Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

2/04/2013

ஐந்து வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றால் இசுலாமியச் சட்டத்தில் தண்டனை இல்லையாம் :((

திண்ணையில் வந்த இக்கட்டுரையைப் பார்த்ததிலிருந்து மனம் பதறுகின்றது. அதிலிருந்து சில வரிகள்:

5 வயது மகளை பாலுறவு பலாத்காரம் செய்து சித்ரவதை செய்த சவுதி இஸ்லாமிய பிரச்சாரகர் விடுதலை

லாமியா அல் காம்தி என்ற 5 வயது குழந்தை டிசம்பர் 25 ஆம் தேதி 2011இல் பலவிதமான காயங்களுடனும், நசுக்கப்பட்ட தலையுடனும், உடைக்கப்பட்ட நெஞ்செலும்பு, இடது கை, உடலெங்கும் காயங்களும் சூடுகளும் போன்ற பலவிதமான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அக்குழந்தை அக்டோபர் 22 ஆம் தேதி 2012இல் மரணமடைந்தது.

இந்த குழந்தையின் தந்தை பாயன் அல் காமிதி என்பவர் இஸ்லாமிய பிரச்சாரகர். இவர் முஸ்லீம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அடிக்கடி வந்து இஸ்லாமை விளக்குபவர். இவர் கம்பிகளாலும், குச்சிகளாலும் இந்த குழந்தையை சித்ரவதை செய்ததை ஒப்புகொண்டிருக்கிறார் என்று Women to Drive என்ற சவுதி பெண்கள் குழு சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

இந்த தந்தை லாமியாவின் கன்னித்தன்மையை சந்தேகித்தார் என்றும், அந்த குழந்தையை ஒரு மருத்துவர் மூலம் பரிசோதித்தார் என்றும் தெரிவித்திருக்கிறது இந்த குழு.

ராண்டா அல் கலீப் என்ற மருத்துவமனை சமூகசேவகி இந்த மருத்துவமனையில் வேலை செய்பவர். அந்த குழந்தையின் முதுகு உடைக்கப்பட்டிருக்கிறது என்றும் அந்த குழந்தை உடலெங்கும் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டிருந்தது என்றும் கூறியிருக்கிறார்.

”அந்த குழந்தையின் மலத்துவாரம் கிழிக்கப்பட்டு பிறகு அதனை சூடு வைத்து மூட முயற்சிக்கப்பட்டிருக்கிறது” என்றும் அந்த குழந்தையின் தாயார் அந்த மருத்துவமனை ஊழியர்களிடம் குறிப்பிட்டிருக்கிறார்.

தந்தை இதுவரை சிறையில் இருந்த காலமே அவருக்கு தகுந்த தண்டனை என்றும், அவர் அந்த குழந்தைக்காக ரத்தப்பணத்தை அந்த குழந்தையின் தாயிடம் கொடுக்க வேண்டும் என்றும் அதுவே இஸ்லாமிய நீதி என்றும் நீதிபதி  தீர்ப்பு அளித்திருப்பதை பெண்கள் உரிமை குழு எதிர்க்கிறது.

மனல் அல் ஷரிப் உட்பட மூன்று சவுதி பெண்கள் உரிமை போராட்டக்காரர்கள் இந்த தீர்ப்பை எதிர்த்திருக்கிறார்கள்.  
ஒரு தந்தை தன் குழந்தைகளை கொன்றதற்கு மரண தண்டனை கொடுக்க முடியாது, ஒரு கணவன் தன் மனைவியை கொன்றதற்கு மரண தண்டனை கொடுக்கமுடியாது என்ற இஸ்லாமிய சட்டத்தை அடிப்படையாக வைத்து இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று இந்த போராட்டக்காரர்கள் தெரிவிக்கிறார்கள்.
நன்றி: திண்ணை

இச்செய்திக்கு சுவனப்பிரியர்கள் என்ன சப்பைக் கட்டு கட்டப் போகிறார்கள்? இந்தத் தீர்ப்பை வழங்கிய நீதிபதியும் இசுலாமிய மதச்சட்டத்தின்படித்தான் செய்ததாகக் கூறிக் கொள்வார்.

பதிவர் நந்தவனத்தான் அவர்களது பின்னூட்டம் இதே விஷயம் பற்றிய இன்னொரு பதிவில் இதோ. அது எனது கருத்துமாக இருப்பதாலேயே அதையும் இங்கே இடுகிறேன்.

குழந்தையை வன்கொடுமை செய்யபவர்களை கொன்றுவிட வேண்டும் என்பதுதான் எமது கருத்து. அல்லது குறைந்த பட்சம் ஆயுட்சிறை அளிக்கவேண்டும். ஏனெனில் இக்குற்றவாளிகள் மனநோயாளிகள். இவர்களை சில வருடம் சிறையில் வைத்துவிட்டால் வெளியில் வந்து அதையே திரும்ப செய்வார்கள். இவர்களை திருத்தவே இயலாது.

ஆனால் அப்படிப்பட்ட குற்றவாளி, அதிலும் சொந்த மகளை வன்புணர்வு செய்ததோடு மட்டுமல்லாது அவளை சித்திரவதை செய்த ஒருவனை தண்டிக்காமல் விட ஆண்டவன் ஒரு சட்டம் போட்டிருக்கிறான் என்றால் திருவள்ளுவர் மாதிரி 'கெடுக உலகு இயற்றியான்' எனத் தோன்றுகிறது (அவன் இருந்தால்).

இதை பீ மாதிரியான மதத்தலைவனுக ஆதரிப்பானுக அடத்தூ! பிறரின் அப்பா மகள் உறவை ஏன் கொச்சைப்படுத்துகிறார்கள், அந்த சிந்தனை எங்கிருந்து வருகிறது என்பது இப்போதுதானே புரிகிறது. இவனுகளுக்கு பிள்ளையாக பிறந்த பெண்களை நினைத்தால் வருத்தமாயிருக்கிறது
.

ஒரு 17 வயதுப் பெண் குழந்தைக்கு உணவளிக்கும் தவற்றைச் செய்ததற்காக அவள் தலையை வெட்டிய சவுதி அரசு இப்போது பல்லிளித்துக் க்ண்டு நிற்கிறது.

கொலைகாரப் பாவி


கொலையுண்ட மலர் பிணமாகவும் உயிரோடு இருந்த் போதும்


அதே திண்ணைக் கட்டுரையில் வந்த இன்னொரு செய்தி:

பெண்மகவைக் கொல்லும் தந்தைகளுக்கு எதிரான குரானின் போதனைக்கும் எதிராக இந்த தீர்ப்பு செல்கிறது. ஹதிஸ் “குழந்தையின் சாவுக்கு தந்தைக்கு  மரண தண்டனை கிடையாது” என்ற ஹதீஸின் அடிப்படையில் இந்த தீர்ப்பு சொல்லப்படுகிறது. இந்த தீர்ப்பின் நீண்டகால விளைவை கணக்கில் எடுத்துகொள்ளாமல், இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சுஹைலியா ஜைனுலபிதின் என்ற மனித உரிமை அமைப்பை சேர்ந்தவர் கூறுவதன் படி, தன் மகளை சித்ரவதை செய்து கொன்ற ஒரே ஒரு தந்தைக்கு மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்று கூறுகிறார். இதே போல, தன் மனைவியை கொன்ற கணவன்களுக்கும் அனுமதி வழங்கப்படுகிறது என்கிறார்.  இதற்கு இரண்டு உதாரணங்களை தருகிறார்.  தன் குழந்தைக்கு பாலூட்டிக்கொண்டிருந்த மனைவியின் கழுத்தை அறுத்து கொன்ற கணவனுக்கு ஐந்து ஆண்டு சிறைதண்டனை வழங்கப்பட்டது. இன்னொரு வழக்கில் தன் மனைவியை தன் காரின் பின்புறத்திக் கட்டி அவள் சாகும் வரை வண்டி யோட்டி கொன்ற கணவனுக்கு 12 வருட தண்டனை வழங்கப்பட்டது.

ஆண் கார்டியன்களுக்கு தங்கள் பாதுகாப்பில் உள்ளவர்களை கொல்வதற்கு இந்த தண்டனைகள்தான் கிடைத்தால், ஏன் இப்படிப்பட்ட தீச்செயல்கள் தொடராது? இந்த ஆண் கார்டியன்கள் தங்களது பாதுகாப்பில் உள்ள  பெண் குழந்தைகளை  சட்டப்பூர்வமாக விற்க அனுமதி பெறுகிறார்கள். குழந்தைகளை முக்கியமாக பெண் குழந்தைகளை காப்பாற்ற சட்டங்களே இல்லை.  ஷூரா கவுன்ஸிலில் குழந்தை பாதுகாப்பு சட்டம் என்று பிரேரணை செய்யப்பட்டபோது, குழந்தை என்று யாரை வரையறுப்பது என்று சிக்கல் வந்ததால், குழந்தை திருமணத்தை கூட தடை செய்யமுடியவில்லை.  தன் பெண் குழந்தைகளுக்கான கஸ்டடியை பெற முடியாததால், தந்தைகளால் அவலத்துக்கு உள்ளாக்கப்படும் பெண்குழந்தைகளின் கதைகள் ஏராளமாக இருக்கின்றன.

கணவனால் அடிக்கப்பட்ட பெண் போலீசுக்கு போனால் என்ன நடக்கும் என்று  ஒரு பெண் சமூக சேவகி விவரித்தார்.  அந்த போலீஸ் உடனே  Commission for the Promotion of Virtue and Prevention of Vice (CPVPV) அமைப்பையும், அந்த பெண்ணின் ஆண் கார்டியனையும் கூப்பிடும். பெரும்பாலான நேரங்களில் அந்த ஆண்கார்டியனே அந்த பெண்ணை அவலத்துக்கு ஆளாக்குபவர். ஆகவே அந்த பெண்ணை சுற்றி, மத குருக்களும், போலீஸும், அந்த பெண்ணை அடிப்பவரும் சுற்றி நிற்பார்கள். அந்த பெண்ணையும் அந்த ஆண்கார்டியனையும் சேர்த்து வைப்பதுதான் அங்கிருப்பவர்களின் பணி.  நான்கு மணி நேரம் அந்த பெண்ணை அந்த ஆணுக்கு அடங்கிப்போக வற்புறுத்துவார்கள். அதன் பின்னரும் அந்த பெண் பிடிவாதமாக இருந்தால்தான் பாதுகாப்பு வழங்கப்படும்.

தன் மகளையும் தன் மனைவியையும் வன்முறைக்குள்ளாக்கிய ஆணுக்கு தண்டனை வழங்கப்பட்ட வரலாறே இல்லை.  சில நேரங்களில் சிலமணிநேரம் சிறை தண்டனை, இல்லையென்றால், இனி செய்யமாட்டேன் என்று எழுதித்தர வேண்டும். அவ்வளவுதான்.

இந்த ஆண் கார்டியன் அமைப்பு பெண்களை ராணிகளாக வைத்திருக்கிறது என்று இதற்கு சப்பைக்கட்டு கட்டுபவர்கள் கூறுகிறார்கள். 
http://saudiwoman.me/2013/01/31/rest-in-peace-lama/

அடத்தூ, ஈனப்பிறவிகளா!

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

1/28/2013

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 28.01.2013

பட்டுக்கோட்டைக்கு வழி என்றால் கொட்டைப்பாக்கு எட்டுப்பணம் என்பது
நான் பள்ளியில் படிக்கும் காலங்களில் தமிழ் இலக்கணத்தை சீர்யசாகவே சொல்லிக் கொடுப்பதுண்டு. அதில் “விடை வழு (பட்டுக்கோட்டைக்கு வழி எது என்றால் கொட்டைப்பாக்கு எட்டுப்பணம்) என்பது அடங்கும். அதற்கு சிறந்த உதாரணங்கள் நம்ம தமிழ் ஓவியாவின் கிட்டத்தட்ட எல்லா பதிவுகளுமே என்றால் அது மிகையாகாது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல அவரது லேட்டஸ்ட் பதிவையே நோக்கலாம்.

அப்பதிவிலிருந்து:
”ஒரு பார்ப்பனன் தன் பெண்ஜாதியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு அடிக்கடி அந்தம்மாளை விபசாரி, விபசாரி, என்று கூறிக்கொண்டே வந்தான். ஆனால், அந்தம்மாள் தன் புருஷனின் சந்தேகத்திற்கிடமான காரியங்களுக்கெல்லாம் அவ்வப்போது பல சாக்குப் போக்குகள் சொல்லி புருஷனை அடக்கிக் கொண்டே வந்தாள்.

இப்படி இருக்கையில், அந்தப் பார்ப்பான் தன் மனைவி அந்நிய புருஷனிடம் சம்பந்தப்பட்டுக் கொண்டிருக்கையில் ஒரு நாள் கைப்பிடியாய் பிடித்து விட்டான். அப்பொழுது அந்த அம்மாள் வேறு எவ்வித சாக்குப் போக்கும், சமா தானமும் சொல்லித் தப்பித்துக் கொள்ள முடியாமல் போய்விட்டதால் பிராமணா!, உன் வாக்குப் பலித்துவிட்டது. அதற்கு நான் என்ன செய்யட்டும்? என்று பதில் சொல்லி மறுபடியும் புருஷன் மீதே குற்றத்தைக் சுமத்தினாள்.

அதாவது, புருஷனைப் பார்த்து நீ அடிக்கடி என்னை விபசாரி, என்று உன் வாயால் சொல்லிக் கொண்டே வந்தால் அல்லவா (பிராமணன் வாக்கு பொய்க்காது அது எப்படியும் பலித்துவிடும் என்று சாஸ்திரங்களில் சொல்லி இருக்கின்றபடி) நீர் பரிசுத்தமான பிராமணரானதால் உமது வாக்குப் பலித்துவிட்டது”.

இதைத்தான் self fulfilling prophecy எனச் சொல்வார்கள். புலி வருது கதையைப்போல எனவும் கூறலாம். இப்பார்ப்பனனை விடுங்கள். எனக்குத் தெரிந்த ஒரு பெரியவர் தன் புது மனைவி கோவிலுக்குச் செல்லும்போது தன் நண்பர்களிடம் அவள் ஊருக்கு புதிதாக வந்த தாசி எனக்கூறி அவளை கேலி செய்ய வைத்தாராம். பெரியவர் வாக்கு பலித்திருக்குமோ?

நிற்க. இதில் விடை வழு எங்கிருந்து வருகிறது எனக் கேட்கிறீர்களா? அப்ப்திவுக்கு 16 பின்னூட்டங்கள், ஒன்றுகூட பதிவுடன் சம்பந்தப்பட்டதில்லை என்பத்தான் விசேஷம். இந்த மனிதரது கிட்டத்தட்ட எல்லா பதிவுகளிலுமே இந்த நிலைதான், அதாவது காபி பேஸ்ட் விவகாரங்கள்..

நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் இம்மாதிரி எல்லாம் கேனத்தனமான விடைகள் வருமா என வியந்ததுண்டு. இப்போது அவ்வியப்பு போயே போயிந்தி.

விஸ்வரூபம் விவகாரம்:
அப்படத்தைப் பார்த்த பலரும் கூறிவிட்டார்கள், அதில் இசுலாமிய அவதூறு இல்லையென. இருப்பினும் அரசு தடை விதிக்கிறது என்பது நாட்டில் ஓட்டு பொறுக்கும் அரசியல்தான் கோலோச்சுகிறது எனத் தெரிகிறது. தடையை உடனடியாக நீக்குவது அவசியம்.

மதுரா விஜயம்:.
வெள்ளீயன்று மதுரை வந்தேன், இன்று {திங்கட்கிழமை) சென்னைக்கு செல்கிறேன். நான் மதுரையில் இருந்தவரை குருட்டு  அதிர்ஷ்டம், பவர்கட் லேது.

சனியன்று தென்திருப்பேரை மகர நெடுங்குழைகாதனை தரிசிக்கச் சென்ற நேரத்தில் பவர் கட் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று காலை எட்டு மணிவாக்கில் கிளம்பும்வரை அது இல்லாமலிருந்தால் அதிர்ஷ்டம்தேன்.

அப்டேட் (18.06 மணி, 28.01.2013)
 சென்னை வந்தாகி விட்டது. காலை 10.30 மணிக்கு மதுரையிலிருந்து கிளம்பினேன். நோ பவர்கட். சந்தோஷமாக இருந்தது.

தென்றலாக வந்த புதிர்:
மிருதுவாக இப்புதிர் தோன்றியது.
ஒரு பெண்ணுக்கு இரு சகோதரர்கள். ஆனால் அச்சகோதரர்களுக்குள் ஒரு உறவும் இல்லை. சினேரியோ கூறவும்.


அன்புடன்,
டோண்டு ராகவன்

1/21/2013

எப்போதுமே மூலமொழியில்தான் படிப்பேன் என இருக்க முடியுமா?

எனக்கு, ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு மொழிகள் தெரிந்திருப்பதால் அம்மொழியில் உள்ள புத்தகங்களை அந்தந்த மொழியிலேயே படிப்பதுதான் நல்லது என இருப்பேன். ஆனால் இது எப்போதுமே வேலைக்காகாது.

ஆர்.கே. நாராயணனின் Swamy and friends நாவலை நான் முதன்முதலாக ஸ்வாமியும் சினேகிதர்களும் என்னும் தலைப்பில் படித்தபோது அது மொழிபெயர்ப்பு என்பது எனக்குத் தெரியாது. பிறகு ஆங்கிலத்தில் அதை கண்டபோது அதை படிக்க ஆவல் எழவில்லை. ஏனெனில் தமிழில்தான் அக்கதை பாந்தமாக இருந்தது.

அதே போல அருந்ததி ராயின் God of small things ஆங்கில மூலத்தில் படித்தபோது தமிழ் அல்லது மலையாளத்தில்தான் அது அதிக பாந்தமாக இருந்திருக்கும் என்ற எண்ணத்தையும் என்னால் தவிர்க்க இயலவில்லை.

ஹாரி பாட்டர் நாவல்களை ஆங்கிலம் மட்டுமின்றி பிரெஞ்சு மற்றும் ஜெர்மானிய மொழிபெயர்ப்புகளிலும் நான் படித்தது நானே ஒரு மொழிபெயர்ப்பாளன் என்பதற்காகவும் அந்த மூன்று மொழிகளிலுமே அவை பாந்தமாகவே இருக்கும் என்பதாலும்தான். அவை விதி விலக்குகள்.

இதையெல்லாம் இப்போது இங்கே கூற காரணம் என்னவென்றால் இப்போதுதான் பி.ஏ. கிருஷ்ணனின் கலங்கிய நதி நாவலை படித்து முடித்தேன். அதே போல சில மாதங்களுக்கு முன்னால் புலிநகக் கொன்றையைத்தான் படித்தேனே தவிர அதன் ஆங்கில மூலத்தைப் (Tiger claw tree) படிக்கும் பேச்சுக்கே இடமில்லை. தமிழில்தான் அவை அதிகப் பாந்தமாக இருக்கும் என்பதிலும் சந்தேகமில்லை.

புத்தகக் கண்காட்சியில் பி.ஏ.கிருஷ்ணனின் கலங்கிய நதி மற்றும் அக்கிரகாரத்தில் பெரியார் வாங்கினேன். இரண்டையுமே ஒரே மூச்சில் படித்து விட்டேன்.

ச்ரி,  இப்போது கலங்கிய நதியை பார்ப்போம். அதன் கரு ஒரு ஆள் கடத்தல் பற்றியது. அது உண்மை நிகழ்ச்சி, அதில் பி.ஏ.கிருஷ்ணனும் விசாரணை அதிகாரியாக சம்பந்தப்பட்டிருந்திருக்கிறார் என்பதை அக்கிரகாரத்தில் பெரியார் கட்டுரை தொகுப்பில் பார்த்தேன். ஆகவே கலங்கிய நதியை ஈடுபாட்டுடன் படித்தேன்.

நம்ம ஜெயமோகனின் வார்த்தைகளில், “இரு வலுவான உவமைகள் வழியாக ரமேஷ் சந்திரனின் அந்த எண்ணம் நாவலில் பதிவாகிறது. ஒன்று, பறவைகள் கூட்டம்கூட்டமாகத் தற்கொலைசெய்துகொள்ளும் ஜதிங்காவின் சித்தரிப்பு. விளக்கமுடியாத ஏதோ காரணத்தால் பறவைகள் அங்கேவந்து உயிர்விட்டுக்கொண்டே இருக்கின்றன. இரண்டாவது உவமை ஆந்திராவில் சிம்மாசலத்தின் கிருஷ்ணன் கோயிலுக்குக் காணிக்கையாக்கப்படும் கன்றுகள் உடனே கசாப்புக்கடைகளுக்கு விற்கப்படுதல். கடவுளின் காணிக்கையாகச் சென்று அவ்வழியே மரணம் நோக்கிச் செல்கின்றன அவை”.

இந்த நிகழ்வுகளை நாவலில் படித்தபோது அன்றிரவு தூக்கம் தொலைத்தேன். மனதில் தாளமுடியாத சோகம். கன்றுகளின் விஷயம் என்னை விக்கி விக்கி அழச்செய்தது.  ஏனெனில் நான்தான் எளிதில் உணர்ச்சிவசப்படுபவன் ஆயிற்றே. இப்படியெல்லாம்கூடவா கொடுமை நடக்கிறது?

ஒரு கதையில் இன்னொரு கதை, நாவலுக்கான விமரிசனம் வேறு கதாபாத்திரங்கள் வாயிலாக என அட்டகாசமாக கதை செல்கிறது. இதைத்தான் லீனியர் எடிட்டிங் என்பார்களோ [டவுட்டு :))]

பை தி வே, வாங்கிய வேறு புத்தகங்கள், இலவசக் கொத்தனாரின் ஜாலியா இலக்கணம், மற்றும் இந்திரா பார்த்தசாரதியின் வேர்ப்பற்று ஆகியவை. இரண்டாவதை படித்தாயிற்று.இலக்கண புத்தகம் நிதானமாக பார்க்க வேண்டியது..

அவற்றைப் பற்றி பிறகு பார்ப்போமா.

அன்புடன்,
டோண்டு ராகவன்

1/19/2013

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 19.01.2013

சிலுக்கு சிலுக்கு காலை நல்லா அமுக்கு, அமுக்கு
சிலுக்கு செயலாக இருந்தபோது நான் படித்தது, இங்கு இற்றைப்படுத்தப்படுகிறது..

பாற்கடலில் எம்பெருமான் பள்ளி கொண்டுள்ளார் பாம்பணையின் மேல். அவர் காலை பிடித்தவாறு லக்ஷ்மி. பிரும்மதேவன் சூழ தேவர்கள் வருகின்றனர்.

தேவர்கள்: பிரபோ அபயம் நாடி இங்கு நாங்கள் வந்தோம்.

மகாவிஷ்ணு: வாருங்கள் தேவர்களே, என்ன விஷயம்?

தே: பூலோகத்தில் கலி ரொம்பவும் முற்றியாகி விட்டது பிரபோ. நீங்கள் சொன்ன சம்பவாமி யுகே யுகே கான்சப்ட் படி நீங்கள் இன்னொரு அவதாரம் எடுக்கும் நேரம் வந்து விட்டது.

: (திடுக்கிட்டு): என்ன பூலோகமா, அது இன்னுமா இருக்கிறது?

தே: இப்படிச் சொன்னால் எப்படி பிரபோ, நீங்கள் அறியாததா?

: ஓக்கே, ஓக்கே டென்ஷன் வேண்டாம். எனது முகநூலில் ஸ்டேடஸ் பார்க்க மிஸ் ஆகிவிட்டது. இப்போ கொஞ்சம் பிசியாக இருக்கிறேன், பிறகு பார்க்கலாமே

தேவர்கள் இதை எதிர்த்து கோஷம் போட ஆரம்பிக்கிறார்கள்.

- மகாவிஷ்ணு அண்ணாச்சி, உங்க வாக்குறுதி என்னாச்சி?
- தூங்கியது போதும் அண்ணாச்சி, காரியம் வேணும் அண்ணாச்சி!
- சம்பவாமி யுகே, யுகே, பூலோகத்துள் நீங்கள் புகே, புகே.

இவ்வாறாக பலர் பல கோஷங்கள் போட, ஒருவர் மட்டும் “சிலுக்கு, சிலுக்கு, சிலுக்கு! வராட்டா ஆகும் பொடுகு பொடுகு, பொடுகு!” என கத்திக் கொண்டே நடனமாடுகிறார்.

பிறகு மகாவிஷ்ணு வாக்களிக்கிறார் என வைத்துக் கொளுவோம். ஆனால் அவருக்கு கடைசி கோஷம் குறித்து மண்டை காய்கிறது. அச்சமயம் அப்பக்கம் “நாராயண, நாராயண” எனக் கூறிக்கொண்டே வ்ரும் நாரதர் விஷ்ணுவுக்கு விளக்குகிறார். ”பிரபோ, இதுதான் இப்போ பூலோகத்தில் ஃபேஷன். எல்லாத்திலேயும் சிலுக்கை இழுப்பதுதான் அது”. சிலுக்கு பற்றி மேலும் கூற, மகாவிஷ்ணு சிந்தையில் ஆழ்கிறார்.

அப்போது லக்ஷ்மிதேவி கேட்கிறார், “பிரபோ என்ன யோசனை”?

மகாவிஷ்ணு கூறுகிறார், ”சிலுக்கு சிலுக்கு காலை நல்லா அமுக்கு, அமுக்கு”.

“யூ டூ”? என கோபிக்கிறார் மகாலட்சுமி.

பிறகு மகாவிஷ்ணு அவதாரம் எடுத்து, எல்லோரையும் நல்லவர்களாக்கிவிட, நாட்டில் இனிஷியேட்டிவ் எடுப்பவர்கள் இல்லாமல் போகிறார்கள், எல்லாமே பக்தி பஜனை கூடங்களாகின்றன என்றெல்லாம் கதை போகிறது..

கதையின் நீதி யாது எனக் கேட்டால் கெட்டதும் முக்கியம் என்றே வருகிறது. நீங்களே சொல்லுங்கள், வில்லன், வில்லி இல்லாமல் கதை போகுமா?

சோ அவர்கள் அதிமுக பக்கமே அதிகமாகச் சாய்கிறார் 
இப்போதிருக்கும் நிலைமையில் வேறு என்ன செய்ய முடியும்? நான்கு பிள்ளைகளில் நல்லவன் யாரென ஒரு தகப்பனைக் கேட்க அவனோ, கூரைமேல் தீப்பந்தத்துடன் நிற்பவனே நல்லவன் எனக் கூறுவதாக ஒரு கதையும் உண்டு.

நான் ஏற்கனவேயே கூறியது போல, ”மோதி மாதிரி எல்லோரும் இருப்பதில்லையே, ஆகவே அவர் மாதிரி ஒருவர் நமக்கு முதல்வராக கிடைக்காதவரை ஜெயலலிதாவா, கருணாநிதியா என்றுதான் பார்க்க வேண்டியுள்ளது.

ஒருவரும் தேறவில்லை எனக்கூற ஐந்து நிமிட்ங்கள் கூட ஆகாது. ஆனால் அவ்வாறு இருப்பது காரியத்துக்காகாது.

இதைத்தான் சோ பல முறை நேரடியாகவும் மறைமுகமாகவும் கூறி வருகிறார். அவரது செயல்பாடுகளும் இம்மாதிரித்தான்.

மேலும் ஜெவுக்கு செம்பு அடிப்பதால் அவருக்கு என்ன லாபம்? தன் சுய தேவைகளுக்காக சோ அவர்கள் யாரிடமும் இதுவரை கையேந்தியதில்லையே. அதை நாம் மறக்கக் கூடாது”.

Form 26 AS:
வரவர இந்த வருமானவரித்துறையின் லொள்ளுக்கு அளவில்லாமல் போயிற்று. சில பணவரவுகளுக்கு முதலிலேயே வரி பிடித்தம் செய்து அரசுக்கு செலுத்த வேண்டியது பணம் தருபவரது கடமை. இதை TDS (Tax deduction at source) என்பார்கள். நமக்கும் ஒரு ஸ்டேட்மெண்ட் தருவார்கள். அதுதான் படிவம் 16 ஏ. பல கம்பெனிகள் இங்குதான் அழும்பு செய்யும். வரியை பிடிப்பார்கள், ஆனால் கருவூலத்தில் அதை செலுத்த சரியான நேரத்தில் மாட்டார்கள். படிவம் எண் 16 ஏ தராமல் நம்மைத் தொங்கலில் விடுவார்கள். அதை வாங்குவதற்குள் நமது தாலி அறுந்து போகும்.

அதற்குத்தான் அரசு படிவம் 26 ஏஎஸ் கொண்டு வந்தது. அதை நாம் இணையத்தில் பார்த்துக் கொள்ளலாம். அதற்கென் பல வழிமுறைகள் உண்டு. திடீரென அதிலும் குழப்பம் வந்தது. அக்டோபர் 31, 2012-க்கு பிறகு இப்படிவத்தில் இற்றைப்படுத்தலே இல்லை. முட்டி மோதி விசாரித்ததில் அப்படிவத்தின் தளம் மாற்றப்பட்டது எனத் தெரிகிறது. (சொல்லவே இல்லை!)  புதிய தளத்தில் மறுபடி பதிய வேண்டும். நேற்று கிட்டத்தட்ட 3 மணி நேரம் மன்றாடிய பின்னர்தான் அதுவும் நடந்தது.

எனது கேள்வி இதுதான். படிப்பறிவு பெற்ற நாமே இப்பாடுபடும்போது, மற்றவர்கள் என்ன செய்வார்கள்? எல்லோருமே வரி ஆலோசகர்களை நியமித்துக் கொள்ள இயலுமா?

மானிய விலையில் வருடத்துக்கு 9 கேஸ் சிலிண்டர்கள் எனச் சலுகை உயர்வு:
நிலைமையில் தெளிவு இல்லை. ஒரே கெடுபிடிதான். இத்தனைக்கும் காரணம் என்னவென்று பார்த்தால், சிலிண்டர்களுக்கு அளிக்கப்படும் சப்சிடிதான். தற்சமயம் வீடுகளுக்கு கொடுக்கப்படும் 14.2 கிலோ எடையுள்ள ஒரு சிலிண்டரின் விலை 398 ரூபாய்கள். ஆனால் உண்மையாகவே அதன் விலை சுமார் 890 ரூபாய்கள்.

என்ன நடக்கிறதென்னவென்றால், துண்டு விழும் ரூபாய்கள் சப்சிடி ஆகும். அவ்வாறு சப்சிடி பெறுபவர்கள் எல்லோருமே தினக்கூலிகள் அல்ல. இது முற்றிலுமே ஓட்டு பொறுக்கும் பிரச்சினை.

இண்டேனுக்கு அரசு அளிக்கும் த்கையும் திருப்திகரமாக இல்லை.ஆகவே இந்த சிலிண்டர்களை நிரப்புவதில் இண்டேனுக்கும் அக்கறை இல்லாமலிருப்பது புரிந்து கொள்ள்ளக் கூடியதே. சுதந்திரச் சந்தையில் உள்ளே புகுந்து அரசு குளறுபடி செய்வதற்கான உதாரணமாகவே இதை எடுத்து கொள்ளலாம்.

இதற்கு என்ன வழி? எனக்குத் தோன்றுவதை கூறுகிறேன். பேசாமல் இந்த சப்சிடியை மொத்தமாக ஒழியுங்கள், அல்லது கணிசமாகக் குறையுங்கள். இண்டேன் கம்பெனிக்கு அரசு தரும் விலையும் யதார்த்தத்தை ஒட்டியிருக்க வேண்டும். பிறகு பாருங்கள், இந்த கோட்டா முறையெல்லாம் ஒழிந்து மக்களும் தேவையின்றி பதுக்க மாட்டார்கள்.

1949-ல் ஜெர்மன் ஃபெடெரல் குடியரசு ஸ்தாபிக்கப்பட்டு, Reichmark விலக்கப்பட்டு Deutschmark வந்து, ரேஷன் முறையும் ஒழிக்கப்பட்டது. அதுவரை காலியாக இருந்த கடைகளில் எங்கிருந்தோ பொருட்கள் வந்து ஷெல்ஃப்களை அலங்கரித்தன. அதுவரை அரசு சப்சிடி சார்ந்த குறைந்த விலையால் பொருட்களை விற்பவருக்கு ஊக்கம் இல்லாமல் இருந்ததே முந்தைய நிலைக்கு காரணம் என்பது பின்னால் புலப்பட்டது.

இவ்விஷயத்தில் இந்திய உதாரணங்களுக்கும் பஞ்சமில்லை  மோதி பதவிக்கு வந்த சமயத்தில் குஜராத்தில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தமிழக அரசு வழ்ங்கும் மின்சாரம் போல எப்போதாவதுதான் வந்தது.

மோதி ஒரே ஒரு ப்ரபோசலை வைத்தார், பணம் கட்டுங்கள் 24 மணிநேர மின்சாரம் என்று. அவர்களும் ஒத்து கொண்டனர். குஜராத் இப்போது விவசாயத் துறையில் அமோகமாக முன்னேறியுள்ளது என்பதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்?

அதே மாதிரி சமீபத்தில் 1952-ல் சென்னை மாகாணத்தின் முதல் மந்திரியாக பதவியேற்ற ராஜாஜி அவர்கள் செய்த முதல் காரியம் ரேஷன் முறையை விலக்கிக் கொண்டதே. அதனால் பல பொருள் விரயங்கள் தடுக்கப்பட்டு, நாடு முழுவதிலும் அது அமுலுக்கு வந்தது. 1964 வரை ரேஷன் முறை இல்லாமல்தான் இருந்தது. அவ்வாண்டு ரேஷன் மீண்டும் வந்ததிலிருந்து இன்றுவரை நிலைமை விரயங்களுடன் அப்படியே உள்ளது. நமக்கெல்லாம் இன்னொரு ராஜாஜி அல்லது மோதி தேவை.

ஆக, சப்சிடி சிலிண்டர்களது எண்ணிக்கை வருடத்துக்கு 6 என கட்டுப்படுத்தியது நல்ல, சரியான ஸ்டெப்தான். ஆனால் வழமையான ஓட்டுப் பொறுக்கும் அரசியலால் இப்போது அது ஆண்டுக்கு 9 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. குழப்பங்கள் தொடர்கின்றன..  இப்போதைய நிலவரப்படி சப்சிடி சிலிண்டர்களை வினியோகிப்பது 6/9 குழப்பத்தால் நிறுத்தப்பட்டுள்ளது என அறிகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்



.


-

1/16/2013

துக்ளக் 43-வது ஆண்டுவிழா





இந்த ஆண்டும் இந்தச் சந்திப்புக்கு செல்ல உடல் நலம் ஒத்துழைக்கவில்லை என்றெல்லாம் கூற மாட்டேன், என் வீட்டம்மா மற்றும் என் மகள் அனுமதிக்கவில்லை, அதே சமயம் நானும் அவ்வளவு பிடிவாதமாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். 14-ஆம் தேதி இரவு கத்தாரிலிருந்து நண்பர் கிருஷ்ணன் தொடர்பு கொண்டு,  மீட்டிங்கிற்கான வீடியோ இணைப்பு தேவையா எனக் கேட்க, நானும் ஆமாம் எனக்கூற, அவரும் அதை அன்புடன் தந்ததில், இப்போதுதான் பார்த்து முடித்தேன். அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

ஸ்வெட்டர், குல்லா சகிதம் சோ வருகை தர கரகோஷம். தனக்கு உடல்நிலை சரியில்லை என பில்ட் அப் கொடுத்ததாக கூறிக்கொண்டு அனுதாப  ஓட் பெற்று விட்டதாகவும். ஆனால் ஆக்சுவலாக உடல்நிலை அவ்வளவு மோசம் இல்லை எனவும் கூறி கலகலப்பூட்டினார். தன்னை உட்கார்ந்து பேசுமாறு ஆலோசனை தரப்பட்டதாகவும் கூறினார். ஆனால் நின்ற வண்ணம்தான் பேசினார்.

முதலில் பொங்கல் வாழ்த்து, பிறகு துக்ளக் குழுவினரின் அறிமுகம், அட்டெண்டர்களை கூட அறிமுகம் செய்வித்தார் வழக்கம்போல. அதுதான் சோ.

பிறகு பார்வையாளர்கள் பேச அழைக்கப்பட்டனர்.

1. சத்யநாராயணன், தர்மபுரி:
குஜராத்தில் மோதி ஜெயிப்பதை துக்ளக் சரியாகவே ப்ரெடிக்ட் செய்தது, மோதி தான் செய்த சேவையின் பலத்தில் மீண்டும் மீண்டும் ஜெயிக்கிறார், மற்ற முதல்வர்கள் ஏன் அவ்வாறு ஜெயிக்கக்கூடாது?

ஒழுங்கீனங்கள் அதிகரித்து விட்டன, அதற்கு தண்டனைகள் அதிகம் இல்லாததே காரணம்.

சோ அவர்கள் தண்டனை வேண்டும் என்பதை ஒத்துக் கொண்டார், கூடவே மோதி நல்ல முதலமைச்சர் என்பதையும்.

2. மோகன், தேனி:
பாக்ஸ்தான் இவ்வளவு வாலாட்டியும் மத்திய அரசு ஏன் அமைதியாக இருக்கிறது? இஸ்ரேல் மாதிரி பாய வேண்டாமா?

சோ: மத்திய அரசு மட்டுமல்ல பத்திரிகைகளும் பாக்கிஸ்தான் விஷயத்தை அடக்கி வாசிக்கின்றன. இஸ்ரேல் செய்வது மாதிரி செய்ய வேண்டும். அமெரிக்காவிடம் நட்பு வலுக்க வேண்டும். பாகிஸ்தானுக்கு இவ்வளவு பணியக்கூடாது.

3. அப்துல் ரஹ்மான்:
அரசு மதுக்கடைகளில் லாபம் பார்க்கிறது.  அந்த வருமானத்தில் சலுகைகள் தருவது, குழந்தையின் ரத்தத்தை விற்று குடும்பத்தைக் காப்பாற்றுவது போன்றது.

இப்போது சோ: பூரண மதுவிலக்கு பிராக்டிகல் இல்லை. வருமானத்தைச் சரியாக செலவு செய்வதில்தான் கவனம் வேண்டும். குஜராத்தில் மதுவிலக்கு இருந்தாலும் அங்கும் கள்ளச் சாராயம் உண்டு.

தீமை என்றால் காப்பி, டீ கூட தீமைதான். அதிகமாக உணவு உண்பதே தீமைதான்.

அப்துல் ரஹ்மானின் இன்னொரு கேள்வி சோ ஏன் ஆன்மீகம் சம்பந்தமாக அதிகம் எழுதக்கூடாது என்பதே. அதற்கான பலம் தன்னிடம் இல்லை எனக்கூறி, காலட்சேபம் செய்பவர்கள் பலரது பெயர்களை கூறினார், அந்த அளவுக்கு தனக்குத் தகுதி இல்லை எனவும் கூறினார்.

4. அவினாசி வேலுச்சாமி:
 விவசாயிகள் வேறு தொழில் செய்ய வேண்டும் என மன்மோகன் சிங் கூறுவதை கண்டிக்க வேண்டும். அவரிடமும் அம்மாவிடமும் சொல்லி விவசாயிகளுக்கு நல்லது செய்ய வேண்டும் என சோ அவர்களை கேட்டுக் கொண்டார்.

“எங்கம்மா மேலேதான் இருக்காங்க” என ஜோக் அடித்தார் சோ. மன்மோகன் பர்றி பேசும்போது விவசாயிகள் அத்தொழிலை விட்டால் என்ன செய்வது? வேறு வேலை இல்லையே? எல்லோரும் இவர் மாதிரி பிரதம மந்திரி ஆக முடியாது அல்லவா எனக் கிண்டலடித்தார்.

வாசகர் சொன்னதை துக்ளக்கில் பாக்ஸ் மேட்டராக போடுவதாகவும் சொன்னார்.

5. மாலதி சுந்தர், வேளச்சேரி:
பெண்கள் மேல் நிகழ்த்தப்படும் பாலியல் பலாத்காரம் பற்றி குறிப்பிட்டு, பெண்களும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதை மீடியாக்கள் சரியாக வலியுறுத்துவதில்லை எனக் குறைபட்டுக் கொண்டார்.

சோ: அப்படிச் சொன்னால் பழங்காலம்னு சொல்லிடுவாங்க. ஆனால் பழங்காலத்தில் பெண்களுக்கு மரியாதை தரப்பட்டது. மனுஸ்மிருதியும் அதை வலியுறுத்துகிறது.

இம்மாதிரி குற்றங்களுக்கு தண்டனை அதிகம் தர வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்தினார். நல்ல வேளையாக சிதம்பரம் ஹோம் மினிஸ்டர் இல்லை என சந்தோஷப்பட்டுக் கொண்டார், இல்லாவிட்டால் வடேராவுக்கு சப்பை கட்டு கட்டியது போல இங்கும் பேசியிருக்கக் கூடும் என கேலியாகக் கூறினார்.

மற்றப்படி புள்ளிவிவரங்களை பார்த்தால் இந்திய இளைஞர்கள் இவ்விஷயத்தில் அவ்வளவு மோசமில்லை..

அச்சமயம் அக்பருதீன் ஒவைசி என்பவர் 15 நிமிடங்களுக்குள் இந்துக்கள் அத்தனை பேரையும் கொல்ல முடியும் என பேசியது பற்றி சோவுக்கு ஆடியன்ஸ் தரப்பிலிருந்து கேள்வி வந்தது.

அது அயோக்கியத்தனம், தண்டிக்கப்பட வேண்டியது என்றர். ஆனால் மீடியா அதை அடக்கி வாசிக்கிறது. இதையே ராமகோபாலன் கூறியிருந்தால் என்னவெல்லாம் நடந்திருக்கும் என பட்டியலிட்டு காட்டினார். இப்போது உண்மை கூற வேண்டுமானால் இம்மாதிரி அடக்கி வாசித்து மத்திய அரசு இசுலாமியரைத்தான் கேவலப்ப்டுத்துகிறது. பெரும்பான்மை இசுலாமியர் அக்பருதீன் ஒவைசி கூறியதை ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.

ஓவைசி சொன்னது என்ன என கேட்பவர்கள் நண்பர் அருண் அம்பி போட்டிருக்கும் இடுகையை பார்க்க வேண்டுகிறேன்.

6. ராமகிருஷ்ணன், மாடம்பாக்கம்:
ஸ்டாலினை கருணாநிதி வாரிசாக அறிவித்தார், துக்ளக்குக்கு வாரிசை சோ அவர்கள் எப்போது அறிவிப்பார்?

தேமுதிகவுடன் அதிமுக கூட்டணி இல்லை என ஆகிவிட்ட பிறகு அதிமுக இதை எப்படி ஈடுகட்டும்?

சோ அவர்கள் அதற்கு பதிலளிக்கையில்: கருணாநிதி அப்போது கூறியதையே எப்போதும் கூற மாட்டார், தானும் கருணாநிதியும் இந்த விஷயத்தில் ஒரே மாதிரி, வாரிசு எல்லாம் கூறமாட்டோமாக்கும்.

மற்றப்படி தேமுதிக பற்றி கவலைப்படும் வேலை இப்போது திமுகாவுக்குத்தான்.

7. பிரபு, சென்னை:
அரசின் அலட்சியத்தால் விபத்துக்ள் ஏற்படும்போது நஷ்ட ஈடு கேட்டால் கிடைக்குமா?.

சோ: அதை நிரூபணம் செய்தால் கண்டிப்பாக கிடைக்கும்.

8. ஜான்சன், கோவை:
பிரதமர் பதவி மியூசிகல் சேர் விளையாட்டு மாதிரி ஆகிவிட்டது. இதை சரி செய்ய வேண்டாமா? மோதிதான் பிரதமராக வரவேண்டும் என்பதை சோ எடுத்துக் கூற வேண்டும்.

பாஜகவும் தமிழகத்தில் வளர்கிறது. அதையும் குறிப்பிட வேண்டும்.

சோ: மோதி பிரதமர் ஆக வேண்டும்தானே , ஆக்கி விடுகிறேன். ஆனால் அவரை பாஜகாவிலேயே பலர் எதிர்க்கின்றனர். ஒரு தலைவருக்கு அத்தாரிட்டி ரொம்ப முக்கியம். உதாரணத்துக்கு திமுக, அதிமுக, காங்கிரஸ், தெலுகு தேசம் ஆகிய கட்சிகளைப் பார்க்கலாம்.

ஆனால் பாஜகாவில் மோதியை தேர்ந்தெடுக்க பயப்படும் காரணமே அவருடைய ஆளுமைதான். அவரை தன்னிஷ்டப்படி ஆட்டி வைக்க முடியாது என்பதாலேயே அவரை முன்னிறுத்த பலர் தயங்குகின்ற்னர்.

9. அஃப்சல் மாலிக்:
திமுக் சங்கரமடம் இல்லை என அழகிரி கூறினாரே எனக் கேட்க, அவ்வாறு கூறியது கருணநிதிதான் என சோ அவர்கள் கூறினார்.

உண்மைதான், சங்கர மடத்தில் திமுக ரேஞ்சுக்கு குடும்ப உறுப்பினர்களை வாரிசாகக் கொண்டு வரமுடியாதுதான் என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும் என சிரிக்காமல் கூறினார்.

10. மகாதேவன், காரைக்குடி:
வால்மார்ட் பற்றி கேள்வி கேட்கப்பட்டது.
அதில் தவறு இலை என்றும், இந்த விஷயத்தில் தான் குருமூர்த்தியின் கருத்தை ஒப்புக் கொள்ளவில்லை என்றும் சொ கூறினார் (”I disagree with Gurumurthi with all pleasure”!)

11. எஸ். கிருஷ்ணமூர்த்தி, சித்தூர்:
இலங்கை பற்றி தொடர் கட்டுரை எழுத வேண்டும், ரஜனிகாந்த் தேசீய நதிகள் இணைப்பு பற்றி பாடுபட வேண்டும் ஆகிய விஷயங்களை இவர் தொட்டார்.

சோ: ராஜீவ், ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை குலைத்தன் மூலம் புலிகளும், அவரது தமிழக ஆதரவாளர்களும் தீங்குதான் விளைவித்தனர். அது பற்றி வேணது ஏற்கனவேயே எழுதி விட்டாயிற்று.

12. ஸ்ரீனிவாசன்:
வைகோ மூன்று விஷயங்களை நல்லபடி செய்கிறார். ராமதாஸ் ஜாதி பற்றி பேசுவதையும் 75% மக்கள் மனத்தளவில் ஒப்புக் கொண்டாலும், வெளிப்படையாக ஆதரவு தர மாட்டேன் என்கிறார்கள். சோ ஏன் ஆதரவு த்ரக்கூடாது?

சொ: வைக்கோ செய்வது எனக்குத் தெரிந்து நடைபயணம்தான், நல்ல உடற்பயிற்சி சர்க்கரை வியாதிக்கு நல்லது. என்னிடம் ஒருவர் தான் செய்யும் உடற்பயிற்சி பற்றி பெருமை அடித்துக் கொண்டதாகவும், அவரிடம் ஒன்று உடலை வளர்க்கலாம், இல்லாவிட்டால் மூலியை வள்ர்க்கலாம் என்ற ரேஞ்சுக்கு பேசி அவரையும் என் வழிக்கு கொண்டு வந்தேன்.

ராமதாஸ் தலித்துகளை குறிவைத்து தாக்குவதை கண்டிக்கிறேன். ஆண்டாண்டு காலமாக தலித்துகள் கொடுமை செய்யப்பட்டதை மறுக்கவியலாது.

13. பொன்னுசாமி, ஆவடி:
திமுக ஆட்சியில் இருந்த குறைகள் அதிமுக ஆட்சியில் மறையவில்லை.

அதை சோ அவர்கள் மறுத்தார். புள்ளி விவரங்கள் இல்லாவிட்டாலும் போலீஸ் ஸ்ட்ரேஷனில் கட்சி ஆட்கள் நுழைவதில்லை, கட்டைப் பஞ்சாயத்து குறைந்து விட்டது, ரொடியிசம் இல்லை. குற்றங்களும் குறையும் என நம்புகிறேன்.

14. குணசேகரன், ராயப்பேட்டை:
 மோடியை உயர்த்த நிதிஷ்குமாரை மட்டம் தட்டுகிறார்  சோ. குஜராத்துக்கு டீமை அனுப்புவதுபோல பீஹாருக்கும் அனுப்பலாமே.
ஜெ அரசு கல்விக்கு முக்கியத்துவம் தரவில்லை.

சோ தனது பதிலில் ஜெ கல்விக்கு முக்கியத்துவம் தருவதை உதாரணங்களுடன் விளக்கினார். பீஹாருக்கு டீம் அனுப்புவது நல்ல யோசனை என்றும் அவ்வாறே செய்யலாம். நிதிஷ் குமாரை வேண்டுமென்று மட்டம் த்ட்டவிலை.

15. கோபால கிருஷ்ணன், ஈரோடு:
 மோடிக்கு தனி மெஜாரிடி இருபதால் குஜராத்தில் செயல்பட முடிகிறது, ஆனால் மத்தியில் கூட்டணி ஆட்சிதான் என ஆன பிறகு, கூட்டணி நிர்ப்பந்தங்களை அவரால் சமாளிக்க இயலுமா?

சோ அவர்கள் இங்கு ஒரு தவறு செய்துள்ளார், இன்றைக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் ஏன் தரவில்லை?,

சோ: இவர் ஒருவர்தான் பொங்கல் தினம் புத்தாண்டாக இருந்தது என்பதை ஞாபகம் வைத்துள்ளார்.

மோதி இப்போதே குஜராத்தில் தனது கட்சியிலேயே ப்ல தரப்பு மக்களை சமாளித்து கூட்டணி ஆட்சிதான் நடத்துகிறார். கண்டிப்பாக மத்தியிலும் அவரால் சமாளிக்க இயலும், எங்குமே கூட்டணிதான்.

இப்போது சோவின் பேச்சு:
ஜெ அவர்களை நான் எல்லா விஷயங்களிலும் ஆதரிக்கவில்லை. தான் அவருடன் கருத்து மாறுபடுவதையும் பல உதாரணங்களுடன் விளக்கினார். அதே சமயம் ஜெ செய்த நல்ல விஷயங்களையும் பட்டியலிட்டார். தான் பேசுவது நமது எம்ஜிஆர் பத்திரிகை ரேஞ்சுக்கு இருப்பதாக சிலர் கூறுவதை குறிப்பிட்ட அவர் அப்படியாவது அப்பத்திரிகைக்கு வரும் விளம்பரங்கள் போல தமது பத்திரிகைக்கும் வந்தால் நன்றாக இருக்குமே என விசனப்பட்டார். பிறகு தான் ஜெய்லலிதாவை ஆதரிப்பதன் காரணமே திமுக மீண்டும் பதவிக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் என்பதையும் தெளிவுபடுத்தினார்.

முதல் மந்திரியை சுலபமாக பார்க்க முடியவில்லை என சிலர் கூறுவதற்கு, ஏன் அவர் எல்லோரையும் பார்க்க வேண்டும்? அவர் என்ன கருணாநிதியா அவர் முதல் மந்திரியாக இருந்தபோது  வேறு வேலை இல்லாமல் இருந்தது போல?

ஜெ பல தரப்பினரை பார்த்து தமிழகத்துக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றுகிறார். காற்றுவழி மற்றும் நீர்வழி மின்சாரம் தட்டுப்பாட்டிற்கு இயற்கைதான் காரணம். வெளி மாநிலத்திலிருந்து மின்சாரம் தருவிக்க மத்திய அரசு ஒத்துழைப்பு தர மறுக்கிறது. பாகிஸ்தானுக்கு வேண்டுமானால் பவர் தருவோம், தமிழகத்துக்கு இல்லை என்ற ரேஞ்சில் மத்திய அரசு நடந்து கொள்கிறது.

போர்க்கால அடிப்படையில் ஜெ செயல் புரிஇறார், சீக்கிரமே நிலைமை சீர் அடையும் என நம்புகிறேன். எது எப்படியாயினும் திமுக மீண்டும் பத்விக்கு வந்துவிடக்கூடாது என்பதுதான் எனது எண்ணம். அதற்காகவே தான் அதிமுக அரசை அனுசரித்து போகிறேன்.

இப்போது நடக்கவிருப்பது பாராளுமன்ற தேர்தல், அங்கு அதிமுக நல்ல பலத்துடன் வெற்றிபெறுவது முக்கியம் என்றும் அவர் கூறினார். இத்தேர்தலில் காங்கிரஸின் ஊழல் ஆட்சி எக்ஸ்போஸ் செய்யப்பட வேண்டும்.

அத்தருணத்தில் ப. சிதம்பரம் அவர்களது உளறல்களையும் அவர் கண்டித்தார். கருணாநிதியுடன் பழகும் தோஷத்தால் இவரும் அவர் மாதிரியே பேசுகிறார்.

குஜராத்தில் தாங்கள்தான் ஜெயிச்சோம் என ப.சிதம்பரம் கூறுவதையும் சோ கிண்டலடித்தார். பிரதமரோ எல்லாவற்றுக்கும் கவலைப்பட்டால் தனது வேலை முடிந்தது என நினைக்கிறார். ஒரு காலத்தில் நல்ல பெயருடன் அறியப்பட்ட அவர் இப்போது ஐயோ பாவம் ரேஞ்சுக்கு வந்து விட்டார்.

பாஜகாவில் பலரும் தன்னைத்தாமே தலைவர் ரேஞ்சுக்கு நினைத்துக் கொள்வதில்தான் சிக்கலே இருக்கிறது. அத்வானி அவர்கள் முன்மொழிந்து மோதி பிரதமராக ஆவன செய்ய வேண்டும்.

மாநில அளவில் திமுக என்ன செய்கிறது என்பது பற்றியும் அவர் பேசினார். தமிழகத்தில் விளக்கு எரிந்தால் தன் வீட்டில் இருள் வரும் என கருணாநிதி நினைக்கிறார்.

ஜெ மத்திய அரசுடன் சமாதானமாக போக வேண்டும் என்று கூறுபவர்களிடம் ஒரு ஒத்துழைப்பையும் தர மறுப்பவர்களிடம் எவ்வாறு சமாதானமாக போக இயலும் என கேட்டார். அவர் தைரியமாக சண்டைபோட வேண்டிய இடங்களில் போடுவதால்தான் அவர் அரசு நிலைத்து நிற்கிறது.

இப்போ டெசோ பற்றி சோ பேச ஆரம்பிக்க ஆடியன்சில் ஒரே சிரிப்பு. கருணாநிதி எவ்வாறு அது பற்றி மாற்றி மாற்றி பேசுகிறார் என்பதை சோ அபிநயித்துக் காட்டினார்.

வெளிநாடுகளில் சட்டத்துக்கு இருக்கும் மரியாதை இங்கு இல்லாததன் காரணமே தண்டனைகள் குறைவாக இருப்பதுதான்.

காங்கிரஸில் ஊழல் பேர்வழிகள் அதிகம் பாஜகாவில் நேர்மையாளர்கள் அதிகம் மோதி பிரத்மராக வாய்ப்புகள் அதிகம்.

கடைசியில் பாஜகா அதிமுக கூட்டணி வருமா என ஆடியன்சிலிருந்து கேள்விவர, “என்னை ஏன் கேட்கிறீர்கள், அவங்களைக் கேளுங்க என ஆடியன்சையே சுட்டிக்காட்டினார் (அங்கு பாஜக காரர்கள் இருந்திருப்பார்கள் என நான், டோண்டு, நினைக்கிறேன், :)))

பாராளுமன்ற தேர்தலில் அதிமுக நல்ல பலம் பெற வேண்டும், காங்கிரஸ் தோற்க வேண்டும், திமுக மீண்டும் வரக்கூடாது என மறுபடியும் கூறி சோ அவர்கள் தனது உரையை முடித்துக் கொண்டார்

நேரில் பார்த்ததை எழுதாமல் இம்மாதிரி வீடியோவை பார்த்து எழுதியதை அழுகினி ஆட்டம் ஆடியது போல உணர்கிறேன். இருந்தாலும் என்ன செய்வது வேறு வழியில்லை. அடுத்த ஆண்டு பார்ப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்


                                  

  



 

1/03/2013

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 03.01.2013

சோ அவர்களது கேள்வி பதில்களில் சில 

சில கேள்வி பதில்களுடன் எனது சேர்க்கையும் சில சமயம் இருக்கும். கண்டுக்காதீங்க.

1. கே: குஜராத் தேர்தல் வெற்றி நரேந்திர மோதி என்ற தனிமனிதருடையதா? இல்லை பாரதீய ஜனதாக் கட்சியுடையதா?
ப: ஒரு தனி மனிதர் மாநில அளவில் இப்படிப்பட்ட வெற்றியை பெற்று விட முடியது.அதே போல ஒரு கட்சியும் கூட, மக்களிடையே நம்பிக்கையை பெற்ற ஒரு மனிதனின் தலைமயில் இயங்கும்போதுதான் இப்படிப்பட்ட வெற்றிகளைப் பெற முடிகிறது. இப்படி வேண்டுமானால் சொல்லலாம்: பாரதிய ஜனதா ஒரு மோட்டார் கார். அதை ஓட்டிச் சென்றவர் நரேந்திர மோதி. இரண்டுமே அபாரமாக இருந்தால்தான் வெற்றி பெற முடியும்.  

2. கே. குஜராத் தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற்ற நரேந்திர மோதி தனது அரசியல் எதிரியான கேசுபாய் படேலை சந்தித்து ஆசி பெற்றுள்ள அரசியல் நாகரிகம் பற்றி?
ப: இதில் அரசியல் நகரிகமும் இருக்கிறது, அரசியல் விவேகமும் இருக்கிறது. கேசுபாய் படேலை நம்பி ஓட்டளித்த படேல் சமூகத்தினர் மீண்டும் அத்தவற்றைச் செய்யாமலிருக்க இந்தப் பெருந்தன்மையான நடவடிக்கை உதவும் அல்லவா?
டோண்டு ராகவன் சேர்ப்பது: பிறகு பத்திரிகையாளர்களுடன் பேசிய கேசுபாய் படேல் தான் அல்பத்திலும் அல்பம் என்பதை நிரூபித்துள்ளார். அதுவும் மோதிக்குத்தான் பலம் சேர்க்கிறது.

3. கே: குஜராத் ஒன்றும் இந்தியா அல்ல என நரேந்திர மோதியின் வெற்றி குறித்து காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளதே?
ப்: காங்கிரஸ்காரர்களுக்கு மோதி மேல் வரும் கோபத்தில் குஜராத் இந்தியாவிலேயே இல்லை என்று கூட சொல்லத் தயாராகி விடுவார்கள் போலிருக்கிறதே.
டோண்டு ராகவன் சேர்ப்பது: அப்படியாவது ஆறுதல் பெறட்டும் காங்கிரஸ்.

4. கே: எடியூரப்பா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மீது இப்போதைக்கு நடவடிக்கை இல்லை என பாரத் ஈய ஜனதா முடிவெடுத்திருப்பது பயத்தினால்தானே?
ப: இப்போதைக்கு சுயமரியாதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தாலாட்சி கவிழ்ந்துவிடும். ஆகையால் அதையெல்லாம் ஒதுக்கிவிட்டு ஆட்சி தொடர வழி செய்வ்அது என்று பாஜக த்லை தீர்மானித்திருப்பது புரிகிறது
டோண்டு ராகவன் சேர்ப்பது: இது நிச்சயம் பாஜகவுக்கு இழிவுதான்.

ஆனந்த விகடன் செய்யும் கூத்து (இதழ் 09.01.13)
லேட்டஸ்ட் விகடன் முதல் கட்டுர்ஃபை ஆணாதிக்கத்தை எதிர்த்து முழக்கமிடுகிறது. அடுத்த கட்டுரையோ நயனதாரா யாருக்கு என சீப்பாக இரு சகோதர்களுக்கிடையே நடக்கும் போட்டியை பற்றி எழுதுகிறது. இக்கட்டுரையின் டைட்டில் ஆணாதிக்கத்துக்கு சரியான சான்று.

வட அமெரிக்காவிலிருந்து வெளிவரும் தென்றல் மாத இதழ்
அமெரிக்காவிலிருந்து திரும்பிய எனது மைத்துனி எனக்கு இதன் இரண்டு மாத இதழ்களைத் தந்தார். தூள் கிளப்புகிறது. அக்டோபர் 2012 இதழில் நம்ம பழமைபேசியின் கவிதை அமர்க்களம். அதை இங்கே பார்க்கவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்








1/02/2013

ஒன்று இரண்டு என வரிசைப்படுத்தப்பட்ட பத்துக் கட்டளைகள் சுஜாதாவிடமிருந்து

சுஜாதாவின் பத்துக் கட்டளைகள்… (கண்டிப்பாக படிக்கவும் !!!) என மின்னஞ்சல் அனுப்பியுள்ளான் என கணினி குரு முகுந்தன். பலருக்கு (முக்கியமாக இளைய சமுதாயத்துக்கு இவற்றில் பல புத்தாண்டுக்கான புது தீர்மானங்களாகக் கூட இருக்கலாம்.

1. ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், ஏதாவது ஒன்று. உதாரணம் கடவுள், இயற்கை, உழைப்பு, வெற்றி இப்படி எதாவது… நம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி கேட்காத நம்பிக்கை. கேள்வி கேட்பது சிலவேளை இம்சை. நவீன விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு இப்போது தவித்துக் கொண்டிருக்கிறது.

2. அப்பா, அம்மா இரண்டு பேரும் வேலை சொல்வது பல சமயங்களில் கடுப்பாக இருக்கும். ஒருமாறுதலுக்கு அவர்கள் சொல்வதைச் செய்து பாருங்கள். அவர்கள் கேட்பது உங்களால் செய்யக் கூடியதாகவே இருக்கும். பொடிநடையாகப் போய் நூறு கிராம் காப்பி பவுடர் (அ) ரேஷன் கார்டு புதுப்பித்தல் இப்படிதான் இருக்கும்.

3. மூன்று மணிக்குத் துவங்கும் மாட்டனி போகாதீர்கள். க்ளாஸ் கட்பண்ண வேண்டி வரும். தலைவலி வரும். காசு விரயம். வீட்டுக்குப் போனதும் பொய் சொல்வதற்கு ரொம்ப ஞாபக சக்தி வேண்டும். இந்த உபத்திரத்துக்கு உண்மையைச் சொல்லிவிடுவது சுலபம். இளமைக்காலம், ஒளிக் கீற்றைப் போல் மிகவும் குறைந்த காலம், அதை க்யூ வரிசைகளிலும் குறைபட்ட தலைவர்களுக்காகவும் விரயம் செய்யாதீர்கள்.

4. நான்கு பக்கமாவது ஒரு நாளைக்குப் பொது விஷயங்களைப் படியுங்கள். பொது விஷயங்கள் என்றால் கதை, சினிமா, காதல் இல்லாதவை. உதாரணம் – யோக்கியமான செய்தித்தாள், மற்ற பேரைப் பற்றிக் கவலைப்படும் பத்திரிகைகள் அல்லது லைப்ரரியிருந்து ஒரு புத்தகம்.

5. ஐந்து ரூபாய் சம்பாதித்துப் பாருங்கள். சொந்தமாக உங்கள் உழைப்பில், முயற்சியில், யோக்கியமாக, மனச்சாட்சி உறுத்தாமல். அடுத்த முறை அப்பாவிடம் ஆயிரம் ரூபாய்க்கு ஷர்ட், சுடிதார் கேட்கும் முன்.

6. இந்தச் தகவல்களை படிக்கும் நிலைமை பெற்ற நீங்கள் இந்திய சனத்தொகையின் மேல்தட்டு ஆறு சதவிகித மக்களில் ஒருவர். அன்றாடம் சோற்றுக்காக அலையும், வசதியில்லாத கோடிக்கணக்கான மக்களைத் தினம் ஒரு முறை எண்ணிப் பாருங்கள்.

7. வாரத்தின் ஏழாவது தினமான ஞாயிறன்று என்ன செய்தாலும் காதல் பிஸினஸ் வேண்டாம். காதலுக்கு ரொம்பச் செலவாகும். மனம், வாக்கு, காயம்(உடல்), எல்லாவற்றையும் ஆக்கிரமிக்கும் தீ அது. பொய் நிறையச் சொல்ல வேண்டும். வினோதமான இடங்களில் காத்திருக்க வேண்டும். இந்த வயதில் நாசமாய்ப்போன படிப்புத்தான் உங்களுக்கு முக்கியம்.குறிப்பு: பெண்களை சைட் அடிப்பதும், கலாட்டா பண்ணுவதும், அவர்களுக்கு கர்சீப் முதலியன ரோடிலிருந்து பொறுக்கிக் கொடுப்பதும், உபத்திரமில்லாத கவிதைகள் எழுதுவதும், காதலோடு சேர்த்தியில்லை.


8.எட்டு முறை மைதானத்தை சுற்றி ஓடினால் எந்தச் சீதோஷ்ணமாக இருந்தாலும் நெற்றி வியர்வை அரும்பும். எதாவது தேகப் பயிற்சி செய்யவும். கடிகாரத்துக்குச் சாவி கொடுப்பதோ சீட்டாடுவதோ தேகப் பயிற்சி ஆகாது. எதையாவது தூக்குங்கள், எதையாவது வீசி எறியுங்கள். உங்கள் உடலில் ஊறும் உற்சாகத்துக்கு ஓர் ஆரோக்கியமான வடிகால் தேவை. ராத்திரி சரியாக தூக்கம் வரும். கன்னா பின்னா எண்ணங்கள் தவிர்க்கப்படும். ஒழுங்காக சாப்பிடத்தோன்றும். பொதுவாகவே சந்தோஷமாக இருக்கும்.

9. ஒன்பது மணிக்குள் வீட்டுக்கு வரவும். மிஞ்சிப் போனால் ஒன்பது மணி இரண்டு நிமிடம். ஒரு மணி நேரம் பாடம் அல்லது புத்தகம் படிக்கலாம்.

10. படுக்கப் போகும் முன் பத்து நிமிஷமாவது அம்மா, அப்பா, அண்ணன், தங்கை யாருடனாவது பேசவும் (பேசுவது என்று சொன்னவுடன் காதலியுடன் என்று நினைக்க வேண்டாம், நான் சொன்னது குடும்பத்தினருடன் மட்டும்). எதாவது ஒரு அறுவை ஜோக் அல்லது காலேஜில் நடந்த நிகழ்வுகள். சப்ஜெக்ட் முக்கியமில்லை. பேசுவது தான்.

இந்த பத்தில் தினம் ஒன்று என்று முயற்சி செய்து தான் பாருங்களேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

1/01/2013

எல்லோருக்கும் 2013-க்கான புத்தாண்டு வாழ்த்துக்கள்

நேற்று நடந்தது போல இருக்கிறது, Y2K பிரச்சினை இல்லாமல் போன ஜனவரி 1, 2000 ஆண்டு. அதன் பிறகு பல விஷயங்கள் நடந்தன என்றாலும் இப்பதிவுக்கு 2012-ல் நடந்ததை நினைவுக்கு கொண்டு வருவதே பொருத்தமாக இருக்கும்.  இருந்தாலும்  Y2K பற்றிய பதிவை முதலில் பார்த்து விடுவோமா. ஓவர் டு Y2K.

புது தில்லி, திசம்பர் 31, வருடம் 1999, இரவு 10.30 மணி. All India Radio வெளிநாட்டு ஒலிபரப்பு சேவை. நானும் போஸ் அவர்களும் காரில் சென்று இறங்கி, நியூஸ் ரூமுக்கு சென்றோம். அன்று பிரெஞ்சு செய்திகள் எழுதி படிக்க வேண்டியது என் முறை. அன்று இரவு ஒன்பது மணிவாக்கில் படிக்கப்பட்ட ஆங்கில செய்திகளின் பக்கங்கள் அங்கு எனக்கு கொடுக்கப்பட்டன.

முதல் செய்தியே Y2K பற்றித்தான். உலகமே வருடம் 2000-த்தை ஒரு வித பயத்துடன் பார்த்து கொண்டிருந்தது. அது வரை கணினியில் வருடங்களை இரு எண்களிலேயே குறிப்பிட்டு வந்தனர். உதாரணத்துக்கு 1999 வருடத்தை 99 என்று குறித்தனர். அறுபதுகளில் கணினி உபயோகம் அதிகரிக்க ஆரம்பித்த போது தேதிகளை குறிப்பிடும்போது 1960 என்பதற்கு பதிலாக 60 என்றே குறிப்பிட்டு வந்தனர். அப்போது அதை யாரும் பெரிதாக நினைக்கவில்லை. 2000 ஆண்டு நெருங்க நெருங்க பயம் ஆரம்பித்தது. அப்போதைய நிலவரப்படி வருடம் 2000 வெறுமனே 00 என்று ஆகிவிடும். அதைக் கணினி ஏற்பாடுகள் எவ்வாறு புரிந்து கொள்ளும் என்பதில்தான் குழப்பமே. அதை 1900 என்றுதான் புரிந்து கொள்ளும் என்று பலரும் நினைத்தனர். அவ்வாறின்றி 2000 என்று புரிந்து கொள்ள வேண்டுமானால் வருடங்களை நான்கு எண்களில் குறிக்க ஆரம்பிக்க வேண்டும். ஆனால் இருக்கும் எல்லா தகவல் கோப்புகளிலும் அதை 2000-க்குள் செய்து விட முடியுமா என்பதுதான் பிரச்சினைக்குரிய கேள்வி.

அப்போது கணினி பற்றி என் அறிவு பூஜ்யம். இருப்பினும் பிரச்சினையின் தீவிரத்தை புரிந்து கொள்ள முடிந்தது. இதைத் தீர்ப்பதில்தான் இந்தியர்களின் மென்பொருள் திறமை உலகுக்கு தெரிந்தது என்று நினைக்கிறேன். இது சம்பந்தமாக பல கட்டுரைகள். ஒன்றிரண்டை நான் பிரெஞ்சிலிருந்தும் ஜெர்மனிலிருந்தும் மொழிபெயர்த்ததில் எனக்கு செம துட்டு வேறு.

இப்போது ரேடியோ செய்திக்கு திரும்ப வருவோம். 9 மணி ஆங்கில செய்தியில் ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் பிரச்சினையின்றி 2000 ஆண்டுக்குள் நுழைந்தன, இந்தியா இன்னும் சிறிது நேரத்தில் அந்த கோட்டை கடக்கும் என்று செய்திகள் வாசிக்கப்பட்டன. அந்த செய்திதான் என்னிடம் மொழிபெயர்க்க கொடுக்கப்பட்டது.

ஆனால் நான் செய்தி வாசித்தபோது மணி விடியற்காலை 1.20. வெற்றிக் களிப்புடன் முதல் தலைப்பு செய்தியாக இந்தியா வெற்றிகரமாக 2000 ஆண்டிற்குள் பிரவேசம் செய்தது என்று படித்து, பிறகு விரிவான செய்தியில் ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் முதலில் அப்பிரச்சினையை வெற்றிகரமாக தாண்டினர் என்று படித்தேன். செய்தியை முடித்து விட்டு இன்னொரு அறிவிப்பாளர் செய்தி விமரிசனம் படிக்கும்போது அறையை விட்டு வெளியே வந்தேன். அப்போதுதான் கட்டுப்பாடு அதிகாரி வேகமாக வந்து என்னிடம் எனக்கு தரப்பட்ட ஆங்கிலச் செய்தியை அப்படியே மொழிபெயர்த்தேனா என்று கேட்க, அவரிடம் நான் செய்த மாறுதலைக் கூறினேன். நான் மேலும் கூறினேன்: "நாம் ஏற்கனவே 2000 ஆண்டில் பிரவேசித்து விட்டோம். எல்லாம் நல்லபடியாகத்தானே ஓடுகின்றன" என்று கூற அவரும் பாராட்டினார். இரவு 12.15-க்கு ஹிந்தி செய்தி வாசித்தவர் தனக்கு கொடுத்ததை அப்படியே மொழிபெயர்த்தார் என்பதைக் கூறிவிட்டு, நான் செய்த மாறுதலை ஆதரித்தார். ஆக அகில இந்திய வானொலியில் இந்த செய்தியை முதலில் கொடுத்தது நானே என நினைக்கிறேன்.

இப்போதும் Y2K பிரச்சினை எவ்வாறு தீர்க்கப்பட்டது என்பதில் நான் தெளிவாக இல்லை. யாரேனும் மென்பொருள் நிபுணர்கள் கூறினால் நலமாக இருக்கும். அல்லது பிரச்சினை முதலிலிருந்தே இல்லையா? எல்லாமே கற்பனைதானா?

சரி, நிகழ்காலத்துக்கு வருவோம்.

2012 எப்படி இருந்தது? என்னைப் பொருத்தவரைக்கும் அது எனது புற்றுநோயால் நிரப்பப்பட்டது. லட்சக்கணக்கில் பணச்செலவு வேறு. இருப்பினும் என் வீட்டம்மாவின் அன்பான கவனிப்பில் என்னை சுதாரித்துக்கொள்ள முடிந்தது 

மொழிபெயர்ப்பு வேலைகள் தாராளமாக வர, செலவழித்த தொகையை மீண்டும் சம்பாதிக்க முடிந்தது, எனது தன்னம்பிக்கையும் வளர்ந்தது. சென்னைக்கு வரவிருக்கும் மெட்ரோ ரயில் இஞ்சினுக்கான முகப்புக் கண்ணாடியின் ஸ்பெசிஃபிகேஷன்களை பிரெஞ்சிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்த வேலை எனக்கு நிறைவைத் தந்தது. மொத்தத்தில் 2012-ஆம் ஆண்டு தொழில்முறையில் நம்பிக்கை அளித்தது என்றுதான் கூற வேண்டும்.

பொதுவாகப் பார்த்தால் குஜராத்தில் மோதி அவர்கள் வெற்றி பெற்றது மனதுக்கு நிறைவைத் தந்தது.

அதே சமயம் உடல்நிலை ஒத்துழைக்காதலால் துக்ளக் ஆண்டு நிறைவு கூட்டத்துக்கு போக இயலவில்லை. வெளியூர் சென்று செய்யவேண்டியிருந்த ஜெர்மன் துபாஷி வேலையும் செய்ய இயலவில்லை. புத்தகக் கண்காட்சிக்கும் செல்ல முடியவில்லை. இவையெல்லாம் குறைகளே, இருந்தாலும் வேறு வழியில்லைதானே.


இன்று 2013-ஆம் ஆண்டு ஆரம்பம். நல்லபடியாகவே இருக்கும் என்னும் நம்பிக்கையுடன் வலைப்பூ நண்பர்கள் எல்லோருக்கும் டோண்டு ராகவனின் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

12/28/2012

தந்தி போவுது தபால் போவுது

இப்படி ஒரு விளையாட்டாம்.

இந்த விளையாட்டைச் சிறுவர் சிறுமியர் வட்டமாக உட்கார்ந்து ஆடுவர். ஒருவர் பட்டவர். அவருக்குத் தெரியாமல் ஒரு மணியாங்கல் வட்டத்தில் உள்ளவரிடையே கைமாறும். ஒருவர் கையில் கல் தங்கிவிட்டாலும், அவர் அடுத்தவரிடம் கல்லைக் கொடுத்துவிட்டது போல் நடிப்பார். இதனால் மணியாங்கல் யாரிடம் உள்ளது என்பது கல் வைத்திருப்பவரைத் தவிர யாருக்கும் தெரியாது. மூன்று சுற்று கைமாற்றம் நிகழ்வதற்கு முன் பட்டவர் யாரிடம் கல் உள்ளது என்று சொல்லிவிட வேண்டும். சொல்லாவிட்டால் பட்டவரைக் குனியவைத்து அவர் முதுகில் ஆளுக்கொரு தட்டு தட்டுவர். சொல்லிவிட்டால் கல் வைத்திருந்தவர் முதுகில் அனைவரும் தட்டுவர்.

இப்படி ஆட்டம் முடிந்தபின் மீண்டும் புதிதாகப் பட்டவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அடுத்த ஆட்டம் தொடரும். கல்லைக் கடத்தும்போது எல்லாரும் சேர்ந்து பாட்டுப் பாடுவர். தந்தி போவுது தபால் போவுது திரும்பத் திரும்ப இசையுடன் பாடுவர். 

இப்போ எதுக்கு இது பத்தி பேசறே என்னும் முரளி மனோகருக்கான பதில்தான் இப்பதிவு.

சமீபத்தில் 1969-ல் வெளியான படம் தர்தீ கஹே புகார் கே (நிலம் என்னும் நல்லாள் அழைக்கிறாள்) என்ற படத்தில் ஒரு சீன். ஜீதேந்திரா வயலில் இருக்க, அவன் அண்ணன் மகன் வந்து வீட்டுக்கு தந்தி வந்திருக்கிறது, அதை வைத்துக் கொண்டு அம்மா அழுகிறாள் என பதட்ய்டத்துடன் கூற, ஜீத்தேந்திராவும் அங்கு சென்று கூடவே ஒப்பாரி வைப்பார். தந்தியில் என்ன விஷயம் என யாருக்கும் தெரியாது, ஏனெனில் யாருமே படித்தவர்கள் இல்லை. கிராம ஆசிரியர் அபீ பட்டாசார்யா வந்து நல்ல விஷயம்தான் எனக் கூறும்வரை அமர்க்களம் நீடிக்கும்.

இங்கு நான் சொல்ல வந்தது தந்தி என்றால் சராசரி இந்தியர்கள் பதறுவது பற்றியே. ஆனால் தற்சமயம் தந்திகளை யாராவது அனுப்புகிறார்களா? நன் கடைசியாக 2003-ஆம் ஆண்டில் ராமேஸ்வரத்துக்கு ஒரு தந்தி அனுப்பினேன், ஏனெனில் விலாசதாரரிடம் ஃபோன் இல்லை. அதன் பிற்கு லேது. ஆண்டு துவக்கத்தில் தபால் ஊழியர்கள் தீபாவளி இனாம் கேட்டு வருவார்கள், அவர்களுள் தந்தி ஊழியர்கள் அதிகம். ஆனால் தற்சமயம் அதுவும் இல்லை. கூரியர் வந்து விட்ட இக்காலத்தில் ஆர்டினரி தபாலே இல்லை என ஆகிவிட்டது. சில அரசு சார் கடிதங்கள் மட்டும்தான் தந்தியில் அனுப்பப்படுகின்றன என நினைக்கிறேன்.

ராஜேஷ் கன்னாவின் இப்பாடல் காட்சிகள் இப்போது காணக்கிடைக்காது என்றே சொல்ல வேண்டும்.



ஒரு வேளை கிராமங்களில் இன்னும் இதெல்லாம் நடக்கிறதா எனத் தெரியவில்லை.? யாராவது சொல்லுங்கப்பூ.

இப்பல்லாம் தந்தி பற்றிய விளையாட்டுகளில் மட்டுமே அது பற்றி பேசுவார்கள் போல.

இத்துடன் தொடர்பு உள்ள எனது இன்னொரு பதிவு இதோ.

ஸ்ரீலங்காவில் தந்திக்கு மங்களம் பாடிவிட்டார்கள் போல தெரிகிறதே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

பின்சேர்க்கை: நணபர் நாகராஜன் அன்புடன் அனுப்பிய கௌரி கல்யாணம் பாட்டின் வீடீயோ இதோ:

12/23/2012

குஜராத்துக்கும் பிற மாநிலங்களுக்கிடையில் உள்ள முக்கிய வேறுபாடுகள்

குஜராத்தில்கூட மோதிக்கு முன்னால் அவர் வந்த பிற்கு என பார்க்க வேண்டியுள்ளது.

முதலில் குஜராத்தில் மோதிக்கு முன்னால் எப்படி இருந்தது, அதை அவர் எவ்வாறு சரி செய்தார் என்பதை பார்ப்போமா.

1. மோதி பொறுப்பை ஏற்ற சமயம்கல்வி விஷயத்தில் அதுவும் பெண்குழந்தைகள் கல்வி விஷயத்தில் குஜராத் 20-ஆம் இடத்தில்தான் இருந்தது. அதுவும் பாதியில் படிப்பை விடுபவர்கள் 49 விழுக்காட்டில் இருந்தனர்.
இந்த நிலையை மாற்ற வேண்டும் என்று மோதி முடிவு செய்தார். எல்லா பின் தங்கிய பகுதிகளுக்கும் விசிட் செய்தார். முக்கியமாக பெண்கள் கல்வியறிவு பெறுவதற்கு முன்னுரிமை அளித்தார். கடந்த நான்கு ஆண்டுகளில் பாதியில் படிப்பை விடுபவர்களது விழுக்காடு  2008-ல் 49-லிருந்து 4-க்கு வந்துள்ளது. (2011-ல் படிப்பாளிகள் 80%, அரசின் விடாமுயற்சியால்).

மேலும், பிரசவத்தில் பெண் மரணம் என்பது குஜராத்திலும் மற்ற இடங்களைப் போலவே துவக்கத்தில் இருந்திருக்கிறது.
மோதி அவர்கள் ஒரு காரியம் செய்தார். ஒவ்வொரு வெற்றிகரமான பிரசவத்துக்கு பிறகும் வைத்தியம் பார்த்த மருத்துவருக்கு ரூபாய் இரண்டாயிரம் ஊக்கத் தொகை அறிவித்தார். பிரசவத்துக்கு வரும் ஏழை பெண்களுக்கும் நல்ல மருத்துவ மற்றும் பண உதவி அளிக்கப்பட்டது. (ஒரு நாளைக்கு ரூபாய் 200, கூட வரும் அட்டெண்டண்டுக்கும் அதே தொகை). இதன் மூலம் 1,58,000 கர்ப்பிணிகள் பயன் அடைந்தனர். இதெல்லாம் இல்லாத நிலையில் பிரசவ மரணம் 6000 என்ற நிலையிலிருந்து ஒரே ஒரு மரணம் என்ற அளவில் பிரமிக்கத்தக்க முறையில் இறங்கியுள்ளது என அவர் துக்ளக் ஆண்டுவிழா கூட்டத்தில் கூறினார்.அதே கூட்டத்தில் அவர் கூறிய பிற விஷயங்கள் இன்வருமாறு:.


2. தமிழகத்தில் மின்சாரம் வந்தால் அது செய்தி. குஜராத்திலும் முதலில் அதே நிலைமைதான் மோடி அவர்கள் பதவிக்கு வந்த போது இருந்தது.
நிலைமையில் முன்னேற்றம் காண்பது கடினம் என்பது அதிகாரிகளின் கூற்று. மோடி அவர்கள் சளைக்காது நடவடிக்கை எடுத்தார். பகுதி பகுதியாக எடுத்து காரியமாற்றினார். முதல் 1000 நாட்களில் 45 விழுக்காடு கிராமங்களுக்கு முழு மின்சாரம் வழங்கப்பட்டது. இப்போது அதே திட்டம் குஜராத் முழுக்க விஸ்தரிக்கப்பட்டு 100 விழுக்காடு கிராமங்களுக்கு 24 மணி நேரமும் 3-phase மின்சாரம் வழங்கப்படுகிறது. இதற்காக மோடி அவர்கள் முதல் 1000 நாட்களில் செய்த விஷயங்கள் பின்வருமாறு. 23 லட்சம் மின்கம்பங்கள், 56,000 ட்ரான்ஸ்ஃபார்மர்கள், 75000 எலெக்ட்ரிக் மீட்டர்கள் ஆகியவை பொருத்தப்பட்டன. ஒரு அரசு மனது வைத்தால் என்னென்ன செய்ய முடியும் என்பதற்கு இதை விட நல்ல உதாரணம் வேறு ஏது?

 ”500 நாட்களில் 700 கிலோமீட்டர் நீளத்துக்கு நர்மதா திட்டத்தில் பைப்புகள் இடப்பட்டன” என்று சோ கூறியதை குறிப்பிட்டு அதை அப்டேட் செய்தார். தற்போது அதே புள்ளிவிவரம் 700 நாட்களில் 1400 கிலோமீட்டர் பைப்லைன்கள் போடப்பட்டன என்று கூறினார். அந்த பைப்பில் கருணாநிதி அவர்கள் தன்னுடைய குடும்பத்தாருடன் காரில் செல்ல இயலும் என்று பைப்லைனின் விட்டத்தை பற்றி கூறுவதற்காக அவர் தமாஷாக மேற்கோள் காட்டினார். (ஜெயும் சசிகலா கூட அவ்வாறு செய்யலாம்). ஒரே சிரிப்பு அரங்கில். தனக்கு எதிராக ஒரு ஊழல் புகாரும் இல்லை என்பது ஒரு புறம் மகிழ்ச்சி அளித்தாலும், மறுபுறம் அதை தக்க வைத்து கொள்ள வேண்டுமே என்ற கவலையும் இருக்கிறது என்றார். 

3. அரசு மனம் வைத்தால் வருவாயையும் பெருக்க இயலும் என்கிறார் மோதி. ஆனால் அது லஞ்சத்தை ஒழித்தால்தான் முடியும். உதாரணத்துக்கு மஹாராஷ்டிரம் மற்றும் குஜராத் வழியில் செல்லும் நெடுஞ்சாலையில் குஜராத் பக்கத்தில் ஒரு எல்லை செக்போஸ்ட் உண்டு, மஹாராஷ்ட்ரா பக்கத்தில் ஒரு செக்போஸ்ட் உண்டு. இரண்டிலும் ஒரே அளவு வண்டிகள் போக்குவரத்துதான். குஜராத் தரப்பினர் சட்ட பூர்வமாக கலெக்ட் செய்வது ஒரு நிதியாண்டில் மஹாராஷ்ட்ரா தரப்பில் உள்ளதை விட 239 கோடியே 60 லட்சம் ரூபாய் அதிகம். சட்டப்படி என்னவெல்லாம் வருமானம் அரசுக்கு வரக்கூடும் என்பதை அது தெளிவாகக் காட்டுகிறது. ஆனால் அதெல்லாம் செய்யாது விட்டால் கீழ்மட்டத்திலிருந்து மேல் மட்டம் வரை அதிகாரிகள், மந்திரிகள் ஆகியோரது தனிப்பட்ட பணப்பைதான் நிறைகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

4. மேலும் சில குஜராத் புள்ளி விவரங்கள். மோடி முதலில் ஆட்சிக்கு வந்தபோது நிதி பற்றாக்குறை 6700 கோடி ரூபாய், தற்சமயம் (2008-ல்) 1000 கோடி ரூபாய் உபரியாக கையில் உள்ளது. ஆண்டுக்கு 2500 கோடி ரூபாய் பற்றாக்குறை பட்ஜெட் வரி உயர்வு ஏதும் இன்றி 400கோடி ரூபாய் உபரி பட்ஜெட்டாக உயர்ந்துள்ளது. முக்கிய காரணம் லஞ்சம் எல்லா தளங்களிலும் ஒழிக்கப்பட்டு வரி வசூல் சரியாக நடந்ததே.

5. 2007 தேர்த்ல் சமயத்தில் காங்கிரஸ் கலர் டிவி தருவதாக வாக்களித்தபோது அவரிடம் பத்திரிகைக்காரர்கள் இது பற்றி கேட்டுள்ளனர். கலர் டிவி தர இயலாது ஆனால் தான் பதவிக்கு வந்தால் வரி கொடுக்காதவர்களை தேடி கண்டுபிடித்து நோட்டீஸ் கொடுக்கப் போவதாக தயக்கமின்றி கூறியுள்ளார். மக்கள் தங்கள் நலனை அறிந்தவர்கள். ஆகவே வரி வசூல் நோட்டீஸ் அனுப்பப் போவதாக சொன்ன தனக்கு ஓட்டு போட்டு ஜயிக்க வைத்தனர் என்பதில் மோடிக்கு ஐயமேயில்லை. (இப்போது 2012-ல் மட்டும் என்ன வாழுகிறதாம்).

சரி குஜராத்தை பார்த்தாயிற்று. மர்ற்ற மாநிலங்களைப் பார்ப்போமா. தமிழகத்தையே எடுத்து கொள்வோம்.

திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே ஊழலை ஊக்குவிப்பவையே. ஜெயலலிதா தேவலை என நான் முன்னால் கூறியதற்கு காரணமே கருணாநிதி worse என்பதால்தான். மற்றப்படி இருவரையும் மோதியுடன் ஒப்பிட்டால் நமக்கு டிப்ரஷன்தான் வரும்.

ஜெயும் சரி கேயும் சரி தாம் பதவியில் இருக்கும்போது மற்றவர் அடுத்த தேர்தலில் வெற்றி எற ஏதுவாகவே உழைக்கின்றனர். ஜெ பதவியில் இருப்பதால் முதலில் அவரது சொதப்பகளை பார்ப்போம்.

சமச்சீர் கல்வி, அரசு தலைமைச் செயலகம், அண்ணா நூல்நிலையம், சாலைப் பணியாளர் ஆகிய விஷயங்களில் அவர் தேவையின்றி அவசரமாக செயலாற்றி நேர விரயம் செய்துள்ளார்.  மின்வெட்டு விஷயமோ இன்னும் சரியாகவில்லை. முயற்சி செய்வதக அவர் கூறினாலும் அது பலனடையும்போதுதான் தெரியும்.

கே அவர்களோ சுத்தம். மானாட மயிலாட நிகழ்ச்சிக, தனக்கு அளித்த பாராட்டு நிகழ்ச்சிகள் ஆகியவர்றுக்கு நேரம் ஒதுக்கியதை தவிர வேறு எதுவும் செய்யவில்லை. அவரது குடும்பத்தினரோ ஐயையோ என்றுதான் கூற வேண்டும்.

இருப்பினும் எரியும்  கொள்ளியில் எது நல்ல கொள்ளி என பார்த்து ஜெக்கு ஆதரவு தர வேண்டியிருக்கிறது.

தமிழகம் போலவே  மற்ற மானிலங்களும் (குஜராத் தவிர).  குஜராத்திலோ காங்கிரஸால் ஒறும் செய்ய இயலவில்லை. வெறுமனே பொரும வேண்டியதுதான்.

சரி, மோதி பிரதமராகலாமா? என்னைக் கேட்டால் அவர் இப்போதைக்கு குஜராத்திலேயே இருக்க வேண்டும் என்பேன். இன்னும் ஓர் ஐந்தாண்டு போகட்டும். அப்போதாவது குஜராத்தின் உதாரணம் மற்ற மானிலங்களுக்கு இன்னும் நன்றாக உரைக்கட்டுமே.

அன்புடன்,
டோண்டு ராகவன்
பின்சேர்க்கை: நண்பர் அருண்பிரபு அவர்களது பதிவு அருமையாக உள்ளது. கண்டிப்பாக படிக்கவும். 

12/20/2012

மனம் நிறையச்செய்த மோதியின் வெற்றி-2

இந்தத் தலைப்பில் போட்ட முந்தையப் பதிவு 5-ஆண்டுகளூக்கு முந்தையது. அப்போதே சொன்னது இப்போதும் அப்ப்ளை ஆகிறது என்றாலும் இந்த வெற்றி இன்னும் பெருமை வாய்ந்ததே.

மோதிக்கு எதிராக நின்ற காங்கிரஸ் வேட்பாளர் டிபாசிட் இழந்தாரா எனத் தெரியவில்லை. ஆமாம் என்றால் இரட்டிப்பு சந்தோஷமே.

இம்முறை மோதிக்கு உள்ளிருந்து எதிரிகள் அதிகம். அதில் கேஷுபாய் ,முக்கிய்மானவர். அவர் வெற்றி பெற்றாலும் அவரது கட்சிக்கு அமோகத் தோல்வி. அக்கட்சிக்காரர்கள் எத்தனை பேருக்கு டிபாசிட் போயிற்று என்பது நாளைக்குத்தான் தெரியும். அப்போது பார்த்து சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம்..

இப்போதைக்கு மோதியின் வெற்றியை பதிவு செய்வோமாக.

அன்புடன்,
டோண்டு ராகவன்

11/15/2012

பிராமணாள் கபே

சமீபத்தில் ஐம்பதுகளில் சென்னை திருவலிக்கேணியில் முரளி கபேக்கு முன்னால் பிறாமணாள் ஹோட்டல் பெயர் அகலவைக்கும் போராட்டாம் ஈ.வே. ராமசாமி நாயக்கர் தலைமையில் நடந்த போது எனக்கு 10 வயது.

நாயக்கர் தார்சட்டியுடன் ஏணிமேல் ஏற, முரளி கபே ஓனர் மேலே வென்னீர் நிறைந்த பாத்திரத்துடன், “ஐயா நாயக்கரே, மேலே வென்னீர் ஊற்றுவேன்” என்று கூற மரியாதையாக நாயக்கர் கீழே இறங்கினார். பிறகு நீண்ட கோல் உதவியால் தார் பூச, செதுக்கிய கல்லில் பிறாமணாள் பெயர் இன்னும் பிரகாசிக்க ஆரம்பித்தது.

பிறகு காஞ்சிப் பெரியவா சொன்னதன் பேரில் முரளியாகவே அதை செதுக்கி வெளியே எடுத்தார். இதைப்போய் த்மது வெற்றியாக திராவிட குஞ்சுகள் பறை சாற்றிக் கொண்டது வேறு கதை.

ஸ்ரீராங்கத்தில் இது ரிபீட் ஆகியியுள்ளது. பிராமணாள் பெயர் வைத்த ஹோட்டல் வாடகை கட்டடத்தில் இருந்ததாலும், மீதி வாடிக்கையாளர்க்ளுக்கு பிரச்சினை வந்ததாலும், திகவின்ர் ரௌடி செயல்களில் ஈடுபட்டதாலுமேயே இச்சமயம் அது நீக்கப்பட்டது.

இப்போது தேவை முரளி ஐயர் போன்று துணிச்சல் உள்ள பேர்வழியும், சொந்த கட்டிடமும்தான். பிறகு பார்க்கலாம், எவன் என்ன சொல்லுகிறான் என்று.  

அன்புடன்,
டோண்டு ராகவன்

11/02/2012

உணர்ச்சி வசப்படுதல் தவறா?

என்னுடன் திரைப்படம் பார்க்க வரும் நண்பர்களுக்கு அது ஒரு பொழுதுபோக்கு, கூடவே சங்கடமும் கூட. அதாகப்பட்டது, நான் சினிமாக்களில் உணர்ச்சிகரமான கட்டங்களில் கூச்சமேயின்றி கண்ணீர் விட்டு அழுதுவிடுவேன்.

ஏண்டா பொட்டை மாதிரி அழுது மானத்தை வாங்கறே என்பான் என் நண்பன் ராமச்சந்திரன்.. உறவினர்களுடான் சினிமா பார்க்கச் செல்லும்போது “டோண்டு அழறான் பாரு” என்று கூறுவது என் காதுகளில் விழுந்தாலும் நான் கேர் செய்ததில்லை.

சமீபத்தில் 1969-ல் வெளியான ஆராதனா படத்தில் காஹே கோ ரோயே என்னும் இப்பாடலின்போது பேசாமல் அரங்கை விட்டு வெளியேற வேண்டியதாயிற்று, அவ்வளவு அழுவாச்சி.



பாட்டு முடிந்ததும்தான் திரும்ப வந்தேன்.

அதை விடுங்கள் இந்த டோண்டு அப்படித்தான். நான் வேறொரு தருணத்தில் உணர்ச்சி வசபட்டது பற்றி இங்கே கூறியுளேன்.

அழுகை மட்டும்தான் உணர்ச்சி வசப்படுதலா? ஏன், சில சமயம் பெருமிதமும் அதை செய்யும். இன் ஃபேக்ட் அதை கூறுவதற்கான முன்னோடிதான் மேலே நான் எழுதியது.

ஃபிரெஞ்சில் ஃப்ரான்ஸ்வா காவன்னா என்னும் எழுத்தாளரிடம் அந்த மொழி குழந்தை மாதிரி விளையாடுவ்தை பார்த்த எனக்கு ஜெயமோகன் அவர்களிடம் தமிழ் விளையாடுகிறது என்ற ஸ்டேட்மெண்ட் விடுவதில் எத்தயக்கமும் இல்லை. அவரது காந்தியின் உடை பற்றிய பதிவிலிருந்தே உதாரணம் தருவேன். காந்தி சம்பந்தமான நமது பெருமிதத்தால் உணர்ச்சிவ்சப்பட்டேன் என்பதைக்கூற வெட்க்ப்படவில்லை.

அவ்வரிகள்:
காந்தி பிரிட்டிஷ் மாமன்னரைச் சந்திக்கச்சென்றபோது சொன்ன அந்த இருவரிகளும் திட்டவட்டமாக அவரது எண்ணத்தைக் காட்டுகின்றன. தன்னுடைய உடை தனக்கு இயல்பானது என்கிறார் காந்தி. அந்த உடையே தான் என்கிறார். அடுத்தபதில் இன்னும் நுட்பமானது. தன்னுடைய உடையையும் சேர்த்து மாமன்னர் அணிந்திருக்கிறார் என்பது சுரண்டப்படும் இந்தியாவாக அவரையும் சுரண்டும் பிரிட்ட்ஷ் சாம்ராஜ்யமாக மாமன்னரையும் நிறுத்திவிட்டது. இந்தியாவை பிரிட்டன் சுரண்டி அழிக்கிறது என்பதற்கு அவர்கள் இருவரும் நிற்கும் படங்களே போதுமான ஆதாரமாக அமைந்தன. அவை வெளியானபோது காந்தியும் காங்கிரசும் சொல்ல விரும்பியவை அனைத்தையும் அவையே உலகமக்களிடம் சொல்லின.
===================================================================
சாதாரணமாக இருக்கையில் வேட்டிகட்டி சட்டை போட்டிருக்கும் மகாராஜாக்கள் தர்பாருக்குச் செல்லும்போது முழங்கால்வரை வரும் பளபளப்பான பூட்ஸுகளையும் அதற்குள் செருகும்விதமான தொளதொளப்பான கால்சட்டைகளும் அணிந்திருப்பதை காந்தி கவனிக்கிறார். லண்டனில் படித்த அவருக்குத்தெரியும் அது பிரிட்டிஷ் அரண்மனையின் சேவகர்களின் சீருடை என்று. அவர் அந்த மகாராஜாக்களிடம் பேசுகிறார். அப்போது தெரிகிறது அவர்களுக்கும் அது தெரியும் என்று.
‘எங்களுடைய துர்ப்பாக்கிய நிலைமை எங்களுக்குத்தான் தெரியும். எங்கள் செல்வத்தையும் பட்டங்களையும் காப்பாற்றிக்கொள்வதற்காக எவ்வளவு அவமானங்களுக்கெல்லாம் நாங்கள் உள்ளாகவேண்டியிருக்கிறது என்பதையும் நாங்கள் மட்டுமே அறிவோம். ‘ என்று ஒரு மன்னர் சொல்கிறார். ’இருந்தாலும்கூட வேலைக்காரர்கள் மட்டுமே அணியக்கூடிய இந்தக் கால்சட்டையையும் பூட்ஸுகளையும் அணியத்தான் வேண்டுமா?’ என்று காந்தி வேதனையுடன் கேட்கிறார். ‘எங்களுக்கும் வேலைக்காரர்களுக்கும் ஏதாவது வேறுபாடு இருப்பதாகக் காண்கிறீர்களா?” என்று துயரத்துடன் மகாராஜா பதில்சொல்கிறார்.
========================================================================
ஆம், உடையரசியலின் தொடக்கம் அங்கேதான். இந்திய மகாராஜாக்களை வேலைக்கார வேடமிட்டுத் தன் வேலைக்காரர்களுடன் சேர்த்து நிறுத்திய பிரிட்டிஷ் ஆதிக்க மனநிலைக்கு எதிரான கலகம் காந்தியின் உடை. தார்ப்பாய்ச்சிய ஒற்றை உடையும் மேல்துண்டுமாக அந்த வைஸ்ராயின் சபைக்குச் சென்றார் காந்தி. அதற்கு முன்பு அவர் தனக்குப்பின்னால் இந்தியதேசத்தையே அணிவகுத்து நிறுத்தியிருந்தார். தன் உடைமூலம் காந்தி பிரிட்டிஷ் ஏகாதிபத்திய மனத்திடம் சொன்னார் ’என்னை சமமாக மதித்து அமரச்செய்து என்னிடம் நீங்கள் பேசியே ஆகவேண்டும். முடியாதென்று சொல்லுங்கள் பார்ப்போம்’ என்று . ’நீங்கள் மகாராஜாக்களுக்கு வேலைக்கார வேடம் போட்டு நிற்கச் செய்யலாம். ஆனால் இந்தியாவின் ஏழைக்குடிமகனை நீங்கள் உங்களுக்குச் சமானமாக நடத்தியாகவேண்டும்’ என்று.
=======================================================================
காந்தி எவரையும் தன்னைவிடக் கீழாக நினைப்பவரல்ல, ஆகவே எவரையும் மேலானவராகவும் அவர் நினைக்கவில்லை. ஆனால் வரலாற்றுமனிதராக அவர் அக்கணத்தில் விஸ்வரூபம் கொண்டு எழுந்தார். யார் அந்த ஐந்தாம் ஜார்ஜ்? எங்கே அந்த போப் பதினொன்றாம் பயஸ்? இன்று வரலாற்றின் ஆழத்திலுறங்கும் கூழாங்கற்கள் அவர்கள். காந்தி ஒரு வரலாறு. ஒரு மலைச்சிகரம்.
=======================================================================
ஞானம்பெற்றபின் இல்லம்திரும்பும் புத்தரின் சிலை ஒன்றை மதுரா அருங்காட்சியகத்தில் காணலாம். யசோதரையும் சுத்தோதனரும் யானைகளும் அரண்னை முகடுகளும் அந்த நகரமேகூட புத்தரின் முழங்காலுக்குக் கீழேதான் இருக்கும். 1931 கோடையில் காந்தி தன் பாதங்களின் அளவுக்கே உயரமாக நின்ற மாமன்னரிடம் மிகமிகக் குனிந்துதான் பேசியிருப்பார். அவருக்கே உரிய கனிவுடன்.
==========================================================================
மீண்டும் டோண்டு ராகவன். மேலே சொன்ன வரிகள் என் பெருமித உணர்ச்சிகளைத் தூண்டி கண்களில் நீர் பெருக்கோடச் செய்தன.

அன்புடன்,
டோண்டு ராகவன்
.

10/24/2012

பெங்களூர் விஜயம்

வரும் வெள்ளியன்று (26.10.2912) சதாப்தியில் பெங்களூருக்கு வந்து திங்கள் காலை (29.10.2012) சதாப்தியில் சென்னை திரும்புகிறேன்.

27 மாலை மற்றும் 28 காலை மற்றும் மாலை என் அண்ணன் மகள் திருமண விழாவில் இருப்பேன். மற்ற நேரங்களில் HAL II Stage-ல் உள்ள என் மைத்துனன் ராமானுஜம் வீட்டில்தான் இருப்பேன். வெளியில் அலையும் உத்தேசம் ஏதும் இல்லை.

பெங்களூர் பதிவுலக நண்பர்கள் விரும்பினால் நான் பெங்களூரில் இருக்கும்போது தொலை பேசலாம், முடிந்தால் நேரில் சந்தித்தும் பேசலாம்.

என் செல்பேசி எண்: 09884012948
ராமானுஜத்தின் லாண்ட்லைன் எண்கள்: 25285043, 25287122

அன்புடன்,
டோண்டு ராகவன்

சின்மயி விவகாரம்

இது பற்றி பலரும் பதிவு போட்டுள்ள நிலையில் நான் என்ன கூறப்போகிறேன்? எல்லாமே ஏற்கனவே பார்த்தது போன்ற ஃபீலிங்கையே உருவாக்கியுள்ளன. இதை déjà vu என்று கூறுவார்கள்.

போலி டோண்டு என்னை பீடித்தபோது நான் அவன் யார் என்பதை வெளிப்படையாகக் கூறாது தவிர்த்ததை பலர் குறை கூறினர். இன்னும் சிலர் நேராக சைபர் கிரைமுக்கு போக வேண்டியதுதானே என்றும் கூறினர். ஆனால் அதற்கான சமயம் இன்னும் வரவில்லை என நான் கூறியதை கேலி செய்தனர். 

விஷயம் என்னவென்றால் சாதாரண் நபர் போலீசுக்கு போனால் அதுவும் சைபர் போலீசுக்கு போனால் ஒன்றும் நடபதில்லை என்பதே என் அனுபவம். முதலில் கம்ப்ளைண்ட் எடுக்கவே அலைகழித்தனர். சிடி போலீஸ் சிபிசிஐடியை கை காட்டியது. அங்குள்ள டிஎஸ்பியோ தான் என்ன செய்ய முடியும் என சலிப்பைக் காட்டினார். ஆக உற்சாகமான அனுபவமாக இலை.

எனது யுக்தி வேறுமாதிரி இருந்தது. போலி டோண்டு எதிர்பார்த்தது போல நான் முடங்காமல் போனதே அவனை எரிச்சலூட்டி மேலும் தாக்குதல்களை நிகழ்த்த வைத்தது. அதில் பலர் அடிபட்டார்கள். அவற்றில் ஒருவருக்கு தமிழக அரசு மந்திரி ஒருவரின் பி.ஏ.வை தெரிந்திருந்தது. அவரை வைத்து மூவ் செய்து கடைசியில் போலியை வேருடன் அறுத்தார்கள். 

ஆனால் சின்மயிக்கு அப்பிரச்சினை இல்லை. அவர்தான் செலிப்ரிடி ஆயிற்றே. அவராகவே மூவ் செய்து கைதுகளை நடத்தி வைக்க முடிந்தது. இப்போ கையா முய்யா என அக்யூஸ்டுகளின் தோழர்கள் குதிக்கிறார்கள். 

சின்மயி விவகாரத்திலும் போலி டோண்டு விவகாரத்திலும் காமனாக என்ன இருந்தது என்பதை பார்த்தால் அதுதான் பார்ப்பன வெறுப்பு. சின்மயி பாப்பாத்தி, டோண்டு பாப்பான். போதாதா தாக்குதல்கள் நிகழ்த்த? இதை நான் மிகைபடுத்தவென்று கூறவில்லை. எனது பல பதிவுகளில் விவாதங்கள் வருமோது எனக்கு போலி டோண்டுதான் சரி என வன்மத்துடன் கூறியவர்களும் உண்டு. 

அதிலொருவர் எழுதினார், “போலி டோண்டு இருந்த காலத்தில் அனைவருமே அவனை எதிர்த்து கொண்டு தான் இருந்தார்கள், அந்த நேரத்தில் அப்பிராணி பட்டம் வாங்கி பலரது இரக்கத்தை சம்பாரித்து ப்ளாக்கில் மொக்கை போட்டு கொண்டிருந்தார் டோண்டு!” (தான் யார் பக்கம் என்பதை இங்கு தெளிவாகவே காட்டி விட்டார்)..

இப்போது கூட போலி டோண்டுவுக்காக பிரலாபிப்பவர்களது மோட்டிவேஷன்களில் முக்கியமானது பார்ப்பன வெறுப்பே.

என்ன செய்வது, I will have to call a spade a spade.

அன்புடன்,
டோண்டு ராகவன் 



10/20/2012

மொழிபெயர்ப்பாளர்கள் ஒத்துழைப்பதிலையாம், திருவாய் மலர்கிறார் சாரு

சாரு எழுதியதிலிருந்து சில வரிகள்:
என்னுடைய எழுத்துக்கள் ஆங்கிலத்தில் அல்லது வேறு ஏதேனும் ஒரு ஐரோப்பிய மொழியில் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்ற விஷயத்தைப் பற்றி நான் அவ்வப்போது எழுதி வரும் புலம்பல் கட்டுரைகளைப் படித்து நீங்கள் சலிப்படைந்திருக்கலாம்.  அப்படி சலிப்படைந்திருந்தால் இந்த வார்த்தைக்கு மேல் படிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இதை நான் மிகுந்த மன உளைச்சலில் எழுதுகிறேன்.  இந்த அளவுக்கு மன உளைச்சலை நான் இதுவரை அனுபவித்ததே இல்லை.  எப்படியென்றால், மகாநதி என்ற சொல்லுக்கு உதாரணமாக இருக்கக் கூடிய Mekong நதி லாவோஸையும் தாய்லாந்தையும் பிரித்துக் கொண்டு ஓடுகிறது; ஒரு கிலோமீட்டர் அகலம் கொண்டது மெக்கோங்.  நான் தாய்லாந்துக் கரையில் நண்பரோடு அமர்ந்து கறுப்புத் தேநீர் அருந்திக் கொண்டிருக்கிறேன்;  அற்புதமான பேரமைதி கொண்டிருந்த காலை நேரம்.  பட்சிகளின் சப்தம் கூட எப்போதோதான் கேட்டுக் கொண்டிருந்தது.

வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத பேரழகு கொண்ட அந்த நேரத்தில் நான் இந்தியாவில் இருக்கும் என் மொழிபெயர்ப்பாளர் நண்பரோடு கடும் விவாதம் செய்து கொண்டிருந்தேன்.  2013-ஆம் ஆண்டில் ஏஷியன் மேன் புக்கர் விருதுக்கு என் புத்தகம் ஒன்று அனுப்பப்படாவிட்டால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று கத்திக் கொண்டிருந்தேன்.  24 மணி நேரம் கொண்ட உங்கள் ஒரு நாளில் எனக்காக ஒரு மணி நேரம் தினமும் செலவு செய்ய முடியாதா என்று பிச்சை கேட்டுக் கொண்டிருந்தேன். இண்டர்நேஷனல் காலில் இருபது நிமிடம் பேசினேன்.  நண்பர் அலுப்புடன் “நேரில் வாருங்கள்; பேசிக் கொள்ளலாம்” என்று சொல்லி போனை வைத்து விட்டார்.

ஆமாம் சாரு என்னவென்று நினைத்து கொண்டிருக்கிறார்? அதற்கு முன் ஒரு முக்கிய விஷயத்தை கேட்க வேண்டும்? மொழிபெயர்ப்பாளருக்கு என்ன தொகை தருவார்? முழுக்க முழுக்க ஓசியில்தான் எதிர்பார்க்கிறார் என்பது எனது துணிபு. இது பற்றி அவரிடம் நேரிடையாகவே கேட்டதற்கு அவர் மழுப்பலாகத்தன் பதிலளித்தார்.

நானும் பார்த்து விட்டேன். இப்படித்தான் எழுத்தாளர் சமுத்திரம் அவர்கள் என்னை அவரது அடுக்குமல்லி நாவலுக்கான ஆங்கில மொழிபெயர்ப்புக்கு அணுக, நான் எனது ரேட்டைக் கூறினேன். தான் வெறுமனே 5000 ரூபாய்தான் தர முடியும் என அவர் தெளிவகவே கூறினார். அதற்கு 4 பங்குக்கு மேல் எனது விலை இருக்கும். ஆகவே அதை நான் ரிஜெக்ட் செய்தேன்.

இவராவது பரவாயில்லை, 5000 ரூபாய் தருவதாகக் கூறினார். ஆனால் சாரு? அவர்தான் ஓசிகளுக்கு அலைபவர் ஆயிற்றே. அப்புறம் என்ன மயித்துக்கு தார்மீகக் கோபம் எல்லாம் பட வேண்டும்? இதைத்தான் அதிகாரப் இச்சை என்பார்கள்.

சாருவின் மொழி பெயர்ப்பாளர்களுக்கு எனது அனுதாபங்கள். அடிமாட்டு விலைக்கு க்றவை மாட்டை எதிர்பார்க்கும் இவர்களுக்கு இடமே தரலாகாது.

அன்புடன்,
டோண்டு ராகவன் . 

10/15/2012

பெண்ணாசை அடங்கியது

ஒரு ஆணுக்கு மூன்று ஆசைகள் உண்டு அவை: மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை. இப்பதிவு இடையில் உள்ள பெண்ணாசை பற்றியது.

முதலில் நான் இட்ட “சரோஜாதேவி புத்தகங்களும் இன்னும் பிற இலக்கியங்களும்” என்னும் பதிவில் இவ்வாறு எழுதியிருந்தேன்:

சரோஜாதேவி புத்தகங்களால் பாதிக்கப்படாத இளைஞனே இருக்க முடியாதுதான். சமீபத்தில் 1971 முதல் 1974 வரை நான் பம்பாயில் வசித்த போது அவற்றை நிறைய படித்ததை இங்கே எழுதியுள்ளேன். சரோஜாதேவி புத்தகங்கள் சென்னையில் காணக் கிடைக்கவில்லை. பங்களூரில் பப்ளிஷ் செய்வதாகக் கேள்வி. எழுபது எண்பதுகளில் சென்னையில் மருதம் என்ற பெயரில் இம்மாதிரி பலான புத்தகங்கள் வந்தன. எண்பதுகளில் தில்லியில் மதுக்குடம் என்ற பெயரிலும் புத்தகங்கள் வந்தன.

அப்போது கேட்ட ஒரு டயலாக், இரண்டு நண்பர்களுக்குள்.

ஒருவன்: டேய் நம்ம ராமு நேத்திக்கு என்ன செஞ்சான் தெரியுமா, மதறாஸ் ஸ்டோர்ஸில் போய் மதுக்குடமும் ஞானபூமியும் கேட்டிருக்கான். என்ன என்று கேட்டால் அவன் அப்பாவுக்கும் அவனுக்கும் தேவையானதையே கேட்டானாம்.

இன்னொருவன்: பாவம்டா ராமுவின் அப்பா. தனக்கு ஞானபூமி வாங்கப்போன இடத்திலேயே தன் மகன் மதுக்குடமும் கேட்டான் அப்படீன்னா எவ்வளவு வருத்தப்படுவார்?

ஒருவன்: டேய் அடங்குடா, ராமு ஞானபூமி கேட்டது தனக்காகத்தான். புரிஞ்சுக்கோ.

விடலைப்பருவம் தாண்டும்போது இதெல்லாம் ஒரு காலத்தின் கட்டாயமே. கஷ்டப்பட்டு நான் வாங்கி வந்தால் எனக்கு தெரிந்த பெரிசுகள் சில "அடேய் அயோக்கியா, இதெல்லாம் படிக்கிற வயசாடா உனக்கு" என்று அதட்டி புத்தகத்தைப் பிடுங்கிக் கொண்டு தாங்கள் படிக்க எடுத்து செல்வார்கள்.

அமெரிக்க, பிரிட்டிஷ் நூல்நிலையங்களிலிருந்து புத்தகம் எடுக்கும்போது சில குறிப்பிட்ட எழுத்தாளர்களை தேடிப் போவேன். நூற்றுக் கணக்கான பக்கங்களில் அள்ளித் தெளித்தது போல அங்கங்கே பலான மேட்டர்கள் வரும். அவற்றை கண்டுபிடிக்க நேக் வேண்டும். அவ்வாறான சில புத்தகங்கள் எடுத்து வந்தால் அப்போதென்று என் தந்தையோ, பெரியப்பாவோ அல்லது சித்தப்பாவோ வந்து "என்னடா புத்தகம், காண்பி" என்று அதட்டல் போட்டு அதை வாங்கி புரட்டுவார்கள். எப்படி புரட்டினாலும் அவர்களுக்கென்று அதே பலான பக்கங்களே மாட்டும். ரொம்ப கஷ்டம்.

நான் ஜெர்மன் மற்றும் ஃபிரெஞ்சு படித்ததற்கு இம்மாதிரி தலையீடுகளை தவிர்ப்பதுவும் ஒரு முக்கிய காரணம். ஆனால் இதில் சோகம் என்னவென்றால், மேக்ஸ் ம்யுல்லர் பவனிலோ அல்லியான்ஸ் ஃபிரான்ஸேய்ஸிலோ கிடைத்த புத்தகங்கள் எல்லாம் ரொம்ப ரொம்ப சைவமே.

இந்த போர்னோகிராஃபி என்பது ஒரு தனி உலகம். அதை எழுதுவது ஒரு கலை. துரதிர்ஷ்டவசமாக அதை எழுத நல்ல எழுத்தாளர்கள் கிடைப்பதில்லை. மொழிவீச்சின் முழுமையும் தெரியாதவர்களே அதில் ஆட்சி செலுத்துகின்றனர். இர்விங் வேலஸ், ஹெரால்ட் ராப்பின்ஸ், சிட்னி ஷெல்டன் போன்ற எழுத்தாளர்கள் தங்கள் எழுத்துக்களில் அவ்வப்போது கிளுகிளுப்பை உண்டாக்குவர். அவ்வளவே. நினைத்தால் அவர்கள் நல்ல போர்னோகிராஃபி எழுதலாம். எழுதுவார்களாக இருக்கும். அப்போது வேறு பெயரில் எழுதுவார்கள். நம்மூர் ஸ்ரீவேணுகோபாலன் புஷ்பா தங்கதுரையாக மாறியது போல.

மேலே குறிப்பிட்ட போர்னோகிராஃபி ரசனை கூட பெண்ணாசையால் உருவானதுதான் என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். பொழுது போகவில்லையென்றால் பலான சைட்டுகள் பார்க்கவெல்லாம் வசதி வந்துள்ளது. எல்லாவற்றையும் செய்து வைத்தேன் என்பதை ஒளிவு மறைவின்றியே கூறுவேன்.

இப்போது இதையெல்லாம் இங்கே ஏன் சொல்கிறேன் என்றால், மேலே சொன்னவை இப்போது நிகழ்காலத்தில் கடந்த சில மாதங்களாய் இல்லவேயில்லை. நானும் முதலில் இதை உணரவில்லை. இப்போதுதான் இரண்டு நாட்களுக்கு முன்னால் ஒரு பலான சைட்டில் கதை ஒன்றை படித்தபோது வாந்திதான் எடுக்க வந்தது.

பிறகுதான் என்னையே இன்னும் தீவிரமாக ஆராய்ந்தேன். காரில் செல்லும்போது தெருவில் செல்லும் கவர்ச்சியான பெண்களை பார்த்து உணர்ச்சி ஒன்றும் வரவில்லை. ஒரு பெண் வேகமாக நடந்து கொண்டிருந்தாள். அவள் மார்பகங்கள் விம்மி எழுந்த வன்ணம் இருந்தன. ஐயோ பாவம் அவளுக்கு என்லர்ஜ்ட் இதயம் போலிருக்கிறதே என்ற பரிதாபம்தான் வந்தது.

சந்தேகப்பட்டு கூகளில் தேடியதில் இப்பக்கம் கிடைத்தது. ஆக நான் அவதானித்தது மருத்துவ உண்மைதான்.

இதில் எனது மன்நிலை என்ன? ஒரு நிம்மதிதான் ஏற்பட்டது. அடேடே கேன்சரில் இந்த நல்ல பக்க விளைவு உண்டா? இப்பெண்ணாசையால் விரயமாகும் நேரம் பற்றி இனி கவலையில்லை. அவ்வாசை போனது எனக்கு நிம்மதியாகவே இருக்கிறது.இணையத்தில் பலான சைட்டுகளை இனி தேடிப் போகவும் வேண்டாம், வைரஸ் அபாயத்துக்கு உட்படவும் வேண்டாம்.

இளம் வயதில் உள்ளவர்களுக்கு தாம்பத்திய பிரச்சினைகள் வரும்தான், ஆனால் என்னதான்  நான் என்னை இளைஞன் எனக்கூறி வந்தாலும், நான் வயதால் கிழவன்தானே. ஆகவே எனக்கு அக்கவலைகள் இல்லை.

பார்ப்போம் மேலே என்ன நடக்கிறது என்.

அதற்காகவெல்லாம் நான் முன்னால் எழுதிய பலான பதிவுகளை எடுக்க வேண்டுமா என்ன? அவ்வாறு செய்பவன் டோண்டு ராகவன் இல்லை.

அவன் என்ன நெஞ்சில் உரம் இன்றி நேர்மைத் திறமின்றி இருப்பவனா என்ன?

அன்புடன்,
டோண்டு ராகவன்






”காஞ்சியும் காமாட்சியும்” - பதிவர் பால ஹனுமானுடைய அற்புதமான இடுகை

காஞ்சிப் பெரியவாள் நிகழ்த்திய அற்புதம் பற்றி இடுகை ஒன்றை பதிவர் பால ஹனுமான் வெளியிட்டுள்ளார். அதை இங்கு மீண்டும் இடுகிறேன், அவரது அனுமதியை ஆண்டிசிபேட் செய்து. 

இப்போது ஓவர் டு பால்ஹனுமான்
தேனம்பாக்கத்தில் பெரியவா தங்கியிருக்கிறதுன்னு தீர்மானம் ஆன உடனே, அவர் அங்கே வாசம் பண்றதுக்கு ஓரளவுதான் வசதி செஞ்சு கொடுக்க முடிஞ்சுது. ஆனா, பெரியவா அதைப்பத்தியெல்லாம் கவலைப்படலே! அவர் வசதி பத்தியெல்லாம் என்னிக்கும் லட்சியம் பண்ணினதே இல்லே!’ என்று தொடர்ந்தார் சங்கர பக்த ஜன சபா செயலர் ஜி.வைத்தியநாதன்.”ஒரு முறை, சாயங்கால வேளையில பெரிசா பட்டாசெல்லாம் வெடிக்கிற சத்தம் கேட்டுது். பெரியவா உடனே, ‘என்ன, பட்டாசு சத்தம் எல்லாம் பலமா கேட்கிறது? எங்கே பட்டாசு வெடிச்சுக் கொண்டாடறா? எந்தக் கோயில்ல இருந்து ஊர்வலம் கிளம்பறது?’ன்னு எங்களிடம் விசாரிச்சார்.

‘காஞ்சி காமாட்சி அம்மன் திருவீதி உலா முடிஞ்சு, திரும்பி வந்துண்டிருக்கா. அதைத்தான் பட்டாசு வெடிச்சுக் கொண்டாடி, சம்பிரதாயமா நடத்திண்டிருக்கா!” என்று நாங்கள் விசாரிச்சுத் தெரிந்துகொண்ட சேதியைப் பெரியவாகிட்டே சொன்னோம்.
அதைக் கேட்டதும் பெரியவாளுக்கு இருப்பே கொள்ளலே. அம்பாள் காமாட்சியை எப்படியாவது தரிசனம் பண்ணணும் என்கிற ஆசை அவருக்கு வந்துவிட்டது. பெரியவா நடந்து காஞ்சிபுரம் போய்ச் சேர்றதுக்குள்ளே, திருவீதியுலா முடிஞ்சு, அம்பாள் திரும்பியிருப்பாள். இதைப் பெரியவாளிடம் தெரிவிச்சோம். ‘அதனால நாம இனிமே நடந்து போய்ப் பிரயோசனம் இல்லையே, பெரியவா!’ என்று நாங்கள் சொன்னது அவருக்குக் கேட்க கஷ்டமாக இருந்தது.

அன்னிக்கு எப்படியாவது அம்பாள் காமாட்சியை தரிசனம் பண்ணிவிடுவது என்று தீர்மானமாக இருந்தா பெரியவா. காஞ்சிபுரம் போய்ச் சேர்வதற்குள் ஊர்வலம் முடிஞ்சுடும் என்பதை அவர் பொருட்படுத்தலே. ரொம்பவும் பிடிவாதமா இருந்தார். மடத்து சிஷ்யர்கள் எத்தனை சொல்லியும் அவர் கேட்கிற மாதிரி இல்லே. போய்த்தான் தீருவது என்று நிச்சயம் பண்ணிவிட்ட மாதிரி இருந்தது.

பெரியவா வெளியிலே வந்து நின்ன உடனே கிளம்பிடலே. விநாயகர் சந்நிதிக்குப் போனார். அவர் பிள்ளையாரிடம் காதருகில் போய் என்னமோ ரகசியம் பேசுகிற மாதிரி இருந்தது. புறப்படறதுக்கு முன்னால் கணேசரிடம் பிரார்த்தனை செய்துகொள்கிறாராக்கும் என்று நினைத்தோம்.

விநாயகரிடம் அனுமதி வாங்கியவர், மளமள என்று காஞ்சியை நோக்கி நடக்கஆரம்பித்துவிட்டார். சிப்பந்திகள் சிலர் அவர் கூடவே தொடர்ந்து ஓடினார்கள். பெரியவா நடையே ஓட்டம் மாதிரிதான் இருக்கும். அந்த வேகத்துக்கு சாதாரணமாக யாராலும் ஈடுகொடுக்க முடியாது!
காஞ்சியை அடைந்தபோது, எல்லோருக்கும் ஆச்சரியம்!

அம்பாள் காமாட்சி இடத்தை விட்டு அசையாமல், உண்மையைச் சொல்லப் போனால் ஓர் அங்குலம் கூட நகராமல், அப்படியே அங்கேயே இருந்தாள். பெரியவா வந்து தரிசனம் பண்ணும் வரை அம்பாள் காத்துக்கொண்டிருந்த மாதிரி இருந்தது.

மடத்து சிஷ்யர்களுக்கு ஆச்சரியம் தாங்கலே. எதனால அம்பாள் ஊர்வலம் நகராம அப்படியே நின்றுவிட்டது என்று விசாரித்தார்கள். கோயிலில் பூஜை செய்யறவர் உடனே முன்னால் வந்து, ‘வெடிகள் வெடிச்சு முடிஞ்சதும், ஊர்வலத்துக்குத் தலைமை தாங்கற மாதிரி நிற்கிற யானை, என்ன பண்ணியும் இந்த இடத்தைவிட்டு ஒரு இன்ச் கூட அசையலே. அதை அதட்டி மிரட்டி விரட்டப் பார்த்தால் கோபத்தைக் காண்பிச்சுது. எதுவும் இசகு பிசகா நடந்துடக் கூடாதேன்னு சும்மா இருந்துட்டோம். ஆனா, ஊர்வலம் நகராம அப்படியே இருக்கிறபோது யானையும் சாதுவா சும்மா இருந்ததுதான் எங்களுக்கு ஆச்சரியம்! இது என்னடா, இந்த யானை இப்படி விநோதமா நடந்துக்கிறதேன்னு ஒரேயடியா குழம்பிப் போயிருந்தோம்’னு சொன்னார்.

ஆனா பெரியவா வந்து, காமாட்சி அம்பாளை தரிசனம் பண்ணி முடிஞ்சதும்,அவருக்குச் சொல்ல முடியாத திருப்தி. சந்தோஷமா இருந்தார். யானைகிட்டே போய், செல்லமா அதைத் தட்டிக்கொடுத்தார். உடனே யானை, ஏதோ அவரோட உத்தரவுக்குக் காத்திருந்த மாதிரி மேலே நடக்கத் தொடங்கியது!

தேனம்பாக்கத்தில் புறப்படுகிறபோது விநாயகர் காதில் பெரியவா என்னவோ சொன்னாரே… அதன் அர்த்தம் இப்போதான் புரிஞ்சுது! அன்னிக்குப் பெரியவா அடைஞ்ச சந்தோஷத்தைவிட, எங்களுக்குக் கிடைச்ச திருப்தியும் பாக்கியமும் இருக்கே, அது என்னைக்கும் மறக்கவே முடியாது!
காஞ்சி காமகோடி மஹா பெரியவா திருவடிகள் சரணம்!

மீண்டும் டோண்டு ராகவன். வரும் தலைமுறைகளில் இம்மாதிரி ஒரு மனிதன் நிஜ்மாகவே ரத்தமும் சதையுமாக இப்பூவுலகில் வளைய வந்திருப்பாரா என சந்தேகப்படுவார்கள் என ஐன்ஸ்டைன் மகத்ம காந்தியை சொன்னது காஞ்சிப் பெரியவாளுக்கும் நிச்சயம் பொருந்தும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

பின் சேர்க்கை:
பாலஹனுமானுடைய அப்பதிவில் பின்னூட்டம் இட்டு அனுமதி கேட்டேன். ஆனால் அப்பின்னூட்டதை போட வேர்ட்ப்ரெஸ் அழும்பு செய்கிறது. லாகின் செய்து வா என்கிறது.நானும் என்னென்னவோ எல்லாம் செய்தும் ஒன்றும் காரியத்துக்காகவில்லை.  ஆகவே பாலஹனுமான் மன்னிக்க வேண்டுகிறேன்.

10/12/2012

மனதை கொள்ளை கொள்ளும் 7 C

சில நாட்கள் முன்வரை நான் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 7 மணியை ஆவலுடன் எதிர்நோக்கி வந்தவன். அந்த எதிர்பார்ப்பு இப்போது இரவு 8 மணிக்கு சென்று விட்டது. என்ன செய்வது, சீரியல் 7 C-ன் நேரத்தை மாற்றி விட்டார்களே.

இம்மாதிரியான நேர்மறை என்ணங்களுடன் கூடிய சீரியலை நான் அரிதாகவே பார்க்கிறேன். ஒரு நல்லாசிரியர் தன் மாணவர்களை எவ்வாறு கரையேற்றுகிறார் என்பதை அழகாக காட்டியுள்ளனர்.

கவனக் குறைவு பிரச்சினைக்ளுடன் கூடிய குழந்தைகளை இந்த எபிசோடில் டீல் செய்திருக்கிறார்கள். அக்குறையுடன் இருக்கும் குழந்தைக்கு த்னது கவன விருத்தியை பார்த்து முகத்தில் வரும் பெருமிதம், பிரமிப்பு ஆகியவற்றை அந்த மாணவராக நடித்தவர் அழகாகக் காட்டியுள்ளார்.

அற்புதம் என்னும் சொல்லைத் தவிர கூற வேறு வார்த்தைகளே இல்லை


7C Part 2 by khajal

எவ்வளவு கச்சிதமாக விஷயத்தைக் கையாண்டுள்ளார்கள்!! இது ஒரு சாம்பிள் மட்டுமே. ஒவ்வொரு சீனும் ஒரு காவியம். முக்கியமாக ஆசிரியர் ஸ்டாலின் மேல் அப்பெண் சிவகாமி வைத்திருக்கும் காதல், அதை வெளிப்படுத்தும் முறை ஆகியவை கவிதைகள் என்றால் மிகையாகாது.

சோவின் எங்கே பிராமணன் சீரியலைப் பார்க்கவே ஜெயா டிவிக்கு சென்றது போல இந்தச் சீரியலை பார்க்க மட்டுமே விஜய் டீவிக்கு செல்கிறேன் என்றால் மிகையாகாது.

7C சீரியலை விஜய் டீவியில், திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணி முதல் 8.30 வரை காணலாம்..

அன்புடன்,
டோண்டு ராகவன்

10/09/2012

புற்றுநோய் பற்றி சில எண்ணங்கள்

கேன்சருடன் வாழ்தல்
நேற்று நான் பாட்டுக்கு தேமேனென்று பத்திரிகை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தேன். திடீரென “சார், சார், ஒரு நிமிஷம்” என என் பின்னால் குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தால் ஒரு 20 வயது இளைஞன் மூச்சு வாங்க நின்று கொண்டிருந்தான்.

என்ன விஷயம் எனக் கேட்க, அவன் தயக்கத்துடன் கேட்டான், “சில மாசங்கள் முன்னாடி உங்களை பார்த்தபோது உங்கள் தலைமுடியெல்லாம் கொட்டி விட்டது. இப்போது என்னவென்றால் மறுபடியும் வளர்கிறது. என்ன ஆயில் போட்டீர்க்ள்”? எனக் கேட்டான். ஒரு நிமிடம் அவனை உற்றுப் பார்த்து விட்டு சொன்னேன், “இம்மாதிரி முடி மீண்டும் வளரும் நிலை யாருக்குமே வேண்டாமப்பனே” எனக்கூறி விளக்கியதும் அவன் தலை குனிந்த வண்ணம் சென்றான்.

அவனிடம் கூறாதது இம்முறையில் முடி வளர எனது செலவு ரூபாய் 4 லட்சத்துக்கு மேல் என்பதுதான். கிட்டத்தட்ட ஓராண்டுகளாக சலூனுக்கு செல்லாததில் கிட்டத்தட்ட 600 ரூபாய் மிச்சம் என்பது தனி.  

இருபது ஆண்டுகளுக்கு முன்னால் தைத்த பேண்ட் சட்டைகள் இப்போது பொருந்துவதும் தமாஷாக உள்ளது.

கேன்சரின் பின்விளைவுகள்
ஆறு கீமோதெரப்பி அமர்வுகளில் தலைமுடி கொட்டி, புருவங்களும் அவுட். மண்டையோட்டுத் தோற்றம். கதிர்விச்சு சிகிச்சைகள் 33 அமர்வுகளினால் காலில் புண்.

வசூல்ராஜாவில் கமல் கூறுவதுபோல பசியின்மையின் கொடுமையுடன், உணவு என்றாலே வாந்தி வ்ரும் உணர்வு வந்தது இன்னொரு கொடுமை. இதயம் சற்றே பெரிதாகியதில் மூச்சிரைப்பு, சற்று நடந்தாலே.

இவ்வள்வு கொடுமைகள் நடுவிலும் நல்லது என்னவென்றால், எனது மொழிபெயர்ப்பு வேலைகள் தாராளமாக வந்ததுதான். ஒரு ஜெர்மன்காரருக்கு துபாஷியாகச் சென்றேன். என்னைப் பார்த்ததுமே ஜெர்மன்காரர் என்ன உடம்புக்கு எனக் கேட்க எனது வாடிக்கையாளரிடம் கூடக் கூறாது அவரிடம் கேன்சர் பற்றிக் கூற அவர் அப்படியே என்னை அணைத்தவாறு, சென்றார். வேகமாக நடக்கும் அவர் எனது ஸ்பீடில் நடந்தார்.

எங்கொப்புராணை கூறுகிறேன், மொழிபெயர்ப்பு வேலைகளை எனக்கு தாராளமாகக் கிடைக்கச் செய்த எனது உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகர நெடுங்குழைகாதனின் அருளே அருள். வேலை செய்யும்போது கேன்சரின் எண்ணமே வருவதில்லை.

நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்கள்
கேன்சர் என்பது யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். கெட்டப் பழக்கங்கள் ஏதும் இல்லாமலிருந்தால் அது வரும் சாத்தியக்கூறுகள் குறைவு மட்டுமே. மற்றப்படி அப்படியும் வரலாம் எனக்கு வந்தது போல.

மரணத்துடன் ஒரு சிறு சந்திப்பு வினையாகவே முடிந்தது. கெட்டதிலும் நல்லது நடந்தது மகரநெடுங்குழைகாத்னின் பேரருளே.

இமயமாக எனது மதிப்பில் உயர்ந்த என் வீட்டம்மா
சத்தியமாகச் சொல்கிறேன், நிலைமை நேர்மாறாக இருந்திருந்தால் நான் அத்தனை தைரியத்துடன் இருந்திருக்க மாட்டேன். ஒரு தாய் தன் குழந்தையை பார்த்துக் கொள்வதுபோல அவர் என்னைப் பார்த்துக் கொள்வதால்தான் இப்பதிவையெல்லாம் போட முடிகிறது. பூர்வ ஜன்ம புண்ணியம்தான்.

மனச்சமாதானங்கள்
சிகிச்சைகள் நடக்க ஆரம்பித்து கொஞ்ச நாள் கழித்துத்தான் எனக்கு வந்தது கேன்சரா எனக் கேட்கும் மனவுறுதியே எனக்கு வந்தது. அதுவரை எனக்கு மட்டும் ஏன் இப்படி என்ற எண்ணம்தான் வந்தது. அண்ணாசாலையில் உள்ள ராய் மெமொரியல் ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளைப் பார்த்து அதிர்ந்து போனேன். பச்சிளங்குழந்தைக்குமா கேன்சர்?

பூர்வஜன்மாவில் செய்த பாவங்கள் தவிர வேறு என்ன காரணம் இவற்றுக்கெல்லாம் இருக்கவியலும்?

அன்புடன்,
டோண்டு ராகவன்


 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது