1/08/2011

டோண்டு பதில்கள் 08.01.2011

கேள்விகள் இருபதை தாண்டி விட்டதால் முதலில் கூறியபடி இப்போதே வெளியிட்டு விடுகிறேன்.

எல்கே
கேள்வி-1: பொதுவாக அத்வைதிகள்(அய்யர் ) சிவன் / விஷ்ணு இருவரையும் வணங்குகின்றனர். ஆனால் , ராமானுஜர் வழி வந்த வைஷ்ணவர்கள் அவ்வாறு இல்லை ஏன்?
பதில்: நீங்கள் கூறுவது எனக்கு புதிய செய்தி. சரித்திரத்தில் நான் அறிந்தவரை குலோத்துங்கச் சோழன் சிவனே விஷ்ணுவை விட உயர்ந்தவர் எனக் கூறுமாறு எல்லா வைணவர்களையும், ராமானுஜர் உட்பட, வற்புறுத்தியபோது அவர் மாட்டேன் எனக்கூறியது என்னவோ உண்மைதான்.

ராமானுஜர் என்ன எந்த வைணவனுமே அதை ஒப்புக் கொள்ள மாட்டான், இந்த டோண்டு ராகவன் உட்பட.

அதே நேரத்தில் சிவனை மதிக்காமல் இருப்பது என்பதும் என்னைப் பொருத்தவரை நடக்காத காரியமே.

ஆனால் வீரசைவர்களும் சரி வீரவைணவர்களும் சரி எப்போதுமே இருந்து வந்துள்ளனர் என்பதும் உண்மையே.

ஆகவே இதில் ராமானுஜர் எதையும் ஸ்பெஷலாகச் செய்ததாக நான் கருதவில்லை.

ஆனால் ஒன்று. ஐயர்கள் வைணவப் பெயர்களை வைத்துக் கொள்வார்கள், ஐயங்கார்கள் மாட்டார்கள். ஆகவே பரமேஸ்வரன் என்னும் பெயருடைய ஒரு பார்ப்பனர் ஐயராகத்தான் இருக்க முடியும். ஆனால் நாராயணன், பார்த்தசாரதி, ராகவன் ஆகியோர் ஐயராகவும் இருக்கலாம் ஐயங்காராகவும் இருக்கலாம்.

லட்சுமணன் சாதாரணமாக ஐயர்தான், அதே லட்சுமணனை ஐயங்கார்கள் ராமானுஜம் என்று அழைப்பார்கள். அதற்காக ராமானுஜ ஐயர்களும் இல்லாமல் இல்லை. என்ன குழப்புகிறேனா?

மிளகாய் பொடி
கேள்வி-2. தங்கள் ஊரில் பவர் கட் ஆகிறதா? தாம்பரம் தாண்டினால் மற்ற எல்லா ஊர்களிலும் இன்னும் தொடர்கிறது மின்வெட்டு தினமும் 2 மணி நேரம் .. தற்பொழுது குளிர் காலம்தானே? இன்னும் ஏன் மின்வெட்டு தொடர்கிறது?
பதில்: கடந்த மூன்று நாட்களாக ஸ்ரீரங்கம், திருநெல்வேலி ஆகிய ஊர்களுக்கு வைணவத் தலங்களை சந்திக்கும் நிமித்தம் “எனது” காரில் சென்றிருந்தேன். ஹோட்டலில் ரூம் போட்டதுமே நான் கேட்கும் கேள்வி “இந்த ஊரில் எப்போ பவர்கட்” என்பதுதான். நீங்கள் சொல்வது போல தினசரி இரண்டு மணி நேரங்களுக்குக் குறையாது.

ஆனால் சென்னையில் பவர் கட் ஆகும் இடங்களை முந்தைய தினமே பேப்பரில் போடுகிறார்கள். தினசரி எல்லாம் இல்லை. மாதத்துக்கு ஒரு முறை, காலை பத்து மணியிலிருந்து மாலை ஐந்து வரை இருக்கும். அந்த விஷயத்தில் சென்னைக்கு வெளியே உள்ள இடங்கள் பாவம்தான்.

கேள்வி-3. தமிழில் பேசும் போது ஆங்கில வார்த்தை உபயோகித்தால் என்ன தப்பு? அப்படி செய்தால் தமிழ் அழிந்து விடுமா என்ன?
பதில்: தற்போதைய நிலவரப்படி தமிழ் மிகவும் அதிக அளவில் புழக்கத்தில் இருக்கும் மொழி. ஆங்கிலக் கலப்புடன் உணர்ந்து பேசும் படித்தவர்கள் குறைந்த சதவிகிதததினரே. அதே சமயம் ரயில், பேப்பர் போன்ற எளிய சொற்கள் தமிழாகவே ஆகிவிட்டதும் நிஜமே.

கேள்வி-4. ஜல்லி கட்டு நேரடியாக பார்த்து இருக்கிறீர்களா? அதை தடை செய்யவேண்டுமா கூடாதா?
பதில்: நேரடியாக பார்த்ததில்லை, பார்க்கும் ஆசையும் இல்லை. ரத்தத்தைக் கண்டால் அவ்வளவு பயம். அதே சமயம் அதைத் தடை செய்ய வேண்டுமா வேண்டாமா என்பது பற்றி எனக்கு கருத்து ஏதும் இல்லைதான்.

மணிகண்டன்
கேள்வி-5. உங்களுக்கு தூங்கும்போது கனவு வருமா ?
பதில்: அமர்க்களமாக வரும். கனவில்லாத தூக்கமே எனக்குக் கிடையாது. என்ன எல்லா கனவுகளுமே நினைவில் இருக்கும் எனக் கூறவியலாது. தூங்கி எழுந்தவுடனேயே பல மறைந்து விடும், ஆனால் கனவு கண்டோம் என்ற ஒரு விஷயம் மட்டும் நினைவிலிருக்கும்.

வாத்தியார் பாடம் நடத்தும்போது தூங்க நேர்ந்தாலும் கனவுகள் வந்துள்ளன.

நான் 20 ஆண்டுகள் தில்லியில் வசித்தபோது என்னை விடாது தொடர்ந்த கனவு பற்றி எழுதியிருப்பதை படியுங்கள்.

அப்படித்தான் பல முறை பறப்பதாகவும் நான் கனவு கண்டுள்ளேன். இதில் என்ன வேடிக்கை என்றால் ஒவ்வொரு முறையும் அக்கனவு வரும்போது, இத்தனை நாள் கனவாகக் கண்டது இப்போது பலிக்கிறது பார் என்ற உணர்வுதான். ஆனால் கடைசியில் எழுந்த உடனேயே இம்முறையும் இதுவும் கனவுதான் என்றவுடன் ஏமாற்றமாக இருக்கும்.

அதே போல எனக்கு அடிக்கடி இன்னொரு கனவும் வரும்.

அதாகப்பட்டது, நான் இன்னும் பொறியியல் பரீட்சைகள் அதனையும் பாஸ் செய்யவில்லை என்று திடீரென்று கல்லூரியிலிருந்துக் கார்டு வரும். நீங்கள் நான்காம் வருடக் கணக்குப் பேப்பர் இன்னும் க்ளியர் செய்ய வேண்டியுள்ளது. தவறுதலாக உங்களுக்கு டிகிரி கொடுத்து விட்டோம் என்று அதில் குறிப்பிட்டிருக்கும். நான்காம் வருடக் கணிதமா? அதில் என்னக் கற்றுக் கொண்டேன் என்பது அப்போது நினைவுக்கு வராது. அந்த நிலையில் பரீட்சை எழுதுவதாவது? சுழிதான்.

இதன் வேரியேஷனாக எங்கள் தமிழ் வாத்தியார் நரசிம்மாச்சாரியார் வேறு கனவில் வந்து, தமிழ் பரீட்சைக்கு தயாரா என்று கேட்க, பொறியியல் கல்லூரியில் தமிழ்ப் பாடம் கிடையாது என்பது கூட அந்த பதட்டத்தில் மறந்து விடும்.

முழித்துக் கொண்ட பிறகு சிறிது நேரம் கழித்துத்தான் யதார்த்த நிலைக்கு வர இயலும்.

கேள்வி-6 நீங்கள் காலை எழுந்தவுடன் பல் தேய்ப்பீர்களா? சோ ராமசாமி தேய்ப்பாரா?
பதில்: நாட்டுக்கு இது ரொம்ப முக்கியமான கேள்வியா? நான் தேய்ப்பேன். சோ பற்றிய கேள்வியை நீங்கள் வரவிருக்கும் துக்ளக் மீட்டிங்கில் நிறைந்த சபையில் வைத்து அவரிடமே கேட்டு விடுங்கள்.

கேள்வி-7 நீங்கள் கவிதை எழுதி இருக்கிறீர்களா ? இல்லையென்றால் இந்த கேள்விக்கு பதிலாக ஒரு கவிதை எழுதுங்களேன்.
பதில்: அந்தளவுக்கு பதிவர்களை படுத்தும் எண்ணம் எனக்கு எப்போதுமே இருந்ததில்லை.

கேள்வி-8. நீங்கள் மதியம் தூங்குவது உண்டா? இஸ்ரேல் மொசாத்தில் இருப்பவர்களுக்கு மதியம் தூங்கும் பழக்கம் உண்டா?
பதில்: தூக்கம் வந்தால் தூங்க வேண்டியதுதானே. இதில் டோண்டு என்ன, மொசாத் என்ன? பை தி வே, எனக்கு மதியத் தூக்கம் பிடிக்கும். அப்போது கனவு வருவதும் பிடிக்கும்.

கேள்வி-9. உங்களுக்கு சச்சின் டெண்டுல்கருடன் நேரடி அறிமுகம் உண்டா ?
பதில்: இல்லை

கேள்வி-10. Brett lee மற்றும் Bruce lee - இவர்கள் இருவரில் யாருடைய பௌலிங் உங்களை மிகவும் கவர்ந்தது?
பதில்: யார் அவர்கள்?

அருள் (மிளகாய் பொடியின் கேள்வி-3-க்கு துணை கேள்வி)
கேள்வி-11. தமிழ்நாட்டில் ஆங்கிலத்தில் பேசும்போது மட்டும் ஏன் அதனுடன் தமிழ் வார்த்தைகளைப் பயன்படுத்தி பேசுவதில்லை? ஆங்கிலத்தில் பேசும் போது தமிழ் வார்த்தை பயன்படுத்தினால் என்ன தப்பு? அப்படி செய்தால் ஆங்கிலம் அழிந்து விடுமா என்ன? அது என்ன ஆங்கிலத்துக்கு ஒரு நீதி, தமிழுக்கு மற்றொரு நீதி?
பதில்: தாராளமாக பேசலாமே. நான் சமீபத்தில் 1960-61, 1961-62 கல்வியாண்டுகளில் ஹிந்து உயர்நிலை பள்ளியில் பொறியியல் சிறப்பு பாடம் எடுத்து படிக்கையில், தச்சு வேலை கற்றுத் தரும் தச்சர் பெருமாளாச்சாரி என்பவர் டோர் கதவு, விண்டோ ஜன்னல் என்றெல்லாம் கூறுவார். நான் அறிந்து எந்த ஆங்கிலேயரும் அதை ஆட்சேபிக்கவில்லை.


Mukkodan
கேள்வி-12. In my hometown people think the price per vote will be more for 2011 TN Elections because of 2G. What will be the likely going rate per vote?
பதில்: அதுதான் நியாயமும் கூட. ஒரு ஓட்டுக்கு ஐயாயிரம் தரலாம் என நம்பத்தகாத வட்டங்கள் கூறுகின்றன. ஆனால் ஒன்று, இப்போது இருக்கும் நிலையில் இனாம்களை வாங்கிக் கொண்டு திமுக வுக்கு நாமம் போட்டாலும் வியப்படைவதற்கில்லை

கேள்வி-13. Do you think the Sonia devotee Naveen Chawla(CEC) will be used by DMK/Cong for winning TN elections(like they did in few places in 2009)
பதில்: சாவ்லாதான் ரிட்டயர் ஆகி விட்டாரே. அவரைப் பற்றி ஷா கமிஷன் “unfit to hold any public office which demands an attitude of fair play and consideration for others” என்று கூறியுள்ளது. அவசர நிலையின் காலகட்டத்தில் அவர் தில்லி லெப்டினண்ட் கவர்னருக்கு செக்ரட்டரியாக செயல்பட்டு சஞய் காந்திக்கு ஜால்ரா அடித்தவர்.

கேள்வி-14. Why are these self-proclaimed Science lovers so-called "pagutharivivaadigal", especially in blogosphere, still believing in AIT/AMT, despite proven as fake/conspiracy by so many independent/neutral scientific researches.
பதில்: அவன்களாகவே தங்களை அப்படி பிரகடனப்படுத்திக் கொண்டால் அப்படி ஆகிவிடுவார்களா என்ன? மேலும் AIT/AMT ஆகிய விஷயங்களை விடாப்பிடியாக வைத்திருப்பதன் காரணமே அவன்களது புவ்வாவுக்குத்தான். விடுங்கள். அவன்களுடன் விவாதம் செய்ய எவனுக்கு நேரம் உள்ளது?

hayyram
கேள்வி-15. நீங்கள் ரசித்து படித்த ஜெர்மன் நாவல் அல்லது புத்தகத்தில் ஏதாவது ஒன்றை உரிமம் பெற்றும் தமிழில் மொழி பெயர்த்து வெளியிடலாம் அல்லவா? மொழிபெயர்ப்பு புத்தகம் வரிசையில் உங்கள் புத்தகமும் இருக்குமே. அப்படி செய்ய ஏதாவது உத்தேசம் உள்ளதா?
பதில்: நான் தொழில் முறை மொழிபெயர்ப்பாளர். நல்ல காசு வந்தால்தான் மொழி பெயர்ப்பேன்.

தொழில் நுட்பக் கட்டுரைகளைத் தவிர்த்து சாதாரண நாவல்களுக்கோ அல்லது பொது புத்தகங்களுக்கோ அடிமாட்டு விலைதான் தருகிறார்கள். எனக்கு அது கட்டாது. ஒரு நாளைக்கு 16 மணி நேரம்தான் எனக்கு மொழி பெயர்க்க அவகாசம் கிடைக்கும். அதை நான் குறைந்தவிலை விஷயங்களுக்காக செலவிட இயலாது.

ஒரு பதிவர் நண்பர் என்னை தமிழிலிருந்து பிரெஞ்சுக்கு அவரது கதைகளை மொழிபெயர்க்க சொன்னார். எனத் ரேட்டைக் கேட்டு மிரண்டு ஒதுங்கி விட்டார். ஆனால் நான் கேட்டவையோ சர்வ சாதாரணமாக எனது வாடிக்கையாள்ர்கள் தரும் ரேட். ஆகவே அதில் சமரசம் செய்து கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை.


virutcham
கேள்வி-16. காசிக்கோ அல்லது கைலாஷுக்கோ அரசு யாத்திரை ஏற்ககனவேயே இருக்கா? இல்லை என்றால் அரசு செலவில் புனித யாத்திரை என்று ஒட்டு வங்கி வாக்குறுதியில் பெரும்பான்மை மக்களுக்கு மட்டும் ஏன் இடமில்லை? இந்த பெரும்பான்மை மக்களுக்கு வேறு வழி இல்லை பாதிக்கு பாதி பேர் வேறு வழி இல்லாமல் ஒட்டு போட்டாலும் போதும் என்ற எண்ணமா?
பதில்: முதற்கண் ஒரு விஷயத்தைக் கூறிவிடுகிறேன். கைலாஷ், மானசரோவர், வைஷ்ணோதேவி யாத்திரைகளுக்கு ராணுவ எஸ்கார்ட் உண்டு, தீவிரவாதிகளது அச்சுறுத்தலால்/சீனர்களின் படுத்தலால் உள்ளது. அவ்வளவுதான். மற்றப்படி நீங்கள் கேட்க நினைக்கும் சப்சிடி எதுவும் இந்த யாத்திரைகளுக்காக இருப்பதாகத் தெரியவில்லை.

மதசார்பற்ற அரசு என பொய்யாக பெயரை வைத்துக் கொண்டுள்ளது அரசு. இந்து அறநிலையத் துறை என்று வைத்திருக்கும் அரசு இசுலாமிய அறத்துறை அல்லது கிறித்துவ அறத்துறை என்றெல்லாம் வைத்துக் கொள்ளவில்லை. சிறுபான்மையினருக்கு தேவையற்ற செல்லம் கொடுப்பது ஓட்டு அரசியல்.

ஆனால் அவ்வாறு அது மோதி விஷயத்தில் இல்லை, அவரது அரசு குஜராத் மக்கள் அனைவருக்குமே மத வேறுபாடு இன்றி நல்லது செய்து வருகிறது. அதைப் பார்த்தாவது மற்ற மாநில அரசுகளும் மத்திய அரசும் தம் கொள்கைகளை மாற்றி அமைத்தால் ஒரு ஆரோக்கியமான அரசியல் நிலை இருக்கும்.

நான் கூறுவது செவிடன் காதில் ஊதிய சங்காகத்தான் இருக்க முடியும் என்பதையும் அறிவேன். ஆனால் பல ஹிந்துக்களுக்கு இந்த விஷயத்தில் மத்திய, மற்ற மாநில அரசுகள் மேல் வருத்தம் இருப்பது நிஜம்.


pt
டோண்டு சாரின் விமர்சனம்?
கேள்வி-17. 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நாட்டுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டுவிட்டதாக தணிக்கை அதிகாரி தவறான தகவல் தந்துள்ளார் என்று மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் கபில் சிபல் கூறியுள்ளார்.
பதில்: தொலைத் தொடர்புதுறை அமைச்சர் என்றாலே உளற வேண்டியதுதான் தேவையான க்வாலிஃபிகேஷன் ஆகி விட்டது என நினைக்கிறேன்.

இரண்டாம் உலக யுத்த முடிவில் ஹிட்லர் அறுபது லட்சம் யூதர்களைக் கொன்றான் என்று அமர்க்களப்பட்ட சமயத்தில், அறுபது லட்சம் எல்லாம் இல்லை வெறுமனே நாற்பது லட்சம்தான் என சில பிரகஸ்பதிகள் கூறினதாக படித்துள்ளேன். அதுதான் எனக்கு இப்போது நினைவுக்கு வருகிறது.

கேள்வி-18. வசூலில் சற்று முன்னே பின்னே இருந்தாலும், பாராட்டுக்கள் வஞ்சனையின்றி குவிந்து வருகின்றன தென்மேற்கு பருவக்காற்று படத்துக்கு.
பதில்: அப்படியா? நான் பார்க்கவில்லை இதுவரை. ஆகவே கருத்தேதுமில்லை.

கேள்வி-19 காய்கறிகள் மீது மூன்று மாத காலத்திற்கு, உள்ளூர் வரிகள் விதிப்பதை நிறுத்தி வைக்கும்படி மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
பதில்: மாநில சட்டசபைக்கு தேர்தல் முன்னாலேயே வந்துவிடும் போலிருக்கிறதே.

கேள்வி-20. விஜய் நடித்த “காவலன்” படம் பொங்கலுக்கு வருகிறது. “சுறா” படத்துக்கு நஷ்டஈடு அளிக்காததால் இப்படத்துக்கு ஒப்புதல் அளிக்கமாட்டோம் என திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
பதில்: அடாவடி கோரிக்கை. அவர்கள் என்ன குழந்தைகளா? கொள்ளை லாபம் வந்தபோது விஜய்க்கு ஏதேனும் பணம் அதிகமாக தந்தார்களா என்ன, இப்போது கேட்க?

கேள்வி-21. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக கூட்டணி தான் ஆட்சியைப் பிடிக்கும் என்று அக் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
பதில்: கனவு காண வேண்டும் என அப்துல் கலாம் கூறியது இளைஞர்களுக்குத்தான், அதுவும் பகல் கனவெல்லாம் அவர் இளைஞர்களைக் கூட காணச் சொன்னதில்லை.


மேலும் கேள்விகள் இருந்தால் பிறகு சந்திப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

118 comments:

ஞாஞளஙலாழன் said...

>நீங்கள் காலை எழுந்தவுடன் பல் >தேய்ப்பீர்களா? சோ ராமசாமி >தேய்ப்பாரா?

முடியல...

வால்பையன் said...

//சிவனே விஷ்ணுவை விட உயர்ந்தவர் எனக் கூறுமாறு எல்லா வைணவர்களையும், ராமானுஜர் உட்பட, வற்புறுத்தியபோது அவர் மாட்டேன் எனக்கூறியது என்னவோ உண்மைதான்.

ராமானுஜர் என்ன எந்த வைணவனுமே அதை ஒப்புக் கொள்ள மாட்டான், இந்த டோண்டு ராகவன் உட்பட.//


சிவனுக்கு விஷ்ணுவை விட பெருசில்ல சரி, சமமா கூடவா இல்லை! எப்படி உயர்ந்தவர் தாழ்ந்தவர் வருது.

தக்காளி கடவுளுக்கே ஏற்றதாழ்வு பார்த்தா நீங்கெல்லாம் மனுசங்களை எப்படி பார்ப்பிங்க!

வால்பையன் said...

//தமிழில் பேசும் போது ஆங்கில வார்த்தை உபயோகித்தால் என்ன தப்பு? அப்படி செய்தால் தமிழ் அழிந்து விடுமா என்ன?//


என்ன பண்றோம்னு தெரியாத அளவுக்கு நமக்கு சொரணை கெட்டு போச்சில்ல!

வால்பையன் said...

//Brett lee மற்றும் Bruce lee - இவர்கள் இருவரில் யாருடைய பௌலிங் உங்களை மிகவும் கவர்ந்தது?//


ஐ லைக் யூ எல்கே!

வால்பையன் said...

//கொள்ளை லாபம் வந்தபோது விஜய்க்கு ஏதேனும் பணம் அதிகமாக தந்தார்களா என்ன, இப்போது கேட்க? //

இந்த நஷ்டஈடு கேட்பது ஒருமாதிரியான எதிர்தாக்குதல் முறை!

தியேட்டர்கள் மினிமம் கேரண்டி முறையில் புக் செய்யப்படும், ஏற்கனவே நட்டப்படிருப்பதால் அந்த தொகையை குறைக்கவும், மேலும் ஓவர் சேட்டை செய்யாமல் இருக்கவும் இம்மாதிரியான முடிவுகள் எடுக்க வேண்டியிருக்கும், இது அனைத்து துறைகளுக்கும் பொருந்தும்!

hayyram said...

நண்பன் வால்பயன் உண்மையிலேயே பகுத்தறிவுவாதியாக இருந்தால் தான் நடத்தும் உணவகத்தில் ஜாதி மதம் பார்ப்பவர்களும், சாமி கும்பிடுபவர்களும் உள்ளே வரக்கூடாது என்று வாசலில் போர்டு போட்டு விட்டு நடத்துங்கள். நடத்துவீர்களா? உங்கள் பகுத்தறிவு வீரத்தை காண்பிக்க இதுதான் சரியான தருணம்.
அப்படி நடத்த தைரியம் இருந்தால் இந்து கடவுளரைப் பற்றி ஏசலாம். எப்படியோ நீங்கள் அல்லா , ஏசு பற்றி பேசினால் உருட்டுக்கட்டை எடுத்து வந்து போராட ஒரு இடம் இருக்கிறது என்பது உறுதியாகிவிட்டது. அதுவரை நலம்.

Ganpat said...

"அடிக்கடி கட்சி மாறும்
அரசியல் வாதிக்கு
பச்சோந்தி சின்னம்
கொடுத்தால் என்ன?"

என்ற (ஹைகூ என்று சொல்லப்பட்ட)
வரிகளை படித்த பின் சுஜாதா சொன்னார்
"என்னய்யா விளையாடுறீங்களா?
இதெல்லாம் ஹைகூ வா? "

கே:தென்மேற்கு பருவகாற்று படம் எப்படி?
ப:நான் இன்னும் பார்க்கவில்லை

என்ற கேள்விபதிலை படித்ததும் எனக்கு தோன்றியதும் இதுதான்:
"என்னய்யா விளையாடுறீங்களா?
இதெல்லாம் கேள்விபதிலா? "

>நீங்கள் காலை எழுந்தவுடன் பல் >தேய்ப்பீர்களா? சோ ராமசாமி >தேய்ப்பாரா?
என்ற கேள்விக்கு நீங்கள் அளித்துள்ள பதில் ஒன்றே போதும் உங்களை மொக்கை மாமன்னன் என்ற நிலையில் இருந்து மொக்கை சக்கரவர்த்தி என்ற நிலைக்கு உயர்த்த!

என்பங்கிற்க்கும் சில கேள்விகள்:

1.மைலாப்பூரிலிருந்து நங்கநல்லூருக்கு
வர எந்த பஸ்(தடம் எண்) ஏறவேண்டும்?
2.நங்கநல்லூரிலிருந்து மயிலாப்பூருக்கு
திரும்பி வர எந்த பஸ்(தடம் எண்) ஏறவேண்டும்?
3.சைதாப்பேட்டை சென்னை 15 என்கிறார்கள் ஆனால் சென்னை 16அதை அடுத்த கிண்டி இல்லையாம் அதற்கும் அடுத்த St.Thomas mount என்கிறார்கள்.இது என்ன டுபாக்கூர் வேலை?
நன்றி,

dondu(#11168674346665545885) said...

@கண்பத்
உங்கள் கேள்விகள் அடுத்த டோண்டு பதில்கள் பதிவின் வரைவுக்கு சென்று விட்டது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Unknown said...

@வால்பையன்:
இப்பல்லாம் பெயர் எங்க ராகவன் ராமானுஜன் என்றெல்லாம் வைக்கறாங்க.உங்க கோயம்பத்தூரில வேங்கடபதி,வெங்கிடுசாமி,பழனிசாமி,ஆறுச்சாமி,வெள்ளிங்கிரி,மருதாசலம்,திருச்சியில் ரங்கராஜன்,ரங்கநாதன்,சென்னையில் சீனிவாசன்,வெங்கடேசன்,திருப்பதிசாமி,முருகன்,என்றெல்லாம் அப்பன்,பாட்டன் பெயர்கள் இருக்க பிள்ளை பேரன் பெயர்கள் ரமேஷ்,உமேஷ்,காமேஷ்,ஸ்ரீகாந்த்,கமல்ஹாசன்(முஸ்லிம் பெயர்?)மணிரத்தினம்,பாலச்சந்தர்,தாணு(வேணு)என்று மாறி வருகிறது.டோண்டு சார்,பழைய கால பெயரை சொன்னார்.இப்ப உள்ள உங்க வயசு பசங்கல்லாம் அப்படியா இருக்காங்க.இல்லையென்பதுதான் உண்மைகள்.உங்க ஓட்டலே ஒரு உதாரணம்.அதில எல்லா சாதிக்காரங்களும்தானே சாப்பிட வராங்க.உங்க சாதியை கேட்டா சாப்பிட ஆர்டர் கொடுக்கிறாங்க.இல்லையில்ல.விடுங்க.

ஞாஞளஙலாழன் said...

----------------------
hayyram said...

நண்பன் வால்பயன் உண்மையிலேயே பகுத்தறிவுவாதியாக இருந்தால் தான் நடத்தும் உணவகத்தில் ஜாதி மதம் பார்ப்பவர்களும், சாமி கும்பிடுபவர்களும் உள்ளே வரக்கூடாது என்று வாசலில் போர்டு போட்டு விட்டு நடத்துங்கள். நடத்துவீர்களா?
-----------------------------

மற்றவர்களை உள்ளே வரக்கூடாது, தொடக் கூடாது என்று ஒதுக்குவது பகுத்தறிவுவாதிகளின் குணம் அல்லவே!

பகுத்தறிவு வாசகங்களை தனது உணவகத்தில் மாட்டி வேண்டுமானால் வைக்கலாம்.

அருள் said...

hayyram said...

// //நண்பன் வால்பயன் உண்மையிலேயே பகுத்தறிவுவாதியாக இருந்தால் தான் நடத்தும் உணவகத்தில் ஜாதி மதம் பார்ப்பவர்களும், சாமி கும்பிடுபவர்களும் உள்ளே வரக்கூடாது என்று வாசலில் போர்டு போட்டு விட்டு நடத்துங்கள். நடத்துவீர்களா?// //

உணவகம் என்பது ஒரு சேவையை (உணவு வழங்குதல்) விற்கும் இடம். அங்கு காசு கொடுக்கும் எல்லோருக்கும் உணவளித்துதான் ஆகவேண்டும். ஒருவரது நம்பிக்கைக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை.

மேலும், எந்த ஒரு அடிப்படையிலும் எவரையும் மறுப்பது - ஒதுக்குதல் - அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிரானது.

இப்போதைக்கு வாடகைக்கு வீடுதரும் பார்ப்பனர்கள் தலித்துகளுக்கு மட்டும் தராமல் மறுப்பதில்தான் இத்தகைய ஒதுக்குதல் வெளிப்படையாக நடந்து வருகிறது.

RS said...

முட்டாள் அருளு, எல்லா தலித்துக்களுக்கும் பார்பனர் அல்லாதவர்கள் வீடு கொடுத்துவிட்டால், தலித்துகள் பார்பனர்களிடம் வர தேவையே இல்லியே.

முதலில் உங்க பச்சோந்தி வன்னியர்களை தலித்துக்கு மட்டுமே வீடு கொடுக்கப்படும்னு தட்டி மாட்டி அதன் படி நடக்க சொல்லு பார்ப்போம், சொன்ன உனக்கு செருப்படி அங்கயே கிடைக்கும்.

மீண்டும் சொல்கிறேன், இன்றலவில் ஒழுக்கம் பார்த்து மட்டுமே வீடு வாடகைக்கு விட படுகிறது. அது பார்பனராக இருந்தாலும், தலித்தாக இருந்தாலும். தங்களுக்கு தெரிந்த அளவுக்கு மேல் நிச்சயமாக எனக்கு தெரியும்.

RS said...

டோண்டு அய்யா, தலைப்புல 2010னு இருக்கு.

dondu(#11168674346665545885) said...

@RS
Thanks.

Regards,
Dondu N. Raghavan

hayyram said...

//இப்போதைக்கு வாடகைக்கு வீடுதரும் பார்ப்பனர்கள் தலித்துகளுக்கு மட்டும் தராமல் மறுப்பதில்தான் இத்தகைய ஒதுக்குதல் வெளிப்படையாக நடந்து வருகிறது.// ஆமாயா, பாப்பான அழி பாப்பான ஒழின்னு சொல்லிக்கிட்டே பாப்பான் கிட்ட வீடு கேட்டா, எவனாவது வேலில போற ஓனான வேட்டிக்குள்ள விடுவானா?

சென்னையில் நான் வாடகைக்கு குடியிருந்த இடத்தில் பக்கத்து போர்ஷனில் நீங்கள் கூறும் வகையில் ஒரு குடும்பம் குடிவந்தது. அவர்கள் பிராமணர்களை வெறுப்பவர்கள் என்பது அவர்கள் வந்து சில நாட்களிலேயே தெரிந்து விட்டது. பார்ப்பன துவேஷத்தை அள்ளிக்கொட்டி, என் தாயார் தண்ணீர் எடுக்கச் செல்லும் போதெல்லாம் வேண்டுமென்றே முன்னாடி நின்று பயமுறுத்தியும், எங்கள் வீட்டு பைப் லைனை உடைத்து தண்ணீர் வரவிடாமல் செய்தும் எங்களை வீட்டை காலி செய்யுமளவுக்கு செய்து விட்டார்கள் நீங்கள் குறிப்பிடும் பார்ப்பன துவேஷ ஜாதிக்காரர். இவ்வளவிற்கும் அந்த வீடு ஒரு பிராமணருக்கு சொந்தமான வீடுதான். அந்த ஜந்துவை அடித்து துவைத்து கட்டிப்பிரண்டு சண்டை போட ரொம்ப நேரமாகியிருக்காது. ஆனால் மான அவமானத்திற்கு பயந்தும் நிம்மதியாக வாழ்வதே முக்கியம் என்று கருதியும் நாங்கள் வீட்டை காலி செய்து வேறிடம் பெயர்ந்தோம். இப்படி காட்டுத்தனமாக பிராமணர்கள் மீது வெறியும் கோபமும் எந்த காரணமும் இல்லாமல் ஒரு வித சைக்கோத்தனமாக வெளிப்படுத்தி வரும் உங்களைப் போன்றவர்களுக்கு வீடு வாடகைக்கு கொடுக்க மாட்டேன் என்று கூறும் பிராமணர்கள் எல்லோரும் மானமிகு மக்களே! இதில் பிராமணர்கள் உறுதியாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்!

hayyram said...

//உணவகம் என்பது ஒரு சேவையை// உயிர்காக்கும் மருத்துவமே வியாபாரம் ஆயிடிச்சாம். உணவகம் சேவையாம். என்ன வர்ரவன் போறவனுக்கெல்லாம் ஓசிலய சோறு போடுறாங்க சேவைன்னு சொல்றதுக்கு. கோடி ரூபா கொடுத்தாலும் ஜாதி விளம்பரங்கள் கிடையாது என்று திடமாக எழுதிவைத்த என் நண்பன் வால்பையன் அதே திடமுடனும் வீரத்துடனும் தனது உணவகத்திலும் கோடி ரூபாய் கொடுத்தாலும் ஜாதி மதம் பார்ப்பவர்களும், சாமி கும்பிடுபவர்களும் வரக்கூடாது என்று போடுவார். உங்களுக்கென்ன வயித்தெரிச்சல்.

வால்பையன் said...

//அப்படி நடத்த தைரியம் இருந்தால் இந்து கடவுளரைப் பற்றி ஏசலாம். எப்படியோ நீங்கள் அல்லா , ஏசு பற்றி பேசினால் உருட்டுக்கட்டை எடுத்து வந்து போராட ஒரு இடம் இருக்கிறது என்பது உறுதியாகிவிட்டது. அதுவரை நலம். //


கண்டிப்பாக ஏசுவோ, அல்லாவோ அல்லது பொந்து மத கடவுளோ வந்தால் உள்ளே அனுமதியில்லை தான், மேலும் நீங்கள் சொல்வது போல் உருட்டுகட்டையால் அடிவிழவும் வாய்ப்புண்டு!

சில இடங்களில் பெரும் வியாதியஸ்தர்கள் உள்ளே வரவேண்டாம்னு எழுதியிருக்குமாம், நான் வேணும்னா பார்பனீயதிமிர் உள்ளவர்கள் உள்ளே வர வேண்டாம்னு போர்டு வச்சிரட்டுமா நண்பா!

உங்களது கருத்துகளை நான் விமர்சிக்கும் போது நீங்கள் என்னை கக்கா ஏன் மஞ்சளா இருக்குன்னு கேப்பிங்களா, ஓ இது தான் உங்கள் பார்பனிய வேதத்தில் சொல்லி கொடுக்கப்பட்டிருக்கோ! அது சரி உங்களுக்கு வேற என்ன தெரியும்!

வால்பையன் said...

//உங்க ஓட்டலே ஒரு உதாரணம்.அதில எல்லா சாதிக்காரங்களும்தானே சாப்பிட வராங்க.உங்க சாதியை கேட்டா சாப்பிட ஆர்டர் கொடுக்கிறாங்க.இல்லையில்ல.விடுங்க. //


எங்களது உனவகத்தின் பெயரின் ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு நபர் பெயரின் முதல் எழுத்து இருக்கிறது

மிஸ்டர் தமிழன், நான் எங்கேயாவது போய் உங்க சாதி என்னான்னு வழிய போய் கேட்டு பார்த்திருக்கிங்களா, தன்னை இந்த சாதி என்று பெருமையோடு அழைத்து கொள்பவர்களுக்கு தான் மிளகாய் தேய்த்து விடுகிறேன், என் சாதி அறிந்து தான் சாப்பிட வருவேன் என்று யாராவது சொன்னால் எனக்கு அந்த கஸ்டமர் தேவையில்லை, அதனால் எத்தனை லச்சம் வருமானம் வந்தாலும்!

வால்பையன் said...

//மற்றவர்களை உள்ளே வரக்கூடாது, தொடக் கூடாது என்று ஒதுக்குவது பகுத்தறிவுவாதிகளின் குணம் அல்லவே!//

பகுத்தறிவு என்ற பெயரில் ப்ளாக் நடத்தும் ஹிஹிஹிராமுக்கு அதெல்லாம் தெரியும்னு எதிர்பார்க்கக்கூடாதுங்க!

அவர் ப்ளாக்கில் முஸ்லீம்களை/கிறிஸ்தவர்களை துரத்த வேண்டும் என்று எழுதியிருப்பார், இது இந்து வளர்த்த பொந்து நாடாம்!

வால்பையன் said...

//அதே திடமுடனும் வீரத்துடனும் தனது உணவகத்திலும் கோடி ரூபாய் கொடுத்தாலும் ஜாதி மதம் பார்ப்பவர்களும், சாமி கும்பிடுபவர்களும் வரக்கூடாது என்று போடுவார். உங்களுக்கென்ன வயித்தெரிச்சல்.//


திருமணத்தின் போது சாதிய முறை பார்த்து அதே சாதியில் திருமணம் செய்பவர்களுக்கு எனது தளத்தில் விலம்பரம் இல்லை என்று சொல்லியிருந்தேன், அதே போல் நான் இந்த சாதி, அதே சாதிகரன் சமைத்தால் தான் சாப்பிடுவேன் என்றால் நிச்சயம் உருட்டுகட்டை அடிவிழும், முதல் அடி உங்களுக்காகவும் இருக்கலாம், உங்களை பார்த்தால் அப்படி கேட்கும் ஆள் போல் தான் தெரிகிறது, எங்கயாவது லாஜிக்கோடு பேசுறிங்களா ஹிஹிஹிஹிராம், எப்பருந்து இப்படி காமெடிபீஸ் ஆனிங்க!

வால்பையன் said...

//என் தாயார் தண்ணீர் எடுக்கச் செல்லும் போதெல்லாம் வேண்டுமென்றே முன்னாடி நின்று பயமுறுத்தியும்//

முன்னாடி நின்று பயமுறுத்தி என்றால், ப்பேன்னு ஒளிஞ்சிருந்து கத்துவோமே அப்படியா!

நீங்கள் தானய்யா மத்த சாதிகாரன் வந்தால் தீட்டு என்கிறீர்கள், உங்களுக்கு அப்படி ஆள் தானே சரி!

குடுகுடுப்பை said...

சென்னையில் நான் வாடகைக்கு குடியிருந்த இடத்தில் பக்கத்து போர்ஷனில் நீங்கள் கூறும் வகையில் ஒரு குடும்பம் குடிவந்தது. அவர்கள் பிராமணர்களை வெறுப்பவர்கள் என்பது அவர்கள் வந்து சில நாட்களிலேயே தெரிந்து விட்டது. பார்ப்பன துவேஷத்தை அள்ளிக்கொட்டி, என் தாயார் தண்ணீர் எடுக்கச் செல்லும் போதெல்லாம் வேண்டுமென்றே முன்னாடி நின்று பயமுறுத்தியும், எங்கள் வீட்டு பைப் லைனை உடைத்து தண்ணீர் வரவிடாமல் செய்தும் எங்களை வீட்டை காலி செய்யுமளவுக்கு செய்து விட்டார்கள் நீங்கள் குறிப்பிடும் பார்ப்பன துவேஷ ஜாதிக்காரர். இவ்வளவிற்கும் அந்த வீடு ஒரு பிராமணருக்கு சொந்தமான வீடுதான். அந்த ஜந்துவை அடித்து துவைத்து கட்டிப்பிரண்டு சண்டை போட ரொம்ப நேரமாகியிருக்காது. ஆனால் மான அவமானத்திற்கு பயந்தும் நிம்மதியாக வாழ்வதே முக்கியம் என்று கருதியும் நாங்கள் வீட்டை காலி செய்து வேறிடம் பெயர்ந்தோம். இப்படி காட்டுத்தனமாக பிராமணர்கள் மீது வெறியும் கோபமும் எந்த காரணமும் இல்லாமல் ஒரு வித சைக்கோத்தனமாக வெளிப்படுத்தி வரும் உங்களைப் போன்றவர்களுக்கு வீடு வாடகைக்கு கொடுக்க மாட்டேன் என்று கூறும் பிராமணர்கள் எல்லோரும் மானமிகு மக்களே! இதில் பிராமணர்கள் உறுதியாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்!//
எங்கே பிராமணன் என்று ஒரு பக்கம் சொல்லிக்கொண்டு பிறப்பால் /பிராமணன் என்ற பெயரால் தான் உயர்ந்தவன் என்று சொல்பவர்களை என்ன செய்யலாம்.பார்ப்பனத்துவேஷம் தவறு பிராமணத்துவேஷம் சரியோ?

எல் கே said...

//வால்பையன் said...

//Brett lee மற்றும் Bruce lee - இவர்கள் இருவரில் யாருடைய பௌலிங் உங்களை மிகவும் கவர்ந்தது?//


ஐ லைக் யூ எல்கே!
//

இது என்னுடைய கேள்வி அல்ல

hayyram said...

//நீங்கள் தானய்யா மத்த சாதிகாரன் வந்தால் தீட்டு என்கிறீர்கள்// வாலு, கண்ட கண்ட புத்தகத்தை படிச்சு வாந்தி எடுக்கிறதே இருபத்தோராம் நூற்றாண்டிலேயும் பண்ணினா நீங்க பகுத்தறிவு மட்டுமல்ல சிந்திக்கும் சுய அறிவே கூட இல்லாதவங்க. 50 , 100 வருஷத்துக்கு முன்னாடியே நின்று பேசிக்கொண்டு இருக்கிறீர்கள். கொஞ்சம் நவீன காலத்திற்கும் வாருங்கள்.

hayyram said...

//உங்களை பார்த்தால் அப்படி கேட்கும் ஆள் போல் தான் தெரிகிறது// இப்படி என்னைப் பற்றி நீங்களாகவே கற்பனை செய்து கொண்டால் நானென்ன செய்வது. இந்த காலத்தில் அப்படி கேட்டுத்தான் சாப்பிடுவேன் என்று நினைப்பவன் பட்டினி கிடந்து சாக வேண்டியது தான். அதெல்லாம் கூட புரிந்து கொள்ளாத அளவு ஜாதி பார்ப்பவன்பிராமணன் என்று நீங்கள் நினைத்துக்கொண்டிருந்தால் உங்கள் சைக்கோத்தனமான சிற்றரிவை நீங்கள் மட்டுமே மெச்சிக் கொள்ள வேண்டும்.

hayyram said...

//அவர் ப்ளாக்கில் முஸ்லீம்களை/கிறிஸ்தவர்களை துரத்த வேண்டும் என்று எழுதியிருப்பார், இது இந்து வளர்த்த பொந்து நாடாம்!// துரத்த வேண்டுமென்று எந்த தலைப்பில் எழுதியிருக்கிறேன் என்று காண்பியுங்கள். நான் மதச்சார்பற்ற நாடு என்று கூறிக்கொண்டு முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவ ஆதரவு அரசாக மட்டும் நடக்கும் அரசியல் வாதிகளையும் ஊடகங்களையும் உங்களைப் போன்ற போலி பகுத்தறிவு வாதிகளையும் தான் விமர்சித்திருப்பேன். மீண்டும் பிளாகிற்கு வருகை தந்து நன்றாக படிக்கவும்! எனக்கு ஒரு சந்தோஷம். இனி அல்லாவை பற்றி கெட்ட வார்த்தையில் எழுத உங்களுக்கு சத்தியமாக தைரியம் இருக்காது! கடை காலியாயிடும். இந்துக்களை மட்டும் சாடிக்கொண்டே இருந்தாலும் அந்த மரத்துப் போன ஆட்டு மந்தைகள் உங்கள் ஹோட்டலில் வந்து தின்று விட்டுப் போகும். பாவம்

hayyram said...

//எங்கயாவது லாஜிக்கோடு பேசுறிங்களா ஹிஹிஹிஹிராம், எப்பருந்து இப்படி காமெடிபீஸ் ஆனிங்க// நான் யாருடன் உரையாடுகிறேனோ அவர்களைப் போலாவேனாம். இது சாமிகுடுத்த வரம். இப்போது உங்களுடன் உரையாடுகிறேனல்லவா!

வால்பையன் said...

//நீங்க பகுத்தறிவு மட்டுமல்ல சிந்திக்கும் சுய அறிவே கூட இல்லாதவங்க. 50 , 100 வருஷத்துக்கு முன்னாடியே நின்று பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்.//


எங்க அம்மா முன்னாடி வந்து நின்னு பயமுறுத்துனாங்கன்னு சொன்னிங்களேண்ணே அது 50/100 வருசத்துக்கு முன்னாடியா, இல்ல ஹாலோவினுக்கு பேய் வேசம் போட்டு வருவாங்களே அந்த மாதிரி வந்து பயமுறுத்தினாங்களா, என்ணாண்ணே அது உணர்ச்சி வேகத்தில் உண்மையை உளரிபுட்டு இப்படி பல்டி அடிக்கிறிங்க!

வால்பையன் said...

//இனி அல்லாவை பற்றி கெட்ட வார்த்தையில் எழுத உங்களுக்கு சத்தியமாக தைரியம் இருக்காது! //


சொர்க்கத்தில் கூட்டி கொடுக்கும் மாமா பயலை பற்றி எழுத எனகென்ன கவலை என்று நினைக்கிறீர்கள் ஹிஹிஹிராம்!

குரானின் படி அல்லா சொர்க்கத்தில் நித்தியகன்னிகைகளை கொடுப்பது உண்மையென்று இஸ்லாமியர் ஒப்பு கொண்டால் அல்லா மாமா வேலை பார்ப்பதையும் அவர்கள் ஒத்து கொள்ள தான் வேண்டும்!

மேலும் உங்களை பற்றி பேசும் போது அதை பற்றி மட்டும் பேசவும், மற்றவர்களை பேசுவியான்னு கேட்பது தான் பார்பனீயம், சிண்டுமுடிதல், கோழைத்தனம்.

உம்மிடம் கேட்ட கேள்விக்கு பதில் இல்லையென்றால் வாயில் வைத்து கொண்டு போய்கொண்டே இருக்கலாம்!

விரலை!


உங்க ப்ளாக்குக்கு வர சொல்லியிருக்கிங்க, நீங்க எனக்கு பாலோயர் இல்லைன்னு தெரியும், ஆனா நான் உங்க பாலோயர், உங்க பதிவுகள் அனைத்தும் ரீடரில் இருக்கு, நீங்க பதிவையே அழித்தாலும் என்னால் எடுக்க முடியும்!, இதை ஏற்கனவே ஒரு பதிவில் கூட சொல்லியிருக்கேன்!

வால்பையன் said...

//உங்கள் சைக்கோத்தனமான சிற்றரிவை நீங்கள் மட்டுமே மெச்சிக் கொள்ள வேண்டும். //


தேங்ஸ்!

வால்பையன் said...

//நான் யாருடன் உரையாடுகிறேனோ அவர்களைப் போலாவேனாம். இது சாமிகுடுத்த வரம்.//

லேடீஸ் கூட பேசினா லேடிஸ் ஆகிருவிங்களா, ஹிஹிஹிராம்!
உங்க சாமி பலே சாமி தான்!

சிவனுக்கு விஷ்ணு குனிஞ்சி கொடுத்தான்னு சொல்லும் போதே இந்த சந்தேகம் எனக்கு வந்தது, நீங்களும் அப்படி தானா இல்ல..............

dondu(#11168674346665545885) said...

@hayyram
முட்டாள்களுடன் விவாதம் செய்யாதீர்கள்
அப்படி விடாது முட்டாள்களுடன் விவாதம் செய்யும்போது யாராவது மூன்றாம் மனிதர் அப்பக்கம் வந்தால், அவர்களுக்கு யார் முட்டாள் என்பது புரியாது.

அதிலும் சாதீயம் என்ற பொதுவான சொல்லை பார்ப்பனீயம் என லேபல் செய்யும் முட்டாள்களுடன் விவாதமே செய்யாதீர்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வால்பையன் said...

//@hayyram
முட்டாள்களுடன் விவாதம் செய்யாதீர்கள்
அப்படி விடாது முட்டாள்களுடன் விவாதம் செய்யும்போது யாராவது மூன்றாம் மனிதர் அப்பக்கம் வந்தால், அவர்களுக்கு யார் முட்டாள் என்பது புரியாது.//


யார் முட்டாள் தனமாக விவாதம் செய்கிறார்கள் என்று தெரிந்தும், இந்த கூற்றை ஒரு முட்டாளின் சொல்லும் உங்களின் புத்திசாலிதனம் மீது சந்தேகம் வருகிறது!

பார்க்குறவங்களுக்கு நல்லா தெரியும், வேணும்னா ஒரு சர்வே எடுங்களேன்!

dondu(#11168674346665545885) said...

@வால்பையன்
நலமா? ஹோட்டல் அபாரமாக நடக்கிறது என கேள்விப்பட்டேன், வாழ்த்துக்கள். எனது பேத்திகளுக்கு என் அன்பு.

அக்காக்காரி தங்கையை நன்றாக பார்த்துக் கொள்கிறாளா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

வால்பையன் said...

//@வால்பையன்
நலமா? ஹோட்டல் அபாரமாக நடக்கிறது என கேள்விப்பட்டேன், வாழ்த்துக்கள். எனது பேத்திகளுக்கு என் அன்பு.

அக்காக்காரி தங்கையை நன்றாக பார்த்துக் கொள்கிறாளா?//


ஈடுபாட்டுடனும் செய்யும் எந்த வேலையும் அபாரமான ரிசல்ட் தரும் என்பது உங்களுக்கு தெரியாததா என்ன!

பேத்திகள் இருவரும் மிக்க நலம், வர்ஷாவுக்கு வருணான்னா உசுரு, ஒரு நிமிடம் கூட பிரிய மறுக்கிறாள்!
உங்கள் அன்பினால் என்னை போலவே அவர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள்!

pt said...

டோண்டு சாரின் விமர்சனம்?
1.சமீபத்தில் ரஜினியை விமர்சிப்போர் பட்டியலில் இணைந்த இயக்குநர் மிஷ்கினின் யுத்தம் செய் படத்தைப் பார்த்துப் பாராட்டினார் ரஜினி. சமீபத்தில் ஒரு மேடையில், “ரஜினியின் எந்திரன் படம் தரமற்றது” என்ற ரீதியில் பேசி பரபரப்பேற்படுத்தியவர் இயக்குநர் மிஷ்கின். இப்போது சேரன் நடிக்கும் “யுத்தம் செய்” படத்தை இயக்கியுள்ளார்.
2.அரசியலோடு பின்னி பிணைந்தது இரண்டே இரண்டு. அதில் முக்கியமான ஒன்று பிரியாணி. அரசியலில் நுழைய அதிகாரபூர்வமாகவே முடிவெடுத்துவிட்ட விஜய்க்கு அஜீத் வைத்த பிரியாணி விருந்துதான் இப்போதைக்கு கோடம்பாக்கத்தின் டாப் கியர் பேச்சு
3.2050ம் ஆண்டு உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக, பலம் வாய்ந்த ஜாம்பவானாகத் திகழும் இந்தியா என பிரைஸ்வாட்டர்கூப்பர்ஸ் நிறுவனம் தனது அறிக்கையில் கூறியுள்ளது. 2011 முதல் 2050 வரையிலான காலகட்டத்தில் இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி ஜப்பானையும் சீனாவையும் பின்னுக்குத் தள்ளிவிடும் என்று அந்நிறுவனத்தின் தலைமைப் பொருளியலறிஞர் ஜான் ஹாக்ஸ்வொர்த் கூறியுள்ளார்.
4.ஒரு பத்திரிக்கையில் அதிமுக தலைமையை விமர்சித்து தேமுதிக நிர்வாகிகளின் பெயரில் வெளியான விளம்பரத்திற்கும் தேமுதிகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளா
5.“2ஜி’ ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு மோசடி தொடர்பாக, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவுக்கு எதிராக ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியசாமி தாக்கல் செய்த புகார் மனு ஏற்கத்தக்கதே’ என, டில்லி சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் தெரிவித்துள்ளது. ரூ.1.76 லட்சம் கோடி மோசடி வழக்கில் ராஜாவை ஒரு குற்றவாளியாக சேர்க்கலாம் என்றும், அவருக்கு எதிராக டில்லி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் புகார் அளிக்கலாம் என்றும் கூறியுள்ளது

hayyram said...

//ஆனா நான் உங்க பாலோயர், உங்க பதிவுகள் அனைத்தும் ரீடரில் இருக்கு, நீங்க பதிவையே அழித்தாலும் என்னால் எடுக்க முடியும்!,// அப்படி இருந்தும் உங்க ஃபாளோவை நான் ப்ளாக் பண்ணாம வெச்சிருக்கேனே. அப்படி இருந்தும் ஏதாவது நிரூபிக்க முடிஞ்சதா என்ன? நாகரீகமே இல்லாமல் பேச மட்டும் தான் உங்களைப் போன்ற நாத்திக மத காரர்களுக்கும், பார்ப்பனருக்கெதிரான ஜாதிக்கொடுமையை கட்டவிழ்த்து விடும் ஜாதிக்கொடுமைக் காரர்களுக்கும் தெரியும். உங்களைப் போன்றவர்களுக்கு பகுத்தறிவில்லை என்பதை வெளியே தெரியாமல் மறைத்துக் கொள்ள இது போன்ற அநாகரீக பேச்சுக்கள் கைகொடுக்கிறது. நடத்துங்கள்.

hayyram said...

//கோழைத்தனம்// எது கோழைத்தனம். மற்றவர்களை விமர்சிக்காமல் எதிர்ப்பிற்கு பயந்து தவிர்ப்பேன். இந்துக்களை மட்டும் கெட்ட வார்த்தையில் விமர்சிப்பேன் என்றிருக்கும் உங்கள் கொள்கை தான் கோழைத்தனம். நீங்கள் கடவுளரைத் திட்டி எழுதும் இந்த வாசகங்களை உங்கள் ஹோட்டல் முழுக்க எழுதி வைத்து கடை நடத்துங்களேன் தைரியம் இருந்தால்!

hayyram said...

//முட்டாள்களுடன் விவாதம் செய்யாதீர்கள்// செய்யாமல் தான் இருந்தேன். ஜாதி, மதம் என்று சகட்டு மேனிக்கு வலையுலகில் பேசிவிட்டு வெளியுலகில் ஒன்றும் தெரியாத அப்பாவி போல ஹோட்டல் நடத்தி அதே ஜாதி, மதக்காரர்களிடம் பணம் வாங்கி பிழைப்பு நடத்த துடிக்கும் முகமூடித்தனத்தை ஏனென்று கேட்காமல் இருக்க முடியவில்லை. வாலுக்கு தைரியமிருந்தால் அவரது ஹோட்டல் வாசலில் தான் யார், என்ன கொள்கை உடையவன், தன்னுடைய வலையுலகத்தில் எப்படி எல்லாம் எழுதுவார் என்பதை எல்லாம் வெளிப்படையாக அங்கே வரும் மக்களுக்கு சொல்லி விட்டு அந்த ஹோட்டலை நடத்தட்டும். நிஜமான சமூகத்தின் மறுமொழி அவருக்கு கிடைக்கும் போது உலகின் நிதரசனம் புரியவரலாம்! அதை செய்ய தைரியம் இல்லாது முகமூடி மனிதானாக சமூகத்தில் வலம் வரும் கோழையாக அவர் இருக்கிறார். அதை எடுத்துச் சொல்ல வேண்டும் என தோன்றியதால் எழுதலானேன். இந்துக்களுக்குபுத்தி வேண்டும். தான் வணங்கும் கடவுளரை திட்டி தனது உணர்வுகளை அவமதிப்பவன் ஹோட்டலுக்கே போய் உண்டு அவனுக்கே வருமானம் கொடுக்கப் போகிறார்கள். என்ன செய்வது, கருணாநிதிக்கு இன்னும் ஓட்டுப் போடும் மரத்துப்போன இந்துக்கள் இருக்கும் வரை இவற்றை நிறுத்த முடியாது. அந்த தைரியத்தில் தான் வால் வாலை ஆட்டுகிறார். அல்லாவை அசிங்கமாக பேசிவிட்டு கீழ்விசாரத்திலேயோ, காயல்பட்டினத்திலேயோ வால் கடைதிறந்து கல்லா கட்ட முடியுமா? ஒட்ட நறுக்கிவிடுவார்கள்!

அருள் said...

RS said...

// //இன்றலவில் ஒழுக்கம் பார்த்து மட்டுமே வீடு வாடகைக்கு விட படுகிறது. அது பார்பனராக இருந்தாலும், தலித்தாக இருந்தாலும். தங்களுக்கு தெரிந்த அளவுக்கு மேல் நிச்சயமாக எனக்கு தெரியும்.// //

ஒழுக்கம் பார்த்தா...!? ஒன்னுமே புரியலையே? வாடகைக்கு வீடு கேட்கும் முன்பின் தெரியாத நபர்களின் ஒழுக்கத்தை எப்படி கண்டுபிடிப்பீர்கள்?

பெரும்பாலான பார்ப்பனர்கள் - மிகவும் நாசுக்காக... "நீஙகள் சைவமா? அசைவமா?" என்று கேட்கிறார்கள். ஒழுக்கசீலர்களாக இருப்பதற்கும் அசைவம் சாப்பிடுவதற்கும் என்ன தொடர்பு?

அதிகம் தெரிந்தவர் பதில் சொல்லுங்களேன்.

அருள் said...

hayyram said...

// //
//உணவகம் என்பது ஒரு சேவையை// உயிர்காக்கும் மருத்துவமே வியாபாரம் ஆயிடிச்சாம். உணவகம் சேவையாம். என்ன வர்ரவன் போறவனுக்கெல்லாம் ஓசிலய சோறு போடுறாங்க சேவைன்னு சொல்றதுக்கு.// //

ஹிஹிஹி...ஹேராம்.....!

முடியலை....!

பொருளாதாரத்தை
1. முதன்மைத்துறை (Primary sector),
2. தொழில்துறை (Industrial sector),
3. சேவைத்துறை (Service sector)
என்று மூன்றாக பிரிக்கிறார்கள்.

அதில் 'உணவகம் நடத்துவது' மூன்றாம் நிலையான 'சேவைத்துறை' என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு உலகளாவிய வகைப்படுத்தல்.

இதுக்காக "என்ன வர்ரவன் போறவனுக்கெல்லாம் ஓசிலய சோறு போடுறாங்க சேவைன்னு சொல்றதுக்கு" என்று நீங்கள் கேட்பது வேடிக்கையாக இருக்கிறது.

Primary sector of the economy: Involves the extraction and production of raw materials, such as corn, coal, wood and iron. (A coal miner and a fisherman would be workers in the primary sector.)

Secondary sector of the economy: (industrial sector) Involves the transformation of raw or intermediate materials into goods e.g. manufacturing steel into cars, or textiles into clothing. (A builder and a dressmaker would be workers in the secondary sector.)

Tertiary sector of the economy: (also known as the service sector or the service industry) Involves the provision of services to consumers and businesses, such as baby-sitting, cinema and banking. (A shopkeeper and an accountant would be workers in the tertiary sector.)

Narayanan said...

வால்பையன் said...
//தமிழில் பேசும் போது ஆங்கில வார்த்தை உபயோகித்தால் என்ன தப்பு? அப்படி செய்தால் தமிழ் அழிந்து விடுமா என்ன?//


என்ன பண்றோம்னு தெரியாத அளவுக்கு நமக்கு சொரணை கெட்டு போச்சில்ல!

தியேட்டர்கள் மினிமம் கேரண்டி முறையில் புக் செய்யப்படும், ஏற்கனவே நட்டப்படிருப்பதால் அந்த தொகையை குறைக்கவும், மேலும் ஓவர் சேட்டை செய்யாமல் இருக்கவும் இம்மாதிரியான முடிவுகள் எடுக்க வேண்டியிருக்கும், இது அனைத்து துறைகளுக்கும் பொருந்தும்!//

OVER- SETTAI ENBADHU THAMIZH THAAN POLIRUKKU.

SOODU SORANAI IRUNDHA INDHA PAKKAME VARA KOODADHU. ADHU SARI SUYMARIYADHAIKAARAR AYITRE, VEKKAM MANAM SOODU SORANAI ELLAM IZHANDHAAL THAANE SUYAMARIYADHAI KIDAIKKUM.

வால்பையன் said...

//நீங்கள் கடவுளரைத் திட்டி எழுதும் இந்த வாசகங்களை உங்கள் ஹோட்டல் முழுக்க எழுதி வைத்து கடை நடத்துங்களேன் தைரியம் இருந்தால்! //


லூசாப்பா நீ!
நீ கடவுளை நம்புறேங்குறதுக்காக
உன் முதுகுல சாமி போட்டோ மாட்டிக்கிட்டே சுத்திக்கிட்டிருக்கியா ?

வால்பையன் said...

//SOODU SORANAI IRUNDHA INDHA PAKKAME VARA KOODADHU. ADHU SARI SUYMARIYADHAIKAARAR AYITRE, VEKKAM MANAM SOODU SORANAI ELLAM IZHANDHAAL THAANE SUYAMARIYADHAI KIDAIKKUM. //


யாரை சொல்றிங்கன்னு தெரியல, நான் நமக்கு சொரனை கெட்டு போச்சுன்னு தான் சொல்லியிருக்கேன், உங்களுக்குன்னு தனியா சொல்லி என்னை நியாயபடுத்தல, நன்றாக பின்னூட்டத்தை பார்க்கவும்!

வால்பையன் said...

ஹிஹிஹிஹிராம்

சாதி திமிரில் பேசுபவர்களிடம் மட்டும் தான் நான் பார்பனியத்திற்கு எதிராக பேசிவருகிறேன், எனது ப்ளாக்கில் எனது வீட்டில் என்ன செய்யனும்னு நீங்கள் சொல்லி தர தேவையில்லை, சாதிதிமிர் உள்ளவர்களை எப்படி காயடிக்கனும்னு எனக்கு தெரியும்! அதற்காக இங்கே சாதிவெறி உள்ளவர்களுக்கு காயடிக்கபடும்னு நான் போர்டு வைக்க வேண்டியதில்லை!

வால்பையன் said...

// உங்களைப் போன்றவர்களுக்கு பகுத்தறிவில்லை என்பதை வெளியே தெரியாமல் மறைத்துக் கொள்ள இது போன்ற அநாகரீக பேச்சுக்கள் கைகொடுக்கிறது. நடத்துங்கள். //


உங்கள் அனுமதி வாங்கி தான் நடத்தனுமோ, அது தான் பார்பனீய திமிருங்கிறது!

எங்கய்யாவது கேட்ட கேள்விக்கு பதில் சொல்லியிருக்கிறா!
உன்னை கேட்டால் அவனை திட்டி பாரேங்கிறது, ஹோட்டலில் போர்டு வையுங்கிறது, உம்மால முடியலைன்னா கோவில்ல உண்டகட்டி வாங்க போக வேண்டியது தானே!

virutcham said...

சாதித் திமிர் மதத் திமிர் இதையெல்லாம் எதிர்ப்பதாக கருதிக் கொண்டு பகுத்தரிவாதத் அல்லது நாத்திகத் திமிர் என்ற ஒன்றை வெளிப்படுத்தும் போது இதுக்கு பதில் அது என்ற அளவிலே தான் அது வெளிப்படும் என்பதையும் கொஞ்சம் நினைவில் வைத்துக் கொள்ளலாம்

கொச்சையான இந்த எதிர்ப்புகள் நாத்திகத்தை அல்லது ஆதிக்கத்தை சாதியத்தை அல்லது சமத்துவத்தை எந்த விதத்திலும் நியாயப் படுத்துவதாக கருத முடியவில்லை.

உணவை உமிழ்நீர் உதவியோடு தான் உட்கொள்கிறோம் என்பதற்காக தட்டில் உமிழ் நீரோடு பரிமாற்ற மாட்டீர்கள் தானே. மேலும் உணவு உண்ண வரும் மக்களை கொஞ்சமேனும் கவர சுத்தமாக சுகாதாரமாக அழகாகத் தான் சுவையான உணவையும் பரிமாரியாக வேண்டும்.

அது மாதிரி தான் கருத்துப் பரிமாற்றங்களும் இருக்க வேண்டும். குறைந்த பட்ச நாகரீகம் இருக்க வேண்டும். விவாதிப்பவர்கள் மட்டும் பங்கு பெறுவதில்லை. பலரும் வாசித்துத் தொலைக்க வேண்டி இருக்கிறது. பாதியில் ச்சே என்று மீதியை படிக்காமல் இருக்கலாம் தான். இருந்தாலும் பொதுவில் விவாதிக்கும் போது குறைந்த பட்ச நாகரீகம் கடைபிடிக்கும் படி விவாதிப்பவர்களை கேட்டுக் கொள்கிறேன்.

hayyram said...

//நீ கடவுளை நம்புறேங்குறதுக்காக
உன் முதுகுல சாமி போட்டோ மாட்டிக்கிட்டே சுத்திக்கிட்டிருக்கியா ?
// உன் கூட விவாதம்பன்றவன் உன்னப்போல லூசாதானே இருக்கனும். சாமி கும்பிட்றவன் துன்னூராவது வெச்சிக்கிறானில்ல. நீ சாமிய பழிப்பவன்னு சொல்லிக்க உன் கையேந்திபவன கருப்புல பெயிண்டடியேன்! எல்லோருக்கும் ஒரு அடையாளம் தான் இருக்கில்ல. வேனும்ன உன் மத குரு வீரமனிகிட்ட ஐடியா கேளு!

hayyram said...

//சாமி போட்டோ மாட்டிக்கிட்டே// சாமி கும்பிடறவன் கடை நடத்தினா சாமி போட்டோவ வெச்சி தானே கடை நடத்தறான். சாமிய திட்டற நீ சாமிய திட்டி வாசகம் வெச்சி கடை நடத்து. ஏன் பயப்படுற! கேட்டா, சாதி திமிர், பார்ப்பனியம்னு சொல்லி ப்ளேட்ட மாத்துற!

அருள் said...

hayyram said...

// //சாமி கும்பிட்றவன் துன்னூராவது வெச்சிக்கிறானில்ல.// //

அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. சாமி கும்பிடுகிறவர்கள் திருநீர் பூசவேண்டும் என்கிற கட்டாயம் எதுவும் இல்லை. சீரடி சாயி பாபாவை கடவுளாக பல இந்துக்கள் வணங்குகிறார்கள், அவரே நெற்றியில் எதுவும் பூசவில்லை.

Ganpat said...

1.கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் தங்கள் கடையில் கடவுள் படத்தை வைப்பதை போல கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் சுவற்றை காலியாக விட்டாலே போதும்.கடவுள் எதிர்ப்பு வாசகங்கள் எதுவும் தேவையில்லை.

2.ஜோ,அருள், வால்பையன் போன்றவர்கள் கடவுள் எதிர்ப்பாளர்கள்.பார்ப்பன துவேஷிகள்.
வலைத்தளம் எல்லாருக்கும் உரியது அவரவர் கருத்தை "அவரவர்" வலைத்தளங்களில் பதிவு செய்வதை யாரும் எதிர்க்க முடியாது.தேவையுமில்லை
ஆனால் இங்கு நடப்பதோ ஒரு நாடகம் போல தெரிகிறது ."hits" அதிகம் வேண்டுமென்று நினைத்தோ என்னமோ டோண்டு இவர்களுக்கு தேவையில்லாமல் இங்கு தளம் அமைத்துக்கொடுத்திருக்கிறார்.
அவர்களும் அதை செவ்வனே பயன் படுத்திக்கொள்கிறார்கள்.

3.தொந்திரவு தாங்க முடியாமல்
ஜோ வை வெளியேற்றம் செய்த டோண்டு,மற்ற இரண்டு பேரையும் இவ்வாறு கட்டிக்கொண்டு அழுவதின் நோக்கம் புரியவில்லை.இப்போதான் ராஜன் என்ற பதிவரின் திருமணத்தை ஒட்டி எழுந்த தர்க்கத்தில் வால்பையன் டோண்டுவைத் தரக்குறைவாக விமரிசித்து இருந்தார்.இப்போ மீண்டும் இவர்கள் நட்பு பாராட்ட தொடங்கி விட்டனர்!!

4.அருளை எடுத்துக்கொண்டால் அவர் கிளிப்பிள்ளை போல சொன்னதையே சொல்வதை தவிர வேறு எதுவும் செய்வதில்லை.ஆனாலும் ஏனோ இங்கு வரும் பின்னூட்டங்களில் படிக்குப்பாதி அவருடையதுதான்.

5.இவ்வாறு இங்கு நடக்கும் நிகழ்வுகளை புரிந்துகொள்ளாது ஹேராம் போன்றவர்கள் மாய்ந்து மாய்ந்து பதில் எழுதுவது பயனற்ற ஒரு செயல்.நாய் வாலை நிமிர்த்த முடியாது நிமிர்த்த வேண்டிய அவசியமும் இல்லை.

6.என்னுடைய தனிப்பட்ட கருத்து:
இங்கு அருள் சாதுர்யமாக ஒரு
anti brahmin polarization செய்துகொண்டிருக்கிறார்.
அதற்கு டோண்டு தெரியாமல் தளம் அமைத்துக்கொடுத்திருக்கிறார்.

7.மேலும் இந்துக்கள் 80 சதவிகிதம் உள்ள நம் நாட்டில் இந்துக்கடவுள் களை ஒரு இந்துவாக பிறந்தவரே பழிக்கும்போது அவரிடம் "நீ துணிவு இருந்தால் அல்லா இயேசுவை பழித்துப்பார்" என்று சொல்வது ஒரு இந்து ஆத்திகனுக்கு அழகல்ல அது நாகரீகமும் அல்ல.

8.எனக்கு தெரிந்தவரை தனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்று பகிரங்கமாக அறிவித்து,நாட்டையே கொள்ளை அடித்துக்கொண்டிருக்கும் ஒரு முதியவருக்கு,இந்து ஆத்திகர்கள் என தம்மை கருதுபவர்கள் எல்லாம் ஒட்டு போடாமல் இருந்தாலே போதும் பிரச்சினை தீர்ந்து விடும்.ஆனால் அங்கு சாதி வந்து விடும்.என்ன செய்வது?

9.கோபம வந்து பயனில்லை சிந்தித்து செயல் பட தெரிந்து கொள்வோம்!

நன்றி.

Anonymous said...

//அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. சாமி கும்பிடுகிறவர்கள் திருநீர் பூசவேண்டும் என்கிற கட்டாயம் எதுவும் இல்லை. சீரடி சாயி பாபாவை கடவுளாக பல இந்துக்கள் வணங்குகிறார்கள், அவரே நெற்றியில் எதுவும் பூசவில்லை.//

ஷீரடி சாய்பாபா கோவிலில் உதி என்று திருநீறு தரப்படுகிறது. பக்தர்கள் எல்லோரும் வாங்கி அணிகிறார்கள்.

நிற்க அருள்!
உங்கள் ஏரணம் தவறு. சாமி கும்பிடுபவர் பற்றிப் பேசும் போது சாமியாகக் கும்பிடப்படுபவரை எடுத்துக்காட்டாகத் தருவது ஏரணத்துக்கேற்றதல்ல.

ஷீரடி சாயிபாபா பொதுவான உலக வாழ்வைத் தவிர்த்து ஆன்மீகத்தேடலில் சென்றவர். மாறுபட்ட இயல்புகள் கொண்ட இருவரை அல்லது இரு பொருட்களை ஒப்பிடுவது "புல் கொடுத்தால் பால் கொடுக்கும் உன்னால முடியாது தம்பி" என்று பசுவின் இயல்பைச் சிறப்பாகக் காட்டி மனிதனை மட்டம் தட்டிய வைரமுத்துவின் தவறு போல இருக்கிறது.

ஏரணம் தப்பிய எடுத்துக் காட்டுகளைத் தவிர்க்கப் பாருங்கள்!

Kannan said...

on a different note, what is your take on Tiruchi Velusamy is report... one of them is here

http://www.youtube.com/watch?v=rTJIossCNfM&feature=related

Kannan said...

on a different note, what is your take on Tiruchi Velusamy is report... one of them is here

http://www.youtube.com/watch?v=rTJIossCNfM&feature=related

Sundu+eli said...

நான் பார்த்த வரையில் வைணவர்களுக்கு சற்று மத பற்று அதிகம் .
திருப்பதிக்கு போகாத சைவர்கள் பெரும்பாலும் இல்லை .(எங்கள் வீட்டில் முக்கால் வாசி விசேஷம் திருப்பதியில் தான் நடந்தது )ஆனால் வைணவர்கள் சிவன் கோயிலுக்கு செல்பவர்கள் மிக குறைவு .அதேபோல் நவகிரக தலங்கள் அவர்களுக்கு என்று தனியே உள்ளது .
இங்கு அமெரிக்கா வில் இருக்கும் வைணவர்கள் கூட இதை கடைபிடிக்கிறார்கள் என்பதுதான் வேடிக்கை .
எனக்கு தெரிந்து மிசிகன் இல் இருந்தபோது அங்கு சிவன் கோயில் மட்டும் இருந்ததால் வைணவர்கள் பெருமாள் கோயில் கட்ட முயற்சிகள் மேற்கொண்டனர் .இப்போது கட்டிவிட்டார்கள் என நினைக்கிறேன்

ezhil arasu said...

//8.எனக்கு தெரிந்தவரை தனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்று பகிரங்கமாக அறிவித்து,நாட்டையே கொள்ளை அடித்துக்கொண்டிருக்கும் ஒரு முதியவருக்கு,இந்து ஆத்திகர்கள் என தம்மை கருதுபவர்கள் எல்லாம் ஒட்டு போடாமல் இருந்தாலே போதும் பிரச்சினை தீர்ந்து விடும்.ஆனால் அங்கு சாதி வந்து விடும்.என்ன செய்வது?//

தலைவர் கலைஞர் அவர்களின் தெளிவான அறிக்கைக்குப்பிறகும் அவரது நேர்மை மேல் சேற்றை வாறி இறைப்பவர்கள் யார் என்பதை இந்த நாட்டிலுள்ள தாழ்த்தபட்ட,பிற்படுத்தபட்ட ஒடுக்கபட்ட இனத்திற்கு நன்றாய் தெரியும்.
மதச் சாயம் பூசி ,மீண்டும் இவர்கள் யாருக்கு காவடி தூக்குகிறார்கள் என்பதை புரியாத அளவிற்கு அறிவிலிகள் அல்ல எம் தமிழ் இனம்.
யார் என்ன் சொன்னாலும் ,செய்தாலும் யார் யாரோடு கூட்டு சேர்ந்தாலும்.
2011லும் தலைவரின் ஆட்சி தான்.

21 ல்ட்சம் குடுபங்களுக்கு கான்கிரிட் வீட்டுக்கான அடையாள அட்டைகள் கொடுக்க பட உள்ளது.
21 *3 66 லட்சம் வாக்குகள் திமுகவுக்கு உறுதி.
இலவச டீவி இன்னும் 10 லட்சம் கொடுக்க இருகிறதாய் செய்தி.
போக்கு வரத்து ஊழியர் மகிழ்ச்சியில்
அரசு ஊழியர் ஆனந்தத்தில்
கூட்டுறவுத்துறை ஊழியர் குதுகலத்தில்.
காங்கிரஸ் + திமுக கூட்டணி தொடரும்.இல்லையென்றாலும், குஜராத்,பீஹார் போல் தனிப் பெரும்பான்மையுடன் கழக ஆட்சி தொடரும்.

ஆதிக்க சக்திகளின் ஆசை ஒரு போதும் பலிக்காது.

வாழ்க தமிழ்கம்
வெல்க கலைஞர்
ஓங்குக அவர்தம் புகழ்

hayyram said...

//.கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் தங்கள் கடையில் கடவுள் படத்தை வைப்பதை போல கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் சுவற்றை காலியாக விட்டாலே போதும்.கடவுள் எதிர்ப்பு வாசகங்கள் எதுவும் தேவையில்லை.//

அது தவறு. அப்படி நடந்தால் அங்கே சாப்பிட வருபவர்களுக்கு மிகப்பெரிய துரோகம் இழைக்கப்படும். அழுகின வாலின் ஹோட்டலில் சாப்பிட வருபவர்கள் இவன் நம்மைப் போன்ற சக மனிதனென்று நம்பி அங்கே வந்து சாப்பிட்டு காசு கொடுத்துச் செல்வான். ஆனால் அந்த காசை வாங்கி கல்லாகட்டுபவன் காசு கொடுத்தவனின் கடவுளரை கெட்ட வார்த்தையில் அசிங்கமாக திட்டுபவன் என்று அவர்களுக்கு தெரியாமல் போகும். அப்படி தெரிந்தால் யாரும் அந்த ஹோட்டலுக்கு போகமாட்டார்கள் தானே! ஆக அவர்களிடம் உண்மையை மறைத்து உத்தமன் போல ஏமாற்றி கல்லா கட்டும் ஒரு ஃப்ராடு தனம் அங்கே நடந்தேற அது காரணாகிவிடும். இந்துக்களின் காசில் சம்பாதித்து இந்துக்களின் கடவுளரையே கெட்டவார்த்தையில் பேசுபவன் அவனை நம்பி ஹோட்டலில் சாப்பிட்டவனுக்கு இழைக்கும் மிகப்பெரிய துரோகம் இல்லையா? இவ்ளோ வீரம் பேசும் அழுகின வால் கொண்ட பையன் தன் வீரத்தை மக்களிடம் நேரடியாக காட்ட வேண்டியது தானே! காசு சம்பாதிக்க முடியாது, தொழில் கெட்டுப் போய்விடும் என்கிற பயத்தில் அவனது ஹோட்டலுக்கு வருபவனிடம் நல்லபிள்ளை போல ஒன்றும் தெரியாத அப்பாவி போல நடித்து காசு சம்பாதிப்பது ஃப்ராடு தனம் தானே! இரட்டை வேடம் போடுவதில் நித்யானந்தாவுக்கும் அழுகின வால் பையனுக்கும் என்ன வித்தியாசம்? இருவருமே எல்லோருக்கும் நல்லவன் போல வெளியே காட்டிக்கொண்டு கல்லா கட்ட நினைப்பவர்கள் என்னும் பட்சத்தில் இந்த அழுகின வாலுக்கு நித்தியைபற்றி பத்தி பத்தியாக எழுத மட்டும் யோக்கியதை எப்படி வந்தது? இருவருமே மக்களிடம் நடிக்கும் ஃப்ராடுகள் தானே?

இந்துக்களிடம் நல்லவன் போல நடித்து காசு சம்பாதித்து அந்த காசிலேயே இந்துக்கடவுளரை அவமதிக்கும் இந்த அழுகிய வாலைக் கூட நறுக்க முடியலாதவர்கள் கருனாநிதியை எப்படி புறந்தள்ள முடியும்?

இந்துக்கடவுளரை அவமதிக்கும் இந்த அழுகிய வாலைக் கூட நறுக்க முடியலாதவர்கள் அமர்நாத் யாத்திரைக்குச் செல்லும் இந்துக்களிடமே வியாபாரம் செய்து சம்பாதித்து விட்டு அவர்களுக்கு தங்க இடம் கொடுக்க மாட்டோம் என்று போராட்டம் செய்த காஷ்மீர முஸ்லீகளிடம் உங்களால் எப்படி உரிமை கோர முடியும்?

அழுகின வால் செய்வது அக்ரஹாரத்தில் சுண்டல் விற்க செல்பவன் பூணூல் மாட்டிக்கொண்டு போவது போன்ற ஃப்ராடு வேலை! இது அவனது ஹோட்டலில் சாப்பிட வருபவர்களுக்கு செய்யும் பச்சை துரோகம்? வெளியே உத்தமன் நாடகம்....உள்ளே அநாகரீக வன்மம்! இந்த அழுகின வாலைக் கூட கண்டிக்க முடியாதவர்கள் பெரிய பெரிய அவமதிப்புகளுக்கெதிராக எப்படித்தான் எதிர்ப்பு தெரிவிப்பீர்களோ! மரத்துப் போன இந்துக்கள்!

Unknown said...

1.பொதுவாகவே நடைமுறையில் விலைவாசி குறைப்பில் அரசியல்வாதிகள் ஏன் அதிகம் அக்கறை காட்டுவதில்லை?
2.தமிழக அரசின் இலவசங்கள்( குறிப்பாக 21 லட்சம் வீடுகள் பற்றிய கலைஞர்தொலைக் காட்சி விளம்பரங்கள்)ஆட்சியை தொடர வைக்குமா?
3.2ஜி ஸ்பெக்ட்ரம்விவகாரம்,பீரங்கி கதை ஆயிடும் போலுள்ளதே?
4.பெரும் புகழ் பெற்ற ,சாகாவரம் பெற்ற எழுத்துக்களின், படைப்பாளிகள் கல்கி சுஜாதா சாவி மீண்டும் உயிர் பெற்று வந்தால் . ?
5.ஆண்டாண்டு காலமாய் மக்கள் சக்தி மகத்தானது என்கிறார்கள். ஒன்றும் சாதிக்க( சமீப காலங்களில்) முடியவில்லையே!ஏன்?

thenkasi said...

//தலைவர் கலைஞர் அவர்களின் தெளிவான அறிக்கைக்குப்பிறகும் அவரது நேர்மை மேல் சேற்றை வாறி இறைப்பவர்கள் யார் என்பதை இந்த நாட்டிலுள்ள தாழ்த்தபட்ட,பிற்படுத்தபட்ட ஒடுக்கபட்ட இனத்திற்கு நன்றாய் தெரியும்.
மதச் சாயம் பூசி ,மீண்டும் இவர்கள் யாருக்கு காவடி தூக்குகிறார்கள் என்பதை புரியாத அளவிற்கு அறிவிலிகள் அல்ல எம் தமிழ் இனம்.
யார் என்ன் சொன்னாலும் ,செய்தாலும் யார் யாரோடு கூட்டு சேர்ந்தாலும்.
2011லும் தலைவரின் ஆட்சி தான்.//
நான் படித்தேன் காஞ்சியிலே ...
தம்பி ....
நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று -
அதை நான் உனக்கு சொல்லட்டுமா இன்று
என்றும் நல்லவர்க்கு காலம் வரும் நாளை
இது அறிஞர் அண்ணா எழுதி வைத்த ஓலை
தம்பி ....
நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று -
அதை நான் உனக்கு சொல்லட்டுமா இன்று

இந்தியாவின் தந்தை என்று காந்தி இருந்தார்
அவர் இடையினிலே ஏழையைபோல் கந்தை அணிந்தார்
இந்தியாவின் தந்தை என்று காந்தி இருந்தார்
அவர் இடையினிலே ஏழையைப்போல் கந்தை அணிந்தார்
ஏணியாக தாழந்தவர்க்கு உதவி புரிந்தார்
இன்று ஏசுவோர்கள் அவரால்தான் பதவி அடைந்தார்

(தம்பி .... நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று )-

நாட்டிற்காக உழைப்பதர்க்கே அண்ணா பிறந்தார்
பொது நலத்தில் தானே நாள் முழுக்க கண்ணை இருந்தார்
நாட்டிற்காக உழைப்பதர்க்கே அண்ணா பிறந்தார்
பொது நலத்தில் தானே நாள் முழுக்க கண்ணை இருந்தார்
ஏற்றுக் கொண்ட பதவிகெல்லாம் பெருமையைத்தந்தார்
தன் இனிய குடும்பம் ஒன்றுக்குத்தான் வறுமையை தந்தார்

(தம்பி .... நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று )-

தெரு தெருவாய் கூட்டுவது பொது நல தொண்டு
ஊரார் தெரிந்து கொள்ள படம் பிடித்தால் சுயநலம் உண்டு
தெரு தெருவாய் கூட்டுவது பொது நல தொண்டு
ஊரார் தெரிந்து கொள்ள படம் பிடித்தால் சுயநலம் உண்டு
மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார்
தம் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார்

(தம்பி .... நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று )-

thenkasi said...

வீடுகெல்லாம் வெளிச்சம் போட கொடுத்த பணத்திலே
தாங்கள் வெளிச்சம் போட்டு வாழ்ந்து விட்டார் நகர சபையிலே
வீடுகெல்லாம் வெளிச்சம் போட கொடுத்த பணத்திலே
தாங்கள் வெளிச்சம் போட்டு வாழ்ந்து விட்டார் நகர சபையிலே
ஏழைக்கெல்லாம் வீடு என்று திட்டம் தீட்டினார்
தாங்கள் வாழ்வதற்கு ஊர் பணத்தில் வீடு கட்டினார்

(தம்பி .... நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று) -

ஏய்பவர்க்கே காலம் என்று எண்ணி விடாதே
பொய் எத்தனை நாள் கை கொடுக்கும் மறந்து விடாதே
ஏய்ப்பவர்க்கே காலம் என்று எண்ணி விடாதே
பொய் எத்தனை நாள் கை கொடுக்கும் மறந்து விடாதே
ஒரு நாள் இந்த நிலைமைகெல்லாம் மாறுதல் உண்டு
அந்த மாறுதலை செய்வதற்கு தேர்தல் உண்டு


ஒரு சம்பவம் என்பது நேற்று -
நேற்று அது சரித்திரம் என்பது இன்று -
இன்று அது சாதனை ஆவது நாளை -
நாளை வரும் சோதனைதான் இடை வேளை

அருள் said...

hmsjr said...

// //ஷீரடி சாய்பாபா கோவிலில் உதி என்று திருநீறு தரப்படுகிறது. பக்தர்கள் எல்லோரும் வாங்கி அணிகிறார்கள். // //

சாய்பாபா கோவிலில் திருநீறு தரப்படுவதை நான் மறுக்கவில்லை.

சாமி கும்பிடுகிறவன் திருநீறாவது வைத்திருப்பதாக ஹேராம் கூறினார். ஆனால், அப்படியெல்லாம் கட்டாயம் எதுவும் இல்லை என்பதைத்தான் எடுத்துக்கூறினேன்.

"நீறில்லா நெற்றி பாழ்" என்று பழமொழி கூட இருக்கிறது. ஆனால், இது ஒன்றும் இந்துக்களின் கட்டாய கடமை இல்லை - இன்னும் சொல்லப்போனால், இந்துமதக் கடமை என்று எல்லா இந்துக்களுக்கும் பொதுவான விதிமுறை எதுவுமே இல்லை.

இல்லாத விதிமுறைகளை இருப்பது போல பேசுவதைதான் நான் மறுத்தேன்.

அருள் said...

Ganpat said...

// //ஜோ,அருள், வால்பையன் போன்றவர்கள் கடவுள் எதிர்ப்பாளர்கள்.// //

நான் கடவுள் எதிர்ப்பாளன் அல்ல.

அநீதியான "பார்ப்பன - சிறுபான்மை - ஆதிக்க சாதிவெறி"யை எதிர்ப்பது கடவுள் எதிர்ப்பு ஆகாது.

Unknown said...

\\ இரட்டை வேடம் போடுவதில் நித்யானந்தாவுக்கும் அழுகின வால் பையனுக்கும் என்ன வித்தியாசம்? இருவருமே எல்லோருக்கும் நல்லவன் போல வெளியே காட்டிக்கொண்டு கல்லா கட்ட நினைப்பவர்கள் என்னும் பட்சத்தில்//

ஹே ராம் வசதியா மற்றொருவரை மறந்து விட்டு பேசுகிறீர்களே, அட அவர் தாம்ப்பா நம்ப மன்மத ராசா ஸ்ரீ ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் . நிதியானத்தாவ எடுத்து கட்டின நீங்க ஏன் அவாள மட்டும் எடுத்து கட்டு காட்டல. எங்க இங்க தான் உங்க பூணூல் பாசம் பட படகிறது ஹே ராம்.

\\அமர்நாத் யாத்திரைக்குச் செல்லும் இந்துக்களிடமே வியாபாரம் செய்து சம்பாதித்து விட்டு அவர்களுக்கு தங்க இடம் கொடுக்க மாட்டோம் என்று போராட்டம் செய்த காஷ்மீர முஸ்லீகளிடம் உங்களால் எப்படி உரிமை கோர முடியும்?//

ஹே ராம் தங்க இடம் கேட்ட தான் பரவா இல்லையே ஒரு நாள் தங்கி விட்டு உன்னோட வீட்டையே எழுதி கொடுன்னு கேட்ட எங்க போறது.

Ganpat said...

@hayyram..

1.சென்னையில் உள்ள ஒரு பிரசித்தி பெற்ற உணவக குழுமத்தின் எந்த கிளையில் நுழைந்தாலும் சுவர் தெரியாத அளவிற்கு சாமி படம்தான் இருக்கும்.ஒரே பக்தி மணம் கமழும்.அந்த நிறுவனத்தின் தலைவர் ஒரு பக்தராக தம்மை காட்டிக்கொள்பவர்.அவர் இந்த வியாபாரத்தை சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் துவக்கியபோது தன்னுடன் பாகஸ்தராக சேர்ந்த ஒருவரை தொழில் விருத்தி அடைந்ததும் ஆள் வைத்து மிரட்டி ஒதுங்க வைத்தவர்.மேலும் தன் கீழ் பணி புரியும் பெண் ஒருத்தி மேல் ஏற்பட்ட ஆசையால் அவள் கணவரை கொலை செய்து அவளை பலாத்காரமாக அடைய முயன்றவர் என்ற வழக்கும் நிலுவையில் உள்ளது.
இந்த ஆத்திகரை விட வால் பையன் ஒன்றும் பெரிய குற்றம் செய்யவில்லை என நான் நினைக்கிறேன்

2.நான், அருள் (அ)வால்பையன் ஆதரவாளன் அல்ல.அவர்கள் கருத்துடன் எனக்கு உடன்பாடு கிடையாது.ஆனால் அவர்களுக்கு இங்கு (டோண்டு வலைதளத்தில்) எந்த வேலையும் இல்லை என்பது என் கருத்து.டோண்டு தான் நடத்தும் உடுப்பி ஹோட்டலில் அதிக லாபம் கருதி பிரியாணி போடுகிறார்.இதனால் கொஞ்ச நாளில்
இட்லி தோசை சாப்பிடுபவர்கள் கூட இங்கு வரமாட்டார்கள்.(பிரியாணி ரசிகர்கள் ஒரிஜினல் முனியாண்டி விலாஸ் இருக்கையில் உடுப்பி ஹோட்டலுக்கு வர மாட்டார்கள்)

3,நம் நாட்டில் இப்போ நிலவும் அத்தனை பிரச்சினைக்கும் காரணம் நேர்மை,ஒழுக்கம் குறைவுதான்;பக்தி குறைவு அல்ல!

4.நாத்திக கொள்ளைக்காரன் ஒருவனிடம் இருந்து விடுபட்டு ஆத்திக கொள்ளைக்காரியிடம் போய் சேர்ந்தால் நம் கஷ்டங்கள் எல்லாம் தீர்ந்துவிடும் என நாம் மனப்பால் குடிக்கிறோம்.

5.தன் உணவகத்தில் கலப்படம் இன்றி,நல்ல தரமான உணவு வகைகளை சரியான விலைக்கு விற்று வியாபாரத்தை நடத்துமாறு வால்பையனையும்,
பார்பனர் தவிர மற்ற இனத்தவருக்கு உதவி செய்து அவர்களிடையே இருக்கும் அநீதியாளர்களை மற்றவர்களுக்கு அடையாளம் காட்டி விலக்கசெய்து ,மற்றவர்கள் வாழ்வு மேன்மையுற உழைக்குமாறு அருள் ளையும் ,இந்த இருவரும் பார்பனர்களையோ,கடவுள்களையோ நிந்தித்து எழுதும் எந்த பின்னூட்டத்தையும் இடவேண்டாமென்று டோன்டுவையும் வேண்டிகேட்டுக்கொள்கிறேன்.
நன்றி

மணிகண்டன் said...
This comment has been removed by the author.
சிவக்குமரன் said...

@வால், - எனக்கு ஒரு விஷயம் புரியல, hayyram உஙகளோட கருத்துக்கு எதிர்கருத்து சொல்றதவிட உங்க ஹோட்டல தான் target பண்றாரு. அத விட profile- இல்லாத/வெளிப்படுத்த விரும்பாத ஒருத்தரோட ஏன் உங்க நேரத்த வீணாக்கறீங்க!

Arun Ambie said...

//டோண்டு தான் நடத்தும் உடுப்பி ஹோட்டலில் அதிக லாபம் கருதி பிரியாணி போடுகிறார்.//
ஹோட்டல் எங்கே இருக்கிறது? போனால் சாப்பிட்ட மாதிரியும் ஆச்சு, டோண்டு ஐயாவைப் பார்த்த மாதிரியும் ஆச்சு!!!!

Arun Ambie said...

//21 ல்ட்சம் குடுபங்களுக்கு கான்கிரிட் வீட்டுக்கான அடையாள அட்டைகள் கொடுக்க பட உள்ளது.//
அட்டை எப்போ குடுக்கறது? வீடு எப்போ கட்டுறது? அதுக்குள்ள அதுக்குள்ள உதயநிதி மகன் திமுக தலைவராயிடுவார் போலிருக்கே???

Anonymous said...

அடுத்த டோண்டு பதிலகளுக்கான என் கேள்விகள்:
1. உங்கள் உடுப்பி ஹோட்டலில் டிகிரி காபி, அடை-அவியல் கிடைக்குமா? மதியச் சாப்பாடு உண்டா?

(அம்மா ஊருக்குப் போனதில் இருந்து self cooking பாதி, Office cafeteria மீதி. நல்ல ஹோட்டல் என்றால் நன்றாகச் சாப்பிடலாமே!)

2. உங்கள் உடுப்பி ஹோட்டலில் நீங்கள் சாப்பிடுவீர்களா? (Important question in decision making!!)

Unknown said...

\\எப்படியோ நீங்கள் அல்லா , ஏசு பற்றி பேசினால் உருட்டுக்கட்டை எடுத்து வந்து போராட ஒரு இடம் இருக்கிறது என்பது உறுதியாகிவிட்டது. அதுவரை நலம்.//

வால் உங்க கடைக்கு ஹேராம் அவர்கள் ரூட் போட்டு கொடுத்து இருக்கிறார் போல இருக்கு. பாத்து தலைல யாரவது பச்சை கொடி கட்டி கிட்டோ, இல்லை வெள்ளை கொடி கட்டிகிட்டோ வந்தா அதுக்கு ஒரு இஸ்லாமியனோ இல்லை கிரிதுவனோ பொறுப்பு கிடையாது என்பதை அறிந்து காந்தி யடிகள் கொலையை மனதில் நிறுத்தி கொள்ளுங்கள். இந்த பின்னூட்டத்தை டோண்டு அவர்கள் கண்டிப்பாக வெளியிட மாட்டார் என்றே நினைக்கிறன். பார்க்கலாம் அவர் நாடு நிலைமையை.

dondu(#11168674346665545885) said...

@hmsjr
There is no such hotel.

Dondu N. Raghavan

அருள் said...

ஜேஜே said...

// //பாத்து தலைல யாரவது பச்சை கொடி கட்டி கிட்டோ, இல்லை வெள்ளை கொடி கட்டிகிட்டோ வந்தா அதுக்கு ஒரு இஸ்லாமியனோ இல்லை கிரிதுவனோ பொறுப்பு கிடையாது என்பதை அறிந்து காந்தி யடிகள் கொலையை மனதில் நிறுத்தி கொள்ளுங்கள்.// //

சரியாகச் சொன்னீர்கள்.

கையில் 'இஸ்மாயில்' என்று பச்சைக்குத்திக் கொண்டு - துப்பாக்கியால் சுட்டது முதல், தமிழ்நாட்டின் தென்காசி ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் தமக்குத் தாமே இரண்டு ""பைப்'' வெடிகுண்டுகள் வைத்தது வரை - ஒரு நீண்ட பட்டியல் இருக்கிறது.

அதே நேரத்தில் - திரு. வால்பையனுக்காக இந்துக்கள் அணிதிரண்டு இசுலாமியர்களை எதிர்க்க வழி இல்லை என்பதால் அப்படியெல்லாம் நடக்காது. மதக்கலவரத்துக்கு வாய்ப்பில்லாத போது இந்துத்வ தீவிரவாதிகள் இந்த வெட்டி வேலையில் இறங்க மாட்டார்கள்.

மணிகண்டன் said...

Dondu, Thanks for answering my questions. Tonight i will sleep peacefully.

வஜ்ரா said...

கோட்சே கையில் இஸ்மாயில் என்று பச்சைக்குத்திக்கொண்டான் என்று அடிக்கடி அடித்துவிடும் அருள். அந்த வரலாற்று "உண்மை" எங்கு எழுதப்பட்டுள்ளது அதை யார் எழுதியது என்பதை சுட்டிக்காட்டினால் இவ்வையகம் நலம் பெரும்.

Ganpat said...

டோண்டுவின் இந்த வலைதளத்தை நான் ஒரு உடுப்பி ஹோட்டலாக உருவகப்படுத்தி அருள்,வால்பையன் பின்னூட்டங்களை இங்கு வெளியிடுவது பிரியாணி போடுவது போன்றது என குறிப்பிட்டிருந்தேன்.பின்னால் வந்த சில பின்னூட்டங்களில் டோண்டு உண்மையிலேயே ஒரு ஹோட்டல் நடத்துவது போல கேள்வி கேட்கப்பட்டு அதற்கு அவர் விளக்கம் வேறு அளிக்க வேண்டியதாகி விட்டது.
அவருக்கு நேர்ந்த இந்த சிரமத்திற்கு வருந்துகிறேன்.மன்னிக்கவும்
நன்றி

வஜ்ரா said...

19ம் நூற்றாண்டில் தயாரிக்கப்பட்டு இபொழுது காலாவதியாகிப்போன/கெட்டுப்போன உணவுடன் (உயர் தர சைவ/அசைவ) பிரியாணியை ஒப்பிட்டதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

ரிஷபன்Meena said...

//Ganpat said..

டோண்டு தான் நடத்தும் உடுப்பி ஹோட்டலில் அதிக லாபம் கருதி பிரியாணி போடுகிறார்.இதனால் கொஞ்ச நாளில்
இட்லி தோசை சாப்பிடுபவர்கள் கூட இங்கு வரமாட்டார்கள்.//

வெகு நாட்களுக்குப் பிறகு நான் படித்த நல்ல பின்னூட்டம்.

கொள்கையை நிலை நிறுத்துவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினாலும் அது போல எந்த நோக்கமும் இவர்களுக்கு கிடையாது. சும்மா பரபரப்பு விரும்பிகள் அவ்வளவே.

தானே தன் மதிப்பைக் கெடுத்துக் கொள்வது எல்லோருக்கும் கைவராது.

தாறுமாறு said...

டோண்டு,

பத்ரியின் ஸ்பெக்ட்ரம் சர்ச்சை குறித்த புத்தகம் படித்தீர்களா? அவர் என்ன படிப்பவர்கள் எல்லாம் கேனயர்கள் என நினைக்கிறாரா?
ஸ்பெக்ட்ரம் - நடந்தது என்ன? என்று கழகக் கண்மணிகளை விளக்க கூட்டம் நடத்தச்சொல்லியிருக்கிறார்கள். அதற்கு கழகம் சார்பில் பல
நூறு காப்பிகள் ஆர்டர் கிடைக்கும் என்ற நம்பிக்கையா?

Anonymous said...

//@hmsjr
There is no such hotel.//

//டோண்டுவின் இந்த வலைதளத்தை நான் ஒரு உடுப்பி ஹோட்டலாக உருவகப்படுத்தி அருள்,வால்பையன் பின்னூட்டங்களை இங்கு வெளியிடுவது பிரியாணி போடுவது போன்றது என குறிப்பிட்டிருந்தேன்.பின்னால் வந்த சில பின்னூட்டங்களில் டோண்டு உண்மையிலேயே ஒரு ஹோட்டல் நடத்துவது போல கேள்வி கேட்கப்பட்டு அதற்கு அவர் விளக்கம் வேறு அளிக்க வேண்டியதாகி விட்டது.//

ஐயாக்களே! சோ.ராமசாமியும் டோண்டு ஐயாவும் காலையில் பல் தேய்ப்பார்களா என்றெல்லாம் கேள்வி கேட்கிறார்களே... அதற்கும் டோண்டு ஐயா உட்கார்ந்து பொறுமையாக பதில் சொல்கிறாரே... நாமும் கொஞ்சம் அப்படிக் கேட்டுப் பார்க்கலாம் என்று நான் கேட்டுவைத்தேன். இப்புடிச் செஞ்சுப்புடீகளேப்பூ!!!

சரி விடுங்கப்பூ! அடுத்த டோண்டு பதில்களுக்கு என் கேள்வி:
1. எதிர்காலத்தில் உடுப்பி ஹோட்டல் வைக்கும் ஐடியா இருக்கிறதா?
2. அந்த ஹோட்டலில் பிரியாணி போடுவீர்களா?
3. அந்த ஹோட்டலில் நீங்கள் சாப்பிடுவீர்களா?
(விடமாட்டம்ல! அம்பியா கொக்கா!!)

அருள் said...

வஜ்ரா said...

// //19ம் நூற்றாண்டில் தயாரிக்கப்பட்டு இபொழுது காலாவதியாகிப்போன/கெட்டுப்போன உணவுடன் (உயர் தர சைவ/அசைவ) பிரியாணியை ஒப்பிட்டதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.// //

கி.மு. 2ம் நூற்றாண்டிற்கும் கி.பி. 2ம் நூற்றாண்டிற்கும் இடையில் மனுவால் தயாரிக்கப்பட்டு இபோதும் நாட்டைக்கெடுத்துக் கொண்டிருக்கும் ஊசிப்போன தயிர்சாதத்துடன் பிரியாணியை ஒப்பிட்டதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்

வஜ்ரா said...

அருள்.

தயிர் சாதம் பிரியாணி பற்றியெல்லாம் இருக்கட்டும். நான் கேட்ட முக்கியமான கேள்வியான, கோட்சே தன் கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்திக்கொண்டதற்கான ஆதாரம் எங்கே ?

அதுக்கு வழியில்லை.

வெள்ளாள சத்திரிய வன்னிய ஐயாவின் முப்பாட்டனாரின் பங்காளியின் முப்பாட்டனாரின் கொள்ளுத்தாத்தா மனுவைப்பற்றி என்ன பேச்சு வேண்டிக்கெடக்கு ?

dondu(#11168674346665545885) said...

@ hmsjr
Stupid questions, not deserving an answer.

Dondu N. Raghavan

மணிகண்டன் said...

டோண்டு, என் கேள்விகளுக்கு பதில் அளித்ததற்கு நன்றி. எனது கேள்விகளை இகழ்ந்து வரும் பின்னூட்டங்களை நிராகரிக்க வேண்டுகிறேன். இல்லையென்றால், உங்கள் பதிவில் வந்து கேள்வி கேட்கும் பொழுது பயம் வந்துவிடும் சாத்தியக்கூறு இருப்பதால் தான். ப்ளீஸ். எனக்காக இந்த வேண்டுகோளை அங்கீகரிக்க கூறுகிறேன்.

virutcham said...

@Arul

மாணவர்களை போதைக்கு அடிமைப்படுத்தும் இந்த புதிய சாதனம் பற்றி தகவல் தரும் இந்த பதிவை

http://www.virutcham.com/2011/01/பள்ளி-பள்ளி-மாணவர்களை-போ/
கொஞ்சம் படித்துப் பாருங்கள்.
Dr அன்புமணி ராமதாஸ் மின்னஞ்சல் தெரிந்தால் சொல்லுங்கள். அல்லது இந்தத் தகவலை அவரிடம் சேர்த்து அவரது புகை பிடித்தலுக்கு எதிரான போராட்டத்தில் இதையும் சேர்த்துக் கொள்ள சொல்ல முடியுமா? இந்த மாதிரி விளம்பரங்களை தடை செய்யவும் அந்த பொருளையே தடை செய்யவும் அல்லது இப்படி மாணவர்களுக்கு எளிதில் கிடைக்க கூடிய வகையில் அமையாமலாவது செய்யவும் நடவடிக்கை எடுத்தால் பல மாணவர்கள் வாழ்க்கை இப்படி சுலபத்தில் தடம் மாறாமல் காப்பாற்ற உதவும்

அருள் said...

வஜ்ரா said...

// //கோட்சே தன் கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்திக்கொண்டதற்கான ஆதாரம் எங்கே ? // //

“A conspiracy is deep rooted secret planning of a crime and needs more than what the proposed Communal Violence is willing to admit. Nathuram Godse had made five attempts to kill Mahatma Gandhi. He even got circumcised in JJ Hospital in Bombay where the staff celebrated at the successful operation. (PM Rehmani, Faizane Rehmani, Anjuman Moinut tulba, 2005). The aim was to cause anti Muslim riot. He had shot in full view of the police and public and was no fool to believe that the people would have mercy if he was found uncircumcised. However, in the resultant melee he slipped away. But unfortunately he also carried a copy of his own newspaper “Hindu Rashtra”. The police searched lodges and hotels and came upon the abandoned copy of the Marathi newspaper and traced him to Poona. Before the day was over Prime Minister Nehru came to know the identity of the assassin and went on the air and told the nation. Till then Muslims were frightened and held their breath for the backlash that would visit upon them.”

http://www.countercurrents.org/mkhan070710.htm

“One of the motives was also to provoke anti-muslim riots. Godse circumcised himself and adopted identity of a Muslim. This was done so if he died in police encounter that will provoke anti-muslim riots.”

http://en.cyclopio.com/Nathuram%20Godse?4


http://keetru.com/index.php/home/2009-10-07-10-47-41/09/index.php?option=com_content&view=article&id=4020:2010-02-21-08-03-43&catid=1:articles&Itemid=87

http://idhuthanunmai.blogspot.com/2008/01/blog-post_31.html

http://vanjoor-vanjoor.blogspot.com/2007/01/blog-post_668.html

http://onlyoneummah.blogspot.com/2010/08/blog-post_26.html

http://viduthalai.periyar.org.in/20100826/news21.html

http://marxism.sivalingam.in/articles/ayodhyaissue-2.htm

http://munaskhan.spaces.live.com/blog/cns!EE547136DF10B8CB!1408.entry

dondu(#11168674346665545885) said...

@Arul
Cite some contemporary documents (dating around 1948) and not the lies of keetru or periyar sites, dating around 2005.

For example, if you quote the post mortem report of Godse's cadaver and this tattoo was mentioned therein, then it will be acceptable.

Godse could have easily dressed himself in Muslim garb and just run away. There would have been a massacre of Muslims in Delhi.

But he did nothing of the sort. After shooting at Gandhi, he remained where he was and underwent the beating by the onlookers passively.

And if the tattoo was a fact, this would have been a fodder to the Congress party for its propaganda against him.

Freedom at Midnight by Dominic Lapierre and Harry Collins does not mention this.

So, what you are doing is to repeat the hate propaganda of some persons with axes to grind.

Dondu N. Raghavan

dondu(#11168674346665545885) said...

@Manikandan
Don't worry. You asked some tongue-in-cheek questions and I gave answers in the same spirit.

Don't worry about others' reactions. Be happy and wish you a very Happy and Prosperous New Year.

Regards,
Dondu N. Raghavan

அருள் said...

virutcham said...

// //புகை பிடித்தலுக்கு எதிரான போராட்டத்தில் இதையும் சேர்த்துக் கொள்ள சொல்ல முடியுமா? இந்த மாதிரி விளம்பரங்களை தடை செய்யவும் அந்த பொருளையே தடை செய்யவும் அல்லது இப்படி மாணவர்களுக்கு எளிதில் கிடைக்க கூடிய வகையில் அமையாமலாவது செய்யவும் நடவடிக்கை எடுத்தால் பல மாணவர்கள் வாழ்க்கை இப்படி சுலபத்தில் தடம் மாறாமல் காப்பாற்ற உதவும்// //

மிகுந்த பொறுப்புணர்வுடன் இந்த கேட்டினை எடுத்துக்காட்டியதற்கு நன்றி.

Cool Lip Tabbaq என்பது ஒரு புகையிலைப் பொருள். எனவே, புகையிலைக்கு எதிரான நடவடிக்கைகள் அனைத்தும் இதற்கும் பொருந்தும்.

இந்த விளம்பரம் ஏற்கனவே தடைசெய்யப்பட்ட ஒன்றுதான். ஆனால், விளம்பரத்தில் "Cool Lip Tabbaq" என்று குறிப்பிடாமல் "Cool Lip Mouth Freshener" என்று குறிப்பிடுகிறார்கள். அப்படியும்கூட இந்த விளம்பரம் புகையிலை கட்டுப்பாடு (COTPA 2003) சட்டப்படி குற்றம்தான்.

அவ்வாறே, பள்ளி மாணவர்களுக்கு இதனை விற்பதும் சட்டப்படி குற்றம். COTPA 2003 சட்டப்படி 18 வயதுக்கு கீழானவர்களிடம் புகையிலைப்பொருட்களை விற்க கூடாது.

எனவே, நீங்கள் குறிப்பிட்டுள்ள பள்ளி குறித்த விவரத்தை அளித்தால், அவர்களுடன் சேர்ந்து சட்டப்படி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். பள்ளி மாணவர்களை குறிவைத்து இதனை விற்கிறார்கள் என்பதை நிரூபிப்பது அவசியம்.

2010 தொடக்கத்தில் Four Square சிகரெட் சார்பாக இசைநிகழ்ச்சிகள் நடத்திய போது - அவை அனைத்தும் தடுத்து நிறுத்தப்பட்டன. இப்போது, பள்ளிகளும் சமூக ஆர்வலர்களும் முன்வந்தால் இந்த Cool Lip தீமையையும் தடுக்க முடியும்.

பொதுவாக புகையிலை பொருள் விளம்பரங்களை முற்றிலுமாக தடுப்பதற்கான முன்முயற்சிகள் தொடங்கப்பட வேண்டும், ஆர்வமுள்ளோர் ஒன்றிணைந்தால் சாதிக்கலாம்.

virutcham said...

@அருள்
நன்றி. பள்ளியின் பெயர் வெளிபடுதப்படுவதை பள்ளி விரும்புமா என்பது எனக்குத் தெரிய வில்லை. நீங்கள் உங்களோடு அல்லது சம்பந்தப் பட்ட ஆர்வலர்களுடைய விவரங்களையும் அவர்கள் எந்த மாதிரி உதவுவார்கள் என்பதையும் அளித்தால் நான் பள்ளிக்குத் தெரியபடுத்துகிறேன். அவர்கள் நேரடியாகத் தொடர்பு கொள்ளட்டும்.

வஜ்ரா said...

மார்குசுவாதம், பெரியாரிசம், கவுண்டர்கரண்ட் போன்ற வலைத்தளங்களிலிருந்து சுட்டிகள் கொடுத்துள்ளீர்கள்.

இதெல்லாம் நம்பக்கூடிய தரவுகளா ?

காந்தியை 30 ஜனவரி 1948 கோட்சே கொன்றான். அடுத்தநாள் செய்தித்தாளில் கூட நீங்கள் குறிப்பிட்டது போல் கோட்சே இஸ்மாயில், பாமாயில் என்று பச்சைக்குத்திக்கொண்டதாக செய்திகள் வரவில்லை. அவனை ஒரு ஓரினச்சேர்கையாளன் என்றெல்லாம் கூட காங்கிரஸ் பார்டி கூறியிருந்தது (விக்கியைப் பார்க்க).

கோட்சேயின் அந்தரங்கத்தையே அறிந்தவர்களுக்கு இந்த பாமாயில் விசயம் தெரியாமலா இருந்திருக்கும் ?

சிம்பிளாகச் சொன்னால். அந்த நேரத்தில் காங்கிரஸ்காரர்களுக்கே உதிக்காத இந்த போலி செக்குலர் யோசனை, சமீபத்தில் ஏதோ ஒரு போலி செக்குலர்வாதியின் பயன்படுத்தாத பகுதியில் தோன்றி வெளிவந்துள்ளது என்பது மட்டுமே உண்மை.

dondu(#11168674346665545885) said...

//போலி செக்குலர்வாதியின் பயன்படுத்தாத பகுதியில்//
அது என்ன பகுதி? :))))))))))

அன்புடன்,
டோண்டு ராகவன்

அருள் said...

@virutcham

முடியுமானால் பின்வரும் முகவரிகளுக்கு புகார் அளிக்க சொல்லுங்கள்.

Director of Public Health and Preventive Medicine,
Directorate of Public Health and Preventive Medicine,
359, Anna Salai,
DMS Complex,
Teynampet,
Chennai – 600 018

State Tobocco Control Cell,
359, Anna Salai,
DMS Complex,
Teynampet,
Chennai – 600 018

விருப்பமிருந்தால் எனக்கு தகவல் அளிக்கலாம். நான் என்னாலான முன்முயற்சியினை மேற்கொள்வேன்.

arulgreen@gmail.com

Unknown said...

டோண்டு அண்ணா,

மோடி எதை செய்தாலும் கண்டு க்க மட்டேன்க்ரா கண்டுக்க மட்ட்டேன்க்ரா என்று மாஞ்சு மாஞ்சு பதிவு போடுற நீங்க எல்லா நியூஸ் பத்திரிக்கை மற்றும் தொலைகாட்சி எல்லாவற்றிலும் அடிபடும் காவி தீவிரவாதி அசிமானந்த வாக்கு மூலம் பற்றிய செய்திய நீங்களோ மற்றும் தமிழ் ஹிந்து தளமோ வாய் தொறக்க வில்லையே அது எதனால் ..ஓ ஒ நீங்களும் ஒரே குட்டையில் ஊறிய மட்டை தானோ.

வஜ்ரா said...

//
அது என்ன பகுதி? :))))))))))
//


மூளை.

dondu(#11168674346665545885) said...

@வஜ்ரா

ஓ, நான் வேற எதையோ கற்பனை பண்ணிக்கிட்டேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

@ஜேஜே
அதையெல்லாம் சொல்லறதுக்குத்தான் நீங்க எல்லாம் இருக்கீங்களே.

கைது செய்யப்பட்டவர் சட்டத்தை சந்திக்கட்டும். அவருக்கு யாரும் இங்கே சப்பைக்கட்டு கட்டவில்லை (ராசா தலித், அதனால்தான் போன்ற புலம்பல்கள்).

டோண்டு ராகவன்

அருள் said...

ஜேஜே said...

// //எல்லா நியூஸ் பத்திரிக்கை மற்றும் தொலைகாட்சி எல்லாவற்றிலும் அடிபடும் காவி தீவிரவாதி அசிமானந்த வாக்கு மூலம் பற்றிய செய்திய நீங்களோ மற்றும் தமிழ் ஹிந்து தளமோ வாய் தொறக்க வில்லையே அது எதனால்// //

சம்சோதா தொடர்வண்டி குண்டு வெடிப்பு, மாலேகான் குண்டு வெடிப்பு, அய்தராபாத் மெக்கா மசூதி குண்டு வெடிப்பு தென்காசியில் தனது ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்திலும் பேருந்து நிலையத்திலும் குண்டுவைத்தது, கேரள மாநிலம் கண்ணூரில் வெடிகுண்டு தயாரித்துக்கொண்டிருந்த திலீபன், பிரதீபன் என்ற இரு ஆர்.எஸ்.எஸ். காரர்கள், அவர்கள் தயாரித்த குண்டுகளாலேயே பலியானது - என்று மிகநீண்ட பட்டியல் இருக்கிறது.

இதற்கெல்லாம் பார்ப்பன கூட்டம் தானாக வாய் திறக்காது. யாராவது கேட்டால் "கைது செய்யப்பட்டவர் சட்டத்தை சந்திக்கட்டும்" என்று மேம்போக்கான நழுவல்தான். அப்படியே, காவித்தீவிரவாதம் என்று எதுவும் இல்லை என்று வேறு சாதிப்பார்கள். அப்படியானால் - இந்த 'இந்துத்வ பயங்கரவாதம்' எல்லாம் என்ன? என்பதற்கும் பதில் இருக்காது.

அதேசமயம் இசுலாமியர்கள் பக்கமிருந்து ஏதேனும் குண்டுவெடிப்பு நிகழ்ந்தால் - அப்போது "கைது செய்யப்பட்டவர் சட்டத்தை சந்திக்கட்டும்" என்று அதைப்பற்றி பேசாமல் விட்டுவிட மாட்டார்கள்.

ஆளுக்கொரு நீதி என்பதும் - பார்ப்பான் செய்யும் எந்த செயலுமே குற்றமல்ல - என்பதும்தான் இவர்களின் நீதி.

dondu(#11168674346665545885) said...

@அருள்
இதையெல்லாம் வன்கொடுமை செய்து, அதே சம்யம் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நீக்க வேண்டும் என கும்மியடிக்கும் வன்னியன் எல்லாம் கூறக்கூடாது.

டோண்டு ராகவன்

வஜ்ரா said...

//
அதேசமயம் இசுலாமியர்கள் பக்கமிருந்து ஏதேனும் குண்டுவெடிப்பு நிகழ்ந்தால் - அப்போது "கைது செய்யப்பட்டவர் சட்டத்தை சந்திக்கட்டும்" என்று அதைப்பற்றி பேசாமல் விட்டுவிட மாட்டார்கள்.
//

அதாவது குண்டு வெடிப்பு நிகழ்த்துபவன் இஸ்லாமியனாக இருந்தால் அது இஸ்லாமியத் தரப்பு குண்டு வெடிப்பு. இந்துவாக இருந்தால் அது இந்துத் தரப்பு குண்டு வெடிப்பு. இப்படிப்பட்ட கட்டம் கட்டும் மனப்பாங்குடன் எதைத் தான் ஒழுங்காகச் சிந்திக்க முடியும் உங்களால் ?

வதந்தியை உண்மை என்று நம்பும் ஆள் நீங்கள் (இஸ்மாயில் பாமாயில் சமாச்சாரம்). நீங்கள் கூறும் பட்டியலில் எவ்வளவு உண்மை என்று உங்கள் மனசாட்சிக்குத் தவிர வேறு யாருக்குமே தெரியாது.

அருள் said...

@டோண்டு ராகவன்

குற்றமிழைப்பவர்கள் எந்த சாதியாக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் எங்களுக்கு மாற்று கருத்து இல்லை. அதேநேரத்தில் வன்கொடுமை சட்டம் மிகப்பெரும்பாலும் குற்றமிழைக்காதவர்கள் மீது அநீதியாக சுமத்தப்படுவதைத்தான் நாங்கள் எதிற்கிறோம்.

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் தலித் மக்களுக்குமிடையே இந்த விடயத்தில் முரண்பாட்ட கருத்து இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால், இதனை இந்துத்வ பயங்கரவாதிகளின் இசுலாமிய எதிர்ப்புடன் ஒருபோதும் ஒப்பிட முடியாது.

சகோதரர்களுக்கு இடையே இருக்கும் முரண்பாடுகள் போன்றதே இது. தலித்துகளும் பிற்படுத்தப்பட்டோரும் ஒருத்தாய் மக்கள். நாங்கள் தமிழர்கள், நாங்கள் தனி ஈழத்தை ஆதரிப்பவர்கள், நாங்கள் இடஒதுக்கீட்டிற்காக போராடுகிறவர்கள், நாங்கள் பாபர் மசூதி இடிப்பை எதிர்ப்பவர்கள், நாங்கள் கோவில்களில் எல்லா சாதியினருக்கும் அர்ச்சகராகும் உரிமை உண்டு என்பவர்கள், நாங்கள் தமிழ் வழி கல்விக்கும் சமச்சீர் கல்விக்கும் போராடுகிறவர்கள், நாங்கள் உழவர் மேம்பாட்டிற்கும், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் வாதாடுபவர்கள், நாங்கள் நகர்ப்புற குடிசை இடிப்பை எதிர்ப்பவர்கள் - எங்களை இணைக்க ஆயிரம் காரணங்கள் உண்டு.

இந்துத்வ பங்கரவாதிகளுக்கும் இசுலாமிய சகோதரர்களுக்கும் இடையேயான உறவு எப்படி?

dondu(#11168674346665545885) said...

@அருள்
பாப்பான் என்றால் எல்லோருக்கும் கிள்ளுக்கீரையா?

இப்போது எனது யுத்த அறிவிப்பைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் பாப்பானுக்கு எதிராக எனது பதிவில் ஒவ்வொரு முறையும் பின்னூட்டம் போடும்போதும் நான் வன்னியனையும் இழுப்பேன்.

எனது பல சக பார்ப்பன பதிவர்களும் அதையே செய்வார்கள் என நம்புகிறேன். அப்படியே அவர்கள் இதெல்லாம் வேண்டாத வேலை என ஒதுங்கினாலும் நான் சொன்னபடித்தான் செய்வேன்.

//தலித்துகளும் பிற்படுத்தப்பட்டோரும் ஒருத்தாய் மக்கள்.//
அது வன்னிய மற்றும் பிற பிற்படுத்தப்பட்டோரால் வன்கொடுமை செய்யப்பட்ட தலித்துகள் கூறட்டும். உங்களுக்கு அதைக் கூற வாய் இல்லை.

டோண்டு ராகவன்

அருள் said...

// //எனது யுத்த அறிவிப்பைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்// //

ஹி...ஹி...ஹி...!

ஹா....ஹா.....ஹ.....!

அருள் said...

டோண்டு ராகவன் Said...

// //
//தலித்துகளும் பிற்படுத்தப்பட்டோரும் ஒருத்தாய் மக்கள்.//
அது வன்னிய மற்றும் பிற பிற்படுத்தப்பட்டோரால் வன்கொடுமை செய்யப்பட்ட தலித்துகள் கூறட்டும். உங்களுக்கு அதைக் கூற வாய் இல்லை.
// //

இக்கருத்தை ஏற்கனவே, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திரு. திருமாவளவன் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

RS said...

பச்சோந்தி வன்னியர்கள் தங்களுக்கு வேண்டும் போது பெரியார், சிறியார்னு சொல்லுவானுங்க, வன்கொடுமையை பற்றி பேசினா, பேதி வந்து ஓடிடுவானுங்க, அவங்க புத்தியே அதான.

Mukkodan said...

Thanks for publishing my Qs.
I meant Naveen Chawla coz,

1. He still has some hold over Qureshi, the current CEC and Sampath (ex-aide of YSR)

2. He silently approved some rigged EVM's for UP in 2009(that's why Congress unexpectedly won some seats in UP)

3. 2011 TN elections will be using the same EVMs from UP.

Hope u r getting my drift.

Mukkodan said...

Arul,
Though I oppose on all ur views I appreciate ur naivete in falling for almost all conspiracy theories prevailing in TN & Tamil blogosphere.

Pls read some f#$%g books and get enlightened urself.

Ganpat said...

//இப்போது எனது யுத்த அறிவிப்பைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் பாப்பானுக்கு எதிராக எனது பதிவில் ஒவ்வொரு முறையும் பின்னூட்டம் போடும்போதும் நான் வன்னியனையும் இழுப்பேன்.//

இத இத இதத்தான் அருள் எதிர்பார்த்தார்..வெற்றி அவருக்கே!

நீங்க வன்னியனை திட்ட திட்ட அவங்க ஆளுங்களுட்ட போய் அருள் வத்தி வைப்பார் தில் படத்தில் விக்ரம் செய்வது போல!

0~9 scale இல் தமிழ்நாட்டில்

சிந்தனாசக்தி:
பிராமணன்:8,
ஜாதி ஹிந்து:6
தலித்:5

உடல் வலிமை:
பிராமணன்:3,
ஜாதி ஹிந்து:6
தலித்:8

எண்ணிக்கை(population):
பிராமணன்:1,
ஜாதி ஹிந்து:7
தலித்:9

எனவே அருள் போன்ற ஜாதி ஹிந்துக்கள் செய்வதெல்லாம் செய்துவிட்டு பார்ப்பனர்கள் தான் அத்தனைக்கும் காரணம் என்று திசை திருப்பி விடுகின்றனர்.உண்மையிலேயே சாமர்த்தியசாலிகள்

ஒரு சிறிய தகவல்.
இரட்டை குவளை முறையை வைத்திருப்பது பிராமணர்களா (அ) ஜாதி ஹிந்துக்களா?
அருள் உடனே இது மனு ஆரம்பித்த்தது என்று தப்பித்து விடுவார்!

I wish to repeat again..

Pl.ban Arul from your site.
You are giving unwanted publicity for him

Arun Ambie said...

//இப்போது எனது யுத்த அறிவிப்பைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.//

யுத்தத்துக்கு அறைகூவும் அளவுக்கு அருள் பெரிய ஆள் அல்ல. சற்றே ஏரணத்துடன் பேசினாலும் தக்க பதில் பேச அவருக்கு வராது. 1930/40களின் குடிஅரசு இதழ்களை ஜெராக்ஸ் எடுக்க ஓடுவார்!

முட்டாள்களுடன் விவாதம் மட்டுமல்ல யுத்தம் செய்வதிலும் சிக்கல் இருக்கிறது. ஜெயித்தாலும் பெரிய பேர் கிடைக்காது. முட்டாள ஜெயிச்சுட்டு பீத்திக்கிறியே பெருசா என்று உலகம் சொல்லும். தோற்றால் மகா கேவலம். (வாய்ப்பில்லை என்றாலும் சொல்றத சொல்லணுமே) முட்டாளக் கூட ஜெயிக்க முடியலியே என்று உலகம் சிரிக்கும். So, சண்டையும் போட்டுகிரணும், சாக்கிரதயாவும் இருந்துக்கிரணும்.

நிற்க.

ஹரிஜன் என்று காந்தியார் தலித்களை அழைத்தது குறித்த அருளின் ஒரு பின்னூட்டத்தில் பார்ப்பனர்கள் அம்மா-அப்பாவுக்குப் பிறந்தார்கள், தாழ்த்தப்பட்டவர்கள் கடவுளுக்குப் பிறந்தார்கள் என்று சொல்லியிருந்தார். வன்னியர் பற்றி வாய் திறக்கவில்லை.

அவரது இந்த லாஜிக் படி வன்னியரும் அம்மா-அப்பாவுக்குப் பிறந்தார்கள் என்றால் அவர்களும் பார்ப்பனர்களே! கடவுளுக்கு என்றால் BC,OBC, MBC எல்லாம் புளுகு. வன்னியர்களின் முலாதாரம் பற்றித் தெரியவில்லையா அல்லது சொல்லமுடியாத நிலையா என்ற கேள்வி வருமே என்று கூட யோசிக்கவில்லை. அவ்வளவு புத்திசாலி!!

இவரது ஒருதாய் மக்கள் பின்னூட்டத்தைப் படித்துவிட்டு பாமக மீட்டிங் கேட்டது போல சிரித்துக் கொண்டிருந்தேன்! இவர் பேச்சுக்கெல்லாம் டென்ஷனாவதே அதிகம். யுத்த அறைகூவல் விடுப்பது கொஞ்சம் மேலதிகமே.

(ஓய் மாமா! நான் முதல் ரவுண்டு சுட்டுட்டேன்! நீர் யுத்த முஸ்தீபு ஆரம்பிச்சுட்டீரா?)

Anonymous said...

//
இக்கருத்தை ஏற்கனவே, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திரு. திருமாவளவன் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
//

சுட்டி கொடுக்கவும்.

வஜ்ரா said...

அருள்


தூய அக்மார்க் இனவாதம் பேசும் இனவாத பாசிச அடிவருடி நீங்கள். தமிழகத்தில் பாசிசம் என்றால் முற்போக்குவாதம்.

பார்ப்பானர்கள் தமிழர்கள் இல்லை என்பதற்கு உங்களிடம் ஏதாவது ஆதாரம் இருக்கிறதா ?

அதாவது, வன்னியர்களிடம் இல்லாத மரபணு பார்ப்பானர்களிடம் உள்ளது அல்லது பார்ப்பானர்களிடம் இல்லாத மரபணு மாற்றம் வன்னியர்கள் மற்றும் தலித்துகளிடம் மட்டுமே உள்ளது போன்ற மரபணு அடிப்படையிலான ஆதாரம். அத்தகய ஆதாரங்கள் வன்னியர்களும் தலித்துகளும் "ஒரு தாய் மக்கள்" என்பதையும் நிரூபிக்கவேண்டும்.

அருள் said...

Mukkodan said...

// //Pls read some f#$%g books and get enlightened urself// //

நான் விழிப்புணர்வு அடையத்தக்க நல்ல நூல்கள் குறித்து தங்களது பொன்னான ஆலோசனைகளை அளிக்கவும்.

அருள் said...

வஜ்ரா said...

// //பார்ப்பானர்கள் தமிழர்கள் இல்லை என்பதற்கு உங்களிடம் ஏதாவது ஆதாரம் இருக்கிறதா ?// //

அதுசரி....! பார்ப்பனர்கள் தமிழர்கள்தான் என்பதற்கு உங்களிடம் ஏதாவது ஆதாரம் இருக்கிறதா?

முதலில் தமிழன் என்றால் யார் என்று உங்களால் வரையறுக்க முடியுமா? தமிழ் பேசுபவனா? தமிழை தாய் மொழியாகக் கொண்டவனா? தமிழ்நாட்டில் பிறந்தவனா? - யார் தமிழன்?

தமிழனை வரையறை செய்வது கடினமாக இருக்கலாம். ஆனால், தமிழின எதிரிகளையும் கோடாரிக் காம்புகளையும் கண்டறிவது கடினமே அல்ல.

கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை. தமிழ் மொழிக்கும் தமிழ் நாட்டுக்கும் தமிழ் மக்களுக்கும் கேடு செய்ய நினைக்கும் 'உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யும்' கேடு கெட்ட மனிதர்கள் யார் என்பதற்கு துக்ளக் சோ வும் தினமலரும் தி இந்து'வுமே சாட்சி.

அருள் said...

நயவஞ்சக பார்ப்பன கூட்டத்தைக் கண்டு பயந்து ஓட என்ன இருக்கிறது?

பொதுவாக தலித், வன்னியர் என்ற சொல்லப்படும் மக்களை சாதியை விலக்கிவிட்டு பார்த்தால் இருவரின் வாழ்க்கை தரத்திற்கும் பெரிய வேறுபாடுகள் எதுவும் கிடையாது. அடித்தட்டு உழைப்பாளிகளாக இருப்பவர்கள் இம் மக்கள் தான். ஆனால் வன்னியர்களுக்கு தாம் தலித்துகளை விட மேலானவர்கள் என்ற தவறான எண்ணம் உண்டு.

சமுதாயத்தின் கீழ்தட்டில் இருந்த இரு சமுதாயங்கள் இரு வேறு மனோபாவங்களால் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். கீழ் மட்டத்தில் இருந்த இரண்டு சமுதாயங்களின் விழிப்புணர்வுக்கு காரணகர்த்தாக்கள் மருத்துவர் அய்யா மற்றும் திருமாவளவன்.

இனியும் வன்னியர்கள் தலித்துகளுக்கு எதிராக நடக்கலாம் (ஆனால், அது ஒப்பீட்டளவில் குறைந்திருக்கும்). அதனை திருமாவளவன் எதிர்த்து போராடவே செய்வார்.

அதேநேரத்தில் தலித்துகளுக்கு எதிரான எந்த ஒரு நடவடிக்கையையும் பா.ம.க எதிர்க்கும். அநீதிக்கு பா.ம.க ஒருபோதும் துணை போகாது (அநீதி இழைப்பவர்கள் வன்னியர்களாக இருந்தாலும்).

இதுதான் எமது நிலைபாடு. இதில் பார்ப்பானைக் கண்டு பதுங்க என்ன இருக்கிறது?

வஜ்ரா said...

நீங்கள் தான் பா.ம.க கொள்கைப்பரப்புச் செயலாளரா ?

உங்கள் முழுநேர வேலை அது தானா ?

அப்படி இல்லாத போது, ஏன் ஒரு தனிமனிதனாகப் பேசாமல் இது தான் வன்னியர்களின் நிலைபாடு, பா.ம.கவின் செயல்பாடு என்றெல்லாம் உதார் விடுகிறீர்கள்.

நீங்கள் சொல்லும் காரணங்களைப்பார்த்தால் சீக்கிரமே உங்கள் ஐயா எம்.பி.சியாக இருக்கும் வன்னியர்களை எஸ்.சி, எஸ்.டி யாக மாற்றச் சொல்லி மரம் வெட்டி ரோட்டில் போடுவார் போல இருக்கே. அதுக்குத் தான் அடி போடுகிறீர்களோ ?

அருள் said...

வஜ்ரா said...

// //ஏன் ஒரு தனிமனிதனாகப் பேசாமல் இது தான் வன்னியர்களின் நிலைபாடு, பா.ம.கவின் செயல்பாடு என்றெல்லாம் உதார் விடுகிறீர்கள்.// //

நீங்கள் எதற்கு பா.ம.க'வின் கொள்கை பரப்பு செயலாளரிடமும் வன்னியர் சங்கத்தின் கொள்கை பரப்பு செயலாளரிடமும் கேட்க வேண்டிய கேள்விகளை என்னிடம் கேட்கிறீர்கள்?

// //சீக்கிரமே உங்கள் ஐயா எம்.பி.சியாக இருக்கும் வன்னியர்களை எஸ்.சி, எஸ்.டி யாக மாற்றச் சொல்லி மரம் வெட்டி ரோட்டில் போடுவார் போல இருக்கே.// //

அதற்கான தேவையே இல்லை. 1860களில் ஆங்கிலேயர்கள் வன்னியர்களை தீண்டத்தகாதோர் பட்டியலில் சேர்க்க முயன்றதை எதிர்த்துதான் வன்னியர் இயக்கமே உருவானது. 1888இல் பதிவு செய்யப்பட்ட வனியகுல சத்ரிய மகாசங்கத்தின் முதல் கோரிக்கையே, வன்னியர்களை தீண்டத்தகாதோர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்பதுதான்.

எனவே, மறுபடியும் கிளம்பிய இடத்துக்கே திரும்ப வேண்டிய தேவை இல்லை.

பா.ம.க கேட்பது மக்கள் தொகை விழுக்காட்டிற்கு ஏற்ப பங்குதான். ஒரு சாதி - அல்லது ஒப்பீட்டளவில் ஒரே நிலையில் உள்ள சில சாதிகளின் மக்கள் தொகையை தனியாக கணக்கிட்டு அந்த அளவுக்கு பங்கீடு கோரும் போது - அதில் BC, MBC, SC, ST என்கிற பேதம் எல்லாம் இல்லை.

அருள் said...

Ganpat said...

// //நீங்க வன்னியனை திட்ட திட்ட அவங்க ஆளுங்களுட்ட போய் அருள் வத்தி வைப்பார் தில் படத்தில் விக்ரம் செய்வது போல!// //

அய்யோ பாவம்....!

இந்த அட்டைக்கத்தி சண்டையை போய் வத்தி வைக்க வேண்டுமா? உங்களுக்கே இது அதிகமாகத் தெரியவில்லையா?

உங்களை நீங்களே 'பெரிய அளவில்' நினைத்துக்கொண்டால், அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது.

வஜ்ரா said...

//
1860களில் ஆங்கிலேயர்கள் வன்னியர்களை தீண்டத்தகாதோர் பட்டியலில் சேர்க்க முயன்றதை எதிர்த்துதான் வன்னியர் இயக்கமே உருவானது.
//

அப்ப, வன்னியர்களும் தலித்துகளும் ஒரு தாய் பிள்ளைகள் என்று இப்பொழுது நீங்கள் சொல்வது முதலுக்கே மோசம் செய்வதாகுமே ?

அல்லது தலித்துகள் எல்லாம் முட்டாள்கள் உங்கள் இடஒதுக்கீடு ஊத்துக்கு அவர்கள் ஊருகாய்ளாக பயன்படுவார்கள் என்ற தன்னலஅக்கறை தானே அன்றி தலித்துகளின் உண்மையான மேம்பாடு உங்கள் கொள்கை அல்ல. அது வெரும் வெளிவேசம். அப்படித் தானே ?

அருள் said...

@வஜ்ரா

தாயும் பிள்ளையும் ஆனாலும் வாயும் வயிறும் வேறு வேறுதான்.

1860களில் தீண்டத்தகாதோர் என்பது உரிமைக்கான அடையாளம் அல்ல, அது அரசாங்கமே அந்த முத்திரையை அங்கீகரிப்பதாகக் கருதப்பட்டது. எனவே, அதனை எதிர்த்து வன்னியகுல சத்ரிய மகாசங்கம் போராடியது. "பள்ளி" என்று மக்கள்தொகைக் குறிப்புகளில் இருந்த பெயரை வன்னியர் என்று மாற்றக்கோரியதுடன் - எதிர்காலத்திலும் சிக்கல் வரக்கூடாது என்பதற்காக சத்ரியர் என்றும் குறிப்பிட கோரினர். அதன் விளைவாகத்தான் இன்றும் இடஒதுக்கீட்டிற்கான அரசு பட்டியலில் வன்னியர்கள் "வன்னிய குல சத்ரியர்" என்று குறிப்பிடப்படுகின்றனர்.

இதே போன்று தலித்துகள் தாங்கள் அழைக்கப்படுவதை எதிர்க்க விரும்பியிருந்தால் - அன்று அதற்காக அவர்கள் தான் போராடியிருக்க வேண்டும்.

அண்ணல் அம்பேத்கர் அவர்கள் 1931 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது தீண்டத்தகாதோர் எனக்குறிப்பிடப்படும் மக்களை தனியாக கணக்கெடுக்க வேண்டும். இசுலாமியர், கிறித்தவர் என்பது போல அவர்களையும் தனியொரு சிறுபான்மை இனமாக அங்கீகரிக்க வேண்டும் என்று கோரினார். இந்து மதத்தில் அவர்களை இணைக்க எதிர்ப்பு தெரிவித்தார்.

அண்ணல் அம்பேத்கர் அவர்களின் அந்த போராட்டம்தான் தாழ்த்தப்பட்டோருக்கு தனி இடஒதுக்கீடு கிடைக்க வழிசெய்தது.

அப்போது பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் தங்களையும் அந்த பட்டியலில் சேர்க்க கோரினர். அதற்கு அண்ணல் அம்பேத்கர் அவர்கள் - "பிற்படுத்தப்பட்டோர் தங்களுக்கும் உரிமை வேண்டுமெனில் தனியாகப் போராடி தனிப் பிரிவை உருவாக்க வேண்டும்" என்று கூறினார்.

எனவே, ஒடுக்கப்பட்ட சாதிகளின் விடுதலை என்பது - அந்தந்த சாதிகளுக்கான உரிமைக்காக அந்தந்த சாதிகள் போரிடுவதாகவே இருக்க முடியும். ஒருவரது போராட்டத்தை மற்றவர் ஆதரிக்கலாம், அவரோடு சேர்ந்து அவரது உரிமைக்காக போராடவும் செய்யலாம்.

மாறாக, தானே பாதிக்கப்படிருக்கும் ஒருவர் அதனை கைவிட்டுவிட்டு மற்றவருக்காக போராட வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது