5/14/2012

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 14.05.2012

அம்பேத்கர் நேரு கார்ட்டூனில் என்ன தவறு இருக்கிறது?
அதுதான் புரியவில்லை. அதுவும் அறுபது வருடங்களுக்கு முன்னால் இக்கார்ட்டூன் வந்தபோது யாரைய்ம் கோபப்படச் செய்ததாகத் தெரியவில்லை? இப்போது மட்டும் ஏன்? நேரு, அம்பேத்கர் ஆகியோரை அவரவர் சிஷ்யகோடிகள் தெய்வ நிலைக்கு உயர்த்திப் பார்ப்பதே காரணம் என நான் நினைக்கிறேன். அக்கார்ட்டூனைத்தான் கீழே பாருங்களேன்.

நேரு சாட்டையை நத்தை மீதுதான் குறிவைக்கிறார். அம்பேத்கர் மீதல்ல. உண்மை கூறப்போனால் அம்பேத்கரும்தான் சாட்டையை தன் கையில் வைத்துள்ளார். இரு சாட்டைகளுமே நத்தைக்காகத்தான். நேரு அம்பேத்கருக்கு உதவியாகத்தான் செயல்பட நினைக்கிறார் என்பது எனது புரிதல்.

தெனாவட்டு காதெரின் பான்கோல் (Katherine Pancol) இந்தப் பெண்மணி ஒரு பிரசித்தி பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர். அவர் ஒரு மூன்று நாவல்கள் வரிசையை (triology) உருவாக்கியுளார். அந்த நாவல்கள்:  
1. Les yeux jaunes des crocodiles (முதலைகளின் மஞ்சள் நிறக்கண்கள்)
2. La valse lente des tortues (ஆமைகளின் மெதுவான சுழல் நடனம்)
3. Les écureuils de Central Park sont tristes le lundi (மத்தியப் பூங்காவின் அணில்கள் திங்களன்று சோகம்)

முதல் நாவல் என் மூச்சையே நிறுத்தியது. அதன் கதாநாயகி ஜோசஃபின் தன்னம்பிக்கையற்ற, தன் திறன் அறியாத பெண்மணி. சந்தர்ப்பச் சூழலால் தனது அக்காவின் பெயரில் ஒரு நாவலை எழுத, அது உலகப்பிரசித்தி பெறுகிறது.

கூடவே பல பாத்திரங்கள், அவர்களிடையே எதிர்வினைகள் ஆகியவை ஒரு ரோலர் கோஸ்டரில் பயணம் செய்யும் மனநிலையை உருவாக்கின. முதல் நாவல் பிடித்துப் போனதில் மற்ற இரு நாவல்களையும் படித்து முடித்தேன் என வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் அவ்விரு நாவல்களும் அவ்வளவாக சோபிக்கவில்லை என்றுதான் நான் கூறுவேன்.

ஆனால் அந்த மூன்று நாவல்கள் வரிசையில் குறிப்பிடப்படும் Shirly என்னும் பாத்திரம் என் கவனத்தை ஈர்த்தது. அப்பெண்மணியின் தாயாராக சித்தரிக்கப்படுபவர் இங்கிலாந்தின் எலிஸபெத் மகாராணி. அவருக்கும் அரண்மனையில் பணிபுரிபவருக்கும் தவறான வழியில் பிறப்பவர்தான் இப்பாத்திரம். இது திரும்பத் திரும்ப வலியுறுத்தப்படுகிறது.

எனது கவலை எல்லாம் இதை பிரிட்டிஷ் அரண்மணை வட்டம் எவ்வாறு எடுத்துக் கொண்டிருக்கும் என்பதே. இக்கேவியை அந்த பிரெஞ்சு எழுத்தாளரிடமே வைத்துள்ளேன். இதுவரை பதில் வரவில்லை.

எனக்குத் தெரிந்து இங்கிலாந்து அரசு பரம்பரை பற்றி அவ்வாறு அவதூறு செய்வது பொறுத்துக் கொள்ளப்படாது என்பதே. பார்ப்போம்.

சென்னை சூபர் கிங்ஸுக்கு சான்ஸ் இன்னும் இருக்கிறதா?
ஆம் என்றுதான் நண்பர் என்றென்றும் அன்புடன் பாலா கூறுகிறார். அது உண்மையாக இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பமும்.

பை தி வே நம்ம காமெடி நடிகர் சந்தானத்தைப் பார்த்தால் டோனி ஞாபகத்துக்கு வருகிறார். இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நான் இதுபற்றி இன்று ஓரிருவரிடம் பிரஸ்தாபிக்க அவர்களும் ஆமாம் என ஒத்துக் கொண்டனர்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

4 comments:

phantom363 said...

tondu,i think the issue is not the cartoon itself. it is a good political cartoon of shanker. but should this be in a textbook for high school children? i think there is a political slant here, for shanker was after all a leftist supporter, who opposed dr. ambedkar. if you look at the cartoon from it being portrayed in a high school text book, then the movement to have it removed, has strong justification. i think so. thank you.

மதுரகாரைங்க said...

sir,
I ve a chinese video which is need to be tanslated into english , do u know any body ? if yes , pl share the contact details

dondu(#11168674346665545885) said...

2
Try Tata/Getit yellow pages. Or Google.

அன்புடன்,
டோண்டு ராகவன்

D. Chandramouli said...

Mr Raghavan, you brought out a new angle to the cartoon, which I didn't notice. The crux of the problem seems to be that the cartoon need not have appeared in school text books and that seems understandable. But to raise a hue and cry on this score is excessive.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது