சில நாட்களாக மன அழுத்தம் அதிகரிக்கச் செய்த நிகழ்வுகள் நடந்து விட்டன. இன்று மனதைப் பிடிவாதமாக சில மணி நேரம் அமைதியாக வைத்திருந்தேன். பல் மின்னஞ்சல்கள் ஆறுதலாக வந்தன. மன் உற்சாகம் என்னும் அம்புறாத்துணியில் ஒவ்வொரு அம்பாக வந்து சேர்ந்தன. அவை இன்னும் வருமா? தெரியாது. ஆனால் அதற்குள் என் உள்ளம் கவர் கள்வன் என் அப்பன் மகரநெடுங்குழைகாத என்மனத்திரையில் தோன்றி ஆசுவாசப்படுத்தினான். சிறிது நேரம் உலகக் கவலைகளை மறந்து தன் சகா திருவிண்ணகர ஒப்பில்லா அப்பன் திருக்கல்யாண உற்சவத்திற்கு சமீபத்தில் நான் சென்று திரும்பியதைப் பற்றி பதிவு போட ஆணையிட்டான். அதை விட இந்த தாசனுக்கு வேறென்ன வேலை முக்கியமாக இருக்க முடியும்? இதோ வந்தேன் என் அப்பன் மகரநெடுங்குழைகாதனே.
இம்மாதம் 14-ஆம் தேதி செவ்வாயன்று காலை 8 மணிவாக்கில் கிளம்பி நேரே வைத்தீஸ்வரன் கோவில் சென்றோம். அங்கு அங்காரகன் மற்றும் ஈசன் சன்னிதிகளில் அர்ச்சனை. மாலை மாயூரம் பாம்ஸ் ஹோட்டலில் ரூம் போட்டோம். பிறகு தேரழுந்தூர் மற்றும் சிறுபுலியூர் சென்றோம். அதற்கு முன்னால் மாயவரத்தான் அவர்களின் தந்தையிடம் தொலைபேசினேன். அன்புடன் அவர் என்னிடம் பேசினார். தேரழுந்தூரில் 50 வருடங்களாக ஓடாத தேரை ஓட வைத்தது பற்றியும் கூறினார். அறைக்கு திரும்ப இரவு ஆகிவிட்டது.
அடுத்த நாள் காலை மயூரனாதர் கோவில் மற்றும் திருஇந்தளூர் கோவில் தரிசனம். திருஇந்தளூரில்தான் நவக்கிரகங்களில் ஒருவரான சந்திரனுக்கு சாப விமோசனம் கிட்டியதாக ஐதீகம். பரிமளரங்கநாதப் பெருமாள், பரிமள ரங்கநாயகி மற்றும் புண்டரீகவல்லித் தாயார்கள். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்றத் தலம்:
பிறகு கும்பகோணம் சென்றோம். மதியம் 3.30-க்கு உப்பிலியப்பனுக்கும்
பூமித்தேவித் தாயாருக்கும் திருக்கல்யாண உற்சவம். என்னைச் சேர்த்து
இரண்டு உபயதாரர்கள். கண்கொள்ளா காட்சி, பெருமாளும் தாயாரும் மாலை
மாற்றியது. பெருமாளும் தாயாரும் யுகயுகமாகக் காதலிப்பவர்கள். அவர்கள் கல்யாணத்தைச் செய்து வைக்க முந்தையப் பிறவில் நல்ல காரியம் செய்திருக்க வேண்டும். எல்லாம் முடிந்து கும்பகோணத்தில் எங்கள் அறைக்குத் திரும்பும்போது மாலை 7 ஆகி விட்டது. வியாழன் காலை சென்னை திரும்பினோம்.
மனதுக்கு நிறைவான யாத்திரை. செய்ய நினைத்ததை எல்லாம் செய்ய முடிந்தது.
எல்லாம் எம்பெருமான் அருள். வந்த உடனேயே பதிவு போட நினைத்தேன். அதைச் செய்ய விடாமல் பிரச்சினை மேல் பிரச்சினையாக வந்தது. சிறிது தாமதித்து இப்போது பதிவிடுவதும் நல்லதுக்குத்தான். மனதுக்கு ஒரு நிறைவு. பிரச்சினை என்ன பிரச்சினை புடலங்காய்? அவை எல்லாம் இப்போது துச்சமாகத் தோன்றுகின்றன. இருந்தாலும் ஒன்றைக் கூற வேண்டும். இம்மாதிரி நெருக்கடியானத் தருணங்களில் நண்பர்கள் கொடுக்கும் ஆதரவு பின்னூட்டங்கள் மனதை நிறையச் செய்து இப்பதிவை போடச் செய்தன. எல்லோருக்கும் இப்போது நன்றி கூறுகிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Les Surhommes de Pondichéry : 1.Bharati : L’élixir d’immortalité, c’est le
« Soi ».
-
Quand le soleil brille, que la neige scintille et que la pluie tombe, la
nature se pare de ses plus beaux atours. Les poètes sont conviés à partager
la fél...
14 hours ago
