5/19/2011

டோண்டு பதில்கள் - 19.05.2011

ரமணா
கேள்வி-1. ஜெயா டீவிக்கு சோ அளித்த பேட்டியில் குஜராத் மோடி போல் ஜெயல‌லிதா ஆட்சி செய்வார் எனச் சொன்னார்‍‍௧ள்‍‍‍ ‍நம்புகிறீர்களா?
பதில்: இல்லவே இல்லை.

கேள்வி-2.காங்கிரசாரின் அடுத்த மூவ் என்னவாயிருக்கும்?
பதில்: தமிழகம் பொருத்தவரை ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் திமுகவை மேலே மாட்ட முயல்வதாக இருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

கேள்வி-3.அழகிரியின் வழக்குகள் இனி?
பதில்: தூசி தட்டப்படும் என ஓரிடத்தில் படித்தேன். அழகிரி மதுரையிலிருந்து காலி செய்வார் என வதந்தி.

கேள்வி-4. கருணாநிதியின் இரண்டு குடும்பங்களுக்குள் இனி என்ன நடக்கும்?
பதில்: பரஸ்பர குற்றச்சாட்டுகள்

கேள்வி-5. வைகோவின் அரசியல் எழுச்சி வாய்ப்புண்டா?
பதில்: மனது வைத்தால் முடியும். அதாவது மக்கள், ஹி ஹி ஹி.

கேள்வி-6. ஸ்டாலினின் இழுபறி வெற்றி பற்றி?
பதில்: போகட்டும், அந்த ஆறுதல் கூட அவருக்கு இல்லாவிட்டால் எப்படி?

கேள்வி-7. தேர்தல் கமிஷ்னின் கெடுபிடியில் பின்னணியில் யார்?
பதில்: தேர்தல் கமிஷன் கெடுபிடி காட்ட, மத்திய அரசு போகட்டும் என விட்டதாகத் தோன்றினாலும், மனது வைத்தால் இவ்வாறே தேர்தல் கமிஷன் சேஷன் காலக் கண்டிப்பு போல காட்டி எப்போது வேண்டுமானாலும் இதைச் செய்யலாம் என்றுதான் படுகிறது.

கேள்வி-8. தமிழகத்தில் பாஜகவுக்கு இனி எதிர்காலம்?
பதில்: நிறைய உழைப்பு தேவை. மக்கள் பிரச்சினைகளில் அவர்களுக்கு தோள் தரவேண்டும். கடினமான வழிதான் ஆனால் வேறு வழியில்லை.

கேள்வி-9. ராகுல் திட்டம் தமிழகத்தில் தோல்விதானே?
பதில்: திட்டம் போட்டால் போதுமா? செயல் வீரர்கள் தேவையல்லவா. காங்கிரசில் தொண்டர்கள் ஏது? எல்லோருமே தலைவராக ஆக அல்லவா முயற்சிக்கின்றனர்.

கேள்வி-10. ஜெயலலிதாவிடம் ஒரு அசாத்திய அடக்கம் தெரிவது போல் உள்ளதே?
பதில்: அது அப்படியே நிலைத்தால் நாட்டுக்கு நல்லது.

கேள்வி-11. பாமகவுக்கு கிடைத்த அடி?
பதில்: மரண அடி.

கேள்வி-12. திருமாவும் பாவம்தானே?
பதில்: ஆமாம்.

கேள்வி-13. மேல்சபை இனி வருமா?
பதில்: தெரியவில்லையே

கேள்வி-14. ஆசை ஆசையாய் கருணாநிதி கட்டிய புது சட்டமன்றம் இனி?
பதில்: சரியான ராகுகாலத்தில் ஆரம்பித்தாரோ?

கேள்வி-15. மின் வெட்டுப் பிரச்சனை சரியாகுமா?
பதில்: குஜராத்தில் மோதி சாதித்தார். ஜெயும் மனது வைத்தால் இங்கு சாதிக்கலாம்.

கேள்வி-16. உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி மாற்ற‌ம் வருமா?
பதில்: எப்போது உள்ளாட்சித் தேர்தல்? அப்போது பார்க்கலாம்.

கேள்வி-17. இலவச வீட்டு வசதி திட்டம் இனி?
பதில்: சாதாரணமாக ஜெயும் கலைஞரும் ஒருவர் செய்த திட்டங்களை இன்னொருவர் தொடர்வதில்லை

கேள்வி-18. ஒரு லடசம் கோடி கடனாமே எப்படி சரி செய்வார் ஜெ.?
பதில்: மூன்றாம் முறையாக பதவி ஏற்கும் அவருக்குத் தெரியாதா என்ன செய்ய வேண்டுமென.

கேள்வி-19. கள் இறக்க அனுமதி கொடுக‌கப்படுமா? சரியா?
பதில்: தெரியாது. சரியே.

கேள்வி-20. இன்னும் 16 வருசத்திற்கு ஜெயலலிதாவின் ஜாதகப்படி அவர்தான் முதல்வராமே?
பதில்: அதற்கு அவர் தன்னை நிரம்ப மாற்றிக் கொள்ளவேண்டுமே.

21. மின்வெட்டினை சரி செய்தல்,ஒரு லட்சம் கோடி கடனை திருப்பிச் செலுத்தும் முகமாய் பொருளாதார நடவடிக்கைகள், சட்டம் ஒழுங்கு சரி செய்தல், விலை வாசி கட்டுப்படுத்துதல் போன்றவற்றில் கவனம் செலுத்தத்தான் மக்கள் ஜெயலலிதாவுக்கு வாக்களித்தனர் என்பதை மறந்தால்?
பதில்: அடுத்த தேர்தலில் பணால்.

22. கருணாநிதியால் கட்டப்பட்டது என்ற ஒரு காரணத்திற்காக முடக்கப்படும் புதிய தலமைச் செயலகம்,மாற்றப்படும் செம்மொழி நூலகம், ஊழல் சார்ந்த வழக்குகளில் அதீத அக்கறை போன்றவற்றினால் மக்களின் அனுதாபம்,வரும் உள்ளாட்சிச் தேர்தலில் திமுக பக்கம் திரும்பும் போல் தெரிகிறதே. காங்கிரஸ் கைவிடாத படசத்தில் எதுவும் நடக்கலாம்.
துக்ளக் சோ முதல்வர் ஜெயலலிதாவுக்கு அறிவுரை கூறுவாரா?

பதில்: நிறைய அனுமானங்களை உள்ளடக்கிய கேள்வி.


pt
டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
கேள்வி-21. தமிழக மக்களுக்கு ஒளிமயமான எதிர்காலம்: ஜெயலலிதா உறுதி

பதில்: மின்வெட்டை வராது தடுத்தாலே போதுமே.

கேள்வி-22. தேர்தல் ஆணையம் தன் கடமையில் வென்றுள்ளது - வைகோ
பதில்: சற்றே வயிற்றேரிச்சல் இருப்பது போல தோன்றுகிறது.

கேள்வி-23. அன்பழகன் முதல் தமிழரசி வரை 18 தி.மு.க. அமைச்சர்கள் தோல்வி
பதில்: காலத்தின் கட்டாயம் அது.

கேள்வி-24. கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணி நூலிழையில் வெற்றி
பதில்: கேரளாவில் படித்தவர்கள், விவரம் தெரிந்தவர்கள் அதிகம்.

கேள்வி-25. 50,249 வாக்குகள் வித்தியாசத்தில் கருணாநிதி வெற்றிஅப்போது.
பதில்: சமீபத்தில் 1967-ல் அப்போதைய தமிழக மந்திரி பூவராகனைத் தவிர மற்ற எல்லா தமிழக காங்கிரஸ் மந்திரிகளும் தோல்வி. “அசிங்கத்துக்கு பொட்டு வைத்தாற்போல என மபொசியின் கமெண்ட் அப்போது.

கேள்வி-26. காகித ஓடம் கடலலை மீது// போவது போலே மூவரும் போவோம்// ஆதரவின்றி ஆழ்ந்திடும் ஓடம்// அது போல் ஒன்றாய் மூழ்குதல் நன்றாம்//
காகித ஓடம் கடலலை மீது// போவது போலே மூவரும் போவோம்//
IS THIS TOO MUCH? dondu's special comment please.

பதில்: டூ மச் அல்ல, த்ரீ மச்.

ரமணா
கேள்வி-26. அதிமுகவின் தலைவி முதல்வர் ஜெயலலிதா இரண்டு முக்கிய அறிவிப்புகள் செய்ததாக சொல்லப்படுகிற‌தே உண்மையா? 1.காலில் விழும் கலாச்சாரத்திற்கு விடுதலை 2.முதல்வர் செல்லும் வழியில் போக்குவரத்து நிறுத்தம் இனி கிடையாது.
பதில்: ஆசை, தோசை, அப்பளம் வடை.


மேலும் கேள்விகள் வந்தால் அடுத்த வாரம் சந்திப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

21 comments:

pt said...

டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
1. மதுரையில் ரூ.1000 கோடி மதிப்புள்ள நிலங்களை போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்த 6 பேர் கைது
2.முதல்வர் ஜெயலலிதாவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் பாராட்டு
3.அமைச்சர்கள் நல்ல பெயர் வாங்க வேண்டும்: முதல்வர் ஜெயலலிதா
4.எம்.எல்.ஏ. பதவியேற்பில் தாமதம்: சிக்கலை ஏற்படுத்துமா?
5.கர்நாடகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலில் ஆளுநருடன் முதல்வர் திடீர் சந்திப்பு

Arun Ambie said...

For டோண்டு பதில்கள்:

கர்நாடகாவில் ஆளுநர் பரத்வாஜ் அந்தர் பல்டிவாஜ் ஆனதற்கு ஏதாவது ஸ்பெஷல் காரணம் இருக்கிறதா? காங்கிரசு தலைமையின் ஆசியோடு தானே இத்தனை நாளும் ஒரு குறிக்கோளோடு செயல்பட்டுவந்தார். திடீரென்று எட்டியூரப்பா மீது பாசம் பொங்க என்ன/யார் காரணமாக இருக்க முடியும்?

பழமைபேசி said...

ஆயத்திடம் அதிக விலை கொடுத்து வாங்கி, மின் தேவையைப் பூர்த்தி செய்து கொள்கிறார் மோடி என்கிறார்கள். உண்மையா? இல்லையெனில் எப்படிச் சமாளிக்கிறார்??

ரமணா said...

முதல்வர் ஜெயலலிதா , முன்னாள் முதல்வர் கருணாநிதி ஒப்பிடுக?
1.அமைச்சரவை கூட்டம் நடத்துதல்
2.கோப்புகளை கையாளுதல்
3.சட்டசபை நடவடிக்கைகள்
4.ஆங்கிலத்தை கையாளுதல்
5.காவல் துறை
6.மதிய அரசுடன் உற‌வு
7.அண்டை மாநிலங்களுடன் உள்ள பிரச்சனைகளை கையாளுதல்
8.திரைப் படத் துறை செயல் பாடுகள்
9.சின்னத் திரை செயல்பாடுகள்(சொந்த டீவிகள்)
10.கூட்டணிக் கட்சிகள் உறவு
11.எதிர்க்கட்சிகளை கையாளுதல்
12.இலங்கை பிரச்சனை
13.கட்சியிலிருந்து பிரிந்து செல்பவரை கையாளுதல்
14.அரசு அதிகாரிகளின் திடீர் மாறுதல்கள்
15.நன்பர்கள்,உற‌வினர்கள் ஆகியோரின் அதிகார துஷ்பிரோயோகம்
16.நதி நீர் பிரச்சனைகள்
17.மின் வெட்டு
18.கல்வி சீரமைப்புகள்
19.அரசு ஊழியர்,வக்கீல்,மாண‌வர் போராட்டங்கள்
20.பத்திரிக்கைகள்,ஊடகங்கள்

குறிப்பு:இது பற்றிய ஒரு விரிவான விளக்கம் இன்றைய இளைஞர்களுக்கு பழைய வரலாறை தெரிய‌வைக்கும்.

ரமணா said...

//Arun Ambie said...

For டோண்டு பதில்கள்:

கர்நாடகாவில் ஆளுநர் பரத்வாஜ் அந்தர் பல்டிவாஜ் ஆனதற்கு ஏதாவது ஸ்பெஷல் காரணம் இருக்கிறதா? காங்கிரசு தலைமையின் ஆசியோடு தானே இத்தனை நாளும் ஒரு குறிக்கோளோடு செயல்பட்டுவந்தார். திடீரென்று எட்டியூரப்பா மீது பாசம் பொங்க என்ன/யார் காரணமாக இருக்க முடியும்?//

அழகிரியின் ராஜ தந்திரம் போல் ஏதாவது இருக்க வாய்ப்புள்ளதோ !

ரமணா said...

1.பாண்டிச்சேரி முதல்வர் ரெங்க சாமி நம்பிக்கை துரோகம் செய்து விட்டதாய் குற்றம் சாட்டும் அதிமுக தலைவியை,விஜயகாந்த் எப்படி விமர்சிப்பார்,அம்மையாரின் டெல்லி விஜயத்திற்குப்பின்னால்?
2. 14 லட்சம் +1,+ 2 மாண‌வர்களுக்கு இலவச லேப் டாப் சாத்யமா?
3.ஒரு கோடி மிக்சி,கிரைண்டர்,மின் விசிறி வசந்த் டீவி அதிபர்க்கு யோகமா?
4.அதிமுகவின் எளிமையான நன்றி அறிவிப்பு எப்படி?
5.கருணாநிதி சட்ட‌ சபை தொடர்ந்து செல்வாரா?

pt said...

Dear friends across India,

On Monday, the Jan Lokpal Drafting Committee will decide if the Prime Minister is accountable under anti-corruption laws. Government Ministers will try to put his office above the law. Let's build a massive public push before the meeting, and get a totally independent system that can clean up politics at all levels.

Should the PM’s office be under the jurisdiction of the Jan Lokpal?

Yes
No

Clicking on 'Yes' will allow you to sign a petition that reads:

To the Jan Lokpal Drafting Committee:
We call on you to ensure that the the Prime Minister's office is under the jurisdiction of the Jan Lokpal bill, creating an effective and strong law that treats all levels of government fairly and equally.

Jan Lokpal is our best shot at cleaning up politics and fighting corruption at all levels of government. Exempting the highest political office from its reach would undermine the entire anti-corruption effort.

Click 'Yes' to sign and forward this to everyone -- we will deliver the numbers at the meeting and with hard-hitting billboards around Parliament on Monday.

With hope,

Saloni, Emma, David, Alice, Ricken, Ben, Shibayan, and the whole Avaaz team


Support the Avaaz community! We're entirely funded by donations and receive no money from governments or corporations. Our dedicated team ensures even the smallest contributions go a long way -- donate here.

https://secure.avaaz.org/en/donate_to_avaaz/?cl=1077058548&v=9156

ezhil arasu said...

திமுகழகத்தொண்டர்களெல்லாம் மிகவும் விழிப்புடன் இருக்க வேன்டிய தருணம்.அதிகாரபோதை,ஆணவ தர்பார்,ஆடம்பரம் எனும் குற்றச்சாட்டுக்களால் பெரும் புகழ பெற்ற ஒரு கட்சியின் அணுகுமுறைகளில் ஒரு மாற்ற‌ம் தெரிகிற‌து.மனுநிதிச் சோழனின் மறு அவதாரமாய் வெற்றி வலம் வந்த நம் தானைத் தலைவனை பூணுல்காரர்களெல்லம் ஒன்று கூடி பொய் குற்றம் சுமத்தி பாமர மக்களை ஏமாற்றி 6 வது முறை முதல்வராய் ராஜ்ய பரிபாலனம் செய்யும் நல் வாய்ப்பினை தடுத்து விட்டனர்.கலைஞர் ஏழைகளுக்கு ஒரு ரூபாயில் போட்ட அரிசையை இலவசமாய் தருகிறேன் என அறிவிப்பது அவர் பேர் உள்ள நற் புகழை குறைப்பதற்குத்தான் எனபதை நாடறியும்.கொடுத்த இலவசங்காளால் அரசுக்கு ஒரு லடசம் கோடி கடனென்று சொல்லும் அதிமுக தேர்தல் அறிக்கையில் சொல்லபட்டவைகளை நிறைவேற்றும் முறையை உன்னிப்பாக கவனி திமுக தொண்டனே.திமுகவை தனிமைப் படுத்த ஆரியக் கூட்டம் சதி செய்வதாய் வரும் செய்திகளை எப்படி சந்திப்பது என கழகத்திற்கு தெரியும்.அது கண்டு கலங்காதே.தளபதியும்,அஞ்சாநெஞ்சனும் இணைந்த கைகளாய் மாறி,தயாநிதியின் உதவியுடன் ஆட்சியை மீட்பர் 2014ல்.1971ன் சரித்திரம் திரும்பும்.இனி திமுகவை மட்டுமே மக்கள் நம்புவர்.

Ganpat said...

கே:அத்தனை பதில்களும் மொக்கையாக இருந்தாலும்,கேள்விகள் வந்து குவிவதின் ரகசியம் என்னவோ?

ப:என்னைக்கேட்டால்?
கேள்வி கேட்பவர்களைத்தான் கேட்கவேண்டும்

ezhil arasu said...

நீதி தேவனின் செல்வ‌ மகளை கடைசியில் காரக்கிரகத்தில் அடைத்துவிட்டனர்.பெரியவர் வல்லவர் நல்லவர் எப்படியும் நியாயம் பெற்றுத் தருவார் என தமிழ்ச் சமுதாயம் நம்புகிறது.இதை சாக்கிட்டு லட்சிய உறவைப் பிரிக்க சதி செய்வர் கெடுமதியாளர்கள் என்பதை நன்கு அறிந்த அறிவுசால் தலைவர் கூட்டணி தொடரும் என பறைசாற்றியது கண்டு ஆதிக்க சக்திகள் குழப்பத்திலுள்ள‌து உலகறிந்த உண்மை.

thenkasi said...

தென்பாண்டி சீமையில தேரோடும் வீதியில
மான் போல வந்தவனே யாரடிச்சாரோ யாரடிச்சாரோ யாரடிச்சாரோ
யாரடிச்சாரோ யாரடிச்சாரோ
வளரும் பிறையே தேயாதே
இனியும் அழுது தேம்பாதே
அழுதா மனசு தாங்காதே (2)
தென்பாண்டி சீமையில தேரோடும் வீதியில
மான் போல வந்தவனே யாரடிச்சாரோ யாரடிச்சாரோ யாரடிச்சாரோ
யாரடிச்சாரோ

thenkasi said...

கால மகள் கண்திறப்பாள் சின்னய்யா
நாம் கண்கலங்கி கவலை பட்டு என்னய்யா
கால மகள் கண்திறப்பாள் சின்னய்யா
நாம் கண்கலங்கி கவலை பட்டு என்னய்யா
நாலு பக்கமும் வாசலுண்டு சின்னய்யா
அதில் நமக்கும் ஒரு வழியில்லையா என்னய்யா
கால மகள் கண்திறப்பாள் சின்னய்யா
நாம் கண்கலங்கி கவலை பட்டு என்னய்யா

hayyram said...

திராவிடன் என்றால் பயந்தாக்கொல்லியாம். இதைப் படித்தீர்களா?
////////

’த்ரு’, ‘த்ரா’ என்று ஓட்டம் என்னும் பொருளில் வருகிறது என்று முன்னமே ஆராய்ந்தோம் (பகுதி 51) உயிருக்குப் பயந்து, தங்களைக் காப்பாற்றிக் கொள்ள ஓடி வந்ததால் அவர்கள் திராவிடர்கள் என்றும் பொருள் கொள்ளலாம்!

க்ஷத்திரியத்தை விட்டு ஓடி விட்டதால், க்ஷத்திரியத்தை விட்டவனுக்கு திராவிடன் என்று பெயர்
என்று மனுஸ்ம்ருதி சொல்லியிருக்கிறது என்றும் நாம் ஏற்றுக் கொள்ள முடியும்.
////////

http://thamizhan-thiravidana.blogspot.com/2011/05/53.html

pt said...

CLICK THIS LINK FOR HOT NEWS ABOUT DMK AND ITS LEADER.

http://savukku.net/home/853-2011-05-20-15-39-41.html#comments

Arun Ambie said...

For டோண்டு பதில்கள்:

1. மு.க.இசுடாலின் அவர்கள் கொளத்தூர் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளாரே! (நியாயப்படி குளறுபடி செய்த அலுவலர்களுக்கல்லவா நன்றி சொல்லவேண்டும்?)

2. மு.க. அழகிரி மதுரையில் வீட்டை விட்டு வெளியே வரவேயில்லையே... அவரையே நம்பியிருக்கும் வடிவேலு முதலிய அடிப்பொடிகளை எப்படிக் காப்பாற்றப் போகிறார்?

3. ஒரு நிறுவனத்தின் வரவு செலவுகளுக்கு நிர்வாகிகள், பங்குதாரர்கள் பொறுப்பல்ல என்ற சமீபத்திய (நெஞ்சுக்கு) நீதி பற்றி உங்கள் கருத்து...

4. தோட்டா தரணி செட் போட்ட சட்டசபைக் கட்டிடத்தின் திட்ட மதிப்பைக் கூட்டிச் சொல்லி சில கோடிகள் சுருட்டப்பட்டனவாமே?

5. டாடாவுடனான நிலபேரம் தொடர்பாக ஜாபர்சேட் முக்கிய ஆவணக் கோப்புகளை கார்டனில் கொடுத்து தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டிக்கொண்டாராமே? நம்பிக்கை திரோகமில்லையா இது?

ezhil arasu said...

ஆரிய ஆதிக்க சக்திகளின் கூட்டு சதியால் தரும ஆட்சி பறிக்கபட்ட பின்னால் தலைவர் சோர்ந்து விடுவர் என தவறான எண்ணம் கொண்டோரும் அவர் சீராட்டி வளார்த்த செல்வ மகள் செய்யாத குற்றத்திற்காக கடுஞ் சிறையில் மிகுந்த் துன்பத்திற்கு ஆட்பட்ட போதும் குதுகலம் அடைந்தோரும் எதிர்பார்க்காத‌
கோணத்தில் இந்தச் சதிகளை முறியடிக்க‌ காங்கிரசில் உள்ள ஆத்ம நண்பர்களாம் நல்லவர்
பிராணப்,வல்லவர் சிதம்பரம் போன்றோரை டெல்லி சென்று சந்தித்து ஆவன செய்யச் செல்லும் தலைவரின் கழகம் காக்கும் அற‌ப் போராட்டம் வெல்லட்டும்.
குடும்ப‌ ஆட்சியென ஓயாமல் பிதற்றும் சக்திகள் தலைவரின் டெல்லி பயண‌த்தை கொச்சைப் படுத்தி பேசுவர் .அதைக் கண்டு கொள்ளாத மன உறுதி சற்றும் குலையாத திமுக தொண்டன் என்றும் தலைவரின் புகழ் பாடி தொண்டாற்றிடுவான்.கழகம் வீழ்ந்துவிட்டது என கொக்கரிக்கும் கூட்டத்தின் ஆட்டம் எத்தனை நாள் பார்ப்போம்.

thenkasi said...

குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி
கொள்வதென்பதேது (2)

(எம்.ஆர்.ராதா)
ஆம் ஆம்..
வாழ்க்கையில் குற்றங்களே புரிந்த
எனக்கு நிம்மதி ஏது


அற்றேத உலகில் அமைதியும் மகிழ்வும் (2)
அரும்பிட முடியாது



(எம்.ஆர்.ராதா)
முடியாது. உண்மை, உண்மை,
என் ஆனந்தம் என் மகிழ்ச்சி என் இன்பம்
அத்தனையும் அற்று போய்விட்டது


அமைதியழிந்தது புயலும் எழுந்தது
ஆணவம் இன்றோடொழிந்தது (2)


(எம்.ஆர்.ராதா)
ஒழிந்தது, என் ஆணவம் என் கர்வம் என் அகம்பாவம்
அத்தனையும் அற்று போய்விட்டது



குணத்தை இழப்பவன் இறுதியிலே நல்ல சுகம் அடைவது ஏது
நல்ல குணத்தை இழப்பவன் இறுதியிலே நல்ல சுகம் அடைவது ஏது


(எம்.ஆர்.ராதா)
வாஸ்த்தவம், குணத்தை இழந்தேன், கொண்டவளைத் துறந்தேன்
கண்டவள் பின் சென்றேன் கட்டுடலையும் இழந்தேன்
இன்று கண்ணையும் இழந்தேன்
வாழ்க்கையில் இனி நிம்மதி யேது ஏது



(குற்றம் )

thenkasi said...

சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி(2)
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி

சொந்தம் ஒரு கை விலங்கு நீ போட்டது
அதில் பந்தம் ஒரு கால் விலங்கு நான் போட்டது
சொந்தம் ஒரு கை விலங்கு நீ போட்டது
அதில் பந்தம் ஒரு கால் விலங்கு நான் போட்டது
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி

ஆதாரம் இல்லையம்மா ஆறுதல் சொல்ல
நான் அவதாரம் இல்லையம்மா தத்துவம் சொல்ல
பரிகாரம் தேடி இனி எவ்விடம் செல்ல
எனக்கு அதிகாரம் இல்லையம்மா வானகம் செல்ல
ஒரு நாளும் நான் இது போல் அழுதவனல்ல
அந்த திருனாளை கடன் கொடுத்தவன் யாரிடம் சொல்ல

சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி(2)
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி

( மாமா… காஞ்சிப்போன பூமி எல்லாம் வத்தாத நதியை பாத்து ஆறுதல் அடையும்.
அந்த நதியே காஞ்சி போய்ட்டா??
துன்பப் படுறவங்க எல்லாம் அந்த கவலையை தெய்வத்துகிட்ட முறையிடுவாங்க.
ஆனா தெய்வமே கலங்கி நின்னா??
அந்த தெய்வத்துக்கு யாரால ஆறுதல் சொல்ல முடியும்??? )

நானாட வில்லையம்மா சதையாடுது
அது தந்தை என்றும் பிள்ளை என்றும் விளையாடுது
பூவாக வைத்திருந்தேன் மனமென்பது
அதில் பூநாகம் புகுந்து கொண்டு உறவென்றது
அடி தாங்கும் உள்ளம் இது இடி தாங்குமா
இடி போல பிள்ளை வந்தால் மடி தாங்குமா

சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி(2)
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி

Ana Times said...

//மனுநிதிச் சோழனின் மறு அவதாரமாய் வெற்றி வலம் வந்த நம் தானைத் தலைவனை பூணுல்காரர்களெல்லம் ஒன்று கூடி பொய் குற்றம் சுமத்தி பாமர மக்களை ஏமாற்றி 6 வது முறை முதல்வராய் ராஜ்ய பரிபாலனம் செய்யும் நல் வாய்ப்பினை தடுத்து விட்டனர்.

கூடிய சீக்கிரம் ஒரு psychiatrist ஐ பார்ப்பது உங்களுக்கும் உங்களை சுற்றி உள்ளவர்களுக்கும் நல்லது.
உங்கள் மனநிலை குணம் அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்

pt said...

டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
6.இப்போது நடப்பது திமுகவை ஒழிப்பதற்கான சதி. இந்தியாவின் மிகச் சிறந்த வழக்கறிஞரான ஜெத்மலானி வாதாடிய பிறகும், கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்க வில்லை என்றால், இமாலயம் முதல் கன்னியாக்குமரி வரை, திமுகவை ஒழிக்க ஒரு சதி வலை பின்னப்பட்டிருப்பதாக கருணாநிதி தனது அறிக்கையில் தெரிவித்தார்.
7.அமைச்சர் சாவில் மர்மம்; முதல்வர் ஜெ., திடுக்.,- சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவு
8.சமச்சீர் கல்வி தொடர வேண்டும்: ராமதாஸ்

9.கனிமொழியை சந்தித்தார் கருணாநிதி
10.கடைசி வரிசையில் அமர்ந்த ஸ்டாலின்!

hayyram said...

கேள்வி பதிலுக்கு:

1)சமச்சீர் கல்வியை ஜெயலலிதா நிறுத்தியதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்.

2) பகவத் கீதை , உபநிஷத்துக்களை எல்லாம் எந்த அளவு படித்திருக்கிறீர்கள். உங்களால் வாரம் ஒரு முறை இவற்றிலிருந்து ஏதாவது ஒரு கருத்தைக் கொண்டு பதிவு போட முடியுமா?

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது