திரு அதியமான அவர்கள் துடிப்பு மிக்க இளைஞர். ஆங்கிலத்தில் பதிவுகள் போட்டு வந்தார். அவரிடம் தமிழுக்கு வருமாறு நான் ஒரு முறை கேட்டு கொண்டேன். இன்னும் பலரும் கேட்டுக் கொண்டுள்ளனர். ஆகவே எங்கள் ஆலோசனை ஏற்று அவரும் தமிழ்வலைப்பூ துவங்கியுள்ளார். அது பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை.... என்ற தலைப்பில் வருகிறது. அவரது இந்த வலைப்பூவுக்கு எனது இப்பதிவில் இணைப்பைத் தருவதில் மிக்க மகிழ்ச்சி.
எனக்கும் அவருக்கும் பொருளாதார விஷயங்களில், ராஜாஜியிடம் ஈடுபாடு கொண்டிருப்பது போன்று பல விஷயங்களில் ஆச்சரியமான ஒற்றுமைகள் உள்ளன. துடிப்பான இந்த இளைஞரை வருக வருக என வரவேற்கிறான் டோண்டு ராகவனான இந்த 61 வயது இளைஞன்.
தமிழ்மணத்திற்கும் வருவாரா என்பதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும் வரவேண்டும் என்றே நான் ஆசைப்படுகிறேன்.
சில ஆலோசனைகள்:
டிஸ்ப்ளே பெயரை அதியமான் (#13230870032840655763) என்று போட்டுக் கொள்ளவும். ப்ரொஃபைல் படமும் போட்டு, தனது கமெண்ட் பப்ளிஷிங் பக்கத்தில் படத்த்தை எனேபிள் செய்யவும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Manasa Book Club, Chennai.
-
Hi Sir, Hope you’re doing well. Manasa Publications has launched the
‘Manasa Book Club’ — a monthly gathering for readers and writers. The meet
will be on ...
8 hours ago

23 comments:
அதியமான் அவர்களை நாங்களும் பழக பழக என வரவேற்கின்றோம்.
மிக்க நன்றி ஐய்யா
பதிவர் எண் மற்றும் படம் நான் சொன்ன மாதிரியே போட்டுள்ளீர்கள். பலே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அதியமான்,
உங்கள் பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்கிறேன். வாழ்துக்கள்!
இணைப்பு கொடுத்த டோண்டு ஐய்யாவுக்கு நன்றி!
நோண்டு சாரின் இன்னொரு அவதாரம், அவர்களே வருக வருக.
நன்றி ஜயகமல். நீங்களும் தமிழ்வலைப்பூ உலகில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என நான் விரும்புகிறேன். இப்போதுதான் அதியமான் என்னுடன் தொலைபேசினார். உங்களையும் நிரம்ப விசாரித்தார். முடிந்தால் நாம் ஆகஸ்ட் 5 வலைப்பதிவர் சந்திப்பில் பார்க்கலாம் என ஆவல் தெரிவித்தார்.
நம் மூவருக்கும் பொருளாதார விஷ்யங்களில் அதிசயிக்கத் தக்க அளவில் மன ஒற்றுமை உள்ளது.
சோஷலிசம் கம்யூனிசம் என்றெல்லா விடப்படும் புருடாக்களை வெற்றிகரமாக எதிர்க் கொள்வோம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//நோண்டு சாரின் இன்னொரு அவதாரம், அவர்களே வருக வருக.//
அதியமான் வயதில் நான் என்னவெல்லாம் சிந்தித்தேனோ அவ்வாறே அவரும் சிந்தித்து வருகிறார். அதற்காகாக அவதாரம் என்றெல்லாம் கூறுவது டூ மச். மிகுந்த சுதந்திர சிந்தனையுள்ள அதியமான் அவராகவே உள்ளார்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
வேறு ரூபத்தில் வந்திருக்கும் முரளி மனோஹர் அவர்களை வருக வருக என வரவேற்கிறோம்.
dondu rocks :)
//நோண்டு சாரின் இன்னொரு அவதாரம், அவர்களே வருக வருக.//
அதியமான் வயதில் நான் என்னவெல்லாம் சிந்தித்தேனோ அவ்வாறே அவரும் சிந்தித்து வருகிறார். அதற்காகாக அவதாரம் என்றெல்லாம் கூறுவது டூ மச். மிகுந்த சுதந்திர சிந்தனையுள்ள அதியமான் அவராகவே உள்ளார்.
அவதாரம் என்று சொன்னதற்கு அப்படி ஒரு அர்த்தம் இருக்கா? நான் சொன்னது நீதான் அது என்று!
எதிரித் தரப்பினருக்கு ஒரு வருத்தம் தரும் செய்தி. அதியமான் உண்மையிலேயே உள்ளார். ஆகஸ்ட் 5 அன்று சென்னை வலைப்பதிவர் சந்திப்புக்கு வருவதாகக் கூறியுள்ளார்.
இன்னொரு விஷயம். என் வீட்டிற்கு அவர் வந்து மணிக்கணக்கில் பேசிவிட்டு சென்றார். ராஜாஜி பற்றிய சில புத்தகங்களும் கொடுத்து சென்றார்.
என் எதிரிகள் ஐயோ பாவம்தான்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
கிழட்டு மாமா,
//என் எதிரிகள் ஐயோ பாவம்தான்.//
எழுத்தை வெச்சு கண்டு பிடிச்சிருவோம்ல, பிடிச்சிருவோம்ல பிடிச்சிருவோம்ல.
முரளி மனோஹர் மாதிரி மாட்டாமலா போயிடப் போறே?
//என் எதிரிகள் ஐயோ பாவம்தான்.
Good shot :)
dondu please remove poli comment in the name of ravi
I can see many people critcize or abuse Rajaji as casteist saying that he encouraged "Kulakalvi" leading to disparity among people.
what is your opinion, sir?
//அதியமான் அவர்களும் பார்ப்பனர்தானா? //
போலியாக இருந்தால் பாப்பான்தானா? என்று கேட்பான்.
போலி மடிப்பாக்கம் மறுமொழிகளை அழிக்கவும். நான்தான் உண்மையானவன்.
திராவிட பத்திரிக்கை்ரிக்கை நிருபர்- ்வன்
பெரியார் நகர், மடிப்பாக்கம்
குணசேகரன் அவர்களே மாமனிதர் ராஜாஜை பற்றி நான் இட்ட 5 பதிவுகளில் இரண்டாவதைப் பார்க்கவும். அதில் ராஜாஜி அவர்களின் கல்வித் திட்டத்தைப் பற்றி பார்க்கலாம்.
குணசேகரன் அவர்களே நீங்கள் ப்ரோஸ்.காம் உறுப்பினரா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
///செந்தழல் ரவி said...
அதியமான் அவர்களும் பார்ப்பனர்தானா?
///
அதர் ஆப்ஷனில் போடப்பட்ட இந்த பின்னூட்டம் என்னுடையது அல்ல...இந்த பின்னூட்டமும் அதர் ஆப்ஷனில் தான் போடுகிறேன் என்பது வேறு விஷயம்...
இது போன்ற சில்லித்தனமான பின்னூட்டங்களை நான் போடமாட்டேன் என்பதும் இன்னோரு விஷயம்...
அதனை நீக்கவும்...!!!
ரவி அவர்களே எனக்கு தொலைபேசி மூலம் தெரிவித்திருக்கலாமே அல்லது நேரடி மின்னஞ்சல் மூலம். இருப்பினும் சம்பந்தப்பட்ட கருத்தை நீக்கியதற்கு காரணம் அது மாதிரி லூசுத்தனமாக நீங்கள் எழுத மாட்டீர்கள் என்பதை நானும் நம்புவதாலேயே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு ஸார், எல்லாரும் சொல்ல வந்ததை அதியமான் பதிவுல போய் நானே சொல்லிட்டேன்.. ம்.. உங்களுக்கு கவலையில்லை. யாராவது ஒருத்தரு இப்படித் துணைக்கு வந்தர்றாங்க.. எப்படி ஸார் இப்படி?
//அதியமான்.. ரொம்ப சுதாரிப்பாத்தான் இருக்கீங்க.. டோண்டு கூட்டிட்டு வந்திருக்காருல்ல.. அதான்.. எப்படியாகினும் தங்களது வருகைக்கு வாழ்த்துக்கள்.. வரவேற்கிறோம்.. ஆனா சூதானம் வேணும் தம்பி... ஏன்னா டோண்டு கூடவே இருக்காரு.. இந்த கமெண்ட்டை allow பண்ணிட்டு கையோட கூடவே அனானி கமெண்ட்டுகளை தடை பண்ணிருங்க. அப்பத்தான் ராத்திரி நீங்க நிம்மதியா தூங்க முடியும்..//
I wish I could interpret these series of question marks.Did you have a prince ever visit your blog?If yes which one?
Post a Comment