புத்தகக் கண்காட்சியில் நல்ல வேட்டைதான் போங்கள்.
உள்ளே போகும்போதே பத்ரி அவர்களைச் செல்பேசியில் தொடர்பு கொண்டு கிழக்குப் பதிப்பகத்தின் கடை எண்ணைக் கேட்டுக் கொண்டு நேராக முதலில் அங்கே சென்றேன். பத்ரி மற்றும் பாரா அங்கு இருந்தனர்.
இரா. முருகன், பாரா, ஆர்.வென்கடேஷ் மற்றும் அசோக மித்திரன் எழுதிய சிலப் புத்தகங்களை வாங்கிக் கொண்டு பாராவிடம் அவர் புத்தகங்களில் கையெழுத்தையும் பெற்றுக் கொண்டேன்.
பிறகு தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் கடைக்குச் சென்று இரு தமிழ் அகராதிகள் (பொறியியல் மற்றும் சட்டம் சார்ந்தக் கலைச் சொற்கள் சார்ந்த அகராதிகளை வாங்கினேன்.
அல்லையன்ஸ் கடைக்குச் சென்று சோவின் ராமாயணம் இரன்டுப் பகுதிகளையும் மற்றப் புத்தகஙளையும் வாங்கினேன்.
1982-லிருந்து டில்லியில் இரட்டைப்படை எண்களுடைய ஆண்டுகளில் நடத்தப்படும் உலகப் புத்தகக் கண்காட்சிக்குச் சென்று புத்தகங்கள் (முக்கியமாக ஜெர்மன், பிரெஞ்சு மற்றும் இத்தாலிய அகராதிகள்) வாங்கிக் குவிப்பது என் வழக்கம். ஆகவே இங்கு புத்தகங்கள் தேர்வு செய்வதில் காலத் தாமதம் ஒன்றும் இல்லை.
குடும்பத்துடன் சேர்ந்து வந்ததால் அதிக நேரம் கண்காட்சியில் இருக்க இயலவில்லை. முடிந்தால் இன்னொரு முறை வர வேண்டும் என்று முடிவு செய்தேன்.
அன்புடன்,
ராகவன்
வாழ்த்துக்கள் வசந்தபாலன்
-
வசந்தபாலன் இயக்கத்தில் வெளிவந்த தலைமைச்செயலகம் வலைத்தொடர் சிறந்த
வலைத்தொடருக்கான விகடன் விருதை பெற்றுள்ளது. வசந்தபாலனுக்கு வாழ்த்துக்கள்
7 hours ago
No comments:
Post a Comment