12/13/2004

இன்னொரு அமிதாப் படத்தைப் பற்றி

ஷேக்ஸ்பியரின் ஹேம்லட் நாடகத்தில் ஒரு காட்சி.

கதாநாயகனின் தந்தையாகிய மன்னரை அவர் தம்பியே மன்னர் தூங்கும் போது காதில் விஷத்தை விட்டுக் கொன்று விடுவான். கதாநாயகனின் தாயும் தன் மைத்துனனையே மணந்துக் கொண்டு விடுவாள்.

நாடகத்தின் கடைசிக் காட்சியில் கதாநாயகன் தான் எழுதி புது மன்னனாகியத் தன் சிற்றப்பனுக்குப் போட்டுக் காட்டிய நாடகத்தில் இக்கொலையை நடந்தது நடந்தபடி ஒரு காட்சியில் காட்டுவான்.

வில்லனும் குற்ற உணர்ச்சியில் கதாநாயகனுடன் சண்டையிடுவான். மற்ற விஷ்யங்கள் வழக்கம் போல நடை பெறும்.

அவை நமக்கு இங்குத் தேவையில்லை. குற்ற நிகழ்ச்சியை மறுபடியும் செய்துக் காட்டியதுதான் இப்பதிவுக்கு முக்கியம்.

இதில் அமிதாப் எங்கு வருகிறார் எங்கிறீர்களா? பொறுமை.
"தோ அஞ்சானே" (இரு பரிச்சயமற்ற நபர்கள்) என்னும் படம் 1977-ல் வந்தது.
அமிதாப், ரேகா மற்றும் பிரேம் சோப்ரா நடித்திருந்தனர்.

பிரேம் அமிதாப்பை ஓடும் ரயிலிருந்துத் தள்ளி விடுவார். நல்ல வேளையாக அமிதாப் சொற்பக் காயங்களுடன் தப்பித்து ஒரு பணக்காரரின் வளர்ப்பு மகனாக சில காலம் கழித்துத் தன் சொந்த ஊராகிய கல்கத்தாவுக்கு வருகிறார்.

இதற்கிடையில் அமிதாப்பின் மனைவியான ரேகா பிரேமின் உதவியுடன் ஒரு சினிமா நட்சத்திரமாக உருவெடுத்திருப்பார்.

அமிதாப் அவரிடம் தான் ஒரு சினிமா தயாரிப்பதாகக் கூறி அவரை புக் செய்வார். தன்னுடையக் கதையையே அவரிடம் கூறி ஒரு காட்சியைப் படமும் பிடிப்பார்.

இந்தக் காட்சியில்தான் வில்லன் கதாநாயகனை ரயிலிலிருந்து தள்ளி விடுவான். இக்காட்சியைக் கண்ட ரேகா திடுக்கிடுவார். ஏனெனில் பிரேம் அவரிடம் அமிதாப் கால் தவறி வண்டியிலிருந்து விழுந்து விட்டதாகக் கூறியிருப்பார்.

இப்போது காட்சியமைப்பைப் பார்ப்போம். ஹேம்லட் நாடகம் போலவே இங்கும் காட்சி. ஆனால் ஒரு சிறு வித்தியாசம்.

திரைப்படத்தில் முதலில் வந்த உண்மையானக் காட்சியில் அமிதாப்பும் ப்ரேமும் இந்தியில் பேசிக் கொள்வார்கள். ஆனால் இரன்டாவதாக வந்த ரீப்ளே காட்சியில் பேச்சு முழுக்க பெங்காலியிலேயே இருக்கும்.

இது ஒரு புது மாதிரியான அனுபவம். மிகவும் ரசித்தேன்.

அன்புடன்,
ராகவன்

No comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது