1/20/2011

டோண்டு பதில்கள் 20.01.2011

jaisankar jaganathan
கேள்வி-1. விஜய்காந்த் இந்த முறை விருத்தாசலத்தில் ஜெயிப்பாரா?
பதில்: முந்தைய தேர்தலில் தனது புதிய கட்சியின் பலம் தெரிவதற்காக அவர் தனியே செயல்பட்டார் என்பதை புரிந்து கொள்ளலாம். ஆனால் இத்தேர்தலில் அவர் அதிமுகவுடன் கூட்டணி வைப்பதே அவருக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது. அவ்வாறு கூட்டணி அமைத்து அவரும் தேர்தலில் நின்றால் விருத்தாசலம் என்ன எந்தத் தொகுதியிலும் அவரது வெற்றி வாய்ப்பு பிரகாசமே.

கேள்வி-2. மன்மதன் அம்பு எப்படி ஓடுது சென்னையில்(நான் வசிப்பது திருச்சி)
பதில்: நானும் அதை இன்னும் பார்க்கவில்லை. இத்தனைக்கும் எங்கள் வீட்டுக்கு வெகு அருகில் உள்ள தியேட்டரில்தான் அது ரிலீஸ் ஆயிற்று. இருந்தாலும் அதைப் பார்க்கத் தோன்றவில்லை. நான் கேள்விப்பட்டவரை அதன் கதை சமீபத்தில் 1977-ல் நான் பார்த்த “Follow me" என்னும் படத்தை நினைவுபடுத்துகிறது. அதில் இஸ்ரவேல நடிகர் டோப்போல் நடித்தார் (Fiddler on the roof புகழ்). பார்க்க வேண்டும் என எண்ணினேன் ஆனால் நேரம் கிடைக்கவில்லை. படத்தைத் தூக்கி விட்டார்கள், இங்கு அது 25 நாட்கள் ஓடியது.


Arun Ambie
கேள்வி-3. சென்னை புத்தகக் கண்காட்சிக்குப் போனீர்களா?
பதில்: ஒரே ஒரு முறை சென்றேன். காந்தியின் கொலை, ராஜீவ் காந்தியின் கொலை, ஹாரி பாட்டரை பகடி செய்து வெளிவந்த ஒரு நாவல் ஆகியவற்றை வாங்கினேன்

கேள்வி-3. துக்ளக் ஆண்டுவிழாவுக்கு வர எண்ணியிருக்கிறேன். உங்களை அங்கே சந்திக்கலாமா?
பதில்: ஆண்டுவிழா முடிந்து விட்டதே. பிறகு எப்போதாவது பார்ப்போம். நீங்கள் சென்னையில் இருந்தால் உங்கள் டெலிஃபோன் நம்பரை எனக்கு ஒரு பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். பேச முயற்சி செய்கிறேன். அப்பின்னூட்டத்தை வெளியிட மாட்டேன்.


வஜ்ரா
கேள்வி-4. மதம் மாறுவதால் எப்பயனும் இல்லை என்பதற்கு இந்த உதாரணத்தைப் பாருங்கள்:
இப்படி கஷ்டப்பட்டு கஷ்டப்படுவதைவிட ஈசியாக இந்துவாக இருந்தே சாதியை எதிர்த்துப் போராடி ஜெயிக்கலாமே. டோண்டு, உங்கள் கருத்து?
பதில்: தீண்டாமை என்பது நமது மதத்துக்கு ஒரு தீராத களங்கம்தான். அதே சமயம் இந்த விஷயத்தில் ஹிந்து மதத்தை சாடும் மிஷநரிகள் கிறித்துவத்திலும் அதை புகுத்துவது வெட்கக்கேடு. நீங்கள் சொல்வது போல ஹிந்துவாகவே இருந்து ஜெயிக்க தலித்துகள் முற்படுவதே நலம்.

மிளகாய் பொடி
கேள்வி-5. பெரிய பெரிய சூப்பர் மார்க்கெட் கடைகள் வந்ததினால் சிறிய மளிகை கடைகள் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளன?
பதில்: எனக்குத் தெரிந்து அவ்வாறு இல்லை.

கேள்வி-6. தாங்கள் மளிகை பொருட்கள் வாங்குவது சூப்பர் மார்கட்டிலா அல்லது சிறிய மளிகை கடையிலா?
பதில்: சுமாரான அளவுடைய மளிகைக் கடையில்.

கேள்வி-7. தங்களுக்கு உடற்பயிற்சி செய்யும் பழக்கம் இருக்கிறதா?
பதில்: இருந்தது, இப்போது இல்லை. இது பற்றி நான் எழுதியதை இங்கே பார்க்கவும்.

கேள்வி-8. டயபெடிக்ஸ் வராமல் இருக்க உடற்பயிற்சி எல்லாம் செய்வது அவசியமாமே..?
பதில்: ஆம். உண்மைதான்.

கேள்வி-9. 108 ஆம்புலன்ஸ் சேவை திமுகவின் சாதனைதானே?
பதில்: ஆம், அதில் என்ன சந்தேகம்?


ராஜரத்தினம்
கேள்வி-10. நீங்கள் ஐயங்கார்கள் தவறே செய்தாலும் அதை தாங்கி (கமல் ஹாசன், பலே S.V.Sekarனு மனசாட்சியே இல்லாமல் ஒரு பதிவு)பிடிக்கிறீர்களே? அது ஏன்?
பதில்: நான் என்ன பலீஜா நாயுடுவான ஈ.வே. ராமசாமி நாயக்கர் மாதிரி 44 தலித்துகளை கோபால கிருஷ்ண நாயுடு என்னும் பண்ணையார் உயிரோடு எரித்தபோது, அதை வெறுமனே கூலித்தகராறு என சொதப்பலாக அறிக்கை விட்டேனா என்ன?

pt
டோண்டு சாரின் விமர்சனம்?
கேள்வி 11. விஜய்க்கு எதிராக பின்னப்பட்டிருக்கும் இந்த வலை அரசியல் சார்ந்தது என்றாலும், அதை கடன் பிரச்சனையாக்கி விட்ட சூட்சுமத்தை நன்றாகவே உணர்ந்தாராம் அவர். இனிமேலும் பொறுத்திருப்பதில் அர்த்தமில்லை என்கிற அளவுக்கு சூடாகிக் கிடக்கிறாராம்.
பதில்: படத்தை வெளியிடுவதில் வெற்றியடைந்தார் என படித்தேனே. உண்மைத் தமிழன் விவரமாகவே எழுதியுள்ளார் படியுங்கள்.

கேள்வி-12. காவலன் – உங்களுக்கு ஜண்டுபாம்
பதில்: எனக்கா, விஜய்க்கா?

கேள்வி-13.குடும்பத்தோடு பார்க்கக் கூடிய, அழகான காதலைக் கொண்ட, உணர்ச்சிகரமான கதையைக் கொண்ட, ஒரு வித்தியாசமான கிராமத்துக் கதை ஆடுகளம்! தனுஷும் வெற்றி மாறனும் நின்று ஆடும் வெற்றிக்களம்!
பதில்: இன்னும் பார்க்கவில்லை. மக்கள் கருத்து என்ன?

கேள்வி-14. விஜய்க்கு உதவ வந்த விஜயகாந்த்
பதில்: எந்த முறையில்? ஏ செண்டர், பி செண்டர் சி செண்டர் ஆகிய இடங்களில் உள்ள தியேட்டர்களின் புள்ளிவிவரங்களைத் தந்தாரா?

கேள்வி-15. படித்தவர்களுக்காக மட்டுமே படமெடுப்பவர் என மனைவி சுகாசினியால் பாராட்டப்பட்ட மணிரத்னம், இப்போது தமிழ் இலக்கியத்தின் பெருமைகளுள் ஒன்றான பொன்னியின் செல்வன் நாவலைப் படமாக்கும் முயற்சியில் உள்ளார்.
பதில்: பலர் முயற்சி செய்து கோட்டை விட்டனர். நான் என்ன நினைக்கிறேன் என்றால், அதை டிவி சீரியலாகத்தான் எடுக்க வேண்டும். அப்போதுதான் முழுமையாக எடுக்கவியலும்.


நக்கீரன் பாண்டியன்
கேள்வி-16. மு. க. அழகிரியின் நடவடிக்கை.....?
பதில்: சமாதானம் ஆகிவிட்டதாக இன்று ஜூவியில் பார்த்தேனே.

கேள்வி-17. ஆட்சியில் பங்கு கேட்கும் காங்.தலைவர் இளங்கோவன் வெற்றி பெறுவாரா?
பதில்: 1996-ல் காங்கிரஸ் அதிமுகவுடன் சேர்ந்து இருந்தபோது இருந்த அதே நிலைதான் இப்போது திமுகவுடன். அப்போதும் காங்கிரஸ் விடாப்பிடியாக அதிமுகவுடன் கூட்டணி வைக்க தமாக பிறந்து, நிலைமை தலைகீழாக மாறியது. ஆனால் அபோது மூப்பனார் இருந்தார். இப்போது வாசன் துணிவாரா என்று தெரியவிலையே.

கேள்வி-18. பெட்ரோல் லிட்டர் ரூ100 க்கு வந்து விடும் போலுள்ளதே?
பதில்: வண்டி வைத்திருப்போர் வைத்திருக்காதோர் ஆகிய எல்லோரையுமே பயமுறுத்தும் செய்தி இது.

கேள்வி-19. நீதித் துறையிலும் புகார் புயல், என்னவாகும்?
பதில்: கொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு போனா அங்கே ரெண்டு கொடுமை ஜிங்கு ஜிங்குன்னு ஆடுதாம்.

கேள்வி-20. 2010-2011 துக்ளக் ஆண்டுவிழா ஒப்பிடுக->அரங்க மாற்றம்-வாசகர் எழுச்சி-சோவின் நகைச்சுவை மிளிரும் அரசியல் கிண்டல் - துக்ளக் வாசகர்கள் பேச்சு-நடை பெற்ற மாற்றங்கள்-மக்களின் அரசியல் விழிப்புணர்வு-திமுகவின் ரியாக்‌ஷன்-ஜெயா டீவியின் கவரேஜ்?
பதில்: போன ஆண்டும் சரி, இம்முறையும் சரி சோ அவர்களது உடல் நிலையில் பலகீனம் தெரிந்தது. இருப்பினும் மனிதர் மனவலிமையுடன் 3 மணி நேரம் நின்று பேசினார். அவரது பேச்சில் நகைச்சுவை, கூர்மை, கிண்ட ஆகிய ஒன்றிலும் குறையேதுமில்லை.

துக்ளக் வாசகர்களும் தங்களது உயர்தரத்தை நிரூபித்தனர். பிரியாணி அளித்து, லாரி அனுப்பி ஊரிலிருந்து வந்தவர்களை சென்னையை சுற்றிக் காட்டல் ஆகிய எந்தக் கருமாந்திரங்களும் இன்றி தானாகவே வந்த கூட்டம் மிக அமைதியாகவே பல மணி நேரம் காத்திருந்தது கண்கொள்ளா காட்சிதானே

இம்முறை ஜெயா டிவி முழு மீட்டிங்கையும் கவர் செய்தது பாராட்டுக்குரியதே.


மீண்டும் கேள்விகள் வந்தால் பிறகு சந்திப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

83 comments:

hayyram said...

//கேள்வி-9. 108 ஆம்புலன்ஸ் சேவை திமுகவின் சாதனைதானே?
பதில்: ஆம், அதில் என்ன சந்தேகம்?// அதை துவங்கி வைத்தவர்கள் வேறு. அநேகமாக சத்யம் கம்பியூட்டர் நிர்வாகி என்று ஞாபகம். அப்படியே தனதாக்கிக் கொண்டிருப்பது தி மு க.

hayyram said...

//தமிழகத்தில் பரவலாக இருக்கும் பெரிய தியேட்டர்கள் அனைத்தும் தொடர்ந்து குறிப்பிட்ட மூன்று பேரன்களின் கட்டுப்பாட்டில் இருப்பது திரைத்துறையையே அவர்களிடம் அடகு வைத்தது போலாகியிருக்கிறது என்று திரையுலகில் அனைவருமே முனங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். (கவனிக்க : முனங்கிக் கொண்டு மட்டுமே.. இது மட்டுமே அவர்களால் முடியும்.. இதற்கு மேல் ஒரு முழுக்கத்தையும் இவர்களால் செய்ய முடியாது..)

ஆனால் இவர்களுடைய திரைப்படங்களில்தான் ஹீரோக்கள் ரேஷன் கடை அநியாயத்தையும், போலி மருந்துக் கொள்ளையையும், மனித உரிமையை மீட்கவும், நிலை நாட்டவும் அந்தரத்தில் பறந்து, பறந்து அடிப்பதுபோல் காட்சிகளை வைப்பார்கள். இதுதான் இவர்களால் முடியும்

Read more: http://truetamilans.blogspot.com/2011/01/blog-post_19.html#ixzz1BXGvbylW//தமிழகத்தில் பரவலாக இருக்கும் பெரிய தியேட்டர்கள் அனைத்தும் தொடர்ந்து குறிப்பிட்ட மூன்று பேரன்களின் கட்டுப்பாட்டில் இருப்பது திரைத்துறையையே அவர்களிடம் அடகு வைத்தது போலாகியிருக்கிறது என்று திரையுலகில் அனைவருமே முனங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். (கவனிக்க : முனங்கிக் கொண்டு மட்டுமே.. இது மட்டுமே அவர்களால் முடியும்.. இதற்கு மேல் ஒரு முழுக்கத்தையும் இவர்களால் செய்ய முடியாது..)

ஆனால் இவர்களுடைய திரைப்படங்களில்தான் ஹீரோக்கள் ரேஷன் கடை அநியாயத்தையும், போலி மருந்துக் கொள்ளையையும், மனித உரிமையை மீட்கவும், நிலை நாட்டவும் அந்தரத்தில் பறந்து, பறந்து அடிப்பதுபோல் காட்சிகளை வைப்பார்கள். இதுதான் இவர்களால் முடியும்

Read more: http://truetamilans.blogspot.com/2011/01/blog-post_19.html#ixzz1BXGvbylW//

hayyram said...

இந்த கருமத்திற்குத்தான் மதம் மாறுகிறார்களாக்கும்?

http://hayyram.blogspot.com/2010/10/blog-post_31.html

adyar said...

டோண்டு அவர்களே, உங்கள் கேள்வி பதில் பகுதியில் 'படித்தவர்களுக்காக மட்டுமே படமெடுப்பவர் என மனைவி சுகாசினியால் பாராட்டப்பட்ட மணிரத்னம், " இந்த கேள்வியை படிதேன், இது சம்பந்தமாக :

Thatstamil.com என்றொறு பத்திரிக்கை நீங்கள் வசித்திருக்கலாம், அவர்களின் பிராமண அவதூறுப்போக்கு தெரிந்ததே, அதில் ஒன்றும் பிரச்சனை இல்லை :) அதுதான் இணையம் பூராவும் கொட்டிக்கிடக்கிறதே, நாம் பார்த்து கால்வைத்து நடந்து போய் கொள்ளலாம்

ஆனால் சம்பந்தமே இல்லாத ஒரு செய்தியை எடுத்து அதில் பிராமணர்களை இழுப்பது எப்படி என்று காண்பித்தால் மற்றவர்களாவது கொஞ்சம் சார்புகளை புரிந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையில்


இது அவர் பேசிய சுட்டி,
http://www.youtube.com/watch?v=zkeRUMEMoDA

இது அவாளின் சுட்டி
http://thatstamil.oneindia.in/movies/news/2011/01/5-suhasini-mani-rathnam-veppam-audio-launch.html

ஒப்பிட்டு இன்பம் அடையவும்.
பின் குறிப்பு ; நான் அவர்களுக்கு இந்த லின்க்கை அனுப்பினேன், அவர்கள் வெளியிடவில்லை. :)))))

அருள் said...

//கேள்வி-9. 108 ஆம்புலன்ஸ் சேவை திமுகவின் சாதனைதானே?
பதில்: ஆம், அதில் என்ன சந்தேகம்?//

India finalizes 108 as dial number for emergency

June 07, 2008

The number 108 will soon become India's version of 911 -- the number the U.S. dials for an emergency, according to the Times of India Saturday.

After negotiations for almost a year, Indian Telecom Minister A. Raja has indicated in a letter to Health Minister Anbumani Ramadoss recently that 108 is being finalized as the national toll-free trauma care number.

"I have just received an official communication from Raja. I am optimistic that 108, which is currently being used by some states individually as their emergency response number, will soon be made the national trauma care number," Ramadoss said.

Once a caller dials 108, a 24-hour call center will receive the information, locate an ambulance closest to the emergency spot through GPRS technology and dispatch it within an hour.

http://english.people.com.cn/90001/90777/90851/6426342.html

Sivakumar said...

ஆம்புலன்ஸ் சேவை 108 அன்புமணி ராமதாஸால் முந்தைய மத்திய அரசால் ஆரம்பிக்கப்பட்டது. அன்புமணி செய்த மிகசிறந்த வேலைகளில் இதுவும் ஒன்று.

இத்திட்டம் இந்தியாவிலேயே முதன்முதலாக குஜராத்தில்
ஆரம்பிக்கப்பட்டது.

வஜ்ரா said...

அடையார்,

அந்த வீடியோ முழுசா இல்ல. சுகாசினி பேச்சின் ஊடாலே வீடியோ முடிஞ்சுபோச்சு.

அவுக புருசன் படிச்சவனுக்காகப் படம் எடுத்தார், என்று அவர் சொன்னாரா இல்லையா என்றே தெரியல.

எனக்கு என்னமோ அந்த அம்மணி அப்படி பேசக்கூடிய ஆள் தான் என்றே தோன்றுகிறது. ஆஃப்டர்ஆல் அவுக எல்லாம் கம்மூனிஸ்ட் பார்டியின் கார்ட் ஹோல்டர்கள் ஆயிற்றே.

வஜ்ரா said...

டோண்டு ஐயா,

நீங்கள் என்னதான் தேதியில் 2010 போட்டாலும் உங்களுக்கு ஒரு வயசு குறையப்போறது கிடையாது. இந்தப்பின்னூட்டம் மாதிரியே வயசும் ஒவ்வொண்ணா அதிகரிச்சுகிட்டேதான் போகும்.

Arun Ambie said...

ஆம்புலன்ஸ் சேவை 108 சத்யம் சுருட்டல் புகழ் ராமலிங்க ராஜுவால் அமெரிக்காவின் 911 அடிப்படையில் conceptualize செய்யப்பட்டது. அதற்கு அவர் நன்கொடையும் கொடுத்திருக்கிறார். சின்னக்குடிதாங்கி அன்புமணி ஆசுபத்திரி மந்திரியாக டில்லியில் கடமையாற்றியவாறே தன் பிள்ளைகளை இந்திப் பள்ளிக்கூடங்களில் படிக்கவைத்துக் கொண்டிருந்த போது துறைசார்ந்த விஷயமாதலால் அவரும், திட்டத்திற்கான தொலைபேசி சேவைக்கு அப்போதைய தொலைத் தொடர்பு மந்திரி 176000 கோடி சூறை புகழ் ஆ.ராசாவும் அனுமதியளித்து மத்திய அரசால் '108' ஆம்புலன்ஸ் திட்டம் தொடங்கப் பட்டது.

சின்ன மற்றும் பெரிய குடிதாங்கிகளுக்கு அல்வா கொடுத்து அனுப்பிவிட்டு ஏதோ தானே முன்னின்று யோசித்து இத்திட்டத்தைச் செயல்படுத்தியது போன்ற ஒரு மாயத்தோற்றத்தை வழக்கம் போல தி.மு.க உருவாக்கிக் கொண்டார்.

இளங்கோவன் அதைத்தான் மேடை மேடையாக stealing credit என்று புலம்புகிறார். காங்கிரசில் உள்ள பராசக்திமிக்க கலைஞர் கோஷ்டி அவரை அமுக்கப்பார்க்கிறது.

இத்திட்டத்திற்கான விளம்பரங்கள் கூட பிற மாநிலங்களில் 108ஐ பிரதானப்படுத்தியே வரும். இங்கே தான் ஆரம்பத்தில் நன்றி 108 என்று சொன்னவர்கள் திடீரென்று நன்றி கலைஞருக்கு என்று மொத்தமாக அடித்துவிட்டார்கள்.

This is a clear case of misrepresentation of facts. சுப்பிரமணிய சுவாமி ஏன் இன்னும் இதற்கு கேஸ் போடவில்லை என்று தெரியவில்லை.

@அருள்: நீங்கள் ஜெராக்ஸ் கடை வைத்திருக்கிறீர்களா? Copy paste தவிர உருப்படியாக எதுவும் செய்வதில்லையே... அதனால் கேட்டேன்!!!

அருள் said...

// //கேள்வி: படித்தவர்களுக்காக மட்டுமே படமெடுப்பவர் என மனைவி சுகாசினியால் பாராட்டப்பட்ட மணிரத்னம், இப்போது தமிழ் இலக்கியத்தின் பெருமைகளுள் ஒன்றான பொன்னியின் செல்வன் நாவலைப் படமாக்கும் முயற்சியில் உள்ளார்.

பதில்: பலர் முயற்சி செய்து கோட்டை விட்டனர். நான் என்ன நினைக்கிறேன் என்றால், அதை டிவி சீரியலாகத்தான் எடுக்க வேண்டும். அப்போதுதான் முழுமையாக எடுக்கவியலும்.// //

பொன்னியின் செல்வன் ஒரு முழுநீள தொலைக்காட்சி தொடராக "மக்கள் தொலைக்காட்சி"யில் வெளிவர இருக்கிறது.

hayyram said...

//Thatstamil.com என்றொறு பத்திரிக்கை நீங்கள் வசித்திருக்கலாம், அவர்களின் பிராமண அவதூறுப்போக்கு தெரிந்ததே, // பிராமண எதிர்ப்பு மட்டுமல்ல ஒட்டு மொத்த இந்து எதிர்ப்பு சுட்டிகள் மட்டுமே அங்கே புக் மார்க்ஸில் பிரசுரிக்கபடுகிறது. அப்படி இருந்தாலும் பரவாயில்லை, இந்து மதம் சம்பந்தமான ஆதரவான மற்றும் விளக்கப்பதிவுகள் உடனடியாக வேண்டுமென்றே நீக்கப்படுகிறது. அது முழுக்க முழுக்க முஸ்லீம் தளம். வெளிப்படையாக இந்து அவமதிப்பு செயலை செய்து கொண்டிருக்கிறார்கள். கோடான கோடி இந்துக்கள் அதே தளத்தை சுரனை இல்லாமல் பார்வையிடுகிறார்கள். இப்படி ஒரு விஷயம் நடக்கீறது என்று இவர்களில் பல பேருக்கு தெரியவே தெரியாது. தெரிந்தாலும் இந்த(து) மரமண்டைகளுக்கு உரைக்காது. தற்போதைய அரசியல் மற்றும் ஊடக நிலவரப்படி நாமெல்லாம் செமி பாகிஸ்தானில் வசிக்கிறோம். ஹிந்துஸ்தானத்தில் அல்ல.

வஜ்ரா said...

//
பொன்னியின் செல்வன் ஒரு முழுநீள தொலைக்காட்சி தொடராக "மக்கள் தொலைக்காட்சி"யில் வெளிவர இருக்கிறது.
//

சன், விஜய், ஜெயா டீ.வியில் வெளியிடாமல் மக்கள் தொலிக்காட்சியில் வெளியிடுவதால் என்ன நன்மை ?

மதுரையில் மக்கள் தொலைகாட்சியெல்லாம் அழகிரி அலவ் செய்வதில்லை. ஓவராக பிரச்சனை செய்தால் மக்கள் தொலிக்காட்சியில் ஒளிபரப்பும் சீரியல்களை திருட்டு வி.சி.டி போட்டு தனது தயா.டி.வியில் முன்தினமே ஒளிபரப்பிவிடுவார் ஜாக்கிரதை.

சமீபத்தில் வந்த ரத்தசரித்திரம் முதல் பகுதியை, முழுநீள இந்திப்படத்தை, தயா டி.வி(DTV) யில் ஒளிபரப்பியேவிட்டனர். அதுவும் ஆங்கில சப்டைடில்களுடன். அவர்கள் வெளியிடும் திரைப்படத்துக்கே அவர்கள் திருட்டு சி.டி வெளியிட்டு சம்பாரிப்பவர்கள்.

hayyram said...

http://hayyram.blogspot.com/2011/01/blog-post_21.html

நேருவின் ஆங்கிலேய பாசத்தால் இந்தியாவிற்கு ஏற்பட்ட பாதிப்புகள் என்ன என்பது பற்றி உங்கள் கருத்து?

அருள் said...

hayyram said...

// //தற்போதைய அரசியல் மற்றும் ஊடக நிலவரப்படி நாமெல்லாம் செமி பாகிஸ்தானில் வசிக்கிறோம். ஹிந்துஸ்தானத்தில் அல்ல.// //

பாகிசுதானமோ, ஆப்கானிசுதானமோ - அதெல்லாம் உலகநாடுகள் பட்டியலில் உள்ளவை. ஆனால், இந்துசுதானம் என்ற ஒன்று உலகப்படத்தில் எங்கேயும் இல்லை.

இல்லாத நாட்டில் வசிப்பது எப்படி?

அருள் said...

Arun Ambie said...

// //நீங்கள் ஜெராக்ஸ் கடை வைத்திருக்கிறீர்களா? Copy paste தவிர உருப்படியாக எதுவும் செய்வதில்லையே... அதனால் கேட்டேன்!!!// //

இந்துத்வ 'டுபாக்கூர்' கட்டுக்கதைகளை அள்ளிவிடும் அவலச் செயலைவிட, Copy paste செய்வது தரம் தாழ்ந்த செயல் அல்லவே.

அருள் said...

வஜ்ரா said...

// சன், விஜய், ஜெயா டீ.வியில் வெளியிடாமல் மக்கள் தொலிக்காட்சியில் வெளியிடுவதால் என்ன நன்மை ?// //

அதை மக்கள் தொலைக்காட்சியை பார்ப்போர் முடிவு செய்யட்டும். சன், விஜய், ஜெயா தொலைக்காட்சியில் வெளியிடுவதை யார் தடுத்தது?

பொன்னியின் செல்வன் நாட்டுடமை ஆக்கப்பட்ட படைப்பு. அதனை எவரும் எந்த தொலைக்காட்சியிலும் வெளியிட தடை ஏதும் இல்லை.

வஜ்ரா said...

அருள்.
ஆம். எந்தத் தடையும் இல்லை. நானும் அதை தடை செய்யவேண்டும் என்றும் சொல்லவில்லை.

சன், விஜய், ஜெயா போல் வீச்சு மக்கள் தொலைக்காட்சிக்கு இல்லை என்பது தான் என் கருத்து.

....
//
இந்துத்வ 'டுபாக்கூர்' கட்டுக்கதைகளை அள்ளிவிடும் அவலச் செயலைவிட, Copy paste செய்வது தரம் தாழ்ந்த செயல் அல்லவே.
//

உங்களுக்கு இஷ்டம் இருக்கோ இல்லையோ இன்று இந்துத்வா தரப்பு என்பது வலுவான வலது சாரித்தரப்பு. அதன் கட்டுரைகளை மொண்ணையாக "டுபாக்கூர்" என்று சொல்லித் தள்ளுவதைவிட பொறுமையாக படித்து பதில் எழுதுவதில் தான் ஒரு நல்ல முரன் இயக்கம் உருவாகும். இரு தரப்பிலும் உள்ள நல்லவை மிஞ்சி நிற்கும்.

உங்களால் அது முடியாத பட்சத்தில் வெறும் காப்பி பேஸ்ட் செய்து பேண்ட் விட்தை வேஸ்ட் செய்யுங்கள். உங்களை யாரும் தடுக்கப்போவதில்லை. அதற்காக உங்களுக்கு மிகப்பெரிய "அறிவாளி" அந்தஸ்து கிடைக்கவேண்டும் என்றெல்லாம் நீங்கள் எண்ணிக்கொண்டு உங்கள் ஈகோவுக்கு தீனிபோட்டுக்கொண்டு இருந்தால் அதற்கு யாரும் பொருப்பேற்க முடியாது. உங்கள் நிலை வெறும் காப்பிபேஸ்ட் காமடி பீஸ் என்று மட்டுமே இருக்கும்.

pt said...

டோண்டு சாரின் விமர்சனம்?

1 காவலனும், ஆடுகளமும் முதலிடத்திற்கு முண்டியடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அடுத்த இடத்தில் சிறுத்தை, இளைஞன் உள்ளன. இதில் இளைஞன் படத்திற்கு பெரிய அளவில் விளம்பரம் செய்தும் கூட படம் குறித்து சத்தத்தையே காணோம்

2.வெங்காயம், தக்காளி விலை தொடர்ந்து உச்சத்திலேயே இருந்து வரும் நிலையில், மற்ற காய்கற்களின் விலையும் அதே பாணியில் உயர்ந்து வருகிறது அல்லது உயர்த்தப்பட்டு வருகிறது!

3.ஆவின் பால் முதல் அனைத்து நிறுவன பால் விலைகளும் உயர்த்தப்பட்டுள்ளன. குறைந்தது 50 பைசா முதல் 2 ரூபாய் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்
4.“ஐகோர்ட் நீதிபதிகள் நியமனத்தில், முறையான இட ஒதுக்கீட்டை பின்பற்ற வலியுறுத்தி, ஐகோர்ட் முன் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்,” என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
5.என் படம் ரிலீஸாகக் கூடாது, எனது கேரியரை பாழ்படுத்த வேண்டும் என சில வேண்டாக சக்திகள் சதி செய்வது எனக்குத் தெரியும். அவர்களை என் ரசிகர்கள் துணையுடன் முறியடிப்பேன், என்று கூறியுள்ளார் நடிகர் விஜய்.
6.ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் இழப்பே ஏற்படவில்லை என்று பொறுப்பே இல்லாமல் பேசுவதா என்று மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் கபில்சிபலுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. பொறுப்புடன் சிபல் செயல்பட வேண்டும் என்றும் அது அறிவுறுத்தியுள்ளது.
7.அரசியலில் குதிக்கும் எண்ணம் இப்போது இல்லை என்று நடிகர் விஜய் கூறினார்.
8.திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரி மாணவிகள் 500பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
9.நமது மாநிலத்தில் அண்டை மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் நிலம் வாங்கி அதனை ஒரு வருடத்திற்குள் விவசாய பணி செய்யாமல் இருந்தால் அந்த நிலத்தை விற்ற நீங்களே உள்ளே சென்று பயிர் செய்யுங்கள். அதில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் நான் உங்களுக்காக வருகின்றேன் என்று கூறியுள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.
10.மதிமுகவிலிருந்து விலகியுள்ள லேட்டஸ்ட் திரையுலக பிரமுகர் வரிசையில் சேர்ந்துள்ளார் இயக்குநர்-நடிகர் ஆர்.சுந்தர்ராஜன்.

Arun Ambie said...

@ வஜ்ரா! அருளுக்கு படித்து, புரிந்து விவாதித்து எல்லாம் முடியாது. பதிவர் என்ன ஜாதி என்று பார்த்து, பார்ப்பான் என்று தெரிந்தால், உடனே ஓடிப்போய் 1930களின் குடிஅரசு தேடி ஜெராக்ஸ் எடுத்து ஒட்டுவார். இல்லை, எங்காவது இங்கிலீசு வலைப்பூவில்/தளத்தில் அன்புமணி, இராமதாசு என்ற வார்த்தைகள் வரும்படி எழுதியிருந்தால் அதை காப்பி பேஸ்ட் அடிப்பார். பொறுமையாக படித்து பதில் எழுதுவது அவருக்கு வராது. வைத்துக்கொண்டு வஞசனையா செய்கிறார், பாவம்!!
அதுக்கு மேல ஏதுமில்லை அவருக்கு, அம்புட்டுத்தான்!!

Arun Ambie said...

//பொன்னியின் செல்வன் நாட்டுடமை ஆக்கப்பட்ட படைப்பு. அதனை எவரும் எந்த தொலைக்காட்சியிலும் வெளியிட தடை ஏதும் இல்லை.//

பொன்னியின் செல்வன் வசனம் மணிப்ரவாள நடையில் இருக்குமே? சுத்தத் தமிழ்ச சூரர்கள் அப்போது என்ன செய்வார்கள்?

RS said...

@அருண் அம்பி

//பொறுமையாக படித்து பதில் எழுதுவது அவருக்கு வராது. வைத்துக்கொண்டு வஞசனையா செய்கிறார்//

பச்சோந்தி வன்னியர்களுக்கே உரித்தான குணம் அது. அருள் மட்டும் என்ன விதி விலக்கா என்ன? இப்ப பாருங்க மாலடிமை மக்கள தூண்டி விட்டு குளிர் காயறது.

வஜ்ரா said...

//
பொன்னியின் செல்வன் வசனம் மணிப்ரவாள நடையில் இருக்குமே? சுத்தத் தமிழ்ச சூரர்கள் அப்போது என்ன செய்வார்கள்?
//

ஒரிஜினல் சீரியலை தெலுங்கில் எடுத்துவிட்டு பின்னர் "சுத்த்த்த்தத்" தமிழிலில் டப்பிங் செய்து ஒளிபரப்புவார்கள்.

ராஜரத்தினம் said...

//நான் என்ன பலீஜா நாயுடுவான ஈ.வே. ராமசாமி நாயக்கர் மாதிரி 44 தலித்துகளை கோபால கிருஷ்ண நாயுடு என்னும் பண்ணையார் உயிரோடு எரித்தபோது, அதை வெறுமனே கூலித்தகராறு என சொதப்பலாக அறிக்கை விட்டேனா என்ன?//

அதுக்காக ஐயங்கார்களும் அதே மாதிரி யாரையாவது எரித்த பிறகு நியாயமாக பேசறேன்னு சொல்லவர்றீங்களா?

ஞாஞளஙலாழன் said...

//
பொன்னியின் செல்வன் வசனம் மணிப்ரவாள நடையில் இருக்குமே? சுத்தத் தமிழ்ச சூரர்கள் அப்போது என்ன செய்வார்கள்?
//

மணிப்ரவாள நடையில் வசனங்களை வைத்தால் யாருக்குப் புரியும்?
எல்லோருக்கும் புரியும்படி பொருள் மாறாமல் நல்ல தமிழில் வசனங்களை வைத்தாலே போதுமானது.

dondu(#11168674346665545885) said...

@ராஜரத்தினம்
நான் என்ன சொன்னேன், நீங்கள் என்ன புரிந்து கொண்டீர்கள்? இதே மாதிரித்தான் பத்ரி விஷயத்தைலும் நான் சொன்னதற்கு நேர்மாறாக புரிந்து கொண்டீர்கள்.

பள்ளியில் தமிழ் தேர்வில் அவுட்டா நீங்கள்?

டோண்டு ராகவன்

அருள் said...

@அருண் அம்பி
@RS

//பொறுமையாக படித்து பதில் எழுதுவது அவருக்கு வராது. வைத்துக்கொண்டு வஞசனையா செய்கிறார்//

அப்படி என்ன பெரிய கருத்துப் போரை தொடுத்தீர்கள்?

படித்து பதில் எழுதுவது என்றால், எதைப் படித்து? மனுதர்மத்தையா? பகவத் கீதையையா? தெய்வத்தின் குரலையா? எதைப் பொறுமையாக படிக்க வேண்டும்?

மூடத்தனங்களின் மலைமீது அமர்ந்து கருத்துப்போருக்கு அழைப்பது முட்டாள்தனம்.

ராஜரத்தினம் said...

//பள்ளியில் தமிழ் தேர்வில் அவுட்டா நீங்கள்?//

தமிழில் ஃபெயில் ஆனவங்களுக்கு எதுவும் புரியாதுன்றது உங்க கண்டுபிடிப்பா? ஒரு ஐந்தாம்படை, ஒரு ஒழுக்கம் இல்லாதவர் இப்படி உள்ளவர்களை எதிர்த்து ஒன்றும் எழுதாமல் பலே என்றும், அது அவருடைய கருத்து என்று பம்மறீங்களே அதைதானே அந்த மூத்திரதூக்கியும் (sorry)செய்தார். அப்புறம் ஏன் அதற்காக அவரை குறை சொல்கீறீர்கள்?

Arun Ambie said...

//படித்து பதில் எழுதுவது என்றால், எதைப் படித்து? மனுதர்மத்தையா? பகவத் கீதையையா? தெய்வத்தின் குரலையா? எதைப் பொறுமையாக படிக்க வேண்டும்?//
பொறுமையாகப் படிக்க வேண்டும் என்றாலே பகவத் கீதை, மனு தர்மம், தெய்வத்தின் குரல் தவிர வேறேதும் உங்களுக்கு நினைவு வரவில்லையே! குடிஅரசு, விடுதலை, உண்மை இதெல்லாம் பொறுமை எள்ளளவும் இல்லாமல் நுனிப்புல் மேய்ந்துவிட்டு ஆங்காங்கே copy-paste செய்யப்படும் புத்தகங்கள் என்பது தான் உங்கள் கருத்துமா?

அருள் said...

Arun Ambie said...

// //பொறுமையாகப் படிக்க வேண்டும் என்றாலே பகவத் கீதை, மனு தர்மம், தெய்வத்தின் குரல் தவிர வேறேதும் உங்களுக்கு நினைவு வரவில்லையே! // //

அந்தணர் வரலாற்றையும் சேர்த்துக்கொள்ள வேண்டுமா? சரி... உங்கள் நினைவுக்கு வருவதைக் கூறுங்களேன்.

அருள் said...

Arun Ambie said...

// //பொன்னியின் செல்வன் வசனம் மணிப்ரவாள நடையில் இருக்குமே? சுத்தத் தமிழ்ச சூரர்கள் அப்போது என்ன செய்வார்கள்?// //

வஜ்ரா said...

// //ஒரிஜினல் சீரியலை தெலுங்கில் எடுத்துவிட்டு பின்னர் "சுத்த்த்த்தத்" தமிழிலில் டப்பிங் செய்து ஒளிபரப்புவார்கள். // //

எனக்கு பொறுமையாக படித்து கருத்து சொல்லும் பழக்கம் இல்லை என்று நீட்டி முழக்கிய அதிமேதாவிகளே. உங்களுக்கு படித்து கருத்து சொல்லும் பழக்கம் உண்டா? நீங்கள் எவராவது பொன்னியின் செல்வன் நாவலை படித்துப்பார்த்தது உண்டா?

படித்து பார்க்காமலேயே அது மணிப்பிரவாள நடையில் இருப்பதாக கதை கட்டுகிறீர்களே! உங்களுக்கு அப்படி ஒரு அசட்டுத்துணிச்சல் வந்தது எப்படி?

இதோ பொன்னியைன் செல்வனிலிருந்து ஒரு பத்தி:

""நந்தினி மணிமேகலையின் முகவாயைச் சற்று நிமிர்த்திப் பிடித்துக்கொண்டு அவளுடைய மலர்ந்த் கண்களை ஊடுருவி நோக்கினாள்.

"என் கண்மணி! உன் அந்தரங்கத்தை நீ என்னிடம் சொல்லாமல் வைத்துக்கொள்வதே நல்லது. பார்க்கப்போனால் உனக்கு நான் பழக்கமாகி முழுமையாக ஒருநாள் கூட ஆகவில்லை. நெடுநாள் பழகிய தோழிகளிடம் தான் அந்தரங்கத்தைச் சொல்ல வேண்டும்" என்றாள்""

--முதல் பத்தி, பதினான்காம் அத்தியாயம், பொன்னியின் செல்வன் நாவல்.

மணிப்பிரவாள நடை எப்படி இருக்கும் என்பதற்கு விக்கிப்பீடியாவிலிருந்து ஒரு எடுத்துக்காட்டு:

"மணவாளமாமுனிகள் தமக்காசார்யரான பிள்ளையுடைய ப்ரசாதத்தாலே, க்ரமாசுதமாய் வந்த அர்த்த விசேஷங்களைப் பின்பற்றாருமறிந்து உஜ்ஜீலிக்கும் படி, ப்ரபந்தரூபேன உபதேசித்து ப்ரகாசிப்பிக்கிறோமென்று ச்ரோத்ரு புத்தி ஸமாதாநார்த்தமாக ப்ரதிஞ்ஞை பண்ணி யருளுகிறார்"

பொன்னியின் செல்வன் மணிப்பிரவாள நடையில் இல்லை என்பதற்கு இந்த எடுத்துக்காட்டு போதும்.

எப்படி மிகத்துணிச்சலாக கட்டுக்கதைகளை அள்ளிவிடுகிறீர்கள்? இது இந்துத்வ அண்டப்புளுகர்களிடமிருந்து நீங்கள் கற்ற பாடமா?

"பொன்னியின் செல்வன் வசனம் மணிப்ரவாள நடையில் இருக்கும்" என்று அள்ளிவிட்ட அருண் அம்பியும், அதற்கு ஒத்து ஓதிய வஜ்ராவும் விளக்கம் அளிக்க வேண்டும்.

ரமணா said...

1. தமிழக சட்டசபைக்கான திமுக+காங் கூட்டணி முடிவான நிலையில் ரிசல்ட் எப்படி இருக்கும் என கருதுகிறீர்கள்?
2.ஸ்விஸ் வங்கி கணக்கு வைதிருப்போரின் விபரம் தெரிய வந்தால் ரிசல்ட் மாறுவதற்கு வாய்ப்பு உண்டா?
3. ஆளுநரின் செயல் பாட்டை எதிர்த்து கர்நாடக முதல்வரின் ஹர்த்தால் சரியா?
4.துக்ளக் ஆசிரியரின் ,ஆண்டுவிழா பேச்சை திருமப்த் திரும்பப் போடும் ஜெயா டீவியின் செயல் பாடு தேர்தலில் பயனளிக்குமா?
5.சேலம் மாநாட்டில் மக்கள் கூட்டத்தை பார்த்த பிறகு- இந்தத் தடவையாவது புரட்சிதலைவியும்,இரண்டாம் புரட்சித் தலைவரும்(வி.காந்த்) ஓர் அணியில் வருவார்களா?

அருள் said...

@டோண்டு பதில்கள்

கேள்வி:"பொன்னியின் செல்வன் நாவல் மணிப்பிரவாள நடையில் எழுதப்பட்டுள்ளதாக" உங்களது வாசகர்கள் அருண் அம்பியும், வஜ்ராவும் கூறுகிறார்களே. நீங்கள் பொன்னியின் செல்வன் நாவலை படித்துள்ளீர்களா? அவர்கள் சொல்வது உண்மையா? உங்களது கருத்து என்ன?

வஜ்ரா said...

ஐயா அருள்.

அது கல்கியின் நாவல். உங்கள் பாசையில் சொன்னால் அது அது ஒரு பார்ப்பானனின் புதினம். பார்ப்பானர்களை தஞ்சாவூரில் குடிஅமர்த்திய சோழனின் புகழ்பாடும் புதினம். பார்ப்பானீயப்புதினம்.

அது எழுதப்பட்டது கல்கியில் சொந்த நடையில். அது நிச்சயம் வடமொழிச்சொற்கள் கலந்த நாவல் தான். மணிப்பிரவாள நடை என்று பொதுவாக உங்களை உசுப்பேத்தச் சொல்லப்பட்டது.

dondu(#11168674346665545885) said...

பெரியார் மருத்துவர் ஆகியோருடன் கூடவே கல்கியையும் அருள் காப்பி பேஸ்ட் செய்யுமாறு செய்த வஜ்ராவுக்கு ஒரு பெரிய ஓ போடுங்கப்பூ எல்லோரும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

அருள் said...

@வஜ்ரா

வடமொழி கலந்த தமிழ் என்பது வேறு. மணிப்பிரவாள நடை என்பது வேறு. மணிப்பிரவாள நடையில் தமிழும் வடமொழியும் கலந்திருக்கிறது என்பதனாலேயே இரண்டும் ஒன்றாகிவிடாது.

அப்படி இரண்டும் ஒன்றுதான் என்று சாதித்தால் - இன்று தமிழ்நாட்டில் வெளியாகும் எல்லா தமிழ் பத்திரிகைகளுமே மணிப்பிரவாள நடையில் இருப்பதாக ஆகிவிடும். ஏனெனில், வடமொழி கொஞ்சமும் கலக்காத தமிழை பயன்படுத்துவோர் மிகமிக சிலர்தான்.

கல்கி தமிழிசையைக் கூடத்தான் தீவிரமாக ஆதரித்தார், அவர் ஆதரித்தார் என்பதற்காக அது தவறாகிவிடுமா? அல்லது அவரது கருத்துக்கள் எல்லாமும் சரி என்றுதான் ஆகிடுமா?

பொன்னியின் செல்வன் தமிழில்தான் எழுதப்பட்டுள்ளது. மணிப்பிரவாள நடையில் அல்ல. கல்கி பார்ப்பானாக இருந்தாலும் அது தமிழனின் மொழியில் தமிழனின் வரலாற்றை பேசுகிறது.

ஏதோ, அருண் அம்பியும் வஜ்ராவும் உளறிவிட்டீர்கள். இப்போது மீசையில் மண் ஒட்டவில்லை என்று சாதிக்கிறீர்கள்.

dondu(#11168674346665545885) said...

//கல்கி தமிழிசையைக் கூடத்தான் தீவிரமாக ஆதரித்தார், அவர் ஆதரித்தார் என்பதற்காக அது தவறாகிவிடுமா?//
பாப்பான் பாராட்டினா நம்பக்கூடாதுன்னு சொன்னதும் நீங்கத்தேன். எப்போ சொன்னீங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

அருள் said...

@டோண்டு ராகவன்

அண்ணல் அம்பேதகரின் பெயரே அவரது சொந்தப்பெயர் அல்ல, அவரது ஆசிரியரான ஒரு பார்ப்பனரின் பெயர்தான் என்று கூறப்படுகிறது. அண்ணல் அம்பேதகர் இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டது ஒரு பார்ப்பன பெண்ணைத்தான்.

இதனாலெல்லாம் அவர் பார்ப்பன ஆதரவாளர் ஆகிவிட்டாரா? அதுபோலத்தான் கல்கியை எடுத்துக்காட்டுவதும். எப்படியோ ஒரு பார்ப்பன புரட்டுக்கு பார்ப்பானரே துணையாக முடியவில்லையே!

"முள்ளு முனையிலே மூணு குளம் வெட்டும் முப்புரிக் கூட்டம் எந்த அளவுக்கும் பொய்ச் சொல்லத் தயங்காது!" என்பது உண்மைதானே!!!

dondu(#11168674346665545885) said...

//பாப்பான் பாராட்டினா நம்பக்கூடாதுன்னு சொன்னதும் நீங்கத்தேன். எப்போ சொன்னீங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம்?//

விடாம ராமசாமி நாயக்கர், ராமதாஸ் படையாச்சி (கவுண்டர்?), வீரமணி யாதவர் ஆகியோரை காப்பிபேஸ்ட் அடிச்சு, அடிச்சு நீங்க எப்போ என்ன சொன்னீங்கங்கறதையே மறந்துட்டீங்க.

முதல்லே நீங்க எப்போ எதை சொன்னீங்கங்கறதை தெளிவு படுத்திக்கோங்க, உங்களால முடியல்லேன்னாக்க நான் சுட்டியோட நிரூபிக்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

அருள் said...

டோண்டு ராகவன் Said...

// //
//கல்கி தமிழிசையைக் கூடத்தான் தீவிரமாக ஆதரித்தார், அவர் ஆதரித்தார் என்பதற்காக அது தவறாகிவிடுமா?//

//பாப்பான் பாராட்டினா நம்பக்கூடாதுன்னு சொன்னதும் நீங்கத்தேன். எப்போ சொன்னீங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம்?//
// //

விதிவிலக்குகள் எல்லா இடத்திலும் உண்டு. ஆனால், அவற்றை ஒருபோதும் விதியாகக் கருதமுடியாது. கல்கி தமிழிசையை பாராட்டுவது ஒரு விதிவிலக்கு.

துக்ளக் சோ மற்றும் நடிகர் எசு.வி. சேகர் இரண்டு பேருமே அதிதீவிர பார்ப்பனர்கள்தான். இருவரும் 'ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்'. சோ கருணாநிதியை கடுமையாக விமர்சிக்கிறார். ஆனால், இப்போதெல்லாம் எசு.வி. சேகர் கருணாநிதியை பாராட்டிக் கொண்டிருக்கிறார். இவற்றில் எசு.வி. சேகரின் பாராட்டை பார்ப்பனர்களின் பாராட்டாக கணக்கில் எடுக்க முடியுமா?

தமிழ்நாட்டில் பார்ப்பனர்களை கடுமையாக விமர்சிக்கும் கட்சிகளில் ஒன்று தமிழ் தேசப் பொதுவுடைமைக் கட்சி. அந்தக் கட்சியின் சார்பில் புதிய தமிழர் கண்ணோட்டம் என்கிற பத்திரிகையும் நடக்கிறது. அந்த கட்சியின் முதன்மைத் தலைவர்களில் ஒருவர் கி. வெங்கட்ராமன். தொடர்ந்து பார்ப்பனர்களை கடுமையாக விமர்சித்து கட்டுரை எழுதும் அவரே ஒரு பார்ப்பனர்தான். வினவு மற்றும் ம.க.இ.க அமைப்புகளின் தலைவர் மருதையனும் ஒரு பார்ப்பனர்தான் - இவர்கள் பார்ப்பனர்கள் என்பதால், அவர்களது கருத்தே பார்ப்பன கருத்தாக ஆகிவிடுமா?

அதுபோலத்தான் கல்கியின் தமிழிசை ஆதரவும். மிகப்பெரும்பாலான பார்ப்பனர்கள் தமிழிசை எதிரிகள். அதில் விதிவிலக்காக கல்கி தமிழிசையை ஆதரித்தார். இதனை பார்ப்பன பாராட்டாக கருத முடியாது.

RS said...

//விதிவிலக்குகள் எல்லா இடத்திலும் உண்டு. ஆனால், அவற்றை ஒருபோதும் விதியாகக் கருதமுடியாது.//

அதையே தான் நாங்க சொல்லறோம், பலிஜா நாயுடு சொன்ன கட்டு கதைகள் ஒரு விதிவிலக்கு அதை இந்த முட்டாள், பச்சோந்தி வன்னியர் கூட்டம் ஒருபோதும் விதியாக கருத கூடாது.

hayyram said...

ராமசாமி நாயக்கர் போன்றோர்கள் வெள்ளையர்களின் அடிவருடிகளாக இருந்து அடிமை புத்தி மாறாமல் வெள்ளைக்காரனின் பிரித்தாளும் கொள்கையை அப்படியே குடித்து வாந்தி எடுத்தவர்கள். அவர்களின் பேச்சைக் கேட்டு அதே போல பார்ப்பன வெறுப்பு பேசுபவர்கள் என்றைக்குத்தான் திருந்தப்போகிறார்களோ?

http://hayyram.blogspot.com/2011/01/blog-post_23.html

அருள் said...

@hayyram

பெரும்பான்மை மக்களை அடிமைகளாக வைத்து, சுரண்டி கொழுத்து, அவர்களை காலகாலத்திற்கும் சித்தரவதைக்கு ஆளாக்கியதோடல்லாமல் - கடைசிவரை சமூகநீதிக்கு எதிராகவே இருந்துவரும் பார்ப்பன - இந்துத்வ கூட்டத்துடன் ஒப்பிட்டால், ஆங்கிலேயர்கள் பன்மடங்கு சிறந்தவர்களே.

Arun Ambie said...

//ஏதோ, அருண் அம்பியும் வஜ்ராவும் உளறிவிட்டீர்கள். இப்போது மீசையில் மண் ஒட்டவில்லை என்று சாதிக்கிறீர்கள்.//
//"பொன்னியின் செல்வன் வசனம் மணிப்ரவாள நடையில் இருக்கும்" என்று அள்ளிவிட்ட அருண் அம்பியும், அதற்கு ஒத்து ஓதிய வஜ்ராவும் விளக்கம் அளிக்க வேண்டும்.//

பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் ஐந்தாம் அத்தியாயம் குரவைக்கூத்து என்பதில் கீழ்க்கண்டவாறு வருகிறது.

"கேள்விப்பட்டிருக்கிறேன். ஏன் நீ தானனொரு முறை சொல்லியிருக்கிறாய். இருக்கட்டும் கந்தமாறா! பழுவேட்டரையர் இந்த மர்ம சுந்தரியான மங்கையை மணந்து எத்தனை காலமாகிறது?"

"இரண்டு ஆண்டுகளுக்குள்ளே தான் இருக்கும். மணம் செய்து கொண்டதிலிருந்து அவளைத் தனியாகச் சிறிது நேரம் கூட விட்டு வைப்பதில்லையாம். எங்கே போனாலுக்ம் கூடவே பல்லக்கில் ஆசை நாயகியையும் அழைத்துப் போகிறார். இதைக் குறித்து நாடெங்கும் கொஞ்சம் பரிகாசப் பேச்சு நடந்து வருகிறது வந்தியத்தேவா! ஒரு பிராயத்தைத் தாண்டியவர்களுக்கு இந்த மாதிரி ஸ்திரீ சபலம் ஏற்பட்டால் எல்லோருக்கும் சிறிது இளக்காரமாகத்தானே இருக்கும்?"


பதின்மூன்றாம் அத்தியாயம், வளர்பிறைச் சந்திரன் என்பதில் கீழ்க்கண்டவாறு வருகிறது:

"மிக்க வந்தனம் ஜோதிடரே! சமயம் நேர்ந்தால் உங்கள் புத்திமதியின் படி நடப்பேன்,"

"உன்னுடைய அதிர்ஷ்டக் கிரகமும் உச்சத்துக்கு வந்திருக்கிறது என்று அறிந்து தான் சொன்னேன்."

"போய்வருகிறேன் ஜோதிடரே! என் மனமார்ந்த வந்தனத்துடன் என்னால் இயன்ற பொன் தனமும் கொஞ்சம் சமர்பிக்கிறேன். தயவு செய்து பெற்றுக்கொள்ள வேணும்!"

இவ்விதம் கூறி ஐந்து கழஞ்சு பொன் நாணயங்களை வந்தியத்தேவன் சமர்பித்தான்.

அருள்: பொன்னியின் செல்வனை முழுதும் படித்திருந்தால் இந்த வசனங்கள் உங்களுக்குத் தெரிந்திருக்கும். நீங்கள் சொன்ன பதினான்காம் அத்தியாயம் எந்த பாகம் என்று சொல்லுங்கள்.

இதற்கு மேலும் வசனங்களைக் காட்ட என்னால் முடியும். ஒரு பத்தியின் சிறு பகுதியைக் காட்டி முழு நாவலும் இப்படித்தான் என்பது ஈவேராத்தனம். பொன்னியின் செல்வன் free download கூடக் கிடைக்கிறது. படித்துப் பாருங்கள்.

விளக்கம் கெட்டத்தனமாக copy paste வேலை செய்பவர் நீங்கள்... விளக்கம் வேறு கேட்கிறீர்கள்.....

வஜ்ரா said...

சமூக நீதி ன்னாக்கா என்ன அருள்.

தயவு செய்து ஒரு விளக்கம் கொடுக்கவும்.

அருள் said...

@Arun Ambie

மணிப்பிரவாள நடை என்றால் என்ன என்று முதலில் (முடிந்தால்) விளக்குங்கள். அதன் பிறகு பொன்னியின் செல்வன் மணிப்பிரவாள நடையில் இருக்கிறது என்று சாதிக்க (முடிந்தால்) முயலுங்கள்

http://ta.wikipedia.org/wiki/மணிப்பிரவாளம்

Arun Ambie said...

//சமூக நீதி ன்னாக்கா என்ன அருள்.

தயவு செய்து ஒரு விளக்கம் கொடுக்கவும்.//

மீண்டும் குடிஅரசு, விடுதலை, உண்மை Copy Pasteஆ! அடப் பெரியாரே!

ezhil arasu said...

//வஜ்ரா said...

சமூக நீதி ன்னாக்கா என்ன அருள்.

தயவு செய்து ஒரு விளக்கம் கொடுக்கவும்.//

இந்த பரந்த உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் கல்வி,வேலைவாய்ப்பு போன்றவற்றில் ,அவர்கள் பிறந்த ஜாதியை காரணம் காட்டி, வாய்ப்புகள் கடந்த 200 ஆண்டுகளுக்கு மேலாக மறுக்க பட்டு வந்தது எனபது வரலாற்று உண்மை.
ஆண்டான் அடிமை வாசகம் பேசி ஒரு தலைமுறையே வஞ்சிக்கபட்டு வந்தது .
மைனரிட்டி முற்படுத்தபட்ட சமுதாயத்தால் பெரும்பான்மையாக உள்ள தாழ்த்தபட்ட ,பிற்படுத்தபட்ட
சமுதாயத்தினர் ஒடுக்கபட்டனர்.
தேசப் பிதா அண்ணல் காந்தி,நேருஜி,பெரியார்,அண்ணா,கலைஞர் போன்ற பெரியவர்களின் தொடர் போராட்டத்தினால் அந்த பரிதாப சூழ்நிலை ஒரளவுக்கு மாறிவந்துள்ளது.
இட ஒதுக்கீடு சமுகநீதியின் ஒரு பலன்.
இன்னும் நீதிதுறை ஒரு குறிப்பிட்ட ஆதிக்க சக்திகளின் வசம்.
ஆனால் சமூக நீதியின் பலன்கள் ஒடுக்கபட்ட மக்களில் வசதி வாய்ப்பு,அரசியல் சார்பு பெற்ற ஒரு சிறு பகுதியினரால் அனுபவிக்கப்படுகிறது என்பதிலும் உண்மையில்லை என சொல்ல முடியாது

அருள் said...

//வஜ்ரா said...

சமூக நீதி ன்னாக்கா என்ன அருள்.

தயவு செய்து ஒரு விளக்கம் கொடுக்கவும்.//

மனிதர்கள் ஒரு குறிப்பிட்ட குழுவை சார்ந்திருக்கிறார்கள் என்பதற்காக மற்றொரு குழுவால் ஒதுக்கப்படக்கூடாது. குறிப்பாக, சமூகத்தின் எந்த ஒரு நிலையிலும் அதிகாரம் செலுத்தும் குழுவை சேர்ந்தவர்களால் அதிகாரத்தில் இல்லாதவர்களை ஒதுக்கப்படவோ ஓரங்கட்டப்படவோ கூடாது. அதற்கு அரசாஙகம் அனுமதிக்கக் கூடாது. அவ்வாறு நடக்கும் ஒதுக்குதல்களால் ஏற்படும் கேடுகளை களைய அரசாங்கம் உரிய மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும். அத்தகைய ஒரு ஏற்பாடுதான் சமூக நீதி ஆகும்.

மனிதர்கள் அடிப்படையில் சமமானவர்கள். அரசியல் மற்றும் குடி உரிமைகள், சமூக, பொருளாதார மற்றும் பண்பாட்டு உரிமைகளின் அடைப்படையில் மனிதர்கள் சமமானவர்களாக நடத்தப்பட வேண்டும். பொருளாதார ஏற்றத்தாழ்வும் அதிகார குவிப்பும் இயன்றவரை பரவலாக்கப்பட வேண்டும். குறைந்தபட்சம் அனைவருக்கும் உரித்தான அடிப்படை உரிமைகளும் கண்ணியமான வாழ்வும் உறுதி செய்யப்படும் அளவுக்காவது ஏற்றத்தாழ்வுகள் களையப்பட வேண்டும் என்பதே சமூகநீதியின் அடிப்படை ஆகும்.

வஜ்ரா said...

@அருள்

நீங்களே உங்கள் சொந்தக்கருத்தாக இதை எழுதுகிறீர்களா அல்லது சமூக நீதி என்றால் என்ன என்பதை, படித்தவர்கள் இந்தியச் சமூகத்தை ஆராய்ந்து சொல்லிய ஒன்றா ?

ஒரு உடோபிய சமூகத்தை அமைக்கும் கனவு போல் கூட இல்லை நீங்கள் கூறும் சமூகநீதிக்கான விளக்கம்.

Arun Ambie said...

//மணிப்பிரவாள நடை என்றால் என்ன என்று முதலில் (முடிந்தால்) விளக்குங்கள். அதன் பிறகு பொன்னியின் செல்வன் மணிப்பிரவாள நடையில் இருக்கிறது என்று சாதிக்க (முடிந்தால்) முயலுங்கள்

http://ta.wikipedia.org/wiki/மணிப்பிரவாளம் //

விக்கிப்பீடியாவில் காட்டிய உதாரணம் மட்டுமே மணிப்ரவாளம் என்று ஸ்ரீ.அருள் அர்த்தம் பண்ணிக் கொள்கிறார் போல் தெரிகிறது. ஒரு உதாரணத்தை வைத்து சர்வமும் இப்படித்தான் என்று ப்ரஸ்தாபிப்பது விஷயங்களை முழுசாகப் புரிந்து கொள்ள அனுகூலமாயிராது.

மணிப்ரவாளம் பற்றி சர்ச்சை பண்ண வேணுமானால், மணிப்ரவாள நடையில் இருக்கும் புஸ்தகங்களை வாசித்து அந்த நடையைப் புரிந்து கொண்டு அப்புறமாய் அது பற்றி சர்ச்சை பண்ணவேணும்.

ஒரு விஷயம் இன்னது தான் என்று முன்னாலேயே மனதில் நிச்சயம் பண்ணி வைத்துக்கொண்டு, அது சம்பந்தமாக மற்றவர் சொல்வது தன் நிச்சயத்துக்கு ஹிதமாக இருக்கிறதா பார்ப்போம் என்று பேசும் குணாதிசயம் சம்பந்தபட்ட விஷயத்தில் பூர்ண ஞானம் அடையப் பண்ணும் யத்தனங்களை வியர்த்தமாக்கும்.

ஸ்ரீ.அருள் போன்ற யாரும் எதுவிஷயத்திலும் பூர்ணமான வித்வத் பெறவேணுமென்ற ப்ரயாசையே படுவதில்லை என்பது யதார்த்தம். சர்வ பாண்டித்யம் பெற்றது போல ஒரு சித்திரம் தீட்டிவிட்டு தனக்குத்தானே பண்டிதன் என்று புரஸ்காரம் தந்து கொள்கிறார்கள். நிரீஸ்வரவாத போதகர்களின் கைங்கர்யத்தில் இதுதான் கண்ட பலன்.

@ அருள்: இது போன்ற தமிழ் நடையில் நான் சில பின்னூட்டங்களை தமிழ்ஹிந்து தளத்தில் இட்டுள்ளேன். வேறு சில நண்பர்களும் அங்கே இதே போன்ற நடையில் பின்னூட்டம் இட்டுள்ளனர். படித்துப் பார்த்து மணிப்ரவாளத்தின் (விக்கி உதாரணம் தவிர்த்த) பரிமாணங்களை (முடிந்தால்) புரிந்து கொள்ளுங்கள். பொன்னியின் செல்வனை (முடிந்தால்) முழுதாகப் படியுங்கள். (e-book படித்தால் ஒரு சில மரங்களையாவது காப்பாற்றிய புண்ணியம் கிடைக்கும்!)

வஜ்ரா said...

அழகு ராசா, (எழில் அரசு)

பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் பெரும்பான்மையாக உள்ளனர் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதே உண்மை. விளக்குகிறேன் கேளும்.

காலாகாலமாகச் சொல்லிவந்து பொதுப்புத்தியில் பதிந்துவிட்டது என்பது இருக்க, இன்றும் சாதி அடிப்படையில் எந்த புள்ளிவிபரமும் தமிழ்க அரசிடம் இல்லை. ஜாதிச்சங்கங்கள் கூட்டமாக ஆள் சேர்த்துக்கொண்டு மனு கொடுத்தால் முற்பட்டவகுப்பிலிருந்து பிற்படுத்தப்பட்ட வகுப்புக்கு தங்கள் ஜாதியை மாற்றிக்கொள்ளலாம். இது தான் நடை முறை.

அப்படி செய்ய விரும்பாத சில ஜாதிகள் இருக்கத்தான் செய்யும், அவர்கள் மைனாரிட்டியாகவும். அப்படி செய்துகொண்ட ஜாதிகள் மெஜாரிட்டியாகவும் இருப்பதில் வியப்பேதும் இல்லை.

அப்படி பிற்பட்ட வகுப்பாக தங்களை ஆக்கிக்கொண்ட சாதிகளில் ஒரு குழுவினர் அரசின் அனைத்து "சமூகநீதி"ப்பலன்களையும் பெற்று வாழ்வதும் பெரும்பான்மையான மற்றவர்கள் வாழ்வில் எந்த முன்னேற்றமும் வராமல் இருப்பதும் நடைமுறை தான் என்பதை ஒத்துக்கொண்டுள்ளீர்கள். நன்றி.


--
சமூகநீதிக்கான விளக்கம் நீங்கள் கொடுத்ததும், அருள் கொடுத்ததும் ஏன் வெவ்வேறாக இருக்கிறது ?

இப்பொழுதெல்லாம் 1500 ஆண்டுகள் ஆடித்தள்ளுபடி செய்து 200 ஆகக் குறைத்துவிட்டார்களா ?

அருள் said...

சமூக நீதி என்பது ஒரு உலகளாவிய தத்துவம், கொள்கை. குறிப்பாக உலகெங்கும் வளர்ந்து வரும் பசுமை கட்சிகளின் 4 அடிப்படை கொள்கைகளில் சமூக நீதியும் ஒன்று. எனவே, இதனை இந்தியாவுக்கான தனிப்பட்ட கண்டுபிடிப்பாக நினைக்க வேண்டாம்.

இது "இந்து ராச்ட்ரம், அகண்ட பாரதம்" படைப்பது போன்று ஒரு பகல்கனவு அல்ல.

Unknown said...

தமிழக தேர்தலில் ஒரு வேளை வி.காந்த் + திமுக+காங்
கூட்டணி அமைந்தால்(50+134 +50தொகுதிகள்-தகவல் ஜூ.வி)
1.ஜெ.ன் எதிர்காலம்?
2.மருத்துவரின் நிலை?
3.கம்யூனிஸ்டுகளின் நிலைப்பாடு?
4.வைகோ?
5.தமிழகம்?

வஜ்ரா said...

அது ஒரு கொள்கை, சரி. அரசியல் கொள்கை என்றுவேண்டுமானால் சொல்லலாம். என்னைப்பொருத்தவரை சமூக நீதி என்பது யூத/கிருத்தவ மதவாதக் கொள்கை. அதை இந்தியர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை.

உங்களுக்கு ஒரு கேள்வி.

சமூக நீதிக்கும் நீதிக்கும் என்ன வேறுபாடு ?

அருள் said...

@வஜ்ரா

"இந்த பரந்த உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் கல்வி,வேலைவாய்ப்பு போன்றவற்றில்,அவர்கள் பிறந்த ஜாதியை காரணம் காட்டி, வாய்ப்புகள் கடந்த 200 ஆண்டுகளுக்கு மேலாக மறுக்க பட்டு வந்தது எனபது வரலாற்று உண்மை. ஆண்டான் அடிமை வாசகம் பேசி ஒரு தலைமுறையே வஞ்சிக்கபட்டு வந்தது. மைனரிட்டி முற்படுத்தபட்ட சமுதாயத்தால் பெரும்பான்மையாக உள்ள தாழ்த்தபட்ட ,பிற்படுத்தபட்ட
சமுதாயத்தினர் ஒடுக்கபட்டனர்" என்று திரு. எழில் அரசு கூறியிருப்பதும் -

"மனிதர்கள் ஒரு குறிப்பிட்ட குழுவை சார்ந்திருக்கிறார்கள் என்பதற்காக மற்றொரு குழுவால் ஒதுக்கப்படக்கூடாது. குறிப்பாக, சமூகத்தின் எந்த ஒரு நிலையிலும் அதிகாரம் செலுத்தும் குழுவை சேர்ந்தவர்களால் அதிகாரத்தில் இல்லாதவர்களை ஒதுக்கப்படவோ ஓரங்கட்டப்படவோ கூடாது" என்று நான் கூறியிருப்பதும் கூறியிருப்பதும் முரண்பட்ட கருத்து அல்ல.

"இட ஒதுக்கீடு சமுகநீதியின் ஒரு பலன்." என்று திரு. எழில் அரசு கூறியிருப்பதும் - "ஒதுக்குதல்களால் ஏற்படும் கேடுகளை களைய அரசாங்கம் உரிய மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும். அத்தகைய ஒரு ஏற்பாடுதான் சமூக நீதி ஆகும்." என்று நான் கூறியிருப்பதும் கூறியிருப்பதும் முரண்பட்ட கருத்து அல்ல.

அருள் said...

1. மணிப்பிரவாள நடையில் எழுதுவதாகக் கூறி திரு. அருண் அம்பி மேலே எழுதியிருப்பது:

""ஸ்ரீ.அருள் போன்ற யாரும் எதுவிஷயத்திலும் பூர்ணமான வித்வத் பெறவேணுமென்ற ப்ரயாசையே படுவதில்லை என்பது யதார்த்தம். சர்வ பாண்டித்யம் பெற்றது போல ஒரு சித்திரம் தீட்டிவிட்டு தனக்குத்தானே பண்டிதன் என்று புரஸ்காரம் தந்து கொள்கிறார்கள். நிரீஸ்வரவாத போதகர்களின் கைங்கர்யத்தில் இதுதான் கண்ட பலன்.""

2. பொன்னியின் செல்வனிலிருந்து திரு. அருண் அம்பி மேலே எடுத்துக்காட்டியிருப்பது:

"மிக்க வந்தனம் ஜோதிடரே! சமயம் நேர்ந்தால் உங்கள் புத்திமதியின் படி நடப்பேன்,"

"உன்னுடைய அதிர்ஷ்டக் கிரகமும் உச்சத்துக்கு வந்திருக்கிறது என்று அறிந்து தான் சொன்னேன்."

"போய்வருகிறேன் ஜோதிடரே! என் மனமார்ந்த வந்தனத்துடன் என்னால் இயன்ற பொன் தனமும் கொஞ்சம் சமர்பிக்கிறேன். தயவு செய்து பெற்றுக்கொள்ள வேணும்!"

இவ்விதம் கூறி ஐந்து கழஞ்சு பொன் நாணயங்களை வந்தியத்தேவன் சமர்பித்தான்.

// //

மேற்கண்டவற்றில் 1 ஆவதில் - ""பூர்ணமான வித்வத், சர்வ பாண்டித்யம், புரஸ்காரம், நிரீஸ்வரவாத போதகர்களின் - என்கிற வார்த்தைகள் எனக்குப் புரியவில்லை.

ஆனால், முழு பொன்னியின் செல்வன் கதையையும் சிறுவயதிலேயே - வாடகை நூல்நிலையைத்தில் கல்கி இதழிலிருந்து தொகுத்ததை - முழுவதுமாக படித்திருக்கிறேன். ஆனால், ஒருபோதும் அதில் புரியாத வார்த்தைகள் இருந்ததாக தெரியவில்லை. நாவலின் முதல் வரியே சிதம்பரத்திற்கு அருகில் உள்ள வீராணம் ஏரிக்கரையில் வந்தியத் தேவன் குதிரையில் போவதாகத் தொடங்குவதால், ஊர்ப்பாசத்தால் கதை மிகவும் பிடித்தாகவே இருந்தது.

உண்மையில், பொன்னியின் செல்வன் மணிப்பிரவாள நடையில் இருந்திருந்தால் அது பல லட்சம் தமிழர்களின் வரவேற்பை பெற்றிருக்குமா? (புரிந்தால் தானே மக்கள் படிப்பார்கள்).

சரி, திரு. அருண் அம்பி பொன்னியின் செல்வன் மணிப்பிரவாள நடையில் இருப்பதாக இன்னும் கூறுகிறார், நான் அப்படி இல்லை என்று கருதுகிறேன். விவரம் தெரிந்தவர்கள் எது உண்மை என்று கூறுங்களேன்.

Arun Ambie said...

//ஒரு உடோபிய சமூகத்தை அமைக்கும் கனவு போல் கூட இல்லை நீங்கள் கூறும் சமூகநீதிக்கான விளக்கம்.//

உலகளாவிய முறையில் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்ட (Affirmative Action என்று அமெரிக்காவில் வெற்றிகண்ட) சமூக நீதியை இங்கே சொதப்புவது யாரென்று வரலாற்றைப் பார்த்தால் புரியும். இராமசாமி நாயக்கர் முதல் இராமதாசுப் படையாச்சி வரை இதைச் சொல்லி ஓட்டு வாங்குவதே பிழைப்பாகக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் சிந்திக்க ஆரம்பித்துவிட்டால் சீந்த ஆளில்லாமல் போய்விடும் survival அச்சம் தான் இவர்களை அரசியலில் இந்தப் பிழைப்புப் பிழைக்க வைக்கிறது.

எதையாவது சொல்லித் தலைவனாக வேண்டியது, பிறகு அதைக் காற்றில் பறக்க விட்டு ஏதாவது ஒரு நீதியைச் சொல்லி நிதி சேர்க்க வேண்டியது.

தன் குடும்பம் அரசியலுக்கு வராது, வெளிநாடு போகமாட்டோம் என்று சொல்லித்தான் பெரிய சிரிஞ்ச் இராமதாசு அரசியலுக்கு வந்தார். ஆனால் மந்திரியானது சின்ன சிரிஞ்ச் அன்புமணியும், மச்சான் ரிடையர்டு ஐஏஎஸ் ஆபீசர் வேலுவும் தான். ஏற்கனவே மந்திரியாகி நல்ல பெயரெடுத்த கட்சிக்காரர் ஏ.கே.மூர்த்தி என்பவரைக் கழட்டி விட்டுவிட்டார்கள்.

பிழைப்புக்காக ஏதாவது சொல்லித்திரிவது இவர்களுக்கெல்லாம் சகஜம். இதற்கெல்லாம் சீரியஸான விளக்கம் கேட்டால் ஜெராக்ஸ் அருள் எங்கே போவார், பாவம்!

Arun Ambie said...

தமிழ்நாட்டில் பார்ப்பனர்களை கடுமையாக விமர்சிக்கும் கட்சிகளில் ஒன்று தமிழ் தேசப் பொதுவுடைமைக் கட்சி. அந்தக் கட்சியின் சார்பில் புதிய தமிழர் கண்ணோட்டம் என்கிற பத்திரிகையும் நடக்கிறது. அந்த கட்சியின் முதன்மைத் தலைவர்களில் ஒருவர் கி. வெங்கட்ராமன். தொடர்ந்து பார்ப்பனர்களை கடுமையாக விமர்சித்து கட்டுரை எழுதும் அவரே ஒரு பார்ப்பனர்தான். வினவு மற்றும் ம.க.இ.க அமைப்புகளின் தலைவர் மருதையனும் ஒரு பார்ப்பனர்தான் - இவர்கள் பார்ப்பனர்கள் என்பதால், அவர்களது கருத்தே பார்ப்பன கருத்தாக ஆகிவிடுமா?//

பார்ப்பனர்களை விமர்சிக்கக்கூட மற்றவர்களுக்குக் கையாலாகவில்லை. கோர்வையாக எழுதுவதும், தெளிவாகப் பேசுவதும், அறிவுப்பூர்வமாக விமர்சிப்பதும் பார்ப்பனர்களைக் கொண்டே செய்யவேண்டியிருக்கிறது என்பதை இப்படி பகிரங்கமாக ஒத்துக்கொள்கிறீர்களே!

அதுசரி!

பந்துராத்மைவ ரிபுராத்மன: என்று சும்மாவா சொன்னார் கண்ணபிரான்!!

அருள் said...

@வஜ்ரா

1. பெரும்பான்மை சாதி என்று ஒட்டுமொத்தமாக எந்த சாதியும் இல்லை. ஒருசில கிராம அளவில் மட்டுமே 51 விழுக்காட்டிற்கும் அதிகமாக ஒரே சாதி இருக்க முடியும்.

2. பிற்படுத்தப்பட்டோர் பெரும்பான்மை என்பது சமூக- கல்வி - பொருளாதார நிலைகளில் ஒப்பீட்டளவில் ஒன்றாக இருக்கும் சாதிகளை மொத்தமாக குறிப்பிடுவதாகும்.

3. மக்கள் தொகை அளவில் பெரிய சாதிகள், சிறிய சாதிகளில் என்று பிரிப்பது சாத்தியமானதே. அப்படி பார்த்தாலும் முன்னேறிய சாதிகள் என்பவை சிறிய சாதிகள் தான்.

4. இடஒதுக்கீட்டில் சில சாதிகள் அதிகமாக அனுபவிக்கின்றனர் என்பது அரசாங்கம் தொடர்பில்லாத சாதிகளை ஒரு குழுவில் சேர்ப்பதால் வரும் சிக்கல். இதனை பெரிதாக பேசுபவர்கள் இடஒதுக்கீடே முழுமை பெறாத நிலையில் இருப்பதை பேசாதது ஏன்? உண்மையில் இது இல்லாததை இருப்பது போன்று பேசும் சதியாகும்.

5. சாதி புள்ளி விவரங்கள் இல்லை என்று நீங்கள் கவலைப்படுவது போன்று - இட ஒதுக்கீட்டிற்காக போராடுபவர்களும் கவலைப்படுகின்றனர். சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பால் இந்த சிக்கல் தீரும். அதனை நீங்களும் ஆதரியுங்கள்.

அருள் said...

வஜ்ரா said...

// //சமூக நீதி என்பது யூத/கிருத்தவ மதவாதக் கொள்கை. அதை இந்தியர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை.// //

உங்களது கருத்து அப்படி இருப்பதில் வியப்பொன்றும் இல்லை. ஆனால், "கிருத்துவ மதவாதக் கொள்கை" என்று கூறிவிட்டு பின்பு "இந்தியர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை" என்று கூறுவது முரண்பாடாக இருக்கிறது.

உங்களுக்கு ஒரு கேள்வி.

இந்து மதத்தின் ஒரு கொள்கையை இந்தியர்களின் கொள்கை என்று வகைப்படுத்த முடிந்தால், கிருத்துவ மதத்தின் ஒரு கொள்கையையும் இந்தியர்களின் கொள்கை என்று வகைப்படுத்த முடியும் தானே?

அருள் said...

Arun Ambie said...

// //மச்சான் ரிடையர்டு ஐஏஎஸ் ஆபீசர் வேலுவும்// //

உங்களது பொது அறிவு புல்லரிக்க வைக்குது!!! அய்யோ பாவம்.

அருள் said...

Arun Ambie said...

// //பார்ப்பனர்களை விமர்சிக்கக்கூட மற்றவர்களுக்குக் கையாலாகவில்லை. கோர்வையாக எழுதுவதும், தெளிவாகப் பேசுவதும், அறிவுப்பூர்வமாக விமர்சிப்பதும் பார்ப்பனர்களைக் கொண்டே செய்யவேண்டியிருக்கிறது// //

நான் அப்படி பார்க்கவில்லை. "திருமண வீட்டில் மாப்பிள்ளையாக இருக்க வேண்டும் - இழவு வீட்டில் பிணமாக இருக்க வேண்டும்" என்பது பார்ப்பன புத்தி.

நாட்டில் எத்தனை அணி இருந்தாலும் எல்லாவற்றிலும் பார்ப்பான் அதிகாரத்தைப் பிடிக்க துடிப்பான். ஆனால், எதிர் எதிர் அணியில் இருந்தாலும் தனது இனத்துக்கு நெருக்கடி வரும்போது பார்ப்பான் ஒன்று சேர்ந்துக்கொள்வான். அதன் ஒரு அடையாளம்தான் இவையெல்லாம்.

பார்ப்பன புத்தி தெரிந்துதான் - தந்தை பெரியார் பார்ப்பானை உறுப்பினராகக் கூட உடன் சேர்க்க மறுத்தார். பெரியாரின் முன்புத்தி அண்ணவுக்கு இல்லாது போனதால்தான் - திராவிட அமைப்பு ஒன்றுக்கு பாப்பாத்தி தலைவராக வர முடிந்தது.

அருள் said...

Arun Ambie said...

// //பந்துராத்மைவ ரிபுராத்மன: என்று சும்மாவா சொன்னார் கண்ணபிரான்!!// //

எந்த கண்ணபிரான்...?

60000 மனைவிகளைக் கொண்டவன். சிவனோடு உறவு கோண்டு அய்யப்பனை பெற்றவன். அரவானுக்கு பெண் வேண்டும் என்பதற்காக பெண் வேடம் பூண்டவன். பிரமாவோடு சல்லாபித்து 60 பிள்ளைகளைப் பெற்றவன்.

எல்லாவற்றிற்கும் மேலாக - இந்திய நாட்டை கெடுத்து குட்டிச்சுவராக்கிய 'பகவத் கீதையை' அருளியவன். அதில் 'எது நடந்தாலும் இனக்கலப்பு மட்டும் நடந்துவிடக்கூடாது' என்று உத்தரவு போட்டவன்.

அந்த கண்ணபிரானா....?

Arun Ambie said...

//60000 மனைவிகளைக் கொண்டவன். சிவனோடு உறவு கோண்டு அய்யப்பனை பெற்றவன். அரவானுக்கு பெண் வேண்டும் என்பதற்காக பெண் வேடம் பூண்டவன். பிரமாவோடு சல்லாபித்து 60 பிள்ளைகளைப் பெற்றவன்.//

இந்த ஆங்கிலேய மொழியாக்கத் திரிபுகளைப் பரப்பிக்கொண்டும், தனக்குப் புகழில்லை என்பதற்காக ஹிந்து மதத்தை மட்டும் எதிர்த்துக்கொண்டும், "கற்பு என்கின்ற வார்த்தையும், விபச்சார தோஷம் என்கின்ற வார்த்தையும்
என்று ஒழிக்கப்படுகின்றதோ அன்றுதான் பெண்கள் முழு விடுதலை அடைய முடியும்" என்று உளறிக்கொண்டும் 72 வயதில் 26 வயது பெண்ணைச் சொத்துக்காகத் 'திருமணம்' செய்த முரண்பாட்டின் மொத்த உருவமான கன்னடியரைத் 'தந்தை' என்றழைக்கும் தன்மானச் சிங்கமே! நீங்கள் கூறிய குற்றச்சாட்டுகளை விவாதித்து அவை திரிபு என்று நிரூபிக்க நான் தயார். உங்களுக்கும் நேரம் தருகிறேன். போய்ப் பழைய குடிஅரசு, விடுதலை இதழ்களைத் தேடிப்பிடித்து ஜெராக்ஸ் மெஷின் அருகில் வைத்துக்கொள்ளுங்கள்! (உங்களுக்குத்தான் சொந்தமாக எதுவும் தெரியாதே!)
(விவாதத்தை http://ch-arunprabu.blogspot.com/ல் வைத்துக்கொள்வோம்!)

வஜ்ரா said...

//
இந்து மதத்தின் ஒரு கொள்கையை இந்தியர்களின் கொள்கை என்று வகைப்படுத்த முடிந்தால், கிருத்துவ மதத்தின் ஒரு கொள்கையையும் இந்தியர்களின் கொள்கை என்று வகைப்படுத்த முடியும் தானே?
//

என் கேள்வியை உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லையா அல்லது புரிந்துகொள்ள விருப்பமில்லையா என்று எனக்குத் தெரியாது. ஆனால் இந்த கேள்வி சத்தியமாக எனக்குப் புரியவில்லை.

இந்தியர்கள் கிருத்தவ அடிப்படைகொண்ட "சமூக நீதி"யை ஏற்கவேண்டும் என்று கட்டாயமில்லை என்று தான் சொன்னேன். அதுவும் என் சொந்த கருத்து.

இந்துமதத்தின் கொள்கை இந்தியர்களின் கொள்கை என்றெல்லாம் குழப்பாமல் சமூக நீதிக்கும் "நீதி"க்கும் என்ன வேறுபாடு என்று விளக்கவும்.

Arun Ambie said...

அருளுக்கு சவால் விட்டபின் சற்றே scroll down செய்து வரும் போது இந்த சுட்டியைப் பார்த்தேன்.
http://dondu.blogspot.com/p/blog-page.html
பொருத்தமாக இருந்தது. ஆனாலும் பார்த்துவிடலாம் அருள் நகலகத்தின் திறனை!

//இந்துமதத்தின் கொள்கை இந்தியர்களின் கொள்கை என்றெல்லாம் குழப்பாமல் சமூக நீதிக்கும் "நீதி"க்கும் என்ன வேறுபாடு என்று விளக்கவும்.//
இப்படியெல்லாம் கேட்டால் அருள் என்ன செய்வார்? பெரியார் திடல் நூலகத்தில் அப்படித் தெளிவான விளக்கம் கொண்ட புத்தகங்கள் கிடைக்காது. தைலாபுரத்தில் மருத்துவ சம்பந்தமான புத்தகங்கள் கிடைக்கலாம். சமூக நீதி பற்றி அவர்களுக்கே ஒரு தெளிவான புரிதல் கிடையாது. அருளுக்கு வேறு போக்கிடமும் தெரியாது! ஜெராக்ஸ் மெஷின் கொஞ்சம் ஓய்வு எடுக்கட்டும்,பாவம்!!

அருள் said...

WHAT IS JUSTICE?

"Justice is the concept of moral rightness based on ethics, rationality, law, natural law, religion, fairness, or equity, along with the punishment of the breach of said ethics."

-Wikipedia

WHAT IS SOCIAL JUSTICE?

"Social justice is a device to ensure life to be meaningful and livable with human dignity. State has to provide facilities to reach minimum standard of health, economic security and civilized living to the workmen. Social justice is a means to ensure life to be meaningful and livable."

- Consumer Education & Research Centre v/s Union of India (1995), Supreme Court of India,

"Social justice is an arena only partly covered by law; rest is covered by social and political ideas and practices. Ethical ideas about honour, right, respect, autonomy, claim, share, revenge, and shame also play significant role in determining mores of justice. A sense of entitlements also has a role to play. Justice thus propels variety of forms – from social-economic rights, to the forms of justiciability, forms of redistribution of wealth, the form of due process, subjective experiences of justice, and as distinct from these experiences the objective tests of justice. In this context one has to note the parts played by social movements and social mobilisations in determining the popular concepts of justice."

- Calcutta Research Group

வஜ்ரா said...

சோசியல் ஜஸ்டிஸ் அல்லது சமூக நீதி என்பது தெளிவாக வரையைறை செய்யப்படவேயில்லை என்றே படுகிறது. ஆனால் உலக நாடுகளில் சோசியல்ஜஸ்டிஸ் என்பதற்கு விளக்கங்கள் உள்ளன.

அரசு தான் உங்கள் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றவேண்டும் அது தான் சமூக நீதி என்று நீங்கள் கூறுவது சோசியலிசம் (பொதுவுடமை). சோசியல் ஜஸ்டிஸ் அல்ல.

எது நீதியில்லையோ அது அநீதியைத் தவிற வேறில்லை. உங்கள் கூற்றுப்படி சமூக நீதியென்பது இருப்பவர்களிடம் இருந்து பிடுங்கில் இல்லாதவர்களுக்கு வழங்கும் சோசியலிசம் அது என்னைப்பொருத்தவரை அநீதி.

end of discussion.

அருள் said...

@வஜ்ரா

நீங்கள் ஒரு தேசவிரோதி.

இந்தியக் குடிமகன் என்று சொல்லிக்கொள்ளும் தகுதி உங்களுக்கு இல்லை.

இந்திய நாட்டின் அடிப்படை அதன் அரசியல் அமைப்பு. அரசியல் அமைப்பின் அடிப்படை அதன் முகவுரை (Preamble). முகவுரையின் முதல் வரியில் முதல் நீதியாக குறிப்பிடப்பட்டிருப்பது சமூக நீதி.

"WE, THE PEOPLE OF INDIA, having solemnly resolved to constitute India into a SOVEREIGN SOCIALIST SECULAR DEMOCRATIC REPUBLIC and to secure to all its citizens: JUSTICE, social, economic and political;"

-Preamble to the Constitution of India

சமூக நீதிக்கு எதிரானவர் நீங்கள் என்பதால் - நீங்கள் இந்த நாட்டிற்கே எதிரி.

ஒரு தேசவிரோதியிடம் விவாதிக்க என்ன இருக்கிறது?

Arun Ambie said...

@வஜ்ரா!
//end of discussion.//
நீங்க காமெடி கீமெடி பண்ணலயே? நீங்க ஏதோ கேள்வி எல்லாம் கேட்டீங்க! அருளு வழக்கம் போல காப்பி பேஸ்ட் எல்லாம் அடிச்சாரு! அதப்போயி டிஸ்கஷன் டிக்காக்ஷன்னு.....

வஜ்ரா said...

அருளு,

இந்திய தேசியத்தைப்பற்றி நீர் எனக்கு பாடம் நடத்தாதீர்கள். உங்களுக்கு அந்தத் தகுதி கொஞ்சமும் இல்லை.

நிற்க, சோசியலிஸ்ட் என்ற வார்த்தையை இந்திராகாந்தி என்ற பாப்பாத்தி (உங்கள் பாசையில்) அரசியல் அமைப்புச் சட்டத்தில் புகுத்தியது. எமர்ஜென்சி காலகட்டத்திலோ அதற்கு முன்போ இந்திரா செய்த காரியங்களில் ஒன்று இது.

இதை ஏற்றுத்தான் ஆகவேண்டும் என்றில்லை. இதை ஏற்காதவர்கள் இந்திய நாட்டு விரோதி என்றால், அம்பேத்காரே தேசவிரோதி தான்.

அம்பேத்கார் கூட சோசியலிசத்தை ஆதரிக்கவில்லை. அதை அவரே அரசியல்அமைப்புச் சட்டத்தில் சேர்க்க எதிப்பு தெரிவித்திருக்கிறார்.


42 வது அரசியல் அமைப்புச் சட்டத் திருத்தத்தை ரத்து செய்யச்சொல்லி நிறைய பெட்டிஷன்கள் போடப்பட்டுவிட்டன. ஆட்சியாளர்களுக்கு மனம் இல்லாததால் அது இன்னும் செய்யப்படவில்லை.


@அருண் அம்பி,

அவரால் முடிந்ததை அவர் செய்கிறார். அது குறைந்தபட்சம் விடுதலை காப்பிபேஸ்ட், அதிகபட்சம் ஏதாவது கவுண்டர்கரண்டு, வன்னியர்கரண்டு வலைத்தளத்திலிருந்து ஆங்கில காப்பிபேஸ்ட். அவருடன் டிஸ்கஷன் என்றால்இப்படித்தான் இருக்கும் என்பது தெள்ளத்தெளிவாகிவிட்டதால் அத்துடன் டாபிக்கை முடித்துக்கொண்டேன்.

வஜ்ரா said...

If you are talking about the sentence "justice, social, economic and political". Then its not Social justice as your perceive it to be.

Indian constitution's preamble makes it clear that the social part is with in the ambit of justice. And not a separate entity. The definition for that is entirely different than what you have quoted for "social justice".

The founding fathers of India have not included the words like SECULAR, SOCIALIST. They were inserted by Indira gandhi during emergency. And commies were behind her bending over backwards to please that autocratic anti democratic lady.

We have not had a government with strong political will to remove anti democratic (read socialistic) amendments on the constitution and make it immutable. Again, the founding fathers of our nation did not conceive Republic of India as a "socialist", "social justice" providing nation. The social connotation to Justice in any way is anti-democratic and it kills the very foundation of democracy in our nation that our founding fathers envisaged.

Its funny that people like you are now quoting indian constitution in which you and your caste leader have no belief.

அருள் said...

@வஜ்ரா
@அருண் அம்பி

சோசியலிஸ்ட் என்ற வார்த்தையை குறித்து நான் எதுவும் கூறவில்லை.

"to secure to all its citizens: JUSTICE, social, economic and political;"

என்பது

"to secure to all its citizens: SOCIAL JUSTICE, ECONOMIC JUSTICE AND POLITICAL JUSTICE"

என்று படிக்கப்பட வேண்டும்.

அருள் said...

"Social Justice and the Constitution of India"

The Constitution of India in the preamble resolved to secure to all its citizens : Justice, social, economic and political; Therefore, concept of social justice is not foreign to legal order. Social justice is the primary objective of the State as envisaged in our Constitution. The Supreme Court in Sadhuram V. Pullin Behari. observed that social justice is one of the aspirations of the Indian Constitution. In view of securing to all its citizens social justice our Constitution provides some Fundamental rights in Part lll some of which are available to all persons and some are enjoyable only by the citizens of India. They are –

(i) Equality before law (Art 14)
(ii) Prohibition of discrimination on ground of religion, race, caste, sex or place of birth (Art 15)
(iii) Equality of opportunity in matters of public employment (Art 16)
(iv) Abolition of Untouchabiiity (Art 17)
(v) Abolition of titles (Art 18)
(vi) Protection of certain rights regarding freedom of speech etc. (Art 19)
(vii) Protection of life and personal liberty (Art 21)
(viii) Protection in respect of conviction for offenses (Art 20)
{ix) Protection against arrest and detention in certain cases(Art 22)
(x) Protection of traffic in human beings and forced labour (Art - 23)
(xi) Prohibition of employment of children in factories or mines or in any other hazardous employment (Art 24)
(xii) Freedom of Religion (Art 25 - 28)
(xiii) Protection of interests of minorities (Art 29-30)
{xiv) Judicial remedies for enforcement of rights conferred by this Part - lll of the Constitution (Art 32).

http://www.indiankanoon.org/cached/717458/

அருள் said...

“In interpreting the philosophy of social justice of our Constitution Justice Fazal Ali observed :

The concept of social justice is not foreign to legal justice or social well-being or benefit to the community rooted in the concept of justice in the 20th century. The challenge of social justice as I see it, is primarily a challenge to the society at large more than to the court immediately. Social justice is one of the aspirations of our Constitution. But we, the courts must remember are pledged to administer justice - social or legal,”

http://www.indiankanoon.org/cached/717458/

அருள் said...

"சமூகநீதி" என்பதற்கும் "சோசியலிசம்" என்பதற்கும் வேறுபாடு தெரியாமல் - தானும் குழம்பி, மற்றவரையும் குழப்பி - இந்திய நாட்டையும் அதன் அரசியல் அமைப்பையும் இழிவுபடுத்தும் திருவாளர்கள் வஜ்ரா, அருண் அம்பிக்கு எனது அனுதாபங்கள்.

Arun Ambie said...

//@வஜ்ரா
@அருண் அம்பி

சோசியலிஸ்ட் என்ற வார்த்தையை குறித்து நான் எதுவும் கூறவில்லை. //
ஏதோ மற்றவற்றைக் குறித்துக் கூறிவிட்ட மாதிரி இது குறித்துக் கூறவில்லை என்கிறீர்களே அருள்? எல்லாம் காப்பி பேஸ்ட் தானே உங்களுக்கு! புதிதாக ஒரு Law Journalன் linkஐப் பிடித்திருக்கிறீர்கள். அவ்வளவே!!

அருள் said...

வானத்துக்கு கீழே உள்ள எல்லாவற்றைப் பற்றியும் கருத்துக்கூறும் அருண் அம்பி - பொன்னியின் செல்வன் மணிப்பிரவாள நடைதான் என்பதையும், சமூகநீதி இந்திய அரசியல் அமைப்பில் இல்லை என்பதையும் - ஆதாரத்தோடு மெய்ப்பிக்கவும்.

வஜ்ரா said...

வானத்துக்கு கீழே, மேலே, சைடுல இருக்குற எல்லாவற்றுக்கும் பார்ப்பானை குற்றம் சொல்லும் அருள். நீங்கள் முதலில் உங்களுக்கு என்று ஒரு சொந்தக்கருத்து வைத்துக்கொள்ளுங்கள். பின்னர் மற்றவரிடம் கருத்து கேளுங்கள்.

உங்கள் கருத்து என்னவென்று கேட்டால் வானத்துக்கு கீழேயிருக்கும் எல்லாவற்றிலிருந்தும் காப்பி/பேஸ்ட் செய்துகொண்டிருந்தால் ஒரு பிரயோசனமும் இல்லை.

உங்களிடம் இனி கருத்து கூற ஏதும் இல்லை.

அருள் said...

@வஜ்ரா

நீங்களும் அருண் அம்பியும் கருத்துக்கூறி தெரிந்துகொள்ளும் அளவில் எதுவும் இருப்பதாக நான் நினைக்கவில்லை.

Arun Ambie said...

//நீங்களும் அருண் அம்பியும் கருத்துக்கூறி தெரிந்துகொள்ளும் அளவில் எதுவும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. //

நானும் வஜ்ராவும் தப்பித்தோம். எங்களிடமிருந்து அருள் ஏதாவது கற்றுக் கொண்டதாக ஒருவேளை வெளியில் தெரிந்தால் எங்கள் பெயர் மோசமாக ரிப்பேராகிவிடும். அப்படி ஒரு 'ப்ராசசர் ரிப்பேரான ஜெராக்ஸ் மெஷின்' நீங்கள்!

அருள் said...

Arun Ambie said...

// //எங்களிடமிருந்து அருள் ஏதாவது கற்றுக் கொண்டதாக // //

நல்ல நகைச்சுவை!!!!

Amrutha Putran said...

என்னுடைய நெடு நாளைய சந்தேகம், தீர்பவர்களுக்கு ஆயிரம் பாராட்டுக்கள்.
இந்திய நாடு ஒரு மத சார்பற்ற நாடு என்கிறார்கள். ஆனால் எப்படி மதத்தின் அடிப்படையில் பெரும்பான்மை சிறுபான்மை என்கிறர்கள்? மத அடிப்படையில் சட்டங்கள் எப்படி இருக்கின்றன? அனைவருக்கும் பொதுச் சட்டம் தானே இருக்க வேண்டும்.
வெளிநாட்டிலிருந்து வந்த மதங்களைச் சார்ந்தவர்கள் தங்கள் மதக் கடவுள்கள் மட்டுமே உண்மையான தெய்வம் மற்றதெல்லாம் தவறு என்று கற்பிக்கின்றன. அதனால் மதக் கலவரங்கள் ஏற்படுகின்றன. ஆனால் ஹிந்துக்கள் அனைத்து கடவுள்களையும் வழிபாட்டு முறைகளையும் மதிக்கின்றான். ஆனால் அவனை மத வாதி எனவும் முஸ்லீம் கிருத்துவர்களை மதச் சார்பற்றவர்கள் போலவும் இந்த அரசியல் கட்சிகள் (காங்கிரஸ், கம்யூனிஸ்ட், நாத்திக கட்சிகள் பழிக்கின்றன.
இக்கட்சிகள் மதசார்பற்ற தன்மை என கூறிக்கொண்டு வெளிநாட்டிலிருந்து வந்த மதங்களைச் சார்ந்தவர்களுக்கு சலுகைகள் தருகின்றன.
இந்த கம்யூனிஸ்ட் கட்சி காரர்கள் கேரளாவிலும் மேற்கு வங்கத்திலும் அவர்களின் ஓட்டுக்காக செய்கின்ற அநியாயங்கள் நாடே அறியும், இவர்களெல்லோரும் எப்பொழுது தான் திருந்துவார்கள்? - அம்ருதபுத்திரன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது