என் சிறு வயது தோழன் சிங்கு என்ற நரசிம்மனுடன் 30 வருடங்களாக தொடர்பு விட்டு போயிருந்தது. அவனைப் பலகாலமாகத் தேடிக் கொண்டிருந்தேன். அவன் குடும்பத்தினரும் என் அம்மாவின் அத்தையும் திருவல்லிக்கேணி சிங்கராச்சாரித் தெருவில் ஒரே வீட்டில் குடியிருந்தவர்கள். அவ்வீட்டார் அனைவரும் எனக்குப் பழக்கம்.
திடீரென்று ஒரு நாள் சிங்குவின் அக்கா டில்லியின் (இயற் பெயர் தெரியாது) தொலை பேசி எண் கிடைத்தது. பரபரப்புடன் போன் செய்தேன். ஃபோனை எடுத்து பதில் சொன்னது டில்லிதான் என்பதை அவர் குரலிலிருந்து அடையாளம் கண்டு கொண்டேன்.
நான்: ஹல்லோ, டில்லியா பேசுவது?
டில்லி: ஆமாம், நீங்கள் யார் பேசுவது?
நான்: டோண்டு
டில்லி: அடேடே டோண்டுவா, எப்படிடா இருக்கே? என்ன விஷயம்?
நான்: ஒன்றுமில்லை, சிங்குவின் நம்பர் வேண்டும்.
டில்லி: இதோ தருகிறேன்
30 வருட இடைவெளி செல்லப் பெயரால் ஒரு நொடியில் தகர்க்கப்பட்டது. ஆனால் ஒன்று. யாராவது க்ராஸ் டாக்கில் கேட்டிருந்தால் ரொம்பவே நொந்து போயிருப்பர்.
இதற்கு மாறாக வேறு இடத்தில் என்னைப் பற்றி விலாவரியாக என் அம்மாவின் தோழியிடம் அறிமுகப்படுத்திக் கொண்டபோது அவர் சாவகாசமாக கேட்டார் "டோண்டுதானே" என்று. அப்போதுதான் செல்லப் பெயரின் உபயோகம் தெரிந்தது.
இப்போது? டோண்டு என்றப் பெயரை நானே எதிர்பார்க்காத அளவுக்கு ரொம்பவுமே முனைந்து பிரபலமாக்கியிருக்கிறார் ஒரு புண்ணியவான்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Manasa Book Club, Chennai.
-
Hi Sir, Hope you’re doing well. Manasa Publications has launched the
‘Manasa Book Club’ — a monthly gathering for readers and writers. The meet
will be on ...
7 hours ago

No comments:
Post a Comment