10/18/2005

இரண்டு செய்திகள் - ஒன்றுக்கொன்று தொடர்புடையவை

நான் சாதாரணமாக பத்திரிகைகளிலிருந்து என்னுடைய வலைப்பூ பதிவுகளுக்கு விஷயம் எடுப்பதில்லை. இருப்பினும் 5 - 5 - 2005 தேதியிட்ட குமுதம் ரிப்போர்டரில் 34 மற்றும் 35 பக்கங்களில் வெளியான இரு சாட்டையடிகளுக்கும் இடையே உள்ளத் தொடர்பைக் கண்டதால் இப்பதிவு.

முதல் சாட்டையடி இதோ. மும்பை வாழ் தமிழர்கள் சிலர் மறைந்தத் தமிழகத் தலைவர் ஒருவரின் பிறந்த நாள் விழாவைக் கொண்டாடுவதற்காக மும்பை மாநகர காவல் துறையின் அனுமதி வேண்டி சிலர் அருகிலுள்ள ஏரியா காவல் நிலத்தை அணுகியுள்ளனர். அங்குள்ள இன்ஸ்பெக்டர் தன்னிடம் வந்தவர்களை வரவேற்று அமரச் செய்து அவர்களிடம் சில கேள்விகள் கேட்டுள்ளார். முடிவில் வெளியான விஷயம் என்னவென்றால் வந்திருந்த ஒருவருக்கும் தன் சொந்தத் தாய் தந்தையின் பிறந்த நாட்கள் தெரியவில்லை.

அவர்கள் நாணமடையும் அளவுக்கு அவர் அவர்களுக்கு உபதேசம் செய்திருக்கிறார். அதாவது சம்பாதிக்கும் பணத்தை அவர்கள் தங்களைக் கஷ்டப்பட்டு வளர்த்தப் பெற்றோருக்கு அனுப்பாமல் சம்பத்தமேயில்லாத தலைவனின் பிறந்த நாளுக்கு செலவழிப்பது வீண் செலவே. அவர்களும் தாங்கள் திருந்தியதாகக் கூறியுள்ளனர்.

இப்போது இரண்டாம் சாட்டையடி. தில்லியில் இருக்கும் டாக்டர் அன்புமணியின் இரு குழந்தைகளும் "மேட்டர் டே" என்னும் ஆங்கில - இந்திப் பள்ளியில் படிக்கின்றனர். இந்தப் பள்ளியில் தமிழே கிடையாது. இவ்வளவிற்கும் தில்லித் தமிழ் சங்கம் பத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளை இங்கு நடத்துகிறது. இவற்றில் எதிலும் சேர்க்காமல் ஆங்கில - இந்திப் பள்ளியில் தன் குழந்தைகளைச் சேர்த்திருக்கிறார் அன்புமணி. அவர் தந்தை என்னவோ இங்கு எல்லாம் தமிழ் என்றிருக்கிறார். இந்த சாட்டையடியில் கூறப்படாத ஒரு உண்மையை இங்கே கூறுகிறேன் "தில்லி தமிழ் கல்விக் கழகம்" ஐம்பது ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. நல்ல தரமானக் கல்வி. ஆனாலும் மேட்டுத் தமிழ்க்குடியினர் ஆறாவதிலிருந்துதான் இப்பள்ளியில் தங்கள் குழந்தைகளை சேர்க்கின்றனர். அதற்கானக் காரணம் பிறகு.

முதலில் ஃபீஸ் பற்றி. அங்கத்தினர் கட்டணம் மாதத்துக்கு ரூ. 20. குழந்தையின் படிப்புக்காக மாதம் அறுபது பைசாக்கள் மட்டுமே! இதில் இன்னொரு சமாசாரம். அங்கத்தினர் கட்டணம் ஒரு முறை மட்டுமே கட்ட வேண்டும். அதாவது ஒருவரூகு ஒன்றுக்கு மேற்பட்டக் குழந்தைகள் இருந்தால் மற்றக் குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் அறுபது பைசாக்கள் செலுத்தினால் போதும். இந்த நிலை என் பெண் படிக்கும்போது (1988-ல்) இருந்தது. இப்போது சிறிது உயர்ந்திருக்கலாம்.

ஆனாலும் ஐந்தாம் வகுப்பு வரை மேட்டுக்குடியினர் தங்கள் குழந்தைகளை வேறு பள்ளிகளில் படிக்கவைத்து ஆறாம் வகுப்பு வரும் போதுதான் இங்கு வருகின்றனர். அப்போதும் தமிழை எடுக்காமல் குழந்தைகள் ஹிந்தி எடுத்துக் கொள்கின்றனர். ஏன் இந்த நிலை? முதல் ஐந்து வகுப்புகளில் தில்லியில் வீட்டுவேலை செய்யும் சேலத்துக்காரர்களின் குழந்தைகள் படிக்கின்றனர். சொல்லிவைத்தால் போல் அவர்களில் பெரும்பான்மையினர் கல்வி கற்பதை ஆறாம் வகுப்பு வரும்போது கைவிட்டு விடுகின்றனர்.

அன்புமணி அவர்களின் விவகாரத்துக்கு வருவோம். முதல் சாட்டையடியில் இன்ஸ்பெக்டர் கூறியது என்ன? உங்கள் பெற்றோர்களை மதியுங்கள், தலைவன் மூன்றாம் மனிதனே. அந்த இன்ஸ்பெக்டரைப் பார்க்காமலேயே அன்புமணி அவர்கள் இம்மாதிரி யோசித்திருக்க வேண்டும். "தமிழ் உணர்வு எல்லாம் மற்றவருக்கே. என் பிள்ளைகள் எதிர்காலம் எனக்கு முக்கியம்." நல்ல ப்ராக்டிகலான முடிவு என்றுதான் கூற வேண்டும்.

இதில் நாம் என்ன செய்ய வேண்டும்? "வேலையற்றுப் போய் தலைவர்கள் தங்கள் அரசியல் எதிர் காலங்களுக்காகத் துவக்கும் போராட்டங்களை ரொம்ப சீரியசாக எடுத்துக் கொள்ளாதீர்கள்". அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டு போங்கள்.

இன்னும் ஒரு படி மேலே செல்வேன். அன்புமணி அவர்களை இங்கு நான் குறை கூற வரவில்லை. அவர் தான் ஒரு நல்ல தந்தை என்பதை நிரூபித்துள்ளார். அவர் வழியில் செல்வதே அவர் தொண்டர்களுக்கு மட்டுமல்ல, நமக்கும் நல்லதுதான். நல்லது யார் செய்தாலும் அதை பின்பற்றுவது நல்லதே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

250 comments:

1 – 200 of 250   Newer›   Newest»
துளசி கோபால் said...

டோண்டு,

நெத்தியடி:-))))))))))))

dondu(#11168674346665545885) said...

நன்றி துளசி அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்

பாபு said...

உங்களின் ஒரு நல்ல பதிவு இது.
இப்போதும் டாக்டர் அன்புமணியை விமர்சிப்பதற்கு ஒன்றுமில்லை - அதாவது, அவருடைய தகப்பனார் இங்கு 'மொழி' அரசியல் செய்யாத பட்சத்தில்.

dondu(#11168674346665545885) said...

நானும் அதைத்தான் கூறுகிறேன் பாபு அவர்களே. அப்படியே மொழி அரசியல் செய்தாலும் கண்டு கொள்ளாமல் போக நாம்தான் நம்மைப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

test

பத்மா அர்விந்த் said...

திரைபடமாகட்டும் அரசியலாகட்டும் அவர்களுக்கு தேவை கூட்டம், அதில் உள்ள குழு சிந்தனை. அதை மனந்லை சார்ந்து, தங்கள் மேல் ஒருவித வெறி கொள்ள செய்வது எல்லா நாட்டிலும் நடக்கிறது. இதற்கு அடுக்கு மொழி ஓரிடத்திலும், இறை நம்பிக்கை வேறோரிடத்திலும் பயன் படுத்தப்படுகிறது.mass hypnotize! யார் என்ன சொன்னாலும் பிரயோசனமில்லை

dondu(#11168674346665545885) said...

"ஆனால் நீங்கள் ராமதாஸின் தமிழ்மொழி இயக்கத்தினையே கண்டிக்கிறீர்கள்."
ஏனெனில் அவரது ஈடுபாடு ஓட்டு அரசியலாகத்தான் எனக்குப் படுகிறது. சன் டி. வி. பெயரை மாற்றாமலிருக்க அவர் கொடுத்த சப்பைக்கட்டே போதும், அவர் அக்கறை போலியானது என்று கூற. திரைப்படங்களின் பெயர் பிரச்சினையிலும் திருமாவுக்கு ஒன்றுமே கூறாமல் பால் மாறிவிட்டார். ஏன்? ஓட்டு அரசியலே. அவரது அஜெண்டா ஒன்றே ஒன்றுதான். பதவிக்காக யாருடன் வேண்டுமானாலும் கூட்டு சேருவார். அப்படிப்பட்டவரின் இயக்கம் போலியானது என்றுதான் எனக்குப் படுகிறது.
மற்றப்படி தமிழ் ஆட்சிமொழியாவதில் எனக்கு இருக்கும் அக்கறை வேறு எவருடைய அக்கறைக்கும் குறைந்ததல்ல. அதை நிறைவேற்றிக் கொள்ள மருத்துவர் ஐயா தலைமை எனக்குத் தேவையுமில்லை.
தமிழ்ப் பதிவுகளுக்குத் தமிழிலேயே பின்னூட்டம் இடுகிறேன். ஆங்கிலத்தில் இடுபவர்களையும் கண்டிக்கிறேன். என் தமிழ்ப்பற்று ஊரறிந்தது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

குழலி / Kuzhali said...

தமிழ்மொழி பற்றை சொல்லி இனி தமிழ்நாட்டில் ஒரு ஓட்டுக்கூட அதிகம் பெறமுடியாது என்பது உலகறிந்த உண்மை, இது மருத்துவர் இராமதாசுக்கும் தெரியும், தொல்.திருமாவுக்கும் தெரியும், எனவே இதை வெறும் ஓட்டு அரசியலுக்காக மட்டுமே என்பதில் வேறுபடுகிறேன்.
சென்னையிலே பல இடங்களிலே பாமக சார்பிலே பிறமொழிபயன்பாட்டு வார்த்தைகளும் அதற்கு இணையான தூய தமிழ் வார்த்தைகளும் எழுதப்பட்ட தட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.
மேலும் மருத்துவர் இராமதாசும் அவர் சார்ந்தவர்களும் எதை செய்தாலும் விமர்சனம் செய்வது என்பது பத்திரிக்கைகளிலிருந்து சாமானியன் வரை ஒரு வழக்கமாகிவிட்டது லல்லு வைப்பற்றி ஒன்றுமே தெரியவில்லையென்றாலும் அவரைப்பற்றி கிண்டலடிப்பது போல. மருத்துவர் இராமதாசுக்கு மட்டும் ஏன் இத்தனை மட்டையடி?

dondu(#11168674346665545885) said...

"மருத்துவர் இராமதாசுக்கு மட்டும் ஏன் இத்தனை மட்டையடி?" ஏனெனில் அவர் முதலில் அடித்த மாடையடிகளே. மேலும் மற்றவர்களை இதை செய், செய்யக்கூடாது என்பவர்களுக்கு முதலில் வரும் எதிர்வினை "உங்கள் யோக்கியதை என்ன?" என்னும் கேள்விதான். அதற்காக நொந்துப்பொவதில் அர்த்தமேயில்லை.
மேலும் தமிழ்ப்பெயர் வைக்காத பட்ங்களின் திருட்டு வி.சி.டி தயாரிப்பதாகக் வெளிப்படையாகவே பேசினார். கடந்த சில ஆண்டுகளில் அவர் மேற்கொண்ட நிலை மாற்றங்களையும் பார்த்தப் பிறகுமா நீங்கள் இக்கேள்வியைக் கேட்கிறீர்கள்?

"தமிழ்மொழி பற்றை சொல்லி இனி தமிழ்நாட்டில் ஒரு ஓட்டுக்கூட அதிகம் பெறமுடியாது என்பது உலகறிந்த உண்மை, இது மருத்துவர் இராமதாசுக்கும் தெரியும்"
ஆனால் லேட்டாகத்தான் தெரியும். ஆகவே திருமாவையும் கலந்தாலோசிக்காது ஜகா வாங்கி விட்டர் என்று எனக்குப்படுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

மைக் முனுசாமி said...

மக்கள் மனதில் எப்போதும் தன் பெயர் நினைவில் இருக்க வேண்டும் (எப்படியோ... எந்த விதத்திலோ...) என்ற எண்ணத்தில்தான் இதுபோன்ற மலிவான விளம்பரங்களை மருத்துவர்(???) ராமதாஸ் பரப்பி வருகிறார். வெளிவேடம் போடுகிறார். மற்றபடி அவருக்கு உண்மையான தமிழ் ஈடுபாடு இல்லை. அவரின் தொடர் நடவடிக்கைகளே இதைக் காட்டும்.

dondu(#11168674346665545885) said...

இதற்கெல்லாம் ஒரே மருந்து அப்படிப்பட்டவர்களைப் பார்த்து வாய்விட்டு சிரிப்பதே. வாய் வீட்டுச் சிரித்தால் நோய் விட்டுப்போகும். ஆனால் என்ன, சம்பந்தப்பட்டவர்களுக்கு ரத்த அழுத்தம் ஏறும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்

Sri Rangan said...

கடைந்தெடுத்த பாராளுமன்ற அரசியற் சாக்கடையில் உருளும் அரசியற் பண்டிகளை இனம் காட்டுகிறீர்கள்.மிகவும் வரவேற்கவேண்டிய செயல்.தங்கள் பதிவு உண்மைகளைச் சொல்வதால்-ஒரு 'ஜே'!போடட்டுமா? 'ஜே'டோண்டு அவர்களே ஜே!

dondu(#11168674346665545885) said...

நன்றி சிறீரங்கன் அவர்களே. ஒரு நிமிடத்துக்கு பண்டி என்றச் சொல்லை அர்த்தம் கொள்ள முடியவில்லை. தாமதமாகவே புரிந்தது. சரியான குழல் விளக்குதான் நான்.
அன்புடன்,
டோண்டு ராகவன்

குழலி / Kuzhali said...

தமிழ்மனம் இணையதளத்தின் மீதும் வலைப்பூ எழுதுபவர்கள் மீதும் எமக்கு தனி மரியாத உண்டு, ஏனெனில் இதற்கு முன் பல forum களை பார்த்துள்ளேன் அங்கெல்லாம் ஆரோக்கியமற்ற ஆபாச வார்த்தைகளோடு எழுதுவர், இங்கே தான் மிக ஆரோக்கியமாக பின்னூட்டங்களும் கருத்துக்களும் எழுதப்படுகின்றன. இதுவரை மருத்துவர் இராமதாசு மீதான சொல்லடிகள் பற்றி எழுதாமல் இருந்தேன் ஏன் எனில் எனக்கு சாதிய முத்திரை குத்தப்படும் என்ற அச்சமும் அதற்குமேல் எல்லா பதிவுகளும் சாதிய கண்ணோட்டத்துடனே பார்க்கப்படும் என்ற அச்சமுமே காரணம். ஆனால் டோண்டு அவர்கள் தைரியமாக அவரின் சாதிப்பெயரை சொல்லியும் பதிவுகள் எழுதியும் அவருடைய நல்ல பதிவுகள் பலரால் படிக்கப்பட்டு வருவது எனக்கு தைரியத்தை கொடுத்துள்ளது,அது மட்டுமின்றி இந்த தளங்களிலே எழுதுபவர்களின் முதிர்ச்சியையும் காட்டுகிறது. இதுவே என்னை மருத்துவர் இராமதாசின் மீதான சொல்லடிகள் பற்றிய பதிலுரை எழுதலாம் என தூண்டியது, எனது என்னங்களை வார்த்தைகளாக்கி கொண்டுள்ளேன் விரைவில் எனது பதிவை தருகிறேன். எனது பெரும்பாலான கருத்துகளை முன்னமயே வீரவன்னியன் என்ற பெயரிலே ஒருவர் எழுதிவிட்டார், அவருடைய பதிவையும் இந்த சுட்டி வழியாக படியுங்களேன் சாதிக் கட்சிகளை விலக்குங்கள்

dondu(#11168674346665545885) said...

"ஆனால் டோண்டு அவர்கள் தைரியமாக அவரின் சாதிப்பெயரை சொல்லியும் பதிவுகள் எழுதியும் அவருடைய நல்ல பதிவுகள் பலரால் படிக்கப்பட்டு வருவது எனக்கு தைரியத்தை கொடுத்துள்ளது"
யார் சாதிப் பெயர்? என் ஐயங்கார் சாதிதானே. அப்படியானால் ஓக்கே.
உங்கள் சாதியைக் கூற எப்போதுமே எக்காரணம் கொண்டும் தயங்காதீர்கள். நான் என் சாதியை சிறு வயதிலிருந்தே பகிரங்கமாகக் கூறி வந்திருக்கிறேன். மற்றப்படி என் பதிவுகளை நல்லப் பதிவுகளாக நோக்குவதற்கு நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Mookku Sundar said...

பேஷ்..பேஷ்..டோண்டு ஸார் நல்ல சேவை..நீவிர் வாழ்க. :-)

நம்முடைய சாதி என்ன என்பதை எங்கும் நாம் சொல்ல தயக்கப்படவே கூடாது. மற்ற ஜாட்டான்களைப் பார்த்து நமக்கென்ன பயம். முடிந்தால் நாம் இன்ன ஜாதி, இன்ன வகை, இன்ன பகுதி, இன்ன கோத்திரம் என்பதை ஒரு தட்டியில் எழுதி, முகத்தில் மாட்டி கொள்ளலாம். இல்லாவிடில் பச்சை குத்திக் கொள்ளலாம். அப்போதுதான் ஜாதி ரீதியாக கூட்டம் சேர்த்துக் கொண்டு பஜனை பண்ணலாம்.

வாழிய செந்தமிழ்...வாழ்க நற்றமிழ்..வாழிய பாரதமணித்திருநாடு...:-(

இன்னா ஸார்..இவ்வளவு அனுபவமுள்ள, பல மொழிகள் தெரிந்த, பல நாட்டவரோடு பழகிய ஓங்குதாங்கான ஐயங்கார் நீங்க...(சாதி வித்யாசங்கள் கடந்த) ராமானுஜரை சேர்ந்த தென்கலை..., நீங்க இப்படி பேசலாமா..?? இது அடுக்குமா..??

என்னவோ போங்க...

dondu(#11168674346665545885) said...

ஒரு சிறு திருத்தம் மூக்கன் அவர்களே. நான் வடகலை. இது வெறும் தகவலே. நான் இணையத்தில் என் சாதியை வெளிப்படையாகக் கூறியதன் பிண்ணனியை என் பதிவாம் "வெளிப்படையான எண்ணங்கள்"இல் காணலாம்

அன்புடன்,
டோண்டு ராகவன்

குழலி / Kuzhali said...

இந்த சுட்டியை சற்று படியுங்களேன்
மருத்துவர் இராமதாசுவின் மீதான சொல்லடிகள் - ஒரு அலசல் - 1

dondu(#11168674346665545885) said...

குழலி அவர்களே, உங்கள் சூட்டியின் பதிவைப் படித்தேன். நன்றாக ஆராய்ந்து எழுதுகிறீர்கள். அதிலும் உங்கள் நேரடி அனுபவங்கள் நீங்கள் எழுதுவதற்கு வலிமை சேர்க்கின்றன. நல்ல முயற்சி. தொடரட்டும். உழைப்பில்லாமல் ராமதாசு அவர்கள் தலைவராக ஆகியிருக்க முடியாதுதான். ஆனால் சமீப காலமாக அவர் முயற்சிகள் நீர்த்துப் போனது போன்றத் தோற்றம். தன் கட்சிகளில் தன்னுடன் சேர்ந்து உழைத்தவர்களையெல்லாம் விட்டுவிட்டு, தேர்தலில் கூட நிற்காதத் தன் மகனுக்கு மந்திரிப் பதவி வாங்கிக் கொடுத்தது அவர் இமேஜையே நாஸ்தி ஆக்கிவிட்டது என்பதையும் உங்களால் மறுக்க முடியாது. மேலும் எழுதுங்கள். வாழ்த்துக்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்

குழலி / Kuzhali said...

வரும் பதிவுகளில் நிச்சயம் அதைப்பற்றியும் எழுதுகிறேன். தமிழ்மனம் இணையதளம் மற்றும் வலைப்பூக்கள் நிச்சயமாக ஒரு போதைதான், மீள முடியவில்லையே.

வீரவன்னியன் said...

//

தன் கட்சிகளில் தன்னுடன் சேர்ந்து உழைத்தவர்களையெல்லாம் விட்டுவிட்டு, தேர்தலில் கூட நிற்காதத் தன் மகனுக்கு மந்திரிப் பதவி வாங்கிக் கொடுத்தது அவர் இமேஜையே நாஸ்தி ஆக்கிவிட்டது என்பதையும் உங்களால் மறுக்க முடியாது.

//
ஆமாம்...இதற்கு முன்னாடி ராமதாசோட இமேஜை எல்லாம் இவரு அப்படியே பெரிய பிம்பமா வைச்சிருந்தாரு, இதற்கு பின்னாடி தான் அவருடைய இமேஜு இவருக்கு நாஸ்தியாயிடுச்சி...

போய்யா..

மாயவரத்தான் said...

//இதற்கு முன்னாடி ராமதாசோட இமேஜை எல்லாம் *இவரு* அப்படியே பெரிய பிம்பமா வைச்சிருந்தாரு//

எவரு?!

dondu(#11168674346665545885) said...

எனக்கு அவரைப் பற்றிய பிம்பம் இருந்தது என்று எங்கே கூறினேன்? பொது மக்களிடம் அவரது இமேஜைப் பற்றியல்லவா பேசினேன். என்னைப் பொருத்தவரை மரம் வெட்டியபோதே அவர் இமேஜ் நாஸ்தியாகிவிட்டது. இப்போதெல்லாம அவர் கூத்துக்களைப் பார்த்து சிரிப்பதற்குத்தான் நேரம் சரியாக இருக்கிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்

SHIVAS said...

//என்னைப் பொருத்தவரை மரம் வெட்டியபோதே அவர் இமேஜ் நாஸ்தியாகிவிட்டது//
என்னை பொருத்தவரையும் கூட...
சரியான சாட்டை அடி. முதல் அடி ரொம்ப சூப்பர். இரெண்டவது அடி சூப்பரோ சூப்பர்.

-L-L-D-a-s-u said...

ஜாதி கட்சி தொடங்குபவர் என்ன மரியாதை பெறமுடியும் ?..'ஒரு இனம் ஒடுக்கப்படுகிறது' என்பது ஒவ்வொரு இனத்திற்கும் பொருந்தும் உண்மை ..பணம் தான் .. அதற்கான உழைப்புதான் உண்மையான போராட்டம் .. சாணார் என அழைக்கப்பட்டோர் உழைப்பினால் நாடார் ஆனதுதான் போராட்டம் .
ஓட்டு பிச்சைகாரர்களுக்கு அவன் இனம் அழிவதாக பயாஸ்கோப்பு காட்டினால்தான் பொழப்பு ஓடும் ..
இப்பொது அது நன்றாகவே நடக்கிறது .. அவன் இனத்தில் சிலராவது ஒடுக்கப்படுவதை அவன் ரசிக்கிறான் .. அப்போது தானே அவன் ஒட்டு வாங்க முடியும்.. மகன் டாக்டர் சீட் வாங்கமுடியும் ..
இங்கு முதலை கண்ணீர் வடிப்போரில் எத்தனை பேர், நல்ல வசதியிருந்தும், வசதியில்லாத தன் இனத்தார்க்குரிய வாய்ப்பை தட்டி பறித்து, இட ஒதுக்கீட்டின் மூலம் சீட் வாங்கியிருக்கினறனர்? .

dondu(#11168674346665545885) said...

நன்றி எம்.எல். தாஸு அவர்களே. நெத்தியடியானப் பின்னூட்டம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

Test

குழலி / Kuzhali said...

//சாணார் என அழைக்கப்பட்டோர் உழைப்பினால் நாடார் ஆனதுதான் போராட்டம் //

நாடார் இன மக்களின் முன்னேற்றம் நிச்சயமாக போற்றதக்கது. நாடார் இனத்தின் முன்னேற்றத்துக்கு யார் காரணம், அவ்வின மக்களின் உழைப்பு என்பதை மறுக்க முடியாது. அதே சமயம் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் அரசியல் செல்வாக்கும், அவர் அளித்த சலுகைகளும், நாடார் சமூகத்திலே இருந்த சில பெரும் பணக்காரர்களின் தயவும், எல்லாவற்றிற்கும் மேலாக அவர்களிடம் இருந்த பத்திரிக்கை ஊடக பலமும் தான் என்பதை மறுக்க முடியாது. நான் என் பதிவில் குறிப்பிட்ட மாதிரி வன்னிய இனத்திலே பெரும் பணக்காரர்கள் இல்லை, பத்திரிக்கை ஊடக பலம் இல்லை, அரசியல் செல்வாக்கும் இல்லை. நாடார் இனத்துக்கு + ஆக இருந்த இந்த 3 ம் வன்னிய இனத்துக்கு - ஆக இருந்தது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும், முதலில் அரசியல் பலம் வேண்டும் அதற்காகத்தான் மருத்துவர் இராமதாசுவை கெட்டியாக பிடித்துக்கொண்டது வன்னிய இனம்.

குழலி / Kuzhali said...

எல்.எல்.தாசுவின் பின்னூட்டத்திற்கு என் அடுத்த பதிவில் பதிலளிக்கிறேன். கட்டாயம் அடுத்த பதிவை படியுங்கள்

குழலி / Kuzhali said...

டோண்டு சார், நீங்க கேட்ட பாமக வாரிசு பிரச்சினையைப்பற்றி எழுதியுள்ளேன் சுட்டி இங்கே மருத்துவர் இராமதாசுவின் மீதான சொல்லடிகள்-ஒரு அலசல்- 3 அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்களேன்

dondu(#11168674346665545885) said...

சொல்லி விட்டேன் குழலி அவர்களே. மனம் விட்டுக் கூறுகிறேன். மிகக் கண்ணியமாக எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள். நான் நீங்கள் கூறுவதை ஒத்துக் கொள்கிறேனா என்பது வேறு விஷயம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்

SnackDragon said...

//காவல் துறையின் அனுமதி வேண்டி சிலர் அருகிலுள்ள ஏரியா காவல் நிலத்தை அணுகியுள்ளனர். அவர்கள் நாணமடையும் அளவுக்கு அவர் அவர்களுக்கு உபதேசம் செய்திருக்கிறார்.//அனுமதி கொடுத்தல் அல்லது அனுமதி மறுத்தல் என்பதோடு இன்ஸ்பெக்டர் மூடிக்கொண்டு நிறுத்தியிருக்கவேண்டும் என்பது என் கருத்து டோண்டு அவர்களே!!
நீங்கள் எதற்காவது அனுமதி கோரும்போது அட்வைஸ் செய்யும் இன்ஸ்பெக்டரை சந்திக்காதவரை இது உங்களுக்கு புரியப்போவதில்லை டோண்டு அவர்களே. அது மாதிரி நடந்தாலும் அதை நீங்கள் வலைப்பதிவில் எழுதப்போவதில்லை டோண்டு அவர்களே. ;-)

SnackDragon said...

//யார் சாதிப் பெயர்? என் ஐயங்கார் சாதிதானே. அப்படியானால் ஓக்கே.
உங்கள் சாதியைக் கூற எப்போதுமே எக்காரணம் கொண்டும் தயங்காதீர்கள். நான் என் சாதியை சிறு வயதிலிருந்தே பகிரங்கமாகக் கூறி வந்திருக்கிறேன்.//
டோண்டு அவர்களே நீங்கள் மேலை நாடுகளுக்கு போனாலும் இப்படியே சொல்லிக்கொள்வீர்களா என்று யோசித்திப்பார்க்க ஆசை. (அதை அடுத்தவன் எப்படிப்பார்ப்பான் என்பது வேறு விஷயம்)

SnackDragon said...

சொந்தத் தாய் தந்தை ; சொந்தப் பிள்ளை என்று இரண்டு செய்தைகளின் பொதுவான வார்த்தைகளை வைத்துக்கொண்டு, இரண்டு செய்திகளும் தொடர்புடயவை என்று சொல்லும் உங்கள் லாஜிக்கு புல்லரிக்க வைக்கிறது டோண்டு அவர்களே!

dondu(#11168674346665545885) said...

இன்ஸ்பெக்டர் அவ்வாறு செய்திருக்கலாமா அல்லது கூடாதா என்று இப்போது பார்ப்பதில் என்ன ப்யன்? சிலர் கண்கள் திறந்தன, சம்பந்தமில்லாத ஒரு தலைவனின் பிறந்தநாளை நினைவு கொள்ள முடிந்த அளவுக்கு தங்கள் தாய் தந்தையினரை அடையாளம் காண முடியவில்லை என்பதை உணர்ந்து நாணப்பட்டது நிஜம்.
நான் காலேஜில் படிக்கும்போது என் தந்தையிடம் என் பெயரை ராகவ ஐயங்கார் அல்லது ராகவாச்சாரி என்று மாற்றிக் கொள்ள அனுமதி கேட்டபோது அவர் மறுத்து விட்டார். இல்லாவிட்டால் வெளிநாடுகளில் இரண்டாம் பெயர் கேட்பவர்களிடம் ஐயங்கார் என்று பெருமையுடன் கூறியிருக்கலாம். என். ராகவ ஐயங்காரை என்.ஆர்.ஐ என்றும் கூறியிருக்கலாம். நான் வெளிநாடுகளுக்கு போனதேயில்லை, போகும் ஆசையுமில்லை என்பதைப் பார்க்கும்போது பரவாயில்லை என்றுதான் படுகிறது.
இரண்டு செய்திகளும் அருகருகே இருந்தன. தொடர்பு எப்படி என்பதையும் விள்க்கியுள்ளேன். மேலும் கூறுவேன். ஒன்று பைனாக்குலரால் பார்ப்பது இன்னொன்று அதே பைனாக்குலரை திருப்பி வைத்து பார்ப்பது. என்ன சரிதானே?
அன்புடன்,
டோண்டு ராகவன்

சன்னாசி said...

//யார் சாதிப் பெயர்? என் ஐயங்கார் சாதிதானே. அப்படியானால் ஓக்கே.
உங்கள் சாதியைக் கூற எப்போதுமே எக்காரணம் கொண்டும் தயங்காதீர்கள். நான் என் சாதியை சிறு வயதிலிருந்தே பகிரங்கமாகக் கூறி வந்திருக்கிறேன்.//
டோண்டு அவர்களே நீங்கள் மேலை நாடுகளுக்கு போனாலும் இப்படியே சொல்லிக்கொள்வீர்களா என்று யோசித்திப்பார்க்க ஆசை.

கார்த்திக், ஹிஹி, வாதூல முனிவர் பரம்பரை, பிருகுமுனிவர் பாதகமலங்களில் முகிழ்த்த தாமரை என்றுகொள்ளலாம். வெள்ளைத் தோலு இல்லை நீலக் கண்ணு இல்லை கூர்த்த மூக்கு இல்லை, இதில வாதூலமாவது கிழிந்த கோமணமாவது என்று குமட்டில் கொடுத்துவிட்டுப் போய்க்கொண்டே இருப்பார்கள் போட்டுத் தாக்கவேண்டுமென்று நினைத்தால். தனது ஜாதி குறித்த பிரக்ஞையின்றி வாழக் கற்றுக்கொள்வது சாத்தியமே என்பதை உணரக்கூடத் திராணி இல்லையா. தலைவலியும் பல்வலியும் தனக்கு வந்தால் தெரியும் என்று சும்மாவா சொன்னார்கள். இந்த 'நான் ஐயங்கார் நான் ஐயங்கார் நான் ஐயங்கார்' ராமாயணத்தைக் கேட்டுக் கேட்டுக் காது புளித்துப்போய்விட்டது, ஒருநாள் இதைப் படித்துவிட்டு பொளக்கென்று கணிப்பொறித் திரைமேல் வாந்தி எடுத்துவைக்கப்போகிறேன். இருந்துட்டுப் போங்களேன் சார், எங்களுக்கு என்ன! நான் உட்கார்ரேன், நான் எந்திரிக்கேன், நான் நடக்கேன், நான் சிரிக்கேன், நான் படுக்கேன், நான் கொட்டாவி விடறேன் என்று யாராவது எடுத்ததற்கெல்லாம் பிரஸ்தாபித்துக் கூவிக்கொண்டு தெருவில் போனால் என்ன மாதிரி எரிச்சல் வருமோ அதுதான் இப்போதும் வருகிறது. வயது, அனுபவம் மீதுள்ள மரியாதை கருதி இதற்குமேல் எதுவும் குத்தலாக எழுதமுடியவில்லை. சே.

SnackDragon said...

ஒரு தலித் தன் ஜாதிப்பெயரி சொல்வதற்கும், ஒரு (யாரோ ஒரு) ஐயங்கார் தன் சாதிப்பெயரை சொல்வதற்கும் உள்ள வித்தியாசம் டோண்டு அவர்களுக்கு 'கல்கியில் ' தேடும்போது கிடைக்காமல் போயிருக்கலாம்.
மாண்டி அதுக்காக நீங்க வாந்தியெடுத்து கம்ப்யூட்டரை கெடுத்துக்கொள்ளாதீர்கள்./வயது, அனுபவம் மீதுள்ள மரியாதை கருதி இதற்குமேல் எதுவும் குத்தலாக எழுதமுடியவில்லை. சே./
அதேதான் இங்கும். :-(

dondu(#11168674346665545885) said...

"வாதூல முனிவர் பரம்பரை, பிருகுமுனிவர் பாதகமலங்களில் முகிழ்த்த தாமரை என்றுகொள்ளலாம்."
தெரிந்து கூறினீர்களா தெரியாமல் கூறினீர்களா? எதுவாயினும் நான் நிஜமாகவே வாதூல கோத்திரத்தை சேர்ந்தவன். அதையும் கூற எனக்கு ஞாபகப்படுத்தியதற்கு நன்றி.
மற்றப்படி நான் என் ஜாதிப் பெயரைப் பெருமையுடன் கூறிக் கொண்டது வலைப்பூக்களில் புழங்கும் பார்ப்பன வெறுப்புதான் காரணம். ஆகவேதான் குமட்டில் குத்தினேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...


மாண்டி, வாந்தி எடுத்தாச்சா? ;)


அதே குமட்டலுடன்,
மதி

SnackDragon said...

//மற்றப்படி நான் என் ஜாதிப் பெயரைப் பெருமையுடன் கூறிக் கொண்டது வலைப்பூக்களில் புழங்கும் பார்ப்பன வெறுப்புதான் காரணம்.//
டோண்டு ஐயா,
வித் ஆல் ட்யூ ரெஸ்பெக்ட், இதை கருத்தளவில் நான் மிக வன்மையாக கண்டிக்கிறேன். இங்கே வலைப்பூக்களில் அப்படியெல்லாம் இல்லை. எல்லோரும் கருத்தளவில் சண்டை போட்டுக்கொள்கிறார்களே அன்றி, இப்படி பொதுவாக எல்லாம் எழுதாதீர்கள். வலைப்பதிவு சநthi்ப்பு எல்லாம் நடக்கிறதே.
எனக்கு கூட "உங்கள் கருத்துக்கள்" பார்ப்பனீயத்துக்கு வலு சேர்ப்பதாய் உள்ளதே என்பதில்தான் பிரச்சினை. நீங்கள் பிராமணர் என்பதால் அல்ல. புரிந்து கொள்ளுங்கள். நன்றி.

சன்னாசி said...

//மற்றப்படி நான் என் ஜாதிப் பெயரைப் பெருமையுடன் கூறிக் கொண்டது வலைப்பூக்களில் புழங்கும் பார்ப்பன வெறுப்புதான் காரணம். ஆகவேதான் குமட்டில் குத்தினேன்.//

நல்லது சார். முகத்தைப் பார்க்காமல் கணிப்பொறித் திரையில் தெரியும் 'வெறுப்பு'க்கு இந்தக் குதி குதித்தீர்களானால், நேருக்கு நேராக நூற்றுக்கணக்கான வருடங்கள் ஆப்படித்தவர்களின்மேல் ஆப்பறையப்பட்ட பாவப்பட்ட ஜென்மங்களுக்கு என்ன கடுப்பு இருக்கும். இதற்கும் ஒரு பதில் வைத்திருப்பீர்கள், தாராளமாகச் சொல்லிக்கொள்ளுங்கள், இதுகுறித்து இதற்குமேல் இங்கு எழுதுவதாக இல்லை. நல்லகாலம் கிராமத்துப் பள்ளிக்கூடத்தில் எங்கேயும் வாத்தியாராக இல்லாமல் போனீர்கள். ஜாதி பேரை உரக்கச் சொல்லுங்கடா தம்பிகளா என்று கொளுத்திப் போடும் திரியில் நாற்காலியை நொறுக்கி ஒருத்தனொருத்தன் மாற்றிமாற்றி மண்டையை உடைத்துக்கொண்டிருந்திருப்பான். வாழ்க உங்கள் தொண்டு. நன்றி.

dondu(#11168674346665545885) said...

வழக்கம் போல இப்பதிவைப் பற்றிய விவாதம் திசை திரும்பி விட்டது. எல்லா பின்னூட்டங்களையும் வரிசையாகப் பார்ப்போம். ஆரம்பித்தது என்னவோ அன்புமணி அவர்கள் பற்றியே. அதில் என்னுடன் கருத்து வேறுபாடு இருந்தாலும் குழலி அவர்கள் சுமுகமாகவே பின்னூட்டமிட்டு வந்தார். அவருடைய ஒரு பின்னூட்டத்தில் அவர் குறிப்பிட்டார்:
"இதுவரை மருத்துவர் இராமதாசு மீதான சொல்லடிகள் பற்றி எழுதாமல் இருந்தேன் ஏன் எனில் எனக்கு சாதிய முத்திரை குத்தப்படும் என்ற அச்சமும் அதற்குமேல் எல்லா பதிவுகளும் சாதிய கண்ணோட்டத்துடனே பார்க்கப்படும் என்ற அச்சமுமே காரணம். ஆனால் டோண்டு அவர்கள் தைரியமாக அவரின் சாதிப்பெயரை சொல்லியும் பதிவுகள் எழுதியும் அவருடைய நல்ல பதிவுகள் பலரால் படிக்கப்பட்டு வருவது எனக்கு தைரியத்தை கொடுத்துள்ளது."
அவருக்கு ஆதரவளிக்கும் நோக்கத்துடன் நான் எழுதியது இங்கு சிலருக்குப் பிரச்சினையாகி விட்டது. நான் எழுதியதின் நோக்கமே குழலி அவர்களை என்கரேஜ் செய்வதற்கே. அதே போல அவரும் ராமதாஸைப் பற்றி தன் வலைப்பூவில் எழுதி வருகிறார். மற்றப்படி நான் எடுத்த முடிவைப் பற்றி ஏற்கனவே "என் வெளிப்படையான எண்ணஙள்" பதிவில் கொடுத்து விட்டேன்.
இப்போது வாந்தி எடுப்பவர்களுக்கு. அங்கு சென்று உங்கள் பின்னூட்டங்களை இட்டிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். அதைப் பற்றி இங்கு ஏன் பேச வேண்டும், அதுவும் வாந்தி எடுக்கும் அளவுக்கு?
கார்திக் அவர்களே, நீங்கள் இரண்டு செய்திகளில் இன்ஸ்பெக்டரைப் பற்றி மட்டும் எழுதி விட்டு சும்மாயிருந்து விட்டீர்கள். அவர் மேல் என்ன கோபம்? அவரிடம் புத்திமதி பெற்றவரும் அதைப் பற்றி நன்றியுடன்தானே இருந்திருக்கிறார்? அதில் உங்களுக்கு என்ன பிரச்சினை? ஒரு அரசியல் வியாதிக்கு விழா எடுக்கவில்லை என்பதாலா? அதற்குத்தான் மற்றச் சீடர்கள் அத்தலைவருக்கு இருப்பார்களே. அது சரி அன்புமணியைப் பற்றி ஏன் கூறவில்லை? அதற்குள் சாதிப் பிரச்சினை ஏன் வர வேண்டும்? நான் வெளிநாட்டிலும் என் ஜாதியைக் கூறுவேனா என்று நீங்கள் கேள்வி கேட்டீர்கள் அதற்கு பதில் அளித்தேன் அவ்வளவுதான். முக்கிய டாபிக்கை ஏன் மறந்தீர்கள்? நீங்கள் மேலும் எழுதியுள்ளீர்கள்:
"சொந்தத் தாய் தந்தை ; சொந்தப் பிள்ளை என்று இரண்டு செய்தைகளின் பொதுவான வார்த்தைகளை வைத்துக்கொண்டு, இரண்டு செய்திகளும் தொடர்புடயவை என்று சொல்லும் உங்கள் லாஜிக்கு புல்லரிக்க வைக்கிறது டோண்டு அவர்களே!"
இதைதான் ஐயா நான் ஹைப்பர் லிங்குகள் என்று கூறுவேன். என்னுடைய ஹைப்பர்லிங்குகளை பற்றி என்னுடையப் பழையப் பதிவுகளில் பார்த்துக் கொள்ளுங்கள். ஏன், மதி கந்தஸ்வாமி அவர்களே ஒரு ஹைப்பர் லிங்கில் வந்துள்ளார், அவர்தான் அதை இன்னும் கண்டு பிடிக்கவில்லை.
மதி மற்றும் மாண்ட்ரீசர் அவர்களே, கார்த்திக்காவது பரவாயில்லை. இப்பதிவில் வந்த இரண்டு செய்திகளில் ஒரு செய்தியைப் பற்றியாவது பேசினார். நீங்கள்? சுத்தமாக அவற்றை ஒதுக்கி விட்டீர்கள். அது சரி, உங்களுக்குத்தான் வாந்தி வருகிறதே! அதுதான் முக்கியக் காரணமா அல்ல்து இந்தச் செய்திகளைப் பற்றி எழுத சங்கடமா? அது எதுவாக இருந்தாலும் அது உங்கள் பிரச்சினை.
அன்புடன்,
டோண்டு ராகவன்

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

டோண்டு அவர்களே,

உங்கள் பதிவில் பின்னூட்டம் இடும் அளவிற்கு ஒன்றும் இல்லை என்பதால்தான் எதுவும் எழுதவில்லை.

இப்போது வந்ததற்குக் காரணம் என்ன என்று கேட்பீர்கள். ஒரு பிரச்சினை காரணமாகத்தான் வந்திருக்கிறேன்.

என் பெயரை ஒழுங்காகச் சொல்லாவிட்டாலும் பரவாயில்லை. என்னுடைய அப்பா பெயரைக் கெடுக்காதீர்கள். நன்றி!

என்ன ஹைப்பர் லிங்க் என்று எனக்குத் தெரியவில்லை. எப்போது எழுதினீர்கள் என்றும் தெரியாது. ஆனால், உங்களை எனக்குத் தெரியாது. நன்றி!

-மதி கந்த*சா*மி

சன்னாசி said...

வெற்றி வெற்றி வெற்றி, மறுபடி வரவைச்சுட்டேன் பார்த்தியா!!

//இப்பதிவில் வந்த இரண்டு செய்திகளில் ஒரு செய்தியைப் பற்றியாவது பேசினார். நீங்கள்? சுத்தமாக அவற்றை ஒதுக்கி விட்டீர்கள். அது சரி, உங்களுக்குத்தான் வாந்தி வருகிறதே!//

இதை இந்தப் பதிவில் எழுதியது தவறுதான் எனில், உங்கள் பதிவின் முகப்பில் 'என் சாதி இது' என்று கொட்டை எழுத்தில் ஒரு பதிவுக்கான (உங்கள் பழைய பதிவுகளிலேயே ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்...) நிரந்தரச் சுட்டியை அமையுங்கள், அதற்கடுத்து உங்கள் பதிவில் இதுகுறித்து விமர்சனங்கள் வரும்போதெல்லாம், 'அங்கே போய் வைச்சுக்கோய்யா உன் புலம்பலை' என்று நானே ஒவ்வொருவருக்கும் சொல்கிறேன் பின்னே.

சரி டோண்டு சார். என்னை மாதிரி அநாகரீகக் கோமாளிகளெல்லாம் உங்கள் ஜாதிப் புராணத்தின்மேல் வாந்தியெடுக்கத் தகுதியில்லைதான். உங்கள் சிந்தனையில் இருக்கும் அசிங்கத்தைவிட, அதைக்குறித்து வசைபாடும் வார்த்தைகளில் இருக்கும் அசிங்கம் பெரிதாகத் தெரிகிறது உங்களுக்கு; அதற்கு நான் ஒன்றும் செய்யமுடியாது, அது உங்கள் பிரச்னை. உங்களை மாதிரி நானும் வலைப்பதிவில் அவ்வப்போது எழுதும் சாதாரண ஆசாமி தான். போங்கள் இங்கே, நான் இதுவரை எழுதியதை வைத்து என் ஜாதி என்ன என்று guesstimate பஜனைகள் இன்றி துல்லியமாகச் சொல்லுங்கள், ஜெயலலிதாவுக்கு நாக்கை அறுத்துக் காணிக்கை போட்ட கிறுக்கன் மாதிரி நானும் என் நாக்கை அல்லது விரலை அறுத்து உங்களுக்கு பார்சல் அனுப்புகிறேன்.

//உங்கள் சாதியைக் கூற எப்போதுமே எக்காரணம் கொண்டும் தயங்காதீர்கள். நான் என் சாதியை சிறு வயதிலிருந்தே பகிரங்கமாகக் கூறி வந்திருக்கிறேன்.//

சரி, எதிரே இருந்த ஆளிடம் 'என்ன நினைக்கிறேய்யா இதைப்பத்தி' என்று இந்த பிரஸ்தாபங்களுக்கடுத்து எப்போதாவது கேட்டதுண்டா? ;-) கேட்டால் தானே!! என்னை மாதிரி எத்தனை பேருக்குக் குமட்டியிருக்குமோ.

என்னால் மட்டும் ஜாதியை ஒழித்துவிடுவது சாத்தியமென்று நினைக்கும் மகான் அல்ல, அந்தக் கருத்தாக்கம் வளர்வதற்கு என்னளவில் எந்த உதவியும் கிடைக்காது என்பதே ஜாதியை ஒழிக்க நான் செய்யும் என்னளவிலான சின்ன உபகாரமாயிருக்கும். அந்தளவில், என் ஜாதி என்ன என்பதுகுறித்துத் தகவலளிக்க மறுப்பதும், பிறர் கேட்டாலும் கூறமறுப்பதும், பிறரது ஜாதியைக்குறித்துக் கவலைப்படாததும், ஜாதிகுறித்த பேச்சு வந்தாலும், ஒழிக்கப்படவேண்டிய ஒன்று என்ற நிலைப்பாட்டிலேயே பேசுவதும்தான் தனிமனித அளவில் என்னால் செய்யமுடியும் விஷயங்கள். இதுவரை அப்படித்தான் இருந்திருக்கிறேன், இனிமேலும் அப்படித்தான் இருப்பேன். ஜாதியை உதறிவிட்டு வாழ்வதில் உயர்ஜாதியினருக்குள்ள சௌகரியம்கூடத் தாழ்த்தப்பட்டவர்களுக்குக் கிடையாதென்ற அடிப்படை உண்மைகூடத் தெரியாமல் தனி டீக்கடை வைத்து சுயமரியாதையை வளர்க்கச் சொல்கிறீர்கள்!! அறிவில்லாத ஜாட்டான்கள் இங்கே லோக்கலில் என்ன கிழித்தால் என்ன, நாங்கள் அமெரிக்கா போவோம் ஆப்பிரிக்கா போவோம் என்கிறீர்கள்; தாராளமாகப் போங்கள் ஐயா, நான் சொல்லவருவதெல்லாம் அங்கே போய் ஏதாவது redneckஇடம் மாட்டினால் உங்களுக்கும் ஒரு பள்ளனுக்கும் ஒரு பறையனுக்கும் வித்தியாசம் கிடையாது - அந்தக் கலாச்சாரத்தில் நீங்கள் ஒரு வெளி ஆள்; அவ்வளவுதான். உனக்கொரு உதை எனக்கொரு உதை கிடையாது. உதை என்றால் மொத்தமாகச் சேர்த்து ஒரே உதைதான். நடக்கிறதோ இல்லையோ, இங்கேயும் மேற்கத்திய நாடுகளிலும் "கறுப்பா, தனியாக டீக்கடை வைத்துக்கொள் போ" என்றால் வாயால் சிரிக்கமாட்டார்கள், வேறு ஏதாவதால்தான் சிரிப்பார்கள். அந்தமாதிரிச் சொல்லும் ஆட்கள் மேற்கத்திய நாடுகளில் இல்லையா? இருக்கிறார்கள். அவர்களின் ஆட்சி நடத்திக்கொண்டிருந்தால் ஜாட்டான் என்ன, பாப்பான் கூட வாலைக் குழைத்துக்கொண்டு நுழையமுடியாது. அவர்களது ஆதிக்கத்தை புத்தி சுவாதீனமுள்ளவர்கள் ஓரளவு கட்டுக்குள் (இதைக்குறித்தும் ஆயிரம் நொள்ளை சொல்லலாம், ஆனால் சொல்லவரும் விஷயம் அதுவல்ல) வைத்திருப்பதால்தான் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பழுப்பர்களின், மஞ்சளரின், கறுப்பரின் கொடியோ கோவணமோ பறந்துகொண்டிருக்கிறது, இல்லையென்றால் அமெரிக்காவாவது ஐரோப்பாவாவது வேறு இழவாவது.

உங்களுக்குச் சந்தர்ப்பம் வாய்க்கும்போது, வேறொன்றையும் விளக்குங்கள். ஜாட்டான்கள் தொல்லை அதிகமானால் நாங்கள் அமெரிக்கா போய்விடுவோம் என்ற ரீதியில் உங்களது முரசை அறைந்திருக்கிறீர்கள்; அடுத்து, "நான் ஐயங்கார் நான் ஐயங்கார்" என்று குதிக்கும் அளவு ஐயங்கார்களுக்கும் ஐயங்கார் தவிர்த்த மற்ற ஜாதியினருக்குமிடையில் என்னென்ன வித்தியாசம் உள்ளதென்று (குமுதம் ஆறு வித்தியாசங்கள் ஸ்டைலிலாவது) விளக்குங்கள், இப்போது 2005ல் அப்படி என்னதான் இழவு வித்தியாசம் இருக்கிறது என்று என்னைமாதிரி அறிவிலிகளுக்கு விளக்குங்கள். முன்னாடி உள்ளதையெல்லாம் பிறிதொருநாள் பார்த்துக்கொள்ளலாம். இது அனைத்தையும் தர்க்கபூர்வமாக எதிர்கொண்டு, பாயிண்ட் பாயிண்ட்டாக எடுத்துவைத்து, என்னைத் தவிடு பொடியாக்கி கரைத்து சாக்கடைக்குள் எறிந்துவிடுமளவு உங்களுக்கு அபரிமிதமான திறமை இருக்கிறதென்பதை உங்களது இணையற்ற வாதங்களில் பார்த்து வந்திருக்கிறேன். எழுதவேண்டாம் எழுதவேண்டாமென்று பார்த்து அதான் தலையைக் கொடுத்துவிட்டேனே, ஜமாயுங்கள். சக்கரத்தை ஏற்றி என் தலையை அரைத்துத் தள்ளுங்கள்... one, two, three... go!!!

சன்னாசி said...

எழுதிய கடுப்பில் எனது பதிவுக்கான சுட்டியைத் தப்பாகக் கொடுத்துத் தொலைத்துவிட்டேன். போகச்சொன்னது இங்கே

SnackDragon said...

அப்பாடா மாண்ட்ரீசர் மாட்டினார்.
இப்படி லாஜிக்காக, பாயிண்ட் பாயிண்டாக டோண்டு அவாள்களின் பதிவில் எழுதுவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். நீங்கள் இங்கே நேர்மை எதிர்ப்பார்த்தால் உங்களை கடுமையாக திட்டப்போகிறேன். ;-P

அம்மணமா இருக்குறவ ஊரில கோமணம் கட்டினவன் பைத்தியம் என்றாலும் பரவாயில்லை, இங்கே கோட்டு சூட்டு போட்ட ஊரிலே கோமணத்து வாசனை பத்தி சிலாகிச்சு கொண்டிருப்பவரிடம் போய்...

/டோண்டு அவாள்களின் /
மன்னிக்கனும் டோண்டு அவர்களின் என்று இருக்கவேண்டும்.

SnackDragon said...

இதுகுறித்து இதற்குமேல் இங்கும்/எங்கும் எழுதுவதாக இல்லை.

Mookku Sundar said...

அடக் கொடுமையே...

மாண்டீ, நீங்க ஏன்யா இந்தப் பெருசுகிட்ட தலையைக் கொடுக்கறீங்க..?? எழுத்தாளர் சுஜாதாவை, சுஜாதாத்தா என்று எழுதினாலே இனையத்தில் அவரை இழித்துப் பேசுகிறார்கள் என்று அதிகபட்ச தொட்டாற் சுருங்கியாக இருக்கிறார் டோண்டு வடகலை ஐயங்கார் (அவரே சொல்லிக்கொண்டபடி). இவரிடம் பேசி மல்லாடுவதற்கு பதில் ஒரு ரெட்நெக்கிடம் நெக்கைக் கொடுத்துவிடலாம். :-)

கூல் டவுன். கூல் டவுன்.

டோண்டு ஸாராத்து மாமியிடம் கொஞ்சம் உப்பு/காரத்தை குறைக்கச் சொல்லி பலத்த சிபாரிசு பண்ணுகிறேன். இந்த பெரிசு பண்ற ரவுசு தாங்கலை சாமி...

dondu(#11168674346665545885) said...

நன்றி மூக்கன், மாண்ட்ரீஸர் மற்றும் கார்திக்ராம்ஸ். இப்பதிவின் முக்கிய விஷயத்தைப் பற்றி எழுதாமல் எதேச்சையாக குழலி அவர்கள் எழுதியதற்கு பதில் கூறுகையில் சொன்னதை வைத்துக் கொண்டு இப்படியா தொங்குவீர்கள்? அதுவும் இதை எடுத்துக் காட்டியப் பிறகு கூட? என்ன ஆயிற்று உங்கள் எல்லோருக்கும்? மாண்ட்ரீஸர் மற்றும் மூக்கன் அவர்களே, இன்னும் இப்பதிவின் முக்கிய விஷயத்தைப் பற்றி நீங்கள் பேசவில்லை என்பதை சுட்டிக் காட்டுகிறேன். மதி அவர்கள் தனக்கு இதில் ஒன்றும் கருத்து இல்லை என்று கூறிச் சென்று விட்டார். நீங்கள்?

"நான் இதுவரை எழுதியதை வைத்து என் ஜாதி என்ன என்று கெஸ்டிமேட் பஜனைகள் இன்றி துல்லியமாகச் சொல்லுங்கள்"
அது என் வேலையில்லை.

என் ஜாதியை வெளிப்படையாகக் கூறிக் கொள்வேன் என்றால் நான் தெருவில் போகும் போது இதைக் கத்திக் கொண்டே போவேன் என்றா அர்த்தம்? மற்றவர்கள் என்ன ஜாதி என்று கேட்டால் தயங்காமல் கூறுவேன் என்பதுதான் அதன் பொருள் வரும். வலைப்பூக்களின் ஏன் இதைக் கூறினேன் என்பதைப் பற்றித் தெரிந்து கொள்ள என் பதிவாம் "வெளிப்படையான எண்ணங்கள்" பார்க்கவும். மற்றப்படி அமெரிக்கா போனவுடன் ரெட்னெக்கிடம் நாங்கள் மாட்டினால் என்ன மாட்டாவிட்டால் என்ன, அதைப் பற்றி சம்பந்தப் பட்டவர் கவலைப்பட்டுக் கொள்வார்கள். இங்கு தமிழ் வலைப்பூக்களில் புஷ்ஷைக் கிழித்துத் தோரணம் கட்டுபவர்கள் இவ்வாறே அதே ரெட்னெக்கிடம் பேசத் துணிவார்களா?

அங்கும் ஜாதிப் பெயரை இரண்டாம் பெயராகப் போட்டுக் கொள்ளலாம் என்பதற்காகத்தான் இதை கூறினேன். தமிழகத்திலிருந்து செல்பவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினை இந்த இரண்டாம் பெயர் என்ற விஷயம்.

நீங்கள் விரும்பினாலும் சரி, விரும்பாவிட்டாமல் சரி, இருவர் பேசும்போது ஜாதி வராது இருப்பதில்லை. அதுவும் முக்கியமாக பிள்ளை மற்றும் பெண்களுக்குத் துணை தேடும்போது இது இல்லாமல் இருக்க முடியாது. பத்திரிகைகளில் வரும் திருமண விளம்பரங்களைப் பார்த்தாலே இது தெரியுமே.

"ஜாதியை உதறிவிட்டு வாழ்வதில் உயர்ஜாதியினருக்குள்ள சௌகரியம்கூடத் தாழ்த்தப்பட்டவர்களுக்குக் கிடையாதென்ற அடிப்படை உண்மைகூடத் தெரியாமல் தனி டீக்கடை வைத்து சுயமரியாதையை வளர்க்கச் சொல்கிறீர்கள்!!"
இந்த யோசனையில் என்ன தவறு கண்டீர்கள்? இதற்கு எதிராக எழுதியவர்கள் எல்லாம் அரசுதான் பார்த்து கொள்ள வேண்டும், இரட்டைத் தம்ளர் முறை சட்டப்படி குற்றம் என்றெல்லாம் எழுதினார்கள். 55 வருடங்களில் நடக்காததா இப்போது நடந்து விடப் போகிறது? இப்போதும் கூறுகிறேன். நான் எழுதியதைப் படித்து ஏதாவது ஓரிடத்தில் இம்மாதிரி டீக்கடை அமைந்தாலும் எனக்கு மகிழ்ச்சியே. நல்லதையே நினைப்போமே.

அது இருக்கட்டும், காத்திருப்பில் வைக்கப்பட்டுள்ள தலித் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சம்பந்தமாக நான் இட்டப் பதிவில் முடிந்தால் கருத்து கூறவும். கூறியது யார் என்று பார்க்காமல், என்ன கூறப்பட்டது என்பதைப் பாருங்கள் என்று உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

நான் சொன்னதைத் திரிக்காதீர்கள் டோண்டு அவர்களே!

நான் சொன்னது, உங்கள் பதிவில் எழுதும் பல வி்ஷயங்களுக்கு பின்னூட்டம் எல்லாம் இடும் அளவிற்கு சாரம் இல்லை என்பதே. உடனே 'மதி கந்தஸ்வாமி அவர்கள் தனக்கு சாரம் இல்லை என்று சொல்லிவிட்டார் என்று கயிறு திரித்துவிடாதீர்கள்.' நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை.

---

எங்க ஊர்ல 'ஓலைப்பாயில பெஞ்சமாதிரி' என்பதுபோலச் சொல்வார்கள். அதைமாதிரி இணையம் முழுக்க நீங்கள் கிறுக்குவதைப் பார்த்து அலுத்துப் போய் எழுத்தயது என்னுடைய தேவையில்லாத வேலைதான்!

இது போகாத ஊருக்கு வழி என்பது தெரிந்தும் வந்தது என் பிழைதான்.

-மதி

dondu(#11168674346665545885) said...

"நான் சொன்னது, உங்கள் பதிவில் எழுதும் பல வி்ஷயங்களுக்கு பின்னூட்டம் எல்லாம் இடும் அளவிற்கு சாரம் இல்லை என்பதே. உடனே 'மதி கந்தஸ்வாமி அவர்கள் தனக்கு சாரம் இல்லை என்று சொல்லிவிட்டார் என்று கயிறு திரித்துவிடாதீர்கள்.' நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை."

கண்டிப்பாக திரிக்கவில்லை மதி கந்தசாமி அவர்களே. பின்னூட்டம் இடும் அளவுக்கு சாரம் இல்லை, ஆகவே இடுவதற்கு கருத்தும் இல்லை என்றுதானே பொருள் வரும்? அப்படி கருத்து இருந்திருந்தால் நான் இப்பதிவில் கூறிய இந்த விஷயத்துக்கு மட்டுமாது சாரம் இருந்திருக்கும் அல்லவா. ஏதாவது ஒன்றுதானே உண்மை? ஆகவே "மதி அவர்கள் தனக்கு இதில் ஒன்றும் கருத்து இல்லை என்று கூறிச் சென்று விட்டார்" என்று எழுதினேன். இது எப்படி திரித்தல் ஆகும் மதி அவர்களே?
கருத்து வேற்றுமைகள் சகஜம்தான். அதற்காக இப்படி முறித்துக் கொண்டு போக வேண்டுமா என்று நான் உங்களை அன்புடன் கேட்கிறேன். நீங்கள் இங்கு வருவதோ வராமல் இருப்பதோ உங்கள் விருப்பம். ஒரு வேளை வராமல் போய்விடுவீர்களோ என்னும் அச்சத்தில் இப்போதே கூறி விடுகிறேன். நீங்கள் என் வலைப்பூ தளத்தில் செய்து கொடுத்த உதவிகளை எப்போதும் மறக்க மாட்டேன். அதற்காக உங்களுக்கு என் நன்றி எப்போதும் உரித்தாகுக. காலப் போக்கில் உங்கள் கோபம் தணியும் என்று எதிர்ப்பார்க்கிறேன். இதையெல்லாம் தனி மடலில் இடாது இங்கு வெளிப்படையாகவே எழுதுவது எதேச்சையான செயல் அல்ல என்பதையும் கூறிவிடுகிறேன். நான் உங்களைத் தனிமுறையில் தாக்கி எழுதியதாக நினைவில்லை. அப்படி ஏதேனும் நீங்கள் உணர்ந்திருந்தால் அதற்கான மன்னிப்பையும் கோருகிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

§¼¡ñÎ «Å÷¸§Ç, ¯í¸û À¾¢Å¢ø ¿¡ý ÀÊôÀÐ ¯í¸û ¦¾¡Æ¢ø ºõÀó¾ôÀð¼ À¾¢×¸¨Ç§Â. ¯í¸Ç¢ý ²¨É À¾¢×¸û «ó¾ô À¾¢×¸¨Ç Á¾¢ìÌõ ±ý§À¡ý§È¡¨Ã þí§¸ ÅáÁü ¦ºö¸¢ýÈÉ. ¯í¸û ž¢üÌõ «ÛÀÅò¾¢üÌõ Á¾¢ôÒì ¦¸¡ÎòÐ ±Ð×õ ¦º¡øÄ ÓÊÂÅ¢ø¨Ä. þô§À¡Ðõ, ¿¡ý ¯í¸û ŨÄôÀ¾¢Å¢üÌ ²§¾Ûõ ¯¾Å¢ §¾¨ÅôÀð¼¡ø ¦ºö§Åý. «¾üÌõ þ¾üÌõ ºõÀó¾Á¢ø¨Ä.

-Á¾¢

dondu(#11168674346665545885) said...

நன்றி மதி அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்

-/பெயரிலி. said...

/இங்கு தமிழ் வலைப்பூக்களில் புஷ்ஷைக் கிழித்துத் தோரணம் கட்டுபவர்கள் இவ்வாறே அதே ரெட்னெக்கிடம் பேசத் துணிவார்களா? /
டோண்டு ஐயா, உங்களுக்குத் தெரியாட்டியும் எண்டதால, புஷ்ஷே ஒரு பக்கா ரெட்நெக்தான்.

உங்களைப்போல ஆக்களுக்கு எங்கடை ஊரிலை ஒரு வசனம் சொல்லுவார்கள்: "சரியான கடையில இன்னும் சாப்பிடயில்லை" எண்டு. ;-)

சன்னாசி said...

அனைத்துக்கும் திரும்பப் பதில் எழுதுவதற்கு என்னிடம் நிஜமாகவே "சாரம்" இல்லை என்று வைத்துக்கொள்ளுங்கள் - நானே சுயவாக்குமூலம் கொடுத்துவிடுகிறேன், உங்களுக்கெதற்கு சிரமம், "சாரத்தின்" அர்த்தச்சாற்றைப் பிழிந்து ஜூஸ் எடுப்பதற்கு. நான் கூறியதில் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்குமோ என்ற இரண்டு விஷயங்களுக்கு மட்டுமான சுருக்கமான விளக்கம்:

//அமெரிக்கா போனவுடன் ரெட்னெக்கிடம் நாங்கள் மாட்டினால் என்ன மாட்டாவிட்டால் என்ன, அதைப் பற்றி சம்பந்தப் பட்டவர் கவலைப்பட்டுக் கொள்வார்கள்.//
ஐயா, உவமான உவமேயமே இல்லாமல் எழுதுமளவு எனக்குத் திறமை இல்லை - நீங்கள் மாட்டுவதற்காக அதைச் சொல்லவில்லை, அந்தளவு வக்கிரம் என்றைக்கும் வரவும் வராது - ஒவ்வொரு சூழலிலும் ஒவ்வொருவன் அன்னியனாகவே இருக்கிறான் என்பதைக் குறிக்கச் சொன்னது அது. அன்னியத்தன்மையக் கரைக்க முதலில் அழிக்கவேண்டிய எல்லைகளை, வரலாற்றில் அந்த எல்லைகள் விளைவித்த தீமையின் அளவை அளந்துபார்த்துத் தீர்மானிப்பது என்ற ரீதியில் ஜாதி, இனம், மதம் என்ற எல்லைகளை - சமூகத்தைப் பிளக்கும் காரணிகளை மெதுவாக neutralize செய்ய என்ன வழி என்று பார்ப்பது என்ற ரீதியில் சொன்னது.

//"நான் இதுவரை எழுதியதை வைத்து என் ஜாதி என்ன என்று கெஸ்டிமேட் பஜனைகள் இன்றி துல்லியமாகச் சொல்லுங்கள்"
அது என் வேலையில்லை.//
அது உங்கள் வேலையில்லை என்று எனக்கும் தெரியும். சொல்லவந்தது, நீங்கள் பிரஸ்தாபித்துக்கொண்டிராவிட்டால், உங்கள் குலம் கோத்திரம் எதுவும் எனக்கும் தெரியவந்திராது என்பது. நீங்கள் எழுதுவதைவைத்து அதைத் துப்பறிந்து கண்டுபிடிக்கும் வேலையத்த வேலையையும் நான் செய்திருக்கமாட்டேன்.

உங்கள் அனைத்துப் பதிவுகளையும் பெரும்பாலும் படிப்பதுண்டு - சிலவற்றை ஒத்துக்கொள்ள முடிவதில்லை; தோன்றியதைச் சொல்கிறேன். அவ்வளவுதான். தனிப்பட்ட எந்த ஜாதி மேலும் எனக்கு துவேஷம் கிடையாது. குழலியின் பின்னூட்டத்தை நீங்களே மற்றுமொருமுறை படித்துப் பார்த்து, என்ன ஜாதி நீங்கள் என்று கேட்டிருக்கிறாரா என்று நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள். துள்ளிக் குதித்து, இத்தனை பதிவுகளிலும் சொல்லியதையே திரும்பவும் இங்கே சொல்வது குறித்த எரிச்சல்; அவ்வளவே. ஜாதி பேரைச் சொன்னாலே பாய்ந்து பாய்ந்து கடிக்குமளவு எனக்கு வெறிபிடித்துவிடவேண்டிய அவசியமும் இல்லை. யார் என்ன ஜாதியாக இருந்தால் எனக்கென்ன? இந்தப் பதிவைப்பற்றி எழுது இந்தப் பதிவைப்பற்றி எழுது என்று திரும்பத்திரும்பச் சொல்லாமல், இதுவரையிலான உங்கள் இதுமாதிரியான (எதுமாதிரியான எனவேண்டாம், தயவுசெய்து) கருத்துக்களைக்குறித்தான சில பின்னூட்டங்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். மிக்க நன்றி.

dondu(#11168674346665545885) said...

"புஷ்ஷே ஒரு பக்கா ரெட்நெக்தான்." யார் இல்லை என்றது? நான் கேட்கும் கேள்வியில் மாற்றம் இல்லை.

மாண்ட்ரீசர் அவர்களே, ஒரு குறிப்பிட்டப் பதிவுக்குள் வந்து அதில் கூறப்பட்டதற்குப் பின்னூட்டமிடாது எனக்கு பின்னூட்டம் இட்ட இன்னொருவருக்கு நான் கூறிய பதிலை வைத்துக் கொண்டு எல்லோரும் போட்ட ருத்ர தாண்டவம் சகிக்காமல்தான் நான் அவ்வாறு எழுதினேன். நிற்க, நமக்குள் கருத்து வேறுமை என்னும் கருத்தில் ஒற்றுமையாக இருக்கிறோம் என்று கூறிக் கொண்டு இத்துடன் இவ்விஷயத்தை விடுகிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

"மருத்துவர் அய்யா விசயத்தில் உங்களின் கருத்து நியாயமானதுதான்!"
நன்றி. ஆனால் நீங்கள் கூறிய மற்றக் கருத்துக்கள் கீழ்க்கணக் காரணங்களால் ஏற்ககக் கூடியவை அல்ல.

"கழுத்தில் கொட்டையோடும் நெற்றியில் பட்டையோடும் பூணூல் போன்ற இத்யாதிகளோடும், "அவா" க்களுக்கே உரித்தான வேஷ்டிக் கட்டோடும் இருக்கிறார்! இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அவரை அவரின் ஜாதி வெறியில் இருந்து வெளிக்கொணர முடியாது!!!"
பூணூல் தவிர மீதி எல்லாம் தவறு. நான் வீட்டில் மட்டுமே வேட்டி கட்டுவேன், அதுவும் பிராம்மணக்கட்டு அல்ல. அதை கட்டத் தெரியாது. சாதாரண எட்டு முழ தட்டுக்கட்டு வேட்டிதான். என்னை வீட்டிற்கு வந்து சந்தித்தது ஹல்வாசிடி விஜய். அவர்தான் இப்போது சிங்கப்பூரில் இருக்கிறார். அவர் என் வீட்டுக்கு வந்த வந்த அதே தேதியில் வந்தவர் ரவியா அவர்கள். ஆனால் ஃபிரான்ஸில் இருக்கிறார். அப்போது எடுத்தப் புகைபடங்கள் விஜயிடம் உள்ளன. நீலக் குர்தா, அதே கலர் பைஜாமா அணிந்துள்ளேன். மேலும் விஜய் என்னைப் பற்றி அப்படியெல்லாம் பேசக் கூடியவர் அல்ல. நன்றாகவே சிண்டு முடியும் வேலையைச் செய்கிறீர்கள். அவ்வாறு நீங்கள் குறிப்பிடும் நண்பர் விஜய் இல்லையென்றால், வேறு யார் என்பதைக் கூறவும். தேவையானால் விஜய் என் வீட்டில் எடுத்த போட்டோக்களை உங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் தயார். நான் வலைப்பூ நண்பர்கள் சந்திப்புகளுக்கெல்லாம் பேன்ட் சட்டை அணிந்துதான் சென்றேன். நான் ஐயங்கார் என்று கூறுவதால் ஜாதி வெறியன் ஆகி விடுவேனா? உங்களுக்குத்தான் பார்ப்பன வெறுப்பு. நிற்க.

ஐயா வழிப்போக்கரே, கமலைப் பற்றி நேசமுடன் வெங்கடேஷ் எழுதியப் பதிவில் நீங்கள்தான்
கமலின் ஜாதியைப் பற்றி முதலில் பின்னூட்டமிட்டீர்கள். கமலை ஆதரித்து எழுதிய என்னிடம் நான் வடகலையா தென் கலையா என்று முதலில் கேட்டது நீங்கள். நான் அதற்கு விடையாக வடகலை என்று கூறினேன். பிறகு அதை என்னவோ நானே தேவையில்லாமல் கூறிக் கொண்டதாகக் கதை கிளப்பினீர்கள். இதெல்லாம் நான் ஏற்கனவே "என் வெளிப்படையான எண்ணங்கள்" என்னும் பதிவில் குறிப்பிட்டுள்ளேன். போய் பார்த்துக் கொள்ளுங்கள். வெங்கடேஷின் பதிவும் அதன் சுமார் 120 பின்னூட்டங்களும் அவர் வலைப்பூவில் அப்படியே உள்ளன. அதையும் போய் பாருங்கள்.
கழுத்தில் கொட்டை, நெற்றியில் பட்டை என்பது சைவர்களுக்குத்தான் பொருந்தும். நாங்கள் அணிவது நெற்றிக்குத் திருமண். மேலும் இதை நான் அணிவது வைதீகக் காரியங்களுக்குத்தான்.

இப்படி எல்லாவற்றுக்கும் ரிகார்டுகள் இருக்கின்றன. அந்த நிலையிலும் நீங்கள் தைரியமாகப் புளுகுகிறீர்கள். சரியான மலைமுழுங்கி மகாதேவந்தான் நீங்கள். எனக்கு ஜாதியைப் பற்றி அறிவுறை கூற உங்களுக்கு ஒரு தகுதியும் இல்லை. புளுகுவதை நிறுத்தி விட்டு வேறு ஏதாவது வேலையிருந்தால் பாருங்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

""கழுத்தில் கொட்டையோடும் நெற்றியில் பட்டையோடும் பூணூல் போன்ற இத்யாதிகளோடும், "அவா" க்களுக்கே உரித்தான வேஷ்டிக் கட்டோடும் இருக்கிறார்!"
முதலில் இந்த டிஸ்க்ரிப்ஷன் பொய் என்பதை என்னைப் பார்த்த வலைப்பூ நண்பர்கள் எல்லோருமே கூறுவர், உங்களின் கற்பனை நண்பரைத் தவிர. அடிப்படையே தவறாக இருக்கும்போது நீங்கள் கூறும் மீதி விளக்கங்கள் எனக்கு அனாவசியம். தைரியம் இருப்பின் அந்த நண்பர் யார் என்றுக் கூறுங்கள். அது விஜய் இல்லை என்னும் தகவல் எனக்கு வேறு வழியில் ஏற்கனவே வந்து விட்டது. என்னை நேரில் பார்த்த அவரை வேண்டுமானாலும் கேட்டுக் கொள்ளுங்கள். அப்படித்தான் கமலைப் பற்றியப் பதிவிலும் நீங்கள் யார் என்றே கூறாது தொல்லை கொடுத்தீர்கள். நான் அவனில்லை என்ற ரேஞ்சுக்கு ஒவ்வொருவருவராகப் பின்னூட்டம் கொடுக்க வேண்டியதாயிற்று. டிசம்பர் ஒன்று 2004 அன்று நான் அப்பதிவில் கொடுத்தப் பின்னூட்டத்தைப் பாருங்கள்.
"வழிப் போக்கன் அவர்களே,
வெங்கடேஷ் நான் கூறியது போன்று அனாமதேயப் பதிப்புகளுக்குத் தடை விதித்திருந்தால் எல்லோருமே அவரவர் சொந்தப் பெயரிலிலேயே பதிவு செய்திருப்பர்.
என்னைப் பொறுத்தவரை நான் உங்களைத் தனிப்பட்ட முறையில் தாக்கினேன் என்றுக் கூற மாட்டீர்கள் என நம்புகிறேன்.
உங்கள் கருத்துக்களுடன் நான் ஒத்துப் போகாவிட்டாலும் அவைகளுக்கு நேருக்கு நேர் என்ற வகையிலேயே பதில் எழுதி வருகிறேன் என்பதையும் தாங்கள் அறிவீர்கள்.
ஆகவே நான் இன்னொரு முறை தான் யார் என்றுத் தெரிவிக்குமாறுக் கேட்டுக் கொள்கிறேன். தேவையில்லாமல் இக்குழப்பத்தில் டைனோ, பாரி பாலாஜி மற்றும் பெயரிலி ஆகியோர் மாட்டிக் கொண்டனர்.
நீங்கள் இவ்வாறு சுயபரிச்சயம் செய்துக் கொள்ளாததும் உங்களுக்கு எதிரான மன நிலைக்கு ஒரு முக்கியக் காரணமாகப் போய் விட்டது."
அப்பதிவுக்கான உரல் இதோ: http://www.tamiloviam.com/nesamudan/page.asp?ID=110&fldrID=1
அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

"கழுத்தில் கொட்டையோடும் நெற்றியில் பட்டையோடும் பூணூல் போன்ற இத்யாதிகளோடும், "அவா" க்களுக்கே உரித்தான வேஷ்டிக் கட்டோடும் இருக்கிறார்!"
முதலில் இந்த டிஸ்க்ரிப்ஷன் பொய் (பூணலைத் தவிர) என்பதை என்னைப் பார்த்த வலைப்பூ நண்பர்கள் எல்லோருமே கூறுவர், உங்களின் கற்பனை நண்பரைத் தவிர. அடிப்படையே தவறாக இருக்கும்போது நீங்கள் கூறும் மீதி விளக்கங்கள் எனக்கு அனாவசியம்."
இப்போது புரிகிறதா. என் தோற்றத்தைப் பற்றி நீங்கள் கூறியதைத்தான் அடிப்படையிலேயே தவறு என்றேன். மேலே இருக்கும் பாராவிலிருந்து சௌகரியமாக "அடிப்படையே தவறாக இருக்கும்போது நீங்கள் கூறும் மீதி விளக்கங்கள் எனக்கு அனாவசியம்." என்றப் பகுதியை மட்டும் வெட்டி எடுத்து மறுபடியும் என்ன அடிப்படை என்று கேட்கும் உங்களை என்னவென்று கூறுவது? உங்கள் நண்பர் என்னைப் பற்றி இவ்வாறு அடையாளம் காட்டியிருக்கவே முடியாது. அப்படி முதலிலேயே தவறான அடையாளத்தைக் கூறியவர் (அப்படி ஒருவர் இருந்தால்) மீதியை மட்டும் சரியாகக் கூறியிருப்பார் என்று எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும்? நான் உண்மையாகவே என்ன நினைக்கிறேன் என்றால் ஏதோ போதையின் கீழ் உங்கள் கற்பனையில் இம்மாதிரி நெற்றியில் பட்டை, கழுத்தில் ருத்திராட்சக் கொட்டை என்றெல்லாம் எண்ணங்கள் ஓடியிருக்கும் என்பதே. முதலில் இந்த "அடிப்படை" முரண்பாட்டை விளக்கி விட்டு மேலே செல்லுங்கள். நன்றாக யோசித்தே பதில் கூறுங்கள் அவசரமில்லை.

நான் பிராம்மணன் என்றுக் கூறிக் கொள்வதின் பின்னணியை "என் வெளிப்படையான எண்ணங்கள்" என்ற தனிப் பதிவில் குறிப்பிட்டுள்ளேன். இங்கு வலைப் பூவில் பார்ப்பனருக்கும், பார்ப்பனீயத்துக்கும் இவ்வளவு எதிர்ப்புகள் இருக்கும் நிலையில் பல பார்ப்பனர்கள் தங்கள் அடையாளங்களை மறைத்து வாழ்கின்றனர். அது கோழைத்தனம் என்று எனக்கு நிஜமாகவே படுவதால் அதை ஒரு சவாலாக ஏற்றுச் செயல்படுகிறேன். அவ்வளவுதான் விஷ்யம். நான் செய்வதெல்லாம் ஆ ஊ என்றால் நாட்டில் நடக்கும் எல்லக் கொடுமைகளுக்கும் பார்ப்பனர் மற்றும் பார்ப்பனீயம் மட்டும்தான் காரணம் என்று ஆளுக்கு ஆள் கூறுவதை எதிர்ப்பதுதான். இதை ஜாதி வெறி என்று நீங்கள் கருதினால் அது உங்கள் பிரச்சினை. உங்கள் உபதேசங்களை உங்களிடமே வைத்துக் கொள்ளுங்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

"கழுத்தில் கொட்டையோடும் நெற்றியில் பட்டையோடும் பூணூல் போன்ற இத்யாதிகளோடும், "அவா" க்களுக்கே உரித்தான வேஷ்டிக் கட்டோடும் இருக்கிறார்!"
மேலே கூறியது உண்மையில்லை, பூணூலைத் தவிர. அதை நீங்கள் எந்த அடிப்படையில் கூறினீர்கள்? அதை முதலில் கூறுங்கள். பிறகு மற்ற பாயிண்டுகளுக்கு வாருங்கள். முதலும் கோணல் முற்றும் கோணல். முதல் கோணலை சரி செய்யுங்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்

மாயவரத்தான் said...

ஆமாம் டோண்டு சார்.. நீங்கள் இப்படி வெளிப்படையாக சொன்னது தான் பிரச்னையே.. என்ன ஜாதி என்று சொல்லாமலேயே ஒரு ஜாதிக்கட்சி தலைவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு கொண்டாடலாம். தட்டிக் கேட்பவர்களை "உங்கள் பார்வையில் கோளாறு என்றோ" அல்லது "இதெல்லாம் பார்ப்பனியவாதம்" என்றோ ஜல்லியடிக்கலாம்.. அப்படியில்லாமல் வெளிப்படையாக சொன்னது உங்கள் குற்றம் தான்..!

dondu(#11168674346665545885) said...

1. "அய்யா என்னிடத்தில் சொன்னவர் தாங்கள் இன்னும் பிராமண சின்னங்களை துறக்கவில்லை என்றும் அதனைத் துறக்க தாங்கள் ஒருபோதும் முயன்றதில்லை எனவும் தாங்கள் பிராமணீயத்தில் முழுக்க ஊறியவர் எனவும் அதனைவிட்டு தாங்கள் அவ்வளவு எளிதில் வெளிவரமாட்டீர்கள் என்றும் சொன்னார் போதுமா?!"
இது உண்மையேயில்லை. தந்தை மற்றும் தாய்க்குத் திதி கொடுக்கும்போது பிராமண சின்னங்கள் அணிவேன். என் தாய் தந்தையை நான் மிகவும் நேசிப்பவன். ஆகவே அக்னி வளர்த்து, பிரஹஸ்பதியை வேண்டி அழைத்து செய்ய வேண்டியக் கடமைகள் செய்வேன். மற்றப்படி தினசரி பிராம்மணச் சின்னம் என்பதெல்லாம் சுத்தமாகக் கிடையாது. உங்கள் நண்பர் என்னை அவற்றுடன் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை. உங்கள் காதில் நன்றாக பூ சுற்றியிருக்கிறார். நான் ஏற்கனவே கூறியபடி விஜய் மற்றும் ரவியா இருவர் மட்டுமே என் வீட்டிற்கு ஒரு முறை ஒன்றாக வந்தனர். மற்றப்படி கழுத்தில் கோட்டை, நெத்தியில் பட்டை என்பதெல்லாம் ஓவர்.

2. "இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அவரை அவரின் ஜாதி வெறியில் இருந்து வெளிக்கொணர முடியாது!!!"
ஒருதடவை என்னைப் பார்த்த உடனேயே இதையெல்லாம் தெரிந்து கொண்டுவிட்டாராமா? அவ்வாறு முடிவுக்கு வரக்கூடியவரை சமீபத்தில் சந்திக்கவேயில்லை. இக்குற்றச்சாட்டும் நம்பத்தகுந்ததல்ல.

3."அன்றைக்கு கமலை ஆதரித்து எழுதியவர்கள் எல்லோரும் யார் என உங்களுக்கு நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை என நினைக்கிறேன். கமலை நடிப்புக்காக பாராட்டாமல் ஜாதிக்காக பாராட்டிய புகழ்ந்து பேசி புளகாங்கிதமடைந்த கூட்டத்தில் நீரும் ஒருவர்! வெங்கடேஷ் கமலுக்குப்பின் வரிசையாக அடுக்கிய அரவிந்தசாமி, மாதவன் ஆகியோரிடத்து என்ன நடிப்பு இருக்கிறது என்பதையும் நீர் சொல்லி நிரூபிக்கவில்லை அன்று!"
நான் கூறாததை நான் ஏன் நிரூபிக்க வேண்டும்? என்னுடைய சாய்சாக சூர்யாவையும் விக்ரமையும் கூறியிருந்தேனே. நான் கூற முனைந்ததெல்லாம் கமல் என்ற நடிகனைப் பேசும் போது அவன் ஜாதி ஏன் உங்கள் கண்ணுக்குப் பட வேண்டும் என்பதே. ஜாதியைப் பார்ப்பதாக இருந்தால் கமலுக்கு எந்தப் பார்ப்பனரும் ஆதரவு தெரிவித்திருக்க மாட்டார், ஏனெனில் அவர் தன்னைப் பார்ப்பன விரோதியாகக் கூறிக் கொள்பவர். அப்போதே உங்கள் வாதம் அடிபட்டுப் போய் விட்டது, ஆனால் நீங்கள் அதிலேயே நின்றீர்கள்.

4. "வலைப்பூக்களில் எழுதும் பல உறுப்பினர்களில் இப்படி ஜாதீ(!)யைக் கையில் பிடித்துக் கொண்டு குதிக்கும் தீவிரமான ஆள் நீங்கள்தான்!"
இப்போது நான் கூறப்போவதை கவனியுங்கள். நீங்கள் செய்கிறீர்கள் என்று கூறவில்லை, ஆனால் தமிழ்நாட்டில் பார்ப்பனரின் நிலை சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. இந்த நிலைமை கடந்த ஐம்பது வருடங்களுக்கு மேல் இருக்கிறது. நான் எழுதிய "என் வெளிப்படையான எண்ணங்கள்" பதிவைப் பாருங்கள். அப்பதிவில் உங்களையும் குறிப்பிட்டிருந்தேன். அதில் நான் வலைப்பூவில் இவ்வாறு வெளிப்படையாக நான் பார்ப்பனன் என்று கூறிக் கொண்டதற்கானப் பின்புலத்தைக் கூறியுள்ளேன். அதில் ஒரு பெரும் பகுதியை இங்கு கூறுவேன். அப்போது அசோகமித்திரனைப் பற்றிய விவாதம் தூள் பறந்தது. வழமையானப் பார்ப்பன விரோதக் கருத்துக்கள் வந்தன என்பதை நினவில் வைத்தால் கீழே நான் எழுதியது புரியும். அப்பதிவில் உங்களையும் பெயரிடாமல் குறிப்பிட்டுள்ளேன்.

"பார்ப்பனத்தன்மையை மறைத்துக் கொள்ள முயற்சித்ததும் இப்போதையப் பார்ப்பனரின் நிலைமைக்கு ஒரு காரணம். ஆனால் இவ்வாறு செய்ததில் மற்றவர் வலையில் விழுந்ததுதான் பலன். ஊரார் வாய்க்குப் பயந்து பயந்து இன்னும் இழிவுப் படுத்தப்பட்டதுதான் மிச்சம். என்னதான் செய்தாலும் போதாது இன்னும் செய்ய வேண்டும் என்றுதான் கூறுவார்கள். அடப் போய்யா நான் பார்ப்பனன்தான் அதற்கு என்ன இப்போது என்று எதிர்த்துக் கொண்டால் என்ன ஆகி விடும்?

இவ்வாறு நினைத்துத்தான் நான் சமீபத்தில் 1963-ல் பொறியியல் கல்லூரி நேர்முகத் தேர்வுக்குச் சென்றேன். தேர்வுக் குழுவின் தலைவர் திரு. முத்தையன் அவர்கள். அப்போது அவர் தொழில் நுட்பக் கல்வி ஆணையத் தலைவர். அவர் மற்றக் கேள்விகளைக் கேட்டு விட்டுக் கடைசியாக என்னைக் கேட்டார், "நீங்கள் பார்ப்பனரா?" என்று."ஆம் ஐயா" என்றேன். பார்ப்பனராக இருப்பதில் பெருமைப் படுகிறீரா?" என்று அடுத்தக் கேள்வி. அவர் கண்களைப் பார்த்துக் கொண்டு பதிலளித்தேன் "நிச்சயமாக ஐயா" என்றேன். இன்டர்வியூ முடிந்தது என்றார். என்னுடன் கூட வந்தவர்கள் எனக்கு கண்டிப்பாக தேர்வு கிடையாது என்றார்கள். "அடப் போடா மயிரே போச்சு" என்றேன். என்ன ஆச்சரியம்! தேர்வு கிடைத்தது. ஏற்கனவே என் தந்தை சிபாரிசுக்குச் செல்ல மாட்டேன் என்றுக் கூறியிருந்தார்.

இதிலிருந்து ஒரு பாடம் கற்றேன். பயப்படக்கூடாது. மற்ற எந்த ஜாட்டானும் எனக்குப் பொருட்டல்ல. இப்போதுத் திரும்பிப் பார்க்கிறேன். இவ்வளவு ஆண்டுகளும் அவ்வாறே வாழ்ந்திருக்கிறேன். தேவையில்லாது மற்றவர் ஆதரவை எதிர்ப்பார்த்தால் கடைசியில் அவமானம்தான் மிஞ்சும்.

நாய்கள் துரத்தினால் ஓடாதீர்கள். எதிர்க் கொள்ளுங்கள். அவை ஓடி விடும். இந்தப் பாடம் கற்றுக் கொண்டு உலகுக்குத் தெரிவித்தது விவேகானந்தர் அவர்கள்.

இப்போது வலைப்பூவில் பார்க்கிறேன். எழுதுபவனின் ஜாதியைத்தான் முதலில் கவனிக்கிறார்கள். "கமலின் நடிப்பு எனக்குப் பிடிக்கும், அவருக்கு வாரிசாக மாதவனையும் அரவிந்தசாமியையும் பார்க்கிறேன்" என்று வெங்கடேஷ் எழுதப் போக, "ஆஹா அவர்கள் பார்ப்பனர்கள் என்பதால்தான் இவ்வாறுக் கூற முனைந்தீரா" என்றுத் தோள் தட்டிக் கொண்டு வந்தனர் மற்றவர். ஒரு பின்னூட்டம் இட்ட என்னை "நீங்கள் வடகலையா அல்லது தென்கலையா" என்றுக் கேட்டதாலேயே நான் வடகலை என்று உண்மையைக் கூற என்னமோ நான்தான் அதை முதலில் கூறியது போல கேட்டவர் திரித்து எழுத "நீங்கள் கேட்டதால்தான் கூறினேன்" என்று நான் கூறியதை மனிதர் கவனிக்கவேயில்லை. (இவரைத் தெரிகிறதா?)

அதே போல என்றென்றும் அன்புடன் பாலா வீட்டிற்குச் சென்ற போது எனக்கு ஏற்பட்ட ஹைப்பெர் லிங்கைப் பற்றிக் கூறப்போக, "நீங்கள் பார்ப்பனரானதால்தான் அவ்வாறு கண்டு பிடிக்க முடிந்தது" என்றுத் தேவையின்றி சாதியை இழுத்தார் இன்னொருவர். அதற்கும் மேலாக பார்ப்பனர்கள் தங்கள் சாதியை எப்படியாவது வெளிப்படையாக்குகிறார்கள் என்ற நக்கல் வேறு.

இப்போதுக் கூறுகிறேன். நான் வடகலை ஐயங்கார். பார்ப்பன ஜாதியில் பிறந்ததற்குப் பெருமிதம் அடைகிறேன். நான் பார்ப்பனன் என்பதை எப்போதும் தெளிவுபடக் காட்டிக் கொண்டவன். இனிமேலும் அவ்வாறுதான் செய்யப் போகிறவன்."

இதுதான் நடந்தது மூர்த்தி அவர்களே. வெங்கட் அவர்கள் தன் பார்ப்பன அடையாளங்களை முக்கால்வாசி மறைத்துக் கொண்டவர். அவரையே பாப்பார புத்தி என்று கூறி விட்டார்கள். அவரும் எவ்வளவோ வாதாடிப் பார்த்தார். ஒரு பெண்மணி பார்ப்பன்கள் கொல்லப்பட வேண்டியவர்கள் என்று கூட எழுதும் அளவுக்கு போய் விட்டார். என்றென்றும் அன்புடன் பாலா சாதாரணமாக ஏதோ கூறப் போக அவரையும் பார்ப்பனர் என்பதற்காகவே கடுமையான வார்த்தைகளால் தாக்கினர். இதெல்லாம் பார்த்து கொண்டு நான் ஏன் சும்மா இருக்க வேண்டும்? பாலாவிற்கு ஆதரவாக நேரடியாகக் கோதாவில் குதித்தேன். கீரிபட்டி மற்றும் இருதொகுதிகளிலும் வெறுமனே மேல் சாதியினர் அக்கிரமம் என்று எழுதியிருந்தனர். அவர்கள் பார்ப்பனராக இருந்திருந்தால் முரசு கொட்டி அதை தண்டோரா போடிருப்பார்கள். இன்னொரு தருணத்தில் ரோஸாவசந்தே அங்குள்ள மேல்சாதியினர் தேவர் குலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை குறிக்க வேண்டும் என்று எழுதினார். அவருக்கு முன்னால் அதை நான் எழுதிய போது அதே ரோஸாவசந் அவர்கள் டோண்டுவை அத்தொகுதிகளுக்குத் தலைமை தேர்தல் அதிகாரியாகப் போடலாம் என்று ஜோக்கடித்தார். நிலைமையில் மாற்றம் ஏற்படத் துவங்கியது.

இப்போது கடைசியாகக் கூறுகிறேன். நான் பார்ப்பனன் என்று கொடி பிடிப்பது ஜாதி வெறியால் அல்ல, அது ஒரு தற்பாதுகாப்பு நடவடிக்கையே. இது ஒரு முள் கிரீடம், இருந்தாலும் அதை சுமப்பதில் பெருமைப் படுகிறேன். மற்றவர்கள் ஆதரவு கிடைக்குமா? தெரியாது, அதைப் பற்றிக் கவலையும் இல்லை.

5. "நான் தங்களை இன்றுவரை நேரிலோ அல்லது புகைப்படத்திலோ பார்த்ததில்லை. அதனால் அவர் சொன்னதை நம்பினேன். அவ்வாறு கொட்டை,பட்டை இல்லை என்றே வைத்துக் கொள்வோம்.இந்த ஓரிடத்திலேயே நிற்கிறீர்களே தவிர நான் கேட்ட பல கேள்விகளுக்கு தங்களிடமிருந்து பதில் வரவில்லை என்பதை அறிவீர்களா!"
நான் பிடிவாதக்காரன், முதல் பாயிண்ட் தவறு என்று நீங்கள் ஒப்புக் கொள்ளும் வரை உங்களை விடுவதாக இல்லை. நீங்கள் ஒத்துக் கொண்டப் பிறகே இப்போது பேசுகிறேன். ஆனால் ஜாதி வெறியன் அல்ல. எங்கள் வீட்டில் தீண்டாமை பார்ப்பதேயில்லை. இதை நான் வலைப்பூகளிலேயே பல இடங்களில் கூறியுள்ளேன். அப்படி நான் ஜாதி வெறியனாக இருந்திருந்தால் எனக்கு இவ்வளவு வருடங்களில் இத்தனை நண்பர்கள் கிடைத்திருக்க மாட்டார்கள். பன்மொழிகள் படித்து அறிவை விசாலமாகிக் கொண்டவன். அதே சமயம் தேவையில்லாது தமிழ்நாட்டில் உள்ள எல்லா பிரச்சினைகளுக்கும் பார்ப்பனீயம்தான் காரணம்தான் என்றால் நான் அதையெல்லாம் சேலஞ்ச் செய்யமல் இருக்க மாட்டேன் என்பதையும் குறிப்பிட்டு விடுகிறேன். எனக்கு என் வேர்களும் முக்கியம்.

6. "நீங்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அது உங்கள் பிறப்புரிமை. அதனை நான் தடுக்கவில்லை. ஆனால் ஒன்று சொல்லிக் கொள்ள ஆசைப் படுகிறேன். வலைப்பூ உலகத்தில் மிகவும் தைரியமாக நான் இன்ன ஜாதிதான் என்று பறைசாற்றிய பெருமை தங்களை மட்டுமே சாரும்!"
நன்றி.

7. அது சரி தலித்துகளுக்கு எதிராக செயல்படும் ரட்டைத் தம்ளர் முறையை எப்படி எதிர்க் கொள்வது, கட்டாயக் காத்திருப்பில் வைக்கபட்டிருக்கும் தலித் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு நான் கூறிய யோசனை ஆகியவற்றையும் பாருங்கள். மாற்று யோசனைகள் ஏதேனும் இருந்தால் கூறவும்.

8. மற்றவர்கள் ஏன் என் மேல் கோபப்படுகின்றனர் என்பதும் எனக்குப் புரிகிறது. அதையும் இத்தருணத்தில் கூறி விடுகிறேன். பார்ப்பனர்கள் என்பவர்கள் தங்களுக்கெதிராகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை வாய் பேசாது ஏறுக் கொள்வதைதான் சாதாரணமாகப் பார்த்திருப்பவர்கள் திடீரென்று என்னைப் போன்ற "பெருசு" எதிர்து குரல் கொடுப்பதை ஜீரணிக்க முடியவில்லை என்று நினைக்கிறேன்.

9. இதை எழுதும்போது மாயவரத்தான் அவர்களின் பதிவு வந்திருக்கிறது. அதற்கும் இங்கேயே பதிலளிக்கிறேன். "ஆமாம் டோண்டு சார்.. நீங்கள் இப்படி வெளிப்படையாக சொன்னது தான் பிரச்னையே.. என்ன ஜாதி என்று சொல்லாமலேயே ஒரு ஜாதிக்கட்சி தலைவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு கொண்டாடலாம். தட்டிக் கேட்பவர்களை "உங்கள் பார்வையில் கோளாறு என்றோ" அல்லது "இதெல்லாம் பார்ப்பனியவாதம்" என்றோ ஜல்லியடிக்கலாம்.. அப்படியில்லாமல் வெளிப்படையாக சொன்னது உங்கள் குற்றம் தான்..!"
நல்ல புரிதலுக்கு நன்றி மாயவரத்தான் அவர்களே. ஆனால் நினைத்தாலும் பார்பனீயம் என்பதை வைத்து ஃஆன் ஜல்லியடிக்க முடியாதே?

என்ன மூர்த்தி அவர்களே, ஓரளவுக்காவது என் நிலையை நான் தங்களுக்குத் தெளிவு படுத்தியிருக்கிறேனா? உங்கள் நண்பரிடம் கூறுவீர்களா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

மாயவரத்தான் said...

//இந்தமேரி திண்ணைல உறுதியா பேசி இருந்தீங்கன்னா அன்னிக்கே நீங்க ஜெயிச்சு இருக்கலாம்.//

திண்ணை மேட்டர் முடிஞ்சு போன ஒண்ணு..! அதை மீண்டும் கிளப்ப வேண்டாம்னு நான் பலமுறை சொல்லியிருக்கிறேன்.. அந்த மேட்டரிலே நான் தோத்துட்டேன்னு நீங்க நெனச்சா...ஐயோ பாவம் சார்...உங்க நெனப்புலே மண்ணள்ளி போட நான் தயாரா இல்லே..! நீங்க அப்படி நெனச்சிக்கிறதாலே எனக்கு ஒரு குறைவும் இல்லே..!!

ஆயிரம் பெரியார் வந்தாலும் திருத்த முடியாது - ஆமாம்.. ஆனால் கண்டிப்பா (நிஜ) பெரியார் இப்போ தேவை.. அது பிரமணர்களை எதிர்த்து அல்ல... பிராமண எதிர்ப்பு என்ற பெயரில் சகல சலுகைகளையும் அனுபவித்துக் கொண்டு எல்லாவற்றையும் திசை திருப்பும் கயவர்களை எதிர்த்து..!

சன்னாசி said...

சங்கமித்ரன்: உங்களது தவறான அர்த்தங்கற்பிப்பு பற்றி இந்த விளக்கம்.... இனிமேலும் இந்தப் பதிவில் இதுகுறித்த விவாதங்களுக்குப் பதில் எழுதுவது சரியாகப் படவில்லை, இதுவே கடைசியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

//ராகவன் என்ற ஒரு அய்யங்கார் விடுத்த தவறான அறைகூவலுக்கு எதிர்வினையாக தலைக்கேறிய பார்ப்பன வெறுப்பில் பாப்பானை வாலைக் குழைக்கும் நாயுடன் ஒப்பிடுகிறார். இதைப் பற்றி இங்கு பேசிய ஒருவரும் வாய் திறப்பதில்லை. இந்த லட்சணத்தில் வலைப்பூக்களில் பார்ப்பன துவேஷம் புழங்கவில்லையாம்! வேறு சாதிக்காரனை இப்படிக் கூற முடியுமா என்றெல்லாம் நான் கேட்க வரவில்லை. எதிலும் பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதவர் என்று உற்று நோக்கும் நசிவு மனப்பான்மை பல சமயங்களில் ஒரு சாராரால் ஊக்குவிக்கப்படுவது வலைப்பதிவுகளில் பெருமளவு நடந்து கொண்டு தான் இருக்கிறது என்பது கண்கூடு.//

இந்தமாதிரிப் பின்னூட்டங்களில் தவறாகப் புரிந்துகொள்ளப்படும் அபாயம் இருப்பதாலேயே இதுவரை எதையும் எழுதியதில்லை; சங்கமித்ரன் - தலைக்கேறிய பார்ப்பன வெறுப்பு என்னிடமில்லை என்பதை நான் நிரூபிக்க வேண்டுமா? இங்கே எழுதியதில்

//ராகவன் என்ற ஒரு அய்யங்கார் விடுத்த தவறான அறைகூவலுக்கு எதிர்வினையாக தலைக்கேறிய பார்ப்பன வெறுப்பில் பாப்பானை வாலைக் குழைக்கும் நாயுடன் ஒப்பிடுகிறார்.//

என்று நீங்கள் கூறியிருக்கும் அர்த்தத்தில் அல்ல. எந்த non-white நாயும் உள்ளே வரமுடியாது என்ற அர்த்தத்தில். ஜாட்டான்/பிராமணன் என்று பிரித்தது நானல்ல. உடனே non-white களை நாய் என்று எப்படிக் கூறலாம் என்று கேட்காதீர்கள். Please don't read in between the lines. மேலும், நானும்தான் தமிழ்நாடு என்னும் பிரதேசத்தில் இருபத்தைந்து வருடங்கள் வசித்திருக்கிறேன், ஜாட்டான் என்ற வார்த்தையை அவ்வளவு காலத்திலும் கேட்டிராதது பெரும்பாலும் என் அறிவீனத்தால், கவனக்குறைவால் இருக்கலாம். 'எவனும் நுழையமுடியாது' என்று நான் எழுதநினைத்ததை, சமீபகால ஜாட்டான்/பிராமணன் என்று பிரித்ததை நினைவில்கொண்டு, இரண்டு வெண்ணைகளில் எந்த வெண்ணையும் உள்ளே வர/பிழைக்கமுடியாது என்றுதான் எழுதினேன். இதில் பிராமணனை மட்டும் நாய் என்று நான் திட்டுவதாக உங்களுக்குப் படுவது துர்ப்பாக்கியமே. நான் இவ்வளவு எழுதியதைப் படித்தும் எப்படி இப்படிக் கேட்கிறீர்கள் என்று நியாயங்கேட்கப்போவதில்லை. அப்படி நினைத்து எழுதவில்லை - அவ்வளவு தான்.

எனது மிக நெருங்கிய நண்பர்களில் எத்தனையோ பிராமணர்கள் உண்டு. இப்போதுள்ள சூழ்நிலையில் எனக்கு பிராமண நண்பர்களும் உள்ளார்கள், இடைச்சாதி நண்பர்களும் உள்ளார்கள், தாழ்த்தப்பட்ட நண்பர்களும் உள்ளார்கள் என்று உண்மையைக் கூறுவதுகூட தேய்த்து நெளிக்கப்பட்ட க்ளிஷேவாகத்தான் தெரியும். வேறு ஜாதிகுறித்துச் சொல்லமுடியுமா என்று கேட்கமாட்டேன் என்ற கேடயம் எதற்கு? ஆதிக்க/அராஜக ஜாதி எதுவாக இருந்தாலும் - இத்தனை முறை ஜாதியைத் திரும்பத் திரும்ப யார் சொல்லியிருந்தாலும் இதைத்தான் கேட்டிருப்பேன் - பிராமணராயிருந்தாலென்ன, தேவர், வன்னியர் நாடார் நாயக்கர் முதலி செட்டி ஆசாரி பிள்ளை - ஏன், ஒருகாலத்தில் நசுக்கப்பட்டவர்களாயிருந்து தற்போது ஆதிக்கஜாதியாயிருந்து தன் ஜாதிப் பேரைச்சொல்லி நான் தலைவெட்டி, நான் பதில் தலைவெட்டி என்று பீற்றிக் குதித்துக்கொண்டிருந்தாலும் கூடத்தான். இதுமாதிரிப் பின்னூட்டங்களில், இதுமாதிரி "நீ பிராமண விரோதி" என்று வைக்கப்படும் விமர்சனங்களுக்குப் பதிலாக, "நான் அங்கே அதைச் சொன்னேன் பாருங்கள் இங்கே இதைச் சொன்னேன் பாருங்கள்" என்று சுட்டிக்காட்டி, பிறப்பால் பிராமணர் என்ற காரணத்துக்காகவே தாக்குவது தவறு என்று நான் எழுதியவற்றைத் தேடிப் பட்டியலிட்டு எனது கருத்தை நிறுவ முயற்சிப்பதும் நியாயப்படுத்த முயல்வதும் என் 'புனிதத்தை' நிறுவமுயல்வதும் எனக்கு மிகவும் கூசவைக்கும் விஷயம். இந்தக் குற்றச்சாட்டுக்கள் உண்மையில்லை என்பது எனக்குத் தெரியும், அதை நிரூபித்தாகவேண்டிய கட்டாயம் எனக்கு இல்லை - நம்புவதும் நம்பாததும் அவரவர் இஷ்டம். இதற்காகச் சுட்டிகளைத் தேடி, 'அங்கே பிராமணனுக்கு ஆதரவாகப் பேசியிருக்கிறேன், இங்கே தாழ்த்தப்பட்டவனுக்கு ஆதரவாகப் பேசியிருக்கிறேன்' என்று சொல்லி purgatoryக்குள் குதிப்பது என்னளவில் அவசியமானதாகப் படவில்லை.

சரி, அடுத்து, நாமத்தைப் பார்த்தாலே கோடாலியை இறக்கும் பார்ப்பன எதிர்ப்பு வெறியன் என்று என் நெற்றியில் ஒரு சீல் அடிப்பதற்குமுன், எங்கே என்ன எழுதினேன் என்றெல்லாம் காட்டி எனக்குத் தனிப்பட்ட ஒரு ஜாதி மீது துவேஷம் கிடையாது - நான் எழுதியதையெல்லாம் சிரத்தை எடுத்துத் தேடி உங்களுக்குச் சுட்டிகளாகக் கொடுக்கலாம்; இவ்வளவு நாள் வலைப்பதிவு அரசியலைப் பார்த்ததில், அடுத்து என்ன நடக்கும் என்று சொல்கிறேன். எழுதிய விஷயங்களுடன் சேர்த்து என் பெயர், ஊர், வேலை, ஜாதி, தனிப்பட்ட பழக்கவழக்கங்கள் தெரியவந்தால், உதாரணத்துக்கு கீழ்க்காணும் சாத்தியப்பாடுகளில், இந்த விஷயத்தில் ஊறிய ஜாதி டேட்டாபேஸ் விற்பன்னர்களால் எப்படி திரிக்கப்பட்டு ஜல்லி அடிக்கப்படும் என்று கீழே பாருங்கள்:

யாராவது பிராமணர் தன் ஜாதிப் பெருமையைச் சொல்லி ஏன் குதிக்கிறார் என்று கேட்டிருப்பின்...
நான் பிராமணனாக இருப்பின்: தன் இனத்துமேலேயே காறித் துப்பும் குலத்தைக் கெடுக்க வந்த கோடாலிக் காம்பு
பிற உயர்சாதி/இடைச்சாதியாக இருப்பின்: பார்ப்பானுக்கு இரண்டு உதை பறையனுக்கு இரண்டு உதை என்று விட்டு நடுவில் குளிர்காயும் பொறுக்கி ஓநாய்
தாழ்த்தப்பட்டவனாக இருப்பின்: எதற்கெடுத்தாலும் வள் வள்ளென்று குரைத்துக் கடிக்கும் மிருகஜென்மம்

யாரேனும் தாழ்த்தப்பட்டவர் தன் ஜாதிப் பெருமையைச் சொல்லி ஏன் குதிக்கிறார் என்று கேட்டிருப்பின்...
நான் பிராமணனாக இருப்பின்: பாப்பாரக் கம்மனாட்டி, இந்தக் கொழுப்பை நசுக்கவேணாமா முதல்ல...
பிற உயர்சாதி/இடைச்சாதியாக இருப்பின்: திருட்டு நாய், பிராமணன் காலை நக்கறவரைக்கும் நக்கவேண்டியது, இங்கே வந்து நம்மை மிதிக்கவேண்டியது
தாழ்த்தப்பட்டவனாக இருப்பின்: பிறஜாதிகள் காலை நக்கிக்கொண்டு நம் குலத்தைக் கெடுக்க வந்த கோடாலிக் காம்பு.

யாரேனும் பிற உயர்சாதி/இடைச்சாதியைச் சார்ந்தவர் தன் ஜாதிப் பெருமையைச் சொல்லி ஏன் குதிக்கிறார் என்று கேட்டிருப்பின்...
நான் பிராமணனாக இருப்பின்: பாப்பாரக் கம்மனாட்டி
பிற உயர்சாதி/இடைச்சாதியாக இருப்பின்: மேல்சாதிகளையும் கீழ்சாதிகளையும் நக்கிட்டு நம்ம குலத்தைக் கெடுக்க வந்த கோடாலிக் காம்பு
தாழ்த்தப்பட்டவனாக இருப்பின்: பறக் கம்மனாட்டி

ஆக, அனைத்தும் ஒரு lose-lose situation, ஒருவகையில் பார்த்தால். இதில் பார்ப்பனர்/பார்ப்பனரல்லாதவர் என்ற நசிவு எங்கேயிருந்து வந்தது? தன் ஜாதியை மறைத்துவைத்துக்கொண்டு பிற ஜாதியைத் தாக்குகிறார்கள் என்று போகிறபோக்கில் மட்டையடி அடித்துவிட்டுப்போக, அதைவைத்து நான் மண்டைகாய்வதில்தான் முடியும். மற்றபடி நான் பாரதி மாதிரியோ கீரதி மாதிரியோ ஐடியலிஸ்ட்டோ வேறு எந்த இஸ்ட்டோ புஸ்ட்டோ கிடையாது - அனைவரும் செய்கிறார்களென்பதற்காக தன்னளவில் ஒப்புதலில்லாத விஷயத்தை, ஐயோ உலகமே இப்படித்தான் - நான்மட்டும் என்ன வேறு திசையில் போய்க் கிழிப்பது என்று நானும் செய்வது, எல்லோரும் தின்கிறார்களென்று நானும் நரகலைத் தின்பது போலத்தான் (இதை வைத்து அடுத்த ரவுண்டில் ஒரு சுழற்று சுழற்றலாம் யாராவது). இதில் "முழங்குவது" என்றிருக்கிறீர்கள் - என்னத்தை "முழங்கினேன்"? பின்னூட்டத்தில் நான் நான் நான் என்று இவ்வளவு நானை எழுதித்தள்ளி சுயவாக்குமூலம் கொடுக்கநேர்ந்த துர்ப்பாக்கியம் நிகழ்ந்ததுகுறித்த எரிச்சல்தான் இப்போது மிஞ்சியிருக்கிறது. இந்த இழவில் தலையைக் கொடுத்து நேரத்தைக் கொல்வதுதான் மிச்சம் - spin doctors தொடர்ந்து ஸ்பின்னித் தள்ளுங்கள்...

சுட்டிக்காட்டியதற்கு நன்றி. //இறுதியாக, மாண்டி கூறிய 'தனிப்பட்ட எந்த ஜாதி மேலும் எனக்கு துவேஷம் கிடையாது' என்ற அவரது கூற்றின் மீது எனக்கு நம்பிக்கை உண்டு.// நல்லது. நன்றி.

மு. சுந்தரமூர்த்தி said...

இது மாண்ட்ரீஸருக்கு (மின்னஞ்சல் அனுப்ப முடியாததால்),

இந்த வலைப்பதிவு உலகில் சஞ்சரிப்பது நாலைந்து மாதங்களாகத் தான். வலைப்பதிவர்களிலேயே signal/noise விகிதம் அதிகமாக இருப்பது உங்கள் பதிவுகளில். அப்படிப்பட்ட ஆள் நீர் எப்படி இங்கே வந்து மாட்டிக்கொண்டீர்?

உங்கள் எழுத்தை முதலில் படித்தது சுனாமிக்கடுத்து ரவிஸ்ரீநிவாஸின் ஒரு பதிவில் வைரமுத்துவை "பொத்தான் கவிஞர்" என்று குறிப்பிட்டிருந்ததைத் தான். அன்று முதல் உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றையும் (பல இடங்களில் பின்னூட்டங்களையும்) தவறாமல் படித்துவருகிறேன். புதிதாகத் தெரிந்துகொள்ளக் கூடிய விஷயகனம், வசீகரமான மொழி நடை மற்றும் சுய அடையாளங்கள், சுயவிளம்பரங்கள், சுயபச்சாதாபம் கலக்காத எழுத்து என்று பல காரணங்களுக்காக. பொதுவில் பிறரைப் புகழ்வது எனக்குப் பிடிக்காததும், புகழப்படுபவருக்கு கூச்சத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதற்காகவும் இதுபோன்று புகழுரை எழுதியதில்லை. ஏனோ இன்று எழுதத் தோன்றியது. உங்கள் வேலையை மட்டும் கவனியுங்கள்.

-/பெயரிலி. said...

/இந்த வலைப்பதிவு உலகில் சஞ்சரிப்பது நாலைந்து மாதங்களாகத் தான். வலைப்பதிவர்களிலேயே signal/noise விகிதம் அதிகமாக இருப்பது உங்கள் பதிவுகளில். அப்படிப்பட்ட ஆள் நீர் எப்படி இங்கே வந்து மாட்டிக்கொண்டீர்?/

இதுதான் நேற்றிரவு இப்பதிவைப் பார்க்கும்போது எனக்கும் தோன்றியது

Muthu said...

டோண்டு அவர்களே,
உங்கள் பதிவில் இருக்கும் உண்மை/யதார்த்தம் தெளிவாய்த் தெரிகிறது. நல்ல பதிவு.நன்றி.

பதிவுக்குச் சம்பந்தமில்லாமல் இது. வலைப்பதிவிலே இத்தனை மறுமொழி வந்ததை இப்போதுதான் பார்க்கிறேன். மறுமொழி அனைத்தையும் படிக்கவே அரைமணி நேரமாகிறது :-).

கலந்துரையாடல், வாதம் என இருவகை உண்டு.

கலந்துரையாடலில் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வார்கள், இருவருக்கும் பயனுண்டு. ஏனென்றால் நம்மைவிட்டுத் தள்ளி இருப்பதை புரிந்துகொள்ள முயற்சிப்பதுதான் அதன் நோக்கம்.

ஆனால், அடுத்த வகையான வாதத்தில் இரு தரப்பினரும் தாங்கள் உண்மை என நம்பியதை அல்லது தமக்குத் தேவையானதை நிலைநாட்ட முயற்சி செய்வர். அடுத்தவர் தரப்பில் இருக்கும் உண்மையைப் புரிந்துகொள்ள கொஞ்சமும் முயற்சி செய்ய மாட்டார்கள்.

இதைத் தவிர மூன்றாவது ஒன்றும் உண்டு. அது இந்த மாதிரி இடையில் வந்து இருவரிடமும் வாங்கிக்கட்டிக் கொள்வதுதான் வேறென்ன :-) :-) :-).

dondu(#11168674346665545885) said...

"நானும்தான் தமிழ்நாடு என்னும் பிரதேசத்தில் இருபத்தைந்து வருடங்கள் வசித்திருக்கிறேன், ஜாட்டான் என்ற வார்த்தையை அவ்வளவு காலத்திலும் கேட்டிராதது பெரும்பாலும் என் அறிவீனத்தால், கவனக்குறைவால் இருக்கலாம்."
சமீபத்தில் 1978 வாக்கில் குமுதத்தில் வந்தத் தொடர்கதை "மூன்று நகரங்கள்". அதை எழுதியது ரா.கி. ரங்கராஜன் அவர்கள். அதில் கடைசி அத்தியாயத்தில் வந்தது ஜாட்டான் என்றச் சொல். கதாநாயகனுக்கு வேலை போய் விடும். ஆனால் அவனுக்கு கல்ஃபில் வேலை கிடைத்து விடும். அதைச் சொல்ல வந்த அவன் காதலியின் தம்பி இவனிடம் கூறுகிறான்: "மாப்பிள்ளை உன் முதலாளி கிடக்கிறான் ஜாட்டான், உங்களுக்கு அதை விட அருமையான வேலை கிடைத்து விட்டது." இதன் பொருளாக நான் புரிந்து கொண்டது: "ஜாட்டான் என்றால் முட்டாப்பயல்". ரா.கி. ரங்கராஜனிடம் கேட்கலாம் தேவைப்பட்டால். ஆனால் ஒன்று ஜாட்டான் என்பவன் எந்த ஜாதியாகவும் இருக்கலாம். எல்லா ஜாதியிலும் எல்லாவகை மனிதர்கள் உள்ளனர். ஆகவே ஜாட்டான் / பாப்பான் என்பது பிரிவினை அல்ல.
"யாராவது பிராமணர் தன் ஜாதிப் பெருமையைச் சொல்லி ஏன் குதிக்கிறார் என்று கேட்டிருப்பின்...,நான் பிராமணனாக இருப்பின்: தன் இனத்துமேலேயே காறித் துப்பும் குலத்தைக் கெடுக்க வந்த கோடாலிக் காம்பு ...."
இம்மாதிரி மற்றவர்கள் இதை நினைப்பார்களோ அதை நினைப்பார்களோ என்றெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தால் வாழ முடியாது மாண்ட்ரீஸர் அவர்களே. வண்ணான், அவன் பிள்ளை, கழுதை மற்றும் ஊர்க்காரர்கள் கதைதான் ஆகும். நமக்குச் சரி என்பதைக் கூற நமக்கு என்னத் தயக்கம்.? இதுவும் நான் என் ஜாதியை வெளிப்படையாக அறிவித்து விட்டதற்கு ஒரு முக்கியக் காரணம் ஆகும். இது என் கருத்து மட்டுமே என்பதையும் கூறி விடுகிறேன். நான் எடுத்த இந்த நிலையால் எனக்கு ஏற்பட்ட, ஏற்படும் மற்றும் ஏற்படப்போகும் விளைவுகளையும் தலை நிமிர்ந்து ஏற்பேன். ஜாதி வெறி அல்ல, சுயமதிப்பு, அதில் நான் பிறந்த ஜாதியும் அடங்கும். அவரவருக்கு அவரவர் ஜாதி உயர்வுதான். வேரைப் பழிக்க முடியுமா?

"டொண்டு அய்யா சார்பாக பிராமனர் அல்லாத மாயவரத்தான் ஒருவர் ஏன் இங்கே பேசவரவில்லை? அதையாவது சொல்வீரா மாயவரத்தான் அவர்களே?"
ஐயா மூர்த்தி அவர்களே, என் பெயர் டோண்டு, என் காலை ஒடித்து என்னை டொண்டு ஆக்கிவிடாதீர்கள். மாயவரத்தான் எனக்கு ஆதரவாகத்தான் பின்னூட்டமிட்டிருக்கிறார். ஆனால் எனா, சிறிது அங்கலாய்ப்பாகக் கூறியிருக்கிறார். அந்த அங்கலாய்ப்பும் எனக்குச் சாதகமான அவர் எண்ணத்தைத்தான் பிரதிபலிக்கிறது.

விஸ்வாமித்ரா அவர்களே, நன்றி, நன்றி. இரண்டாம் நன்றி தமிழில் எழுதியதற்காக. நம் எண்ணங்கள் ஒரே அலைவரிசையில் உள்ளவை என்பதை மறக்கவே மாட்டேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

"எனக்கு என் ஜாதி உயர்வல்ல. அது தாழ்வு! ஜாதி இல்லாத மனிதனே முழு மனிதன்!! நான் வாழப்போகும் எஞ்சிய காலத்திலாவது முழு மனிதனாக மாற முயற்சி செய்கிறேன்!!!"
அவரவர் கருத்து அவரவருக்கு. போலியாகப் பேசத் தெரியாது எனக்கு.

"ஒரே அலைவரிசை மட்டும் இல்லைங்கண்ணா.. ஒரே ஜாதியும் கூட!!!"
எதற்கு இந்த வேண்டாத போலீஸ் வேலை? மற்றவர்கள் சாதியைப் பர்றி உங்களுக்கு என்னக் கவலை?

"அதனால இனிமே ஆரும் இன்ன சாதி.. இன்ன கொலம்னு வலைப்பூக்களில் எழுத வானாமுங்க.. நாம எல்லாரும் ஒன்னுகுள்ள ஒன்னா ஒருதா வயித்து புள்ளையளா கைகோர்த்து சகோதரமா இருப்போமுங்க.."
உலகத்தைத் திருத்தும் எண்ணத்துக்கு ஒரு ஓ.

அன்புடன்,
டோண்டு ராகவன்

மாயவரத்தான் said...

//ஒரே அலைவரிசை மட்டும் இல்லைங்கண்ணா.. ஒரே ஜாதியும் கூட!!!//

......
//பார்ப்பனர்.. பார்ப்பனர் அல்லாதவர்னு பிரிக்க வானாமுங்க.. //
.......
//அதனால இனிமே ஆரும் இன்ன சாதி.. இன்ன கொலம்னு வலைப்பூக்களில் எழுத வானாமுங்க..//

:) :) :) இன்னபா இது... கொஞ்ச நேரத்திலே ஞானம் வந்திருச்சா? இல்லாட்டி ஊருக்குதான் உபதேசமா?

dondu(#11168674346665545885) said...

"விஸ்வாமித்ரா, சங்கமித்ரன், மாயவரத்தான், டொண்டு அய்யா இந்த நால்வரும் யார்? இங்கே ஒருவருக்கொருவர் ஆதரவுக் குரல் கொடுக்க என்ன காரணம்? புரிகிற மாதிரி இருக்குமே! இத இத இதத்தான் நான் எதிர்க்கிறேன். ஏன் ஒன்று சேர்ந்தீர்கள்."
என்னை ஆதரிப்பவர் எல்லாம் பார்ப்பனர் என்றால், எதிர்ப்பவர் எல்லாம் பார்ப்பனரில்லாதவரா? இது என்ன வேண்டாத ஆராய்ச்சி? கருத்து ஒத்துப் போகிறது ஆதரிக்கிறார்கள். ஒத்துப் போகவில்லையென்றால் எதிர்க்கிறார்கள். அப்போது பார்ப்பனரில்லாதவர் ஆகிவிடுவார்களா? திங்கள், புதன், வெள்ளியன்று பார்ப்பனர்கள், செவ்வாய், வியாழன் மற்றும் சனியன்று பார்ப்பனல்லாதவர்கள். ஞாயிறன்று விடுமுறை, அப்படியா? எப்போது கிறிஸ்துவர் மற்றும் முஸ்லிம் ஆவது? நீங்கள் என்ன மாரல் போலீஸா? உங்கள் நம்பிக்கை நீங்கள் செய்ய வேண்டியக் காரியத்தைக் கட்டுபடுத்தலாம், மற்றவர்கள் தங்களைப் பார்த்துக் கொள்வார்கள். அப்படித்தான் வெட்டியாக கமல் பதிவில் அதுவும் முகமூடி போட்டுக் கொண்டு வந்து ரகளை செய்தீர்கள். கமல் பார்ப்பன விரோதி என்றுத் தன்னை சொல்லிக்கொள்பவர், பார்ப்பன ஆதராவளர்கள் அதற்கே அவரை எதிர்ப்பார்கள் என்பதைக் காதில் போட்டுக் கொள்ளாமலே கூத்தடித்தீர்கள். இங்கு நான் கழுத்தில் கொட்டை, நெத்தியில் பட்டை போட்டுக் கொண்டிருப்பவன் என்றெல்லாம் இல்லாத நண்பரை கோட் செய்து நான் அதைத் தவறு என்று நிரூபித்தப் பின்னரும் அதை சௌகரியமாக மறைத்து மேலும் மேலும் பேச, நான் பிடிவாதமாக உங்களுக்கு கடிவாளம் போட்டபின் வேண்டா வெறுப்பாக நீங்கள் கூறியது தவறு என்று ஒத்துக் கொண்டீர்கள்.

"ஊருக்கு உபதேசம் செய்யும் அளவுக்கு இன்னும் எனக்கு ஞானம் வரவில்லை."
பின் ஏன் இந்த முயற்சி? வேறு வேலையில்லையா? நீங்கள் செய்யும் வேலைக்கு விஜிலேன்டிஸம் என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். தன்னை நாட்டாமையாக நினைத்துக் கொள்வது என்று தமிழில் கூறலாம். மற்றவர்கள் செயலை லென்ஸ் போட்டு பார்ப்பதை விடுங்கள்.

"அன்றைக்கு நான் என்ன சொன்னேன்? நீதிமன்றம் என ஒன்று இருக்கிறது.. அது பார்த்து விசாரித்து நல்லது கெட்டது என தீர்ப்பு சொல்லும்.. நீதிமன்ற விசாரணணக்கு தலை வணங்குகிறேன் என்றேன்! வேற யாராவது அப்படிச் சொன்னவர் உண்டா இவ்வலைப்பூ உலகத்தில்?! இதுதானய்யா நடுநிலைமை!"
அப்போதையப் பதிவுகளைப் போய் பாருங்கள். நீதி மன்றம் பார்த்துக் கொள்ளும் என்று அருண் வைத்தியனாதன் சொன்னார், நானும் அதே கருத்தைப் பின்னூட்டமிட்டேன். தேவையானல் அந்த நேரத்து ஆர்கைவ்ஸுகளைப் பார்த்தாலும் இன்னும் பல பெயர்கள் கிடைக்கும். என்னவோ இவர் ஒருவர்தான் சொன்னாராம். விட்டால் நேருவுக்கு பஞ்சசீலக் கொள்கையையே நீங்கள்தான் சொல்லிக் கொடுத்ததாகக் கூறிவிடுவீர்கள் போலிருக்கிறதே.

நான் ஏன் என் சாதிப் பெயரை வெளியிட்டேன் என்பதற்கு ஒன்பது பாயிண்டுகளுடன் கூடிய பதிவையிட்டேன். அதைப் பற்றி ஒரு வார்த்தையில்லை. இப்போது சின்னச் சின்ன விஷயங்களை பிடித்துக் கொண்டுத் தொங்குகிறீர்கள்!.

"எங்கோ ஒரு பிராமணர் கூக்குரல் இட்டால் மட்டும் நீங்கள் ஓடிவருவீர்கள். நான் அப்படியல்ல... எங்கே யார் கூக்குரலிட்டாலும் ஓடிவருவேன்! இதுதானய்யா உங்களுக்கும் எனக்குமுள்ள வித்தியாசம்!"
இந்த ஒரு வித்தியாசம்தானா? மீதி ஐந்து வித்தியாசங்கள் எங்கே?

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

"டோண்டு தான் தமிழ் வழிக் கல்விக்கு ஆதரவாளன் என்பார், அதே சமயம் அன்புமணி செய்தது புத்திசாலித்தனம் என்பார். இது எப்படி என்று விஸ்வாமித்ராவும்,மாயவரத்தானுமா கேட்பார்கள்."

ஏன் கேட்க வேண்டும் விசிதா அவர்களே? நான் ப்ராக்டிகல் என்று கூறியது அவர் பிள்ளைகளின் நலனை மனதில் வைத்துக் கொண்டுதான். பாவம் அப்பிள்ளைகளும் வாழ்வில் முன்னேறி மு.க. அவர்கள் பேரன் போல் இந்தி கற்றுக் கொண்டு மந்திரிகள் ஆக வேண்டாமா? இதை மேற்கோள் காட்டி பா.ம.காவின் இரட்டை நிலையைக் காண்பிப்பதுதானே பதிவின் நோக்கம்? அதனுடன் ஒத்துப் போகிறவர்கள் இக்கேள்வியை ஏன் கேட்க வேண்டும்?

விசிதா அவர்களே, ராஜாஜியின் புதியக் கல்வித் திட்டத்தைப் பற்றி நான் எழுதியதற்கு உங்கள் கருத்தைத் தெரிவிக்கவில்லையே? ம்யூஸ் மற்றும் குழலி தங்கள் மனமாற்றத்தை தெரியப்படுத்தினார்கள். நீங்கள்? அக்கல்வித் திட்டத்தைப் பற்றி இப்போது உங்கள் கருத்து என்ன?
அன்புடன்,
டோண்டு ராகவன்

மாயவரத்தான் said...

//கறுப்பி, தங்கமணி, சுந்தரவடிவேல், ரோசாவசந்த், பெயரிலி, மூக்கன் இப்படி ஒரு பெரிய கூட்டமே பிராமணீயத்தை எதிர்க்கிறதாம்!
நான் எவ்வளவோ அவரிடத்தில் எடுத்துச் சொல்லியும் அமெரிக்காவைப் பார்..//

அப்படி இல்லை என்பதற்கு நீங்கள் என்னென்ன காரணங்கள் சொன்னீர்கள் என்று கொஞ்ஜம் விளக்கினால் நன்றாக இருக்கும் அண்ணா..!

மாயவரத்தான் said...

//ரஜனி ரசிகர்களில் ஒருவர்.தினமலர் அந்துமணி போன்றவர். அவரது தரம் அவ்வளவுதான்.//
தரத்தை பத்தி யார் யார் பேசுரதுன்னு வர வர விவஸ்தையே இல்லாம போயிடிச்சி!

dondu(#11168674346665545885) said...

மற்ற எல்லோரும் சாதி சார்பாகப் பேசுகின்றனர் நீங்களாகவே அனுமானம் செய்து கொள்கிறீர்கள். மற்றவர்கள் என்னக் கூறப் புகுந்தாலும் அவரது கருத்தைப் பார்க்காது சாதியைத் தேடுகிறீர்கள். நடத்துங்கள்.

நல்ல தமாஷுக்கு நன்றி. நூறாவது பின்னூடமாக எனது பின்னூட்டம் இருக்க வழி செய்ச்ததற்கும்தான்

அன்புடன்,
டோண்டு ராகவன்

மாயவரத்தான் said...

ராமதஸ் ஊருக்கு உபதேசம் செய்வாராம்.. ஆனால் தனது மகன் தமிழ் மொழியை மதிக்கத் தவறினால் அதை கண்டு கொள்ள மாட்டாராம்.. மரம் வெட்டுவாராம்.. அதை கண்டிப்பவர்கள் முட்டாள்களாம். என்ன பார்வையா இது! நான் ரஜினி ரசிகன் என்பதினால் ரமதாஸை எதிர்கிறேனாம். நல்ல கட்டுக் கதை.... பா.ம.க. ஜாதிக் கட்சியில்லை என்பார்கள். அதை ஆமாம் என்று சொல்லுவீர்கள். மதசார்பற்ற அரசியல் கூட்டணி என்று சொல்லிக் கொண்டு பல சிறுபான்மையின ஜாதி, மத கட்சிகளை கூட்டணியில் சேர்த்துக் கொள்வதற்கும் இதே மாதிரி சொல்வதற்கும் என்ன வித்தியாசம். போன வார குமுதம் இதழில் பாப்பாரப்பட்டி தேர்தல் குறித்து ஒரு கட்டுரை வெளியாகியிருக்கிறது. அதற்கு தொண்டை கிழிய ஜாதி இல்லை என்று சொல்பவர்கள் என்ன குரல் கொடுத்தீர்கள்?! உங்களுக்கு என்றால் ஒரு கண்ணில் வெண்ணை, மறு கண்ணில் சுண்ணாம்பா? மதன், அந்துமணி எல்லோரும் உங்களுக்கு முட்டாள்களாகத் தான் தெரிவார்கள்.! இதற்கு நான் காரணம் கூறட்டுமா? பார்வையில் கோளாரை வைத்துக் கொண்டு அடுத்தவரை விமரிசனம் செய்யாதீர்கள்.

dondu(#11168674346665545885) said...

"1.தந்தை மற்றும் தாய்க்குத் திதி கொடுக்கும்போது பிராமண சின்னங்கள் அணிவேன்.//
இப்பக்கூட நீங்க சொன்னதை நீங்களே ஒத்துக்க மாட்றீரே? நீங்க சுத்த அக்மார்க் ஒன்னாம் நம்பர் ஜாதி வெறியர் அய்யா!"
வருடத்துக்கு அன்னைக்கு ஒன்று, தந்தைக்கு ஒன்று என இரு நாள் திதி கொடுக்கும்போது திருமண் இட்டுக் கொண்டால் உமக்கு நான் ஜாதி வெறியனா? என்ன சிறுபிள்ளைத்தனமான வாதம்?

"கழுத்தில் கொட்டையோடும் நெற்றியில் பட்டையோடும் பூணூல் போன்ற இத்யாதிகளோடும், "அவா" க்களுக்கே உரித்தான வேஷ்டிக் கட்டோடும் இருக்கிறார்! இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அவரை அவரின் ஜாதி வெறியில் இருந்து வெளிக்கொணர முடியாது!!!"
"அவர் என்னிடத்தில் சொன்னது உண்மை. இன்னும் ஒரு கோடி ஆண்டு ஆனாலும் உம்மை திருத்தவே முடியாது என்று என்னிடத்தில் சத்தியம் செய்து சொன்னார் அவர்!!!"
"எத்தனையோ ஆண்டு" என்பது "ஒரு கோடி" ஆண்டானது; முக்கியமாக கழுத்தில் கொட்டை, நெற்றியில் பட்டை எங்கே? இப்படி பொய்சத்தியம் செய்தவர் மனிதரேயில்லை. அவர் உங்கள் கற்பனைப் பாத்திரமாக இருந்தாலும். கொட்டை, பட்டை தவறு, அதை சத்தியம் செய்தார் என்று கூறி நீங்கள் கற்பனை நண்பரை இவ்வளவு கேவலமாக ஆக்கி விட்டிர்கள். இதுதான் நீங்கள் நட்பு காக்கும் லட்சணம்!!!

"அந்த இரட்டைத் தம்ளர் முறையை யார் அறிமுகப் படுத்தியது என்பதை அறிவீரா பெரியவரே?"
கண்டிப்பாகப் பார்ப்பனர்கள் இல்லை. மற்ற மேல்சாதிக்காரர்கள்தான், இப்போது அதைச் செயல்படுத்துவதும் அவர்கள்தான். போனது போகட்டும். இம்மாதிரி வெட்டித்தனமாகப் பழைய கதை பேசுவதை விட அதை நீக்க என்ன முயற்சி செய்யலாம் என்பதைப் பாருங்கள்.

"ஜாதியைப் பிடித்துக் கொண்டிருப்பது தாங்கள்தான் நானல்ல!! தங்களின் ஒவ்வொரு கேள்விக்கும் மிக அருமையாக பதில் சொல்லிக் கொண்டு உள்ளேன்!"
அதை மற்றவர்கள் கூற வேண்டும் ஐயா,. இங்கு எல்லோரும் உங்களைக் கோமாளியாகத்தான் பார்க்கிறார்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

மாயவரத்தான் said...

//ராமதாசையும் விமர்சிப்பேன், ரஜனியையும் விமர்சிப்பேன்.உங்களால் அது முடியாது.//


பேசுவேன் என்ற வாய்ச்சவடால் வேண்டாம்.. பேசிக் காட்டுங்கள் தைரியமாக..! சொல்வது யார்க்கும் எளிய அறியவாம்..!!

கட் அவுட்டுக்கு மரத்தை பயன் படுத்துவதையும், பல மரங்களை போராட்டம் என்ற பெயரில் வெட்டி வீழ்த்தியதையும் ஒப்பிட்டதிலிருந்தே உங்களின் அறிவுத்திறன் (?!) விளங்கி விட்டது. உங்களுடன் விவாதித்து பயனில்லை!

மாயவரத்தான் said...

பா.ஜ.க. மதவாதக் கட்சி என்றல், பா.ம.க. ஜாதிவாதக் கட்சி தான்..! பா.ம.க.விற்கு முன்பு ஒரு தலித் மக்களவை உறுப்பினராக்கினார்கள் என்றெல்லாம் சப்பைக்கட்டு கட்டினீர்களேயானால்.. பா.ஜ.க.விலும் அதே போல இருக்கிறதே..! நக்வி போன்ற முஸ்லீம் சமூகத்தவர்கள் இருக்கிறார்களே.. உங்கள் பார்வையில் அப்படிப் பார்த்தால் பா.ஜ.க. ஒரு சமுக, சமுதாயத்துவ கட்சி என்பதையும் ஒப்பு கொள்ளுங்கள்! நீங்கள் ஒப்புக் கொள்ளவிலையென்றாலும் உண்மை அது தான் என்பது வேறு விஷயம்..!

மாயவரத்தான் said...

பெயரிலி ஸார்.. சந்தடி சாக்கில் ரெண்டு பேரையும் 'கரி'ன்னு சொல்றீங்களே :)

-/பெயரிலி. said...

கரியென்றால் என்ன பிரச்சனை? தலீவர் ரஜனியே கடிதென கரிதானே? ;-)
"கறுப்புத்தான் எனக்குப் பிடிச்ச கலரூ" அப்டீன்னு சுட்டினால், "போனாப்போகுது நாம வெள்ளைக்காரங்க கறுப்பையும் சமமுன்னு சேத்துக்குறோம்" என்கிற ரேஞ்சில பெர்ய மனுஷாள் ஆகிடலாம் பாருங்க ;-)

dondu(#11168674346665545885) said...

பெயரிலி அவர்களே, உங்கள் கருத்தையிட உங்களுக்கு முழு உரிமை உண்டு. ஆனால் சுட்டி? ஏதேதோ கன்ஃபிகரேஷஙள் எல்லாம் என்னிடம் கேட்கிறது.
நீங்கள் கூற நினைத்தக் கருத்து இங்கு நகலெடுத்து ஒட்டியிருக்கிறேன். உங்கள் பின்னூட்டத்தை நீக்கியுள்ளேன். தயவு செய்து புரிந்து கொள்ளவும். நன்றி.

பெயரிலி அவர்களின் கமென்ட்:
பென்சில் காரியம் அடுப்புக்கரியைப் பார்த்து, "அட்டைக்கறுப்பு நீ" என்றதாம்.
நன்றி பெயரிலி அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்

-/பெயரிலி. said...

டோண்டூ அய்யா, அதுக்கென்ன புரிஞ்சுக்கிட்டாப்போச்சூ!
நன்றி.

dondu(#11168674346665545885) said...

பெயரிலி அவர்களே, உங்கள் கருத்தையிட உங்களுக்கு முழு உரிமை உண்டு. ஆனால் சுட்டி? ஏதேதோ கன்ஃபிகரேஷஙள் எல்லாம் என்னிடம் கேட்கிறது.
நீங்கள் கூற நினைத்தக் கருத்து இங்கு நகலெடுத்து ஒட்டியிருக்கிறேன். உங்கள் பின்னூட்டத்தை நீக்கியுள்ளேன். தயவு செய்து புரிந்து கொள்ளவும். நன்றி.

பெயரிலி அவர்களின் கமென்ட்:
/அதை மற்றவர்கள் கூற வேண்டும் ஐயா,. இங்கு எல்லோரும் உங்களைக் கோமாளியாகத்தான் பார்க்கிறார்கள்./
பென்சில் காரியம் அடுப்புக்கரியைப் பார்த்து, "அட்டைக்கறுப்பு நீ" என்றதாம்.
# போஸ்டெட் பை -/பெயரிலி. : 8:16 PM
நன்றி பெயரிலி அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

பெயரிலி அவர்களே நான் உங்களுக்கு ஒரு சிறு விளக்கம் தர வேண்டியிருக்கிறது. உங்கள் கருத்து சுவையானது. சுட்டியும் சரியானதாகத்தான் இருந்திருக்க வேண்டும். ஆனால் அதை நான் சுட்டியவுடன் மளவென்று திரைகள் வந்து போயின. பிறகு என் ஆப்ஷன் கேட்கப் பட்டது. புரியாத நிரலிகளைக் கண்டால் எனக்கு பயம். ஆகவே அவசர அவசரமாக பின்னூட்டத்தை நீக்கினேன். ஆனால் உங்கள் கருத்தை என் பின்னூட்டத்தில் தேவையான விளக்கங்களுடன் இட்டேன் அதன் பிறகு பார்த்தால், நீங்கள் நான் எழுதிய வரியை கோட் செய்து உங்கள் பின்னூட்டமிட்டிருந்தீர்கள். அதை சேர்க்க மறந்து விட்டேன். போட்டேன் இன்னொரு பின்னூட்டம். எல்லாம் ஓரிரு நிமிடங்களில் நடந்தன. உங்கள் புரிதலுக்கு மிக்க நன்றி. எப்போதாவது கணினியில் இம்மாதிரியெல்லாம் வேகமாக செயலிட்டு என்னை நானே வியப்பிலாழ்த்திக் கொள்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்

மாயவரத்தான் said...

மீண்டும் மீண்டும் சப்பைக்கட்டு கட்ட வேண்டாம்.. போராட்டம் என்ற பெயரில் அநியாயமாக மரத்தை வெட்டிப் போட்டதையும் வீடு கட்ட மரங்கலாஇ உபயோகிப்பதையும் ஒன்றாக்குவது மடத்தனத்திலும் மடத்தனம்! இதைப்பற்றி பேசும் போது இது சம்பந்தமாக மட்டும் பேசவும்.. உடனே ரஜினி, டிக்கெட் என்றெல்லாம் 'தாவ' வேண்டாம்..!

dondu(#11168674346665545885) said...

மூர்த்தி அவர்களே, நீங்கள் முதலில் கூறியது:
"நானிருக்கும் நாடு இன்னபிற காரணங்களால் புலால் உண்ணுகிறேன். வேத, ஆகமங்களுக்கு அஞ்சி எல்லாம் என் புலால் உண்ணலை நான் கைவிடவில்லை. ஆனாலும் அதற்கு நான் அடிமை இல்லை. என்றாவது ஒருநாள் எனக்கு(ம்) சமைத்துப் போட ஆள்வரும்போது மீண்டும் சைவமாக மாற நேரலாம்!

இப்போது கூறுவது:
"நீ தலித்தில் பெண் கட்டுவாயா என்றார்கள் என்னைப் பார்த்து! நான் அவர்களிடத்தில் சொன்னேன்... சத்தியமாகக் கட்டுவேன்.. அதற்கு முன் என் மனைவி அனுமதி தேவை!"

அதற்குள் கல்யாணமும் ஆகி மனைவியும் அலுத்து விட்டாரா? அவர் அனுமதித்தால் தலித் பெண்ணைக் கட்டுவீர்களா? அப்படியெல்லாம் வேறு ஆசை உள்ளதா? சென்னை வரும்போது உங்கள் "நண்பருடன்" வந்து என்னைப் பார்ப்பீர்கள் அல்லவா? அப்போது உங்கள் மனைவியையும் கூட அழைத்து வாருங்கள். அவரிடம் உங்களுக்காகப் பேசி அனுமதி வாங்கித் தருகிறேன்.

"திருந்துங்கய்யா!... திருத்துங்கய்யா!!.. திருந்த விடுங்கய்யா!!!"
முதலில் நீங்கள் திருந்துங்கள், இம்மாதிரியெல்லாம் எழுதி, கோமாளி என்னும் பட்டத்தை மறுபடி மறுபடி நிரூபிக்காதீர்கள். அடப் போங்க சார், காலை நேரத்தில் இந்த ஜோக்கெல்லாம் தாங்காது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

மாயவரத்தான் said...

//இஸ்கோலுல படிச்ச அல்லா புத்தகத்திலும் இரட்டைத் தம்ளர் முறையை யார் அறிமுகப் படுத்தினார் எனப் படித்திருக்கிறேன்//

hahah good joke.. Can u SHOW / Scan that book?! In which book it shows like that?! Poi sonnalum porundha sollungappa

dondu(#11168674346665545885) said...

"சென்னை வரும்போது அந்த குறிப்பிட்ட "நண்பரை" உங்களைப் பார்க்க அழைத்து வரமாட்டேன். காரணம் இப்பிரச்னைக்குப்பின் தமது பெயரைச் சொல்ல வேண்டாம் என மன்றாடினார்!"
அதானே, கொட்டை, பட்டையைப் பற்றி விளக்கமா கொடுக்க முடியும் அவரால்? அவரை கடித்தெல்லாம் தின்றுவிட மாட்டேன், வெறுமனே அந்தக் கற்பனைப் பிறவியை போட்டோ எடுத்துவைத்து கொள்ள ஆசை.

என்னிடம் சரியாகத்தான் சொன்னார்கள், மூர்த்தியை சீண்டி விட்டால், பின்னூட்டங்களின் எண்ணிக்கை விஷம் போல ஏறும் என்று. மிக்க நன்றி மூர்த்தி அவர்களே. எல்லோருக்கும் நன்றாகப் பொழுது போயிற்று. என்னுடைய நெடுநாள் ஆசை தீர்ந்தது. பின்னொரு பதிவுக்குப் பின்னூட்டங்கள் தேவைப் பட்டால் நிச்சயம் உங்களை மறக்க மாட்டேன். மற்றவர்களுக்கும் சிபாரிசு செய்கிறேன். ஏதோ உங்களால் ஆன சேவையை செய்து விட்டுப் போங்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

-L-L-D-a-s-u said...

சிவாஜி சரி .. சிவாஜிக்கடுத்து முத்துராமன், அடுத்து பிரபு, கார்த்திக் என்று ஒருவர் கூறினால் என்ன நீனைப்பீர்கள் ... வெங்கடேஸ் கமலை சிலாகித்ததில் ஒன்றும் குறைகூற முடியாது .. ஆனால் சொன்னார் பாருங்கள் ஒரு வரிசை..கமல்.. அ.சாமி ..விக்ரம், மாதவன், சூர்யா.. என கூறியிருந்தாலாவது பரவாயில்லை ..

மூர்த்தி.. டோண்டு எப்படியிருந்தாலும் எனக்கும் மற்றோர்க்கும் கவலை இல்லை. அவர் நம்து தலைவரும் இல்லை வழிகாட்டியும் இல்லை .. ஆனால நம் மக்களின் தலைவர் ஒருவரின் சுயநலத்தின் / இரட்டை வேடத்தை துகிலுரிக்காமல் டோண்டு மேல் concentrate பண்ணியது என்னை போன்றோர்க்கு ஏமாற்ற்ம்தான் .

aathirai said...

அந்த இரட்டைத் தம்ளர் முறையை யார் அறிமுகப் படுத்தியது என்பதை அறிவீரா பெரியவரே?"
கண்டிப்பாகப் பார்ப்பனர்கள் இல்லை. மற்ற மேல்சாதிக்காரர்கள்தான், இப்போது அதைச் செயல்படுத்துவதும் அவர்கள்தான். போனது போகட்டும்.



டோ ண்டு அவர்களே பிராமணாள் ஆத்தில் இரட்டை கப் முறை உள்ளதைப் பற்றி நான் கேட்டபோது
'என் வீட்டில் இல்லை' என்றுதான் சொன்னீர்கள். உங்கள் சொந்தக்காரர்கள் வீட்டில் இல்லை என்று
சொல்லவில்லை.

படித்தவர்கள் வீட்டிலேயே இப்படி என்றால், கிராமப்புறத்து சாதிகள் எப்படி இருக்கும். அவர்களுக்கு இந்த
அளவிற்கு விஷத்தை ஏற்றியவர்கள் யார்.?

எல்லோரும் ஒரு நாள் கும்பகோணத்தில் முழுக்கு போடுவார்கள். சங்கராச்சாரி மட்டும் ஒரு நாள்
முன்னாடியே வந்து முழுக்கு போடுவார். ஏன்? தலித்துகள் கோயிலில் அர்ச்சகராக வேண்டுமென்பதை
எதிர்ப்பவர்கள் யார்?

முழு பூசணிக்காயை சோத்தில் மறைக்கலாம் பெரிய அணுகுண்டையே மறைக்கிறீர்கள்.

aathirai said...

ராமதாஸ் தமிழை வைத்து அரசியல் செய்கிறார். அதற்கென்ன? சிலர் ராமர் கோயிலை வைத்து அரசியல் செய்வது போலதான்
இதுவும். ராமர் கோயில் கட்டுவோம் என்று வாய் கிழிய பேசினாலும் கடைசி வரை கட்டவே மாட்டார்கள். அதை கட்டி விட்டால்
அப்புறம் எதை வைத்து கூச்சல் போடுவது? இன்னும் ஆறு மாதம் ஆட்சியில் இருந்திருந்தால் கோயிலை கட்டியிருப்போம்
என்று சொல்வார்கள். ஏன் அவசரமாக ஆறு மாதம் முன்னாடியே ஆட்சியை கலைத்துவிட்டு வீட்டுக்கு போனார்கள்?

முன்பு சாதிக் கட்சி தலைவராக இருந்தவர் இப்பொழுது சாதி என்ற வட்டத்தை விட்டு தமிழ் என்ற அடுத்த வட்டத்துக்கு
வந்திருப்பது முன்னேற்றம் தான். அனைத்து சாதிகளையும் ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு அவர்கள் வந்திருந்தால் அதற்காக
ஏன் வயிறெறிய வேண்டும்? என்றென்றும் சாதிகள் சண்டை போட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்று விரும்புவர்கள் யார்?

சில சாதிக் கட்சி தலைவர்கள் (யாரென்று கேட்காதீர்கள்) தங்களிடமுள்ள சொத்தை சில கழுகுகளிடமிருந்து
காப்பாற்றுவதற்காக் கட்சி நடத்திகிறார்கள். மற்றபடி இவர்களை சீரியசாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.

-L-L-D-a-s-u said...

//ராமதாஸ் தமிழை வைத்து அரசியல் செய்கிறார். அதற்கென்ன? சிலர் ராமர் கோயிலை வைத்து அரசியல் செய்வது போலதான்//

ராமரை வைத்து அரசியல் நட்த்துவோரை குறை கூறும்போது த்மிழை வைத்து பிழைப்பு நடத்துவோரை குறை கூறுவதில் என்ன தவறு இருக்கிறக்து? இரண்டும் ஒன்றுதான் .த்மிழ் அரசியல் சின்ன பிழையாய் இருக்கலாம் .. ஆனால் பிழைதான்

dondu(#11168674346665545885) said...

"டோ ண்டு அவர்களே பிராமணாள் ஆத்தில் இரட்டை கப் முறை உள்ளதைப் பற்றி நான் கேட்டபோது 'என் வீட்டில் இல்லை' என்றுதான் சொன்னீர்கள். உங்கள் சொந்தக்காரர்கள் வீட்டில் இல்லை என்று சொல்லவில்லை."
வீடுகளும் ஓட்டல்களும் ஒன்றல்ல. என் வீட்டில் எனக்கு யாரைப் பிடிக்கிறதோ அவர்களைத்தான் உள்ளே விடுவேன். எனக்குப் பிடிக்கவில்லையென்றால் என் உறவுக்காரனேயிருந்தாலும் உள்ளே விட மாட்டேன். என் சொந்தக்காரர்களைப் பற்றி நான் ஏன் பேச வேண்டும்? அதே சமயம் உங்கள் வீடுகளிலோ அல்லது உங்கள் சொந்தக்காரர்கள் வீடுகளிலோ எந்தக் கொள்கையைக் கடைபிடிக்கிறார்கள் என்பது பற்றியும் எனக்கு அக்கறையில்லை. மூர்த்தி அவர்களின் பாட்டி தின்ணையைத் தண்ணீர் விட்டுக் கழுவியதைப் பற்றியும் அக்கறையில்லை. அவையெல்லாம் நடந்து முடிந்தவை. அவை பற்றிüப் பேசுவது கால விரயமே. மூர்த்தி அவர்கள் தன் தந்தை எவ்வளவு கேட்டுக்கொண்டும் தான் பூணல் போட்டு கொள்ள மறுத்து விட்டதாகக் கூறியதாலேயே அவர் பார்ப்பனராகவிருப்பாரோ என்று கூட ஆராய்வதில் எனக்கு அக்கறையில்லை.

இரட்டைத் தம்ளர் கடைப் பிரச்சினை வேறு தளத்தில் இயங்குகிறது. தலித்துகளின் சுயமரியாதை மரணப் படுக்கையில் இருக்கிறது. அதைக் காப்பாற்ற ஒரு சிறிய யோசனை முன் வைத்தேன், அவ்வளவுதான். அதற்கு எதிராக நீங்கள் வைத்த யோசனைகள் என்னென்ன? சட்டத்தின் துணை நாட வேண்டும் என்கிறீர்கள். கடந்த 55 வருடமாக அதைச் செய்து எவ்வாளவு பேரை உள்ளே தள்ள முடிந்தது? தலித்துகள் கோவில் அர்ச்சகராக வேண்டும் என்றீர்கள். அதற்கு நிரம்ப மெனக்கெட வேண்டும். அர்ச்சகருக்கு என்ன வருமானம் வருகின்றது என்று நினைக்கிறீர்கள்? அல்லது என்ன மரியாதை இருக்கிறது என்பதாவது உங்களுக்குத் தெரியுமா? அது மட்டுமின்றி எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கெல்லாம் டீக்கடை யோசனையை கேலி செய்தீர்கள்.

இப்போது நான் தலித் ஐ.ஏ.எஸ். ஆபீசர்களுக்காகவும் ஒரு ஆலோசனையைக் கொடுத்துள்ளேன். அங்கு போய் பாருங்கள். அதை டோண்டு ராகவன் என்னும் ஐயங்கார் எழுதினார் என்பதை மறந்து அப்பதிவின் உள்ளடக்கத்தைப் பாருங்கள். நான் என் ஜாதியைக் கூறியது கூறியதுதான். அம்பு வில்லிலிருந்து சென்று விட்டது. அதை திரும்ப வாங்க நான் அர்ஜுனனோ அல்லது ராமனோ அல்ல. அப்பதிவுக்கு பின்னூட்டம் ஏதேனும் இருந்தால் கொடுங்கள். நான் கொடுக்கும் எல்லா யோசனைகளுமே ப்ராக்டிகலானவை. எல்லாமே என்னால் வெர்றிகரமாக முயற்சி செய்து பார்க்கப்பட்டவை. அவை ஒருவரின் சுய மரியாதையை மீட்டுக் கொடுக்கும். அதனால் தைரியம் வரும். தைரியலட்சுமி இருக்கும் இடத்தில் மீதி ஏழு லட்சுமிகள் தானே வருவார்கள். நேர்மறை சிந்தனையைப் பற்றி நார்மன் வின்சென்ட் பீலோ அல்லது டேல் கார்னெகீயோ புத்தகம் எழுதினால் அதை விலை கொடுத்து வாங்கிப் படிப்பீர்கள். ஆனால் கைவசம் இலவசமாகக் கிடைக்கும் ஆலோசனையைப் புறக்கணிப்பீர்கள்.

போகட்டும், எனக்கு உங்களிடம் சான்றிதழ் வாங்குவதில் ஒரு அக்கறையும் இல்லை. எந்த விஷயத்துக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டுமோ அதற்கு கொடுங்கள். நல்லது எங்கு கிடைத்தாலும் அதை உபயோகப்படுத்தப் பாருங்கள். அதைத்தான் அன்புமணி தன் பிள்ளைகள் விஷ்யத்தில் செய்துள்ளார். தகப்பன் என்ற முறையில் அவர் செய்தது சரியே. பிள்ளைகளின் நலன்தான் அவருக்கு முக்கியமாக இருக்க வேண்டும். தமிழ் பாதுகாப்புக்கோ, அதற்காகத் தீக்குளிப்பதற்கோ இளிச்சவாய் தொண்டர்கள் இருக்கிறார்கள். என்னுடைய இப்பதிவின் நோக்கம் அத்தொண்டர்களில் சிலராவது தங்கள் குடும்ப நலனைப் பேண ஆரம்பிக்க வேண்டும். இல்லையென்றால் கட்சித் தொண்டர்கள் பெற்றுத் தருவர் வெற்றி, சூட்டு கோட்டுடன் வந்து தலைவரின் மகன் மந்திரிப் பதவியைப் பெறுவார். என்ன சரிதானே நண்பர்களே?

அன்புடன்,
டோண்டு ராகவன்

aathirai said...

அந்த இரட்டைத் தம்ளர் முறையை யார் அறிமுகப் படுத்தியது என்பதை அறிவீரா பெரியவரே?"
கண்டிப்பாகப் பார்ப்பனர்கள் இல்லை

இதை எந்த சரித்திர புத்தகத்தில் படித்து எழுதினீர்கள் என்று தெரிந்தால் நன்றாக இருக்கும்.

þÅ÷¸Ç¡ÅÐ §ÅÚ ¼õÇâø ¾ñ½£÷ ¾ó¾¡÷¸û. ¯ý‹¸ÇÅ÷¸û ¦¾ÕÅ¢ýÛû§Ç ܼ ¾Ä¢òи¨Ç Å¢¼Å¢ø¨Ä.

சட்டத்தின் துணை நாட வேண்டும் என்கிறீர்கள். கடந்த 55 வருடமாக அதைச் செய்து எவ்வாளவு பேரை உள்ளே தள்ள முடிந்தது?

ºட்டத்தின் உதவியை நாடியதால்தான் கீரிப்பட்டியில் ஓட்டு போட்டவர்களை ஒதுக்கி வைத்த தீர்மானத்தை
வாபஸ் வாங்கினார்கள்.


அது மட்டுமல்ல. இந்த தனி டீக்கடை ஒன்றும் புதிய
தத்துவம் இல்லை. காந்தி சொன்னதுதான். தனி கிணறு வெட்டிக்கொள்ளுங்கள் என்று அவர் சொன்னார். அப்புறம் logicalஆக
தனி நாடு (தலித்ச்தான்) தானெ வரும்? அப்புறம் நீங்கள் எங்கே போவீர்கள்?

aathirai said...

அந்த இரட்டைத் தம்ளர் முறையை யார் அறிமுகப் படுத்தியது என்பதை அறிவீரா பெரியவரே?"
கண்டிப்பாகப் பார்ப்பனர்கள் இல்லை

இதை எந்த சரித்திர புத்தகத்தில் படித்து எழுதினீர்கள் என்று தெரிந்தால் நன்றாக இருக்கும்.



இவர்களாவது வேறு டம்ளரில் தண்ணீர் தந்தார்கள். உன்ஹ்களவர்கள் தெருவின்னுள்ளே கூட தலித்துகளை விடவில்லை.

மாயவரத்தான் said...

//நாங்களும் கணக்கு டீச்சருக்கும் இங்கிலீசு வாத்தியாருக்கும் ஒரு இதுன்னு கிறுக்கிட்டு போவோம்!!!//

UNMAIyai othukitteengalae...adhukkaga sandhosham..!!

dondu(#11168674346665545885) said...

"அப்புறம் லாஜிகலாக தனி நாடு (தலித்ஸ்தான்) தானெ வரும்? அப்புறம் நீங்கள் எங்கே போவீர்கள்?"
அடியே என்கிறதுக்கு பெண்ட்டாட்டியில்லை அதற்குள் குழந்தைகு என்னப் பெயர் என்று சர்ச்சை! முதலில் சிறு முயற்சி துவங்கட்டும். அப்படியே தலிஸ்தான் வந்தால் அச்சமயம் களத்தில் இருப்பவர்கள் பார்த்து கொள்வார்கள். எனக்கு என்னமோ நீங்கள் அவர்களுடைய முன்னேற்றம் எங்காவது வந்து விடப் போகிறதே என்று கவலைப்படுவதாகவே தோன்றுகிறது.
நன்றாகத்தான் சிந்திக்கிறீர்கள். அதில் ஒரு சிறுபகுதியையாவது ஆக்கபூர்வமாய் ஏதாவது செய்ய உபயோகப்படுத்துங்கள். உங்களை மாதிரி தோல்வி மனப்பான்மையிருப்பவர்களிடம் பேசுவது கால விரயமே. நன்றி.
அன்புடன்,
டோண்டு ராகவன்

aathirai said...

நான் சொல்லாததை சொன்னதாக திரிப்பதும் நல்ல நாடகம்.
சட்டப்படி அவர்கள் உரிமையை கேட்கவும் செய்யலாம் என்பதுதான் என்னுடைய வாதம். அது ஏன்
உங்களுக்கு பிடிக்கவில்லை?

aathirai said...

"ராமரை வைத்து அரசியல் நட்த்துவோரை குறை கூறும்போது த்மிழை வைத்து பிழைப்பு நடத்துவோரை குறை கூறுவதில் என்ன தவறு இருக்கிறக்து?
இரண்டும் ஒன்றுதான் "

உணமை. நானும் அதைத்தான் சொன்னேன். இவர்கள் எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான். சிலர்
ராமதாசை மட்டும்தான் குறை கூறுவார்கள் மற்றதைப் பற்றி பேசவே மாட்டார்கள்.

aathirai said...

அவர்களுடைய முன்னேற்றம் எங்காவது வந்து விடப் போகிறதே என்று கவலைப்படுவதாகவே தோன்றுகிறது.

இந்திய நாட்டிலேயே இல்லாதபோது நான் ஏன் இதற்கு கவலைப்பட வேண்டும்?

dondu(#11168674346665545885) said...

"சட்டப்படி அவர்கள் உரிமையை கேட்கவும் செய்யலாம் என்பதுதான் என்னுடைய வாதம். அது ஏன் உங்களுக்கு பிடிக்கவில்லை?"
பிடிக்கவில்லை என்பது தவறு. 55 வருடங்களாக செய்ய முடியாததாகப் போயிற்று. நான் கூறியது நீங்கள் கூறியதுபோல காந்தி அவர்களே கூறியதுதான். கிணற்றுக்கு மிக மெனக்கெட வேண்டும். நான் கூறிய யோசனை ஒரு ஐநூறு ரூபாய் முதலீட்டில் செய்யலாம். இரட்டைத் தம்ளர் டீக்கடைகளில் அவமானமும் பட்டுக் கொண்டு காசையும் கொடுப்பதற்கு பதில் தங்கள் சுயமரியாதையையும் பேணி காசையும் மிச்சப்படுவது மேலல்லவா. காலணா வரி உப்புக்கு விதிக்கப் பட்ட நேரத்தில் காந்தி அவர்கள் உப்பு சத்தியாக்கிரகம் செய்தது எதற்காக என்று நினைக்கிறீர்கள்? காந்தி படத்தை பாருங்கள். மயிர் கூச்செறியும் உங்களுக்கு. காலணாவா முக்கியம், நாட்டின் தன்மானம் அல்லவா?
//அவர்களுடைய முன்னேற்றம் எங்காவது வந்து விடப் போகிறதே என்று கவலைப்படுவதாகவே தோன்றுகிறது.//
"இந்திய நாட்டிலேயே இல்லாதபோது நான் ஏன் இதற்கு கவலைப்பட வேண்டும்?"
அதானே, போய் ஓய்வெடுங்கள். இந்திய நாட்டினுள்ளெயே இருந்து அந்த நாட்டுக்காக உழைக்கும் நாங்கள் பார்த்து கொள்கிறோம். தூரத்திலிருந்து கொண்டு கேலியெல்லாம் செய்யாதீர்கள். இனிமேல் உங்களை என்னுடைய இம்மாதிரி யோசனைகளுக்கு பின்னூட்டமிடும்படிக் கேட்க மாட்டேன். குட் நைட்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

aathirai said...

மீண்டும் மீண்டும் திரிப்பதை தவிர உருப்படியாக ஒரு பதிலும் இல்லை.

avarkal munnerukirarkal endru nan kavalai pada avasiyam illai.
idhu matravarkalukkaka ezudha padukiradhu. thodarndhu jalliyadingal.

aathirai said...

மற்றவர்களுக்காக..

மீண்டும் மீண்டும் திரிப்பதை தவிர உருப்படியாக ஒரு பதிலும் இல்லை.

தலித்கள் எனக்கு போட்டியும் இல்லை. அவர்கள் முன்னேறி விடுவார்களென்று நான் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை
என்று சொன்னேன்.

டோ ண்டு மட்டும் இந்தியாவில் உழைக்கவில்லை. நானும் 15 வருடங்கள் அங்கு உழைத்தது உண்டு.

மேலும் வெளினாடு வாழ் இந்தியர்களின் பணம் இந்தியாவில் டோ ண்டுவை விட அதிகமாகவே உழைக்கிறது.

வெளிநாட்டில் இருப்பவர்கள் பேசக்கூடாது என்று சொல்ல மாட்டார் என்று நினைக்கிறேன்.

dondu(#11168674346665545885) said...

Mr. Theevannan's comment converted into Unicode:
"தலித்துகள் கோயில் அர்ச்சகராக வேண்டுமென்பதை எதிர்ப்பவர்கள் யார்?"

அம்மா ஆதிரை அம்மா,

இன்னிக்குச் செய்தியப் பாத்தீங்களா?

நம்ம அண்ணன் ஆதிகேசவரு, தமிழகத்தின் அம்பேத்கர், நம்மளயெல்லாம் என்னா மாரி பெருமைப்பட வெச்சிருக்காரு பாருங்க.

நம்ம அண்ணன் சும்மா நாலு வருசமா இந்த பாபா கோயிலய, அடச்ச்ச, காளிகாம்பாளு கோயிலய தன்னோட கோயிலு மாரி ஆக்கி, மவனே நான் பூசை பண்ணி முடிக்கிற வரக்கும் ஒரு பய உள்ள வரக்கூடாதுன்னு ஒரு கலக்கு கலக்கிட்டுடிருக்காரு. ஒரு பாப்பான் குரல் குடுத்தானா பாத்தீங்களா? அயோத்திதாசப்பண்டிதரும், நாராயணகுருவும் பண்ணிக்காட்ட முடியாத புரட்சியில்ல இது.

வசதியும் வாய்ப்பும் வந்தா, நாம என்ன பாப்பானுக்குச் சளைச்சவனுங்களா?

என்ன சொல்றீங்க?
///////////////////////////////

நடமாடும் "நகைக்கடை' வரவில்லை காளிகாம்பாள் பக்தர்கள் மகிழ்ச்சி

சென்னை : மோசடி வழக்கில் சிக்கியுள்ளதால் ஆதிகேசவனோ, அவரது பரிவாரங்களோ வந்து தொல்லை கொடுக்காததால், காளிகாம்பாள் கோயில் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னை பாரிமுனை தம்புச் செட்டி தெருவில் உள்ள காளிகாம்பாள் கோயிலுக்கு வாரந்தோறும் செவ்வாய் கிழமை காலை 10.30 மணிக்கு முப்பதுக்கும் மேற்பட்ட அடியாட்களுடன் எட்டு அண்டாக்களில் பிரசாதம் எடுத்துக் கொண்டு வருவாராம் ஆதிகேசவன். அவர் வந்தவுடன் அம்பாளை தரிசிக்க பொதுமக்களை அடியாட்கள் அனுமதிப்பதில்லை.

ஒரு மணி நேரம் முதல் ஒன்றரை மணி நேரம் வரை பூஜை நடத்திவிட்டு முதலில் ஒரு பக்தருக்கு இவர் கையால் பிரசாதம் வழங்குவாராம். கடந்த நான்கு வருடங்களாக வாரந்தோறும் செவ்வாய் கிழமைகளில் இவர் பிரசாதம் வழங்கி வந்தார்.

ஆதிகேசவன் தற்போது மோசடி வழக்கில் சிக்கியுள்ளதால் கடந்த செவ்வாய்கிழமை இவரது அடியாட்களோ அல்லது இவர் சார்பாக யாராவது பிரசாதம் எடுத்து வருவார்கள் என்று காத்திருந்த கோயில் நிர்வாகத்தினர் பின்னர் தாங்களே பிரசாதம் தயாரித்து பக்தர்களுக்கு வழங்கினர். நான்கு வருடங்களாக கோயிலில் நடத்திவந்த ஆதிகேசவனின் "பந்தா' நாடகம் தற்போது நின்றுள்ளதை கண்டு பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
# பொச்டெட் ப்ய் Tகேவன்னன் : 11:56 PM
Pஒச்ட் அ Cஒம்மென்ட்
Regards,
Dondu Raghavan

dondu(#11168674346665545885) said...

"வசதியும் வாய்ப்பும் வந்தா, நாம என்ன பாப்பானுக்குச் சளைச்சவனுங்களா?
என்ன சொல்றீங்க?"
சுவாரசியமாக இருந்தது தீவண்ணன் அவர்களே. ஆனால் உங்கள் பாயின்ட் புரியவில்லை.

"வெளிநாட்டில் இருப்பவர்கள் பேசக்கூடாது என்று சொல்ல மாட்டார் என்று நினைக்கிறேன்."
கண்டிப்பாக இல்லை, உங்களிடம் பின்னூட்டமிடும்படி கேட்க மாட்டேன் என்றுதான் சொன்னேன். ஒரு சீரியசான விவாதம் நடந்து கொண்டிருக்கையில் "நான் வெளி நாட்டில் இருக்கிறேன் அதனால் கவலை இல்லை" என்றதும் எனக்கு அச்சமயம் தோன்றிய எண்ணத்தை வெளியிட்டேன், அவ்வளவுதான். தங்களுக்கு நேரம் இருந்தால் கட்டாயக் காத்திருப்பில் வைக்கப்பட்டிருக்கும் தலித் அதிகாரிகளுக்காக நான் கொடுத்த ஆலோசனையைப் பாருங்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

aathirai said...

நம்ம அண்ணன் சும்மா நாலு வருசமா இந்த பாபா கோயிலய, அடச்ச்ச, காளிகாம்பாளு கோயிலய தன்னோட கோயிலு மாரி ஆக்கி, மவனே நான் பூசை பண்ணி முடிக்கிற வரக்கும் ஒரு பய உள்ள வரக்கூடாதுன்னு ஒரு கலக்கு கலக்கிட்டுடிருக்காரு. ஒரு பாப்பான் குரல் குடுத்தானா பாத்தீங்களா?

adhu sari. poosai panra gurukkaloda thattile oru 500 ruva notta pottu parunga. aprom paarunga varaverpai.

ரவி ஸ்ரீநிவாஸ் said...

என்னுடைய வலைப்பதிவில் நீங்கள் இட்ட பின்னூட்டம் குறித்து என் கருத்துக்கள் இங்கே.

உங்களுடைய பதிவின் உள்நோக்கம் எனக்குத் தெரியும்.அதைப் புரிந்து கொள்ள முடியாதவர்கள் அதைப் பாராட்டுவதில் வியப்பில்லை.இங்கு அரசியல்வாதியை குறை சொல்லும் நீங்கள், ம்தன் போன்றோர் அதை வைத்து செய்யும் அரசியலும் எனக்குத் தெரியும். நீங்கள் பின்னூட்டங்களில் எழுப்பபட்ட எல்லா கேள்விகளுக்குமா பதில் சொன்னீர்கள். இல்லையே.தலைவர்கள் பிறந்த நாட்களை கொண்டாடுவதை விமர்சிக்கும் நீங்கள் ஜீயர்களின் அவதார தினங்களை கொண்டாடுவதினைக் குறித்து, கனகாபிஷகங்கள் குறித்து ஒன்றும் சொல்ல மாட்டீர்கள். அல்லது இது வரை சொன்னதில்லை.வைணவ மரபில் சமாசரணம் என்று ஒன்றிருக்கிறதே.அது மட்டும் சரியானதா. பகுத்தறிவினை எல்லா இடங்களிலும் பயன்படுத்தினால் இன்றைய அரசியல்வாதிகளை எதிர்க்குமளவிற்கு மதத் தலைவர்களையும், அம்மரபுகளையும் எதிர்க்க வேண்டும், விமர்சிக்க வேண்டும்.
அன்புமணி தன் மகன்களை ஒரு பள்ளியில் சேர்த்தது ஒரு வாசகர் தந்த தகவல். அது எந்த அளவு உண்மை என்பது எனக்குத் தெரியாது. அவர் தமிழ் மொழியினைப் பயிற்று மொழியாக கொண்டிருக்கும் பள்ளியில் சேர்த்திருக்கலாம். ஆனால் அதற்காக தமிழ் மொழி ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்ற இயக்கத்தினையே ஒதுக்க முடியாது.நீங்கள் அவர் செய்தது புத்திச்சாலித்தனம் என்று கூறுகிறீர்கள், அதே சமயம் தமிழ் வழிக்கல்விக்கும் ஆதரவுண்டு என்கிறீர்கள். நீங்கள் செய்யும் அரசியல் புத்திசாலித்தனமானது என்று நீங்கள் கருதலாம், ஆனால் அது சரியல்ல.

வசந்தன்(Vasanthan) said...

பின்னூட்டம் 149.

வசந்தன்(Vasanthan) said...

150 ஆவது பின்னூட்டம் என்னுடையது என்பதிற் "பெருமை" அடைகிறேன்.

(டோண்டு, மன்னிக்க)

dondu(#11168674346665545885) said...

பின்னூட்டத்திற்கு நன்றி ரவி சிறீனிவாஸ் அவர்களே. என்னுடைய இந்தப் பதிவு பல தளங்களைத் தொடுகிறது. தன் குழந்தைகளுக்கு ஒரு நல்ல எதிர்காலம் தரும் என நினைத்து அன்புமணி எடுக்கும் முடிவுகள் ஒரு தந்தை என்ற முறையில் சரியே. அதே மாதிரி உணர்ச்சி வசப்படாமல் அவரவர் முடிவு எடுக்க வேண்டும் என்று பொது மக்களுக்காக நான் கூறியதிலும் தவறில்லை. ப்ராக்டிகலாக முடிவெடுப்பதில் மட்டும் தலைவர்களைப் பின்பற்ற வேண்டும், மற்றப்படி அவர்கள் காதில் சுற்றும் பூக்களை ஏற்று கொள்ளாதீர்கள் என்பதுதான் என் அப்பதிவின் நோக்கம். அதனால்தான் மும்பை இன்ஸ்பெக்டரைப் பாராட்டினேன். ஆங்கிலம் பேசினால் அபராதம் என்றெல்லாம் காட்டப்படும் பந்தாவுக்கெல்லாம் மயங்காதீர் என்று கேட்டு கொண்டதில் என்னத் தவறு?
மடாதிபதியாகவிருந்தாலும் அதே அணுகுமுறைதான் இருக்க வேண்டும் என்பதிலும் எனக்கு ஒப்புதலே என்பதையும் இத்தருணத்தில் கூறிவிடுகிறேன். நிற்க.
உங்கள் பதிவில் நான் முதலில் இட்டப் பின்னூட்டத்திலிருந்து: "நன்றி ரவி அவர்களே. கௌரவர் சபையில் விகர்ணன் எழுந்து பேசியதைப் போல் உண்மை உரைத்திருக்கிறீர்கள்." இது நான் மனப்பூர்வமாகச் சொன்னது. சாதாரணமக எதற்கும் பார்ப்பனர்களைப் பொறுப்பாக்கும் தருணத்தில் நிதானமாக வெளிவந்த உங்கள் கருத்து மனதுக்கு இதமாகவே இருந்தது.

அதே பதிவில் சங்கமித்திரன் அவர்களுக்கு அளித்த பதிலிலிருந்து: "நான் சாதாரணமாக் யாரையும் பின்னூட்டமிடுமாறு கேட்பதில்லை. ஆனால் சில பதிவுகள் பொது நலன் சம்பத்தப்பட்டவையாகப் போகும்போது அதன் மேல் மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பது எப்போதாவது செய்வதுண்டு. இதுவும் அப்படிப்பட்ட விஷயமே. நான் குறிப்பிட்டப் பதிவின் பின்னூட்டங்களைப் பார்த்தீர்களானால் ஒன்று புரியும், அதாவது அவற்றில் பல நுனிப்புல் மேய்வதாகவே அமைந்துள்ளன. குழலி மட்டுமே நேரடியாக விஷ்யத்துக்கு வந்தார். இன்னும் பலர் வர வேண்டும் என்பதே விருப்பம். பதிவின் விஷயம் அப்படிப்பட்டது."

காத்திருப்பில் வைக்கப்பட்ட தலித் அதிகாரிகளைப் பற்றி நான் முன்வைத்த யோசனையைப் பற்றித் தாங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதையறியவும் ஆவல்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

தீவண்ணன் அவர்கள் டிஸ்கியில் எழுதியது ஒருங்குறியில்:
யம்மாவ் தமிழ்ப்போராளினி,

நாஞ்சொன்னத ஒத்துக்கிட்டதுல ரொம்ப்ப்ப்ப சந்தோஷந்தாயீ. அதாவது
சாதிப்பிரச்சினயில்ல சம்பாத்யந்தாம்பிரச்சினன்னு ஒத்துக்கிட்டிருக்கீக!
அதுல பாருதாயீ இந்த இளையராசா அவரு தம்பிராசா அவுக மகன்ராசா
மவராசாத்தின்னுட்டு இப்படிப்பட்ட ஆளுகளுக்கெல்லாம் ஒரு பிரச்சினையும்
வர்றதில்ல. ஆதிகேசவன் மாதிரி நவீன அம்பேத்காருமாருகளுக்கும் ஒரு
பிரச்சினையும் வர்றதில்ல. வயத்துப்பாட்டுக்கில்லாதவுகதா இந்த
சாதீயச்சொல்லி அடிச்சுகிட்டுருக்காகங்கறத உங்களப்போல இந்தியாவுல
15வருஷஞ்சேவ செஞ்சுட்டு இப்பபோயி வெள்ளக்காரவுகளுக்கு சேவசெய்யிற
மகராணிங்க எங்களுக்கு ஒரு ஒத்த காந்திநோட்டக்காட்டி என்னமா புரிய
வச்சுட்டீக! ஆத்திரக்காரங்ஙெளுக்கு புத்திமட்டாயிருக்கலாம் ஆனா ஆத்திரைக்காரிங்ஙளுக்கு புத்தி சாஸ்தின்னு ரியவச்சிட்டீயளே... இதுக்குத்தாஞ்சொல்றது ஊரவுட்டு ஓடிப்போயி உவதேசம்பண்ணனுமின்னு!!

வாள்க புரட்சிப்போராளீனீக!!

அய்யா எல்ல்ல்ல தாசு,

இராமனச்சொல்லி வோட்டு வாங்குறவுகள தாக்குறீக சந்தோஷந்தேங்!
தமிழச்சொல்லி வோட்டு வாங்குறவுகளயுந்தாக்குறீக சந்தோஷந்தேங்!!
ஆனாக்க ஜீஸஸ் மோஸஸ்ஸ¤ன்னுகிட்டு வெள்ளக்காரவுகள சொல்லி அரசியல்
நடத்துற உரோமக்கத்துலிக்கமார மட்டும் எங்கட காச்சியாரு வலப்பதிவுல
தூக்கிவச்சுக்கிட்டு தலகாலு தெரியாம ஆடுறீகளே...மவராசா.. என்னய்யா
லாசிக்கு இது?

இந்த தீவண்ணம்பய தலையச்சொறிஞ்சி சொறிஞ்சி பாக்குறான்.
புரியமாட்டேங்குது ராசா..... அய்யா இராமர் தாசு தமிழ வித்தாருன்னா
ரோமன் தாசு தமிழ காட்டில்ல கொடுக்கறாரு..... இராமர் தாசு
காசுபாத்தாருன்னா ரோம தாசுங்களெல்லாம் சொத்த வாங்கிக்குவிச்சிகிட்டு
வட்டிக்கன் கோவனத்தோடல்ல அலையறானுக....

ஒரு எழவும்புரியல.....(தலயச்சொறியறதுக்கு எதாவது அய்க்கான் இருக்குதுங்களா பிள்ள்ளாக்கருல?!)

அய்யா நெறயப்படிச்ச மவராசங்களா,

டொண்டு அண்ணாச்சி மத்தசாதிய மட்டமாப்பேசல தாம் பொறந்த
சாதியச்சொல்றாக... அதுக்கு சாதியச்சொல்லக்கூடாதுன்னு இங்கிட்டு வந்து
உவ்வேவ்வேவ்வேவ் சொல்றீக...ஆனாகிட்ட நம்ம இணையக்கிறுக்கன் அனாத
அங்கிட்டு எல்லாருஞ்சாதிய சொல்லுங்கடா சாமீன்னுகிட்டு
சத்தம்போடுறான்...அங்கிட்டும்போயி அவனுக்குஞ்ஜிங்குச்சக்கா போடுறீக....
சாதியச்சொன்னாலே குத்தமின்னாக்க சாதிங்கற பேரையே எடுக்கனுமின்னு
எங்கட கான்ச்சியாரு அண்ணாச்சி சொன்னதுக்குஞ்சண்ட போடுறீக... ஒரு
மயி....ம் புரியல மவராசனுங்களே மவராசிங்களே,,,,ஒருவேள இந்த
லாசிக்கெல்லாம் உங்கட மாதுரி அறிவுசீவிக்கெல்லாந்தேன் புரியுமோ?

அறிவுசீவிமார்களுக்கு நடுவுல ஒரு அறிவிலி,
தீவண்ணந்தம்பி

நன்றி தீவண்ணன் அவர்களே, அனாதையின் அப்பதிவுக்கு நான் இட்டப் பின்னூட்டத்துக்கு என்ன எதிர் பின்னூட்டம் கொடுத்துள்ளார் என்பதைப் பாருங்கள். இப்பதிவுக்கு முன்னால் வரும் ஜெயேந்திரரைப் பற்றியப் பதிவில் என்ன எழுதியிருக்கிறார் என்பதைப் பருங்கள். யாரோ ஒற்றன் இணையத்தினுள் வந்துவிட்டதாகக் கருத்திட்டுள்ளார்.
அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

தீவண்ணன் அவர்களே, உங்கள் பின்னூட்டம் டிஸ்கியில் வந்தது. அதை மற்றவர்கள் படிக்க ஏதுவாக ஒருங்குறியில் இட்டேன். அதிலேயே என் கருத்தையும் சேர்த்து வெளியிட்டேன். இப்போது போய்ப் பார்த்தால் அப்பின்னூட்டத்தை நீங்கள் எடுத்து விட்டீர்கள். அதையடுத்து எழுதியப் பின்னூட்டத்தை வேறு எடுத்து விட்டீர்கள் (அதையும் படித்தேன் ஜீ மெயிலில்). ஆகவே நிலைமை சிறிது சங்கடமாகப் போய்விட்டது. மன்னிக்கவும். என் பின்னூட்டத்தையும் எடுத்து விடச்சொன்னால் அவ்வாறே செய்து விடுகிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

தீவண்ணன் அவர்களே, ஒருங்குறியில் அடிக்க சுரதா அவர்களின் எழுத்து மாற்றியைப் பாவிக்கலாம். அதன் உரல் இதோ.

உங்கள் வன்தகட்டிலும் அதை இறக்கிக் கொள்ளலாம். இணையத்தொடர்பு இல்லாத நேரத்திலும் அது உபயோகமாகவிருக்கும். நான் நினைக்கிறேன், நீங்கள் நோட்பேடில் எ கலப்பையை உபயோகித்து தட்டச்சு செய்கிறீர்கள் என்று. பின்னூட்டம் மற்றும் பதிவுகளுக்கு சுரதாவின் பெட்டி உத்தமம். உதாரணத்துக்கு நீங்கள் தற்சமயம் எழுதியது:

"யூனீகோட்ல வரமாடேங்குதேன்னுட்டுத்தான் அத எடுத்தேன் டோண்டு சார்.. n/p (Notepad?) நீங்களே அத யூனீகோட்ல போட்டுடீக..தேங்க்ஸ் சார்...இனிமேட்டுக்கு நான் உஙளுக்கு மெயில்ல கமென்ட்ஸ் அனுப்பிடறேன்" ஆனால் ஒன்று குறில் நெடில் பார்த்துக் கொள்ள வேண்டும். லதா எழுத்துருவில் பிரமாதமாக வருகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

For Suratha's converter see http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm
Sorry, I forgot to include that.
Regards,
Dondu raagavan

dondu(#11168674346665545885) said...

Theevannan, here is the link:
http://anathai.blogspot.com/2005/04/blog-post.html
The concerned sentences: "சரி இந்தப் பதிவில் ஒரு சின்ன எச்சரிக்கை மணி அடிக்கலாம் என்னும் எண்ணம் தான். இனக்குழுக்கலாக கூடிப் பேசும் இடங்களில் எல்லாம் அரசாங்க காவல் நாய்கள், கூட்டத்தோட கூட்டமா ஜோதியில் கலந்து ஆள் அடையாளம் கண்டு கொள்வது என்பது பழைய நிகழ்வு.
soc.culture காலங்களில் இருந்து வரும் நிகழ்வு இது. sao.culture.tamil ல் ஈழ ஆதரவு கடிதங்களை எழுதிய ஒரே காரணத்துக்காக, வெளிநாட்டிலிருந்து அனுப்பப்படும் கடிதங்கள் தணிக்கை செய்யப்பட்டும், தந்தை SITயினரால விசாரனை என்ற பெயரில் இழுக்கப்பட்டதும் அவமானப்படுத்தப்பட்டதும் உண்மை நிகழ்வு. இன்னமும் இந்திய அரசாங்க நாய்களுக்கு கருத்து சுதந்திரம் என்றால் என்ன என்பதன் அர்த்தமே தெரியாது. ஜெர்மன் மொழி
பேசுகிறவன் பிரன்சு பேசுகிறவன் என்று வேறு உண்மையிலேயே உருப்படியான காவல் நாய் உத்தியோகத்து தேவையான திறமை இருந்தும் கல்யாண வீட்டு வாசல் சோறு பொறுக்க வெல்லாம் விடுவான்கள். (retirement வேலையாகக் கூட இருக்கலாம்) தவிர்ப்பது எளிதோ எளிது. வெகுண்டு எழுந்து உருப்படியான பதிவுகள் கொடுக்கலாம். எல்லோருக்கும் நல்ல புரிதல் கிடைக்கலாம். ஆனால் ip address போன்ற ஆள் அடையாளம் காட்டும் விடயங்களை இவர்கள் இடத்தில் விடுவதை தயவு செய்து தவிர்ங்கள். நேரில் சந்திக்கும் கூட்டங்களை தவிருங்கள்."
Regards,
Dondu Raghavan

dondu(#11168674346665545885) said...

தீவன்ணன் அவர்களே, நான் சாதாரணமாகப் பின்னூட்டங்களை எடுக்க மாட்டேன். முதல் தடவையாக பெயரிலி அவர்களின் பின்னூட்டம் ஒரு ஆடியோ சுட்டியுடன் இருந்ததை எடுத்தேன். அதற்காகாகப் பெயரிலி அவர்களுக்கும் விளக்கமளித்தேன். அதே பின்னூட்டத்தை சுட்டியின்றி என் பின்னூட்டத்தின் கீழ் வெளியிட்டேன்.
உங்களின் இப்போதையப் பின்னூட்டத்தை நான் எடுக்கப் போவதில்லை. ஆனால் ஒருங்குறியில் மாற்றப் போவதில்லை. வேண்டுபவர்கள் படித்துக் கொள்ளட்டும். தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் என்று கேட்டு கொள்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்

aathirai said...

theevannan annaachi,
indhiyavile sunami adichappo vellakaranukku sevai senja kaasu ethanai indhiyavukku vandhadhunnu kuthumadhippa theriyuma annachi?

மாயவரத்தான் said...

இந்த மாதிரி தம்மாத்தூண்டு செஞ்சிட்டு ஏதோ இந்தியாவையே சுனாமி பாதிப்பிலிருந்து காப்பாத்திட்டா மாதிரி பில்டப் குடுப்பீங்கன்னு தெரிஞ்சுதான் 'எங்களாலேயே முடியும்.. அன்னிய உதவி எதுவும் தேவையில்லை'ன்னு இந்தியாவிலே அறிவிச்சாங்க! சுயநலமில்லாத உண்மையான வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் சுனாமிக்கு உதவி செய்ததை சொல்லிக் காமிக்கறதில்லை! உட்டாக்க மாசாமாசம் ஊருக்கு பெத்தவங்களுக்கு அனுப்புற காசில கிடைக்கிற அந்நியச் செலவாணியில தான் இந்திய பொருளாதாரமே நிமிர்ந்து நிக்குதுன்னும் சொல்லுவாங்க!

aathirai said...

thiruvaalar theevannan ketttadhal mattumdhan solla vendi vandhadhu, illayenil nangal solla vendiyadhillai.

aathirai said...

'எங்களாலேயே முடியும்.. அன்னிய உதவி எதுவும் தேவையில்லை'ன்னு இந்தியாவிலே அறிவிச்சாங்க!

ethanai ngo kkal it companikal veli naatil nidhi vasoolithadhu theriyuma?

Muthu said...

மாயவரத்தான்,
///மாசாமாசம் ஊருக்கு பெத்தவங்களுக்கு அனுப்புற காசில கிடைக்கிற அந்நியச் செலவாணியில தான் இந்திய பொருளாதாரமே நிமிர்ந்து நிக்குதுன்னும் சொல்லுவாங்க!///

பதிவுக்குச் சம்பந்தமில்லாமல் ஒரு செய்தியாக இது.

NRI-கள் அனுப்பும் பணம் இந்தியாவின் இன்கம்டாக்ஸ் பணத்தின் அளவைவிட அதிகமாம்.

dondu(#11168674346665545885) said...

இப்பதிவிலிருந்து விலகி பல பின்னூட்டங்கள் வந்து விட்டன. ஆகவே இப்பதிவின் செய்தியை மறுபடியும் வலியுறுத்துகிறேன்.
வெளியில் போராட்டங்கள் என்றெல்லாம் அமர்க்களமாக அறிவிக்கும் தலைவர்கள் தத்தம் குடும்பத்தினர் நலனுக்கே முன்னுரிமை கொடுக்கின்றனர். அதற்கு ஒரு உதாரணமே இப்பதிவில் வந்த செய்திகள். என் பதிவின் கடைசி இரு பத்திகளை மறுபடியும் இங்கிடுவதற்கு மன்னிக்கவும். இப்போதைய நிலையில் பின்னூட்டங்கள் என்.ஆர்.ஐ.களுக்கு தாவி விட்டன. ஆகவே ஒரு சிறு நினைவுறுத்தல்:

"அன்புமணி அவர்களின் விவகாரத்துக்கு வருவோம். முதல் சாட்டையடியில் இன்ஸ்பெக்டர் கூறியது என்ன? உங்கள் பெற்றோர்களை மதியுங்கள், தலைவன் மூன்றாம் மனிதனே. அந்த இன்ஸ்பெக்டரைப் பார்க்காமலேயே அன்புமணி அவர்கள் இம்மாதிரி யோசித்திருக்க வேண்டும். "தமிழ் உணர்வு எல்லாம் மற்றவருக்கே. என் பிள்ளைகள் எதிர்காலம் எனக்கு முக்கியம்." நல்ல ப்ராக்டிகலான முடிவு என்றுதான் கூற வேண்டும்.

இதில் நாம் என்ன செய்ய வேண்டும்? "வேலையற்றுப் போய் தலைவர்கள் தங்கள் அரசியல் எதிர்க்காலங்களுக்காகத் துவக்கும் போராட்டங்களை ரொம்ப சீரியசாக எடுத்துக் கொள்ளாதீர்கள்". அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டு போங்கள்."

பொழுது போகவில்லையென்றால், மெகா சீரியல்கள் அலுத்துவிட்டால், தலைவர்கள் மிழற்றும் உரைகளை கவனியுங்கள், அதுவும் எல்லா வீட்டு வேலைகளையும் குறைவற முடித்தப் பிறகு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

மாயவரத்தான் said...

Tsunamikku kaasu koduthathu kuriththu ezhudhiyadhaaldhaan naan appadi ezhudhinaen..! sambandhamae illamal, ippo rajinikku poyachu! ungalai ellam...!!!

மாயவரத்தான் said...

//NRI-கள் அனுப்பும் பணம் இந்தியாவின் இன்கம்டாக்ஸ் பணத்தின் அளவைவிட அதிகமாம். //

Muthu Sir,adhae maadhiri NRI-kkal hawalavila anuppura panam paththiyum sollungalaen plz..! But inga vendaam..koodiya seekiram naan oru padhivu ezhudharaen, anga!! Or neenga aarambinga..!!! OKVaa?!

Muthu said...

டோண்டு,
உங்களின் இப்பதிவு மிக யதார்த்தமானது, ஆனால் இது எப்படி இந்த அளவுக்கு விவாதத்துக்குள்ளானது என்று எனக்குப் புரியவேவில்லை.கிட்டத்தட்ட ஒரு "டிஸ்கஸன் போர்டு" ரேஞ்சுக்குப் போய்விட்டது.

///பொழுது போகவில்லையென்றால், மெகா சீரியல்கள் அலுத்துவிட்டால், தலைவர்கள் மிழற்றும் உரைகளை கவனியுங்கள், அதுவும் எல்லா வீட்டு வேலைகளையும் குறைவற முடித்தப் பிறகு.///

இல்லாவிட்டால் இதுமாதிரிப் பதிவுகளின் சம்பந்தமில்லாமல் பின்னூட்டமிடலாம் ( நான் இப்போது இங்கு செய்துகொண்டிருகப்பதுபோல்) :-)))

Muthu said...

தட்டச்சுப் பிழையைத் திருத்தி வாசிக்கவும்.
பதிவுகளின்= பதிவுகளில்

dondu(#11168674346665545885) said...

விசிதா அவர்களே, தமிழில் எழுதியதற்கு என் முதற்கண் நன்றி உங்களுக்கு உரித்தாகுக. என்னுடைய இந்தப் பதிவே உங்கள் கேள்விகளுக்கு முதலிலேயே மறைமுகமாக பதில் கூறிவிட்டதே. ராமதாஸ் அன்புமணி ஆகியோரை முன்னுறுத்தி நான் இட்டப் பதிவு மற்றவர்களுக்கும் அதே அளவு பொருந்தும்.
ஆனால் அரசியல் தலைவர்களுக்கும் வெறும் நடிகர்களுக்குமிடையில் ஒரு முக்கிய வேறுபாடு உண்டு. நடிகர்கள் தங்கள் நடிப்பால் மக்களை மகிழ்விக்கின்றனர். அவர்கள் உழைப்பு நமக்கு தெரிவதில்லை. நாம் ப்டாடோபங்களை மட்டுமே பார்க்கிறோம். நடிகன் பொழுதுபோக்குக்கு மட்டுமே என்பது நமக்கு முதலிலிருந்தே தெரிந்து விடுகிறது. மற்றப்படி ஒரு உண்மை நடிகன் ஊருக்கெல்லாம் உபதேசம் செய்வதில்லை. அப்படி செய்ய ஆரம்பித்து விட்டால் அவன் அரசியல் வாதியாகிவிடுகிறேன். அவனை மதிப்பிட வேறு தராசு தேவைப் படுகிறது.
ஆனால் அரசியல்வாதியோ எடுத்தவுடனேயே உபதேசம் செய்ய ஆரம்பித்து விடுகிறான். ஆனால் அவனே அந்த உபதேசங்களைப் பின்பற்றுவதில்லை. அதை எடுத்து காட்ட வேண்டியது மக்கள் கடமை. அதை எடுத்து காட்டிய என் பதிவு மக்களை உஷார்படுத்தியது. அவ்வளவே.

ஏன், தமிள் தமிள் என்று பேசி வீட்டில் தெலுங்கு பேசுபவர்களைப் பற்றி ஏற்கனவே பலர் கிண்டலாக எழுதி விட்டனரே. ரசிகர் மன்ற வேலைகளும் தவறானதே. இத்தனை நேரம் எங்கிருந்து கிடைக்கிறது என்று எனக்கு மிகவும் வியப்பாக இருக்கிறது. அந்த நேரம் இருந்தால் இன்னும் சில வாடிக்கையாளர்களைப் பிடிக்கலாமே?

அன்புடன்,
டோண்டு ராகவன்

enRenRum-anbudan.BALA said...

இந்த 'மெகா' பின்னுட்டப் பதிவில் பின்னூட்டம் இடவில்லை என்றால் ஜென்ம சாபல்யம் கிடைக்காது :))

முதலில், டோண்டு அவர்களுக்கு,
இது யதார்த்தமான கருத்துக்களை முன் வைத்த ஒரு பதிவு ! 200 பின்னூட்டம் காண வாழ்த்துக்கள் :))

அடுத்து ஆதிரை,
//adhu sari. poosai panra gurukkaloda thattile oru 500 ruva notta pottu parunga. aprom paarunga varaverpai.
//
நீங்கள் கூறுவது முற்றிலும் சரியே !
ஆனால், பணக்காரனுக்கு பல்லைக் காட்டுதல், அடி வருடுதல், காசுக்கு அலைதல், லஞ்சம் கொடுத்தல் / வாங்குதல், இவையெல்லாம் சாதி, மதம் கடந்த நமது தேசிய குணங்கள்.

எந்த சாதிக்காரன் அர்ச்சகராக இருந்தாலும், எந்தக் கோயிலாக இருந்தாலும் இது நடக்கும். மேலும் அர்ச்சகருக்கு கிடைக்கும் சம்பளம் குறைவாக இருப்பதும், அதனால் தட்டில் விழும் காசை வைத்து அவர்கள் ஜீவனம் நடத்த வேண்டியிருப்பதும் கூட இதற்கு ஒரு காரணம்.

நீங்கள் 15 வருடங்கள் இந்தியாவில் இருந்தபோதும், இப்போது வெளிநாட்டில் இருக்கும்போதும், மேற்கூறிய விடயங்களில் நிலைமை மாறவே இல்லை :-((

dondu(#11168674346665545885) said...

பாலா அவர்களே வருக,
நீங்கள் கூறுவது போல அர்ச்சகர் நிலைமை ரொம்ப வேதனைக்குறியதே. 108 திவ்ய திருப்பதிகளைப் பார்ப்பதற்காக தமிழகமெங்கும் செல்கிறேன். சில குறிப்பிட்டக் கோயில்களைத் தவிர நிலைமை ரொம்ப மோசமே. பல கிராமங்களில் அர்ச்சகர் வேலைக்கு ஆள் கிடைப்பதே கடினம்தான்.
ஆன்புடன்,
டோண்டு ராகவன்

aathirai said...

ellaa archagarkalukum indha nilai illai. thanjavur pakkam oru round ponal kovilukku povadhaye vittu viduveergal. ellavatrilum fraud. koviluku veliye parking, hotel , mess endru side business yega pattadhu. pazhani kovilil nava bashana silayai surandi surandi ( yaar seidhirukka mudiyum) vitru indru nondi muruganaaki vittargal.

adhu sari.
aadhikesavan pondra fraudkal perum bakthargalaga iruppadhin marmam enna. jeyiluku pona pala prabalangal pattai pattaiyai vibuthi vesham. saravana bhavan asami jeyilukuleye kovil kattinaram.

meendum topic thisai marugiradhu. dondu avargale, indha padhivai nan adipadayil ethirkavillai. pa. ma.ka vai pattri mattum ezudhamal matravarkalukum advice kudungal.ramar koilai nambi yemandha parivarangalukum advice kodungal.enakennavo dinamalarum, neengalum pamaku vukku ilavasa vilambaram tharuvadhu pola iruku.

dondu(#11168674346665545885) said...

வணக்கம் ஆதிரை அவர்களே. இந்தப் பதிவு இவ்வளவு பின்னூட்டங்களை ஈர்க்கப் போகிறது என்று நான் நிஜமாகவே எதிர்பார்க்கவில்லை. உங்கள் கருத்துகளுக்கும் என்னுடையவற்றுக்குமிடையில் அவ்வளவு வேற்றுமைகளை நான் காணவில்லை. மக்களை நான் விழிப்புடன் செயலாற்றச் சொன்னேன். தேவையில்லாமல் தலைவா என்றெல்லாம் உணர்சிவசப்படுவதில் தொண்டர்கள் காலம், பொருள், மனவமைதி எல்லாமே பறி போகின்றன. ராமதாஸ் மற்றும் அன்புமணியை குறிப்பிட்டது ஒரு தற்செயலே. இந்த எண்ணங்கள் எவ்வளவு தூரம் எல்லொரையும் ஆட்டிவைக்கின்றன என்பதைத்தான் பின்னூட்டங்களின் எண்ணிக்கை காட்டுகிறது.
என்னதான் பிராடாக இருந்தாலும் அடிப்படையில் மனிதன் கோழையே. தைரியமாக தன் செயல்களுக்கு பொறுப்பேற்பென்பது எல்லோராலும் முடியாது. தனக்கு மேல் ஒரு சக்தி உள்ளது என்பதை அவன் மறப்பதில்லை. ஆத்திகமும் நாத்திகமும் ஆயிரக்கணக்கான வருடங்களாக ஒன்றாக இருக்கின்றன. ஆத்திகர் நாத்திகராவதும், நாத்திகர் ஆத்திகராவதும் நாமே நேரில் பார்ப்பதுதானே? மனித மனத்தை அவ்வளவு சுலபமாக வரையறுக்க முடியாது. அவனுக்கு சுயசிந்தனை என்பது இருக்கும் வரை இப்படித்தான் இருக்கும்.
அது சரி, இப்பதிவுக்கு 200-வது பின்னூட்டம் இடப்போவது யாரோ?
அன்புடன்,
டோண்டு ராகவன்

aathirai said...

pazhani kovilil archagaraga irukum iyer maarungalai enakku personal aaga theriyum.

aathirai said...

indru seidhiyil kooda edho oru mandhiri velai vaaipu ellam illai. thiramai irupavargal veli naatukku ponga endru arikkai vittirukirar.

aathirai said...

melum, en veetinarugil oru iyer irundhar. ivar pudhidhaga silaigal seidhu mannil pudhaithu vaithu 'antique' endru solli virpaar. sila samayam pazangala kovilil thirudiya silaikalum virpaar. oru naal police kaapu kondu vandhadhu.

dondu(#11168674346665545885) said...

"இன்று செய்தியில் கூட ஏதோ ஒரு மந்திரி வேலை வாய்ப்பு எல்லாம் இல்லை. திறமை இருப்பவர்கள் வெளிநாட்டுக்கு போங்க என்று அறிக்கையிட்டிருக்கிறார்."
இதிலிருந்து நீங்கள் கூற வரும் கருத்து என்ன?

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

அதாவது திருடர்களில் ஐயர்களை மட்டும் ஜாதி குறித்து எழுதுவீர்கள். மற்ற சாதியினராக இருந்தால் வெறுமனே திருடர்கள் என்று கூறி விடுவீர்கள் அப்படித்தானே. சிறு வயதில் அதிகம் விடுதலை, குடியரசு ஆகிய பத்திரிகைகளை படித்து வள்ர்ந்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது. அப்புறம் வேறு என்ன அரிய கருத்துகள் வைத்திருக்கிறீர்கள்? தமிழில் எழுதத்தான் தெரியுமே, ஏன் ஆங்கிலம் அல்லது ஆங்கில எழுத்துக்களில் தமிழ் என்று படுத்துகிறீர்கள்?

பாவம் நீங்களும் சின்ன சின்ன பின்னூட்டங்களாகப் போட்டு 200 ஆம் பின்னூட்டம் இடப் பார்க்கிறீர்கள் என்று நினைக்கிறேன். வசந்தன் முந்திக் கொள்ளப் போகிறார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Muthu said...

///indha NRI-kalai padikka vaikka indhiya arasu selavidum thogai evvalavu, atharku enna return kidaikirathu endru theriyuma muthaiyyaa?///

அனானிமஸ்,
ஒரு செய்திக்காய் அதைச் சொல்லியிருக்கிறேன். குடிமகனைப் படிக்க வைக்க அரசு செய்யும் செலவு குறைவாய் இருந்தாலும் நிறைவாய் இருந்தாலும் அதன் மதிப்பு மிகமிக அதிகம். இதை நீங்கள் மறுக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

dondu(#11168674346665545885) said...

"குடிமகனைப் படிக்க வைக்க அரசு செய்யும் செலவு குறைவாய் இருந்தாலும் நிறைவாய் இருந்தாலும் அதன் மதிப்பு மிகமிக அதிகம்."

காலத்தினாற் செய்த உதவி சிறிதெனினும் அது ஞாலத்திலும் மாணப்பெரிது" என்பதைக் கேட்டதில்லையா அனானிமஸ் அவர்களே?

அன்புடன்,
டோண்டு ராகவன்

மாயவரத்தான் said...

அதெல்லாம் புரிஞ்சா எதுக்கு இப்படி ஒளரப்போறாங்க?!

முகமூடி said...

எதை சொன்னாலும் எதிர்மறையாகவும் சாதி அடிப்படையிலும் சிந்திப்பவர்களுக்கு பதில் சொல்வதைத்தான் விழலுக்கு இறைத்த நீர் என்பார்கள் டோண்டு. அவர்களுக்கு பகுத்தறிவு (திராவிட கட்சிகள் குறிப்பிடுவது அல்ல. நிஜமான பகுத்தறிவு) வளரும் வரை பொறுத்திறுப்போம்.

இதோடு தொடர்புடைய சில செய்திகள் முகமூடி வலைப்பதிவில் (சாதிய கண்ணோட்டம் கொண்ட ஆடுகளுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை) இருக்கின்றன. முக்கியமாக "திருமாவளவனுக்கு வீரம் இருக்கா ?" மற்றும் "மஞ்ச மாக்கானும் பூதங்களும்". - முகமூடி

aathirai said...

here too the priestly class comprises mainly of "pandarams" who are NBs

idhu yaarudaiya sindhanai?

dondu(#11168674346665545885) said...

//here too the priestly class comprises mainly of "pandarams" who are NBs//
"இது யாருடைய சின்தனை?"

பழனியில் பூஜை செய்பவர்கள் பார்ப்பனரே என்ற என்ணத்தை நீங்கள் முன்னிறுத்தியதால் அனானிமஸ் இதை எழுதினார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

aathirai said...

ellaa 'archagar'kalukum indha nilai illai

idhudhaan nan ezudhiyadhu.mattravai neengal ninaithadhu.

idharku mel ungal padhivil nerathai veenadikkum ennam illai. nandri.

dondu(#11168674346665545885) said...

"எல்லா 'அர்சகர்'களுக்கும் இந்த நிலை இல்லை. இதுதான் நான் எழுதியது.மற்றவை நீங்கள் நினைத்தது."
ஆதிரை அவர்களே, தேடித் தேடி குற்றவாளிகளில் பார்ப்பனரை மட்டும் அடையாளப்படுத்தியதுதான் நீங்கள் செய்தது. எல்லா சாதியினரிலும் எல்லாவகையான மனிதர்கள் உள்ளனர். இதில் பார்ப்பனரென்ன பார்ப்பனரல்லாதவர் என்ன என்பதே என் கேள்வி.
அன்புடன்,
டோண்டு ராகவன்

பினாத்தல் சுரேஷ் said...

வெளிப்படையான சில எண்ணங்கள் பதிவுக்கு இவ்வளவு பின்னூட்டம் வந்திருந்தால் கூடப் பரவாயில்லை.

நாட்டு மக்கள் எவ்வளவோ பிராக்டிகலாக மாறிவிட்டார்கள். பெரும்பாலான மக்களுக்கு அரசியல் என்பது ஒரு பொழுதுபோக்கு மட்டுமே. அன்புமணி தன் குழந்தைகளை தமிழில்லாப் பள்ளியில் சேர்த்தது எதிர்ப்பு அரசியல் நடத்துவோர் வாயில் சில நாளுக்கு அவல். ஆதரிப்போருக்கு அது கூட இல்லை. அதற்கு மேல் இதில் விவாதிக்க ஒன்றும் இல்லை.

என் சிறு மூளைக்கு எட்டியவரை, என் ஜாதி இது என்று வெளிப்படையாகக் கூறுபவர் ஜாதி வெறி பிடித்தவர் என்றோ, பெரும்பான்மை ஜாதியிலேயே வேட்பாளர் வைப்பவர்கள் வெளிப்படையாக ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று முழங்குபவர் ஜாதிக்கு எதிரானவர் என்றோ முத்திரை குத்துவது அபத்தம்.

யாரும் விவாதத்தால் தங்கள் கருத்துக்களை மாற்றிக்கொள்ளப்போவதும் இல்லை. ஜெய் ஹிந்த்!

dondu(#11168674346665545885) said...

"அந்தக் காலங்களில் கோயில் நிலத்தையோ அல்லது நெல்லோ வருடா வருடம் கொடுப்பார்கள். அதை எல்லாம் அரசியல்வியாதிங்க கோள்ளையடிச்சு ரொம்ப நாளாயிடுச்சி."

"என் சிறு மூளைக்கு எட்டியவரை, என் ஜாதி இது என்று வெளிப்படையாகக் கூறுபவர் ஜாதி வெறி பிடித்தவர் என்றோ, பெரும்பான்மை ஜாதியிலேயே வேட்பாளர் வைப்பவர்கள் வெளிப்படையாக ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று முழங்குபவர் ஜாதிக்கு எதிரானவர் என்றோ முத்திரை குத்துவது அபத்தம்."

மூர்த்தி மற்றும் சுரேஷ் அவர்களே, சமநிலையானப் பின்னூட்டங்களுக்கு நன்றி. சுரேஷ், 200வது பின்னூட்டம் உங்களுடையது. வாழ்த்துக்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

"இனிவரும் காலங்களிலாவது அவர் ராஜாஜி.. பிராமணர்.. ஐயாங்கார்.. என ஒரு குண்டுச் சட்டிக்குள்ளேயே குதிரை ஓட்டாமல்.. தன் ஜாதி மறந்து மனிதத்துக்காக யோசிப்பார்..."

நான் ஜாதியை கூறியது அலையென இணையத்தில் பொங்கி வந்த பார்ப்பன விரோதக் கருத்துகளை சவாலோடு எதிர்நோக்கவே. மேலும் ராஜாஜி, சோ, கல்கி, கமலஹாசன் ஆகியோரை நான் அவர்கள் பார்ப்பனர்கள் என்பதற்காக ஆதரிக்கவில்லை என்று உறுதியாகக் கூறுகிறேன். மாமனிதர் ராஜாஜியைப் பற்றி எழுதவேண்டியவை இன்னும் நிறைய எழுத வேண்டியிருக்கிறது என்பதையும் இப்போதே கூறுவேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வசந்தன்(Vasanthan) said...

ஐயையோ!
200 ஆவது பின்னூட்டம் போடும் 'பாக்கியத்தை" இழந்து விட்டேனே. பார்ப்போம் 250 ஆவதுக்கு சந்தர்ப்பம் வாய்க்குமா என்று.

dondu(#11168674346665545885) said...

250-வது பின்னூட்டமா? ரொம்பத்தான் குறும்பு வசந்தன் அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்

வசந்தன்(Vasanthan) said...

இருந்து பாருங்கள்.

SHIVAS said...

உங்கள் ஜாதிப்பெயரை வெளிப்படையாக நீங்கள் சொல்லிக்கொள்வதை ஏன் மற்றவர்கள் இப்படி எதிர்கிறார்கள் என்று புரியவில்லை.நீங்கள் இன்ன ஜாதி என்று சொல்லுவதால் "மட்டும்" நீங்கள் ஜாதி வெறியர் ஆகிவிடமாட்டீர்கள் என்பதை ஏன் எல்லோரும் ஏற்க மறுக்கின்றனர் என்பதும் விளங்கவில்லை.
இப்படி எதிர்பவர்கள் அனைவரும் "ஜாதி சான்றிதழை" தங்கள் வாழ்நாளில் உபயோகிக்கவே இல்லை என்று உறுதியாக சொல்வார்களா?
இங்கு எதிர்பவர்கள் அனைவரும், தங்கள் ஜாதி இன்னதென்று சொல்லமாட்டோம் என்று கூறி ஜாதி பேதம் பார்க்காமல் திருமணம் புரிந்தவர்களா?
ஐயங்கார் என்பதற்கு பதில் தலித் என்று சொல்லிருந்தால், அதற்கும் எதிர்ப்பு தெரிவித்திருப்பார்களோ?

dondu(#11168674346665545885) said...

இதில் புரிந்து கொள்ள ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. ஜாதி இல்லவேயில்லை என்று பாவனை செய்வது இங்கு வலைப்பூவில் பரவி விட்ட கலாசாரம் ஆகி விட்டது. அவ்வாறு கூறுபவர்களேஎ தங்களுக்கோ அல்லது த்ங்கள் பெண் பிள்ளைகளுக்கொ வரன் பார்க்கும்போது ஹிந்து, மங்கையர் மலர் ஆகிய பத்திரிகைகளில் ஜாதியைக் கூறித்தான் பெண் எடுப்பார்கள்.

வாழ்க்கையில் என் ஜாதியை நான் மறைத்ததில்லை என்றாலும் வலைப்ப்பூ உலகில் எல்லோரையும் போலவே இருந்து விடலாம் என்றுதான் எண்ணினேன். ஆனால் மற்றவர்கள் அவ்வாறு இருக்கவிடவில்லை. யதார்த்தமாக ஏதாவது எழுதினாலும் நீ பார்ப்பனன் அப்படித்தான் எழுதுவாய் என்றெல்லாம் கூறினார்கள். அதற்கேற்றாப்போல் அசோக மித்திரன் விஷயம் வேறு வந்தது. அவ்வளவுதான் ஒரே கூச்சல்தான். அதனாலேயே "என் வெளிப்படையான எண்ணங்கள்" பதிவிட்டேன்.
மற்றவை நீங்கள் அறிந்ததே.

பாவனை விளையாட்டை உடைத்து விட்டேன் அல்லவா, அதனாலேயே இந்த சலசலப்பு. எல்லோரும் அரசரின் ஆடை அணிகலன்களின் நேர்த்தியைப் போலியாக புகழ்ந்தபோது ஒரே ஒரு குழந்தை மட்டும் "அரசர் நிர்வாணமாக அல்லவா நிற்கிறார்" என்று கூறி பலூனை உடைத்ததுபோல என்று நினைத்துக் கொள்ளலாம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Muthu said...

//பாவனை விளையாட்டை உடைத்து விட்டேன் அல்லவா, அதனாலேயே இந்த சலசலப்பு. எல்லோரும் அரசரின் ஆடை அணிகலன்களின் நேர்த்தியைப் போலியாக புகழ்ந்தபோது ஒரே ஒரு குழந்தை மட்டும் "அரசர் நிர்வாணமாக அல்லவா நிற்கிறார்" என்று கூறி பலூனை உடைத்ததுபோல என்று நினைத்துக் கொள்ளலாம்.///

டோண்டு அவர்களே,
யோசிக்க வேண்டிய விஷயம்தான்.

dondu(#11168674346665545885) said...

வலைப்பூவில் இளைஞர் இளைஞிகளே அதிகம். எதேச்சையாக ஒரு வலைப்பதிவாளரை எடுத்துக் கொண்டோமானால் அவர்கள் 1970-க்கு பிறகே பிறந்திருக்கும் சாத்தியக் கூறுகள் அதிகம். நான் 1946-ல் பிறந்தவன். பலரைப் பொருத்தவரை அவர்களைக் குழந்தைகளாகவே கருதுகிறேன். பயங்கர புத்திசாலிக் குழந்தைகள். அவர்கள் நிறைய லட்சியங்கள் கொண்டவர்கள். ஆகவே ஒரு பெருசு திடீரென்று அவர்கள் நம்பிக்கைக்கு எதிராக நிலை எடுத்தபோது கோபம் கொண்டதில் வியப்பேயில்லை. அதே நேரத்தில் நியாய உணர்சியும் அவர்களிடம் நிறைய உண்டு. ஆகவேதான் என் நியாயங்களை பலதளங்களிலிருந்து எடுத்துரைத்த போது அவர்கள் மெதுவாக என்னைப் புரிந்துகொள்ளத் தொடங்கினர். இப்போது வரும் பின்னூட்டங்கள் புரிதலை அதிகமாகவே வெளிபடுத்துகின்றன.

இந்த நேரத்தில் இன்னொன்றையும் நான் குறிப்பிடாவிட்டால் என்னைப் பசித்த புலி தின்னட்டும். என் மேல் மிக அதிகக் கோபம் கொண்டவர்களும் என் வயதுக்கு மரியாதையளித்து கண்யமாகவே பின்னூட்டமிட்டனர். இங்கு மட்டுமில்லாது கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் அதைப் பார்த்தேன். இந்தப் பண்பு என் மனதை நிறைவடைய செய்கிறது.

எல்லோரும் என்னிடம் பொறுமையாக நடந்து கொணதற்கு நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

"அய்யா காஞ்சி.. சான்றிதழ் கேட்டது அரசின் தவறு அய்யா. அது சேர்க்காமல் நான் பட்ட கஷ்டங்கள் எனக்குத்தான் தெரியும். அது உபயோகித்ததுகூட பள்ளி, கல்லூரியில் சேர மட்டுமே. நான் முன்பே சொல்லியபடி அதனை வைத்து நான் எந்த உதவியும் பெற்றதில்லை.. பெறவும் முடியாது!"
நீங்கள் எழுதியதை வைத்தே நான் கூறுகிறேன். நீங்கள் பூணல் போடும் ஜாதி. அதாவது பார்ப்பனர் அல்லது பூணல் போடும் மற்ற உயர்ஜாதி. ஜாதி சான்றிதழ் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்டவர்களையே கேட்பார்கள். அதுவும் சலுகை பெறுவதால். அதுதான் உமது ஜாதிக்கு இல்லை என்று நீங்கள் கூறியதிலிருந்தே தெரிந்ததே. அப்புறம் என்ன பிலிம் காட்டுகிறீர்கள்?

"இப்பதான் கட்சி கட்சியா என் மாமா போனாப் போகட்டும்னு பொண்ணு தறேன்னார்!"
அப்படி வாராது வந்த மாமணியிடம் தலித் பெண்ணைத் திருமணம் செய்ய அனுமதி கேட்க நினைத்தீர்களா? ரொம்ப கொழுப்பு ஐயா உமக்கு!

"ஜாதியில் பிராமின் என்ன தலித் என்ன? ஜாதியே வானாம்னுதான்யா குரல் கொடுத்தேன்!!!"
இதை திருமா, கிருஷ்னஸ்வாமி மற்றும் ராமதாசுக்கு சொல்லுங்கள். நீங்கள் மகாத்மாவாகவே இருந்துவிட்டு போங்கள். ஒரு சமயத்தில் ஒரு மகாத்மாவுக்கு மேல் நாடு தாங்காது. நாங்கள் போலியின்றி அவரவர் சாதி அவரவருக்கு என்று இருந்து விட்டு போகிறோம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

"வெளிப்படையான எண்ணங்கள் என்ற பதிவில்தான் முதன்முதலில் சாதியைக் கூறினீர்களா? அதற்கு முன்னரே உங்கள் ஜாதியைப்பற்றி உங்கள் பதிவில் படித்து விட்டுத் தானய்யா கமல் பதிவில் கலை பற்றிக் கேட்டேன்!"
நீங்கள் குறிப்பிடும் பதிவு இதுதானே?

"11/11/2004
ஆடுதுறை ரகு - ஒரு ஹைபெர் லிங்க்
1972-ஆம் வருஷம் நான் பம்பாயில் சி.பி.டபிள்யூ.டி-ல் இளநிலைப் பொறியாளராக இருந்தேன். ஒரு நாள் கேன்டீனில் வைத்து என் நண்பர் வெங்கடராமன் எனக்கு ஒரு புது நபரை அறிமுகப் படுத்தினார். "ராகவன் இவர்தான் ஆடுதுறை ரகு" என்று. அவரும் ஹல்லோ என்று கை குலுக்கினார். அவர் வயதும் என் வயதும் ஏறத்தாழ ஒன்று போலவே இருந்தது. திடீரென்று என் தலைக்குள் ஒரு பல்ப் எரிந்தது போல் இருந்தது.

உடனே ரகுவை நான் கேட்டேன்: "உங்கள் பெரியப்பா பெயர் கிருஷ்ணஸ்வாமி ஐய்யங்காரா?"
ரகு (திகைப்புடன்): "ஆமாம், உங்களுக்கு எப்படி...?"
நான்: "அவருடைய ஷட்டகர் பெயர் சீனுவாசந்தானே?"
ரகு: "ஆமாம், ஆனால் நீங்கள் எப்படி...?"
நான்: "சீனுவாசன் என்னுடைய மாமா."
வெங்கடராமன்: "சே, இதான் ஐயங்கார்களுடன் பிரச்சினை. ஏதாவது உறவைக் கண்டு பிடித்து விடுகிறார்கள். "(அவர் ஐயர்)
ரகு: "இப்போது நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?"
நான்: "உங்கள் பெரியப்பாவின் மனைவியும் என் மாமியும் சகோதரிகள்".
ரகு (அழும்போல ஆகி விட்டார்): "எப்படி சார் கண்டு பிடித்தீர்கள்?"
நான்: "இது ஒன்றும் பெரிய விஷயமில்லை ரகு. 1955-ல் என் சின்ன மாமாவுக்குப் பெண் பார்ப்பதற்காக என் அம்மா, சின்ன மாமா மற்றும் உங்கள் பெரியப்பா கும்பகோணம் சென்றனர். திரும்பி வரும் வழியில் ஆடுதுறையில் உங்கள் வீட்டில் தங்கியிருந்தார்கள். அப்போது அந்த வீட்டில் ரகு என்று என் வயதுடையப் பையன் இருந்ததாக என் அம்மா கூறியிருந்தார். இப்போது ஆடுதுறை ரகு என்று என் காதில் விழுந்தவுடனேயே அந்த ஞாபகம் வந்தது. ஆகவே உங்களைக் கேட்டேன்."

அப்பொது கணினி அறிவு எனக்கோ வேறு யாருக்குமோ இல்லை. இப்போது அது நடந்திருந்தால் இதை ஒரு ஹைபெர் லிங்கிற்கான உதாரணமாக ரகுவிடம் கூறியிருப்பேன்.என் வாழ்க்கையில் இம்மாதிரி பல ஹைபெர் லிங்குகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. மேலும் உதாரணங்கள் பிறகுத் தருவேன்."

இதில் நடந்தது நடந்ததபடி எழுதியுள்ளேன். இங்கு ஹைப்பர்லிங்கைப் பற்றித்தான் பேச்சு. ஐயங்கார் அல்லது ஐயர் என்பது நிகழ்ச்சிக்கு வெறுமனே சுவையூட்டின. வெங்கட்ராமன் அவர்கள் புலம்பியது நிஜம். நீங்கள் இதை வேறு எம்மாதிரி எழுதவேண்டும் என்று நினைக்கிறீர்கள்? இப்படிக் கூறியிருக்கலாமோ?

'வெங்கடராமன்: "சே, உங்கள் ஜாதிக்காரர்களுடன் பிரச்சினை. ஏதாவது உறவைக் கண்டு பிடித்து விடுகிறார்கள். "(அவர் வேறு ஜாதிக்காரர்)'. அதற்கும் முன்னால் நான் கிருஷ்ணஸ்வாமி என்று மட்டும் கூறியிருக்க வேண்டும். எவ்வளவு போலியாகத் தெரிகிறது? நீங்கள் அப்படி எழுதுவீர்களோ என்னமோ, நான் அவ்வாறு செய்ய முடியாது.

நீங்களும் லேசுபட்டவர் இல்லை. கீழ்சாதிக்காரர்கள் உட்கார்ந்தத் திண்ணையை உங்கள் பாட்டி கழுவினார், உங்கள் அப்பா கேட்டுக் கொண்டும் நீங்கள் பூணல் போடுக் கொள்ளவில்லை. இது மட்டும் என்னவாம்? நிற்க.

"என் வெளிப்படையான எண்ணங்கள்" பதிவில் நான் பார்ப்பனன், வடகலை ஐயங்கார், அச்சாதியில் பிறந்ததற்கு பெருமைப் படுகிறேன் என்றெல்லாம் சவால் தொனியில் கூறினேன். அவ்வாறு செய்ததற்கானக் காரணங்களையும் கூறினேன். இவ்வாறு கூறியதற்கும் போகிற போக்கில் கூறியதற்கும் உள்ள வேறுபாடுகளை நீங்கள் உணரவில்லையா? மற்றப்படி நான் ஜாதி வெறியனா இல்லையா என்பதை நீங்களே தீர்மானித்து கொள்ளுங்கள். எனக்கு கவலையில்லை, ஏனெனில் தங்களிடம் நான் சான்றிதழ் கேட்கவில்லை.

போகிற போக்கில் இன்னொரு தகவலைக் கேட்டு கொள்ளுங்கள் மூர்த்தி அவர்களே. என்னுடைய போட்டோவை அருண் வைத்தியனாதன் பதிவில் பார்க்கலாம். அவர் குறும்படங்களை சென்னை வலைப்பூவினருக்கு போட்டு காண்பித்தபோது எடுத்தப் படங்கள் அதில் உள்ளன. நான் மாலன் அவர்கள் பக்கத்தில் உட்கார்ந்துள்ளேன். என் பெயரும் சந்தேகத்திடமின்றி குறிப்பிடப்பட்டுள்ளது. உங்கள் கற்பனை நண்பர் கூறியபடி நான் நெற்றியில் பட்டை, கழுத்தில் கொட்டை ஆகியவற்ரோடு இருக்கிறேனா என்பதையும் பார்த்து கொள்ளுங்கள். விட்டால் மொட்டையடித்து, கோவணம் கட்டி, உடல் முழுக்கப் பட்டை போட்டு, கையில் தம்புராவைக் கொடுத்திருப்பீர்கள். அதுவும் ஒரு ஐயங்காருக்கு!

அன்புடன்,
டோண்டு ராகவன்

மாயவரத்தான் said...

//'மனவாடு' என்ற ஒரே ஒரு காரணத்திற்காக மட்டுமே மாயவரத்தான்கள் ஆதரிக்காமல் நடுநிலையாகப் பேசுமாறும் வேண்டி விரும்பிக் கொள்கிறேன்.//
மணவாடு என்பதினால் 'மட்டும்' நான் அவருக்கு ஆதரவு (?!) வழங்கவில்லை! கருத்தில் நியாயம் இருப்பதினால் தான் வழங்கினேன்.. அதே சமயத்தில் அவரது கருத்தில் இருக்கும் நியாயத்தை கருத்தில் கொள்ளாமல் தன்களது 'மணவாடை' குறைகூறுவதாகக் கருதி 'அது நியாயயமா? இது நியாயமா?' என்று சப்பைக்கட்டு சொல்லுபவர்களை என்ன சொல்வது?! இன்னொன்றையும் சொல்ல வேண்டும்.. 'எங்கள்' மணவாடு என்றால் மட்டும் ஒரு பார்வை... மற்றவர்கள் என்றால் மற்ற பார்வை என்று பலர் இங்கே அலைந்து கொண்டிருக்கிறார்கள். எனவே எனக்கும் விரைவிலேயே அப்படி ஒரு பார்வை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை! அம்மணமா அலையறவன் ஊரிலே நான் மட்டும் எதுக்குய்யா பேண்ட், சட்டை போட்டுகிட்டு அலையணும்?!

dondu(#11168674346665545885) said...

"எனவே எனக்கும் விரைவிலேயே அப்படி ஒரு பார்வை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை! அம்மணமா அலையறவன் ஊரிலே நான் மட்டும் எதுக்குய்யா பேண்ட், சட்டை போட்டுகிட்டு அலையணும்?!"
மாயவரத்தான் அவர்களே, இப்போது நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள், நான் ஏன் என் வெளிப்படையான எண்ணங்களைக் கூறினேன் என்று. ஒரு தடவை துணிந்து கூறிவிட்டால் என்ன தலையையா சீவி விடுவார்கள்? இப்போது என்னை யாரும் பார்ப்பனருக்கு ஆதரவாக எழுதுகிறேன் என்று கூற மாட்டார்கள். அது தெரிந்த விஷயம்தானே. ஆகவே கருத்து பரிமாற்றங்கள் மட்டும் நடக்கும்.
இப்போது மூர்த்தி அவர்கள் விஷயத்துக்கு வருவோம். மனிதர் மற்றவர்களைப் பற்றி அவர்கள் தத்தம் ஜாதியை வெளிப்படையாக்குகிறார் என்றெல்லாம் கூறி வந்தவர் அவரே அவ்வாறு செய்து விட்டார். அவர் ஆசாரமான குடும்பத்தில் பிறந்தவர். (அவர் பாட்டி மூர்த்தியின் நண்பர்கள் திண்ணையில் உட்கார்ந்த இடத்தை தண்ணீர் விட்டு கழுவியவர், ஏனெனில் நண்பர்கள் கீழ்சாதியினர்), பூணல் போடும் ஜாதி (அவர் தந்தை கேட்டு கொண்டும் அவர் பூணல் போட்டு கொள்ளவில்லை). மேலும் முன்னுக்குப் பின் முரணாகப் பேசுபவர். முதலில் கல்யாணமாகதவர் என்று கூறினார். பிறகு தன் மனைவியைப் பற்றி கூற, நான் விளக்கம் கேட்க, தனக்கு நிச்சயம் செய்யப்பட்ட தன் மாமா பெண் என்று சமாளித்தார். ஏன்னுடைய வெளிப்படை தோற்றத்தை தவறாக விவரித்த அவர் அப்படியெல்லாம் இல்லை என்றவுடன் பைய நழுவினார்.
இப்போது இதைப் பாருங்கள்:
"அரசர் ஆடை அணிகலன் போட்டு இருந்தால் அதனைச் சொல்வதில் தப்பு என்னய்யா இருக்கு? போலியாகப் புகழ்வது என்பதில் எனக்கும் உடன்பாடில்லை. வெளியே உடை இருக்கும்போது அது எப்படிய்யா நிர்வாணம் ஆகும்?
"அரசர் ஆடையற்று இருக்கிறார்" (The emperor has no clothes) என்பது ஒரு பிரசித்தி பெற்ற கதையைக் குறிக்கிறது. அது கூட இவருக்கு தெரியவில்லை. அல்லாது தெரியாதது மாதிரி பாவனை செய்கிறேர். தேவையானதை அவரே டிக் செய்து கொள்ளட்டும்.
ஆனால் ஒரு விஷயத்துக்கு அவரிடம் நன்றி பாராட்டுவேன். அவர் இல்லையென்றால் இப்பதிவில் முதல் நூறு பின்னூட்டங்கள் வந்திராது. இப்போது அவர் தயவில் 250 அல்லது 300 ஐத் தாண்டுகிறோமா என்பதையும் பார்ப்போம். என்னுடைய மின்னஞ்சல் வரவுப் பெட்டியில் அவர் பெயரைப் பார்த்தவுடன் சந்தோஷம் ஏற்படுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

கிவியன் said...

டோண்டு நீ ஒரூ வாண்டு
வாமனன் தான் என்று சொன்னாலும்
கோவனம் உருவி
காட்டுவிக்க
வானரக் கூட்டம்
கூடி நிற்கும்
வலைக் கானகத்தில்
பூந்து விளையாட,
தும்பை விட்டு
வால் பிடிக்க
சேதி சொன்னாய்
வாலென்வோ நீண்டுத்தான்
போகிரது
சீக்கிரம் முடி..

சுரேஷ்

dondu(#11168674346665545885) said...

அன்பு சுரேஷ், கூறும், நானா வாமனன்?
அல்ல, நான் அவனல்ல, நான் ராகவன்.
பலியை ஏமாற்றினான் வாமனன்
மூன்றாம் அடியை தலைமேல் வைத்தானவன்
வெளிப்படையாக கொள்கைக்காக இங்கு ராகவன்
தான் அப்படித்தான் என்று கூறும் செருக்கானவன்

"தும்பை விட்டு வால் பிடிக்க சேதி சொன்னாய்"
எது தும்பு எது வால் என்பதை நீயிங்கு விளக்குவாய்?

"வாலென்வோ நீண்டுத்தான் போகிறது சீக்கிரம் முடி.."
அதனாலென்ன, படிப்பவருக்கு போகட்டுமே முடி

மறுபடி கூறுவேன், நான் அல்ல வாமனன்,
இப்படிக் கூறுவது அன்புடன் டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

"என் நடுநிலையைப் பற்றி உங்களுக்கு விளக்கிக்கூற சொன்ன சில வார்த்தைகளை டோண்டு அய்யா இறுகப் பற்றிக்கொண்டார்!"
நீங்கள் நான் எழுதிய ஆடுதுறை ரகுவைப் பற்றியப் பதிவில் போகிற போகில் கூறியதைப் பிடித்து கொண்டதை விடவா? அதுவும் நீங்கள் தற்போதையப் பதிவில் கூறிய முரண்பாடுகளைத்தான் சுட்டிக் காட்டினேன். எது எப்படியானாலும் நம் விவாதம் தொடரட்டும். பின்னூட்டங்களின் எண்ணிக்கை வளரட்டும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

"நான் என் வாழ்வின் சில பகுதிகளை உங்களிடத்தில் கூறியது, "பாருங்கள்.. எனக்கு சாதீய உணர்வில்லை!" என்பதை சொல்லிக் காட்ட மட்டுமே."
அது உங்கள் முடிவு மூர்த்தி அவர்களே. அதையே எல்லோரும் செயல்படுத்த வேண்டும் என்று நீங்கள் ஏன் தீவிரமாக எதிர்ப்பார்க்க வேண்டும்? என்னுடைய செய்தி என்னவென்றால் மற்றவர்கள் என்னை ஜாதியை வைத்து தாக்கினால் அக்கருத்தை இருமடங்கு தீவிரத்துடன் எதிர்க்கொள்வேன் என்பதே. நான் எனக்கு உண்மையாக இருக்கிறேன். அது போதும் எனக்கு.
அப்படியே நீங்கள் உங்கள் வாழ்வில் நடந்ததைக் கூறும்போது ஒரு பதிவுக்குள்ளேயே பல முன்னுக்கு பின் முரணான தகவல்கள் வந்தன. அவற்றைத்தான் சுட்டிக்காட்டினேன். அதற்கு பதில் கூற முயன்று மேலும் குழப்பத்தில் சிக்கினீர்கள். நீங்கள் உண்மையையே எழுதினால் ஒரு பிரச்சினையும் கிடையாது. அதற்கு மாறாக உண்மையற்றவற்றை எழுதும்போது எப்போது எதை எங்கு கூறினோம் என்பதையெல்லாம் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டியுள்ளது. இதைத்தான் ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய்கள் என்று பெரியோர்கள் அக்காலத்திலேயே எழுதிவிட்டனர்.
என் போட்டோவை அருண் வைத்தியனாதன் பதிவில் பார்த்து விட்டீர்கள்தானே?

அன்புடன்,
டோண்டு ராகவன்

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

"என்னால் அவர்களைக் கண்டிக்க முடியும். காரணம் நான் நடுநிலைவாதி! ஆனால் நீங்கள் அப்படியல்ல!"
நீங்கள் மஹாத்மா காந்தியாகவே இருந்துவிட்டு போங்கள். நான் வெறும் மனிதனாகவே இருந்துவிட்டு போகிறேன். அதுவே எனக்கு போதும். மேலும் நான் அவர்கள் என்னைத் தாக்கினால் மட்டும் தீவிரமாக எதிர்க்கொள்வேன். உங்களைப்போல லென்ஸ் வைத்து கொண்டு யார் எவ்வாறு நடக்கிறார்கள் என்பதெல்லாம் பார்ப்பதற்கு எனக்கு நேரம் இல்லை.

"எந்த இடத்திலய்யா முரண்?"
"எது பொய்யென்று சற்றே விளம்புங்கள் சாரே!"
என்னுடைய தோற்றத்தைப் பற்றித் தவறான தகவல். முதலில் பிரம்மச்சாரியாக கூறிக் கொண்டது, பிறகு மனைவியைப் பற்றிப் பேசியது, பிறகு மனைவியாகப் போகிறவள் என்று சமாளித்தது, அவர் அனுமதி பெற்று தலித் பெண்ணை மணக்க ஆசை பற்றிய வெளிப்பாடு. (என் வீட்டிற்கு அவருடன் வருவீர்கள் அல்லவா, அப்போது "அனுமதி" உங்களுக்காக நான் சிபாரிசு செய்து வாங்கிக் கொடுக்கிறேன்!! அவரை அழைத்து வரும் தைரியம் உண்டா உங்களிடம்)
"அந்த முகத்திலும் ஜாதிக்களை தானய்யா தெரிகிறது!"
ஒரு தடவை கோவிலுக்கு ஏதோ திருமஞ்சனம் என்று என் வீட்டம்ம கொடுத்த நிர்ப்பந்தத்தின் பேரில் நாமம் இட்டுக்கொண்டு வர, நடுவில் ஒரு பழக்கடைக்காரர் என்னைப் பார்த்து "முதலியார் ஐயா நால்ல பழம், வாங்கிக் கொண்டு போங்கள் என்று கூற, என் வீட்டம்மா அவரைப் பார்த்து முறைக்க, அவர் சுதாரித்து கொண்டு, மன்னிக்கணும் ஐயங்கார் சார் என்று வழிந்தார். என் முகத்தைப் பார்த்த உடனேயே ஐயங்கார் என்று உங்களுக்கு பட்டதா? அதற்காகவே நன்றி.
மற்றப்படி நெற்றியில் பட்டை, கழுத்தில் கொட்டை எல்லாம் இல்லைதானே?

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

"தமிழ் வலைப்பதிவுகளில் ஆகக்கூடிய பின்னூட்டம் வந்தது இட்லிக்கா டோண்டுவுக்கா என்னும் போட்டி.பார்க்கலாம்"
அதானே, அதுவும் பலரது (ஒரு புது மாப்பிள்ளை உட்பட) ரத்த அழுத்தத்தை அதிகரித்த டோண்டு முன்னேறி விடலாமா? அது சரி, பின்னூட்டங்களின் சொல் எண்ணிக்கையைப் பார்க்க வேண்டாமா?

இப்பதிவுக்கு இதுவரை வந்தப் பின்னூட்டங்களின் (இந்தப் பின்னூட்டத்தை சேர்க்கவில்லை) விவரங்கள் இதோ.
சொற்கள்: 20,680
பக்கங்கள்: 92
பத்திகள்: 447
வரிகள்: 4040

இவ்விரங்களின் ஆதாரம்: பின்னூட்டங்களை நகல் எடுங்கள், ஒரு காலி வேர்ட் கோப்பை உருவாக்கி அதில் நகல் எடுத்ததை ஒட்டுங்கள். மேலே "கருவிகள்" மெனுவில் க்ளிக்குங்கள். வேர்ட் கௌன்டை க்ளிக்குங்கள். மேலே கூறிய விவரங்கள் கிடைக்கும்.

இப்பதிவின் மூலக் கருத்தைப் புறக்கணித்துப் பலர் இட்ட ஜாதிப் பின்னூட்டங்கள்தானே இப்பதிவின் பின்னூட்டங்களின் எண்ணிக்கை எகிறக் காரணம்? இப்போது கையைப் பிசைந்து கொண்டிருப்பார்கள் பாவம், போயும் போயும் டோண்டுவுக்கா நம் சேவை பயன்பட்டது என்று. ம்ம்ம்ம் நடக்கட்டும். அதிகப் பின்னூட்டங்கள் பெறுவது எப்படி என்று எனக்கு தோன்றுவதை எழுத இருக்கிறேன். அதிலும் உங்கள் மேலான பின்னூட்டங்களை எதிர்பார்க்கிறேன்.

வலைப்பதிவில் இருக்கும் பெரும்பான்மையினர் இளைஞர்கள். என் பெண் வயதுக் கூட்டாளிகள். (அவள் சமீபத்தில் 1975-ல் பிறந்தவள்) அவர்களின் இச்செயல் என்னை சந்தோஷத்தில் ஆழ்த்துகிறது. பயங்கர புத்திசாலிக் குழந்தைகள். அவர்களின் வெற்றியும் எனக்கு களிப்பு அளிக்கும். ஆனால் வெற்றி முழுமையாக இருக்கட்டும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

மாயவரத்தான் said...

என்னா சார்.. இப்படி ரொம்ப பீலிங் ஆக வுட்டுட்டீங்க?!..?! இதோ வந்திடரேன்.. போடுங்கய்யா ஓட்டு.. நம்ம டோண்டு ஐயா பதிவை பாத்து! (டீல் என்னான்னு சொல்லலையே!)

dondu(#11168674346665545885) said...

இதில் பீலிங் ஆவதற்கு ஒன்றுமில்லை மாயவரத்தான் அவர்களே. ஒரு நாளைக்கு 4 காட்சிகள் என்னும் கணக்கில் சூப்பர் ஸ்டார் படம் ஒன்று ஹவுஸ்புல்லாக 225 நாட்கள் ஓட, நகரத்தில் ஒரே ஒரு தியேட்டரில் காலைக்காட்சி மட்டும் காலியாக வீம்புக்கு 250 நாட்கள் ஓட்டிவிட்டு ஒப்பிடுவது போல இல்லை?

இட்லி வடையாரின் 200-வது பின்னூட்டத்தை சேர்த்து வந்த ஸ்டேடிஸ்டிக்ஸ்:
சொற்கள்: 3354
பக்கங்கள்: 26
பத்திகள்: 400
வரிகள்: 528

முக்கியமாகப் பார்க்கப்பட வேண்டியது சொற்களின் எண்ணிக்கையே. மொழிபெயர்ப்பாளர்கள் விலை நிர்ணயிப்பதும் சொல் அடிப்படையிலேயே.
புரிகிறதா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

அதிகப் பின்னூட்டங்கள் (இது வரை 252) பெற்று இட்லி வடையார் முந்திக் கொண்டார். அவருக்கு வாழ்த்துக்கள். "நம்ம நாட்டுக்கு பொருத்தம் நாமே நடத்தும் கூட்டுப் பண்ணை விவசாயம்" என்றப் பாடலே நினைவுக்கு வருகிறது.
"பட்டப் பாட்டுக்கு தகுந்த ஆதாயம்...."

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

"லென்சா.. நானா? தவறெனப்படுவதை தயங்காமல் எடுத்துரைப்பதற்குப் பெயர்தான் லென்சுங்களாண்ணா?"
தவறே இல்லைதான் ஆனால் அது பதிவை திசை திருப்புவதாக இருந்தால் அந்த அடிப்படையில் தவறுதான். ஒவ்வொருவருவரின் வெளிப்பாடுகளும் அவரவர் அனுபவத்துக்கேற்பத்தான் வரும். அதில் எல்லாம் லென்ஸ் எடுத்து பார்ப்பது தவறே. முக்கியமாக இப்பதிவு அன்புமணி மற்றும் மும்பை இன்ஸ்பெக்டரைப் பற்றியது. இதில் அதற்கெல்லாம் இடம் இல்லை. என்னுடைய வயதும் அனுபவமும் உங்களுக்கு வரும்போது புரியும். அப்போது நான் இருப்பேனோ இல்லையோ, என்னைக் கண்டிப்பாக நினைத்து கொள்ளுங்கள்.

"அய்யா சொன்னவர் உங்க நண்பர்.. என் நண்பர்.. நம் இருவரின் நண்பர். இதில் தவறு எங்கே என் பக்கம் இருக்கிறது?"
அது தவறு என்று தெரிந்த பிறகும் அவர் என்னைப் பற்றி மேலும் கூறியதை ஆராய வேண்டும் என்ற எண்ணம் இல்லாது ஏற்று கொண்டது உங்கள் தவறு. தவறை தவறு என்று ஒப்புக்கொள்ளாது நழுவி ஓடியதும் தவறே. அதை ஒப்புக்கொள்ளச் செய்வதற்காகக் நான் என்னுடைய அத்தனைப் பிடிவாதத்தையும் உபயோகிக்க நேர்ந்தது.

"கட்டிய மனைவியைத் தவிர மற்ற பெண்களையெல்லாம் தெய்வமா மதிக்கனும்னு பெரியவுக சொல்லிக் கொடுத்து இருக்காங்க.. எல்லாருக்கும் நான் சொல்ல வரலை. எனக்கு நான் பின்பற்ற விரும்புறேன். அப்ப ஒரு அண்ணாச்சி கேட்டாக.. ஏன்யா தலித் பொண்ண கட்டுவியான்னு? அதுக்கான பதிலாகத்தான் சொன்னேன்!"
இவ்வாறு வேடிக்கையாகக் கூறும் பதிலில்தான் உங்கள் உள்மனதின் ஆசை வெளிப்படுகிறது என்று ப்ராய்ட் கூறுவார்.

"சிலரின் முகத்தில் தவக்களை தெரியுமாமே?!"
நடிகர் தவக்களையைக் கூறவில்லைதானே?

"பிகு:- இட்லி வடையார முந்த விடக்கூடாது! அதெல்லாம் ஒண்ணும் கவலைப்படாதீங்க. ஜமாய்ச்சிடலாம்!"
அதெல்லாம் ஒரு கவலையும் இல்லை. அம்மாதிரி முத்திரையிடும் பின்னூட்டங்கள் தேவையில்லை. நாம் இருவர் செய்யும் விவாதத்தால் வரும் பின்னூட்டங்களே ஆயிரம் மடங்கு உயர்வானவை. வெறும் எண்ணிக்கை முக்கியம் இல்லை. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அது சரி, அதில் வரும் 251-வது பின்னூட்டத்தைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

251:"This post has been removed by a blog administrator.
By Anonymous, at May 17, 2005 9:40 PM

252This post has been removed by a blog administrator.
By மாயவரத்தான், at May 17, 2005 9:57 PM

253யோவ் இட்லி...! என்னை இல்லாம 252 எடுத்துட்டே இல்ல? உன்னை நான் அப்பறமா வெச்சிக்கறேன்!
என்ன இருந்தாலும் எங்க டோண்டு மாதிரி உங்களால ஒரு சார்பா எழுதத் தெரியலை பாருங்க!
By மூர்த்தி, at May 18, 2005 8:27 AM
253-வதாக நீங்கள் இட்டப் பின்னூட்டத்தின் முந்தையதற்கு முந்தையதுதான் 251-ஆம் பின்னூட்டம். பல மணி நேரம் எல்லோரும் பார்க்க வைத்து விட்டுத்தான் அது நீக்கப்பட்டது. நீங்களும் அதற்கு உடனே எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பது 253-ஆம் பின்னூட்டத்தில் தெளிவாகத் தெரிகிறது. அதை நீங்கள் அப்போதே பார்க்கவில்லை என்பதை நான் நம்ப இயலாது, மன்னிக்கவும். என்னவோ கஷ்டப்பட்டு தேடி கண்டுபிடித்ததாகக் கதை விடுகிறீர்கள். மாயவரத்தான் மட்டும் எதிர்ப்பு தெரிவித்தார்.
எது எப்படியானாலும் இப்போது புரிகிறதா நான் ஏன் தீவிரமாக என் ஜாதியைக் கூறிக் கொண்டேன் என்று?
திரும்பக் கூறுகிறேன், எந்த ஜாட்டானுக்காகவும் என் கொள்கையை மாற்றிக் கொள்ள இயலாது. அப்பதிவில் நடந்ததே நான் கூறியதற்கு அத்தாட்சி.
அன்புடன்,
டோண்டு ராகவையங்கார்

dondu(#11168674346665545885) said...

"நம்புவதும் நம்பாததும் உங்கள் இஷ்டம். நீங்கள் நம்பவேண்டும் என்பதற்காக நான் என் தலையை வெட்டமுடியுமா என்ன?"
தலையை எல்லாம் எதற்கு வெட்டிக் கொள்ள வேண்டும்? ஆனால் தயவு செய்து குறைந்த பட்சம் என்னுடைய பதிவுகளில் பின்னூட்டம் இடும் போதாவது ஏசு, புத்தர், காந்தி ரேஞ்சுக்கு உங்களைப் பற்றி நீங்களே உத்தம புத்திரன் மாதிரிக்கு பேசிக் கொள்ளாதீர்கள்.
அதே மாதிரி மற்றவர்களைப் பற்றி துரிதமாக ஒரு முடிவுக்கு வந்து உங்கள் கருத்தையே திரும்பத் திரும்ப வலியுறுத்திக் கொண்டிருக்காதீர்கள். மற்றவர்கள் இப்படித்தான் எழுத வேண்டும் அப்படித்தான் எழுத வேண்டும் என்றெல்லாம் வயலும் வாழ்வும் தோரணையில் உபதேசம் செய்யாதீர்கள் - குறைந்த பட்சம் எனக்கு செய்யாதிர்கள் என்பதே என் வேண்டுகோள். இப்போது போய் கமல் பதிவில் பதிவில் பாருங்கள். மற்றவர்கள் இல்லை என்று மறுத்தாலும் சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தீர்கள் என்று.
உங்களுக்கு இப்போது வரும் எரிச்சல்தான் அவர்களுக்கும் வந்தது என்பதை உணருங்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

"நான் படித்து மறுமொழியிட்ட அன்று சத்தியமாக அந்த அனானியின் கருத்தினைப் படிக்கவில்லை. காரணம் அங்கே அவரின் மறுமொழி இல்லை. ஒரே சமயத்தில் நிறைய பேர் மறுமொழியிட்டுக் கொண்டிருந்தது காரணமாக இருக்கலாம். ஒருவேளை அந்த அனானி எழுதிக் கொண்டிருந்தபோதேகூட நானும் என் சாதாரணக் கருத்தை எழுதி இருக்க வாய்ப்புண்டு. எது எப்படி இருந்தாலும் எனது முதல் மறுமொழி அங்கே பதியப் படும்போது அனானியின் மறுமொழி அங்கே இல்லை என்பது உண்மை."
முழுப் பூசனிக்காயை சோற்றில் மறைக்கிறீரே.
251 ஆம் பின்னூட்டத்தின் நேரம் மே 17, 2005 9:40 PM
252 ஆம் பின்னூட்டத்தின் நேரம் மே 17, 2005 9:57 PM
253 ஆம் பின்னூட்டத்தின் நேரம் மே 18, 2005 8:27 ஆM

உண்மையைக் கூறப்போனால் 252 க்கு அப்புறம் சரியாக 10 மணி 30 நிமிடத்துக்கு ஒரு பின்னூட்டமும் இல்லை. நீங்கள் வந்து சாவகாசமாக மறுபடி ஆரம்பித்து வைத்தீர்கள். வெறுமனே பார்க்கவில்லை என்று கூறியிருந்தாலும் பரவாயில்லை. அப்பின்னூட்டம் இல்லவேயில்லை என்று கூறுவது பச்சைப் புளுகு. இதில் குறிப்பிடும் நேரங்கள் இந்திய நேரம். உங்கள் கணினியில் சிங்கை நேரம் குறிக்கப்பட்டிருக்கலாம். எப்படியிருப்பினும் கால வித்தியாசம் 10 மணி 30 நிமிடம். இதைத்தான் ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய் கூறுவது என்பார்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

"நீங்கள் ஜாதி இல்லை என்று சொல்லிப் பாருங்கள். ஒருபயல் உங்களைத் திட்டமாட்டான்!"
ஆரம்பிச்சுட்டாரையா காந்தித் தாத்தா போதனையை. அதை உம்மிடமே வைத்துக்கொள்ளும்.

"உம்மைப்போல உயர்குடியில் மட்டுமே உண்ணும் பழக்கமில்லாதவன் நான்!"
அதை உங்கள் கற்பனை நண்பர் கூறினாரோ? என் தோற்றத்தையே சரியாகக் கூறத் தெரியாதவர் கூறும் இன்னொரு பொய் அது. எது எப்படியாயினும் உம் சான்றிதழ் எனக்கு தேவையில்லை.

"எங்க எங்க பார்ப்பணர் வலை பதியறாரோ அங்கெல்லாம் போயி பின்னூட்டு.."
நான் எங்கு போய் என்ன செய்ய வேண்டும் என்று கூற நீங்கள் யார் ஐயா?

"எது பொய்."
10 மணி முப்பது நிமிடம் அப்பின்னூட்டமும் அதன் பிந்தையப் பின்னூட்டமும் (ஒவ்வொன்றும் ஒரு வரிதான்) அப்படியே இருந்திருக்கின்றன, நீங்கள் சாவகாசமாக உங்கள் பின்னூட்டம் பதியும் வரை. அதை நீங்கள் பார்க்கவில்லை? அது உண்மையானால் இப்படித்தான் எங்கும் என்ன நடக்கிறது என்று பார்க்காமல் வாய்க்கு வந்தபடி பின்னூட்டமிடுவீர்களா? அதாவது அப்ஸெர்வேஷன் கிடையாது என்கிறீர்கள். அப்படியே இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதே திறமையின்மையுடந்தான் உங்கள் வேலையிலும் இருப்பீர்களா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

"அந்த ஆளு அப்படி என்னய்யா நடிச்சார்? ஏன்யா இந்த ஆளு வரிசையா அடுக்கினார்?"

அது அவர் இஷ்டம் ஐயா. நீங்கள் யார் அவர் மனதைப் பார்த்து போலீஸ் வேலை செய்வதற்கு? ஆரம்பத்திலேயே கமலின் அண்டர்வேரை எல்லாம் வேறு ஆராய்ச்சி செய்தீர்கள். இம்மாதிரி அதுவும் இன்னொரு வலைப்பதிவரின் பெயரை முகமூடியாக போட்டுக்கொண்டு? சொந்தப் பெயரில் எழுத உமக்கு ஏன் துணிவில்லை? கடைசியில் இன்னொருவர் வழிப்போக்கன் என்றப் பெயரில் தன் பெயர் எம்-ல் ஆரம்பிக்கிறது என்று கூற வேறு வழியில்லாது தாங்கள் யார் என்று கூறினீர்கள்.

என்னமோ மற்றவர் மனதைப் படிக்கும் நிபுணர் பொல பந்தாவெல்லாம் ஏன் விடுகிறீர்கள்? உம்முடைய சொந்தப் பதிவில் போய் நீங்கள் உபதேசம் செய்வதை எல்லாம் வைத்துக்கொள்ளுங்கள். அங்கு வரும் பின்னூட்டங்களுக்கு பதில் எழுதி பாருங்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

கொழுவி said...

இங்கு என்னமோ சண்டை நடக்குதுன்னு சொன்னாங்க! அதான் வந்து பார்த்தேன்..

ம்.. டோண்டு சொன்னது போல இட்லிவடையின் பின்னூட்டங்களை விட ஆயிரம் மடங்கு அர்த்தமுள்ள பின்னூட்டங்கள் தான் இவை.

டோண்டு ராகவய்யங்கார்..

டோண்டு ராகவன் என்கிறது உங்க பெயர்.. அய்யங்கார் ங்கிறது நீங்க படிச்சு வாங்கின பட்டமா?

சண்டைக்கு வரேல்லைங்க.. இந்த கேள்விக்கெல்லாம் நீங்க இதுவரைக்குள்ள பதிலெல்லாம் சொல்லியிருப்பீங்கன்னு நினைக்கிறேன். (நான் தான் படிக்கல்ல.. என் தப்பு தான்..)

சும்மா கேட்கனும் போல தோணிச்சி.. கேட்டுட்டேன்னோ..

dondu(#11168674346665545885) said...

வாருங்கள் மஸ்ட் டூ அவர்களே. உங்களை ரொம்பவும் மிஸ் செய்தேன். இது உண்மையே. நீங்கள் எடுத்துக்கொண்ட பெயர் என் பெயரிலிருந்து தேர்வு செய்யப்பட்டது என்பதே எனக்கு உங்கள் மேல் பாசம் வரச் செய்தது.
டோண்டு ராகவையங்கார் என்பது ஒரு தார்மீக கோபத்தின் வெளிப்பாடு. வலைப்பதிவில், தமிழகத்தில் உள்ளது போல, பார்ப்பன எதிர்ப்பு என்பது இயல்பானது. அதை என் வழியில் இவ்வாறு எதிர்க்கொள்கிறேன் என்பதை ஏற்கனவே பல இடங்களில் கூறியுள்ளேன். நீங்களும் படித்திருப்பீர்கள்தானே. மற்றப்படி நீங்கள் என்னை "வேதம் புதிது" டயலாக் தோரணையில் கேட்டதை மிகவும் ரசித்தேன். குழந்தை கேள்வி கேட்க ஒரு பெரிசு ரசிப்பது போல. ஏனெனில் நீங்கள் கேட்பதன் நோக்கம் களங்கமற்றது என்பது எனக்கு புரியும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்

கொழுவி said...

ஐயங்கார் தெரியாது - சொன்னால்
பொய்யென்பார்
தெரிந்த கார் ஒன்றுதான்
தொலைந்த என் சிவப்புக்கார்.
ஐயங்கார்!
ஐயோ என் கார்.

(முந்நூறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க)

கொழுவி said...

டோண்டு தாத்தா! இந்த பின்னூட்டங்களை புத்தகமாக போடும் நோக்கம் ஏதாவது இருக்கிறதா?

வசந்தன்(Vasanthan) said...

மூர்த்தி!
விவாதிப்பதிலும் கண்ணியம் வேண்டும். ஆரம்பத்தில் சரியாகச் சென்றுகொண்டிருந்த நீங்கள் இப்போது ஏன் தடம் மாறுகிறீர்கள். என்ன இருந்தாலும் டோண்டுவின் வயதைக் கருதியாவது கண்ணியமான வார்த்தையைப் பயன்படுத்துங்கள். கடைசிப்பின்னூட்டங்களில் நீ, போ, பார், உன்னை என்று அவரை ஒருமையில் விளிக்கவும், ஒருமையில் கதைக்கவும் முற்பட்டுகிறீர்கள். இது நல்லதன்று. ஒருமையிற் கதைப்பது தான் இலக்கணப்படி சரியென்றாலும் நாம் பொதுவானவொரு பாவனையைக் கைக்கொள்கிறோம். அதை விட்டுவிடாதீர்கள். உங்களின் ஒருமை விளிப்புக்களைப் பார்க்கும்போது நிதானமிழந்துவிட்டீர்களோவென்று தோன்றுகிறது.

வசந்தன்(Vasanthan) said...

மேற்குறிப்பிட்ட பின்னூட்டம் கதையாடல்களின் சொற்றேர்வுகளைக் கருத்திற்கொண்டு மட்டுமே எழுதப்பட்டது. விவாதத்துக்கும் எனக்கும் சம்பந்தமில்லை.

வசந்தன்(Vasanthan) said...

இருநூற்றைம்பதை அடைய வாழ்த்துக்கள்.

வசந்தன்(Vasanthan) said...

இருநூற்றைம்பதை அடைய வாழ்த்துக்கள்.

வசந்தன்(Vasanthan) said...

இதோ இருநூற்றைம்பதாவது பின்னூட்டம் என்னுடையது.

dondu(#11168674346665545885) said...

"நான் மட்டுமா அங்க கண்டனம் செய்தேன். எத்தனை பேரு செய்தார்கள்? நீ ஒரு ஆள் மட்டும்தானேய்யே அந்தாளுக்காக குரல் கொடுத்தே? அதும் எதுக்கு குடுத்த? ஐயங்கிற காரணத்தால மட்டுமே குடுத்த! வேற எதுமே உனக்கு அப்ப முக்கியம் இல்ல!!! எங்க எவன் ஐயனை எதுத்து பேசுனாலும் உனக்கு புடுங்கிக்கும். சொல்லப்போனா நான் எல்லா இடத்திலும் சாதியே வானாம்னுதான் சொல்றேனே தவிர ஐயன் வானாம்னு சொல்லலை தெரிஞ்சுக்கோ!"

என்ன பச்சைப் பொய். மூர்த்தி அவர்களே சுருக்கமாக கமல் பதிவைப் பார்ப்போம்:
முதல் பின்னூட்டம் உங்களுடையதே, அது இதோ:
"வழிப்போக்கன்
11/19/2004 , 8:38:00 ஆM திரைப்பட உலகில் கமல் ஒரு காம சகாப்தம்! அப்புறம் எங்கே கமலுக்குபின் என்ற ஒரு கேள்வி? இன்னும் ஆயிரம் கமல் வேண்டுமென்று நினைக்கிறீர்களா?
நடிகர் திலகம் தனது நடிப்பால் எல்லோரையும் கவர்ந்திழுத்ததோடு தம் வாழ்க்கையும் திறந்த புத்தகமாக வைத்திருந்தார். அதனாலேயே அவரின் புகழ் இறந்த பின்னும். உங்களின் கமலும் திறந்த புத்தகமாகத்தான்! ஆனால் திறந்திருப்பது அவர் வாழ்க்கையல்ல... அண்டர்வேர்"
இதில் நீங்கள் கூட ஜாதி எதையும் பார்க்கவில்லை. கமலின் நடிப்பைப் பற்றியப் பதிவுக்கு அவர் ஒழுக்கத்தைப் பற்றி சம்பந்தமில்லாத பின்னூட்டமே அது.
பிறகு உங்கள் வாதத்துக்கு சௌகரியமாக நீங்கள் ஜாதியை பிற்பாடு இழுத்தீர்கள்.
இப்பதிவில் என்னுடைய முதல் பின்னூட்டம், அப்பதிவின் 27-வது பின்னூட்டம். அதைத் தொடர்ந்து நம் டயலாக்கையும் பார்க்கலாம்:

"டோண்டு
11/26/2004 , 10:58:51 PM ஐயா வழிப்போக்கரே. வெங்கடேஷ் முதலில் எழுதியது கமலின் நடிப்பப் பற்றியது. ஜாதி அதில் வரவேயில்லை.
சொல்லப் போனால் கமல் பிராமணர் என்று யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. அவரே தன் பிராமணச் சின்னங்களைத் தூக்கி எறிந்தவர். வெங்கடேஷ் அவர்கள் ஜாதியைப் பார்ப்பவராக இருந்தால் இதற்காகவே அவரை எதிர்த்து எழுதியிருக்க வேண்டும்.
ஆனால் அவர் பாராட்டியது கமல் என்னும் மாபெரும் நடிகனை. இன்னும் ஒருவர் தன் பின்னூட்டத்தில் கூறியது போல கமலைப் பற்றியக் கட்டுரைகளில் அவரைப் பற்றித்தான் எழுதுவார்கள்.
பின்னூட்டமும் எழுதியதற்குச் சம்பந்தப்பட்டவைகளாகவே இருத்தல் நலம். அதை விடுத்து மற்றவர்கள் தாங்களே வெங்கடேஷ் ஜாதியைப் பற்றிப் பேசுகிறார் என்று முடிவு செய்து கொண்டு அறிவுறை கூற முற்படுவது சற்றே அதிகப்படியாகத் தோன்றவில்லையா?
தர்க்க சாஸ்திரத்தில் கூறப்படும் முக்கிய விதி ஒன்றைப் பற்றி நான் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
ராமன் வல்லவன் என்று நான் கூறினால் என்னிடம் ராமன் வல்லவனா இல்லையா என்பதைப் பற்றிக் கேளுங்கள். அதை விடுத்து நான் சொல்லாததையெல்லாம் பற்றிக் கேட்டால் அது தவறு.
வெங்கடேஷ் அவர்கள் கருத்தில் உங்களுக்கு உடன்பாடு இல்லையென்றால் என் உடன்பாடு இல்லை என்று கேட்கலாம். அதைச் செய்யாமல் கமலின் அண்டவேரை ஏன் பார்க்க வேண்டும்?

வழிப்போக்கன்
11/27/2004 , 12:18:10 காலை: அன்புள்ள நண்பருக்கு,
முதலில் வெங்கடேஷ் அவர்களின் கட்டுரையை வார்த்தைக்கு வார்த்தை மேற்கோளிட்டே பதிகூற நினைத்தேன். அப்படி ஒருவேளை நான் செய்திருந்தால் உங்களுக்கு விளங்கி இருக்கும் என நினைக்கிறேன். ஆனால் நான் மேற்கோளிட நினைத்தால் முழுக்கட்டுரையையுமே அடிக்கோடிட்டு விளக்க வேண்டும். எனவே இன்னும் ஒரே ஒரு முறை எனக்காக கட்டுரையைப் படியுங்கள். பொருள் விளங்கும்.
ஜாதி,மதம்,இனம் எல்லாம் கடந்து மனித நேயத்தோடு எல்லோரும் எழுத வேண்டும் என நினைப்பது என் தவறாக இருக்கலாம். நண்பர் சொன்னதுபோல நசுங்கிய பார்வை! கமலைத் தவிர வேறு யாருமே நடிப்புலகில் இல்லை என்ற வாதம் ஏற்புடையதல்ல. கமலின் பண்டைய நடிப்பை நானே ஒப்புக் கொண்டிருக்கிறேன் எனது முந்தைய பின்னூட்டங்களில். தற்போதைய அவரின் நடிப்பு, செயல்கள், பேச்சுக்கள் பற்றித்தான் பேசுவோம் வாருங்கள். உங்களின் வலைப்பூவிலேயே இழையொன்றை ஆரம்பியுங்கள். நானே வந்து தொடர்கிறேன். தகுந்த சுட்டிகளோடும் சிறந்த மறுமொழிகளோடும்!

ராமன் நல்லவன் வல்லவன் எனப் பேசிய பலரிடமும் இலக்கிய வாதம் செய்திருக்கிறேன். மறைந்திருந்து கொன்றதை நீதியல்லவென்று! என்னதான் கொடியவனாக இருந்தாலும் நேருக்குநேர் துணிந்துநின்று கொள்ளா அந்த வீரம் வீரமே அல்ல என எழுதி இருக்கிறேன். பாராட்டியோர் பலர் உண்டு. எனது வாதம் அன்று மிக அருமையாக இருந்ததாக ஒப்புக் கொண்டனர்.

ஒரே தடத்திலேயே பயணிக்காமல் மற்றவர்களைப்பற்றியும் எழுதச் சொல்லுங்கள்.நன்றி.

உங்கள் பூவில் சந்திப்போம்!

டோண்டு
11/27/2004 , 4:04:53 ஆM நீங்கள் கூறியதற்காக இன்னும் ஒரு முறை வெங்கடேஷ் எழுதியதைப் படித்தேன்.

அவர் கமல் ரசிகர் அப்படித்தான் எழுதுவார். இதில் ஜாதி எங்கிருந்து வந்தது?

நானாக இருந்தால் விக்ரம் மற்றும் சூர்யாவையும் என் பின்னூட்டத்தில் சேர்த்துக் கொண்டிருப்பேன். கமல் போலவே அவர்கள் இருவரும் வெவ்வேறு வித பாத்திரங்களை நடிக்க அதிக முயற்சிகள் எடுத்துக் கொள்பவர்கள். இவர்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றுக் கூறலாமே ஒழிய ஜாதியை இதில் ஏன் புகுத்த வேண்டும்?

இன்னொரு விஷயம்.

நான் ராமன் என்று குறிப்பிட்டது ஒரு பெயரைக் குறித்தே ஆகும் நிச்சயமாக ராம பிரானைக் குறிப்பிடவில்லை.

அதற்குள் நீங்களே எதை எதையோ கற்பனை செய்து கொண்டால் நான் எப்படிப் பொறுப்பாவேன்?

சரி எடுத்ததுதான் எடுத்தீர்கள். அந்த உதாரணத்துக்கே வருவோம்.

ராமன் வல்லவன் என்று நான் கூறினால் நீங்கள் ஏன் அவன் நல்லவனா இல்லையா என்பதைப் பற்றி ஆராய வேண்டும்?

நீங்கள் எனது வலைப்பூவில் ஒரு புதிய இழையை ஆரம்பிக்குமாறுக் கூறுகிறீர்கள். ஏன் அதை நீங்களே செய்யலாமே?
இது வரை கூறியதன் சாரம்: என்னுடைய சின்ன பின்னூட்டத்தையே சரியாகப் படிக்காது நீங்களே முடிவு செய்தீர்கள். ஆகவே மறுபடியும் எல்லாவற்றையும் படிக்க வேண்டியது தாங்களே எனத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

வழிப்போக்கன்
11/27/2004 , 8:11:11 காலை: அன்புமிக்க ராகவன்,

இப்போதும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் கமலின் பழைய நடிப்பில் சோடையில்லை. தற்போதைய காலகட்டத்தில் அவரின் நடிப்பு, செயல், பேச்சு மட்டுமே.

வெங்கடேஷ் ரசிகர் மன்றத்தலைவர் என்றால் அதனை அவரே வந்து சொல்லட்டும். உங்களுக்கே உப தலைவர் பொறுப்பு நான் வாங்கித் தருகிறேன்(வெங்கடேஷ் என் நண்பர்)

நீங்களாக இருந்தால் ஏன் விக்ரமையும் சூர்யாவையும் சேர்க்கவேண்டும்? அதான் விக்ரமும்சூர்யாவுக்குத்தான் நடிப்பே இல்லையாமே?!

உதாரணத்துக்கு நல்லவேளையாக மத்தியப் பிரதேசத்தில் கைவண்டி இழுக்கும் வாஜ்பாய் என்று குறிப்பிடாமல் போனீர்களே அந்த வகையில் சந்தோசம்!

ராமபிரான் என்னதான் வேள்விகளில் வல்லவனாக இருந்தாலும் மறைந்திருந்து கொன்றதால் அவனுடைய நல்லவன் தன்மையும் அங்கே கேள்விக்குறியானதை உங்களால் மறுக்கமுடியாது! நல்லவன் இல்லா வல்லமையால் புகழ் வாரா!

நான் பலமுறைப் படித்தே எனது பின்னூட்டம் இட்டேன்.

இது முன்னரே நான் கவனிக்கச் சொன்ன விசயம்.

அன்பே சிவத்தில் மாதவனுக்கு நடிப்பா இருந்தது? அப்படியென்றால் ஆய்த எழுத்தில் அவருடையது நடிப்பில்லையா? மணிரத்னம் பதில் சொல்லட்டும்!

இதுதான் திரு.ராகவன் நான் எல்லாவற்றையும்விட அவர் சார்ந்திருக்கும்(அது இன்னாபா...ஆங்..ஞாபகம் வந்துட்டுது) ஆண்டே இன பாகுபாடு!

ஆண்டே என்றால் தவறாக நினைக்கவேண்டாம். சிதம்பரம் நடராஜரைக் காணவேண்டும் எனக் கேட்கிறார் கூலி சூத்திரன். அப்போது முதலாளி பாடுகிறார்,

"அடே மாடு தின்னும் புலையா...உனக்கு மார்கழித்தெருசனமோ"

கூலி பாடுகிறார்,"என் மனதைப் புண்ணாக்காமல் ஒருதரம் உத்தரம் தாருமய்யே!"

இதெல்லாம் படித்திருக்கிறீர்களா?

ஆகா இதெல்லாம் எந்த படத்தில் கமல் பேசி நடித்தார் என்று கேட்காமல் இருந்தால் சரி!

(பணி சற்று இலகுவானதும் விரைவில் எனது வலையில் நிச்சயம் இதனை ஆரம்பிப்பேன்!)

வழிப்போக்கன்
11/27/2004 , 8:56:16 காலை: மன்னிக்கவும். நான் அடிக்கோடிட்டு கேட்க்க நினைத்த மேற்கோள்கள் காணப்படவில்லை!

Dஒன்டு
11/27/2004 , 12:17:16 PM விக்ரம் மற்றும் சூர்யாவுக்கு நடிப்பில்லை என்று யாரும் சொன்ன மாதிரி எனக்கு நினைவில்லை. மேலும் கமல் ரசிகர் மன்ற உபதலைவர் பதவியை நான் வேண்டவும் இல்லை.

சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தில் ஒய்.ஜி.பி.யின் ஒரு வசனத்தில் "நீ வேண்டுமானால் உன்னைக் கற்பழித்தவனை அழைத்து வந்து இவந்தான் அந்த ராமையா என்று கூறி அவனை கல்யாணம் செய்துக் கொள்" என்று லக்ஷ்மியைப் பார்த்துக் கூறப்படும்.

ராமையா என்பது ஒரு பெயர் அவ்வளவுதான். அதே போல நான் ராமன் என்ற பெயரைப் பயன்படுத்தினேன்.

இல்லையென்றால் ராமபிரான் என்றுதான் குறிப்பிட்டிருப்பேன்.

மத்தியப் பிரதேசத்தில் வாஜ்பாய் என்ற பெயரில் கை வண்டிக்காரர் இருக்க வாய்ப்புகள் உண்டு.

வழிப்போக்கன்
11/28/2004 , 10:54:08 காலை: அன்பின் ராகவன்,

சொல்லமறந்த கதை பாருங்கள். ஆட்டோகிராப் பாருங்கள். சாதாரணமாக எடுக்கப் பட்ட முகம் பாருங்கள். வீடு படம் பாருங்கள். மோகமுள்?..வேண்டாம் நான் சொல்லாமல் விட்டவை எத்தனையோ...
அதுசரி.. தாங்கள் வடகலையா... இல்லை தென்கலையா?
இது தேவையில்லாத கேள்விதானே? நான் என் ஜாதியை மறைக்க மாட்டேன் ஆகவே விடை அடுத்தப் பின்னூட்டத்தில் கொடுத்தேன்.

டோண்டு
11/28/2004 , 9:01:42 PM ஆட்டோக்ராப் பார்த்தேன். அருமையானப் படம்.

வீடு மிக நல்லப் படம் என்றுத் தெரிந்தும் பார்க்கவில்லை. ஏனெனில் அதைப் பார்த்தால் பல நாட்கள் அதனால் பாதிக்கப்படுவேன் என்பது தெரியும். அந்த அனுபவத்துக்கு நான் தயாராக இல்லை என்பதே உண்மை. கோழை மனது எனக்கு என்றால் நான் அதை மறுக்க மாட்டேன்.

மோகமுள் கதையைப் படித்தேன். பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

சில படங்களை அவற்றின் கதைக்காகவே நான் பார்க்கவில்லை.

உதாரணம் "உயர்ந்த மனிதன்". கர்ப்பிணியானக் காதலியை அப்பா கொலை செய்வாராம் ஆனால் மகன் தான் தெரிவு செய்த வேரொருத்தியை மணக்காவிட்டால் தற்கொலை செய்துக் கொள்வேன் என்று பயமுறுத்துவாராம், மகனும் அதற்குக் கட்டுப் படுவானாம். இந்த அபத்தமான உணர்ச்சி பூர்வமான பயமுறுத்தல் என்னால் பார்க்க சகிக்காது என்பதற்காகவே அப்படத்தை நான் பார்க்கவில்லை.
இன்னொரு உதாரணம் மோட்டார் சுந்தரம் பிள்ளை.

"அக்கா உயிருடன் இருப்பது தெரிந்தால் தங்கை உயிர் விட்டு விடுவாளாம். அதேதான் அக்காவுக்கும் பொருந்தும்" என்ற ஒரு பயித்திக்காரத்தனமான வாதத்தை வைத்து மாமனார் மாப்பிள்ளயிடம் இரு சகோதரிகளையும் தனிதனியே பராமரிக்க வாக்கு வாங்கிக் கொள்வாராம். பிறகு உடனே இறந்து விடுவாராம். மாப்பிள்ளையும் அதை 20 வருடங்களுக்குக் கடை பிடிப்பாராம். என்ன அபத்தம்!

நான் வடகலை ஐயங்கார். என் வாழ்க்கைக் கதை என் வலைப் பதிவில் சிறிது சிறிதாய் வெளி வந்துக் கொண்டிருக்கிறது. வேண்டுமானால் பார்த்துக் கொள்ளவும்

வழிப்போக்கன் அவர்களே, தாங்கள் யார் என்பது புரியவில்லை. அதே பெயரில் வலைப்பதிவு செய்பவர் தான் அவரில்லை என்றுக் கூறிவிட்டார்.

ஏன் இந்த மர்மம்? தங்கள் விவரங்களைக் கூறுங்கள்."

வடகலை கான்டக்ஸ்ட் இப்போதாவது நினைவுக்கு வருகிறதா? நான் பதிவில் கூறியதைப் பற்றி மட்டும் பேசினேன். நீங்கள் கமல் மேல் ஜாதித் துவேஷம் காண்பித்தீர்கள். இதில் வேறு அவ்வப்போது புத்தர், ஏசு, காந்தி போன்று பேச்சு!

அப்பதிவில் நீங்கள் எழுதியதை சம்மரைஸ் செய்து நான் எழுதியது:
"டோண்டு
11/29/2004 , 11:06:46 PM வழிப்போக்கன் அவர்களே,
முதல் பின்னூட்டத்திலியே தங்கள் யார் என்றுக் குறிப்பிட்டு எழுத என்னத் தடை உங்களுக்கு இருந்திருக்கும் என்று என்னால் ஊகிக்க முடியவில்லை.
கூட்டிக் கழித்துப் பார்க்கும்போது உங்களைப் பற்றி நான் அவதானித்ததைக் கூறுவேன்.
நீங்கள் யோசிக்காமல் முடிவுகள் எடுக்கிறீர்கள்.
1) டைனோ கூறியது பற்றிக் குறிப்பிட்டிருந்தீர்கள். அவரோ தான் இந்த விளையாட்டுக்கு வரவேயில்லை என்று பதறிப் போய் கூறி விட்டார். அதை சௌகரியமாக ஒதுக்கி விட்டீர்கள்.
2) நான் ராமனைப் பற்றி எழுத, நீங்களாகவே ராமபிரானைப் பற்றி நான் எழுதுவதாக முடிவு செய்து அதற்கானப் பின்னூட்டத்தைக் கொடுத்து விட்டீர்கள். நான் மேற்கொண்டு விளக்கியும் ஒத்துக் கொள்ளவில்லை. வாஜ்பேயியை வேறு குறிப்பிட்டீர்கள்.
இந்த அழகில் தங்களுடையப் பின்னூட்டம் பெயரிலிப் பின்னூட்டம் இல்லை என்றுக் கூறி முழுப் பூஷனிக்காயைச் சோற்றில் மறைக்க முயற்சிக்கிறீர்கள்.
அதே நேரத்தில் உங்களுக்கு விரோதமானத் தரக்குறைவானப் பின்னூட்டங்களையும் நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
இப்போதாவது தாங்கள் யார் என்பதை வெளிப்படுத்துவீர்களா?
நான் கூறியது போல வெங்கடேஷ் அவர்கள் பெயரிலிப் பதிப்புக்கு வழி செய்யாதிருந்தால் இவ்வளவு கசப்பானப் பின்னூட்டங்களைத் தவிர்த்திருக்கலாம்.
ஆமாம், வெங்கடேஷ் ஏன் ஒன்றும் கூற மாட்டேன் என்று இருக்கிறார்?"
இதுதான் உங்களிடம் ஒரு கஷ்டம். நீங்கள் செய்தது தவறு என்று நிரூபித்தால் அதை ஒத்துக்கொள்ளாது வேறு புதிதாக எடுத்துக்கொண்டு தொங்குவீர்கள். டைனோ பற்றி எழுதியதற்கு விளக்கமே கடைசி வரை அளிக்கவில்லை.
உங்களைப் பற்றி எஸ்.எம்.என்பவர் எழுதியது:
"
எஸ்.எம்
12/1/2004 , 4:20:07 ஆM வழிப்போக்கனே,
என் பழைய பின்னூட்டத்தில் அதிகமாக திட்டியதற்கு மன்னிக்கவும்.

முதலில், உன்னைப்போல் நான் ஜாதி வெறியனும் இல்லை. பார்ப்பன ஆதரவாளனும் இல்லை, எதிரியும் இல்லை, நீ வெறுக்கும் உயர்சாதிக்காரனும் இல்லை! சாதியைப் பார்க்காமல், மனித நேயத்தை பார்க்கிறவன். உன்னை ஏன் Mஎன்டல்ல்ய் Dஎரஙெட் என்று கூறினேன் தெரியுமா? கமலின் நடிப்பைப் பற்றிய விமர்சனத்தின் போது, நீ செய்த கோணங்கித்தனங்களும் பல தேவையற்ற விடயங்களை கேவலமாகவும் அநாகரீகமாகவும் முன் வைத்ததும் தான் காரணம்.

1. கமல் அண்டர்வேரை திறந்து வைத்துள்ளார் என்று அசிங்கமாக பின்னூட்டமிடுகிறாய். ஆனால் "என்னுடைய ஆரம்பப் பின்னூட்டத்தில் இருந்தே மிகவும் நன்றாகவேதான் பேசிக் கொண்டு வந்திருக்கிறேன்" என்று உளறுகிறாய்.

2. "ஏன் உங்கள் ரூமியை விட்டு கிறிஸ்துவ மதம் பற்றி எழுதச் சொல்லுங்களேன். அப்படியே உங்கள் குல மாணிக்கமான வெங்கடேஷை விட்டே ரஜினியைப் பற்றிய கட்டுரை ஒன்றை வரையச் சொல்லுங்களேன்" என்று தரம் தாழ்ந்து வெற்று விதண்டாவாதம் பேசுகிறாய். உனக்கு ரஜினியை பிடிக்கும் என்றால், நீ அவரை பாராட்டி ஒரு கட்டுரை எழுது. அதை விடுத்து, வெங்கடேஷுக்கு ரஜினியை பிடித்தே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்தவும், கட்டுரை எழுதுமாறு பணிக்கவும் உனக்கு எந்த அதிகாரமும் கிடையாது என்பது கூட புரியாத சென்மமய்யா நீ!

3. விக்ரமுடைய சாதியை வைத்துத் தான் வெங்கடேஷ் அவரை பாராட்டிப் பேசவில்லை என்கிறாய். உனக்கு எப்படி கமலைக் கண்டாலே வெறுப்போ, அவருக்கு கமலையும் அடுத்து மாதவனையும் பிடிக்கிறது. இதில் சாதியை மடத்தனமாக ஏன் புகுத்துகிறாய்? விக்ரமின் நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும் என்பது வேறு விடயம்.

4. "அதுசரி.. தாங்கள் வடகலையா... இல்லை தென்கலையா?" என்று டோண்டு-விடம் சம்பந்தமில்லாத வினா எழுப்புகிறாய்? உன்னை விட அதிகம் பண்பட்ட மனிதராகத் தான் அவர் தோன்றுகிறார்.

5. கண்ணன், டோ ண்டு, அனானிமுஸ் போன்றவர் பலமுறை சரியான கருத்துக்களை எடுத்துரைக்க முயன்றும் எதுவும் உன் சிற்றறிவுக்கு எட்டாமல் போனது ஏன்?


மேலும், உன்னைப் போன்ற அறிவிலிகளை விட கமல் ஒரு சிறந்த முற்போக்குவாதி, பகுத்தறிவாளர் என்பதில் சந்தேகமில்லை. 'அவர் மூடநம்பிக்கை இல்லாதவர். சாதி பார்க்காதவர். நல்ல நடிப்பாற்றலும் உள்ளவர்.' என்று பலரும் போற்றுகின்றனர். அவர் நடிப்பைப் பற்றி உன்னிடம் விவரிக்க/விளக்க வேண்டிய அவசியமும் யாருக்கும் கிடையாது. விளக்கினாலும் உனக்கு புரிவதும் கடினமே! அவருக்கு பல பெண்களிடம் நட்பு இருந்தால், உமக்கு ஏனய்யா எங்கேய்யா அரிக்கிறது?


இதற்கான உனது பதிலை நான் எதிர்பார்க்கவில்லை :-) எனக்கு அது தேவையற்றதும் தான். அப்படியே நீ பதில் தந்தாலும், இதுவே எனது கடைசி பின்னூட்டம். திருந்துவதற்கு முயற்சித்தல் உன் வாழ்வுக்கு நலன் பயக்கும். உன்னுடன் வெட்டி வம்பளப்பதற்கு எனக்கு நேரமில்லை. தலைக்கு மேல் வேலையிருக்கிறது, நண்பா. நீயும் வேலையிருந்தால், அதைப் போய் பார்த்தால், அனைவருக்கும் சுகம்.
ரோசா வசந்திற்காவது நான் கூற வந்தது புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்."
இந்த நிலையில் கூட உங்களுக்கு புரிய வைக்க நான் எடுத்துக்கொண்ட இந்த முயற்சியைப் பாருங்கள்:

"டோண்டு
12/1/2004 , 10:07:08 காலை: ஐயா வழிப்போக்கன் அவர்களே,
நான் ஏற்கனவே கூறியது போல கமல் தன்னை ஐயங்கார் என்று எப்போதும் கருதியதே இல்லை. சொல்லப்போனால் அவர் தன்னை ஒரு பார்ப்பன விரோதியாகத்தான் கருதிக் கொள்கிறார்.

வெங்கடேஷ் ஜாதி சார்பாக எழுதுவதாக இருந்தால் அதற்காகவே அவர் கமலை எதிர்த்து எழுதியிருக்க வேண்டும்.

மூலப் பதிவைப் பாருங்கள். அவர் கமலின் நடிப்பைப் பற்றியும் அவரின் மற்றச் சாதனைகளைப் பற்றியும் எழுதினார். இதில் உங்களுக்கு ஆட்சேபம் இருக்கும் பட்சத்தில் அதைக் கூற வேண்டியதுதானே. ஏன் தேவை இல்லாமல் ஜாதியைப் பற்றி இழுக்கிறீர்கள்?

நான் வடகலை ஐயங்கார் என்பதில் என்னப் பிரச்சினையைக் கண்டீர்கள்?

நான் உங்களைக் கேட்டதெல்லாம் தங்கள் பெயரை வெளிப்படையாக எழுதி தங்கள் கருத்துக்களைக் கூறுங்கள் என்றுதான்.

இப்பதிவு மிக அதிகப் பின்னூட்டங்கள் பெற்றுள்ளது. பெயரிலிப் பதிவால் அனாவசியமாக இவரா, அவரா என்றெல்லாம் ஊகங்கள் செய்து நான் அவரில்லை என்று ஒவ்வொருவராகக் கூறிக் கொள்ளும்படி ஆயிற்று. இதெல்லாம் தேவையா?

நிற்க. இது சம்பந்தமாக என் வலைப்பூவில் ஒரு பதிவு செய்துள்ளேன்.

அங்கு வந்துப் பின்னூட்டம் கொடுப்பீர்களா என்றுத் தெரியவில்லை. ஏனெனில் என்னுடையப் பதிவில் அனானிமஸ் பதிவுகளுக்கு இடம் இல்லை. என் ஸெட்டிங்க்ஸ் அப்படி."
நீங்கள் என்று கூறிக் கொள்ள செய்த பின்னூட்டம் இங்கே:
"வழிப்போக்கன்
12/3/2004 , 1:14:57 ஆM வழிப்போக்கன் யார் என்பது கட்டாயம் உங்களுக்கு தெரிய வேண்டுமா? சற்று பொறுத்திருங்கள், அன்புத் தோழமைகளே! ஓனெ Hஇன்ட், Mய் நமெ ச்டர்ட்ச் நித் 'M'
ஆனால் இதை எழுதியது நீங்கள் அல்ல என்று நீங்களே எழ்தினீர்கள். அது யார் என்பதை நான் அறிவேன்.
மேலும், எல்லாம் பதிவுகளாக உள்ளன என்பதை மறக்க வேண்டாம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

"என்ன இப்படி பாசம் திடீர்னு பொத்துகிட்டு வடியுது? அவுரும் ஐயங்கார்னு ஏதும் புதுசா கண்டுபுடிச்சீங்களா?"
இப்படித்தானே உம் ஜாதி பற்றிய கேள்விகளை ஆரம்பிக்கிறீர்கள். உங்கள் தகவலுக்கு: மஸ்ட் டூவின் இயற்பெயர் கூட எனக்குத் தெரியாது. அவருக்கு ஜெர்மன் தெரியும் என்பதை அறிவேன். அவர் தேர்ந்தெடுத்தப் பெயர் என் பெயரான டோண்டுவால் இன்ஃப்ளுயன்ஸ் செய்யப்பட்டது என்று தெரியும். தேவையின்றி அடுத்தவர் ஜாதியை நோண்டிக் கேட்பது அனாகரிகம்தானே. ஒவ்வொரு முறையும் அதை ஏன் நீங்கள் செய்ய வேண்டும்?
மற்றப்படி நீங்கள் தங்கள் ஜாதியை மறைப்பதாகக் கூறிக் கொண்டே பூணூல் போடும் ஜாதி என்பதை வேண்டுமென்றே கூறிவிட்டீர்கள். உயர்ந்த ஜாத் என்றும் கூறிவிட்டீர்கள். சேலஞ்ச் செய்தால் ஆதாரம் காட்ட முடியும். இதில் ஊராருக்கு என்ன உபதேசம்?
அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

மஸ்ட் டூ அவர்களே, நான் டோண்டு தாத்தா இல்லை, டோண்டு மாமா என்று வேண்டுமானால் கூறிக்கொள்ளுங்கள். நான் 59 வயது வால்பனாக்கும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

நீங்கள் கூறியபடியே 250-வது பின்னூட்டம் செய்து விட்டீர்கள். வாழ்த்துக்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்

கொழுவி said...

Merci Dondu. vous avez raison. J'ai choisi le nom pour moi à partir de vous.

dondu(#11168674346665545885) said...

"நான் அன்னிக்கே சொல்லிட்டேன்.. கமல் சார்பா பேசுனவன் எல்லாம் பார்ப்பனர் என!!!"
அதுதான் தவறு என்கிறேன். அனானிமஸ் ஒருவர், இன்னொரு சூத்திரன் ஆகியோர் வந்து உமக்கு எதிராகப் பின்னூட்டமிட்டனர். கமல் பதிவின் சுருக்கம் இங்கும் இருக்கிறது. தேவையின்றி பொய்யை வைத்துக்கொண்டு குதிக்காதீர்கள்.
அங்கே நீங்கள் உங்களை சூத்திரன் என்று கூறிக் கொண்டீர்கள். ஆனால் இந்த என் பதிவில் உங்கள் வார்த்தையிலேயே உங்களைக் கையும் களவுமாகப் பிடித்தபின் கூறுகிறீர்கள்:
"யோவ் நீதான் உலகத்துலயே பெரிய உசந்த ஜாதிமேரி குதிச்சே... உன்னைவிட நான் ஒன்னும் குறறஞ்சவன் இல்லைன்னு அதுக்காக சொல்லிக் காட்டினேன் அய்யா. (ஆக நீங்களும் பார்ப்பனர் என்பதை ஒத்துக்கொண்டு விட்டீர்கள். இதை உங்கள் மற்ற நண்பர்கள் நிச்சயம் நினைவு கொள்வார்கள்). அதன்பின் பேசினதை எல்லாம் ஏன் கணக்குல எடுத்துக்கலை? தலித் வீட்டில் சாப்பிட்டதெல்லாம் சொல்லவே யில்ல? உம்மால் சாப்பிடமுடியுமா???"
ஏன் சாப்பிட முடியாது? நான்தான் எங்கள் தலித் பியூனையும் சேர்த்து வைத்துக் கொண்டு ஒரே கெட்டிலில் டீ போட்டு குடிக்கவில்லையா? தலித் வீட்டில் சாப்பிடுவதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. அப்படி நிறைய சாப்பிட்டவன்தான். ஆனால் அதையெல்லாம் உங்களைப்போல சொல்லித் திரிந்து கொண்டிருக்க மாட்டேன். சொல்லப்ப்போனால் நீங்கள்தான் உயர் சாதி வெறியைக் காட்டிக் கொள்கிறீர்கள். தலித் வீட்டில் சாப்பிட்டது என்னவோ அவர்களுக்கு நல்லது செய்தது மாதிரி பேசுகிறீர்கள். அது சரி தலித் பெண்ணையும் கல்யாணம் செய்து கொள்ள மனைவியிடம் அனுமதி கேட்கப் போகிறவர்தானே நீங்கள்? அதுவும் நீங்களே கூறிக்கொண்டது. ஒவ்வொரு சமயத்துக்கும் சமயோசிதமாகப் பேசுவதாக நினைத்துக்கொண்டு ஒவ்வொரு பொய்யாக கூறிக்கொண்டு போனால் இப்படித்தான் பொறியில் அகப்பட்ட எலியாவீர்கள்

மற்றப்படி நீங்கள் என்னிடம் மரியாதையாகப் பேசவில்லை என்பதெற்கெல்லாம் நான் ஒன்றும் கவலைப் படவில்லை. நீங்கள் செய்யும் மரியாதை யாருக்கு வேண்டும்?

என்னைத் தூண்டியவர்கள் பின்னாலிருந்து கொண்டு சிரிக்கின்றனரா? என்ன கற்பனை உமக்கு? அப்படி யாரும் கிடையாது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

மாயவரத்தான் said...

மூர்த்தி... பூனை வெளியில் வந்து விட்டது. அதனால் இங்கே பின்னூட்டமிடுவதை விட்டு விட்டு வேறு எங்காவது சென்று எதுவும் 'உருப்படியாக' செய்ய முடியுமா என்று யோசிக்கவும். நிதானமிழக்க வேண்டாம் ப்ளீஸ்..!

dondu(#11168674346665545885) said...

"மூர்த்தி... பூனை வெளியில் வந்து விட்டது. அதனால் இங்கே பின்னூட்டமிடுவதை விட்டு விட்டு வேறு எங்காவது சென்று எதுவும் 'உருப்படியாக' செய்ய முடியுமா என்று யோசிக்கவும். நிதானமிழக்க வேண்டாம் ப்ளீஸ்..!"
அப்படியெல்லாம் இல்லை மாயவரத்தாரே, நிதானம் என்பது முதலிலேயே இருந்திருந்தால்தானே இழப்பதற்கு? அப்படியொன்றும் இவரிடமிருந்ததாகத் தெரியவில்லையே. ரொம்பத்தான் ப்ரொடெஸ்ட் செய்தார், ஜாதியைப் பற்றிக் கமல் பதிவில் பேச்சு இல்லாதபோதே இவர் அதைபற்றியெல்லாம் கற்பனை செய்து கொண்டு குதித்தார். அப்போதே சந்தேகம் வந்தது. பிறகு ஒவ்வொரு நேரத்தில் ஒன்று கூறி முரண்பாடுகளில் சிக்கிக் கொண்டார். கடைசியில் தானும் ஒரு பார்ப்பனர் என்பதை ஒத்துக்கொண்டு விட்டார். இதற்காக எனக்கு இவர் மேல் கோபம் வரவில்லை. பரிதாபம்தான் வருகிறது. பேசாமல் என்னை மாதிரி 'ஆம் நான் பார்ப்பனன்' என்று கூறியிருந்தால் ஒரு பிரச்சினையும் இல்லை. பார்ப்பனரல்லாதவர்களை விட அதிக பார்ப்பன விரோதத்தைக் காட்டியது என்ன காப்ளெக்ஸோ தெரியவில்லை. அவர் இப்போது சற்று ஓய்வெடுத்து கொள்ளட்டும். இதில் பெரிய சோகம் என்னவென்றால் இவர் காட்டும் பார்ப்பன விரோதத்துக்காக யாரும் இவரை மதிக்கப் போவதில்லை. சிறிது மாறாகப் பேசினாலும் "உன் பாப்பார புத்தியைத்தானே காட்டினாய்" என்று கூறப்போகிறார்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

"Merci Dondu. vous avez raison. J'ai choisi le nom pour moi à partir de vous."
சபாஷ் மஸ்ட் டூ அவர்களே, ஜெர்மன் மட்டும்தான் தெரியும் என்று நினைத்தேன். பிரெஞ்சிலும் பிளந்து கட்டுகிறீர்களே. வேறு என்னென்ன மொழிகள் தெரியும் என்பதையும் கூறி விடுங்களேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

நன்றி நான் தான் அவர்களே. நீங்கள் தமிழில் தட்டச்சு செய்ய ஆசைப்பட்டால் சுரதாவின் எழுத்து மாற்றியை உபயோகிக்கவும். அதன் உரல் இதோ:
http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm
அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

மூர்த்தி, மூர்த்தி. நன்றி 8 பின்னூட்டங்களுக்கு. 279-வது பின்னூட்டம் இது. "நான் தான்" யார் என்பதில் எனக்கு எந்த அக்கறையும் இல்லை. அவர் இடும் பின்னூட்டங்களைத்தான் நான் பார்க்கிறேன். அதே போலத்தான் மஸ்ட் டூவும். இது வரைக்கும் நான் எவரையும் அவர் ஐடென்டிடிக்காக கேட்டவனில்லை, உங்களைத்தவிர. ஏனென்றால் நீங்கள் ரொம்பவும் அதிகமாகவே பிலிம் காட்டினீர்கள். என்னமோ நீங்கள் ஒருவர்தான் சமரச சன்மார்க்கத்தைக் கடைபிடிப்பதாக ஒரு தோரணை. அவ்வாறு செய்தால் யாராவது ஒருவர் பலூனில் ஊசியால் குத்த ஆசைப்படுவர். அது நானாகப் போனது தற்செயலே.
இப்போது கூறுகிறேன், எனக்கு உங்கள் மேல் கோபம் இல்லை. காமராஜ் பற்றி ஏன் எழுதவில்லை என்று கேட்டிருந்தீர்கள். கண்டிப்பாக அவரைப் பற்றி உயர்வாகவே எழுதியுள்ளேன். தலித்துகளுக்கு இரட்டைக் தம்ளர் முறையை எதிர்க்கொள்ள 28 - 3- 2005 அன்று கொடுத்த ஆலோசனையில் அவரையும் உதாரணமாகக் காட்டியிருந்தேன். அது இதோ:
"காமராஜ் அவர்கள் முதல் மந்திரியாக இருந்தப் போது ஒரு குறிப்பிட்டத் திட்டம் ஏன் நடைபெறக் கூடாது என்பதற்கு அதிகாரிகள் பக்கம் பக்கமாகக் குறிப்புகள் எழுதினர். அவை எல்லாவற்றையும் நிராகரித்து அவர் கூறினார் "உங்களைத் திட்டம் எப்படி நிறைவேற்ற வேண்டும் என்பதற்குத்தான் கூப்பிட்டிருக்கேண்ணேன். அது நிறைவேற வேண்டுமா வேண்டாமா என்பது அரசியல் முடிவுண்ணேன். அதற்குத்தான் நானும் என் மந்திரிகளும் இருக்கோம்ணேன். உங்களுக்கு அது வேண்டாத வேலைண்ணேன். போய் திட்டத்தை எவ்வாறு நிறைவேத்தலாம்னு குறிப்பு எழுதுங்கண்ணேன்" என்று வெட்டு ஒன்று துண்டு ரெண்டாகக் கூற அவ்வாறே செய்யப்பட்டது."
யாரைப் பற்றி எப்போது எழுத வேண்டும் என்பது என்னுடைய தனிப்பட்ட முடிவு. எப்போது என்ன செய்ய வேண்டும் என்பதற்கு ஆலோசனை தாராளமாகக் கூறலாம், ஏற்பதும் ஏற்காததும் என் விருப்பம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

"ஜாதி, குலம், கோத்ரம் பார்க்காமல் எல்லோருடனும் சகோதரத்துடனும் அன்புடனும் பழக முயல்கிறேன். உம்மைப்போல ஐயங்காரா.. வடகலையா... தென்கலையா.. எனப் பார்த்தெல்லாம் நான் பழக்கம் கொள்வதில்லை."
அப்படியா, ரொம்ப சந்தோஷம். என்னுடன் வந்த முதல் கான்டாக்டில் (கமல் பதிவில்) என்னை வடகலையா தென்கலையா என்று கேட்டது யாராம்? இப்பதிவில் மஸ்ட் டூவின் ஜாதியை கேட்டது யார்? நான் தானிடம் பார்ப்பான் இல்லை என்று நிரூபிக்கச் சொன்னது எவர்?
அன்புடன்,
டோண்டு ராகவன்

கொழுவி said...

எனக்கு தெரிஞ்ச ஒரே சாதி என் பொண்சாதி.. அதென்னது வடகலை தென்கலை.. அதே மாதிரி கீழ்க்கலை மேல்க்கலை எல்லாம் இருக்கா டோண்டு மாமா? (இப்ப சந்தோசமாமா)

dondu(#11168674346665545885) said...

மஸ்ட் டூவைக் கேட்டதாகக் கூறவில்லையே. மஸ்ட் டூவின் ஜாதியைப் பற்றி என்னிடம்தான் கேட்டீர்கள். இதோ நீங்கள் கேட்டது:
"என்ன இப்படி பாசம் திடீர்னு பொத்துகிட்டு வடியுது? அவுரும் ஐயங்கார்னு ஏதும் புதுசா கண்டுபுடிச்சீங்களா?"
இப்போது நான் தானைப் பற்றிப் பார்ப்போம்:
"அந்த "நான் தான்" யார்னு உமக்கு தெரியுமா முதலில்? அவனும் பார்ப்பனர். அவன் "நான் தான்" என்ற பெயரில் பதிவதற்கு முன் இதே தலைப்பில் என்னுடன் உரையாடிச் சென்றான். என் சொற்களத்தில் என்னோடு போராட அஞ்சி மாற்றுப்பெயரில் வந்தான். இப்போதும்கூடச் சொல்கிறேன் அவனும் பார்ப்பனர்தான்."
நான் கூறுகிறேன் மூர்த்தி, அவர் யாராக இருந்தாலும் எனக்கு கவலையில்லை. இதில் ஏதாவது நிரூபிக்க வேண்டுமானால் அதைச் செய்ய வேண்டியது நீங்களே.

"உங்களை எல்லாம் பார்ப்பனர்... அல்லாதவர் எனப் பார்ப்பதை விட்டு மனிதத் தன்மையுடன் எழுதவும் கருத்து சொல்லவும் வாருங்கள் வாருங்கள் என அழைக்கிறேன் அய்யா!"
மறுபடியும் கூறுவேன் நான் என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசனை தேவைப்பட்டால் உங்களைக் கேட்டுக்கொள்ளுவேன். அது வரை அமைதி காக்கவும்.


அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

"அதே மாதிரி கீழ்க்கலை மேல்க்கலை எல்லாம் இருக்கா டோண்டு மாமா? (இப்ப சந்தோசமாமா)"
மகிழ்ச்சி மருமகனே. கிழக்குக் கலை மேற்கு கலையெல்லாமில்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

"ரொம்ப ஆவலா போயி வரவேற்குறியே... சாதாரணமா நீ எல்லாரையும் வரவேற்கமாட்டியேன்னு கேட்டேன்."
ஓ அதுவா, மஸ்ட் டூவுக்கு ஜெர்மன் பிரென்ஞ்சு இரண்டும் தெரியும் அந்தப் பாசமே காரணம். அப்படிப் பார்க்கப் போனால் காஞ்சி பிலிம்ஸ், ரவியா, ரோசா வசந்த் ஆகியோருக்கு பிரெஞ்சு தெரியும் அதனால் அவர்களைப் பிடிக்கும், சிறீரங்கன், சந்திரவதனா ஆகியோருக்கு ஜெர்மன் தெரியும் அதனால் அவர்களையும் பிடிக்கும், இதில் எங்கே பார்ப்பனர் வந்தனர்? மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பார்ப்பதைத் தவிர உங்களுக்கு வேறு வேலையே இல்லையா? இருக்கட்டும், உம்மபேர்லேயும் நேக்கு இப்போ பாசம் பொங்கிண்டு வரதே, அது ஏன் என்பதை அறிவேளா?

"அந்த படுவா ராஸ்கோலு "நான் தான்" பய ஆருன்னு எனக்கு தெரியாதுன்னு நெனைப்பா?"
அதான் நான் கூறிவிட்டேனே, எனக்கு அவர் இயற் பெயர் தேவையில்லையென்று?

"ஆமா கிழக்கு மேற்கெல்லாம் இல்லை"
நீங்கள் பார்ப்பனராக இருந்தாலும் ஐயங்காராக இருக்க முடியாது. ஸ்மார்த்தர் அல்லது மார்த்துவர்தான். ஆகவே எங்கள் கலைகளை பற்றி நீங்கள் கவலை கொள்ளவேண்டாம். தோப்பனார் விரும்பியும் பூணல் மாட்டிக்கொள்ளவில்லை. மாமா பெண்ணை மணக்கும் முன்னால் பூணலை உங்களுக்கு மாட்டி விட்டுத்தான் கல்யாணம் நடக்கும்னு தெரியுமோல்லியோ.

நன்றி மூர்த்தி ஐயர்வாள். ரௌத்ரம் ஆரோக்ய நாசம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

"nee anonymousnnu comment kuduthuttu maatikitta appuramaa un perai solluva. naanga seyya koodatha. Aamam, nee nenaikkira aaludhaan naan. ennadaa pannuva?"

சபாஷ் நான் தான் அவர்களே, மூர்த்திக்கு நல்ல பதில் கொடுத்தீர்கள். ஆனால் அவர் செந்தமிழில் பேச வல்லவர் என்பது நினைவிருக்கட்டும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்

«Oldest ‹Older   1 – 200 of 250   Newer› Newest»
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது