தங்கர்பச்சான் பற்றி பேச மறுக்கும் நவ்யா
இயக்குநர் தங்கர்பச்சானை திரைப்பட நடிகர், நடிகைகள் நடத்திய விதம் குறித்து தமிழ் தேசியவாதிகள் கொதித்துப் போயுள்ள நிலையில், அந்தப் பிரச்சினைக்கு மூல காரணமான நவ்யா நாயர், அதைப் பற்றி எதுவும் கூற விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது:
"இந்தப் பிரச்சினை குறித்து எந்த எதிர்வினையும் ஆற்ற விரும்பவில்லை. சினிமாவில் நடிகைகளுக்கு என்று ஒரு கண்ணியம் இருக்கிறது. அதேபோல் இயக்குநர்களுக்கும் ஒரு கண்ணியம் இருக்கிறது. அந்தப் பிரச்சனை இப்போது முடிவடைந்து விட்டது. எனவே அதைப் பற்றி நான் எதையும் கூற விரும்பவில்லை" என்று கூறி அடுத்த டாபிக்குக்குத் தாவியவர்,
"நான் பதினைந்து வயதில் நடிக்க வந்தேன். அப்போது சினிமாவில் நடித்தால் போதும் என்று இருந்தேன். இப்போது நல்ல கதையா என்று கேட்டு நடிக்கிறேன். 'சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி' படத்தில் 2 குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்திருக்கிறேன். 'அமிர்தம்' படத்தில் இயல்பில் நான் எப்படிப்பட்ட பெண்ணோ அதேபோல் நடிக்கிறேன்.
2 குழந்தைகளுக்கு அம்மாவாக நடிப்பது குறித்து எனக்கு எந்தக் கவலையோ, பயமோ கிடையாது. கமர்ஷியல் படங்களையும் இவற்றையும் குழப்பிக்க விரும்பலை.
எனக்கு கிளாமர் வேடம் எடுபடுமா என்பது நான் கிளாமரா நடிக்கும்போதுதான் தெரியும். மக்களுக்கு நான் அவ்வாறு நடிப்பது பிடிக்கவில்லை என்றால் நான் அதை நிறுத்தி விடுவேன்.
'அழகிய தீயே' படம் எனக்கு தமிழில் நல்ல பெயர் வாங்கித் தந்திருக்கிறது. அடுத்தடுத்து நல்ல வேடங்களில் நடித்து, தமிழில் முக்கிய இடத்தைப் பிடிப்பேன்" என்றார்.
பார்க்க ஸ்டில்லுடன்: http://www.keetru.com/cinema/sep-05/nayar.html
நாமும் உழக்கில் கிழக்கு மேற்கு பார்ப்பதை விட்டு விட்டு வேறு ஏதாவது நல்ல வேலையைப் பார்ப்போமே!
அன்புடன்,
டோண்டு ராகவன்
𝐅𝐞𝐓𝐍𝐀 𝟐𝟎𝟐𝟓: 𝐏𝐮𝐫𝐞 𝐞𝐱𝐭𝐫𝐚𝐯𝐚𝐠𝐚𝐧𝐳𝐚
-
𝐅𝐞𝐓𝐍𝐀 𝟐𝟎𝟐𝟓: 𝐏𝐮𝐫𝐞 𝐞𝐱𝐭𝐫𝐚𝐯𝐚𝐠𝐚𝐧𝐳𝐚
உள்ளடக்கிய தன்மை என்பது வெறும் நாகரிகசொல் அன்று; அது ஒரு நாகரிகத்தின்
முதிர்ச்சி.
ஒரு தோட்டத்த...
5 hours ago

No comments:
Post a Comment