5/25/2005

என் பெயரில் வெளியாகும் பின்னூட்டங்களை பற்றி

அன்பு வலைப்பதிவு நண்பர்களே,

இப்போதெல்லாம் சில பதிவுகளில் என் பெயரைத் தாங்கி ப்ளாக்கர் பின்னூட்டங்கள் வருகின்றன. நான் கனவிலும் நினைக்க முடியாத அளவில் அவை அவதூறுகளைத் தாங்கியுள்ளன. முதலில் முகமூடி அவர்களின் பதிவுகளில் அவை ஆரம்பித்தன. இப்போது குமரேஸின் பதிவிலும் அவை தொடர்ந்துள்ளன. இன்னும் எங்கெல்லாம் அவை வரப்போகின்றன என்பது புரியவில்லை. ஆகவே என் பெயரைக் காத்து கொள்ள இப்பதிவினை ஆரம்பித்துள்ளேன். நான் எங்கு என்ன பின்னூட்டமிட்டாலும் இங்கும் அப்பின்னூட்டத்தை இடுவேன்.

ரோஸ வசந்த் அவர்களுக்கும் இம்மாதிரியே நடந்தது. அதற்கு எதிராக அவர் செய்ததையே செய்வது என்று தீர்மானித்துள்ளேன். இப்போது என் பெயரைத் தவறாகப் பயன்படுத்துபவர்கள் என்னுடைய இப்பதிவிலும் என் பெயரில் பின்னூட்ட்மிடலாம். அவை உடனடியாக அழிக்கப்படும். ஏதோ என்னால் முடிந்ததை செய்யலாம் என்று உத்தேசம்.

நண்பர்களே, உங்களில் பலருக்கு என் மேல் கோபம் இருக்கலாம். இருப்பினும் எனக்கு உதவி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். இது சம்பந்தமாகக் கடைசியாக குமரேஸ் அவர்கள் பதிவில் இது சம்பந்தமாக வந்தவை இதோ:

(http://kumaraess.blogspot.com/2005/05/blog-post_21.html)

At Saturday, May 21, 2005 6:48:54 PM, Dondu said…

[[கமல் "திருமணம் என்கிற சடங்கிலேயே உடன்பாடில்லைனு சொன்ன...." தில் மிகவும் கோபமடைந்த இரசிகர்களில் நானும் ஒருவன்.]]

கல்யாணம் செய்தால் கழட்டி விடுவது ரொம்ப கஷ்டம். கோர்ட் படியேறி வக்கீல், வாய்தா என்று அலைய வேண்டும். பின்னர் ஜீவனாம்சம் என்ற தொந்தரவு வேறு உண்டு. கல்யாணம் செய்யாமல் என்றால் சிம்ரனைக் கூப்பிட்டோமா உறை போட்டு அடிச்சோமா, அபிராமியைக் கூப்பிட்டோமா.. அந்த நாள் கணக்கு பார்த்து செஞ்சோமா, கெளதமியைக் கூப்பிட்டோமா காப்பர்டீ மாட்டி செஞ்சோமா என்று வெட்டு ஒன்று துண்டு இரண்டு பாணியில் சென்று விடும். இதுகூடத் தெரியாத மண்டுவாக இருக்கிறீர்களே?


At Wednesday, May 25, 2005 2:16:24 PM, அன்பு said…

டோண்டு-சார் சும்மா அனுபவிச்சு எழுதியிருக்கீங்க...!?


At Wednesday, May 25, 2005 3:02:26 PM, Dondu said…

This is getting more and more ridiculous. The 4th comment above is given in my name after creating a new blogger identity. It leads to http://bramin.blogspot.com
If you click the blog title in that URL, it leads to my regular blog.
I am sure I saw some other name when I saw this comment sometime back.
This is a sure way of destroying the trust in the blogging world.
I can only hope that this madness will stop.
By the way, my original blogger number is 4800161, whereas the number of the misleading blogger is 9267865. I request the fellow bloggers to remember that such a thing can happen to anybody else.
Regards,
N.Raghavan

At Wednesday, May 25, 2005 3:06:59 PM, Dondu said…
The same thing has happened in Mugamoodi's two blogs as well. Some mad fellow is at large. I reproduce Mugamoodi's comments in this connection in http://mugamoodi.blogspot.com/2005/05/blog-post_18.html
"யாருக்குமே தெரியாது என்றாலும் நீ என்ன சிந்திப்பாய், என்ன செய்வாய் என்பதுதான் நீ 'உண்மையிலேயே' யார் என்பதை கண்டுபிடிக்க எளிய வழி என்று ஒரு ஞானி சொல்லியிருக்கிறார். நகைச்சுவையாக எழுதப்பட்ட பதிவு இது. சம்பந்தமே இல்லாமல் ஒரு தனி மனிதனை பற்றி கேவலமாக பின்னூட்டம் இட்டு துர்வாசர் என்பவர் திசைதிருப்பும் வேலையை ஆரம்பித்தார். பின்பு பாப்பான் என்ற பெயரிலும் அதனை தொடர்ந்தார். அது hackingல் முடிந்திருக்கிறது... துர்வாசர் இப்பொழுது தன் வெற்றி குறித்து மிகவும் மகிழ்ச்சியில் இருப்பார்.... வெற்றிக்களிப்பில் குதூகலமாக சிரித்துக்கொண்டிருக்கலாம்... துர்வாசர் உங்கள் வீட்டில் கண்ணாடி இருந்தால் அதன் முன் நின்று சிரித்துப்பாருங்கள்.... பெருமையக இருக்கிறதா... எனில் உங்களுக்கு உடனடி தேவை ஒரு மாறுதலான வாழ்க்கை முறை... அட்லீஸ்ட் சிறிது காலத்துக்காவது... குழந்தைகளின் சிரிப்பை ரசிக்கப்பாருங்கள்... காலையில் முடிந்தால் கடற்கரை பக்கம் போய் வாருங்கள்... நகைச்சுவை படங்கள் பாருங்கள்... கண்ணியை ஒரு வாரத்துக்கு மூட்டை கட்டி வையுங்கள்... நீங்கள் தற்போது பார்க்கும் வேலையில் ஒரு படி முன்னேற உங்கள் தொழில்நுட்ப அறிவை பயன்படுத்துங்கள்.... எல்லா குற்றவாளியும் யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்ற எண்ணத்தில்தான் குற்றத்தை ஆரம்பிக்கிறார்கள். கண்டுபிடிக்காத குற்றங்களின் விழுக்காடு மிக மிக குறைவு என்பதை நினைவில் கொள்ளுங்கள்... ஒருவரை துன்பப்படுத்தி அதன் மூலம் மகிழ்ச்சி கொள்ளும் sickest mentality (ஸாடிஸ்ட் மனோபாவம்) மனிதனை மனிதன் என்ற நிலையில் இருந்து கீழிக்குகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்... என் திருப்திக்காக இதையெல்லாம் சொன்னேன்.... சிந்தித்துப்பார்ப்பதும் பார்க்காததும் உங்கள் நோயின் தீவிரத்தை பொறுத்தது.

illegitimate பின்னூட்டங்கள் அனைத்தையும் அழித்துவிட்டேன்... எதிர்கால தேவையை மனதில் கொண்டு linkஐ அழிக்கவில்லை. பின்னூட்டங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பபற்று இருப்பது நெருடலாக இருந்தாலும் நன்றாகவே இருக்கிறது."

அன்புடன்,
டோண்டு ராகவன்

529 comments:

1 – 200 of 529   Newer›   Newest»
dondu(#11168674346665545885) said...

My comments in Mugamoodi's blog at http://mugamoodi.blogspot.com/2005/05/blog-post_18.html

# May 25, 2005 3:53 AM க்கு Dondu என்ன சொல்றாருன்னா:
முகமூடி அவர்களே,

மூர்த்தி அவர்கள் கூறுவதும் நியாயமாகவே எனக்கு படுகிறது. அவர் கேட்டுக்கொண்டவாறு அம்மாதிரியான எல்லா பின்னூட்டங்களையுமே அழித்து விடுவதே நியாயமாக இருக்கும் என்று என் தரப்பில் நானும் தங்களைக் கேட்டு கொள்கிறேன்.
அதைப் பார்த்து நானும் சற்று கடுமையாகவே அவரிடம் பேசி விட்டேன். அதையும் நான் எடுத்து விடுகிறேன். அதற்காக அவரிடம் மன்னிப்பு கேட்பதில் எனக்கு தயக்கம் இல்லை.

மூர்த்தி அவர்களே என்னை மன்னித்து விடுங்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

அன்பு said...

நான் இங்கு தமிழ்மணத்திலேயே குடியிருந்தாலும், இதுபோன்று நிகழும் உயர்தொழில்/கீழ்த்தர தகிடுதத்தங்கள் அறிந்திழேன். உங்களின் விளக்கத்துக்கு மிக்க நன்றி. உங்கள் பெயரில் அப்படி ஒரு பின்னூட்டம் பார்த்ததும் உணர்ச்சிவயப்பட்டது உண்மை. தவறேதும் இருந்தால் பொறுத்தறுள்க...

dondu(#11168674346665545885) said...

அன்பு அவர்களே,
புரிதலுக்கு மிக்க நன்றி. உங்கள் மேல் ஒரு தவறும் இல்லை. நானே அதைப் படித்திருந்தாலும் அப்படித்தான் ரியேக்ட் செய்திருப்பேன். இப்போதுதான் பத்ரி அவர்கள் பதிவிலும் இம்மாதிரி ஒரு பின்னூட்டம் வர, அவருடன் தொலைபேசினேன். நான் இதைப் பற்றி கூற ஆரம்பித்ததுமே தான் அதை நீக்கி விட்டதாக தன் உறுதியானக் குரலில் கூறினார். மனதுக்கு இதமாக இருக்கிறது. சில நாட்களுக்கு இந்த சங்கடம் தொடரும் என நினைக்கிறேன். உங்கள் எல்லோருடைய ஆதரவையும் கோருகிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

புலிக்குட்டி அவர்களே,

புரிதலுக்கு மிக்க நன்றி.

சிறிய டைவர்ஷனுக்கு மன்னிக்கவும். உங்கள் பெயரை முதலில் பார்த்தவுடன் ஒரு பழைய சினிமா பாடல் ஞாபகத்துக்கு வந்தது, "உன் பாட்டைக் கேட்டு புலிக்குட்டிதான் பயப்படும்", பாடல் வந்த படத்தின் பெயர் தெரியாது. ஆனால் எனக்கு ஆதரவு தர நீங்கள் நிச்சயம் பயப்படவில்லை என்பதற்கு நன்றி.

இம்மாதிரியான நேரத்திலும் என் ஹைப்பர் லிங்குகள் என்னைக் கைவிடவில்லை என்பதில் மன ஆறுதல் அடைகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Sridhar Sivaraman said...

தனிமனித விமர்சனம் கூட பரவாயில்லை, தரம்கெட்ட விமர்சனம் தயவு செய்து தவிர்க்கலாமே....

அப்படி செய்யும் போது செய்யப்படுபவர் மீது தப்பான அபிப்ராயம் ஏர்ப்ப்டுவதற்கு பதில் செய்பவர்மீதல்லவா ஏர்படுகிறது.

-L-L-D-a-s-u said...

அடுத்தவர் பெயரில் ஒன்னுக்கடிப்பவர் ஆண்மையில்லாதவர் .. தன் பிள்ளைக்குக்கூட அடுத்தவர் இனிஷியலை போட்டு அழகுபார்ப்பார்..நீங்கள் ஜாலியாக உங்கள் வேலையை பாருங்கள்

dondu(#11168674346665545885) said...

நன்றி ஸ்ரீதர் சிவராமன் அவர்களே.
அவ்வாறெல்லாம் சிந்திக்கத் தெரிந்தவர்கள் முதலிலேயே இம்மாதிரிக் கீழ்த்தரமான வேலையெல்லாம் செய்ய மாட்டார்களே. யாராவது ஒருவர் என்னைப் பற்றி ஒரு நிமிடத்துக்காவது தவறாக நினைத்து கொண்டால் போதும் என்று நினைப்பவர் நீங்கள் கூறுவது போல சிந்திப்பார்கள் என்பது சந்தேகத்துக்குரியதே.
அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

நன்றி எல்.எல்.தாஸு அவர்களே. நீங்கள் கூறுவது சம்பந்தப்பட்டவருக்கு புரிந்தால் சரி.
அன்புடன்,
டோண்டு ராகவன்

PKS said...

Thiru. Dondu -

I can understand your anguish and pain. Please dont worry. I may not agree with many of your views. However, there is no doubt that you treat everyone with respect and dignity.

Tamil blogging community should do something to trace these culprits who write anonymous filthy comments or who write in others names. They not only target you. I saw they targeting others too in Mayavarathan blog yesterday. That one abused Mathy and Eezhanathan. I am not for abusing anyone. There are decent ways to express even difference of opinions.

When I saw such a comment in Mayavarathan blog yesterday, I was shell shocked. These kind of comments in even anonymous names are clear abuse. Such comments coming in others' names is also identity theft.

We should do something to trace the people who do it and then make them accountable for their indecent and inhuman behavior.

I dont have much time to comment in others blogs. I normally read and comment only occasionally. So, if there is any abusive comment in my name (I suspect it may start as soon as the culprit reads this comment), kindly verify with me.

Thanks and regards, PK Sivakumar

வசந்தன்(Vasanthan) said...

இது கண்டிக்கப்பட வேண்டிய விடயம்.
கருத்தால் எதிர்கொள்ள முடியாமல் அல்லது விருப்பமில்லாமல் இப்படிச் செய்வது கண்டிக்கப்பட வேண்டியதே.

பின்னூட்டங்களில் திசைதிருப்பும் வகையில் சம்பந்தமில்லாதவற்றைப் பதிவது (செய்திகளை) அண்மையில் நடந்துவருகிறது. பாதிக்கப்படுவது எனது எதிர்த்தரப்பு என்றாலும் இது கண்டிக்கப்பட வேண்டியதே.

மேலும் நீங்கள் வேறு இடங்களில் இடும் பின்னூட்டங்களை இடவென தனி யொரு பதிவு வைத்துக்கொள்வது நலம். ஒரு பதிவில் அந்தப்பின்னூட்டங்களையிடுவதால் குழப்பமாக இருக்கும். (ரோசாவசந் பதிவிலும் இப்படித்தான் பிரச்சினை) சம்பந்தமில்லாத ஒரு பின்னூட்டம் ஒரு பதிவில் இருக்கும், ஆனால் அது வேறிடத்தில் போட்ட பின்னூட்டம்.

dondu(#11168674346665545885) said...

This is what I commented in Thoyiyar blog at: http://womankind.yarl.net/archives/2005/05/24/451

செந்தில் சில படங்களில் பெண்ணாக வேஷம் கட்டியிருக்கிறார். அப்போது தான் பட்ட கஷ்டங்களைக் கூறியிருக்கிறார். கலாசாரம் புண்ணாக்கு என்றெல்லாம் ஆண்கள்தான் அதிகம் பேசுகிறார்கள், அதுவும் எல்லா ஸ்பெசிபிகேஷன்களும் பெண்களுக்கே.
11 ஆண்டுகள் முன்னால் தமிழ்நாடு ஆஸ்பத்திரியில் ரெக்டல் சோதனை எனக்கு செய்தார்கள். அப்போது டாக்டரிடம் நான் மனப்பூர்வமாகக் கூறினேன்: "டாக்டர், கற்பழிப்பு என்பது பெண்களுக்கு எப்படியான வேதனை என்பதை நான் இப்போது புரிந்து கொண்டேன்."
எல்லாம் தனக்கு வந்தால் தெரியும்.
பர்தாவோ, புடவையோ வேறு எந்த ஆடையோ அதைத் தேர்ந்தெடுப்பது சம்பந்தப்பட்ட பெண்ணாகவே இருக்க வேண்டும்.
அதே போல பெண்ணுக்கு பிரசவ வேதனை தெரியாமல் இருக்க மயக்க மருந்து அறிமுகப்படுத்திய போது அதை இங்கிலாந்தில் எதிர்த்தவர்கள் பாதிரிகள்தான். அது ஆண்டவன் கட்டளைக்கு எதிரானது என்று ஒரு போலியான வாதம். அதையே விக்டோரியா மஹாராணியார் அவர்களே தேர்ந்தெடுத்த போது, அவ்வாறு பேசாமல் பைய நழுவினர் சம்பந்தப்பட்டவர்கள். அப்போது தங்கள் பாதுகாப்பே அவகளுக்கு முக்கியமாகப் போயிற்று.
அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

நன்றி வசந்தன் அவர்களே. நீங்கள் கூறுவதை நான் ஏற்கனவே யோசித்து விட்டேன். ஆகவே மற்றுப்பதிவு பின்னூட்டங்கள் இங்கு அவற்றின் உரலுடனே வரும். கெட்டதிலும் ஒரு நல்லது என்பதுபோல அம்மாதிரிப் பின்னூட்டங்களை என்னிடம் பெறும் பதிவுகளும் இன்னும் அதிகம் பேரால் படிக்கப்படும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

"I dont have much time to comment in others blogs. I normally read and comment only occasionally. So, if there is any abusive comment in my name (I suspect it may start as soon as the culprit reads this comment), kindly verify with me."
Definitely pks. Thanks for your support.
Regards,
Dondu Raghavan

மாயவரத்தான் said...

டோண்டு சார்... ஈனப்பிறவிகள் அப்படி தான் செய்யும். அதக் கண்டுக்க வேண்டாம்..!!

dondu(#11168674346665545885) said...

நன்றி மாயவரத்தான் அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

கொழுவி said...

டோண்டு மாமா... படிக்கும் போதே புரிந்து விடுகிறது. அவை நீங்கள் எழுதிய பின்னூட்டங்கள் இல்லையென்று. மற்றவர்களுக்கும் புரியும். இத்தனை நாள் பழக்கத்தில் நீங்கள் என்ன எழுதுவீர்கள் என்ன எழுத மாட்டீர்கள் என்றெல்லாம் எல்லோரும் அறிந்து வைத்திருப்பார்கள். ஆகவே கவலை இன்றி தொடருங்கள்.

யாரோ ஒருவர் தனது இயலாமையை கொட்டுகிறார். வெளிப்படையாக சொல்லாவிட்டாலும் எல்லோர் மனத்திலும் சுட்டுவிரல் ஒருவரை நோக்கித்தான் நீள்கின்றன. பாவம்.. அவர்.. எந்த முகத்தை வைத்துக் கொண்டு இனி அடுத்தவர்களை சந்திக்க போகிறாரோ?
நீங்கள் தொடருங்கள்..

மு. சுந்தரமூர்த்தி said...

ராகவன் சார்,
உங்களுக்குமா? இப்போதெல்லாம் பின்னூட்டங்கள் எழுதவே பலர் போலிப் பெயர்களில் ப்ளாகர் கணக்கு துவக்குகிறார்கள். அதுகூட பரவாயில்லை. இன்னொருவரின் அடையாளத்தைத் திருடி தனக்குத் தோதான பின்னூட்டத்தையும் எழுதி அடுத்தவரின் பெயரை கெடுத்து இரட்டை லாபம் சம்பாதிக்கப் பார்க்கிறார்கள். உங்கள் ஆதங்கம் புரிகிறது. இந்த ஒரு விஷயத்திலாவது கண்டிப்பாக என்னுடைய ஆதரவு உண்டு.

-L-L-D-a-s-u said...

//லாடுவின் பதிவை அழிக்கும்வரை நான் பதிந்து கொண்டே இருப்பேன்//

இந்தளவுக்கு என் கமெண்ட் ஆண்மையற்றவனை' ஆத்திரப்படுத்தியுள்ளது எனக்கு மகிழ்ச்சியே..

என் பெயர் என் பதிவிலேயே உள்ளது..

dondu(#11168674346665545885) said...

That person refuses to let go. He threatens everybody with insulting comments and vows that he will continue till I delete the comments of persons he is naming. Let him fume and foam at his mouth. I shall not yield. I tried all patience and I am tired of this guy. Let him do whatever he wants and I will go on deleting his comments. It is open war. He has not seen my determination yet, it seems.
If some of the comments get seen by the concerned blogger, it is due to my slow reaction speed and the deletion of a posting takes a few steps and this requires time as well. I may be forgiven my slow reactions.
As must do has said, many know his identity and some of them are sure to know his relatives. Surely this person's antics will reach them and I pity them their anguish!
Regards,
Dondu Raghavan

Sri Rangan said...

டோண்டு ஐயா,வணக்கம்! உங்கள் உள்ளத்தைப் புரிந்துகொள்கிறேன்.வசந்தன் சொன்னமாதிரிச் செய்யுங்கள்.உங்களைப் பற்றித் தெரிந்தவர்களே அதிகமாக உள்ளார்கள்.எனவே உங்களின் மனதை யாரும் பாதிப்படைய வைக்கமுடியாது.இதைவிட்டுக் காரியத்தில் இறங்குங்கள்.எல்லாம் நன்மைக்கே!
அன்புடன்
ஸ்ரீரங்கன்

dondu(#11168674346665545885) said...

நன்றி சிறீரங்கன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

Dankeschön Must Do. Obwohl ich immer Tamil dem Deutchen vorziehe, möchte ich mich jetzt auf Deutsch zu äußern.
Grüße,
Dondu Raghavan

கொழுவி said...

டோண்டு... நீங்கள் அழிக்க அழிக்க தான் ஏதோ வெற்றி பெற்று வருவதாகவும் நீங்கள் தோல்வியடைவதாகவும் அந்த பரிதாபத்துக்குரிய கீர்த்தி மிகு நபர் நினைக்க கூடும்.
உங்களுடைய பெருமளவான கருத்தக்களில் உடன்பாடுகள் கிடையாதெனினும் உங்களை புரிந்து கொண்டுள்ளேன். மற்றவர்களும் அவ்வாறே.. பின்னூட்டங்களை படிக்கின்ற போதே புரிந்து கொள்ள முடிகிறது.. அது டோண்டுவாகிய நீங்கள் எழுதியதா இல்லையா என்று...

புறக்கணித்தல் என்கிற தண்டனை தான் சம்பந்தப் பட்டவர்களை உருகி உருகி வேக வைக்கும். தான் கவனிக்கப்பட வில்லையே என்ற உணர்வை அவருக்கு ஏற்படுத்த வேண்டும். அது பற்றி கண்டுக்காமல் விடுங்கள்.

முகமூடி said...

மற்றவர் வருந்த வேண்டும் என்பதுதான் எதிராளியின் குறிக்கோள் என்றால், எதிராளிக்கு வெற்றியை கொடுக்காதீர்கள். இந்த சம்பவத்தை பற்றி சிறிதும் கண்டுகொள்ளாதீர்கள். பல நாள் திருடன் ஒரு நாள் அகப்பட்டே தீர வேண்டும்... கவலை விடுங்கள்.

dondu(#11168674346665545885) said...

Thanks a lot, must do and Mugamoodi.
Regards,
Dondu Raghavan

Muthu said...

டோண்டு அவர்களே,
ஒரு பதிவைப் பார்த்தவுடனே அது அவர் எழுதியதா இல்லையா எனக் கண்டுபிடித்துவிட முடியும், அதிலும் உங்கள் பின்னூட்டங்களை இனங்கானுவதில் பிரச்சனை யாருக்கும் இராது என்றே நினைக்கிறேன். இம்மாதிரியான போலிப்பின்னூட்டங்களை எழுதுவது யாரென துல்லியமாய்த் தெரியாவிட்டாலும் யூகிப்பது சில சமயம் சாத்தியமாக இருப்பதுண்டு.

அனானிமஸ் பின்னூட்டம் கொடுக்கமுடியாதபடி செய்துவிட்டால் பாதிப்பிரச்சினை தீர்ந்துவிடும்.

dondu(#11168674346665545885) said...

முத்து அவர்களே, அனாமத்து பின்னூட்டங்களை நான் ப்ளாக் கணக்கு ஆரம்பிக்கும்போதே செயலிழக்கச் செய்து விட்டேன். இப்போது பிரச்சினை என்னவென்றால் சம்பந்தப்பட்ட பேர்வழி என் பெயரில் ப்ளாக்கர் ஐ.டி. ஒன்றை உருவாக்கிக் கொண்டார். ப்ராமின்.ப்ளாக்ஸ்பாட்.காம் என்ற வலைப்பதிவுக்கு அவரின் ஐ.டி. இட்டு செல்கிறது. அப்பக்கம் திறப்பதில்லை. மேலே அட்ட்ரஸ் பாரில் என் வலைப்பதிவு பக்கம் வந்து விடுகிறது. இதற்கு மெடா ரிடைரெக்ஷன் என்று பெயர். உங்களது மேலான ஆதரவுக்கு நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

This is what I posted as comment in Manikoondu's blog at: http://manikoondu.blogspot.com/2005/05/blog-post_16.html#comments

"நல்லடியார் அவர்கள் கூறுகிறார்:
"1400 வருடங்களுக்கு முன் வந்த கொள்கைகள் தற்காலத்திற்கு ஒவ்வாது என வாதிடுவதை ஏற்க முடியவில்லை. காலத்திற்கு ஏற்ப மாற்றப்படும் கொள்கைகள் எப்படி வாழ்க்கை நெறியாக முடியும்?"

அவருக்கு நாகூர் ரூமியின் கல்லடிக்கு எதிரான பதிவில் பின்னூட்டமிட்ட ஹுஸேன் என்பவர் கூறியதை இங்கு மறுபடியும் கூறுவேன்:
"ஹுசேன் 11/16/2004 , 9:33:20 காலை.

"அய்யா ரூமி தயவுசெய்து உங்களுடைய இஸ்லாம்/குரான் சம்பந்தமான கட்டுரைய இனிமேலாவது நிறுத்துங்க. "அப்பன் குதிருக்குள் இல்லை" என்பது போல் நீங்களே எல்லாத்தையும் போட்டுக் கொடுத்து விடுவீர்கள் போல் தெரிகிறது. எல்லாச் சமய/மத நூல்களும் பல வருடங்களுக்குமுன் எழுதப்பட்டவை. அவைகள் அந்தக் கால சூழ்நிலைகளுக்கு பொருந்தி இருக்கலாம். இப்போது நிச்சயம் பொருந்தாது. தயவு செய்து இம்சை செய்யாதீர்கள். மதவாதியாக வாழாமல் "மனிதனாக" வாழ முயற்சி செய்யவும்.
உங்களுக்கு பதில் சொல்லும் சாக்கில் திண்ணையில் "நேசக் குமார்" என்ற ஒரு நபர் எழுதியிருப்பதை தயவு செய்து படிக்கவும்."

இதுதான் விஷயம். பழைய சட்டங்கள் இப்போதைய வாழ்க்கை முறைக்கு பொருந்தாது என்பது இசுலாமியர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்ளும்போது ஒப்பு கொள்கிறார்கள். ஆனால் வெளி ஆட்களுடன் பேசும்போது தோரணையே வேறுபட்டு விடுகிறது.

இனிய நண்பர் ராஜ சிம்ஹன் அவர்கள் எழுதுகிறார்:
"அது சரி, இது போன்ற பேச்சுகளெல்லாம் சரிதான் என்று எத்தனை பெண்கள் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்? தஸ்லீமா சொல்வது சரிதான் என்று ஒரு பெண் எழுதினால் நன்றாக இருக்கும். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? எதற்காக ஆண்களாகிய நாம் இதற்கு பரிந்துரை செய்ய வேண்டும்?"
பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது. இசுலாமிய ஆண்கள் ஏன் இதில் இனிஷியேடிவ் எடுக்க வேண்டும்? தற்போதைய இசுலாமிய சட்டம் ஆண்களுக்கு அல்லவா சாதகமாக இருக்கிறது? இசுலாமியப் பெண் ஒருவர் கூட நான் கூறும் வாதங்களை ஆதரித்து ஏன் பின்னூட்டமிடமிடவில்லை என்று கேட்கிறார். அதே கேள்வியை அப்படியே அவருக்கு திருப்புகிறேன். நீங்கள் கூறும் வாதங்களை ஆதரித்து எந்தப் பெண்ணாவது இங்கு எழுதியிருக்கிறாரா? அதை விடுங்கள், இப்பதிவில் ஏதாவது ஒரு இசுலாமியப் பெண்ணாவது பின்னூட்டமிட்டாரா? முதலில் இதைக் கூறுங்கள், தமிழ் மணத்தில் எத்தனை இசுலாமியப் பெண்வலைப்பதிவர் உண்டு? என் கண்ணுக்கு யாரும் தென்படவில்லை. பொதுவாகவே விவாதங்களில் இசுலாமியப் பெண்கள் வருவதில்லை என்றுதான் நினைக்கிறேன். வந்தவர்களுக்கும் விபசாரிப் பட்டம்தான் என்றிருந்தால் எந்தப் பெண்தான் வருவார் என்று கேட்கிறேன்.
மறுபடி கூறுவேன். இந்து பெண்களும் பலவழிகளில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கெதிரானச் சட்டங்கள் தவறானவை என்பதை எங்களில் அனேகம் பேர் ஒத்துக்கொண்டு விட்டோம். அரசும் சட்டங்கள் இயற்றிப் பாடுபடுகிறது. ஆனால் இசுலாமியப் பெண்களுக்கு நீதி தேவை என்பதை உங்கள் மதச் சட்டம் ஒத்து கொள்ளவில்லை, பெரும்பான்மை இசுலாமிய ஆண்கள் ஒத்து கொள்ளவில்லை. இதுதான் நிலை.

அன்புடன்,
டோண்டு ராகவன்
பின் குறிப்பு: (இப்பதிவுக்கு சம்பந்தமில்லாதது) நண்பர்களே என் பெயரில் இன்னொருவர் தாறுமாறாக பின்னூட்டங்கள் இட்டு வருகிறார். அதைப் பற்றி என் பதிவு http://dondu.blogspot.com-ல் குறிப்பிட்டுள்ளேன். அப்படிப்பட்ட பின்னூட்டங்கள் என் பெயரில் வந்தால் அந்தப் பெயருடன் கூட வரும் எண்ணைப் பார்த்து சரி செய்து கொள்ளவும்.
By the way, my original blogger number is 4800161, whereas the number of the misleading blogger is 9267865. I request the fellow bloggers to remember that such a thing can happen to anybody else.

-/பெயரிலி. said...

|//மூர்த்தி அவர்களே என்னை மன்னித்து விடுங்கள்.//

அய்யோ அண்ணா.. என்ன இப்படிச் செய்து விட்டீர்கள். மன்னிப்புக் கேட்கும் அளவுக்கு பெரிய தவறு ஒன்றும் தாங்கள் செய்துவிடவில்லை. தவறாகப் புரிந்து கொண்டீர்கள் அவ்வளவுதான். நான் ஏதாவது தவறாகப் பேசி இருந்தால் என்னையும் தாங்கள் மன்னிக்கவும்.|

அய்யோஓஓஓஓஓஓஓஓஓஒ! அன்புச்சகோதரர்கள் ரங்கராவ், ஜெமினி, சுந்தராஜன் தோற்றார்கள் போங்கள். அடிக்கடி பிரித்த கட்சிப்பிரமுகர் எதிர்க்கட்சியூடாகத் தாய்க்கட்சியை வந்தடைந்து தொண்டர்களுடன் நீரடித்து நீர்விலகுமா என்று சேருகின்ற காட்சி இதற்கு முன்னால் தோற்றது போங்கள் ;-))

dondu(#11168674346665545885) said...

நன்றி பெயரிலி அவர்களே, இறுக்கமான இந்தச் சூழ்நிலையில் உங்கள் பின்னூட்டம் ஒரு ஜிலு ஜிலு காற்று போல வந்திருக்கிறது. சமீபத்தில் எழுபதுகளில் வந்தப் படம்தானே? "முத்துக்கு முத்தாக" என்ற இனிமையானப் பாடலும் வருமே? அதில் ஜெமினி இருந்ததாக ஞாபகம் இல்லை. நான்கு சகோதரர்கள் என்று நினைக்கிறேன். ரங்காராவ், சுந்தரராஜன், ஏ.வி.எம்.ராஜன் மற்றும் ஜெயசங்கர் என்று நினைவு.
அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

This is what I commented in Sankar's new blog at: http://thamizarasu.blogspot.com/2005/05/blog-post.html#comments

"வருக சங்கர் அவர்களே. உங்கள் பின்னூட்ட ஆப்ஷனில் வலைப்பதிவர் பின்னூட்டங்களீ மட்டும் அனுமதிக்கவும். அனாமத்து மற்றும் அதர் பின்னூட்டங்களை செயலிழக்கச் செய்யுங்கள். இல்லாவிட்டால் இணையத்தில் இப்போது நிலவி வரும் சூழ்நிலையில் நொந்து போவீர்கள். உங்கள் குழு நண்பர்கள் நான் என்ன கூற வருகிறேன் என்பதை விலாவாரியாக விள்க்குவார்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்"

dondu(#11168674346665545885) said...

This is what I commented in Manikoondu's blog at: http://manikoondu.blogspot.com/2005/05/blog-post_16.html#comments

""ஹுஸேன் என்ற பெயரில் இந்த பின்னூட்டம் இட்டவர் ஒரு முஸ்லிம்தான் என்பது உங்களுக்கு நிச்சயமாக தெரியுமா?"
சத்தியமாகத் தெரியாது சலாஹுத்தீன் அவர்களே. ஆனால் ஒன்று, நாகூர் ரூமியின் அந்த வலைப்பதிவில் யாரும் இக்கேள்வியை எழுப்பவில்லை. அதற்காக நீங்கள் இப்போது கூறுவதையும் அலட்சியப் படுத்தக்கூடாது. எனக்கு நேர்ந்த அனுபவத்துக்கு பிறகு எதுவும் சாத்தியமே. குறைந்த பட்சம் நாகூர் ரூமி அவர்கள் இசுலாமியர் என்பதில் சந்தேகம் இல்லைதானே?

அது போகட்டும், இப்போது நான் எழுப்பிய கேள்விகளுக்கென்ன பதில் உங்கள் தரப்பிலிருந்து?

அன்புடன்,
டோண்டு ராகவன்"

துளசி கோபால் said...

அன்புள்ள ராகவன்,

நீங்கள் கவலைப் படவேண்டியதில்லை. நம் நண்பர்கள் எல்லோரும் உங்களைப் புரிந்து கொண்டவர்கள்தான்!

எனக்கும் கொஞ்ச நாளைக்கு முன்( நான் சந்திரவதனாவின் ஒரு பதிவில் ஒரு பின்னூட்டம் இட்டதற்குப்பிறகு)
என் பதிவில் 'கொஞ்சம் அசிங்கமாக' ஒரு பின்னூட்டம் வந்தது. கோபம் வந்தது என்றாலும்
உடனே அதை அழித்துவிட்டேன். யாரோ மனநோயாளி போல.

படித்தவர்கள் இருக்கும் இடத்தில் இப்படி.......

என்றும் அன்புடன்,
துளசி.

dondu(#11168674346665545885) said...

நன்றி துளசி அவர்களே. சற்று தடித்த தோலுடைய ஆண்களான எங்களுக்கே அவை இவ்வளவு சங்கடம் கொடுக்கின்றனவே. உங்களுக்கெல்லாம் எப்படியிருந்திருக்கும்? ரொம்பக் கொடுமைதான்.
அன்புடன்,
டோண்டு ராகவன்

சன்னாசி said...

டோண்டு அவர்களே; உங்கள் பதிவுகள் சிலவற்றுடன் (சமீபமாகப் பெரும்பாலானவற்றுடன்) எனக்கு ஒப்புதல் இல்லையாயினும், உங்கள் பதிவிலும் பிற பதிவுகளிலும் அநாமதேயப் பின்னூட்டங்களாக/வேண்டுமென்றே உங்கள் பெயரில் அநாகரிகமாக எழுதுவது மிகவும் கண்டிக்கப்படவேண்டிய ஒன்று.

dondu(#11168674346665545885) said...

புரிதலுக்கு மிக்க நன்றி மான்ட்ரீஸர் அவர்களே. இதைத்தான் உங்கள் எல்லோரிடமும் எதிர்ப்பார்த்தேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்

ஈழநாதன்(Eelanathan) said...

டோண்டு மற்றும் மற்றவர்களுக்கு
டோண்டு செய்துகொண்டது போன்று உங்கள் பெயரில் வேறு யாரும் பின்னூட்டமிடுவதாகச் சந்தேகப் படுபவர்கள் உங்கள் கணக்கு இலக்கத்தை உங்கள் பதிவில் கொடுத்து வைத்திருங்கள்.பின்னூட்டம் சந்தேகம் தருவதாக இருந்தால் மௌசை பெயரின் மீது நகர்த்தும் போது கீழே உங்கள் கணக்கிலக்கத்தை காட்டும் அதைக் கொண்டு சரிபார்த்துக் கொள்ளலாம்.உதாரணமாக டோண்டு அவர்களுடைய கணக்கு இலக்கம் 4800161
அன்புவினுடையது 3224250 கொஞ்சம் சிரமமான வேலைதான் அதுவும் விவாதமென்று வரும்போது பெயரையும் கணக்கையும் பார்த்து உறுதிப்படுத்துவது கஷ்டன் ஆனாலும் வேறு வழி இல்லை.

ROSAVASANTH said...

அனாமதேய பின்னூட்ட வசதியை நீக்கிவிட்டால் இதை தடுக்க முடியும் என்று நினைத்தேன். இங்கேயும் டோண்டு பெயரில் பொய் பின்னூட்டத்தை பார்த்தபின் அந்த நம்பிக்கையும் போய்விட்டது.

டோண்டுவை எதிர்தாலும் இந்த சிக்கலில் நாம் அனைவரும் அவருக்கு ஆதராவாய் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். (எனக்கும் இதே நிகழ்ந்திருப்பதால்.) என்ன செய்யலாம் என்று நிபுணர்கள்தான் சொல்லவேண்டும். என்னால் இதை தார்மீக முறையில் கண்டிப்பதை தவிர வேறு எதுவும் சொல்ல தெரியவில்லை.

dondu(#11168674346665545885) said...

புரிதலுக்கு மிக்க நன்றி ஈழனாதன் அவர்களே. இதைத்தான் உங்கள் எல்லோரிடமும் எதிர்ப்பார்த்தேன். கணக்கு எண்ணைப் பற்றி ஏற்கனவே கூறியுள்ளேன். இருந்தாலும் நீங்கள் சொல்வது போல எலிக்குட்டியை ஒவ்வொரு முறையும் நகர்த்த்தி பார்ப்பது என்பது சற்று சள்ளைதான்.
அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

நன்றி ரோசா வசந்த் அவர்களே. என்னதான் நமக்குள் கருத்து வேற்றுமை சில விஷ்யங்களில் இருந்தாலும் இம்மாதிரியான சோதனை காலத்தில் எனக்காகக் குரல் கொடுத்து தங்கள் நல்ல உள்ளத்தை எனக்கு காட்டியுள்ளீர்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்

SHIVAS said...

எனக்கும் உங்கள் பெயரில் ஒரு பின்னூட்டு வந்தது டோன்டு ஐயா. அதன் விவரம் இதோ : "" ஏன் எதற்கு என்றெல்லாம் கேட்காதீர்கள். எங்களவாவை பெரியார் எதிர்த்தார். அந்த ஒரு காரணத்துக்காகவே நாங்கள் அவரை கண்ணை மூடிக்கொண்டு எதிர்ப்போம்"".

நீங்கள் தான் என்று நினைத்து பதிலும் இட்டேன். ஆனால் பின்னர் ரோசா வந்து சொன்ன பின்னர் தான் "profile"யை சோதித்ததில் அது வேர் ஒருவர் என்று தெரிந்துகொண்டேன். என்ன விளையாட்டு இது ? முதுகெலும்பு இல்லாதவர்கள்.

dondu(#11168674346665545885) said...

நன்றி காஞ்சி பிலிம்ஸ் அவர்களே. என்னதான் நமக்குள் கருத்து வேற்றுமை சில விஷ்யங்களில் இருந்தாலும் இம்மாதிரியான சோதனை காலத்தில் எனக்காகக் குரல் கொடுத்து தங்கள் நல்ல உள்ளத்தை எனக்கு காட்டியுள்ளீர்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்

Unknown said...

மீண்டும் அதே நபர் இரண்டு முறை இந்தப் பதிவில் தனது மறுமொழிகளை கொடுத்துள்ளார். இது கண்டிக்கத்தக்கது. நண்பர் திருமலையும் இந்தச் செயல்களை பற்றி வலைக்குழுமங்களில் தெரிவித்துள்ளார். இப்படி மறுமொழி இடும் நபர் தானாக திருந்துவது நல்லது, இல்லையேல் அவருக்கு அது கெடுதலாகவே முடியும்.

Sridhar Sivaraman said...

அவர் ஆடும் இந்த ஆட்டத்தை அவர் பாணியில் அவருக்கே திரும்ப ஆடினால், எத்தனை மண உளைச்சல் அவருக்கு ஏர்படும் என்பதை ஒருகணம் யோசிக்கவேண்டாமா

dondu(#11168674346665545885) said...

கே.வி.ஆர். அவர்களே, இரண்டா? போலிப் பெயரில் அந்த நபர் இப்பதிவில் கொடுத்தது ஐம்பதுக்கும் மேல். எல்லாவற்றையும் வேரோடு அழித்தேன். ராவணன் கைகள் போல வெட்ட வெட்ட அவை விழுந்து கொண்டிருக்கின்றன. இப்போது எனக்கு கிடைத்த சட்ட ஆலோசனை பேரில் அவற்றை பல்லைக் கடித்து கொண்டு அப்படியே வைத்திருக்கிறேன். என் ப்ளாக்கர் எண்ணை வைத்து இம்மாதிரிப் பின்னூட்டங்கள் சரியானவையா போலியானவையா என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
என் ப்ளாக்கர் எண் 4800161, போலி ப்ளாக்கரின் எண் 9267865 ஆகும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

நாம் அம்மாதிரி செய்ய மாட்டோம் என்பதை அவர் உறுதியாக நம்புகிறார். அவர் அளவுக்கு கீழ்த்தரமாகப் போக இங்கு யாரும் இல்லை என்பதை அவர் அறிவார்.
அன்புடன்,
டோண்டு ராகவன்

Ganesh Gopalasubramanian said...

சார் டூப்ளிகேட் டோண்டு என் வலைப்பதிவுக்கும் வந்துவிட்டார்.....எனக்கு ஒரு விஷயம் தான் ஞாபகம் வருகிறது

All truth passes through three stages. First, it is ridiculed. Second, it is violently opposed. Third, it is accepted as being self-evident

உங்கள் வலைப்பதிவு இப்பொழுது இரண்டாம் நிலையில் இருக்கிறதென்று நினைக்கிறேன்.

தொடருங்கள்....... உங்கள் சேவையை........ வாழ்த்துக்களுடன் கோ.கணேஷ்

dondu(#11168674346665545885) said...

நன்றி கோ. கணேஷ் அவர்களே. நாம் எல்லோரும் சேர்ந்து இந்த நபரை பிடித்து கொடுக்க வேண்டும். எனக்கு இன்று நடப்பது வேறு யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம். அவர் அனுப்பும் செய்திகளை அழியுங்கள் ஆனால் லிங்கை அப்படியே வைத்திருங்கள். போலீஸ் விசாரணைக்கு துணையாக இருக்கும். முகமூடி அவர்கள் தன் பதிவில் செய்ததைப் பார்க்கவும். என் ப்ளாக்கர் எண் தங்களுக்கு தெரியும்தானே? ஆகவே போலியை எளிதாகக் கண்டு கொள்ளலாம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

This is what I commented in Go Ganesh's posting about sending wife for job. URL of the post:
http://gganesh.blogspot.com/2005/05/blog-post_17.html

சமீபத்தில் 1981-ல் விசுவின் "குடும்பம் ஒரு கதம்பம்" படம் வந்தது. அப்படத்தின் முக்கியக் கருவே பெண்கள் வேலைக்கு போகலாமா அல்லது கூடாதா என்ற சர்ச்சைதான். பார்க்கவில்லையானால் பார்க்கவும்.

டூப்ளிகேட் டோண்டுவை இனம் கண்டு கொண்டதற்கு நன்றி. நான் 1946-ல் போன பார்த்திப ஆண்டில் பிறந்தவன். அடுத்த ஏப்ரலில் அறுபது வயது முடியப் போகிறது. இப்போது தூள் கிளப்பும் பல வலைப்பதிவர்கள் என் குழந்தையின் வயதை உடையவர்கள். என் பதிவுகளில் இது வரை ஒருவரைத் தவிர மற்ற எல்லோருமே என் வயதுக்கு மதிப்பு கொடுத்து மரியாதையுடனேயே பின்னூட்டம் இடுகின்றனர். எல்லோரையும் பயங்கர புத்திசாலிக் குழந்தைகளாகவே நான் கருதுகிறேன். அதில் ஒரு குழந்தை மட்டும் ஏன் இப்படி என்று புரியவில்லை. ஒரு வேளை என்னையறியாமல் யார் மனதையாவது புண்படுத்தியிருப்பேனோ என்று தோன்றுகிறது. என் உள்ளம் கவர்ந்த கள்வன் என் அப்பன் தென் திருப்பேரை மகரநெடுங்குழைகாதன் என்னைக் காத்து என் மன அமைதியை எனக்கு கொடுப்பான் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.
உணர்ச்சி வசப்பட்டுவிட்டேன். பின்னூட்டம் பதிவுக்கு சம்பந்தமில்லாது போயிற்று. மன்னிக்கவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Ganesh Gopalasubramanian said...

மதிப்பிற்குறிய டோண்டு அவர்களே....
தங்கள் வயது தங்களுக்கு அனுபவத்தையும் நல்ல பக்குவத்தையும் தந்திருக்கிறது. இல்லையென்றால் தங்களை இவ்வளவு தூரம் துன்புறுத்தும் நபரை குழந்தையாக பாவிக்க முடியாது. வணங்குகிறேன்.

arulselvan said...

அன்புள்ள டோண்டு அவர்களுக்கு,
வலைப்பதிவு நண்பர்கள் அனைவரும் உங்கள் நிலையைப் புரிந்துகொள்வார்கள். எத்தனை நாட்களுக்குத்தான் இந்த ஈனத்தனமான காரியத்தை செய்வார்கள் என்று பார்க்கலாம். எல்லா நண்பர்களும் இதில் உங்களுடன் ஒத்துழைப்பார்கள். கவலைப்படாதீர்கள்.
அருள்

dondu(#11168674346665545885) said...

நன்றி அருள் அவர்களே. ஒவ்வொரு நண்பராக இங்கு வருகை புரிவது நான் தனியாக இல்லை என்று என்னை தேற்றுகிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

Dondu,

I dont agree with most of your posts and comments. But, this has nothing to do with that.

Pls add your blogger nbr to each and every comment you make, under your name. it would be easy, for the readers to just scroll a few millimeters and check if it's you.

=====

write a detailed mail to blogspot.com

-Mathy

dondu(#11168674346665545885) said...

புரிதலுக்கு நன்றி மதி அவர்களே. நீங்கள் கூறுவது நல்ல யோசனை. அதாவது என் பெயருக்கு கீழே என் ப்ளாக்கர் நம்பரையும் தட்டச்சு செய்ய வேண்டும் என்றுதானே கூறுகிறீர்கள்? ஆனால் ஒரு சந்தேகம். எப்போதும் நான் ப்ளாக்கராகவே நான் பின்னூட்டம் இடுவதால் என் ப்ளாக்கர் எண் என் பெயர் மேல் எலிக்குட்டியை வைத்தால் கீழே இருக்கும் பட்டையில் தெரிகிறதே? எதற்கும் நீங்கள் கூறுவதையும் செய்து விடுகிறேன். இப்போது நான் செய்வது நீங்கள் கூறியதா என்பதைப் பார்க்கவும். நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

yes Dondu.

Readers would find this easier. After they read a comment, they can just scroll down to check the number.

I am sure, you wont mind doing this.

-Mathy

dondu(#11168674346665545885) said...

Excellent, Mathy. And my adding the explanation for checking the number on the part of the reader will help matters further. Strange to say, I myself was unaware of this feature till this unfortunate development.
Thanks a lot.
Regards,
Dondu Raghavan

dondu(#11168674346665545885) said...

நன்றி ராமசந்திரன் உஷா அவர்களே. எனக்கு இணையத்தில் இத்தனை ஆதரவா? மிக திக்குமுக்காடிப் போனேன், உங்கள் எல்லோரது அன்புள்ளங்களையும் பார்த்து. உங்கள் ஆதரவு மற்றும் என் உள்ளம் கவர் கள்வன் என் அப்பன் தென் திருப்பேரை மகரநெடுங்குழைகாதனின் அருளும் இருக்க எனக்கு என்ன குறை இருக்க முடியும்?

அன்புடன்,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)

Mahamaya said...

//எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து //

டோண்டு அவர்களே,

"Mouse" எனும் சொல்லுக்கு"எலிக்குட்டி" என்பது அவ்வளவு சரியான மொழிபெயர்ப்பு அல்ல என்று தோன்றுகிறது. "சுண்டெலி" என்பது சரியாக இருக்கும். ஏனென்றால் அது அளவில் சிறிய எலி. குட்டியாக இருந்தாலும், பாட்டியாக இருந்தாலும், அது சுண்டெலிதான்!

எஸ்.கே
(நான் தான்!)

பத்மா அர்விந்த் said...

ராகவன்,
identy theft என்பது மிக கடுமையான குற்றம். இது குறித்து பலரும் காவலர்களிடம் புகார் கொடுத்துள்ளனர். பொருள் திருட்ட இல்லாவிடிலும், ஒருவரின் அடையாளத்தை திருடுவது சட்டப்படி குற்றம். இது குறித்து பல புகார்களும், விவாதங்களும் வலையில் உண்டு.இந்தியாவில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியுமா என்றும் பாருங்கள்.மன உளைச்சலுக்கு வருந்துகின்றேன்.

dondu(#11168674346665545885) said...

ஒரு சுவாரசியமான விவாதத்தை ஆரம்பித்து வைத்தீர்கள், நன்றி எஸ்.கே. அவர்களே? (நான் தான்!! யாரோ கோபப்படப் போவது உறுதி).
எலிக்குட்டி என்ற சொல்லை நான் வெகு காலமாக பாவித்து வருகிறேன். கல்கியில் ஒரு தொடர்கதையில் இதை முதலில் பார்த்ததிலிருந்து அதன் மேல் ஒரு பிரியம் விழுந்து விட்டது.
சமீபத்தில் 1956 - 57 கல்வியாண்டில் நான் திருவல்லிக்கேணி ஹிந்து உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்த போது எங்கள் தமிழ் ஆசிரியர் திரு. பூவாளூர் சுந்தரராமன் எங்களுக்கு தமிழ் இலக்கணப் பாடத்தில் வார்த்தைகளை திருப்பிப் போடும் சில உதாரணங்களைக் கூறினார். அதாவது:
வாயில் = இல்வாய், புறக்கடை = கடைபுறம் ஆகியவை ஆகும். இம்மாதிரி வார்த்தைகளுக்கு இலக்கணத்தில் ஒரு பெயர் உண்டு, நான் அதை மறந்து விட்டேன். நான் எழுந்து நின்று வடுகமாங்காய் = மாவடு என்று கூற அவர் என்னைப் பாராட்டினார். எது சரி என்று நாங்கள் கேட்டதற்கு அவர் "வெடுக்கென வடுகமாங்காய்" என்று துவங்கும் ஒரு தனிப்பாடலைப் பாடிக் காட்டினார். அப்பாட்டின் சாரம்: எண்ணைப் பழையது, உப்பு மற்றும் கெட்டித் தயிர் போட்டு சாதம் பிசைந்து வெடுக்கென வடுக மாங்காயின் துணையுடன் உண்டால், அதன் இன்பமே தனி.
பிற்காலத்தில் இப்பாடலை முழுமையாக அறிய யார் யாரையோ கேட்டு பார்த்தேன் (திரு கி.வா.ஜ. உட்பட). யாருக்கும் தெரியவில்லை.
சரி, எலிக்குட்டிக்கு வருவோம். சுண்டெலி = குட்டி எலி = எலிக்குட்டி. எப்படி?
அன்புடன்,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)

dondu(#11168674346665545885) said...

நன்றி தேன் துளி அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)

dondu(#11168674346665545885) said...

மூன்றாம் டோண்டு அவர்களே (மூன்றாம் குலோத்துங்க சோழன் இதுவும் நல்லாத்தான் இருக்கு). என் உறவினர் வட்டத்தில் கூறுவார்கள். "நாட்டிலே ஒரு டோண்டுவே ஜாஸ்தி, இன்னொருத்தரை நாடு தாங்காது என்று" இப்போது மூன்றாம் டோண்டு? ரவுஸு தாங்காது சாமியோவ் (கவுண்டமணியின் குரலில்)

அன்புடன்,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)

Ganesh said...

Dondu Sir Don't worry
I enjoy all your blogs,
whether I agree with it or not.
Kindly visit my latest blog
and enjoy and relax with the music

Anbudan
KKNK

Maya said...

Dear Sir

I am your regular reader.This is my first comment abt in blogg.

I completely understand your feelings and concerns.

But as everyone stated , everybody know abt your writing style.So keep continue your good work.

Regards
Mayakoothan

Note:
I am sure now you will identify my
native palce.

dondu(#11168674346665545885) said...

நன்றி K. கிறுக்கன் அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)

dondu(#11168674346665545885) said...

Dear Mayakoothan, are you referring to Perungulam, which is around 12 Km away from
Alwarthirunagari?
அன்புடன்,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)

Maya said...

Yes sir
that is my native place.By my parents blessings currently i am working in USA.
FYI i am close friend of Arun Vaidthiyanathan.
Sorry i cant write these comments on Tamil(which i love to do that).
Regards
Mayakoothan

dondu(#11168674346665545885) said...

நன்றி பாண்டி அவர்களே. என் உள்ளம் கொள்ளை கொண்ட என் அப்பன் மகரநெடுங்குழைகாதனைப் பற்றியா கேட்டீர்கள்? நான் 22, மார்ச், 2005 என்ற தலைப்பில் இட்ட பதிவு "உள்ளம் கொள்ளை கொண்ட மகரநெடுங்குழைகாதன்" உங்களுக்கு உதவியாக இருக்கும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)

dondu(#11168674346665545885) said...

நன்றி செல்வநாயகி அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)

dondu(#11168674346665545885) said...

Dear Mayakoothan,
Then you should know about Mr. Thirumalai, native of Then Thiruppeerai. Do read my post about Makaranedunguyaikathan.
Regards,
Dondu Raghavan
Blogger profile No.4800161

Maya said...

No sir
I am new to this world.But i used to read only certain blog.
Could you pls tell me which article u refer i will read that
Regards
Mayakoothan

Maya said...

I got it and read it
Did u visit to Perunkulam during your visit..curious to know ur exp@perunkulam

Regards
Mayakoothan

ஈழநாதன்(Eelanathan) said...

டோண்டு அவர்களே நீங்கள் இப்போது செய்வதைத்தான் நானும் சொன்னேன்.கூடவே www.bravenet.comபோன்ற ஏதாவதொரு தளத்தில் போய் Stat counterஒன்றைப் பெற்று உங்கள் பதிவில் சேர்த்துக்கொள்ளுங்கள் அவை பதிவுக்கு வந்து படிப்பவர்களின் IP முகவரியை நேரக்குறிப்புடன் எடுத்துத் தரும்.

dondu(#11168674346665545885) said...

மாயக்கூத்தன் கொயில் நவ திருப்பதிகளில் ஒன்றுதானே? அங்கும் சென்றோம். ஆனால் தென் திருப்பேரை தவிர்த்த மற்ற 8 கோயில்களில் அதிக நேரம் இருக்க இயலவில்லை. ஒவ்வொரு கோயிலுக்கும் குறிந்த பட்சம் அரை நாளாவது எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் நாங்கள் நேரம் போதாமையால் அவ்வாறு செய்ய இயலவில்லை. எட்டு கோயில்களையும் ஒரு பிற்பகலில் முடிக்க வேண்டிய நிலை. ஆனால் ஒன்று. கோயில்கள் இருக்கும் இடங்கள் மிக அழகு.
சென்னை வந்தால் வீட்டுக்கு வாருங்கள். என் ப்ரொஃபைலில் என் தொலைபேசி எண்கள் உள்ளன. தனி மின்னஞ்சலும் அனுப்பலாம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)

dondu(#11168674346665545885) said...

நன்றி ஈழனாதன் அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)

மாயவரத்தான் said...

எனது பதிவில் ரஜினிகாந்த் என்ற பெயரில் 'தனது குடும்ப சூழ்நிலை மற்றும் தகுதி, தராதரத்திற்கேற்ப' பின்னூட்டமிட்டுச் சென்றிருந்த நபர் அடுத்த 24 மணி நேரத்திற்குள் மீண்டும் வந்து தானாகவே அதை நீக்கி விட்டுச் சென்றிருக்கிறார். இப்போது தான் புத்தி தெளிந்து வருவது போல தெரிகிறது. பார்க்கலாம்.

dondu(#11168674346665545885) said...

மாயவரத்தாரே, இங்கும் அதே கதைதான். போலி டோண்டு (நமக்குத்தான் தெரியுமே அவர் யார் என்று) இட்ட ஐம்பதுக்கும் அதிகப் பின்னூட்டங்களை நானே வேருடன் அழித்தேன். பிறகு எனக்களிக்கப்பட்ட சட்ட ஆலோசனையின் பேரில் பின்னால் வந்தவற்றை அப்படியே வைத்திருந்தேன். நேற்று அவை அவரால் நீக்கப்பட்டுவிட்டன. காரணம் எதுவாக இருந்தாலும் வரவேற்க வேண்டிய திருப்பமே.
எவ்வாறு போலி டோண்டு செயல்பட்டார் என்பதைக் காட்ட மூன்றாம் டோண்டு அனாயாசமாக அதைச் செய்து காட்டினார். மிகவும் ரசித்தேன்.
நான் கடலூர், கும்பகோணம் ஆகிய இடங்களுக்கு கடந்த திங்களன்று வந்தேன். நீங்கள் மாயவரத்தில் இருப்பதாக எண்ணி உங்களை போகும் வழியில் பார்க்கலாமா என்று மின்னஞ்சலில் கேட்டிருந்தேன். அஞ்சல் கிடைத்ததா?
சென்னை வந்தால் அவசியம் வீட்டுக்கு வாருங்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)

era.murukan said...

Dear Mr.Raghavan,

I am clueless as to who is behind such activities of cybe crime targetting you. I join other friends from the Tamizh blogger community in strongly condemning this. As one focussing on anti-phishing and cyber crime busting initiatives, I am prepared to help in whatever manner I can.

Warm regards,
era.murukan

dondu(#11168674346665545885) said...

மிக்க நன்றி இரா.முருகன் அவர்களே. இந்தப் போலி நபர் எப்படி என் அடையாளத்தைத் திருடினார் என்பதை இன்னொருவர் செய்து பார்த்து எனக்கு பின்னூட்டமிம் இட்டு விட்டார். துர்வாசன், பாப்பான் என்ற பெயரில் வந்து நாக்கூசும் வார்த்தைகளால் எல்லோரையும் திட்டிய இந்த நபர் என் பெயரிலேயே வந்து பின்னூட்டம் இட்டது மிகப்பெரிய கொடுமை. அதிலும் ஏற்கனவே வேறு பெயரில் வந்த பின்னூட்டங்களும் என் பெயருக்கு வந்ததுதான் கொடுமையின் உச்சக்கட்டம். அதுவும் நான் தற்செயலாகத்தான் பார்த்தேன். வேறு எந்தப் பெயரில் அவை வந்தன என்பது எனக்கும் திருமலை அவர்களுக்கும் நன்றாகவே ஞாபகம் இருக்கிறது. அந்த நபர்தான் குற்றவாளி என்பது வெள்ளிடை மலை. சமயம் வரும்போது இது உதவியாயிருக்கும்.
மற்ரப்படி நாம் தொலைபேசியபோடு எடுத்த முடிவுகளைச் செயல்படுத்துவோம். இதற்கு முன்னால் இந்த நபரால் பாதிக்கப்பட்டவர்கள் பா.ரா., சிஃபி வெங்கடேஷ், பிரகாஷ், மாயவரத்தான் ஆகியோர்.
என்ன செய்யவேண்டுமோ அதை செய்துவிடுவோம். அடையாளத் திருட்டு ஒத்துக்கொள்ளவே முடியாது.

அன்புடன்,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)

Mahamaya said...

//(நான் தான்!! யாரோ கோபப்படப் போவது உறுதி).//

இதன் பொருள் எனக்குப் புரியவில்லை. "நான் தான்" என்ற பெயரில் யாரேனும் இதற்கு முன் கருத்துப் பதிவு செய்திருக்கிறார்களா? நான் "நான் தான்" என்று எழுதியது, நான் "எஸ்.கே"தான். டூப்ளிகேட் அல்ல என்று கூறுவதற்காகத்தான்.

இனிமேல் வலைத்தளங்களில் ஊடாட கவச குண்டலங்களுடன் தான் போரில் இறங்க வேண்டும் போலிருக்கிறது!

dondu(#11168674346665545885) said...

"இதன் பொருள் எனக்குப் புரியவில்லை. "நான் தான்" என்ற பெயரில் யாரேனும் இதற்கு முன் கருத்துப் பதிவு செய்திருக்கிறார்களா? நான் "நான் தான்" என்று எழுதியது, நான் "எஸ்.கே"தான். டூப்ளிகேட் அல்ல என்று கூறுவதற்காகத்தான்."
தவறு நடந்து விட்டது. "நான் தான்" பெயரில் ஒருவர் எனக்கு ஆதரவாக என்னுடைய 373-பின்னூட்டப் பதிவில் பின்னூட்டமிட்டு அவருக்கும் மூர்த்தி அவர்களிடையே பெரிய சண்டையே நடந்ததே? போய் பாருங்களேன். (கடைசி சில பின்னூட்டங்களில்). மூர்த்தி அது மாயவரத்தான் என்று நினைத்து பலவாறாக எழுதினாரே? பார்க்கவில்லையா?
இப்போது நீங்கள் அடைப்புக்குறிக்குள் "நான் தான்" என்று வேறு போட்டீர்களா? நானே குழம்பி விட்டேன். மன்னிக்கவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)

dondu(#11168674346665545885) said...

These are two comments that I entered in the posting of Kichu at
http://kichu.cyberbrahma.com/?p=67

“இந்த மாமியார்கள் மட்டும் இல்லாமலிருந்தால் டோண்டுவை மிஞ்சியிருக்கலாமே” என்ற கவலையுடன்…”
டோண்டுவை மிஞ்ச வாழ்த்துக்கள். ஆனால் சிறிது கஷ்டம்தான். டோண்டு எங்கு பின்னூட்டமிட்டாலும் (இதையும் சேர்த்து) அதன் நகலை அவனுடைய இதற்கானப் பிரத்தியேகப் பதிவில் உள்ளிடுவானே. ஆக வாலிக்கு இந்திரன் கொடுத்த மாலையின் கதைதான். இருப்பினும் வாழ்த்துக்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)"

"மே 27th, 2005 @ 9:12 am
Dear Kichu,
The way your comments box is organized, I feel that anybody can comment in anybody’s name. The only remedy is to have the mouseover display the blogger number and the comments box should have only blogger comment option.
I know what I am talking about. Your present arrangement lends to many avoidable misunderstandings. If any outrageous comments come in my name, please get in touch with me. I pose this request to you in all seriousness.
Regards,
Dondu Raghavan
Blogger profile N. 4800161"

கொழுவி said...

எலியின் இளையது குட்டியா?
நாங்கள் குஞ்சு என்றுதான் சொல்வோம்.
எலிக்குஞ்சு.

பரிசீலிக்கவும்.

dondu(#11168674346665545885) said...

மஸ்ட் டூ அவர்களே, நீங்கள் கூறுவதும் ஏற்கக் கூடியதே. இருப்பினும் எலிக்குட்டி நான் பலகாலமாகப் பாவிக்கும் பெயர். சுஜாதா அவர்களும் அதை பாவித்ததாக ஞாபகம். ஆகவே அதன் மேல் தனிப்பாசம்.
மற்றும் எலிக்குஞ்சு என்றால் வேறு ஏதோ ஞாபகத்துக்கு வருகிறது. ஆகவே எதற்கு வம்பு? என்னைப் பொருத்தவரை எலிக்குட்டியுடனேயே இருந்துவிட்டு போகிறேனே.

அன்புடன்,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)"

ஜோ/Joe said...

டோண்டு ஐயா,
இவ்விடயத்தில் உங்களுக்கு என் முழு ஆதரவை பதிவு செய்கிறேன்.

dondu(#11168674346665545885) said...

நன்றி ஜோ அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)"

Mahamaya said...

//தவறு நடந்து விட்டது. "நான் தான்" பெயரில் ஒருவர் எனக்கு ஆதரவாக என்னுடைய 373-பின்னூட்டப் பதிவில் பின்னூட்டமிட்டு அவருக்கும் மூர்த்தி அவர்களிடையே பெரிய சண்டையே நடந்ததே? போய் பாருங்களேன். (கடைசி சில பின்னூட்டங்களில்). மூர்த்தி அது மாயவரத்தான் என்று நினைத்து பலவாறாக எழுதினாரே? பார்க்கவில்லையா?//
---------------------
ஓஹோ!
இப்போதுதான் புரிகிறது. இன்று காலை திடீரென்று மூர்த்தி யாஹூவில் தோன்றி, "நீங்கள்தானா அது" என்று கோபமாகக் கேட்டார். மேலும் எனக்கு "உதவிப் பார்ப்பன வெறியர்" போன்றதொரு பட்டம் வேறு அளித்தார்! (தலைமைப் பதவி உங்களுக்குத்தான்!). எனக்கு ஒன்றும் புரியவில்லை. நீங்கள் குறிப்பிட்ட அந்தப் பதிவுகளையும் அவற்றின் அலைஅலையான பின்னூட்டங்களையும் நான் படிக்கவில்லை. (அதையெல்லாம் வாசித்து முடிக்க நான் இரண்டு நாள் ஸி.எல் போடவேண்டியிருக்கும் என்பதால் நான் நெருங்குவதில்லை)

அது போகட்டும். மூர்த்தி உங்களுக்கு செய்திருக்கும் அர்ச்சனைகளை உங்கள் பதிவில் எல்லோருடைய பார்வைக்கும் வையுங்களேன். உங்கள் பிறப்புறுப்பையும், மற்றும் குடும்பத்தினரையும் இழுத்து எவ்வளவு கீழ்த்தரமாக ஒரு மனிதர் எழுத இயலும் என்று இன்னமும் அவருக்கு தார்மீக ஆதரவு அளித்துவரும் சிலர் புரிந்து கொள்ளட்டும்.

முன்பு ஒரு முறை திருமலை அவர்களை நோக்கி இவர் யாஹூவில் அழைப்பு விடுத்தார். உடனே பதிலுரைக்கவில்லை என்று கோபம் கொண்டு, "ஏய், நீ என்ன பெரிய பருப்போ?" என்றும், இன்னும் சில "முத்தமிழ்ச்" சொற்களிலும் வசை பாடத்தொடங்கினாராம். திருமலை என்னிடம் "பருப்பு" என்ற சொல்லுக்கு இந்த context-ல் பொருள் கேட்டார். உடனே நான் ஒரு "பருப்புக்குப் பொருளுரைத்த பண்டித"ரானேன்! :)

சுமார் 500-க்கும் மேற்பட்ட வலையுலக தொழில்நுட்ப வல்லுனர்கள் கூடிய இந்த தமிழ்வலை பாவிப்பவர்கள் (என்னைப் போன்ற சமானியர்களை விடுங்கள்) மத்தியில் இதுபோன்ற ஒருவர் தங்கு தடையின்றி வசைபாடிக்கொண்டு திரிவதை சகித்துக்கொண்டு வாளாயிருப்பது சரியன்று. உடனடி நடவடிக்கை தேவை. திரு. முருகன் அவர்களையும் மேலும் பலரையும் கலந்து ஆவன செய்ய முற்படுமாறு வேண்டுகிறேன்.

dondu(#11168674346665545885) said...

எஸ்.கே. அவர்களே, நான் பயப்பட்டது மாதிரியே நடந்து விட்டது. அவர் உங்களை நோக்கி யாஹூ மெஸ்ஸஞ்சரில் எழுதியதை எல்லாம் பாதுகாப்பான இடத்தில் சேமித்து வைக்கவும். பிற்கால நடவடிக்கைகளுக்கு உதவியாக இருக்கும். அந்த நபர் என்னமோ தான் ஒருவர்தான் ஜாதி உணர்வு ஒன்றுமில்லாமல் இருப்பதாக அலட்டுகிறார். நான் எந்த சூழ்நிலையில் என் ஜாதியை வெளிப்படுத்தினேன் என்பதை பல இடங்களில் பதிவு செய்து வைத்துள்ளேன். சிறிது சிரமம் எடுத்து கொண்டு நீங்கள் என் 373-பின்னூட்ட பதிவைப் படிப்பது நலம். அப்போதுதான் உங்களுக்கு இவ்விஷயத்தின் நெளிவு சுளிவுகள் புரியும். நீங்கள் யதார்த்தமாக ஏதோ எழுதப் போக, அவர் இதைப் பிடித்துக்கொண்டு தொங்க, ரொம்பக் கஷ்டம் ஐயா.

அன்புடன்,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)"

dondu(#11168674346665545885) said...

This is the comment I posted in Go Ganesh's topic at http://gganesh.blogspot.com/2005/04/blog-post_30.html

வணக்கம் கோ கணேஷ். வாழைப்பழக் கேள்வி சற்று சிக்கலானதே. என்னுடைய ஒரு பதிவில் பல விடுகதைக் கேள்விகள் போட்டேன். அவற்றில் ஒன்று இக்கேள்வி:
"கவுண்டமணி கேள்வியை எம்மாதிரிக் கேட்டிருந்தால் செந்தில் சரியான பதிலைக் கூறியிருந்திருப்பார்?"
விடை:
"வாங்கின வாழைப்பழங்களிலே இன்னொண்ணு இங்க இருக்கு. ஒண்ணு எங்கே?"

பிரச்சினை என்னவென்றால் எது ஒன்று எது இன்னொன்று என்பதுதான். செந்தில் ஒன்றைத் தின்று விட்டார். இன்னொன்றை கவுண்டமணியிடம் கொடுக்கிறார். அவரைப் பொருத்தவரை அவர் பார்வைக்கோணம் அப்படித்தான் இருக்கும். கவுண்டமணியின் நிலையோ எல்லோருக்கும் தெரிந்ததே.
இதனால் அறியும் நீதி என்னவென்ரால்: மற்றவர் பார்வை கோணத்திலிருந்து பார்ப்பதும் நன்மை பயப்பதே.

அன்புடன்,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)"

ஈழநாதன்(Eelanathan) said...

டோண்டு இரண்டு கோடுகள் சந்திக்கும் புள்ளியை வைத்து இரண்டையும் வரைந்தவரை கண்டுபிடிக்கலாம்.எனக்கு மூன்று கோடுகள் கிடைத்தன மாயவரத்தான் பதிவில் எழுதியவரைக் கண்டுபிடித்துவிட்டேன்.இதனை ஏன் எழுதுகிறேன் என்றால் இதை எழுதியபின் அந்தப் பரமார்த்த குரு இன்னும் கோபம் கொண்டு வசைபாடக் கூடும் மற்றவர்களுக்கும் இனம்காட்டலாம்

dondu(#11168674346665545885) said...

இந்த துப்பறிதல் ஒன்றுக்கும் மேற்பட்டத் தளத்திலிருந்து கொண்டு செய்ய வேண்டும்.
1.போலி டோண்டுவின் எழுத்து நடையே அவர் யார் என்பதை எனக்கு இனம் காட்டிவிட்டது.
2. முகமூடியின் ஒரு பதிவில் துர்வாசன், மற்றும் பாப்பான் என்ற பெயரில் பின்னூட்டங்கள் வந்தன. அவை எல்லாம் பின்னால் டோண்டு பெயருக்கு மாற்றப்பட்டன. ஆகவே துர்வாசன், பாப்பான் ஆகியவர் ஒருவரே அதுவும் போலி டோண்டுவே என்பது வெள்ளிடைமலை.
3. இம்மாதிரி செய்ததில் நான் முதலிலேயே அறிந்த நபர் தன்னுடைய முறையான பயனர் பெயரில் திருமலை மற்ரும் மாயவரத்தானுக்கு இட்டப் பின்னூட்டங்களும் டோண்டு பெயருக்கு மாற்றப்பட்டன. இதை திருமலையும் உறுதி செய்தார். இதுதான் கடைசி லிங்க். நான் முதலிலேயே அறிந்ததை அது ஊர்ஜிதப்படுத்தியது. அவர்தான் போலி டோண்டு என்பதை.
இந்த வலைப்பூ உலகில் அவர் யார் என்பதை சந்தேகத்திடமின்றி அறிந்தவர் பலர். அவரைப் பிடிக்கும் முயற்சிகள் ஒரு பக்கம் இருக்கட்டும். அவரை பாய்காட் செய்வது நாம் எல்லோரும் உடனடியாகச் செய்ய முடியும். என் பதிவில் அவர் பின்னூட்டமிட்டால் அவை தரக்குறைவானதாக இல்லாத பட்சத்தில் அப்படியே வைக்கப்பட்டு அலட்சியப்படுத்தப்படும். த்ரக்குறைவான பேச்சுக்கள் அழிக்கப்படும். அந்த உரிமையை நிச்சயம் பயன்படுத்துவேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)"

ஜெ. ராம்கி said...

அட ஆண்டவா, இனிமே பிளாக்கல் ஐ.டியையும் டிஸ்பிளே பண்ணுமா? ஜெயில் கைதி மாதிரி நம்ம பேரோட ஓட்டி எழுதவேண்டியிருக்கும்! டோண்டு ஸார், முடிந்தால் உங்க போட்டோவையும் அப்லோட் பண்ணிடுங்க.

அப்புறம், மாயவரம்னா என் ஞாபகம் உங்களுக்கு வரலையே! மனசு ஒடைஞ்சு போயிட்டேன் ஸார்!

dondu(#11168674346665545885) said...

ரஜனி ராம்கி அவர்களே, உங்கள் வீடு சைதாப்பேட்டையில் இருப்பதாகத்தானே என் ஞாபகம்? மாயவரத்திலா இருக்கிறீர்கள்? அசோகமித்திரன் பாராட்டு விழாவில் நாம் சந்தித்தோம் அல்லவா?

மற்றப்படி மாயவரத்தானை நான் பார்க்க விரும்பியதற்கு முக்கியக் காரணம் அவர் என் 373-பின்னூட்ட பதிவில் எனக்கு அளித்த ஆதரவே. எல்லா அவதூறுகளையும் அதில் அவர் சந்தித்தார். அவரைப் பார்க்க ஆவலாயிருந்தேன். அவ்வளவுதான் விஷ்யம். அடிக்கடி தமிழ்நாட்டில் உள்ள பல கோவில்களுக்கு என் வீட்டம்மா என்னை தரதரவென்று இழுத்து செல்வார். மாயவரம் பக்கம் கார் வந்தால் உங்களையும் சந்திக்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)"

dondu(#11168674346665545885) said...

This comment was posted by me in Badri's blog about Tamil software meeting vide http://thoughtsintamil.blogspot.com/2005/05/blog-post_27.html#comments
நல்ல முயற்சி பத்ரி அவர்களே. கண்டிப்பாக நான் வருவேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)"

மாயவரத்தான் said...

நன்றி டோண்டு சார்... உங்களது மின்னஞ்சல் எதுவும் எனக்கு இதுவரை கிட்டவில்லையே. எனது மின்னஞ்சல் முகவரி mayiladuthurai at gmail.com

அப்புரம், எனது சொந்த ஊர் மாயுரம். ஆனால் தற்போது நான் மாயுரத்தில் இல்லை. விரிவாக உங்களுக்கு மெயில் அனுப்புகிறென்.

நன்றி..!
http://www.mayiladuthurai.net
http://mayiladuthurai.tripod.com

dondu(#11168674346665545885) said...

This comment was posted by me in ennamoo poonga's blog at http://randakka.blogspot.com/2005/05/blog-post_26.html#comments
"பாவம் "டோண்டு" சாரு. நமக்கும் அவருக்கும் சாதி சம்பந்தமான கொளுகையில நிறையவே வேறுபாடு உண்டு. இருந்தாலும் பிறரை வருத்தாத அவரது "கருத்துச் சண்டை" எனக்குப் பிடிக்கும்."

இதுவரை எனக்கு கிடைத்த பாராட்டுகளில் மிக சிறந்தவற்றில் ஒன்றாக இதை நான் பாவிக்கிறேன்.

நன்றி என்னமோ போங்க, நல்லா இருந்தா சரி.

அன்புடன்,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)

dondu(#11168674346665545885) said...

This is what I commented in Appidipoodu blog at http://tamilkudumbam.blogspot.com/2005/05/blog-post_26.html#comments
இது சுதந்திர நாடு. அவரவருக்கு தான் என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சுதந்திரம் உண்டு. விஜயகாந்தை எடுத்து கொள்வோம். தான் தேர்தலில் நின்று ஜெயிக்க முடியும் என்று நினைக்கிறார். தான் சம்பாதித்தப் பணத்தை போட்டு தேர்தலில் நிற்கிறார். அவர் கட்சி வேட்பாளர்களும் நிற்கிறார்கள். பெரும்பான்மை பலம் பெற்றால் பதவி பெறுகிறார். இல்லாவிட்டால் பணமெல்லாம் இழந்து அரசியலை விட்டு விலகுகிறார். எதுவானாலும் ஓட்டு போடும் மக்கள் பார்த்து கொள்வார்கள். அதிலும் தமிழ் வாக்காளர்கள் விவரமானவர்கள். அவர்கள் ஒரு போதும் தொங்கும் சட்டசபையைக் கொண்டு வந்ததில்லை.

பிறகு அவர் அரசியலுக்கு வர வேண்டுமா கூடாதா என்று மற்றவர்கள் விவாதிப்பது கொஞ்சம் ஓவராகத் தெரியவில்லை? ஒரு மூலதனமும் இன்றி தலைவர் மகன் என்ற ஒரே தகுதியில் தேர்தலில் நிற்காமலேயே மந்திரி ஆவதை விட விஜயகாந்த் தன் அரசியல் தகுதியை மக்கள் மன்றத்தில் வைத்து பரிசோதிப்பது கேவலம் இல்லை. எம்.ஜி.ஆர். ஒரு வழியில் பதவிக்கு வந்தார், என்.டி.ஆர். வேறு மாதிரி வந்தார். சிவாஜி, அமிதாப் பச்சன் ஆகியோர் வந்து துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று களத்திலிருந்து விலகினர். எல்லாவற்றையும் காலம் பார்த்து கொள்ளும்.

நேரு குடும்பத்தில் பிறந்ததாலேயே இந்திரா, ராஜீவ், அவர் மனைவி சோனியா மற்றும் ராகுல் காந்தி அரசியலில் குப்பை கொட்ட முடிந்திருக்கிறது. நேரு சம்பந்தம் இல்லாதிருந்தால் இவர்களில் யாராவது தலைவர் பதவியை நினைத்து கூட பார்த்திருக்க முடியுமா? எல்லாம் நேரம்தான்.

1970-ல், ஒரு வக்கீல் மற்றும் நடிகர் ஒரு பத்திரிகை ஆரம்பித்தார். எல்லோரிடமும் கருத்து கேட்டார். முக்கால்வாசி பேர் இது உருப்படும் காரியமில்லை என்று திருவாய் மலர்ந்தருளினர். அவ்வாறு கூறியவர்கள் கால வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். அவர்கள் யார் என்பதைக்கூட சிரமப்பட்டுத்தான் நினைவுக்கு கொண்டு வர வேண்டியிருக்கிறது. பத்திரிகை? அமோகமாக நடக்கிறது. பத்திரிகை பொருளடக்கம்? அரசியல், அரசியல் மற்றும் அரசியல். கவர்ச்சி படங்கள்? மூச். தனி நபர் தாக்குதல் கிடையவே கிடையாது. கிளு கிளு செய்திகள் - அண்ணாச்சி, ஜயலக்ஷ்மி முதலியோரைப் பற்றி? யார் அவர்கள்? நான் இங்கு எந்தப் பத்திரிகையைக் குறிப்பிடுகிறேன் என்பதைச் சொல்லத்தான் வேண்டுமா?

இதெல்லாம் நடக்கும் என்று யாராவது 1970-ல் நினைத்து பார்த்திருக்க முடியுமா? பத்திரிகைத் துறையில் அனுபவம் வாய்ந்த குடும்பத்தால் ஆரம்பிக்கப்பட்ட பெஸ்ட் கண்ணா பெஸ்ட் பத்திரிகை நொண்டுகிறது. எது நடக்கும் என்று யார் கூற முடியும்? இவர் பத்திரிகையோ சீராகச் சென்று கொண்டிருக்கிறது.

நடிகனோ, பொறியாளனோ, எழுத்தாளனோ யாராயிருந்தாலும் அரசியலுக்கு வருவதை எதிர்க்க நாம் யார்? வேண்டுமானால் தேர்தலில் அவர்களுக்கெதிராகப் பிரசாரம் செய்யுங்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)

dondu(#11168674346665545885) said...

This comment was posted by me in Must Do's post at http://koluvithaluvi.blogspot.com/2005/05/blog-post_26.html#comments
"மஸ்ட் டூ அவர்களே,
நீங்கள் கூறியது போலவே உங்கள் பெயர் போட்டு வரும் பின்னூட்டங்கள் உங்களுடையதாகவே இருக்கட்டும் என்று இறைவனை வேண்டுகிறேன். அது இல்லாது போனால் எவ்வளவு மன உளைச்சல் வரும் என்பதை நீங்கள் என் விஷயத்தில் பார்த்தீர்கள்தானே.
இன்னுமொரு விஷயம். மேலே அனானி ஒருவர் என் பெயர் வந்த கமல் பற்றிய பின்னூட்டத்தையும் அதற்கு அன்பு அவர்களின் எதிர்வினையையும் நகல் ஒட்டியுள்ளார். அதில் வரும் டோண்டு நான் அல்ல என்பதும் அது டூப்ளிகேட் என்பதும் தாங்கள் அறியாததல்லவே. விஷயம் தெரிந்த பிறகு அன்பு அவர்கள் எழுதியதையும் அவருக்கு நான் இட்ட பதிலையும் இங்கு இணைத்துள்ளேன்.

"நான் இங்கு தமிழ்மணத்திலேயே குடியிருந்தாலும், இதுபோன்று நிகழும் உயர்தொழில்/கீழ்த்தர தகிடுதத்தங்கள் அறிந்திழேன். உங்களின் விளக்கத்துக்கு மிக்க நன்றி. உங்கள் பெயரில் அப்படி ஒரு பின்னூட்டம் பார்த்ததும் உணர்ச்சிவயப்பட்டது உண்மை. தவறேதும் இருந்தால் பொறுத்தறுள்க...
# போஸ்டட் பை அன்பு : 5:04 PM
அன்பு அவர்களே,
புரிதலுக்கு மிக்க நன்றி. உங்கள் மேல் ஒரு தவறும் இல்லை. நானே அதைப் படித்திருந்தாலும் அப்படித்தான் ரியேக்ட் செய்திருப்பேன். இப்போதுதான் பத்ரி அவர்கள் பதிவிலும் இம்மாதிரி ஒரு பின்னூட்டம் வர, அவருடன் தொலைபேசினேன். நான் இதைப் பற்றி கூற ஆரம்பித்ததுமே தான் அதை நீக்கி விட்டதாக தன் உறுதியானக் குரலில் கூறினார். மனதுக்கு இதமாக இருக்கிறது. சில நாட்களுக்கு இந்த சங்கடம் தொடரும் என நினைக்கிறேன். உங்கள் எல்லோருடைய ஆதரவையும் கோருகிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
# போஸ்டட் பை டோண்டு : 5:19 PM"

இப்போது முதல் பாதியை மட்டும் போட்டு விஷமத்தைத் தொடர நினைக்கும் அனானி நான் குறிப்பிட்ட போலி டோண்டு என்பது வெள்ளிடை மலை. அது யார் என்பதும் இணையத்தில் அனேகருக்கு தெரிந்திருக்கும். உங்க்ளுக்கும் கூட தெரிந்திருக்கும். அப்படிப்பட்டவர் பதிவுக்கு போய் பின்னூட்டம் இடுவதும் வீண்."

அன்புடன்,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)

dondu(#11168674346665545885) said...

test

dondu(#11168674346665545885) said...

This is what I posted in Kichu's post at http://kichu.cyberbrahma.com/?p=69
"லக்ஷ்மிபதிக்கு விரோதி அவரேதான். அவர் மனைவி மற்றும் குழந்தைகளுக்கும் அவரே விரோதி. மற்றொருவர் உங்கள் மேல் குதிரை ஏற நீங்கள் ஏன் அனுமதிக்க வேண்டும்? இந்த மாதிரி தேவையற்ற தியாகங்கள் கண்டிக்கத் தகுந்ததே. பாத்திரமறிந்து பிச்சையிடு என்று பெரியவர்கள் சும்மாகவா சொல்லியிருக்கிறார்கள்? இவர் செலவில் அப்பளம் முதலியவையிட்டு இவருக்கோ இவர் குழந்தைகளுக்கோ காட்டாமல் இருப்பவர்களை முதலிலேயே தடியெடுத்து விரட்டியிருந்தால் ஏன் பிரச்சினை வரப் போகிறது?

அதனாலேயே ரஜனியின் "ஆறிலிருந்து அறுபது வரை" படம் எனக்கு பிடிக்காது. ஒருவன் தேவையின்றி தன் கையை தானே கட்டிக்கொண்டு மற்றவர்கள் அவனை அடிக்க இடம் கொடுப்பது மடத்தனமே. தயவு செய்து இம்மாதிரி சுய துன்புறுத்தல் எண்ணங்களை வளர்க்க விடாதீர்கள்."

அன்புடன்,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)

dondu(#11168674346665545885) said...

These are the two comments I left in Kichu's post at:
மே 30th, 2005 @ 10:48 am
http://kichu.cyberbrahma.com/?p=70
"உங்கள் பதிவுகளுக்கு போதுமான அளவுக்கு பின்னூட்டங்கள் வருவதில்லை என்று செல்லமாக சிணுங்கினீர்கள். இது விளையாட்டுக்காகவே என்றிருந்தாலும் ஆழ் மனதின் ஆசையையும் பிரதிபலிப்பதாகவே உள்ளது. நடுவில் “டோண்டுவுக்கு வருவது போல” என்று பொருள்பட க்வாலிஃபை வேறு செய்திருப்பதால். அந்த டோண்டுவாகிய நானே உங்களுக்கு சில ஆலோசனைகள் கூற ஆசைப்படுகிறேன்.

1. முதலில் உங்கள் பின்னூட்டப் பெட்டியில் இப்போதிருக்கும் நிலையில் யார் வேண்டுமானாலும் வேறு யார் பெயரில் வேண்டுமானாலும் பின்னூட்டம் இடும் அபாயம் உள்ளது. என் பெயரில் ஒரு டூப்ளிகேட் ஆசாமி பின்னூட்டமிட்டு குழப்படி செய்தது எல்லோருக்குமே தெரியும். ப்ளாக்கர் அக்கௌன்டில் என் பெயரைப் போட்டு மெடா ரிடைரெக்ஷன் எல்லாம் செய்து நானே பின்னூட்டம் இடுவது செய்தார் அந்த போலி டோண்டு. இருப்பினும் ப்ளாக்கர் எண் என்ற பாதுகாப்பு வந்து அவர் நான் இல்லை என்பதைப் புரிய வைத்தது. இப்போது உங்கள் பின்னூட்டப் பெட்டியில் என் ப்ளாக்கர் எண்ணை வைத்தாலும் ஒரு பிரயோசனமும் இல்லை. இப்போதிருக்கும் நிலையில் இது அதிக பின்னூட்டம் எடுக்கத் தோதாக இல்லை.

2. பின்னூட்டமிட்டவுடன் அது மட்டுறுத்தலுக்காக காத்திருக்க வேண்டியிருக்கிறது. சில சமயம் அது அதிக நேரம் எடுக்கிறது. என் ஒரு பின்னூட்டம் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டியிருந்தது. இது பின்னூட்டமிடுபவரின் உற்சாகத்தைக் குறைக்கக் கூடியது.

3. சரி பின்னூட்டம் வந்து விட்டது. ஆனால் உங்களிடமிருந்து எதிர் வினை? குறைந்த பட்சம் என் பின்னூட்டம் ஒன்றுக்கும் வரவில்லை. இந்த வகையிலும் உங்கள் தரப்பிலிருந்து மாற்றம் தேவை. ஒரு நன்றி அறிவிப்பாவது இருத்தல் நலம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Dondu: Your comment is awaiting moderation.
மே 30th, 2005 @ 10:53 am
ப்ளாக்கர் அக்கௌன்டில் என் பெயரைப் போட்டு மெடா ரிடைரெக்ஷன் எல்லாம் செய்து நானே பின்னூட்டம் இடுவது செய்தார் அந்த போலி டோண்டு.

For the above sentence, please read:

ப்ளாக்கர் அக்கௌன்டில் என் பெயரைப் போட்டு மெடா ரிடைரெக்ஷன் எல்லாம் செய்து நானே பின்னூட்டம் இடுவது போல செய்தார் அந்த போலி டோண்டு."
அன்புடன்,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)

dondu(#11168674346665545885) said...

This is the comment posted by me in the blog நெய்வேலி வலைப்பூ at http://neyvelivichu.blogspot.com/2005_05_01_neyvelivichu_archive.html#111743701686968996#comments

நீங்கள் சுட்டிய வலைப்பூவில் நான் இட்ட பின்னூட்டத்தை இங்கும் இட்டு உங்களது இந்தப் பின்னூட்டப் பெட்டியை ஆரம்பித்து வைக்கிறேன். வாழ்க நலமுடன்.

இது சுதந்திர நாடு. அவரவருக்கு தான் என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சுதந்திரம் உண்டு. விஜயகாந்தை எடுத்து கொள்வோம். தான் தேர்தலில் நின்று ஜெயிக்க முடியும் என்று நினைக்கிறார். தான் சம்பாதித்தப் பணத்தை போட்டு தேர்தலில் நிற்கிறார். அவர் கட்சி வேட்பாளர்களும் நிற்கிறார்கள். பெரும்பான்மை பலம் பெற்றால் பதவி பெறுகிறார். இல்லாவிட்டால் பணமெல்லாம் இழந்து அரசியலை விட்டு விலகுகிறார். எதுவானாலும் ஓட்டு போடும் மக்கள் பார்த்து கொள்வார்கள். அதிலும் தமிழ் வாக்காளர்கள் விவரமானவர்கள். அவர்கள் ஒரு போதும் தொங்கும் சட்டசபையைக் கொண்டு வந்ததில்லை.

பிறகு அவர் அரசியலுக்கு வர வேண்டுமா கூடாதா என்று மற்றவர்கள் விவாதிப்பது கொஞ்சம் ஓவராகத் தெரியவில்லை? ஒரு மூலதனமும் இன்றி தலைவர் மகன் என்ற ஒரே தகுதியில் தேர்தலில் நிற்காமலேயே மந்திரி ஆவதை விட விஜயகாந்த் தன் அரசியல் தகுதியை மக்கள் மன்றத்தில் வைத்து பரிசோதிப்பது கேவலம் இல்லை. எம்.ஜி.ஆர். ஒரு வழியில் பதவிக்கு வந்தார், என்.டி.ஆர். வேறு மாதிரி வந்தார். சிவாஜி, அமிதாப் பச்சன் ஆகியோர் வந்து துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று களத்திலிருந்து விலகினர். எல்லாவற்றையும் காலம் பார்த்து கொள்ளும்.

நேரு குடும்பத்தில் பிறந்ததாலேயே இந்திரா, ராஜீவ், அவர் மனைவி சோனியா மற்றும் ராகுல் காந்தி அரசியலில் குப்பை கொட்ட முடிந்திருக்கிறது. நேரு சம்பந்தம் இல்லாதிருந்தால் இவர்களில் யாராவது தலைவர் பதவியை நினைத்து கூட பார்த்திருக்க முடியுமா? எல்லாம் நேரம்தான்.

1970-ல், ஒரு வக்கீல் மற்றும் நடிகர் ஒரு பத்திரிகை ஆரம்பித்தார். எல்லோரிடமும் கருத்து கேட்டார். முக்கால்வாசி பேர் இது உருப்படும் காரியமில்லை என்று திருவாய் மலர்ந்தருளினர். அவ்வாறு கூறியவர்கள் கால வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். அவர்கள் யார் என்பதைக்கூட சிரமப்பட்டுத்தான் நினைவுக்கு கொண்டு வர வேண்டியிருக்கிறது. பத்திரிகை? அமோகமாக நடக்கிறது. பத்திரிகை பொருளடக்கம்? அரசியல், அரசியல் மற்றும் அரசியல். கவர்ச்சி படங்கள்? மூச். தனி நபர் தாக்குதல் கிடையவே கிடையாது. கிளு கிளு செய்திகள் - அண்ணாச்சி, ஜயலக்ஷ்மி முதலியோரைப் பற்றி? யார் அவர்கள்? நான் இங்கு எந்தப் பத்திரிகையைக் குறிப்பிடுகிறேன் என்பதைச் சொல்லத்தான் வேண்டுமா?

இதெல்லாம் நடக்கும் என்று யாராவது 1970-ல் நினைத்து பார்த்திருக்க முடியுமா? பத்திரிகைத் துறையில் அனுபவம் வாய்ந்த குடும்பத்தால் ஆரம்பிக்கப்பட்ட பெஸ்ட் கண்ணா பெஸ்ட் பத்திரிகை நொண்டுகிறது. எது நடக்கும் என்று யார் கூற முடியும்? இவர் பத்திரிகையோ சீராகச் சென்று கொண்டிருக்கிறது.

நடிகனோ, பொறியாளனோ, எழுத்தாளனோ யாராயிருந்தாலும் அரசியலுக்கு வருவதை எதிர்க்க நாம் யார்? வேண்டுமானால் தேர்தலில் அவர்களுக்கெதிராகப் பிரசாரம் செய்யுங்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)

dondu(#11168674346665545885) said...

This comment was posted by me in Ramachandran Usha's blog at http://womankind.yarl.net/archives/2005/05/24/451
ராமசந்திரன் உஷா அவர்களே, நீங்கள் கூற வந்ததைப் புரியாமல் பேசும் ஜலால் போன்றவர்களுடன் விவாதம் செய்து நேரத்தை ஏன் வீணாகுகிறீர்கள்? தங்களுக்கு சௌகரியமான உடையைத் தீர்மானிக்க பெண்கள் யாரையும் அனுமதி கேட்க வேண்டியதில்லை. பர்தா போட வேண்டும், புடவை கட்டா வேண்டும் என்றெல்லாம் ஸ்பெஸிபிகேஷன்ஸ் போடும் ஆண்கள் அந்த உடைகளைப் போட்டுக்கொண்டு ஒரு மணி நேரம் வெய்யிலில் நின்றால் புரியும்.

வாழ்க்கையில் ஒன்று புரிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு சரி என்று தோன்றுவதை தைரியமாகச் செய்யுங்கள். மற்றவர்களை கேட்டால் பொழுது போகாமல் ஏதாவது பேசிக் கொண்டிருப்பார்கள். நல்ல வேளையாக நீங்கள் ஆப்கானிஸ்தானில் இல்லை. இல்லாவிட்டால் உங்கள் மீது ஆசிட் வீசியிருப்பார்கள் பாவிகள். அதையும் நியாயப்படுத்தியிருப்பர் மற்ற பாவிகள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)

dondu(#11168674346665545885) said...

This comment was posted by me in Appidippoodu's blog at http://tamilkudumbam.blogspot.com/2005/05/blog-post_30.html#comments on 31-05-2005

"நான் என் மறுமொழியில்., 'நீங்க' என்று, 'பிராமணர்களைத்தான்' குறிப்பிட்டேன்!!. விஜயகாந்தை வெகுவாக ஆதரித்து சீமாச்சு, விச்சு அவர்கள் ஆகியோர் பின்னூட்டம் ஆளித்திருந்தீர்கள். அப்போது தோன்றிய எனது எண்ணதையே எழுதினேன்!!!.. பிறகு டோண்டு அவர்களும் பின்னூட்டம் இட்டிருந்தார்.
ஒரு 50 ஆண்டுகாலம் அரசியலில் கழித்த ஒரு தலைவரை அவர் திராவிடத்தை ஆதரித்தார் என்ற ஒரு காரணத்திறக்காக என்னவெல்லாம் அவரைப் பற்றி தரக்குறைவாக எழுத முடியுமோ அவ்வளவு எழுதுகிறீர்கள்.

என்னுடையப் பின்னூட்டத்தில் என்ன தவறு கண்டீர்கள்? நான் எங்கே மு.க. அவர்களை எதிர்த்தேன்? என் முழுப் பின்னூட்டம் இதோ:
"இது சுதந்திர நாடு. அவரவருக்கு தான் என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சுதந்திரம் உண்டு. விஜயகாந்தை எடுத்து கொள்வோம். தான் தேர்தலில் நின்று ஜெயிக்க முடியும் என்று நினைக்கிறார். தான் சம்பாதித்தப் பணத்தை போட்டு தேர்தலில் நிற்கிறார். அவர் கட்சி வேட்பாளர்களும் நிற்கிறார்கள். பெரும்பான்மை பலம் பெற்றால் பதவி பெறுகிறார். இல்லாவிட்டால் பணமெல்லாம் இழந்து அரசியலை விட்டு விலகுகிறார். எதுவானாலும் ஓட்டு போடும் மக்கள் பார்த்து கொள்வார்கள். அதிலும் தமிழ் வாக்காளர்கள் விவரமானவர்கள். அவர்கள் ஒரு போதும் தொங்கும் சட்டசபையைக் கொண்டு வந்ததில்லை.

பிறகு அவர் அரசியலுக்கு வர வேண்டுமா கூடாதா என்று மற்றவர்கள் விவாதிப்பது கொஞ்சம் ஓவராகத் தெரியவில்லை? ஒரு மூலதனமும் இன்றி தலைவர் மகன் என்ற ஒரே தகுதியில் தேர்தலில் நிற்காமலேயே மந்திரி ஆவதை விட விஜயகாந்த் தன் அரசியல் தகுதியை மக்கள் மன்றத்தில் வைத்து பரிசோதிப்பது கேவலம் இல்லை. எம்.ஜி.ஆர். ஒரு வழியில் பதவிக்கு வந்தார், என்.டி.ஆர். வேறு மாதிரி வந்தார். சிவாஜி, அமிதாப் பச்சன் ஆகியோர் வந்து துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று களத்திலிருந்து விலகினர். எல்லாவற்றையும் காலம் பார்த்து கொள்ளும்.

நேரு குடும்பத்தில் பிறந்ததாலேயே இந்திரா, ராஜீவ், அவர் மனைவி சோனியா மற்றும் ராகுல் காந்தி அரசியலில் குப்பை கொட்ட முடிந்திருக்கிறது. நேரு சம்பந்தம் இல்லாதிருந்தால் இவர்களில் யாராவது தலைவர் பதவியை நினைத்து கூட பார்த்திருக்க முடியுமா? எல்லாம் நேரம்தான்.

1970-ல், ஒரு வக்கீல் மற்றும் நடிகர் ஒரு பத்திரிகை ஆரம்பித்தார். எல்லோரிடமும் கருத்து கேட்டார். முக்கால்வாசி பேர் இது உருப்படும் காரியமில்லை என்று திருவாய் மலர்ந்தருளினர். அவ்வாறு கூறியவர்கள் கால வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். அவர்கள் யார் என்பதைக்கூட சிரமப்பட்டுத்தான் நினைவுக்கு கொண்டு வர வேண்டியிருக்கிறது. பத்திரிகை? அமோகமாக நடக்கிறது. பத்திரிகை பொருளடக்கம்? அரசியல், அரசியல் மற்றும் அரசியல். கவர்ச்சி படங்கள்? மூச். தனி நபர் தாக்குதல் கிடையவே கிடையாது. கிளு கிளு செய்திகள் - அண்ணாச்சி, ஜயலக்ஷ்மி முதலியோரைப் பற்றி? யார் அவர்கள்? நான் இங்கு எந்தப் பத்திரிகையைக் குறிப்பிடுகிறேன் என்பதைச் சொல்லத்தான் வேண்டுமா?

இதெல்லாம் நடக்கும் என்று யாராவது 1970-ல் நினைத்து பார்த்திருக்க முடியுமா? பத்திரிகைத் துறையில் அனுபவம் வாய்ந்த குடும்பத்தால் ஆரம்பிக்கப்பட்ட பெஸ்ட் கண்ணா பெஸ்ட் பத்திரிகை நொண்டுகிறது. எது நடக்கும் என்று யார் கூற முடியும்? இவர் பத்திரிகையோ சீராகச் சென்று கொண்டிருக்கிறது.

நடிகனோ, பொறியாளனோ, எழுத்தாளனோ யாராயிருந்தாலும் அரசியலுக்கு வருவதை எதிர்க்க நாம் யார்? வேண்டுமானால் தேர்தலில் அவர்களுக்கெதிராகப் பிரசாரம் செய்யுங்கள்."

இதில் விஜயகாந்துக்கு ஆதரவு எங்கிருந்து வந்தது? அவர் நிற்கிறார், ஜயிக்கிறார் அல்லது தோற்கிறார், அது அவர் தலைவிதி என்னும் பொருளில்தானே நான் எழுதினேன். அவர் நிற்கவே கூடாது என்பதற்கு நாம் யார்? இம்மாதிரிப் பொருள்பட எழுதியவர்கள் சிலர் பார்ப்பனர் என்பது தற்செயலே. இதில் லென்ஸை வைத்து ஜாதியைப் பார்த்து எழுதியது நீங்கள். இங்கு எழுதியவர்கள் எல்லோரும் தங்கள் சொந்தக் கருத்தையே எழுதினார்கள். இதில் எழுதியவர்கள் ஜாதியை வைத்து நீங்கள் பேசுவதுதான் ஓவர்.

"நடிகர், நடிகைகள் ஆட்சிக்கு வருவதால் பாதிக்கப்படுவது ஒட்டு மொத்தத் தமிழகம். நல்லவர்கள் கைகளுக்கு பதவி செல்ல வேண்டும் அதுவும் 'நெடுமறன்', 'நல்லகண்ணு' அவர்களைப் போன்றவர்களிடம் என்றுதான் எழுதியிருக்கிறேன்."
தாராளமாக தேர்தலில் நின்று, ஜயித்து அதிகாரம் பெறட்டும். யார் தடுத்தது அவர்களை? விகா தேர்தலில் நிற்கவே கூடாது என்று கூறுவதுதான் தவறு என்று நான் சொன்னேன். அவர் ஆட்சிக்கு வர வேண்டும் என்று எங்காவது நான் சொன்னேனா?
கமலஹாசனை ஆதரித்தாலும் பிரச்சினை, சாதியை புகுத்துகிறீர்கள். அதையே விகா விஷயத்திலும் எந்த லாஜிக்கில் செய்தீர்கள்? காமாலைக் கண்ணனுக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சள்.

நடிகன் நாடாளலாமா என்றெல்லாம் எம்.ஜி.ஆர். காலத்திலேயே எழுப்பியாயிற்று. அதற்கு மக்களும் பதில் கொடுத்து விட்டனர். எம்.ஜி.ஆர். உயிருடன் இருந்தவரை மு.க. அவர்கள் முதன் மந்திரி ஆக முடியவில்லை. பின்னவரும் அழுது எல்லாம் பார்த்தர் (1984 தேர்தலில்). ஆகவே இப்போது அக்கேள்வியே இர்ரெலெவன்ட் என்றுதான் கூற வேண்டும். அதைத்தான் நானும் கூறினேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)

dondu(#11168674346665545885) said...

This is the comment posted by me in Appidippoodu's blog at http://tamilkudumbam.blogspot.com/2005/05/blog-post_30.html#comments on 31-05-2005.
"மறுபடியும் கூறுகிறேன், நான் விகா வருவதை ஆதரிக்கவோ அல்லது எதிர்க்கவோ இல்லை. அவர் தேர்தலில் நிற்கவே கூடாது என்று கூற நாம் யார் என்றுதான் கூறினேன். அதே சமயத்தில் அவர் நிற்க வேண்டும் என்பதையும் கூறவேயில்லை. இதுவும் அவர் விருப்பம்தான் என்பது என் நிலை. அவர் நிற்பது பிடிக்கவில்லையானால் தேர்தல் சமயத்தில் எதிர்த்து பிரசாரம் செய்வதுதானே என்றுதான் எழுதினேன். இந்த நுட்பமான வித்தியாசத்தை புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன். மற்றப்படி நான் என் சாதியில் பிறந்ததற்கு பெருமைப்படுகிறேன் என்று கூறியதின் பிண்ணனியை "என் வெளிப்படையான எண்ணங்கள்" என்றப் பதிவில் பார்த்து கொள்ளுங்கள்.

அது சரி, ஒரு விஷயம் எனக்கு ஆச்சரியமாயிருக்கிறது. சோவை புகழ்ந்து எழுதியிருந்தேனே? யாருமே அதற்கு எதிர்வினை கூறவில்லையே? சோ ஒரு சிறந்த பத்திரிகையாளர் என்று நான் கூறியதிலும் மாற்றம் இல்லை என்று இந்த சமயத்தில் சந்தடி சாக்கில் கூறிவிடுகிறேன்!"

அன்புடன்,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)

Muse (# 01429798200730556938) said...

டோண்டு ஐயா, நான் இணைய வலைக்கும், ப்ளாக்குகளுக்கும் அடிமை ஆவது போல் தோன்றியதால் பல நாட்களாக இந்தப் பக்கமே வரவில்லை. இதற்கிடையில் உங்கள் பெயரைக் கெடுக்க நடந்த அற்ப முயற்சி தாமதமாகவே கவனத்துக்கு வந்தது. இனி வலைப் பதிவுகளில் கருத்துப் பதிவே செய்யக் கூடாது என்ற சுய உறுதியையும் மீறி இதைப் பதிவு செய்கிறேன்.

வருத்தமாக இருந்தாலும் இது நான் எதிர்பார்த்ததுதான். உங்கள் பெயரைக் கெடுக்க ஒரு முயற்சி நடக்குமானால் அதன் பொருள், கெடுப்பதற்கு உங்களிடம் ஒரு நல்ல பெயர் இருக்கிறது. அந்த நல்ல பெயரின் தரம் நேர்மையான முறையில் தோற்கடிக்க முடியாத அளவு பெரியதாக இருப்பதால், இது போன்ற கீழ்த்தரமான முயற்சிகள்.

இச்செயலின் நோக்கம் வருத்தம் தந்தாலும், அதற்கான காரணம் உங்கள் பக்கம் தர்மம் இருப்பதே. தர்மத்தை நிலை நிறுத்த வலிமை தேவை. அது உங்களிடமிருப்பதால், இது போன்ற நேர்மையற்றவர்களுக்குத்தான் மன உளைச்சல்.

ஹாஸ்யமான சம்ஸ்க்ருதப் பழமொழி ஒன்று ஞாபகம் வருகிறது -- "முதிர்ந்த கிழவியைவிட கற்புக்கரசி யாருமில்லை." உங்கள் கற்புக்கு என்றுமே ஆபத்துதான் :-) !!!

dondu(#11168674346665545885) said...

மிக்க நன்றி ம்யூஸ் அவர்களே. தர்மம் என் பக்கத்தில்தான் இருக்கிறது என்பதால்தான் என்னால் தாக்கு பிடிக்க முடிந்தது. அதே நேரத்தில் நெருக்கடி மிக்க இந்த நேரத்தில் உங்களைப் போன்ற நண்பர்கள் தங்கள் ஆதரவைத் தெரிப்பது எனக்கு மேலும் பலத்தை கொடுக்கிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)

dondu(#11168674346665545885) said...

These two comments were posted by me in Christopher's blog at http://christopher_john.blogspot.com/2005/05/55.html#comments
First comment:
பாரா அவர்களே, குமுதம் ரிப்போர்டரில் வரும் இத்தொடரை நான் மிகுந்த கவனத்துடன் படித்து வருகிறேன். இப்போது நீங்கள் எழுதிய ஐ.நா. ஓட்டளிப்பு பேட்டர்ன் பற்றி ஒரு வார்த்தை. பிரிட்டன் எதற்கு ஓட்டு போட்டது? நான் கூறுகிறேன். அது நடுநிலைமை வகித்தது. அதைப் பற்றி ஒரு வார்த்தை கூட நீங்கள் கூறவில்லையே? மேற்கு தேசங்கள் ஏன் இஸ்ரேலை ஆதரித்தன என்பதை ஆராய்ந்த நீங்கள் சோவியத் யூனியன் ஆதரித்ததை ஒரு வார்த்தையுடன் நிறுத்திக் கொண்டீர்கள்.
சோவியத் யூனியனும் அதன் சிஷ்ய கோடிகளும் பிரிவினைக்காக வோட்டு போட்டிருக்காவிட்டால் இஸ்ரேல் வந்திருக்காது. ஆகவே அந்த தேசங்களுக்கு என் நன்றி எப்போதும் உரித்தானது.

நீங்கள் எழுதியிருக்கிறீர்கள்:
"“யூதர்களை நம்பாதீர்கள், அவர்கள் சூழ்ச்சிக்காரர்கள்; சதிகாரர்கள்! தங்களுக்கென்று ஒரு தேசம் உருவாகும் வரைதான் அவர்கள் அமைதியுடன் இருப்பார்கள். அப்படியொரு தேசம் உதித்துவிட்டால், மறுகணமே அரேபியர்களின் மீது படையெடுத்து, எங்களின் நிலப்பரப்பை அபகரித்துக்கொண்டுவிடுவார்கள்!’’ என்று அன்றைக்குக் கத்திக் கதறித்தீர்த்தார்கள் பாலஸ்தீனிய அரேபிய முஸ்லிம்கள்.

இது வெறும் கற்பனை என்றும் பயத்தில் உளறுகிறார்கள் என்றும் யூதர்கள் சொன்னார்கள்.

ஆனால் அதுதானே நடந்தது? சந்தேகமே இல்லாமல் யூதர்கள் நம்பிக்கை துரோகம் செய்தார்கள். தலைமையின்றித் தத்தளித்துக்கொண்டிருந்த அரேபியர்களை ஓட ஓட விரட்டி அவர்களின் தேசத்தையும் அபகரித்துக்கொண்டார்கள். எந்த அரபு தேசங்கள் ஒன்றுதிரண்டு பாலஸ்தீனுக்கு ஆதரவாகப் போரில் நிற்கும் என்று சொல்லப்பட்டதோ, அதே முஸ்லிம் தேசங்களை சூழ்ச்சியில் வளைத்துப் போட்டு, சொந்த சகோதர தேசமான பாலஸ்தீனுக்கு எதிராகவே அவர்களை அணி திரட்டினார்கள். நாய்க்கு எலும்பு வீசுவதுபோல், அபகரித்த நிலத்தில் ஆளாளுக்குக் கொஞ்சம் பங்குபோட்டுக் கொடுத்து, அந்த சமயத்துக்குத் திருப்திப்படுத்தினார்கள். அப்புறம் அவர்கள் மீதும் படையெடுத்து, கொடுத்த இடங்களைத் திரும்ப அபகரித்தார்கள் யூதர்கள்."

உண்மை உரைப்பதில் சிக்கனம் செய்திருக்கீறீர்கள் நீங்கள். ஹிட்லர் செய்யாமல் விட்டதை தாங்கள் செய்யப்போவதாகவும், ஆகவே பாலஸ்தீன அரேபியர்கள் வழியில் நிற்காமல் இடத்தை காலி செய்தால் தாங்கள் யூதர்களை அப்படியே கடலில் தள்ளி விடுவோமாக்கும் என்று வீரம் பேசின, இஸ்ரேலை சுற்றியிருந்த நாடுகள். பாலஸ்தீனியரின் கெட்ட காலம் அவர்கள் அவ்வாறே செய்து அகதிகளாயினர். இஸ்ரேலுக்கு மூச்சு விடக்கூட நேரம் இல்லை. சுற்றியுள்ள பகைவர்களை ஹாகன்னா முறியடித்த விவரங்கள் இப்போதும் பல ராணுவ வகுப்புகளில் பாடமாக உள்ளன. இதில் இஸ்ரேலின் நம்பிக்கை துரோகம் எங்கிருந்து வந்தது பாரா அவர்க்களே? ஒரு வேளை இப்படியிருக்கலாமோ, அதாவது இஸ்ரேல் அழியும் என்று அதன் எதிரிகள் கொண்டிருந்த நம்பிக்கையில் இஸ்ரவேலர்கள் மண்ணைப் போட்டார்கள் என்று கூற நினைத்தீர்களோ? மற்றவர்கள் யூதர்கள் சாக வேண்டும் விரும்புகிறார்கள். இஸ்ரேல் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. அதுதான் பிரச்சினையே.

நீங்கள் என்னிடம் இஸ்ரேலை பற்றி நான் எழுதிய பதிவுகளை அனுப்பச் சொல்லி கேட்டிருந்தீர்கள். அவற்றை நீங்கள் ஒரு அக்னாலட்ஜ்மென்ட் கொடுத்து தாராளமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று இங்கு நான் எல்லோருக்கும் தெரிய கூறிக் கொள்கிறேன். எழுதுவதில் இதுவரை நடுநிலையில் இருந்த நீங்கள் சிலவற்றைக் கூறாததன் மூலம் அதிலிருந்து பிறழ்கிறீர்கள் என்று எனக்குத் தோன்றுகிறது. ஆகவே இதை நான் இங்கு இப்போது எழுதுகிறேன். மற்றப்படி உங்கள் தொடர் அற்புதம். யூதர்கள் 2000 ஆண்டுகளாக பட்ட துயரத்தை நானும் அவற்றைப் பற்றி படிக்கும்போது அனுபவித்தேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)
# posted by Dondu : 11:16 AM

Second comment:
"இதில் கவனிக்க வேண்டிய விஷயம், துரத்தப்பட்ட அரேபியர்கள் இன்றளவிற்கும் உள்ளே வரவிடாமல் தடுக்கப்பட்டிருப்பது. தம் நிலத்திலிருந்து துரத்தப்பட்ட மக்கள் மீண்டும் அங்கே வருவதை விட குறைந்தபட்ச நியாயம் வேறு என்ன இருக்க முடியும்?"
ஒரு நாட்டையும் அதன் மக்களையும் அழிப்பதே தங்கள் நோக்கமென்று கூறும் மக்கள் கும்பலை உள்ளே விடுவதற்கு இஸ்ரவேலர்கள் கேனைகளா? ஹிட்லருடன் சேர்ந்து இவர்களை அழிக்க ஒப்பந்தம் செய்த பாலஸ்தீனியர்களை எப்படி இஸ்ரவேலர்கள் நம்ப முடியும்? வாழ்வா சாவா என்னும் போராட்டம் வரும்போது நாட்டைக் காப்பதுதான் எவருக்குமே நியாயமாக இருக்கும். தங்களில் 60 லட்சம் பேரைக் கொன்றவர்களுடன் கைகோத்துக் கொண்டவர்களை உள்ளே விட வேண்டும் என்று கேட்பது அபத்தம். பாலஸ்தீனர்களுக்கு கிடைத்த மேற்குக்கரை மற்றும் காஸா பகுதிகள் முறையே ஜோர்டான் மற்றும் எகிப்தினால் கபளீகரம் செய்யப்பட்டு பாலஸ்தீனியர் தங்கள் நாட்டிலேயே அகதிகள் முகாமில் வசிக்க நேர்ந்ததுதான் அவர்களுக்கு அரபு நாடுகள் செய்த உபகாரம்.

"அதற்கு அப்பாவி பாலஸ்தீன் அரேபியர்கள்தான் கிடைத்தார்களா? யூதகுலத்தை வேரறுக்க முடிவு செய்த ஜெர்மனியை ஏன் விட்டுவிட்டார்கள்?"
ஹிட்லருடன் சேர்ந்து யூதர்களைக் கொல்வதில் ஆதரவு தெரிவித்தவர்கள் உங்களுக்கு அப்பாவிகளாகப் படுகிறார்களா? மன்னிக்கவும் எனக்கு அம்மாதிரிப்படவில்லை.

அது சரி பாரா அவர்களே, ப்ரிட்டன் வோட்டளித்த முறையை விளக்கவேயில்லையே? சோவியத் யூனியன் மற்றும் அதன் ஜால்ராக்கள் ஏன் அவ்வாறு நடந்து கொண்டனர் என்பதை விளக்க முடியுமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)

dondu(#11168674346665545885) said...

This comment was posted by me in Badri's blog vide http://thoughtsintamil.blogspot.com/2005/05/blog-post_31.html#comments
"ராஜாஜியை இன்று அன்போடு நினைவுகூர்பவர்கள் தமிழகத்தில் உள்ள வயதான பார்ப்பனர்கள் மட்டுமே என்று தோன்றுகிறது."
அப்படி ஒரேயடியாகக் கூறிவிட முடியாது. அவரை ஆதரிப்பவர் எல்லா ஜாதியிலும் உள்ளனர். இந்த ஸ்டேட்மென்ட் அவரை எதிர்ப்பவருக்கும் பொருந்தும். ராஜாஜி விஷயத்தில் கருத்துகள் தீவிரமாகவே இருந்திருக்கின்றன. ஒன்று ஒரேயடியாக ஆதரவு, மற்றொன்று ஒரேயடியாக எதிர்ப்பு. நான் எந்தப் பிரிவில் வருகிறேன் என்பது இங்கு எல்லோருக்கும் தெரிந்திருக்கும். தெரியாதவர்கள் "ராஜாஜி என்னும் மாமனிதர்" என்றத் தலைப்பில் நான் எழுதியப் பதிவுகளைப் பார்த்துக் கொள்ளலாம். அதில் அவருடையக் கல்வித் திட்டத்தைப் பற்றியும் எழுதியுள்ளேன். பின்னூட்டங்களிலேயே தங்கள் எதிர்ப்பு எண்ணம் என் விளக்கத்தால் மாறியது என்று சிலர் எழுதியிருந்தனர். பலர் எனக்கு தனியாக அனுப்பிய மின்னஞ்சலில் கூறியிருந்தனர்.

ராஜாஜி இறக்கும் போது எனக்கு வயது 26 இப்போது 59. ஆக 33 வருடங்கள் ஆகிவிட்டன. அவருடன் நேரடித் தொடர்மிலிருந்தவர்கள் என்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.

ஆனால் ஒன்று. அவர் தன் கட்சி மூலம் கூறிய பொருளாதாரக் கருத்துகள் இன்று இந்தியவில் கோலோச்சி வருகின்றன. அம்முறையில் ராஜாஜி அவர்கள் இன்னும் உயிருடனேயே இருக்கிறார் என்று பெருமிதத்துடன் நான் கூறுவேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)

தகடூர் கோபி(Gopi) said...

அன்புள்ள டோண்டு ஐயா,

வணக்கம்.

//
அன்புடன்,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)//

அனானிமஸ் பின்னூட்டங்களை அனுமதிக்கும் வலைப்பூக்களில் நீங்கள் பயன்படுத்தும் யுக்தி பலனளிக்காது.

உதாரணமாக, இதைச் சோதிக்க http://higopi.blogspot.com/2005/06/blog-post_03.html க்கு நான் இட்ட "உங்கள்" பின்னூட்டத்தைப் பார்கக..

தொழில்நுட்பரீதியாய் இத்தகைய போலிகளை முறியடிக்க முடியும். எப்படி என்று (நிரல் எழுதிக்கொண்டிருக்கிறேன்) விரைவில் சொல்கிறேன்.

ப்ரியமுடன்,

கோபி

dondu(#11168674346665545885) said...

These are the 2 comments posted by me in Gopi's blog at http://higopi.blogspot.com/2005/06/blog-post_03.html
Comment 1:
இப்போது பாருங்கள். என் ப்ளாக்கர் பெயருக்கு மேல் எலிக்குட்டியை வைத்துப் பார்த்தால் என்ன தெரிகின்றது என்று.
நீங்கள் சொல்வது போல அனானி பின்னூட்டங்கள் அனுமதிக்கும் இடத்தில் நீங்கள் கூறுவதைச் செய்யலாம். ஆனால் என் பெயரில் உள்ள உங்கள் பின்னூட்டத்தில் என் ப்ளாக்கர் எண் அம்முறையில் தெரியாது அல்லவா? மேலும், நான் எங்கு பின்னூட்டமிட்டாலும் அதன் நகல் என்னுடைய இதற்காகவே உருவாக்கப்பட்டப் பதிவில் மறுபடியும் இடப்படும்.
உங்கள் நிரலை எதிர்ப்பார்க்கிறேன். அது சரி, எப்போது உங்கள் கல்யாணம்? அழைப்பு எனக்கு உண்டுதானே?

Comment 2
Yes, you are right. It is not seen. The only remedy is then my repeating the comment in my blog posting

அன்புடன்,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)

dondu(#11168674346665545885) said...

This is the comment posted by me in the blog "thoondil" at http://thoondil.blogspot.com/2005/06/blog-post_111767644716066110.html
"இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் வரலாற்றை எழுதுபவர்கள் ஒரு விஷயத்தை இருட்டடிப்புச் செய்துவிடுகின்றனர். 1963 - 65 போராட்டத்தின்போது ராஜாஜி இந்தியை எதிர்த்து தி.மு.க.வுடன் இணைந்து போராடியதையும் அப்போது தி.மு.க.வைக் கடுமையாக எதிர்த்துக்கொண்டிருந்த பெரியார் மொழிப் போருக்கு எதிராக நின்றதையும் குறித்து அவர்கள் பேசுவதில்லை. இதை ஆராய்ந்தால்தான் பெரியாரின் தமிழ் பற்றிய அணுகுமுறை பின்நவீனத்துவமா அல்லது சந்தர்ப்பவாதமா என்பது வெளிப்படும்."
இதை நான் என்னுடையப் பல பின்னூட்டங்களில் கூறியபோது பெரியார் ஆதரவாளர்கள் யாரும் ஒத்துக் கொள்ளவில்லை. நானே அக்காலக் கட்டத்தில் விடுதலை பத்திரிகையில் படித்தேன் என்று கூறியதும்தான் சங்கடமான மௌனம் காத்தனர்.

"இந்த உண்மைகளைக் கருத்தில் கொண்டு பார்த்தால் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் நீதிக் கட்சிக்காரர்கள் குதித்தது வெறுமனே அரசியல் லாபத்துக்காகத்தான் என்பது புரியவரும்."
தகவலுக்கு நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)

dondu(#11168674346665545885) said...

This is the comment posted by me in eNNa alaikaL at http://amalasingh.blogspot.com/2005/06/i.html#comments
"நகர்ப்புறங்களிலும் நூற்றுக்கு 90 பேர் தன் சாதியில் தான் திருமணம் செய்கிறார்கள். மிச்சம் 10 பேர், காதல் திருமணம் செய்கிறேன் என்று சொல்லி, சமுதாய மதிப்பு இல்லாமல், அங்கீகாரம் இன்றி வருந்தி ஏண்டா இப்படி ஒரு முடிவெடுத்தோம் என்கிற மாதிரி கலங்கிப்போய் வாழ்கின்றனர்."

பிறகு எந்த தைரியத்தில் கலப்புத் திருமணங்களை சிபாரிசு செய்கிறீர்கள்? முதலில் உங்களை ஒரு கேள்வி. நீங்கள் கலப்புத் திருமணம் செய்து கொண்டவரா அல்லது செயப் போகிறவரா? அப்படியே வீம்புக்காக செய்து கொண்டாலும் உங்கள் அக்கா தங்கைகளை நினைத்துப் பார்த்தீர்களா?

ஒரே சாதியில் திருமணம் செய்வதன் நோக்கங்களில் முக்கியமானது சாப்பாட்டு பிரச்சினையே. ஒவ்வொரு சாதியினருக்கும் பிரத்தியேக உணவுப் பழக்கங்கள் உண்டு. முதல் 30 நாளில் மோகம் தணிந்தவுடன் இதுதான் பெரிதாகப்படும். மேலும் சுயசாதியில் திருமணம் செய்து கொள்வதால் பாதுகாப்பு உண்டு. இல்லாவிட்டால் இரண்டு பக்கத்திலும் நிராகரிக்கப்பட்டு திருசங்கு சொர்க்கம்தான் அனுபவிக்க நேரிடும்.

"அப்படி எல்லோரும் செய்யும் பட்சத்தில், மாபெரும் கலாச்சார மாற்றம் நம்
மத்தியில் ஏற்படும். அப்படி ஒரு நாட்டில் யாருக்கும் இட ஒதுக்கீடு தேவை இருக்காது. சாதிச்சண்டை இருக்காது. வரதட்சிணை இருக்காது. குழப்பங்கள் இருக்காது."
அழகான கற்பனை. வரதட்சிணை கண்டிப்பாக இருக்கும். மேலும் திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர். அப்படியெல்லாம் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எழுதுவது நல்லதல்ல. குழு அமைப்பதென்பது மனித இனத்தின் அடிப்படை குணம். நம் நாட்டில் அது சாதி ரூபத்தில் உள்ளது அவ்வளவுதான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)"

dondu(#11168674346665545885) said...

This cvomment was placed by me Kanchi films blog at http://kanchifilms.blogspot.com/2005/06/17.html#comments
மிக்க நன்றி காஞ்சி பிலிம்ஸ் அவர்களே. என்னுடைய விருப்பத்தை மதித்து என்னையும் இப்போட்டியில் சேர்த்ததற்கு நன்றி. என்னைத் தவிர்த்து இன்னொருவர் யார் என்று கூறினால்தான் நான் கூறுவதை கருத்தில் எடுக்க வேண்டும் என்பதை நான் அறிவேன்.
லல்லு பிரஸாத் யாதவ் அவர்கள்? ப்ளஸ் பாராவின் கண்ணாடி?
அன்புடன்,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)

dondu(#11168674346665545885) said...

This comment was posted by me in Kanchi's blog athttp://kanchifilms.blogspot.com/2005/06/17.html#comments
அப்படியானால் முரளி மனோஹர் ஜோஷி?
அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

This comment was posted by me in Blog poottu thaakku http://halwacity.blogspot.com/2005/06/blog-post_08.html
இது என்ன சம்பந்தமில்லாத பின்னூட்டம்? நாகராஜன் செய்தது பெருமைக்குரியதுதான். அதற்காக? வேறு வேலை இல்லையா இவர்களுக்கு? சம்பந்தப்பட்ட நாகராஜனே விரும்ப மாட்டார் இதை என நினைக்கிறேன்.
சங்கிலித் தொடர் கடிதங்கள் ரேஞ்சுக்கு இது என்ன அசட்டுத்தனம்? அந்த 15 பேர்கள் இவ்வாறு செய்து நேரத்தை வீணாக்குவதை விட நாகராஜனை பின்பற்றி முன்னுன்க்கு வரும் வழியைப் பார்ப்பது நலம்.

அன்புட,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)

dondu(#11168674346665545885) said...

This comment was posted by me in Blog poottu thaakku http://halwacity.blogspot.com/2005/06/blog-post_08.html
Don't be glad too early. They have already started. Please see http://alaiyosai.blogspot.com/2005/05/blog-post_13.html.
This is but one example. Mr. Nagarajan seems to have friends, who are bent upon embarrassing him. With friends like them he needs no enemies.
Regards,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)

dondu(#11168674346665545885) said...

This was the comment posted by me in John Christopher's blog reproducing writer paaraa's serial "wilamellaam raththam" in Kumudham rippoortar". URL http://christopher_john.blogspot.com/2005/05/55.html#comments

பாரா அவர்களே,

ஐ.நா. பொதுச்சபை வாக்கெடுப்பில் பிரிட்டன் எடுத்த நிலைக்கானக் காரணம், அச்சமயத்தில் இஸ்ரேலை ஆதரித்ததற்கான சோவியத் யூனியனின் திட்டம் ஆகியவற்றைப் பற்றி வரும் பதிவுகளில் எழுத முடியாமல் காலம் கடந்து விட்டது என்றே நானும் நினைக்கிறேன். இருப்பினும் இங்கு பின்னூட்டமாகவாவது அவற்றைப் பற்றி உங்கள் கருத்தைப் பதிவு செய்ய வேண்டும் என்று உங்களை கேட்டு கொள்கிறேன்.

1938-ல் இதைப் பற்றி எழுதிய மஹாத்மா காந்தி அவர்கள் 1945 - 47 ஏதாவது கூறினாரா?

நான் இஸ்ரேலிய ஆதரவாளன்தான். அதில் எந்த மறுப்பும் இல்லை. இருப்பினும் இது வரை நீங்கள் எழுதியதைப் படித்தவரை எனக்கு அவர்கள் ஆதரவு நிலையிலிருன்து விலக ஒரு காரணமும் தட்டுப்படவில்லை என்று உண்மையாகவே கூறுகிறேன்.

நன்றாகவே உழைத்து எழுதுகிறீர்கள். பாராட்டுகள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)

dondu(#11168674346665545885) said...

This comment was posted in blog Thamiz thoNdan at http://thamizhthondan.blogspot.com/2005/06/blog-post_10.html#comments
தியாகபூமி திரைப்படமாக வந்துள்ளது. சாவித்ரியாக எஸ்.டி. சுப்புலக்ஷ்மி, சம்பு சாஸ்திரியாக பாபனாசம் சிவன், குழந்தை சாருவாக பேபி சரோஜா. டைரக்டர் கே. சுப்பிரமணியம். (பத்மா சுப்பிரமணியத்தின் தந்தை).

திரைக்கதை கல்கி. படப்பிடிப்பு ஸ்டில்களுடன் தொடர்கதை விகடனில் வாரா வாரம் வெளியானது. ஒவ்வொரு ஊரிலும் மக்கள் ரயில்வே ஸ்டேஷனுக்கே வந்து விகடன் இதழ் கட்டுகள் இறங்கும்போதே வந்து நின்று வாங்கிச் சென்றனர். இம்மாதிரி வரவேற்பை இக்கதைக்கு அடுத்து தில்லானா மோகனாம்பாள் கதைக்கே கிடைத்தது. அதுவும் விகடனில்தான் தொடர்கதையாக வந்தது.
கல்கியின் இப்படத்துக்கு அக்காலத்தில் மக்கள் பயங்கர ஆதரவு கொடுத்தனர். விமரிசகர்களோ கிழி கிழியெனேறு கிழித்தனர். கல்கி அதற்கு மேல் அவர்களைக் கிழித்தார். பொதுமக்கள் கடைசியில் விமரிசகர்கள் முகத்தில் கரி பூசினர். பலர் அக்காலத்தில் தங்கள் பெண்குழந்தகளுக்கு சாவித்ரி என்றும் பிள்ளை குழந்தைகளுக்கு ஸ்ரீதர் என்றும் பெயர் வைத்தனர். தியாகபூமி வளையல் என்றெல்லாம் பரபரப்பாக விற்பனைகள் நடந்தன.

தியாகபூமி கதை கன்னடத்தில் ஹேமாவதி என்ற பெயரில் எடுக்கப்பட்டது. உதிரிப்பூக்கள் அஸ்வினி சாவித்ரி (இங்கு ஹேமாவதி) பாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். படம் ஊற்றிக் கொண்டதால் ராசியில்லாத நடிகை என்றும் பட்டம் வாங்கினார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)

dondu(#11168674346665545885) said...

This comment was posted by me in ThamizthoNdan blog at http://thamizhthondan.blogspot.com/2005/06/blog-post_10.html#comments
ப்ளாக்கர் எண்ணைப் பற்றி என் எச்சரிக்கை குறிப்பு உங்களுக்கு புரியவில்லை என்பதைக் காண்கிறேன். (I refer to your email to me)

எலிக்குட்டி என்றால் மௌஸ். நான் இட்டப்பின்னூட்டத்தில் என் பெயர் ஹைப்பர்லிங்காக வரும் இடத்தில் அதன் மேல் வைத்தால் (மௌஸ் ஓவர்), கீழே டாஸ்க் பாரில் என்னுடைய ப்ளாக்கர் எண் தெரியும். என் பின்னூட்டத்தில் நான் குறிப்பிட்ட எண் அதில் தெரியும், தெரிய வேண்டும். அது இல்லை என்றால் வேறு எவரோ என் பெயரில் உங்களுக்கு பின்னூட்டமிட்டதாக அர்த்தம்.
நம் வலைப்பூக்களில் ஒரு சகவலைப்பதிவர் இதை எனக்கு செய்து தமிழ் மணமே அல்லோலப்பட்டதே. நீங்கள் புது வலைப்பதிவர் என்று நினைக்கிறேன்.

இது பற்றி நான் தனிப்பதிவே போட்டிருக்கிறேன்.பார்க்க http://dondu.blogspot.com/2005/05/blog-post_25.html

நான் எங்கு பின்னூட்டமிட்டாலும் அது என்னுடைய இப்பதிவிலும் பின்னூட்டமாக வரும். அந்த சகவலைப்பதிவர் யார் என்பது எனக்குத் தெரியும். அவர் இன்னும் நம் தமிழ்மணத்தில்தான் செயல்படுகிறார். ஆகவே என் இந்த முன்ஜாக்கிரதை நடவடிக்கை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)

P.S. Your settings allow anonymous and other comments. I sincerely advise you to disable them and allow just blogger comment. Even this is not entirely safe as was seen in my case. But atleast here the mischiefmaker may have to take the trouble of going in for a registration and his new registration number can be seen with the mouseover technique. I am giving here a copy of my reply to you for the purpose of giving wide publicity and warning regarding the nefarious activities of some mischief makers. You seem to be innocent but please wake up and be vigilant.
Regards,
Dondu Raghavan

dondu(#11168674346665545885) said...

This comment was posted by me in Kuzali's blog at http://kuzhali.blogspot.com/2005/06/blog-post_111859040058322846.html#comments
"பாலா: இத்தகைய சிந்தனை அதாவது, பணக்காரன் தன்னிடம் வேலை பார்ப்பவர் ஒரு படி கீழே இருக்க வேண்டும் என்ற எண்ணம் சனாதன மற்றும் ஆதிக்க உணர்வு இல்லையா?. "
இம்மாதிரி ஆதிக்க உணர்வே முன்னேற்றத்துக்கு முதல் படி என்றும் ஒரு கருத்து உண்டு. விளக்குகிறேன்.
எல்லோருமே போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்று இருந்து விட்டால் நாட்டில் என்ன முன்னேற்றம் ஏற்படும் என்று நினைக்கிறீர்கள்? ஒவ்வொருவரும் தாங்கள் மற்றவரை விட அதிக அளவில் முன்னேற வேண்டும் என்ற போட்டி மனப்பான்மை மனித இயல்பு. அதை அழிக்க நினைப்பது வீணாசை. இதில் உயர்சாதி தாழ் சாதி என்றெல்லாம் கிடையாது. கனடாவில் முதலாளியும் தொழிலாளியும் ஒரே இடத்தில் உணவு அருந்துவது பெரிதாகக் கூறப்பட்டது. அதே தொழிலாளி முதலாளி உறுப்பினராக இருக்கும் ஒரு எலைட் க்ளப்பில் உறுப்பினராக வர முடியாது. அங்கத்தினர் ஆவதற்கான விண்ணப்பத்தை ப்ளாக் பால் செய்து விடுவார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?
ஏற்றத் தாழ்வுகளை ஒழிக்கப் புறப்பட்ட சித்தாந்தங்கள் என்ன ஆயின? ரஷ்யாவில் கம்யூனிஸ்ட் கட்சி பொலிட்ப்யுரோ உறுப்பினருக்கு கிடைத்த சலுகை பாமர ரஷ்யனுக்கு கிடைத்ததா? எந்த இனமானாலும் எந்த நிறத்தவராயினும், இங்கு எந்த சாதியினராயினும் ஏற்றத் தாழ்வு என்பது பொது விதியாகும். அது சரியா தவறா என்றெல்லாம் வாதம் செய்வது வீண். எப்படிப்பட்ட நிலையிலும் இது தவிர்க்க முடியாதது என்பதுதான் உண்மை.
மறுபடியும் ரஷ்யாவையே எடுத்து கொள்வோம். 1992-ல் எல்லோரும் ஏறத்தாழ ஒரே நிதி நிலைமையிலேயே இருந்தனர். இப்போது 13 ஆண்டுகளுக்குள் நிலைமை எப்படி என்று நினைக்கிறீர்கள்? இனிஷியேடிவ் இருப்பவர்கள் எப்படியாவது முன்னேறுவர் என்பதுதானே உண்மை? சைனாவிலும் அதே நிலைதானே?
எங்கு மதிப்பு கிடைக்கிறதோ அங்கு இருப்பதும் அவமரியாதை கிடைக்கும் இடத்தை காலி செய்வதும் மனித சரித்திரத்தில் நிகழ்ந்த வண்ணம் உள்ளன.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)

dondu(#11168674346665545885) said...

This comment was posted by me in Kuzali's blog at http://kuzhali.blogspot.com/2005/06/blog-post_111859040058322846.html#comments
முதலில் ஜெயகாந்தனின் ஜாதி என்ன? அது உயர் சாதியாகக் கருதப்படுகிறதா, என்பதை யாரேனும் தெளிவுபடக் கூறினால் நலம்.
மற்றப்படி ஏற்றத் தாழ்வுகள் இருக்க வேண்டுமா கூடாதா என்பது வீண் விவாதங்களைத்தான் வளர்க்கும். நான் ஏற்றத் தாழ்வுகள் என்று குறிப்பிடுவது எல்லா வகையிலும்தான். சாதி அவற்றில் ஒன்று என்பதே உண்மை. மற்றப்படி நான் கூற நினைப்பது என்னவென்றால் ஏற்றத் தாழ்வுகளைத் தவிர்க்க இயலாது. வாழ்க்கையிலும் சரி இயற்கையிலும் சரி மிக வலிமையானவர்களே மிஞ்சுகின்றனர் என்பது விஞ்ஞான பூர்வமாக கண்டறிந்தது. அவை இருக்கின்றன. அவை இருக்கவேண்டுமா கூடாதா என்று யாரையும் கேட்டு வருவதில்லை.
நான் கூறியது போல சாதி என்பது ஒரு க்ரைட்டீரியன்தான். அதைத் தவிர வேறு க்ரைட்டீரியன்களும் உண்டு. ஏன் ஒன்றையே பிடித்துக்கொண்டு தொங்க வேண்டும்?
மறுபடி ஜெயகாந்தன் விஷயத்துக்கு வருவோம். அவர் தன்னை உயர் சாதியாக நினைத்து கொண்டிருக்கிறாரா? தன் சாதியைப் பற்றி எங்காவது உயர்வாகக் கூறியிருக்கிறாரா? இதையெல்லாம் ஆராய்வதும் நலமாயிருக்கும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

This comment was posted by me in Gopi's blog at http://higopi.blogspot.com/2005/06/blog-post_13.html
This is just the effect of VIBGYOR. I have seen personally in IDPL a labelling machine, which had problem in temperature control. Blue labels came as either as Indigo or green or even yellow depending on the temperature fluctuations.
Something similar seems to be at work in the optical illusion presented by our Gopi.
Regards,
Dondu Raghavan
Blogger No. 4800161

dondu(#11168674346665545885) said...

This comment was posted by me in Kuzali's blog at http://kuzhali.blogspot.com/2005/06/blog-post_111859040058322846.html#comments
"பொருளாதார ஏற்றத்தாழ்வும் பிறப்பால் வேறுபடுத்திப்பார்க்கும் சாதி பேத ஏற்றத்தாழ்வும் வேறு வேறு தளங்களில் இருக்கும் பிரச்சினைகள்...
இரண்டும் ஒரு பிரச்சினையில் இரு பரிமாணங்கள் அல்ல..."
மன்னிக்கவும் உங்கள் கருத்திலிருந்து மாறுபடுகிறேன். ஏனெனில் பணக்காரன் மகன் பணக்காரனாகத்தான் பார்க்கப்படுகிறான், தலைவன் மகன் சீக்கிரன் தலைவன் மற்றும் மந்திரி ஆகிறான். அவ்வாறு தலைவரானவர்கள் மற்ற தொண்டர்களுக்கு செய்யும் மூளைச்சலவை "எல்லோரும் பல்லக்கில் அமர ஆசைப்பட்டால் தூக்குவது யார் என்ற கேள்விதான். நேரு குடும்பத்தில் சம்பந்தம் இல்லாதிருந்தால் ராகுல் காந்தி மாவட்டத் தலைவராகக் கூட வந்திருக்க முடியாது. பாலா கூறியது போல இது ஒரு புதுவித வர்ண வேறுபாடு, சலுகை அனுபவிப்பவர்களால் ஆதரிக்கப் படுவது.

"அவர் (ஜயகாந்தன்) உயர் சாதியோ தாழ்ந்த சாதியோ அவர் சாதியை அவர் புகழ்ந்தாரோ இகழ்ந்தாரோ வர்ணபேதம் இருந்தால்தான் வாழ்க்கை சுவாரசியமாக இருக்கும் என்ற அவரின் கருத்து ஏற்றுக்கொள்ளக்கூடியதா??"
அது அவர் கருத்து ஐயா. அவர் என்ன கருத்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று கூற நாம் யார்? அவரவர் கருத்து அவரவருக்கு என்பதுதானே உண்மை? மேலும் உங்கள் முதல் அனுமானத்தின்படி அவரை உயர்சாதியாகத்தான் கருதியிருந்தீர்கள். ஆதாரம் நீங்கள் கூறியதே:
"உயர் சாதி என அழைக்கப்படும் சாதியில் பிறந்து அந்த சாதியில் பிறந்ததற்காக
சமூகத்தில் கொடுக்கப்படும் அத்தனை மரியாதைகளையும் சலுகைகளையும் அனுபவித்துவிட்டு
வர்ணவேறுபாடு இருந்தால் தான் வாழ்க்கை சுவாரசியாமாக இருக்கும் என கூறுபவர்கள்" ஆகவேதான் நான் அந்தக் கேள்வி போட்டேன். இப்போது அவர் சாதி பற்றிக் கேட்பது பொருத்தம்தானே? இப்போதாவது கேள்வியைத் தட்டிக் கழிக்காமல் பதில் கூறுங்கள் என கேட்டு கொள்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)

dondu(#11168674346665545885) said...

This comment was posted by me in Mookkan's blog vide http://mynose.blogspot.com/2005/06/blog-post_16.html#comments
என் சித்தப்பா பெண்கள் அனைவருக்கும் பிரசவம் ஈ.வி. கல்யாணி ஆஸ்பத்திரியில்தான் நடந்தது. அவர்கள் எல்லோருக்கும் நளினியின் அம்மா பத்மாவை நன்றாகத் தெரியும். அவர் ராஜீவ் கொலையில் சம்பந்தப்பட்டதாகத் தெரிந்த போது என் தங்கைகள் எல்லோரும் அதிர்ச்சி அடைந்தனர்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)

dondu(#11168674346665545885) said...

This comment was posted by me in Mayuran's blog vide http://mauran.blogspot.com/2005/06/blog-post_14.html#comments
புலிகளைப் பற்றி மற்றவர்களுக்கு புரியவைக்க நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியை அவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் நடந்ததை பற்றிய நிகழ்ச்சிகளின் நியாய அநியாயங்களுடன் ஏன் துவக்கக் கூடாது?

ஒரு நாட்டின் மக்கள் ஆதரவு கிடைத்து வந்த நிலையில் அந்த நாட்டின் அதிபரை அந்த நாட்டின் மண்ணிலேயே சாய்த்து விட்டு பிறகும் ஆதரவு கோருவதை புத்திசாலித்தனத்தில் சேர்த்து கொள்ள முடியுமா? சம்பந்தப்பட்ட நாட்டின் பெரும்பான்மையினர் இதை புலிகளுடன் தாங்கள் நடத்தும் யுத்தத்தின் பகுதியாகப் பார்க்கும் நிலையில் எந்த தைரியத்தில் வைத்திய உதவி எல்லாம் கேட்கிறீர்கள்?

புலிகள் தடைப்பட்ட இயக்கமாக இருக்கும் போது அதற்கு ஆதரவாகப் பேசுவதும் குற்றமே. சில அரசியல் நிர்ப்பந்தங்களால் சிலர் இங்கு இலை மறை காய் மறையாகச் செயல்பட்டாலும் புலி ஆதரவு நிலை பெரும்பான்மையினருக்கு சாத்தியம் இல்லை என்றுதான் கூற வேண்டும்.

எவ்வளவு நாளைக்குத்தான் ராஜீவ் கொலையைப் பற்றிப் பேசப்போகிறீர்கள் என்றக் கேள்விக்கு என் பதில் ஒன்றே ஒன்றுதான். இப்போது ஒளிந்து கொண்டிருக்கும் முக்கியக் குற்றவாளி மற்றும் அவர் கூட்டாளி பிடிக்கப்பட்டு தூக்கில் போடப்படும் வரை கேஸுக்கு உயிர் உண்டு.

அன்புடன்,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)

dondu(#11168674346665545885) said...

This comment was posted by me in Nesamudan blog vide http://www.tamiloviam.com/nesamudan/page.asp?ID=130&fldrID=1
பாவம் கலைஞர். எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்றிருக்கிறார். அவர் கவலை அவருக்கு. இன்னும் மந்திரி பதவியை அடைய வேண்டி எவ்வளவு பேர் அவர் குடும்பத்தில்öஏயே இருக்கிறார்களோ?

மற்றப்படி மாயவரத்தான் அவர்களே பெயரைச் சொல்லத் தைரியம் இல்லாது குலைக்கும் நாய்களை அலட்சியம் செய்யுங்கள்.

வெங்கடேஷ் அவர்களே, உங்கள் பதிவுகளில் யார் வேண்டுமானாலும் யார் பெயரில் வேண்டுமானாலும் பின்னூட்டம் இடலாம் போலிருக்கிறதே?

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

This comment was posted in Mayuran's blog at http://mauran.blogspot.com/2005/06/blog-post_14.html#comments
"புலிகளைப் பற்றி மற்றவர்களுக்கு புரியவைக்க நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியை அவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் நடந்ததை பற்றிய நிகழ்ச்சிகளின் நியாய அநியாயங்களுடன் ஏன் துவக்கக் கூடாது?" என்று நான் கேட்டக் கேள்வியை சௌகரியமாக ஒதுக்கி விட்டீர்கள்.

ராஜீவின் கொலையை நியாயப்படுத்தும் நீங்கள் எந்த முகத்தை வைத்துக் கொண்டு இந்தியாவிடம் மற்ற உதவிகள் கேட்கிறீர்கள் என்பதுதான் என் கேள்வி. புலிகளிடம் சிறிது கூட மான ரோஷம் இருப்பதாகத் தெரியவில்லையே.

இந்தியர்கள் உங்கள் பார்வையில் நாய்களாகவே இருந்து விட்டு போகட்டும். அந்த நாய்களிடம் உதவி கேட்கும் இயக்கத்துக்கு என்ன மரியாதை இருக்கும் என்பது என் கேள்வி. நீங்கள் புலிகளின் தரப்பு வாதங்களை வைக்கும்போது இம்மாதிரி எதிர் கேள்விகளும் பிறக்கும். அதற்கு சரியான பதில் கையில் வைத்திருக்க வேண்டியது அவசியம்.

"இதையெல்லாம் இந்தியப் பெருங்குடிகளால் புரியமுடியாது.அவர்களுக்கு நமது வாழ்சூழல்போன்றுருவாகினால்தாம் புரிவார்கள்." இதை செய்ய முயற்சித்ததாலேயே புலிகளின் சங்காத்தமே வேண்டாம் என்று கூறுகிறோம். வைத்திய உதவி எல்லாம் கேட்டு ஏன் அவமானப்படுகிறீர்கள்?

அன்புடன்,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)

dondu(#11168674346665545885) said...

This comment was posted by me in Mayuran's blog vide http://mauran.blogspot.com/2005/06/blog-post_14.html#comments
இந்தி இந்தியா தமிழ் இந்தியா என்றெல்லாம் ஃபிலிம் காட்டி இந்தியரகளைப் பிரிக்க முயற்சி செய்யும் வாதங்கள் எங்களிடம் எடுபடாது. நாங்கள் இந்தியர்கள், அவ்வளவே. புலிகளை தமிழ் ஈழத்தின் ஒரே பிரதிநிதியாகக் கருத வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.

"மருத்துவ உதவிங்கிறது ஒரு அரசியல் நகர்வுங்கிறது கூட தெரியாமல் இருக்கீங்களே டோண்டு மாமா"
மஸ்ட் டூ மருமகனே நலமா? உதவி கேட்டு அது கிடைக்காமல் போக இப்போது ராஜதந்திர நிகழ்வு என்றெல்லாம் கூறுவது கொஞ்சம் ஓவராகத் தெரியவில்லை? மற்றவர் பிள்ளைகளுக்கு பெல்ட் பாம் கட்டி கரும்புலிகளாக மாற்றும் தலைவன் தன் பிள்ளைகளை மட்டும் பொத்தி வளர்ப்பான், அதையும் அவன் ஆதரவாளர்கள் நியாயப்படுத்துவார்கள். இப்படிப்பட்ட இயக்கத்தின் மீது எனக்கு மரியாதை ஏதும் இல்லை. தவறாக என்னை எண்ணாதே மருமகனே.

"இந்தி இந்தியாவுக்கும்,அதன் ஆளும் வர்க்கத்துக்கும் காந்தியைமட்டுமல்ல எல்லோரையும் கொல்லத் தெரியும்,அவசியமானால் டோண்டு இராகவனைக்கூட." இக்குற்றச்சாட்டு புலிகளுக்குத்தான் அதிகம் பொருந்தும். மற்றத் தமிழீழ இயக்கத்தினரை அதிகம் கொன்றது புலிகளே.

"மேலும் மனித உரிமைகளைப்பற்றி பேசுவதற்கு பார்ப்பணீயத்தைத் தூக்கிப்பிடிக்கும் எவருக்கும் எள்ளவும் தகுதியுமில்லை."
என்னடா பார்ப்பனீயத்தைத் தாக்கி யாரும் எழுதவில்லையே என்று பார்த்தேன். இதோ வந்து விட்டது. பிதற்றலான இந்தக் குற்றச்சாட்டு பதிலுரைக்கத் தகுந்ததல்ல என்று அதை நான் தள்ளுகிறேன்.

அது இருக்கட்டும். மயூரன் அவர்களே புலிகள் முஸ்லிம்கள் குறித்து உங்கள் நிலையைப் பற்றி அடுத்த நாள் எழுதுவதாகக் கூறினீர்களே? மேலும் உங்களது இப்பதிவின் நோக்கமும் நிறைவேறவில்லை போலிருக்கிறதே. தமிழீழ வலைப்பதிவரிடம் பொறுமையாகத் தங்கள் நிலைப்பாட்டை எடுத்துக்கூறுமாறு நீங்கள் கேட்டுக் கொள்ள, அதற்கு அதிகம் பலன் இருப்பதாகத் தெரியவில்லையே?

அன்புடன்,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)

அதிரைக்காரன் said...

$$எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்$$

டோண்டு சார், 'என் பெயரில் வெளியாகும் பின்னூட்டங்கள் பற்றி' என்று சொல்லிவிட்டு, எம்மாம்பெரிய கமெண்ட் லிஸ்ட், வேறு தலைப்பை மாற்றுங்களேன்

dondu(#11168674346665545885) said...

This comment was posted by me in Mayuran's blog vide http://mauran.blogspot.com/2005/06/blog-post_14.html#comments
"நீங்கள் அரசியல் விஞ்ஞானத்தின் ஆரம்பப்படியைக்கூடத் தாண்டாத பாலகன்!" நீங்களே அறிவாளியாக இருந்து விட்டு போங்கள். உங்கள் சான்றிதழ் எனக்கு ஒரு பொருட்டல்ல.

"நீங்க எங்கேயும் சாதி கட்டிக்கொண்டு வருகிறீர்களே உங்களுக்கு வெட்கமாகவில்லை? என்னபெரிய பிராமணன்>வெள்ளாளன்... மசிரு?என்ன மனிதருள் மகத்துவவோ?சும்மா உதார் வேண்டாம்.மனுஷங்கள் எல்லோரும் பூமிபெற்ற பிள்ளைகளே! சாதி சொல்லி விவாதத்தைத் திருப்பும் கயமையை விட்டொழிக்கவும்."

நானா சாதியை இங்கு இழுத்தேன்? ஆதாரம் காட்ட முடியுமா உங்களால்? இழுத்தது நீங்களே. உங்கள் சாதி எனக்கு என்னவென்று தெரியாது. அதை தெரிந்து எனக்கொன்றும் ஆகப்போவதில்லை.

நடந்தது இதுதான். ஒருவர் இட்ட பின்னூட்டம். "மேலும் மனித உரிமைகளைப்பற்றி பேசுவதற்கு பார்ப்பணீயத்தைத் தூக்கிப்பிடிக்கும் எவருக்கும் எள்ளளவும் தகுதியுமில்லை."
அதற்கு என் எதிர்வினை. "என்னடா பார்ப்பனீயத்தைத் தாக்கி யாரும் எழுதவில்லையே என்று பார்த்தேன். இதோ வந்து விட்டது. பிதற்றலான இந்தக் குற்றச்சாட்டு பதிலுரைக்கத் தகுந்ததல்ல என்று அதை நான் தள்ளுகிறேன்." இதைக்கூறியதாலெயே நான் சாதியை இழுத்ததாகக் நீங்கள் கூறினால் உங்களின் தமிழ்புரிதல் மேலேயே சந்தேகம் வருகிறது.

"இல்லையேல் மரியாதைபோகுமுன் விஷயங்களைக் கற்று விவாதிக்கவும்." மரியாதையைப் பற்றி உங்களுக்கு ஏதேனும் தெரியும் என்று எனக்கு தோன்றவில்லை. இப்போது மரியாதையாகவா பேசினீர்கள்? இம்மாதிரி தேவையற்று கோபம் காண்பிப்பது உங்கள் வாதங்களில் மசாலா இல்லை என்பதைத்தான் காண்பிக்கிறது.

மயூரன் மற்றும் ஸ்றீரங்கன் அவர்களே. நாம் வாதிட்டு ஒருவர் மற்றொருவரை மாற்ற முடியும் என்று தோன்றவில்லை. ஆகவே இதுதான் நான் கொடுக்கும் கடைசிப் பின்னூட்டம்.

ஐ.பி.கே.எஃப். காலலகட்டத்தையே எடுத்து கொள்வோம். இரு அரசுகளுக்கிடையில் முறையாகப் போடப்பட்ட ஒப்பந்தத்தின் பேரில் இந்திய அமைதிப்படை அங்கு வந்தது. அவ்வளவு உற்சாகத்துடன் இல்லாவிட்டாலும் பிரபாகரனும் அதை ஆரம்பத்தில் ஆதரித்தார். இந்தியப் போர் வீரர்களுக்கு கொடுக்கப்பட்ட ஆணைகள் மிக குழப்பமாகவே இருந்தன. இங்கு இந்திய அரசு செய்த தவறு தமிழ் அறியாத வீரர்களை அனுப்பித்ததே என்று நான் நினைக்கிறேன்.
இங்கு அவர்கள் பலவிதங்களில் எதிர்ப்பை சந்தித்தனர். தாக்குதல்களில் சிறுவர்கள் மற்றும் பெண்களும் ஈடுபடுத்தப்பட்டனர். அம்மாதிரியான சூழ்நிலையில் யார் எதிரி என்று தெரியாத கண்ணைக் கட்டி விட்ட நிலையிலேயே பல நேரங்களில் அவர்கள் செயல்பட வேண்டியிருந்தது.
நிலைமை மோசமானதும் இலங்கை அரசே கேட்டுக்கொண்டதன் பேரில் இந்தியப் படை திரும்பப் பெறப்பட்டது. ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஒருவரும் தங்கள் ஹோம் வொர்கைச் சரியாகச் செய்யவில்லை. இலங்கை இந்திய உறவில் இக்காலம் ஒரு களங்கமாகவே அமைந்தது.
ஐ.பி.கே.எஃப். திரும்பியபோது இந்தியத் தமிழரில் பெரும்பாலோருக்கு ஈழத் தமிழர்கள் மேல் அனுதாபம் இருந்தது. அது எல்லாம் கெட்டது 1991-ல். நான் கூற விரும்புவது இதுதான். நாசூக்காக கையாள வேண்டிய விஷயத்தைப் புலிகள் குட்டிச்சுவர் ஆக்கினர். ராஜீவ் காந்தியின் மரணம் இந்தியர்களை மிக அதிகம் கோபப்படுத்தியது.

அதை ஒரு துன்பியல் சம்பவம் என்று ஏன் பிரபாகரன் கூறவேண்டும்? இங்கு நீங்கள் பேசுவது போல நியாயப்படுத்துவதுதானே? செய்ய மாட்டார் ஐயன்மீர். அவருக்கும் புலிகளுக்கும் இந்தியாவின் ஆதரவு தேவை. அதனாலேயே அடக்கி வாசிக்கிறார். ஆனால் ஒன்று மற்றவர்கள் பெற்ற பிள்ளைகள் சப்ளை இருக்கும் வரை அவர் பெல்ட்பாம் கட்டி சிறுவர்களை அனுப்பப்போவது நிற்கப் போவதில்லை. கொள்கை வீரர் அல்லவா?

சரி நடந்தது நடந்து விட்டது. புலிகளால் தொல்லை என்று ஆனதற்கு பிறகு இந்தியர்கள் அவர்களை ஆதரிக்க வேண்டும் என்பதை நீங்கள் ஏன் விரும்புகிறீர்கள்? மண்டபம் கேம்ப்புகளில் அகதிகள் ஏன் தங்க வேண்டும்? அடைக்கலம் தேடி வந்த இடத்தில் ஒரு தனிப்பட்ட அரசு போல நடக்க முயற்சி செய்தால் அகதிகளுக்குத்தானே கஷ்டம்?

அன்புடன்,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)

dondu(#11168674346665545885) said...

This comment was posted by me Sankar's blog vide http://ssankar.blogspot.com/2005/06/blog-post.html#comments
"இந்த சீரியல் தொல்லையிலிருந்து விடுபட சிறந்த வழி - அந்த நேரங்களில் வீட்டாரை வேறு முக்கிய, சிறந்த பணிகளில் ஈடுபடுத்துவதுதான் அல்லது நாம் ரிமோட்டைவைத்துக்கொண்டு நேஷனல் ஜியாகிரபிக் அல்லது டிஸ்கவரி சேனல் பார்ப்பது. அதுவும் 7.30 மணிமுதல் 10.30 மணி வரை ஒளிபரப்பாகும் எல்லா சீரியல்களிலும் இந்த அறைதல், திட்டுதல், குயுக்திகள், பழிவாங்கும் கதாபாத்திரங்கள் எல்லாம் மூளையை மழுங்கடிக்கின்றன"

ஏன் சார் சங்கர் அவர்கள் மேல் என்ன கோபம்? அவ்வாறு செய்ய முயற்சித்தால் அவர் 7.30 மணிமுதல் 10.30 மணி வரை வீட்டிற்குள் செல்ல முடியாது என்பது தெரியாதா?

அன்புடன்,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)

dondu(#11168674346665545885) said...

This comment was posted by me in Kanchi Films blog vide http://kanchifilms.blogspot.com/2005/06/blog-post_111886099119626536.html#comments
காஞ்சி பிலிம்ஸ் அவர்களே, மேலே உள்ள செந்தூரனின் பின்னூட்டம் உங்கள் இப்பதிவுடன் பொருந்துகிறதா? அதில் உள்ள கருத்துகள் உங்களுக்கும் ஒப்புதலாக இருக்கும் பட்சத்தில் நான் ஒன்றும் கூறுவதற்கில்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)

dondu(#11168674346665545885) said...

This comment was posted by me in Neyveli Vichu's blog vide http://neyvelivichu.blogspot.com/2005/06/blog-post_111878055018380983.html#comments
தமிழ் சினிமா உலகில் ஒவ்வொரு காலகட்டத்திலும் இருவர் பிரபலமாக இருந்திருக்கிறார்கள். இது பற்றி போன வருடம் ஒரு பதிவு கொடுத்திருந்தேன். பார்க்க: http://dondu.blogspot.com/2004/12/inevitable-pairs-in-tamil-cinema.html#comments

இபோது விக்ரமின் பேட்டி. சுவாரசியமாக இருக்கிறது. நான் என் பதிவில் கூறியபடி கமலும் ரஜனியும் இன்னும் தளத்தில் இருப்பதால் இப்போதைக்கு அடுத்த ஜோடியைப் பற்றிப் பேசுவது வெறும் கருத்து பரிமாறலாகத்தன் இருக்கும் என நினைக்கிறேன். அதன் காரணத்தையும் மேலே குறிப்பிட்ட என் பதிவில் எழுதியிருக்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)

dondu(#11168674346665545885) said...

This comment was posted by me in the English blog of voice on wings vide http://voiceonwings.blogspot.com/2005/02/kaikeyi-mother.html#comments

Actually, Kaikeyi is a complex character. She loved Rama very much and her love was returned, till the day of her asking the boons. In fact, when Mantara tells her of the impending coronation of Rama, her first reaction was unadultrated joy. It was only after Mantara's ill-advise that she turned against Rama. Here we have to see the inevitable hand of fate. Just consider. Had she not asked these boons, Rama would have become king and Sita would not have been abducted. Then how could Ravana be killed? After all that was the aim of Ramavatar.
Once the banishment of Rama becomes irreversible, Kaikeyi wakes up from her dream and she is the most distressed person in Ayodhya. She accompanies Bharat to the forest and begs Rama to return.

There is another version to the events in one of the Ramayanas. It seems that Shani Bhagwan comes to her in disguise and tells her that he was going to cast his spell on Ayodhya for the next 14 years. Kaikeyi, not wanting to have her beloved Rama face problems, decides to put her own son at the helm of affairs, so that any problem on account of Shani will not touch her beloved Rama.

How about it?

Regards,
N.Raghavan
Blogger No. 4800161

dondu(#11168674346665545885) said...

This comment was posted by me in Iizanaathan's blog vide http://padippakam.blogspot.com/2005/06/blog-post.html#comments
"எனது வலைப்பதிவை இரண்டுநாட்களாகக் காணவில்லை.தற்காலிகமாக புதிய பதிவு ஆரம்பிக்கும் வரை இங்கே எனது பதிவு."
இது கவலை அளிக்கும் விஷயம் ஈழநாதன் அவர்களே. இம்மாதிரி உங்களுக்கு நடந்ததை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். தயவு செய்து என்னுடன் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ள முடியுமா? என் மின்னஞல் raghtransint@gmail.com

அன்புடன்,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)

dondu(#11168674346665545885) said...

This comment was posted by me in Ramanathan's blog vide http://valaippadhivu.blogspot.com/2005/06/blog-post_21.html
கோர்ட் சீன்களை தமிழ் சினிமாவில் நாஸ்தி செய்வது போல வேறு எங்கும் செய்ய முடியாது என நினைக்கிறேன். ஒரு உதாரணம். படம்: சமீபத்தில் 1970-ல் வெளிவந்த "மன்னிப்பு". ஒரு கிராமத்தான் கற்பழிப்பு செய்ய இருந்த ஒருவனைத் தடுக்கும்போது போட்ட சண்டையில் அவனைக் கொன்று விடுகிறான். ஒரு குற்றம் தடுக்கும்போது நடக்கும் மரணம் கொலையாகாது என்பது அடிப்படை அறிவு உள்ள எவனுக்கும் தெரியும். கற்பழிப்பு நடக்க இருந்ததை ஒப்புக் கொள்ளும் அரசு தரப்பு வக்கீல் (மனோஹர்) கூறும் வாதம்: "யுவர் ஆனர், ஒரு பெண் கற்பை இழந்து உயிர் வாழலாம், ஆனால் ஒருவன் உயிரை இழந்து உயிர் வாழ முடியாது". அதன் பிறகு எதிர் தரப்பு வக்கீல் அவருக்கே உரிய முறையில் அடி வயிற்றிலிருந்து கத்தி கத்தி கற்பைப் பற்றி பிரசங்கம் கொடுக்கிறார். தலைவலி.

அன்புடன்,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)

dondu(#11168674346665545885) said...

This comment was posted by me in Arokkiyam's blog vide http://ennamopo.blogspot.com/2005/06/blog-post_14.html#comments
புலிப்பாண்டி அவர்களே, உங்களை தரகுறைவாக எழுதியது ஆரோக்கியம் அவர்கள் அல்ல. ப்ளாக்கர் ஐ.டி.க்களை செக் செய்து கொள்ளவும். போலி டோண்டு முன்னே வந்தது போல போலி ஆரோக்கியமும் வந்திருக்கிறார். போலி ஆரோக்கியமும் போலி டோண்டுவாகவே இருக்கலாம்.
உண்மை ஆரோக்கியத்தின் ப்ளாக்கர் எண்: 5768452
போலி ஆரோக்கியத்தின் ப்ளாக்கர் எண்: 9644249

அன்புடன்,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)

dondu(#11168674346665545885) said...

This comment was posted by me in Must Do's blog dated 20th June 2005 vide http://koluvithaluvioooooooooooo.blogspot.com/

"Lieber Must Do,

Man sagt, daß Dein Website vorläufig gestoppt worden ist. Siehe http://tamizboyz.blogspot.com/2005/06/blog-post_111932098819073099.html
Es freut mich, daß es nicht wahr ist."
Dein Onkel,
Dondu Raghavan

dondu(#11168674346665545885) said...

This comment was placed by me in http://islamanswers.blogspot.com/2005/05/blog-post.html#comments on 23rd June 2005.
சலாஹுத்தீன் அவர்களே, எனக்கு இங்கு சில சந்தேகங்கள் உண்டு. மெஹர் என்பது பெண்ணுக்கு திருமணம் முன்பே கொடுத்து விடுகிறார்களா அல்லது கொடுத்ததாகக் கூறி அதன் கட்டுப்பாடு கணவனிடமே உள்ளதா. இஸ்லாமிய ஆண்கள் வரதட்சினையே பெருவதில்லையா? எது அதிகம்? மெஹரா வரதட்சிணையா? மெஹரைத் திருப்பித் தர சொல்பவர்கள் வரதட்சிணைக்கும் அவ்வாறே கூறுவார்களா? நான் படித்த செய்தி ஒன்றில் குலாவுக்கு ஐந்து வருடங்களுக்கு மேல் சம்மதம் தெரிவிக்காது தலைவர் தன்னை படுத்துவதாக ஒரு இஸ்லாமியப் பெண் கூறியிருந்தார். அதற்கு அப்பெண் செய்யக்கூடியது என்ன? நீதிமன்றத்துக்கு போக முடியுமா? அதற்கும் அவர் சார்ந்த சமூகத்தின் கட்டைப் பஞ்சாயத்து விடவில்லை என்றும் படித்தேன். எதற்கு வம்பு? பேசாமல் இரு பாலருக்கும் ஒன்று போலவே உரிமை கொடுத்து விடுவது சிறந்ததல்லவா?
மேலும் நீங்கள் சொல்லும் பெண்களுக்கான உரிமைகள் ஏட்டளவிலேயே உள்ளன. இதே நிலை மற்ற மதங்களில்தான் என்றாலும் அங்கெல்லாம் அவை தவறு என்றும் மாற்றப்பட வேண்டியவை என்பதும் ஆட்சேபக் குரல்களில் வெளியிடப்படுகின்றன. ஆனால் இஸ்லாமிய மதத்திலோ ஒரு மாற்றமும் தேவையில்லை என்ற ஒரு காப்ளசென்ட் மனப்பான்மை தென்படுகிறது. இது ஆரோக்கிய மனப்பான்மை என்று நினைக்கிறீர்களா?
இப்போது விபசாரத்துக்கு வருவோம். வயது வந்த ஓர் ஆண் மற்றும் ஒரு பெண் தங்கள் விருப்பத்திற்கிணங்க சேருகின்றனர். அது அவர்கள் தனிப்பட்ட விஷயம். அதில் மதம் ஏன் மூக்கை நுழைக்க வேண்டும்? அதுவும் கல்லடிகள் டூ மச். கசையடிகள் கொடுக்கலாம் இன்னொருவர் திருவாய் மலர்ந்தருளுகிறார். என்ன இதெல்லாம்?

அன்புடன்,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)

dondu(#11168674346665545885) said...

This comment was posted by me in Peyarili's blog vide http://wandererwaves.blogspot.com/2005/06/6.html#comments:

என்னுடையப் பதிவுக்கு (பார்க்க: http://dondu.blogspot.com/2005/06/2.html#comments) நீங்கள் இட்ட இப்பதிவு மிக அருமை. நன்கு சிரித்தேன்.

ஆனால் ஒன்றை மட்டும் கூறிவிடுகிறேன். என்னுடைய ஹைப்பெர்லிங்குகள் எல்லாமே உண்மையாக நடந்தவை. என் அடுத்த லிங்கிற்கு ஒரு சக வலைப்பதிவரே சாட்சி.

அன்புடன்,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)

dondu(#11168674346665545885) said...

This comment was posted by me in Rozavasanth's blog vide http://rozavasanth.blogspot.com/2005/06/blog-post_23.html#comments
நல்ல பதிவு ரோஸா வசந்த் அவர்களே. இப்போது தமிழ் வலைப்பூவுலகம் இருக்கும் சூழ்நிலையில் வெறுமனே நெருப்புப் பெட்டியை வெளியே எடுத்தாலே பற்றிக் கொள்ளும் ஆபத்து இருக்கும்போது நீங்கள் இதை எழுதியது உங்கள் சமுதாய அக்கறையையே காண்பிக்கிறது. பாராட்டுகள் ரோஸா அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)

dondu(#11168674346665545885) said...

This comment was posted in Arumai's blog vide http://apaththam.blogspot.com/2005/06/blog-post_25.html#comments
முதலில் உங்களுக்குத்தான் ஏதோ பிரச்சினை என்று தோன்றுகிறது. இதில் நிச்சயமாகத் தெரிவது ஒன்றேதான். நீங்கள் எல்லாளனை எள்ள நினைக்கிறீர்கள் அவ்வளவே. அதற்கு உங்களுக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். அவற்றை நான் அறியேன். ஆனால் அவருடைய துரதிர்ஷ்ட அனுபவத்துக்கு உங்கள் எதிர்வினை நிச்சயமாக நாகரீகமானதாக இல்லை என்றுதான் கூறுவேன்.

எல்லாளன் கூறிய செய்தி என்ன? அவரை யாரோ தாக்கியிருக்கிறார்கள். தாக்குதலுக்குள்ளான அக்கணங்களை அவரால் நினைவுக்கு கொண்டு வர இயலவில்லை. அவர் கைப்பை, செல்பேசி ஆகியவை திருட்டுப்போயின. அச்செல்பேசியில் அவர் பல முக்கியத் தகவல்களை சேமித்து வைத்திருந்தார். எல்லாவற்றையும் கூறிவிட்டு அவர் மற்றவர்களுக்கும் இம்மாதிரி நடந்து விடக்கூடாதே என்ற ஆதங்கத்தில் தான் சாக்கிரதைக் குறைவாக நடந்து கொண்டவற்றை ஊகித்து அவ்வாறு செய்து விடாமலிருக்க மற்றவர்களைக் கேட்டு கொள்கிறார். இதில் என்ன உளறலைக் கண்டீர்கள்? நீங்கள் எழுதியதுதான் உளறலாகப்படுகிறது. உங்களின் இப்பதிவு ரசனைக் குறைவானது.

அன்புடன்,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)

dondu(#11168674346665545885) said...

This comment was placed by me in Pediyans' blog at http://tamizboyz.blogspot.com/2005/06/blog-post_111932098819073099.html#comments
Dear Pediyans,
The unthinkable has happened. The ID thief has managed to enter a comment with my ID number. Please believe me, I did not give the above comment inspite of the blogger ID numnber matching. I am sure who it is and I wish he utilize his talents for better things other than harassing others like this.
Regards,
Dondu Raghavan
Blogger ID (for what is worth): 4800161
(I guess the only way left to me is to repeat hte comment in my blog earmarked for this purpose)

வசந்தன்(Vasanthan) said...

டோண்டு ஐயா!
இப்போதுதான் பார்த்தேன் பெடியன்கள் பதிவில் நடந்தது.

அது உண்மையென்று நம்பவில்லை. எதற்கும் உங்கள் பதிவில் வந்து பார்ப்போம் என்றுதான் இப்போது வந்தேன்.
இதுவரை ஐடி பார்ப்பது தான் நம்பகமான முறையாக இருந்தது. ஆனால் இதுவும் இப்போது தாக்குதலுக்குள்ளாகி விட்டது.
யாரோ ஒருவர், உமது தளத்தையும் என்தளத்தையும் முடிந்தால் நிறுத்துங்கள் பார்க்கலாம் என்று ஏறத்தாள 3 முறை பெடியன்களுக்குச் சவால் விட்டுள்ளார். அந்த நல்ல மனது படைத்தவர் யாரென்று தெரியவில்லை.

உங்கள் ஐடிக்குள்ளால் பின்னூட்டம் இட முடியுமாயின் உங்கள் வலைப்பதிவிலும் பதிவுகளையோ பின்னூட்டங்களையோ இட முடியுமென்றே படுகிறது. எதற்கும் கவனமாயிருக்க வேண்டும். கொழுவியின் தளமும் 3 நாட்களாக இயங்கவில்லை.

-வசந்தன்-

dondu(#11168674346665545885) said...

This comment was posted by me in Mugamoodi's blog vide http://mugamoodi.blogspot.com/2005/06/2728.html#comments
Thanks Mugamoodi for your understanding. You are right. The above comment in my name is not mine. Your reasoning in your personal mail to me is flawless.

I take this opportunity to request my wellwishers to keep vigilant. Kindly check your email inbox for the comments' origin. My comments come from raghtransint@gmail.com

Mr. Mugamoodi I take the liberty of reproducing your email to me. Please forgive me. I feel that this has to be given the widest possible publicity.

Here goes:
"Dear Mr. Dondu,

Today there's a comment in my blog post
http://mugamoodi.blogspot.com/2005/06/2728.html. for a moment I thought its
you and also replied to the comment.

then I check your blog post
http://dondu.blogspot.com/2005/05/blog-post_25.html where you keep all your
comments. I dint find this latest comment there, but your explanation to
Pediyans' blog ... so I was suspicious

then I came back to my mail and found the comment is not from
raghtransint@gmail.com, but anonymous-comment@blogger.com. I'm not sure the
comment was done by you...

also I found a comment in your name in post
http://lldasu.blogspot.com/2005/06/blog-post_24.html. because of the last 2
sentences in that comment, I know its not you.

I'm really sorry that these kinda things happens to you... If I get any
technical know-how I'll let you know.."

I am not at home and am not in a mood to try to type in Tamil with Suratha's converter. I am depressed.

Regards,
Dondu Raghavan
Blogger No. 4800161 (for what it is worth)

முகமூடி said...

திரு. டோண்டு :: உங்களை போல் எழுதி உங்கள் ப்ளாக்கர் ஐ.டி தெரியுமாறு செய்வது பெரிய விக்ஷயமில்லை... பதிவில் அனானிமஸ் கமெண்ட் எழுதும் வசதி இருந்தால் அந்த பதிவில் இதை மிக சுலபமாக செய்ய இயலும்... (என் பதிவில் அனானிமஸ் கமெண்ட் எழுதும் வசதி உண்டு) ஆகையால் கவலை விடுங்கள்.. உங்கள் ID hack செய்யப்பட்டதோ என்று அஞ்சாதீர்கள்... மேலும் நான் சொன்ன விஷயமான "என் பெயரில் வரும் பின்னூட்டம் பற்றி" என்ற உங்கள் பதிவில் உங்கள் commentஐ பாடி டெக்ஸ்டாக போட வேண்டியதில்லை... உங்கள் போஸ்டில் அனானி கமெண்ட் நீக்கப்பட்டதால் அதில் இந்த வேலையை செய்ய முடியாது... நீங்கள் எப்போழுதும் செய்வதையே செய்யுங்கள்... யாருக்காவது சந்தேகம் ஏற்படின் அங்கு வந்து பார்த்துக்கொள்கிறோம்

dondu(#11168674346665545885) said...

The following two comments were posted by me in Mugamoodi's blog vide http://lldasu.blogspot.com/2005/06/blog-post_24.html#comments

This comment was posted by me in Mugamoodi's blog vide http://mugamoodi.blogspot.com/2005/06/2728.html#comments
Thanks Mugamoodi for your understanding. You are right. The above comment in my name is not mine. Your reasoning in your personal mail to me is flawless.

I take this opportunity to request my wellwishers to keep vigilant. Kindly check your email inbox for the comments' origin. My comments come from raghtransint@gmail.com

Mr. Mugamoodi I take the liberty of reproducing your email to me. Please forgive me. I feel that this has to be given the widest possible publicity.

Here goes:
"Dear Mr. Dondu,

Today there's a comment in my blog post
http://mugamoodi.blogspot.com/2005/06/2728.html. for a moment I thought its
you and also replied to the comment.

then I check your blog post
http://dondu.blogspot.com/2005/05/blog-post_25.html where you keep all your
comments. I dint find this latest comment there, but your explanation to
Pediyans' blog ... so I was suspicious

then I came back to my mail and found the comment is not from
raghtransint@gmail.com, but anonymous-comment@blogger.com. I'm not sure the
comment was done by you...

also I found a comment in your name in post
http://lldasu.blogspot.com/2005/06/blog-post_24.html. because of the last 2
sentences in that comment, I know its not you.

I'm really sorry that these kinda things happens to you... If I get any
technical know-how I'll let you know.."

I am not at home and am not in a mood to try to type in Tamil with Suratha's converter. I am depressed.

Regards,
Dondu Raghavan
Blogger No. 4800161 (for what it is worth)
Postscript:
S.K. phoned me that he has shown in Mugamoodi's blog as to how easy it is to steal somebody's id number as well. My request to all the bloggers is to disable the anonymous and other comments and to allow only blogger's comments. This has to be resorted to as the thief we all know about is at large.
Regards,
Dondu Raghavan
Blogger No. 4800161
(for what it is now worth)

June 25, 2005 2:31 PM


Dondu said...
Sorry friends, one correction. S.K. has shown it in Pedizan's blog at http://tamizboyz.blogspot.com/2005/06/blog-post_111932098819073099.html

I repeat. Kindly disable anonymous comments. This appeal is directed to all the bloggers who have not yet done so already.
Regards,
Dondu Raghavan
Blogger No. 4800161
(for what it is now worth)

dondu(#11168674346665545885) said...

Thanks Vasanthan. But there is a request. Why dont you disable the anonymous comments in your blog? As long as this gentleman is around, no one is safe. S.K. has already demonstrated in Pediyan's blog the ease with which this apparent ID theft can be done in blogs allowing anonymous comments. The only remedy is their disabling, I guess.

Regards,
Dondu Raghavan

வசந்தன்(Vasanthan) said...

கருத்துக்கு நன்றி டோண்டு!
நானும் இப்போது பெடியன்களின் பக்கத்தில் பார்த்துவிட்டுத்தான் வருகிறேன்.
பெடியன்களும் அநாமதேயப்பின்னூட்ட வசதிகளை நிறுத்திவிட்டதாகச் சொல்லியிருக்கிறார்கள்.
நானும் நிறுத்திவிடுகிறேன்.
இப்போது புரிந்தது என்ன முறையில் அந்த ஐடி தோன்றும்படி செய்கிறார்களென்று.
ஏற்கெனவே ரோசவசந்தின் பதிவில் நான் சொன்னமுறையில்தான் அதைச் செய்கிறார்கள்.
அநாமதேய முறையை நிறுத்தினால் கடவுச்சொல் திருடப்படாதவரை பாதுகாப்புத்தான்.

நானும் நிறுத்திவிடுகிறேன்
மற்றவர்களும் இதைச்செய்தால் நன்று.

-வசந்தன்-

dondu(#11168674346665545885) said...

This comment was posted by me in Arumai's blog vide http://apaththam.blogspot.com/2005/06/blog-post_25.html#comments
Dear Mr. Arumai. Thanks. But I am writing this comment on an entirely different account.

Kindly disable anonymous comments in your blog. Some mischiefmaker has found a way to post indecent comments in my name under my blogger ID number. Please see comments in my blog to this effect vide http://dondu.blogspot.com/2005/05/blog-post_25.html

Regards,
Dondu Raghavan

dondu(#11168674346665545885) said...

Thanks Vasanthan. That will be a great help. I hope the others too follow suit.

Regards and a happy weekend to all.

Dondu Raghavan

குழலி / Kuzhali said...

http://kuzhali.blogspot.com/2005/06/blog-post_24.html

டோண்டு சார், உமது பெயரில் ஒரு பின்னூட்டமுள்ளதே அது தாங்கள் எழுதியதா? இங்கே அநத பின்னூட்டத்தை காணவில்லை அது தான் கேட்கின்றேன்.

dondu(#11168674346665545885) said...

This comment was posted by me in Kuzali's blog vide http://kuzhali.blogspot.com/2005/06/blog-post_24.html#comments
குழலி அவர்களே, நீங்கள் நினைத்தது சரியே. அது நான் இட்டப் பின்னூட்டம் இல்லை. என்ன செய்வது அந்தப் பேர்வழிக்கு என் மேல் என்ன பாசமோ விட மாட்டேன் என்கிறார். என்னுடைழப் பின்னூட்டமாக இருப்பின் உங்கள் மின்னஞ்சல் வருகைப் பெட்டியில் அது தெளிவாகக் குறிப்பிடப் பட்டிருக்கும். முகமுட்டிக்கு நன்றி. பெடியஙள் பதிவில் பாருங்கள். (வலைப்பதிவருக்கு எச்சரிக்கை). தயவு செய்து அனானி பின்னூட்டங்களைச் செயலிழக்கச் செய்யுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)
(அன்னனிப் பதிவுகளைச் செயலிழக்கச் செய்யும் வரை இதில் பலன் உண்டா எனத் தெரியவில்லை. என் குறிப்பிட்டப் பதிவிலும் பார்த்துக் கொள்ளுங்கள்.)

dondu(#11168674346665545885) said...

This comment was posted by me in Pediyans' blog vide http://tamizboyz.blogspot.com/2005/06/blog-post_111932098819073099.html

Dear Ummandi,
Thanks for your understanding. Now that you have disabled anonymous comment, the ID number will now give the correct picture, I hope. For example the above socalled Dondu's comment is not mine, see blogger ID.
Regards,
Dondu Raghavan
Blogger No. 4800161

dondu(#11168674346665545885) said...

This comment was posted by me in Balaji's blog vide http://balaji_ammu.blogspot.com/2005/06/drop-in.html#comments
Dear Bala,
The above comment under my name is not mine. Please see my latest post in my blog. Kindly disable anonymouus commenting in your blog. This is urgent.
Regards,
Dondu Raghavan

dondu(#11168674346665545885) said...

This comment was posted by me in Manikoondu Siva blog vide http://manikoondu.blogspot.com/2005/06/242526.html#comments
மூக்கு சுந்தர் அவர்களே,

மேலே என் பெயரில் வந்த பின்னூட்டம் என்னுடையதல்ல. போலி டோண்டு மீண்டும் வந்து விட்டார். ப்ளாக்கர் எண்ணை சரி பாருங்கள். இப்பதிவு அனானி பின்னூட்டங்களை ஏற்காததால் இம்மாதிரி சரி பார்த்து கொள்ளலாம்.

ஆனால் அனானி கமெண்டுகள் ஏற்றுக்கொள்ளும் பதிவுகளில் அந்தப் போலி பேர்வழி என் பெயர் மற்றும் ப்ளக்கர் எண்ணுடன் பதிவு செய்கிறார். என் பெயரில் வரும் பின்னூட்டங்கள் என்னுடைய இதற்காகவே போட்டுள்ளப் பதிவிலும் வருகிறதா என்று பார்க்கவும். அங்கும் அது வந்தால் ப்ளாக்கர் எண்ணைப் பார்க்கவும். See my latest blog as well to this effect.

என்னுடைய பிரத்தியேகப் பதிவின் உரல் கீழே.

http://dondu.blogspot.com/2005/05/blog-post_25.html

அன்புடன்,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)
(அனானிப் பதிவுகளைச் செயலிழக்கச் செய்யும் வரை இதில் பலன் உண்டா எனத் தெரியவில்லை. என் குறிப்பிட்டப் பதிவிலும் பார்த்துக் கொள்ளுங்கள்.)

dondu(#11168674346665545885) said...

This comment was posted by me in Halwacity's blog vide http://halwacity.blogspot.com/2005/06/blog-post_24.html#comments

Halwacity அவர்களே,

மேலே என் பெயரில் வந்த பின்னூட்டம் என்னுடையதல்ல. போலி டோண்டு மீண்டும் வந்து விட்டார். ப்ளாக்கர் எண்ணை சரி பாருங்கள். இப்பதிவு அனானி பின்னூட்டங்களை ஏற்காததால் இம்மாதிரி சரி பார்த்து கொள்ளலாம்.

ஆனால் அனானி கமெண்டுகள் ஏற்றுக்கொள்ளும் பதிவுகளில் அந்தப் போலி பேர்வழி என் பெயர் மற்றும் ப்ளக்கர் எண்ணுடன் பதிவு செய்கிறார். என் பெயரில் வரும் பின்னூட்டங்கள் என்னுடைய இதற்காகவே போட்டுள்ளப் பதிவிலும் வருகிறதா என்று பார்க்கவும். அங்கும் அது வந்தால் ப்ளாக்கர் எண்ணைப் பார்க்கவும். See my latest blog as well to this effect.

என்னுடைய பிரத்தியேகப் பதிவின் உரல் கீழே.

http://dondu.blogspot.com/2005/05/blog-post_25.html

அன்புடன்,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)
(அனானிப் பதிவுகளைச் செயலிழக்கச் செய்யும் வரை இதில் பலன் உண்டா எனத் தெரியவில்லை. என் குறிப்பிட்டப் பதிவிலும் பார்த்துக் கொள்ளுங்கள்.)

P.S.
Bloggers retaining the anoymous comments' enabling do so for the simple reason that many of their friends are not bloggers and this facility is meant for them. But as long as this Poli Dondu is there, no one is safe. Kindly do disable the anonymous comments in your respective blogs. Otherwise a great injustice is being done to targeted persons like me. Please remember that while today I am being targeted, tomorrow it may be anybody's turn.

By the way, opening a blogger account is a child's play.

Regards,
Dondu Raghavan

dondu(#11168674346665545885) said...

This comment was posted by me in Pediyans' blog vide http://tamizboyz.blogspot.com/2005/06/blog-post_111932098819073099.html#comments

"என்பெயரில் கேவலமானவற்றை எழுதுவதாலும்-அறிவிலித்தனமான விவாதங்களை முன்வைப்பதாலும் நான் கொதிக்கவோ அன்றி டோண்டு அவர்களைப்போல் பதறியடிக்கவோ முயற்சிக்கமாட்டேன்."

சிறீரங்கன் அவர்களே, நீங்கள் கூறுவதைப் புரிந்து கொள்கிறேன். ஆனால் இப்பிரச்சினையை இன்னொரு கோணத்திலிருந்து பார்க்கிறேன். நட்பின் மரணம் என்பதுதான் அது. என் பெயரில் தவறானப் பின்னூட்டம் வர, அதைப் படிக்கும் என் நண்பர்கள் சிலர் என்னைத் தப்பாகப் புரிந்துகொள்ளலாம், ஆனால் என்னிடம் அதைப் பற்றி விளக்கம் கேட்க முடியாத நிலைமையும் உருவாகலாம். அவ்வாறு நடக்கும் பட்சத்தில் என் மீதுள்ள நல்லெண்ணம் மறைய அவர்கள் என் பால் கொண்ட நட்பும் மரணிக்கலாம். "எதிர்நீச்சல்" படத்தில் நாகேஷ் முத்துராமனிடம் கூறுவார்: "நண்பனின் மரணத்தைக் கூட சகித்து கொள்ளலாம், ஆனால் நட்பின் மரணத்தை அல்ல" என்று. அதே நிலைதான் எனக்கும்.

மேலும் "அஞ்சுவதற்கஞ்சாமை பேதமை" என்பது பொய்யாமொழி அல்லவா?

அன்புடன்,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)

dondu(#11168674346665545885) said...

This comment was posted by me in Arun's blog vide http://arunhere.com/pathivu/?p=41

Dear Arun,
மேலே என் பெயரில் வந்த பின்னூட்டம் என்னுடையதல்ல. போலி டோண்டு மீண்டும் வந்து விட்டார்.
But his comments within brackets seem to be valid as far as posting of comments is concerned.
Regards,
Dondu Raghavan

dondu(#11168674346665545885) said...

This comment was posted by me in Manikoondu's blog vide http://manikoondu.blogspot.com/2005/06/242526.html#comments
"ஆனால், பதில் சொன்னது உங்களுக்கு மட்டுமல்ல, ராம்கிக்கும் சேர்த்துத்தான் என்பதை நண்பர் அருண் அறியத் தருகிறேன்."

மகிழ்ச்சி. ஆனால் இங்கு சில விஷயங்களை வெளிப்படையாகப் பேசிவிடுவது நல்லது.
1. ராம்கி அவர்கள் பொதுப்படையாக உயர்சாதியினர் என்று கூறினார்.
2. மணிக்கூண்டு அவர்கள் அதை ஒரு நல்ல கேள்வி என்று ஒத்துக்கொண்டு அதன் பதிலை தனிப்பதிவாகத் தருவதாகக் கூறினார்.
3. போலி டோண்டு நடுவில் புகுந்து குட்டையை குழப்பி அவ்வாறு கூறப்பட்ட உயர் சாதியினர் அனைவரும் பார்ப்பனர் என்று உண்மையான டோண்டுவாகிய நான் கூறியது போன்ற தோற்றத்தினைத் தந்தார்.
4. அதை அப்படியே நம்பிய மூக்கு சுந்தர் அவர்கள் எனக்கு "உரைக்கும்படியானப் பதிலைக்" கொடுத்தார். சிறிது நேரத்திற்கு அவர் பார்வையில் நான் தாழ்ந்து போனேன்.
5. அதைத்தான் போலி டோண்டு விரும்பினார். அவர் விருப்பம் நடந்தேறியது
6. அவ்வாறு ஒருவரது பெயரைக் கெடுப்பது அவரைக் கொலை செய்வதை விடக் கொடுமையானது என்பது பாதிக்கப்பட்ட அனைவருக்குமே தெரியும். நான் அதை தனிப்பட்ட முறையில் மறுபடியும் கூற வேண்டியதில்லை.
7. "வெளிப்படையான எண்ணங்கள்" பற்றி பேச்சு வரவே இங்கு வெளிப்படையாக எழுத நேர்ந்தது.

நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)
(அனானிப் பதிவுகளைச் செயலிழக்கச் செய்யும் வரை இதில் பலன் உண்டா எனத் தெரியவில்லை. என் குறிப்பிட்டப் பதிவிலும் பார்த்துக் கொள்ளுங்கள்.)

dondu(#11168674346665545885) said...

This comment was posted by me in Alwacity's blog vide http://halwacity.blogspot.com/2005/06/blog-post_24.html#comments
"இப்படித்தான் 1657ல் ஒருமுறை நேதாஜி ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது... வேண்டாம் தனிப்பதிவாகவே இடுகிறேன்."
நேதாஜி 1657-ஆம் வருடத்தில்? அது இருக்கட்டும். அனானி பின்னூட்டங்களை செயலிழக்கச் செய்தாலே பாதித் தலைவலி தீர்ந்து விடும். இப்பதிவின் நகல் என்னுடைய பிரத்தியேகப் பதிவிலும் வரும். பார்க்க:
http://dondu.blogspot.com/2005/05/blog-post_25.html#comments

அன்புடன்,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)
(அனானிப் பதிவுகளைச் செயலிழக்கச் செய்யும் வரை இதில் பலன் உண்டா எனத் தெரியவில்லை. என் குறிப்பிட்டப் பதிவிலும் பார்த்துக் கொள்ளுங்கள்.)

dondu(#11168674346665545885) said...

This comment was posted by me in Nenjin alaikal blog vide http://yemkaykumar.blogspot.com/2005/06/blog-post_25.html#comments

Your doubt is justified. The comment given under my name and referred to by you was not from me. Blogger number matches on account of anonymous comments being enabled in your blogs.

Kindly disable anonymous comments. This comment will be copied in my blog post created specifically for that purpose. See:

http://dondu.blogspot.com/2005/05/blog-post_25.html#comments

The duplicate fellow does not seem to have anything better to do. If this trend continues, he is sure to lose his job, as blogging during working hours is frowned upon by employers.

Personally, my stand is that there are incompetent people in all the communities and Brahmins are no supermen.

Regards,
N.Raghavan
Blogger No. 4800161(for what is worth)

dondu(#11168674346665545885) said...

This comment was posted by me in penathal's blog vide http://penathal.blogspot.com/2005/06/blog-post_26.html
"இது யாருக்கும் வரக்கூடிய (வரக்கூடாத) பிரச்சினை, இதற்கு தொழில்னுட்பம் தெரிந்த யாரேனும் உடைக்கமுடியாத தீர்வைக் காண வேன்டியது அவசியம், அவசரம்.
எப்படியாவது இந்தப் பிரச்சினையை சீக்கிரம் முடிவுக்குக் கொண்டு வந்தால் நல்லது."

நன்றி சுரேஷ் அவர்களே. நீங்கள் உடனே செய்யக்கூடியது மற்றும் செய்ய வேண்டியது என்னவென்றால் உங்கள் வலைப்பூவில் உள்ள அனானிப் பின்னூட்ட வசதியை செயலிழக்கச் செய்வதே ஆகும். இதை வைத்து கொண்டிருப்பதற்கு வலைப்பதிவர் கூறும் காரணம் அவர்கள் நண்பர்கள், ஆனால் வலைப்பதிவர் இல்லாதவர்கள் பின்னூட்டமிடவே இந்த வசதி என்பதாகும். ஆனால் இப்போது உங்கள் வலைப்பூவிலேயே அந்த போலி நபர் என் பெயரில் என்னுடைய ப்ளாக்கர் எண் மேட்ச் ஆகும்படி பின்னூட்டம் கொடுக்க முடியும். ஆகவே அந்த வசதியை செயலிழக்கச் செய்யவும் எனக் கேட்டு கொள்கிறேன்.

"இவ்வளவு திறமையும், அறிவும், தனித்தன்மையும் கொண்டவர், அவர் பெயரிலே வலையோ மீனோ தொடங்காமல், அடுத்தவர் மீது சேற்றை வாரி வீசும் போதுதான், இது ஒரு இழிபிறவி என்பது உறுதி ஆகிறது!"

நீங்கள் ரொம்ப சாது. அவர் பெயரில் வலைப்பூ இல்லை என்று யார் சொன்னது? இழி பிறவி என்பது எவ்வளவு உண்மையோ அதே போல வலைப்பதிவர் என்பதும் உண்மையே. அவர் யார் என்று எனக்கு தெரியும் என் நண்பர்களுக்கும் தெரியும்.

என்னுடைய இப்பின்னூட்டதின் நகல் என்னுடைய பிரத்தியேகப் பதிவிலும் இடப்படும். அதன் உரல்:

http://dondu.blogspot.com/2005/05/blog-post_25.html

அன்புடன்,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)
(அனானிப் பதிவுகளைச் செயலிழக்கச் செய்யும் வரை இதில் பலன் உண்டா எனத் தெரியவில்லை. என் குறிப்பிட்டப் பதிவிலும் பார்த்துக் கொள்ளுங்கள்.)

dondu(#11168674346665545885) said...

This comment was posted by me in Pediyans' blog vide http://tamizboyz.blogspot.com/2005/06/blog-post_111932098819073099.html#comments
"நட்பு என்பது உயிரிலும் மேலானதுதாம்.அத்தகைய நட்பு இப்போ நோய்வாய்ப் பட்டுள்ளது.கர்ணனுக்கும்-துப்ரியோதனுக்குமுள்ள நட்புமாதிரி எங்கேயிப்போது?... எடுக்கவா கோர்க்கவா?"

என்ன சந்தேகம் ஸிரீரங்கன் அவர்களே? ஏன் இந்த வரிகள்? நம் நட்பு அப்படியேத்தானே இருக்கிறது? அதில் உங்களுக்கு சந்தேகம் இல்லைதானே? இப்போது தங்கள் உடல் நலம் எப்படியிருக்கிறது?

(Weisen Sie vielleicht auf http://mauran.blogspot.com/2005/06/blog-post_14.html#comments hin? Machen Sie sich keine Sorge darüber).

அன்புடன்,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)
(அனானிப் பதிவுகளைச் செயலிழக்கச் செய்யும் வரை இதில் பலன் உண்டா எனத் தெரியவில்லை. என் குறிப்பிட்டப் பதிவிலும் பார்த்துக் கொள்ளுங்கள்.)

dondu(#11168674346665545885) said...

The comment below was posted by me in Sri Rangan's blog vide http://srisagajan.blogspot.com/2005/06/blog-post_22.html
Dear Sri Rangan,
The duplicate Dondu is again at large. It is my humble request to you that you disable anonymous comments and permit only bloggers' comments.
This comment will be copy pasted in my special posting in my blog vide http://dondu.blogspot.com/2005/05/blog-post_25.html
This is the acid test that still is open to me to prove the genuineness of my comments.
Regards,
Dondu Raghavan

dondu(#11168674346665545885) said...

This comment was posted by me in Penathal blog vide http://penathal.blogspot.com/2005/06/blog-post_26.html#comments

நண்பர்களே, வாய்ஸ் ஆன் விங்ஸின் யோசனை அருமை. என்னுடைய படத்தை என் ப்ரொஃபைலில் சேர்த்துக் கொண்டேன். என் ப்ளாக்கர் எண்ணும் என் டிஸ்ப்ளே பெயரில் வருமாறு செய்தேன். இப்போது போலி நபர் அதையெல்லாம் நகலெடுத்து புது பதிவு செய்தாலும் கீழே எலிக்குட்டி சரியான லிங்கைக் காட்டிவிடும் என நம்புகிறேன். ஆண்டவன் அருள் எல்லோருக்கும் கிட்டட்டும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

The comment below was posted by me in Pediyans' blog vide http://tamizboyz.blogspot.com/2005/06/blog-post_111932098819073099.html#comments
கருத்து வேறுபாடுகள் தவிர்க்க முடியாதவை சிறீரங்கன் அவர்களே. அவற்றையும் மீறியதுதான் நட்பு.நம்மிருவருக்கும் தமிழ் உயிர், ஜெர்மன் மற்றும் ஃபிரெஞ்ச் தெரியும். படிப்பிலும் நாட்டம் உண்டு. படிக்கும் விஷயங்கள் பல்வகைப்பட்டவை, ஆகவே கருத்துகள் புரிதலில் வேறுபாடுகள். அவ்வளவுதானே? விட்டுத் தள்ளுங்கள் நண்பரே.

தங்கள் உடல்நலத்தைப் பார்த்துக்கொள்ளுங்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
பின்குறிப்பு:
அனானியின் தொல்லையைத் தவிர்க்க ஒரு வழி என் நண்பர்கள் வாய்ஸ் ஆன் விங்ஸ் மற்றும் எஸ்.கே. கூறியுள்ளனர். இனிமேல் என் பின்னூட்டங்கள் என் படம் மற்றும் ப்ளாக்கர் எண்ணுடன் வரும். பார்ப்போம் என்ன ஆகின்றதென்று.

dondu(#11168674346665545885) said...

This comment was posted by me in V.M.'s posting vide http://arataiarangam.blogspot.com/2005/06/blog-post_23.html#comments
வீ.எம். அவர்களே. மேலே என் பெயரில் வந்தப் பதிவு நான் இட்டதில்லை. இதுதான் நான் இடுவது. இதன் நகல் நான் இதற்காகவே வைத்திருக்கும் பதிவில் வரும் பார்க்க:

http://dondu.blogspot.com/2005/05/blog-post_25.html

இனிமேல் என் பதிவு என் புகைபடத்துடன் வரும். என் ப்ளாக்கர் எண்ணும் என் டிஸ்ப்ளேயிலேயே வரும். பார்க்கலாம் இதில் ஏதாவது பயன் இருக்கிறதா என்று.

மற்றப்படி போலி டோண்டு இந்த முறை தவறாக எழுதவில்லை. என்ன, கடைசி வரியில்தான் சறுக்கி விட்டார். நான் யாரையும் எனக்காக ஓட்டு எல்லாம் போடச் சொல்ல மாட்டென்.

மற்றப்படி சென்று, வென்று வாருங்கள். என் உள்ளம் கவர் கள்வன் என் அப்பன் மகரநெடுங்குழைகாதன் உங்களுக்கு அருள் புரிவான். போலி டோண்டுவிற்கும் நல்ல புத்தி கொடுக்கட்டும். இம்மாதிரி உபயோகமற்ற வேலையையெல்லாம் விட்டு தன் வேலையை கவனிக்கட்டும்.

அன்புடம்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

This comment was posted by me in Arun's blog vide http://arunhere.com/pathivu/?p=41
Dear Arun,
As usual the false Dondu is there. With your blog my only protection is the copy pasting of my comments here in my blog.

I am sure you will understand. Kindly see http://dondu.blogspot.com/2005/05/blog-post_25.html#comments

It is quite possible that this deranged fellow tries to repeat his feat in my abovecited URL too. It will be deleted. If you you see it there before I delete it, use the mouseover to check the blogger number.

Now for some spectacular action from your end.

Regards,
Dondu Raghavan

dondu(#11168674346665545885) said...

This comment was posted by me in Alwacity's blog vide http://halwacity.blogspot.com/2005/06/blog-post_24.html#comments
நன்றி விஜய் அவர்களே. இப்போது நிலைமை சற்று பரவாயில்லை. என் பின்னூட்டங்கள் என் புகைபடத்துடன் வரும். என் ப்ளாக்கர் எண்ணும் என் டிஸ்ப்ளே பெயருடன் சேர்ந்தே வரும். என்ன, புகைப்படம் பின்னூட்டங்களை இடும் பக்கத்தில் மட்டும் வரும். மேலும் என் பின்னூட்டங்கள் என் தனிப்பட்டப் பதிவிலும் நகலிடப்படும்.

ஒரு வேளை போலி நபர் என் புகைபடத்தையும் ப்ளாக்கர் எண்ணையும் ஒட்டி நகலெடுத்தால் அவற்றை அவர் ஒரு புது ப்ளாக்கர் பெயரில்தான் போட முடியும். அப்போது எலிக்குட்டி அவ்ர் புது ப்ளாக்கர் எண்ணைக் காட்டிக் கொடுக்கும். இருப்பினும் அந்த மனம் பிறழ்ந்தவன் ஏதாவது செய்து வைப்பான் என்ற பயமும் இருக்கிறது. பார்க்கலாம், எல்லாம் கடவுள் விட்ட வழி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

This comment was posted by me in Manikoondu's blog vide http://manikoondu.blogspot.com/2005/06/242526.html
"(எலிக்குட்டியைப் பிடித்து உப்பு மிளகாய் வெங்காயம் போட்டு பிரட்டல் செய்து சாப்பிடவும்)"
அந்த மனம் பிறழ்ந்தவர் என்னவேல்லாம் எழுத ஆரம்பித்து விட்டார் பாருங்கள்? இனிமேல் என் பின்னூட்டங்கள் என் புகைபடத்துடன் வரும். மேலும் அவை என் தனிப்பதிவில் நகலிடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/05/blog-post_25.html#comments
லாடு லபக்தாஸ் ஒரு முறை சொன்னதுபோல இந்த ஆள் ஏன் இன்னொருவர் இனிஷியலைத் தேடுகிறார் என்பது புரியவில்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

This comment was posted by me in Kumar's blog vide http://yemkaykumar.blogspot.com/2005/06/blog-post_25.html#comments
குமார் அவர்களே,
இனிமேல் என் பின்னூட்டங்கள் என் புகைபடத்துடன் வரும். மற்றும் ப்ளாக்கர் எண்ணும் என் டிஸ்ப்ளே பெயரில் சேர்ந்தே வரும்.
போலி நபர் என் படம் மற்றும் ப்ளாக்கர் எண்ணை நகலெடுத்தாலும் அது புது ப்ளாக்கர் லிங்க்குடந்தான் வரும். எலிக்குட்டியை நகர்த்திப் பார்த்து கொள்ளலாம். எப்படியாயினும் என் பின்னூட்டங்கள் என் பிரத்தியேகப் பதிவிலும் நகலிடப்படும். பார்க்க:

http://dondu.blogspot.com/2005/05/blog-post_25.html#comments

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

This comment was posted by me in Pediyans' blog vide http://tamizboyz.blogspot.com/2005/06/blog-post_111932098819073099.html#comments
"(எலிக்குட்டியைப் பிடித்து உப்பு மிளகாய் வெங்காயம் போட்டு பிரட்டல் செய்து சாப்பிடவும்)"
அந்த மனம் பிறழ்ந்தவர் என்னவேல்லாம் எழுத ஆரம்பித்து விட்டார் பாருங்கள்? இனிமேல் என் பின்னூட்டங்கள் என் புகைபடத்துடன் வரும். மேலும் அவை என் தனிப்பதிவில் நகலிடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/05/blog-post_25.html#comments


அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

This comment was posted by me in Arogyam's blog vide http://ennamopo.blogspot.com/2005/06/blog-post_14.html#comments
"(எலிக்குட்டியைப் பிடித்து உப்பு மிளகாய் வெங்காயம் போட்டு பிரட்டல் செய்து சாப்பிடவும்)"
அந்த மனம் பிறழ்ந்தவர் என்னவேல்லாம் எழுத ஆரம்பித்து விட்டார் பாருங்கள்? இனிமேல் என் பின்னூட்டங்கள் என் புகைபடத்துடன் வரும். மேலும் அவை என் தனிப்பதிவில் நகலிடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/05/blog-post_25.html#comments


அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

This comment was posted by me in SrI Rangan's blog vide http://srisagajan.blogspot.com/2005/06/blog-post_22.html
நன்றி சிறீரங்கன் அவர்களே. இப்போது நிலைமை சற்று பரவாயில்லை. என் பின்னூட்டங்கள் என் புகைபடத்துடன் வரும். என் ப்ளாக்கர் எண்ணும் என் டிஸ்ப்ளே பெயருடன் சேர்ந்தே வரும். என்ன, புகைப்படம் பின்னூட்டங்களை இடும் பக்கத்தில் மட்டும் வரும். மேலும் என் பின்னூட்டங்கள் என் தனிப்பட்டப் பதிவிலும் நகலிடப்படும்.

ஒரு வேளை போலி நபர் என் புகைபடத்தையும் ப்ளாக்கர் எண்ணையும் ஒட்டி நகலெடுத்தால் அவற்றை அவர் ஒரு புது ப்ளாக்கர் பெயரில்தான் போட முடியும். அப்போது எலிக்குட்டி அவ்ர் புது ப்ளாக்கர் எண்ணைக் காட்டிக் கொடுக்கும். இருப்பினும் அந்த மனம் பிறழ்ந்தவன் ஏதாவது செய்து வைப்பான் என்ற பயமும் இருக்கிறது. பார்க்கலாம், எல்லாம் கடவுள் விட்ட வழி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

This comment was posted by me in Das's blog vide http://lldasu.blogspot.com/2005/06/blog-post_24.html#comments
"புகைப்படம் சேர்ப்பது நல்ல யோசனை என்று நினைக்கிறேன் .."
சேர்த்து விட்டேன் தாசு அவர்களே. இனிமேல்தான் பார்க்க வேண்டும் என்ன ஆகிறது என்பதை.

எப்படியும் இப்பின்னூட்டம் என் தனிப்பதிவிலும் நகல் செய்யப்படும். பார்க்க:

http://dondu.blogspot.com/2005/05/blog-post_25.html#comments

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

This comment was posted in Penathal blog vide http://penathal.blogspot.com/2005/06/blog-post_26.html#comments
"டோண்டு ஒவ்வொரு வலைப்பதிவரும் தங்கள் கமென்ட் செட்டிங்ஸை பின்னூட்டுபவரின் படத்துடன் தெரியக்கூடியமாதிரி மாற்றியமைத்தாலொழிய நீங்கள் படத்தையும் இணைப்பதில் பிரயோசனம் இல்லை."
இல்லை ஈழநாதன் அவர்களே. போட்டோ பின்னூட்டங்களைப் பதிவிடும் பக்கத்தில் தெரிகிறது. இதை நீங்களே சரிபார்த்து கொள்ளலாம். சுரேஷ் கூட இந்த பக்கத்தை சொடுக்கியிருந்தால் பார்த்திருக்கலாம். இப்போது பாருங்கள். ஆனால் ஒன்று, பதிவுக்குச் சென்றபின் பின்னூட்டத்தில் அது உடனே தெரியாது. பார்க்க வேண்டுமானால் பின்னூட்டமிட வேண்டிய பக்கத்தை சொடுக்க வேண்டும். நான் கூறுவது எனக்கே சற்று குழப்பமாக இருக்கிறது. உங்களுக்கு புரிந்திருக்கும் என நம்புகிறேன். சுரேஷ் எனக்கு அனுப்பிய மின்னஞ்சலில் அனானி பின்னூட்டத்தை எடுத்து விடுவதாகக் கூறினார். மிக்க மகிழ்ச்சி.

இப்பின்னூட்டத்தை என் தனிப்பதிவிலும் நகலிடுவேன். பார்க்க: http://dondu.blogspot.com/2005/05/blog-post_25.html#comments

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

This comment was posted by me in Mayavaraththan's blog vide http://mayavarathaan.blogspot.com/2005/06/blog-post_22.html#comments
"(எலிக்குட்டியைப் பிடித்து உப்பு மிளகாய் வெங்காயம் போட்டு பிரட்டல் செய்து சாப்பிடவும்)"
அந்த மனம் பிறழ்ந்தவர் என்னவேல்லாம் எழுத ஆரம்பித்து விட்டார் பாருங்கள்? இனிமேல் என் பின்னூட்டங்கள் என் புகைபடத்துடன் வரும். மேலும் அவை என் தனிப்பதிவில் நகலிடப்படும்.
பார்க்க:

http://dondu.blogspot.com/2005/05/blog-post_25.html#comments

நலமா மாயவரத்தான் அவர்களே? கொஞ்ச நாளாய் உங்களைக் காணோமே. போலி டோண்டு ருத்திர தாண்டவமே ஆடி விட்டார். இப்போது புத்தி பிறழ்ந்து விட்டது.

அன்புடன்,
டோண்டு ராகவன்
Please do see my latest post vide http://dondu.blogspot.com/2005/06/blog-post_25.html#comments

dondu(#11168674346665545885) said...

This comment was posted in Nesamudan Venkatesh's blog vide http://www.tamiloviam.com/nesamudan/page.asp?folderID=1&ID=136
Dear Venkatesh,
The earlier comment is not mine. It is from duplicate Dondu. He is right in one thing. Your arrangement does facilitate such bogus comments. Could you do some thing about it?
On my side, I will copy paste this comment to my posting vide http://dondu.blogspot.com/2005/05/blog-post_25.html and that is the only proof that the genuine person has commented in your blog.
Having said this, kindly open a blogger account and disable anonymous comments.

Regards,
Dondu Raghavan

dondu(#11168674346665545885) said...

The following two comments were posted by me in Kuzali's blog vide http://kuzhali.blogspot.com/2005/06/blog-post_24.html#comments

இப்போது நிலைமை பரவாயில்லை குழலி அவர்களே. என்னுடையப் பின்னூட்டங்கள் புகைபடத்துடன் வரும். அனானி வழியில் வரும் போலி டோண்டு அதில் புகைப்படம் போட முடியாது. அப்படி நகல் எடுத்து போட நினைத்தால் அவர் புதிதாகப் வலைப்பதிவு திறக்க வேண்டும். ஆனால் அதன் ப்ளாக்கர் எண் வேறாக இருக்கும். எலிக்குட்டி அதை காட்டிக் கொடுத்து விடும். ஆகவே அவருடைய கமென்டுகள் இம்மாதிரி முடிகின்றன.
"(எலிக்குட்டியைப் பிடித்து உப்பு மிளகாய் வெங்காயம் போட்டு பிரட்டல் செய்து சாப்பிடவும்)"
அந்த மனம் பிறழ்ந்தவர் என்னவேல்லாம் எழுத ஆரம்பித்து விட்டார் பாருங்கள்? இனிமேல் என் பின்னூட்டங்கள் என் புகைபடத்துடன் வரும். மேலும் அவை என் தனிப்பதிவில் நகலிடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/05/blog-post_25.html#comments

அன்புடன்,
டோண்டு ராகவன்

Next comment: Sorry, no photo is coming. It seems you have not enabled the photos' publishing. It's a pity.

N.Raghavan

dondu(#11168674346665545885) said...

This comment was posted by me in Sri Rangan's blog vide http://srisagajan.blogspot.com/2005/06/blog-post.html
ஐயா சிறீரங்கன் அவர்களே, உங்களது அடுத்த "வீடெரிகிறது பிடுங்கிக்கொள்வதே மிச்சம்!" பதிவின் பின்னூட்டப் பெட்டி நிரம்பி வழிகிறது. கடைசிப் பின்னூட்டத்தை மட்டும் வேர்ட் கோப்பில் நகலெடுத்து பார்த்தேன். அது 89 பக்கங்கள், 2472 வரிகள் மற்றும் 11,168 சொற்களை உள்ளடக்கியுள்ளது. இது பின்னூட்டமே இல்லை, பெரிய கட்டுரை. பேசாமல் அழித்து விடுங்கள். அது இருந்தால் உங்களால் இப்பதிவின் பின்னூட்டப் பெட்டியை பாவிக்க முடியாது. இந்தப் பின்னூட்டத்தை இப்பதிவில் நான் இடுவதே இதற்குத்தான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

சுட்டுவிரல் said...

//வெளிப்படையாக சொல்லாவிட்டாலும் எல்லோர் மனத்திலும் சுட்டுவிரல் ஒருவரை நோக்கித்தான் நீள்கின்றன.//

இப்படி கொழுவி எழுதியுள்ள பின்னூட்டம் (Comment # 17(or)18) தவறான பொருள் தருகிறது.
காரணம் சுட்டுவிரல் என்கிற பெயரில் நானொருவன் வலைப்பக்கம் தமிழ்மணத்தில்வைத்திருக்கிறேன் - நல்லார்க்கினியன்

dondu(#11168674346665545885) said...

நல்லார்க்கினியன் அவர்களே, ஒரு சுவாரசியமான விவாதத்துக்கு வழி வகுத்துள்ளீர்கள். நன்றி. முதலில் கொழுவி எழுதியதைப் பார்ப்போம்: "எல்லோர் மனத்திலும் சுட்டுவிரல் ஒருவரை நோக்கித்தான் நீள்கின்றன" இதில் எடுத்த உடனேயே ஒரு இலக்கணப் பிழை உள்ளது. எழுதியிருக்க வேண்டிய வாக்கியம்: "எல்லோர் மனத்திலும் சுட்டுவிரல் ஒருவரை நோக்கித்தான் நீள்கிறது" அல்லது "எல்லோர் மனத்திலும் சுட்டுவிரல்கள் ஒருவரை நோக்கித்தான் நீள்கின்றன". ஒன்றின் பால் - பலவின் பால் பிழை என்று இதைக் கூறுவர்.

கொழுவியின் வாக்கியத்தையும் நியாயப் படுத்த முடியும். அதாவது இந்த கான்டக்ஸ்டில் சுட்டுவிரல் என்ற ஒருமைச் சொல் பன்மையையே குறிக்கிறது.

இப்போது உங்கள் ஆட்சேபத்துக்கு வருவோம் நீங்கள் இதை இவ்வாறு பதம் பிரித்திருக்கிறீர்கள்: "எல்லோர் மனத்திலும் "சுட்டுவிரல் ஒருவரை" நோக்கித்தான் நீள்கின்றன. அப்ப்டிப் பார்த்தால்தான் எல்லோரும் சுட்டுவிரலைத்தான் அதாவது உங்களைக் குற்றம் சாட்டுகிறார்கள் எனப் பொருள் கொள்ள முடியும். ஆனால் அவ்வாறு படிக்க இயலாது, ஏனெனில் அப்போது வாக்கியத்திற்கு எழுவாய் எது என்ற கேள்வி வரும். ஏதுமில்லை என்பதே பதில். ஆகவே சரியான பொருள் எல்லா சுட்டு விரல்களும் ஒருவரை நோக்கியே நீளுகின்றன என்ற வாக்கியமே சரி என்பது வெள்ளிடை மலை. அதைத்தான் கொழுவியும் கூறுகிறார்.

ரொம்ப நாட்களுக்கு பிறகு இப்பதிவில் வெளியிலிருந்து பின்னூட்டம். மகிழ்ச்சி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

This comment was posted by me in Maduraimalli's blog vide http://maduraimalli.blogspot.com/2005/06/blog-post_22.html#comments
இவர் நிஜ ஆரோக்கியம் இல்லை. நிஜத்தின் ப்ளாக்கர் எண் 5768452. போலியுடையது 9644249. இம்மாதிரி இன்னொருவர் பெயரில் பின்னூட்டம் அளிப்பது கோழைத்தனமானதாகும். எலிக்குட்டியை வைத்து சரி பார்க்கவும்.
என்னுடைய பின்னூட்டம் என் படத்துடன் வரும், அதன் நகல் என் தனிப்பதிவிலும் வரும் என்பதை நினைவில் கொள்ளவும். பார்க்க:
http://dondu.blogspot.com/2005/05/blog-post_25.html#comments

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

This comment was posted by me in Mugamuudi's blog vide http://mugamoodi.blogspot.com/2005/06/blog-post_27.html#comments
நல்லப் பதிவு முகமூடி அவர்களே. நீங்கள் என்ன உங்களை மறைத்து கொண்டு மற்றவர்கள் ப்ளாக்கர் பெயர் மற்றும் என்ணின் கீழே சவுண்ட் கொடுப்பவரா? ஏன் கவலை? நாங்கள் அசல் யார் நகல் யார் என்பதைப் புரிந்து கொள்வோம்.

நீங்கள் இங்கு எழுதியதையே பேராசிரியர் கல்கி அவர்கள் தன் "ஏட்டிக்கு போட்டி" புத்தகத்தில் எழுதி விட்டார். அவர் எழுதுகிறார்: "கல்கி என்பது யாராக வேண்டுமானாலும் இருக்கலாம், பெரிய நீதிபதியாக இருக்கலாம், பெரிய தலைவராகவும் இருக்கலாம்".

ஆனால் நான்? அது என் முடிவு. முதலிலிருந்தே நான் என்னை அடையாளம் காட்டிக் கொண்டவன். எதிர்ப்புகளை எதிர்பார்த்தே "என் வெளிப்படையான எண்ணங்களை" எழுதியவன். அதனால் பல பிரச்சினைகளை சந்திப்பவன். நான் கூறுகிறேன். நீங்கள் ஏன் அவ்வாறு செய்திர்ர்கள் என்பதை புரிந்து கொள்கிறேன். தொடரட்டும் உங்கள் நல்ல பணி. நீங்கள் கண்டறிந்தவற்றை பயப்படாமல் எழுதுங்கள்.

வழக்கம் போல இப்பின்னூட்டம் என் தனிப்பதிவில் நகலெடுக்கப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/05/blog-post_25.html
அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

This comment was posted by me in Manikoondu's blog vide http://manikoondu.blogspot.com/2005/06/blog-post_27.html#comments
ராம்கி முதலில் அந்தக் கேள்வியைக் கேட்டபோது நீங்கள் கூட அதை அப்போது தவறாக எண்ணியதாகத் தோன்றவில்லையே?

நீங்கள் அப்போது எழுதியது: "ராம்கி, நிச்சயம் எழுதுகிறேன். நல்ல கேள்வி. உங்களுக்கு பதில் சொல்லுவதன் மூலம் மற்ற நண்பர்களுக்கும் இது தெரிய வாய்ப்பு. தனி பதிவாகவே போட்டு விடுகிறேன். நன்றி மயிலாடுதுறை சிவா"

ராம்கி யதார்த்தமாகக் கேட்க நீங்களும் அப்போது சாதாரணமாகத்தான் எடுத்து கொண்டீர்கள் என நினைத்தேன்.

வழக்கம்போல இப்பின்னூட்டத்தின் நகல் என் தனிப்பதிவிலும் இடப்படும். பார்க்க:
http://dondu.blogspot.com/2005/05/blog-post_25.html#comments

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

This comment was posted by me in ethiroli blog vide http://athusari.blogspot.com/2005/06/3.html#comments
நன்றாக மாட்டிக் கொண்டீர்கள் நல்லடியார் அவர்களே. மருமகளைக் கற்பழித்தவனுக்கே அப்பெண்ணை மனைவியாக்கியது உங்கள் முஸ்லிம் பஞ்சாயத்து. அதைப் போய் நியாயப்படுத்தலாமா? உங்கள் பஞ்சாயத்தின் தீர்ப்பையா நியாயப்படுத்துகிறீர்கள்? இதற்கு முன்னோடியாக முகம்மதை வேறு இழுத்தார்களே, அப்பதிவைப் பற்றித்தானே பேசுகிறீர்கள்?

இங்கு குற்றவாளி இந்து. தண்டனையும் பெற்றான். உங்கள் முஸ்லிம் குற்றவாளி? அவனுக்கு லட்டு போல பெண்ணை அல்லவா கொடுத்தார்கள்?

இன்னொரு தலாக் தீர்ப்பில், குற்றவாளியாகக் கருதப்பட்டவனின் அண்ணனின் இரண்டு வயதுப் பெண் தலாக் செய்தவனுக்கு மனைவியாக வேண்டும் என்ற விபரீதத் தீர்ப்பு பாகிஸ்தானில் வந்ததே? அதைப் பற்றி என்ன நிலைப்பாடு எடுத்தீர்கள்.

ஐயா நல்லடியார் அவர்களே, இந்துக்களில் அயோக்கியர்கள் உண்டு. அவர்கள் தவறு செய்தால் தண்டனை உண்டு. மதத்தைத் துணைக்கழைத்து யாரும் அவர் செய்வதை நியாயப்படுத்த முயலுவதில்லை.

நீங்கள் பெண்களுக்கிழைக்கப்படும் கொடுமைகளை நியாயப்படுத்துகிறீர்களே அதைத்தான் கண்டிக்கிறார்கள் மற்றவர்கள். நாக்கூர் ரூமியின் பதிவு " கற்காலத்தைப்" பார்க்கவும்.

வழக்கம்போல இப்பின்னூட்டத்தின் நகல் என் தனிப்பதிவிலும் இடப்படும். பார்க்க:
http://dondu.blogspot.com/2005/05/blog-post_25.html#comments

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

This comment was posted by me in Lord Labakthas blog vide http://lldasu.blogspot.com/2005/06/blog-post_24.html#comments
தாஸ் அவர்களே காசியின் பெயருக்கு எலிக்குட்டியை வைத்துப் பார்த்தால் ப்ளாக்கர் எண் 10276736 தெரிகிறது. இது நிச்சயம் காசி அல்ல. போலி டோண்டுவின் இன்னொரு ரூபமே. அதே சமயம் போலி டோண்டு ஹின்ட் கொடுப்பது போல அவர் ஈழத்தமிழர் அல்ல. அவர் யார் என்பது பலருக்கும் தெரியும். கவனத்தைத் தன்னிடமிருந்து திசை திருப்பப் பார்க்கிறார். உங்கள் அனானிப் பின்னூட்டங்களை செயலிழக்கச் செய்யவும்.

வழக்கம் போல இப்பதிவு என் தனிப்பதிவிலும் நகலிடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/05/blog-post_25.html#comments
அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

This comment was posted by me in Kuzali's blog vide http://kuzhali.blogspot.com/2005/06/blog-post_28.html#comments
நன்றி குழலி அவர்களே. கெட்டதிலும் நல்லது நடந்துள்ளது. என் பெயரைக் கெடுப்பதற்காகச் செய்த மற்றும் செய்யப்படுகிற முயற்சிகளுக்கெதிராக இவ்வளவு குரல்கள் எழுவதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது.

முதலில் என் பெயரில் இன்னொரு வலைப்பதிவு வந்தது. அங்கு போய் க்ளிக் செய்தால் என் பக்கம் மெடா ரீடைரெக்ஷன் உத்தி மூலம் காட்சிக்கு வந்தது. இந்த இடத்தில் நான் ஒரு காரியம் செய்தேன். "என் பெயரில் வெளியாகும் பின்னூட்டங்கள்" என்றத் தலைப்பில் ஒரு பதிவு போட்டேன். அது இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆகவே மெடாரீடைரெக்ஷன் மூலம் என் பதிவுக்கு வருபவர்கள் கணகளில் இப்பதிவுதான் முதலில் தென் படும். போலி ஆசாமி இதை எதிர்ப்பார்க்கவில்லை. இந்த குயுக்தியான முறையைப் பற்றியும் பல முறை எழுதி விட்டேன். இப்போது அம்மாதிரி வருவதில்லை. போலி டோண்டுவின் ப்ளாக்கர் எண்ணுக்கு ப்ரொஃபைலே இல்லை. இப்போது டுண்டு என்ற பெயரில் அவர் உலா வந்து கொண்டிருக்கிறார். அவருக்கும் முகவரியில்லை. எல்லாரும் பிச்சைக்காரார்களாக சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். அதே கதிதான் துர்வாசனுக்கும் பாப்பானுக்கும்.

இப்போது டுண்டு தன்னை ஈழ ஆதரவாளராகக் கூறிக்கொண்டிருக்கிறார். இலங்கைத் தமிழ் எழுத முயற்சிக்கிறார். இதெல்லாம் திசைதிருப்பச் செய்யும் உத்திகள். அவர் யார் என்பது எனக்கும் இன்னும் பலருக்கும் தெரியும். எவ்வளவு தரக்குறைவான தமிழ் கெட்ட வார்த்தைகளை அவர் உபயோகிப்பார் என்பதும் தெரியும். தாஸின் பதிவில் அவர் காசியின் பெயரில் பின்னூட்டமிட்டுள்ளார். பார்க்க http://lldasu.blogspot.com/2005/06/blog-post_24.html#comments

வழக்கம் போல இப்பின்னூட்டம் என் தனிப்பதிவில் நகலிடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/05/blog-post_25.html#comments
அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

The following comment was posted by me in Goinchami blog vide http://goinchami.blogspot.com/2005/06/blog-post_27.html

The comment supposed to have been given by me is not mine. I am typing this in the computer at Kizakkupathippagam.

Regards,
Dondu Raghavan

dondu(#11168674346665545885) said...

The comment below was posted by me in Alwacity blog vide http://halwacity.blogspot.com/2005/06/blog-post_28.html#comments
என் இனிய நண்பர் ச. திருமலை அவர்கள் இம்மாதிரி லூசுத்தனமாக எழுதக் கூடியவ்ரே அல்ல. அவர் பெயரில் அசட்டு பின்னூட்டம் இட்டவர் போலி டோண்டுவே என்பது வெள்ளிடை மலை.

வழக்கம் போல இப்பின்னூட்டம் என் தனிப்பதிவில் நகலிடப்படும்.

பார்க்க: http://dondu.blogspot.com/2005/05/blog-post_25.html#comments

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

The comment below was posted by me in LLDasu's blog vide http://lldasu.blogspot.com/2005/06/blog-post_24.html#comments
"மன்னிக்கவும் டோண்டு அவர்களே... போலி டோண்டுவின் கருத்துகளும் இங்கே இடம் பெறட்டும் .. உங்களின் கருத்து இது இல்லை என்பது உங்கள் பின்னூட்டத்தின் மூலம் படிப்பவர்க்கு தெரியும் ..
வர்ற பின்னூட்டத்தில், அனானிமஸ்தான் அதிகம்.. அத எடுக்க சொல்றீங்களே ..கொஞ்ச நாள் பாக்குறேன் ."

இன்னும் எவ்வளவு நாள் பார்ப்பதாக உத்தேசம் தாசு அவர்களே?

--L-L-D-a-s-u--- said...
மேலே வந்து எனது பெயரில் வேறு யாரோ எழுதிச் சென்று விட்டார்கள். எனது ப்ளாக்கர் ஐடி திருடப்பட்டு விட்டது.

ஜூன் 29, 2005 10:10 AM
மாயவரத்தான்... said...
கொஞ்சம் மேலே வந்து எழுதிச் சென்றது சத்தியமாக நான் கிடையாது. நாட்டில் நிறைய போலிகள் உருவாகி விட்டனர். இதுபற்றி விரைவில் ஒரு பதிவு போடுவேன்.

ஜூன் 29, 2005 10:24 AM

காசி, தாசு, மாயவரத்தான் யாரையுமே விடவில்லை இந்தப் போலி டோண்டு. இன்னுமா அனானி பின்னூட்டத்தைச் செயலிழக்கச் செய்யாமல் இருப்பது? யோசியுங்கள் காசி அவர்களே.

வழக்கம் போல இப்பதிவு என் தனிப்பதிவிலும் நகலிடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/05/blog-post_25.html#comments
அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

In place of

The comment below was posted by me in LLDasu's blog vide http://lldasu.blogspot.com/2005/06/blog-post_24.html#comments

"யோசியுங்கள் காசி அவர்களே",

read

"யோசியுங்கள் தாசு அவர்களே"

அன்புடன்,
டோண்டு ராகவன்
cc: to my usual post

dondu(#11168674346665545885) said...

This comment was posted by me in http://dystocia.weblogs.us/archives/117
சு.ரா.வின் இக்கதைக்கு எதிர்க்கதை இங்கு வந்துள்ளது. பார்க்க: http://olikkumparai.blogspot.com/2005/06/blog-post_111944408367076249.html

இதை பற்றித் தங்கள் கருத்து என்ன பாம்பு அவர்களே?

வழக்கம் போல இப்பதிவு என் தனிப்பதிவிலும் நகலிடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/05/blog-post_25.html#comments

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

This comment was posted by me in Halwacity's blog vide http://halwacity.blogspot.com/2005/06/blog-post_29.html#comments
விஜய் அவர்களே, நீங்கள் எவ்வளவுதான் கூறினாலும் அனானி பின்னூட்டங்கள் விஷயத்தில் என் மனது சமாதானம் அடைய மாட்டேன் என்கிறது. உங்களை பொருத்தவரை நீங்கள் போலியை உடனே கண்டுபிடித்து விடுவீர்கள் என்பதில் ஐயமில்லை என்றாலும், நான் கவலைப் படுவது உங்கள் பதிவில் வரும் போலி டோண்டுவின் பின்னூட்டங்களை நம்பி விடும் மற்றவர்களை குறித்தேயாகும். இதில் எல்லோரையும் விட அதிகம் பாதிக்கப்பட்டது நானே என்பது எல்லோருக்கும் தெரியும்.

இவ்வளவு நடந்த பிறகும் மணிக்கூண்டு பதிவில் மூக்கு சுந்தர் என்னைத் தவறாகப் புரிந்து கொண்டு எனக்கு "சூடான" எதிர்வினை கொடுத்தார். அப்பின்னுட்டம் 10 மணி நேரம் அப்படியே இருந்திருக்கிறது. நான்தான் அசிங்கப்பட்டேன். உண்மை தெரிந்த பிறகும் டோண்டு சாதாரணமாக இப்படி எழுதக் கூடியவர் என்பதால் இதை நம்பினோம் போல என்று சிலர் பேசினர். அதில் ஒருவர் போலி டோண்டுவிடம் பொறுமை காத்திருந்தால் உண்மை டோண்டுவே போலி கூறியதை எழுதியிருப்பார் என்று வேறு அங்கலாய்த்தார். இதெல்லாம் எனக்கு தேவையா?

மறுபடியும் உங்களைக் கேட்டு கொள்கிறேன். அனானிப் பின்னூட்டங்களை உங்கள் பதிவில் செயலிழக்கச் செய்யுங்கள். திருடன் இருக்கும் போது வீட்டைப் பூட்டுவதுதான் புத்திசாலித்தனம். சாவி தொலைந்து விடும் என அஞ்சி சிலர் வீட்டுக்கு முன்னே மிதியடியின் கீழ் சாவியை போட்டு வைப்பது போல இருக்கிறது இப்போதைய நிலை.

வழக்கம் போல இப்பின்னூட்டம் என் தனிப் பதிவில் நகலிடப்படும். பார்க்க http://dondu.blogspot.com/2005/05/blog-post_25.html#comments

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

This comment was posted by me in Aruna's blog vide http://aruna52.blogspot.com/2005/06/blog-post_29.html#comments
அருணா அவர்களே, டோண்டு ராகவன் அனாமத்தாக வர மாட்டான் என்பது நீங்கள் அறிந்ததுதானே. இப்போது போலி டோண்டு உங்களிடமே வாலாட்டுகிறான் பார்த்தீர்களா? உங்கள் பதிவுகளிலிருந்து அனானிப் பின்னூட்ட வசதியை செயலிழக்கச் செய்யுங்கள் என்று நான் உங்களைத் தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறேன்.

வழக்கம் போல இப்பின்னூட்டம் என் தனிப் பதிவில் நகலிடப்படும் என்பதையும் கூறி விடுகிறேன்.

பார்க்க: paarkka: http://dondu.blogspot.com/2005/05/blog-post_25.html#comments

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

This comment was posted by me in Mugamoodi's blog vide http://mugamoodi.blogspot.com/2005/06/blog-post_28.html#comments
ஐயா முகமூடி அவர்களே,
நீங்கள் எழுதியதைப் பார்த்து அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. உங்கள் பதிவு அனானிப் பின்னூட்டங்களைச் செயலிழக்கச் செய்திருக்கிறது. இப்போது உங்கள் வேலை சுலபம்தானே. எலிக்குட்டியை பெயரின் மேல் வைத்து பார்க்கக்கூடத் தோன்றவில்லையா? அதுதான் ஆக்டோபஸ் போல போலி டொண்டு செயலாற்றுகிறாரே.

எலிக்குட்டியை பெயரின் மேல் வைத்து பார்ப்பதைக் கூட செய்யாது இவ்வாறு குழந்தையாக இருந்திருக்கீறீர்களே.

சென்னை பஸ்களில் ஜேப்படி கும்பல் ஏறும்போது நடத்துனர் சில மறைமுக சமிக்ஞை தருவார். புரிந்து கொண்டப் பயணிகள் தங்கள் உடமைகளைப் பாதுகாத்து கொள்வர். மற்றோர் கோமணம் வரை பறிகொடுத்து நிற்பர்.

வழக்கம்போல இப்பின்னூட்டம் என் வழக்கமானப் பதிவில் நகலிடப்படும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

I wanted to post this comment to Halwacity blog vide http://halwacity.blogspot.com/2005/06/blog-post_29.html but could not, due to new settings in that blog commentingsystem.

என்னடா எலி அம்மணமா போறதேன்னு நினைச்சேன். ஐ.பி. முகவரிகளை சேமிக்கத்தானா இத்தனை வேலையும். நான் கூறியதை எல்லாம் சந்தோஷமாக திரும்பப் பெறுகிறேன். நடத்துங்கள் விஜய் தம்பி. என்ன இருந்தாலும் எனக்குத் தனியாக மின்னஞ்சல் போட்டிருக்கலாமில்லையா.

வழக்கம் போல இப்பின்னூட்டம் என் தனிப் பதிவில் நகலிடப்படும். பார்க்க http://dondu.blogspot.com/2005/05/blog-post_25.html#comments

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

This comment was posted by me in e-Tamil blog vide http://etamil.blogspot.com/2005/06/blog-post_29.html#comments

At Madame Tussaud's?

Regards,
N.Raghavan

«Oldest ‹Older   1 – 200 of 529   Newer› Newest»
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது