என்னுடைய முந்தைய கேள்விகளில் இரண்டுக்கு பதில் வரவில்லை ஆதலால் அவற்றை இங்கு முதல் இரண்டு கேள்விகளாக கேரி ஓவர் செய்கிறேன்.
1. ஓட்டப் பந்தயத்தில் ராமமூர்த்திக்கு முதலிடம் கிடைத்தது ஆனால் பரிசு கிடைக்கவில்லை. ஏன் இந்த அக்கிரமம்?
2. இக்கதை அக்கால மேற்கு ஜெர்மனியில் நடந்ததாகக் கூறுவர். அப்போது Adenauer பிரதம மந்திரி (Bundeskanzler). தேசத்தின் அணுசக்தித் துறையின் தலைமை பதவி காலியாக இருந்தது. மூவர் போட்டியிட்டனர். ஒருவர் Karl Fritz. அவர் கணித நிபுணர். இன்னொருவர் Arendt. அவர் இயல்பியல் நிபுணர். மூன்றாவர் Schmidt. அவர் ரசாயனத் துறையில் வல்லவர். மூவருமே ஒரே அளவில் மதிப்பெண்கள் பெற்றனர். Adenauer வேலையை யாருக்குக் கொடுத்திருப்பார்?
3. டொனால்ட் டக் கார்ட்டூனில் வால்ட் டிஸ்னி செய்த பொருள் குற்றம் என்ன? (குற்றத்துக்கு குறைத்துக்கொண்டு மீதிக்கு பரிசளியுங்கள் என்று அவர் கேட்கக்கூட இல்லை).
4. ஆங்கிலத் தேர்வில் ஆசிரியர் ராமுவிடம் entertainment-க்கு ஸ்பெல்லிங் கேட்டார். ராமு e n t e r t a i n m e n t என்று நிறுத்தி நிதானமாகக் கூற ஆசிரியர் கோபத்துடன் wrong get out என்று கத்த, ராமு வெளியேறினான். இதே மாதிரி மற்ற சரியான விடைகள் கூறிய ஒவ்வொரு மாணவனிடமும் இதையே கூற அவர்களும் வகுப்பிலிருந்து வெளியேறினர். கடைசியில் கஸ்தூரிரங்கன் மட்டும் சமாளித்து வகுப்பில் தங்கினான். எப்படி?
5. ஒரு குதிரை பாதிரியாரைத் தாண்டி குதித்து ஒரு மனிதன் மேல் விழ அவன் மறைந்து போனான். பாதிரியார் ஒன்றுமே நடக்காதது போல தன் வேலையைக் கவனித்தார். என்ன விஷயம்?
6. துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலின் வெளிப்புறம் பெயின்ட் அடிக்க வேண்டியிருந்தது. பெயின்டர் வெளியே தொங்கவிடப்பட்ட நூலேணியின் கடைசி படிக்கட்டின் மேல் நின்று வேலை செய்கிறார். அப்படிக்கட்டு நீர்மட்டத்தின் மேல் இரண்டு அடி உயரத்தில் உள்ளது. கடல் ஏற்றம் (hightide) காரணமாக நீர்மட்டம் 10 அடி உயருகிறது. பெயின்டர் நீரில் கால் நனையாமல் இருக்க எவ்வளவு படிகள் மேலே ஏற வேண்டியிருக்கும்? ஒவ்வொரு படியும் ஒரு அடி உயரம்.
7. ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாத்தா, இரண்டு தந்தைகள், இரண்டு மகன்கள், ஒரு பேரன் ஆகியோர் வேட்டைக்கு செல்கின்றனர். 12 வாத்துக்கள் கிடைக்கின்றன. ஆளுக்கு எவ்வளவு வாத்துக்கள் கிடைக்கும்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
பொழுதுபோக்கு நூல்களை ஏன் வாசிக்கவேண்டும்?
-
பொழுதுபோக்கு நூல்களை உயர் இலக்கியம் என்று நினைத்த ஒரு காலகட்டம் 1990 வரை
தமிழ்ச்சூழலில் இருந்தது. அன்று இலக்கியம் என்பதை முன்வைக்கும்பொருட்டு
இலக்கிய முன்ன...
1 day ago