்.//

வாத்யார் கொஸ்டினு இனி வருமா?

Anonymous said...

//பேரம் முதலில் சரியாகப் படியவில்லையாக இருந்திருக்கும். இப்போது படிந்து விட்டிருக்கும். வேறு என்ன காரணம் இருக்க இயலும்? //

வேணாம் விட்டுருங்க

பெரிய இடத்து சமாசாரம்

அப்புறம் டேஞ்சர் சாமி

Anonymous said...

//அதுதான் கருணாநிதியின் ராசி என்று அவரே பிற்காலத்தில் நொந்து கொண்டாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை//


எத்தனை தபா சொல்றது
தலவருட்ட வேண்டாம்

Anonymous said...

//மற்றுமொரு இந்தியா பாகிஸ்தான் போருக்கு வழிவைக்காதா?
பதில்: நீடித்த்த அளவில் போரை நடத்த இரு நாடுகளின் பொருளாதாரமுமே இடம் கொடுக்காது என்பதுதான் நிஜம்.

டியர்க்டா சொல்லுவிகளா

சண்டை வேணுமா? வேண்டாமா?

Anonymous said...

//அதில் வேறு ஒரு அடிப்பொடி தனக்கு சாயிபாபா தந்தது போதாது என்ற பொருமல் வேறு பட்டுள்ளார்//


ஆட்டோ வீட்டுக்கு வரப்போவுது

Anonymous said...

//மூட நம்பிக்கைதான். ஆனால் அதை அலட்சியம் செய்து ஒரு அரசியல்வியாதி நிஜமாகவே பதவி இழந்தால் நீங்களா அப்பதவியை அவருக்கு திரும்பத் தருவீர்கள்? ஆகவே எதற்கு வம்பு என ஒதுங்கி போகின்றனர் போலும்//

ஆ இது கரைக்ட்டு

Anonymous said...

//அனுகூல சத்ரு.


படிக்காத பயலுவளுக்கு இது புரியுமா?

Anonymous said...

//எல்லாமே யார் யாருக்கு எவ்வளவு வாய்க்கரிசி போடுகிறார்கள் என்பதை பொருத்தது.//


ஓ லஞ்சப் பணத்துக்கு இப்ப்டியொரு நாமமா?

Anonymous said...

//அனானி (அவரது கேள்விகள் இப்பதிவிலிருந்து சுடப்பட்டவை என சம்பந்தப்பட்ட பதிவர் தெரிவித்துள்ளார். அது உண்மை என்பதை உறுதி செய்து கொண்டேன்)/

நியாயஸ்தன் வாழ்க! வாழ்க!

Anonymous said...

///// Anonymous said...
//அனானி (அவரது கேள்விகள் இப்பதிவிலிருந்து சுடப்பட்டவை என சம்பந்தப்பட்ட பதிவர் தெரிவித்துள்ளார். அது உண்மை என்பதை உறுதி செய்து கொண்டேன்)/

நியாயஸ்தன் வாழ்க! வாழ்க!////

.))))))))))))))))))

வால்பையன் said...

//Is half of two plus two equal to two or three?
பதில்: Three. Well, it seems that it could almost be either, but if you follow the mathematical orders of operation, division is performed before addition. So... half of two is one. Then add two, and the answer is three.//


பீட்டர் பீட்டர் பீட்டர்

வால்பையன் said...

//How much dirt would be in a hole 6 feet deep and 6 feet wide that has been dug with a square edged shovel?
பதில்: ஒன்றுமே இருக்காது. இருந்தால் அது ஓட்டையே அல்ல. //


இருக்கும்
அங்கே
அதே
அளவுள்ள
வெற்றிடம்
இருக்கும்.

Anonymous said...

//Anonymous said...
//அனுகூல சத்ரு.


படிக்காத பயலுவளுக்கு இது புரியுமா?///

it is too much

Anonymous said...

///Anonymous said...
//மூட நம்பிக்கைதான். ஆனால் அதை அலட்சியம் செய்து ஒரு அரசியல்வியாதி நிஜமாகவே பதவி இழந்தால் நீங்களா அப்பதவியை அவருக்கு திரும்பத் தருவீர்கள்? ஆகவே எதற்கு வம்பு என ஒதுங்கி போகின்றனர் போலும்//

ஆ இது கரைக்ட்டு///

well said

வால்பையன் said...

//பங்கு மார்க்கெட் மேலே போவதும் புரியவில்லை?கீழே வீழ்வது புரியவில்லயே? உங்களுக்கு எப்படி?
பதில்: எனக்கு பங்கு மார்க்கெட் எப்போதுமே புரிந்ததில்லை. ஆகவே அதில் நான் ஈடுபட்டதே இல்லை. மற்றப்படி இம்மாதிரி கேள்விகளுக்கெல்லாம் நண்பர் வால்பையன்தான் சரி.//

பங்குசந்தை ஒரு சூதாட்டம் ரிட்டர்ன்ஸ்

விரைவில்

வால்பையன் said...

எல்லா நண்பர்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்

Anonymous said...

//வால்பையன் said...
//Is half of two plus two equal to two or three?
பதில்: Three. Well, it seems that it could almost be either, but if you follow the mathematical orders of operation, division is performed before addition. So... half of two is one. Then add two, and the answer is three.//


பீட்டர் பீட்டர் பீட்டர்//


?

Anonymous said...

//வால்பையன் said...
//பங்கு மார்க்கெட் மேலே போவதும் புரியவில்லை?கீழே வீழ்வது புரியவில்லயே? உங்களுக்கு எப்படி?
பதில்: எனக்கு பங்கு மார்க்கெட் எப்போதுமே புரிந்ததில்லை. ஆகவே அதில் நான் ஈடுபட்டதே இல்லை. மற்றப்படி இம்மாதிரி கேள்விகளுக்கெல்லாம் நண்பர் வால்பையன்தான் சரி.//

பங்குசந்தை ஒரு சூதாட்டம் ரிட்டர்ன்ஸ்

விரைவில்//


attai kadithtu mattai kadithtu
kadisiyile
manusaalai kadikkumaa?

perumale!

soodu kanda punaikal
inime pal kinnammaa
vendave vendam

Anonymous said...

பதில்: குற்றவாளிகளாக காணப்பட்டவர்கள் தூக்கில் போடப்பட்டாயிற்று. ஆனால் இது ஒரு துன்பியல் சம்பவம் மட்டுமே என நீட்டி முழக்கும் பிரபாகரன் இன்னும் தேடப்படும் குற்றவாளி. மாட்டிக் கொண்டால் தூக்கு தண்டனை பெற வேண்டியவர். அவரைத் தலைவராக கொண்ட விடுதலைப் புலியினரை எப்படி ஏற்று கொள்வது?


inime sankuthaan

Anonymous said...

//அது அவரது மதநம்பிக்கை.//

ஊருக்கெல்லம் ஒரு நீதி
இவருக்கு மட்டும்....

Anonymous said...

//ஒரு காலக்கட்டத்தில் மூப்பனார் பிரதமராக வாய்ப்பு வந்தது. அப்போது முட்டுக்கட்டை போட்டவர் கலைஞர் என்று ஞாபகம்//

பழையதை ஞாபகப்டுத்தாதிங்க

Anonymous said...

//ஒரு வேளை ஏதாவது செய்திருந்தால் அவர் மான் மாதிரி ஓடி எதிர்த்தரப்பில் சேர்ந்திருப்பார் என்ற பயமே காரணம். அப்படியேயிருந்தாலும் நடந்தது தவறுதான்//

எல்லாம் ஒட்டு படுத்திற பாடு சாமியோவ்

Anonymous said...

//மிகவும் தவறான முன்னுதாரணமாக இது அமைந்ததற்கு அரசுதான் பொறுப்பு.//

முதல் கோணலு முற்றும் கோணலு

Anonymous said...

//அசாம் பற்றி எனக்கு சரியாகத் தெரியாது. இருப்பினும் ஒன்று நிச்சயம். அவர் முறையாகத் தேர்தலில் நின்று ஜெயித்து முதல்வரானார். தனது எதிர் கோஷ்டிகளையெல்லாம் சகட்டுமேனிக்கு போட்டுத் தள்ளவில்லை.//


அசாமிலே கதையே தனி
அதபத்தி பேசக்கூடாது

Anonymous said...

// அதெல்லாம் பார்த்து செயல்படும் நிலையிலா காங்கிரஸ் அல்லது பி.ஜே.பி. போன்ற கட்சிகளின் நிலை தமிழகத்தில் இருக்கிறது? ஐயோ பாவம் அவை. விட்டுவிடுங்கள்//

இதைத்தன் என் தலைவரு கோயபல்ஸ் வேலை என்பாரு

Anonymous said...

//அரசியல்லே இதெல்லாம் சகஜமப்பா (நன்றி கவுண்டமணி)//


ஒரே குட்டையில் உறிய மட்டைகள் தானே!

Anonymous said...

//கவுண்டமணி சொன்னால் சொன்னதுதான்.
//


அடுத்த தேர்தலில் காஷ்மீர் வாழ் முஸ்லீம் ஒட்டுக்காக
தானே-

Anonymous said...

//அந்த சிப்பாய் செய்ததற்கு தண்டனை தந்தாயிற்று. அது முடிந்து வெளியிலும் அவன் வந்தாயிற்று. அயல் நாட்டு ராஜீய உறவுகளில் இதெல்லாம் மனதில் வைத்து கொண்டால் அரசு நடத்த இயலாது. நண்பனோ பகைவனோ ஒரு நாட்டுக்கு நிரந்தரம் அல்ல, அதன் அறிவார்ந்த தன்னலமே முக்கியம்//

அவரு பொழப்பை கெடுத்திருவீக போல் இருக்கு

மறப்போம் மன்னிப்போம்

Anonymous said...

//யார் பார்த்திருக்க வேண்டும் என்கிறீர்கள்?//


இருந்தாலும் உங்களுக்கு நொம்ப தெனாவெட்டுதான்

Anonymous said...

//தெரியவில்லை. காலம்தான் பதில் சொல்ல வேண்டும். //

ஆசை தோசை அப்பளம் வடை

Anonymous said...

//அதற்கு மேல் இன்னும் ஜோரான கேள்விகளை யெச்சூரி கருணாநிதி அவர்களைப் பார்த்து கேட்பாரே, அவையும் நியாயம்தானே//

இதுதானே ஐயர் குசும்பு

Anonymous said...

//இப்போதைக்கு பேரம் படிந்திருக்குமாக இருக்கும்.//


நவ திருப்பதி( தென்திருப்பேரை) போகும் போது மதுரை வழியாத்தான் போவணும் தெரியுமில்லே

Anonymous said...

//திமுக அரசையும் ஏதேனும் இம்மாதிரி கண்டனம் செய்துள்ளாரா, முக்கியமாக ராஜினாமா நாடகம் பற்றி?//

யாரு நம்ம நெடுமாறன்ன
அவ்ருக்கு வேர சோலியே கிடையாதா

எப்படி இர்ந்த அவர் இப்போ

Anonymous said...

// இரு தேசங்களுக்குமே நீண்டகாலப் போர் பொருளாதார ரீதியில் கட்டுப்படியாகாது.
//


பெரிய இவரு சொல்லிட்டாரு, பெரிய படிச்சவரு இல்லயா

Anonymous said...

//கண்டிப்பாக செலுத்தியிருப்பார். என்ன, அதை ஓவராக செய்திருப்பார். பல மருந்துகளை விழுங்குவதும் ஆபத்தை வரவழைக்கும் விஷயம்தானே. //


காலம் கலிகாலங்கோ!

Anonymous said...

//ம்ன்னிக்கவும், முழு மதுவிலக்கு என்பது நட்க்காத விஷயம். இங்கு இவ்வளவு பேசும் பாமக தான் பலம் பொருந்திய எநிலையில் இருப்பதாக எண்ணியிருக்கும் பாண்டிச்சேரி மாநிலத்தில் இதை வலியுறுத்த இயலுமா? அதே சமயம் சமீபத்தில் 1972-ல் பலர் தடுத்தும் மீண்டும் குடிப்பழக்கத்தை இளைஞர்களுக்கு ஏற்படுத்தித் தந்த கருணாநிதி அவர்களை இவ்விஷயத்தில் நம்ப இயலாது.//

பகலிலே பார்த்து பேசுங்க சாமி

Anonymous said...

//இணையாகாதுதான், இருப்பினும் இதுவாவது செய்ய மனம் வந்ததே என சோ அவர்கள் கூறுவதை நானும் ஆமோதிக்கிறேன்//

சோவை புடித்து தொங்குவதால் தானே
வாங்கி கட்டிக்கிடுறீங்க

Anonymous said...

//என்னதான் இருந்தாலும் வைக்கோ கலைஞருடன் நெருங்கி பழகியவர் அல்லவா. கலைஞர் எப்போது என்ன முடிவு ஏன் எடுப்பார் என்பது அவருக்கு தெரியாமலா இருக்கும். //

வைக்கோவா அவர் இன்னும் அரசியலில் இருக்காரா?

Anonymous said...

//பலருக்கு வேலையே போயுள்ள நிலையில் குறைந்த வட்டிக்காக இருந்தாலும் கடனை வாங்கிக் கட்ட அவ்வளவு ஆர்வம் இருக்காதுதான்//

குடிக்க கூழ் இல்லை
குந்திக்க இடம் கேக்குதா?

Anonymous said...

//யார் அன்பழகனையா சொல்கிறீர்கள்? ஐயோ பாவம் அவர். ஏதோ இப்பதவியிலாவது இருந்து விட்டு போகட்டுமே. மேலும் தலைவரே தனது பதவியை விட்டுத்தர மனமில்லாமல் இருக்கும்போது அவரது உதாரணத்தைத்தான் இவரும் பின்பற்றுகிறார். என்ன தவறு//


இதுதான் ஆதிக்க வர்கத்தின் கூட்டு சதி

Anonymous said...

//அவர் மகனுக்கு அவர் விட்டுத் தருவதுதான் முறை. என்ன அவரது பற்றற்ற தன்மையா? காலை வேளையில் கிச்சு கிச்சு மூட்டாதீர்கள்.//

தலைவர் மாசற்ற தங்கம்
உங்களை எல்லம் திருத்தவே முடியாது

Anonymous said...

//யார் வீட்டு வெண்ணெய்? இவர் ஏன் விட்டுத்தர வேண்டும்? இது என்ன போங்கு//

கழகத் தொண்டர்கள் அமைதியாய் இருக்கிறார்கள் என்பதற்காக
வேண்டாம் விபரீதம்!

Anonymous said...

//ஒரு வேளை இவரை சாக்காக வைத்து அழகிரிக்கு அதிக கோபம் வராமல் பார்த்து கொள்கிறாரோ தலைவர். அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கும்//

இது நங்கநல்லுராரின் இடக்குத்தானே

Anonymous said...

//40 ஆண்டுகளுக்கு முன்னாலா? யு மீன் சமீபத்தில் 1968-ல்?//

எசமான் டெல்லி பட்டினத்தில் இருந்ததால்

இந்த நக்கல்

Anonymous said...

//அப்பதிவில் குறிப்பிடப்பட்ட காமாட்சிநாதன் இட ஒதுக்கீடு பெற்று இந்த ஸ்காலர்ஷிப்பை பெறவில்லை. அதுவும் மத்திய அரசால் அவனது திறமைக்கு மட்டுமே கொடுக்கப்பட்டதில் மாநில அரசு போங்கு வேலை செய்ததுதான் புதுக்கோட்டுக்கு ஜூட். மற்றப்படி நீங்கள் இங்கு உதாரணம் காட்டும் அனைத்து கட்சிகளும் ஓட்டு அரசியலுக்காக கூறுவது அடாவடியே, அதை நீங்கள் சொல்லுவது போலெல்லாம் எடுத்து கொள்ள முடியாது//


ஒடுக்கபட்ட சமுகத்தின் உயர்வே தன் உயிர் மூச்சு என வாழும் கட்சிகளின் தலைவர்களை, நீங்கள் கொச்சை படுத்துவது வாடிக்கைதானே!

Anonymous said...

//இந்து மத துவேஷம்//


சாத்தான்கள் வேதம் ஒதும்
கதை பழைய கதைதானே!

Anonymous said...

//பார்ப்பன எதிர்ப்பு. அவர்கள் தமிழர்கள் அல்ல. தெலுங்கு நாயுடு, முதலியார், கன்னட பலிஜா நாயுடு ஆகியவர்கள் நம்மவர், மலையாளிகள் எம்.ஜி.ஆர். அவர்களைத் தவிர்த்து ஏனையோரை சேர்த்து கொள்ளலாம்//


இனமானத் தலைவர் இதை கேட்டு இருக்க வேண்டும்
அப்ப தெர்யும் சேதி

Anonymous said...

//ஆங்கில ஹிந்தி மொழி எதிர்ப்பு//

தமிழ் நாட்டிலே குந்தி கொண்டு, எம்ம தயிரியம் இதெ சொல்ல

Anonymous said...

//வெவ்வேறு வெர்ஷன்களை உடைய ராமாயணங்க்ளிலிருந்து தமக்கு தேவையானதை தேர்ந்தெடுத்து காண்டக்ஸ்ட் பார்க்காது ராமரைத் தாக்குவது. தமிழர்களை துச்சமாக மதித்து தலைமைப் பொறுப்பு ஏற்க அவர்களுக்கு தகுதி இல்லை எனச் சொன்ன கன்னடியர் அதை எந்த காண்டக்ஸ்டில் சொன்னார் என்று பார்க்க வேண்டும் என அவருக்கு சப்பைக்கட்டு கட்டுவதற்காகத் தேடி நாக்கு தள்ள களைப்படைவது.//


பகுத்தறிவு தானே உங்களி குழி பறித்து குப்புறத் தள்ளியது

கோவாலு இருக்கட்டும்

Anonymous said...

//இந்து மத துவேஷம், வேறென்ன? நோன்புக் கஞ்சிக்கு ஆதரவு, விபூதிக்கு கேலி மற்றும் கிண்டல் (சாய்பாபா தரும் மோதிரத்துடன் கூடிய விபூதி இதில் அடங்காது).//


எத்தினி தபா சொல்றது

தூங்கிற புலியை இடற வேணாம்
சாக்கிருதை

Anonymous said...

//பழைய பிராஜக்டுகளை புதிப்பிப்பதும் நல்ல வியாபார யுக்தியே. :)))))))//


81 வயது பெரியவர் ராம கோவிந்தான்னு இருக்காமா?

Anonymous said...

//உண்மையை கூறப்போனால் அந்துலே இன்னும் அரசியலில் இருப்பதுதான் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அவரை பற்றிய கவனமே இத்தனை நாட்களாக இல்லை. திடீரென மறுபடியும் தன் இருப்பை காட்டிக்கொண்டுள்ளார். சோ அவர்களும் அவருக்கு எவ்வளவு முக்கியத்துவம் தரவேண்டுமோ அவ்வளவுதான் தந்திருக்கிறார். அதற்கு மேல் கூற அந்துலேயிடம் விசேஷம் என்ன இருக்கிறது//

ஐயர்வாளுக்கெல்லம் சோ தான் குல குருவா?

Anonymous said...

//ராமர் இஞ்சினியரா என்று கேட்டவர் இப்போது ராமர் டூரிஸ்ட் கைடா என கேட்காமல் இருந்தால் சரி.//


ராமரே ஒரு கற்பனப் பாத்திரம்
அதுவும் பார்ப்பனர்,திரவிடக் குலக் கொழுந்தாம் ராவண பகவானை கொச்சப் படுத்தும் செயல் தானே அந்த ராமயணம்

மணல் திட்டை ராமர் பாலம் எனச்
சொல்லியதை நாடறியுமே!

Anonymous said...

//எந்த பயமும் ஒரே மாதிரி விடாது ஆட்சி செய்ய இயலாது. நாளடைவில் அது பழகிவிடும். முதலில் கேன்சரை கண்டு பயந்தனர். இப்போது சிகிச்சைகள் அதற்கு வந்து விட்டபோதிலும் இன்னும் அது அபாயகரமான நோய்தான். ஆனால் அது பற்றி முன்பு வந்தது போல சினிமாக்கள் வருகின்றனவா? எய்ட்ஸும் அது மாதிரித்தான். முதலில் அது என்ன என்று தெரியாமல் பயந்தனர். இப்போது அது புழக்கத்தில் வந்து பல காலம் ஆகிவிட்டது. ஆகவே ஒரு மாதிரி அதை மறந்து வேறு பயங்கள் படுகின்றனர். எய்ட்ஸை வெற்றி கொள்ள நிறைய உழைப்பு தேவைப்படும். அந்த நிலையில் மட்டும் அதைப் பிரச்சினையாக பார்க்க பழகிவிட்டனர் எனத் தோன்றுகிறது. //


அதுக்கும் கொடுத்த துட்டு தீர்ந்து போச்சாம்?

Anonymous said...

//ஊழலுக்கு ஆண் என்ன பெண் என்ன? ஆண்கள் லஞ்சம் வாங்கியதற்கும் அவர்தம் மனைவியர்/காதலிகளின் தேவைக்காகவும்தானே. இப்போது வாய்ப்பு கிடைத்ததில் பெண்களும் வாங்குகின்றனர்//

நீ எங்கிருந்து எடுத்தாயோ? அது அங்கயே கொடுக்கபடுகிறது

கொடு வாங்கு!
வாங்கு கொடு!

Anonymous said...

//ஏன் அவருக்கென்ன? நன்றாகத்தானே இருக்கிறார்? மறுபடியும் அவரை பிரதமர் வேட்பாளராக பாஜக தரப்பில் நிறுத்தலாமா என்று அக்கட்சியினர் சிலர் யோசிப்பதாக அறிகிறேன்//


வாஜ்பாயிக்கு 85 வது பிறந்த நாள்வழ்த்துக்கள்

இப்பெல்லாம் 80 தான் படு சூப்பர்

கில்லிகள்

Anonymous said...

//மத்திய அரசு அலுவலகங்கள் ஊழலில் பின் தங்கியுள்ளன என்பதா உங்கள் வாதம்? அவற்றுக்கான கிரெடிட்டுகளைத் தர மறுப்பது அநியாயம்.//


பூவுலகில்
முழுத் திருடர்கள்
முக்காத் திருடர்கள்
வித்தியாசம் இருக்கா
இல்லையா

Anonymous said...

//பாமகவே குழப்பத்தில் உள்ளது. இதில் விடுதலை சிறுத்தைகளை பற்றி நினைக்க எங்கே நேரம். பதிவர் குழலி இன்னும் ஆதண்டிக்கான பதிலை இக்கேள்விக்கு தர இயலும்.//

நண்பர்களுக்குள் கோள் மூட்டவேண்டாம்

Anonymous said...

//இப்படியெல்லாம் கேட்டால் நீங்கள் ஆணாதிக்கவாதியாக அடையாளம் காட்டப்படுவீர்கள். உஷார். //

சார் பாவம் ,ஆளை விடுங்க சாமி

Anonymous said...

//முதலில் அவர்களுக்கு மட்டுமின்றி அவர்களுக்கு உதவுபவர்களுக்கும் தண்டனைகளை கடுமையாக்கினால் பாதி பிரச்சினை குறையும்.//


நீங்க சோ ஆளுதானே பொறவு எப்படி பேசுவீங்க!

Anonymous said...

//என்ன எங்கும் காணவில்லையா? கொஞ்ச நாளைக்காவது நாம் மச்சி, பச்சி, கச்சி ஆகிய இலக்கிய சொற்களைக் கேட்காது நிம்மதியாக இருப்போமே.//


சன் டீவியிலே தான் விசுவாய் மாரியுள்ளாரே

பத்தாதா?

Anonymous said...

//டமில் மக்கல் கொடுப்பதாக அவர் கூறலாம்//


2001 ல் கருப்பு எம்ஜிஆர் ஆட்சிதான்
தெரியுமில்லே

Anonymous said...

//பாராளுமன்றத் தேர்தலில் கூட்டணி நிச்சயம் இருக்கும். ஆனால் அதில் திமுக தோற்றால் காங்கிரஸ் அதிமுகாவை நாடும். திமுகவுக்கு அதிக சீட்டுகள் கிடைத்து காங்கிரஸ் மத்தியில் பிளாங்கியடித்தால், மந்திரி பதவி கிடைக்கும் போலிருந்தால் திமுக பாஜக ஒன்றும் தீண்டத்தகாத கட்சி இல்லையே என கூறி அக்கட்சியுடன் உறவு கொள்ளலாம். இதையெல்லாம் கூற ஒரு திறமையும் தேவையில்லையே பெரிசு எனக் கூறும் முரளி மனோஹர் சரியாகத்தான் பேசுகிறான்//


ஐயர்களுக்கு ஆசையை பாரு

விட்ட வானத்திலே கூட பறக்க ஆசைப் படுவாங்கா!

Anonymous said...

//பொருளாதார கொள்கைக்காகவும், அமெரிக்காவுடன் அணு ஆயுத ஒப்பந்தத்தை நிறைவேற்றியதற்காகவும் அந்த அரசை பாராட்டலாம்//

ஸ்பெக்ட்ரம் உழல் இடியாபச் சிக்கலில் அவரு கடிதாசி .சேதி தெரியாதா?

Anonymous said...

//மரியாதை யாருக்கு வேண்டும், டப்பு கிடைக்கிறதா என்ற நிலை எடுப்பவர்களுக்கு பஞ்சம் ஏது இந்த நாட்டில்//

நடிகைக்கு கோவில் கட்டி கும்பிடும்
ஜனங்கள் மத்தியிலே

Anonymous said...

//அவர் போதைப் பொருள் அதிகம் உட்கொண்டதால்தான் மரணம் அடைந்தார் என்றல்லவா கேள்விப்பட்டேன். எது எப்படியானாலும் அவருக்கு முன்னாலேயே பல நடிகர்கள் குடியால் சீரழிந்துள்ளனர். அவர்களைப் பார்த்தும் திருந்தாதவர்கள் ரகுவரனை மட்டும் பார்த்து திருந்துவார்கள் என ஏன் எதிர்ப்பார்க்க வேண்டும்//


கட்டையிலே போற வரைக்கும் திருந்துமா ?
தெரியல

Anonymous said...

//எனக்கு பங்கு மார்க்கெட் எப்போதுமே புரிந்ததில்லை. ஆகவே அதில் நான் ஈடுபட்டதே இல்லை. மற்றப்படி இம்மாதிரி கேள்விகளுக்கெல்லாம் நண்பர் வால்பையன்தான் சரி.//

ஜாடிக்கு ஏத்த மூடி தான்

Anonymous said...

//பிப்ரவரியில் வந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை//

எப்பம் வந்தாலும் உங்கள் மோடி கட்சிக்கு கோவிந்தோ தான்

Anonymous said...

//பாராட்டுகிறார்களோ இல்லையோ ஓட்டு போட்டுவிடுகிறார்கள்//


இல்லேண்ணா குண்டாந்தடி அடி யார் வாங்கிறது!

Anonymous said...

//அதிருக்கட்டும், அவை கிடைக்காதவரது கோபம் பற்றியும் யோசிக்கலாமே//


ஜெயலலிதாவின் ரசிகர் பின் எப்படி சொல்வார்கள்!

Anonymous said...

//ராமரே ஒரு கற்பனப் பாத்திரம்
அதுவும் பார்ப்பனர்,திரவிடக் குலக் கொழுந்தாம் ராவண பகவானை கொச்சப் படுத்தும் செயல் தானே அந்த ராமயணம்
//
ஆக்கங் கெட்ட கூவை ராவனன் ஒரு ஏ ஒன் பிராமனன்டா - குருட்டு பூனை மாதிரி விட்டத்தில பாயாதே ! உன் மூளைய உப்புத் தாள் வச்சுத் தேய்ய் துருப்பிடிச்சுகிடக்கு

Anonymous said...

//கிணற்றில் போட்ட கல்//


உடைத்துப்போட்ட கல்

dondu(#11168674346665545885) said...

//2001 ல் கருப்பு எம்ஜிஆர் ஆட்சிதான்
தெரியுமில்லே//
2011-ல் என்று எழுத நினைத்தீர்களா?

//ராமரே ஒரு கற்பனப் பாத்திரம்
அதுவும் பார்ப்பனர்,திரவிடக் குலக் கொழுந்தாம் ராவண பகவானை கொச்சப் படுத்தும் செயல் தானே அந்த ராமயணம்//
ராமர் சத்திரியர். ராவணந்தான் பார்ப்பனர். அவனைக் கொன்றதால் ராமருக்கு ஒரு பிராம்மணனை கொன்ற பிரும்மஹத்தி தோஷம் வந்தது. இப்ப சொல்லுங்க. :)))))))

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//கர்நாடகாவில் எக்கட்சி ஆட்சியில் இருந்தாலும் தமிழகத்துக்கு அப்படித்தான் முட்டுக்கட்டை போடுவார்கள். இப்போது மத்திய அரசு கர்நாடக அரசை கண்டிக்கும் என நினைக்கவில்லை//


தமிழனை சோற்றால் அடித்த பிண்டம் என எண்ணுகிறார்களோ என்னவோ?

Anonymous said...

//பலர் உள்ளனர், விளம்பரம் இன்றி. இதே வினோபா நெருக்கடி நிலையை ஆதரித்தார் என்பதால் எனக்கு அவர் மேல் நல்ல அபிப்பிராயம் இல்லை.//


நீங்க பாஜக ஆளு
அடையாளங் கண்டு கொண்டது
திராவிடர் படை

Anonymous said...

//ஜே.கே.ரௌலிங் அவரது ஹாரி பாட்டர் புத்தகங்களுக்காக. தமிழில் ஜெயமோகன்.//

இதுக்கு டபுள் ஓக்கே

Anonymous said...

//குறையத்தான் வேண்டும்//

இலவு காத்த கிளி கேசா

Anonymous said...

//போலீஸ்காரருக்கு மாதக்கடைசி வருமானத்துக்கு இன்னொரு வழி திறக்கப்பட்டுள்ளது//


போலிசுக்கும் குடும்பம் இருக்கு
எனபதை மறந்து எழுதுவது அடுக்குமா?

Anonymous said...

//அவர்கள் முட்டாள்கள். வரவுக்கு மீறி செலவு செய்யத் தூண்டும் கடன் அட்டைகளை அவர்கள் வாங்கியிருக்கவே கூடாது. இப்பிரச்சினையை நான் எனது டெலிமர்க்கெட்டிங் என்னும் கூத்து என்ற பதிவில் போகிறபோக்கில் தொட்டுள்ளேன்//


அகப்பட்டவன் அகப்படுவிட்டான்
தப்பிக்க வழி சொல்லுங்கா.
லிங் கொடுத்தே ஹிட் கவுண்டரை ஏத்துடுங்க

Anonymous said...

//இம்மாதிரி வானிலை குளறுபடிகள் எப்போதுமே உள்ளதுதான். என்ன, நமக்கு அது பற்றிய செய்திகள் தற்போதெல்லாம் உடனுக்குடன் கிடைக்கிறது. அவ்வளவே. பழங்காலங்களில் மக்கள் பாவம் செய்வதால் இம்மாதிரி நடக்கிறது என்றெல்லாம் ஃபிலிம் காட்டினார்கள். இப்போதெல்லாம் அப்பேச்சு குறைந்துள்ளது அவ்வளவே.//


அப்போம் சாமி குத்தம் ஒன்னுமில்லையா?

Anonymous said...

//மீண்டும் அடுத்தவாரம் சந்திப்போமா?


100 % கண்டிப்பாக

Anonymous said...

////2001 ல் கருப்பு எம்ஜிஆர் ஆட்சிதான்
தெரியுமில்லே//
2011-ல் என்று எழுத நினைத்தீர்களா?//


100 ஐ வேகமாய் நெருங்க வேண்டி ஸ்பீடாய் டைப் செய்யும் போது

Anonymous said...

////ராமரே ஒரு கற்பனப் பாத்திரம்
அதுவும் பார்ப்பனர்,திரவிடக் குலக் கொழுந்தாம் ராவண பகவானை கொச்சப் படுத்தும் செயல் தானே அந்த ராமயணம்//
ராமர் சத்திரியர். ராவணந்தான் பார்ப்பனர். அவனைக் கொன்றதால் ராமருக்கு ஒரு பிராம்மணனை கொன்ற பிரும்மஹத்தி தோஷம் வந்தது. இப்ப சொல்லுங்க. :)))))))

அன்புடன்,
டோண்டு ராகவன்//


இந்த விசயம் தெரியாமல் தான் கலைஞர் சேம் சைடு கோல் போடுகிறாரா?

Anonymous said...

ராமர் சத்திரியர்(BC)
கிருஷ்ணன் யாதவ குலம்( MBC)

பின் ஏன் அவர்களை
கறுப்புச் சட்டைகள் நிந்தனை செய்கின்றனர்.

Anonymous said...

இது சூடு பதிவில் வருமா?

Anonymous said...

டோண்டு ஐயா,

கும்மி தான்
தப்பாய் எடுத்துக் கொள்ள வேண்டாம்.


please don't think otherwise.

dondu(#11168674346665545885) said...

//கும்மி தான்
தப்பாய் எடுத்துக் கொள்ள வேண்டாம்.//
நான் ஏன் தப்பாய் எடுத்து கொள்ள போகிறேன். ஒரு கும்மியடிப்பவன் சக கும்மி அடிப்பவனை உடனேயே கண்டுகொள்வாந்தானே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//Anonymous said...
//ராமரே ஒரு கற்பனப் பாத்திரம்
அதுவும் பார்ப்பனர்,திரவிடக் குலக் கொழுந்தாம் ராவண பகவானை கொச்சப் படுத்தும் செயல் தானே அந்த ராமயணம்
//
ஆக்கங் கெட்ட கூவை ராவனன் ஒரு ஏ ஒன் பிராமனன்டா - குருட்டு பூனை மாதிரி விட்டத்தில பாயாதே ! உன் மூளைய உப்புத் தாள் வச்சுத் தேய்ய் துருப்பிடிச்சுகிடக்கு//


இந்த மூளைத் துருப்பிடித்தவர்களுக்கு உப்புத்தாள் போதாது.
3 அடி விட்டமுள்ள கிரயிண்டிங் கல் ,அதுவும் ,நிமிடத்திற்கு 100 சுற்றுகள், 3 பேஸ் மின்சார மோட்டார்
உதவியுடன்.

இவங்கெல்லாம்
விடிய விடிய ராமயாணம்
கேட்பாங்கா
ஆனால்
விடிஞ்சதும்
...........

திருந்தாத ஜென்மங்கள்
திராவிடக் குஞ்சுகள்
போலிகளின் போலிகள்
அரக்கர் கூட்டம்
கர்வம் பிடித்தவர்கள்
தலைக்கனம் உள்ளவர்கள்
நாத்திகக் கூட்டம்
பாப ஆத்மாக்கள்
வீணர்கள்
வாய்ச் சொல் வீரர்கள்
அட்டைக் கத்தியர்கள்

Anonymous said...

//இந்த மூளைத் துருப்பிடித்தவர்களுக்கு உப்புத்தாள் போதாது.
3 அடி விட்டமுள்ள கிரயிண்டிங் கல் ,அதுவும் ,நிமிடத்திற்கு 100 சுற்றுகள், 3 பேஸ் மின்சார மோட்டார்
உதவியுடன்.//

ஏன் சார் இது மாதிரி பதிலெல்லாம் ரூம் போட்டு யோசிச்சு சொல்லுவீங்களா இல்ல தன்னால பொங்குதா !

Anonymous said...

//ndu(#11168674346665545885) said...
//கும்மி தான்
தப்பாய் எடுத்துக் கொள்ள வேண்டாம்.//
நான் ஏன் தப்பாய் எடுத்து கொள்ள போகிறேன். ஒரு கும்மியடிப்பவன் சக கும்மி அடிப்பவனை உடனேயே கண்டுகொள்வாந்தானே.

அன்புடன்,
டோண்டு ராகவன்//


நன்றி ஐயா நன்றி

கண்கள் பணிக்கட்டும்
நெஞ்சம் இனிக்கட்டும்
அன்பு பரவட்டும்
பாசம் பெருகட்டும்
நேசம் வளரட்டும்
மனிதம் ஓங்கட்டும்
பண்பு கூடட்டும்
நட்பு விரியட்டும்
தமிழ் வாழட்டும்
புத்தாண்டு பிறக்கட்டும்
புதுமைகள் செய்யட்டும்
புரட்சிகள் ஜெயிக்கட்டும்
புனிதர்கள் சிரிக்கட்டும்

Unknown said...

அன்பு உடன் பிறப்பே,

நம்மை எல்லாம் ஆளாக்கி அழகு பார்த்த அருமை அண்ணா, படித்த திராவிடப் பள்ளியின் காவலராய்,கண்ணியத்துடன் திராவிடம் சாதிக்கும் செம்மல் அண்ணன் கி.வீரமணி,பெற்ற தாயை வாழ்த்த வேண்டும் என முடிவெடுத்து தாய் மீனாட்சி அம்மாளின் பேரினை இன்ஷியலாய்,சேர்த்து மீ,கி.வீரமணி என மாற்றியுள்ள செய்தியை,வழக்கம் போல் தினமலர் செய்தியை திரித்து எழுதியுள்ளதை,கண்ணுற்றதும்,நமது அன்பு உடன்பிறப்பு பதிவர்கள்,புயலென
புறப்பட்டு,போர்ப் பரணி பாடி புது வரலாறு படைத்ததை, பார்த்து ,நம் வீரத் தமிழினம் காக்கும் தமிழன்னை மகிழ்வு கொண்டதை ,கேட்டு
மீண்டும்
என் கண்கள் பணித்தன
நெஞ்சம் இனித்தன

இதே உத் வேகத்துடன் சுழன்று பணியாற்றும் நம் உயிரான கழகத் தொண்டர்கள்,திருமங்கலத் தேர்தல் வெற்றியை ,வரலாறாக்குவார்கள்.

வாழ்க தமிழினம்
வெல்க ஒற்றுமை

40ம் நமக்கே
234 ம் நம்மோடு இருப்பவர்க்கே

suvanappiriyan said...

டோண்டு சார்!

பலருக்கும் பதில் கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். அந்த வரிசையில் எனக்கு உள்ள சில சந்தேகங்களையும் பட்டியலிட்டுள்ளேன். தெரிந்த கேள்விகளுக்கு பதில் தாருங்கள்.

உங்களுக்கும் இணைய நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

1. 'ஒரு உயிரிலிருந்துதான் மற்றொரு உயிரினம் உருவாக முடியும்' என்பது அறிவியலார் பொதுவாக ஒத்துக் கொண்ட உண்மை.

ஆனால் பரிணாமவியலோ உலகம் முழுவதும் உயிரற்றப் பொருட்களான கற்பாறைகள் மண்,வாயு ஆகியன நிரம்பி இருந்த போது காற்று, மழை, மற்றும் மின்னல் ஆகியவற்றின் பல பொருட்களின் கூட்டு விளைவால் உயிர் உண்டானது என்கிறது. இரண்டு கருத்தக்களில் ஏதோ ஒன்றுதான் உண்மையாக இருக்க முடியும். இதற்கான உங்களின் விளக்கம் என்ன?

2.ஜீன்களை ஆராய்ந்த அறிவியலார் மனித இனம் அனைத்தும் ஒரு தாயின் வயிற்றிலிருந்து பிறந்து பிறகு பல்கிப் பெருகியதாக கண்டுபிடித்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பு பற்றி பரிணாமவியல் சொல்வது என்ன?

3. 'ஆற்றலை ஒரு போதும் உருவாக்கவும் முடியாது. அழிக்கவும் முடியாது. ஆயினும் மாற்றி அமைக்கவே முடியும்' - ஐன்ஸ்டீன்.

ஒரு பொருளைப் படைப்பதற்கு ஆற்றல் மிகவும் இன்றியமையாதது.மனிதனைப் படைத்தது இறைவன் தன்னகத்தே கொண்ட ஆற்றலினால் என்கின்றனர் ஆன்மீகவாதிகள். இல்லை... மனிதனாலும் படைக்க முடியும் என்கின்றனர் நாத்திகவாதிகளும் பரிணாமவியலாரும். இது உண்மையானால் அண்டசராசரங்கள் அடங்கிய இப் பேரண்டத்திலிருந்து எந்த ஒன்றையும் எவ்விதத்திலும் பயன்படுத்தாமல் சுத்த சூன்யத்திலிருந்து சுயமாக (இறைவன் படைப்புகளில் கை வைக்காது) சொந்த ஆற்றலைப் பயன்படுத்தி ஒரு சிறிய அணுவையேனும் படைத்துக் காட்ட முடியுமா?

4.நமக்குள் இருக்கும் உயிர் எங்கிருந்து வருகிறது? உயிரின் உதயம் எவ்வாறு நிகழ்கிறது? மனிதனின் இறப்புக்குப் பின் எங்கு செல்கிறது?

5.மனிதனுக்குப் பிறகு பரிணாமம் அடைந்து நாம் என்னவாகப் போகிறோம்? அது எப்போது என்பதையும் தெரிவிக்க முடியுமா?

6. எந்த ஒரு கோட்பாடும் நிரூபிக்கப் பட்டதாக இருக்க வேண்டும். டார்வினின் கோட்பாடுகளில் எத்தனை கோட்பாடுகள் அறிவியல் ரீதியாக நிரூபிக்கப் பட்டுள்ளன?

7.மனிதன் தனது உடல் அமைப்பால் மனிதன் என்ற பெருமையைப் பெறவில்லை. பகுத்தறிவால்தான் பெறுகிறான்.

உடல் வளர்ச்சி, உடல் அமைப்பில் மாறுதல் என்பதற்குத்தான் டார்வின் காரண காரியங்களைக் கூறுகிறார். பகுத்தறிவு இல்லாத உயிரினம் பகுத்தறிவு உள்ளதாக மாறுவதற்குரிய சூழல் நிர்பந்தம் எது என்று பரிணாமவியல் கூறும் தத்துவம் என்ன?

Anonymous said...

51. சென்னை உஸ்மான் சாலையில்தான் தங்க நகைக் கடைகள்
இருப்பதன் காரணம் யாது?
52.இலங்கையில் உள்ள இனப்ப்பிரச்னை எப்போது முடியும்?
53.கலைஞர், ஜெயலலிதா இவர்களின் பேச்சு,எழுத்து திறமைகளை ஒப்பிடுக?
54.சென்னை கராத்தே தியாகராஜன் எப்படி உள்ளார்?
55.எல்லோர் பிள்ளைகள் , பெற்றோர் சொல்வதை கேட்காமல் ஊதாரித்தனமாகச் செலவு செய்கிறார்களே?

Anonymous said...

56.துப்புரவுப் பணிகளைத் தனியார் மயம் ஒப்படைககப் பட்ட பின் ,அது எப்படி உள்ளது?
57.சேலம் இரயில் கோட்டம் முழுமையாய் செயல் படிகிறதா?
58.நல்ல நண்பனை எப்படி கண்டு கொள்வது?
59.செல்போனில் ஒருவரையொருவர் பார்த்துப் பேசும் வசதி 3 ஜி ல் உண்டா?
60.பகலில் தெரு விளக்குகள் எரிந்து கொண்டிருப்பதை யாரும் கண்டு கொள்வதில்லயே?

Anonymous said...

61.மாணவர்களுக்கு தமிழக அரசால்,வழங்கப்படும் இலவச சைக்கிள் திட்டத்தில் பயனாளிகளில்,வசடி படைத்தவர்களும் உள்ளனரே?
62.எதிர்கட்சித் தலைவர்கள் சோர்ந்து போயுள்ளனரா, தேர்தல் முடிவுகளை பார்த்து?
63.குடி குடியைக் கெடுக்கும்,தெரிந்த பிறகும் டாஸ்மார்க்கே கதி என இருப்போரை ?
64. வில்லிசைக் கலிஞர் சுப்பு ஆறுமுகத்தின் வில்லிசை கேட்டு இருக்கிறிர்களா? எப்படி?
65.எம்.எல்.ஏ./எம்.பி தொகுதி மேம்பாட்டு நிதியால் பெரும் பங்கு லாபம் யாருக்கு ?

Anonymous said...

66.பெற்றோருக்குப் படியாத பிள்ளைகளின் என்னிக்கை கூடி கொண்டே பொகிறதே? பெண்பிள்ளைகளும் இப்படி என்றால்?
67.நக்சலைட்டுகள் திருந்திவிட்டார்களா?
68.அதிமுக காளிமுத்து-ராபின் மெயின் கேசு என்னாச்சு?
69.அரசு ஊழியர்களுக்கு சலுகைகளை
போட்டி போட்டு வழங்கும் அரசியல் கட்சிகள் தேர்தலை மனதில் வைத்தா?
70.இதிலே எது சரி
அ)மன்னிக்கிறவன் கடவுள்,மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்
ஆ)மன்னிக்கிறவன் மனுஷன்,மன்னிப்பு கேட்கிறவன் பெரிய மனுஷன்

Anonymous said...

71.இந்திரா காந்தி அம்மையாரால் கொண்டுவரப் பட்ட நிகழ்வு - எமர்ஜென்சி மீண்டும் வருமா?
72.பொதுவாய் தனியார் மருந்தகங்கள் -ரமணா பாணி சுருட்டல் தொடர்கிறதே?
73.தி.மு.க.வுடன் இருந்த கூட்டணிக் கட்சிகள் கருத்து வேறுபாடு காரணாமாய் பிரிந்தனவா? இல்லை திமுகவின் செல்வாக்கை பார்த்தா?
74.விற்கப்படும் மினரல் வாட்டர் எல்லாம் தரமுள்ளதா?அரசு என்ன செய்கிறது?
75.தொலைக்காட்சிகளில் வர்ணிப்பாளர்களின் அழகு தமிழை கேட்கும் போது - தேசியக் கவி பாரதி இருந்தால்?

Anonymous said...

//ராமரே ஒரு கற்பனப் பாத்திரம்
அதுவும் பார்ப்பனர்,திரவிடக் குலக் கொழுந்தாம் ராவண பகவானை கொச்சப் படுத்தும் செயல் தானே அந்த ராமயணம்//


//ஆக்கங் கெட்ட கூவை ராவனன் ஒரு ஏ ஒன் பிராமனன்டா - குருட்டு பூனை மாதிரி விட்டத்தில பாயாதே ! உன் மூளைய உப்புத் தாள் வச்சுத் தேய்ய் துருப்பிடிச்சுகிடக்கு//


ஒரு இரண்டு கமா வீட்டுப்போச்சு

இப்ப சரியா எவர்சிலவ்ர் மூளையாரே?


ராமரே ஒரு கற்பனப் பாத்திரம்,
அதுவும் பார்ப்பனர்,திராவிடக் குலக் கொழுந்தாம், ராவண பகவானை கொச்சப் படுத்தும் செயல் தானே அந்த ராமயணம்.

நாங்க படிச்சது எங்கேன்னு தெரியுமா?


அப்புறம் கூவாதா முட்டையாரே!

ராவணனை அரக்கன்னு வேற சொல்வாங்களே

தேவர்கள்-அரக்கர்கள்
ராவணன் நவக்கிரகங்களை கைது செய்தான்
தேவர்களையும்,முனிவர்களையும்,ரிஷிகளையும் துன்புறுத்தினான் என்பார்களே

பொதுவாய் பிராமணர்கள்
பழி பாவத்துக்கு அஞ்சி,கடவுளுக்கு பயந்து,நீதி நேர்மை பார்த்து,நியாயமாய் நடப்பர் என மனு சாஸ்திரம் சொல்கிறது

அப்போம் இந்த ஏ ஒன் மட்டும் ஏன்?
இப்படி ?

பிறன் மனை நோக்கி பீசாய்ப் போனார்

அதையும் , வெவரமாய் சொல்லுங்க
அதி புத்திசாலியரே!

அது சரி குருட்டுப் பூனை விட்டத்திலே
சூப்பர் பன்ச்
அதுக்கு ஒரு சபாஷ்,நண்பரே

Anonymous said...

//அது சரி குருட்டுப் பூனை விட்டத்திலே
சூப்பர் பன்ச்
அதுக்கு ஒரு சபாஷ்,நண்பரே//

.)))))))))))))))))))

dondu(#11168674346665545885) said...

சாதாரண கும்மிதான் என நினைத்தேன். ஆனால் இரு அனானிகள் ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டு கொண்டு தாக்க ஆரம்பித்துள்ளனர். வேண்டாம் கொலைவெறி. கடைசி மூன்று பின்னூட்டங்களை நான் ஏற்கவில்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

மறுபடியும் கூறுவேன், தாக்குவதென்றால் நீங்கள் இருவருமே பிளாக்கராக வாருங்கள். அனானியாக வேண்டாம். பொதுவாக தாக்குதல்கள் இல்லாது, லைட்டாக கலாய்த்தால் அதுவும் நட்பு ரீதியாக என்றால் அனானியாக இருந்தாலும் பரவாயில்லை.

ஆனால் இம்மாதிரி கொலைவெறி தாக்குதலுக்கு அனானியாக வருவது சரிப்படாது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

76.சமையற்கலை படிப்புகள் நல்ல வேலைவாய்ப்பை இளைஞர்களூக்கு தருமா?
77.பொதுவாய் விடிகாலை எத்தனை மணிக்கு விழித்து எழுவீர்கள்?
78. இரண்டு மனைவி உள்ள கணவன்கள் பாக்கிய சாலிகளா? இல்லையா?
79.இன்றைய தமிழகத்தில்
எழுத்தாளர் வாழ்க்கை வளமாய் இருக்கிறதா?
80.தற்சமயம் பதிவுலகில் உண்மையான ஜென்டில்மேன் யார் ?

Anonymous said...

81. அரசியலில் அடிக்கடி கட்சி மாறுகிறவர்களை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
82.நேற்றைய தமிழகம், இன்றையதமிழகம், நாளைய தமிழகம் ஒப்பிட்டு கருத்து சொல்லவும்?
83.சிறைகளில் அபின், கஞ்சா போன்ற லாகிரி வஸ்துக்கள் கும்மி அடிக்கின்றனவாமே?
84.நடிகர் சேரன் தொடர் வெற்றியை தக்கவைக்காததற்கு என்ன காரணம்?
85.தமிழகத்தில் விற்பனையில்/தரத்தில்/நம்பகத்தன்மையில் நம்பர் ஒன் நாளிதழ்/வார இதழ்/மாத இதழ் வரிசைப் படுத்துக?

Anonymous said...

86.தமிழ்க் கடல் அய்யா நெல்லைக் கண்ணன் அவர்களின் விஜய் டீவியில் "தமிழ் பேச்சு எங்கள் மூச்சு"
எப்படி?
87. விஜய் டீவி "நீயா? நானா?புகழ் கோபிநாத் அவர்கள் நடத்தும் "டாக் ஜோ" கேட்பீர்களா?
88.எல்.ஐ.சி.யின் ஊழியர் சங்கம் ஒன்றால்தான் இன்று அரசின்,தாராள மயக் கொள்கைக்கு "ப்ரேக்" போட முடிகிறது பார்த்தீர்களா?
89.உங்களுக்காக மீண்டும் உழைக்க இந்தக் தேர்தலில் எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என அடிக்கடி கேட்பவர்கள்?
90.மக்கள்திலகம் எம்.ஜி.ஆருக்குப் பின்
வள்ளல் யாரும் உள்ளனரா?

சூனிய விகடன் said...

இதுதான் உங்களுக்கான எனது முதல் பின்னூட்டம்.....உங்கள் ஆசீர்வாதம் வேண்டும்

Anonymous said...

புரோகிதர்கள் ரயில் மறியல் செய்தார்கள் - ஈழத் தமிழர்கள் பிரச்னைக்காக என்று நையாண்டியுடன் ஒரு நாதாறி எழுத அதையும் ரசித்து சிரித்திருக்கிறது ஒரு அல்லக்கை. எதக்குடா புரோகிதர்கள் மறியல் செய்ய வேண்டும்? கஜ்ரத்துகளும், பேராயர்களும் செய்து முடித்து விட்டார்களா? தூக்கிட்டு வந்திட்டானுங்க.

Anonymous said...

91.தேர்தல் ஆணையத்தின் ஜாதிப் பாசம், ஜெயலலிதா மீது ,எனவேதான் இந்த திடீர் திருமங்ககலத் தேர்தல் எனும் குற்றச்சாட்டு எழுவது பற்றி?
92.தமிழகத்தில் அடுத்த ஆட்சி யாருடையதாய் இருக்க அதிக வாய்ப்புள்ளது?
93.ஸ்டேட் வங்கி ஊழியர் அடிக்கடி வேலை நிறுத்தம் செய்து தங்கள் (the best wage revision, 3 rd benefit -enhanced assured pension, very low interest bearing personal loans-home laons-car loans, easy assured time bound promotions, request transfers as per their demand)தேவைகளை நிறைவேற்றிக் கொள்கிறார்களே?
94.அடுத்த தி.மு.க./அதிமுக/தேமுதிக வின் தேர்தல் அறிக்கைகளில் இலவசங்கள் கொட்டோ கொட்டென்று கொட்டுமா?
95.சென்னையில் பறக்கும் சாலை திட்டம் வரும் போலுள்ளதே? தரையில் அமைக்கும் சாலையிலே 40 % கமிஷன் பார்க்கும் இவர்கள்,பறக்கும் சாலைத்திட்டத்தில்?

Anonymous said...

//இந்து என்றால் திருடன் என்று கூறியவர் கூட மஞ்சள் துண்டணிந்து கொண்டு, சாயிபாபாவை வீட்டிற்கு வரவழைத்து தன்னுடைய அடிபொடிகளுடன் மோதிரம் வாங்கிக் கொள்கிறார்களே என்ன காரணம்?//

வயதானால் பக்தியும்
வசதிவந்தால் ஜோதிட நம்பிக்கையும்
வரும் என்பது உண்மையன்றோ!

Anonymous said...

//Anonymous said...
//இந்து என்றால் திருடன் என்று கூறியவர் கூட மஞ்சள் துண்டணிந்து கொண்டு, சாயிபாபாவை வீட்டிற்கு வரவழைத்து தன்னுடைய அடிபொடிகளுடன் மோதிரம் வாங்கிக் கொள்கிறார்களே என்ன காரணம்?//

வயதானால் பக்தியும்
வசதிவந்தால் ஜோதிட நம்பிக்கையும்
வரும் என்பது உண்மையன்றோ!//


kathai appdi pokuthaa
periyar naamam vazhga
pakuththarivu potri potri

Anonymous said...

//ஸ்டேட் வங்கி ஊழியர் அடிக்கடி வேலை நிறுத்தம் செய்து தங்கள் (the best wage revision, 3 rd benefit -enhanced assured pension, very low interest bearing personal loans-home laons-car loans, easy assured time bound promotions, request transfers as per their demand)தேவைகளை நிறைவேற்றிக் கொள்கிறார்களே?//


இந்த நண்பருக்கு வங்கி ஊழியர் பற்றி என்ன தெரியும்.
அரசு வேலை என்பது வேறு.

இன்று வங்கிகளில் ,விருப்ப வேலை ஓய்வு திட்டத்தினால், பணியாற்றும் ஊழியரின் வேலைச் சுமை அதிகம்.


காலை 10 மணிக்கு சிங்கில் விண்டோ சிஸ்டம் கவுண்டரில் பணிபுரியும் ஒரு வங்கி எழுத்தரின் வேலையை மதியம் 2 வரை பார்க்கவும்.பின் விமர்சிக்கவும்.

Anonymous said...

இந்தி எதிர்ப்பு போராட்டம் என்று முன்பு நடத்தப்பட்ட கூத்தில் இரண்டு போலீஸ்காரர்கள் தீக்கிறையாக்கப்பட்டார்களாமே? இன்றைக்கு பேருந்து எரிப்பு வழக்கை குறை சொல்லும் தி.மு.க. குண்டர்கள் அன்றைக்கு (சமீபத்தில்?) அறுபதுகளிலேயே போலீஸ்காரர்களையே பிடித்து பஞ்சாலைக்குள் தள்ளி உயிருடன் கொளுத்திய கதை தமிழகத்தில் மறைக்கப்பட்டது ஏன்? அது குறித்து மேல் விபரங்கள் எதுவும் தெரியுமா?

Anonymous said...

ஜூ.வி. - நக்கீரன் : ஒப்பிடவும்.

Anonymous said...

இலங்கைப் பிரச்னை தீராத வரைக்கும் அதில் பெரிய ஈடுபாடு இருப்பதாக காட்டிக் கொள்ளும் அல்லக்கைகளுக்கு தனிப்பட்ட முறையில் ரொம்பவே லாபம் இருக்கிறதாமே? வி.புலிகளும் வெளிநாடுகளில் வாழும் இ. தமிழர்களிடம் வசூல் வேட்டையை தமிழ் ஈழம் கிடைத்தால் தொடர முடியாது என்பதினால் இப்போதுள்ள நிலையே தொடர வேண்டும் என்று விரும்புகிறார்களாமே?

Anonymous said...

இலங்கைப் பிரச்னையில் அல்லக்கை நாதாறிகள் (ஒத்த பைசாவுக்கு உதவாத நான்சென்சுகள்) பிராமணர்களை குறைக் கூறிக் கொண்டிருப்பதன் காரணம் என்ன? (பிரச்னையில் பிராமணர்கள் தலையிட்டால் உருப்படியான யோசனையை கூறி தீர்த்து வைத்து விடுவார்கள் என்பதினால்தான் பிரச்னை தீராமல் தங்கள் சில்லரையை நிரப்ப இப்படி பேசித்திரிகிறான்கள் என்று கூறப்படுகிறதே?)

Anonymous said...

//AnonyT said...
இலங்கைப் பிரச்னை தீராத வரைக்கும் அதில் பெரிய ஈடுபாடு இருப்பதாக காட்டிக் கொள்ளும் அல்லக்கைகளுக்கு தனிப்பட்ட முறையில் ரொம்பவே லாபம் இருக்கிறதாமே? வி.புலிகளும் வெளிநாடுகளில் வாழும் இ. தமிழர்களிடம் வசூல் வேட்டையை தமிழ் ஈழம் கிடைத்தால் தொடர முடியாது என்பதினால் இப்போதுள்ள நிலையே தொடர வேண்டும் என்று விரும்புகிறார்களாமே?//

inraiya karunanithi avrkalin pessai padikkavum.

Anonymous said...

//இராமாயணம் என்பது ஆரியர் - திராவிடர் போராட்டம் என்று பிரபல வரலாற்று ஆசிரியர் எல்லாம் அறுதியிட்டுக் கூறியிருக்கின்றனர். பா.ஜ.க., இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். வகையறாக்கள் தூக்கிப் பிடிக்கும் விவேகானந்தர்கூட இதே கருத்தைத் தான் கூறியிருக்கிறார்!//


உங்கள் பதில்?

Anonymous said...

//ராமன் கெட்டவன், ராவணன் பெரிய வீரன்; அவனைப் பற்றிக் கெடுதலாகப் பிரச்சாரம் செய்யப்பட்டது என்பதுதான் பெரியாரின் கருத்தாகும்//


ithu yenna ?

Unknown said...

உலகத்தில் பொதுவாக ஒரு குடும்பத்தில் ஒரு தாய் தந்தையருக்கு பிள்ளைகளாய்ப்
பிறக்கும் சகோதரர்களுக்கு

ஒரே உணவுப் பழக்கம்
ஒரே சுற்றுப் புறச் சூழ்நிலை
ஒரே கல்வி முறை

அளிக்கபட்டு வளர்க்கப்படுக்கின்றனர் .

வளர்ந்து ஆளாய் பின்னர் ஓரே தாய் வயிற்றில் பிறந்தை முழுவதுமாய் மறந்து ரத்த சம்பத்தையும் நினையாமல் பங்காளிகளாய் மாறி சிறு சிறு வாய்ச் சண்டையில் ஆரம்பித்து கோர்ட் கேசுன்னு உருமாறி சில சமயங்களில் கொலை பாதகங்களில் இறங்கி உயிர்ப் பலி நிகழ்வுகள் கூட நடை பெறுகிறதே.

இந்த சண்டைகள் சச்சரவுகள் மோதல்கள்
தாக்குதல்கள் இருப்பவன் இல்லாதவன்
நடுத்திர வர்க்கம் எங்கும் வியாபித்து உள்ளதற்கு என்ன காரணம் ?

அ) ஜாதகக் குறை பாடா?
ஆ)போன ஜென்ம பலனா?
இ)விதிப் பயனா?
ஈ)இயற்கையின் சித்து விளயாட்டா?
உ)23 குரோமோசங்களின் குழறுபடியா?
ஊ)ஆண்டவனின் தண்டனையா?
எ)நவக் கிரகங்களின் பாதிப்பா?
ஏ)குரங்கிலிருந்து வந்ததாலா?
ஐ)------------------?

Anonymous said...

96.ஏட்டறிவு & எழுத்தறிவு ,பட்டறிவு அல்லது அனுபவ அறிவு ஒப்பிடுக?
97. ஊதாரி ,கஞ்சன், சிக்கனவாதி,காரியவாதி நிறை குறைகளை சொல்லுக(நிகழ்கால அரசியல் சார்ந்து)
98.ஒருவரின் கையெழுத்துக்கும் தலையெழுத்துக்கும் தொடர்புண்டா?
கையெழுத்தை மாற்றினால் நல்லது நடக்குமா? இல்லை இது புருடாவா?
99.பொதுத்துறை பங்குகள் விற்பனை பிரச்னை மீண்டும் தொடங்குமா?பதுங்குமா? பாயுமா?
100.டோண்டு ஐயா அவர்கள் தனது பதிவுகளை பதிவதற்கும், தனது பதிவுக்கு வரும் பின்னூட்டங்களுக்கு பதில் எழுதுவதற்கும் ,தினசரி செலவழிக்கும் கால நேரம் எவ்வளவு?

Anonymous said...

டோண்டு ஐயா அவர்கள் தனது பதிவுகளை பதிவதற்கும், தனது பதிவுக்கு வரும் பின்னூட்டங்களுக்கு பதில் எழுதுவதற்கும் ,தினசரி செலவழிக்கும் கால நேரம் எவ்வளவு?


24 X 7

sariyaa dondu sir?

Anonymous said...

//இந்தி எதிர்ப்பு போராட்டம் என்று முன்பு நடத்தப்பட்ட கூத்தில் இரண்டு போலீஸ்காரர்கள் தீக்கிறையாக்கப்பட்டார்களாமே? இன்றைக்கு பேருந்து எரிப்பு வழக்கை குறை சொல்லும் தி.மு.க. குண்டர்கள் அன்றைக்கு (சமீபத்தில்?) அறுபதுகளிலேயே போலீஸ்காரர்களையே பிடித்து பஞ்சாலைக்குள் தள்ளி உயிருடன் கொளுத்திய கதை தமிழகத்தில் மறைக்கப்பட்டது ஏன்? அது குறித்து மேல் விபரங்கள் எதுவும் தெரியுமா?//


aduththa kathai aarambama
nadakkattum naattaaamai

Unknown said...

1.வெள்ளிகிழமை கேள்வி பதில், தொடர்ந்து வரும் சனி,ஞாயிறு விடுமுறை ஆதலால் உங்களது தகவல்கள் ,எல்லோரும் பயன் பெறும் வகையில், அடுத்த 2009 முதல், இந்த பதிவுகளை இனி வியாழக்(1.1.2009) கிழமைக்கு மாற்றினால், நல்லது.

இதே கோரிக்கை பல அன்பர்களால் வைக்கபட்டுள்ளது தாங்கள் அறிந்ததே.

உங்களின் வாசகர்களுக்கும்,பதிவை வழிகாட்டியாய் எண்ணி பின் தொடரும் 59 Followers க்கும் புத்தாண்டு பரிசாய் இதைச் செய்வீர்களா
டோண்டு ராகவன் சார்.
2.பின்னூட்டங்களின்,ஹிட்களின் எண்ணிக்கையை பார்க்கும் போது வியாழக்கிழ்மைக்கு மாற்றினல்
இன்னும் கல கலப்பு கூடுமே.

பொதுவாய் வெள்ளிக்கிழமை பதிவுகள்
எல்லோர் பிளாக்கிலும், சனி ஞாயிறு விடுமுறையால், பாதிக்கப் படுவது உண்மையில்லையா?

பதிவு வானத்தில் ஆர்வமாய் உள்ளவர்களில் பெரும் பாலோனோர்,25 டு 35 வது உள்ள இளைஞர்கள்,அதுவும் மென்பொருள் வல்லுனர்கள்.
அவர்களது மன அழுத்தம் தீர சனி ஞாயிறுகளில் ,சுற்றுலா சென்று விடுகிறார்கள்.
அடுத்த வாரம் முதல் திங்கட் கிழ்மை அன்று , போன வெள்ளிகிழமை களில் போடப் படும் பதிவுகள் மறைவுப் பிரதேசத்தில் மறைந்து .
விடுகிறதே.

மீண்டும் டோண்டு ராகவன் ஐயாவுக்கு நினைவூட்டுகிறேன்.

நாளை 1-1-2009
வியாழக் கிழமை.

கேள்வி பதில் புத்தாண்டுப் பரிசாக



இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

நக்கீரன் பாண்டியன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது