Surya
கேள்வி-1. நெடுமாறன் கருணாநிதிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அவர் கடிதத்தில் சில உண்மைகள் இருந்தாலும் அவரது ஒரு சில கருத்துக்களுக்கும் நடை முறை உண்மைக்கும் சம்பந்தமே இல்லையே! மு.க.வின் தோல்விக்கு அவர் ஈழத் தமிழர்களுக்கு இழைத்த துரோகமே என்று கூறி உள்ளார். மு.க. தமிழர்களுக்குத் துரோகம் இழைத்தது என்னவோ உண்மைதான். ஆனால் தேர்தல் முடிவுக்கும் அதற்கும் எந்த சம்பந்தம் இல்லை என்பது என் கருத்து. சீமானும் அப்படிதான் சொல்லிக்கொண்டு திரிகின்றார் (அப்படி என்றால் கடந்த பாராளுமன்ற தேர்தலில் எப்படி மு.க. வும் காங்கிரசும் ஜெயித்தார்களாம்?). நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?
பதில்: நீங்கள் கூறுவதில் உண்மை இல்லாமல் இல்லை. பாராளுமன்ற தேர்தல் சமயத்தில் ஸ்பெக்ட்ரம் அவ்வளவாக வெளியில் தெரியவில்லை. ஈழத் தமிழர்கள் மேல் அனுதாபம் இருந்தாலும் புலிகள் செய்த சொதப்பல்களும் மக்கள் நினைவில் அதிகம் நின்றன. ஆகவே அத்தருணத்தில் இலங்கைப் பிரச்சினை தேர்தல் காலத்தில் அவ்வளவாக வேலை செய்யவில்லை.
ஆனால் இப்போதைய நிலைமையே வேறு. ஊழல் பிரச்சினைகள் படா பிரச்சினைகளாக இருந்தன. கூடவே ஈழத் தமிழர்கள் விஷயத்தில் காங்கிரஸ், திமுக, அவற்றின் கூட்டாளிகள் செய்த துரோகமும் மக்களால் நினைவில் வைத்துக் கொள்ளப்பட்டு ஒரு குறைந்த அளவிலாவது அவர்களது தோல்விக்கு வழி வகுத்தது.
கேள்வி-2. எனக்கென்னவோ அஞ்சா நெஞ்சன் என்று சொல்லிக்கொண்ட அழகிரியை விட ஸ்டாலின் தோல்வியை தைரியமாக சந்திக்கிறார் என்று தோன்றுகிறது. கொளத்தூருக்குப் போய் நன்றி சொல்லி விட்டார் அதற்குள் (பெரு வெற்றி பெற்ற அம்மா கட்சிக்காரர்களே இன்னும் நன்றி நவிலவில்லை). அழகிரி வீட்டுக்குள்ளயே முடங்கிக் கிடக்கிறாரே!
பதில்: இக்கேள்வி பதில்கள் வரும் தினத்துக்குள்ளாவது (26.05.2011) அழகிரி வெளியே வருவார் என நம்புவோமாக. (பதில் ஏற்றப்பட்ட தேதி: 22.05.201).
கேள்வி-3. கனிக்காக ராம் ஜெத்மாலனி வாதாட ஒத்துக் கொண்டது முறையா? அவர் ஒரு வக்கீல் மட்டும் அல்ல, மத்திய மந்திரியாக இருந்திருக்கிறார். மக்கள் அவரிடம் ஒரு "தொழில் முறை" வக்கீலை விட சற்று அதிக அளவில் நாணயத்தை எதிர்ப்பார்ப்பது தவறல்லவே!
பதில்: எப்படிப்பட்ட குற்றவாளிக்கும் தன்னைப் பாதுகாக்கும் செயல்பாடுகளுக்கான உரிமை உண்டு. அதுவே கனிக்கும் பொருந்தும். ராம் ஜேத்மலானி திறமையான வழக்கறிஞர். அவருடைய தொழில் தர்மம் அவரது செயலையும் நியாயப்படுத்தும்.
கேள்வி-4. வீரமணியின் அறிக்கைகளைப் பார்த்தால் அம்மாவிடம் கூடிய சீக்கிரம் சரணாகதி அடையும் நாள் தூரத்தில் இல்லை என்று நினைக்கிறீர்களா?
பதில்: பாவம் அவரை விட்டு விடுங்கள். சில கோடிகளுக்கு மட்டுமே சொந்தக்காரரான ஓர் ஏழை. அவர் என்னமோ செய்து பிழைத்துப் போகட்டுமே.
கேள்வி-5. அம்மா அனுபவம் வாய்ந்தவர்களை மந்திரி சபையில் சேர்க்காதது ஏன்? அது தவறா?
பதில்: அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா.
6. மோதி எப்படி அம்மாவின் பதவி ஏற்பு விழாவுக்கு வந்தார்? மைனாரிட்டி ஒட்டு பயம் போய் விட்டதா அம்மாவுக்கு?
பதில்: மோதியின் ஊழலற்ற ஆட்சி குஜராத் இசுலாமியரையும் கவர்ந்துள்ளது எனப்தையே அது காட்டுகிறது.
கேள்வி-7. அ.தி.மு.க. தொண்டர்கள் பிரவீன் குமார் காலில் விழுந்தார்களாம். எனக்கென்னவோ எல்லாப் புகழும் "சேஷனுக்கே" என்று தோன்றுகிறது. அவர் மட்டும் ஆரம்பித்து வைக்காமல் இருந்திருந்தால் இன்றும் எலெக்க்ஷன் கமிஷன் ஒருன் "டம்மி பீசாகவே" இருந்திருக்கும்.
பதில்: சேஷனுக்குப் பிறகு வந்த பல ஜால்ராக்களால் நிலைமை மீண்டும் சீரழிந்ததே. அதை மீண்டும் தூக்கி நிறுத்திய பெருமை இப்போதைய தேர்தல் ஆணையத்துக்குத்தானே.
8. குரேஷியைப் பத்தி அவர் பதவி ஏற்பதற்கு முன் பல விமர்சனங்கள் இருந்தன. அவர் நல்லபடியாகவே செயல் படுவதாகவே தெரிகிறது. ஒரு நல்ல முன் மாதிரி (சேஷன் கோபாலஸ்வாமி போன்றவர்களுக்கு நன்றி) இருந்தால் யார் எலெக்ஷன் கமிஷனர் ஆனாலும் சரியான படியாகவே செயல் படுவார்கள். என்ன சொல்கிறீர்கள்?
பதில்: நல்ல முன்மாதிரிகள் பலர் இருந்தாலும் சாவ்லா போன்ற ஜால்ரா முன்மாதிரிகள் வேறு நடுவில் வந்து தொலைக்கிறார்களே.
கேள்வி-9. சோ "எதிர்க் கட்சி" வேலையை அம்மாவுக்கு எதிராக ஆரம்பித்து விடுவாரா? எவ்வளவு நாள் கொடுப்பார்?
பதில்: இப்போதுதானே ஜெ வெற்றி பெற்றுள்ளார். அவர் எவ்வாறு செயல்படுகிறார் என்பதைப் பார்ப்போம்.
பார்வையாளன்
கேள்வி-10. காங்கிரசால் திமுகவுக்கு பாதிப்பா அல்லது திமுகவால் அதிமுகவுக்கு பாதிப்பா?
பதில்: காங்கிரஸ் திமுக ஜோடி: உன்னாலே நான் கெட்டேன், என்னாலே நீ கெட்டாய். திமுக அதிமுக: சீசா விளையாட்டு
11. இரண்டு ஆண்டுகள் கழித்து வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில், திமுகவுக்கு கூட்டணி சேர ஆள் இல்லாத நிலையில் (சொந்த பலமும் குறைந்த நிலையில்) விஜய்காந்த் அதிமுகவுக்கு மாற்றாக உருவெடுப்பாரா?
பதில்: திமுக விட்டால் அதிமுக என்ற நிலைமை மாறுவதே ஒரு முன்னேற்றம்தானே.
pt
டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
கேள்வி-12. மதுரையில் ரூ.1000 கோடி மதிப்புள்ள நிலங்களை போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்த 6 பேர் கைது
பதில்: இது சாதாரணமாக புதுவையில்தான் அதிகம் நடப்பதாக கேள்விப்பட்டிருந்தேன். இப்போது மதுரையிலுமா?
கேள்வி-13. முதல்வர் ஜெயலலிதாவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் பாராட்டு
பதில்: கூட்டணி தர்மம்?
கேள்வி-14. அமைச்சர்கள் நல்ல பெயர் வாங்க வேண்டும்: முதல்வர் ஜெயலலிதா
பதில்: நியயமான ஆசைதானே.
கேள்வி-15. எம்.எல்.ஏ. பதவியேற்பில் தாமதம்: சிக்கலை ஏற்படுத்துமா?
பதில்: தினமணி கூறும் பதில் ஏற்புடையதாகவே உள்ளது.
கேள்வி-16. கர்நாடகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலில் ஆளுநருடன் முதல்வர் திடீர் சந்திப்பு
பதில்: அரசியல், அரசியல். முக்கியமாக சட்டசபையை கலைப்பது அவ்வளவு சுலபம் இல்லை. ஆகவேதான் மத்திய அரசு கவர்னரை அடக்கி வாசிக்கச் சொல்லியிருக்கும் என நம்புகிறேன்.
கேள்வி-17. முதல்வர் ஜெயலலிதா , முன்னாள் முதல்வர் கருணாநிதி ஒப்பிடுக?
1.அமைச்சரவை கூட்டம் நடத்துதல்; 2. கோப்புகளைக் கையாளுதல்; 3. சட்டசபை நடவடிக்கைகள்;
4. ஆங்கிலத்தை கையாளுதல்; 5.காவல் துறை; 6. மத்திய அரசுடன் உறவு; 7. அண்டை மாநிலங்களுடன் உள்ள பிரச்சனைகளை கையாளுதல்; 8. திரைப்படத் துறை செயல்பாடுகள்;
9. சின்னத் திரை செயல்பாடுகள்(சொந்த டீவிகள்); 10.கூட்டணிக் கட்சிகள் உறவு; 11. எதிர்க் கட்சிகளைக் கையாளுதல்; 12. இலங்கை பிரச்சனை; 13.கட்சியிலிருந்து பிரிந்து செல்பவரை கையாளுதல்; 14.அரசு அதிகாரிகளின் திடீர் மாறுதல்கள்; 15.நண்பர்கள்,உறவினர்கள் ஆகியோரின் அதிகார துஷ்பிரயோகம்; 16. நதி நீர் பிரச்சனைகள்; 17. மின்வெட்டு; 18. கல்வி சீரமைப்புகள்; 19. அரசு ஊழியர், வக்கீல், மாணவர் போராட்டங்கள்; 20.பத்திரிக்கைகள்,ஊடகங்கள்
குறிப்பு:இது பற்றிய ஒரு விரிவான விளக்கம் இன்றைய இளைஞர்களுக்கு பழைய வரலாற்றைத் தெரியவைக்கும்.
பதில்: மேலே கூறிய்ன பலவற்றில் இருவரது செயல்படுகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரித்தான். ஆனால் மந்திரிசபை கூட்டம், அதிகாரிகள் கூட்டம் ஆகியவற்றை ஜயலலிதா நன்றாகவே கையாளுகிறார். ஆங்கில ஆளுமை பற்றிய கேள்வி தேவையற்றது. தமிழகத்தைப் பொருத்தவரை தமிழே போதும். அதில் அதிகத் திறமை வாய்ந்தவர் கருணாநிதி என்றாலும், அதை மட்டுமே அவர் அதிக அழுத்தத்துடன் செயல்பாட்டில் வைத்திருப்பது சலிப்பையே தரும்.
மற்றப்படி இது உண்மைத் தமிழனுக்கு போக வேண்டிய கேள்வி.
மிகுதி கேள்விகள் அடுத்த வாரம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Yathi – A review: Jinapriya AjithaDoss
-
Pa Raghavan
The scary part comes in last parts. The actual plot. The plot leaves the
reader so unsettled. I had to read thrice the last 500 pages to unde...
4 hours ago
10 comments:
ஈழத் தமிழர்கள் விஷயத்தில் காங்கிரஸ் திமுக அவற்றின் கூட்டாளிகள் செய்த துரோகமும் மக்களால் நினைவில் வைத்துக் கொள்ளப்பட்டு ஒரு குறைந்த அளவிலாவது அவர்களது தோல்விக்கு வழி வகுத்தது.
அவர்கள் செய்த துரோகம் என்ன என்பதை அறிய விரும்புகிறேன். மாவீரன் பிரபாகரன் தனதும் தனது கூட்டத்தினதும் பாதுகாப்பிற்க்காக மக்களை பணயம் பிடித்து வைத்திருந்த போது தமிழ்நாட்டு பொலிஸ் படையை அனுப்பி பிரபாகரன் கூட்டத்தை பாதுகாத்திருக்க வேண்டுமா?
"எப்படிப்பட்ட குற்றவாளிக்கும் தன்னைப் பாதுகாக்கும் செயல்பாடுகளுக்கான உரிமை உண்டு. அதுவே கனிக்கும் பொருந்தும். ராம் ஜேத்மலானி திறமையான வழக்கறிஞர். அவருடைய தொழில் தர்மம் அவரது செயலையும் நியாயப்படுத்தும்".
ராம் ஜேத்மலானி மகளை ஒருவர் கற்பழித்து விட்டார் என வைத்து கொள்வோம் ..
குற்றவாளி தன்னை காப்பாற்றும் படி ராம்ஜேத்மலானியிடம் போகிறார் ..இப்பொழுது இவர் அவரை காப்பாற்றுவாரா..?
டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
1.இனி அடிக்கடி கவர்னரை சந்தித்து ஆலோசனை நடத்துவேன் என மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார்
2.எதிர்க்கட்சியினரின் கருத்துகளுக்கு மதிப்பளிப்போம்: முதல்வர் உறுதி
3.சென்னை, திருச்சி, மதுரை, கோவையில் என்ஜினீயரிங் கவுன்சிலிங் நடத்துவது பற்றி பரிசீலனை
4.எனது பாடலை நீக்கிவிட்டு சமச்சீர் கல்வியை அமல் செய்யலாமே? கருணாநிதி
5.கோர்ட் தீர்ப்பின்படி நான் பதவி விலகியுள்ளேன், ஆனால் சட்டத்தின்படி நான் இன்னும் பதவியை ராஜினாமா செய்யவில்லை என மாஜி ஊழல் தடுப்பு கண்காணிப்பு கமிஷனர் பி.ஜெ.தாமஸ் கூறினார்.
/சென்னை, திருச்சி, மதுரை, கோவையில் என்ஜினீயரிங் கவுன்சிலிங் நடத்துவது பற்றி பரிசீல/
nalla mudivu .
//
ராம் ஜேத்மலானி மகளை ஒருவர் கற்பழித்து விட்டார் என வைத்து கொள்வோம் ..
குற்றவாளி தன்னை காப்பாற்றும் படி ராம்ஜேத்மலானியிடம் போகிறார் ..இப்பொழுது இவர் அவரை காப்பாற்றுவாரா..?
//
conflict of interest படி அவர் வாதாடினாலும் அது "செல்லாது செல்லாது" தான்.
1.திமுகவின் தலைவர் டெல்லியில் 2 லட்சம் தின வாடகை கொடுத்து பெரிய நட்சத்திர ஹோட்டலில் தங்கியதாக வரும் செய்தி பற்றி?
2.கனிமொழி பெண் என்பதால் அவர் பால் இரக்க உணர்வு இந்தியா முழுவதும் பரவுவதாய் ஆங்கில சேனல் சொல்வது பற்றி?
3.அழகிரி இனி?
4.வடிவேலுவின் சினிமா எதிர் காலம் கோவிந்தாவா?
5.மீண்டும் ஹெல்மெட் கண்டிப்பு தளர்வு?
6.சமச்சீர்கல்வி பற்றிய முடிவில் முதல்வரின் பிடிவாதம் என்ன விளைவை ஏற்படுத்தும்?
7.ஒருவழியாக தளபதி ஸ்டாலின் திமுக சட்டசபைத் தலைவர் ஆகி கருணாநிதியின் வாரீசாவதற்கான நடவடிக்கைகள் தொடங்கிவிட்டது போலுள்ளதே இது நிலைக்குமா?
8.உண்மையில் நடிகர் ரஜினிக்கு என்னாச்சு? ஏதாவது சதியா?
9.தயாநிதி சோனியா சந்திப்பு ,திமுகவில் ஏதும் புயலடிக்குமா?
10. கருணாநிதியின் அதீத குடும்ப பாசம் கண்டு கலங்கும் திமுக தொண்டர்கள், வைகோ பக்கம் வர வாய்ப்பு உண்டா ?
டோண்டு சார், இந்த பதிவில்
http://anbanavargal.blogspot.com/2011/05/blog-post_28.html
ஒரு ஜந்து இப்படி குலைத்திருக்கு
//..என வர்ணாசிரம முறையை கொண்டு வந்து அவரவர் தொழிலை அவரவர் வம்சமே செய்ய வேண்டும் என்றவர்கள் பிராமணர்கள்.//
இதோட கூத்து படி கருணாநிதி ஒரு பிராமணர். தன் குடும்பம் பிழைக்க வர்ணாசிரமத்தை நியாயப்படுத்தியவர்.
இந்த ஜந்து அப்ப குலைக்க வக்கில்லாம இப்ப வந்து குலைக்கிறது.
இத மாதிரி ஜந்து இருக்கும் வரை நான் பிராமணனாக இருக்க பெருமை படுகிறேன்.
இதை அந்த ஜந்துவின் பதிவில் கருத்துரைத்துள்ளேன் வெளியிடுமா என்று பார்ப்போம்.
இதற்கு தங்கள் பதில் கிடைக்குமா.
சரி மகள்தான் conflict of interest. இப்போ அவருடைய அரசியல் மற்றும் தனிப்பட்ட நண்பரின் மனைவியை or மகளை கற்பழித்தவர் ஒரு அரசியல் புள்ளி என்றே வைத்து கொள்வோம். அந்த குற்றவாளி இவரிடம் பணம் அதிகமாக தருவதாக சொன்னாலும் அவர் வாதாடுவாரா? வார் என்று சொல்லி பாப்பானை அவமதிக்காதீர்.
@ஆர் எஸ்
எழுத்தாளர் பா ரா அவரது தளத்தில் சமச்சீர் கல்வி பாடத் திட்டத்தில் இருந்த குறைகளை எழுதி இருக்கிறார்
http://www.writerpara.com/paper/?p=2280
படித்து பாருங்கள்
Post a Comment