1/14/2010

டோண்டு பதில்கள் - 14.01.2010

ராமானுஜம்
1. Will there be any solution to save BSNL in the meeting convened by the Hon.P.M of india on 6.1.2010?
பதில்: ஏதோ நல்லது நடந்தது போலத்தான் தோன்றுகிறது, பார்ப்போம்.

2. The private operators will increase the cell phone tariff if the bsnl is not in the market. Is it true or not?
பதில்: போட்டியிருந்தால் நுகர்வோருக்குத்தான் லாபம் அதிகம் என்பது உண்மைதான். பி.எஸ்.என்.எல்லும் இருக்க வேண்டும், தனியாரும் செயல்புரிய வேண்டும். அதுதான் பி.எஸ். வீரப்பா சொல்வது போல, சபாஷ் சரியான போட்டி.

3. Will the private operators run services in rural sector, which incur heavy loss to govt owned company?
பதில்: அரசு கம்பெனியின் நஷ்டங்கள் வரிகட்டுவோர் தலையில். அதே நேரம் கிராமப்புற சேவைகளும் அவசியமே. தனியார் அந்த நஷ்டத்தை எடுத்து கொள்வார்கள் என ஏன் நினைக்க வேண்டும்?

4. There are so many cases reported about the non payment of dues (IUC,ADC) to Bsnl by the pvt operators. What is your opininon?
பதில்: என்ன ராசா, அப்படியா? என்னத்தான் பண்ணறீங்க அதையெல்லாம் சரி செய்யாது?

5. Do you agree that the cell phone tariff has come down only after BSNL started cell services?
அதுவும் ஒரு காரணமே.


ரமணா
1. ஹெல்மெட் கட்டாயம் ஆதாயம் யாருக்கு இந்த முறை?
பதில்: ஹெல்மெட் உற்பத்தியாளர்கள், அதிகாரிகள்.

2. ஆர்டிஓ அலுவலகங்களில் ஊழல் ஒழிப்பு நடவடிக்கை பாவ்லா அடுத்து எப்போ?
பதில்: பங்கு பிரிப்பதில் தகராறு வரும்போது.

3. அண்டுக்கு 3 லட்சம் காங்கிரிட் வீடுகள் குடிசை வாசிகளுக்கு. அடுத்த அறுவடை?
பதில்: அரசு ஒப்பந்தப் புள்ளிகளை பெறுபவர்களுக்க்குத்தான்

4. இன்றைய தமிழ்க அரசியல் வாதிகளில் பெரும் பணக்காரர் -இப்போதைய நிலவரம்?
பதில்: முதல்வராகத்தான் இருக்க வேண்டும். அதாவது அரசியல்வாதி பணக்காரர்களில் முதல்வராக இருப்பவர் பற்றி கூறுகிறேன். ஹி ஹி ஹி.

5. ஜக்குபாய் விவகாரம் எப்படி நடந்ததது?
பதில்: நம்ம்வர்களுக்கு ரகசியங்களை காப்பாற்றுவதில் சமத்து போதாது.


கந்தசாமி
டோண்டுவின் ஸ்பெசல் கமெண்ட்?
1.இலங்கையில் மீண்டும் ஜனநாயகம்: தேர்தல் அறிக்கையில் பொன்சேகா - அப்போ இதுவரை என்னவாம்!

பதில்: ஜனநாயகம் இல்லை என்றுதான் பொருள். நெருக்கடி நிலையில் ஒரு நாடு இருக்கும்போது ஜனநாயகம் என்பது கட்டுப்படியாகாத லக்சரி.

2. நம்பிக்கை வாக்கெடுப்பில் சிபுசோரன் அரசு வெற்றி -அநியாயத்தின் கொடி பறக்கு!
பதில்: கூடவே பறக்கு பாஜகாவின் மானமும்.

3. பென்னாகரம் தொகுதியில் 2 ஆயிரம் பாமக-வினர் திமுகவில் இணைப்பு: அமைச்சர் தகவல் -அப்போ பாமகவின் டெபாஸிட்!
பதில்: பாவம் மருத்துவர்.

4. சென்செக்ஸ் 85 புள்ளிகள் சரிவு -சரியான பாம்பு ஏணி விளயாட்டா!
பதில்: வேறு எப்படி அதை கூற இயலும்?

5. புதுவையில் அதிமுக ஆர்ப்பாட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு - அங்க ஒன்னும் இடைத்தேரதல் இல்லையே!
பதில்: அது அவருக்கு தெரியுமா?

6. பிரபாகரனின் தந்தை மரணம் - இது தேர்தலில் எதிரொலிக்குமா!
பதில்: எங்கே, தமிழகத்திலா? நோ சான்ஸ்.

7. அருப்புக்கோட்டை நகருக்கு தாமிரபரணி நீர் கிடைக்குமா? -இப்படியே போனால்!
பதில்: ஏதோ செய்கிறார்கள் போலிருக்கிறதே. கிடைக்கும், கிடைக்க வேண்டும்.

8. வீடுகளுக்குச் சென்று ஆட்சியர் ரேஷன் கார்டுகள் ஆய்வு -சபாஷ்!
பதில்: எங்கள் வீட்டுக்கும் வந்தார்களே.

9. 2011-க்கு பிறகு அவார்டு படஙகளில் விஜய் நடிப்பார் -அப்போ அதுவரை குருவி, வில்லு, வேட்டைக்காரன் ரேங்க்தானா!
பதில்: குருவி தலையில் பனக்காயை வைத்து வேட்டைக்காரன் வில்லிலிருந்து அம்பு விடுவது போல இல்லை?

10. குப்பையில் இருந்து மின்சாரம்: திட்டம் செயல்படுத்துவதற்கான இடம் குறித்து அமெரிக்க பேராசிரியர் ஆய்வு -அமெரிக்காக்காரன் கெட்டிக்காரன்!
பதில்: நம்ம சீனிவாசனுக்கும் ஓ போட்டுவிடுவோம்.


அனானி (09.01.2010 பிற்பகல் 02.03--க்கு கேட்டவர்)
இந்த பிரபலங்கள் இப்போது?
1.முன்னாள் மாணவர் திமுக மாநில அமைப்பாளர் திருவாளர் எல்.ஜி

பதில்: யார் அவர், பெயரையே கேள்விப்பட்டதில்லையே?

2. கர்மவீரரை வென்ற மாணவர் தலைவர் விருதுநகர் சீனிவாசன்?
பதில்: அவர் இறந்து ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டது.

3.முன்னாள் நகைச்சுவை மன்னர்களில் சிறப்பான ஜனக்ராஜ்
பதில்: பதில்: நான் விசாரித்த அளவில் அவருக்கு இப்போது மார்க்கெட் இல்லை என்றுதான் அறிகிறேன். பை தி வே, ஜனகராஜ் பற்றி பேசும்போது “யாமிருக்க பயமேன்” டிராமாவில் எஸ்.வி.சேகர் சொன்னது நினைவுக்கு வருகிறது.

அதில் சேகரிடம், தான் மணக்க விரும்பும் பெண் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்பதை ஒருவன் கூறுவான். மூக்கு இந்த நடிகை போல, கண்கள் இந்த நடிகை போல என ஒரு லிஸ்டே அடுக்குவான். எஸ்.வி.சேகர் இதையெல்லாம் பொறுமையாக கேட்டு விட்டு, “நீ சொல்லறதையெல்லாம் பொருத்தி பார்த்தால் லேசா ஜனகராஜுக்கு பொம்பளை வேஷம் போட்டா மாதிரி இருக்கு” என்று கூறுவார்.

4. முன்னாள் தமிழக சபாநாயகர் தமிழ்க்குடிமகன்
பதில்: அவர் இறந்து ஐந்தாண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது.

5. புன்னகை அரசி கே.ஆர். விஜயா
பதில்: நன்றாகவே இருக்கிறார் என நினைக்கிறேன். சீரியல்களில் வந்தார், அங்கும் அதிகம் காணவில்லை இப்போதெல்லாம்.

6. தேவர் பிலிம்ஸ் வெற்றி இயக்குனர் எம்.ஏ. திருமுகம்
பதில்: அவரும் இறந்து ஐந்தாண்டுகளுக்கு மேலாயிற்றே.

7. பம்பாய் சினிமா புகழ் அழகன் அரவிந்தசாமி
பதில்: நடிகர் அரவிந்தசாமி, சினிமா வை விட்டு விலகி, பிசினசில் இறங்கி விட்டார்

8. மெட்டி ஒலி இயக்குநர் திருமுருகன்
பதில்: திரைப்படம் டைரக்‌ஷனில் இறங்கி விட்டார். எம்மகன், முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு ஆகிய படங்கள்.

9. நகைச்சுவையில் வடிவேலுவுடன் கல்ககிய கோவை சரளா
பதில்: ஏன் அவருக்கென்ன? இன்னும் படங்களில் நடிக்கிறார் போலிருக்கிறதே.

10. மூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளை
பதில்: மூலிகைப் பெட்ரோல் ராமர் பிள்ளைன்னு கொஞ்சம் வருஷத்துக்கு முன்னாடி ஒரு பரபரப்பான பேச்சிருந்துச்சு. ஆனா இவருடைய தயாரிப்பு ஆய்வுக்கூட சோதனையில தோல்வியடைஞ்சிருச்சு. “தமிழ் தேவி” மூலிகை எரிபொருள்ங்கற பேருல இவருடைய கண்டுபிடிப்பு சில காலம் விற்பனை செய்யப்பட்டது. இவருடைய கண்டுபிடிப்புக்கு சீனக் காப்புரிமை கோரி வின்னப்பித்திருந்தார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இவருடைய தயாரிப்பை விநியோகம் செய்யப் போவதாகவும் சொன்னது. இவர் தனது மனைவியையும் மகளையும் பிரிந்திருப்பதாக வந்த செய்தியே பத்திரிகைகளில் கடைசியாக இவரைப்பற்றி வந்த செய்தி. நன்றி விஜய் கோபாலஸ்வாமி


அனானி (09.01.2010 மாலை 05.52-க்கு கேட்டவர்)
டோண்டுவுக்கு பவர் கொடுக்கப்பட்டால் இந்த பிரச்சனைகளை எப்படி சமாளிப்பார்?
பதில்: (எல்லாவற்றுக்கும் சேர்த்து) கடவுள் புண்ணியத்தில் அந்த பவர் டோண்டுவுக்கு கிடைக்காது.
இருந்தாலும் கற்பனை செய்து கொள்ள என்ன தடை? பதில்கள் தந்தால் போச்சு
1. ஆந்திர தெலுங்கான விவகாரம்
பதில்: இரு தரப்பினருக்கும் சரியான உதை புட்டத்தில். ஆந்திராவின் மேம்பாட்டை கவனிக்காமல் இது என்ன சிறுபிள்ளைத்தனமா சண்டை. போடுங்க ஆளுக்கு 30 தோப்புக்கரணம் என்று சொல்வேன்.

2. ஆந்திர முனனாள் முதல்வர் மரணத்தில் உள்ள மர்மம்
பதில்: 21-B பேக்கர் தெரு, லண்டனில் வசிக்கும் ஷ்ர்லாக் ஹோம்ஸை கூப்பிடுவேன்.

3. ஸ்டாலின் அழகிரி ஆடு புலி ஆட்டம்
பதில்: இருவருக்குமே நிஜமாகவே ஆடுபுலி ஆட்டம் போட்டியாக வைத்து ஜெயிப்பவர் முதன் மந்திரி, தோற்பவருக்கு கலைஞர் இதயத்தில் இடம் என கண்டிஷன் போட வேண்டியதுதான்.

4. தமிழக காங்கிரஸில் உள்ள தள்ளு முள்ளு
பதில்: 1. எல்லா கோஷ்டி தலைவர்களுக்கும் ஆளாளுக்கு ஒரு கோப்பை தேநீர் கையில் பிடித்து கொள்ளச் செய்து, பீக் அவரில் சென்னை போக்குவரத்து கழகத்தின் முழுதும் பயணிகளால் நிரம்பிய பேருந்தில் தேநீர் சிந்தாமல் ஏறி இடம் பிடிக்கும் போட்டி வைக்க வேண்டும், 2. அடுத்த போட்டியாக உண்மைத் தமிழனின் 5000 சொற்கள் அடங்கிய ஏதேனும் ஒரு பதிவைப் படித்து அதற்கு precis writing எழுதச் சொல்ல வேண்டும், 3. டோண்டு ராகவனுடன் இஸ்ரேல் பற்றி அரை மணி நேரம் விவாதிக்க வேண்டும், 4. 500-க்கும் மேலாக பின்னூட்டங்கள் வந்துள்ள வினவு பதிவு ஒன்றின் பின்னூட்டங்களை கால வாரியாக அடுக்க வேண்டும். இதிலெல்லாம் எந்த தலைவர் ஈடுபட்டு மூளை பேதலிக்காமல் வருகிறாரோ அவருக்கே அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு சோனியாவுக்கு எக்ஸ்க்ளூசிவாக ஜால்ரா அடிக்கும் முன்னுரிமை, அதாவது தலைவர் பதவி தரப்படும்.

5. அதிமுகவில் உள்ள உட்கட்சி தேர்தல் விவகாரம்
பதில்: ஜெயலைதா மேல் சசிகலாவின் ஹோல்ட் என்ன என்பதைத் தெரிந்து அதை நீக்க ஆவன செய்து, உட்கட்சி தேர்தலை நடத்துவேன்.

6. ஜக்குபாய் திருட்டு சீடி பூதம்?
பதில்: பிடிபட்டவருக்கு தண்டனையாக ஜக்குபாய் சீடியுடன், குருவி, வில்லு ஆகிய படங்களைன் சீடிக்களையும் ஒன்றன்பின் ஒன்றாக பார்க்கச் செய்ய வேண்டும், ஒரு வார காலத்துக்கு விடாமல்.

7. மீனவர் புதுச் சட்டம் பற்றிய சர்ச்சை
பதில்: புதுச் சட்டத்தின் வரைவை மீண்டும் பரிசீலிக்க செய்வேன். இப்போதுள்ள சட்டவரைவில் அதிகாரிகள் மீனவர்களிடம் அதிக மாமூல் வாங்கும் வழிதான் பெரும்பாலும் உள்ளது.

8. நெல்லையில் மந்திரிகளின் மனிதாபிமானமற்ற போக்கு
பதில்: தாங்களும் இம்மாதிரி ஒரு நாள் ரோடில் அடிப்பட்டு அநாதையாகக் கிடக்க நேரிடலாம் என்ற பயத்தை அவர்களுக்கு வரவழைக்க ஏதேனும் வழி இருக்கிறதா எனப் பார்க்க வேண்டும்.

9. நடக்கும் மணல்கொள்ளை, மரக் கடத்தல்
பதில்: பார்த்தவுடன் சுடும் உத்தரவுதான் சரி.

10.உணவுப்பொருட்களின் விஷ விலை ஏற்றம்

பதில்: பதுக்கல்காரர்களுக்கு கடும்தண்டனை. அதே சமயம் இடைத்தரகர்களை முடிந்த அளவுக்கு ஒழித்தல்

அனானி (12.01.2010 காலை 08.35-க்கு கேட்டவர்)
இந்த நிகழ்வுகள் பற்றி உங்கள் (நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் டைப்பில்) விமர்சனம்?
1.தமிழக சட்டசபை கூட்ட கடைசி நாளில் ஜெ.ன் தமிழகத்தின் பொருளாதார நிலமை பற்றிய குற்றச்சாட்டுகள்

பதில்: தமிழகத்தின் நிதிநிலைமை கலைஞரின் கட்டுப்பாடற்ற இலவசக் கலாச்சாரத்தல் குட்டிச்சுவரை நோக்கித்தான் செல்கிறது. ஜெ-யின் பேச்சு சரியாகத்தான் உள்ளது.

2. எம்ஜிஆரை நினைவுகூறும் கலைஞரின் பேருரை
பதில்: எம்.ஜி.ஆர் இருந்தவரை முதலமைச்சர் பதவி கலைஞருக்கு எட்டாக்கனி என்ற விஷயம் கலைஞர் மறக்கக்கூடியதல்ல. ஆகவே அவர் எம்.ஜி.ஆரை புகழ்ந்தாலும் அதில் வயிற்றெரிச்சல்தான் அதிகமாக இருக்கும். 40-ஆண்டுகால நண்பருக்கு அவர் வடிவமைத்த நினைவுச்சின்னம் டிராஃபிக் கான்ஸ்டபிளின் நிழற்குடையைத்தான் நினைவுபடுத்தியது. அதுவும் கலைஞரின் வயிற்றெரிச்சலையே பிரதிபலித்தது. எம்.ஜி.ஆர் ரேஞ்சுக்கு கலைஞரால் மக்கள் பிரியத்தை ஒருபோதும் சம்பாதித்துக் கொள்ள முடியாது என்பது எல்லோரும் அறிந்ததே. கலைஞரும் அதை அறிவார்.

3. கர்நாடக முதல்வர் பற்றிய கெளடாவின் அநாகரீகரமான விமர்சனம்
பதில்: இந்த வீடியோவைப் பாருங்கள். இவரெல்லாம் நம் நாட்டு பிரதமராக இருந்தார்கள் என எண்ணுவதே அவமானமாக உள்ளது.

11.01.2010 அன்று டைம்ஸ் ஆஃப் இண்டியாவின் இந்த இணையப்பப்பக்கத்தில் வந்த ஒரு கருத்து நிலைமையை நன்றாக சம்மரைஸ் செய்துள்ளது.

N Indiresh,Bangalore,says:Just because once, by fluke, Shri Devegowda became prime minister he cannot presume himself as most intelligent and knows everything. Media portrayed him as most intelligent politician ( actually most cunning)and has to obey him for all his advises. First let him introsepct whether he was eligible to become prime minister of India and he has to recollect how he was made scapegoat of the situation which made him loose power permanently throughout the life. He is still under the impression his contribution to the country's prosperity is applaudable. If he introspects he will realise whether he was eligible for the highest post. It is pity to note that he even condemned IT icon Shri Narayanamurthy, asking him what he contributed for the country. He failed to notice, the growth of IT engine is because of Shri Narayanamurthy which inturn stopped brain drain of young technocrats. The momentum initiated by Infosys in IT sector created enormous jobs in India apart from giving jerk to Real estate, Construction sector, steel industry, Automobile sector etc apart from appreciation of land value accross the country. Insteading of contributing to the nation Shri Devegowda was contributed by our beloved country by way of political rehabilitation for his family which rose from the scrach. Wearing of Mask of farmer yielded rich dividends to his family. If country has to flourish media must stay away from him so that budding politicians can be kept away from the cunning political teaching cultivated by Shri Gowada thereby Nation can be saved. His outbursts by way of filthy language shows his standard.
[11 Jan, 2010 1739hrs IST]


4. முலாயசிங்கிற்கு அமர்சிங்கின் சூப்பர் பஞ்ச்
பதில்: இதையா சொல்கிறீர்கள்? சமாஜ்வாதி கட்சியின் தலைவருக்கெதிராகவே கிரிமினல் வழக்குகள் இருந்ததாக படித்த ஞாபகம். அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா என ஏற்கனவே கவுண்டமணியானந்தா ஸ்வாமிகள் கூறியுள்ளாரே, கேக்கலையா?

5. பப்ளிக் செக்டார் பங்குகள் (கம்பெனிகளை முன்னேற்ற என்னும் வாதத்துடன்) விற்பனை முஸ்தீபு (பங்கு விற்பனைக்குபிறகும் திணறும் எம்டிஎன்எல்)
பதில்: அவ்வாறு பங்குகள் விற்கப்பட்ட கம்பெனிகளில் அரசின் தலையீடு அப்படியே இருந்தால், வேறு என்ன எதிர்பார்க்க இயலும்?


மீண்டும் அடுத்தவாரம் கேள்விகள் இருந்தால் சந்திப்போமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

19 comments:

Anonymous said...

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

BalajiS said...

Dear Sir,

Until few weeks ago, You used to have the list of blogs that you follow.

Like. balaji_ammu, jeyamohan, kootancoru and few more.

Now you have stopped them.
Any particular reason sir?
I like your taste and
I used your blog to follow others.
Now I am stranded! Since I dont even remember few blog names.

Would you please Put them back!!!

Thanks in Advance!
And Pongal Vazhthukkal!!

Regards
Balaji Srinivasan

Anonymous said...

தமிழ் புத்தாண்டை தைமாதம் முதல் நாள் என் தமிழக அரசு அறிவித்த செய்கை பலப் பல விவாதங்களை உருவாக்கிய நிலையில்

1.மக்களில் பெரும் பகுதியினர் ஏற்றுக் கொண்டனரா?இல்லையா?

2.அதிமுகவின் நிலை இதில் தெளிவாக இல்லையே?

3.எழுத்துச் சீர்திருத்தம் போல் இதற்கும் வரும் காலத்தில் முழு ஆதரவு கிடக்கும் போல் உள்ளதே?

4.முற்பட்ட சாதியினர் மட்டும் எதிர்ப்பதாய் கூறப்படும் புகார்கள் பற்றி?

5.கடவுள் நம்பிக்கை இருந்தாலும் ஜாதகம் மேல் நம்பிக்கை கிடையாது எனும் எண்ணம் உள்ள தங்களின் கருத்து இதில் ?



அரசின் இலவச திட்டங்கள் மக்களை சோம்பேறி ஆக்குகிறது எனும் எதிர்க்கட்சிகளின் குற்ற்ச்சாட்டு

6.இலவசம்தான் ஓட்டுகளை அள்ளுகிறது எனத் தெரிந்தபிறகும் இந்த நிலை மாறமா?

7.வாங்கிய கடன்கள் ரத்து இதில் சேர்த்திதானே?

8.உணவு,உடை,உறைவிடம் மூன்றும் இலவசமாய் கொடுத்து பொழுது போக டீவியும் கொடுத்த அரசு அடுத்து மக்களை கவர என்ன செய்யும்?

9.ஒரு ஓட்டுக்கு 5000 ரூபாய் என ஜெயலலிதாவின் குற்றச்சாட்டு உண்மையானல் அடுத்த தேர்தலுக்கு எவ்வளவு பணம் கைமாறும்?

10.திமுக ஆட்சியில் தமிழக வளர்ச்சி விகிதம் சரிவு எனும் அதிமுக தலைவியின் குற்றச்சாட்டு உண்மையா? புள்ளிவிபரம் சரியா?


எம்ஜிஆர் முயற்சியால் முதல்வர் ஆனேன் அதை கடைவரை மறக்க மாட்டேன் என கலைஞரின் உருக்கமான பேச்சு
11.இந்த நினைப்பு கூட அதிமுக தலைவி ஜெயலலிதாவுக்கு இல்லாதது சரியா?

12.அதிமுக உள்கட்சி தேர்தலில் குழம்பியுள்ள தொண்டர்களை மேலும் குழப்பவா?

13.இவ்வளவு கரிசனம் உள்ள திமுக தலைவர் ஏன் எம்ஜிஆரை கடசியை விட்டு நீக்கினார்?

14.அண்ணாவின் மறைவுக்கு பின்னால் நடந்த திமுக தலைவர் தேர்தலில் எம்ஜிஆரின் திடிர் அணி மாற்றம் உண்மையில் என்ன நடந்தது?

15.இன்னும் எம்ஜிஆரின் ஓட்டு வங்கி அப்படியே உள்ளது என்ற தகவல்-தலைவரின் இந்தப் பேச்சு தொடர்பு உண்டா?

14-01-2009 லிருந்து 13-01-2010 வரை நடந்த செயல்கள்,சாதனைகள்,குறைபாடுகள்,பேச்சுக்கள்,சாதனைகள்,வெற்றிகள்,சந்தித்த இடர்கள், குணநல மாற்றங்கள் இவற்றின் அடிபடையில் இவர்களை ஒப்பிடுக?
16.திரு மோடி-திரு கருணாநிதி
17.திரு அத்வானி-திரு மன்மோஹன்சிங்
18.அதிபர்அனில் அம்பானி-அதிபர் முகேஸ் அம்பானி
19.உலக நாயகன் கமல்-சூப்பர் ஸ்டார் ரஜினி
20.தேமுதிக வி.காந்த்-சமதா சரத்
21.சன்டீவி-கலைஞர்டீவி
22.தமிழக அரசு-கேரள அரசு-நதிநீர் பிரச்சனை
23.சீனா-இந்தியா-எல்லை பிரச்சனை
24.முற்போக்கு பதிவர் “ர”-பிரபல பதிவர் “க”
25.டோண்டு-பெரியார் கொள்கை காக்கும் பதிவர்கள்
26.தமிழ்மணம் திரட்டி-தமிழிஷ் திரட்டி
27.துணை முதல்வர் ஸ்டாலின் -மத்திய அமைச்சர் அழகிரி
28.அமைச்சர் ராஜா-அமைச்சர் தயாநிதி
29.சிபிஎம்வரதராஜன் -சிபிஐ தா.பாண்டியன்
30.சினிமா பழைய பிரபல சினிமா இயக்குனர்கள்-சாதனை புரியும் புது இளம் இயக்குனர்கள்
31.கனிமொழிகருனாநிதி-சசிகலாநடராஜன்
32.பின்னுட்டபுயல்கள்-வால்பையன் -உ.தமிழன்

கிருஷ்ண மூர்த்தி S said...

/நடிகர் அரவிந்தசாமி, சினிமா வை விட்டு விலகி, பிசினசில் இறங்கி விட்டார்/

ஆற்றில் ஒருகாலும் சேற்றில் ஒருகாலும் வைத்துக் கொண்டு சினிமாவுக்கு வந்தவர் அரவிந்தசாமி!

இரண்டிலுமே தேறவில்லை!

வஜ்ரா said...

//
தமிழ் புத்தாண்டை தைமாதம் முதல் நாள் என் தமிழக அரசு அறிவித்த செய்கை பலப் பல விவாதங்களை உருவாக்கிய நிலையில்

1.மக்களில் பெரும் பகுதியினர் ஏற்றுக் கொண்டனரா?இல்லையா?
//

தை முதல் நாள் கரி நாளாக இருக்கும் நாள். கடவுள் நம்பிக்கை கொண்ட எவனும் புதுக்கணக்கு துவங்குவது போன்ற காரியங்களைக் கரி நாளில் செய்ய மாட்டார்கள்.

தமிழ் புத்தாண்டைக் கொண்டாடுபவர்கள் நம்பிக்கையாளர்கள் மட்டுமே. நம்பிக்கையில்லாதவர்கள் ஜனவரி முதல் தேதி புத்தாண்டு கொண்டாடுவதோடு சரி.

ஆகவே, தமிழர்கள் நிச்சயம் தை முதல் நாள் தமிழ் புத்தாண்டை ஒத்துக்கொள்ள மாட்டார்கள். இலங்கைத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள் என்று உலகத் தமிழர்கள் யாருமே இந்த திராவிட லூசுத்தனத்தை ஏற்கவில்லை.

Anonymous said...

மீண்டும் அடுத்தவாரம் கேள்விகள் இருந்தால் சந்திப்போமா?

கேள்வியும் நானே
பதிலும் நானே
அப்புறம் இது எதற்கு

கோவிந்தகிருஷ்ணன்

வால்பையன் said...

//சென்செக்ஸ் 85 புள்ளிகள் சரிவு -சரியான பாம்பு ஏணி விளயாட்டா!//

நீண்ட கால முதலீட்டை நம்புவர்களுக்கு பாம்பும் கிடையாது, ஏணியும் கிடையாது!, தினம் தினம் என்று ஆளாய் பறந்தால் பாம்பு போட்டு தள்ளிரும்!

வால்பையன் said...

//டோண்டு ராகவனுடன் இஸ்ரேல் பற்றி அரை மணி நேரம் விவாதிக்க வேண்டும்,//

இதுக்கு பதிலா சூசை பண்ணிகலாம்னு ஒருத்தர் சொல்றாரு!
(போய் பண்ணு யாரு வேணாங்கிறா)

Anonymous said...

//வால்பையன் said...

//சென்செக்ஸ் 85 புள்ளிகள் சரிவு -சரியான பாம்பு ஏணி விளயாட்டா!//

நீண்ட கால முதலீட்டை நம்புவர்களுக்கு பாம்பும் கிடையாது, ஏணியும் கிடையாது!, தினம் தினம் என்று ஆளாய் பறந்தால் பாம்பு போட்டு தள்ளிரும்!

January 15, 2010 1:14 PM
Blogger வால்பையன் said...

//டோண்டு ராகவனுடன் இஸ்ரேல் பற்றி அரை மணி நேரம் விவாதிக்க வேண்டும்,//

இதுக்கு பதிலா சூசை பண்ணிகலாம்னு ஒருத்தர் சொல்றாரு!
(போய் பண்ணு யாரு வேணாங்கிறா)//


kalaippu kammiya irukku?

Anonymous said...

//மீண்டும் அடுத்தவாரம் கேள்விகள் இருந்தால் சந்திப்போமா?

கேள்வியும் நானே
பதிலும் நானே
அப்புறம் இது எதற்கு

கோவிந்தகிருஷ்ணன்//


suuuuuper

Anonymous said...

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்


aaha!

Anonymous said...

//ஹெல்மெட் கட்டாயம் ஆதாயம் யாருக்கு இந்த முறை?
பதில்: ஹெல்மெட் உற்பத்தியாளர்கள், அதிகாரிகள்.//

முக்கியமா ஒருவரை, அவரது குடுபங்களை விட்டாச்சு ஆட்டோ பயமா?

Anonymous said...

//ஆர்டிஓ அலுவலகங்களில் ஊழல் ஒழிப்பு நடவடிக்கை பாவ்லா அடுத்து எப்போ?
பதில்: பங்கு பிரிப்பதில் தகராறு வரும்போது//

பிடிப்பவருக்கு பணம் தேவைபடும் போதா?

Anonymous said...

//அண்டுக்கு 3 லட்சம் காங்கிரிட் வீடுகள் குடிசை வாசிகளுக்கு. அடுத்த அறுவடை?
பதில்: அரசு ஒப்பந்தப் புள்ளிகளை பெறுபவர்களுக்க்குத்தான் //

பொதுத்தேர்தலுக்கு செலவழிக்க வேண்டாமா?

Anonymous said...

//இன்றைய தமிழ்க அரசியல் வாதிகளில் பெரும் பணக்காரர் -இப்போதைய நிலவரம்?
பதில்: முதல்வராகத்தான் இருக்க வேண்டும். அதாவது அரசியல்வாதி பணக்காரர்களில் முதல்வராக இருப்பவர் பற்றி கூறுகிறேன். ஹி ஹி ஹி//

ஜெயலலிதா இரண்டாவதாவது வருவாரா அல்லது >>>>>>>?

Anonymous said...

// ஜக்குபாய் விவகாரம் எப்படி நடந்ததது?
பதில்: நம்ம்வர்களுக்கு ரகசியங்களை காப்பாற்றுவதில் சமத்து போதாது.//


செல்வியின் அழுகை பழிவாங்கும்

வால்பையன் said...

கலாய்கும் அளவுக்கு இன்னைக்கு கேள்விகள் இல்லை!

இளஞ்செழியன் said...

/எம்ஜிஆரை நினைவுகூறும் கலைஞரின் பேருரை
பதில்: எம்.ஜி.ஆர் இருந்தவரை முதலமைச்சர் பதவி கலைஞருக்கு எட்டாக்கனி என்ற விஷயம் கலைஞர் மறக்கக்கூடியதல்ல. ஆகவே அவர் எம்.ஜி.ஆரை புகழ்ந்தாலும் அதில் வயிற்றெரிச்சல்தான் அதிகமாக இருக்கும். 40-ஆண்டுகால நண்பருக்கு அவர் வடிவமைத்த நினைவுச்சின்னம் டிராஃபிக் கான்ஸ்டபிளின் நிழற்குடையைத்தான் நினைவுபடுத்தியது. அதுவும் கலைஞரின் வயிற்றெரிச்சலையே பிரதிபலித்தது. எம்.ஜி.ஆர் ரேஞ்சுக்கு கலைஞரால் மக்கள் பிரியத்தை ஒருபோதும் சம்பாதித்துக் கொள்ள முடியாது என்பது எல்லோரும் அறிந்ததே. கலைஞரும் அதை அறிவார்.//
ஆதிக்க சக்திகளின் வாரீசாய் வாழும் டோண்டுவின் பதில் விஷமத்தனமானது.
யாரும் கண்டுகொள்ளாத சோவும் ஜெயலலிதாவுக்கு ஆதரவுக் கரம் நீட்டுகிறார்.அவரது பரமரசிகராம் டோண்டுவின் கலைஞர் பற்றிய கணிப்பு தவறானது.உண்மையில் எம்ஜிஆர் மட்டும் இன்னும் கொஞ்ச காலம் வாழ்ந்திருந்தால் அவரை கலைஞர் பலமாய் தோற்கடித்திருப்பார்.1980 நாடாளுமன்றத்தேர்தலை இந்த நாடறியும்.அடுத்து நடந்த சட்டமன்றத்தேர்தல் அவர் வெற்றிதான் சதிகளின் சதிராட்டத்தின் உச்ச கட்டம் என்பதையும் அனைவரும் அறிவோம்.

இது ஏன் என்ன கஜகர்ணம் யார் போட்டாலும் ,காவடிகள் பல தூக்கினாலும், ஜாலவித்தைகள் செய்தாலும் கலைஞரின் வெற்றிப் பேரிகையை யாரும் தடுக்க முடியாது.
வரும் 2011 பொதுத்தேர்தல் இதை டோண்டுவுக்கும் மற்றவர்களுக்கும் உணர்த்தும்.

ம்க்கள் சக்தி முழுவதும் கலைஞர் பின்னால்.அனைத்து அரசுகள் எல்லாம் அவரின் சுட்டுவிரலின் அசைவுக்கு காத்திருக்கும் காட்சியை பார்த்து அரசியல் வட்டாரங்கள் வாய்பிளந்து நிற்பது காலம் கண்ட உண்மை.


எதிர்கட்சிகள் எல்லாம் மூட்டை முடிச்சை கட்டி வனவாசம் செல்லும் நாள் 2011 மாநில சட்டமன்றத் தேர்தல் நடக்கும் நாட்கள்

வால்பையன் said...

//1980 நாடாளுமன்றத்தேர்தலை இந்த நாடறியும்.அடுத்து நடந்த சட்டமன்றத்தேர்தல் அவர் வெற்றிதான் சதிகளின் சதிராட்டத்தின் உச்ச கட்டம் என்பதையும் அனைவரும் அறிவோம்.//

தேர்தல் சதியை பற்றி கழக கண்மணி பெசுவது வியப்பாக இருக்கிறது, இவர்கள் தான் அதில் டாக்டரேட் வாங்கியவர்கள் ஆயிற்றே!

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது