12/28/2012

தந்தி போவுது தபால் போவுது

இப்படி ஒரு விளையாட்டாம்.

இந்த விளையாட்டைச் சிறுவர் சிறுமியர் வட்டமாக உட்கார்ந்து ஆடுவர். ஒருவர் பட்டவர். அவருக்குத் தெரியாமல் ஒரு மணியாங்கல் வட்டத்தில் உள்ளவரிடையே கைமாறும். ஒருவர் கையில் கல் தங்கிவிட்டாலும், அவர் அடுத்தவரிடம் கல்லைக் கொடுத்துவிட்டது போல் நடிப்பார். இதனால் மணியாங்கல் யாரிடம் உள்ளது என்பது கல் வைத்திருப்பவரைத் தவிர யாருக்கும் தெரியாது. மூன்று சுற்று கைமாற்றம் நிகழ்வதற்கு முன் பட்டவர் யாரிடம் கல் உள்ளது என்று சொல்லிவிட வேண்டும். சொல்லாவிட்டால் பட்டவரைக் குனியவைத்து அவர் முதுகில் ஆளுக்கொரு தட்டு தட்டுவர். சொல்லிவிட்டால் கல் வைத்திருந்தவர் முதுகில் அனைவரும் தட்டுவர்.

இப்படி ஆட்டம் முடிந்தபின் மீண்டும் புதிதாகப் பட்டவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அடுத்த ஆட்டம் தொடரும். கல்லைக் கடத்தும்போது எல்லாரும் சேர்ந்து பாட்டுப் பாடுவர். தந்தி போவுது தபால் போவுது திரும்பத் திரும்ப இசையுடன் பாடுவர். 

இப்போ எதுக்கு இது பத்தி பேசறே என்னும் முரளி மனோகருக்கான பதில்தான் இப்பதிவு.

சமீபத்தில் 1969-ல் வெளியான படம் தர்தீ கஹே புகார் கே (நிலம் என்னும் நல்லாள் அழைக்கிறாள்) என்ற படத்தில் ஒரு சீன். ஜீதேந்திரா வயலில் இருக்க, அவன் அண்ணன் மகன் வந்து வீட்டுக்கு தந்தி வந்திருக்கிறது, அதை வைத்துக் கொண்டு அம்மா அழுகிறாள் என பதட்ய்டத்துடன் கூற, ஜீத்தேந்திராவும் அங்கு சென்று கூடவே ஒப்பாரி வைப்பார். தந்தியில் என்ன விஷயம் என யாருக்கும் தெரியாது, ஏனெனில் யாருமே படித்தவர்கள் இல்லை. கிராம ஆசிரியர் அபீ பட்டாசார்யா வந்து நல்ல விஷயம்தான் எனக் கூறும்வரை அமர்க்களம் நீடிக்கும்.

இங்கு நான் சொல்ல வந்தது தந்தி என்றால் சராசரி இந்தியர்கள் பதறுவது பற்றியே. ஆனால் தற்சமயம் தந்திகளை யாராவது அனுப்புகிறார்களா? நன் கடைசியாக 2003-ஆம் ஆண்டில் ராமேஸ்வரத்துக்கு ஒரு தந்தி அனுப்பினேன், ஏனெனில் விலாசதாரரிடம் ஃபோன் இல்லை. அதன் பிற்கு லேது. ஆண்டு துவக்கத்தில் தபால் ஊழியர்கள் தீபாவளி இனாம் கேட்டு வருவார்கள், அவர்களுள் தந்தி ஊழியர்கள் அதிகம். ஆனால் தற்சமயம் அதுவும் இல்லை. கூரியர் வந்து விட்ட இக்காலத்தில் ஆர்டினரி தபாலே இல்லை என ஆகிவிட்டது. சில அரசு சார் கடிதங்கள் மட்டும்தான் தந்தியில் அனுப்பப்படுகின்றன என நினைக்கிறேன்.

ராஜேஷ் கன்னாவின் இப்பாடல் காட்சிகள் இப்போது காணக்கிடைக்காது என்றே சொல்ல வேண்டும்.



ஒரு வேளை கிராமங்களில் இன்னும் இதெல்லாம் நடக்கிறதா எனத் தெரியவில்லை.? யாராவது சொல்லுங்கப்பூ.

இப்பல்லாம் தந்தி பற்றிய விளையாட்டுகளில் மட்டுமே அது பற்றி பேசுவார்கள் போல.

இத்துடன் தொடர்பு உள்ள எனது இன்னொரு பதிவு இதோ.

ஸ்ரீலங்காவில் தந்திக்கு மங்களம் பாடிவிட்டார்கள் போல தெரிகிறதே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

பின்சேர்க்கை: நணபர் நாகராஜன் அன்புடன் அனுப்பிய கௌரி கல்யாணம் பாட்டின் வீடீயோ இதோ:

12/23/2012

குஜராத்துக்கும் பிற மாநிலங்களுக்கிடையில் உள்ள முக்கிய வேறுபாடுகள்

குஜராத்தில்கூட மோதிக்கு முன்னால் அவர் வந்த பிற்கு என பார்க்க வேண்டியுள்ளது.

முதலில் குஜராத்தில் மோதிக்கு முன்னால் எப்படி இருந்தது, அதை அவர் எவ்வாறு சரி செய்தார் என்பதை பார்ப்போமா.

1. மோதி பொறுப்பை ஏற்ற சமயம்கல்வி விஷயத்தில் அதுவும் பெண்குழந்தைகள் கல்வி விஷயத்தில் குஜராத் 20-ஆம் இடத்தில்தான் இருந்தது. அதுவும் பாதியில் படிப்பை விடுபவர்கள் 49 விழுக்காட்டில் இருந்தனர்.
இந்த நிலையை மாற்ற வேண்டும் என்று மோதி முடிவு செய்தார். எல்லா பின் தங்கிய பகுதிகளுக்கும் விசிட் செய்தார். முக்கியமாக பெண்கள் கல்வியறிவு பெறுவதற்கு முன்னுரிமை அளித்தார். கடந்த நான்கு ஆண்டுகளில் பாதியில் படிப்பை விடுபவர்களது விழுக்காடு  2008-ல் 49-லிருந்து 4-க்கு வந்துள்ளது. (2011-ல் படிப்பாளிகள் 80%, அரசின் விடாமுயற்சியால்).

மேலும், பிரசவத்தில் பெண் மரணம் என்பது குஜராத்திலும் மற்ற இடங்களைப் போலவே துவக்கத்தில் இருந்திருக்கிறது.
மோதி அவர்கள் ஒரு காரியம் செய்தார். ஒவ்வொரு வெற்றிகரமான பிரசவத்துக்கு பிறகும் வைத்தியம் பார்த்த மருத்துவருக்கு ரூபாய் இரண்டாயிரம் ஊக்கத் தொகை அறிவித்தார். பிரசவத்துக்கு வரும் ஏழை பெண்களுக்கும் நல்ல மருத்துவ மற்றும் பண உதவி அளிக்கப்பட்டது. (ஒரு நாளைக்கு ரூபாய் 200, கூட வரும் அட்டெண்டண்டுக்கும் அதே தொகை). இதன் மூலம் 1,58,000 கர்ப்பிணிகள் பயன் அடைந்தனர். இதெல்லாம் இல்லாத நிலையில் பிரசவ மரணம் 6000 என்ற நிலையிலிருந்து ஒரே ஒரு மரணம் என்ற அளவில் பிரமிக்கத்தக்க முறையில் இறங்கியுள்ளது என அவர் துக்ளக் ஆண்டுவிழா கூட்டத்தில் கூறினார்.அதே கூட்டத்தில் அவர் கூறிய பிற விஷயங்கள் இன்வருமாறு:.


2. தமிழகத்தில் மின்சாரம் வந்தால் அது செய்தி. குஜராத்திலும் முதலில் அதே நிலைமைதான் மோடி அவர்கள் பதவிக்கு வந்த போது இருந்தது.
நிலைமையில் முன்னேற்றம் காண்பது கடினம் என்பது அதிகாரிகளின் கூற்று. மோடி அவர்கள் சளைக்காது நடவடிக்கை எடுத்தார். பகுதி பகுதியாக எடுத்து காரியமாற்றினார். முதல் 1000 நாட்களில் 45 விழுக்காடு கிராமங்களுக்கு முழு மின்சாரம் வழங்கப்பட்டது. இப்போது அதே திட்டம் குஜராத் முழுக்க விஸ்தரிக்கப்பட்டு 100 விழுக்காடு கிராமங்களுக்கு 24 மணி நேரமும் 3-phase மின்சாரம் வழங்கப்படுகிறது. இதற்காக மோடி அவர்கள் முதல் 1000 நாட்களில் செய்த விஷயங்கள் பின்வருமாறு. 23 லட்சம் மின்கம்பங்கள், 56,000 ட்ரான்ஸ்ஃபார்மர்கள், 75000 எலெக்ட்ரிக் மீட்டர்கள் ஆகியவை பொருத்தப்பட்டன. ஒரு அரசு மனது வைத்தால் என்னென்ன செய்ய முடியும் என்பதற்கு இதை விட நல்ல உதாரணம் வேறு ஏது?

 ”500 நாட்களில் 700 கிலோமீட்டர் நீளத்துக்கு நர்மதா திட்டத்தில் பைப்புகள் இடப்பட்டன” என்று சோ கூறியதை குறிப்பிட்டு அதை அப்டேட் செய்தார். தற்போது அதே புள்ளிவிவரம் 700 நாட்களில் 1400 கிலோமீட்டர் பைப்லைன்கள் போடப்பட்டன என்று கூறினார். அந்த பைப்பில் கருணாநிதி அவர்கள் தன்னுடைய குடும்பத்தாருடன் காரில் செல்ல இயலும் என்று பைப்லைனின் விட்டத்தை பற்றி கூறுவதற்காக அவர் தமாஷாக மேற்கோள் காட்டினார். (ஜெயும் சசிகலா கூட அவ்வாறு செய்யலாம்). ஒரே சிரிப்பு அரங்கில். தனக்கு எதிராக ஒரு ஊழல் புகாரும் இல்லை என்பது ஒரு புறம் மகிழ்ச்சி அளித்தாலும், மறுபுறம் அதை தக்க வைத்து கொள்ள வேண்டுமே என்ற கவலையும் இருக்கிறது என்றார். 

3. அரசு மனம் வைத்தால் வருவாயையும் பெருக்க இயலும் என்கிறார் மோதி. ஆனால் அது லஞ்சத்தை ஒழித்தால்தான் முடியும். உதாரணத்துக்கு மஹாராஷ்டிரம் மற்றும் குஜராத் வழியில் செல்லும் நெடுஞ்சாலையில் குஜராத் பக்கத்தில் ஒரு எல்லை செக்போஸ்ட் உண்டு, மஹாராஷ்ட்ரா பக்கத்தில் ஒரு செக்போஸ்ட் உண்டு. இரண்டிலும் ஒரே அளவு வண்டிகள் போக்குவரத்துதான். குஜராத் தரப்பினர் சட்ட பூர்வமாக கலெக்ட் செய்வது ஒரு நிதியாண்டில் மஹாராஷ்ட்ரா தரப்பில் உள்ளதை விட 239 கோடியே 60 லட்சம் ரூபாய் அதிகம். சட்டப்படி என்னவெல்லாம் வருமானம் அரசுக்கு வரக்கூடும் என்பதை அது தெளிவாகக் காட்டுகிறது. ஆனால் அதெல்லாம் செய்யாது விட்டால் கீழ்மட்டத்திலிருந்து மேல் மட்டம் வரை அதிகாரிகள், மந்திரிகள் ஆகியோரது தனிப்பட்ட பணப்பைதான் நிறைகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

4. மேலும் சில குஜராத் புள்ளி விவரங்கள். மோடி முதலில் ஆட்சிக்கு வந்தபோது நிதி பற்றாக்குறை 6700 கோடி ரூபாய், தற்சமயம் (2008-ல்) 1000 கோடி ரூபாய் உபரியாக கையில் உள்ளது. ஆண்டுக்கு 2500 கோடி ரூபாய் பற்றாக்குறை பட்ஜெட் வரி உயர்வு ஏதும் இன்றி 400கோடி ரூபாய் உபரி பட்ஜெட்டாக உயர்ந்துள்ளது. முக்கிய காரணம் லஞ்சம் எல்லா தளங்களிலும் ஒழிக்கப்பட்டு வரி வசூல் சரியாக நடந்ததே.

5. 2007 தேர்த்ல் சமயத்தில் காங்கிரஸ் கலர் டிவி தருவதாக வாக்களித்தபோது அவரிடம் பத்திரிகைக்காரர்கள் இது பற்றி கேட்டுள்ளனர். கலர் டிவி தர இயலாது ஆனால் தான் பதவிக்கு வந்தால் வரி கொடுக்காதவர்களை தேடி கண்டுபிடித்து நோட்டீஸ் கொடுக்கப் போவதாக தயக்கமின்றி கூறியுள்ளார். மக்கள் தங்கள் நலனை அறிந்தவர்கள். ஆகவே வரி வசூல் நோட்டீஸ் அனுப்பப் போவதாக சொன்ன தனக்கு ஓட்டு போட்டு ஜயிக்க வைத்தனர் என்பதில் மோடிக்கு ஐயமேயில்லை. (இப்போது 2012-ல் மட்டும் என்ன வாழுகிறதாம்).

சரி குஜராத்தை பார்த்தாயிற்று. மர்ற்ற மாநிலங்களைப் பார்ப்போமா. தமிழகத்தையே எடுத்து கொள்வோம்.

திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே ஊழலை ஊக்குவிப்பவையே. ஜெயலலிதா தேவலை என நான் முன்னால் கூறியதற்கு காரணமே கருணாநிதி worse என்பதால்தான். மற்றப்படி இருவரையும் மோதியுடன் ஒப்பிட்டால் நமக்கு டிப்ரஷன்தான் வரும்.

ஜெயும் சரி கேயும் சரி தாம் பதவியில் இருக்கும்போது மற்றவர் அடுத்த தேர்தலில் வெற்றி எற ஏதுவாகவே உழைக்கின்றனர். ஜெ பதவியில் இருப்பதால் முதலில் அவரது சொதப்பகளை பார்ப்போம்.

சமச்சீர் கல்வி, அரசு தலைமைச் செயலகம், அண்ணா நூல்நிலையம், சாலைப் பணியாளர் ஆகிய விஷயங்களில் அவர் தேவையின்றி அவசரமாக செயலாற்றி நேர விரயம் செய்துள்ளார்.  மின்வெட்டு விஷயமோ இன்னும் சரியாகவில்லை. முயற்சி செய்வதக அவர் கூறினாலும் அது பலனடையும்போதுதான் தெரியும்.

கே அவர்களோ சுத்தம். மானாட மயிலாட நிகழ்ச்சிக, தனக்கு அளித்த பாராட்டு நிகழ்ச்சிகள் ஆகியவர்றுக்கு நேரம் ஒதுக்கியதை தவிர வேறு எதுவும் செய்யவில்லை. அவரது குடும்பத்தினரோ ஐயையோ என்றுதான் கூற வேண்டும்.

இருப்பினும் எரியும்  கொள்ளியில் எது நல்ல கொள்ளி என பார்த்து ஜெக்கு ஆதரவு தர வேண்டியிருக்கிறது.

தமிழகம் போலவே  மற்ற மானிலங்களும் (குஜராத் தவிர).  குஜராத்திலோ காங்கிரஸால் ஒறும் செய்ய இயலவில்லை. வெறுமனே பொரும வேண்டியதுதான்.

சரி, மோதி பிரதமராகலாமா? என்னைக் கேட்டால் அவர் இப்போதைக்கு குஜராத்திலேயே இருக்க வேண்டும் என்பேன். இன்னும் ஓர் ஐந்தாண்டு போகட்டும். அப்போதாவது குஜராத்தின் உதாரணம் மற்ற மானிலங்களுக்கு இன்னும் நன்றாக உரைக்கட்டுமே.

அன்புடன்,
டோண்டு ராகவன்
பின்சேர்க்கை: நண்பர் அருண்பிரபு அவர்களது பதிவு அருமையாக உள்ளது. கண்டிப்பாக படிக்கவும். 

12/20/2012

மனம் நிறையச்செய்த மோதியின் வெற்றி-2

இந்தத் தலைப்பில் போட்ட முந்தையப் பதிவு 5-ஆண்டுகளூக்கு முந்தையது. அப்போதே சொன்னது இப்போதும் அப்ப்ளை ஆகிறது என்றாலும் இந்த வெற்றி இன்னும் பெருமை வாய்ந்ததே.

மோதிக்கு எதிராக நின்ற காங்கிரஸ் வேட்பாளர் டிபாசிட் இழந்தாரா எனத் தெரியவில்லை. ஆமாம் என்றால் இரட்டிப்பு சந்தோஷமே.

இம்முறை மோதிக்கு உள்ளிருந்து எதிரிகள் அதிகம். அதில் கேஷுபாய் ,முக்கிய்மானவர். அவர் வெற்றி பெற்றாலும் அவரது கட்சிக்கு அமோகத் தோல்வி. அக்கட்சிக்காரர்கள் எத்தனை பேருக்கு டிபாசிட் போயிற்று என்பது நாளைக்குத்தான் தெரியும். அப்போது பார்த்து சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம்..

இப்போதைக்கு மோதியின் வெற்றியை பதிவு செய்வோமாக.

அன்புடன்,
டோண்டு ராகவன்

11/15/2012

பிராமணாள் கபே

சமீபத்தில் ஐம்பதுகளில் சென்னை திருவலிக்கேணியில் முரளி கபேக்கு முன்னால் பிறாமணாள் ஹோட்டல் பெயர் அகலவைக்கும் போராட்டாம் ஈ.வே. ராமசாமி நாயக்கர் தலைமையில் நடந்த போது எனக்கு 10 வயது.

நாயக்கர் தார்சட்டியுடன் ஏணிமேல் ஏற, முரளி கபே ஓனர் மேலே வென்னீர் நிறைந்த பாத்திரத்துடன், “ஐயா நாயக்கரே, மேலே வென்னீர் ஊற்றுவேன்” என்று கூற மரியாதையாக நாயக்கர் கீழே இறங்கினார். பிறகு நீண்ட கோல் உதவியால் தார் பூச, செதுக்கிய கல்லில் பிறாமணாள் பெயர் இன்னும் பிரகாசிக்க ஆரம்பித்தது.

பிறகு காஞ்சிப் பெரியவா சொன்னதன் பேரில் முரளியாகவே அதை செதுக்கி வெளியே எடுத்தார். இதைப்போய் த்மது வெற்றியாக திராவிட குஞ்சுகள் பறை சாற்றிக் கொண்டது வேறு கதை.

ஸ்ரீராங்கத்தில் இது ரிபீட் ஆகியியுள்ளது. பிராமணாள் பெயர் வைத்த ஹோட்டல் வாடகை கட்டடத்தில் இருந்ததாலும், மீதி வாடிக்கையாளர்க்ளுக்கு பிரச்சினை வந்ததாலும், திகவின்ர் ரௌடி செயல்களில் ஈடுபட்டதாலுமேயே இச்சமயம் அது நீக்கப்பட்டது.

இப்போது தேவை முரளி ஐயர் போன்று துணிச்சல் உள்ள பேர்வழியும், சொந்த கட்டிடமும்தான். பிறகு பார்க்கலாம், எவன் என்ன சொல்லுகிறான் என்று.  

அன்புடன்,
டோண்டு ராகவன்

11/02/2012

உணர்ச்சி வசப்படுதல் தவறா?

என்னுடன் திரைப்படம் பார்க்க வரும் நண்பர்களுக்கு அது ஒரு பொழுதுபோக்கு, கூடவே சங்கடமும் கூட. அதாகப்பட்டது, நான் சினிமாக்களில் உணர்ச்சிகரமான கட்டங்களில் கூச்சமேயின்றி கண்ணீர் விட்டு அழுதுவிடுவேன்.

ஏண்டா பொட்டை மாதிரி அழுது மானத்தை வாங்கறே என்பான் என் நண்பன் ராமச்சந்திரன்.. உறவினர்களுடான் சினிமா பார்க்கச் செல்லும்போது “டோண்டு அழறான் பாரு” என்று கூறுவது என் காதுகளில் விழுந்தாலும் நான் கேர் செய்ததில்லை.

சமீபத்தில் 1969-ல் வெளியான ஆராதனா படத்தில் காஹே கோ ரோயே என்னும் இப்பாடலின்போது பேசாமல் அரங்கை விட்டு வெளியேற வேண்டியதாயிற்று, அவ்வளவு அழுவாச்சி.



பாட்டு முடிந்ததும்தான் திரும்ப வந்தேன்.

அதை விடுங்கள் இந்த டோண்டு அப்படித்தான். நான் வேறொரு தருணத்தில் உணர்ச்சி வசபட்டது பற்றி இங்கே கூறியுளேன்.

அழுகை மட்டும்தான் உணர்ச்சி வசப்படுதலா? ஏன், சில சமயம் பெருமிதமும் அதை செய்யும். இன் ஃபேக்ட் அதை கூறுவதற்கான முன்னோடிதான் மேலே நான் எழுதியது.

ஃபிரெஞ்சில் ஃப்ரான்ஸ்வா காவன்னா என்னும் எழுத்தாளரிடம் அந்த மொழி குழந்தை மாதிரி விளையாடுவ்தை பார்த்த எனக்கு ஜெயமோகன் அவர்களிடம் தமிழ் விளையாடுகிறது என்ற ஸ்டேட்மெண்ட் விடுவதில் எத்தயக்கமும் இல்லை. அவரது காந்தியின் உடை பற்றிய பதிவிலிருந்தே உதாரணம் தருவேன். காந்தி சம்பந்தமான நமது பெருமிதத்தால் உணர்ச்சிவ்சப்பட்டேன் என்பதைக்கூற வெட்க்ப்படவில்லை.

அவ்வரிகள்:
காந்தி பிரிட்டிஷ் மாமன்னரைச் சந்திக்கச்சென்றபோது சொன்ன அந்த இருவரிகளும் திட்டவட்டமாக அவரது எண்ணத்தைக் காட்டுகின்றன. தன்னுடைய உடை தனக்கு இயல்பானது என்கிறார் காந்தி. அந்த உடையே தான் என்கிறார். அடுத்தபதில் இன்னும் நுட்பமானது. தன்னுடைய உடையையும் சேர்த்து மாமன்னர் அணிந்திருக்கிறார் என்பது சுரண்டப்படும் இந்தியாவாக அவரையும் சுரண்டும் பிரிட்ட்ஷ் சாம்ராஜ்யமாக மாமன்னரையும் நிறுத்திவிட்டது. இந்தியாவை பிரிட்டன் சுரண்டி அழிக்கிறது என்பதற்கு அவர்கள் இருவரும் நிற்கும் படங்களே போதுமான ஆதாரமாக அமைந்தன. அவை வெளியானபோது காந்தியும் காங்கிரசும் சொல்ல விரும்பியவை அனைத்தையும் அவையே உலகமக்களிடம் சொல்லின.
===================================================================
சாதாரணமாக இருக்கையில் வேட்டிகட்டி சட்டை போட்டிருக்கும் மகாராஜாக்கள் தர்பாருக்குச் செல்லும்போது முழங்கால்வரை வரும் பளபளப்பான பூட்ஸுகளையும் அதற்குள் செருகும்விதமான தொளதொளப்பான கால்சட்டைகளும் அணிந்திருப்பதை காந்தி கவனிக்கிறார். லண்டனில் படித்த அவருக்குத்தெரியும் அது பிரிட்டிஷ் அரண்மனையின் சேவகர்களின் சீருடை என்று. அவர் அந்த மகாராஜாக்களிடம் பேசுகிறார். அப்போது தெரிகிறது அவர்களுக்கும் அது தெரியும் என்று.
‘எங்களுடைய துர்ப்பாக்கிய நிலைமை எங்களுக்குத்தான் தெரியும். எங்கள் செல்வத்தையும் பட்டங்களையும் காப்பாற்றிக்கொள்வதற்காக எவ்வளவு அவமானங்களுக்கெல்லாம் நாங்கள் உள்ளாகவேண்டியிருக்கிறது என்பதையும் நாங்கள் மட்டுமே அறிவோம். ‘ என்று ஒரு மன்னர் சொல்கிறார். ’இருந்தாலும்கூட வேலைக்காரர்கள் மட்டுமே அணியக்கூடிய இந்தக் கால்சட்டையையும் பூட்ஸுகளையும் அணியத்தான் வேண்டுமா?’ என்று காந்தி வேதனையுடன் கேட்கிறார். ‘எங்களுக்கும் வேலைக்காரர்களுக்கும் ஏதாவது வேறுபாடு இருப்பதாகக் காண்கிறீர்களா?” என்று துயரத்துடன் மகாராஜா பதில்சொல்கிறார்.
========================================================================
ஆம், உடையரசியலின் தொடக்கம் அங்கேதான். இந்திய மகாராஜாக்களை வேலைக்கார வேடமிட்டுத் தன் வேலைக்காரர்களுடன் சேர்த்து நிறுத்திய பிரிட்டிஷ் ஆதிக்க மனநிலைக்கு எதிரான கலகம் காந்தியின் உடை. தார்ப்பாய்ச்சிய ஒற்றை உடையும் மேல்துண்டுமாக அந்த வைஸ்ராயின் சபைக்குச் சென்றார் காந்தி. அதற்கு முன்பு அவர் தனக்குப்பின்னால் இந்தியதேசத்தையே அணிவகுத்து நிறுத்தியிருந்தார். தன் உடைமூலம் காந்தி பிரிட்டிஷ் ஏகாதிபத்திய மனத்திடம் சொன்னார் ’என்னை சமமாக மதித்து அமரச்செய்து என்னிடம் நீங்கள் பேசியே ஆகவேண்டும். முடியாதென்று சொல்லுங்கள் பார்ப்போம்’ என்று . ’நீங்கள் மகாராஜாக்களுக்கு வேலைக்கார வேடம் போட்டு நிற்கச் செய்யலாம். ஆனால் இந்தியாவின் ஏழைக்குடிமகனை நீங்கள் உங்களுக்குச் சமானமாக நடத்தியாகவேண்டும்’ என்று.
=======================================================================
காந்தி எவரையும் தன்னைவிடக் கீழாக நினைப்பவரல்ல, ஆகவே எவரையும் மேலானவராகவும் அவர் நினைக்கவில்லை. ஆனால் வரலாற்றுமனிதராக அவர் அக்கணத்தில் விஸ்வரூபம் கொண்டு எழுந்தார். யார் அந்த ஐந்தாம் ஜார்ஜ்? எங்கே அந்த போப் பதினொன்றாம் பயஸ்? இன்று வரலாற்றின் ஆழத்திலுறங்கும் கூழாங்கற்கள் அவர்கள். காந்தி ஒரு வரலாறு. ஒரு மலைச்சிகரம்.
=======================================================================
ஞானம்பெற்றபின் இல்லம்திரும்பும் புத்தரின் சிலை ஒன்றை மதுரா அருங்காட்சியகத்தில் காணலாம். யசோதரையும் சுத்தோதனரும் யானைகளும் அரண்னை முகடுகளும் அந்த நகரமேகூட புத்தரின் முழங்காலுக்குக் கீழேதான் இருக்கும். 1931 கோடையில் காந்தி தன் பாதங்களின் அளவுக்கே உயரமாக நின்ற மாமன்னரிடம் மிகமிகக் குனிந்துதான் பேசியிருப்பார். அவருக்கே உரிய கனிவுடன்.
==========================================================================
மீண்டும் டோண்டு ராகவன். மேலே சொன்ன வரிகள் என் பெருமித உணர்ச்சிகளைத் தூண்டி கண்களில் நீர் பெருக்கோடச் செய்தன.

அன்புடன்,
டோண்டு ராகவன்
.

10/24/2012

பெங்களூர் விஜயம்

வரும் வெள்ளியன்று (26.10.2912) சதாப்தியில் பெங்களூருக்கு வந்து திங்கள் காலை (29.10.2012) சதாப்தியில் சென்னை திரும்புகிறேன்.

27 மாலை மற்றும் 28 காலை மற்றும் மாலை என் அண்ணன் மகள் திருமண விழாவில் இருப்பேன். மற்ற நேரங்களில் HAL II Stage-ல் உள்ள என் மைத்துனன் ராமானுஜம் வீட்டில்தான் இருப்பேன். வெளியில் அலையும் உத்தேசம் ஏதும் இல்லை.

பெங்களூர் பதிவுலக நண்பர்கள் விரும்பினால் நான் பெங்களூரில் இருக்கும்போது தொலை பேசலாம், முடிந்தால் நேரில் சந்தித்தும் பேசலாம்.

என் செல்பேசி எண்: 09884012948
ராமானுஜத்தின் லாண்ட்லைன் எண்கள்: 25285043, 25287122

அன்புடன்,
டோண்டு ராகவன்

சின்மயி விவகாரம்

இது பற்றி பலரும் பதிவு போட்டுள்ள நிலையில் நான் என்ன கூறப்போகிறேன்? எல்லாமே ஏற்கனவே பார்த்தது போன்ற ஃபீலிங்கையே உருவாக்கியுள்ளன. இதை déjà vu என்று கூறுவார்கள்.

போலி டோண்டு என்னை பீடித்தபோது நான் அவன் யார் என்பதை வெளிப்படையாகக் கூறாது தவிர்த்ததை பலர் குறை கூறினர். இன்னும் சிலர் நேராக சைபர் கிரைமுக்கு போக வேண்டியதுதானே என்றும் கூறினர். ஆனால் அதற்கான சமயம் இன்னும் வரவில்லை என நான் கூறியதை கேலி செய்தனர். 

விஷயம் என்னவென்றால் சாதாரண் நபர் போலீசுக்கு போனால் அதுவும் சைபர் போலீசுக்கு போனால் ஒன்றும் நடபதில்லை என்பதே என் அனுபவம். முதலில் கம்ப்ளைண்ட் எடுக்கவே அலைகழித்தனர். சிடி போலீஸ் சிபிசிஐடியை கை காட்டியது. அங்குள்ள டிஎஸ்பியோ தான் என்ன செய்ய முடியும் என சலிப்பைக் காட்டினார். ஆக உற்சாகமான அனுபவமாக இலை.

எனது யுக்தி வேறுமாதிரி இருந்தது. போலி டோண்டு எதிர்பார்த்தது போல நான் முடங்காமல் போனதே அவனை எரிச்சலூட்டி மேலும் தாக்குதல்களை நிகழ்த்த வைத்தது. அதில் பலர் அடிபட்டார்கள். அவற்றில் ஒருவருக்கு தமிழக அரசு மந்திரி ஒருவரின் பி.ஏ.வை தெரிந்திருந்தது. அவரை வைத்து மூவ் செய்து கடைசியில் போலியை வேருடன் அறுத்தார்கள். 

ஆனால் சின்மயிக்கு அப்பிரச்சினை இல்லை. அவர்தான் செலிப்ரிடி ஆயிற்றே. அவராகவே மூவ் செய்து கைதுகளை நடத்தி வைக்க முடிந்தது. இப்போ கையா முய்யா என அக்யூஸ்டுகளின் தோழர்கள் குதிக்கிறார்கள். 

சின்மயி விவகாரத்திலும் போலி டோண்டு விவகாரத்திலும் காமனாக என்ன இருந்தது என்பதை பார்த்தால் அதுதான் பார்ப்பன வெறுப்பு. சின்மயி பாப்பாத்தி, டோண்டு பாப்பான். போதாதா தாக்குதல்கள் நிகழ்த்த? இதை நான் மிகைபடுத்தவென்று கூறவில்லை. எனது பல பதிவுகளில் விவாதங்கள் வருமோது எனக்கு போலி டோண்டுதான் சரி என வன்மத்துடன் கூறியவர்களும் உண்டு. 

அதிலொருவர் எழுதினார், “போலி டோண்டு இருந்த காலத்தில் அனைவருமே அவனை எதிர்த்து கொண்டு தான் இருந்தார்கள், அந்த நேரத்தில் அப்பிராணி பட்டம் வாங்கி பலரது இரக்கத்தை சம்பாரித்து ப்ளாக்கில் மொக்கை போட்டு கொண்டிருந்தார் டோண்டு!” (தான் யார் பக்கம் என்பதை இங்கு தெளிவாகவே காட்டி விட்டார்)..

இப்போது கூட போலி டோண்டுவுக்காக பிரலாபிப்பவர்களது மோட்டிவேஷன்களில் முக்கியமானது பார்ப்பன வெறுப்பே.

என்ன செய்வது, I will have to call a spade a spade.

அன்புடன்,
டோண்டு ராகவன் 



10/20/2012

மொழிபெயர்ப்பாளர்கள் ஒத்துழைப்பதிலையாம், திருவாய் மலர்கிறார் சாரு

சாரு எழுதியதிலிருந்து சில வரிகள்:
என்னுடைய எழுத்துக்கள் ஆங்கிலத்தில் அல்லது வேறு ஏதேனும் ஒரு ஐரோப்பிய மொழியில் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்ற விஷயத்தைப் பற்றி நான் அவ்வப்போது எழுதி வரும் புலம்பல் கட்டுரைகளைப் படித்து நீங்கள் சலிப்படைந்திருக்கலாம்.  அப்படி சலிப்படைந்திருந்தால் இந்த வார்த்தைக்கு மேல் படிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இதை நான் மிகுந்த மன உளைச்சலில் எழுதுகிறேன்.  இந்த அளவுக்கு மன உளைச்சலை நான் இதுவரை அனுபவித்ததே இல்லை.  எப்படியென்றால், மகாநதி என்ற சொல்லுக்கு உதாரணமாக இருக்கக் கூடிய Mekong நதி லாவோஸையும் தாய்லாந்தையும் பிரித்துக் கொண்டு ஓடுகிறது; ஒரு கிலோமீட்டர் அகலம் கொண்டது மெக்கோங்.  நான் தாய்லாந்துக் கரையில் நண்பரோடு அமர்ந்து கறுப்புத் தேநீர் அருந்திக் கொண்டிருக்கிறேன்;  அற்புதமான பேரமைதி கொண்டிருந்த காலை நேரம்.  பட்சிகளின் சப்தம் கூட எப்போதோதான் கேட்டுக் கொண்டிருந்தது.

வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத பேரழகு கொண்ட அந்த நேரத்தில் நான் இந்தியாவில் இருக்கும் என் மொழிபெயர்ப்பாளர் நண்பரோடு கடும் விவாதம் செய்து கொண்டிருந்தேன்.  2013-ஆம் ஆண்டில் ஏஷியன் மேன் புக்கர் விருதுக்கு என் புத்தகம் ஒன்று அனுப்பப்படாவிட்டால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று கத்திக் கொண்டிருந்தேன்.  24 மணி நேரம் கொண்ட உங்கள் ஒரு நாளில் எனக்காக ஒரு மணி நேரம் தினமும் செலவு செய்ய முடியாதா என்று பிச்சை கேட்டுக் கொண்டிருந்தேன். இண்டர்நேஷனல் காலில் இருபது நிமிடம் பேசினேன்.  நண்பர் அலுப்புடன் “நேரில் வாருங்கள்; பேசிக் கொள்ளலாம்” என்று சொல்லி போனை வைத்து விட்டார்.

ஆமாம் சாரு என்னவென்று நினைத்து கொண்டிருக்கிறார்? அதற்கு முன் ஒரு முக்கிய விஷயத்தை கேட்க வேண்டும்? மொழிபெயர்ப்பாளருக்கு என்ன தொகை தருவார்? முழுக்க முழுக்க ஓசியில்தான் எதிர்பார்க்கிறார் என்பது எனது துணிபு. இது பற்றி அவரிடம் நேரிடையாகவே கேட்டதற்கு அவர் மழுப்பலாகத்தன் பதிலளித்தார்.

நானும் பார்த்து விட்டேன். இப்படித்தான் எழுத்தாளர் சமுத்திரம் அவர்கள் என்னை அவரது அடுக்குமல்லி நாவலுக்கான ஆங்கில மொழிபெயர்ப்புக்கு அணுக, நான் எனது ரேட்டைக் கூறினேன். தான் வெறுமனே 5000 ரூபாய்தான் தர முடியும் என அவர் தெளிவகவே கூறினார். அதற்கு 4 பங்குக்கு மேல் எனது விலை இருக்கும். ஆகவே அதை நான் ரிஜெக்ட் செய்தேன்.

இவராவது பரவாயில்லை, 5000 ரூபாய் தருவதாகக் கூறினார். ஆனால் சாரு? அவர்தான் ஓசிகளுக்கு அலைபவர் ஆயிற்றே. அப்புறம் என்ன மயித்துக்கு தார்மீகக் கோபம் எல்லாம் பட வேண்டும்? இதைத்தான் அதிகாரப் இச்சை என்பார்கள்.

சாருவின் மொழி பெயர்ப்பாளர்களுக்கு எனது அனுதாபங்கள். அடிமாட்டு விலைக்கு க்றவை மாட்டை எதிர்பார்க்கும் இவர்களுக்கு இடமே தரலாகாது.

அன்புடன்,
டோண்டு ராகவன் . 

10/15/2012

பெண்ணாசை அடங்கியது

ஒரு ஆணுக்கு மூன்று ஆசைகள் உண்டு அவை: மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை. இப்பதிவு இடையில் உள்ள பெண்ணாசை பற்றியது.

முதலில் நான் இட்ட “சரோஜாதேவி புத்தகங்களும் இன்னும் பிற இலக்கியங்களும்” என்னும் பதிவில் இவ்வாறு எழுதியிருந்தேன்:

சரோஜாதேவி புத்தகங்களால் பாதிக்கப்படாத இளைஞனே இருக்க முடியாதுதான். சமீபத்தில் 1971 முதல் 1974 வரை நான் பம்பாயில் வசித்த போது அவற்றை நிறைய படித்ததை இங்கே எழுதியுள்ளேன். சரோஜாதேவி புத்தகங்கள் சென்னையில் காணக் கிடைக்கவில்லை. பங்களூரில் பப்ளிஷ் செய்வதாகக் கேள்வி. எழுபது எண்பதுகளில் சென்னையில் மருதம் என்ற பெயரில் இம்மாதிரி பலான புத்தகங்கள் வந்தன. எண்பதுகளில் தில்லியில் மதுக்குடம் என்ற பெயரிலும் புத்தகங்கள் வந்தன.

அப்போது கேட்ட ஒரு டயலாக், இரண்டு நண்பர்களுக்குள்.

ஒருவன்: டேய் நம்ம ராமு நேத்திக்கு என்ன செஞ்சான் தெரியுமா, மதறாஸ் ஸ்டோர்ஸில் போய் மதுக்குடமும் ஞானபூமியும் கேட்டிருக்கான். என்ன என்று கேட்டால் அவன் அப்பாவுக்கும் அவனுக்கும் தேவையானதையே கேட்டானாம்.

இன்னொருவன்: பாவம்டா ராமுவின் அப்பா. தனக்கு ஞானபூமி வாங்கப்போன இடத்திலேயே தன் மகன் மதுக்குடமும் கேட்டான் அப்படீன்னா எவ்வளவு வருத்தப்படுவார்?

ஒருவன்: டேய் அடங்குடா, ராமு ஞானபூமி கேட்டது தனக்காகத்தான். புரிஞ்சுக்கோ.

விடலைப்பருவம் தாண்டும்போது இதெல்லாம் ஒரு காலத்தின் கட்டாயமே. கஷ்டப்பட்டு நான் வாங்கி வந்தால் எனக்கு தெரிந்த பெரிசுகள் சில "அடேய் அயோக்கியா, இதெல்லாம் படிக்கிற வயசாடா உனக்கு" என்று அதட்டி புத்தகத்தைப் பிடுங்கிக் கொண்டு தாங்கள் படிக்க எடுத்து செல்வார்கள்.

அமெரிக்க, பிரிட்டிஷ் நூல்நிலையங்களிலிருந்து புத்தகம் எடுக்கும்போது சில குறிப்பிட்ட எழுத்தாளர்களை தேடிப் போவேன். நூற்றுக் கணக்கான பக்கங்களில் அள்ளித் தெளித்தது போல அங்கங்கே பலான மேட்டர்கள் வரும். அவற்றை கண்டுபிடிக்க நேக் வேண்டும். அவ்வாறான சில புத்தகங்கள் எடுத்து வந்தால் அப்போதென்று என் தந்தையோ, பெரியப்பாவோ அல்லது சித்தப்பாவோ வந்து "என்னடா புத்தகம், காண்பி" என்று அதட்டல் போட்டு அதை வாங்கி புரட்டுவார்கள். எப்படி புரட்டினாலும் அவர்களுக்கென்று அதே பலான பக்கங்களே மாட்டும். ரொம்ப கஷ்டம்.

நான் ஜெர்மன் மற்றும் ஃபிரெஞ்சு படித்ததற்கு இம்மாதிரி தலையீடுகளை தவிர்ப்பதுவும் ஒரு முக்கிய காரணம். ஆனால் இதில் சோகம் என்னவென்றால், மேக்ஸ் ம்யுல்லர் பவனிலோ அல்லியான்ஸ் ஃபிரான்ஸேய்ஸிலோ கிடைத்த புத்தகங்கள் எல்லாம் ரொம்ப ரொம்ப சைவமே.

இந்த போர்னோகிராஃபி என்பது ஒரு தனி உலகம். அதை எழுதுவது ஒரு கலை. துரதிர்ஷ்டவசமாக அதை எழுத நல்ல எழுத்தாளர்கள் கிடைப்பதில்லை. மொழிவீச்சின் முழுமையும் தெரியாதவர்களே அதில் ஆட்சி செலுத்துகின்றனர். இர்விங் வேலஸ், ஹெரால்ட் ராப்பின்ஸ், சிட்னி ஷெல்டன் போன்ற எழுத்தாளர்கள் தங்கள் எழுத்துக்களில் அவ்வப்போது கிளுகிளுப்பை உண்டாக்குவர். அவ்வளவே. நினைத்தால் அவர்கள் நல்ல போர்னோகிராஃபி எழுதலாம். எழுதுவார்களாக இருக்கும். அப்போது வேறு பெயரில் எழுதுவார்கள். நம்மூர் ஸ்ரீவேணுகோபாலன் புஷ்பா தங்கதுரையாக மாறியது போல.

மேலே குறிப்பிட்ட போர்னோகிராஃபி ரசனை கூட பெண்ணாசையால் உருவானதுதான் என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். பொழுது போகவில்லையென்றால் பலான சைட்டுகள் பார்க்கவெல்லாம் வசதி வந்துள்ளது. எல்லாவற்றையும் செய்து வைத்தேன் என்பதை ஒளிவு மறைவின்றியே கூறுவேன்.

இப்போது இதையெல்லாம் இங்கே ஏன் சொல்கிறேன் என்றால், மேலே சொன்னவை இப்போது நிகழ்காலத்தில் கடந்த சில மாதங்களாய் இல்லவேயில்லை. நானும் முதலில் இதை உணரவில்லை. இப்போதுதான் இரண்டு நாட்களுக்கு முன்னால் ஒரு பலான சைட்டில் கதை ஒன்றை படித்தபோது வாந்திதான் எடுக்க வந்தது.

பிறகுதான் என்னையே இன்னும் தீவிரமாக ஆராய்ந்தேன். காரில் செல்லும்போது தெருவில் செல்லும் கவர்ச்சியான பெண்களை பார்த்து உணர்ச்சி ஒன்றும் வரவில்லை. ஒரு பெண் வேகமாக நடந்து கொண்டிருந்தாள். அவள் மார்பகங்கள் விம்மி எழுந்த வன்ணம் இருந்தன. ஐயோ பாவம் அவளுக்கு என்லர்ஜ்ட் இதயம் போலிருக்கிறதே என்ற பரிதாபம்தான் வந்தது.

சந்தேகப்பட்டு கூகளில் தேடியதில் இப்பக்கம் கிடைத்தது. ஆக நான் அவதானித்தது மருத்துவ உண்மைதான்.

இதில் எனது மன்நிலை என்ன? ஒரு நிம்மதிதான் ஏற்பட்டது. அடேடே கேன்சரில் இந்த நல்ல பக்க விளைவு உண்டா? இப்பெண்ணாசையால் விரயமாகும் நேரம் பற்றி இனி கவலையில்லை. அவ்வாசை போனது எனக்கு நிம்மதியாகவே இருக்கிறது.இணையத்தில் பலான சைட்டுகளை இனி தேடிப் போகவும் வேண்டாம், வைரஸ் அபாயத்துக்கு உட்படவும் வேண்டாம்.

இளம் வயதில் உள்ளவர்களுக்கு தாம்பத்திய பிரச்சினைகள் வரும்தான், ஆனால் என்னதான்  நான் என்னை இளைஞன் எனக்கூறி வந்தாலும், நான் வயதால் கிழவன்தானே. ஆகவே எனக்கு அக்கவலைகள் இல்லை.

பார்ப்போம் மேலே என்ன நடக்கிறது என்.

அதற்காகவெல்லாம் நான் முன்னால் எழுதிய பலான பதிவுகளை எடுக்க வேண்டுமா என்ன? அவ்வாறு செய்பவன் டோண்டு ராகவன் இல்லை.

அவன் என்ன நெஞ்சில் உரம் இன்றி நேர்மைத் திறமின்றி இருப்பவனா என்ன?

அன்புடன்,
டோண்டு ராகவன்






”காஞ்சியும் காமாட்சியும்” - பதிவர் பால ஹனுமானுடைய அற்புதமான இடுகை

காஞ்சிப் பெரியவாள் நிகழ்த்திய அற்புதம் பற்றி இடுகை ஒன்றை பதிவர் பால ஹனுமான் வெளியிட்டுள்ளார். அதை இங்கு மீண்டும் இடுகிறேன், அவரது அனுமதியை ஆண்டிசிபேட் செய்து. 

இப்போது ஓவர் டு பால்ஹனுமான்
தேனம்பாக்கத்தில் பெரியவா தங்கியிருக்கிறதுன்னு தீர்மானம் ஆன உடனே, அவர் அங்கே வாசம் பண்றதுக்கு ஓரளவுதான் வசதி செஞ்சு கொடுக்க முடிஞ்சுது. ஆனா, பெரியவா அதைப்பத்தியெல்லாம் கவலைப்படலே! அவர் வசதி பத்தியெல்லாம் என்னிக்கும் லட்சியம் பண்ணினதே இல்லே!’ என்று தொடர்ந்தார் சங்கர பக்த ஜன சபா செயலர் ஜி.வைத்தியநாதன்.”ஒரு முறை, சாயங்கால வேளையில பெரிசா பட்டாசெல்லாம் வெடிக்கிற சத்தம் கேட்டுது். பெரியவா உடனே, ‘என்ன, பட்டாசு சத்தம் எல்லாம் பலமா கேட்கிறது? எங்கே பட்டாசு வெடிச்சுக் கொண்டாடறா? எந்தக் கோயில்ல இருந்து ஊர்வலம் கிளம்பறது?’ன்னு எங்களிடம் விசாரிச்சார்.

‘காஞ்சி காமாட்சி அம்மன் திருவீதி உலா முடிஞ்சு, திரும்பி வந்துண்டிருக்கா. அதைத்தான் பட்டாசு வெடிச்சுக் கொண்டாடி, சம்பிரதாயமா நடத்திண்டிருக்கா!” என்று நாங்கள் விசாரிச்சுத் தெரிந்துகொண்ட சேதியைப் பெரியவாகிட்டே சொன்னோம்.
அதைக் கேட்டதும் பெரியவாளுக்கு இருப்பே கொள்ளலே. அம்பாள் காமாட்சியை எப்படியாவது தரிசனம் பண்ணணும் என்கிற ஆசை அவருக்கு வந்துவிட்டது. பெரியவா நடந்து காஞ்சிபுரம் போய்ச் சேர்றதுக்குள்ளே, திருவீதியுலா முடிஞ்சு, அம்பாள் திரும்பியிருப்பாள். இதைப் பெரியவாளிடம் தெரிவிச்சோம். ‘அதனால நாம இனிமே நடந்து போய்ப் பிரயோசனம் இல்லையே, பெரியவா!’ என்று நாங்கள் சொன்னது அவருக்குக் கேட்க கஷ்டமாக இருந்தது.

அன்னிக்கு எப்படியாவது அம்பாள் காமாட்சியை தரிசனம் பண்ணிவிடுவது என்று தீர்மானமாக இருந்தா பெரியவா. காஞ்சிபுரம் போய்ச் சேர்வதற்குள் ஊர்வலம் முடிஞ்சுடும் என்பதை அவர் பொருட்படுத்தலே. ரொம்பவும் பிடிவாதமா இருந்தார். மடத்து சிஷ்யர்கள் எத்தனை சொல்லியும் அவர் கேட்கிற மாதிரி இல்லே. போய்த்தான் தீருவது என்று நிச்சயம் பண்ணிவிட்ட மாதிரி இருந்தது.

பெரியவா வெளியிலே வந்து நின்ன உடனே கிளம்பிடலே. விநாயகர் சந்நிதிக்குப் போனார். அவர் பிள்ளையாரிடம் காதருகில் போய் என்னமோ ரகசியம் பேசுகிற மாதிரி இருந்தது. புறப்படறதுக்கு முன்னால் கணேசரிடம் பிரார்த்தனை செய்துகொள்கிறாராக்கும் என்று நினைத்தோம்.

விநாயகரிடம் அனுமதி வாங்கியவர், மளமள என்று காஞ்சியை நோக்கி நடக்கஆரம்பித்துவிட்டார். சிப்பந்திகள் சிலர் அவர் கூடவே தொடர்ந்து ஓடினார்கள். பெரியவா நடையே ஓட்டம் மாதிரிதான் இருக்கும். அந்த வேகத்துக்கு சாதாரணமாக யாராலும் ஈடுகொடுக்க முடியாது!
காஞ்சியை அடைந்தபோது, எல்லோருக்கும் ஆச்சரியம்!

அம்பாள் காமாட்சி இடத்தை விட்டு அசையாமல், உண்மையைச் சொல்லப் போனால் ஓர் அங்குலம் கூட நகராமல், அப்படியே அங்கேயே இருந்தாள். பெரியவா வந்து தரிசனம் பண்ணும் வரை அம்பாள் காத்துக்கொண்டிருந்த மாதிரி இருந்தது.

மடத்து சிஷ்யர்களுக்கு ஆச்சரியம் தாங்கலே. எதனால அம்பாள் ஊர்வலம் நகராம அப்படியே நின்றுவிட்டது என்று விசாரித்தார்கள். கோயிலில் பூஜை செய்யறவர் உடனே முன்னால் வந்து, ‘வெடிகள் வெடிச்சு முடிஞ்சதும், ஊர்வலத்துக்குத் தலைமை தாங்கற மாதிரி நிற்கிற யானை, என்ன பண்ணியும் இந்த இடத்தைவிட்டு ஒரு இன்ச் கூட அசையலே. அதை அதட்டி மிரட்டி விரட்டப் பார்த்தால் கோபத்தைக் காண்பிச்சுது. எதுவும் இசகு பிசகா நடந்துடக் கூடாதேன்னு சும்மா இருந்துட்டோம். ஆனா, ஊர்வலம் நகராம அப்படியே இருக்கிறபோது யானையும் சாதுவா சும்மா இருந்ததுதான் எங்களுக்கு ஆச்சரியம்! இது என்னடா, இந்த யானை இப்படி விநோதமா நடந்துக்கிறதேன்னு ஒரேயடியா குழம்பிப் போயிருந்தோம்’னு சொன்னார்.

ஆனா பெரியவா வந்து, காமாட்சி அம்பாளை தரிசனம் பண்ணி முடிஞ்சதும்,அவருக்குச் சொல்ல முடியாத திருப்தி. சந்தோஷமா இருந்தார். யானைகிட்டே போய், செல்லமா அதைத் தட்டிக்கொடுத்தார். உடனே யானை, ஏதோ அவரோட உத்தரவுக்குக் காத்திருந்த மாதிரி மேலே நடக்கத் தொடங்கியது!

தேனம்பாக்கத்தில் புறப்படுகிறபோது விநாயகர் காதில் பெரியவா என்னவோ சொன்னாரே… அதன் அர்த்தம் இப்போதான் புரிஞ்சுது! அன்னிக்குப் பெரியவா அடைஞ்ச சந்தோஷத்தைவிட, எங்களுக்குக் கிடைச்ச திருப்தியும் பாக்கியமும் இருக்கே, அது என்னைக்கும் மறக்கவே முடியாது!
காஞ்சி காமகோடி மஹா பெரியவா திருவடிகள் சரணம்!

மீண்டும் டோண்டு ராகவன். வரும் தலைமுறைகளில் இம்மாதிரி ஒரு மனிதன் நிஜ்மாகவே ரத்தமும் சதையுமாக இப்பூவுலகில் வளைய வந்திருப்பாரா என சந்தேகப்படுவார்கள் என ஐன்ஸ்டைன் மகத்ம காந்தியை சொன்னது காஞ்சிப் பெரியவாளுக்கும் நிச்சயம் பொருந்தும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

பின் சேர்க்கை:
பாலஹனுமானுடைய அப்பதிவில் பின்னூட்டம் இட்டு அனுமதி கேட்டேன். ஆனால் அப்பின்னூட்டதை போட வேர்ட்ப்ரெஸ் அழும்பு செய்கிறது. லாகின் செய்து வா என்கிறது.நானும் என்னென்னவோ எல்லாம் செய்தும் ஒன்றும் காரியத்துக்காகவில்லை.  ஆகவே பாலஹனுமான் மன்னிக்க வேண்டுகிறேன்.

10/12/2012

மனதை கொள்ளை கொள்ளும் 7 C

சில நாட்கள் முன்வரை நான் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 7 மணியை ஆவலுடன் எதிர்நோக்கி வந்தவன். அந்த எதிர்பார்ப்பு இப்போது இரவு 8 மணிக்கு சென்று விட்டது. என்ன செய்வது, சீரியல் 7 C-ன் நேரத்தை மாற்றி விட்டார்களே.

இம்மாதிரியான நேர்மறை என்ணங்களுடன் கூடிய சீரியலை நான் அரிதாகவே பார்க்கிறேன். ஒரு நல்லாசிரியர் தன் மாணவர்களை எவ்வாறு கரையேற்றுகிறார் என்பதை அழகாக காட்டியுள்ளனர்.

கவனக் குறைவு பிரச்சினைக்ளுடன் கூடிய குழந்தைகளை இந்த எபிசோடில் டீல் செய்திருக்கிறார்கள். அக்குறையுடன் இருக்கும் குழந்தைக்கு த்னது கவன விருத்தியை பார்த்து முகத்தில் வரும் பெருமிதம், பிரமிப்பு ஆகியவற்றை அந்த மாணவராக நடித்தவர் அழகாகக் காட்டியுள்ளார்.

அற்புதம் என்னும் சொல்லைத் தவிர கூற வேறு வார்த்தைகளே இல்லை


7C Part 2 by khajal

எவ்வளவு கச்சிதமாக விஷயத்தைக் கையாண்டுள்ளார்கள்!! இது ஒரு சாம்பிள் மட்டுமே. ஒவ்வொரு சீனும் ஒரு காவியம். முக்கியமாக ஆசிரியர் ஸ்டாலின் மேல் அப்பெண் சிவகாமி வைத்திருக்கும் காதல், அதை வெளிப்படுத்தும் முறை ஆகியவை கவிதைகள் என்றால் மிகையாகாது.

சோவின் எங்கே பிராமணன் சீரியலைப் பார்க்கவே ஜெயா டிவிக்கு சென்றது போல இந்தச் சீரியலை பார்க்க மட்டுமே விஜய் டீவிக்கு செல்கிறேன் என்றால் மிகையாகாது.

7C சீரியலை விஜய் டீவியில், திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணி முதல் 8.30 வரை காணலாம்..

அன்புடன்,
டோண்டு ராகவன்

10/09/2012

புற்றுநோய் பற்றி சில எண்ணங்கள்

கேன்சருடன் வாழ்தல்
நேற்று நான் பாட்டுக்கு தேமேனென்று பத்திரிகை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தேன். திடீரென “சார், சார், ஒரு நிமிஷம்” என என் பின்னால் குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தால் ஒரு 20 வயது இளைஞன் மூச்சு வாங்க நின்று கொண்டிருந்தான்.

என்ன விஷயம் எனக் கேட்க, அவன் தயக்கத்துடன் கேட்டான், “சில மாசங்கள் முன்னாடி உங்களை பார்த்தபோது உங்கள் தலைமுடியெல்லாம் கொட்டி விட்டது. இப்போது என்னவென்றால் மறுபடியும் வளர்கிறது. என்ன ஆயில் போட்டீர்க்ள்”? எனக் கேட்டான். ஒரு நிமிடம் அவனை உற்றுப் பார்த்து விட்டு சொன்னேன், “இம்மாதிரி முடி மீண்டும் வளரும் நிலை யாருக்குமே வேண்டாமப்பனே” எனக்கூறி விளக்கியதும் அவன் தலை குனிந்த வண்ணம் சென்றான்.

அவனிடம் கூறாதது இம்முறையில் முடி வளர எனது செலவு ரூபாய் 4 லட்சத்துக்கு மேல் என்பதுதான். கிட்டத்தட்ட ஓராண்டுகளாக சலூனுக்கு செல்லாததில் கிட்டத்தட்ட 600 ரூபாய் மிச்சம் என்பது தனி.  

இருபது ஆண்டுகளுக்கு முன்னால் தைத்த பேண்ட் சட்டைகள் இப்போது பொருந்துவதும் தமாஷாக உள்ளது.

கேன்சரின் பின்விளைவுகள்
ஆறு கீமோதெரப்பி அமர்வுகளில் தலைமுடி கொட்டி, புருவங்களும் அவுட். மண்டையோட்டுத் தோற்றம். கதிர்விச்சு சிகிச்சைகள் 33 அமர்வுகளினால் காலில் புண்.

வசூல்ராஜாவில் கமல் கூறுவதுபோல பசியின்மையின் கொடுமையுடன், உணவு என்றாலே வாந்தி வ்ரும் உணர்வு வந்தது இன்னொரு கொடுமை. இதயம் சற்றே பெரிதாகியதில் மூச்சிரைப்பு, சற்று நடந்தாலே.

இவ்வள்வு கொடுமைகள் நடுவிலும் நல்லது என்னவென்றால், எனது மொழிபெயர்ப்பு வேலைகள் தாராளமாக வந்ததுதான். ஒரு ஜெர்மன்காரருக்கு துபாஷியாகச் சென்றேன். என்னைப் பார்த்ததுமே ஜெர்மன்காரர் என்ன உடம்புக்கு எனக் கேட்க எனது வாடிக்கையாளரிடம் கூடக் கூறாது அவரிடம் கேன்சர் பற்றிக் கூற அவர் அப்படியே என்னை அணைத்தவாறு, சென்றார். வேகமாக நடக்கும் அவர் எனது ஸ்பீடில் நடந்தார்.

எங்கொப்புராணை கூறுகிறேன், மொழிபெயர்ப்பு வேலைகளை எனக்கு தாராளமாகக் கிடைக்கச் செய்த எனது உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகர நெடுங்குழைகாதனின் அருளே அருள். வேலை செய்யும்போது கேன்சரின் எண்ணமே வருவதில்லை.

நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்கள்
கேன்சர் என்பது யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். கெட்டப் பழக்கங்கள் ஏதும் இல்லாமலிருந்தால் அது வரும் சாத்தியக்கூறுகள் குறைவு மட்டுமே. மற்றப்படி அப்படியும் வரலாம் எனக்கு வந்தது போல.

மரணத்துடன் ஒரு சிறு சந்திப்பு வினையாகவே முடிந்தது. கெட்டதிலும் நல்லது நடந்தது மகரநெடுங்குழைகாத்னின் பேரருளே.

இமயமாக எனது மதிப்பில் உயர்ந்த என் வீட்டம்மா
சத்தியமாகச் சொல்கிறேன், நிலைமை நேர்மாறாக இருந்திருந்தால் நான் அத்தனை தைரியத்துடன் இருந்திருக்க மாட்டேன். ஒரு தாய் தன் குழந்தையை பார்த்துக் கொள்வதுபோல அவர் என்னைப் பார்த்துக் கொள்வதால்தான் இப்பதிவையெல்லாம் போட முடிகிறது. பூர்வ ஜன்ம புண்ணியம்தான்.

மனச்சமாதானங்கள்
சிகிச்சைகள் நடக்க ஆரம்பித்து கொஞ்ச நாள் கழித்துத்தான் எனக்கு வந்தது கேன்சரா எனக் கேட்கும் மனவுறுதியே எனக்கு வந்தது. அதுவரை எனக்கு மட்டும் ஏன் இப்படி என்ற எண்ணம்தான் வந்தது. அண்ணாசாலையில் உள்ள ராய் மெமொரியல் ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளைப் பார்த்து அதிர்ந்து போனேன். பச்சிளங்குழந்தைக்குமா கேன்சர்?

பூர்வஜன்மாவில் செய்த பாவங்கள் தவிர வேறு என்ன காரணம் இவற்றுக்கெல்லாம் இருக்கவியலும்?

அன்புடன்,
டோண்டு ராகவன்


9/25/2012

விடுதலைப் புலிகளை யூதர்களுடன் ஒப்பிடலாமா?

எனது முந்தையப் பதிவில் விடுதலைப் புலிகளையும் யூதர்களையும் ஒப்பிட்டு வந்த பின்னூட்டமும் அதற்கு எனது எதிர்வினையும் பின்வருமாறு:

//புலிகள் விஷயத்தில் உங்களது நேர்மையைப் பாராட்ட வேண்டும். என்னதான் புலிகள் இஸ்ரேல் ஆதரவு, முஸ்லீம் விரோதப்போக்கு, மோடியைப் போல‌ பொது மக்களைக் கொல்லுதல் என இருந்தாலும், புலி ஆதரவாளராக நீங்கள் இல்லை.//

டோண்டு கூறியது:
//புலிகளை இஸ்ரவேலர்களுடன் ஒப்பிடுவதா? வாயைக் கழுவுங்கள். அவர்களை பாலஸ்தீனியருடன் வேண்டுமானால் கம்பேர் செய்வேன், முட்டாள்தனமாக தமது ஆதரவாளர்களிடம் ஏடாகூடமாக நடந்து கொண்டதில்.

1982-ல் பாலஸ்தீனியரை ஏற்றுக் கொள்ள எந்த அரபு தேசமுமே தயாராக இல்லை.

அதே போல தனக்கு ஏதுவாக செயல்படகூடிய தமிழகத்தை, ராஜீவை கொலை செய்தது மூல்ம் விரோதித்துக் கொண்டனர் புலிகள்.//

இருப்பினும் இந்த ஒப்பிடுதல் சரியில்லை என்பதற்கு வேறு பல காரணங்களும் உள்ளன.

ஏறக்குறைய 2000 ஆண்டுகளாக பலவித ஆட்சிகளால் பீடிக்கப்பட்டு, ஆண்டுதோறும் தமக்குள் கூறிக்கொளும் முக்கிய முகமனாக “அடுத்த ஆண்டு ஜெரூசலத்தில் பார்ப்போம்” வைத்துக் கொண்டிருந்த இஸ்ரவேலர்களுடன் புலிகளை ஒப்பிட நினைப்பதே தகாது.

நான் தில்லியில் இருந்த சமயம் மாரெக் ஹால்டர் என்னும் யூத எழுத்தாளர் எழுதிய  ”அப்ரஹாமின் புத்தகம்” என்னும் புத்தகம் படிக்கக் கிடைத்தது. அருமையான ஃபிரெஞ்சில் அது அமைந்தது பற்றி இங்கே மேலே வேண்டாம்.

அப்புத்தகத்தின் கதை கி.பி. 70 வாக்கில் துவங்கி 1936-ல் முடிவடைகிறது, அதுவும் ஒரே குடும்பத்தின் கதைதான் அது. அதில் யூதர்கள் அனுபவித்த எல்லா சோதனைகளும் அழகாகக் கையாளபட்டுள்ளன. 19940-களில் வார்ஸா யூதக்குடியிருப்பு அழிப்பு சமயத்தில் கதை முடிவடைகிறது. அதில் உள்ள ஒரு கதபாத்திரம் இறக்க, “Ainsi mourut mon grandpère" (இப்படித்தான் இறந்தார் எனது தாத்தா) என்ற வாக்கியம் வர நான் எங்கோ குத்தி விட்டது போல நிமிர்ந்து உட்கார்ந்தேன். இக்கதைசொல்லியும் அக்குடும்பத்தின் உறுப்பினர் என்ற உண்மை முகத்தில் அறைந்தது. அப்புத்தகம் பற்றி இன்னொரு சுவையான செய்தி. சமீபத்தில் 1991-ல் நான் பிரெஞ்சு துபாஷியாக ஆக்ரா சென்ற போது அந்த பிரெஞ்சுக்காரர் மாரெக் ஹால்டர் எழுதிய ”அப்ரஹாமின் குழந்தைகள்” என்னும் புத்தகத்தை சிலாகித்து பேசினார். அது நான் முதலில் குறிப்பிட்ட புத்தகத்தின் தொடர்ச்சி என் நான் அவருக்கு எடுத்துக் கூற், அவ்வளவுதான் ஆக்ராவிலிருந்து காரில் டில்லி வரும்வரை நாங்கள் இருவர் மட்டுமே பேசி வந்தோம். நேரம் போனதே தெரியவில்லை.

முதல் புத்த்கம் சரித்திரத்தைக் கூற இரண்டாம் புத்தகமோ தற்போது இஸ்ரவேலர்கள் அரபியருடன் சேர்ந்து சமாதானத்துக்காக முயற்சிப்பதை கூறுகிறது.

அவை கதை புத்தகங்கள்தான், ஆனால் உண்மையின் அடிப்படை அவற்றுக்கு உண்டு.

இப்போது கூட குடி முழுகவில்லை. ஈழத்தமிழர்கள் கிபி 70-ல் இஸ்ரவேலர்கள் இருந்த நிலையில் உள்ளனர். அவர்களைப் போல இவர்களும் முயன்றல் வேண்டுமானால் ஒப்பீடு குறித்து சில நூற்றாண்டுகள் கழித்து யோசிக்கலாம். இல்லாவிட்டல் ஒப்பிட்ட வாயைக் கழுவு என்றுதான் நான் கூறுவேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன். 

    

9/18/2012

விடுதலை புலிகளை பற்றிய ஒரு தூரப்பார்வை

19.9.2012 தேதியிட்டு வந்த "துக்ளக்" பத்திரிக்கையில் "இலங்கை பிரச்சனை" என்ற தலைப்பில் வந்த கட்டுரையில் சில பகுதிகளை அபி அப்பா அவர்கள த்னது இப்பதிவில் வெளியிட்டிருந்தார். முதற்கண் அவருக்கு என் நன்றிகள்.

சோ அவர்கள் எழுதியது கீழே:

1. விடுதலைப்புலிகளின் தூண்டுதலினால் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்தனர். இந்திய அமைதிப்படையினர் மீது அபாண்டமான பழிகளை சுமர்த்தி விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக நின்று, வடக்கு மற்றும் கிழக்கு பிரதேச தமிழ் மக்கள் அமைதி முயற்சியை முறியடித்தனர்.

2. இந்திராகாந்தியால் ஆயுத உதவியும் ராணுவ பயிற்சியும் பெற்ற புலிகள் இலங்கை தமிழர்களுக்கு நல்ல தீர்வை தடுத்தது மட்டும் இன்றி இந்திராவின் மகனை கொன்றனர்.

3. இந்திய உதவி இல்லாமல் வளந்தே இருக்க முடியாத ஒரு கூட்டம் இந்தியாவை அயல் நாட்டினராக அறிவித்து சிங்களர்களை சகோதரர்களாக கொண்டாடி இந்திய அமைதிப்படையை வெளியேற சொல்லியது. அந்த கூட்டம் இலங்கையில் இருந்த தமிழ் தலைவர்களை எல்லாம் கொன்றது. அப்பாவி தமிழர்களை எல்லாம் கொன்றது. இறுதியில் தானும் அழிந்தது. அழிந்த அந்த கூட்டத்துக்கு மீண்டும் உயிரூட்ட முயற்சிகள் நடக்கின்றன.

4.பல வருடங்களாக நடந்து வந்த புலி- அரசு மோதல்கள் போது வெளியேறி அயல்நாடுகளில் குடியேறி விட்ட இலங்கை தமிழர்கள் பலர் இலங்கையில் தமிழர் பிரச்சனை தீர்வதை விரும்பவில்லை.

5.நம் நாட்டில் பங்களாதேஷ் விடுதலை பெற்ற பின் அங்கிருந்து இங்கு வந்த அகதிகள் திரும்பி செல்ல வேண்டும் என்று கோருவது போல சில நாடுகளில் குரல்கள் எழலாம். உங்கள் நாட்டில் நீங்கள் பட்ட அவதியின் காரணமாக இங்கு வந்தீர்கள். இப்போது உங்கள் நாட்டில் தான் அமைதி திரும்பி விட்டதே. ஆகையால் நீங்கள் திரும்பி செல்லுங்கள் என்று சில நாடுகளில் சில அமைப்புகள் கூற தொடங்கலாம்.

6.இதை விட முக்கியமாக இப்போது ஈழம் பெற வேண்டிய போர்.. அதற்கான ஆயுதம் செய்ய நிதி தேவை என்று இலங்கையில் தமிழர்கள் மிக மோசமான நிலையில் இருப்பதால் அவர்களுக்கு நிதி தேவை என்று, அல்லது இது மாதிரி வேறு காரணங்கள் கூறி அயல் நாடுகள் சிலவற்றில் இலங்கை தமிழ் முக்கியஸ்தர்கள் பண வேட்டை நடத்துகின்றனர். இது மிரட்டல் மூலமாகவும் நடக்கின்றது. பணத்துக்கு பணம். ஆதிக்கத்துக்கு ஆதிக்கம்.இது தொடர வேண்டும் எனில் இலங்கையில் அமைதி திரும்பி விட்டதாக யாரும் ஒப்புக்கொள்ள கூடாது. ஆகையினால் இலங்கையில் இன்றும் தமிழர்கள் வேட்டையாடப்படுகின்றார்கள் என்று அயல் நாட்டு அமைப்புகள் முன் காட்ட அயல்நாடுகளுக்கு சென்று ஆதிக்கம் புரிந்து வசதியாக வாழகின்ற இலங்கை தமிழர்கள் முயல்கிறார்கள்.

7. இந்த ஈழ பிசினஸ் தொடங்குவதற்காக அவர்கள் வசூல் செய்யும் நிதியில் ஒரு பங்கு இதற்கான பிரச்சாரத்துக்காக செலவிடப்படுகின்றது. அந்த நிதி எங்கெங்கோ செலவிடப்படுகின்றது. யார் யாருக்கோ பிரச்சார சம்பளம் தரப்படுகின்றது என்பது எல்லாம் இலங்கை அரசு ஆராய வேண்டிய விஷயங்கள். இப்படி நடக்கிற பிரச்சாரத்தின் காரணமாக இன்றும் இலங்கையில் தமிழர்கள் துன்புறுத்தப்படுகின்றனர் என்பதை நாம் நம்பி விடக்கூடாது.

8. உலகத்திலேயே சப்மரைன் முதல் விமானம் வரை சேர்த்து வைத்து இருந்த, தன் மக்களையே கேடையமாக வைத்து இருந்த, சிறுவர்களை முன்னிருத்தி பலிகடா ஆக்கிய , தமிழ் தலைவர்களை கொன்று போட்ட ஒரு கொலைகார கூட்டத்தை எதிர்கொள்ள வேண்டியதாகிவிட்டது இலங்கை அரசுக்கு.அதை எதிர்கொண்டு அந்த கும்பலை அரசு ஒடுக்கியது என்பது பாராட்டத்தக்க ஒரு சாதனையாகும். அந்த மாதிரி ஒரு வெறிச்செயலை இலங்கை அரசு எதிர்கொண்ட போது பல சிவிலியன்கள் உயிர் இழக்க நேரிட்டது மிகவும் வருத்தமான ஒரு விஷயம் தான் எனினும் சிவிலியன்களை கேடயமாக புலிகள் பயன் படுத்திய போது, ஆஸ்பத்திரிகளில் புலிகள் பதுங்கி தங்கள் தாக்குதலை நடத்திய போது ராணுவத்தின் எதிர் தாக்குதலில் சிவிலியன்கள் உயிரிழப்பு என்பது சகஜம் தானே! இதற்கு எல்லாம் புலிகள் தானே காரணம்!

9. தமிழர் பகுதிகளில் நூற்றுக்கணக்கான அல்ல.. பல்லாயிரக்கணக்கான அளவு கன்னி வெடிகள் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டு உள்ளன. அவற்றை நீக்கி விட்டு தான் குடியேற்றம் நடத்த வேண்டும். இதனால் ஏற்படும் தாமதத்துக்கு இலங்கை அரசா பொறுப்பு???

10. ஐ நா சபையில் இலங்கைக்கு எதிராக வந்த ஒரு தீர்மானத்தை ஆதரித்து இந்திய அரசு வாக்களித்தது ஒரு மாபெரும் தவறு. அந்த தீர்மானத்தை இந்தியா எதிர்த்து இருந்தால் இரு நாடுகளின் உறவு வலுப்பெற அது உதவி இருக்கும்.

இப்போது டோண்டு ராகவன். புலிகள் ஜெயித்திருந்தால், தமிழகத்தில் நிகழ்ந்திருக்கக் கூடிய விபரீதங்கள் இப்போதும் மன நடுக்கத்தையே கொடுக்கின்றன.

இப்போதைய நிலையில் பிரபாகரன் இன்னும் உயிருடன் இருக்கிறார் என சீன் போடும் பேர்வழிகள் தமிழர்கள் நலனுக்கு விரோதமாகவே உள்ளனர்ர் என்பேன்.


பை தி வே அவரது அப்பதிவில் நான் இட்ட இப்பின்னூட்டம் மட்டும்தான் இது வரை உள்ளது. மீதியை பிறகு மட்டுருத்துவார் போல.

சோ சொன்னது அத்தனையும் உண்மை.

அதை விடுங்கள். தனது குடும்பத்தினர் நலனுக்காக கடைசி வரை மத்திய அரசுக்கு ஜால்ரா அடித்தார் கலைஞ்ர் ஆட்சியில் இருந்தவரை.

இப்போது முதலைக் கண்ணீர் வடிக்கிறார். அவரை நம்ப வேண்டும் எனக் கூறும் உங்களைப் போல சில தீவிர கலைஞர் ஆதரவாளர்களுக்கு என்ன சொன்னாலும் புரியாதுதான்.

சரிஅவரை விடுங்கள். அவர் அப்படித்தான், அவரது கலைஞர் ஆதரவு வேறுவித்மாக எழுத விடாது அவரை.

இலங்கை தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வு சம்பந்தமாக சோ அவர்கள் எழுதியதை அதே துக்ளக் கட்டுரையில் காணலாம். 

அன்புடன்,
டோண்டு ராகவன்.


9/01/2012

தவிர்க்க முடியாத சாதி அமைப்புகள்

சாதியை நிஜமாகவே ஒழிக்க இயலுமா, அது தேவைதானா என்னும் தலைப்பில் நான் இட்ட பதிவில் பல இசுலாமிய உதாரணங்கள் தந்தேன். ஏனெனில் அம்மார்க்கத்தில் மட்டுமே சாதிகளே கிடையாது என பல அலட்டல்கள் சுவனப்பிரியன் ஆகியோரிடமிருந்து வந்துள்ளன.

இப்போது இன்னொரு உதாரணமும் சிக்கியுள்ளது. முதலில் இந்த வீடியோவைப் பாருங்கள்.



இந்த வீடியோ பற்றி திண்ணையில் வந்த இக்கட்டுரையில் வந்த இப்பின்னூட்டத்தைக் காணவும்.

முதலில் இக்கொடுமை 1400 ஆண்டுகளுக்கு முன்னால்தான் இருந்தது என சப்பைக்கட்டு கட்டிய சுவனப்பிரியன் இப்போதைக்கு சைலண்டாகி விட்டார். திண்ணையில்

பாகிஸ்தான் : சிறுபான்மையினரது குரலை நசுக்கும் பாகிஸ்தான் கலாச்சாரம் என்ற தலைப்புடன் அப்பதிவில்  நண்பர் சுவனப்பிரியன் ரொம்பவுமே மெனக்கெட்டு வாதாடினார். 

இப்போது பாரதப்போரில் பத்மவியூகத்து அபிமன்யு போல எனது நண்பர் சுவனப்பிரியன் தனியாக நிற்கிறார். சக இசுலாமிய பதிவர்கள் அவருக்கு துணை செய்யுங்களப்பூ.

பை தி வே, இந்தப் பதிவையும் பார்க்கவும்.

அன்புடன்,

டோண்டு ராகவன் 

8/13/2012

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 13.08.2012

கொடும்பாவி எரிக்கும்போது ஜாக்கிரதை!!!!!!!!!!
அது சரி இவர்கள் கண்டார்களாமா இம்மாதிரி ஆகும் என்று?



இனிமேலாவது ஜாக்கிரதையாக இருப்பார்கள் என நம்புவோமாக.

ரொம்பவும் சினிமா பார்த்தால் இம்மாதிரி ஆகிவிடுமோ?
கல்யாணப் பெண்ணை அழைத்து வரும் தோழியர் வாராய் என் தோழி வாராயோ பாடுவதைக் கண்டுள்ளோம். ஆனால் பெண்ணே அவ்வாறு பாடி நடனமாடினால்?



ஆனாலும் மணமகன் பாவந்தேன்!!!!!

இல்லை அப்படியில்லை என்கிறர் மகேஸ். அதே திருமணத்தில் மணமகன் அடிக்கும் லூட்டியைக் கீழே பார்க்கலாம். நன்றி மகேஸ்.



நான் என்ன நினைக்கிறேன் என்றால், பழங்காலத் திருமணங்களில் இரு தரப்பினரும் நையாண்டிப் பாடல்கள் பாடுவார்கள். அதன் இன்னொரு ரூபம்தான் இது என.

ஈவேரா பற்றிய கார்ட்டூன்களின் உண்மை உரைத்ததால் கள்ள மௌனமோ?
இதற்கு முந்தைய பதிவில் வந்த கார்ட்டூன்களை நான் போட்ட முக்கியக் காரணமே தலித்துகள் விஷயத்தில் அவரது உண்மை நிலையைக் காட்டவே. அதாவது condenscending மனப்பான்மை என்பார்கள். அதுதான் இது. உண்மையிலேயே அவருக்கு பார்ப்பனரல்லாத மற்ற உயர்சாதியினரின் முன்னேற்றம்தான் முக்கியம். இக்கருத்துக்கள் பற்றி நான் ஏற்கனவேயே கேள்விப்பட்டிருந்தாலும் அவற்றுக்கான சரியான சான்று கிடைக்காமல் இருந்தேன். இப்போது முரசொலி கார்ட்டூன் கிடைத்தது.

ஆனால் நான் எதிர்பார்த்தது போல எதிர்வினை ரொம்ப இல்லை. ஈவேரா ஆதரவாளர்களின் கள்ள மௌனம் நீடிக்கிறது.

மனதை நிறையச் செய்த ஒலிம்பிக்ஸ்
பரவாயில்லை. தங்கம் இல்லாவிட்டாலும் மற்ற பதக்கங்கள் கிடைத்தனவே என அல்ப திருப்தி பட்டு கொள்ள வேண்டியதுதான். அவை கூட இல்லாமல் சிங்கி அல்லவா அடித்துள்ளோம் இத்தனை ஆண்டுகளாக.

செய்ய வேண்டிய சுத்திகரிப்பு வேலைகள் இன்னும் பல உள்ளன. முக்கியமாக ஒலிம்பிக் டீமுடன் டூருக்கு வரும் அதிகாரிகளின் பிச்சைக்கார கும்பலை ஒழிக்க வேண்டும். செய்வார்களா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

8/11/2012

திராவிட அரசியலின் தரக்குறைவும் வெட்கம் கெட்டத்தனமும்

ஈவேராமசாமி நாயக்கர் பற்றி நன்கு அறிந்தவர்களில் திமுகவினரே முக்கியமானவர்கள். அவர்கள் இவருடன் முரண்பட்டு நின்ற காலகட்டம் 1949 முதல் 1967 வரை ஆகும். அச்சமயத்தில் இரு தரப்பினரும் எதிர்தரப்பினரின் வண்டவாளத்தை வண்டியில் ஏற்றினர். உதாரணத்துக்கு சமீபக்த்தில் 1962-ல் வெளியான முரசொலி கார்ட்டூன்களை கீழேகாணலாம்.



இமேஜ் பெரிதாக இல்லை என குறை நீங்க, கேப்ஷன்களை கீழே  மீண்டும் தருகிறேன்.

துணிவிலை உயர்ந்ததேன்?
புலைச்சி எல்லாம் ஜம்பர் போட ஆரம்பிச்சுட்டா அதனாலதான்.

வேலையில்லா திண்டாட்டம் ஏன்?
பள்ளு பறையனுங்க படிக்க ஆரம்பிச்சுட்டானுங்க அதனாலதான்.

அரிசிவிலை உயர்ந்ததேன்?
கள் குடிக்கிற பசங்களெல்லம் சோறு திங்கறாங்க அதனாலதான்.

கார்டு கவர் விலையெல்லாம் உயர்ந்ததேன்?
தபால்காரனெல்லாம் அதிக சம்பளம் வாங்கறானே அதனால்

விபூதி பூசிக்கொள்ளாததேன்?
சந்நிதானம் பூசிக்கோ என்றால் பூசிக் கொள்வேன்.

வெங்கட் சாமிநாதன் அவர்கள் எழுதியதிலிருந்து சில வரிகள்:

கிறித்துவ, முகம்மதிய மதத்தினரிடம் நாத்திகம் பேச பயப்படுபவர்களிடம், அவர்களிடம் காணும் ஜாதீய தீண்டாமையைப் பேசப் பயப்படுபவர்களிடம் என்ன நேர்மை இருக்க முடியும்? கக்கூசைக் கழுவ என்றே ஒரு சாதி என்ற இழிநிலைக்கு எதிராக ஏதாவது செய்யவேண்டும் என்று சொன்ன தலித் தலைவரிடம், பெரியார் சொல்கிறார் – “இதுக்கு நீங்களே ஒரு வழி சொல்லுங்க. வேறே யார் செய்வாங்க?”. “பறச்சிகள்ளாம் ரவிக்கை போட ஆரம்பிச்சா துணிப்பஞ்சம் வந்துராதா” என்றாராம் பெரியார்.

காமராசன் ஸ்விஸ் பாங்கில் பணம் சேர்த்து வைத்திருக்கிறான் என்றும் காமராசன் என்ற அழகனின் தோலை உரித்தால் இரண்டு டமாரம் செய்யலாம் என்றும் பேசும் தலைவர்களைக் கொண்டது, கண்ணியம் கட்டுப்பாடு, கடமை என்று கோஷமிடும் கழகம் ஒன்று. 67 தேர்தலில் பத்து லட்சம் பக்தவத்சலம் என்று கோஷமிட்ட தலைவர்களைப் பற்றி இன்று பேசுவதானால் எததனை ஆயிரம் கோடி என்று சொல்லி கோஷமிடவேண்டும்?

கண்ணியம் தான். இது கழகம் ப்ராண்ட் கண்ணியம்.

கீழ்வெண்மணி கொடுமைக்கு எதிர்வினையாக ஈவேரா அவர்கள் கொடுத்த அறிக்கையே அவரது சுயசாதி அபிமானத்தைக் காட்டுகிறது.

"தஞ்சை மாவட்டத்தில் இடதுசாரி கம்யூனிஸ்ட்கள் விவசாய மக்களுக்கு நலன் செய்வதுபோல அவர்களுக்காகப் பாடுபடுவதுபோல ஏழை எளியவர்களின் வாழ்வை உயர்த்துவதுபோல மேடைகளிலே பேசுகிறார்கள். உங்கள் கூலியை உயர்த்துவது, வாழ்வை வளமாக்குவது எங்கள் கட்சியேயாகும் எனக்கூறி விவசாய மக்களை ஏமாற்றி அவர்களை பலிவாங்கிக் கொண்டு வருகிறார்கள். கூலி உயர்வு என்பது ஒரு கட்சியால் ஏற்படுவதல்ல. இதனைத் தொழிலாளர்கள் உணரவேண்டும். நாட்டில் ஏற்படுகின்ற பொருளாதார மாற்றம், விலைவாசி உயர்வு - பற்றாக்குறை இவைகளைக் கொண்டுதான் கூலிகள் உயர்கின்றதே தவிர கட்சிகளால் அல்ல.

தொழிலாளர்கள் தங்களுக்கு கிடைக்கிற பொருளாதாரத்தில் எப்படி வாழவேண்டும் என்பதை கம்யூனிஸ்ட் தோழர்கள் உங்களுக்குக் கூறாமல் நாட்டிலே கலவரத்தையும், புரட்சியையும் ஏற்படுத்தி இன்றைய தினம் வலதானாலும் சரி, இடதானாலும் சரி, அதிதீவிர கம்யூனிஸ்ட்டுகளானாலும் சரி இந்த ஆட்சியினைக் கவிழ்த்துவிட வேண்டுமென்கின்ற முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர். அதற்கு விவசாயத் தோழர்களும் மற்ற தொழிலாள நண்பர்களும் இடம் கொடுக்கக்கூடாது என்று கேட்டுக்கொள்கின்றேன். நாகை தாலுக்காவிலே கலகம் செய்ய தூண்டியது கம்யூனிஸ்ட் கட்சி. அதன் காரணமாக 42 பேர் உயிரிழந்தனர். கம்யூனிஸ்ட் கட்சி நமக்கு ஒத்துழைத்த கட்சி என்று அரசாங்கம் சும்மா இருந்துவிடவில்லை. தேவையான நடவடிக்கையினை மேற்கொண்டிருக்கின்றது.

நாட்டில் அராஜகத்தைத் தூண்டும் பணியில் கம்யூனிஸ்ட் கட்சி மிக தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றது. இதற்கு இடம்கொடுக்காமல் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கம்யூனிஸ்ட்களின் குறி கீழத்தஞ்சைப் பகுதி பக்கம் திரும்ப இருக்கிறது. இங்குள்ள விவசாயத் தோழர்கள் இங்கு அந்த தீயசக்தி பரவ இடம் கொடுக்கக் கூடாது என்று கேட்டுக்கொள்கின்றேன். இந்த ஆட்சியை பலவீனப்படுத்தக் கம்யூனிஸ்ட் கட்சி ஈடுபட்டுள்ளது. அதற்கு நம்மக்கள் ஆதரவளிக்காமல் இவ்வாட்சிக்கு தங்களின் ஆதரவினைக் கொடுப்பதன் மூலம் இந்த அரசை மேலும் பலம் பொருந்தியதாக்க வேண்டும்.''

அந்த வலைப்பூ இங்கே:

ஆக 42 பேர் இறந்ததற்கு அணுவளவேனும் அனுதாபம் கூட இல்லை. கொலை செய்வித்த கோபால கிருஷ்ண நாயுடுவின் பெயரையும் இந்த பலீஜா நாயுடு சொல்லவில்லை. வேறு என்னத்தைத்தான் சொல்ல?

அன்புடன்,
டோண்டு ராகவன்


8/05/2012

மன்மதலீலையை வென்றார் உண்டோ?

சமீபத்தில் 1976-ல் வந்த இப்படம் இன்னும் என் மனதில் நிற்கிறது. அதன் முழு வீடியோ யூ டியூப்பில் இப்போது. கிடைக்கவில்லை, ஆனால் ஒரு பாட்டு உண்டு, எஞ்சாய்!!





இப்போது பார்த்தாலும் அதே புதுமையை இழக்காமல் உள்ளது அப்படம். பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட்டா என்றெல்லாம் எனக்கு தெரியாது.ஹிட் ஆகவில்லையென்றால் நமது ரசிகர்க்கு ரசனை போதாதுஎன்றுதான் கூறுவேன்.

கவர்ச்சி நடிகை ஹலத்தை முழுக்க முழுக்க போர்த்திய புடவையுடன் பார்ப்பது சிறந்த மாறுதலாக உள்ளது.

பெண் சபலம் மிக்க மது பார்க்கும் பெண்களுடன் எல்லாம் கற்பனையிலேயே காதல் செய்கிறான்.முக்கியமாக டைட்டில் சாங்க் “மன்மதலீலை” மிக அழகான முறையில் படமாக்கப்பட்டுள்ளது (பாடல் பதினைந்து நிமிடங்களுக்கும் மேலாகவே அவ்வப்போது வசனங்களுடன் வருகிறது).

ஒவ்வொரு பெண்ணின் அறிமுகமும் சுவையானது. அவ்வப்போது மனைவியிடம் மாட்டிக் கொண்டு பேய்முழி முழிப்பதும் சுவையானதே.

இப்படத்தில் வரும் பல ஆண்களும் பெண் சபலத்துடன் இருப்பது சற்றே இடிக்கிறது என்று கூறத் தோன்றினாலும் அதையும் சுவைபட சொல்கிறார் டைரக்டர்.

டாக்டரின் ஆலோசனைப்படி பாவமன்னிப்பு கேட்கிறேன் பேர்வழி என தனது கிளார்க்கிடம் எல்லாவற்றையும் கன்ஃபெஸ் செய்ய அவர் படும் பாடும் பிரமாதம்.

கிளைமாக்ஸ் பிரமாதம்.

சொல்லிக் கொண்டே போகலாம்.படத்தைத்தான் பாருங்களேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

8/01/2012

நெஞ்சில் உரம் இன்றி நேர்மைத் திறம் இன்றி

இன்றைக்கு இந்த்ப் பாட்டின் முறை. அதை முதலில் பார்த்து கேட்கவும்.




அப்பாட்டு தனியாகக் கிடைக்காததால் படத்தின் கடைசி பகுதியையே இணைத்துள்ளேன். போனஸாக பெற்று மகிழவும், முக்கியமாக “என்று தணியும் இந்த சுதந்திர தாகம்” பாடலுடன்..

சொன்னக் கருத்தில் நம்பிக்கை இருந்தால் அதை விடாது பிடித்துக் கொள்வதிலும் ஒரு நெஞ்சுரம் தேவைப்படும். பிற்காலத்தில் அதனால் பிரச்சினை வந்தாலும் சொன்னது சொன்னதுதான் என எத்தனை பேரால் இருக்கவியலும்?

முக்கியமாக பதிவுலகில் இதற்கான பல உதாரணங்கள் உண்டு. முதலில் ஓர் உந்துதலில் பதிவொன்றைப் போடுவது. பிறகு எல்லோரும் கடுமையாக எதிர்வினை புரியும்போது ஓசைப்படாமல் அதை எடுத்துவிடுவது.

எனக்கு இது எப்போதுமே புரிந்ததில்லை. வெளியே வந்த சொல் வில்லிலிருந்து விடுபட்ட பாணம் போல. அதைத் திரும்ப வாங்குவது மகாபாரதத்து அருச்சுனன் போன்றவரால் மட்டுமே முடியும். இது என்ன கதை எனக் கேட்பவர்களுக்காகக் கூறுகிறேன்.

மகாபாரத யுத்த முடிவில் அசுவத்தாமன் பாண்டவ வம்சத்தை அழிக்க பிரும்மாஸ்திரம் விட, அதற்கு எதிரக தனது தரப்பிலிருந்து பிரும்மாஸ்திரம் விடுகிறான் அருச்சுனன். இரு பிரும்மாஸ்திரங்களையும் தனது தபோவலிமையால் தற்காலிகமாக த்டுத்து நிறுத்தும் வியாச முனிவர், அருச்சுனனைப் பார்த்து அவன் தனது பிரும்மாஸ்திரத்தைத் திரும்பப் பெறவேண்டும் எனக் கேட்க, அவனும் அவ்வாறே செய்கிறான். ஆனால் அசுவத்தாமனோ அவ்வாறுசெய்ய தனக்குத் தெரியாது எனப்பேய்முழி விழிக்கிறான். “அப்படியானால் ஏன் அஸ்திரத்தை விட்டாய் மூடனே” எனச் சீறுகிறார் வியாசர்.

வேறுவழியில்லை அசுவத்தாமனின் அஸ்திரம் செயல்பட, கிருஷ்ணர் பாண்டவர்களைக் காப்பாற்றுவது வேறு கதை. அவ்வாறு செய்ததாலேயே அசுவத்தாமன் சிரஞ்சீவியாக வாழ்வான் என்றும் போகுமிடமெல்லாம் அவனது துரோகத்துக்கான வசைச் சொற்களைப் பெறுவான் எனவும் அவனுக்கு கடூரமான சாபம் கிடைப்பதும் வேறு கதை.

இங்கு மீண்டும் இப்பதிவுக்கு வருவேன். நான் இப்போது இடும் இப்பதிவு 1355-வது.  இது வரைக்கும் ஒரு பதிவையும் எதிர்ப்புகளுக்கு பயந்து எடுத்ததில்லை. அதனால் எல்லாம் நான் பெரிய பிடுங்கி என்றெல்லாம் கூறவில்லை. ஆனால் அதே சமயம் அவற்றை நீக்காததால் ஒரு கேடும் எனக்கு நிகழவில்லை என்று மட்டும் கூறிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.

நான் கூறுவதை மேலும் நன்கு புரிந்து கொள்ள நான் என் பெயரில் வெளியாகும் பின்னூட்டங்கள், மற்றும் என் பெயரில் வெளியாகும்பின்னூட்டங்கள் -2 ஆகிய இரு இடுகைகளையே உதாரணங்களாகத் தருவேன். அக்காலக் கட்டத்தில் நான் மற்றவர் இடுகைகளில் இடும் பின்னூட்டங்களின் நகல்களை அவற்றுக்கான சுட்டிகளுடன் எனது மேலே சொன்ன இரு இடுகைகளிலும் இடுவேன். சில நாட்களுக்கு முன்னால் விளையாட்டாக சம்பந்த்ப்பட்ட சுட்டிகளைத் தேடினால் அவற்றில் பல காணாமல் போயிருந்த்ன. அதற்கு பல காரணங்கள் இருந்தாலும் அவற்றில் ஒன்றுதான் நான் இப்பதிவில் கூறிய விஷயமும் என்பதில் நான் தெளிவாகவே உள்ளேன்.

என்ன செய்வது, நெஞ்சில் உரம் இன்றி நேர்மைத் திறம் இன்றி செயல்பட்டால் அதுதான் நடக்கும்.

எனக்கு மிக எதிர்ப்பைச் சம்பாதித்து தந்த பதிவுகளில் ஒன்றைக் குறிப்பிடுகிறேன்.

பார்வதி அம்மாளுக்கு அனுமதி மறுத்த விஷயம்

எத்தனை நெகடிவ் ஓட்டுகள்!!

அதனால் என்ன, நான் கூறியது கூறியதுதானே என விட்டு விட்டேன்.

எனது இந்த யோம் கிப்பூர் பதிவால் பல சங்கடங்கள், ஆனால் என்ன, போட்டது போட்டதுதான்.

மறுபடியும் கூறுவேன், இதனால் எல்லாம் நான் தைரியசாலி எனக் கூறிக் கொள்ளவில்லை. ஆனால் எனது தன்னம்பிக்கையே இதற்கெல்லாம் அடிநாதம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

7/30/2012

பூ முடிப்பாள் இந்த பூங்குழலி

பதிவு இப்பாடலுடன் துவங்கினாலும் பதிவு முழுக்க அது பற்றியே அல்ல. அது பற்றி பிறகு, முதலில் பாட்டைக் கேட்டு, பார்த்து மகிழ்வோம்.



இப்படத்தில் வரும் கீழ்க்கண்ட வரிகளுடனெயே என் பிரச்சினை. “நிகழும் பார்த்திப ஆண்டின் ஆவணித் திங்கள் 20-ஆம் நாள்” எனத் துவங்கும் அவ்வரிகளை கல்யாணங்களில் பாடும் மெல்லிசைக் குழுவினர் சம்பந்தப்பட்ட கல்யாணம் நடக்கும் சரியான தமிழாண்டு, மாதம் ஆகியவற்றுடன் பெண்ணின் தந்தையின் பெயரையும் நுழைத்துப் பாடுவார்கள்.

இருக்கட்டுமே இதில் உன் பிரச்சினை என்ன என கேட்கும் முரளி மனோகருக்கான எனது பதில் இதுதான்..

இப்பாடல், வரும் நெஞ்சிருக்கும் வரை என்னும் திரைப்படம் சமீபத்தில் அறுபதுகளில் வந்தது. சென்னை மெரீனா பீச்சருகில் இப்போதும் காணக்கிடைக்கும் உழைப்பவர் வெற்றி சிலை அப்படத்தில் காட்டப்படும். அச்சிலையோ சமீபத்தில் 1959-ல்தான் வந்தது. ஆனால் பார்த்திப ஆண்டு? 1945 ஏப்ரல் முதல் 1946 ஏப்ரல் வரை (நான் அந்த ஆண்டில்தான் பிறந்தேன்). ஆக, இதைத்தான் பொருட்குற்றம் என்பார்கள். ஆக, இப்பாட்டில் வரும் நிகழும் பார்த்திப ஆண்டு ஆவணித் திங்கள் 20-ஆம் நாள், என்பது சுமாராக செப்டம்பர் மாதம் 5, 1945 ஆக இருக்கும். பை தி வே அன்று புதன்கிழமை.

ஆனால், சமீபத்தில் அறுப்துகளின் துவக்கத்தில் வந்த “பார் மகளே பார்” படத்தில் 18-கேரட் தங்கம் பற்றிய பிரஸ்தாபம் கதையின் காலகட்டத்திற்கு ஏற்ப வந்ததை நோக்கினால் காட்சிகளில் லாஜிக்குக்காக எவ்வளவு பாடுபட்டிருக்கிறார்கள் என்பதையும் பார்க்கலாம். எதற்கும் இருக்கட்டும் என அப்படத்திலிருந்தும் ஒரு பாடலை இங்கே போடுகிறேன்.



ஆனால் சில காட்சிப் பிழைகள் காலப்போக்கில் அடித்துச் செல்லப்பட்டு விடுவதும் நடக்கும்.உதாரணத்துக்கு பார்த்தால் பசி தீரும் என்னும் படம்.

அது அறுபதுகளின் துவக்கத்தில் வந்தது. கதை நடக்கும் காலமோ 1945-46. அப்படத்தில் அறுபதுகளில் உற்பத்தியான ஸ்டேண்டர்ட் ஹெரால்ட் கார் வரும். இப்போது அப்படத்தைப் பார்த்தால் யாருக்கு அந்த உண்மை தெரியப் போகிறது? 


நண்பர் ஆசாத் சொல்வது போல, “சல்தா ஹை”..


அன்புடன்,
டோண்டு ராகவன்

7/28/2012

பேஷ், பேஷ், ராமதாசு தேறிட்டாரு!!!!!!!

கட்சி ஆரம்பித்தப் புதிதில் தானோ, தனது உறவினர்களோ பதவிக்கு ஆசைப்பட்டால் முச்சந்தியில் நிற்க வைத்து சவுக்கால் அடிக்கும்படி கூறியவர் இப்பெருந்தலைவர்.

ஆனால் கணிசமான வெற்றி கிடைத்ததும் தனது மகன் அன்புமணியின் பதவிக்காக அலைந்து திரிந்து பெற்றார். அப்போது இந்த வாக்குறுதியை நினைவுபடுத்தியபோது அப்போதைய கொபசெ பதிவாளர், அன்புமணிக்கு தனிக் குடும்பம் உண்டு ஆகவே ராமதாஸ் கூறியது அவரைக் கட்டுப்படுத்தாது என்றெல்லாம் கூறியதை நான் படித்துள்ளேன்.

இருப்பினும் இது ஒரு பிரச்சினைக்குரிய விஷயமாகவே அவ்வப்போது எழுப்பப் பட்டு வந்திருக்கிறது.

இப்போதை லேட்டஸ்ட் அறிக்கையில் ராமதாசர் ஜாக்கிரதையாகவே இருந்துள்ளார். அவர் விகடனுடனான பேட்டியில் கூறுவது.

1. நிச்சயம் எதிர்காலத்தில் நாங்கள் த்மிழகத்தின் ஆட்சிப் பொறுப்புக்கு வருவோம்.

2. அப்படிப் பொறுப்பேற்றுக் கொண்ட மூன்று மாதங்களுக்குள் தமிழகத்துள் ஒரு சொட்டு மது இல்லாமல் மாற்றிக் காட்டுவோம்.

3. அப்படிச் செய்யாவிட்டா மூன்று மாதம் முடிந்ததும் நாங்களே பதவி விலகிக் கொள்வோம்.

4. இதனை எங்கு வேண்டுமானாலும் எழுதிக் கொடுக்க நான் தயாரா இருக்கேன்.

(ஆனந்தவிகடன், 01.08.2012).

பேஷ், பேஷ், ராமதாசு தேறிட்டாரு. 1) எங்கே நிறைவேறுகிறது? அதன் பின்னால்தானே 2, 3 போன்றவை வரும்?

அன்புடன்
டோண்டு ராகவன்

7/08/2012

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 08.07.2012

சில விசித்திரமான விளையாட்டு விபத்துகள்
விளையாட்டில் காயம் படுவது சகஜமே. அதற்காக இப்படியா?



 அல்லது இம்மாதிரியா?



ஸ்லோ மோஷனில் ரீப்ளேயை பார்த்து ஒரு பாட்டியம்மாள் கூறினாராம், பரவாயில்லையே இம்மாதிரி மெதுவாகவெல்லாம் ஆடினால் அடிபடாது அப்படித்தானே என்று.

செய்திகள் நம்மை பாதிக்கும் தருணஙகள்
மதியம் தூங்கிக் கொண்டிருக்கும்போது திடீரென ஃபோன் ஒலித்தது. எடுத்து ஹலோ சொன்னல் எதிர்தரப்பில் ஒரு சப் இன்ஸ்பெக்டர். போன மாதம் 27-ஆம் தேதி ஏதாவது டாக்சியில் சென்றீர்களா என என்னிடம் கேட்கப்பட்டது. ஆம் எனக் கூறி விட்டு டாக்சியில் எங்கிருந்து எங்கு சென்றேன் என்ற கேள்விக்கும் பதிலளித்தேன். பிறகு ஏன் என்னிடம் இக்கேள்விகளை கேட்டாகள் என்றால் அந்த டாக்சி டிரைவரை இம்மாதம் இரண்டாம் தேதி யாரோ கொலை செய்து விட்டார்கள் எனக் கூறப்பட்டது. அரவிந்த் என்னும் பெயருடைய அந்த டிரைவர் இளைய வயதினர்.

மனம் கனமாயிற்று. பிறகு பேப்பரில் தேடினால் மேல் விவரம் கிடைத்தது. சாதாரணமாக இம்மாதிரி பல செய்திகளைக் கேட்டு பழகிப் போனவர்களுக்கு இதுவும் ஒரு செய்தியே. ஆனால் சம்பந்தப்பட்டவரை பார்த்து முன்னால் பேசியுள்ளேன் என்னும் நிலையில் அச்செய்தி மிகவும் பாதிக்கிறது என்பதுதான் நிஜம்.

அது போலத்தான் எனது இப்பதிவில் நான் இவ்வாறு எழுதினேன், “ஈழம் பற்றிய எனது சிந்தனைகள் பல ஈழசகோதரர்களுக்கு பிடிக்காது என்பதை நான் அறிவேன். இருப்பினும் கீழே சித்தரிக்கப்பட்டுள்ள நிகழ்ச்சியை பதிவு செய்தபோது எனது மனதில் சம்பந்தப்பட்ட குடும்பத்தினரின் துயரம்தான் தெரிந்தது. நேரிடையாக பாதிக்கப்பட்டவரை கண்டதும் எனது தர்க்கங்கள் எங்கோ ஒளிந்தன. இப்போது பதிவுக்கு போகிறேன்”.


எதுவுமே தனக்கு வந்தால்தான் புரியும் என்பதும் சரிதான்.

டூம்ஸ்டே வைரஸ்
எதற்கும் இந்தத் தளத்தைச் சுட்டவும். பச்சை வந்தால் ஓக்கே. சிவப்பு வந்தால் சங்குதாண்டி.

எனக்கு பச்சை வந்து விட்டது. ஜாலி. ஆனாலும் ஜாக்கிரதை என்கிறது அத்தளம். பார்க்கலாம். இது உண்மையான எச்சரிக்கையா அல்லது urban legend-ஆ என்று தெரியவில்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்



7/07/2012

பதிவர் தருமி அவர்களுக்கு நன்றி

அவரது இப்பதிவைப் பார்த்ததும்தான் எனக்கு இந்த நிகழ்ச்சி பற்றி தெரிய வந்தது. முதற்கண் அவருக்கு என் நன்றிகள் உரித்தாகுக. கூகளில் தேடி நிகச்சியின் வீடியோவை பிடித்தேன். 22-06-2012 அன்று ஒளிபரப்பான நிகழ்ச்சியை கீழே எம்பெட் செய்கிறேன். அந்த வாரம் முழுக்கவே அக்கிரகாரம் ஸ்பெஷல் என எண்ணுகிறேன். பார்ப்போம்.

 

பைதிவே அவரது பதிவின் முதற்பகுதி பற்றி நோ கமெண்ட்ஸ். அந்த விளம்பரத்தின் முழு பின்புலன் தெரியாமல் நான் கூற ஒன்றும் இல்லை.

மற்றப்படி ஜூனியர் சூப்பர் சிக்கர் நிகழ்ச்சி அற்புதமாக இருந்தது.

தருமி அவர்கள் தனது பிடித்தமின்மையை வெளிப்படையாகவே கூறிவிட்டார். அதே போல எனக்கு பிடித்ததையையும் நான் கூறிவிட்டுப் போகிறேனே.

என்ன செய்வது தருமி சார். நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் கர்நாடக சங்கீதத்தை ஆதரிப்பவர்களில் அதிக பட்சம் பார்ப்பனர்களே. ஆகவேதான் அக்கிரகாரம் ஸ்பெஷல் இயற்கையாகவே சோபித்தது. பார்ப்பனர்கள் தமது குழந்தைகளுக்கு இசை கற்பிப்பதில் காட்டும் அக்கறையை மற்ற சாதியினர் செய்ய வேண்டாம் என யார் தடுத்தது?

தமிழ்ழிசை சம்பந்தமாக ஜெயமோகன் எழுதிய பதிவு ஒன்றிலிருந்து சில வரிகளை இங்கு கோட் செய்கிறேன். மீதி வரிகளை அங்கு போய் படித்துக் கொள்ளுங்கள்.

சமீபத்தில் ஓர் விவாதக்குழுமத்தில் நண்பர் ஒருவர் தமிழிசை பற்றி ஒரு கருத்தை எழுதியிருந்தார். உண்மையில் அவர் ஒரு சிறிய குறிப்பு தான் எழுதியிருந்தார். அது பொதுவான ஒன்று. அதில் இசை முதல் சமகால அரசியல் வரை எல்லா தளத்திலும் நம் பொதுப்புத்தி சார்ந்து முன்வைக்கப்பட்டிருக்கும் கருத்துக்கள் சொல்லப்பட்டிருந்தன. அதில் ஒன்று சென்னை சங்கீத சபாக்களுக்கு எதிரான குமுறல். திருவிழாக்களிலும் கல்யாணவீடுகளிலும் வாழ்ந்துகொண்டிருந்த இசையை சபாக்கள் மூலம் பிராமணர் அழித்தார்கள் என்றார் நண்பர்.
அந்த சபாக்களால் முன்னிறுத்தப்பட்ட தமிழ்நாட்டின் பிராமண இசைவாணர்கள் அனைவரும் தமிழ்மேல் காழ்ப்புகொண்டவர்கள், தமிழிசையை அழிக்கும் நோக்கம் கொண்டவர்கள், தமிழைப்பாட திட்டமிட்டு மறுத்து மாற்றார் இசையை முன்னிறுத்துபவர்கள் என்பது அந்த தரப்பு. தமிழிசைவாணர்கள் என அவர் நினைக்கும் மதுரைசோமு போன்றவர்களை சபாக்கள் திட்டமிட்டு புறக்கணித்தன என்கிறார்.
நான் அவருக்கு கொஞ்சம் கோபமாக பதில் எழுதினேன். என் முதல் கேள்வியே இதுதான். பிராமணர் தமிழிசையை அழிக்கிறார்கள் என்றே வைத்துக்கொள்வோம், நீங்கள் பேணவேண்டியதுதானே? உங்கள் கல்யாணவீடுகளிலும் திருவிழாக்களிலும் மரபிசை பாடக்கூடாதென யார் தடுக்கிறார்கள்? மரபிசைக்காக நீங்கள் உங்கள் குடும்பங்களில் யாருக்காவது இசையை கற்றுத்தருகிறீர்களா என்ன? இசைக்காக என்ன செய்தீர்கள்? நீங்கள் மரபிசையை கைவிட்டமைக்கும் ’பாப்பான்’ தான் காரணமா? பொதுமேடை ஒன்றில் ஒரு கருத்தை முன்வைப்பதற்கு முன் அதற்கான அடிப்படை வாசிப்பைச் செய்ய வேண்டாமா? 

இப்போது நிகழ்ச்சி பற்றி மேலும் பேசுவேன்.

அடுத்தாத்து அம்புஜம் பற்றிய பாடல் சூப்பர் தூள். சக போட்டியாளர்களில் ஒருத்தியான அப்பெண் அதற்கு தன்னிடத்தில் அமர்ந்தவாறே பிடித்த அபிநயம் பலே ஜோர். சவுக்கார் ஜானகி கெட்டார் போங்கள்.

பலர் பிராமண பாஷை பேச கஷ்டப்பட்டாலும் முயற்சி பாராட்டத் தக்கதே. கீப் இட் அப்.

அன்புடன்,
டோண்டு ராகவன்  

6/21/2012

லீனா மணிமேகலை விவகாரம்

பலரும் இது பற்றி எழுதி விட்ட நிலையில் நானும் எழுதலாம் என இருக்கிறேன். .

லட்சியம் எல்லாம் ஓக்கேதான். ஆனால் அவை பிழைப்புக்கு எதிராக வரும்போது அவற்றுக்காக ரொம்பவும் அலட்டக் கூடாது என்பதுதான் எனது கொள்கையும். லீனாவின் தொழில் என்ன? படம் எடுப்பது. அதில் அவருக்கு நல்ல பெயர் உண்டு. அவருக்கு ஓர் ஆஃபர் வருகிறது. அதன்படி எடுக்கிறார். ஸ்க்ரிப்டை அவராக எழுதினாரா அல்லது எழுதிக் கொடுத்த ஸ்க்ரிப்டை அவர் எடுக்க வேண்டியிருந்ததா என்று பார்த்தால் இரண்டுமே ஒன்றுதான். அவராகவே ஸ்க்ரிப்டை எழுதினாலும் அவர் என்ன எழுத வேண்டும் என்பது அவரிடம் கூறப்பட்டிருக்கும் என்பதே நிஜம்.


சிவாஜி படத்தில் சாலமன் பாப்பையாவை அங்கவை சங்கவை காமெடிக்காக சாடினார்கள். அப்போதும் நான் சொல்வேன் அவர் அப்படத்தில் நடிகர், எழுதிக் கொடுத்ததைத்தான் நடித்தார் என.  அவர் மாட்டேன் என்றால் என்ன நடக்கும். பேசாமல் அவரை தூக்கி விடுவார்கள். அதன் மூலம் வரும் பொருள் இழப்பை அவரை சாடிய சும்பன்களா கொடுப்பார்கள்? நல்லா வாயில வருது. 


இவங்களே வாய்ப்பு கிடைச்சா அவ்வாறு செய்யக் கூடியவங்கதான். எனக்கு தெரிஞ்ச ஒரு பிளாக்கர் அமெரிக்காவை கண்டபடி சாடுபவர். ஆனால் கிரீன் கார்டுக்கும் அப்ளை செய்தவர். சொந்தப் பெயரில் எழுத தில் இன்றி புனைப்பெயரில் எழுதுபவர். எப்படி எழுதுவார்? அவர் அவ்வாறு செய்யாது சொந்தப் பெயரில் எழுதியிருந்தால், அவற்றை மொழிபெயர்த்து அமெரிக்கர்களுக்கு தெரிவித்திருந்தால்? ஒன்றும் தலையை எல்லாம் எடுக்க மாட்டார்கள். போடா உன் ஊருக்கே மயிராண்டி என்றுதான் அனுப்புவார்கள். அதுவே இவருக்கு இடிதானே. 


கம்யூனிசத்தை விதந்தோதும் இரு பதிவர்கள் - அவர்கள் பெயர் வேண்டாமே - மல்டி நேஷனல் கம்பெனிகளில்தான் வேலை பார்க்கிறார்கள். ஒருவர் தான் செல்ஃப் அப்ரைசலில் 40% இன்க்ரிமெண்ட் பெற்றதை என்னிடம் சந்தோஷமாகக் கூறினார்.


நானே ஐடிபிஎல்-ல் வேலை பார்த்த சமயம் எல்லாமே மகிழ்ச்சியாகத்தான் இருந்தது, ஒன்றைத் தவிர. அதாகப்பட்டது அல்ஜீரியாவுக்கு சென்று பணி புரிய வேண்டும் என்பதே. இஸ்ரேலுக்கு விரோதியான அந்த நாட்டுக்கு பணி செய்ய வேண்டுமா என்ற கலக்கம் இருந்தது வாஸ்தவமே. ஆனால் அதற்காக கிடைத்த வாய்ப்பை விட்டுவிட முடியுமா? இது வேறு, அது வேறு. ஆனால் நல்ல வேளையாக அல்ஜீரியா வேலை வரவிலை என்பதில் போனஸ் மகிழ்ச்சிதான்.


சில ஆண்டுகளுக்கு முன்னால் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கான தளம் ஒன்றிலிருந்து மொழிபெயர்ப்பு வேலை வந்தது. தயங்காமல் செய்து அனுப்பினேன். அவ்வளவுதான்.


ஆனால் சில இடங்களில் சட்டவிரோதம், பின்னால் மாட்டிக் கொள்ளலாம் என்பது தெரிந்தால் அவ்வேலைகளை ஏற்கலாகாது. ஆனால் அதுவும் சுயபாதுகாப்பில்தான் வரும்.

எது எப்படியானாலும் ஒரு செய்கையை மேற்கொள்ளும் முன்னால் எல்லாவற்றையும் பார்த்தல் நலம். ஆனால் அது சுய விருப்பத்தில் இருக்க வேண்டும். அவ்வளவே.

இதற்காக சாடும் மற்றவர்கள் நாசமாக போகட்டும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்







6/17/2012

என் அப்பன் ராமபிரான் தவறு செய்திருப்பானா - 3

இடம்: அயோத்தி அரசர் மந்திரியை தனியாகச் சந்திக்கும் இடம். (ராமரின் ஆலோசனை தொடர்கிறது).
ராம்ர்: பரதா, நீ என்ன நினைக்கிறாய் என்பதைக் கூறு. 


பரதன்: அரசே, அரச நிந்தனைதான் இது இலக்குவன் கூறுவது போல. இருப்பினும் உங்கள் மேல் உயிரையே வைத்திருக்கும் பிரஜைகள் ஏன் இவ்வாறு பேச வேண்டும்? அதை நாம் முதலில் ஆராய வேண்டும்.


ராமர்: ஆம், அதுதான் சரி. சுமந்திரரே பரதன் கூறும் வழியில் விசாரியுங்கள். பிறகு சந்திப்போம். இலக்குவா, பரதா இது பற்றி நம் அன்னையரிடம் எதுவும் கூற வேண்டாம். ஜானகியிடம் கூறவே கூடாது.


சில நாட்கள் கழித்து சுமந்திரர் ராமரை சந்திக்கிறார்.கூடவே இலக்குவன், பரதன் மற்றும் சத்ருக்னன்.


சுமந்திரர்:அரசே எவ்வாறு கூறுவது எனத் தெரியவில்லை. இருப்பினும் கூற வேண்டிய கட்டாயம். வண்ணானின் அபிப்பிராயம்தான் பலருக்கும் உள்ளது.


(ஃபிளாஷ்பேக்)


சுமந்திரர்: கீர்த்தி வர்மா, சீதையின் மேல் தவறு இல்லை என அக்னியே சாட்சி சொன்னதைக் கேட்டுமா மக்கள் மனம் இவ்வாறு உள்ளது?


கீர்த்திவர்மன்: அதையும் கேட்டாகி வ்ட்டது அமைச்சரே. அக்னி பேசியதற்கு சாட்சிகள் குரங்குகளும், ஒரு கரடியும், அரக்கர்களும், ராம லட்சுமணரும்தானே. எங்களில் யாரும் அங்கு இல்லையே. நேரிடையாக சாட்சி இல்லாத நிலையில் நாங்கள் இதை எப்படி நம்புவது? மேலும் வண்ணானையும் வண்ணாத்தியையும் சிறை பிடித்தது பற்றியும் கசப்புடனே பேசினாகள். மனதில் பட்டதைக் கூறினால் தண்டனையா? இதற்கு பரத ராஜ்யமே மேல் என்றும் கூறினார்கள்


ராமர் சிந்தனையில் ஆழ்கிறார்.


ராமர்: சரி நாளை முழு அரசவை கூடட்டும். அங்கு எனது முடிவைத் தெரிவிக்கிறேன்.


மறு நாள் அரசவை. வந்திருப்போர் வசிஷ்டர், மந்திரிகள், அரச மாதாக்கள் மூவரும், ராமரும் அவரது மூன்று சகோதரர்களும்.


ராமர் மூத்தோர்களை வணங்கி விட்டு பேச ஆரம்பிக்கிறார். 


ராமர்: நான் ஒரு சங்கடமான நிலையில் உள்ளேன். இதுதான் நடந்தது.


ராமர் நடந்ததைக் கூறுகிறார். எல்லோருமே அதிர்ச்சியில் மௌனமாகின்றனர்.


கைகேயி: அருமை மகனே ராமா, இதென்ன அக்கிரமம். நம் குல மருமகளுக்கு இந்த அவப்பெயரா? மக்களுக்கு பைத்தியமா பிடித்து விட்டது?


சுமித்திரை: மகனே, மக்களின் அபிப்பிராயங்களை செவி மடுப்பதற்கும் ஓர் எல்லை உண்டு. இது அவ்வித எல்லா எல்லைகளையும் மீறியதாக உள்ளது. ராவண சம்ஹாரத்தைக் கூடத்தான் யாருமே நேரில் பார்க்கவில்லை. அதனால் அது நடக்கவேயில்லை எனக் கூறி விடுவார்களாமா? என்ன அபத்தம்? தெருவில் போகிறவன் சொன்னதையெல்லாம் பொருட்படுத்தினால் ராஜ்யம் நடந்த மாதிரித்தான்.


கோசலை: அதானே, அந்த வண்ணானுக்கு உன் ஆட்சி பிடிக்கவில்லை என்றால் தாராளமாக் வேறு நாட்டுக்கு செல்லட்டும். அவன் மாதிரி பேர்வழிக்கெல்லாம் நம் நாட்டில் இடமில்லை என்றுதான் கூற வேண்டும்.


ராமர்: அன்னைகளே, அமைதி வேண்டும். என்னை திட்டுவது உங்களுக்கு வருத்தம் தருகிறது என்பதை நான் அறிகிறேன். ஆனால் அதையெல்லாம் செயலாக்கினால் நான் அரசனே இல்லை. பிரஜைகளின் குறைகளையும் களைய வேண்டும். அதை செய்யத்தான் நான் இச்சபையை கூட்டியுள்ளேன். குலகுரு வசிஷ்டரே, நீங்கள் ஒன்றுமே கூறாமல் இருக்கிறீர்களே.


வ்சிஷ்டர்: ராமா, இதில் பல விஷயங்கள் அடங்கியுள்ளன. அயோத்தி அரசின் விதிப்பயனும் இதில் கலந்துள்ளது. மேலும் பல தேவ ரகசியங்களும் உண்டு. அவற்றையெல்லாம் நான் இங்கு வெளியே கூறுவது முறையாகாது. 


ராமர் (யோசனையுடன்): தேவ ரகசியங்களா? என்னிடம் கூட தனியாகக் கூறக்கூடாதா? அப்படியென்றால் கூற வேண்டாம். பரதா, அருமை தம்பியே, நீ உனது கருத்தைக் கூறு.

பரதன்: அண்ணா, அன்னையரின் கருத்துத்தான் என் கருத்தும். உங்கள கடமை ஆட்சி செலுத்துவதே. அதில் கவனம் செலுத்துங்கள். 


இலக்குவனும் சத்ருக்னனும் பரதன் கூறியதற்கு வேகமாகத் தலையாட்டுகிறார்கள்.


திடீரென சீதை அரசவைக்குள் பிரவேசிக்கிறார்.


ராமர்: சீதே நீ இங்கு எப்படி? 


சீதை: அரசே உங்களுக்கு வந்த கெட்டப் பெயர் என்னால்தான் வந்தது. வண்ணான் கூறிய்து பற்றி நானும் அறிந்தேன். நாம் இருவரும் 14 ஆண்டுகளுக்கு முன்னால் காட்டுக்கு சென்றபோது அழுது ஆர்ப்பாட்டம் செய்த மக்களே இப்போது இவ்வாறு பேசுகிறார்கள் என்றால் அது யோசிக்க வேண்டியதே.


ராமர்: சீதே, என்ன கூறுகிறாய்?


சீதை: ஆர்ய புத்திரரே, மனதைத் தளர விடாதீர்கள். எனக்கு வனவாச ராசி உண்டு என என் தந்தை ஜனகர் கூறியிருக்கிறார். நான் மீண்டும் வனம் செல்வதே முறை.


சீதை சொன்ன சொற்களை மறுக்கும் வலிமை எவருக்கும் இல்லை. ஆகவே எல்லோருமே மௌனமாக இருக்க, ராமர் பேசுகிறார்.


ராமர்: எல்லோருமே வண்ணான் பேசியதைத்தானே கூறுகிறீர்கள்? அவன் மனைவி கூறியதை மறந்து விட்டீர்களா? வனவாசத்தில் இருந்திருந்தாலும் நான் அரசனே. எனது பிரஜையாகிய என் மனவியை மாற்றான் கவர்ந்து சென்றான் என்றால், நான் அரசனாக இருக்கும் தகுதியற்றவன் என்றுதானே ஆகிறது? 


அரசவையில் அதீத மௌனம் நிலவுகிறது. ராமர் அதை கவனியாது மேலும் பேசுகிறார்.


ராமர்: இஷ்வாகு குலத்தில் பிறந்த இந்த ராமன் கூறுகிறேன். நாட்டின் பொறுப்பை பரதனிடம் ஒப்படைக்கிறேன். நானும் சீதையும் வனவாசம் செல்வோம்.


(தொடரும்)


அன்புடன்,
டோண்டு ராகவன்








  

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 17.06.2012

கூகள் குரோம் ரொம்பவுமே படுத்துகிறது
இந்த உலாவி வந்தது முதல் நான் அதை பயன்படுத்தி வந்திருக்கிறேன். இதுவரை பிரச்சினை இருந்ததில்லை. ஆனால் (நிஜமாகவே) சமீபகாலமாக அது அவ்வப்போது திடீரென கிராஷ் ஆகி முழு கணினியே ரீபூட் ஆகிறது. அச்சமயம் ஏதேனும் வேர்ட் அல்லது பிற கோப்புகள் திறந்திருந்தால் சிக்கல் அதிகமாகிறது.

இது சம்பந்தமாக கூகளிட்டு பார்த்ததில் பலருக்கும் (63 லட்சங்கள் மேல் ஹிட்டுகள்) இதே பிரச்சினை இருந்து வந்திருக்கிறது. சரி என இண்டெர்னெட் எக்ஸ்ப்ளோரரை பாவிக்கலாம் என்றால் பிளாக்கர்தெளிவாகவே கூறுகிறது, ”வாணாம் அதை பிளாக்கர் இப்போது சப்போர்ட் செய்வதில்லை கூகள் குரோமுக்கே போ” என்று.

நெருப்பு நரியை நான் எனது பிசினெஸ் மின்னஞ்சலுக்கு மட்டுமே பயன்படுத்துகிறேன். பிளாக்கருக்கான மின்னஞ்சல் வேறு. ஆகவே இரண்டையும் ஒன்றாக நெருப்பு நரியில் பயன்படுத்த இயலவில்லை. இப்பிரச்சினை சம்பந்த்மாக இங்கு கூறப்படுவது எனக்கு புரியவில்லை.

என்ன செய்வது?

புதுக்கோட்டை இடைதேர்தல்
எதிர்பார்த்தது போலவே அதிமுக வெற்றி. திமுக ஆட்சி காலத்தில் பர்கூர் தொகுதி இடைதேர்தலில் அதிமுக போட்டியிடாமல் ஒதுங்கியதற்கு என்ன காரணங்களோ அதே காரணங்கள்தான் இப்போது திமுக போட்டியிடாமல் போனதற்கும் கூறப்படுகின்றன.

ஒன்றுக்கொன்று ஊழலில் சளைத்தவை இல்லை, இவ்விரு கட்சிகளும்.

சந்தடி சாக்கில் டெபாசிட்டாவது கிடைத்ததே என சந்தோஷப்படுகிறது தேதிமுக.

ஆந்திராவில் இடைதேர்தல்
ஆளும் கட்சி படுதோல்வி அடைந்திருப்பது ஆறுதலாக உளளது. அதற்காக ஜெகன்மோகன் ரெட்டி நல்லவர் என்றெல்லாம் சொல்ல மாட்டேன். பொது தேர்தல் வரட்டும், இருக்கு தமாஷ்.

யாருடைய கலை?
ஜெயமோகனின் இது சம்பந்தமான பதிவு சிந்தனையைத் தூண்டுகிறது.

அவர் கூறுகிறார்:
கலையும் இலக்கியமும் மெய்யியலும் ஒரு சமூகத்தின் உச்சியில் நிகழ்பவை. ஏதோ ஒருவகையில் மூலதனம் மையத்தில் குவிந்து அதனால் உருவாக்கப்பட்ட ஒரு சமூகக்கட்டுமானமே அவற்றை உருவாக்கிப் பேண முடியும்.
அந்த மூலதனக்குவிப்பை சமூக உருவாக்கத்தின் இன்றியமையாத ஒரு செயல்பாடாக காணலாம். செல்வம் அவ்வாறு குவிக்கப்படுகையிலேயே அது மூலதனமாகிறது. மூலதனமே சமூகத்தை உருவாக்கமுடியும். நாமறியும் எல்லாமே அவ்வாறு உருவாகிவந்தவைதான்.
அதையே கீழ்மட்டத்தில் உழைப்பாளிகளால் உருவாக்கப்பட்ட செல்வம் அதிகாரத்தால் சுரண்டப்பட்டு மையத்தில் குவிக்கப்படுகிறது என்றும் சொல்லலாம். அந்தக்கோணத்தில் பார்த்தால் உலகில் உள்ள எல்லா கலைகளும் எல்லா சிந்தனைகளும் எல்லா சமூகக் கட்டமைப்புகளும் சுரண்டல் மூலம் உருவாக்கப்பட்டவைதான்.
இடதுசாரிகள் தங்களுக்குச் சௌகரியமான முறையில் இந்த பார்வையை விரித்துக்கொள்வார்கள். அதைத்தான் நான் சுட்டிக்காட்டினேன். தங்களுக்குப் பிடிக்காத ஒன்றை, தாங்கள் அழிக்க விரும்பும் ஒன்றை அவர்கள் சுரண்டலின் சின்னம் என்பார்கள் தங்களுக்கு பிடித்தமானவையும் தாங்கள் உருவாக்குபவையும் எல்லாமே அதேபோல சுரண்டலின் மூலம் உருவானவை அல்லவா என சிந்திப்பதை வசதியாக விட்டுவிடுவார்கள்”.
அதானே. கம்யூனிசத்தை தொழிலாள வர்க்கத்தின் சர்வாதிகாரம் என்றுதானே கம்யூனிஸ்டுகள் கூறிவந்தனர்? உக்ரைனில் நடந்த நிலப்புரட்சிக்கு பின்னால் எத்தனை லட்சக்கணக்கான சாவுகள்?

வினவின் கள்ள மௌனம்
இப்போது வினவின் இச்செயல்பாடு நினைவுக்கு வருகிறது.
வேலை வேண்டுமா கொலை செய் என்னும் பதிவில் உலகமயமாக்கலால் போட்டி மிகுந்து கொலைகள் அதிகமாகின்றன என பொருள்பட எழுதிய அப்பதிவில் நான் கம்யூனிச உதாரணத்துடன் பின்னூட்டமிட்டால், என் பின்னூட்டத்துக்கு பிறகு வேறு பின்னூட்டம் லேது.

அதே போல இந்திய நடுத்தர வர்க்கம் வீட்டு வேலைக்காரர்களை கொடுமைபடுத்துகிறது என்று கூறும் பதிவில் நான் இந்திய நடுத்தரவர்க்கத்தை மட்டும் ஏன் குறி வைக்கிறீர்கள், உங்கள் தலைப்பே தவறு என்று இட்ட பின்னூட்டத்துக்கும் பதில் இல்லை.

கம்யூனிச அரசுகள் ரொட்டீனாக செய்யும் உளவு வேலைகளை மறந்து, வீட்டு வாடகைக்காரகளின் தகவல்களை போலீசுக்கு தர வேண்டும் என அதிமுக அரசு ஆணையிட்டதை கண்டித்து அதை பாசிச அரசு என அழைத்த இப்பதிவில் நான் இட்ட பின்னூட்டங்களுக்கு வினவின் அல்லக்கைகளே பதிலளித்தனர். வினவு புத்திசாலித்தனமாக வழக்கம்போல கள்ள மௌனம் சாதித்து விட்டது.

அன்புடன்,
டோண்டு ராகவன்





 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது