5/08/2010

எல்லாவற்றுக்குமே இட ஒதுக்கீடு தந்துவிடலாமா?

ஸ்பெக்ட்ரம் புகழ் ராசாவை டிஃபண்ட் செய்வதற்காக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் அவர்கள் தெரிவு செய்தது ராசா தலித் என்பதுதான். டெல்லிக்கு சென்று, கலைஞர் ஒட்டு மொத்த தலித்துக்கும் நல்ல பேர் வாங்கி தந்துவிட்டார். செம்மொழி மாநாட்டில் இதற்கு ஒரு விருது தந்துவிடலாம் (நன்றி இட்லிவடை).

உதாரணத்துக்கு இந்த இணைய பக்கத்தைப் பாருங்கள்.

ஆ. ராசா தலித் எனக் கூறி ஸ்பெக்ட்ரம் பிரச்னையை திசைதிருப்புகிறார் முதல்வர் கருணாநிதி: ஜெயலலிதா

மத்திய அமைச்சர் ஆ. ராசா தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்துகின்றனர் என்று கூறி, அவருக்கு எதிரான ஸ்பெக்ட்ரம் ஊழல் பிரச்னையை திசை திருப்புகிறார் முதல்வர் கருணாநிதி என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தொலைத்தொடர்புத் துறை அமைச்சரான ராசா, தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற குரல் நாடாளுமன்றத்தில் ஓங்கி ஒலிப்பதாக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஏல ஒதுக்கீடு ஊழல் விவகாரத்தில் தலித் என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தி, புத்திசாலித்தனமாக நடந்து கொண்டுவிட்டதாக முதல்வர் கருணாநிதி நினைத்துக் கொண்டிருக்கிறார்.

"2 ஜி' ஸ்பெக்ட்ரம் விற்பனை குறித்து முடிவெடுப்பதற்கு முன்பு, தனக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்ற பிரதமரின் அறிவுரையை ராசா அவமதித்தார். ஸ்பெக்ட்ரம் உரிமத்தை முதலில் வருபவருக்கு முதலில் அளிப்பதற்கு தொலைத்தொடர்பு முறைப்படுத்தும் ஆணையம் தெரிவித்த எதிர்ப்புகளையும் அவர் நிராகரித்தார்.

சினிமா டிக்கெட்டை விற்பது போல, ஸ்பெக்ட்ரம் உரிமத்தை விற்பனை செய்யும் முடிவை ராசா எடுத்திருக்கிறார் என்று தில்லி உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. ஸ்பெக்ட்ரம் உரிமம் பெறுவதற்கான விண்ணப்பத் தேதியை முன்தேதியிட்டு ராசா மாற்றியது தவறு என்ற தில்லி உயர் நீதிமன்றத் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.

2 ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனையில் ராசா எடுத்த முடிவின் காரணமாக, குறைந்தபட்சம் ரூ.26 ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்று இந்திய கணக்குத் தணிக்கைத் தலைவர் கூறியுள்ளார்.

ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று மத்திய கண்காணிப்பு ஆணையம் கோரியது.

ராசா மீதான இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்காத கருணாநிதி, ராசா தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர் எனக் கூறி பிரச்னையைத் திசை திருப்புகிறார்.

இது போன்ற பேச்சுகளின் மூலம், நாடாளுமன்றத்தில் ராசாவின் ராஜிநாமாவைக் கோரும் தலைவர்களின் வாயை அடைத்து விடலாம் என்று கருணாநிதி நினைக்கிறார் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

அதே ராசா மந்திரி பதவியை பெறுவதற்காக அரசியல் புரோக்கர் ஒருவரது துணையை நாடினார் என்பது மெதுவாக வெளியாகிறது.

பதிவர் இட்லி வடையின் இந்தப் பதிவில் மேலும் சில கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு:


1. ராசா பேசிய உரையாடகள் கலைஞருக்கு தெரியுமா? "கலைஞர் குடும்பத்துக்கு மூன்று மந்திரி பதவியா?" என்று ராடியா கேள்வி கேட்க அதற்கு ராஜா சிரித்துவிட்டு "அது தெரிந்தது தானே?" என்கிறார். இதை கலைஞர் நியூஸை பார்க்கும் போது அவரது மனநிலை எப்படி இருக்கும்.


2. இந்தத் தொலைபேசி உரையாடல் பதிவு செய்யப்பட்ட விஷயம் முன்கூட்டியே உள்துறைச் செயலாளரிடம் அனுமதி பெற்றே செய்யப்பட்டிருப்பதாக இப்போது தெரியவந்துள்ளது. ஏன் இவ்வளவு வருஷம் கழித்து இது லீக் செய்யப்படிருக்கிறது? ராஜாவை எப்படியாவது வெளியே அனுப்ப காங்கிரஸ் செய்யும் சதியா?

3. ராடியாவிடம் மந்திரி பதவி பற்றிக் கேட்க நான் என்ன முட்டாளா என்று ராஜா பார்லிமெண்ட் முன்னாடி ஆவேசமாகக் கேட்கிறார். அப்படி என்றால் ஏன் ராடியாவின் இந்த தொலைப்பேசி உரையாடல்கள் மீடியாவில் ஒலிபரப்ப கூடாது என்று தடை கேட்டு கோர்ட்டுக்கு போனார். (கோர்ட் நிராகரித்துள்ளது என்பது வேறு விஷயம் )

4. இந்த விவகாரத்தில் - தயாநிதி மாறன் ஊடகங்களுக்கு செய்தியை சப்ளை செய்கிறார் என்றும், பாவம் பாலு என்றும் உரையாடல்கள் வருகிறது. இதை தயா, பாலு கேட்டால் என்ன நினைப்பார்கள் ?

5. இவ்விவகாரத்தில் அதிகம் அடிபடும் ராடியா என்ற பெண்மணி, சில டெலிகாம் நிறுவனங்களுக்கு லைசன்ஸ் பெறுவதற்கு பெருமளவில் உதவியுள்ளார் என்பது வருமானவரித் துறையினரால் கண்டறியப்பட்டுள்ளது. சிபிஐ, வருமானவரி துறை ஆகியவை இவ்வளவு கண்டுபிடித்த பின்பும் அரசு ஏன் சும்மா இருக்கிறது? இத்தனைக்கும் சிபிஐ, மற்றும் வருமானவரி துறை எல்லாம் தற்போது இயங்கும் அரசுகளின் கீழ் இருக்கிறது. ராஜாவைப் பாதுகாப்பதன் மூலம் வேறு ஏதாவது பெரிய தலைகளைப் பாதுகாக்க முனைகிறதோ?

6. எதிர்க்கட்சிகளில் பாஜகவும், மீடியாக்களில் ஹெட்லைன்ஸ் டுடேவும் மட்டுமே இதனை பிரதானமாகப் பேசி வருகின்றனர். மற்ற மீடியாக்கள் அவையடக்கம் கருதி அடக்கியே வாசிக்கின்றன. ஜூவி முன்பு ராஜா பற்றி படம் போட்டதற்கே கோர்ட்டுக்கு போன பயமா?

இப்பொழுது திமுக எதற்காக ராஜாவை அவசரமாக அழைத்துள்ளது என்பது போகப் போகத்தான் தெரியும். தெரியாமலும் போகலாம்.

மேலே எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு ஆதாரமான வீடியோவின் ஐந்து பாகங்கள் இங்கே.

அதே மாதிரி டிஃபன்ஸ் நீதியரசர் தினகரனுக்கும் தரப்படுகிறது. அவரை டிஃபண்ட் செய்து தமாஷ் பதிவு போட்ட தமிழ் ஓவியாவோ தினகரன் மேல் வந்த குற்றச்சாட்டுக்களை பற்றி ரொம்ப கண்டு கொள்ளாது உலகில் மற்ற எல்லா விஷயங்களையுமே பேசுகிறார்.

இப்போது இப்பதிவின் தலைப்பில் வைக்கப்பட்ட கேள்விக்கு வருவோம். ஊழல் செய்யும் அரசியல்வாதிகள் மதம், இனம், ஜாதி எல்லாவற்றையும் கடந்தவர்கள். ஊழல் செய்கிறார்கள். மாட்டிக் கொண்டாலும் தங்களுக்கிருக்கும் பிற திறமைகளை உபயோகித்து பிழைத்துக் கொள்கிறார்கள். ஆனால் அவர்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்கும், சிறுபான்மையினருக்கும் சற்றே சலுகை தர முடிவு செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதாகப்பட்டது தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்த அரசியல்வாதி என்றால், ஒரு குறிப்பிட்டத் தொகை அளவுக்கு ஊழல் செய்யலாம் என நிர்ணயித்து விடலாம். அந்தக் குறிப்பிட்ட தொகையும் ராசா போன்றவர்களுக்கு சாதகமாக இருக்க வேண்டுமானால் 2000 கோடி ரூபாய்க்கு குறையாமல் இருக்க வேண்டும். அப்படி வைத்தால் தினகரனும் automatically covered. ஆகவே ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.

மேலே ஏதேனும் ஆலோசனைகள் இருந்தால் யாராவது சொல்லுங்கப்பு!!!!

அன்புடன்,
டோண்டு ராகவன்

129 comments:

அபி அப்பா said...

\\மேலே ஏதேனும் ஆலோசனைகள் இருந்தால் யாராவது சொல்லுங்கப்பு!!!!
\\

ஆலோசனைக்கு கொஞ்சம் சார்ஜ் ஆகும் பர்வால்லயா????

கிருஷ்ண மூர்த்தி S said...

என்ன தமாஷ் செய்கிறீர்களா!?

இப்போதே ஒதுக்கீடு என்பது ஒதுக்குவதற்குமான அன்லிமிடெட் லைசன்ஸ் என்ற மாதிரித் தான் இருக்கிறது

ஆ!ராசா ரகம் விஞ்ஞானபூர்வமாக ஊழல் செய்வதில் மெரிட்டில் வந்ததாக்கும்!ஒதுக்கீட்டில் அல்ல!

ஹெட்லைன்ஸ் டுடே தமிழ்நாடு அரசின் விளம்பர வருமானத்தை, பத்திரிகையாளர்களுக்கு வீட்டுமனையை எதிர்பார்த்தோ நம்பியோ இல்லை போல!

dondu(#11168674346665545885) said...

ஆலோசனை தேவைப்படுவது கலைஞர் போன்ற அரசியல்வாதீகளுக்குத்தானே. கண்டிப்பாக ஃபீஸ் தருவார்கள் ஆட்டோக்களை அனுப்பித்து.

(அவற்றை வைத்து நீங்கள் டிராவல்ஸ் பிசினஸ் செய்யலாம் என்னும் பொருளில் மட்டுமே சொன்னேன், அவ்வ்வ்வ்)

அன்புடன்,
டோண்டு ட்ராகவன்

Anonymous said...

கலைஞரின் வழக்கான சாதிப்பாட்டுகள் இப்போது எடுபடுமா என்பது சந்தேகமே!! அதுவும், சோனியாகாந்தியிடம் போய் இவர் தலித் ஒப்பாரி வைப்பது நல்ல காமெடி... ராசாவின் தனிப்பட்ட ஊழலை (கழக குடும்ப ஊழல்...) தலித்துக்களின் மொத்த சமுதாயத்தின் மீது ஏற்றி தலித்துக்களை அவமானப்படுத்தியுள்ளார் கருணாநிதி. கலைஞருக்கு எப்போதுமே தலித்துக்கள் மீது காழ்ப்பு உண்டு என்பது தெரிந்ததே. தலித்துக்களின் தகராறுகளை மிருகங்கள் சண்டையிட்டால் நான் என்ன செய்வேன் என்று தேர்தல் சமயத்தில் கேட்டவர் இவர். தலித்துக்களே உழைத்துவந்த (அருந்ததியரிகள்) துப்புரவாளர்கள் வேலைகளை காலி செய்து மகன் தொடர்புள்ள மலேசிய நிறுவனத்திற்கு குப்பை வார காண்டிராக்ட் போட்டு அத்தனை அருந்ததியர்களையும் நடுத்தெருவில் இறக்கியவர் இவர். சாதி இந்துக்கள் பிராமணர்களை விட தலித்துக்களை அதிகம் வெறுக்கிறார்கள் என்று சொன்ன அம்பேத்காரின் வார்த்தைகள் இவரிடம் உண்மையாகிப்போனது. மாயாவதியின் ஊழலுக்குக் கூட யாரும் இப்படி எல்லாம் சப்பைகட்டு சொல்லவில்லை. இதை தமிழக ஆண்மையற்ற தலித் இயக்கங்கள் தட்டிக்கேட்பதில்லை என்பதும் கவனிக்கத்தக்கது. சோனியாவிற்கும் கலைஞர் தயவு தேவை. கலைஞருக்கு தேர்தலில் செயிக்க பண மூட்டைகள் தேவை. தமிழன் பணத்தால் வாயடைக்கபட்ட முண்டம். ராசா ஒரு சேவகன்தான். உண்மையான ராசா இந்த மஞ்சள் துண்டு கிழவர்தான். --- சொல்மண்டி இரா

அருள் said...

///ஊழல் செய்யும் அரசியல்வாதிகள் மதம், இனம், ஜாதி எல்லாவற்றையும் கடந்தவர்கள்.///

இது தவறு. ஊழலில் சிக்கியுள்ள அதிகமானோர் ஆதிக்க வகுப்பினர்தான்.

///தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்த அரசியல்வாதி என்றால், ஒரு குறிப்பிட்டத் தொகை அளவுக்கு ஊழல் செய்யலாம் என நிர்ணயித்து விடலாம்.///

திறமையாக திசைதிருப்பும் வேலையை செய்கிறார் "டோண்-டூ".

"தலித் ஊழல் செய்தால் விட்டுவிட வேண்டும்" என்று கருணாநிதி சொல்லவில்லை. "தலித் என்பதால்தான் ஊழல் குற்றச்சாட்டு பொய்யாக கூறப்படுகிறது" என்கிறார் கருணாநிதி.(கருணாநிதி சொல்வது உண்மையா, பொய்யா என்பது வேறுவிடயம்.)

இது இரண்டும் வேறுவேறு.

இந்திய அரசியலின் பார்ப்பானுக்கு ஒருநியாயம், மற்றவர்களுக்கு ஒருநியாயம் என்கிற நிலைதான் நீடிக்கிறது, என்பது உண்மை.

நரசிம்ம ராவ் பலகோடி கொள்ளை அடித்தார், ஜெயலலிதா பலப்பல கோடி கொள்ளை அடித்தார். ஆனால், இவர்களை விட மிகக்குறைவாக ஊழல்செய்த லாலுபிரசாத் யாதவ்தான் மிக அதிக காலம் சிறைத்தண்டனை அனுபவித்தார்.

இன்றைக்கும், ராசாவின் ஊழலை பெரிதாகப் பேசும் பத்திரிகைகள், கேத்தன் தேசாயின் ஊழலை பேசாமல் மூடிமறைக்கின்றன.

எனவே, தலித்துகளுக்கோ, பிற்படுதப்பட்டோருக்கோ ஊழலில் இடஒதுக்கீடு எதுவும் வேண்டாம், பார்ப்பனர்களுக்கு சமமாக நடத்தினால் போதும்.

அதாவது,மற்றவர்களை தண்டிப்பது போல பார்ப்பானையும் தண்டிக்க வேண்டும்.

யதிராஜ சம்பத் குமார் said...

முகமது பின் துக்ளக் நாடகத்தில் வருவதைப் போன்று, அனைத்து துறைகளையும் பிரதமர் தன்வசமே வைத்துக் கொண்டு, மற்றவர்களை இலாகா இல்லாத மந்திரிகளாக்கி திறப்பு விழாக்களுக்கு மட்டும் சென்று வரச் செய்யலாம்.

On a serious note, Why congress is hell bent on sheilding raja and why the other english media's except HT and Indian Express are keeping mum in this spectrum issue?

dondu(#11168674346665545885) said...

//"தலித் என்பதால்தான் ஊழல் குற்றச்சாட்டு பொய்யாக கூறப்படுகிறது" என்கிறார் கருணாநிதி.(கருணாநிதி சொல்வது உண்மையா, பொய்யா என்பது வேறுவிடயம்.)//
அது எப்படி வேறு விஷயம் என்கிறீர்கள்? நீதியரசர் தினகரன்?

நீங்கள் குறிப்பிட்ட மற்றவர்கள் ஊழல் செய்த போது அவர்கள் சம்பந்தப்பட்ட சாதி என்று யாரும் டிஃபண்ட் செய்யவில்லையே. அவர்களை ஆதரித்தவர்களும் சரி, எதிர்த்தவர்களும் சரி தத்தம் நிலைப்பாட்டுக்கு ஏற்பவே நிலையெடுத்தனர். ஆனால் அவர்கள்கூட கூறத் துணியாத வாதம்தானே தலித் என்பது?

டோண்டு ராகவன்

M Arunachalam said...

//ஆனால், இவர்களை விட மிகக்குறைவாக ஊழல்செய்த லாலுபிரசாத் யாதவ்தான் மிக அதிக காலம் சிறைத்தண்டனை அனுபவித்தார்.//

ஆமாம், ஊழலின் ஊற்றுக்கண், ஊழல் பிதாமகர், அறிவியல்பூர்வ ஊழல் மன்னன் கருணாநிதி ஊழலுக்காக சிறை சென்றது எவ்வளவு மணித்துளிகள்?

Anonymous said...

You dont get that.The minister can be a dalit or from any other
community.But share of the booty should be reserved for one family.So there is quota within the loot also. This is social justice as this inculcates the habit of sharing and helping each other.Through this the solidarity between dalits and OBCs is further assured.

Of course who represents the OBCs is a big question - it is one family vs another family.Both families had their share once.But due to conspiracy against the one family, that family has been left out.

They took a wrong decision.They are waiting to amend their mistakes but there are no takers.

M Arunachalam said...

I have written a Ambulimama-type story last year. Please read & see how it is coming true with the current developments. Why a Tele CON Minister is being persisted with? Why somebody goes to ridiculous extents (he is a Dalit) to defend a scamster minister? You get answers to these questions and more in the story.

http://hereisarun.blogspot.com/2009/07/blog-post.html

இந்த கதைக்கு தொட்டுக்கொள்ள ஒரு கவிதையும் இதோ:

http://hereisarun.blogspot.com/2009/07/blog-post_05.html

Arun

Unknown said...

டோண்டு சாருக்கு சந்தோஷம் தாங்கமுடியலை. இன்னும் 2வாரத்துக்கு இது தாங்கும்.

அருள் said...

டோண்-டூ said...

///நீங்கள் குறிப்பிட்ட மற்றவர்கள் ஊழல் செய்த போது அவர்கள் சம்பந்தப்பட்ட சாதி என்று யாரும் டிஃபண்ட் செய்யவில்லையே.///

டிஃப்ண்ட் செய்யும் தேவையே அவர்களுக்கு இல்லை. அதுதான் எல்லா இடத்திலும் 'அவாள்' இருக்கிறாங்களே!

ஜெயேந்திரர் கொடும் குற்றம் இழைத்தார். அவாளாக இருந்தும் ஜெயலலிதா உள்ளே தள்ளியது. இன்று என்ன நிலைமை? எல்லா அவாளும் சேர்ந்து ஜெயேந்திரரை காப்பாற்றவில்லையா?

அர்ஷ்த் மேத்தாவை ஒரேஒரு குற்றச்சாட்டு தவிர வேறு எதிலும் தண்டிக்க முடியவில்லையே. சசிதரூர் செய்த ஊழலுக்கு தண்டனை எதுவும் இல்லையே.

ஐ.பி.எல்'லுக்கு வந்தபணம் எல்லாமே ஊழல் பணம்தான், ஆனாலும் மூடிமறைக்கப்படுவது எதனால்?

எல்லா ஊழலிலும் 'அவாள்' பங்குதான் அதிகம். அதனால் இந்தியாவில் ஊழலை ஒழிப்பது வெறும் கனவுதான்.

மனுதர்மத்தின்படி, 'பார்ப்பான் எவ்வளவு பெரிய குற்றம் செய்தாலும், அவனுக்கு தண்டனையாக சொத்துக்களோடு ஊரைவிட்டு வெளியே அனுப்ப வேண்டும்' ஆனால், சூத்திரனுடைய சிறிய குற்றத்துக்கு அவன் தலையை எடுக்க வேண்டும்' என்பதுதானே நீதி!

வால்பையன் said...

//முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் //

யாரோ டோண்டு பதிவை ஹேக் பண்ணிடாங்கப்பா!


கருணாநிதி போதாதா!?

Anonymous said...

ஊழல் என்பது ஒரு தனிப்பட்ட விஷயம் இல்லை இன்று. அது பொதுவாழ்க்கையில் கலந்த ஒன்று.

அது பணம், பதவியை நல்குகிற்து.

இதை காலம்காலமாக ஆதிக்கச்சக்திகளும் உயர்ஜாதிகளுமே அனுபவித்துவருகின்றனர்.

இதை தடுக்க ஒரே வழி>

இங்கும் இடஒதுக்கீடு வரவேண்டும்.

Suresh Ram said...

ராசா மீது குற்றம் எதுவும் நீதிமன்றத்தில் நிருபிக்க படவில்லை

ராசாவை மட்டும் ஏன் தனிமை படுத்த வேண்டும்?

அறுபத்தி ஏழு கோடி வோட்டு உள்ள இந்தியாவில் பன்னிரண்டு கோடி பேர் ஆதரவு வோட்டு போட்டு ஆட்சி செய்வது தான் இந்திய ஜனநாயகம். இதில் பணம் சம்பாதிக்க மட்டுமே அரசியல் வாதிகள் .. எனவே சோனியா ஆட்சி நிலைக்க வேண்டுமானால் கருணாநிதி சொல்வது தான் சட்டம் .. இதில் ஜாதி என்பது மக்களை நக்கல் செய்யும் வேலை ..

எனக்கு என்ன நட்டம் ?
பக்கத்துக்கு வீட்டு பகத் சிங் அல்லது எதிர்த்த வீட்டு காந்தி தான் நம்மை காக்க வேண்டும் என்கிற மன நிலை உள்ள நம் மக்களுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்.

"THEY CAME FIRST for the Communists,
and I didn't speak up because I wasn't a Communist.

THEN THEY CAME for the Jews,
and I didn't speak up because I wasn't a Jew.

THEN THEY CAME for the trade unionists,
and I didn't speak up because I wasn't a trade unionist.

THEN THEY CAME for me
and by that time no one was left to speak up."

dondu(#11168674346665545885) said...

@வால்பையன்
இந்த இடத்தில் இவ்வளவு பட்டப் பெயர்கள் போடுவது நிச்சயமாக அவருக்கு கௌரவம் தருவதற்காக அல்ல.

சில சமயம் இந்திரா காந்திக்கு அன்னை மாதா தாயா இந்திரா காந்தி என சோ அக்காலத்தில் போட்டது போல என வைத்துக் கொள்ளலாம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Suresh Ram said...

//ஜெயேந்திரர் கொடும் குற்றம் இழைத்தார். அவாளாக இருந்தும் ஜெயலலிதா உள்ளே தள்ளியது//

இன்னும் நீதி மன்றத்தில் நிரூபணம் ஆகவில்லை .
'' அவாளாக'' இருந்த ஒரே காரணத்தால் தான் ஜெயலலிதா உள்ளே தள்ளியது.

பார்ப்பான்கள் என்று சாயம் பூசி ஒரு ஜாதியை ஒடுக்கி பார்பனர் அல்லாதோரை ஏமாற்றும் வேலை இன்று ஒரு அரசியல் வியாபாரம் ஆக நல்ல வசூல் நடக்கிறது. .
அதே formulae ராமதாஸ் கட்சிக்கு எடுபடவில்லை. மக்களுக்கு ஏதாவது புதிய வெறுப்பு ஏற்படுத்தினால் தான் வோட்டு கிடைக்கும் !

Anonymous said...

அருள் அவர்களின் பின்னூட்டத்தில் பார்ப்பான் மேல் வெறுப்பு இருக்கும் அளவிற்கு உண்மையைக் காணோம்.

/// "தலித் ஊழல் செய்தால் விட்டுவிட வேண்டும்" என்று கருணாநிதி சொல்லவில்லை. "தலித் என்பதால்தான் ஊழல் குற்றச்சாட்டு பொய்யாக கூறப்படுகிறது" என்கிறார் கருணாநிதி.(கருணாநிதி சொல்வது உண்மையா, பொய்யா என்பது வேறுவிடயம்.) //// ராசா என்ன சாதி என்பது இந்தியாவில் யாருக்கும் கவலை இல்லை. கருணாநிதி காச்சு மூச்சு என்று கத்தும் வரை யாருக்கும் ராசாவின் சாதியில் அக்கறை இல்லை. கருணாநிதிதான் தப்பிக்க இப்படிச்சொல்கிறார். இதே மன்மோகன் சிங் போன மாசம் தூக்கி அடித்த சசி தரூர் என்ன சாதி என்று இந்த அருளுக்குத்தெரியுமா? அவர் சாதியைப் பார்த்தா நடவடிக்கை எடுக்காமல் விட்டிருக்கலாமே. அருள் கொஞ்சம் சிந்தித்து இம்மாதிரி அபத்தங்களைப் பதியாமல் இருக்கலாம் --- சொல்மண்டி இரா

Anonymous said...

//// நரசிம்ம ராவ் பலகோடி கொள்ளை அடித்தார், ஜெயலலிதா பலப்பல கோடி கொள்ளை அடித்தார். ஆனால், இவர்களை விட மிகக்குறைவாக ஊழல்செய்த லாலுபிரசாத் யாதவ்தான் மிக அதிக காலம் சிறைத்தண்டனை அனுபவித்தார். //// அருள், அப்படியா? இந்தியாவில் சிறைத்தண்டனை பெற்ற அரசியல்வாதிகள் எத்தனை பேர்? அவர்கள் எல்லோரும் தலித்துக்களா? மாட்டிக்கொள்ளாத அரசியல்வாதிகள் எல்லோரும் பார்ப்பனர்களா? மாயாவதியைச் சொல்லாமல் ஜெயலலிதாவைச் சொல்கிறீர்களே, ஒருவேளை மாயாவதியும் பார்ப்பனத்தியோ? --- சொல்மண்டி இரா

Anonymous said...

அருள்,

//// மனுதர்மத்தின்படி, 'பார்ப்பான் எவ்வளவு பெரிய குற்றம் செய்தாலும், அவனுக்கு தண்டனையாக சொத்துக்களோடு ஊரைவிட்டு வெளியே அனுப்ப வேண்டும்' ஆனால், சூத்திரனுடைய சிறிய குற்றத்துக்கு அவன் தலையை எடுக்க வேண்டும்' என்பதுதானே நீதி!

May 08, 2010 12:41 PM ////

மனுதர்மத்தை நீங்களும் படிக்கவில்லை, நீங்கள் காப்பி எடுத்து எழுதும் மூலத்திலும் படிக்கவில்லை என்று தெரிகிறது. மனுநீதி பிராமணர்களுக்கு நூறு மடங்கு அதிகமாக தண்டனை விதிக்கச்சொல்கிறது. ஆமாம், மனுநீதி இந்தியாவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் எப்போதுமே எங்குமே கடைபிடக்கபட்டவில்லை. மனநீதியில் என்ன சொல்லியிருந்தால் என்ன? மஞ்சள்துண்டு நீதிதானே இப்போது இந்தியாவில் முக்கியம்ம். அதை விட்டு, நீங்கள் மட்டும் எப்போதும் இதையே கட்டிக்கொண்டு அழுகிறீர்களே, மனுநீதி உங்களுக்கு ரொம்ப பிடிக்குமோ??

--- சொல்மண்டி இரா

Anonymous said...

/// ஜெயேந்திரர் கொடும் குற்றம் இழைத்தார். அவாளாக இருந்தும் ஜெயலலிதா உள்ளே தள்ளியது. இன்று என்ன நிலைமை? எல்லா அவாளும் சேர்ந்து ஜெயேந்திரரை காப்பாற்றவில்லையா? ////

கொடும் குற்றமா!!!! அஞ்சாநெஞ்சன் அளவிற்கு பண்ணியிருப்பாரா???

உள்ளே தள்ளிய ஜெயலலிதா ஒரு தலித் பெண்மணியோ?? இல்லை, இப்போது கண்டும் காணாமல் இருந்து "அவாளை" அவிழ்த்துவிடும் கருணாநிதி என்ன பூணூல் புனிதரோ?? போங்கய்யா, போங்க.. நீங்களும் உங்கள் அபத்த வாதங்களும்...

--- சொல்மண்டி இரா

Anonymous said...

சுரேஷ்ராம்,

/// ராசா மீது குற்றம் எதுவும் நீதிமன்றத்தில் நிருபிக்க படவில்லை

ராசாவை மட்டும் ஏன் தனிமை படுத்த வேண்டும்? /////

புடிச்சு உள்ளே வெச்சு நாலு தட்டு தட்டி விசாரிச்சு கோர்ட்டில நிறுத்தினாதானே ஐயா தண்டனை கிடைக்கும்!! அதை ்விட்டு விசாரிக்கவே மாட்டேன் என்றால் அவர் குற்றவாளியா என்று எப்படித்தெரியும்? ராசாவே வந்து ஒத்துக்கொண்டால் கூட அவரை மந்திரி பதவியில் இருந்து தூக்க மாட்டீர்களோ, நல்ல நியாயமடா... இந்தியாவின் ஏழைகளின் வரிப்பணத்தை நல்லா ஆட்டயப் போடுறாங்கப்பா.. இதுக்கு வக்காலத்து வாங்கும் வெட்கங்கெட்ட தலைவர்கள் வேறு...

- சொல்மண்டி இரா

வஜ்ரா said...

சொல்ல வந்த விஷயத்தைவிட்டுவிட்டு, அருள் வந்து குதிப்பது போல் சிலர் ஆரம்பித்துவிட்டார்கள். ஊழல் செய்தவர்களை தண்டிக்கவேண்டும் என்ற எண்ணத்தைவிட அவனைவிட தன் சாதிக்காரன் அதிக ஊழல் செய்கிறான் என்ற பெருமை கொள்ளும் மனப்பான்மை தான் தெரிகிறது. இவர்கள் வோட்டு போட்டு வரும் தலைவர்கள் எல்லாம் இவர்கள் எண்ணத்தை தான் நிறைவேற்றுகிறார்கள்.

அருள் said...

Anonymous said...

///அருள் அவர்களின் பின்னூட்டத்தில் பார்ப்பான் மேல் வெறுப்பு இருக்கும் அளவிற்கு உண்மையைக் காணோம்.///

இந்தியாவில் எல்லா இடத்திலும் சாதி இருக்கிறது. எல்லாவற்றிலும் சாதி இருக்கிறது.
ஊழலிலும் சாதி முக்கிய பங்கு வகிக்கிறது. இதுதான் உண்மை.

சூத்திரன் ஊழல் செய்தால் சீக்கிரம் சிக்குவான். தண்டனையும் அனுபவிப்பான். பார்ப்பான் ஊழல் செய்தால் சிக்குவது கடினம். ஏனெனில், ஊழலை தடுக்கும் இடத்தில் இருக்கும் 'அவாள்கள்' காப்பாற்றிவிடுவார்கள். தண்டனை கிடைப்பதும் கடினம். ஏனெனில், தண்டிக்கும் இடத்தில் இருக்கும் 'அவாள்கள்' காப்பாற்றிவிடுவார்கள். செய்தியும் பெரிதாக வராது. ஏனெனில், பத்திரிகைகளில் இருக்கும் 'அவாள்கள்' காப்பாற்றிவிடுவார்கள்.

இந்த 'கிரிமினல் நெட்வொர்க்கை' ஒழிக்காமல், ஊழலை ஒழிக்க முடியாது.

dondu(#11168674346665545885) said...

@அருணாசலம்
விக்கிரமாதித்தன் கதை பிரமாதம். அதை அப்படியே, காப்பி பேஸ்ட் செய்து எனது பதிவில் மறுவெளியீடு செய்ய உங்கள் அனுமதி கிடைக்குமா?

உங்களுக்கு கொடுக்க வேண்டிய அத்தனை கிரெடிட்டுகளும் தரப்படும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ராகவேந்திரன் said...

நீங்கள் வேறு இவருக்கு பங்கு தராமல் ஆ.ராசாவே முழுவதுமாக எடுத்துச் சென்று விட்டால் என்ன செய்வது என்று இவர் தான் 2 நாட்களுக்கு முன்பு டில்லி சென்று வத்தி வைத்துவிட்டு வந்திருப்பார் என நினைக்கிறேன்.
துர்வாசர்-தம்மம்ப்ட்டி

அன்பரசு said...

அதானே என்ன இது பொழுதாயிடுச்சே இன்னும் ஒண்ணும் ஆரம்பிக்கலையேன்னு பாத்தேன். ம்ம்ம் கெளப்புங்கள்!

Anonymous said...

அருள்,


//// சூத்திரன் ஊழல் செய்தால் சீக்கிரம் சிக்குவான். தண்டனையும் அனுபவிப்பான். பார்ப்பான் ஊழல் செய்தால் சிக்குவது கடினம். ஏனெனில், ஊழலை தடுக்கும் இடத்தில் இருக்கும் 'அவாள்கள்' காப்பாற்றிவிடுவார்கள். தண்டனை கிடைப்பதும் கடினம். ஏனெனில், தண்டிக்கும் இடத்தில் இருக்கும் 'அவாள்கள்' காப்பாற்றிவிடுவார்கள். செய்தியும் பெரிதாக வராது. ஏனெனில், பத்திரிகைகளில் இருக்கும் 'அவாள்கள்' காப்பாற்றிவிடுவார்கள். ////

இப்படியே சொல்லிக்கொண்டு இன்னும் எத்தனை நாட்கள்தான் சுரண்டப்போகிறீர்கள்?

அந்த "அவாள்" இன்னும் எந்த இடத்தில் பாக்கி இருக்கிறார்கள் என்று தெரியவில்லையே!! காட்டுங்களேன்!!!

நான் சொன்ன ஒன்றுக்கும் உருப்படியான நேரடி பதில் காணோம். மாயாவதியும் லாலுவும், சோனியாவும், ஜெயலலிதாவும், கருணாநிதியும் ஒரே சாதிதான் - ஊழல் பெருச்சாளி சாதி.

இந்தியாவில் சாதி இருக்கிறது. ஆனால், ஊழலில் இந்த சாதி என்ன, அந்த சாதி என்ன? எல்லோரும் ஒன்றுதான்.

தன் பிள்ளை கொலை செய்தால் கூட கூட்டுக்களவாணித்தனம் செய்து எல்லா சாட்சிகளையும் கலைத்துவிடும் தலைவர்களும் இருக்கிறார்கள். எல்லாரும் ஊழலில் ஒரே சாதிதான்.

இன்னும் உங்களைப்போன்ற ஒரு சில சாதி வெறியர்கள்தான் எதிலும் சாதி முலாம் பூசி ஊழலுக்கு வெட்கமில்லாமல் வக்காலத்து வாங்குகிறார்கள். அய்யோ பாவம்!!!

Anonymous said...

அருள் அவர்களின் இன்னொரு முத்து கருத்து.

//// சூத்திரன் ஊழல் செய்தால் சீக்கிரம் சிக்குவான். தண்டனையும் அனுபவிப்பான். ////

அதாவது இந்தியாவில் நடக்கும் ஊழல் எல்லாம் பார்ப்பனர்கள் - அந்த 3 பர்சண்ட் பண்ணி மாட்டிக்காமல் எஸ்கேப் ஆகிவிடுகிறார்கள். மற்றவர்கள் எல்லோரும் போய் நன்றாக மாட்டிக்கொள்கிறோம். இப்படிப்பார்த்தால் நம்ம மஞ்சள் துண்டு எங்கேயோ இருந்திருக்க வேண்டுமே, ஒருவேளை அவரும் பார்ப்பனராகி பூணூல் போட்டுக்கொண்டு விட்டாரோ??

அருளின் அருளுரைப்படி பார்த்தால் ராசா நிச்சயம் மாட்டுவார் என்று சொல்கிறார். ஏனென்றால், அவர் தலைவர் போட்டுக்கொடுத்துவிட்டாரே - ராசாதான் தலித்து என்று எல்லோருக்கும் சொல்லிவிட்டாரே. இனிமேல் மன்மோகன் சிங் அவரை உள்ளே தள்ளியே ஆக வேண்டும். இல்லாவிட்டால் அருளின் அருள்வாக்கு பொய்த்துவிடும். எங்கே பார்ப்போம். அருளின் அருள்வாக்கு சரியா பொய்யா என்று?

--- சொல்மண்டி இரா

M Arunachalam said...

Dondu Sir,

Pl go ahead. You can copy, paste that post.

Arun

Anonymous said...

//அவாளாக'' இருந்த ஒரே காரணத்தால் தான் ஜெயலலிதா உள்ளே தள்ளியது.//

ஏன் ‘அவாளின்’ மீது உங்களுக்கு அவ்வள்வு அக்கறை?

ஜெயலலிதா உள்ளேத்தள்ளியதற்கு காரணம் ப்லப்ல.

Anonymous said...

//பார்ப்பான்கள் என்று சாயம் பூசி ஒரு ஜாதியை ஒடுக்கி பார்பனர் அல்லாதோரை ஏமாற்றும் வேலை இன்று ஒரு அரசியல் வியாபாரம் ஆக நல்ல வசூல் நடக்கிறது. //

இதுவும் பொய்.

பார்ப்ப்னர்களை ஒடுக்கிய்தாலேயே பார்ப்ப்னர் அல்லாதோர் உயர்வுக்கு வந்தார்கள்.

Anonymous said...

//புடிச்சு உள்ளே வெச்சு நாலு தட்டு தட்டி விசாரிச்சு கோர்ட்டில நிறுத்தினாதானே ஐயா தண்டனை கிடைக்கும்!! //

சொல்மண்டி ரா!

இது கிர்மினல் குற்றமல்ல. சிவில். இதை ஒரு தட்டி கேட்கமுடியாது. அப்படியே தட்டப்பட்டவர் ‘ஆம் நான் ஊழல் செய்தேன்’ என்று சொல்லிவிட்டால், அதைப்போய் போலிச் கோர்ட்டில் சொன்னால் கோர்ட் சிரிக்கும். நிருப்பித்துக்காட்டு எனக் கேட்கும்.

நிரூபணம் செய்வதற்கு சாதாரண் போலிசால் முடியாது. பல் ரிகார்டுகள் ஆராய்ந்து அதை நிருபிக்க்வேண்டும்.

ஒரு டி.வி போட்ட்தை பொய்யானது என நன்றாக் நிருபிக்கலாம்.

எல்லாம் டெக்னிகல் சமாச்சாரம்.

முட்டிக்கு முட்டித்தட்டி கேட்பதற்குஇது கொலையா, பிக்பாக்கெட்டா?

கொஞசம் யோசித்து எழுதப்பா!

Anonymous said...

//நான் சொன்ன ஒன்றுக்கும் உருப்படியான நேரடி பதில் காணோம். மாயாவதியும் லாலுவும், சோனியாவும், ஜெயலலிதாவும், கருணாநிதியும் ஒரே சாதிதான் - ஊழல் பெருச்சாளி சாதி.
//

இவர்களையெல்லாம் தூக்கிகடாசிவிட்டு, பார்ப்பான்களையெல்லாம் நம்மை ஆளச்சொன்னால், ஊழல் பெருச்சாளி சாதி போய், புனித பசுமாடுகள் வந்துவிடுமா?

Anonymous said...

சொல்மண்டி ரா!

ஊழல் என்பது ஒரு புரையோடிப்போன சமாச்சாரம் இன்று. இந்தியா முழுக்க, ஒவ்வொரு துறையிலும், அது நீக்கமற நிறைந்திருக்கிறது.

ஆனால், அதை மற்றவர்கள் செய்யும்போது பாராமுகமாக இருந்துவிட்டு, உங்களுக்குப் பிடிக்காதவர்கள் செய்யும்போது குதிக்கிறீர்கள். அதுவும் பார்ப்ப்னர்கள் என்ற சொல்லாடல் வந்துவிட்டாலே போதும் உணர்ச்சிபொங்குகிறது.

முதலில் உங்கள் ஜாதிவெறியை விட உங்களால் முடியவில்லை. மததவனுக்கு உபதேசமா?

ஊழல் செய்தவன் எவராயிருப்பினும் மாட்டிக்கொண்டால், அவர் சிறு ஆளாக இருந்தால்தான் செயில். பெரிய புள்ளியென்றால், அவனுக்கு வாதாட ஜேத்மாலானி வருவார்.

பெரியபுள்ளி மாட்டமுடியாது.

ராசாவுக்கு தலித் கார்டு. பார்ப்பானுக்கு அல்லது மத்தவாளுக்கு வேறொரு வழி. அவ்வளுவுதான்.

நீங்கள் முழுப்பூசணிக்காயை சோத்தில் மறைக்க முயல்கிறீர்கள்.

Unknown said...

//சொல்மண்டி இரா //

இது டோண்டு ராகவன் அவருக்கே போட்டுக்குற பின்னூட்டம் மாதிரி இருக்கு

அருள் said...

Anonymous said...
///அந்த "அவாள்" இன்னும் எந்த இடத்தில் பாக்கி இருக்கிறார்கள் என்று தெரியவில்லையே!! காட்டுங்களேன்!!!///

உச்சநீதிமன்றம்:

உச்சநீதிமன்றத்தின் ஒட்டுமொத்த நீதிபதிகளில் ஒருவர் தலித்,
ஒருவர் எஸ்.டி.,
ஒரேஒருவர்கூட ஓ.பி.சி. இல்லை.
மற்ற எல்லோரும் ஆதிக்கசாதியினர்.

அரசாங்கம்:

கேபினட் அமைச்சர்களில் பெரும்பாலானோரும், அரசு செயலாளர்களில் மிகப்பெரும்பான்மையினரும் ஆதிக்க சாதியினர்தான்.

அரசாங்கம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் பார்ப்பன ஆதிக்கம் நீடிப்பது குறித்து அண்மையில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தலைவர் பூட்டாசிங் புலம்பியுள்ளார்: "Upper castes dominate Cabinet, judiciary: Buta Singh" http://news.webindia123.com/news/Articles/India/20100323/1470731.html

பத்திரிகை:

புதுதில்லி பத்திரிகை செய்தியாளர்களில் 49 % பார்ப்பனர்கள், ஒட்டுமொத்தமாக எல்லா உயர்சாதியினரையும் சேர்த்தால் 85 %. ஆனால், இவர்களின் கூட்டு மக்கள்தொகை 16 % மட்டும்தான்.

இதில் நாட்டின் 60 % மக்களாக இருக்கும் ஓ.பி.சி.யினரின் பங்கு வெறும் 4 % மட்டும்தான்.

இதுகுறித்து விரிவான ஆய்வரிக்கையை Centre for the Study of Developing Societies (CSDS) வெளியிட்டுள்ளது.

இப்படி எல்லா இடத்தையும் ஆக்கிரமித்துக்கொண்டு, //"அவாள்" இன்னும் எந்த இடத்தில் பாக்கி இருக்கிறார்கள்?// என்று கேட்க வெட்கமாக இல்லையா?

dondu(#11168674346665545885) said...

//இது டோண்டு ராகவன் அவருக்கே போட்டுக்குற பின்னூட்டம் மாதிரி இருக்கு//
அது உண்மையல்ல.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

Caste census is allowed now.

Let the census be complete.

How many OBCs and SC and STs in India, of them, how many in position in governments and authority.

We will know then the truth.

துளசி கோபால் said...

//ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனையில் ராசா எடுத்த முடிவின் காரணமாக, குறைந்தபட்சம் ரூ.26 ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்று இந்திய கணக்குத் தணிக்கைத் தலைவர் கூறியுள்ளார்.//

இந்த இழப்பு அரசுக்குத்தான். மற்றபடி பணம் போய்ச்சேரவேண்டியவர்களுக்குச் சரியாப்போய்ச் சேர்ந்திருக்கும்தானே?

இடுகைக்கு நன்றி. இதுவரை இந்த ஸ்பெக்ட்ரம் பற்றி சரியாக ஒன்னும் தெரியாமல் இருந்தேன். இப்போது கொஞ்சம் புரிகிறது.

Anonymous said...

யோவ் அனானி,

/// சொல்மண்டி ரா!

இது கிர்மினல் குற்றமல்ல. சிவில். இதை ஒரு தட்டி கேட்கமுடியாது. அப்படியே தட்டப்பட்டவர் ‘ஆம் நான் ஊழல் செய்தேன்’ என்று சொல்லிவிட்டால், அதைப்போய் போலிச் கோர்ட்டில் சொன்னால் கோர்ட் சிரிக்கும். நிருப்பித்துக்காட்டு எனக் கேட்கும். ////

பலகோடி ரூபாய் கொள்ளை அடிப்பதும், ஏமாற்றுவதும், சாட்சிகளை மறைப்பதும் கிரிமினல் குத்தம் இல்லையா!!! பிறகென்ன, இது என்ன வரப்புத்தகராறா?

தெரிஞ்சா பேசும், இல்லாகாட்டி ஓரமா உட்கார்ந்து வேடிக்கைப்பாரும்....

என் பேரையாவது முழுசா எழுத கத்துக்கக...

- சொல்மண்டி இரா

Anonymous said...

அனானி,

//// இவர்களையெல்லாம் தூக்கிகடாசிவிட்டு, பார்ப்பான்களையெல்லாம் நம்மை ஆளச்சொன்னால், ஊழல் பெருச்சாளி சாதி போய், புனித பசுமாடுகள் வந்துவிடுமா?

May 08, 2010 6:14 PM ////

அப்படி யாரும் சொல்லவில்லையே... சரியாக படித்துவிட்டு பின்னூட்டம் போடக்கூடாதா? ஊழல் எவன் பண்ணினாலும் உள்ளே தள்ளப்பட வேண்டும். இதிலே, என்ன தலித்து, மலித்து என்று சப்பைகட்டுவது கலைஞரும் அவருக்கு சால்ரா போடும் உங்களைப்போன்ற சாதிவெறியர்களும். ராசா ஊழல் பண்ணியிருந்தால் அது உண்மையில் தலித்துகளுக்கு அவர் இழைத்த மிகப்பெரிய துரோகம். தாழ்த்தப்பட்டவர்களுக்கு நேர்ந்த அவமானமாகவே நாம் கருதவேண்டும். அதை விட்டு, ராசாவை தண்டிக்க வேண்டும் என்று சொல்லாமல் நொண்டிச்சாக்கு சொல்லுவது யார்???

- சொல்மண்டி இரா

Anonymous said...

அனானி,

///// சொல்மண்டி ரா

ஊழல் என்பது ஒரு புரையோடிப்போன சமாச்சாரம் இன்று. இந்தியா முழுக்க, ஒவ்வொரு துறையிலும், அது நீக்கமற நிறைந்திருக்கிறது.

ஆனால், அதை மற்றவர்கள் செய்யும்போது பாராமுகமாக இருந்துவிட்டு, உங்களுக்குப் பிடிக்காதவர்கள் செய்யும்போது குதிக்கிறீர்கள். அதுவும் பார்ப்ப்னர்கள் என்ற சொல்லாடல் வந்துவிட்டாலே போதும் உணர்ச்சிபொங்குகிறது.

முதலில் உங்கள் ஜாதிவெறியை விட உங்களால் முடியவில்லை. மததவனுக்கு உபதேசமா? ////

என் பெயரைக்கூட சரியாக எழுதத்தெரியாத தமிழ் அரைகுறை அனானி,

ஊழல் லிஸ்டைப் போடுங்கள். அதில் பார்ப்பான் சாதி எத்தனை பேர்? மாட்டாமல் ஊழல் குற்றச்சாட்டுகளில் இன்று பாராளுமன்றங்களில் இருப்பவர்கள் எல்லோரும் பார்ப்பனர்கள்தானா. சாதி பேரைச்சொல்லி ஊழல் குற்றச்சாட்டுக்கு பதில் சொன்ன வேறு ஏதாவது ஒரு அரசியல்வாதியைக் காட்ட முடியுமா? ஒரு சாதியினர் என்பதாலேயே ஊழல் குற்றச்சாட்டுகளை கண்டுக்காமல் இருந்ததாக நீங்கள் சொல்வதற்கு ஒரு உதாரணமாவது காட்ட முடியுமா? யோசித்து எழுதவும். இல்லாவிட்டால், இது உங்கள் சாதி வெறியைத்தான் காட்டுகிறது.

-- சொல்மண்டி இரா

Anonymous said...

ஜெய்சங்கர் ஜகன்னாதன்,

//சொல்மண்டி இரா //

இது டோண்டு ராகவன் அவருக்கே போட்டுக்குற பின்னூட்டம் மாதிரி இருக்கு

May 08, 2010 6:26 PM /////

பெரிய பெயர் உங்களுக்கு. ஆனால், மத்ததெல்லாம் கொஞ்சம் சின்னதுதான் போல...

நேரடியாக பதில் ஒன்றும் சரக்கு இல்லையென்றால் இப்படி நம் ஓல்ட் மேன் டோண்டு மேல ஏதாவது சொல்லிகிட்டு போகவேண்டியதா...

என் ப்ளாக solmandi.wordpress.com டோண்டு wordpress ஐ மட்டுமே நம்புவதால் நான் அனானியாக பின்னூட்டம் போட வேண்டியுள்ளது. மற்றபடி எனக்கும் இந்த இந்துகாலனி இந்தியன்தாத்தாவுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை.

--- சொல்மண்டி இரா

Anonymous said...

அருள்.....


//// Anonymous said...
///அந்த "அவாள்" இன்னும் எந்த இடத்தில் பாக்கி இருக்கிறார்கள் என்று தெரியவில்லையே!! காட்டுங்களேன்!!!///

உச்சநீதிமன்றம்:

உச்சநீதிமன்றத்தின் ஒட்டுமொத்த நீதிபதிகளில் ஒருவர் தலித்,
ஒருவர் எஸ்.டி.,
ஒரேஒருவர்கூட ஓ.பி.சி. இல்லை.
மற்ற எல்லோரும் ஆதிக்கசாதியினர்./////

"அவாள்" பத்தி கேட்டால், நீங்கள் ஆதிக்க சாதிகளின் பிராட் புள்ளிவிவரங்களைச்சொல்கிறீர்களே.. உங்களுக்கு நிஜமாகவே ஒன்றும் தெரியாதா, இல்லை கஷ்டப்பட்டு இப்படி முட்டாள் வேடமா??? கொஞ்சம் விட்டால் இங்கிலீஷ்காரன் எல்லாம் கூட "அவாள்" என்று சொல்லிவிடுவீர்கள் போல... நீங்களும் ஆதிக்க சாதிதானே.. தலித்தா என்ன? "அவாள்" பேரைச் சொல்லி ஆட்டயப்போட்டு தலித்துகளுக்கு மலம் போடுவது நீங்கள்தானே...
நீங்கள் சொன்ன ஒரு புள்ளிவிவரமாவது உண்மையா? எங்கிருந்து எடுத்தீர்கள் என்று சொல்ல முடியுமா? பத்திரிக்கைக்காரர்கள் இந்து விரோதமாகவும், பாஜபாவின் தற்போதய பரிதாப நிலையையும் பார்த்தால் ஒன்றும் "அவாள்" கூட்டம் எங்கியும் இருப்பது போல தெரியவில்லையே... நீங்கள் காட்டும் பூச்சாண்டிகளை இப்போதெல்லாம் ஒருத்தரும் --- தலித்துக்கள் உட்பட -- நம்பவில்லை என்பது உங்களுக்கு தெரியுமா? வடிவேலு மாதிரி ஆகிவிடப்போகிறீர்கள், சாக்கிரதை..

--- சொல்மண்டி இரா

Anonymous said...

அசட்டு அனானி,

//// ஊழல் செய்தவன் எவராயிருப்பினும் மாட்டிக்கொண்டால், அவர் சிறு ஆளாக இருந்தால்தான் செயில். பெரிய புள்ளியென்றால், அவனுக்கு வாதாட ஜேத்மாலானி வருவார்.

பெரியபுள்ளி மாட்டமுடியாது.

ராசாவுக்கு தலித் கார்டு. பார்ப்பானுக்கு அல்லது மத்தவாளுக்கு வேறொரு வழி. அவ்வளுவுதான். ////

தப்புவதெல்லாம் பெரிய புள்ளி என்று சொல்லிவிட்டு பின்னால் ஏன் பார்ப்பானை திட்டுகிறீர்கள். பெரிய புள்ளிகள் எல்லாம் என்ன பார்ப்பானா? எல்லாம் "நம்ப ஆளுங்க, பாசக்கார பசங்க"தான்யா... போய் நம்ம மஞ்ச துண்ட கேளுங்க... சொல்வாரு.. இப்படி பாப்பான் பூதம் காட்டி காட்டி இனிமே ஆட்டய போட முடியாது...

--- சொல்மண்டி இரா

Anonymous said...

//பலகோடி ரூபாய் கொள்ளை அடிப்பதும், ஏமாற்றுவதும், சாட்சிகளை மறைப்பதும் கிரிமினல் குத்தம் இல்லையா!!! பிறகென்ன, இது என்ன வரப்புத்தகராறா?

தெரிஞ்சா பேசும், இல்லாகாட்டி ஓரமா உட்கார்ந்து வேடிக்கைப்பாரும்....

என் பேரையாவது முழுசா எழுத கத்துக்கக...
//

ராசா கேஸ் போன்றவை, முதலில் சிவில் குற்றம்தான். பின்னர் அதன் ப்லபரிமாணங்கள் சிவில் குற்றம் புலன் விசாரனைபண்ணும்போது தெரிய்வரும். அப்பொதுதான் அவைகளில் எவை கிரிமினல்; எவை சிவில் எனத் தெரியவரும்.

ஃபனான்ஸ் கம்பெனி பணம் வாங்கிகொண்டு ஓடிவிடுகிறான். அது சிவில் குற்றம். அதனால்தான் போலிசு அவனை முட்டுக்குமுட்டித் தட்டாது.

நிலத்தகராறு, சொத்துத்தகராறு, ராசா கேசு - இவையெல்லாம் சிவில்.

இவற்றில் குற்றம் சாட்டப்பட்டவரை போலிசு மரியாதையாகத்தான் சிறைக்கு இட்டுச்செல்லும்.

Police cant treat them like common criminals.

Corruption of politicians are civil crimes, or tarts, unless, in the process of corruption, a murder was committed.

For your information, police dont beat the murderer if he surrenders while they take him to station for interrogation.

Only petty thieves, or thieves, pickpockets, and offenders of public decency are given third degree treatment.

Anubav Foundations owner and Kalaimagal sabha owner are enjoying A class in jails now.

You want to treat all acts of Politicians as criminal offences. Then, change the law.

Anonymous said...

அப்போ ஜாதி வாரியா ஊழல் பணத்துக்கும் ஒதுக்கீடு பண்ணிரலமா? இந்த ஜாதிக்கு இவ்வளவு லிமிட் தான் கொள்ளை அடிக்கணும், அப்படின்னு அளவு கொண்டு வந்தாலும் ஆச்சர்ய படுவதற்கில்லை. அந்த ஜாதி மிகவும் பிற்படுத்தப்பட்ட ஜாதி அவங்க எவ்ளோ வேணாலும் ஊழல் பண்ணலாம். என்ன கொடுமைசார் இது ?

Anonymous said...

அனானி (1144am)

அதைத்தான் நான் சொல்கிறேன்.

பெண்கள் எப்படி?

ஆண்கள் செய்யும் அனைத்தும் நாங்கள் செய்வோம். அதை அனுமதியுங்கள் என்கிறார்கள். ஆண்களைப்போல உடை, பேச்சு,

இது தாவல. கரப்சனில் நாங்களும் அவர்களைப்போல் இருப்போம். எனவே, அரசாங்கத்தில் அவர்களும் ஊழல் நன்றாக பண்ணுகிறார்கள்.

போனவாரம், பம்பாயில், 23 கோடி லஞசம் கேட்டாரென ஒரு பெண் இன்கம்டாக்ஸ் கமிசனர் கைது.

தலித்துகள், பெண்களுக்கு என நீங்கள் தனியாக அளவுகோல் வைக்கிறீர்கள்?

இதுநாள் வரை ஊழல் மற்றவர் செய்தார். இன்றும் செய்கிறார்கள் - ஆனால், அருள் சொன்னபடி, அவைகள் மறைக்கப்படுகின்றன. Because there is an upper caste cartel everywhere, according to arul.

எல்லா ஜாதிகளுக்கும் ஊழல் செய்ய் உரிமையுண்டு.

இல்லாவிட்டால் எடுத்துக்கொள்ளப்படும்.

பிடிபடும்போது அவனை மட்டும் ஏன் விட்டாய என கேட்டால், உங்கள் மூன்சு எங்கே போகும்?

எங்கும் போகாது. கதை எழுதும். பல்லவன் பஸ் கதை, விக்ரமாத்தித்தன் கதை.

இக்கதையெல்லாம் ஒரு கூட்டத்தைக்காக்க.

நான் தொடக்கத்திலிருந்து எழுதிக்கொண்டுவருகிறேன் எவனும் யோக்கியனல்ல. There is total moral bankruptcy in public life in India.

ஆனால், நீங்கள் உங்கள் எதிராளிகள் பண்ணும்போது மட்டும் குதிக்கிறீர்கள்.
பார்ப்ப்னர் என்றால், காணாமல் விட்டுவிட்டு, எவராவது அதைக்காட்டும்போது, அவனை

இங்கிலீச் ப்ராவர்ப் இப்படிச்சொல்கிறது என பகடி பண்ணுகிறீர்கள். அவர் பார்ப்ப்ன வெறுப்பாளர் எனத் திரிக்கிறீர்கள்.

Anonymous said...

சொல்மண்டி ரா!

உங்கள் பெயரை திரித்தது ஒரு conscious act.

உங்களுக்கென்ன தூயதமிழ் பற்றா என்ற நக்கலே அதன் உட்பொருள்.

ஏன்?

ஜெயலலிதாவை, செயலலிதா என்றோ, ராஜாஜியை ராசாசி என்றோ, டீ ஐய் தேனீர் என்றோ நன் எழுதினால், முதலில் என்னை முதலில் பகடி செய்வது எவர்?

பார்ப்ப்னர்களே.

எனவே, உங்களுக்கு தமிழ்பற்று என்பது, என்ன்வோ போலிருக்கிறது.

Shankar said...

Dear All,
I find from the various replies that we are totally getting distracted from the main issue. That way MK has accomplished his mission.This is exactly what he wanted in the first place.
Corruption is deep rooted in India and fully protected and organised. The whole set up is very well lubricated,. Only when things dont work out , they start spilling the beans.
MK'sw dcoctor and personal auditor is a brahmin. Maran's very close pal and ally was srinivasan ( India Cements. ) he was his partner in everythin (?). The powers that be have no problems in Caster creed etc. Only we people down here keep talking about it.
remember what Mohamed Azaruddin said when he was trapped in Match fixing? He said he was targetted because he was a Muslim. he later retracted, that is a different story.
I am sure there is no need to fight amongst ourselves about the caste. What needs to be done is expose everyone including the so called media.
Shankar

Anonymous said...

/// சொல்மண்டி ரா!

உங்கள் பெயரை திரித்தது ஒரு conscious act.

உங்களுக்கென்ன தூயதமிழ் பற்றா என்ற நக்கலே அதன் உட்பொருள்.

ஏன்?

ஜெயலலிதாவை, செயலலிதா என்றோ, ராஜாஜியை ராசாசி என்றோ, டீ ஐய் தேனீர் என்றோ நன் எழுதினால், முதலில் என்னை முதலில் பகடி செய்வது எவர்?

பார்ப்ப்னர்களே.

எனவே, உங்களுக்கு தமிழ்பற்று என்பது, என்ன்வோ போலிருக்கிறது.

May 09, 2010 11:52 AM ////

அரைகுறை அனானி,

கீழே விழுந்தாலும் வடிவேலு மாதிரி நன்றாக சமாளிக்கிறீர்கள். "பாவம் இவன் ரொம்ப நல்லவன்டா" என்று சொல்லிக்கேட்க ஆசை போல... தப்பு தப்பாக கருத்துக்களையும் பெயரையும் எழுதிவிட்டு அதை தமிழ்ப்பற்றை சுட்டிக்காட்ட எழுதினாராம்.. என்னமா கரடி விடுகிறாங்கய்யா...

நான் யாரென்றே உனக்குத்தெரியாது? இதில் என் தமிழ்ப்பற்றுக்கு நீ என்ன சர்டிபிகேட் கொடுப்பதா? உங்கள் உறுதிப்பத்திரம் எனக்குத்தேவையில்லை.

ஜெயலலிதாவை செயலலிதா என்று எழுதினால் தமிழ்ப்பற்றா!!! அய்யோ பாவம். முதலில் சுடாலினை சுடாலின் என்று ஆண்மையிருந்தால் ஒரு நிகழ்ச்சியிலாவது எழுதிக்காட்டுங்கள். பிறகு ஒப்புக்கறேன், உங்கள் தமிழ்ப்பற்றை. இதில் அஞ்சாநெஞ்சன் "தமிழ்ப்படம்" எடுக்கிறார், ஆனால், கம்பனி பேர் என்ன தெரியுமா? அவர் கேபிள் கம்பனி பேர் தெரியுமா? தமிழைக்காக்கும் தலைவர் குஞ்சுகளின் விளக்குமாத்து கரிசனம் எங்களுக்கு வேண்டாம். கொத்துகொத்தாக ஈழத்தில் தமிழர்களை காவு கொடுத்து நாற்காலிபூசை நடத்திக்கொண்டுவிட்டு இப்போது ராசாவுக்கு பரிந்து பிறரது தமிழ்ப்பற்றை விமர்சிக்கும் நீங்கள், ஒரு பின்னூட்டமாவது சந்திப்பிழை இல்லாமல் எழுதப்பழகவும். தமிழ் ஒன்றும் உங்கள் தயவுக்கு ஏங்கி இருக்கவில்லை.

- சொல்மண்டி இரா

Anonymous said...

//ஊழல் எவன் பண்ணினாலும் உள்ளே தள்ளப்பட வேண்டும். இதிலே, என்ன தலித்து, மலித்து என்று சப்பைகட்டுவது //

இங்கு நான் சொல்வதையே திருப்பிச்சொல்ல்வேண்டும்.

பெண் - ஒரு குற்றத்தில் மாட்டிக்கொள்கிறாள்.

அவள் எல்லா அஸ்திரங்களையும் செலுத்தித் தன்னைக்காத்துக் கொள்ளப் பார்ப்பாள்.
முடியவில்லையென்றால்,
அவளின் பிரம்மாஸ்திரம், பெண் எனற victim card.

இது பலரிடம் செல்லும்.
நீத்பதிகள் கூட இதற்கு செவி சாய்ப்பதுண்டு.

நளினி கதையிலும் இது நடந்துகொண்டு இருக்கிறது.
அவரது மெர்சி பெட்டிசனில்,
பெண், தாய் போன்றவை யே அடிப்படைகள் என்பதை
நினைவில் கொள்ளுங்கள்.

ஏன் அந்த விக்டிம் கார்டு பெண்ணுக்கு? ஆணுக்கு அது தேவையில்லை ஏன்?

ஏனெனில், மனிதன் தோன்றியதிலிருந்து இன்று வரை, அல்லது முடியும் வரை, ஆணே ஆதிக்கச்சக்தி. பெண் விகிடிம் அவனின் ஆதிக்கத்திற்கு.பெண் விசயம் என்றுமே மாறாது. She is a permanent victim of man's domination and control.

எனவே பெண் என்ற விக்டிம் கார்டு எப்போது இருக்கும்.

தலித்துக்கு வருவோம். ப்ன்னெடுங்காலமாக ஒடுக்கப்பட்டவர்கள்.
எனவே அவர்களும் விக்டிம் கார்டு பிரயோகம் பண்ணவது சாதாரணம்.

ஏனென்றால், ஆதிக்கசக்திகள் அவர்கள் இல்லை. மேல்சாதியினரே ஆதிக்கச்சக்திகள். அருளின் ஆதாரத்தின்படி, இந்தியாவில் மேல்சாதியினரே இன்றும் ஆதிக்கச்சக்திகள்.

நாளை மாறலாம் தலித்துகள் விசயம். ஆதிக்கசக்திகளாக. ஆனால் இன்று அவர்கள் இல்லை. என்வே தலித்து என்ற விக்டிம் கார்டு சாதாரணம்.

ஒரு கொலையை துப்பறியும் போலீசு எல்லா leads ஐ தொடர்வார்கள். ஒவ்வொரு leadக்கும் ஒரு குருப் வைத்து. சில leads நம் பார்வையில் அற்பத்தனமாக இருக்கும்.

இதைப்போலவே ஒரு தலித்து ஒரு க்ரப்சனின் மாட்டும்போது, அவர் தலித்தென்ற காரணத்தால் மாட்டப்பட்டாரா என்றும் ஆராயப்பட வேண்டும்.

பலவிடங்களின் தலித்துகள் பழிவாங்கப்படுகிறார்கள்: அரசு உயர்பத்விகளில். ஆனால், ஆதிக்கசக்திகள் வேறுகாரணங்கள வெளிச்சொல்லி ஏமாற்றும். உட்காரணம் சொல்லப்படாது: தலித்து என்பதாலே...!

Anonymous said...

அட அனானி,

///// பலவிடங்களின் தலித்துகள் பழிவாங்கப்படுகிறார்கள்: அரசு உயர்பத்விகளில். ஆனால், ஆதிக்கசக்திகள் வேறுகாரணங்கள வெளிச்சொல்லி ஏமாற்றும். உட்காரணம் சொல்லப்படாது: தலித்து என்பதாலே...!

May 09, 2010 12:57 PM /////

நீங்க என்னதான்யா சொல்ல வர்றே!! ஒர்ரே ரவுசா எழுதற!!! ராசாவ மந்திரி பதவியிலிருந்து தூக்கி விசாரிக்கணுமா, கூடாதா? அதை விட்டுட்டு... வெள்ளிக்கிழமை விளக்கண்ன குடிச்சா மேரி எழுதிகிட்டு.... இங்க எங்கய்யா ஆதிக்க சாதி வந்தது... திருடனது ஒரு ஆதிக்க சாதி மஞ்சா துண்டு பேமிலி. அதுக்கு அல்லக்கை இந்த தலித்து ராசா மற்றும் இத்தாலி பிராட்.. எல்லாருமே கூட்டு களவாணிங்க... இதுல சாதி மீதி என்று சொல்லிகிட்டு நீங்க இந்த திருடங்களுக்கு வக்காலத்து வாங்கிறீங்களே... சிரிக்க முடியல்ல...

--- சொல்மண்டி இரா

Anonymous said...

//தப்பு தப்பாக கருத்துக்களையும் பெயரையும் எழுதிவிட்டு அதை தமிழ்ப்பற்றை சுட்டிக்காட்ட எழுதினாராம்//

ஒரு தடவை எழுதினால் தப்பா எழுதினதா சொல்லலாம்.

திரும்பதிரும்ப எழுதினா conscious act அண்ணாச்சி.

இதுகூட சொல்லித்தான் தெரியனுமா சொல்மண்டி ராவுக்கு?

//ஜெயலலிதாவை செயலலிதா என்று எழுதினால் தமிழ்ப்பற்றா!!! அய்யோ பாவம். முதலில் சுடாலினை சுடாலின் என்று ஆண்மையிருந்தால் ஒரு நிகழ்ச்சியிலாவது எழுதிக்காட்டுங்கள். பிறகு ஒப்புக்கறேன்//

நான் எழுதியதை உறுதிப்படுத்துகிறீர்கள் சொல்மண்டி ரா!

தமிழ்படுத்தி சொற்களை எழுதும்போது இப்படித்தான் கிண்டல் பண்ணுவார்கள் என்று சொல்வது எவ்வளுவு உண்மை!

Anonymous said...

//இதில் அஞ்சாநெஞ்சன் "தமிழ்ப்படம்" எடுக்கிறார், ஆனால், கம்பனி பேர் என்ன தெரியுமா? அவர் கேபிள் கம்பனி பேர் தெரியுமா?//

சொல்மண்டி ராவைப்பத்தித்தா நான் பேசுறேண். கருனானிதி என்ன் பண்றாரு அவர் தமிழ்பற்று என்னான்னு நான் பேசல. அது தனியாப்போடன்மில்லே.

செயமோகன் ஒரு தொடர் கட்டுரை தீராநதியில் வரைந்தார் சில மாதங்களுக்கு முன். அதில்,

தமிழறிஞர்கள், பலகழக தமிழ்ப் பேராசிரியர்கள், தமிழ் மொழி வளர்ச்சி கூட்டங்கள், என்று அனைத்தையும் பகடி செய்து எழுதியிருந்தார்.

அங்கு கருனானிதியோ, கழகங்களின் தமிழ் பற்றோ எடுத்துக்கொள்ளப்படவில்லை.

தமிழ்ப்பற்றை -அதாவது தமிழ் வாழவேண்டும், அதன் தொல்பாரம்பரியம் பேணிக்காக்கப்ப்ட்டு அடுத்த தலைமுறைக்குச்சென்றடைய வேண்டும் - என்று நினைத்துச்செயல்படுபவர்கள், கழகங்களும் திராவிடத்தறுதலைகளின் வேலை மட்டுமே என்பது சொல்மண்டி ராவைப்போன்றோரின் எண்ணம்.

தவறு. எல்லாத்தமிழாசிரியர்கள், பேராசிரியர்கள், தமிழ்க்கவிஞர்கள் என்று உண்டு.

அன்னியப்பெயர்களை தமிழ்ப்படுத்தும்போது பகடி செய்வோர், இவர்களைத்தான் கேலி ப்ண்ணுகிறார்கள். ஆனால் நினைப்பது, திராவிடத்தறுதலைகளப்பண்ணுகிறோமென்று!

Anonymous said...

//தமிழ்ப்பற்றை விமர்சிக்கும் நீங்கள், ஒரு பின்னூட்டமாவது சந்திப்பிழை இல்லாமல் எழுதப்பழகவும்.//

நான் ஏன் எழுதனும்? நான் என்ன தமிழ்ப்பற்றாளனா? இல்லை திராவிடத்தறுதலையா?

சொல்மண்டி இராவை சொல்மண்டி இராவென்று எழுதி என் தூயதமிழ்ப்பற்றை யாருக்கு காண்பிக்கவேண்டும்? முதலில் இருந்தால்தானே காட்டனும்.

நுமது (கரெக்ட் கிராமர்) தமிழ்ப்பற்றின் இரட்டை வேடமே யான் இங்கே சுட்டிக்காட்ட விழந்தது!

Anonymous said...

//தப்புவதெல்லாம் பெரிய புள்ளி என்று சொல்லிவிட்டு பின்னால் ஏன் பார்ப்பானை திட்டுகிறீர்கள். பெரிய புள்ளிகள் எல்லாம் என்ன பார்ப்பானா? //

இதை ஒத்துக்கிறே. apologies.

பார்ப்பனர்களும் மேல்ஜாதியினரும் ஆதிக்கசக்திகள். என்வே இருவரையும் தனித்தனியாகப்போட்டு எழுதாமல், சேர்த்து ஒரேசொல்லில் விளிப்பது சாலப்பொருத்தம்.

என்ன பெயர் போடலாம். bania brahmin gangs என்று போடலாமா?

அல்லது உயர்ஜாதியினர் என்று சொல்லிவிட்லாமா?

செகண்டு இஸ் பெட்டர்ணா?

இந்தப்பார்ப்ப்னர்களும் அவர்கீழ்வரும் உயர்ஜாதியினரும் (செட்டி, முதலி, பிள்ளை) இவர்களெல்லாம் கூட்டுக்கள்ள்ர்கள். ஒன்றாகச்சேர்த்துக்கட்டி விலாசலாம்.

வருக வருக சொல்மண்டி ராவே!

அருள் said...

Anonymous சொல்மண்டி இரா said...

///"அவாள்" பத்தி கேட்டால், நீங்கள் ஆதிக்க சாதிகளின் பிராட் புள்ளிவிவரங்களைச்சொல்கிறீர்களே.. உங்களுக்கு நிஜமாகவே ஒன்றும் தெரியாதா, இல்லை கஷ்டப்பட்டு இப்படி முட்டாள் வேடமா??? கொஞ்சம் விட்டால் இங்கிலீஷ்காரன் எல்லாம் கூட "அவாள்" என்று சொல்லிவிடுவீர்கள் போல... நீங்களும் ஆதிக்க சாதிதானே.. தலித்தா என்ன? "அவாள்" பேரைச் சொல்லி ஆட்டயப்போட்டு தலித்துகளுக்கு மலம் போடுவது நீங்கள்தானே...
நீங்கள் சொன்ன ஒரு புள்ளிவிவரமாவது உண்மையா? எங்கிருந்து எடுத்தீர்கள் என்று சொல்ல முடியுமா? பத்திரிக்கைக்காரர்கள் இந்து விரோதமாகவும், பாஜபாவின் தற்போதய பரிதாப நிலையையும் பார்த்தால் ஒன்றும் "அவாள்" கூட்டம் எங்கியும் இருப்பது போல தெரியவில்லையே... நீங்கள் காட்டும் பூச்சாண்டிகளை இப்போதெல்லாம் ஒருத்தரும் --- தலித்துக்கள் உட்பட -- நம்பவில்லை என்பது உங்களுக்கு தெரியுமா? வடிவேலு மாதிரி ஆகிவிடப்போகிறீர்கள், ///

ஆதிக்க சாதிக்கூட்டம் என்றால், அதிலும் அதிகமாக இருப்பது பார்ப்பனர்கள்தான் என்ற கருத்தில் நான் கூறினேன். ஆனால், சொல்மண்டி இரா பார்ப்பனர்களை தனியாக குறிப்பிட்டு ஆதாரம் கேட்கிறார்.

//நீங்கள் சொன்ன ஒரு புள்ளிவிவரமாவது உண்மையா? எங்கிருந்து எடுத்தீர்கள் என்று சொல்ல முடியுமா?// என்கிறார்

ஆதாரம் தானே வேண்டும் - இதப்பாருங்கோ:

1950 முதல் 1967 வரை உச்சநீதிமன்றத்தில் இருந்த நீதிபதிகளில் 36 பேரில் 14 பேர் பார்ப்பனர்கள்,

1950 முதல் 2006 வரை இருந்த மொத்த தலைமை நீதிபதிகளில் 47 % பார்ப்பனர்கள், இதர நீதிபதிகளில் 51 % பார்ப்பனர்கள்.

விளக்கமாக அறிந்துகொள்ள இந்த 'ஜியார்ஜியா பல்கலைக்கழக ஆய்வினைப் படிக்கவும்.

http://etd.gsu.edu/theses/available/etd-03212006-150358/unrestricted/sriram_shyam_k_200605_ma.pdf

இந்தியாவின் மிகமுக்கியமான பத்திரிகையாளர்கள் 315 பேரின் சாதியை ஆய்வு செய்த புதுதில்லியில் உள்ள 16 % மக்கள்தொகை கொண்ட உயர்சாதியினர், 86 % இடத்தை பிடித்ததாக கூறுகிறது.

இதில் பார்ப்பனர்களை மட்டுமே தனியாக எடுத்தால் வெறும் 4 % மக்கள்தொகை கொண்ட பார்ப்பனர்கள், 49 % இடத்தை பிடித்ததாக கூறுகிறது.

விளக்கமாக அறிந்துகொள்ள இந்த செய்தியை படிக்கவும்.

http://oldcontent.newswatch.in/news-analyses/newsworthiness/5255.html

Anonymous said...

//MK'sw dcoctor and personal auditor is a brahmin. Maran's very close pal and ally was srinivasan ( India Cements. )//

அப்படி போடு அண்ணாத்தே. இதைத்தான் நா முதலில் இருந்தே சொல்றே.

இந்தகருனானிதி கும்பலில் வெளிவேசம்: பார்ப்பன எதிர்ப்பு.

திரைக்குப் பின்னால் பார்ப்ப்னக்கும்பலோடு ஜலசா.

இவா அவாளுக்கு வேணும். அவா இவாளுக்கு வேணும்.

அய்யோ பாவம் சொல்மண்டி ராக்கள்.

வெளுத்தெல்லாம் பால் என்று குடிக்க வருதுகள்.

Anonymous said...

//போனவாரம், பம்பாயில், 23 கோடி லஞசம் கேட்டாரென ஒரு பெண் இன்கம்டாக்ஸ் கமிசனர் கைது.//

23 லட்சங்கள் என திருத்தி வாசிக்கவும்.

Anonymous said...

//I am sure there is no need to fight amongst ourselves about the caste. What needs to be done is expose everyone including the so called media.
Shankar
//

Shankar!

Who is to bell the cat? Who is to expose them? Media?

Media is itself corrupt. All media, both electronic and print, are 'mouthpieces' of someone or some group - selective amnesia, when their own people involved. Media houses are sister companies of big corporate conglomerates.

Recently, the corruption of media in cahoots with certain leaders, during Maharastra election campaign, came to light and tarnished the image of media severely.

In corridors of powers, how the correspondents share drinks with politicians, you may not know, but people who know, know!

So, please give up the hope of media exposing.

Only TV channel, Headlines today is telecasting le affaire raasaa. None else! Why? I surmise, behind that expose, there is a strong anti-raasaa lobby.

Ya, I hit the right word. 'Lobby'

Lobbyists are everywhere in New Delhi and state capitals. Not only for political parties, but for corporate houses. Please read today Hindustan times to know a few of them.

The only hope - but that too, slender only - is judiciary. Perhaps by filing cases against the corrupt, with foolproof evidences, may help.

Here, too, alas, cases against Ministers cant be filed without permission of PM; cases against governors, without permission of governors, cases against IAS bureaucrats without permission of the Department of Personnel and Training that come under PM - so on and so forth.

By rewriting the Constitution and by customising the democractic system of our governance, with impenetrable checks and balances, may help. That is in the hands of next generation.

But, the gen-next appears to be more corrupt than us! Their standards of moral values, both public and private, are woefully short, shorter than ours.

Anonymous said...

//நீங்க என்னதான்யா சொல்ல வர்றே!! ஒர்ரே ரவுசா எழுதற!!! ராசாவ மந்திரி பதவியிலிருந்து தூக்கி விசாரிக்கணுமா, கூடாதா? அதை விட்டுட்டு... வெள்ளிக்கிழமை விளக்கண்ன குடிச்சா மேரி எழுதிகிட்டு.... இங்க //

நீ என்ன கண்ணைமூடிக்கிட்டு படிக்கிறீயா? சும்மா கன்னாபின்னான்னு பேச்றே.

ராசாவை முட்டிக்குமுட்டி விசாரிக்கனுமின்னே. பண்ண முடியாதுன்னே. படிச்சியா இல்லியா?

எந்த்வொரு மந்திரியை விலங்கிட்டு தெருவில் இழுத்துச்செல்லமுடியாது தெரிஞ்சுக்கோ.

மத்த நாட்டிலேதான் ந்டக்கும் இங்க முடியாது.

அப்படி இழுத்துச்சென்றால், அந்த அரசு கவிழ்ந்து அடுத்துவர்றவன் எவனை இழுத்துச்சென்றாயே அதே மாதிரி நீ இழுத்துச்செல்லப்படுவாய்.

என்னென்ன கேசு போட்டாயோ அவை காலாவதியாகும். உன்மேல் கேசுகள் அடுக்க்ப்படும்.

ஜெயலலிதா-கருனானிதி ரிப்பீட்டு, இந்திரா கைது - எல்லாம் தெரியுமில்ல.

சும்மா வுட்டான்ஸு விடாதே. இந்தியாவில் எப்படி டெமாக்ரசி ஒர்க்பண்ண்றதுன்னு கண்ணைத் திறந்து பாரு.

ராசாவை விசாரிக்க்லாம். விசாரிப்பார்கள். கடைசியில் ஒன்னுமில்லையென்பார்கள்.

அப்படியே இருக்குமென்றாலும், இவரை வேற இலாக்கா, அல்லது கொஞச காலம் வனவாசம். அம்புட்டுதான்.

விக்க்ரமாத்தித்தன் கதை சும்மா நேரப்போக்குக்கு படிச்சுக்கோ.

Unknown said...

//இந்துகாலனி இந்தியன்தாத்தாவுக்கும் //

இரா .சொல்மண்டி. சூப்பர் பேரு புடிச்சீங்க டோண்டுவுக்கு. இத எப்படியாவது famous பண்ண போறேன்

Suresh Ram said...

//புடிச்சு உள்ளே வெச்சு நாலு தட்டு தட்டி விசாரிச்சு கோர்ட்டில நிறுத்தினாதானே ஐயா தண்டனை கிடைக்கும்//
சொல்மண்டி இரா
May 08, 2010 3:17 PM

நீதி மன்றங்களின் நிலை பற்றி அறிய ஒரு நாள் அருகில் உள்ள குற்றவியல் நீதி மன்றத்துக்கு சென்று பாருங்கள்.
நீதிமன்ற இழுத்தடிப்பு குற்றம் செய்தவர்களை காப்பாற்றுகிறது என்பது தான் உண்மை. பொய் குற்றம் சாற்றப்பட்ட அப்பாவிகளை "விசாரணை கைதி" என்று வகை படுத்தி வக்கீல் பணம் பறிக்க ஏது வகை செய்ய தான் நீதி மன்றங்கள் உள்ளன ..
இன்று நடக்கும் பெரும்பாலான கொலைகள், காவல் நிலைய கட்ட பஞ்சாயத்துகள், அடியாட்கள் செயல் பாடு, பொய் கற்பழிப்பு வழக்குகள், வரதக்ஷணை வழக்குகள் ஆகியவை நீதி மன்ற செயலிழப்பின் வெளிப்பாடு தான் .
ராசாவிற்கும் அதன் பலன் கிடைக்கிறது

Anonymous said...

அருள்,

/// 1950 முதல் 1967 வரை உச்சநீதிமன்றத்தில் இருந்த நீதிபதிகளில் 36 பேரில் 14 பேர் பார்ப்பனர்கள்,

1950 முதல் 2006 வரை இருந்த மொத்த தலைமை நீதிபதிகளில் 47 % பார்ப்பனர்கள், இதர நீதிபதிகளில் 51 % பார்ப்பனர்கள். ////

புள்ளிவிவரம் கேட்டா என் தாத்தன் காலத்து கணக்கு சொல்றே... நீங்க என்ன "சமீபத்தில்" கேசா??

கடந்த அறுபது வருசமா நடக்கிற கதையை சொல்லுமய்யா... எத்தனை "புது" நீதிபதி பார்ப்பான்யா.... தெரியுமா?

- சொல்மண்டி இரா

Anonymous said...

சுரேஷ் ராம்,

//புடிச்சு உள்ளே வெச்சு நாலு தட்டு தட்டி விசாரிச்சு கோர்ட்டில நிறுத்தினாதானே ஐயா தண்டனை கிடைக்கும்//
சொல்மண்டி இரா
May 08, 2010 3:17 PM

நீதி மன்றங்களின் நிலை பற்றி அறிய ஒரு நாள் அருகில் உள்ள குற்றவியல் நீதி மன்றத்துக்கு சென்று பாருங்கள்.
நீதிமன்ற இழுத்தடிப்பு குற்றம் செய்தவர்களை காப்பாற்றுகிறது என்பது தான் உண்மை. பொய் குற்றம் சாற்றப்பட்ட அப்பாவிகளை "விசாரணை கைதி" என்று வகை படுத்தி வக்கீல் பணம் பறிக்க ஏது வகை செய்ய தான் நீதி மன்றங்கள் உள்ளன ..
இன்று நடக்கும் பெரும்பாலான கொலைகள், காவல் நிலைய கட்ட பஞ்சாயத்துகள், அடியாட்கள் செயல் பாடு, பொய் கற்பழிப்பு வழக்குகள், வரதக்ஷணை வழக்குகள் ஆகியவை நீதி மன்ற செயலிழப்பின் வெளிப்பாடு தான் .
ராசாவிற்கும் அதன் பலன் கிடைக்கிறது

May 09, 2010 5:28 PM ////

ராசாவைக் காப்பாத்துவது அந்தாள் தலைவன் திருவாளர் மஞ்சள் துண்டு. அதற்கு துணை போவது மிஸ்டர் க்ளீன் என்று தன்னை சொல்லிக்கொள்ளும் திருவாளர் டர்பன் சிங். இதில் நீதிமன்றமோ, காவல்நிலையங்களோ வரவில்லை.

பிரச்சனையை தயை செய்து திசை திருப்பாதீர்கள்.

காவல்துறை தன் கடைமையை செய்ய முடியவில்லை. இங்கு சிபிஐ ஏகப்பட்ட ஆதாரங்கள், டெலிபோன் பேச்சுகள் உடபட வைத்திருக்கிறது. ஆனால், குறுக்கே நிற்பது கூட்டுக் களவானி தலைவர்கள்தாம். நீதிமன்றம் இல்லை.


- சொல்மண்டி இரா

Suresh Ram said...

//சிபிஐ ஏகப்பட்ட ஆதாரங்கள், டெலிபோன் பேச்சுகள் உடபட வைத்திருக்கிறது//
இந்த ஆதாரங்கள் பல நாட்களாக சிபிஐ வசம் உள்ளது. டர்பன் சிங்க் அறிவார். மஞ்சள் துண்டும் அறிவார் .
ராசா, டர்பன் சிங்க், மஞ்சள் துண்டு மற்றும் சிபிஐ ஆகியோர் தேவையானால் மட்டுமே நீதி மன்றத்தை உபயோகிப்பார்கள். அன்னை கோபம் தான் இவர்களுக்கு அடிப்படை . அன்னைக்கு எந்த பிரச்னையும் வரக்கூடாது

அருள் said...

Anonymous சொல்மண்டி இரா said...
////அருள்,

/// 1950 முதல் 1967 வரை உச்சநீதிமன்றத்தில் இருந்த நீதிபதிகளில் 36 பேரில் 14 பேர் பார்ப்பனர்கள்,

1950 முதல் 2006 வரை இருந்த மொத்த தலைமை நீதிபதிகளில் 47 % பார்ப்பனர்கள், இதர நீதிபதிகளில் 51 % பார்ப்பனர்கள். ////

புள்ளிவிவரம் கேட்டா என் தாத்தன் காலத்து கணக்கு சொல்றே... நீங்க என்ன "சமீபத்தில்" கேசா??

கடந்த அறுபது வருசமா நடக்கிற கதையை சொல்லுமய்யா... எத்தனை "புது" நீதிபதி பார்ப்பான்யா.... தெரியுமா?////

அய்யா சொல்மண்டி இரா, கொஞ்சம் கவனிங்க

1950 முதல் 2006 வரை உச்சநீதிமன்றத்தில் இருந்த மொத்த தலைமை நீதிபதிகளில் 47 % பார்ப்பனர்கள், இதர நீதிபதிகளில் 51 % பார்ப்பனர்கள்.

2006 என்பது தாத்தன் காலத்து கணக்கா?

2007 ஆம் ஆண்டின் நாடாளுமன்றக் குழு அறிக்கை 'இந்தியாவின் அனைத்து உயர்நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றத்தின் 610 நீதிபதிகளில் வெரும் 20 பேர்தான் தலித்; ஓ.பி.சி அதைவிட குறைவு என்கிறது'. அப்படியானால், மீதி 550க்கும் கூடுதாலான நீதிபதிகள் யார்? வெளிநாட்டுகாரர்களா?

http://www.prsindia.org/uploads/media/Judges%20(Inquiry)%20/scr1187945081_Judges_Inquiry_Bill.pdf

//எத்தனை "புது" நீதிபதி பார்ப்பான்யா.... தெரியுமா?// என்று கேட்கும் 'அறிவுஜீவி' கேசு சொல்மண்டி இரா - நீங்கள்தான் சொல்லுங்களேன் எத்தனை "புது" நீதிபதி பார்ப்பான் இல்லைன்னு?

Anonymous said...

//
47 % பார்ப்பனர்கள், இதர நீதிபதிகளில் 51 % பார்ப்பனர்கள்.
//

100 ல 47 போச்சுன்னா, 53. ஆக 53 % பேர் பார்ப்பானர் அல்லாதோர். அவர்கள் எல்லாம் யார் யார் ?

100 ல 51 போச்சுனா, 49. ஆக 49 % பேர் பார்ப்பானர் அல்லாதோர். அவர்கள் எல்லாம் யார் யார் ?

dondu(#11168674346665545885) said...

@அருள்
1. ஜெயலலிதாவுக்கு எதிராக ப்ளசண்ட் ஹோட்டல் வழக்கில் தீர்ப்பளித்தவர் அமரர் எம்.சீனுவாசன், என் சித்தப்பாவின் மைத்துனர்.

2. நமது நீதிபதிகள் பாரபட்சமற்ற தன்மைக்கு பிரசித்தி பெற்றவர்கள்.

3. நமது நீதியமைப்பும் ஒரு நீதிபதி தவறு செய்தால் அடுத்த உயர் நிலை கோர்ட் நீதிபதியால் சரி செய்யப்படும் அளவுக்கு செட்டிங் செய்யப்பட்டவை.

4. குருட்டாம்போக்கில் அவர்கள் மீது சேறடிக்க வேண்டாம்.

டோண்டு ராகவன்

அருள் said...

டோண்டு ராகவன் said...

///நமது நீதிபதிகள் பாரபட்சமற்ற தன்மைக்கு பிரசித்தி பெற்றவர்கள்.//
குருட்டாம்போக்கில் அவர்கள் மீது சேறடிக்க வேண்டாம்.///

நீத்துறை எந்த அளவு யோக்கியமானது என்பதைப்பற்றி பேசவரவில்லை. அரசாங்கம், பத்திரிகை, நீத்துறையில் எத்தனை பேர் பார்ப்பனர்கள் என்ற விவரத்தைதான் கூறினேன்.

இதில் சேற்றை அடிக்க என்ன இருக்கிறது?

இராஜஸ்தான் மாநிலத்தில் பன்வாரி தேவி எனும் தலித் பெண்ணை பார்ப்பனர்கள் சிலர் கூட்டாக கற்பழித்த வழக்கில், "பார்ப்பனர்கள் தலித் பெண் ஒருவரை தொட்டு கற்பழித்தனர்' என்பதை நம்பமுடியாது" எனக்கூறி குற்றவாளிகளை விடுவித்த சமபவங்களை எல்லாம் எங்களாலும் கூறமுடியும். http://www.tehelka.com/story_main34.asp?filename=hub131007A_MIGHTY.asp

நீதிமன்றங்கள் என்பவை பார்ப்பனர்களின் கடைசி புகலிடம் என்பதற்கு இடஒதுக்கீட்டு வழக்குகளே சாட்சி.

க.கா.அ.சங்கம் said...

குஜ்ஜர்கள் பார்ப்பானர்கள் என்று சொல்வது கேக்குறவன் கேணையாக இருந்தால் கேப்பையில நெய் வடியுதுங்குறது மாதிரி தான்.

ஓ.பி.சி க்களாக இருப்போர் தான் தலித் மக்களை நசுக்குகின்றனர். என்பதற்கு அருள் அவர்கள் கூறிய குஜ்ஜர் கூட்டு வண்புணர்ச்சி எடுத்துக்காட்டே ஆகச்சிறந்த உதாரணமாக கருதலாம்.

இதே குஜ்ஜர்கள் தான் தங்களை எஸ்.சி யாக்கச் சொல்லி போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. நேராக எஃப் சியிரிலுருந்து எஸ்.சி எல்லாம் யாரும் ஆக முடியாது.

ஓ.பி.சி யாக இருக்கும் குஜ்ஜர்களைத் தான் எஸ்.சி யாக மாற்ற வேண்டும் என்று போராட்டம் நடத்தினார்கள்.

உங்கள் பார்ப்பான வெறுப்பை திராவிட மாயையில் உழலும் முட்டாள்களிடம் போய்ச் சொல்லுங்கள்.

வஜ்ரா said...

//
நீத்துறை எந்த அளவு யோக்கியமானது என்பதைப்பற்றி பேசவரவில்லை. அரசாங்கம், பத்திரிகை, நீத்துறையில் எத்தனை பேர் பார்ப்பனர்கள் என்ற விவரத்தைதான் கூறினேன்.
//

தோசையைத் தின்பதில் எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் அதில் ஏன் பூனூல் போட்ட ஓட்டைகள் அதிகம் இருக்கின்றன என்பது தான் அருளின் பிரச்சனை.

யாராவது வந்து, அவரது பிரச்சனையைத் தீர்த்துவைங்கப்பு.

Unknown said...

//யாராவது வந்து, அவரது பிரச்சனையைத் தீர்த்துவைங்கப்பு//
எல்லா பிராமின்ஸ்யையும் பாகிஸ்தானுக்கு நாடு கடத்தினா சரி.கொஞ்ச பேரை மட்டும் ஆப்கானிஸ்தானுக்கு

dondu(#11168674346665545885) said...

@ஜெயசங்கர் ஜெகன்னாதன்
இதென்ன போங்கு? பிரச்சினை அருளுக்குத்தானே, அவரைத்தானே அனுப்பணும் ஆஃப்கானிஸ்தானுக்கு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Unknown said...

// பிரச்சினை அருளுக்குத்தானே, அவரைத்தானே அனுப்பணும் ஆஃப்கானிஸ்தானுக்கு//

அருள் பிரச்சனைக்கு இது தான் தீர்வு. ஆமா ஆப்கானிஸ்தான் பேரக்கேட்ட ஏன் பயப்படுறீங்க. அப்படியெல்லாம் ஆகாது. பயப்படாதீங்க

dondu(#11168674346665545885) said...

பயமா, டோண்டு ராகவனுக்கா? அதுக்கு வேற ஆளைப் பாருங்க.

கண்ட கண்ட ஜாட்டானுங்க பிரச்சினைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னுதான் சொல்லறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Unknown said...

//கண்ட கண்ட ஜாட்டானுங்க //

யார் அந்த ஜாட்டானுங்க. முதல்ல ஜாட்டான்ன என்ன அர்த்தம்

dondu(#11168674346665545885) said...

ஜெயசங்கர் ஒன்று செய்யலாம். என்னோட பதிவுகளில் பல இடங்களில் ஜாட்டான்களை குறிப்பிட்டுள்ளேன். அங்கு போய் பொறுமையாக தேடிக் கொள்ளவும். அதுக்கெல்லாம் இங்கே வச்சு வகுப்பு எல்லாம் நடத்துவதற்கில்லை.

எப்படியும் நான் யாரையெல்லாம் சொறேன்னு சம்பந்தப்பட்ட ஜாட்டானுங்களுக்கு தெரியும்.

டோண்டு ராகவன்

Unknown said...

//எப்படியும் நான் யாரையெல்லாம் சொறேன்னு சம்பந்தப்பட்ட ஜாட்டானுங்களுக்கு தெரியும்//

என்னைத்திட்டாத வரைக்கும் ஓக்கெ.

dondu(#11168674346665545885) said...

@ஜெயசங்கர்
Take it easy.

1. I didn't mean you.

2. Brahmin hatred is highly prevalent in the Tamil blogosphere as elsewhere in Tamil Nadu.

3. It has been an ongoing battle with no quarter given nor asked for, at least as far as I am concerned.

Regards,
Dondu N. Raghavan

Unknown said...

// Brahmin hatred is highly prevalent in the Tamil blogosphere as elsewhere in Tamil Nadu.
//

இது தப்புன்னு நினைக்கிறேன். எல்லோரும் அப்படி இல்லை. காமாலை கண்டவருக்கு கண்டதெல்லாம் மஞ்சள்

dondu(#11168674346665545885) said...

@Jaishankar
You are entitled to your opinion just as I too am.

Regards,
Dondu N. Raghavan

வஜ்ரா said...

//
//யாராவது வந்து, அவரது பிரச்சனையைத் தீர்த்துவைங்கப்பு//
எல்லா பிராமின்ஸ்யையும் பாகிஸ்தானுக்கு நாடு கடத்தினா சரி.கொஞ்ச பேரை மட்டும் ஆப்கானிஸ்தானுக்கு
//

அருளின் பிரச்சனைக்கு பிராமின்ஸை நாடுகடத்தவேண்டும் என்கிறீர்கள். அப்படிச் செய்தால், எனக்கு உங்களுடன் பிரச்சனை என்று வரும் போது உங்களை நீங்களே நாடு கடத்திக்கொண்டுவிடுவீர்களா ?

அருளுக்கு ஒரு ஞாயம் எனக்கு ஒரு ஞாயம் இருக்ககூடாது பாருங்க...அதுக்குத் தான் கேட்டேன்..

உங்களுக்கு கராச்சிக்கோ, காபுலுக்கோ ஒன்வே டிக்கட் போடனும்னா சொல்லுங்க...நான் உதவி பண்றேன்.

வஜ்ரா said...

//
காமாலை கண்டவருக்கு கண்டதெல்லாம் மஞ்சள்
//

இது யாருக்கு ?
இதைக் கேட்டுக்கொள்ளவேண்டியவர்களின் பட்டியலில் அருள் என்பவரும் வருவாரா ?

தமிழ் வலைப்பதிவு உலகத்தைப்பொருத்தவரை டோண்டு சொல்வது சரி. தமிழ்நாட்டைப் பொருத்தவரை நீங்கள் சொல்வது சரி. (//எல்லோரும் அப்படி இல்லை.//)

ஆகவே, உங்கள் இந்த பழமொழியை கொஞ்சம் மாடிஃபை செய்து தமிழ் வலைப்பதிவு உலகத்திற்கு மிகவும் பொருத்தமாகச் சொல்லவேண்டும் என்றால்...

காமாலை கண்டவருக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்பதை இப்படி எழுதலாம்:

பெரியாரைப் படிப்பவருக்குப் பார்ப்பதெல்லாம் பார்ப்பான்.

Unknown said...

//பெரியாரைப் படிப்பவருக்குப் பார்ப்பதெல்லாம் பார்ப்பான்//

பொங்கிட்டீங்களே வஜ்ரா. பொங்கி கலக்கிட்டீங்க. நான் ஒரு தமாஷுக்கு ப்லொக் பக்கம் வருவேன்.இந்த அளவுக்கு கான்செப்ட் எனக்கு தெரியாது. எனக்கு பெரியார் மேல ஒரு மரியாதை.

ஜாதி மதங்களைப்பாரோம். உயர் ஜென்மம் இத்தேசத்தில் எய்தினராயின் வேதியராயினும் ஒன்றே அன்றி வேறு குலத்தினராயினும் ஒன்றே.

இதைதவிர பாரதியார் எழுதினது

(பேராசைகாரண்டா பார்ப்பான் எனினும் பெரியதுரை என்றல் உடல் வேர்ப்பான்)
இதுக்கு எனக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை.

அருள் said...

Anonymous said...

////100 ல 47 போச்சுன்னா, 53. ஆக 53 % பேர் பார்ப்பானர் அல்லாதோர். அவர்கள் எல்லாம் யார் யார் ?

100 ல 51 போச்சுனா, 49. ஆக 49 % பேர் பார்ப்பானர் அல்லாதோர். அவர்கள் எல்லாம் யார் யார்? ////

பார்ப்பனர் அல்லாதோரில் பெரும்பான்மையினர் FC. அதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். மக்கள்தொகையில் வெறும் 5 % மட்டுமே இருக்கும் பார்ப்பனர்கள்,

தலைமை நீதிபதிகளில் 47 %,
இதர நீதிபதிகளில் 51 %
அரசு உயர்பதவிகளில் 37 %
பத்திரிகைகளின் முக்கிய பதவிகளில் 49 %

என்று அதிகார இடங்களில் 'அளவுக்கு மீறி' ஆதிக்கம் செலுத்துகின்றனர் என்பதே உண்மை. இந்தியா கேடுகெட்டு, பின் தங்கியிருப்பதற்கு இதுவே காரணம்.

க.கா.அ.சங்கம் said...

////குஜ்ஜர்கள் பார்ப்பானர்கள் என்று சொல்வது கேக்குறவன் கேணையாக இருந்தால் கேப்பையில நெய் வடியுதுங்குறது மாதிரி தான்.////

குஜ்ஜர்கள் FC யா, OBC யா என்பது இருக்கட்டும்.

''தலித் பெண் ஒருவரை உயர்சாதியினர் தொட்டு கற்பழித்தனர்' என்பதை நம்பமுடியாது" எனக்கூறி குற்றவாளிகளை விடுவித்த நீதிபதியின் நேர்மை குறித்து என்ன சொல்கிறீர்கள்?

jaisankar jaganathan said...

///
//யாராவது வந்து, அவரது பிரச்சனையைத் தீர்த்துவைங்கப்பு//
எல்லா பிராமின்ஸ்யையும் பாகிஸ்தானுக்கு நாடு கடத்தினா சரி.கொஞ்ச பேரை மட்டும் ஆப்கானிஸ்தானுக்///

ரொம்ப சரியாக சொன்னீர்கள். நன்றி.
வந்த வழியாகவே போனால் சரிதான்.

Unknown said...

//உங்களுக்கு கராச்சிக்கோ, காபுலுக்கோ ஒன்வே டிக்கட் போடனும்னா சொல்லுங்க...நான் உதவி பண்றேன்//

பணம் மட்டும் அனுப்புறதா இருந்தா என் icici நம்பர் தரேன்.

Suresh Ram said...

//குஜ்ஜர்கள் FC யா, OBC யா என்பது இருக்கட்டும்.
''தலித் பெண் ஒருவரை உயர்சாதியினர் தொட்டு கற்பழித்தனர்' என்பதை நம்பமுடியாது" எனக்கூறி குற்றவாளிகளை விடுவித்த நீதிபதியின் நேர்மை குறித்து என்ன சொல்கிறீர்கள்?//

இதுவும் இருக்கட்டும் ..

ராசா ஊழல் செய்தல் பரிசு கொடுக்க வேண்டுமா ? கூடாதா ? முதலில் இதற்கு பதில் சொல்லுங்கள்

வஜ்ரா said...

//

பணம் மட்டும் அனுப்புறதா இருந்தா என் icici நம்பர் தரேன்.
//

நீங்க அட்ரஸ், பாஸ்போர்ட் காப்பி எல்லாம் அனுப்புங்க, டிக்கட்டே போட்டு அனுப்பிடறேன்...என்னத்துக்கு பணத்த அனுப்பனும் ?

அருள் said...

டோண்டு ராகவன் said...

///பிரச்சினை அருளுக்குத்தானே, அவரைத்தானே அனுப்பணும் ஆஃப்கானிஸ்தானுக்கு///

உண்மைதான்.

என்ன செய்வது? வந்தேறிக் கூட்டதின் அதிகாரமும், அராஜகமும் அதிகமாகிவிட்டால் - மண்ணின் மைந்தர்கள் சொந்தநாட்டை விட்டு ஓடித்தானே ஆகனும்.

அதைத்தான் பார்க்கிறோமே இலங்கையிலும், இஸ்ரேலிலும்.

க.கா.அ.சங்கம் said...

//
''தலித் பெண் ஒருவரை உயர்சாதியினர் தொட்டு கற்பழித்தனர்' என்பதை நம்பமுடியாது" எனக்கூறி குற்றவாளிகளை விடுவித்த நீதிபதியின் நேர்மை குறித்து என்ன சொல்கிறீர்கள்?
//

அந்த நீதிபதியின் ஜாதியை நீங்கள் இன்னும் கண்டுபிடிக்கவில்லையா ?

உங்களுக்கு தலித் விடுதலை பற்றி கவலை இருப்பதைவிட பார்ப்பானர்கள் நீதிபதியாக இருப்பதே பிரச்சனையாக உள்ளது.

Suresh Ram said...

//பார்ப்பனர் அல்லாதோரில் பெரும்பான்மையினர் FC. அதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். மக்கள்தொகையில் வெறும் 5 % மட்டுமே இருக்கும் பார்ப்பனர்கள்,

தலைமை நீதிபதிகளில் 47 %,
இதர நீதிபதிகளில் 51 %
அரசு உயர்பதவிகளில் 37 %
பத்திரிகைகளின் முக்கிய பதவிகளில் 49 %

என்று அதிகார இடங்களில் 'அளவுக்கு மீறி' ஆதிக்கம் செலுத்துகின்றனர் என்பதே உண்மை.//

Did you also know that most rickshaw pullers in Banaras are Brahmins? Did you know that you also stumble upon a number of Brahmins working as coolies at Delhi’s railway stations? 50 per cent of Patel Nagar’s (New Delhi) rickshaw pullers are Brahmins.75 per cent of domestic help and cooks in Andhra Pradesh are Brahmins. There is no reason to believe that the condition of Brahmins in other parts of the country is different. The percentage of Brahmins that live below poverty line is almost 60.
http://udaypai.in/?p=12

Sivakumar said...

//ரொம்ப சரியாக சொன்னீர்கள். நன்றி.
வந்த வழியாகவே போனால் சரிதான்.//

அப்படியே மிச்சம் இருக்கிறவங்கள ஆப்பிரிக்காவுக்கு கடத்திடனும். எல்லாரும் அங்கிருந்து தானே வந்தாய்ங்க.....

Anonymous said...

//
அதைத்தான் பார்க்கிறோமே இலங்கையிலும், இஸ்ரேலிலும்.
//

இலங்கையில் சிங்களவர்கள் வந்தேறிகள், தமிழர்கள் பூர்வகுடிகளா ?

Suresh Ram said...

The provincial government banned hand-pulled rickshaws in 2005, citing it as inhumane

http://commondatastorage.googleapis.com/static.panoramio.com/photos/original/7157944.jpg

Sinewy, barefoot men pulling the vehicles are a common sight in the city, which still has around 18,000 rickshaw pullers.
http://english.ntdtv.com/ntdtv_en/ns_asia/2010-04-01/992132125867.html

கம்யூனிஸ்ட் கட்சியினர் 40 வருடம் ஆட்சி செய்தும் மனிதனை மனிதன் சுமக்கும் கை வண்டியை மறைமுகமாக ஆதரித்து வருகின்றனர். எல்லா பார்பன எதிர்போரும் கம்யூனிஸ்ட் தயவில் தான் அரசியல் செய்கிறார்கள்!

Unknown said...

//இலங்கையில் சிங்களவர்கள் வந்தேறிகள், தமிழர்கள் பூர்வகுடிகளா //

வரலாறு தெரியாது முட்டாள் அனானி.
தமிழன் தான் இலங்கையின் அதிகுடிமக்கள்

அருள் said...

Anonymous said...

//இலங்கையில் சிங்களவர்கள் வந்தேறிகள், தமிழர்கள் பூர்வகுடிகளா ?//

இதில் என்ன சந்தேகம்.

தமிழர்கள்தான் இலங்கையின் பூர்வகுடியினர்.

Unknown said...

100 வது கமெண்ட். நான் செஞ்சுரி அடிச்சுட்டேன்

Anonymous said...

//
வரலாறு தெரியாது முட்டாள் அனானி.
தமிழன் தான் இலங்கையின் அதிகுடிமக்கள்
//

வரலாறு தெரிந்த முட்டாளே, பின்ன ஏன் சிங்களவன் அங்கே மெஜாரிட்டியா இருக்கான் ?

தமிழ்நாட்டுல பார்ப்பான் ஏன் வந்தேறி, ஏன்னாக்கா அவன் அங்கே 2% தான் இருக்கான். தமிழர்கள் 90% மேல் இருக்கிறார்கள்.

அப்ப, ஸ்ரீலங்காவில் தமிழன் தான் வந்தேறி, அவன் அங்கே 12% இருக்கான், மீதி 80% மேல் சிங்களவன் இல்ல இருக்கான்...

-வரலாறு தெரியாத முட்டாள் அனானி.

Suresh Ram said...

மகாவம்சத்தின் முதலாவது அத்தியாயத்தி;ன் குறிப்புகளின்படி இலங்கைத்தீவின் ஆதிக்குடிகள் இயக்கர்கள் என்பது புலனாகின்றது. இதனை மனதில் உள்வாங்கிக் கொண்டு அடுத்த சம்பவத்திற்கு வருவோம்.

மகாவம்சத்தின்படி, இலங்கைத்தீவு எங்கணும் வாழ்கின்ற இயக்கர்கள்...
http://www.tamilnews24.com/twr/radio/sabesan2457.htm


நாகர்கள் எனும் தமிழர்கள் அங்கு புர்வகுடிகளாக வாழ்ந்துவந்தனர். தென் பகுதி இலங்கையில் இயக்கர்கள் எனும் பழங்குடிகள் வாழ்ந்தனர்.,

2500 ஆண்டுகளுக்கு முன் பாடலிபுத்திரத்தில் (இன்றைய பாட்னா)விஜயன் என்ற இளவரசன் அவன் தந்தையோடு கோவித்துக்கொண்டு இலங்கை தெற்கு பகுதியில் போய் தன் படைவீரர்களோடு கரை இறங்கினான்.இயக்கர்களோடு கலந்த உறவில் ஆரியமும்,இயக்கரும் கலந்த ஒரு கலபினமாக "சிங்களம்" இனம் உருவானது.சிங்களம் என்ற பெயர் கூட விஜயனின் கொடி சிங்க கொடி அதில் இருந்து மருவி சிங்களமாக உருபெருகிறது.(இன்றும் அவர்கள் தேசிய கொடி சிங்க கொடியே.)இந்த வரலாற்றை கூறுவது கூட "சிங்கள பௌத்த அய்தீக நூலான" "மகா வம்சமே" ஆகும்

http://cheguevara-thamizh.blogspot.com/2009/02/26-1-09.html

அருள் said...

Anonymous said...
// ///வரலாறு தெரிந்த முட்டாளே, பின்ன ஏன் சிங்களவன் அங்கே மெஜாரிட்டியா இருக்கான் ?/// //

ஸ்ஸ்ஸ்..... அப்பா! கண்ணை கட்டுதே.

ஒரு இனம் மைனாரிட்டியா இருந்தா அது வந்தேறி இனமா? அமெரிக்காவில் செவ்விந்தியர்கள் வந்தேறியா? நியூசிலாந்துல மாவுரிகள் வந்தேறியா? இந்தியாவில் பழங்குடிகள் வந்தேறியா?

அய்யையோ! இலங்கைல தமிழன் தான் மண்ணின் மைந்தன்கிற சாதாரண உண்மையை கூட 'அனானிக்கு' புரியவைக்க முடியலையே.

Unknown said...

//வரலாறு தெரிந்த முட்டாளே, பின்ன ஏன் சிங்களவன் அங்கே மெஜாரிட்டியா இருக்கான் ?
//

சிந்துசமவெளி கூடத்தான் திராவிட நாகரிகம். ஏன் ஆரியன் அங்க 99% இருக்கான் அனானி.

Anonymous said...

//
ஒரு இனம் மைனாரிட்டியா இருந்தா அது வந்தேறி இனமா?
//

அப்ப தமிழ்நாட்டில் பார்ப்பானர் மட்டும் ஏன் வந்தேறிகள் என்கிறீர்கள் ?
--

ஸ்ரீலங்காவில் தமிழர்கள் கல்வி நிறுவனங்கள், நீதிபதிகள் என்று எங்கும் ஆதிக்கம் செய்தமையால் சிங்களவர்கள் இடஒதுக்கீடு கொண்டுவந்து தமிழர்களைத் துரத்தினார்கள்.

இப்போது, அதோ போல் இடஒதுக்கீடு கொண்டுவந்து பார்ப்பானர்களைத் துரத்தவேண்டும். பாகிஸ்தானுக்கும், ஆஃப்கானிந்தானுக்கும் அனுப்பவேண்டும் என்று குதிக்கும் கூ.ம க்கள் சிங்களவன் செய்வதைத் தானே சொல்கிறார்கள் ?

நீங்கள் சொல்வது ஞாயம் என்றால் சிங்களவன் செய்வது முற்றிலும் ஞாயமாகிவிடும்.

அருள் said...

Anonymous said...

// ///ஸ்ரீலங்காவில் தமிழர்கள் கல்வி நிறுவனங்கள், நீதிபதிகள் என்று எங்கும் ஆதிக்கம் செய்தமையால் சிங்களவர்கள் இடஒதுக்கீடு கொண்டுவந்து தமிழர்களைத் துரத்தினார்கள்.

இப்போது, அதோ போல் இடஒதுக்கீடு கொண்டுவந்து பார்ப்பானர்களைத் துரத்தவேண்டும். பாகிஸ்தானுக்கும், ஆஃப்கானிந்தானுக்கும் அனுப்பவேண்டும் என்று குதிக்கும் கூ.ம க்கள் சிங்களவன் செய்வதைத் தானே சொல்கிறார்கள்/// //

அய்யா அனானி, ஈழத்தில் தமிழர்களையும், தமிழ்நாட்டில் பார்ப்பானையும் சமமாக பேசுவது பித்தலாட்டம்.

உண்மையில், அங்கே இருப்பது பெரும்பானமை சிங்கள ஆதிக்கம், இங்கே இருப்பது சிறுபான்மை பார்ப்பன ஆதிக்கம்.

இங்கே நாங்கள் கேட்பது மக்கள் தொகைக்கேற்ப "விகிதாச்சார பங்கீடு".

பார்ப்பான் நாட்டின் பிரதமராகவோ, ஜனாதிபதியாகவோ வரக்கூடாது என்று கூறவில்லை. மாறாக அளவுக்கதிகமாக நீங்கள்தான் அந்தபதவியை ஆக்கிரமித்து இருக்கிறீர்கள்.

நாங்கள் சமஸ்கிருததை ஒதுக்க சொல்லவில்லை. தமிழுக்கும் உரிய இடம்தான் கேட்டோம். ஆனால், இன்றைக்கும் சமஸ்கிருதம் அளவுக்கு அதிகமாக வளர்க்கப்படுகிறது.

நாங்கள், இடஒதுக்கீடு கொண்டுவந்து பார்ப்பானர்களைத் துரத்தவேண்டும் என்று கூறவில்லை. பார்ப்பானால் இந்த நாடு கெட்டு ஒழிந்தது போதும். 5 % உள்ள பார்ப்பானுக்கு 5 % பதவிகள் மட்டுமே இருக்க வேண்டும் என்கிறோம்.

Anonymous said...

நான் பார்த்தவரை ஜாதி சம்பந்தமான சர்ச்சைகள் அதிகம் வரும் வலைப்பதிவுகள் வினவு,வால்பையன் மற்றும் டோண்டு...
இதில் தெரிந்தோ தெரியாமலோ டோண்டு POLARIZATION னுக்கு துணை போகிறார்,HE IS CLEVERLY BEING DRAWN IN TO A TRAP.
BEWARE DONDU
THANKS

Anonymous said...

//
இங்கே நாங்கள் கேட்பது மக்கள் தொகைக்கேற்ப "விகிதாச்சார பங்கீடு".
//

ஓகே.
அப்ப பார்ப்பானர்களுக்கும் அவர்கள் மக்கள் தொகைக்கேற்ப விகிதாச்சார பங்கீடு கொடுக்கவேண்டுமே ? செய்யச் சொல்வீர்களா ?

Unknown said...

//அப்ப பார்ப்பானர்களுக்கும் அவர்கள் மக்கள் தொகைக்கேற்ப விகிதாச்சார பங்கீடு கொடுக்கவேண்டுமே //

அப்படிக்குடுத்தா இருக்குறதும் போயிடும் பரவாயில்லயா

Anonymous said...

//
சிந்துசமவெளி கூடத்தான் திராவிட நாகரிகம். ஏன் ஆரியன் அங்க 99% இருக்கான் அனானி.
//

திராவிட நாகரீகம் என்றால் என்ன ?

சிந்துசமவெளியிலும் அவ்வப்போது பார்ப்பானர்களைத் திட்டிவிட்டு, தலித்கள் வாயில் மலம் திணிப்பார்களா ?

சாமி சிலைக்கு செருப்பு மாலை போடுவார்களா இல்லை சாமி சிலை மேல் மூத்திரம் பெய்வார்களா ?

அருள் said...

நிச்சயமா?

100 % இடஒதுக்கீட்டில் -
பார்ப்பனர்களுக்கு

அகில இந்திய அளவில் 5 %,
தமிழ்நாட்டில் 1 %

இடஒதுக்கீடு கட்டாயம் கொடுக்கலாம்.

அதை அப்படியே ஏழை பார்ப்பனர்களுக்கு மட்டும் கொடுப்பது பார்ப்பனர்களின் உரிமை.

Anonymous said...

100 % இடஒதுக்கீடு எல்லாவற்றிலும் அதுவும் ஜாதி அடிப்படையில், என்று வந்தால்...ஜாதி எப்படி ஒழியும் ? எல்லோரும், அவரவர் ஜாதிக்கு இட ஒதுக்கீடு இவ்வளவு வேண்டும் என்று மரம் வெட்டி ஹைவேயில் போட்டு மறியல் போராட்டம் செய்வார்கள். ஜாதி மறுபடியும் இந்திய சமுதாயத்தில் முக்கிய பங்கு வகிக்கும். அது தான் உங்களுக்கு வேண்டும் போல இருக்கு.

ஜாதி அடிப்படை சலுகைகள் ஒழிந்தால் தான், ஜாதிகள் ஒழியும் என்பது போன்ற அடிப்படை உண்மையைக்கூட உங்களால் உணற முடியவில்லையா ?

அருள் said...

Anonymous said...

// ///ஜாதி அடிப்படை சலுகைகள் ஒழிந்தால் தான், ஜாதிகள் ஒழியும் என்பது போன்ற அடிப்படை உண்மையைக்கூட உங்களால் உணற முடியவில்லையா ?/// //

விகிதாச்சார பிரதிநிதித்துவம் என்பதே 100 % இடஒதுக்கீடுதான்.

அவரவர் சாதி மக்கள்தொகைக்கு ஏற்ப எல்லாவற்றிலும் இடஒதுக்கீடு அளித்தால்தான் சாதிகளுக்கு இடையே சமத்துவம் வரும்.

இந்திய அரசு அதிகாரம் பிரிட்டிஷாரிடமிருந்து பார்ப்பனர் கைகளுக்கு 1947 இல் மாறுவதற்கு முன்புவரை தமிழ் நாட்டில் 100 % இடஒதுக்கீடுதான் இருந்தது. இதனால் ஒன்றும் குடிமூழ்கி போய்விடவில்லை.

சாதிகள் இடையே சமத்துவம் வந்தால்தான், சாதிகள் ஒழியும் என்பது போன்ற அடிப்படை உண்மையைக்கூட உங்களால் உணற முடியவில்லையா ?

Unknown said...

//சாமி சிலைக்கு செருப்பு மாலை போடுவார்களா இல்லை சாமி சிலை மேல் மூத்திரம் பெய்வார்களா //

திராவிட நாகரிகம் சைவ வழிபாட்டு நாகரிகம்

வால்பையன் said...

//சாதிகள் இடையே சமத்துவம் வந்தால்தான், சாதிகள் ஒழியும் என்பது போன்ற அடிப்படை உண்மையைக்கூட உங்களால் உணற முடியவில்லையா ?//


சமத்துவபுரத்தில் வீட்டுமுன் போர்டு!

ராமசாமி செட்டியார்!
சுந்தரமூர்த்தி நாடார்!
ஷேஷாத்த்ரி அய்யங்கார்!

யாராவது
கருப்பசாமி சக்கிலி
தம்பிதுரை பறையன்னு போடட்டும்

சமத்துவம் வரும்னு ஒத்துக்கலாம்!

என்னாங்கய்யா சின்னபுள்ள தனமாவே பேசுறிங்க!, பிற்படுத்தபட்ட மக்களுக்கு நிச்சயமா சலுகை தேவை, ஆனா குரங்கு அப்பத்தை பிச்சி கொடுத்தா மாதிரி, இங்க அதிகமா போச்சு, அன்க அதிகமா போச்சுன்னு எவனோ தின்னுட்டு போய்கிட்டு இருக்கான்!, அதை பார்க்குறதை விட்டுட்டு, சாதி சமத்துவம் கொண்டு வர்றாங்களாம்!

Unknown said...

//என்னாங்கய்யா சின்னபுள்ள தனமாவே பேசுறிங்க!, பிற்படுத்தபட்ட மக்களுக்கு நிச்சயமா சலுகை தேவை, ஆனா குரங்கு அப்பத்தை பிச்சி கொடுத்தா மாதிரி, இங்க அதிகமா போச்சு, அன்க அதிகமா போச்சுன்னு எவனோ தின்னுட்டு போய்கிட்டு இருக்கான்!, அதை பார்க்குறதை விட்டுட்டு, சாதி சமத்துவம் கொண்டு வர்றாங்களாம்!
//

சுத்தமா புரியலை. சீக்கிரம் சரியா எழுதுங்க

வால்பையன் said...

அன்பரே!

இடஒதுக்கீடு, க்ருமிலேயர் என்று பல
விசயங்க!

சாதியை நான் வெறுப்பதற்கு காரணம், அது உயர்சாதி திமிரினால் தான்!
என்னை விட டோண்டு க்ருமிலேயர் பற்றி விரிவாக விளக்குவார்கள்! அது தான் குரங்கி அப்பத்தை ஏமாற்றி தின்ன கதை, கடைசி வரை தகுதியுள்ளவனுக்கு எதுவும் கிடைக்காது!

அருள் said...

// //என்னாங்கய்யா சின்னபுள்ள தனமாவே பேசுறிங்க!// //

எல்லோருக்கும் சாதியினர் எண்ணிக்கைக்கு ஏற்ப பிரிச்சு கொடுக்கனும்'னு சொன்ன தந்தை பெரியார் சின்னபுள்ளத்தனமாவா சொன்னாரு?

// //பிற்படுத்தபட்ட மக்களுக்கு நிச்சயமா சலுகை தேவை, ஆனா குரங்கு அப்பத்தை பிச்சி கொடுத்தா மாதிரி, இங்க அதிகமா போச்சு, அன்க அதிகமா போச்சுன்னு எவனோ // //

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு பின் இந்த நிலைமை இருக்காது.

Anonymous said...

//
திராவிட நாகரிகம் சைவ வழிபாட்டு நாகரிகம்
//

சைவ வழிப்பாட்டை ஏன் அமர்நாத்திலும் காசியிலும் நடத்துகிறார்கள் ?

ஆரிய தேசமான குஜராத்தில் சோமநாதர் கோவிலை ஏன் கைபர் பொலான் வழி வந்த "ஆரிய"ப்படைகள் சூரையாடின ?

வைணவத் திருத்தலங்களான 108 திவ்யதேசங்களில் பெரும்பான்மையானவை ஏன் தென் தமிழகத்தில் உள்ளன ?

ஒரு வேளை "ஆரியர்கள்" குமரிக்கண்டத்திலிருந்து படையெடுத்து சிந்து சமவெளிக்குச் சென்றார்களோ ? இலங்கை அரசன் இராவணன் ஆரியனோ ?

Unknown said...

சைவம் தவிர மற்றவர்களும் சிவனை வழிபட்டார்கள்

வால்பையன் said...

//எல்லோருக்கும் சாதியினர் எண்ணிக்கைக்கு ஏற்ப பிரிச்சு கொடுக்கனும்'னு சொன்ன தந்தை பெரியார் சின்னபுள்ளத்தனமாவா சொன்னாரு?//


இன்னும் எத்தனை நூற்றாண்டுகளுக்கு பெரியார் சொன்னாருன்னு செஞ்சு கிட்டு இருப்பிங்க!? இப்போ முதல்ல ஒழுங்க கணக்கெடுக்குறாங்களா பாருங்க!, போலி ரேஷன் கார்டு மாதிரி போலி மக்கள் தொகை தான் வரும்! எல்லாருமே பிச்சைகார பயலுக தான், உழைச்ச சாப்பிட கொஞ்சமாவது தில்லு வேணும்!

Anonymous said...

உங்கள் விடை தவறு.

விடை:
சிவத்தலங்களும், வைணவத்தலங்களும் தென் இந்தியாவிலேயே மிகுதியாகக் காணப்படுகின்றன. வட இந்தியாவில் (ஆரிய தேசத்தில்) இல்லை.. ?

ஏன் என்பது ஓபன் சீக்ரெட்.

இந்து மதக் கூட்டமைப்பு, தழைத்து ஓங்கிய இந்தியாவில் ஆரியர்-திராவிடர் என்ற இனப்பாகுபாடு கிடையாது. வெள்ளையன் இந்தியாவை ஆண்ட காலத்தில் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட கொள்கையே ஆரியப் படையெடுப்புக் கொள்கை. அவர்கள் வந்தது போல் நாங்களும் வந்து ஆள்கிறோம் என்று ஞாயம் கற்பிக்கவும், இந்தியர்கள் என்றுமே வெளிநாட்டாரின் அடிமைகள் என்று பொய்ப்பிரச்சாரம் செய்யவுமே பயன் படுத்தப்பட்ட கொள்கை அது.

அதை இன்றும் பிடித்துத் தொங்குபவர்கள் ஒரு காலத்தில் வெள்ளைக்கார துரையின் கு. ந கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வால்பையன் said...

//வெள்ளையன் இந்தியாவை ஆண்ட காலத்தில் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட கொள்கையே ஆரியப் படையெடுப்புக் கொள்கை. அவர்கள் வந்தது போல் நாங்களும் வந்து ஆள்கிறோம் என்று ஞாயம் கற்பிக்கவும், //

ஆரியர்களுக்கு பிறகு மொகலாயர்கள் வந்து பல நூற்றாண்டுகள் ஆண்டாங்க, அதை சொல்லாம, ஆங்கிலேயன் ஆரியர்களை சொன்னானாக்கும்! இது தான் உங்க ஒப்பன் சீக்ரெட்டா!?

நல்லா சுத்துறாங்கய்யா ரீலு!

அருள் said...

வால்பையன் said...

//எல்லாருமே பிச்சைகார பயலுக தான், உழைச்ச சாப்பிட கொஞ்சமாவது தில்லு வேணும்!//

தகுதி, திறமை, வெங்காயம் என்று பேசும் பார்ப்பன சிந்தனையின் வெளிப்பாடுதான் இது. (பார்ப்பன சிந்தனையை பெற பார்ப்பானாக இருப்பது அவசியம் இல்லை).

அகில இந்திய அளவில் 1990க்கு முன்பு பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை.

அதன்பிறகு வி.பி.சிங் அவர்கள் வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு அளித்தார். 2009 ஆம் ஆண்டில்தான் அர்ஜுன்சிங் கல்வியில் இடஒதுக்கீடு அளித்தார்.

அதிலும் க்ரீமிலேயர், உயர்பதவிக்கும் மிக உயர் கல்வியிலும் இடஒதுக்கீடு இல்லை என்கிற ஏமாற்று தந்திரங்கள் கடைபிடிக்கப் படுகின்றன.

உண்மையில் 1950 இல் அரசியல் சாசனம் 340ஆவது பிரிவின்மூலம் பிற்ப்படுத்தப்பட்டோருக்கு அளித்த வாக்குறுதி இன்றுவரை முழு அளவில் நிரைவேற்றப்படைல்லை. 1980 இல் அளிக்கப்பட்ட மண்டல் பரிந்துரையும் இன்றுவரை முழு அளவில் நிரைவேற்றப்படவில்லை.

உலகமயமாக்கப்பட்ட இன்றய சூழலில் எல்லா வாய்ப்புகளும் உயர் சாதியினரால் கைப்பற்றப்படுகிறது.

"உழைச்சு சாப்பிட கொஞ்சமாவது தில்லு இருப்பதனால்"மட்டும் இதனை மாற்றிவிட முடியாது. உண்மையில் இந்தியாவில் 'உழைப்பு' என்றாலே அது பிற்ப்படுத்தப்பட்டோரையும் தலித்துகளையும் மட்டும்தான் குறிக்கும்.

இங்கே ஒருவன் முன்னுக்குவர, அவனுக்கு "என்னதெரியும்" என்பது முக்கியம் இல்லை. அவனுக்கு "யாரைத்தெரியும்" என்பதுதான் முக்கியம்.

வால்பையன் said...

@ அருள்

இடஒதுக்கீடு தருவதால் மட்டுமே ஒரு இனம் உயர்ந்துவிடாது! டாக்டர் அய்யா, தன் சாதி மக்களுக்காக உழைக்கிரேன் என்ற பெயரில் தனது மகனுக்கு சீடு வாங்குவதிலேயே தான் குறியாக இருக்கிறார்!

நான் இடஒதுக்கீடு வேண்டாம் என்று சொல்லவில்லை! ஆனால் அதற்கு நீங்கள் தகுதியான ஆளா என்று பாருங்கள், நியாயமாக போய் சேர வேண்டியவர்களுக்கு சேராமல் நாங்கள் அவ்ளோ இருக்கோம், இவ்ளோ இருக்கோம்னு கதை கட்டி இடஒதுக்கீடு பெற முயற்ச்சித்தல் கேவலமான செயல், சரி அப்படி தான் வாங்கி உருப்படியா எதாவது செய்வாங்கன்னு பார்த்தா அதுவும் கிடையாது, தனது கட்சி காரனுக்கே மட்டுமே சலுகை கிடைக்கும், மற்றவன் சாதிகாரனாக இருந்தாலும் ரெண்டாம் பட்சம் தான்!

உடல் உழைப்பு மட்டுமே உழைப்பு என்றால், விஞ்ஞானிகள் எல்லாம் பிச்சை தான் எடுக்கனும்!, ஒரு சலுகையை பெற மனசாட்சி படி நமக்கு தகுதி இருக்கான்னு கேட்டுட்டு பிறகு பேச வாங்க!, 1990 க்கு முன்னாடி இடத்துகீடு இருந்ததுல்ல, பின் இன்னும் ஏன் மக்கள் முன்னேற வில்லை, ஏன் பணக்காரன் மட்டுமே மேலும் பணக்காரன் ஆகிறான்?.

எனக்கு என் குடும்பத்திற்க்கு என்றிருந்தாலாவது பரவாயில்லை! என் சாதிக்கு என்று சலுகைகளை சுரண்டும் சமூகத்தில் பிற்படுத்தபட்டோர் எங்கிருந்து மேலேருவது! உங்களை போல் சாதி வெறியர்கள் உள்ளவரை நிச்சயமாக முடியாது!

அருள் said...

// //தனது கட்சி காரனுக்கே மட்டுமே சலுகை கிடைக்கும், மற்றவன் சாதிகாரனாக இருந்தாலும் ரெண்டாம் பட்சம் தான்!// //

இடஒதுக்கீட்டில் கட்சிக்காரன் எங்கிருந்து வருகிறான். எம்.பி.பி.எஸ் சீட்டை கட்சிபார்த்தா கொடுக்கிறார்கள்?

// //ஒரு சலுகையை பெற மனசாட்சி படி நமக்கு தகுதி இருக்கான்னு கேட்டுட்டு பிறகு பேச வாங்க!// //

சலுகை என்று தவறாக சொல்லாதீர். இடஒதுக்கீடு என்பது உரிமை.

வால்பையன் said...

//இடஒதுக்கீட்டில் கட்சிக்காரன் எங்கிருந்து வருகிறான். எம்.பி.பி.எஸ் சீட்டை கட்சிபார்த்தா கொடுக்கிறார்கள்?//


ரொம்ப அப்பாவி மாதிரி நடிக்காதிங்க அருள்!, படிக்கும் மாணவன்/வி கட்சி சாராதவள், ஆனா அவளுக்கு கிடைக்கும் சீட்டு சும்மா வராது, சாதி சார்ந்த கட்சி தலைமை பச்சை கொடி காட்டனும்!


//சலுகை என்று தவறாக சொல்லாதீர். இடஒதுக்கீடு என்பது உரிமை. //

அரசியல்வாதிகள் கொள்ளை அடிப்பதும் உரிமை என்கிறார்கள்!, தகுதியுள்ளவனுக்கு இடஒதுக்கீடு உரிமை, தகுதியில்லாதவனுக்கு அது பிச்சை, அல்லது அவன் செய்த திருட்டு!

அருள் said...

வால்பையன் said...

// //படிக்கும் மாணவன்/வி கட்சி சாராதவள், ஆனா அவளுக்கு கிடைக்கும் சீட்டு சும்மா வராது, சாதி சார்ந்த கட்சி தலைமை பச்சை கொடி காட்டனும்!// //

ஆச்சர்யமான தகவல்தான்.

இன்னும் சில நாட்களில் எம்.பி.பி.எஸ், பி.இ. சீட்டுக்கெல்லாம் இடஒதுக்கீட்டின்படி 'கட் ஆஃப்' மார்க் என்னன்னு லிஸ்ட் வெளியிடுவாங்க. அதன்படி கௌன்சிலிங் நடத்தி இடமும் ஒதுக்குவாங்க. அங்க போய் பாருங்க, யாராவது கட்சிகாரங்க பச்சை கொடியோட வராங்களான்னு.

// // தகுதியுள்ளவனுக்கு இடஒதுக்கீடு உரிமை, தகுதியில்லாதவனுக்கு அது பிச்சை, அல்லது அவன் செய்த திருட்டு!// //

தகுதியில்லாதவனுக்கு இடஒதுக்கீடு தருவதாக சொல்வது ஒரு பார்ப்பன பித்தலாட்டம்.
எங்கேயாவது, எப்போதுதாவது தகுதியில்லாத ஒருநபருக்காவது இடஒதுக்கீடு கிடைத்தது உண்டா? வீணாக பொய்பேசாதீர்.

வால்பையன் said...

//இன்னும் சில நாட்களில் எம்.பி.பி.எஸ், பி.இ. சீட்டுக்கெல்லாம் இடஒதுக்கீட்டின்படி 'கட் ஆஃப்' மார்க் என்னன்னு லிஸ்ட் வெளியிடுவாங்க. அதன்படி கௌன்சிலிங் நடத்தி இடமும் ஒதுக்குவாங்க. அங்க போய் பாருங்க, யாராவது கட்சிகாரங்க பச்சை கொடியோட வராங்களான்னு.//


நீங்க சொல்றதை பார்த்தா பிற்படுத்த பட்ட எல்லோருக்கும் டாக்டர் சீட்டு கிடைக்கும் என்பது போல இருக்கு!, 50 சீட்டில் 20 தான் ஒழுக்கமா தருவானுங்க மத்ததெல்லாம் கட்சி கோட்டா தான்!, இந்திய அரசியல் நிலை தெரியாம இருக்கிங்களே!


//தகுதியில்லாதவனுக்கு இடஒதுக்கீடு தருவதாக சொல்வது ஒரு பார்ப்பன பித்தலாட்டம்.
எங்கேயாவது, எப்போதுதாவது தகுதியில்லாத ஒருநபருக்காவது இடஒதுக்கீடு கிடைத்தது உண்டா? வீணாக பொய்பேசாதீர். //

அடடா அடடே அடடி!
என்ன கொடுமை சார் இது!
லட்சம் லட்சமா பணம் வச்சிருக்குறவன் காசு கொடுத்து சீட்டு வாங்கமா, இடஒதுக்கீட்டில் சீட்டு வாங்கிட்டு போறான் செல்வாக்கை பயன்படுத்தி, ஏழை ஏழையாவே இருக்கான்! நான் பொய் சொல்ரதா சொல்றாரே! இவரு உண்மையிலேயே தமிழ்நாட்டில் தான் இருக்காரா!?

கிருமிலேயர் பத்தி கொஞ்சம் விளக்குங்களேன் டோண்டு சார்!

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது