4/22/2007

ஜவஹர்லால் நேரு அவர்களின் legacy - 5

இப்பதிவின் ஐந்தாம் பாகத்துக்கு செல்லும் முன்னால் ஒரு சிறு டைவர்ஷன். நேருவின் திருமகள் இந்திரா காந்தி அவர்களின் லெகசியை இப்போதெல்லாம் இந்திய அரசு குடும்ப திருச்செல்வர் ராகுல் காந்தி நன்றாகவே உணர்த்தி வருகிறார். எப்படி? இசுலாமிய செண்டிமெண்டை வைத்து நாட்டைத் துண்டாடியவர்களுக்கு செருப்படி கொடுப்பது போல பாக்கிஸ்தானை இரண்டாக பிளந்தது தன் பாட்டி என்று பெருமிதப்பட்டு பாக்கிஸ்தான் மற்றும் பங்களா தேஷுடனான நமது உறவை ஓகோ என்ற லெவலுக்கு உயர்த்தியச் செம்மல் இவரே. அவர்தான் நம் நாட்டின் நம்பிக்கை நட்சத்திரமாம். எங்கு அடித்து கொள்வது? சரி அதை சரியான தருணத்தில் கவனிப்போம். இப்போது நமது வரிசைக்கு செல்வோம்.

1969-மே மாதத்திலிருந்து 1971 மார்ச் வரை

மே மாதம் 3-ஆம் தேதி 1969-ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் ஜாகிர் ஹுசைன் அவர்கள் மறைந்தார். இந்தச் சம்பவம் இந்திய சரித்திரத்தில் ஒரு மைல்கல் என்றால் மிகையாகாது. இவருக்கு அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்கும் செயலில்தான் காங்கிரசின் உட்கட்சிப் பூசல் வெளிச்சத்துக்கு வந்தது. இந்திரா காந்திக்கு சஞ்சீவரெட்டி குடியரசுத் தலைவராவதில் விருப்பம் இல்லை. ஆனால் மற்ற தலைவர்கள் பெங்களூரில் கூடிய காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் பெரும்பானமை பலத்தில் சஞ்சீவ ரெட்டியை வேட்பாளராக தேர்ந்தெடுத்தனர். அவர் பெயரை இந்திரா காந்தியே பிறகு முன்மொழிய வேண்டியதாயிற்று.

இது இந்திரா அவர்கள் மனதை மிகவும் உறுத்தியிருந்திருக்கிறது. தற்காலிக ஜனாதிபதியாக இருந்த துணை ஜனாதிபதி வி.வி. கிரி அவர்களும் தானே ஜனாதிபதியாகலாம் என்ற தனது எண்ணத்தில் மண் விழுந்தது கண்டு மனம் புழுங்கினார். ஆகவே அவர் சுயேச்சையாக தேர்தலுக்கு நின்றார். கிரியை ஆதரிக்க முடிவு செய்தார் இந்திரா காந்தி. அது பற்றி பிறகு.

காமராஜ் அவர்களும் ஒதுக்கப்பட்டார். இப்போது மெதுவாக இந்திரா தனது அரசியல் நகர்வுகலை நிகழ்த்தத் துவங்கினார். அப்போதுதான் மன்னர்களின் மான்யத்தில் கை வைத்தார். ஒரேயடியாக அவற்றை ஒழித்தார். ஏன் அவ்வாறு செய்ய வேண்டும்?

இந்தியா சுதந்திரம் அடைந்தபோது பல சுதேசி மன்னர்கள் தத்தம் ராஜ்ஜியங்களில் அதிகாரத்தில் இருந்தனர். அவர்கள் பிரிட்டிஷாரின் செல்லப் பிள்ளைகள். சுதந்திரம் வந்த சமயத்தில் பிரிட்டன் அம்மன்னர்களுடன் தான் போட்ட ஒப்பந்தங்களை ஒரு தலை பட்சமாக செல்லாக்காசாக்கி விட்டு பாக்கிஸ்தானுடனோ அல்லது இந்தியாவுடனோ சேருங்கள் அல்லது முடிந்தால் தனியாக இருந்து கொள்ளுங்கள் எனக் கூறிவிட்டு பைய நழுவி விட்டது. பிறகு படேல் அவர்கள் பாடுபட்டு 600க்கும் மேலான சமஸ்தானங்களை இந்தியாவுடன் இணைக்கச் செய்தார். நேரு தன்னால் ஆன உதவியாக காஷ்மீர் விஷயத்தை சொதப்பி இன்னும் அது நமக்கு தலைவலியாக இருந்து வருவதை நான் முதல் பகுதியில் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன்.

படேல் அவர்கள் மன்னர்களுக்கு மானியம், அந்தஸ்து எல்லாம் தர ஏற்பாடு செய்து, இந்தியாவில் இணையும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட செய்தார். அந்த மானியங்களும் மன்னர்களது ஒவ்வொரு தலைமுறையும் வயதுக்கு வரும்போது குறையும் அளவிதான் கணிக்கப்பட்டிருந்தது. ஆக, தானாகவே மறைந்திருக்க வேண்டிய இதை இந்திரா அவர்கள் திடீரென வெட்டினார். இதனால் அரசுக்கு மிச்சம் ஆனது என்று ரொம்பவெல்லாம் இல்லை. இந்தியாவின் வாக்கு நம்பிக்கையுரியதல்ல என்ற அவப்பெயர்தான் மிச்சம். இதை அவர் செய்ததும் அரசியல் காரணமே. ஏனெனின்ல் மன்னர்கள் அரசியலில் ஈடுபட்டு தமது தனி பலத்தில் பாராளுமன்ற மெம்பர்கள் எல்லாம் ஆனார்கள். சுதந்திரக் கட்சியை சேர்ந்த ஜயப்பூர் மகாராணை காயத்ரி தேவி 1962 தேர்தலில் தன்னை எதிர்த்து நின்ற பத்து வேட்பாளர்களையும் டிபாசிட் இழக்கச் செய்தார். அதில் காங்கிரஸ் வேட்பாளரும் அடக்கம். ஒரிஸ்ஸாவிலோ மன்னர்களை உறுப்பினராகக் கொண்ட சிங் தியோவின் சுதந்திரக் கட்சி ஆட்சியையே கைபற்றியது.

ஆகவே மன்னர்களை மட்டம் தட்டவே அதை இந்திரா செய்தார். அதுவும் உச்ச நீதிமன்றத்தால் செல்லாதென அறிவிக்கப்பட்டது. இதற்கான அரசியல் சட்டத் திருத்த பிரேரணை ஒரெ ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தோற்றது. அந்த ஒரு ஓட்டு லட்சிய நடிகர் என அழைக்கப்படும் நமது எஸ்.எஸ். ராஜேந்திரன் அவர்களுடையது (பூம்புகார், காக்கும் கரங்கள், அவன் பித்தனா ஆகிய படங்களில் நடித்தவர்). பாவம் மனிதர் வயிற்றுக் கடுப்பில் பாத்ரூம் சென்று திரும்புவதற்குள் பார்லிமெண்ட் கதவை சாத்தி விட்டார்களாம். Very costly stomach disorder indeed!

பிறகு ஏதோ படாத பாடுபட்டு அதை நிறைவேற்றினார்கள் என வைத்துக் கொள்ளுங்கள். இன்னொரு காரியம் வங்கிகளை அரசுடைமையாக்கியது. அதற்கு ஆறு நாள் முன்னால் உதவிப் பிரதமர் மொரார்ஜி தேசாயிடமிருந்து ஒருதலை பட்சமாக நிதித் துறையை பறித்து கொள்ள, அவர் உடனடியாக உதவிப் பிரதமர் பதவியையும், மந்திரி பதவியையும் ராஜினாமா செய்தார். ஜூலை 21-ஆம் தேதி 1969-ஆம் ஆண்டு வங்கிகள் நாட்டுடைமையாக்கப்பட்டன.

வங்கிகள் நாட்டுடைமையாக்கியதையும் உச்ச நீதி மன்றம் நிராகரித்தது. அதற்காக மறுபடியும் அரசியல் சட்டத் திருத்தம் எல்லா கொண்டு வர வேண்டியிருந்தது. பல அரசு வங்கிகள் காங்கிரசுக்கு வேண்டியவர்களுக்கெல்லாம் கடன், வேலை எல்லாம் தரும் சத்திரங்களாகப் போயின. ஜனார்த்தன் பூஜாரி என்ற மகானுபாவர் இல்லாத சாமியாட்டம் எல்லாம் ஆடினார். என்ன செய்வது நாட்டின் தலைவிதி இப்படி எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செயல் பட்டவர்களால் பாதிக்கப்பட வேண்டுமென்று. இந்தத் தருணத்தில் நம்ம ஜோசஃப் சார் இட்ட இப்பதிவையும் அதற்கு அடுத்தப் பதிவையும் பார்த்து விடுங்கள்.

இதிலெல்லாம் சங்கடங்களை சந்தித்த இந்திரா காந்தி அவர்கள் ஒரேயடியாக தனது அரசியல் எதிரிகளையெல்லாம் கட்சியிலிருந்து ஓரம் கட்ட நினைத்தார். அதற்கு அவர் எடுத்து கொண்ட அஸ்திரம் சுயேச்சையாக குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளராக நின்ற வி.வி. கிரிக்கு ஆதரவளிக்க எடுத்த முடிவு. தானே முன்மொழிந்து கட்சியின் அதிகார பூர்வ வேட்பாளராக சஞ்சீவ ரெட்டியை நிறுத்திய இந்திராவே தனது கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தத்தம் மனசாட்சியின்படி ஓட்டளிக்க சொன்னார். நிகழ்கால அரசியலில் இதற்கு முன்னால் நடக்காத நிகழ்ச்சி அது. காங்கிரஸ் கட்சியே இரண்டாகப் பிளந்தது. ஸ்தாபன காங்கிரஸ், ஆட்சியில் இருந்த காங்கிரஸ் என்று இரண்டானது. இரண்டாவதின் தலைவராக இந்திரா விளங்கினார். வெவ்வேறு துறையில் வேலை செய்த எளிய மக்களை வாடகைக்கு எடுத்த லாரிகளில் வரவழைத்து, பிரியாணி அளித்து தனது இல்லத்துக்கு முன்னால் தனக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்கள் செய்ய வைத்தார். இச்செயல் முறை பிற்காலத்தில் தமிழகத்தில் இரு திராவிடக் கட்சிகளாலும் வெவ்வேறு சமயங்களில் இன்னமும் நடத்தப்படுவதும் இந்திரா அவ்ர்களின் லெகசிதான் என்பதைக் கூறவும் வேண்டுமா? திடீரென 1971-ல் ஒரு ஆண்டுக்கு முன்னாலே பாராளுமன்ற தேர்தலுக்கு வழி செய்தார். இந்திராவின் தயவில் பதவிக்கு வந்த கிரி அவர்கள் இம்மென்றால் பத்து கையெழுத்துகள் போடவும் தயாராக இருந்தார். ரப்பர் ஸ்டாம்ப் என்ற செல்லப் பெயருக்கும் பாத்திரமானார்.

அதே சமயம் அவருடன் கூட்டு வைத்துக் கொண்டிருந்த தி.மு.க.வும் அதே மாதிரி சட்ட சபை தேர்தல் நடத்தும்படி பரிந்துரை செய்தது. இப்போது நடந்ததுதான் வேதனை தரும் செயல். சட்டசபை தேர்தலில் இந்திரா காங்கிரசுக்கு ஒரு சீட்டு கூட இல்லை. பாராளுமன்ற தேர்தலுக்கான சீட்டுகளிலேயே இந்திரா குறியாக இருந்தார். இதற்கு பிறகு காங்கிரசோ மற்ற தேசீய கட்சிகளோ தமிழகத்தை பொருத்தவரை செல்லாக் காசாகவே போயின. இதற்கு முக்கியக் காரணமே இந்திராவின் அப்போதைய சுயநல அடிப்படையில் எடுத்த முடிவுகளே. ஆக, இந்த லெகசியும் தமிழ்நாட்டை பொருத்தவரை இந்திராவுடையதுதான்.

1971-ல் இந்திரா காந்தி பெற்றது அமோக வெற்றி. நேரு அவர்களின் காலத்தில் கூட இவ்வளவு பெரிய வெற்றியில்லை என்றுதான் கூறிட வேண்டும். இந்திராவால் காங்கிரசுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்தது. ஆனால் அதனால் இந்திராவின் செயல்பாடுகளில் முரட்டுத்தனம் ஏற்பட்டு அது அவருக்கே தீங்காக முடிந்தது பற்றி வரும் பதிவுகளில்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

4/17/2007

ஜவஹர்லால் நேரு அவர்களின் legacy - 4

2. 1967 மார்ச் முதல் 1969ல் குடியரசுத் தலைவர் ஜாகிர் ஹுசைன் மறைந்த வரைக்கும்

இந்திரா காந்தி அவர்கள் பிரதமராக இருந்து சந்தித்த முதல் தேர்தல் 1967-ல்.
லோக் சபாவை பொருத்தவகையில் காங்கிரசுக்கு 40.78% ஓட்டுடன் 283 சீட்டுகள் கிடைத்தன.

இந்த ரிசல்டை முந்தைய தேர்தல்களுடன் ஒப்பிட்டால்,
1962-ல் பெற்ற ரிசல்ட் 44.72%, 361 சீட்டுகள்.
1957-ல் பெற்ற ரிசல்ட் 47.78%, 371 சீட்டுகள்
1952-ல் பெற்ற ரிசல்ட் 44.99%, 364 சீட்டுகள்.

ஆக, முதல் முறையாக, 300-க்கும் குறைவான சீட். ஓட்டுக்கள் எண்ணப்படும்போது காங்கிரசுக்கு தனிப்பெரும்பான்மை கிடைப்பதே சற்று சந்தேகமாகக் காணப்பட்டது. ராஜாஜி அவர்களின் சுதந்திரக் கட்சியின் ஆதரவை கேட்கலாம் என்ற ஹேஷ்ய செய்திகளும் வெளியாயின. ஆனால் கடைசியில் காங்கிரசுக்கு மெஜாரிடி கிடைத்தது. தமிழகத்தில் தி.மு.க.வுக்கு 25 சீட்டுகள் கிடைத்தன. இது பற்றி பின்னால் மேலும் எழுதுகிறேன்.

மாநிலங்களை பொருத்தவரை தமிழகம், ஒரிஸ்ஸா, மேற்கு வங்கம், கேரளா ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் பதவி இழந்தது. வேறு சில மாநிலங்களில் கட்சித் தாவல்கள் காரணமாக காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தாலும் கூடிய சீக்கிரம் பதவி இழந்தது. அச்சமயம் ஆ.கே. லக்ஷ்மண் அவர்களது ஒரு கார்ட்டூன் மிக பிரசித்தம். ஒரு சட்டசபை உறுப்பினர் உடம்பெல்லாம் கட்டுகளுடன் நின்று கொண்டிருப்பார். சுற்றிலும் நிற்கும் நிருபர்களுடன் கூறிக் கொண்டிருப்பார்: "Just as I was crossing the floor, he was crossing in the opposite direction".

இந்த தேர்தலில் இந்திராவுக்கு ஒரு ஆறுதல் என்னவென்றால், அவரை கட்டுப்படுத்தக் கூடியவர்களில் பலர் தேர்தலில் தோல்வியுற்றிருந்தனர். முக்கியமாக காமராஜ் அவர்கள். இம்முறை உள்கட்சி தேர்தல் இன்றி அவரால் பிரதமராக வர முடிந்தது. மொரார்ஜி தேசாய் அவர்கள் உதவிப் பிரதமராகவும், நிதியமைச்சராகவும் பதவி பெற்றார். காமராஜையும் மற்றவர்களையும் மெதுவாக அலட்சியப்படுத் துவங்கினார்.

அவருடைய தந்தைக்கு இயற்கையாகவே அமைந்த முகராசியை இவர் மெதுவாக உருவாக்கிக் கொண்டார். ஆனால் ஒன்று நினைவில் வைக்க வேண்டும். நேரு அவர்கள் என்னதான் முகராசியுடன் இருந்தாலும் மற்றவர்களையும் மதித்து அவர்களை தன்னுடன் அரவணைத்து சென்றார். இந்திராவிடம் அந்த அரவணைக்கும் தன்மை இல்லை. தன்னை சுற்றியிருப்பவர்களை சுத்தவிட்டு தனக்கு ஆதரவு தருபவர்களுக்கு மட்டும் பொறுப்புகள் தந்தார். சற்றே சுதந்திர மனப்பான்மையுடன் செயல்பட்டவர்களுக்கு அவர் மனதில் இடமில்லை. மெதுவாக அடுத்த சில ஆண்டுகளுக்குள் வெளிப்பட இருந்த சர்வாதிகாரி இப்போதுதான் உருவாகத் தொடங்கினார்.

இந்த காலக்கட்டத்தில் உலக அரங்கில் பல முக்கிய விஷயங்கள் நடந்தன.

1967-ஆம் ஆண்டு ஜூன் மாதம் அரபு-இஸ்ரவேல ஆறு நாள் யுத்தம் நடந்தது. வழ்க்கம்போல இந்தியா பாலஸ்தீனியர்களுக்கு ஜால்ரா அடித்தது. இருப்பினும் இஸ்ரேல் உலகையே பிரமிக்க வைக்கும் வெற்றியைப் பெற்றது. அப்போது மட்டும் இந்தியா இஸ்ரேலுடன் ஒத்துழைத்திருந்தால் மிக நல்ல பலன் கிடைத்திருந்திருக்கும். ஆனால் எவ்வளவோ பல மாறுதல்களை அரசியல் அணுகுமுறையில் கொண்டு வந்த இந்திரா அவர்கள் இங்கு நேரு அவர்களின் செயல்பாட்டையே தொடர்ந்தார்.

அமெரிக்கா வியட்னாம் விவகாரத்தில் மேலும் மேலும் ஆழமாக சிக்க ஆரம்பித்தது. நடுநிலை கொள்கை என்ற பெயரில் இந்தியா அமெரிக்காவை சாடியது. அதனால் பல நலன்களை இழந்தது. அதே சமயம் 1968-ல் செக்கோஸ்லாவோக்கியாவை சோவியத் யூனியன் ஆக்கிரமித்த போது அதை கண்டிக்க வக்கின்றி இந்தியா விளக்கெண்ணெய் நிலையை எடுத்தது. இதனால் இந்தியாவின் தார்மீக நிலை கேலிக்குள்ளானதுதான் மிச்சம்.

நடுநிலைமை என்ற பெயரில் அமெரிக்காவை சாடி, சோவியத் யூனியனை துதிப்பதில் இந்தியா முன்னிலை வகித்தது. அதே சமயம் அமெரிக்காவிடம் உதவி கேட்பதும் நிற்கவில்லை. அதுபாட்டுக்கு தனியாக நடந்தது. சராசரி இந்தியர்கள் அரசின் இந்த இரட்டை நிலையை கண்டு வெட்கித் தலை குனிந்தனர். இந்தியாவைக் கண்டாலே வெளிநாடுகளில் இளப்பமாயிற்று.

சோஷலிசம் என்ற உருப்படாத தத்துவத்தை நேருவிடமிருந்து பெற்ற இந்திரா அவ்ர்கள் அதை இன்னும் கற்பனை செய்ய முடியாத அபத்தங்களின் உயரத்துக்கு கொண்டு சென்றார். நிதி மந்திரியாக இருந்த மொரார்ஜி அவர்கள் சொன்ன உருப்படியான யோசனைகள் அலட்சியப்படுத்தப்பட்டன. சோஷலிசம் என்ற பெயரில் பணக்காரர்களுக்கு அதிக வரி விதித்ததில் பல விரும்பத்தகாத விளைவுகள் ஏற்பட்டன. ஒரு காலக் கட்டத்தில் ஒருவருக்கு பத்து லட்சம் ரூபாய் ஆண்டு வருமானம் இருந்தால் அவர் வரிகளுக்குப் பிறகு எடுத்து செல்வது வெறும் 35,000 ரூபாயாகவே இருந்தது. இதை இந்திரா அவர்கள் பெருமையாக வேறு கூறிக் கொண்டார். இருப்பவர் இல்லாதவர் இடையே உள்ள இடைவெளியை குறைக்க பணக்காரர்களை ஏழையாக்குவதுதான் நடந்தது. அதனால் யாருக்கும் உழைத்து அதிக பணம் சம்பாதிக்கும் எண்ணம் இல்லாமல் போனது.

இம்மாதிரியே நிலைமை சீர்குலைந்து போக, மே மாதம் 1969-ல் குடியரசுத் தலைவர் ஜாகிர் ஹுஸைன் மறைந்தார். இது ஒரு மைல்கல் இந்திய சரித்திரத்தில். இதன் பிறகு இந்திரா அவர்களின் சுயலாப செய்கைகள் அதிகரிக்க ஆரம்பித்தன.

அவற்றைப் பற்றி பின் வரும் பதிவுகளில் பார்ப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

டோண்டு ராகவன் தமிழ்மணத்தை விட்டு விலகுவானா?

முகமூடி அவர்களின் இப்பதிவில் சிலருக்கு பயங்கர சந்தேகம் ஒன்று வந்துள்ளது. அதாவது டோண்டு ராகவன் ஏன் பலரைப் போல இன்னும் தமிழ்மணத்தை விட்டு விலகாதிருக்கிறான் என்று.

எஸ்.கே. கூறுகிறார்: "டோண்டுவை எனக்கு தமிழ்ப் பதிவுலகத்துக்கு வந்தபின்தான் தெரியும். அவருடைய "நான் ஐயங்கார்" அறைகூவலுக்கு பயங்கர எதிர்ப்பு எழுந்தபோது அவர் தமிழ்மணத் திரட்டியிலிருந்து வெளியேறுவார் என்று எண்ணினேன்.

சமீபத்தில் அவரிடம் நான் விலகிவிடுவதாக இருக்கிறேன் என்றபோது, அவர் தன்னிலை விளக்கம் கொடுத்தார் - அதாவது தமிழ்மணத்தில் அவருடைய இடுகைகள் தெரிந்தால்தான் நிறைய பேர் வாசிப்பார்கள். அதனால் அவருக்கு நிறைய காண்டேக்ட்ஸ் கிடைக்கிறது. மொழிபெயர்ப்பு வேலைகள் கிட்டுகின்றன. தமிழில் எழுதுவதும் சீர்படுகிறது என்றார். மேலும் தன் இடுகைகளுக்கு ஏராளமாக பின்னூட்டம் கிடைப்பதை மிகப் பெருமையாக நினைக்கிறார். எப்போதும், "பதிவு", "பின்னூட்டம்" என்ற obsession-னுடன் அதைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் விடாது கருப்பு தமிழ்மணத்திலிருந்து நீக்கப்பட்ட நிலையில அவருடையை பதிவை தேடிப்பிடித்து நன்றி சொல்லி லிங்க் கொடுத்து எல்லோரையும் அங்கு செல்ல வைத்தார். அதற்காக அவரை நேரிடையாக சாடியிருக்கிறேன். அவர் இந்த மாயையிலிருந்து எப்போது வெளிவருவாரோ நானறியேன்"!

நான் அவரிடம் அவ்வாறு கூறியது உண்மையே. இதை அவரிடம் மட்டுமல்ல பலரிடமும் கூறியுள்ளேன். எனது பங்களூர் வலைப்பதிவர் சந்திப்பு பற்றிய இப்பதிவில் நான் குறிப்பிட்டிருந்த செந்தழல் ரவி மற்றும் குமரன் எண்ணத்திடம் கூட இதை கூறியுள்ளேன். அதே ரவியிடம் இதை பலமுறை கூறியுள்ளேன்.

எஸ்.கே. அவர்கள் மேலே குறிப்பிட்ட பெரியார் பற்றிய பதிவை பற்றி ஒரு விளக்கம் அளித்து விட்டு, தமிழ்மணத்தில் நான் இருப்பதை பற்றி பேசுகிறேன்.

அதுவரை வெறுமனே ஈவேரா என்றே நான் குறிப்பிட்டு வந்த பெரியார் பற்றிய இப்பதிவு ஒருவித தனி அனுபவம். பெரியாரை பற்றி எனக்கு நிறைய விமரிசனங்கள் உண்டு. அவை இன்னும் இருக்கின்றன. ஆனால் அவர் தன் இறந்த மனைவியைப் பற்றி ஒரு கையறுநிலையில் எழுதியது என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. தன்னைப் பற்றிய சில உண்மைகளை அவர் ஒத்து கொண்டது மகாத்மா காந்தி தனது சத்திய சோதனையில் செய்த சுயவிமரிசனங்களுக்கு சற்றும் குறைந்ததல்ல என்றே எண்ணினேன். அதனால்தான் தயங்காமல் அதை இடுகையாக இட்டேன். 'அது இருக்கட்டும், ஏன் விடாது கருப்புவின் பதிவை சுட்ட வேண்டும்' எனக் கேட்டால், எனது பதில் இவ்வாறாகத்தான் இருக்கும். வி.க.வின் பதிவில்தான் இச்செய்தியை முதன் முதல் பார்த்தேன். அந்த உண்மையை எப்படி மறைக்க முடியும்? பெரியார் எழுதிய உண்மையை சிலாகித்து எழுதும் அப்பதிவில் நான் மட்டும் எப்படி பொய்யுரைக்க முடியும்? குடியரசு பத்திரிகையிலிருந்து நேரடியாக கோட் செய்து போடுவதுதானே என்றும் என்னிடம் கேட்கப்பட்டது. செய்தால் யாருக்கு உண்மை தெரிந்திருக்கும்? கேள்வியில் விஷயம் இருக்கிறது. ஆனால் யாருக்கு உண்மை தெரிகிறதோ இல்லையோ, இந்த டோண்டு ராகவனுக்கு உண்மை தெரியுமே. தன்னிடமே பொய் சொல்லும் டோண்டு ராகவன் எப்படிப்பட்ட மனிதனாக அந்த டோண்டு ராகவனாலேயே கருதப்படுவான்?

வி.க.வின் பதிவுகளைப் படிப்பேனா என்பதற்கு எனது ஒரே பதில் ஆம் என்பதே. ஏனெனில் எதிரி என்ன செய்கிறான், என்ன எழுதுகிறான் என்பதை பார்த்து கொண்டே இருக்க வேண்டும். அதில் பல விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும், தேவையானபோது உபயோகிக்க வேண்டும் என்பது அடிப்படை விஷயம். ஆக, படித்தது உண்மை, அதில் ஒரு பதிவு எனக்கு புதிய விஷயத்தைக் கூறியது உண்மை. அப்படியிருக்க எங்கு அதைப் பார்த்தேன் என்ற உண்மையையும் சொல்ல வேண்டியதுதானே முறை?

ஆனால் இதில் நான் சற்றும் எதிர்ப்பார்த்திராத ஒரு விளைவு ஏற்பட்டது. அது வி.க.வின் எதிர்வினையால் ஏற்பட்டது. அதுவரை வி.க. என்பது உண்மையிலேயே யார் என்பது பாதி சந்தேகத்தில் இருந்தவர்களுக்கும் புலப்பட்டு விட்டது.

சரி, மீண்டும் தமிழ்மணத்துக்கு வருகிறேன். எஸ்.கே. அவர்கள் சொன்ன காரணம் சரிதான். ஆனால் அதுவே முழு உண்மையல்ல. தமிழ் வலைப்பூக்களை பற்றி நான் 2004 அக்டோபரில் எதேச்சையாகத்தான் அறிந்தேன். நம்ம என்றென்றும் அன்புடன் பாலா அவர்களது திருவல்லிக்கேணி நினைவுகள் சக திருவல்லிக்கேணிவாசியான எனது உள்ளத்தைக் கவர்ந்தன. அதில் பின்னூட்டம் இடுவதற்கென்றே நான் பிளாக்கர் கணக்கு துவங்கினேன். பிறகு தமிழ் தட்டச்சு வந்தது. எனது பதிவுகள் தொடர்ந்தன.

ஆனால் அப்போதெல்லாம் ஒவ்வொரு வலைப்பூவாகத் தேடிப் போக வேண்டும். தமிழ் வலைப்பதிவர் பட்டியல் இருந்ததோ அந்த வேலை சற்று எளிமைப்படுத்தப்பட்டதோ. ஆனால் நான் உள்ளே வந்த சில நாட்களுக்குள் காசி அவர்களது தமிழ்மணம் எனது இந்த வேலையை சுலபமாக்கி விட்டது. அதன் பெருமையை நான் கூற விழைவது சொந்த சகோதரனிடம் ஒரு பெண் தன் பிறந்தகப் பெருமையைப் பேசுவதற்கு சமமாகும்.

ஆக முக்கியமான காரணம் இதுதான். பிறகு என்னென்ன திரட்டிகள் வந்தாலும் தமிழ் மணம் ஒரு தனியிடத்தை எனது மனதில் பிடித்துள்ளது. அதுவே நான் இங்கு இன்னும் விடாப்பிடியாக இருப்பதற்கு காரணம். அதற்காக தமிழ்மணம் அப்படியே ஒரு மேம்பாடும் பெறாமல் அப்படியே நின்று விடவில்லையே. எவ்வளவு புது வசதிகள் வந்துள்ளன? தமிழைத் தவிர வேறு எந்த மொழிப் பதிவுகளுக்கும் இம்மாதிரி ஏற்பாடு இல்லை என்று அடித்துக் கூறுவேன். எனக்கு ஆறு மொழிகள் தெரியும் என்பதையும் சைக்கிள் கேப்பில் கூறிவைக்கிறேன். அது பற்றிய விவரங்கள் இங்கே, ஹி ஹி ஹி.

இன்னொரு உண்மையையும் கூறுவேன். மொழிபெயர்ப்பு எனது உயிர். அதற்கு துணை போகும் எல்லாமே எனக்கு பிடிக்கும். அவற்றை உபயோகித்து கொள்ள தயங்க மாட்டேன். அந்த வரிசையில் தமிழ்மணத்துக்கு முக்கிய இடம் உண்டு. அதை உபயோகித்து பல பதிவுகள் பார்த்தேன், பின்னூட்டங்கள் இட்டேன், பதிவுகள் போட்டேன். எனது தமிழ் மேம்பட்டு வருகிறது. தமிழில் தட்டச்சு அனாயாசமாக வந்தது. அதற்கென காத்திருந்தது போலவே ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிபெயர்ப்பு வேலைகள் வர ஆரம்பித்தன. தற்சமயம் என்னுடைய மொத்தம் இரண்டு வெளி நாட்டு வாடிக்கையாளர்களுமே எனது தமிழ் மொழிபெயர்ப்பு மூலமாகத்தான் வந்துள்ளனர். தாய்மொழியில் எழுதும் சுகத்தை அனுபவிக்கிறேன். வேற்று மொழியிலிருந்து தாய் மொழிக்குத்தான் மொழிபெயர்க்க வேண்டும் என்ற வாதத்தின் பலத்தை நேரடியாக உணர்கிறேன். யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல இனிதாவது எங்கும் காணோம் என்ற கோஷத்தை உண்மையாக உணர்ந்து வைக்க முடிகிறது. எல்லாம் இருக்கும் இடத்திலேயே நடப்பதால் என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் என்றெல்லாம் பதிவு போட முடிகிறது.

பல மொழிபெயர்ப்பு வேலைகள் வருகின்றன என்பதும் உண்மைதானே. அவற்றில் பல நான் தமிழ்மணத்தில் செயலுடன் இருப்பதால்தான். இன்னொன்றையும் கூறவேண்டும். தமிழ் மணம் என்னை மிக நல்லபடியாகவே நடத்தி வந்திருக்கிறது. வளர்ந்த குழந்தையாக செயல்பட்டு (நன்றி மா.சிவகுமார் அவர்களே, பை தி வே அவரும் எனது வாடிக்கையாளர்தான் என்பதையும் சந்தடிசாக்கில் கூறிவிடுகிறேன்) பல சர்ச்சைகளை உருவாக்கி, படுத்தின/படுத்தும் டோண்டு ராகவனை இன்னும் தமிழ்மணம் சகித்துக் கொண்டிருப்பதே என்னை பிறந்த வீட்டில் ஒரு பெண்ணுக்கு கிடைக்கக் கூடிய பாதுகாப்பு உணர்ச்சியை அளிக்கிறது.

ஆனால் என் வீட்டம்மா வேறு ஒரு கோணத்தை முன்வைக்கிறார். "சண்டைக்கார பிறாம்மணா, எங்கே சண்டை, சோத்து மூட்டையை இறக்கு" என்ற சொலவடைக்கு ஏற்ப நான் செயல்படுகிறேனாம். அப்படியா இருக்கும்? சேச்சே. இருக்கவே இருக்காது. அவருக்கு என்ன தெரியும்? சமீபத்தில் 1953 முதல்தானே என்னை அவர் அறிவார்?

ஆக, டோண்டு ராகவன் தமிழ்மணத்தை விட்டு விலகுவது என்பது இப்போதைக்கு out of question. ஓக்கேவா கால்கரி சிவா மற்றும் எஸ்.கே. அவர்களே?

அன்புடன்,
டோண்டு ராகவன்

4/14/2007

ஆப்பரேஷன் சல்மா அயூப்

Anonymous has left a new comment on your post "ஜவஹர்லால் நேரு அவர்களின் legacy - 3":
xxxxxxxxxxxxxx (censored)
//என்ன நடந்தது என்று டோண்டு அவர்கள் ஒரு பதிவு போட்டு உண்மையை உலகுக்கு உரத்து சொல்ல வேண்டும்.
இப்பின்னூட்டத்தை வெளியிடுவதும், வெளியிடாததும் உங்கள் விருப்பம். ஆனாலும் உங்கள் மீது மதிப்பு கொண்டவர்கள் இவ்விவகாரத்தில் உங்கள் கணிப்பு என்ன என்பதை அறிய விரும்புகிறார்கள்.
Publish this comment.
Reject this comment.
Moderate comments for this blog.
Posted by Anonymous to Dondus dos and donts at April 13, 2007 12:08 PM//

மேலே உள்ளதுபோல பல பின்னூட்டங்கள் வந்தன. என்னைப் பொருத்த வரைக்கும் நான் தெளிவாகவே இருக்கிறேன். ஜயராமன் கண்டிப்பாக இவர்கள் கூறியது போல செய்யக் கூடியவர் அல்ல என்பதே அது.

இந்த விஷயத்தில் நேசகுமார் அவர்களும் பதிவிட்டுள்ளார்.

இப்போது விஷயத்துக்கு வருகிறேன். போன ஆண்டில் ஜோதி என்ற பெயரில் பின்னூட்டங்கள் வரத் துவங்கின. பின்னூட்டங்கள் என்னமோ சாதாரணமானவைதான். ஆனால் நான் வழக்கமான எனது பிரசித்திபெற்ற எலிக்குட்டி சோதனையை செய்து சம்பந்தப்பட்டவர் ப்ரொஃபைலுக்கு சென்று அங்கிருந்து வலைப்பூவுக்கு சென்றால் அதனையும் காமக்கதைகள். அச்சமயம் ஜோசஃப் அவர்களிடமும் இந்த விஷயத்தைக் கூறியுள்ளேன். அவரும் அந்தப் பெயரில் வந்த பின்னூட்டத்தை நீக்கினார்.

இப்போது ஜயராமன் விஷயத்தில் ஜோதி என்று பெயர் வர நான் உஷாரானேன். உடனே எனது ஜீமெயில் ஆர்கைவ்ஸில் தேடியதில் மாயவரத்தானின் இப்பதிவிலும் பின்னூட்டம் இட்டதும், அதை நான் மாயவரத்தானுக்கு சுட்டிக் காட்டியதும் தெரியவந்தது. அதில் வந்த ஜோதியின் ப்ரொபைல் இப்போது சல்மா அயூப்பாக வருகிறது. எல்லாவற்றையும் ப்ரிண்ட் செய்து வைத்துள்ளேன்.

இதில் பாலபாரதிக்கு யாரோ வேண்டுமென்றே தவறாகத் தகவல் தந்துள்ளனர் என நினைக்கிறேன். அவரும் அதை good faith- ல் எடுத்து கொண்டு காரியமாற்றியுள்ளார் என நினைக்கிறேன். ஆகவே அவரையோ, முத்து தமிழினி அவர்களையோ குறை கூற விரும்பவில்லை.

இப்போது முக்கிய கேள்வி, ஜயராமன் ஏன் அவ்வாறு எழுதித் தரவேண்டும்? பயமே காரணம். போலீஸ் என்ற பெயரைக் கேட்டவுடனேயே ஒரு சராசரி மனிதனுக்கு வரும் பயம்தான் காரணம். என்ன இவர் விஷயத்தில் அது ஓவர் என்றே நினைக்கிறேன்.

ஏற்கனவே போலி டோண்டு பொன்ஸ் பேரில் தானே போலிப் பதிவு போட்டதாகவும் பிறகு அவர் சரியான செயல்பாட்டுக்கு வந்ததாகவும் கூறியுள்ளான், எனக்கு அனுப்பியுள்ள பின்னூட்டத்தில். அது என் குடும்பத்தாரை மிக அசிங்கமாகத் தாக்குவதால் அதை வெளியிட மனமில்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

4/11/2007

ஜவஹர்லால் நேரு அவர்களின் legacy - 3

இந்திரா காந்தி அவர்களது காலக் கட்டத்தை இம்மாதிரிப் பிரிக்கலாம்:
1. 1966 ஜனவரி முதல் 1967 மார்ச் வரை
2. 1967 மார்ச் முதல் 1969ல் குடியரசுத் தலைவர் ஜாகிர் ஹுசைன் மறைந்த வரைக்கும்
3. 1969-லிருந்து 1971 மார்ச் வரை
4. 1971 மார்ச் முதல் 1975 ஜூன் வரை (அவசர நிலை பிரகடனம்)
5. 1975 ஜூன் முதல் 1977 மார்ச் வரை (அவசர நிலை அத்துமீறல்கள்)
6. 1977 மார்ச் முதல் 1979 இறுதி வரை
8. 1980 ஜனவரி முதல் 1984 அக்டோபர் 31 வரை (கொலையுண்ட தினம்)

1. 1966 ஜனவரி முதல் 1967 மார்ச் வரை:
நான் ஏற்கனவே கூறியபடி மொரார்ஜி அவர்களுக்கு எதிராக இந்திராவை நிறுத்தி அவரை ஜெயிக்க வைத்தது காங்கிரஸ் மேலிடம். அதனுள் காமராஜ் அவர்களும் அடக்கம். அப்போதெல்லாம் இந்திரா காந்தி மிக அடக்கமான தோற்றத்துடன் இருந்தார். அவருக்கு மெழுகு மொம்மை என்ற பட்டப் பெயரும் இருந்தது. அவரை தங்கள் இஷ்டத்துக்கு வளைக்க இயலும் என தப்புக் கணக்கு போட்டனர் காங்கிரஸ் தலைவர்கள்.

முதலும் கடைசியும் முறை லோக்சபை காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கு ஓட்டெடுப்பு நடந்தது. இந்திரா காந்தி அவர்கள் சௌகரியமான மெஜாரிட்டியில் வென்றார்.

இந்திரா பதவி ஏற்ற சமயம் நாடு உணவுப் பஞ்சத்தை எதிர்க் கொண்டது. அமெரிக்காவிலிருந்து கோதுமை ரூபாய் வர்த்தகத்தில் வாங்கப்பட்டது. அன்னியச் செலாவணி இல்லை. என்ன நடந்தது என்று பார்ப்போம்.

லால் பஹதூர் சாஸ்திரி அவர்கள் 1966-ஜனவரியில் மரணமடைய இந்திரா அவர்கள் மேலே கூறியபடி பதவி ஏற்றார். முந்தைய ஆண்டு 1965-ல் பாகிஸ்தானுடன் யுத்தம் நடந்தது. அது தேசத்துக்கு 1966-ல் பொருளாதசர நெருக்கடியை ஏற்படுத்தியது. மேலும், 1965-ல் தென்/மேற்கு பருவக்காற்று வேறு பொய்த்தது. ஜூன் 6, 1966 இந்திரா அவர்கள் ரூபாயின் மதிப்பை 50 சதவிகிதம் குறைக்கும் நிர்பந்தத்துக்கு ஆளானார். மேலும் நிலைமையை மோசமாக்குவதாக 1966 பருவ மழையும் பொய்த்தது.

ஏற்கனவே அமெரிக்காவிலிருந்து கோதுமையின் இறக்குமதியை நம்பியிருந்த இந்தியாவின் நிலைமை ரொம்பவும் மோசமாயிற்று. வேறு வழியின்றி இந்தியா அமெரிக்காவை கோதுமைக்கு கெஞ்ச வேண்டியதாயிற்று. கோதுமையை அன்னியச் செலாவணி இல்லாது ரூப்பய்க்கு விற்குமாறு அமெரிக்காவை கேட்க வேண்டியிருந்தது.

ஆனால் அமெரிக்கா இந்தியாவின் நடவடிக்கையால் அதிருப்தியடைந்திருந்தது. அதுவும் வியட்னாம் விவகாரத்தில் இந்தியா அமெரிக்காவை ரொம்பவே கண்டித்து வந்தது. இருந்தாலும் என்ன செய்வது. இந்திரா அவர்களுக்கு வேறு வழியில்லை. அமெரிக்க குடியரசுத் தலைவர் ஜான்ஸனுக்கு இந்திரா காந்தி நேரடி டெலிபோன் செய்து கோதுமைக்காக வேண்டுகோள் விடுக்க வேண்டியிருந்தது. அப்போது இந்திரா அவ்ரது முகம் ரோஷத்தால் சிவந்து போயிருந்தது என்று நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர். எது எப்படியானாலும் தேவை என்றால் சுய கௌரவம் பார்க்க இயலாதுதானே. அந்த விஷயத்தில் சமயோசிதமாக நடந்த இந்திரா அவர்களை பாராட்டியே தீர வேண்டும்.

நல்ல வேளையாக அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் பசுமைப் புரட்சி ஏற்பட, இந்தியாவுக்கு வரவிருந்த ஆபத்து நீங்கியது. இந்த பசுமைப் புரட்சி எப்படி வந்தது என்பதை விவரிக்கும் இந்தக் கட்டுரையை பாருங்கள்.

இந்திரா காந்தி அவர்களின் ஆட்சி காலத்தை மொத்தமாகப் பார்க்கும்போது இந்த முதல் காலக்கட்டம் பரவாயில்லை என்றுதான் கூற வேண்டும். இந்திரா காந்தி மெதுவாக அதிகாரத்தை தன்னுடன் தக்க வைத்துக் கோள்ள ஏற்பாடுகள் செய்து வந்தார். அதை அப்போது பலர் கவனிக்கவில்லை. இந்தியாவின் முதல் பெண் பிரதமர் என்ற பட்டம் வேறு அவர் மேல் ஒரு வசீகரத்தை மக்களிடம், முக்கியமாக பெண்களிடம், ஏற்படுத்தி வந்தது. இந்தக் காலக் கட்டம் துரதிர்ஷ்டவசமாக வெறும் 13 மாதங்களே நீடித்தது.

1967 மார்ச் மாதம் பொது தேர்தல் வந்து பலவற்றைப் புரட்டிப் போட்டது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ஜவஹர்லால் நேரு அவர்களின் legacy -2

ஜவஹர்லால் நேரு அவர்களது லெகஸி பற்றி எழுதிய முந்தையப் பதிவில் நான் இம்மாதிரி குறிப்பிட்டிருந்தேன்.

"அதிலும் இந்திரா இருந்தாரே, அபார திறமைசாலி. பல தனியார் துறையில் இருந்த நிறுவனங்களை தேசீயமயமாக்கி அவற்றின் செயல்பாடுகளை முடக்கியவர்". இந்த வரிகளுக்கு எதிர்வினையாக சில பின்னூட்டங்கள் வந்தன. அதில் ஒருவர் வேலை நேரத்தில் மொழிபெயர்ப்பு செய்து சம்பாதித்த எனது செயலை கேள்வி கேட்டிருந்தார். அதற்கு வேடிக்கையாக ஒரு பதில் கூறினேன் அப்போதைக்கு ஏனெனில் அப்பதிவு நேருவைப் பற்றியது. இப்போது சற்று சீரியஸாகவே பதில் கூறுகிறேன்.

அரசு நிறுவனங்களில் தேவைக்கதிகமாக ஆட்கள் வேலைக்கு எடுப்பது தெரிந்ததே. அதுவும் ஐ.டி.பி.எல். விவகாரத்தில் என்னெல்லாம் கந்திர கோளம் நடந்தது என்பதை எனது ஐ.டி.பி.எல். நினைவுகள் லேபல் கீழ் குறிப்பிட்டுள்ளேன்.

என்னை மேலே சொன்ன விஷயத்தை வைத்து கேள்வி கேட்டவர் சரியாகத்தான் கேட்டுள்ளார். ஆம், இந்த நிலைக்கும் இந்திரா காந்திதான் காரணம். ஆனால் ஒன்று. முதல் இரண்டு ஆண்டுகளுக்கு நெட்டி முறிக்கும் வேலை வந்தபோது ஐ.டி.பி.எல். வேலை மட்டுமே முக்கியமாக நடந்தது. அதுவும் வேலையில் சேர்ந்த புதிதில் என் தங்கைக்கு எழுதிய கடிதத்தில் வேலை நேரத்தில் சுறுசுறுப்பான பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளனாகவும், வீட்டில் இருக்கும் நேரத்தில் அதே அளவில் சுறுசுறுப்பான ஜெர்மன் மொழி பெயர்ப்பாளனாகவும் இருந்ததை வேடிக்கையாகவே குறிப்பிட்டேன்.

மறுபடியும் இந்திரா காந்தி. பொதுத் துறையில் இருந்த நிறுவனங்களின் பொற்காலமே எழுபதுகள் மற்றும் எண்பதுகள். 1966-ல் பதவிக்கு வந்து 1984-ல் கொல்லப்பட்ட இந்திரா காந்தி அவர்கள் 1977 முதல் 1980 வரையிலான குறுகிய காலக் கட்டத்தைத் தவிர்த்து பிரதம மந்திரியாக இருந்தார். சகட்டு மேனிக்கு நிறுவனங்களை தேசீய மயமாக்கினார்.

1966 ஜனவரியில் அவர் பிரதமராகத் தேர்வு பெற மொரார்ஜி தேசாயோடு போட்டி போட நேர்ந்தது. மொரார்ஜியிடம் அதிருப்தியுற்றவர்கள் காங்கிரஸ் மேலிடத்தில் இருந்தனர். அப்போது மொரார்ஜி பிரதமரானால் தங்கள் அதிகாரம் செல்லாது என அஞ்சினர். ஆகவே அரசியலுக்கு ஒப்பீட்டு அளவில் சற்றே புதியவராக இருந்த இந்திரா காந்தியை பிரதமராகத் தேர்ந்தெடுத்தால் தங்களுக்கு நல்லது எனத் திட்டமிட்டனர். அவர்களில் காமராஜரும் ஒருவர். இந்திரா காந்திக்கு ஆதரவாக அவர்கள் செயல்பட்டனர். நேருவின் மகள் என்ற லேபலும் இந்திரா காந்திக்கு சாதகமாக அமைந்தது.

இந்திரா காந்தி அவர்களது காலக் கட்டத்தை இம்மாதிரிப் பிரிக்கலாம்:
1. 1966 ஜனவரி முதல் 1967 மார்ச் வரை
2. 1967 மார்ச் முதல் 1969ல் குடியரசுத் தலைவர் ஜாகிர் ஹுசைன் மறைந்த வரைக்கும்
3. 1969-லிருந்து 1971 மார்ச் வரை
4. 1971 மார்ச் முதல் 1975 ஜூன் வரை (அவசர நிலை பிரகடனம்)
5. 1975 ஜூன் முதல் 1977 மார்ச் வரை (அவசர நிலை அத்துமீறல்கள்)
6. 1977 மார்ச் முதல் 1979 இறுதி வரை
8. 1980 ஜனவரி முதல் 1984 அக்டோபர் 31 வரை (கொலையுண்ட தினம்)

இந்திரா காந்தி அவர்கள் அதிகாரத்தில் இருந்த 15 ஆண்டுகள் நேரு அவர்கள் அதிகாரத்தில் இருந்த 18 ஆண்டுகள், ராஜீவ் அவர்கள் இருந்த 5 ஆண்டுகள், ராஜீவின் மனைவி பொம்மைப் பிரதமரின் சூத்ரதாரியாக இருந்து வரும் காலம் ஆகியவற்றைக் கூட்டினால் 40 ஆண்டுகளுக்கு மேல் வருகிறது. இப்போது நடக்கும் பல விபரீதங்களுக்கு காரணமாக விரும்பியோ விரும்பாமலோ நேருவின் குடும்பம் அமைந்து விட்டது. ஆகவே நேருவின் லெகஸியை குறித்து எழுதத் துவங்கினேன்.

முதலில் வெறுமனே மூன்று பதிவுகள்தான் போட இயலும் என்று பார்த்தால் இந்திரா காந்தியின் காலக்கட்டம் மட்டுமே 4 பதிவுகளுக்கு குறையாமல் வந்து விடும் போலிருக்கிறது. பார்ப்போம் என்ன நடக்கிறதென்று.

அன்புடன்,
டோண்டு ராகவன்

4/10/2007

ஜவஹர்லால் நேரு அவர்களின் legacy -1

"விதியுடன் இந்தியாவின் சந்திப்பு" என்று பொருள்பட நேரு அவர்கள் 1947-ஆம் வருடம் நள்ளிரவு 12 மணிக்கு வானொலியில் உரை ஆற்றியதை நேரடியாகக் கேட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இப்போதுள்ள தலைமுறையினருக்கு சாதாரணமாக நேரு அவர்களை பற்றிய அறிமுகம் வாய் வார்த்தைகள் மற்றும் எழுத்துக்கள் மூலமுமே கிடைக்கிறது. அவ்வகை அறிமுகங்கள் அவற்றை வெளியிடுபவர் விருப்பு வெறுப்புக்கேற்ப வேவேறு வகை பிம்பங்களை அளிக்கின்றன.

நாடு விடுதலை ஆன சமயம் பிரிவினையால் அகதிகளின் பிரச்சினை தலை தூக்கி ஆடியது. முக்கியமாக பஞ்சாப், வங்காளம், குஜராத், ராஜஸ்தான் ஆகிய பகுதிகளில் மக்கள் சுதந்திரத்தை கொண்டாடும் மனநிலையிலேயே இல்லை என்றுதான் கூறவேண்டும். முதல் சுதந்திர தினத்தன்று காந்தியடிகள் கிழக்கு வங்கத்தில் நவகாளியில் சமாதானப் பயணம் மேற்கொண்டிருந்தார். ராஜாஜி அவர்கள் வங்காள கவர்னராக இருந்து நிலைமையை திறமையாக சமாளித்து கொண்டிருந்தார்.

மேலே உள்ள இரு பத்திகள் இப்பதிவின் அறிமுகத்துக்காக அளிக்கப்பட்டுள்ளன.

எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் (சமீபத்தில் 1950) பிரதம மந்திரி என்றால் நேரு என்றே பல ஆண்டுகளாக எண்ணி வந்திருக்கிறேன். 1964-ல் அவர் இறந்தவரை அவரைத் தவிர வேறு யாரையும் யாரும் பிரதம மந்திரியாக நினைத்ததில்லை. 1962 தேர்தல் முடிவுகள் வெளியான சமயம் ஒரு தமிழ் பத்திரிகையில் நேரு ராஜினாமா என்று வர எல்லோரும் அடித்துப் பிடித்துக் கொண்டு அந்த பேப்பரை வாங்கிப் பார்த்தால். நேருவின் பழைய மந்திரிசபை மரபுப்படி ராஜினாமா செய்திருக்கிறது. ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் அதை ஏற்று, மாற்று ஏற்பாடுகள் வரை நேருவையே பிரதமராக செயல்படச் சொல்லியிருக்கிறார். அவ்வளவே. அன்று மாலையே நேருவின் புது மந்திரி சபை பொறுப்பேற்றுக் கொண்டது. இப்போது கூட பல பதிவர்கள் அந்த டெக்னிக்கை பயன்படுத்தி பரபரப்பான தலைப்பை போட்டு விட்டு பதிவை க்ளிக் செய்து படிக்க ஆரம்பிக்கும்போது ஹி ஹி ஹி என்று கூறுவதைப் போல இல்லை?

நேரு அவர்கள் சோஷலி்சத்தில் ரொம்ப நம்பிக்கை கொண்டவர். சுதந்திரம் வந்த புதிதில் பலருக்கும் அந்த நம்பிக்கை இருந்திருக்கிறது. ஆகவே சோஷலிச பாதையில் நாட்டைக் கொண்டு செல்ல அவர் முடிவு செய்ததை தவறாக எடுத்துக் கொள்ள முடியாது. மேலும் நாட்டில் கட்டமைப்புகள் ரொம்ப பலவீன நிலையில் இருந்தன. அவற்றை பலப்படுத்தத் தேவையான முதலீடுகளைச் செய்ய தனியாரிடம் நிதி இல்லை என்பதே நிஜம். நேரு அவர்கள் மிக துரிதமாக நாட்டில் முன்னேற்றத்தை கொண்டு வரத் திட்டமிட்டார். ஆகவே கனரகத் தொழில்களில் அதிக அக்கறை செலுத்தினார்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஒன்றுக்கும் உபயோகமில்லாத கம்யூனிசக் கொள்கையால் ஈர்க்கப்பட்டு, சோவியத் மாடலில் திட்டங்கள் தீட்டி, அகலக் கால் வைத்து நாட்டின் பொருளாதாரத்தையே குட்டிச்சுவராக்கினார். அதே காலக் கட்டத்தில் "அபார முன்னோக்கித் தாவல்" என்ற முயற்சியை செய்து கம்யூனிஸ்ட் சீனா காலை முறித்துக் கொண்டது. அந்த அளவுக்கு திவாலாகாவிட்டாலும் உள்ளூரப் புறையோடி புண்களுடன் இருந்து 1991-ல் உலக வரைபடத்திலிருந்தே காணாமல் போயிற்று சோவியத் யூனியன். அதற்கு ஒரு ஆண்டிற்கு முன்னால் கிழக்கு ஜெர்மனி மறைந்தது. ஆனால் இவையெல்லாம் ஐம்பதுகளில் எதிர்ப்பார்த்திருக்க முடியாத ஜவஹர்லால் நேரு அவர்கள் நம் நாட்டையும் அதே மாதிரி கோர்ஸில் நிலைநிறுத்தி விட்டு போய் சேர்ந்தார். அவரது மகளும் பேரனும் அந்தக் கூத்தை தொடர்ந்து நிகழ்த்தினர்.

அதிலும் இந்திரா இருந்தாரே, அபார திறமைசாலி. பல தனியார் துறையில் இருந்த நிறுவனங்களை தேசீயமயமாக்கி அவற்றின் செயல்பாடுகளை முடக்கியவர். இந்திரா மற்றும் ராஜீவ் பற்றி அடுத்த பதிவுகளில் பார்ப்போம். இப்போது நேருவின் ஆட்சிகாலத்தின் மீது கவனம் செலுத்துவோம்.

அவர் செய்த முதல் குளறுபடி காஷ்மீர பிரச்சினையை கையாண்ட விதமே. பட்டேல் உறுதியாக நடவடிக்கை எடுத்து பாக் படைகளை காஷ்மீரத்திலிருந்து துரத்திக் கொண்டிருந்த நேரத்தில் இந்த மனிதர் ராபணா என்று பாதுகாப்பு கவுன்சிலுக்கு போனார். அவர்கள் இட்ட ஷரத்துப்படி போர்நிறுத்த எல்லை என்று "தற்காலிகமாக" உருவாக்கப்பட்டது. அது இப்போதும் அப்படியே இருப்பதுதான் இந்த தற்காலிகத்தின் லட்சணம். காஷ்மீருக்கு தனி அந்தஸ்தெல்லாம் யாரும் கேட்காமலேயே இந்த மனிதர் கொடுத்துள்ளார். மக்கள் வாக்கெடுப்புக்கும் ஒத்துக் கொண்டார். அதாவது எல்லாமே இந்தியாவின் நலனுக்கு விரோதமாக அமைந்தது. இதில் என்ன துரதிர்ஷ்டமான நிலை என்றால். இவர் ரொம்ப நல்லவர். எல்லோரும் தன்னைப் போல என நினைத்தவர். ஆனால் இந்தியாவுக்கு தேவை நல்லவர் அல்ல, ஒரு வல்லவர். இவர் அது அல்ல.

இன்னொரு குளறுபடி சைனாவை அப்படியே நம்பியது. அதிலும் பாதுகாப்பு துறைக்கு தன் நண்பர் என்ற ஒரே ஒரு காரணத்துக்காக கிருஷ்ணமேனன் என்ற பிரயோசனமில்லாத மந்திரியை நியமித்து அவரை பாதுகாத்தும் வந்திருக்கிறார். இந்தக் குளறுபடியால் நாம் இழந்தது ஆயிரக்கணக்கான சதுர மைல் பரப்பில் உள்ள இந்தியப் பிரதேசங்கள்.

அணிசேரா நாடுகள் என்ற அமைப்பை உருவாக்கியவர் நேரு அவர்கள். இதனால் நாம் இழந்ததுதான் அதிகம். போகிறவர் வருவருக்கெல்லாம் தர்ம உபதேசம். எடுப்பது என்னவோ பிச்சை. அதுவும் அமெரிக்கா என்றால் தீவிரமாகத் தாக்குவார். அதுவே சோவியத் யூனியன் என்றால் விளக்கெண்ணை பேச்சுத்தான். 1956-ல் ஹங்கேரியை சோவியத் யூனியன் ரத்தக் களறியாக்கியபோது வாயடைத்து நின்றார். 1962-ல் சைனாவுடன் யுத்தத்தை சமாளிக்க முடியாத நிலை வந்த போது அமெரிக்கா மற்றும் பிரிட்டன் துணைக்கு வந்தன. சைனாவும் தாக்குவதை நிறுத்திற்று. ஆனால் பேச்சு என்னவோ அமெரிக்காவுக்கு உபதேசம் செய்யும் ரேஞ்சுக்குத்தான் இருக்கும். இந்த ஆஷாடபூதித்தனத்தால் இந்தியாவை எல்லோருமே பரிகாசம் செய்தனர்.

1948-ல் இஸ்ரேலை இந்தியா அங்கீகரித்தது. ஆனால் கான்ஸல் அளவுக்குத்தான் பிரதிநிதித்துவம் கொடுத்தது. ஏனெனில் இசுலாமிய அரேபியர்கள் கோபித்துக் கொள்வார்கள் என்ற அச்சம். அப்போதே சூட்டோடு சூடாக இஸ்ரேலுக்கு முழு ராஜரீக அங்கீகாரம் தந்திருந்தால் பல நன்மைகள் விளைந்திருக்கும். இஸ்ரேல் செய்த விவசாயப் புரட்சிகளை நம்மூரிலும் கொண்டு வந்திருக்கலாம். தேவையில்லாமல் பயந்ததால் நமக்கு பல கெடுதிகள்தான் ஏற்பட்டன. அதே சமயம் இந்தியா பாகிஸ்தானுக்கு இடையில் சண்டை நடந்தால் சக இசுலாமியரான பாகிஸ்தானத்தைத்தான் பாலஸ்தீனர்கள் ஆதரித்தனர். அப்போதும் இந்தியாவுக்கு புத்தி வரவில்லை. பிறகு எகிப்தே இஸ்ரேலுடன் ஒப்பந்தம் செய்து கொண்டதும்தான் இந்தியா விழித்து கொண்டது. அதற்குள் எவ்வளவு கால விரயம்? இதற்கான முதல் பொறுப்பும் நேருவுக்கே.

அவர் இறந்த பிறகு நடந்ததுதான் அபத்தத்தின் உச்சக் கட்டம். பிரதம மந்திரியின் இல்லமாகிய தீன்மூர்த்தி பவனை நேரு மியூசியமாக மாற்றினர். என்ன அபத்தமான செயல்? பிறகு பார்த்தால் இந்திரா காந்திக்கும் அதுவே நடந்தது. நல்ல வேளையாக ராஜீவ் காந்தி இறந்தபோது அவர் அதிகாரத்தில் இல்லை என்ப்து கடவுள் அருளே. இதற்கெல்லாம் நேருவை பொறுப்பாக்க முடியாது என்றாலும் இதுவும் அவரது லெகஸிதான். இதற்காக விளக்கெண்ணெய் சப்பைக்கட்டுகள் வேறு எனது இப்பதிவில் அளிக்கப்பட்டன..

அன்புடன்,
டோண்டு ராகவன்

4/04/2007

ஸ்ரீ கிருஷ்ணவேணி நதிக்கரையில் உள்ள பஞ்ச நரசிம்ம க்ஷேத்திரங்கள்

தற்சமயம் கிருஷ்ணா என அழைக்கப்படும் ஸ்ரீ கிருஷ்ணவேணி நதிக்கரையில் உள்ள பஞ்ச நரசிம்ம க்ஷேத்த்திரங்களான ஸ்ரீமங்களகிரி, ஸ்ரீவேதாத்ரி, ஸ்ரீமட்டப்பல்லி, ஸ்ரீவாடப்பல்லி மற்றும் ஸ்ரீகேதவரம் ஆகிய இடங்களுக்கு செல்ல வேண்டும் என லட்சுமி நரசிம்ம ஸ்வாமியின் தீவிர பக்தையான என் வீட்டம்மா பல நாட்களாகக் கூறி வந்தார். நானும் என்னால் முடிந்த அளவு பட்டும் படாமல் பதில் கூறி தப்பித்து வந்தேன். கையில் பல மொழிபெயர்ப்பு வேலைகள் ஆகவே கணினியை விட்டு நகரவே முடியவில்லை.

ஆனால் திடீரென போன வாரம் புதன் கிழமை எல்லாம் கூடி வர வெள்ளிக்கிழமை விஜயவாடா செல்லும் ஜன சதாப்தியில் சென்று, திங்களன்று திரும்பவரும் அதே வண்டியில் ரிடர்ன் டிக்கட் புக்கிங் எல்லாம் ஒரு நொடியில் நடந்தன.

விஜயவாடாவை எனது ரயில் சென்றடையும்போது மணி பிற்பகல் 1.45. உள்ளூர் வாடகை வண்டி நான் ஏற்பாடு செய்தது, அது காத்திருந்தது. அப்படியே அதில் ஏறி முதலில் வேதாத்ரி நோக்கிப் பயணம். பிறகு அங்கிருந்து மட்டப்பல்லிக்கு என் கார் சென்ற போது இரவு மணி 8. உள்ளூர்காரர் ஒருவரிடம் ஏற்கனவே பேசி வைத்திருந்தபடியால் அங்கு இரவு தங்கி ஆகாரம் செய்ய முடிந்தது. அடுத்த நாள் மட்டப்பல்லியிலிருந்து வாடப்பல்லிக்கு பயணம். பிற்பகல் 4 மணியளவில் தரிசனம். அங்கிருந்து குண்டூர் வழியாக விஜயவாடா செல்லும் வழியில் மங்களகிரி வர பானக நரசிம்மரையும் பார்க்க முயற்சி செய்தோம், ஆனால் தரிசன நேரம் கடந்து விட்டிருந்தது. ஆகவே மலையடிவாரத்தில் உள்ள புலிமுக நரசிம்மஸ்வாமி தரிசனம். புலிமுகம் பற்றி யாரிடம் கேட்பது எனத் தெரியவில்லை. தேடிப்பார்த்து கிடைத்தால் பதிவில் சேர்க்கிறேன்.

அன்று இரவு விஜயவாடாவில் ஹோட்டலில் அறை எடுத்து கொண்டோம். அடுத்த நாள், ஞாயிறன்று மங்களகிரி மற்றும் கனகதுர்கா ஆலயங்கள் தரிசனம். அடுத்த நாள்தான் ரிடர்ண் பயணம் என்பதால் ரிலேக்ஸ்டாக ஹோட்டலில் தங்கல். பிற்பகல் நம்ம என்றென்றும் அன்புடன் பாலா அவர்களின் போன் வர, தமிழ்மணம் ஞாபகம் வந்தது. உள்ளூர் சைபர்கஃபேக்கு விரைந்து தமிழ்மண அலசல். சுரதா பெட்டி பக்கத்தைத் திறந்து பல பின்னூட்டங்கள் போட முடிந்தது. திங்களன்று பிற்பகல்தான் வண்டியாதலால் இதற்கு முந்தையப் பதிவையும் போட முடிந்தது. சுரதாவுக்கு நன்றி.

செண்ட்ரலில் இறங்கி எனது கார் வீட்டுக்கு வரும்போது இரவு 10.30. நல்ல பயணம், ஆனால் கேதவரம் மட்டும் செல்ல இயலவில்லை. ஏனெனில் அது நக்ஸலைட்டு தோழர்கள் ராச்சியம் செய்யும் இடமாம். ஆகவே ஒரு டிரைவரும் அங்கு செல்ல முன்வரவில்லை.

இப்போது இந்த ஐந்து க்ஷேத்திரங்கள் பற்றி சில வார்த்தைகள். அமரர் முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சார்யார் (குறையொன்றுமில்லை புத்தகம் எழுதியவர்) தனது தேன் சிந்தும் தமிழில் எழுதிய "மட்டப்பல்லியில் மலர்ந்த மறைபொருள்" என்னும் புத்தகத்தை ஆதாரமாக வைத்து எழுதுகிறேன். வடமொழி கலந்த தமிழை சற்றே தனித்தமிழாக முடிந்தவரை மாற்றியுள்ளேன்.

இந்த ஸ்ரீகிருஷ்ணவேணி நதிக்கரையில் உள்ள ஐந்து நரசிம்ம திவ்யத் தலங்கள் இந்தப் பாருக்கே அழகு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளன. இந்த ஐந்து தலங்களின் பேரைச் சொன்னாலே பஞ்சமாபாதங்கள் பதறி ஓடும். இவ்வாறாக இந்த பஞ்ச நரசிம்ம க்ஷேத்த்திரங்களான ஸ்ரீமங்களகிரி, ஸ்ரீவேதாத்ரி, ஸ்ரீமட்டப்பல்லி, ஸ்ரீவாடப்பல்லி மற்றும் ஸ்ரீகேதவரம் ஆகிய இடங்கள் மிகவும் பெருமை வாய்ந்தவை.

1. ஸ்ரீமங்களகிரி:
இந்தத் தலம் உள்ள மலைக்கு மங்களகிரி, பத்ரகிரி, பீமாத்ரி என்றெல்லாம் பல பெயர்கள் உண்டு. இங்கு மலையடிவாரத்திலும் மலை உச்சியிலும் லட்சுமி நரசிம்மர் கோவில்கள் உண்டு. மலை உச்சி கோவிலில்தான் பானக நரசிம்மர் எழுந்தருளியுள்ளார். அவருக்கு பானகம் வைத்து சேவிக்க வேண்டும். பானகத்தை குருக்கள் சங்கினால் மொண்டு ஸ்ரீபுருஷ ஸுக்தம் கூறிக் கொண்டே பகவான் வாயினுள் விட கிட்டத்தட்ட பாதி பானகம் உள்ளே சென்றதும் எதிர்த்து கொண்டு சிறிதளவு பானகம் வர அதையும் பிரசாதமாக மீதி உள்ள பானகத்துடன் சேர்த்து நமக்கே தந்து விடுவார்கள். அபார சுவையுடன் கூடிய பானகம். போன ஜோடு தெரியாது நாமும் விழுங்கி வைப்போம்.

பரமபதத்துக்கு துல்யமானது மங்களகிரி தலம்.இங்கு மலையுச்சியிலும் மலையடிவாரத்திலும் எம்பெருமான் லட்சுமி நரசிம்மன் எழுந்தளியிருக்கிறான். இவன் ஸ்யம்பூவாக அதாவது தானாகவே தோன்றியவன்.பர்வத குகையில் விளங்குகிறான். பஞ்ச பாண்டவர்களில் ஒருவனான பராக்கிரமசாலி பீமனால் ஆராதிக்கப்பட்ட பெருமாள். பீம பீம பராக்கிரமுடையவன். இவன் கிருத யுகத்தில் பாலையே அருந்தி கொண்டிருந்தவன். திரேதாயுகத்தில் தேனைப் பருகினான், துவாபர யுகத்தில் இக்ஷுஸாரம் என்னும் கரும்புச்சாறு மற்றும் கலியுகத்தில் குடோதகம் என்னும் பானகம். ஆகவேதான் இங்கு பானக நைவேத்யம் சிறப்பானது.

2. வேதாத்திரி:
இந்தத் தலம் உள்ள மலைக்கு வேதாத்ரி, வேதஸ்ச்ருங்கம், நிகமாத்ரி, வேதகிரி என்றெல்லாம் பெயர் உண்டு. நான்மறைகளும் மலையாகி அவற்றால் போற்றப்படுபவனே இந்த பெருமள் என அவனை தூக்கிக் காட்டுகிறது இந்த மலை. இங்குள்ள பெருமாள் ஸ்ரீயோகாநந்தன், தாயார் ஸ்ரீராஜ்யலட்சுமி. அருகில் உள்ள நதிக்குள் பெரிய சாலக்ராம மூர்த்தியிருப்பதாக ஐதீகம். அதை பார்க்கும் பாக்கியம் கிட்டவில்லை.

இங்குள்ள பெருமாள் நோய்கள் அனைத்தையும் போக்கடித்து பரிபூரண ஆரோக்கியம் கொடுப்பவன். இவனது இடையில் ஒரு உடைவாள் உண்டு. அதை வைத்து எம்பெருமான் அறுவை சிகிச்சை செய்கிறான். பேஷஜம் பிஷக் என்கிறபடி மருந்தும் இவனே, மருத்துவனும் இவனே. பிரதமோதைவ்யோ பிஷக் என்று வேதம் இவனை முதல் மருத்துவனாகக் கொண்டாடுகிறது.

3. ஸ்ரீகேதவரம்:
ஏற்கனவே கூறியபடி இங்கு நாங்கள் செல்ல இயலவில்லை. இது பற்றி தேவ ரிஷி நாரதர் கூறுகிறார்:

க்ருஷ்ணா தீர விஹாராய
காருண்யாம் ருதஸிந்தவே |
கமலா ப்ராண நாதாய
கேதவராய மங்களம் ||

இந்த மாபெரும் தலத்தில் ஸ்ரீகிருஷ்னவேணி உத்திர வாஹினியாய் எம்பருமானின் வடக்கு பக்கத்தில் ஓடுகிறாள். எம்பெருமானோ கருணாமூர்த்தி. பர்வதத்தின் மேலேயும், நதிக்கரையிலுமாக இரு மூர்த்திகளாக அவன் வீற்றிருக்கிறான். இங்கு பெருமாள் கேதவரநாதனாக வணங்கப்படுகிறான்.

4. ஸ்ரீமட்டப்பல்லி:
இங்கு பெருமாள் அந்தர்யாமியாக இருக்கிறான்.

ஸ்ரீ பல்யத்ரி மத்யஸ்தாய
நிதயே மதுராய ச |
சுக ப்ரதாய தேவாய
ஸ்ரீ ந்ருஸிம்ஹாய மங்களம் ||

மனத்துள்ளான், மாகடல் நீருள்ளான், மலர்ராள் தனத்துள்ளான், தண்டுழாய் மார்பன் எம்பெருமான் எங்கும் இருக்கிறான். ஆகவேதான் தூணிலுமிருப்பான் துரும்பிலுமிருப்பான் என பிரஹலாதன் அழுத்தம் திருத்தமாகக் கூறமுடிந்தது. எம்பெருமான் எள்ளில் வியாபித்துள்ள எண்ணெய் போல உள்ளான். இதுதான் உயர்ந்த நிலையானான எங்கும் நிறைந்திருத்தல் எனப்படுவதாகும்.

5. ஸ்ரீவாடப்பல்லி:
இங்குள்ள பெருமாள் பரம சௌலப்ய லட்சுமி ந்ருஸிம்ஹன். இவனது முகத்துக்கு நேராக ஒரு தீபம், திருவடிகளுக்கு நேராக இன்னொரு தீபம். முதல் தீபஜ்வாலை அப்படியும் இப்படியும் ஆடிக் கொண்டிருக்கும். அவன் மூச்சுக் காற்று பட்டு அவ்வாறு ஆவதாகத் தலப்புராணம் கூறுகிறது. காலடிக்கு முன்னால் தீபஜ்வாலை அப்படியே ஆடாமல் இருக்கும். இதுபற்றி இன்னொரு வியாக்யானமும் உண்டு.

நாம் சஞ்சலம் குடி கொண்ட மனதுடன் உள்ளே நுழைகிறோம். மனது அலை பாய்கிறது. பகவான் தாள் சேர்ந்ததும் சஞ்சலம் மறைந்து பேரமைதி குடி கொள்கிறது.

பகவான் தரிசனத்துக்கு செல்லும் வழியில் பல வாடிக்கையாளர்களின் தொலைபேசி அழைப்புகள். ஒரு புது வாடிக்கையாளரும் கிடைத்தார். எல்லாம் லட்சுமி நரசிம்மரின் அருளே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

நம்ம தென்னாட்டு வினோத் துவா ம்யூஸ் கேட்டதற்கு இணங்க சேர்க்கப்பட்டன சில வரிகள்.
இந்தத் தலங்களை பற்றி தேவ ரிஷி நாரதர் பாடியது அநேகம். அவற்றிலிருந்து சில முத்துக்களை அந்தந்த இடங்களில் பொருத்தியுள்ளேன் என்னால் இயன்றளவு.

4/02/2007

உச்ச நீதிமன்றத்தின் தடை பற்றி சில வெளிப்படையான எண்ணங்கள்

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் ஒரு பகுதி கீழே தரப்பட்டுள்ளது. இதை எனக்கு அனுப்பிய நண்பர் ஜயகமல் அவர்களுக்கு நன்றி.

Let State show compelling logic
OPINION
Supreme Court / New Delhi April 01, 2007

Classifications for special preference must not be unfair for those left out.

In the writ petitions, the policy of 27 per cent reservation for the Other Backward Classes (OBCs) contained in the Central Educational Institutions (Reservation in Admission) Act, 2006, is the subject matter of challenge.

The primary ground of challenge is that the Union of India has failed in performing the constitutional and legal duties towards the citizenry. Consequently, the Act shall ... ultimately have the result of dividing the country on the basis of caste. The constitutional guarantee of equality and equal opportunity shall be seriously prejudiced. It has been contended that the time has come to replace the "vote bank" scenario with "talent bank".

The statute in question, it is contended, has lost sight of the social catastrophe it is likely to unleash. Not only would the products be intellectual pygmies as compared to normal intellectually sound students passing out, it has been highlighted that on the basis of unfounded and unsupportable data about the number of OBCs in the country the Act has been enacted.

It has been pointed out that this Court in Indra Sawhney v. Union of India and Ors. (1992 Supp. (3) SCC 217) had recognised the concept of "creamy layer" amongst the advanced OBCs to be kept out of preferential treatment. The population data of 52% projected by the Mandal Commission was not actually given the seal of acceptance. Though there is a specific provision in Section 11 of the Backward Classes Act for a periodic revision of the lists, the same has not been done, and on the contrary additions are being made.

The rationale of 27% has been arrived at on the basis of the myth that the OBCs are 52% (of the population) in the country and even the ratio of 27% reservation for the students belonging to other backward classes in the educational institutions is to be funded and controlled by the Central Government.

It is highlighted that after the 1931 census there has never been any caste-wise enumeration or tabulation, which in essence corrodes the credibility of the claim of 52% population of other backward classes. The concept of creamy layer cannot prima- facie be considered to be irrelevant. It has also to be noted that nowhere else in the world do castes, classes or communities queue up for the sake of gaining backward status. Nowhere else in the world is there competition to assert backwardness and then to claim we are more backward than you.

We reiterate that the ceiling of 50%, the concept of creamy layer and the compelling reasons, namely, backwardness, inadequacy of representation and overall administrative efficiency are all constitutional requirements without which the structure of equality of opportunity in Article 16 would collapse.

However, in this case, as stated, the main issue concerns the "extent of reservation". In this regard the State concerned will have to show in each case the existence of the compelling reasons, namely, backwardness, inadequacy of representation and overall administrative efficiency before making provision for reservation.

Differentiation or classifications for special preference must not be unduly unfair for the persons left out of the favoured groups.It, therefore, needs no reiteration that the creamy layer rule is a necessary bargain between the competing ends of caste-based reservations and the principle of secularism. It is a part of constitutional scheme. Therefore these cases have to be examined in detail as to whether the stand of the Union of India that the creamy layer rule is applicable to only Article 16(4) and not Article 15(5) is based on any sound foundations.

In the background of what has been explained above, it would be desirable to keep in hold the operation of the Act so far as it relates to Section 6 thereof for the OBCs category only. We make it clear that we are not staying the operation of the Statute, particularly, Section 6 so far as the Scheduled Castes and Scheduled Tribes candidates are concerned.

(Excerpts from the judgement delivered on 29/03/2007 on OBC reservation)

http://www.business-standard.com/opinionanalysis/storypage.php?tab=r&autono=279502&subLeft=2&leftnm=4


என் மனதில் சில கேள்விகள் எழுகின்றன.

1. 1931-ஆம் ஆண்டு தகவல்கள் இப்போதைய சரியான நிலையை பிரதிபலிக்கின்றனவா? ஆம் என்றால் எவ்வாறு?

2. கிரீமி லேயரை விலக்கி வைக்க அரசு சிறிதும் விரும்பாதது ஏன்?

3. நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்க இதை வைத்து பந்துகள் அறிவிப்பது எவ்வகையில் யோக்கியமான செயல்?

எழுபதுகளின் ஆரம்பத்தில் மண்டல் என்னும் அரசியல்வாதி தயாரித்த அறிக்கையே அப்போதே 40 ஆண்டு காலப் பழைய நிலையை வைத்துத்தானே. அதனால்தானே அப்போதைய பிரதம மந்திரி இந்திரா அதை கிடப்பில் போட்டு வைத்தார்? அதன் பிறகு வி.பி.சிங் முற்றிலும் தன து சுயநல அரசியல் நிலைப்பாடு காரணமாக அதை மீண்டும் எடுத்து தூசு தட்டி அமுலுக்கு கொண்டுவர முயன்றார். இந்த இடத்தில் அவர அதனால் எல்லாம் தனது நிலையை காப்பாற்றிக் கொல்ள முடியாது போயிற்று என்பதே ஆறுதலளிக்கும் ஒரே விளைவு.

கிரீமி லேயரை விலக்க அரசியல்வாதிகள் விரும்பாததற்கு காரணமே அவர்கள் சுயநலம் என்றுதான் கூறுவேன். ராமதாசு அவர்களின் பேரக்குழந்தைகள், முதல்வரின் கொள்ளு பேரன்கள் ஆகியோரும் இட ஒதுக்கீடு கேட்பது என்ன நியாயம். இப்போது கூட குடி முழுகவில்லை. தத்தம் குழந்தைகளை கிரீமி லேயர் அடிப்படையில் விலக்கி கொள்கிறோம் என்று சம்பந்தப்பட்ட தலைவர்கள் அறிவிக்க தயாரா? அதை செய்துவிட்டு மற்றவர்களுக்காகப் போராடுவார்களா?

அன்புடன்,
டோண்டு ராகவன் (விஜயவாடாவிலிருந்து)
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது