3/31/2012

மனிதக் காதலுக்கு / நட்புக்கு உதவும் மிருகங்கள்

வள்ளியைக் கவர முருகனுக்கு அவர் அண்ணன் யானை வடிவில் வந்து உதவியது எல்லோருக்கும் தெரிந்ததே. நமது இலக்கியத்தில் அந்த காலத்திலிருந்தே இந்த கான்சப்ட் ஓஹோ என வொர்க் ஆகிறது.

இப்போது இந்த வோடோஃபோன் விளம்பரத்தைப் பாருங்கள்.

விளம்பர வாசகம் “சிறு ஓசையையும் கேளுங்கள் வோடஃபோனில்” புன்னகையை வரவழைக்கிறது.அதன் தொடர்ச்சி விளம்பரத்திலோ, உடனடி தொடர்புகள் வோடஃபோனில் என ஆட்டையைப் போடுகிறார்கள்.



தொடர்பு கிடைத்து பையனும் பெண்ணும் பேசும்போது பூஜை வேளையில் இன்னொருவர் கரடியாக வருவதைத் தடை செய்யும் விஷயமும் அதே நாயால் நடக்கிறது. அதையும் பாருங்கள். தடையற்றப் பேச்சுக்கள் வோடோஃபோனில்,


அடுத்து அந்த நாய் என்ன செய்யப் போகிறது என்பதையறிய ஆவலாக உள்ளேன்.

வள்ளி முருகன் கதையிலிருந்து சுட்டு எம்ஜிஆர் நல்ல நேரம் படத்தில் யானையின் உதவியுடன் கேஆர் விஜயாவை கரெக்ட் செய்யும் காட்சியையும் பார்க்கலாமே. ஹிந்தி வெர்ஷனிலும் நன்றாகவே வந்தது ஆனால் சுட்டி கிடைக்கவில்லை.


புறாவிடு தூது வேண்டுமா? அதுவும் கீழே காட்டும் இப்படத்தில் காணக்கிடைக்கும்.

முழுக்க பறக்காமல் காரில் சவாரி செய்து குறும்பு செய்கிறது புறா என்பது அடிஷனல் போனஸ்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

3/30/2012

பணமே எல்லாம் இல்லைதான், ஆனால் பணம் ஒன்றுமேயில்லை என்றும் கூற முடியாதல்லவா?

தியாகம் என்பது உயர்ந்த தத்துவமே, அதுவும் அந்தத் தியாகத்தை நாம் நமக்காக மற்றவரிடமிருந்து எதிர்பார்க்கும்போது,விளக்குகிறேன்.

மொழிபெயர்ப்பாளர் தலைவாசலாம் ப்ரோஸ்.காம்-ல் நடந்த மன்ற விவாதம் பற்றி நான் ஒரு பதிவு இட்டேன். நடந்தது இதுதான். ப்ரோஸ்.காம்-க்கு மட்டுறுத்துனர்கள் தேவைப்பட்டனர். மட்டுறுத்துனர்கள் இலவசமாக செயல்பட வேண்டும் என்பதுதான் ப்ரோஸ்-ன் எதிர்பார்ப்பு. ஆனால் பலர் ஒத்துக் கொள்ளவில்லை. அந்த இழை சீக்கிரமே மூடப்பட்டது.

பிரச்சினை என்னவென்றால் நான் எனது லாபநோக்கில் செயல்படுவேன் ஆனால் நீ எனக்காக தியாகம் செய்ய வேண்டும் என்னும் எண்ணமே. அதுவும் மொழிபெயர்ப்பாளர்கள் என்றால் அவர்கள் தம்படிகளுக்கு வேலை செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மற்றவர்களிடம் அதிகம் பரவி உள்ளது. அதுவும் இந்த ப்ரோஸுக்கு அந்த எண்ணம் அதிகமாகவே உள்ளது. அது பற்றி நான் எனது ஆங்கில பதிவில் இவ்வாறு எழுதியிருந்தேன்.

But then, why should a member be a moderator? And as I understand it, only platinum members can become moderators, who pay quite a sum of money already.

Way back in 2003, I saw wonderful moderators such as Ralf Lemster, Kim Metzger and others. These two have ceased to be one and I wonder why. A spate of well known moderators left the scene likewise. At that time there was much talk about it in the proz fora.

On seeing the conditions being imposed on a moderator and the benefits he is likely to get, I am not enamored of becoming one. Which is now beside the point as I am no longer a platinum member.

But yet:

The forum cited above has been locked. A few posts have been made invisible. I am not able to make my points there. Hence this blog post.

The benefits a moderator is supposed to get is expressed in the following words:
Moderators are volunteer members and are not paid for their work. However, there are a number of benefits to participating in the program: 

First, serving as a moderator provides an enhanced opportunity to help others benefit from the mission. For a person who has achieved success as a translator or interpreter, or in a translation company, and who has derived benefit from ProZ.com, the moderator program provides an opportunity to give something back by sharing what you have learned with others. 

Secondly, as it turns out, helping others to benefit from the mission also allows one to experience the benefits of the mission in a deeper way oneself. For example, because each class of moderators consists of a group of about 100 professionals from around the world, the program provides a great opportunity for personal networking. The camaraderie, and resulting friendships, cross linguistic and geographical boundaries. Also, because of the high profile nature of the role, moderators gain exposure that in some cases may lead to new business opportunities. Finally, as is the case with any professional challenge, the moderator role provides opportunities to advance as a professional and have fun at the same time.

Hope this explains.



No, this does not explain it, I am sorry to say. This can then be claimed for any free work. Surely the recipient of such pro bono work will think along those lines. But why should one consider becoming a moderator? 


In the Gotranslators portal. articles are solicited from members and in the event of giving one, they are offered 2 months of gomembership (equivalent to proz's platinum) free of cost. In that way I was a gomember for a period exceeding one year. 


Proz can consider such a gesture for moderators. This incentive will surely attract good talent. And by the way this gesture is not exactly new for proz. I was a platinum member of proz for 4 years and I did not spend a single cent for the same. It came about in the following manner. 


There was a move to localize proz into Tamil, my mother tongue. Three of us worked on that and a lot of browneys were given to us. It was in this connection that I wanted a platinum membership in exchange of the browneys. I initiated a forum post for this. There were lively discussions on this point. But if you now see that forum post, you will have no inkling of what actually happened. 


One fine day in July 2007, I was admitted to the platinum membership for one year against 20000 browney points. Come 2008, there was call for me to renew membership through payment with offer for 1/3 discount against 4000 browney points. I had more than 60000 browney points at that time and I remained adamant about getting platinum membership in the same way. 


In July 2008, I was given platinum membership for 3 more years and it lapsed this month. Not much browney points remained and I let the matter go.


My localization into Tamil was considered as valuable contribution and I got the membership. But then moderators too do a valuable service and they should be given at least browney poitns generously and if some of them convert it to platinum membership renewals, why not? 


There is precedence for this and I am that precedence.

கடைசியில் நான் சொன்னதுதான் நடந்தது. இப்போது ப்ரோஸ்-ல் பல வகை செயல்பாடுகளுக்கு பிளாட்டினம் அங்கத்தினர் ஸ்டேட்டஸ் தருகிறார்கள். நான் கூறியதால் வந்ததா அல்லது வேறு யாரும் சொன்னதால் வந்ததா என்பது தெரியவில்லை. ஏதோ நல்லது நடந்தால் சரிதான். பை தி வே எனக்கும் பிளாட்டினம் ஸ்டேடஸ் நீடிப்பு செய்த்துள்ளார்கள்.

மொழிபெயர்ப்பாளராக வருவது முக்கால்வாசி நேரங்களில் விருப்பத்தால் மட்டுமே. இத்தொழிலில் தொழில் மேல் பாசம் உள்ளவர்கள் அதிகமே. ஆனால் அதையே வாடிக்கையாளர்கள் பலகீனமாகக் கருதி ரேட்டைக் குறைக்கச் செய்யும் முயற்சிகளும் நடக்கின்றன. அதைத் தவிர்க்க வேண்டியது மிக முக்கியம்.

பணமா முக்கியம் என்றெல்லாம் சீன் காட்டுபவர்களை நான் எப்போதுமே ஸ்பேர் செய்ததில்லை. அந்த பப்பு என்னிடம் வேகாது என்பதை பல வகைகளில் சொற்களிலும் உடல் மொழியிலும் காட்டிவிடுவேன். ஆகவே என்னிடம் அதை அதிகமாக பயன்படுத்துவதில்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

3/10/2012

கணினி கடவுச்சொற்களை பாதுகாப்பது எப்படி?

இதற்காகவெல்லாம் மெனக்கெட்டு நான் ஏதாவது மென்பொருளை உபயோகிப்பேன் என்றால் சாரி. இல்லை. ஆனாலும் இது சம்பந்தமாக பல பதிவுகள் வந்து விட்டன. அவற்றை மேலோட்டமாக ஆய்வதே எனது இப்பதிவின் நோக்கம்.

1. ஒவ்வொரு அப்ளிகேஷனுக்கும் பிரத்தியேகக் கடவுச்சொல்லை வைத்துக் கொள்ளவும்.
நடக்கிற காரியமா அப்பு? எந்தக் கடவுச்சொல்லை எந்த அப்ளிகேஷனுக்கு வைத்துக் கொண்டோம் என எவ்வாறு நினைவில் வைத்திருப்பதாம், ஏனெனில் அவற்றை எல்லாம் எங்கும் எழுதி வைத்துக் கொள்ளக் கூடாது என வேறு பயமுறுத்துகிறார்கள்.

2. கடவுச்சொற்கள் குறைந்த பட்சம் 15 கேரக்டர்கள் கொண்டதாக இருக்க வேண்டும். அதுவும் @, \, %, # என்றெல்லாம் நடுவில் இருக்கவேணுமாம். அடப்போடாங், @#$%^&* @#$%^&* @#$%^&*

3. சில அப்ளிகேஷன்களில் அவர்களாகவே நம்மை கடவுச்சொல்லை மாற்றும்படி வாரத்துக்கு ஒரு முறை கழுத்தில் துண்டு போட்டு இருக்குகின்றனர். ஏதோ அவர்களுக்காக இரு கடவுச்சொற்களை மாற்றி மாற்றி பாவிக்கலாம் என்றால் அதுவும் கூடாதாம். புதிதாக வரும் கடவுச்சொல் முந்தைய மூன்று அல்லது நான்கு கடவுச்சொற்களிலிருந்து மாறுபட்டு இருக்க வேண்டுமாம். படுத்துகிறார்கள் சாமி.

4. கடவுச்சொல்லை மாற்றுவது நமது முடிவாக இருக்க வேண்டும். கண்ட சும்பன்கள் இதில் உள்ளே நுழையலாகாது.

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பல அப்ளிகேஷன்களுக்கு கடவுச் சொற்களை பாவிக்கும் நான் கண்டறிந்தது என்னவென்றால், ரொம்பவெல்லாம் மெனக்கெட்டு காம்ப்ளிகேட்டடாக கடவுச்சொற்கள் அமைத்துக் கொண்டு சந்தியில் நிற்கலாகாது என்பதே.

நாம் முன்னெச்சரிக்கையுடன் இருத்தல் நலம்.

நமது கடவுச் சொற்கள் நமக்கு மட்டுமே தேரியும் என்ற நிலையில்தான் அவை உபயோகமானவை. வேறு யாருக்கும் தெரியலாகாது. இந்த எளிமையான விதியை ஃபாலோ செய்யாது பல பதிவர்கள் சந்தியில் நின்றது பற்றி நான் அறிவேன்.

ஃபிஷிங் மின்னஞ்சல்களை கண்டதுமே அழிக்க வேண்டும்.

எனது ஜிமெயிலை ஹேக் செய்ய முயன்றான் ஒரு இழிபிறவி. அது பற்றி நான் இட்ட பதிவு இதோ.

அதே போல அவனது அல்லக்கை ஒருவன் என்னை தனது ஜீ டாக்கில் கொண்டுவர முயற்சித்தான். அதையெல்லாம் புறம் தள்ளியதால் நான் காப்பாறப்பட்டேன்.

பதிவை முடிக்கும் முன்னால் நான் கேட்ட ஒரு அசைவ ஜோக் இங்கே.

மலை வாசஸ்தலத்துக்கு பாய்பிரெண்டுடன் வந்த அப்பெண்ணுக்கு ஒரு பிரச்சினை. கருத்தடை மாத்திரைகளை கொண்டு வர மறந்து விட்டாள். கடைகள் ஏதும் சமீபத்தில் இல்லை. ஹோட்டல் மருத்துவரிடம் அன்றைய இரவை சமாளிக்க அவரிடம் மாத்திரை இருக்குமா எனக்கேட்க, அவரோ கருத்தடை மாத்திரை இல்லை, ஆஆனால் தலைவலி மாத்திரை தருவதாகக் கூறினார். அதை எவ்வாறு பயன்படுத்துவது இந்தத் தேவைக்கு என அப்பெண் மயங்க, அவர் கூறினார்.

கால் நீட்டி படுத்துக் கொள். தலைவலி மாத்திரையை இரண்டு முழங்காலுக்கு நடுவில் நிறுத்தி வைக்கவும். இரவு முழுவதும் அது கீழே விழாமல் பார்த்துக் கொள்ளவும். அவ்வளவுதான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

3/04/2012

குழந்தையும் தெய்வமும்

நான் ஏற்கனவேயே ஒரு பதிவில் குறிப்பிட்ட குழந்தையும் தெய்வமும் படத்தின் ஒரிஜினல் ஜெர்மானிய படமான Das dopplete Lottchen-ன் ஒரு படக்காட்சி கீழே தந்துள்ளேன். பாஷை புரியாவிட்டால் என்ன, குழந்தையும் தெய்வமும் படம் பார்த்தவர்களுக்கு அதைப் புரிந்து கொள்ள கஷ்டம் இருக்கலாகாது. சகோதரிகள் ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டு கொள்ளும் காட்சி.



நான் ஏற்கனவேயே சொன்னது போல, தமிழ் மற்றும் ஹிந்தி வெர்ஷன்களை நான் அவை முதன் முதலாக வந்த சமயம் பார்க்கவில்லை. ஆனால் ஒன்று நிச்சயம். ஆங்கிலம், ஹிந்தி மற்றும் தமிழ் வெர்ஷன்களில் சம்பந்தப்பட்ட குழந்தை நடிகைகள் இரட்டை பாத்திரத்தில் வந்தனர். ஆனால் சமீபத்தில் 1950-ல் Erich Kaestner-ராலேயே திரைக்கதை எழுதப்பட்ட Das doppelte Lottchen படத்தில் நிஜ இரட்டையரே நடித்தனர். இப்போது அந்த சகோதரிகளின் வயது 74-க்கு மேல் இருக்கும்.

ராமானந்த் சாகரின் உத்தர ராமாயணத்தில் வந்த லவன் குசனும் இரட்டை பிறவிகள். அப்படி இருந்தால் பல ட்ரிக் ஷாட்டுகள் மிச்சம்தானே.

என்ன தமிழ் படத்தில் வரும் அன்புள்ள மான்விழியே பாடல்கள் எல்லாம் வராது. அந்த சிசுவேஷனே கிடையாது. அதெல்லாம் இந்திய சூழ்நிலைக்கான மசாலா சேர்ப்பு. ஆனால் எனக்கு பிடித்த மசாலா சேர்ப்பு.



போகிற போக்கில் இப்படத்தின் ஆங்கில ரூபத்தையும் பாருங்கள், படம் Parent trap. காட்சி: சகோதரிகள் ஒருவரை ஒருவர் அடையாளம் காணும் நேரம். இங்கு ஹேய்லி மில்ஸ் இரட்டை பாத்திரம்.



அன்புடன்,
டோண்டு ராகவன்

3/03/2012

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 03.03.2012

சு. வெங்கடேசனின் காவல் கோட்டம்
அதை இப்போது படித்துக் கொண்டிருக்கிறேன். ராணி மங்கம்மாவின் மரணம் வரைக்கும் படித்து முடிந்தாகி விட்டது. இம்மாதிரியான தகவல்கள் அதிகம் நிறைந்த நாவல் படிக்கும்போது மனதுக்கு ஒரு வித களைப்பு வருவது தவிர்க்க இயலவில்லை. எல்லா தகவல்களையும் ஜீரணிக்க அவகாசம் தேவைப்படும். நாவலை எப்போது முடிப்பேன் எனத் தெரியவில்லை. எனது படிப்புக்கு குந்தகம் வரக்கூடாது என்ற எண்ணத்தினாலேயே அது பற்றிய மதிப்புரைகளை படிப்பதை தவிர்த்துள்ளேன். பார்ப்போம்.

“அன்புடன் டோண்டு ராகவன் அவர்களுக்கு” எனக் குறிப்பிட்டு வெங்கடேசன் அவர்களது கையொப்பத்துடன் புத்தகத்தைப் பெறமுடிந்தது. ஆனால் அவர் என்னைப் பார்த்ததில்லை. அவருக்கு தெரிந்தவர்கள் மூலமாக புத்தகத்தை வாங்கி அவர்கள் மூலமாகவே வெங்கடேசன் அவர்களிடம் எனது வேண்டுகோளையும் வைத்ததில் அவர் அன்புடன் கையொப்பமிட்டுத் தந்தார். அவருக்கு முதற்கண் என் நன்றிகள்.

பேபால் பணவினியோக சேவை
பேபால் பற்றி பல பயமுறுத்தும் கதைகளை படித்ததன் பலனாக அதை பாவிப்பதை இத்தனை நாட்களாக தவிர்த்து வந்துள்ளேன். இப்போதுதான் துணிந்து அதை பயன்படுத்தத் துவங்கியுள்ளேன். வெளி நாட்டில் இருந்து வரும் சிறு தொகைகளுக்கு அது மிகவும் லாபகரமானது என்று இப்போது தோன்றுகிறது. அதையும் பொறுத்திருந்துதான் பார்ப்போமே. எது எப்படியானாலும் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள சிறு தொகைகள் இப்போது எனக்குக் கிடைக்கும் வாய்ப்பு வந்துள்ளது. அவை எனது பேபால் கணக்குக்கு வந்து விட்டன. இனிமேல் எனது வங்கிக் கணக்குக்கு வருவதுதான் பாக்கி. ஏதோ வந்த வரையில் லாபம்.

Those who cannot remember the past are condemned to repeat it
வரலாற்றை அலட்சியம் செய்யலாகாது. இல்லாவிடில் வரலாற்றின் பிழைகளை நாம் மறுபடியும் செய்ய வேண்டியிருக்கும்.

இப்போ நாம் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம், சாதி பற்றி பேசவே மறுப்பதன் மூலம். பெரும்பான்மையானோர் இன்னமும் சாதியை பிடித்துக் கொண்டு ஏன் தொங்குகிறார்கள் என சிணுங்கும் “முற்போக்காளர்கள்” என தங்களை தவறாக புரிந்த் கொண்டிருப்பவர்கள் கோபப்படலாம். ஆனால் நான் சொன்னதில் உண்மை இல்லாமலில்லை. பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ, நடந்தவற்றை நாம் மறுக்கவியலாது. நான் ஏற்கனவேயே இப்பதிவில் குறிப்பிட்டபடி எந்த மதத்தவராயினும் சாதி போன்ற குழுமனப்பான்மையை தவிர்க்க முடியாது. இது எல்லா நாடுகளிலும் ஏதேனும் ஒரு ரூபத்தில் பரவியுள்ளது. என்ன நம்ம ஊரில் சாதி, மர்ற ஊர்களில் இனக்குழுக்கள் அவ்வளவுதான்.

பல ஆயிரம் ஆண்டுகளாக நம்மிடையே புழங்கும் சாதிகள் வரலாற்று உண்மைகளே அதை திட்டியாவது ஒழிப்போம் என்பது குழந்தைத்தனமானது. நிற்க.

நான் இங்கு கூற நினைப்பது வரலாற்றை நாம் பூசி மொழுகலாகாது என்பதே. இரண்டாம் உலக யுத்தத்தில் டங்கிர்க் என்னும் இடத்தில் பிரிட்டிஷ் துருப்புகள் பலமாக அடிவாங்கின. இங்கிலாந்துக்கு அது மகத்தான தோல்வி. இருப்பினும் அதைப் பற்றி அதிகமாகப் பேசுவதும் இங்கிலாந்துக்காரர்களே. அதன்றி அதை கம்யூனிஸ்டுகள் செய்வதுபோல வரலாற்றுப் பாடங்களிலேயிருந்து ஒதுக்கினால் பின்னால் ஒருகாலத்தில் அதே தவறை இங்கிலாந்துக்காரர்கள் மீண்டும் செய்யும் வாய்ப்பு அதிகம்.

ஆக நான் கூறுவது என்னவென்றால் சரியோ தவறோ நடந்ததை அப்படியே ஒப்புக் கொண்டு தவற்றை திருத்துவதே புத்திசாலித்தனம். நம்மூர் சரித்திர பாடங்களை பள்ளிகளுக்காக எழுதுபவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம் அது. செய்கிறார்களா? இல்லையே. பல குழுக்களை திருதி செய்யும் நோக்கத்தில் பூசி மெழுகுவதுதான் நடக்கிறது. இந்தியாவின் பழஙால சிறப்புகளை எடுத்துரைக்க தயக்கம் வருகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது