5/19/2010

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 85 & 86)

எபிசோட் - 85 (17.05.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
தான் கொஞ்சம் பேசலாமா என அசோக் கேட்கும்போதே என்னுள் ஒரு புன்முறுவல் எழுந்தது. அவன் என்ன கேட்பான் என்பதை என்னாலேயே ஊகிக்க முடிந்தபோது அவனிடம் அனுபவம் பெற்றுள்ள அவன் பெற்றோருக்கு மட்டும் அது தோன்றாது இருக்குமா என்ன? அவனை மிருதுவாக அவாயிட் செய்ய நினைக்கின்றனர். ஆனால் அதெல்லாம் அசோக்கிடம் நடக்குமா?

நான் நினைத்த மாதிரியே அவன் கல்யாணம் என்பது மிகவும் எளிமையாக நடத்த வேண்டும் என மிருதுவாக ஆனால் உறுதியாகக் கூறிவிடுகிறான். வெளி மனிதர்களுக்கு அழைப்பில்லை, ரிசப்ஷன் கிடையாது, பெரிய மண்டபம் எல்லாம் வேண்டாம். வைதீக காரியங்களுக்கே முக்கியத்துவம் என்றெல்லாம் அடுக்க, அவனுக்கு கல்யாணம் நடந்த விஷயமே ஊருக்கு தெரியாமல் போகுமே என அவன் அன்னை ஆட்சேபம் எழுப்ப, ஊர் தெரிஞ்சுண்டு என்ன பண்ணப் போறது என அவன் எதிர் கேள்வி போடுகிறான். தேவையானால் ரிஜிஸ்டர் திருமணம் கூட ஓக்கே எனக்கூறிவிட்டு அப்பால் செல்கிறான்.

என்ன சார் இது என சோவின் நண்பர் கேட்க, ரிஜிஸ்டர் கல்யாணமெல்லாம் நமது வைதீக முறைப்படியான கல்யாணமே அல்ல, அதைப் போய் செய்யலாம் என அசோக் கூறுவது அபத்தமாகவே படுகிறது என அவர் பங்குக்கு அசோக்குக்கு ஒரு குட்டு வைக்கிறார். பிறகு பழங்காலத்தில் நடந்த நான்கு நாள் திருமணம் பற்றியும் பேசுகிறார்.

நடந்த விஷயம் கேட்டு காதம்பரி டரியல் ஆகிறாள். அசோக்குக்குத்தான் மூளை இல்லையென்றால் அவர் பெற்றோர்களுக்கு எங்கே போச்சு அறிவு என அவள் நீட்டி முழக்குகிறாள். இந்த எளிமையான கல்யாணம் அவள் மனதுக்கு பிடிக்கவில்லை என்பதை தெளிவாகவே காட்டுகிறாள். அசோக்குக்கு அவளே போன் போட்டு கிண்டலாகப் பேசுவதாக எண்ணி மண்டபம் கூட ஏன், கோவிலிலேயே வைத்துக் கொள்ளலாமே என கேட்க அதற்கும் சரி எனக்கூறி அவன் அவளை மேலும் திகைப்புக்கு உள்ளாக்குகிறான்.

நாதனும் வசுமதியும் என்ன செய்வதென்று புரியாது, திருப்பந்துரத்தியில் இருக்கும் தங்கள் குலதெய்வம் கோவிலில் திருமணத்தை வைத்துக் கொள்ள முடிவு செய்கின்றனர்.

கேட்டரர் வீட்டில் அசோக்கின் திருமணம் பற்றி பேச்சு வருகிறது. ரொம்பவுமே எளிமையாக சென்னைக்கு வெளியே செய்வதால் தனக்கு கேட்டரிங் சான்ஸ் இல்லை என கேட்டரர் கூறுகிறார். அப்போது சாம்பு சாஸ்திரிகள் அங்கு வர, அவரிடம் ஜனவரி 19-ஆம்தேதி ஆர்த்திக்கும் தன் பிள்ளைக்கும் கல்யாணம் என கேட்டரரின் மனைவி கூற, அவர் அன்றுதான் அசோக்குக்கு வெளியூரில் கல்யாணம் எனவும், அங்கு புரோகிதம் செய்ய தான் ஒத்துக் கொண்டு விட்டதாகவும் கூற, அந்த மாமியோ அதெல்லாம் முடியாது என நிர்தாட்சண்யமாக மறுத்து விடுகிறாள். சாம்புவும் குழப்பத்துடன் விடைபெர்றுச் செல்ல, கேட்டரரும் தன் மனைவியை இது பற்றி குறித்து கண்டிக்க, அப்பெண்மணி தான் பிடித்த முயலுக்கு மூணே கால் என நிற்கிறாள்.

நாதன் வீட்டுக்கு காதம்பரி வருகிறாள். அவளுடன் பொதுப்படையாகப் பேசும் நாதன் அசோக் வெளியில் போயிருப்பதாகக் கூறுகிறார். அவளுக்கு எளிமையான கல்யாணம் என்பதால் ஏதேனும் ஏமாற்றமா என அவர் மேலும் கேட்க, அப்படியெல்லாம் இல்லை என மறுக்கிறாள். திருமணத்துக்கு முன்பே தனக்காக அசோக் ஒரு காரியம் செய்வானா என அவனிடமா கேட்பதற்காக தான் வந்ததாக அவள் கூறுகிறாள். நாதனும் வசுமதியும் எவ்வளவு வற்புறுத்தியும் அவர்களிடம் அவள் இதை தான் அசோக்கிடம்தான் முதலில் கேட்க வேண்டும் எனக்கூறிவிட்டு சென்று விடுகிறாள்.

அவள் அந்தண்டை போனதும், அசோக் மாடியிலிருந்து இறங்கி வருகிறான். அவன் வெளியில் போகவில்லையா என நாதன் ஆச்சரியத்துடன் கேட்க, இல்லை என்கிறான். காதம்பரி வந்து சென்றது பற்றி அறிந்த அவன் அவளுடன் போனில் பேசுகிறான். அவள் மேலே ஏதும் கூறும் முன்னரே, அவள் கேட்பதை தன்னால் கன்சிடர் செய்யவியலாது எனவும் கூறி விடுகிறான்.

(தேடுவோம்)

எபிசோட் - 86 (18.05.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
காதம்பரி கேட்பதை தன்னால் ஏற்றுக் கொள்ளவியலாது என அசோக் கூறிவிட்டு அப்பால் போக வசுமதி நாதனிடம் என்ன இதெல்லாம் என கேட்க, எதிராளியை வாயடைக்க வைக்கும் இந்த டெக்னிக்கும் நன்றாகவே இருக்கிறது எனக் கூறிவிட்டு அவரும் அப்பால் செல்கிறார். சமையற்கார மாமி அசோக்கிடம் அவன் காதம்பரி என்ன கேட்க நினைத்தாள் என அறிந்துதான் அவ்வாறு கூறினானா எனக் கேட்க, அவனும் ஆமாம் என்கிறான். என்ன அவள் கேட்க நினைத்தாள் என மாமி விடாது கேட்க, அது முற்றிலும் தங்கள் தனிப்பட்ட விஷயம் எனக் கூறிவிட்டு அப்பால் செல்கிறான்.

கோவிலில் வைத்து காதம்பரி அசோக்கை சந்திக்கிறாள். செவ்வாய்க்கிழமை ராகுகாலத்தில் அம்பாளுக்கு விளக்கு ஏறுமறு தன் அக்கா கூறியதால் தான் கோவிலுக்கு வந்தாக அவள் கூறுகிறாள். செவ்வாயில் அம்பாளுக்கு ராகுகால பூஜை செய்வது விசேஷம் என அசோக்கும் கூறுகிறான்.

இதென்ன ராகு கால பூஜை என நண்பர் கேட்க, சோ இது முதற்கண் சாத்திர அங்கீகாரம் எல்லாம் பெற்றதில்லை என்றும், தான் பல அறிஞர்களிடம் விசாரித்தவரை இது காலப்போக்கில் ஏற்பட்டது எனவும் கூறி விளக்குகிறார். அம்பாளுக்கு பூஜை செய்தால் நவக்கிரகங்களில் ஒன்றான ராகுவுக்கு பிரீதி என பொருள்படும் வடமொழி ஸ்லோகம் இருப்பதைக் கூறி ஒரு வேளை இந்த வழக்கம் அதிலிருந்து டெவலப் ஆகியிருக்கலாம் என்றும், எது எப்படியாயினும் அதை செய்பவர்களுக்கு ஒரு மனவமைதியை இது கொடுப்பதால் இதுவும் ஏற்றுக் கொள்ளத் தக்கதே என்றும் கூறுகிறார்.

தனது வேண்டுகோளை அது என்னவென்று கேட்காமலேயே அசோக் நிராகரித்து விட்டதாகவும், ஆகவே அவன் அதை நிறைவேற்ற அவனைத் தூண்டுமாறு தான் அம்பாளை வேண்டிக் கொண்டதாகவும், அவள் தன் வேண்டுகோளை நிறைவேற்றுவாளா எனக் கேட்க, அவள் செய்ய மாட்டாள் என அசோக் கூறுகிறான். ஏன் அவ்வாறு கூறுகிறான் என காதம்பரி விடாது கேட்க, தானும் எதிர் வேண்டுகோள் அம்பாளிடம் வைத்திருக்கலாமல்லவா என அவன் கேட்கிறான்.

தான் கேட்க நினைத்தது என்ன என்பதை அவன் நிஜமாகவே அறிவானா என காதம்பரி கேட்க, தெரியும் என்கிறான் அசோக். அது என்ன என அவள் விடாது கேட்க, திருமணத்துக்கு முன்னால் தான் குடுமியை எடுத்துவிட வேண்டும் என்றுதானே அவள் கேட்க நினைத்தாள் என அவன் கூற, அவள் திகைக்கிறாள். ஏனெனில் அதுதான் உண்மை.

தன்னால் அசோக் திருமணத்துக்கு வரவியலாது என சாம்பு தன் இயலாமையை கூற, முதலில் திகைத்தாலும் அவரது நிர்ப்பந்தங்களையும் நாதன் புரிந்து கொள்கிறார். தனக்கு பதிலாக வேம்பு சாஸ்திரிகளை ஏற்பாடு செய்யட்டுமா எனக் கூறி, வேம்பு மிகச் சிரமதசையில் இருப்பதையும் அவரிடம் கூறுகிறார். வசுமதி தயங்கினாலும் நாதன் ஒத்துக் கொள்கிறார்.

வேம்பு வீட்டுக்கு சென்று சாம்பு விஷயத்தைக் கூற அவர் சாம்புவுக்கு மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறார். வேம்புவுக்கு மாதா மாதம் மளிகை சாமான்கள் வருவது பற்றிக் கேட்க, அவரும் தன் திகைப்பை வெளிப்படுத்துகிறார். அது சாம்புவாக இருக்குமோ என வேம்பு எதற்கும் கேட்டு வைக்க சாம்புவோ நானா எனக் கேட்டு, ஒரு அவுட்டு சிரிப்பை வெளியிடுகிறார்.

நாதன் வீட்டில் அவருக்கு சமையற்கார மாமி காப்பி கொண்டு வந்து வைக்கிறாள். வசுமதி எங்கே என அவர் கேட்க, அவள் ஜவுளி எடுக்கப் போயிருப்பதாகக் கூறுகிறாள். கல்யாண பெண்ணுக்கு வசுமதி நகைகளாக வாங்கிப் பூட்ட எண்ணூகிறாள் என்றும் கூற, அவர் காதம்பரி சர்வாலங்காரத்துடன் நகைக்கோலம் பூண்டு அபிநயம் பிடிப்பதை மனக்கண்ணால் பார்த்து திகைக்கிறார்.

அசோக் அப்போது வெளியிலிருந்து வர, அவனிடம் எங்கே போயிருந்தான் அவன் என நாதன் கேட்கிறார். வேதபாடசாலைக்கு சென்றதாகவும் அங்கு தன் நண்பர்களுக்கு பத்திரிகை வைத்ததாகவும் அவன் அவன் நண்பர்கள் பஸ் ஒன்றை அரேஞ்ச் செய்து கொண்டு முந்தைய தினமே வந்து விடுவார்கள் எனவும் கூறுகிறான். கல்யாணம் முழுக்க வேத கோஷங்களுடன் களை கட்டும் என நாதன் தமாஷாகக் கூறுகிறாள்.

கேட்டரர் வீட்டுக்கு ஃபோன் வருகிறது. அவரது ஆடிட்டர் நண்பர் தங்களாத்துக் கல்யாணத்தை ஜனவரி 19-ஆம் தேதி வைத்திருப்பதாகக் கூறி, அவர்தான் கேட்டரிங் செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்ள, அவர் தயங்குகிறார். அவரது மனைவியோ அவரிடமிருந்து ஃபோனை பிடுங்கி, அதே தேதிக்கு ஒத்துக் கொண்டு விடுகிறாள். தங்கள் பிள்ளைக்கும் அன்றுதானே கல்யாணம் என கேட்டரர் கேட்க, அதனால் என்ன 21-ஆம் தேதி வைத்துக் கொண்டால் போயிற்று என அலட்சியமாக பேசுகிறாள். சாம்பு சாஸ்திரி அவ்வளவு கெஞ்சியும் மனமிரங்காத அவள் இப்போது மட்டும் இவ்வாறு செய்யலாமா எனக் கேட்க, துளிக்கூட குற்ற உணர்ச்சியே இன்றி அந்தப் பெண்மணி மேலே பேசுவதைக் காண எனக்கே கோபம் வருகிறது. அந்த கேட்டரர் அவள் கன்னத்தில் பொளேர் என ஒரு அறை விட்டிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்.

சாம்பு சாஸ்திரிகள் அப்போது வந்து தான் வேம்புவை தனக்கு பதிலாக அசோக் கல்யாணத்துக்கு புரோகிதத்துக்கு ஏற்பாடு செய்ததை கூற கேட்டரர் பேய் முழி முழிக்கிறார். அவர்து மனைவியோ அவர் தைரியமாக பேச வேண்டும் எனக் கூறுகிறாள்.

என்ன சார் இப்படியிருக்காங்க என நண்பர் கேட்க, அப்படித்தான் என சோவும் ஆமோதிக்கிறார்.

(தேடுவோம்)

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் முடிய ஜெயா டிவியில் இரவு எட்டு முதல் எட்டரை வரை ஒளிபரப்பப்படுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

4 comments:

cnsone said...

YOU are mentioning the Date & Episode Number for each 'post'. Why not add the Day also - like Monday, Wednesday etc.

cnsone said...

I understand it is not a good thing to complain about a Service being 'offered' free!

Can Mr. Raghavan explain as to why some times there is a 'virus-attack' when we open the link for the video?

dondu(#11168674346665545885) said...

@cnsone
This happens with the first link of isaitamil.

That is why I refrain from giving it nowadays. As for the already given ones, I was hoping that the concerned site would do the needful to remove them.

Anyhow it is academic as it no longer gives this video.

Regards,
Dondu N. Raghavan

NAGARAJAN said...

அசோக் கல்யாண விஷயத்தில் நாதன்
பாகவதரை மறந்து விட்டாரா?
நாதன் பாகவதரை ஒரு முறை god father என்று
குறிப்பிட்டார்.
கலந்து ஆலோசித்த மாதிரியும் தெரியவில்லை;
பத்திரிகை கொடுத்த மாதிரியும் தெரியவில்லை.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது