2/29/2008

Have a nice time Sujatha Sir!

சுஜாதா அவர்களது பூதவுடல் பொதுமக்கள் மரியாதைக்காக அவரது அபார்ட்மெண்ட் காம்ப்ளக்ஸில் ஐஸ் பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது. சென்னை மயிலை நீதிபதி சுந்தரம் சாலையில் சாய்பாபா கோவிலுக்கருகில் அவரது இல்லம்.

இன்று காலை 9 மணியளவில் அவர் வீடு இருந்த தெருவுக்கு சென்றபோது கார்ட்டூனிஸ்ட் மதனைப் பார்த்தேன். அவரும் சுஜாதா வீட்டுக்குத்தான் செல்கிறார் என்பதை அறிந்து அவரைப் பின்தொடர்ந்தேன். நல்ல ஏற்பாடுகள் செய்து வைத்திருந்தனர். சற்று நேரம் முன்புதான் உடல் கொண்டு வரப்பட்டது என்று சொன்னார்கள். தூங்குவது போன்ற தோற்றம். இறுதி வணக்கம் செய்துவிட்டு சற்றே தள்ளி வந்தபோது அதியமானைப் பார்த்தேன். சிறிது நேரம் கழித்து என்றென்றும் அன்புடன் பாலாவும் வந்தார். தேசிகன் மற்றும் மனுஷ்யபுத்திரனை சந்தித்து அவர்களுக்கு எனது அநுதாபங்களைத் தெரிவித்தேன். நான் பார்த்த மற்ற பதிவர்கள் உண்மைத் தமிழன், ஹரன் பிரசன்னா, உண்மைத்தமிழன், நகுபோலியன் ஆகியோர்.

ஒருவர் என்னை நெருங்கி தான் நடராஜன் என அறிமுகப்படுத்திக் கொண்டார். மெலட்டூர்ர் நடராஜனா என்று கேட்க, இல்லை என்று கூறினார். தான் பதிவுகளை படிப்பவர் மட்டுமே என்று கூறினார். என்னைப்போலவே அவரும் சுஜாதாவின் விசிறி. அவரும் நானும் சிறிது நேரம் சுஜாதா பற்றி பேசினோம்.

பல பிரபலங்கள் வந்திருந்தனர். இரா. முருகன், இந்திரா பார்த்தசாரதி, பூர்ணம் விஸ்வநாதன், கமலஹாசன், கனிமொழி, சாரு நிவேதிதா, கலைஞர், பாலுமகேந்திரா, டைரக்டர் வசந்த், இன்னும் பலர்.

அவரவர் தாங்கள் சுஜாதா அவர்களை வெவ்வேறு சந்தர்ப்பங்களில் சந்தித்ததைக் கூற நானும் அவரை சமீபத்தில் 1971-ல் சந்தித்ததை நினைவு கூர்ந்தேன்.

இரண்டாண்டுகளுக்கு முன்னால் தனது எழுபதாம் ஆண்டு நிறைவு சந்தர்ப்பத்தில் எழுதியது நினைவுக்கு வந்தது. வயது ஆக ஆக நமது நிச்சயங்கள் குறைகின்றன. மரணத்துக்கு பின்னால் என்ன ஆகின்றது? மறு பிறப்பு உண்டா? என்பது பற்றியெல்லாம் எழுதியிருந்தார், விகடனில் கற்றதும் பெற்றதும் தொடரில். அவையெல்லாம் நினைவுக்கு வந்தன.

சுஜாதா அவர்களின் மகன்களைப் பார்க்கும்போது தனது தந்தை இறந்த சந்தர்ப்பத்தில் தான் பெற்ற அநுபவங்களை எழுதியதும் நினைவுக்கு வந்தது. அச்சமயம் கருட புராணத்தைப் பற்றி அவர் எழுதியிருந்ததும் நினைவுக்கு வந்தது. அதாவது இறந்த பத்து நாட்களுக்கு பிரேதாத்மா எப்படியேல்லாம் அல்லாடுகிறது என்பதை விவரிப்பது யாருக்கும் அடிவயிற்றில் சங்கடம் தரக்கூடியது. சாதாரணமாக சாவு வீடுகளில் கர்மம் செய்ய வேண்டியவர்கள் படிப்பதற்காக இந்த புராணம் சிபாரிசு செய்யப்படுகிறது. மற்ற நேரங்களில் அதை படிக்கக் கூடாது என்று கூட கூறுவார்கள்.

”நரகமா சொர்க்கமா எது உங்கள் சாய்ஸ்” என்று தனக்கு கொடுக்கப்பட்டால் தான் நரகத்தையே கேட்கப்போவதாக எழுதியிருந்தார். நரகத்தில் சுவாரசியமான மனிதர்கள் இருப்பார்களாம். சொர்க்கத்தில் ஒரு நாளைக்கு மேல் அகண்டபஜனை போர் அடித்து விடும் என்றும் எழுதியிருந்தது நினைவுக்கு வந்து என்னையும் மீறி மனதுக்குள் புன்முறுவல் வந்தது. அதுதான் சுஜாதா.

சுஜாதா அவர்களே, நீங்கள் எங்கு சென்றாலும் அந்த இடம் மற்றவர்களுக்கு சொர்க்கமாகவே மாறிவிடும். அவர்களுக்கு இனிமையான தோழமை அளித்து நீங்களும் மகிழ்ச்சியடைவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

ஆகவே, Have a nice time Sujatha Sir!

அன்புடன்,
டோண்டு ராகவன்

2/28/2008

The great Indian novel - 3

பகுதி 2
பகுதி 1

இப்போது கதைக்கு போகலாம்.

நான் ஏற்கனவே குறிப்பிட்டபடி, பீஷ்மரின் பாத்திரத்தை இங்கு காந்திஜிக்கு கொடுத்துள்ளார் சஷி தாரூர். ஆங்கிலேயர்களும் வருகின்றனர் கதையில் அஸ்தினாபுரம் பிரிட்டிஷ் இந்தியாவுக்கு கீழ்ப்பட்ட ஒரு சுதேச சமஸ்தானமாகக் காட்டப்பட்டுள்ளது. கதையிலும் அவரை கங்காஜீ என்றே எல்லோரும் அழைக்கிறார்கள். மற்ற பாத்திரங்களையும் பார்ப்போமா?

தன் தம்பி விசித்திரவீர்யனுக்காக அரசிளங்குமரிகள் அம்பா, அம்பிகா, அம்பாலிகா ஆகியோரை சிறையெடுத்து வருகிறார் கங்காஜி. அவர்களுள் அம்பா தான் சால்வனை கணவனாக வரித்ததைக் கூற அவளை அவனிடமே திரும்ப அனுப்ப, அவன் அவளை ஏற்றுக் கொள்ளாது போக, பிறகு யாருமே ஏற்றுக் கொள்ளாது போக, அப்பெண் ஒரிஜினல் கதையில் பீஷ்மரைக் கொல்ல சபதம் எடுத்து தற்கொலை செய்து கொண்டு அடுத்த பிறவியில் சிகண்டியாக வருகிறாள். ஆனால் இந்த நாவலில் அப்படிக் காட்டாது, அப்பெண் பிற்காலத்தில் தனது பெண் நிலையை அறுவை சிகிச்சை மூலம் மாற்றிக் கொண்டு அவரை பிற்காலத்தில் கொல்கிறாள் (கோட்சேதான் அம்பா).

விசித்திரவீரியன் வாரிசின்றி இறக்க, அவரது விதவைகள் அம்பிகா மற்றும் அம்பாலிகாவுடன் கூடி குழந்தைகள் தர கங்காஜி மறுத்துவிட்ட நிலையில், சத்தியவதி வேதவியாசரின் துணையை நாட, அவர் மூலம் அம்பிகாவிற்கு குருடனாக திருதிராஷ்ட்ரனும், அம்பாபாலிகாவிற்கு பாண்டுவும், வேலைக்காரிக்கு விதுரரும் பிறக்கின்றனர். திருதிராஷ்டிரன் ஜவஹர்லால் நேரு, பாண்டு சுபாஷ் சந்திரபோஸ், விதுரர் சர்தார் வல்லபாய் படேல். கங்காஜீ இளவரசர்களை தன் குழந்தைகள் போல பாவித்து நன்கு வளர்த்து வருகிறார். திருதிராஷ்டிரனை இங்கிலாந்துக்கு அனுப்பி படிக்க வைக்க, அவர் அங்கிருந்து சோஷலிசம் கற்று வருகிறார். பாண்டுவோ உள்ளூரிலேயே படிக்கிறார். விதுரரும் நன்கு படித்து சிவில் சர்வீசில் சேருகிறார்.

இளவரசர்கள் வயதுக்கு வந்ததும் திருதிராஷ்டிரருக்கு காந்தாரியை (கமலா நேரு) மணமுடித்து வைக்கிறார் கங்காஜி. பாண்டுவுக்கு இரு மனைவியர், ஒருவர் குந்தி யாதவ் இன்னொருவர் மாத்ரி. குந்தி சிறு பெண்ணாக இருந்தபோது Hyperion Helios (கதிரவன்) என்ற வேற்று நாட்டான் ஒருவனுடம் சினேகம் ஏற்பட்ட வம்பு பற்றி கங்காஜி இங்கு பேசுகிறார். அதெல்லாம் வயசுக்கோளாறு, அதற்கப்புறம் அப்பெண் சமத்தாகவே இருந்தாள் என்றும் கூறுகிறார். இருந்தாலும் பாண்டுவுக்கு தாழ்வு மனப்பான்மை கூடாது என்று இன்னொரு மனைவியையும் அவருக்கு மணம் செய்விக்கிறார் கங்காஜி. விதுரருக்கு ஒரு மகாராஜாவுக்கு வேலைக்காரி மூலம் பிறந்த பெண்ணை திருமணம் செய்விக்கிறார்.

காந்தாரிக்கு மகாபாரதத்தில் 100 பிள்ளைகள், ஆனால் இந்த நாவலிலோ ஒரே ஒரு பெண், பெயர் பிரியதுரியோதனி (இந்திரா காந்தி). ஆனால் இவளே 100 பிள்ளைகளுக்கு மேல் என்றுதான் கூறப்படுகிறது.

பாண்டுவுக்கோ ஒவ்வொரு கைக்கு ஒன்று என இரு மனைவியர் இருந்தாலும் அவருக்கு மாசிவ் ஹார்ட் அட்டாக் வர, தாம்பத்திய உறவு கூடாது எனக்கூற சந்ததிக்காக அவர் என்ன முடிவு எடுத்தார் என்பதைப் பற்றி அடுத்தப் பதிவில் பார்ப்போம்.

பாண்டுவின் நிலையைப் பற்றி சஷி தாரூர் ஆங்கிலத்தில் குறிப்பிடுவது இவ்வாறு:
He was in bed one day with both his consorts, attempting something quite unspeakably imaginative, when an indescribable pain shot through his chest and upper arm and held his very being in its grip. He fell back, unable to mouth the words to convey his torture, and for a brief moment his companions thought their ministrations had brought him to a height of ecstasy they had never seen before. But a quick lower down convinced them something quite different was the matter. They frantically screamed for help.

அடுத்தப் பதிவில் பார்ப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

2/27/2008

இதெல்லாம் ஒரு பிழைப்பா கோவி கண்ணன்?

இன்று அதிகாலையில் எழுந்து இணைய இணைப்பை போட்டபோது தில்லா என்ற பெயரில் ஒரு பதிவர் போட்ட பின்னூட்டத்தைப் பார்த்தேன். அது இதோ:
தில்லா has left a new comment on your post "துக்ளக் 38-ஆம் ஆண்டுவிழா கூட்டத்தின் வீடியோக்கள் வ...":
காலம்
எந்த விதியும் இதற்குள் அடக்கம், விதிகள் காலத்தால் மாறும் !
இத்தனை நாளு டோண்டு ராகவனை திட்டி அசிங்கமா ஆபாசமா பதிவு போட்டுவிட்டு அப்படியே சைக்கிள் கேப்பில ஏரோப்பிளேன் சீ சீ
இதுக்கு பொறுமையா நிதானமா நாட்டுகிட்டு செத்துட்டு போவலாம்.
காலம்
எந்த விதியும் இதற்குள் அடக்கம், விதிகள் காலத்தால் மாறும் !
இது கருத்து கந்தசாமி அய்யா பதிவில் போட்ட பின்னோட்டம் கண்டிப்பா வராது நீங்க இந்த பிண்ணோட்டதை தடையில்லாமல் வெளியிடவும்.
Publish this comment.
Reject this comment.
Moderate comments for this blog
இந்தப் பின்னூட்டத்தை நான் நிராகரித்தேன், காரணம் அது அந்தப் பதிவுக்கு சம்பந்தமில்லாதது. அதன் பிறகுதான் தமிழ்மணம் சென்றேன். உங்கள் உளறல் பதிவைப் பார்த்தேன். அபோதுதான் அந்தப் பின்னூட்டத்தின் நோக்கம் புரிந்தது.

கருத்து கந்தசாமியாக இருந்து நீங்கள் செயல்பட்டதை பற்றி இம்மாதிரி உங்கள் பழைய தோழர்கள் உங்களை கும்முவதை பார்த்து எனக்கே சற்று பரிதாபமாகத்தான் இருந்தது, ஆனால் இப்போது அப்பரிதாபம் சுத்தமாக மறைந்து விட்டது. உங்களை விடுவதாக இல்லை. அதற்கு முன்னால் நீங்கள் செந்தழல் ரவி பற்றி எழுதிய விஷயங்களை டீல் செய்து விட்டு வருகிறேன்.

"நீங்கள் தான் போலியைக் கண்டுபிடிக்கச் செந்தழல் ரவி என்பவரிடம் சொன்னதாகவும், அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்று சொல்லி, எனது மகளைப் பற்றி ஆபாசாமாக எழுதினாலும் கண்டு கொள்ள மாட்டேன் என்று சொல்லி இருந்தீர்களா"?
கண்டிப்பாக இல்லை. செந்தழல் ரவி அவ்வப்போது தான் போலியை கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளைப் பற்றி என்னிடம் கூறி வந்தது உண்மைதான். ஆனால் தான் அதற்காக என்னென்ன எழுதுவார் என்றெல்லாம் என்னிடம் கூறவில்லை. நானும் கேட்கவில்லை. இப்போது கூட அவர் என் மகளைப் பற்றி ஆபாசமாக எழுதினார் என்பதை நம்பவில்லை. என் மகளைப் பற்றி வந்ததெல்லாம் மூர்த்தியின் கைங்கர்யமே. அவனது எழுத்து நடை எனக்கு தெரியும். செந்தழல் ரவியை பற்றி மூர்த்தி எழுதியதெல்லாம் தன் மேல் உள்ள குற்றச்சாட்டுகளை சற்றே அவர் மேலும் போடுவதற்கே. நான் இதற்கு இடம் தரவில்லை. எனது பதிவுகளில் பாருங்கள் புரியும். உதாரணத்துக்கு ஷ்டாஸி பற்றிய பதிவு. அதிலிருந்து இங்கு ஒரு பகுதியை நகலெடுத்து ஒட்டுகிறேன்.
"ஷ்டாஸிதான் இப்பதிவுக்கான விஷயம். அதிலும் முக்கியமாக அதன் ஆவணங்களில் வெளியான பல ரகசியங்கள். இவ்வமைப்பு ஒரு பெரிய தகவல் மையத்தையே தன்னுள் வைத்துக் கொண்டிருந்திருக்கிறது. அதற்கு செய்தி அளித்தவர்கள் நாட்டின் குடிமக்களில் கணிசமான பகுதியினர். பெற்றோரைப் பற்றி பிள்ளைகள் தத்தம் வீடுகளில் பெற்றோர் எந்த டிவி சானலை பார்க்கின்றனர், என்னென்ன ரேடியோ நிகழ்ச்சிகள் கேட்கின்றனர். வீட்டில் தங்களுக்குள் என்ன பேசிக் கொள்கின்றனர், இத்யாதி, இத்யாதி என்றெல்லாம் கூறினர். அதே போல பக்கத்து வீட்டு மாமா, எதிர்வீட்டு சித்தப்பா என்ன செய்தார் என்பதும் கூறப்பட்டன. நண்பன் மேற்கு ஜெர்மனி பேப்பர்களுக்கு தனது பின்னூட்டத்தை மாற்றுப் பெயரில் கடிதங்களாகப் போட்டதும் இந்த உளவு விஷயங்களிலிருந்து தப்பவில்லை. வெளிநாட்டுகாரர்கள் கிழக்கு ஜெர்மனிக்காக உளவு செய்ததும் வெளிவந்தன.

சோவியத் யூனியன் மறைந்து கே.ஜி.பி. கலைக்கப்பட்ட போது கூட கேரள கம்யூனிஸ்டு தலைவர்கள் சோவியத் யூனியனிடமிருந்து பணம் பெற்றதும் வெளியில் வந்ததையும், அதை அக்காலக் கட்டங்களில் ஹிந்துஸ்தான் டைம்ஸில் படித்ததையும் இங்கு போகிறபோக்கில் குறிப்பிட்டு விட்டுப் போகிறேன்.

இப்பதிவின் முக்கியக் கருப்பொருளுக்கு வருகிறேன். ஷ்டாஸி ரகசியங்கள் வெளியானதும் பல குடும்பங்கள், நண்பர்கள் வட்டாரங்களில் பூகம்பங்கள் ஏற்பட்டன. யாரைத்தான் நம்புவதோ எனத்துவண்டான் ஒருவன், அவன் பெயரும் இன்னொரு ஷ்டாஸி ஆவணத்திலிருந்து வெளிவரும் வரை. பிறகு அசடு வழிந்தான். ஓரளவுக்கு மேல் எதுவும் பழகிப் போகும், ஊரே சிரித்தால் கல்யாணம் என்ற கோட்பாட்டில் மறப்போம் (ரொம்ப கஷ்டம்) மன்னிப்போம் (சற்றே சுலபம்) என மனதைத் தேற்றிக் கொண்டனர். அதுதான் முக்கியம். வேவு பார்த்தது என்னவோ உண்மைதான், கண்டனத்துக்குரியதுதான். ஆனால் முக்கிய எதிரி ஸ்டாஸிதான், அதுவும் அதை உருவாக்கிய கிழக்கு ஜெர்மன் அரசும் ஒழிந்தன என்பதே முக்கியம் என்பதை மக்கள் நல்ல வேளையாக நினைவில் வைத்துக் கொண்டனர். ஆகவே பைத்தியமாகாமல் பலர் தப்பித்தனர். வாழ்க்கை தொடர்ந்தது. பொருளாதார சிக்கல்களை சமாளிக்கவே நேரம் இல்லாத போது இதையெல்லாம் எவ்வளவு நேரத்துக்குத்தான் பார்த்து கொண்டிருப்பது"?

மறுபடியும் கூறுகிறேன், செந்தழல் ரவி என் மகளைப் பற்றி அசிங்கமாக எழுதவில்லை. அப்படியே அவர் எழுதினார் என நிரூபணமானாலும் அவரை மன்னிக்கிறேன். ஹாரி பாட்டர் கதைகளில் வரும் ஸ்னேப் போல அவர் செயல்பட்டார். அதற்கு மிகுந்த மனவுறுதி வேண்டும். அது அவரிடம் இருந்தது. அவ்வளவுதான் விஷயம்.

மேலும், லட்சக்கணக்கில் ராம நாமம் எழுதும் ராமபக்தையான என் மகளை யாரும் எதுவும் செய்து விடமுடியாது. அதே சமயம் என் மனைவியை அவரது இஷ்ட தெய்வம் லட்சுமி நரசிம்ம ஸ்வாமி காப்பாறுவார். ஆகவே ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதையாக நீங்கள் கவலை கொள்வதை விட்டொழியுங்கள். அவ்வாறெல்லாம் அசிங்கமாக எழுதிய மூர்த்திக்கு இன்னும் வக்காலத்து வாங்குவது குறித்து வெட்கி முக்காடு போட்டு கொள்ளுங்கள்.

இத்தருணத்தில் இன்னொன்றையும் கூற ஆசைபடுகிறேன். ஷ்டாஸி பதிவு செந்தழல் ரவிக்கு மட்டுமல்ல. மூர்த்தியால் ப்ளாக்மெயில் செய்யப்பட்டு அவனுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்த மற்றவருக்கும் அதன் மூலம் வாய்ப்பு தந்தேன். முக்கியமாக லக்கிலுக்குக்கு. எனக்கு வேண்டியதெல்லாம் போலி டோண்டுவாக செயல்பட்ட மூர்த்தியை வெளிப்படுத்தி காறி உமிழ்ந்து வெளியில் குப்பைத் தொட்டியில் தூக்கிப் போடுவதே. அது நடந்து விட்டது. அது போதும் எனக்கு.

//அனானியாக இந்த கேள்வியை பின்னூட்டத்தில் கேட்காமல் ஒரு பதிவாக உங்கள் கேள்வியை கேட்டதற்கு பாராட்டுகள், இருப்பினும் சபை கருதி சில கடின வார்த்தைகளை தவிர்த்திருக்கலாம் .//
வால்பையன் அவர்களே, சபை நாகரிகம் எல்லாம் கோவி கண்ணன் அகராதியில் கிடையாது. அவர் இன்னும் மோசமாக எழுதுவார். அவரது தரம் அவ்வளவுதான்.

இப்போது உங்களிடம் வருகிறேன். உங்களால் உங்கள் உருவத்தை கண்ணாடியில் பார்க்க முடிகிறதா? வெட்கமாக இல்லை? இல்லை என்றால் அதற்காக ஆச்சரியமும் படமாட்டேன் என்றும் கூறத்தான் வேண்டியுள்ளது.

துக்ளக் மீட்டிங்கில் எஸ்.கே. அவர்களை சந்தித்ததைப் பற்றி அப்பதிவின் ஆரம்பத்திலேயே கூறியிருந்தேன்.
//சற்றே தமிழ்மணம் விஷயங்கள் பேசினோம்.//
அதாவது முக்கியமாக உங்களைப் பற்றித்தான். விடாது கருப்புதான் மூர்த்தி என்பது உங்களுக்கு ஏற்கனவே தெரியும் என்றும் அந்த விஷயத்தில்தான் உங்களுடன் அவருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது என்றும் என்பதை அவர் வருத்தத்துடன் கூறினார். எனக்கு அது புதிய விஷயம் இல்லையாதலால் வியப்பை வெளிப்படுத்தவில்லை. தேவையில்லாமல் இதை எழுத வேண்டாமே என்று அப்பதிவில் குறிப்பிடாது விட்டேன். இப்போது அதை எழுதும் தருணம் வந்ததாலேயே எழுதுகிறேன்.

வெறுமனே முரளி மனோஹர் என்ற ஒரு புனைப்பெயரில் நான் எழுதியதற்கே இவ்வளவு தார்மீகக் கோபம் காட்டி எழுதி, கேலி செய்த நீங்கள் கருப்பு விஷயத்தில் இன்னும் மூர்த்திக்கே வக்காலத்து வாங்கி, அவன்தான் போலியா என்று இன்னும் சந்தேகம் கிளப்புவதன் காரணம் ஒன்று மட்டும்தான். அதுதான் உங்களது பார்ப்பன வெறுப்பு.

Let us call a spade a spade.

பார்ப்பன நண்பர்கள் உங்களுக்கு இருப்பதாக கூறிக்கொண்டாலும் உங்கள் வெறுப்பினால் அவர்களை போலியிடம் போட்டு கொடுத்ததைப் பற்றியும் படித்தேன். முக்கியமாக எஸ்கே அவர்களைத்தான் இங்கு குறிப்பிடுகிறேன். எப்படி அதற்கு மனம் வந்தது கோவி கண்ணன்?

திருந்துங்கள் கோவி கண்ணன். காலம் உங்களை மன்னிக்கட்டும். இதை நான் உங்களுக்கு பின்னூட்டமாக போடாததற்கு இரண்டு காரனங்கள் உண்டு. ஒன்று நீங்கள் இதை மறைப்பீர்கள். ஏற்கனவே எனக்கு பலமுறை செய்ததுதான். இன்னொன்று எனக்கு இப்போது உங்கள் பதிவில் வந்து அதை இட விருப்பம் இல்லை.

டோண்டு ராகவன்

2/22/2008

துக்ளக் 38-ஆம் ஆண்டுவிழா கூட்டத்தின் வீடியோக்கள் வலையேற்றப்பட்டுள்ளன

அப்பாடா, துக்ளக் 38-ஆம் ஆண்டுவிழா கூட்டத்தின் வீடியோக்கள் யூ ட்யூப்பில் வலையேற்றப்பட்டுள்ளன. எனது நண்பர் கே.கே. அவர்கள் அவற்றின் சுட்டிகளை மின்னஞ்சல் மூலம் அறியத் தந்தார். அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

முதலில் நரேந்திர மோடி அவர்களின் பேச்சு 6 பகுதியாக பிரிக்கப்பட்டுள்ளது. அவற்றின் சுட்டிகள் இதோ.
Narendra Modi's Speech at Chennai - Part 1
Narendra Modi's Speech at Chennai - Part 2
Narendra Modi's Speech at Chennai - Part 3
Narendra Modi's Speech at Chennai - Part 4
Narendra Modi's Speech at Chennai - Part 5
Narendra Modi's Speech at Chennai - Part 6

இப்போது சோ அவர்கள் பேசியதும், அவர் தந்த பதில்களும் கீழே உள்ள 6 சுட்டிகளில் காணப்பெறலாம்.

Thuglak Anniversary Part-1
Thuglak Anniversary Part-2
Thuglak Anniversary Part-3
Thuglak Anniversary Part-4
Thuglak Anniversary Part-5
Thuglak Anniversary Part-6

மாமனிதர்கள் சோ மற்றும மோடி அவர்களின் விசிறி இந்த டோண்டு ராகவன் என்று கூறிக்கொள்வதில் பெருமைப்படுகிறேன். சுட்டிகளை எனக்களித்த கே.கே. அவர்களுக்கும் நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

2/18/2008

The great Indian novel - 2

முதல் பகுதி

இந்த நவீனத்தை பற்றி மேலே பேசும் முன்னால் மகாபாரதத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட பல கதைகளை பற்றி பேசலாம் என நினைக்கிறேன். மகாபாரதத்தில் இல்லாத விஷயமே கிடையாது என்று கூறுவதை பலரும் அறியும்போது நம்ம திரையுலகக்காரர்கள் மட்டும் அறிய மாட்டார்களா என்ன?

ஞாபகத்திலிருந்து கூறுகிறேன். எழுபதுகளில் காளி என்ற படம் வந்தது. ரஜனிகாந்த் மற்றும் விஜயகுமார் நடித்தது. துரியோதனன் மற்றும் கர்ணனின் நட்பை ஒரு கதை முடிச்சாக எடுத்து கொண்டு தயாரிக்கப்பட்ட படம் இது. விஜயகுமார் கர்ணன் ரோலிலும் ரஜனிகாந்த் துரியோதனன் ரோலிலும் நடித்த படம் இது. பலருக்கு இப்படத்தின் பெயர் கூட நினைவிலிருக்காது. ஆனால் அதன் ரீமேக் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அதுதான் தளபதி. இதில் ரஜனிகாந்துக்கு கர்ணனாக பிரமோஷன், துரியோதனன் ரோலில் மம்முட்டி. கர்ணன் குழந்தையாக இருக்கும்போது கூடையில் வைத்து நதியில் விடுவதற்கு பதிலாக, இதில் ஸ்ரீவித்யா கூட்ஸ் வண்டியில் வைத்து கோட்டை விடுகிறார். அருச்சனன் ரோலில் அரவிந்தசாமி. அதற்காக பாண்டு எங்கே திருதிராஷ்ட்ரன் எங்கே என்றெல்லாம் கேட்கக்கூடாது. கதையின் முடிச்சை மட்டுமே எடுத்து கொண்டனர்.

இம்மாதிரி பிள்ளை அன்னை தந்தையை பிரிந்து வரும் பல படங்களையும் பார்த்தால் இங்கிருந்துதான் கதை முடிச்சை எடுத்திருப்பார்கள். இன்னொரு உதாரணம் பாவ மன்னிப்பு. சிவாஜிதான் கர்ணன். (அதே சிவாஜி நிஜமாகவே கர்ணனாக நடித்தது இந்த ஆட்டையில் வராது. நான் குறிப்பிடுவது மகாபாரதத்திலிருந்து இன்ஸ்பைர் ஆகி வரும் பெரும்பாலான சமூகக் கதைகளே, நேரடியான மகாபாரதம் திரைக்கதையாக அல்ல. அதற்கு உதாரணங்கள் கர்ணன், வீர அபிமன்யு, மாயா பஜார் ஆகியவை)

மகாபாரதத்தின் பல நிகழ்ச்சிகளை தொகுத்து ஒரு சமூகக் கதையாக எடுக்கப்பட்ட படம்தான் கல்யுக் என்னும் ஹிந்தி படம். அதில் இரு குடும்பங்கள், சித்தப்பா/பெரியப்பா பிள்ளைகள் ஒருவருக்கொருவர் பிசினஸ் போட்டிகள், என்ன, கௌரவர்களில் இருவர் மட்டும் வருகின்றனர், துரியோதனன் மற்றும் துச்சாசனன், பாண்டவர்கள் மூவர் மட்டுமே, தருமன், பீமன், அர்ஜுனன் ஆகியோர் மட்டுமே. கிருஷ்ணர் சித்தப்பாவாக வருகிறார். கர்ணனாக சஷிகபூர் (அப்படத்தின் தயாரிப்பாளர்). மேலும் பல பாத்திரங்களை துல்லியமாக அடையாளம் காட்ட இயலுகிறது.

திரைக்கதாசிரியர்கள் மட்டும் ஏன்? நான்கூட ஒரு பதிவை மகாபாரதத்தின் ஒரு நிகழ்ச்சியை வைத்து எழுதியுள்ளேன். :))))
அப்படியே ராமாயணத்தை வைத்தும் ஒரு பதிவு போட்டுள்ளேன் என்பதையும் சைக்கிள் கேப்பில் கூறிவைக்கிறேன்.

அதாவது மகாபாரதம் பலருக்கு உதவியாக உள்ளது. என்ன இருந்தாலும் அது ஒரு காப்பியம் அல்லவா. இம்மாதிரி ஒரு தேசத்தின் காப்பியம் அந்த தேசத்தின் வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே ஆகிவிடுவதை பல முறை பார்க்க இயலும். உதாரணத்துக்கு எங்கள் மொழிபெயர்ப்பாளர் தலைவாசலில் நான் இட்ட இந்த மன்றப்பதிவு நான் கூறியதை நிலைநாட்டுகிறது.

நம்மூரில் கூட பார்க்கிறோமே. கலகம் செய்பவனை சகுனி என்றும், செய்பவளை கூனி என்றும் கூறுகிறோம் அல்லவா. வள்ளல்களை 'அவரா, அவர் கர்ணமகாப்பிரபு' என்றும் கூட கூறுகிறோமே. வீடணனைப் பற்றி கேட்கவே வேண்டாம். காட்டிக் கொடுப்பவர்களை வீடணன் என்றே தவறாக அழைக்கின்றனர். இதில் சகுனி மேல் எனக்கு ஒரு சாஃப்ட் கார்னர் உண்டு. அதாவது பரீட்சை சமயத்தில் சும்மா பொழுதுபோகாமல் இந்த கேள்வி வரலாம் அந்த கேள்வி வரலாம் என்று மற்றவர்களை அக்காலக்கட்டத்தில் நான் குழப்பியதால் என் நண்பன் தேசிகன் எனக்கு சகுனி என்று பெயரிட்டு விட்டான். அது நிலைத்து நின்றுவிட்டது. :)))))

The great Indian novel பற்றி மீண்டும் அடுத்தப் பதிவில் பார்ப்போம். இப்போது அதை மறுபடியும் தீவிரமாக படித்து கொண்டிருக்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

2/17/2008

The great Indian novel - 1

சஷி தாரூர் அவர்கள் எழுதிய The great Indian novel என்னும் புத்தகத்தை பிரிட்டிஷ் கவுன்சில் நூலகத்திலிருந்து சமீபத்தில் 1993-ல் எடுத்து வந்தபோது அதை பற்றிய எதிர்ப்பார்ப்புகள் ஒன்றும் இல்லை என்பதுதான் நிஜம். அதே போல அதை படித்து முடித்ததிலிருந்து இன்று வரை அதை மறக்க முடியவில்லை என்பதும் நிஜமே.

The great Indian novel என்ற தலைப்பே மகாபாரதம் என்னும் சொல்லின் ஆங்கில மொழிபெயர்ப்பே. பாரதம் என்பது பாரதக்கதை என்ற பொருளில் உள்ளது. (இடவாகு பெயர் என்று இதை தமிழிலக்கணத்தில் குறிப்பார்கள். சிலப்பதிகாரத்தில் மதுரைக் காதையில் "கூடலூர் துயிலெழுப்ப" என்று வரும். அதாவது கூடலூராகிய மதுரை விழித்து கொண்டது என்று பொருள் கொள்ள வேண்டும் என்று சமீபத்தில் 1962-ல் எனது புதுக்கல்லூரியில் எங்கள் தமிழாசிரியர் அயூப் அவர்கள் குறிப்பிட்டு இதை இடவாகு பெயர் எனவும் குறிப்பிட்டார். நான் குறுக்கிட்டு அதையே இரு பெயரொட்டு பண்புத்தொகையாகவும் கூறலாம் என்பதை நிறுவி அவரிடம் சபாஷ் பெற்றதை தன்னடக்கம் கருதி இங்கு மேலும் விளக்காது விடுகிறேன்).

ஆக, எங்கு விட்டேன்? ஆம் The great Indian novel.

இந்த புத்தகம் நேற்று திருவல்லிக்கேணி கஸ்தூரி சீனிவாசன் நூலகத்தில் மறுபடியும் கிடைக்கப் பெற்றேன். இதைப் பற்றி ஓரிரு பதிவுகளாவது போட்டு எல்லோரையும் டரியல் ஆக்கிவிடுவது என்ற எண்ணத்தில் உள்ளேன்.

மகாபாரதத்தில் இல்லாதது வேறு எந்த நூலிலும் கிடையாது என்பது சிலரது துணிபு. உயர்வு நவிர்ச்சி அணியாக அதைக் கொண்டாலும், அதில் சற்று விஷயம் இருப்பதை மறுக்க இயலாது. அதே தன்மையைத்தான் சஷி தாரூரும் பயன்படுத்தி இந்த நவீனத்தை எழுதியுள்ளார். இந்திய சுதந்திர் போராட்டத்தை மகாபாரதத்தில் பொருத்தும் முயற்சியில் ஈடுபட்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளார். எனது நண்பர் ஆடுதுறை ரகு அவர்களது பெரியப்பா டி.பி.கிருஷ்ணமாச்சாரி அவர்களது் மாப்பிள்ளை வரதன் அவர்களிடம் இந்த புத்தகத்தை நான் மிகவும் உயர்வாகப் பேசி படிக்க வைத்தேன். இரண்டே நாட்களில் அவரிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. "என்ன டோண்டு இம்மாதிரி மகாபாரதத்துக்கு அபசாரம் செய்யும் புத்தகத்தை எனக்கு சிபாரிசு செய்யலாமா" என்று அழாக்குறையாகக் கேட்டார். சஷி தாரூரின் ஆங்கில நடைக்காகவே நான் அதை சிபாரிசு செய்ததாகக் கூற, நடை நன்றாகவே இருப்பதாகவும் ஆனாலும் மகாபாரதத்தை இம்மாதிரி இழிவுபடுத்தியது தனக்கு வருத்தத்தைத் தருவதாகவும் குறிப்பிட்டார். நான் அவரிடம் மன்னிப்பு கேட்டு கொண்டேன்.

பல இடங்களில் ஆங்கில மூலத்தை அப்படியே தரவேண்டியுள்ளது. முக்கியமாக வார்த்தை விளையாட்டுகளில் வேறு வழியே இல்லைதான். முடிந்த/தேவையான இடங்களில் அவற்றுக்கு சமமான தமிழ் வார்த்தை விளையாட்டுகள் தர எண்ணம் கொண்டுள்ளேன். போதுமான பின்புலன் கொடுத்து விட்டேன் என நினைக்கிறேன். ஆகவே இப்போது புத்தகத்துக்கு வருகிறேன்.

நாவலின் ஆரம்பத்தில் வேத வியாசர் வருகிறார் (கதையில் அவர் V.V.) என்று சுருக்கி அழைக்கப்படுகிறார். இந்த இடத்தில் அவர் ராஜாஜியை உருவகப்படுத்துகிறார் என நினைக்கிறேன்.
இதை நான் சொல்ல என்ன காரணம்? ஏனெனில் சஷி தார்ரூர் இந்த புத்தகத்தை எழுதுவதற்காக ராஜாஜி அவர்களால் எழுதப்பட்ட மகாபாரதத்தை மிகவும் ஆழ்ந்து படித்திருப்பதாகக் கூறியுள்ளார். வேறு காரணங்களும் உண்டு அவை பற்றி வேறு தருணத்தில் தேவையானால் கூறுவேன்.

சஷி தாரூரின் இப்புத்தகத்தின் முதல் சில வரிகளைப் பார்ப்போம்.

They tell me India is an underdeveloped country. They attend seminars, appear on television, even come to see me, creasing their eight-hundred rupee suits and clutching their briefcases, to announce in tones of infinite understanding that India has yet to develop.
முதல் வரியிலேயே கதை ஜிவ்வென்று பறக்க ஆரம்பிக்கிறது. இந்தியா முன்னேற்றமெல்லாம் அடைந்து பிறகு அதற்கப்புறம் வரும் தளர்வையும் அடைந்து விட்டது என வியாசர் கூறுவதை வந்தவர்களால் புரிந்து கொள்ள முடிந்ததில்லை. இது பற்றியெல்லாம் எழுத வேண்டும் என்ற ஆவலில் வியாசர் தன் நண்பர் பிரும்மாவிடம் இது பற்றி கூறி தான் சொல்வதை அப்படியே எழுதும் திறன் கொண்ட ஸ்டெனோகிராஃபர் வேண்டுமென்று கேட்க அவர் கணபதி என்னும் தென்னிந்திய ஸ்டெனோவை அனுப்ப, The great Indian novel பிறக்கிறது. மகாபாரதமாகத்தான் ஆரம்பிக்கிறது. ஆனாலும் அதில் உள்ள தெய்வீகத் தன்மைகள் இதில் காணவில்லை. சாதாரண வாசகர்களுக்கு வரும் சந்தேகங்களுக்கு தாராளமாக இடமளிக்கப்படுகிறது.

வியாசர் தனது கதையுடனேயே துவங்குகிறார். இவரது தந்தை தீர்த்த யாத்திரை செய்யும் முனிவர் பராசரர். தாய் சத்யவதி. செம்படவர் தலைவனின் மகள். அவளை பராசரர் தன்னுடன் உடல் உறவு கொள்ள அழைக்க அவள் முதலில் தயங்குகிறாள். வீட்டுக்கு வரும் பிராமண அதிதிக்கு சிசுருஷை செய்ய வீட்டு பெண்ணையே அனுப்பி அதில் அப்பெண் கர்ப்பமாவதையும் ஏற்கும் காலமதான் அது. (இது தவறு என்பது இக்கால நடைமுறைப்படி, ஆனால் அக்காலத்தில் அவ்வாறுதான் இருந்தது). ஆனால் சத்தியவதி விஷயத்தில் பராசரர் அவள் வீட்டுக்கு வரவில்லை, வழியிலேயே சத்யவதியைப் பார்த்து அழைக்கிறார். ஆகவே அவள் தயங்குகிறாள். அவள் மீண்டும் கன்னித்தன்மை பெறுவாள் என்பதை பராசரர் உறுதி செய்ய, அவளும் உடன்படுகிறாள். அதனால் பிறந்தவரே வேத வியாசர். பிறகு சத்தியவதி சந்தனுவை மணந்து, கதை வேறு திசையில் பயணிக்கிறது.

சந்தனு சத்தியவதியை பெண் கேட்க, அவள் தந்தை அதற்கு விலையாக அவளுக்கு பிறக்கும் குழந்தையே அரசனாக வேண்டும் என்று கேட்க, தனது மகன் தேவவிரதன் இருக்கும்போது அது செய்ய இயலாது போக, தேவவிரதன் பிரும்மச்சரியத்தை ஏற்று பீஷ்மனாக உருவாதல் எல்லாம் எல்லோருக்கும் தெரிந்ததே. இப்போது சஷி தாரூர் பீஷ்மராக யாரை குறிப்பிடுகிறார் என்று பார்ப்பது சுவாரசியமாக இருக்கும்.

இந்த சந்தனு சஷி தாரூரின் கதையில் பிரிட்டிஷ் இந்தியாவின் ஒரு சமஸ்தான அதிபதியாக வருகிறார். தனது அரண்மணைக்கு திரும்பி வந்த சந்தனு சோகத்துடன் இருக்க தேவவிரதன் (கதையில் அவர் பெயர் கங்கா தத்தா) தந்தையுடன் கூட சென்றவர்களிடமிருந்து விசாரித்து விஷயமறிந்து கொண்டு சத்தியவதியின் இடத்துக்கே செல்கிறார்.

இது விஷயமாக சஷி தாரூர் எழுதியதின் நேரடி மொழிபெயர்ப்பை இங்கே தருகிறேன்.

"கங்கா தத்தாவும் தனியாக பயணிக்கவில்லை. பிற்காலத்தில் அவர் எப்போதும் அகிம்சைவாதிகள் சூழ இருப்பார். ரயிலில் மூன்றாம் வகுப்பில்தான் பயணம் செய்வார். அவருடன் கூட அவருக்காக சௌகரியங்களை தியாகம் செய்த மேட்டுக்குடியினர்தான் செல்வார்கள். வியர்வை நாற்றம் கொண்ட ஏழைகள் அல்ல. ஆனால் இக்கதை நடக்கும் காலத்தில் அவர் மந்திரிகள் புடைசூழ செல்கிறார். எது எப்படியானாலும் அவருக்கு கூட்டம் என்றால் பிடிக்கும். பிற்காலத்தில் இறக்கப் போவதும் ஒரு கூட்டத்தின் முன்னிலையில்தான்".

இப்போது தெரிகிறதா, சஷி தாரூர் பீஷமராக யாரைக் கூறுகிறார் என்று? ஆம், மகாத்மா காந்திதான் அது.

என்ன, மகாபாரதத்தில் பிரிட்டிஷ் அரசு வரவில்லை. ஆனால் இந்த The great Indian novel-ல் அவர்களும் வருகின்றனர். கதையும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை பயணிக்கிறது.

அடுத்து வரும் பகுதிகள் பின்னால் வரப்போகும் பதிவுகளில். அவற்றில் யாரை யாராக இந்த நாவலில் உருவகப்படுதுகிறார்கள் என்பதைப் பார்க்கலாம். அதற்கு முன்னால் மீண்டும் ஒரு முறை இந்த நாவலைப் படிக்க வேண்டும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

2/14/2008

நண்பர்களுக்கு நன்றி - 2

நண்பர்களுக்கு நன்றி - 1

இந்தப் பதிவை ஆரம்பிக்கும் நேரம் (14.02.2008, மணி 16.08 hrs IST) ஹிட் கவுண்டர் 199,756 காண்பிக்கிறது. இரண்டு லட்சம் எண்ணிக்கைக்கான கவுண்ட் டவுனை ஆரம்பிக்கிறேன். ஒரு லட்சம் வந்த நேரம் 19.12.2006, 20.45hrs. IST. ஹிட் கவுண்டர் பிப்ரவரியில் சில நாட்கள் செயல்பாட்டில் இல்லை, ஏனெனில் பிளாக்கரின் பீட்டாவுக்கு மாறியதில் அதை அங்கு எடுத்து போக தெரியவில்லை. நண்பர் மா.சிவகுமார் அவர்களது உதவியோடு அதை மறுபடியும் நிறுவினேன். ஆக, இப்போதைக்கு ஏற்கனவே இரண்டு லட்சம் தாண்டியிருக்க வேண்டும். இருந்தாலும் நான் அதை கணக்கில் எடுக்கவில்லை. ஒரு லட்சத்துக்கும் இரண்டு லட்சத்துக்கும் இடையில் 14 மாதங்களுக்கும் குறைவாகவே எடுத்து கொள்ளப்பட்டுள்ளது.

இந்த கவுண்டரின் விசேஷம் என்னவென்றால், நான் லாக்-இன் செய்து பார்ப்பதெல்லாம் கணக்கில் ஏற்றப்படாது. இந்த ஆதரவுக்காக நான் எனது நலம் விரும்பிகளுக்கும் மற்றவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.

முரளி மனோஹர், ஆரவாரப்பேய்கள் ஆகியோர் உபயத்தால் சில நாட்கள் தினசரி ஆயிரத்துக்கும் மேல் ஹிட்கள் இருந்தன.

போன தடவை போல இல்லாமல் சற்று முன்பே இப்பதிவை போட்டு விட்டேன். நாளை 2 லட்சம் தாண்டும் என நினைக்கிறேன். ஆகவே இப்பதிவையும் இப்போதே வெளியிடுகிறேன். இப்போது 16.23 மணிக்கு (இந்திய நேரம்) ஹிட்கள் 1,99,766.

10, 9, 8, 7, 6, .......

அன்புடன்,
டோண்டு ராகவன்

அன்புள்ள மான்விழியே, ஆசையில் ஓர் கடிதம்

ஆங்கிலத் தட்டச்சு பயிலும்போது ஒரு வாக்கியம் சாதாரணமாக வரும். அது: The quick brown fox jumps on the lazy sleeping dog.

அதுபோல நான் தமிழில் தட்டச்சு செய்ய ஒவ்வொரு முறையும் தரவிறக்கம் செய்யும்ப்போது அடிக்கும் வாக்கியம்: "அன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம், நான் எழுதுவதென்னவென்றால் உயிர்க் காதலில் ஓர் கவிதை". ஆனால் இப்பதிவு அதைப் பற்றியல்ல.

சமீபத்தில் 1965-ல் வந்த "குழந்தையும் தெய்வமும்" படத்தில் வந்த இந்தப் பாட்டு சந்தோஷ மனநிலையில் பாடப்பட்டது. அதே பாட்டு சற்றே மாறிய வரிகளுடன் சோகமான மனநிலையில் "அன்புள்ள மன்னவனே ஆசையில் ஓர் கடிதம் அதைக் கைகளில் எழுதவில்லை கண்ணீரில் எழுதி வந்தேன்" மெதுவான வேகத்தில் வரும். அக்காலக் கட்டங்களில் இம்மாதிரி இரட்டைப் பாட்டுக்கள் மிக பிரசித்தம்.

உதாரணத்துக்கு "அன்று வந்தது அதே நிலா", "பார்த்த ஞாபகம் இல்லையோ" "உன்னைக்கண்டு நான் ஆட/வாட, என்னைக்கண்டு நீ ஆட/வாட" என்றெல்லாம் இரு டெம்போக்களிலும் பாடல்கள் வரும். எனது இப்பதிவு அம்மாதிரி பாடல்களைப் பற்றித்தான்.

இந்த பாடல் ஜோடிகளில் என் மனதைக் கொள்ளை கொள்வது சோகமாக மினிமம் வாத்தியங்களுடன் வரும் அடிகளே. "உலகம் பிறந்தது எனக்காக" என எம்ஜிஆர் பாசம் படத்தில் முதலில் தன்னம்பிக்கையுடன் பாடுகிறார், கடைசி காட்சியில் அவரும் சரோஜாதேவியும் இறந்த பின்னர் கடைசி காட்சியில் அதே வரிகள் வெறும் குரலில் வந்தபோது என் கண்களில் கண்ணீர் என்னையறியாமலேயே பெருகும்.

சோகப் பாடல்கள் மனதில் நிலைத்து நிற்கும் காரணமே முக்கியமாக அவை ஒரு நம்பிக்கையற்ற சூழ்நிலையை உருவகப்படுத்துவதேயாகும். பாத்திரங்களின் கஷ்டங்களை நாமும் உணர்கிறோம். அவர்களுக்கு நம்மால் உதவ முடியவில்லையே என மனம் குமைகிறோம். அதே சமயம் சில இடங்களில் அம்மாதிரி மெதுவான வேகத்தில் வரும் வெர்ஷன் நம்பிக்கையையும் வரவழைக்கிறது. உதாரணத்துக்கு சமீபத்தில் 1964-ல் வந்த ஆண்டவன் கட்டளை என்னும் படத்தில் வரும் "அமைதியான நதியினிலே ஓடும், ஓடம் அழகில்லாத வெள்ளம் வந்தால் வாடும்" என்னும் பாடலையே எடுத்து கொள்வோம். அதன் மெதுவான வெர்ஷனில் "தென்னை இளம் கீற்றினிலே" என்ற வரியுடன் ஆரம்பிக்கும். சிவாஜி அதை பாட, அதுவரை தான் யார் என்பதை மறந்த நிலையில் இருந்த தேவிகாவுக்கு மெல்ல நினைவு திரும்புகிறது. பிறகு அவரும் திக்கும் குரலோடு இப்பாடலில் சேர்கிறார். மிகவும் அழகான படமாக்கம். கதையின் முக்கியமான நம்பிக்கை தரும் திருப்பத்தைத் தருகிறது இப்பாடல்.

இந்த இரண்டு வெர்ஷன்களையுமே பார்ப்போமா?

முதலில் சந்தோஷ சூழ்நிலையில் பாடும் பாடல்:

டி.எம்.எஸ்: அமைதியான நதியினிலே ஓடும்
ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
அமைதியான நதியினிலே ஓடும்
ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
காற்றினிலும் மழையினிலும் கலங்க வைக்கும் இடியினிலும்
காற்றினிலும் மழையினிலும் கலங்க வைக்கும் இடியினிலும்
கரையினிலே ஒதுங்கி நின்றால் வாழும்
ஹோய் ஹோய்..
அமைதியான நதியினிலே ஓடும்
ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்

தென்னை இளம்கீற்றினிலே ஏ ஏ..ஏ ஏ...
தென்னை இளம்கீற்றினிலே
தாலாட்டும் தென்றலது
தென்னை இளம்கீற்றினிலே
தாலாட்டும் தென்றலது
தென்னை தனை சாய்த்து விடும்
புயலாக வரும் பொழுது
தென்னை தனை சாய்த்து விடும்
புயலாக வரும் பொழுது

அமைதியான நதியினிலே ஓடும்
ஓடம் அளவில்லாத
வெள்ளம் வந்தால் ஆடும்

ஆற்றங்கரை மேட்டினிலே
ஆடி நிற்கும் நாணலது
ஆற்றங்கரை மேட்டினிலே
ஆடி நிற்கும் நாணலது
காற்றடித்தால் சாய்வதில்லை
கனிந்த மனம் வீழ்வதில்லை
காற்றடித்தால் சாய்வதில்லை
கனிந்த மனம் வீழ்வதில்லை

டி.எம்.எஸ்: அமைதியான நதியினிலே ஓடும்
சுசீலா: ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ
டி.எம்.எஸ்: ஓடம் அளவில்லாத
வெள்ளம் வந்தால் ஆடும்
அமைதியான நதியினிலே ஓடும்
ஓடம் அளவில்லாத
வெள்ளம் வந்தால் ஆடும்

சுசீலா: நாணலிலே காலெடுத்து
நடந்து வந்த பெண்மை இது
நாணலிலே காலெடுத்து நடந்து வ்
அந்த பெண்மை இது
நாணமென்னும் தென்றலிலே தொட்டில்
கட்டும் மென்மை இது
நாணமென்னும் தென்றலிலே தொட்டில்
கட்டும் மென்மை இது

அமைதியான நதியினிலே ஓடும்
ஓடம் அளவில்லாத
வெள்ளம் வந்தால் ஆடும்

அந்தியில் மயங்கி சிடும்
காலையில் செழித்து விடும்
அந்தியில் மயங்கி சிடும்
காலையில் செழித்து விடும்
அன்பு மொழி கேட்டு விட்டால்
துன்ப நிலை மாறி விடும்
அன்பு மொழி கேட்டு விட்டால்
துன்ப நிலை மாறி விடும்

இருவரும்: அமைதியான நதியினிலே ஓடும்
ஓடம் அளவில்லாத
வெள்ளம் வந்தால் ஆடும்
காற்றினிலும் மழையினிலும்
கலங்க வைக்கும் இடியினிலும்
கரையினிலே ஒதுங்கி நின்றால் வாழும்
ஹோய் ஹோய்
அமைதியான நதியினிலே ஓடும்
ஓடம் அளவில்லாத
வெள்ளம் வந்தால் ஆடும்
சுசீலா: ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ
இப்பாடல் காட்சியை பார்க்க இங்கே சுட்டவும்.
ஆடியோவில் கேட்க நண்பர் ஞானவெட்டியான் அவர்களது இப்பதிவை சுட்டவும்.

இப்போது சோகமான வெர்ஷன்:
அதன் வரிகள் காணக்கிடைக்கவில்லை. என்றென்றும் அன்புடன் பாலா, ரோசா வசந்த் ஆகிய நண்பர்களை கேட்டால் தெரியும். அதே சமயம் இந்த வெர்ஷனை ஆடியோவில் கேட்க மீண்டும் உதவுகிறார் நண்பர் ஞானவெட்டியான் அவர்கள். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. இங்கே சுட்டவும். இதன் யூ ட்யூப் வெர்ஷனும் கிடைக்கவில்லை. பரவாயில்லை. அதுவும் நல்லதுக்குத்தான் என வைத்து கொள்ளலாம். கவியரசு கண்ணதாசனின் உள்ளம் கொள்ளை கொள்ளும் வரிகளை தடையின்றி உள்வாங்கலாமே. டி.எம்.எஸ். மற்றும் சுசீலாவின் குரல்களையும்தான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

2/06/2008

நீலக்கடலில் கருமையான சுனாமி அலைகள்

ஜெயா டிவியில் வந்த எனது பேட்டியின் வீடியோவை வலையில் ஏற்றிய அனுபவம் இங்கு குறிப்பிடும் சுனாமி பற்றிய டாகுமெண்டரியை வலையேற்றவும் உதவி செய்தது.

சுனாமியை பற்றிய இந்த டாகுமெண்டரி முதலில் பொதிகையில் தமிழில் வந்தது. தமிழில் ஸ்க்ரிப்ட் கொடுத்தது எழிலன் அவர்கள். அதன் ஆங்கில மொழி பெயர்ப்பு வேலை எனக்குக் கொடுக்கப்பட்டது. அதை கொடுத்த அதிகாரி என்னிடம் தெளிவாகவே தனது தேவையை கூறினார். எழிலன் அவர்களது ஸ்க்ரிப்ட் கவித்துவமாக வந்தது. ஆங்கிலத்திலும் அதே பாணியில் தர வேண்டும் என்பதே அவர் என்னிடம் கூறியது.

அவ்வாறு நான் தந்த ஆங்கில மொழிபெயர்ப்பை பி.சி. ராமகிருஷ்ணா அவர்கள் தனது கம்பீரமான குரலில் படிக்க, அது 13-03-2005 ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணிக்கு தூர்தர்ஷன் நேஷனல் சேனலில் ஒளி பரப்பப்பட்டது.

இது சம்பந்தமாக நான் பிப்ரவரி 16-ஆம் தேதி சில கடல் காற்றுகளைப் பற்றி வெளியிட்ட பதிவுக்கான பின்னூட்டங்களுக்கு நன்றி கூறுகிறேன்.

எனது ஆங்கில ஸ்க்ரிப்டை ராமக்ரிஷ்ணா அவர்கள் படிப்பதை படபிடிப்பு செய்தபோது என்னையும் கூட ஒத்தாசைக்கு கூப்பிட்டிருந்தார்கள், அதாவது தேவையானால் ஸ்க்ரிப்டில் படிக்கும் வேகத்துக்கேற்ப மாற்றங்கள் செய்யும் பொருட்ட. ஆனல் அதற்கு தேவையே ஏற்படவில்லை. ராமக்ரிஷணா அவர்கள் ஒரு பென்சிலை எடுத்து கொண்டார். விறுவிறு என்று வார்த்தைகளை மார்க் செய்ய ஆரம்பித்தார். அதாவது எங்கு இடைவெளி கொடுப்பது என்பதற்கான குறியீடுகளாம் அவை. ஒரு முறை வேகமாக மனதில் படித்து கொண்டு விட்டு, ரெடி ஸ்டார்ட் என்றார். ரிகார்டிங் தொடங்கியது. முழுக்க படித்த பிறகே நிறுத்தினார். தயாரிப்பாளர் ஓரிரு இடங்களை திரும்ப படிக்கச் சொல்ல அதையும் தயக்கமின்றி செய்தார். அவ்வளவுதான். வேலை முடிந்தது. வீட்டுக்கு திரும்பும்போது எனக்கும் லிஃப்ட் கொடுத்தார்.

நான் எழுதிய சொற்கள்தான் என்றாலும் அதை அவர் தெளிவாக படிக்கும்போது அவற்றின் வீச்சு எனக்கு இன்னும் தெளிவாக புலப்பட்டது.

இப்போது இதே வீடியோவை மூன்றாக பிரித்துள்ளேன். அவற்றை பார்த்து விட்டு சொல்லுங்கள். முழு ஸ்க்ரிப்டையும் கீழே கொடுத்துள்ளேன். பார்க்க/கேட்க இங்கே சுட்டவும்.

ஒவ்வொன்றாக பார்க்க:

முதல் பகுதி




இரண்டாம் பகுதி




மூன்றாம் பகுதி

 

இந்த வீடியோ பகுதிகளைப் பார்க்கும்போது முதலில் விட்டு விட்டு வரும். கணினிக்கு கோப்பு இறங்கி அது பிராட்காஸ்ட் செய்யப்படுகிறது. இது ஒரே நேரத்தில் அரக்க பரக்க நடப்பதால் இந்த சிக்கல். ஆகவே ஒன்று செய்யுங்கள். எனது சுட்டியை ஒரு தனி ஜன்னலில் திறக்குமாறு செய்யவும் (right click + open in new window or shift+left click simultaneously). ப்ளே போட்டு ஒரு வினாடி கழித்து pause பட்டனை க்ளிக்கவும். பிறகு சற்று நேரத்துக்கு ஜன்னலை மினிமைஸ் செய்து விட்டு வேறு பக்கங்களைப் பார்க்கவும். சில நிமிடங்கள் கழித்து இந்த ஜன்னலுக்கு திரும்ப வந்தால். கணிசமான அளவு டௌன்லோட் ஆகியிருக்கும். அப்போது ப்ளே பட்டனை அழுத்தினால் விடாது பார்க்கலாம்/கேட்கலாம். அதே போல மூன்று பாகங்களுக்கும் செய்யவும்.

முழு ஆங்கில ஸ்க்ரிப்டும் கீழே தரப்பட்டுள்ளது. தமிழில் எழிலன் அவர்கள் கவித்துவமாக எழுதியது போல ஆங்கிலத்திலும் அப்படியே வெளிவந்துள்ளதா என்று பாருங்கள். தமிழ் ஸ்க்ரிப்டை எங்கோ வைத்து விட்டேன். இல்லாவிட்டால் அதையும் தட்டச்சு செய்திருக்கலாம்.

ஆங்கில வெர்ஷனுக்கு இந்தியா முழுவதும் வரவேற்பு என கேள்விப்பட்டேன். ஏதோ அவார்டு கூட கொடுத்தார்களாம். அம்முயற்சியில் எனது பங்கும் இருப்பதில் மகிழ்ச்சியே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Black Tsunami waves in the blue sea
By M.A. Ezhilan
(Translated from Tamil into English by N.Raghavan)

Montage:
Lend me your ears, oh great sea! Your lips filled us with pearly smiles!

Hear me out, you Great Ocean! Blessed were we with the rain of your kindness!

The tasty fish from your vast expanse took the pride of place on our tables!

Evenings passed with your vast beaches dotted with crabs serving as cricket fields for our bouncing children!

Nights raced into mornings, with your waves acting as a cradle full of lullabies for the weary multitudes!

During fullmoon nights, your sandy dunes formed vast beds for the lovers in bliss!

Your waves full of foams filled our salt fields with the salt of life!

Your pearly white waves dancing on our shores shaped us into poets, driving away worries from our hearts!

Your pearls harvested from Tuticorin were among the treasures exported to the old Roman Empire!

You are a flower garden for the fishes; the long tresses of your sandy beaches add to the glory of our Bharat Mata!

Did you not serve as a gateway for the visits of foreign guests to our shores?

You were a silent Chanakya for all our social, economic and cultural transformations!

In the days long gone by, you swallowed the great land of Kapaadapuraa, which nurtured the Tamil language, comprising of her three noble elements, namely prose/poetry, music and drama!

You buried Pumbuhaar into the sea; swallowed up slowly but steadily the paradise of sculptures, our beloved Mamallapuram of the seven temples' fame!

Earlier, 49 countries along the Pacific Rim fell prey to your destructive Tsunami waves!

Around the midnight of the 22nd December 1964, you wiped out Dhanushkodi along with a train full of people, killing innocent lives in the bargain!

Oh my, how bloodthirsty you have become!

"The sea is our factory, the boats our offices" This formed the leitmotif of our fishermen, who considered themselves as your favoured children and look what happened to them on this black day, the 26th of December 2004!

The lighthouse sits there helplessly, unable to throw a light on your deeds!


What happened on that day?

Interview with Raththinam, a fisherman in Nagappattinam:
It was around 9 AM. We were sitting on a log, talking to one another. There were about 500 persons around us. All of a sudden, we witnessed some four or five successive rows of waves racing towards the shore. They were huge and tall. Shouting "run, run", we climbed up the Matha Ice factory nearby. There were some 15 ladies and gents with us. People caught up in water shouted for help, weeping and begging us to save them...
We tried throwing down a rope to them. However, nobody could catch it. Waves were attacking ferociously. Boats were thrown helter-skelter on the bridge. We could do nothing. We were desperate and praying to God. We were scared. After 10 minutes, the water receded. We went down and saw. There were dead bodies galore. We could do nothing...!

Voice:
Our eyes shed waves of tears, seeing the devastated port of Nagappattinam.
The shattered boats sob out the stories of broken hearts, relating the heart-rending events of that black day!

Were the destructions limited to Nagappattinam alone?
Nay, not even the victorious Velankanni could escape this fate.

When the huge Tsunami waves hit this beautiful house in front of this beach, two of its inhabitants saved themselves by desperately holding on to a ceiling fan. A few words spoken by the relatives:

Interview:
"On that day, when the "jet black" Tsunami waves attacked, both my father and the son of my younger brother were killed. He and his wife were able to hold on to the ceiling fan and to save their lives. My mother, who at that time was near the door, is missing. We did not see her afterwards. She is still missing."

Because the waves came just upto the gates of Velankanni temple and went back, there is no loss of life or damage to property within the temple premises. The temple continues to stand defiantly!

Here is a scene unfolding as witnessed by a cleaning worker.

Interview with the cleaning personnel:
"As I came here to clean up, I saw dead bodies wherever I looked."
We pushed them into three pits and buried them. Then it became difficult to lift them up. We poured petrol on them and burnt them wherever they were. Near this place, there is the Upparu stream. In Akkaraippeettai, there are three streets. All of them vanished. The population here was around 5000. Not even one family survived."

Voice: An information centre is being run at Velankanni for locating the missing persons.

Interview with an Inspector:
"The persons missing from here include also the people from the various states, foreigners, tourists.

We keep here their photos. If their relatives come here and identify them, we promptly do the needful to provide them relief."
"Now this is being done in Nagappattinam too.
We provide information through the Internet as well. Until now, we have helped 30 persons in this manner.
As a follow up, we give Rs. 100,000 to the relatives of the dead. These photos will be referred to and the needful done for providing death certificate from the Panchayath office as well as relief.

Voice:
The anguish of the people weeping on seeing the photos of the dead is heart-rending.
The distressed voice of a mother, who lost her child:

Interview of an old woman:
"She was a doll-like girl. We lost this doll. We are not much bothered about the loss of home and property. If only she had lived ..., we would not be starving...She would have worked and looked after us."

Voice:
The relief teams organized by the Government look after the welfare measures, listen to people's complaints and do the needful for setting things right.

Interview with Dr. Saroja, Chief of TADCO:
As for the other reliefs, we provide 60 kgs of rice, Rs. 4,000/, 2 bedspreads, one dhoti, and one sari. Immediate relief: The Velankanni Panchayat Office bank officials promptly deposit the relief cheque in the direct presence of the affected party, who is then given the passbook.

Voice:
The Salvation Army is engaged in distributing food in Kallaru village. Immediate needs are:
Food, clothes, place to live, a new life, employment opportunities!

Government and voluntary agencies outdo one another in their noble quest for providing succour towards rejuvenated life. It is a great scene to behold! It shows a high in human compassion!
When the giant Tsunami overran the fishing village of Kallaaru, it surprised a group of college students playing on the beach. A shocked account of the unfolding event coming from one among them:
Interview with a college student:
1. Water was bubbling up and down in the nearby pond. We saw it with amazement.
2. This lasted for about 15 to 30 minutes.
3. It was around 9 to 9=15 AM. The sun was blazing. The cawing of the crows sounded differently. Then there was a breeze with a distinct tone. As we were staring without comprehension, there was a big wave, sweeping away everything in its way. Look, there was a road here connecting to Nagappattinam. It is totally gone. Now there is nothing. We just ran away. Many people lost their lives. Many a small child, adult, they all died.

Voice:
Mother Nature does not do anything without adequate warning.
Before the rains, come lightning and thunder, giving sufficient notice to people and animals alike.
Even the raging sea gives signs of her fury. Nobody took cognizance of these signals. This was touched upon in an interview with one of the natural scientists of the sea, namely fishermen:

Interview with Chandran, a fisherman:
"We are indeed scientists albeit without formal education. We observe the sea and get to know about storms in the making. Before a storm, the foams roll up into balls, this is not so at normal times. This signals a storm that is coming your way!

While fishing, we see at times that the waves are differently shaped. When the sea becomes rougher, we know that it is time to go ashore.

Before venturing out on the catamaran, we insert a stick on the seashore. At times of impending storm, the stick will pass into the sand with ease, because of its sogginess. At normal times, it will not go into the sand so easily. The sand will then be firmer! It will be difficult to pull out an inserted stick.

We give different names to the diverse breezes such as Kondakkaththu (கொண்டக்காத்து), Kodakkaththu (கோடைக்காத்து), Kachchavkaaththu (கச்சாவ்காத்து), Vadakkaththu (வாடைக்காத்து), Vadakondakkaaththu (வாடைகொண்டைக்காத்து)etc.

We have given these names to them. There is a pattern in all these things. When there are certain changes perceived by us, we realize that it is time we went ashore. However, this Tsunami wave was unprecedented.

Interview: Visvalingam:
At around 8=45 AM the wave came shooting down the beach like a bullet speeding from the gun.... Nevertheless, prior to that, the sea was quite calm, just ordinary looking.... We were here... It was not a big sea...As the wave came, we all ran away. After 5 or 10 minutes, the sea withdrew.

People, who had run away from home, came back to collect their things. At that time, another wave came in and carried off 80-90 persons, including one of my younger brothers.
Voice:
Boats are not the only ones that have been overturned. Tsunami waves turned entire lives topsy-turvy. The fishing activities along with their ancillary industries, hundreds of families dependent on the marketing of fish and their aspirations have all been torn asunder by the cruel Tsunami waves....

A fisherwoman, belonging to Singarathoppu village in Cuddalore District, who was swept off by a giant wave and then rescued in an unconscious state, is narrating her miraculous escape:

Fisherwoman:
"My brother's mother-in-law climbed up a coconut tree, as the water came rushing. Five of us were caught up in the sea and were shouting for help...Boys hailing from our village rescued us. There was not a stitch of clothing on our bodies. The waves had carried them off. The bridge out there helped us a lot. We should be grateful that it was there. Without that, things could have been worse. All the people in our three villages would have lost their lives. We climbed up the bridge and saved ourselves."

Fearing a renewed Tsunami attack, an entire fishing village refuses to spend the nights at home. The entire village is shifting to high ground for sleeping. Some snippets of information from these people:

Interview:
1. There was a rumour to the effect that the sea is swelling again. Hence, yesterday afternoon many persons ran away. The rumour turned out to be unfounded. Then we all came back. Nevertheless, this fear makes them to vacate the village during nights.

Interview with Muththu of Akkarappettai:
When even a small child floats a rumour, we have to give credence to it.... We are unable to dismiss it as just a rumour. We put up a brave face but the heart is full of confusion. Whenever there is an impending storm, a warning light will be placed atop the hill in the "Storm Warning Centre". There was no such warning on that day at all.

Voice:
Tsunami's speed is around 800 kmph. We are now seeing a 350-tonne boat, which the Tsunami wave tossed away...
Waves coming up like heads of cobras have created havoc with the levels on the ground. A Poclain earth excavator is busy undoing the damages wrought by the sea!

Fleeing the Tsunami, this boat has crash-landed in the Nagore railway station. We are now face to face with the real fury of the Tsunami. Our hearts are full of amazement!

The fishermen hamlets in the harbour area of Nagore have been affected. Here too the rehabilitation work is in full swing.

A few samples of the emotional outbursts from the hearts of the fishermen in the hamlet of Nagore Pattinancheri:

Interview:
Fishing is the only activity we know. We do not know anything else. As to the question of resuming our venture into the sea, we have lost everything. All kinds of nets, boats, catamarans ... everything is gone.
Thadachi valai weighs 200 kgs and costs around Rs. 100,000/. This amount is indispensable for spinning and assembling that net. It represents our prime property.
We require Rs. 30,000/ for a boat engine. For a fibreglass boat we require Rs. 87,000/. We lost five catamarans, our 7 HP engine, in short everything. We are now literally on the street.

Voice:
We cast nets to catch fish. The sea on the other hand, sent in her waves to cart us away.
The blue sea with her ever-changing face has transformed herself with her black Tsunami waves, into a sea of sorrow, a mysterious sea of fear and a sea of agony.

We shall convert this destructive energy into a constructive one by taking recourse to science, ever resurging thoughts of the humankind.

We sincerely hope that in future, science will provide us with reliable guidelines.

2/05/2008

இன்று புது டோண்டுவுக்கு வயது ஆறு

நான் சமீபத்தில் 1951-ல் சிறுவனாக இருந்தபோது விஷமம் செய்யும்போதெல்லாம் என் அன்னை என்னை கடையில் கொடுத்துவிட்டு வேறொரு புது டோண்டுவை வாங்கப் போவதாகக் கூறுவார். நானும் அதற்கு பயந்து கொண்டு கொஞ்ச நாளைக்கு சமத்தாக இருப்பேன். அந்தக் கதை ஏன் இப்போது ஞாபகத்துக்கு வரவேண்டும்? அதை கூறத்தான் இப்பதிவு.

2001-ஜூலையில் டில்லியிலிருந்து நிரந்தரமாக சென்னைக்கு குடிபுகுந்தபோது எனக்கு கணினி பற்றிய அறிவு பூஜ்யமே. நான் கையால் எழுதித்தரும் மொழிபெயர்ப்புகளை ஏஜன்ஸியின் தட்டச்சுக்காரர்கள் தட்டச்சு செய்து கொடுக்க அவற்றை பிழைதிருத்துவதுடன் என் வேலை முடிந்து விடும். சென்னை வந்த பிறகும் அதே கதைதான் தொடர்ந்தது, ஒரே ஒரு சிறு மாற்றத்துடன். மின்னஞ்சல் முகவரி எடுத்து, டில்லியிலிருந்து வாடிக்கையாளர் கோப்புகளை மின்னஞ்சல்களுடன் இணைப்பாக அனுப்ப அதை இங்கு தரவிறக்கம் செய்வித்து, காகிதங்களில் அச்சிடச்செய்து, அவற்றின் மொழிபெயர்ப்பை கைகளால் எழுதி, மறுபடியும் தட்டச்சு செய்வித்து என்றெல்லாம் காலம் கடந்ததை பற்றி இப்பதிவில் போட்டுள்ளேன்.

எல்லா விஷயங்களும் ஒரு நாளைக்கு முடிவுக்கு வரத்தானே வேண்டும். எனக்காக தட்டச்சு செய்த அந்த இரு இளைஞர்களும் தத்தம் வேலைகளில் ரொம்பவுமே பிசியாகிப் போனதில் எனது மொழிபெயர்ப்பு வேலைகள் சற்றே பாதிக்கப்பட்டன. சரி என்னதான் ஆகிறது என்பதைப் பார்த்து விடலாமே என்று எனது கணினிகுரு முகுந்தனின் துணையோடு நானே கம்ப்யூட்டர் வாங்கி, வி.எஸ்.என்.எல்.-ன தொலைபேசி வழி இணைய இணைப்பைப் பெற்றேன். எலிக்குட்டியைப் பிடித்து க்ளிக் செய்யக்கூட தடுமாற்றமே. வாங்கி நிறுவிய அன்றே ஒரு மொழிபெயர்ப்பு வேலை ஆங்கிலத்திலிருந்து ஃபிரெஞ்சுக்கு. எக்ஸல் கோப்பில் செய்ய வேண்டிய வேலை. முகுந்தன் எனக்கு கோப்பை திறந்து அதை இப்படிச் சேமி என்ற ஏற்பாட்டில் ஒரு நகலெடுத்து, இரண்டு பக்கங்களையும் ஒன்றன் மேல் ஒன்றாய் அடுக்கி வேலை செய்ய டிப்ஸ்கள் தந்ததில் நானே ஃபிரெஞ்சில் தட்டச்சு செய்தேன். வேலை மெதுவாகத்தான் போயிற்று. இருப்பினும் ஸ்பெல்லிங் தவறுகள் என்னிடம் சாதாரணமாக குறைவாகவே வரும் என்பதால் பிழைதிருத்தும் வேலை எளிதாயிற்று.

பிறகு ஒரு ஆண்டு கழித்து மொழிபெயர்ப்பாளர்கள் தலைவாசல் ப்ரோஸ்.காம்-ல் சாதாரண உறுப்பினனாகச் சேர்ந்து அதன் செயல்பாடுகளில் பங்கேற்று எனது மொழிபெயர்ப்பு வாடிக்கையாளர்களை அதிகமாக்கிக் கொள்ள முடிந்தது. சில மாதங்களில் டிஷ்நெட்டின் அகலப்பட்டை இணைப்பையும் பெற்றேன்.

இப்போதைய நிலை அப்போதைய நிலையை விட பல மடங்கு உயர்ந்துள்ளது. ப்ரோஸ்.காம்-ல் ப்ளாட்டினம் உறுப்பினன் ஆகவும் முடிந்தது. எல்லாம் என் உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதனின் அருளே.

ஆக, ஒரு புது டோண்டு உருவானான் என்று வைத்து கொள்ளலாம். இன்றுதான் அவனுக்கு பிறந்த நாள். அதாவது ஃபிப்ரவரி 5, 2002-ல் தான் கணினி வாங்கினேன்.

தலைப்பு சரிதானே?

அன்புடன்,
டோண்டு ராகவன்
பின்குறிப்பு: என் வீட்டம்மா இதை படித்து விட்டு வயது ஆறு என்றல்லவா இருக்க வேண்டும் என்று கூறி, செல்லமாக குமட்டில் குத்தி விட்டு சென்றார். பிழை திருத்தி விட்டேன்.
(பிப்ரவரி 5, மாலை 8 மணி 15 நிமிடங்கள்)

2/04/2008

சோவும் மோடியும்

இப்பதிவை வேண்டுமென்றே தாமதமாக ரிலீஸ் செய்கிறேன்.

நான் விட்டாலும் மற்றவர்கள் விடுவதாக இல்லை. துக்ளக் 38 - வது ஆண்டு விழா கூட்டம் பலரை பல முறையில் பாதித்துள்ளது.

சோ அவர்கள் போல பத்திரிகை ஆசிரியர் கிடைக்க தமிழ்நாடு புண்ணியம் செய்துள்ளது. அதே மோடி போன்ற சிறந்த முதன் மந்திரியைப் பெற்ற குஜராத்தும்தான். இருவரும் சேர்ந்து சிறப்பித்த இந்த துக்ளக் ஆண்டுவிழா கூட்டத்தை பற்றி எனது இது சம்பந்தமான 3 பதிவுகளிலும் விளக்கமாக கூறப்படாதவை பற்றியே இப்பதிவு.

மாலை 6.30-க்கு துவங்க இருந்த கூட்டத்துக்கு 4.30-க்கே போனாலும் அரங்கத்தினுள் செல்ல இயலவில்லை, ஏனெனில் ஏற்கனவே 3.30-க்கே எல்லா பொது சீட்டுகளிலும் மக்கள் வந்து அமர்ந்து விட்டனர். இதே மாதிரி முந்தைய ஆண்டும் நடந்திருந்ததினால் நான் ஏமாற்றம் அடையவில்லை. ஏனெனில் உள்ளே இரண்டு மணி நேரத்துக்கு மேல் வெறுமனே அமர்வது கூட ஒரு வகையான சித்திரவதைதான். வெளியில் போய் டாய்லட்டுக்கும் செல்ல இயலாது, ஏனெனினில் அவ்வாறு சென்றால் அரங்கத்தின் உள்ளே திரும்புவது நிச்சயமில்லை, அவ்வளவு கூட்டம்.

லாபிக்கு வெளியில் வெட்டவெளியில் இருந்த கியூ வரிசை பல வரிசைகளில் இருந்தது. யாராவது வரிசை தாண்டி புகுந்து விடப்போகிறார்கள் என்ற எனது அச்சத்தை நான் சற்றே உரக்க கூறியபோது, வரிசைகளை ஒழுங்குபடுத்தி கொண்டிருந்த ஒரு போலீஸ்காரர் என்னிடம் ”துக்ளக் மீட்டிங்குகளில் இந்த ஒரு கஷ்டம் கிடையாது, ஏனெனில் அவற்றுக்கு வருபவர்கள் சுயகட்டுப்பாடு உடையவர்கள்” என அழுத்தம் திருத்தமாக கூறினார். அவருக்கு அதில் அவ்வளவு நம்பிக்கை. அந்த நம்பிக்கையும் பொய்க்கவில்லை என்றுதான் கூறவேண்டும். துக்ளக்கின் நீண்ட நாள் வாசகன் என்ற முறையில் எனக்கும் அதில் பெருமைதான்.

ஓசி பஸ்/லாரி சவாரிகள், பிரியாணி பொட்டலங்கள் என்றெல்லாம் கொடுத்து அரசியல் கட்சிகள் தத்தம் மகாநாடுகளுக்கு கூட்டம் சேர்ப்பதை பார்க்கும்போது, துக்ளக் மீட்டிங்குகள் மட்டும் இவை ஒன்றுமின்றி ஒவ்வோர் ஆண்டும் வெற்றிகரமாக நடப்பதில் அரசியல் கட்சிகளுக்கு வரும் எரிச்சல் புரிந்து கொள்ள முடிகிறது. அவற்றின் அபிமானிகளாம் மற்ற பதிவர்களின் எரிச்சலும்தான். லாபியில் சோவின் புத்தகங்கள் விற்பனைக்கிருந்தன. அங்கும் நல்ல விற்பனை. முக்கியமாக கூட்டம் முடியும்போது தேசீயகீதம் பாடும் தருணம் எல்லோரும் அமைதியாக ஒரே இடத்தில் நின்றனர். அதுவும் மனதுக்கு நிறைவை தந்தது.

ஒரு பொது நிகழ்ச்சி எம்மாதிரி நடத்தப்பட வேண்டும் என்பதற்கு சோவின் மீட்டிங்குகள் நல்ல எடுத்துக்காட்டாக அமைகின்றன என்றால் மிகையாகாது.

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது