வள்ளியைக் கவர முருகனுக்கு அவர் அண்ணன் யானை வடிவில் வந்து உதவியது எல்லோருக்கும் தெரிந்ததே. நமது இலக்கியத்தில் அந்த காலத்திலிருந்தே இந்த கான்சப்ட் ஓஹோ என வொர்க் ஆகிறது.
இப்போது இந்த வோடோஃபோன் விளம்பரத்தைப் பாருங்கள்.
விளம்பர வாசகம் “சிறு ஓசையையும் கேளுங்கள் வோடஃபோனில்” புன்னகையை வரவழைக்கிறது.அதன் தொடர்ச்சி விளம்பரத்திலோ, உடனடி தொடர்புகள் வோடஃபோனில் என ஆட்டையைப் போடுகிறார்கள்.
தொடர்பு கிடைத்து பையனும் பெண்ணும் பேசும்போது பூஜை வேளையில் இன்னொருவர் கரடியாக வருவதைத் தடை செய்யும் விஷயமும் அதே நாயால் நடக்கிறது. அதையும் பாருங்கள். தடையற்றப் பேச்சுக்கள் வோடோஃபோனில்,
அடுத்து அந்த நாய் என்ன செய்யப் போகிறது என்பதையறிய ஆவலாக உள்ளேன்.
வள்ளி முருகன் கதையிலிருந்து சுட்டு எம்ஜிஆர் நல்ல நேரம் படத்தில் யானையின் உதவியுடன் கேஆர் விஜயாவை கரெக்ட் செய்யும் காட்சியையும் பார்க்கலாமே. ஹிந்தி வெர்ஷனிலும் நன்றாகவே வந்தது ஆனால் சுட்டி கிடைக்கவில்லை.
புறாவிடு தூது வேண்டுமா? அதுவும் கீழே காட்டும் இப்படத்தில் காணக்கிடைக்கும்.
முழுக்க பறக்காமல் காரில் சவாரி செய்து குறும்பு செய்கிறது புறா என்பது அடிஷனல் போனஸ்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
சலம்: ஒரு மதிப்புரை – கதிரவன் ரத்தினவேல்
-
Pa Raghavan
சமீபத்தில் கூட ஒருவர் வால்கா முதல் கங்கை வரை புதினத்தை புளுகென்று திட்டிக்
கொண்டிருந்தார். ஆரியர்கள் பூர்வகுடிகள் என்பது அவரது வாதம். அவரெல்ல...
9 hours ago