6/30/2011

டோண்டு பதில்கள் - 30.06.2011

pt
டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
கேள்வி-1. மனிதாபிமானமற்ற முறையில் கனிமொழி சிறையில் அடைப்பு: கருணாநிதி

பதில்: பேட்டி காணும் பத்திரிகையாளர்களுக்கெல்லாம் மூளையே இல்லை என அசட்டுத்தனமாக கருதும் ஒருவரது பிரலாபம்.

கேள்வி-2. மெழுகுவத்தி தயாரிப்பது எப்படி: ஓய்வு நேரத்தில் கனிமொழி பயிற்சி
பதில்: சோம்பி இராமல் வேலை செய்வது நல்லதுதானே..

கேள்வி-3. சென்னையில் துணை நகரம் அமைக்கும் திட்டத்திற்கு புத்துயிர்
பதில்: அது காலத்தின் கட்டாயம். பொருளாதார முன்னேற்றங்கள் அதிகமாகும்போது இதெல்லாம் தேவைப்படும்.

கேள்வி-4. லோக்பால் விவகாரத்தில் தி.மு.க.,வின் சுருதி மாறுகிறது
பதில்: வரவேற்கத்தக்க மாறுதல்.

கேள்வி-5. முதியோர் உதவித்தொகை கேட்டு மனுக்கள் குவிகின்றன : 1000 ரூபாயாக உயர்ந்ததால் ஆர்வமோ ஆர்வம்
பதில்: அவ்வாறு உதவித் தொகை பெறுபவரிடம் கூட மாமூல் கேட்கும் அல்பங்களை நினைத்தால் மனம் ஆறவில்லையே,

கேள்வி-6. ஏழைகளுக்கு ஆடு, மாடு கொடுக்கும் திட்டம்: ஜெ., ஆலோசனை
பதில்: அவற்றை பராமரிக்கும் செலவை யார் தருவார்கள் என சிலர் கேட்டாலும் கேட்கலாம்.

கேள்வி-7. "சமூக பிரதிநிதிகள் நெருக்கடிக்கு பணிய வேண்டாம்': காங்கிரஸ்
பதில்: ஊழல் செய்யாமல் இருந்தால் பின்னால் ஏன் நெருக்கடி வரப்போகிறது?

கேள்வி-8. இந்தக்காலத்தில் கடவுளுக்கு அடுத்தபடியாக பொதுவாக எல்லோராலும் மதிக்கப்படுவது பணம். பணம் இல்லாவிட்டால் பிணம் என்ற பழமொழி கூட உண்டு. காசையே கூட கடவுள் என்று சொல்பவர்கள் கூட உண்டு.
பதில்: பணம் பத்தும் செய்யும், பணமென்றால் பிணமும் வாயைத் திறக்கும் போன்ற பழமொழிகள் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருப்பவை. ஆகவே அது என்ன இந்தக் காலத்தில் என்ற பேச்சு?

கேள்வி-9. சோதனையும், தோல்வியும் தி.மு.க.,வுக்கு பழக்கப்பட்டது தான் : தமிழச்சி தங்கபாண்டியன்
பதில்: அக்கட்சியின் முக்கிய பிரச்சினையே அதன் தலைமைதான். சீர் செய்ய முடியாத அளவுக்கு மாசுபட்டு விட்ட அதை துறந்தால்தான் கட்சி சரியாகும் வாய்ப்பு உண்டு.

கேள்வி-10. அமைச்சர் பதவியில் இருந்து தயாநிதியை நீக்க 75 வழக்கறிஞர்கள் மனு
பதில்: அடேடே வழக்கறிஞர்கள் சில சமயங்களில் நல்ல காரியங்கள் கூட செய்வார்கள் போலிருக்கிறதே.

கேள்வி=11. நிலக்கரி விலை உயர்வு, சூரிய மின்சக்தி கவர்ச்சியாகிறது!
பதில்: நிலக்கரியின் இருப்பு வேகமாக குறைந்து வரும் இக்காலத்தில் இப்போதே மாற்று ஏற்பாடுகளை கவனிப்பதும் நல்லதுதானே.

கேள்வி-12. ஹசாரே, ராம்தேவுக்கு பதிலடி கொடுக்க ராகுல்: காங்கிரசில் வலுக்கிறது கோரிக்கை
பதில்: எப்படி பதிலடி தருவாராம்? இன்னும் அதிக ஊழலுக்கு வழிவகுத்தா?

கேள்வி-13. எந்திரிச்சதும் குடி... ஏழை குடும்பங்களுக்கு "வெடி!'
பதில்: அவரவருக்கு அவரது நியாயங்கள். இரு தலைமுறைகளாக குடி வாசனையே அறியாதவர்களுக்கு குடியை அறிமுகப்படுத்திய மகானுபாவர் கருணாநிதியைத்தான் சொல்லணும். சோவியத் யூனியன் அழிந்ததற்கு அதன் தொழிலாளிகளின் குடிப்பழக்கமும் ஒரு காரணமே.

14. வேண்டவே வேண்டாம்... ஆறு வழிச்சாலை!
பதில்: ஊர் மக்கள் கூறுவதும் நியாயமாகத்தானே உள்ளது? பாதிக்கப்படும் கட்டுமானங்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்வதையும் பிராஜக்டின் நோக்கமாகக் கொள்வது அவசியம்.

15. தனியாரிடம் கூடுதலாக 1,200 மெகாவாட் மின்சாரம் வாங்க முடிவு: மின்வாரியம் டெண்டர் அறிவிப்பு
பதில்: எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்னும் நிலையில் தமிழக அரசு உள்ளது. மோதி ஆட்சிக்கு வந்தபோது குஜராத்தும் இந்த நிலையில்தான் இருந்தது. ஆனால் இப்போது? அவரது ஆலோசனை நமக்கு இப்போது அவசியம். அரசுக்கு அதை செய்ய மனம் வருமா?


ரமணா
கேள்வி-16. பாண்டிச்சேரி முதல்வரின் சந்திப்பு சோனியாவுடன், அதிமுக தலைவி என்ன சொல்வார்?
பதில்: என்னதான் அரசியலில் இதெல்லாம் ஜகஜம் எனக் கூறினாலும் ரங்கசாமி செய்தது ஓவர்தான் என்பது என் அபிப்பிராயம்.

கேள்வி-17. சுப்பிரமணியசாமி வீசும் ஊழல் வெடிகுண்டுப் புகார் அடுத்து யாரை தாக்கும்?
பதில்: அவருக்கே அது தெரியாது என இருக்கும் பட்சத்தில் நான் என்ன கூறுவது?

கேள்வி-18. தாத்தா சூரியப்பேரனை கைவிட்டுவார் போலுள்ளதே?
பதில்: மகள் பாசம்.

கேள்வி-19. செட்டி நாட்டுச் சீமானுக்கு சிக்கலாமே?
பதில்: தவறான லின்க் கொடுத்துள்ளீர்கள் போலிருக்கிறதே. அதனால் என்ன பரவாயில்லை. திருமாவின் முகமூடி கிழிந்ததல்லவா? செட்டிநாட்டுச் சீமான் செய்த முன்வினை இப்போது வந்துள்ளது.

கேள்வி-20. ஊடக வாய்களுக்கு மெல்வதற்கு அவல் தொடர்ந்து கிடைத்துக் கொண்டேயிருக்கிறதே?
பதில்: அது எக்காலத்திலும் நடப்பதுதானே. அயோத்தி ராமன் காலத்தில் கூட பல வீடுகளில் தசரதர் கைகேயிக்கு தோப்புக்கரணம் போட்டதையெல்லாம் சொல்லிச் சிரித்திருந்திருப்பார்களாக இருக்கும்.


கேள்வி-21. டீசல் லிட்டருக்கு ரூபாய் 3 விலையேற்றம் காரண‌ம் காட்டி லாரி வாடகையை 20 % ஏற்றுவது பற்றி?
பதில்: இதில் என்ன தவறு? புரிந்து கொல்ளக்கூடிய செயல்தானே.

கேள்வி-22. தமிழக முதல்வர் மேற்கு வங்க முதல்வரை பின்பற்றி வரிச் சலுகை தருவாரா?
பதில்: ஒவ்வொரு மாநிலத்தின் நிலைக்கேற்பத்தான் அந்தந்த அரசு செயல்பட வேண்டும். அப்படியே பின்பற்ற வேண்டும் என்றால் மோதி இருக்க மற்றவரை பின்பற்றுவது கனியிருப்பக் காய் கவர்ந்தற்று.

கேள்வி-23. மின்வெட்டு தொடர்கிறதே?
பதில்: இவ்வளவு ஆண்டுகளாக கெட்டிருந்த நிலையை சரியாக்க நேரம் தேவைப்படும் என்றாலும் அதை முடிந்த அளவுக்கு துரிதப்படுத்தும் அரசு என்பதே எதிர்பார்ப்பு.

கேள்வி-24. தேமுதிக எம்.எல்.ஏ பார்த்திபனின் சமீபத்திய நடவடிக்கைகள் பற்றி?
பதில்: எதிர்க்கட்சி எம்.எல்.ஏ. ஆனதற்கே இந்த ஆட்டமா? முளையிலேயே கிள்ளீ எறிய வேண்டிய விஷயம் இது. இவரை மாதிரி கூட்டாளிகள் இருந்தால் விஜயகாந்துக்கு தனியாக விரோதிகளே தேவை இல்லை.

கேள்வி-25. முதல்வர் ஜெயலலிதாவின் 27.6.11 ஆங்கில டீவிக்கு (TIMES NOW) அளித்த பேட்டி பற்றி?
பதில்: நான் அதை பார்க்கவில்லை. ஆகவே கருத்து ஏதுமில்லை.

மேலும் கேள்விகள் வந்தால் அடுத்த வாரம் சந்திப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

6/23/2011

டோண்டு பதில்கள் - 23.06.2011

pt
டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
கேள்வி-1. அ.தி.மு.க.,வின் வீம்பால் வீண் செலவு: கருணாநிதி குற்றச்சாட்டு

பதில்: எண்ணைக்கிணறை சட்டசபையாக பயன்படுத்தாததால் கோபம் போலிருக்கு. எவன் அப்பன் வீட்டு துட்டு என தோட்டா தரணியை விட்டு செட் போடச் சொல்லி, கட்டிடத்தை அவசர அவசரமாக திறக்கச் செய்தாராம்? அடுத்து சமச்சீர் கல்வி. அவசரத்தில் அள்ளித் தெளித்த கோலம் போல இவர் செய்ததை சரி செய்ய வேண்டாமே?

கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்கிறதா என்பதை பார்க்கட்டுமே இவர்.

கேள்வி-2. இலங்கை தீர்மானத்தால் அரண்டு போயுள்ள மத்திய அரசு
பதில்: யாருமே எதிர்பார்க்கவில்லை என்பதுதான் நிஜம். அதே சமயம் அதன் ஷாக் வால்யூ மட்டுமேதான் மிஞ்சும் என நினைக்கிறேன்.

கேள்வி-3. "முதல்வர் ஜெயலலிதா மகத்தான வெற்றி பெற்றதன் மூலம், தமிழகம் காப்பாற்றப்பட்டுள்ளது' என, நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
பதில்: ஆம், 1996-ல் நடந்ததது 2011-லும் நடந்துள்ளது.

கேள்வி-4. மக்கள் பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு தமிழக அரசுக்கு காங்., எம்.எல்.ஏ., பாராட்டு
பதில்: கருணாநிதி வயிற்றில் புளியைக் கரைக்கக்கூடிய பாராட்டு.

கேள்வி-5. தோட்டங்களாகும் மாடிகள்: வேளாண் பல்கலை திட்டம்
பதில்: நல்ல திட்டமாக உள்ளதே!.

கேள்வி-6. அதிமுக அரசின் திட்டங்களுக்கு அமோக வரவேற்பு: லயோலா கருத்துக்கணிப்பு
பதில்: Too early for such a poll.

கேள்வி-7.பாஜக தலைவர் முண்டே விலகலா?
பதில்: பாஜகாவிற்கு கட்டிவராத உட்கட்சிப் பூசல், துரதிர்ஷ்டவசமானது.

கேள்வி-8. தயாநிதி மாறனை சிபிஐ விசாரிக்க பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புதல்?
பதில்: சுப்ரீம் கோர்ட் என்ன சொல்கிறது என்பதுதான் முக்கியம் இந்த விஷயத்தில்.

கேள்வி-9. லோக்பால் மசோதா: அனைத்து கட்சிக் கூட்டம் நடத்த முடிவு
பதில்: பிறகு கமிட்டி எல்லாம் போடுவார்கள். திட்டம் எல்லாம் கோவிந்தா என்பதை சோ ஏற்கனவேயே தனது நாடகம்/திரைப்படம் முகம்மது பின் துக்ளக்கில் கூறிவிட்டார்.

கேள்வி-10. நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை: ரசிகர்களுக்கு ரஜினி கடிதம்
பதில்: இது அவரது கையெழுத்துதானாமா? அழகாக உள்ளது.


ரமணா
கேள்வி-11. லோக்பால் மசோதா நாம் எதிர்பார்க்கும் அளவுக்கு இருக்குமா?
பதில்: இருக்காது.

கேள்வி-12. இந்த மசோதா வெற்றி பெறுமா இல்லை?
பதில்: வெற்றி பெறாது, மசோதா வருவதே சந்தேகம்.

கேள்வி-13. அமைச்சர் கபில் சிபிலின் பேட்டிகள் எப்படி?
பதில்: எந்தப் பேட்டி? இதையா குறிப்பிடுகிறீர்கள்? வழக்கமான க்ளீஷேக்கள் நிறைந்த பேட்டி.

கேள்வி-14. அதிமுக தலைவிக்கு இன்னும் அமைச்சர் சிதம்பரம் மேல் கோபம் குறையவில்லையா?
பதில்: ஏன் குறைய வேண்டும்?

கேள்வி-15. மீண்டும் ஜெயபிரகாஷ் நாராயண் டைப் எழுச்சி இந்தியாவில் வர வாய்ப்பு ஆகஸ்டு 15 க்கு மேலே?
பதில்: இல்லை.

கேள்வி-16. அடுத்த மாதம் கோவையில் கூடும் திமுக பொதுக்குழுவில் கூட்டணி மாற்றம் பற்றிய செய்தி வரும் போலுள்ளதே?
பதில்: பாவம் பார்வையாளர்கள். கீரி பாம்பு சண்டை வரும் என உதார் காட்டியே பிழைக்கும் கழைக்கூத்தாடிதான் நினைவுக்கு இத்தருணத்தில் வருகிறார்.

கேள்வி-17.சமச்சீர் கல்வி பற்றிய முடிவில் இத்தனை இழுபறி நிலை, மாணவர் எதிர்காலம் என்னவாகும்?
பதில்: சொர்க்கம், அதாவது திரிசங்கு சொர்க்கம்.

கேள்வி-18. தேமுக தலைவரின் நீண்ட மெளனம் ?
பதில்: நிலைமையை அவதானிக்கிறாரோ?

கேள்வி-19 .மாண‌வர் அனைவருக்கும் லாப்டாப் சாத்யமா?நலம் பயக்குமா?
பதில்: தேவையர்ற இலவசம். நன்மை பயக்காது.

கேள்வி-20. பாஜக ஆட்சிக்கு வருவத‌ற்கான வாய்ப்புகள் உருவாகிறதா?
பதில்: அதற்கு காங்கிரஸ் இன்னும் உழைக்க வேண்டும்.


மேலும் கேள்விகள் வந்தால் அடுத்த வாரம் சந்திப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

6/22/2011

வீடுவரை உறவு, கடைசி வரை யாரோ

பதிவுக்கு போகும் முன்னால் முதலில் இப்பாட்டைக் கேட்டுவிடுவோம்.


கமலஹாசன் நடித்து வெளியான “பேசும் படம்” எண்பதுகளில் திரையிடப்பட்டது, டயலாக்கே இல்லாமல். அதில் ஒரு சீன். ரயில்வே மேம்பாலத்தில் ஒரு பிச்சைக்காரன் அமர்ந்திருப்பான். ஒரு பெரிய துண்டை விரித்துப் போட்டு அதன் மேல் அமர்ந்திருப்பான். கமல் தன் கையில் இருக்கும் பணத்தை அவன் முன்னால் எண்ண, அவனோ தனது துண்டுக்கடியில் வைத்திருக்கும் கத்தை கத்தையான பணத்தைக் காட்டுவான். கமலுக்கு வாழ்க்கையே வெறுத்து விடும்.

சில காட்சிகள் கழித்து அதே பிச்சைக்காரனின் இறந்த உடல் அதே துண்டின் மீது கிடக்கும். பிணத்தை அப்புறப்படுத்த வருபவர்கள் பிணத்தை துண்டுக்கு அப்பால் தூக்கி வைத்துவிட்டு, துண்டை மடிப்பதற்காக அதை எடுத்து உதற அத்தனை ரூபாய்களும் பறக்கும். அவ்வளவுதான் எல்லாவற்றையும் விட்டு விட்டு பணத்தை அள்ள முயல்வார்கள். பிச்சைக்காரனின் கண்கள் திறந்த நிலையிலேயே ஒரு எதிர்வினையும் காட்டாது, எல்லா கூத்தையும் பார்ப்பதுபோல அவன் உடல் சாய்த்து வைக்கப்பட்டிருக்கும்.

இதெல்லாம் இங்கே எதுக்கு என முரளி மனோகர் கோபப்படும் முன்னால் இன்று வெளியான ஜூவியில் நான் படித்த இச்செய்தியை சுருக்கமாகக் கூறுகிறேன்.

புட்டப்பர்த்தியின் சாயி ட்ரஸ்டினர் பல முக்கிய சாட்சிகளின் முன்னிலையில் சாய்பாபாவின் யஜுர் மந்திர அறையைத் திறந்து பார்த்ததில், 11.57 கோடி ரூபாய் ரொக்கம், 98 கிலோ தங்க நகை, 310 கிலோ வெள்ளி நகைகள், பல சிலைகள் கண்டெடுக்கப்பட்டதாக அதிகார பூர்வமாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால் உண்மையிலேயே வேறு பல பொருட்களும் கிடைத்ததாகவும் அவை எல்லாம் மாயமாக மறைந்தன என்ற வதந்தியும் எழுந்தது.

இச்செய்தியை படித்ததும் எழுந்த நினைவலைகளே மேலே எம்பெட் செய்யப்பட்ட வீடியோ மற்றும் பேசும் படத்தின் அந்த சீன் என் நினைவிலிருந்து வந்தன என்பதை நான் இங்கு பதிவு செய்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

6/17/2011

பார்க்கின்சன் விதியும் டோண்டு ராகவனும் - 2

முதலில் நான் இட்ட பதிவு பார்க்கின்சன் விதியும் டோண்டு ராகவனும் போட்டு இரண்டரை ஆண்டுகள் போல ஆகி விட்டன. போன மாதம் நடந்த நிகழ்ச்சியே அது பற்றி நான் இன்னொரு பதிவையும் போட தூண்டுதலாக அமைந்து விட்டது.

என் அறையில் சுவற்றோரமாக சுவற்றில் பொருத்தப்பட்டிருந்த டாட்டா இண்டிகாம் இணையத் தொடர்பு கேபிள் திடீரென ஆணியிலிருந்து விலகித் தொங்க நானும் எதார்த்தமாக சோபாவின் ஒரு கைப்பிடியில் காலை வைத்து ஏறி அதை ஆணியில் திரும்ப மாட்ட முயற்சிக்க, சோபா ஒரு புறம் ஒருக்களிக்க, நின்று கொண்டிருந்த நான் சாஷ்டாங்கமாகக் கீழே படுத்த கோலத்தில் கிடந்தேன். (கட்டிலடியில் ஒரே குப்பை என்பதையும் கவனித்தேன்).

வீட்டம்மாவும் மகளும் பதறியபடி ஓடி வந்து தூக்கிவிட, பிறகுதான் தெரிந்தது வலது முழங்காலில் வலி என. நல்ல வேளையாக எலும்பு முறிவு இல்லை. ஆஸ்பத்திரியில் எக்ஸ்ரே எல்லாம் எடுத்தார்கள். பிறகு 10 நாட்கள் காலுக்கு கரெண்ட் கொடுத்து சிகிச்சை.

இந்தழகில் அடிப்பட்ட சில நாட்களிலேயே நான் ஏற்கனவேயே குறிப்பிட்ட அந்த மார்க்கச்சு உற்பத்திச் சாலைக்கு துபாஷியாக வேறு அழைப்பு வந்தது. போய் செய்தேன் என வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் அப்போதுதான் அந்த தொழிற்சாலையின் லைன்களின் எண்ணிக்கை, நீள அகலங்கள் ஆகியவை புலப்பட்டன. முழங்காலில் வேறு வலி, பார்த்தால் பசி தீரும் படத்தில் படம் முழுக்க சிவாஜி நொண்டிக் கொண்டே வருவாரே, அம்மாதிரி நடை (என்ன, கொடி அசைந்ததும் காற்று வந்ததா என்னும் பாடல் மற்றும் சரோஜாதேவிதான் மிஸ்ஸிங்).

பிசியோ தெரப்பிஸ்டோ பல பயிற்சிகள் சொல்லித் தந்து வாழ்நாள் முழுக்க செய்ய வேண்டியிருக்கும் என்ற பீதியை வேறு கிளப்பினார். இந்த களேபரத்தில் நான் சாதாரணமாக செல்லும் வாக்கிங் எல்லாமே கோவிந்தா.

இங்கு பார்க்கின்ஸன் எங்கு வருகிறார் எனக் கேட்கிறான் முரளி மனோகர். விஷயத்துக்கு வருகிறேன்.

இத்தனை நாட்களாக நடை பழகுவதை டேக்கன் ஃபார் கிராண்டட் ஆக கருதியிருக்கிறேன். அதை இப்போது செய்ய முடியாது என்ற நிலை வந்ததும்தான் அதன் அருமை புரிந்தது. வயதும் கூடிக் கொண்டே போகிறது, மனத்தளவில் இன்னும் 25 வயது வாலிபனாகவே இருந்தாலும் என்பது வேறு உறைத்தது.

இப்போது எல்லாம் சரியாகி விட்டது. வாக்கிங் எல்லாம் மறுபடி துவங்கியாயிற்று. ஆனால் எத்தனை நாட்களுக்கு? ஆகவே முடிந்தவரை அதைச் செய்து பார்த்து விடுவது என்பதே இப்போதைய நிலை. வாக்கிங்கின் இன்பத்தை அனுபவிக்க தவற விடக்கூடாது. கையில் கிடைத்த நேரத்தை வீணாக்காது பயன் படுத்த வேண்டும் என்ற உணர்வு வந்துள்ளது.

அத்துடன் கூடவே வாழ்வின் மற்ற சந்தோஷங்கள் எல்லாம் வரும்போதே சந்தோஷப்பட்டு விட வேண்டும். சிறு சந்தோஷமானாலும் பரவாயில்லை. கான்ஷியஸ் ஆக அதை அனுபவிக்க வேண்டும்.

ஆகவே எனது சந்தோஷங்களைப் பட்டியலிட ஆசைப்படுகிறேன்.

பல சந்தோஷங்கள். அருமையான தாய் தந்தையர். காதல் மனைவி. அன்பான மகள். நல்ல இஞ்சினியரிங் மற்றும் மொழி பெயர்ப்பு அனுபவங்கள். நான் சந்தித்த அருமையான மனிதர்கள் - பள்ளி, கல்லூரி நண்பர்கள், மேக்ஸ் ம்யுல்லர் பவன் தேசிகன், அல்லியான்ஸ் பிரான்ஸேய்ஸின் சாரதா லாற்டே, ஐ.டி.பி.எல். பொது மேலாளர் ஜலானி, தமிழ்மண இணைய நண்பர்கள் - கருத்து வேறுபாடுகள் பல இருப்பினும் எனக்கு இன்னல் வந்தபோது ஆதரவு தெரிவித்தவர்கள், வலைப்பூவில் நான் இது வரை இட்ட ஆயிரத்துக்கும் அதிக தமிழ் இடுகைகள், அவற்றால் எனது தமிழில் மேம்பாடு, 56 வயதில் முதன்முறையாக கணினியுடன் சம்பந்தம் ஏற்பட்டு அதைக் கையாளுவதில் நான் பெற்ற வெற்றிகள், அவற்றால் வந்த பல மொழிபெயர்ப்பு வேலைகள் ... எதைச் சொல்ல, எதை விட? வாழ்க்கை இன்பமயமானது.

நினைவிருக்கட்டும், நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ, அதுவாகவே மாறுகிறீர்கள். வெற்றியடைவதைப் பற்றியே நினையுங்கள். அவ்வாறு நினைப்பவர்களுடன் மட்டுமே சேருங்கள். தோல்வி பயத்தில் இருப்பவரது அண்மையை விட்டு நீங்குங்கள்.

அறிஞர் அண்ணா முதல்வராக இருந்தபோது அவரிடம் சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் சீறினார், “Your days are numbered" என்று. அண்ணா அமைதியாக பதிலளித்தார், "Yes, but my steps are measured"

ஆம், நான் எடுக்கும் அடிகளும் அளவுடனேயே எடுக்கப்படுகின்றன.

அன்புடன்,
டோண்டு ராகவன்

6/16/2011

எஸ். பாலசந்தரின் பொம்மை

சமீபத்தில் 1964-ல் வெளி வந்த இப்படம் உருவாக்கம் பெற நீண்ட காலம் (கிட்டத்தட்ட 6 ஆண்டுகள்) பிடித்தாலும் அதன் தயாரிப்பாளர் பாலச்சந்தரை அது ஏமாற்றவில்லை. சக்கைப்போடு போட்டது. அக்கால சென்னைத் தெருக்கள் பார்க்கப் பரவசம் தரும். மீனம்பாக்கம் பழைய ஏர்போர்ட்தான் அப்போதைய விமான நிலையம். ஒரு செக்யூரிட்டி பந்தாவும் இல்லாமல் ஏர்ப்போர்ட்டில் எல்லோரும் சகஜமாகப் புழங்கியது வேடிக்கையாக இருக்கும்.

காலை ஒன்பது மணி முதல் மாலை 6 மணி வரை ஒரே நாளில் நடக்கும் நிகழ்ச்சிகள்தான் படம்.

முதல் பகுதி:


இரண்டாம் பகுதி:


இதில் வரும் “தத்தித் தத்தி நடந்து வரும் சின்னப்பாப்பா” பாடலுக்கு வாயசைக்கும் அப்பெண் குழந்தை மங்களாவுக்கு இப்போது வயது 57 இருக்கும். வி.எஸ். ராகவனை இளைஞனாகப் பார்க்கலாம். எல். விஜயலட்சுமி மட்டும் சளைத்தவரா என்ன? துள்ளிக் கொஞ்சும் இளமை!!!

மூன்றாம் பகுதி:
அடாடா என்ன கொடுமை. மீதிப் பகுதிகள் கிடைக்கவில்லையே? யூ ட்யூப்பில்தான் தேட வேண்டும். பார்ப்போம். இப்போதைக்கு பதிவைப் போடுகிறேன். உங்களில் ஆர்வமுள்ளவர்கள் முயற்சி செய்யுங்களேன். அவற்றின் எம்பெட்டிங் கோட் கிடைத்தால் பின்னூட்டமாகத் தரவும்.

அந்தப் பொம்மைக்காக எல்லோரும் நாய் படாத பாடுபட்டு அலைவதுதான் படம். கத்திபாராவிலிருந்து மீனம்பாக்கத்துக்கு டாக்சி 1.40 ரூபாய், மீட்டர்படி.

ஆறுதலாக அவர் புது முறையில் டைட்டில்ஸ் தந்ததையாவது பார்ப்போம்.

கடைசியாக டைட்டில்ஸ்:


அன்புடன்,
டோண்டு ராகவன்
பின்குறிப்பு: என் வேண்டுகோளுக்கு இணங்கி இப்படத்தில் திரையிடப்பட்ட, ஜேசுதாஸ் தமிழில் பாடிய முதல் பாட்டுக்கான வீடியோவின் சுட்டியைத் தந்த செந்திலுக்கு என் நன்றி. பாடல் இதோ:



03.11.2011 அன்று சேர்த்தது:
நண்பர் பால ஹனுமானுக்கு நன்றி. அவர் அன்புடன் விட்டுப் போன பகுதிகளுக்கான சுட்டிகள் தந்துள்ளார். அவற்றை வைத்து வீடியோக்களை எம்பெட் செய்கிறேன்.

மூன்றாம் பகுதி


நான்காம் பகுதி:


ஐந்தாம் பகுதி


ஆறாம் பகுதி

டோண்டு பதில்கள் - 16.06.2011

pt
டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
கேள்வி-1. சூரியன் இன்று மறைந்தால் நாளை உதிக்கும்: கருணாநிதி
பதில்: வெற்றி தோல்வி என்பது மாறி மாறித்தான் வரும் என்பதை ஒப்புக் கொள்ள வேண்டியதுதான். திமுக என்னும் சூரியன் கருணாநிதி என்னும் மேகத்தால் களங்கப்பட்டு நிற்கும் நிலையும் மாறும். அவர் மட்டும் சாஸ்வதமா என்ன?

கேள்வி-2. இலங்கையில் தமிழர்கள் சாவுக்கு தி.மு.க., தான் காரணம்: ஜெயலலிதா பகிரங்க குற்றச்சாட்டு
பதில்: இலங்கையில் நடப்பதை தமது கட்சிக்கு சாதகமாக திரிப்பதில் திமுகவும் சரி அதிமுகவும் சரி ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல.

கேள்வி-3. இலங்கை தமிழர்களை அழித்த பெருமை தி.மு.க.,வையே சாரும்: விஜயகாந்த் பேச்சு
பதில்: இப்போது இவர் வேறு சேர்ந்து கொண்டார்.

கேள்வி-4. குடிக்க கூடாது என சொல்வது நான் மட்டும்தான்: ராமதாஸ்
பதில்: அப்படிச் சொல்லி என்ன பிரயோசனம்? அவர் கட்சிக்காரர்களே அவர் சொல்வதைக் கேட்பதாகத் தெரியவில்லையே?

கேள்வி-5. 11 ஆயிரம் பேர் கொண்ட ஆயுதப்படை : ராம்தேவ் ஆவேச பேச்சு
பதில்: என்ன பேசி என்ன பலன்? கடைசியில் அவர் உண்ணாவிரதமே கேலிக்கூத்தாக முடிந்து விட்டதே.

IT IS REPORTED THAT DMK WILL WITHDRAW ITS SUPPORT TO CONGRESS GOVERNMENT IN THE SPECIAL GENERAL COUNCIL MEETING AND WILL ACT ON THE BASIS OF ISSUES IN FUTURE.
கேள்வி-6. ANY MID TERM POLL TO CENTRE IS POSSIBLE?
கேள்வி-7. WILL BJP CAPUTURE POWER?
கேள்வி-8. CONG,AIADMK,DMDK AND OTHERS ALLAINCE POSSIBLE IN TAMILNADU?
கேள்வி-9. IT SEEMS ADMK GOVT MOVEMENTS ARE PLANNING TO WIN ALL THE 40 MP SEATS ?
கேள்வி-10.WILL MARAN BROTHERS?

பதில்: (மேலே உள்ள 5 கேள்விகளுக்கும் சேர்த்து). அதுதான் திமுக ஆதரவை விலக்கிக் கொள்ளவில்லையே. விலக்கினால் சங்குதான் என்பதை அறிந்தே உள்ளது.

கேள்வி-11. "குறைகளை சுட்டிக்காட்டும் கட்சியாக தே.மு.தி.க., செயல்படும்,'' என, எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் பேசினார்.
பதில்: ஆரோக்கியமான சிந்தனை. 1991 தேர்தலுக்கு பிறகு எதிர்க்கட்சியாக அமர்ந்த காங்கிரஸ் ஜெக்கு பயங்கர ஜால்ரா அடித்தது. அடுத்த 5 ஆண்டுகள் சட்டசபையில் பல கூத்துக்கள் நடைபெற்றன. அம்மாதிரியெல்லாம் இம்முறையாவது நடக்காமல் இருக்கட்டும்.

கேள்வி-12. ஐந்து ஆண்டுகளில் கருணாநிதி குடும்பத்துக்கு கிடைத்தது: ஜெயலலிதா தகவல்
பதில்: அது ஒரு வருமானம் மட்டுமே. மற்ற வகை வருமானங்களைச் சேர்த்தால் தலையே சுற்றும்.

கேள்வி-13. சமச்சீர் கல்வித் திட்டத்தை கைவிடும் வகையில், அரசு கொண்டு வந்த சட்ட திருத்த மசோதாவிற்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
பதில்: இடைக்காலத் தடை எல்லாம் தீர்ப்பாகுமா? மேல் முறையீட்டு மனுவும் கொடுத்துள்ளனர். பார்ப்போம்.

கேள்வி-14. "காங்கிரஸ் கட்சியுடனான உறவில் எந்தச் சிக்கலும் இல்லை. ஸ்பெக்ட்ரம் வழக்கில், மத்திய அரசு தலையிட வேண்டும் என நிர்பந்திக்கவில்லை' என்று தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித்தார்.
பதில்: எவ்வளவு நேரம்தான் வலிக்காதது மாதிரி நடிப்பது என்னும் அழும் வடிவேலுதான் நினைவுக்கு வருகிறார்.

கேள்வி-15. "தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டசபை தேர்தல்களில் தங்கள் கட்சி படுதோல்வி அடைந்ததற்கு தி.மு.க.,வே காரணம்' என, காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
பதில்: ரொம்பவுமே தன்னடக்கம் உள்ளவர்கள்தான். தாங்களாகவே படுதோல்வி அடைய முடியும் என்பதை அடக்கத்துடன் மறைக்கின்றனர்.

Surya
கேள்வி-16. திருமாவளவன் திருவாக்கு மலர்ந்திருக்கிறார் இவ்வாறு. "பொன்னர் - சங்கரை 'தலித்’ என்று குறிப்பிட்டது சாதிய அடிப்படையில் அல்ல. பார்ப்பனர் அல்லாத பிற உழைக்கும் மனிதர்கள் யாவரும், கட்டுப்பாட்டுக்கும் அடக்குமுறைக்கும் ஆளான விளிம்பு நிலை மனிதர்கள் அனைவருமே 'தலித்’தான். இப்படித்தான் எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர, சாதியக் கண்ணோட்டத்தோடு அதைப் பார்க்கக் கூடாது. பொன்னரும் சங்கரும் என்ன சாதியைச் சேர்ந்தவர்கள் என்ற விவாதத்துக்கே நான் வரவில்லை." பார்ப்பனர் பார்ப்பனர் அல்லாதார் பற்றி இவர் விளக்கம் பார்த்தீர்களா? வீரமணியையே இவர் வெட்கமடையச் செய்து விடுவார் போல் இருக்கிறதே!
பதில்: பார்ப்பனர் என்னும் பூச்சாண்டியைக் காட்டி ஓப்சி, பிசி ஆகியோர் செய்யும் வன்கொடுமைகளை மறைக்க நாடகம் போடும் வீரமணி வகையறாக்களையும் இவர் மிஞ்சி விட்டார் என்பதை ஒப்புக் கொண்டுதான் தீர வேண்டும்.

கேள்வி-17. கனி மொழி இந்த வெய்யிலில் திகார் ஜெயிலில் கஷ்டப்படுகிறார் என்ற கலைஞரின் கவலை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
பதில்: ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை.

கேள்வி-18 தயாநிதிக்கு எதிராக சிவசங்கரனை இயக்குபவர் ராஜாத்தி அம்மாள் என்ற வதந்தி பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில்: யானைக்கு ஒரு காலம் என்றால் பூனைக்கும் வரும்தானே.

கேள்வி-19. பாபா ராம்தேவ் உண்ணாவிரதம் பற்றி உங்கள் கருத்து?
பதில்: அது புஸ்வாணம் என்பதுதான்.


Simulation
கேள்வி-20. உங்களிடம் கேள்வி கேட்பவர்கள கேள்விகளைக் "கேள்விகளாகக்" கேட்காமல் வெற்று வாக்கியங்களாகக் கேட்பதேன்?
கம்யூனிஸ்டுகளைக் காயடிப்பவன்
கேள்வி-21. இனிமே எவனுமே கேள்வி கேட்க மாட்டான் போல இருக்கு...எவனாவது எதையாவது கேட்டால் உடனே கேள்வி பதில் பகுதிக்கு கேள்வியை எடுத்துக்றேன் என்கிறீர்கள்...
பதிவு போடுவதையே விட்டுவிட்டீர்கள்...வெறும் கேள்வி பதில் வைத்தே எவ்வளவு நாள் இப்படி ஓட்டப்போகிறீர்கள்

பதில்: இரு கேள்விகளுக்கும் சேர்த்து பதில் அளித்து விடுகிறேன்.
@சிமுலேஷன்: அந்த வெற்று வாக்கியங்கள் செய்திகளில் வருபவை. அவை குறித்து எனது நிலைப்பாடு என்ன என்பதை அறியும் நோக்கத்தில் கேட்கப்படுகின்றன. அவற்றை வெறுமனேயே கூகளில் அடித்தால் சுட்டிகள் வந்து விழுகின்றன. அவற்றின் பின்புலனைப் பார்த்து பதிலளிக்க இயலுகிறது. இக்கேள்விகள் மற்றும் பதில்களே ஒருவகை கருத்துப் பரிமாற்றமாற்றம்தான். இரண்டு நண்பர்கள் கூடினால் பேசும் பல விஷயங்கள்தான் இவை. நான் எனது நிலைப்பாட்டை அவர்கள் கேட்பதால் கூறுகிறேன். மேலே ஏதேனும் சொல்ல வேண்டுமானால் பின்னூட்டங்களில் நண்பர்கள் கூறுகின்றனர்.

@கம்யூனிஸ்டுகளை காயடிப்பவன்: என்ன செய்வது பதிவுகள் போட நேரம் இல்லை, அதிக கருத்துக்களும் தோன்ற மாட்டேன் என்கின்றன. கேள்வி பதில்கள் வாரம் ஒரு முறை என்பதை வைத்துக் கொண்டதால் ஒரு வகை டிசிப்ளின் வருகிறது. ஓடும் வரை ஓடட்டுமே.


ரமணா
கேள்வி-22. மாறன் சகோதரர்கள் மேல் சுமத்தப்படும் பகிரங்க குற்ற்ச்சாட்டுகளுக்கு பின்னால் இருந்து இயக்குபவர் யார்?
பதில்: அவரது போட்டியாளர்கள், அவரால் பாதிக்கப்பட்டவர்கள் என ஒரு பெரிய லிஸ்டே உள்ளதே.

கேள்வி-23. திமுக,காங் உற‌வு முறிக்கப்பட்டால் என்னவாகும்?
பதில்: கருணாநிதிக்கு சங்குதான். ஏன் அவர் வயிற்றில் புளியைக் கரைக்கிறீர்கள்?

கேள்வி-24. அடுத்த கோர்ட் வழக்கு என்னவாயிருக்கும்?
பதில்: பல வழக்குகளுக்குள் இது விஷயமாக போட்டி எனக் கேள்வி.

கேள்வி-25. முதல்வர் ஜெயலலிதாவின் சட்டசபை ந‌டவடிக்கைகள் எப்படி?
பதில்: இன்னும் கொஞ்ச நாட்கள் போகட்டும்.

கேள்வி-26. வட இந்திய ஆங்கிலச் செய்திச் சேனல்கள் பார்ப்பனர் சார்பு என குற்றம் சாட்டும் திமுகழகத்தின் செயல் பற்றி?
பதில்: அப்படி பார்ப்பனர்களால்தன் அவர் பதவி போனது என அவர் கூறியது உண்மையானால், பார்ப்பனரது தேச சேவை உணர்ச்சியை பாராட்ட வேண்டியதுதான் என இட்லி வடை எழுதியது சரிதான்.

கேள்வி-27. நீதி மன்ற தடையானைக்கு பிறகும் சமச்சீர் கல்வியில் முதல்வரின் செயல் பற்றி?
பதில்: தடையாணை தீர்ப்பாகாது. அரசு மேல் முறையீட்டு மனு கொடுத்துள்ளது.

கேள்வி-28. இலங்கைப் பிரச்சனையில் அதிமுகவின் இரட்டைவேடம் என குற்றஞ்சாட்டுபவர் பற்றி?
பதில்: தமிழகத்தின் இரு பிரதான கட்சிகளும் அவ்வாறுதான் செய்கின்றன.

கேள்வி-29. முதல்வரின் டெல்லி விஜயம் மீண்டும் அதிமுக,காங்கிரஸ் கூட்டணிக்கு வித்திடும் என வரும் செய்திகள் பற்றி?
பதில்: முதல்வரின் நோக்கம் முதலில் திமுக மற்றும் காங்கிரசை பிரிப்பதே. பிறகுதான் மற்றதெல்லாமே.

கேள்வி-30. மாறன் சகோதரர்கள் சிவசங்கரனுடன் சமாதானத் தூது பற்றிய செய்தி பற்றி?
பதில்: இதுதான் சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவதே மேல் என்பதற்கு உதாரணமோ?

கேள்வி-31. லோக்பால் மசோதாவுக்கு ஆதரவாய் மிஸ்டு கால் கொடுக்கச் சொல்லி வரும் எஸ்.எம்.எஸ் பற்றி?
பதில்: வேலையில்லாதவன்கள் செய்யும் வேலை.

ராஜரத்தினம்
கேள்வி-32. திமுகவின் தோல்விக்கு சில பார்பனர்கள்தான் காரணம் என்கிறாரே? இதே சில பார்பனர்கள்தானே ரஜினியை வைத்து திமுகவை வெற்றி பெற வைத்தார் என்பதை அவர் மறந்தாரோ?
பதில்: 15 ஆண்டுகளுக்கு முந்தைய விஷயம் எல்லாவர்றையும் துல்லியமாக நினைவில் வைக்க அவர் என்ன டோண்டு ராகவனா?

கேள்வி-33. இலைகாரன் என்பவர்தான் எழிலரசுவாக மாறியிருகிறாரோ?
பதில்: அது விருச்சிககாந்த் என்ற கோமாளிதான் என நினைக்கிறேன். அவர்தான் இலைக்காரன் என்று சொன்னால் அது வேறு விஷயம். விருச்சிககாந்த் யார் என்பதையும் எனக்கு ட்விட்டர் நண்பர்கள் கூறிவிட்டனர். மொத்தத்தில் ஒரு காமெடி பீஸ்.


baleno
கேள்வி-34. இலங்கை மீது பொருளாதாரத் தடை விதித்து அந்த நாட்டை கடுமையாக தண்டிக்க தமிழ்நாட்டு அரசியல் கட்சிகாளால் நிறைவேற்றபட்ட தீர்மானத்தை இந்திய மத்திய அரசு நிறைவேற்ற போவதாக வைத்துக் கொள்வோம். இலங்கையில் அதிகம் பாதிக்கபடபோவது யார் என்று நினைக்கிறீர்கள்?
பதில்: பொருளாதாரத் தடை எல்லாம் வித்திக்கும் அளவுக்கு இந்தியாவிடம் பலம் இல்லை என்றுதான் நான் நினைக்கிறேன்.

மேலும் கேள்விகள் வந்தால் அடுத்த வாரம் சந்திப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

6/15/2011

நீதிமன்றத் தாமதங்கள்

ப. சிதம்பரம் லோக்சபாவுக்கு ஏமாற்றுவேலைகள் செய்ததன் மூலம்தான் வந்துள்ளார் என ஜெயலலிதா சாட, அவர் செய்வது கோர்ட்டை அவமதிக்கும் செயல் என சிதம்பரம் எதிர் சாடல் செய்துள்ளார். விஷயம் என்னவென்றால், 2009-லிருந்து இது கோர்ட்டால் விசாரிக்கப்படும் கேஸ் என்பதுதான் அவரது வாதம்.

எனக்கு கோர்ட்டை அவமதிக்கும் எண்ணம் இல்லை. ஒரே ஒரு கேள்வி மட்டும் உள்ளது. இந்த கேஸ் என்று மட்டுமில்லை, பல கேஸ்களிலும் நடப்பதுதான். இப்படித்தான் ஒரு தேர்தல் வழக்கில் ஒரு மெம்பரின் தேர்தல் செல்லாது என தீர்ப்பு வரும் சமயத்தில் சம்பந்தப்பட்ட மன்றத்தின் ஆயுளே முடிந்து விட்டது. பிறகு இந்தத் தீர்ப்பை வைத்துக் கொண்டு என்ன செய்வதாம்? அப்படியாக இம்மாதிரி காலவரையறுக்கப்படும் வழக்குகளை தாமதமாக பைசல் செய்வதன் காரணம் என்ன?

குடியரசுத் தலைவரின் அலுவலகம் கூட அதே மாதிரித்தான் பல மரண தண்டனை வழக்குகளில் கருணை மனுவை பைசல் செய்வதில் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு தாமதம் செய்து வருகிறது. அஃப்சல் குரு, கசாப், நளினி, முருகன் ஆகியோரை இன்னும் சகித்துக் கொண்டு தண்டச்சோறு போட வேண்டியிருக்கிறது.

பல ஆண்டுகளுக்கு முன்னால் விஷ ஊசி வழக்கு ரொம்பவும் பிரசித்தி பெற்றது. அதில் தூக்கு தண்டனை பெர்ற வைத்தீஸ்வரன் பல ஆண்டுகள் வாய்தா எல்லாம் வாங்கி இழுக்கடித்து, பிறகு கருணை மனு மீதான தீர்ப்பும் பல ஆண்டுகள் இழுத்தடிக்க, பல ஆண்டுகள் தன்னைத் தவிப்பில் வீட்டதற்காகவே கருணை வழங்க வேண்டும் என அக்கொலைக்காரன் மனு போட, அதையும் ஏற்று அவன் மரண தண்டனையையும் குறைத்து ஆயுள் தண்டனையாக்கி, பிறகு வெளியிலும் விட்டு விட்டார்கள். இப்போது அவன் எங்கிருக்கிறானோ, இன்னும் யாரையெல்லாம் கொலை செய்யப் போகிறானோ என்று எண்ண வேண்டியுள்ளது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

6/10/2011

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 10.06.2011

எம். எஃப். ஹுசைன் மறைவு
ஒரு வழியாக ஒரு விவாதத்துக்குரிய மனிதர் இறந்து போனார். அவரைப் பற்றிய விவாதங்களும் முடிவடையும் என நம்புவோம். இறந்தவர் செய்த கெடுதல்களை பேசக்கூடாது என்பார்கள். ஆகவே அவர் செய்த நல்ல காரியத்தைப் பற்றிப் பேசுவோம். நன்றாக படம் வரைவார். மாதுரி தீட்சித்துக்கு ரசிகர். வேறு என்ன நல்லது செய்தார்? நினைவுக்கு வரவில்லை.

நினைவுக்கு வருவது ஒரு ஜோக்குதான். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் பற்றி நான் ஏற்கனவேயே எழுதியுள்ளேன். முத்துசாமி தீட்சிதரின் படைப்புகளிலேயே சிறந்தது என என்று ஒருவனிடம் கேட்க, அவன் அழுத்தந்திருத்தமாக “மாதுரி தீட்சித்” என்றானாம். பரவாயில்லை ஹுஸேன். இந்த ஜோக்கையாவது நினைவுபடுத்தினாரே.

கழுத்தைப் பிடித்துத் தள்ளப்படும் வேண்டாத விருந்தாளி
பாவம் காங்கிரசாரும் என்னென்னவோ செய்து பார்த்து விட்டனர். சோனியா காந்தி, ராகுல் காந்தியாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. மகளையும் சிறையில் அடைத்தாயிற்று. இப்போது பேரனின் முறை எப்போது வேண்டுமானாலும் வரலாம். ஆனால் என்ன, கருணாநிதி கூட்டணியில் தொடர்கிறார். மிஞ்சி மிஞ்சிப் போனால் வெளியே இருந்தாவது ஆதரவு கொடுப்பாராக இருக்கும்.

இப்படித்தான் ஒரு வேண்டாத விருந்தாளி விட்டை விட்டுப் போகாமல் அழிச்சாட்டியம் செய்தானாம். அவனிடம் ஜாடையாகக் கூறி பார்த்திருக்கிறார்கள், “உன் வீட்டார் உன்னைப் பிரிந்து ரொம்பக் காலம் ஆகி விட்டது போலிருக்கிறதே, வருந்த மாட்டார்களா” என்று. வே.வி.யிடம் இந்தப் பாச்சா பலிக்குமா? “அதற்குத்தான் நேற்றே என் வீட்டாருக்கு எழுதிப் போட்டு விட்டேன். நாளை எல்லோரும் இங்கேயே வந்து விடுவார்கள்” என்று சொன்னானாம்.

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்
ஃபேஸ்புக், லின்க்ட் இன் ஆகிய தளங்களிலிருந்து நட்பு கோரி பல அழைப்புகள் வருகின்றன. அங்கெல்லாம் நான் போவதே இல்லை. முதலில் உறுப்பினர் ஆனதுடன் சரி. தனிப்பட்டத் தகவல்கள் திருடப்படும் இக்காலத்தில் அங்கெல்லாம் போகாமல் இருப்பதே உத்தமம் என நான் நினைப்பதே அதற்குக் காரணம். ஆகவே அம்மாதிரி நட்பு அழைப்புகளுக்கு நான் எதிர்வினை கூடச் செய்வதில்லை.
உங்கள் புரிதலுக்கு நன்றி.

கொத்துக் கொத்தாக மின்னஞ்சல்கள் அனுப்புவது பற்றி
இது இன்னொரு தலைவலி. ஆனால் சில சமயங்களில் அவை நல்ல பதிவுகளுக்கும் காரணமாகின்றன என்பதையும் மறுக்கவியலாது. ஆகவே இது குறித்து எனது கருத்து நடுநிலையில்தான் உள்ளது.

ஆனால் எனது நண்பனுக்கு ஒரு சங்கடம் ஏற்பட்டது. எல்லோருக்கும் இம்மாதிரி மெயில்களை அனுப்பும்போது தவறுதலாக தன்னுடைய பே ஸ்லிப்பையும் அட்டாச் செய்திருக்கிறான் அந்தப் பேர்வழி. பிற்கு நான் ஃபோன் செய்து என்ன விஷயம் எனக் கேட்க, தவறுதலாக அனுப்பியதாகவும், அம்மின்னஞ்சலைத் திரும்பப் பெறும் முயற்சியில் இருப்பதாகவும் கூறுகிறான் அவன். டூ லேட் எனக்கூறிவிட்டு ஃபோனைக் கட் செய்தேன் நான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

6/09/2011

டோண்டு பதில்கள் - 09.06.2011

pt has left a new comment on your post "டோண்டு பதில்கள் - 02.06.2011":
டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
கேள்வி-1. கட்டாயப்படுத்தி ரத்தப் பரிசோதனை செய்யக்கூடாது: என்.டி. திவாரி

பதில்: இல்லையா பின்னே? எந்தப் புத்தில் எந்தப் பாம்பு இருந்ததுன்னு தெரிஞ்சுடாதோ?

கேள்வி-2. இலவச மகப்பேறு சிகிச்சைத் திட்டம் சோனியா காந்தி தொடங்கி வைத்தார்
பதில்: நல்ல முயற்சி, பாராட்டுக்கள்.

கேள்வி-3.எந்த நிறுவனத்துக்கும் சலுகை காட்டவில்லை: அமைச்சர் தயாநிதி மாறன்
பதில்: இப்போது வந்திருப்பது கலகம். பிறகு வரட்டும் நியாயம்.

கேள்வி-4. வீட்டுச் செலவுக்கு ரூ. 1 லட்சம் எடுக்க ராசாவுக்கு அனுமதி
பதில்: ஒரு மாதத்துக்கா ஒரு நாளுக்கா?

கேள்வி-5. லோக்பால் மசோதா: பொது விவாதத்துக்குத் தயாரா? பிரணாபுக்கு சாந்தி பூஷண் கடிதம்
பதில்: சபாஷ் சரியான சவால்.

கேள்வி-6. பிறந்த நாள் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டேன்: கருணாநிதி
பதில்: தனிப்பட்ட முறையில் துயரம்தானே. அதை மதிப்போமே.

கேள்வி-7. இலவசத் திட்டங்கள் கடன் வாங்கி நிறைவேற்றப்படவில்லை: கருணாநிதி
பதில்: அவை தலித்துகள் அல்லது கிராமப்புற மேம்பாட்டுத் திட்டங்களிலிருந்து மாற்றப்பட்ட நிதி என்பது போல நான் படித்த ஞாபகம்.

கேள்வி-8. பாபா ராம்தேவ் உண்ணாவிரதத் திட்டம்: தவிர்க்க அரசு தீவிர முயற்சி
பதில்: உண்ணாவிரதம் என்பது இருபக்கமும் கூர்மையான ஆயுதம். கையாளும்போது கவனம் தேவை. இப்போதெல்லாம் ஆ ஊ என்றால் உண்ணாவிரதம் இருக்க துவங்கி விடுகிறார்கள்.

கேள்வி-9. ஜி வழக்கு: தயாளுவுக்கு எதிரான மனு தள்ளுபடி
பதில்: அது மட்டுமல்ல, மனுவைத் தாக்கல் செய்தவர்களுக்கு அபராதம் வேறு விதிக்கப்பட்டதாமே.

கேள்வி-10. பெரும்பான்மையை நிரூபித்தார் எடியூரப்பா
பதில்: காங்கிரசில் இருக்க வேண்டியவர். பி.ஜே.பி.க்கு இவரைப் போன்றவர்கள் கரும்புள்ளிகளே.

ரமணா
கேள்வி-11.கருணாநிதியின் அனைத்து நலத்திட்டங்களையும் ரத்து செய்வதை பார்த்தால்?
பதில்: ஏற்கனவேயே இவற்றையெல்லாம் பார்த்து விட்டோமே.

கேள்வி-12. மோனோ ரயில் திட்டம் தோல்வித் திட்டமாமே?
பதில்: இது சம்பந்தமாக பதிவர் அருள் எழுதியதை இத்தருணத்தில் பார்ப்பது நலம்.

கேள்வி-13. காங்.‍‍‍ கழகத்தை கண்டுகொள்ளாத் தன்மை என்ன‌ தகவல் சொல்கிறது?
பதில்: வேண்டாத விருந்தாளியை கழுத்தைப் பிடித்துத் தள்ளினாலும் போக மாட்டேன் என்கிறாரே என காங்கிரஸ் கருதுவதைத்தான்.

கேள்வி-14. தயாநிதியின் அரசியல் எதிர்காலம்?
பதில்: இப்போதைக்கு இறங்குமுகமே.

கேள்வி-15. கூடா நட்பு கேடாய் முடியும் ‍‍‍‍‍‍_ திமுகவின் தலைவர் யாரை சொல்கிறார்? யாருக்கு சொல்கிறார்? எதற்காக சொல்கிறார்
பதில்: அவரைப் பொருத்தவரை என்றால் பெரிய லிஸ்டே உள்ளது. அதே போல அவர் யாருக்கெல்லாம் கூடா நட்பாய் இருந்தார் என்பதைப் பார்த்தாலும் தலை சுற்றுகிறது. எதைக்கூற, எதை விட?

கேள்வி-16. பாபா ராம்தேவ் டெல்லி ராமலீலா மைதானத்தில் நடந்த உண்ணாவிரத நிகழ்வுகள்?
பதில்: கேலிக்கூத்து.

கேள்வி-17. கருப்புபணம் விவகாரம் முடிவுக்கு கொண்டுவர அரசியல்வாதிகள் சம்மதிப்பார்களா?
பதில்: யானை வாயில் போட்ட கரும்பை அது திரும்பத் தருமா?

கேள்வி-18. போகிற போக்கை பார்த்தால் மத்திய அரசுக்கு சிக்கல் போலுள்ளதே?
பதில்: Understatement of the year!!!!!

கேள்வி-19. அருமையான திமுகவின் திட்டங்களுக்கு கருணாநிதி தன் பெயரை வைக்காமாலிருந்தால் ஒருவேளை?
பதில்: அவற்றுக்கு கனிமொழியின் பெயரை வைத்திருக்கலாமோ?

கேள்வி-20.கருணாநிதி இனி என்ன‌ செய்தால் அவருக்கு புகழ் சேர்க்கும்?
பதில்: அதுதான் நிறையச் சேர்த்து விட்டாரே. மேலும் தேவையா அவருக்கு?


மேலும் கேள்விகள் வந்தால் அடுத்த வாரம் பார்ப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

6/02/2011

டோண்டு பதில்கள் - 02.06.2011

Arun Ambie
கேள்வி-1. மு.க.இசுடாலின் அவர்கள் கொளத்தூர் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளாரே! (நியாயப்படி குளறுபடி செய்த அலுவலர்களுக்கல்லவா நன்றி சொல்லவேண்டும்?)
பதில்: இதென்ன போங்கு, அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் இதையெல்லாம் நேரடியாகவோ வெளிப்படையாகவோ கூற முடியுமா?

கேள்வி-2. மு.க. அழகிரி மதுரையில் வீட்டை விட்டு வெளியே வரவேயில்லையே... அவரையே நம்பியிருக்கும் வடிவேலு முதலிய அடிப்பொடிகளை எப்படிக் காப்பாற்றப் போகிறார்?
பதில்: தன்னைக் காப்பாற்றிக் கொண்டால் போதாதா என்ன?

கேள்வி-3. ஒரு நிறுவனத்தின் வரவு செலவுகளுக்கு நிர்வாகிகள், பங்குதாரர்கள் பொறுப்பல்ல என்ற சமீபத்திய (நெஞ்சுக்கு) நீதி பற்றி உங்கள் கருத்து...
பதில்: பின்னே என்னதான் பொறுப்பாம் அவங்களுக்கு? பொறுப்பில்லாத வாதம் இது.

கேள்வி-4. தோட்டா தரணி செட் போட்ட சட்டசபைக் கட்டிடத்தின் திட்ட மதிப்பைக் கூட்டிச் சொல்லி சில கோடிகள் சுருட்டப்பட்டனவாமே?
பதில்: இம்சை அரசன் புலிகேசியில் உளவுத் தலைவன் வல்லவராயன் படையெடுத்து வருவதாகச் சொல்லும் ரேஞ்சில் பழைய செய்தி எல்லாம் தருவது நியாயமா?

கேள்வி-5. டாடாவுடனான நிலபேரம் தொடர்பாக ஜாபர்சேட் முக்கிய ஆவணக் கோப்புகளை கார்டனில் கொடுத்து தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டிக்கொண்டாராமே? நம்பிக்கை துரோகமில்லையா இது?
பதில்: அவரவர் நலன் அவரவருக்கு. இதில் என்ன துரோகம்?

கேள்வி-6. கர்நாடகாவில் ஆளுநர் பரத்வாஜ் அந்தர் பல்டிவாஜ் ஆனதற்கு ஏதாவது ஸ்பெஷல் காரணம் இருக்கிறதா? காங்கிரசு தலைமையின் ஆசியோடு தானே இத்தனை நாளும் ஒரு குறிக்கோளோடு செயல்பட்டுவந்தார். திடீரென்று எட்டியூரப்பா மீது பாசம் பொங்க என்ன/யார் காரணமாக இருக்க முடியும்?
பதில்: அரசியல் யதார்த்தம்.


hayyram
கேள்வி-7. சமச்சீர் கல்வியை ஜெயலலிதா நிறுத்தியதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில்: எதிர்பார்த்ததுதானே. சமச்சீர் கல்விக்கான புத்தகங்கள் தரமற்றவை என்பது ஜெயின் ஆக்சனுக்கு வலு சேர்க்கிறதே.

கேள்வி-8. பகவத் கீதை , உபநிஷத்துக்களை எல்லாம் எந்த அளவு படித்திருக்கிறீர்கள்? உங்களால் வாரம் ஒரு முறை இவற்றிலிருந்து ஏதாவது ஒரு கருத்தைக் கொண்டு பதிவு போட முடியுமா?
பதில்: அவை மகாசமுத்திரங்கள் அல்லவா? இந்தச் சிறியோன் அவற்றின் அருகே கூடச் செல்ல முடியாதே.

pt
டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
கேள்வி-9. இப்போது நடப்பது திமுகவை ஒழிப்பதற்கான சதி. இந்தியாவின் மிகச் சிறந்த வழக்கறிஞரான ஜெத்மலானி வாதாடிய பிறகும், கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்க வில்லை என்றால், இமாலயம் முதல் கன்னியாக்குமரி வரை, திமுகவை ஒழிக்க ஒரு சதி வலை பின்னப்பட்டிருப்பதாக கருணாநிதி தனது அறிக்கையில் தெரிவித்தார்.

பதில்: ஆக, நாடு தழுவிய தேசபக்திச் செயல்பாடு நடக்கிறது என்பதை வயிற்றெரிச்சலுடன் ஒப்புக் கொள்கிறார் எனக் கொள்ளலாமா?

கேள்வி-10. அமைச்சர் சாவில் மர்மம்; முதல்வர் ஜெ., திடுக்.,- சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவு
பதில்: அது உண்மையானால் அது வெளியே வருவதுதானே முறை?

கேள்வி-11. சமச்சீர் கல்வி தொடர வேண்டும்: ராமதாஸ்
பதில்: ஏனாம்?

12. கனிமொழியை சந்தித்தார் கருணாநிதி
பதில்: இதே மகளைத்தானே அவர் பிறந்தபோது இவர் தன் மகளல்ல எனக் கூறினார்?

கேள்வி-13. கடைசி வரிசையில் அமர்ந்த ஸ்டாலின்!
பதில்: அவராகவே அமர்ந்தார அல்லது அமர்த்தி வைக்கப்பட்டாரா?

கேள்வி-14.இனி அடிக்கடி கவர்னரை சந்தித்து ஆலோசனை நடத்துவேன் என மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார்
பதில்: அரசியல் சட்டப்படி முடிவு எடுப்ப்து முதல்வர். அதை அவர் “ஆலோசனையாக” கவர்னரிடம் கூற, பின்னவர் அதற்கு ஒப்புதல் தந்தே ஆக வேண்டும். வேறுவகையில் ஆலோசனைக்கே இடமில்லை.

கேள்வி-15. எதிர்க்கட்சியினரின் கருத்துகளுக்கு மதிப்பளிப்போம்: முதல்வர் உறுதி
பதில்: Let us keep our fingers crossed.

கேள்வி-16. சென்னை, திருச்சி, மதுரை, கோவையில் என்ஜினீயரிங் கவுன்சிலிங் நடத்துவது பற்றி பரிசீலனை
பதில்: எப்போதோ செய்திருக்க வேண்டிய விஷயம்

கேள்வி-17. எனது பாடலை நீக்கிவிட்டு சமச்சீர் கல்வியை அமல் செய்யலாமே? கருணாநிதி
பதில்: பாட்டில் பொருட்குற்றம் உள்ளது எனக்கூறும் நக்கீரனிடம், இருக்கும் குற்றத்துக்காக குறைத்துக் கொண்டு மீதி வெகுமதியைத் தரலாமே எனப் புலம்பும் தருமி நினைவுக்கு வருகிறார்.

கேள்வி-18. கோர்ட் தீர்ப்பின்படி நான் பதவி விலகியுள்ளேன், ஆனால் சட்டத்தின்படி நான் இன்னும் பதவியை ராஜினாமா செய்யவில்லை என மாஜி ஊழல் தடுப்பு கண்காணிப்பு கமிஷனர் பி.ஜெ.தாமஸ் கூறினார்.
பதில்: மீசையில் மண் ஒட்டவில்லை.


ரமணா
கேள்வி-19. திமுகவின் தலைவர் டெல்லியில் 2 லட்சம் தின வாடகை கொடுத்து பெரிய நட்சத்திர ஹோட்டலில் தங்கியதாக வரும் செய்தி பற்றி?
பதில்: பின்னே என்ன? அவர் கரோல்பாக் ராமானுஜம் மெஸ்ஸில் தங்குவார் என நினைத்தீர்களா?

கேள்வி-20. கனிமொழி பெண் என்பதால் அவர் பால் இரக்க உணர்வு இந்தியா முழுவதும் பரவுவதாய் ஆங்கில சேனல் சொல்வது பற்றி?
பதில்: தகுதியற்ற இரக்க உணர்வு.

கேள்வி-21. அழகிரி இனி?
பதில்: மந்திரி எந்திரி என வராத வரைக்கும் க்ஷேமம்.

கேள்வி-22. வடிவேலுவின் சினிமா எதிர் காலம் கோவிந்தாவா?
பதில்: ஒரு சாதாரண கரப்பான் பூச்சியை அடிப்பது விஜயகாந்த்துக்கு அழகில்லை.

கேள்வி-23. மீண்டும் ஹெல்மெட் கண்டிப்பு தள‌ர்வு?
பதில்: சம்பவாமி யுகே யுகே.

கேள்வி-24. சமச்சீர்கல்வி பற்றிய முடிவில் முதல்வரின் பிடிவாதம் என்ன விளைவை ஏற்படுத்தும்?
பதில்: ரத்தாகும். வேறு என்ன நடக்கும்?

கேள்வி-25. ஒருவழியாக தள‌பதி ஸ்டாலின் திமுக சட்டசபைத் தலைவர் ஆகி கருணாநிதியின் வாரிசாக ஆவதற்கான நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன போலுள்ளதே இது நிலைக்குமா?
பதில்: நிலைக்கும் என்றுதான் நினைகீறேன். அழகிரி இந்த நிலைமையில் கட்சித் தலைமை ஏற்க விரும்ப மாட்டார் என்றுதான் நினைக்கிறேன்.

கேள்வி-26. உண்மையில் நடிகர் ரஜினிக்கு என்னாச்சு? ஏதாவது சதியா?
பதில்: தெரியவில்லையே.

கேள்வி-27. தயாநிதி‍‍ ‍‍சோனியா சந்திப்பு, திமுகவில் ஏதும் புயலடிக்குமா?
பதில்: தயாநிதிக்கு அந்த அளவுக்கு கட்சியினுள்ளே ஆதரவு இல்லை போலிருக்கே.

கேள்வி-28. கருணாநிதியின் அதீத குடும்ப பாசம் கண்டு கலங்கும் திமுக தொண்டர்கள், வைகோ பக்கம் வர வாய்ப்பு உண்டா?
பதில்: இல்லை.


RS
கேள்வி-29: டோண்டு சார், இந்தப் பதிவில்
ஒரு ஜந்து இப்படி குலைத்திருக்கு. //..என வர்ணாசிரம முறையை கொண்டு வந்து அவரவர் தொழிலை அவரவர் வம்சமே செய்ய வேண்டும் என்றவர்கள் பிராமணர்கள்.//
இதோட கூத்து படி கருணாநிதி ஒரு பிராமணர். தன் குடும்பம் பிழைக்க வர்ணாசிரமத்தை நியாயப்படுத்தியவர். இந்த ஜந்து அப்ப குலைக்க வக்கில்லாம இப்ப வந்து குலைக்கிறது.
இத மாதிரி ஜந்து இருக்கும் வரை நான் பிராமணனாக இருக்க பெருமை படுகிறேன்.
இதை அந்த ஜந்துவின் பதிவில் கருத்துரைத்துள்ளேன் வெளியிடுமா என்று பார்ப்போம்.
இதற்கு தங்கள் பதில் கிடைக்குமா.

பதில்: எது என்னவானாலும் கருணாநிதி பிராமணர் அல்ல. அவ்வாறு நீங்கள் வாதத்துக்காக கூறுவதையும் நான் ஆட்சேபிக்கிறேன். வன்கொடுமை புகழ் தேவர்கள், வன்னியர்கள், கவுண்டர்கள், பிள்ளைமார் ஆகியவர்கள் செய்யும் வன்கொடுமைகளையே பார்ப்பனீயம் என ஜல்லியடிக்கும் கும்பலுக்கு நீங்கள் கூறுவது துணைபோகிறது என்பதால்தான் இந்த ஆட்சேபணை என் தரப்பிலிருந்து.


மேலும் கேள்விகள் வந்தால் அடுத்த வாரம் சந்திப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது