Showing posts with label ஆண் பெண் கற்புநிலை. Show all posts
Showing posts with label ஆண் பெண் கற்புநிலை. Show all posts

11/30/2010

திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்தல் பெண்ணுக்குத்தான் அதிகக் கெடுதலைத் தரும்

கிட்டத்தட்ட எல்லா பதிவர்களும் இது பற்றி பதிவு போட்டு விட்டபடியாலும், எனக்கும் இது சம்பந்தமாக சொல்ல வேண்டிய விஷயங்கள் இருப்பதாலும் நானும் இந்த விஷயத்துக்காக ஒரு பதிவு போட்டு விடுகிறேன்.

முதலிலேயே ஒன்றை தெளிவுபடுத்தி விடுகிறேன். நான் இந்த திருமணமின்றி சேர்ந்து வாழும் கான்சப்டை ஒத்துக் கொள்ளவில்லை. ஏன் ஒத்துக் கொள்ளவில்லை என்பதற்குத்தான் கீழே வரும் வரிகளை தருகிறேன்.

என்னதான் நாம் வாய்கிழிய பென்ணியம் எனப் பேசினால் நமது இந்திய சமூகத்தின் செட்டிங்ஸ் ஆண்களுக்கு ஆதரவாகத்தான் இருக்கின்றன. ஆகவே சேர்ந்து வாழலாம், மன வேற்றுமை வந்தால் நண்பர்களாக் பாதிப்பு ஏதும் இன்றி பிரிந்து விடலாம் என்பதெல்லாம் கேட்க நன்றாகத்தான் உள்ளன. ஆனால் நடைமுறையில்? பாதிப்பு ஆணுக்கு அதிகம் இல்லை. சம்ப்ந்தப்பட்ட பெண்ணுக்குத்தான் அதிகம். அம்மாதிரி சேர்ந்து வாழும் ஜோடிகளுக்கு வரும் எதிர்ப்பு சுற்றிலும் உள்ள மனிதர்களால் அந்த ஜோடியில் உள்ள பெண்ணுக்கு எதிராகத்தான் காட்டப்படுகிறது.

இன்னும் ஒரு விஷயம் உடற்கூறு. ஆண் கர்ப்பம் அடைவதில்லை, பெண் கருவுறுகிறாள். இரண்டு மூன்று பிரசவங்களுக்கு பிறகு அவள் உடற்கட்டு குலைகிறது. ஆகவே அவளுடன் சேர்ந்து வாழும் ஆணுக்கு அவள் மேல் ஈர்ப்பு குறைந்தால், பேசாமல் கழண்டு கொள்ள முடிகிறது. இதுவே சட்டபூர்வமான திருமணமாக இருந்தால் பெண்ணுக்கு எல்லா சட்டப் பாதுகாப்புகளும் உண்டு. ஆகவே கனம் இல்லாத விஷயங்களுக்கெல்லாம் சட்டபூர்வமான திருமண பந்தம் உடைக்கப்படுவதில்லை.

சேர்ந்து வாழும் ஜோடியில், பெண்ணுக்கு ஏற்படும் மேலே குறிப்பிட்ட பலவீனங்களால் காலப்போக்கில் அவள் எங்கே ஆண் தன்னை விட்டு பிரிந்து விடுவானோ என்னும் பயத்திலேயே அவன் எள் என்பதற்குள் என்ணையாக நிற்கும் நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. இதில் இருக்கும் விதிவிலக்குகளில் பார்த்தால் ஒன்று அப்பெண் மிகுந்த புத்திசாலியாக இருந்து தன் பலவீனங்களை மறைத்து நடிக்க வேண்டும், அல்லது ஆணுக்கும் சில உடல்நலக்குறைவு ஏதேனும் வந்திருக்கலாம், அல்லது வேறு ஏதாவது தனிப்பட்ட காரணங்களாக இருக்கலாம்.

நான் கூற வந்ததே சேர்ந்து வாழ்வதில் என்னென்ன பிரச்சினைகள் வரலாம், அவற்றால் பென்ணுக்குத்தான் பாதிப்பு அதிகம் என்பதுதான். அவை எல்லாம் முதலில் கண்ணுக்குத் தெரியாவிட்டாலும், அவற்றை கவனத்தில் கொள்வதே புத்திசாலித்தனம்.

சேர்ந்து வாழ்வது, பிரிவது, அந்த உறவில் பெற்ற குழந்தைகளை பங்கிடுவது, பிறகு வேறு துணையை நாடுவது ஆகிய விஷயங்கள் இந்தியாவில் இன்னும் சகஜமாக வரவில்லை. அவ்வளவுதான். ஆகையால், பெண்ணே! ஜாக்கிரதையாக இரு. இப்போதைக்கு திருமணம் இன்றி சேர்ந்து வாழ ஒத்துக் கொள்ளாதே. பாதிப்பு உனக்குத்தான் அதிகம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

9/27/2010

எல்லா ஆண்களுமே ஆணாதிக்க வாதிகள்தான், அதுதான் இயற்கை

இப்பதிவின் தலைப்பைப் பார்த்ததுமே சீறி எழுந்து முரளிமனோகர் “அதெல்லாம் இருக்கட்டும், உன் கதை என்ன அதைச்சொல்லு பெரிசு” என்னைக் கேட்கும் முன்னால், நானே கூறிவிடுகிறேன், நானும் ஆணாதிக்கவாதிதான் என்று.

எனத மதத்தை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள், எந்த நாட்டை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். பென்ணுக்கு இரண்டாம் இடத்தைத்தான் கொடுத்திருக்கிறார்கள். நம் நாட்டில் எந்த சாதியானாலும் சரி, எந்த மதமானாலும் சரி, எந்தக் கட்சியானாலும் சரி பெண்களுக்கு இரண்டாம் இடத்தைத்தான் தந்த்ருக்கிறார்கள்.

இதன் அடிப்படைக் காரணமே இயற்கை செய்த லீலைதான். இது சம்பந்தமாக நான் இட்ட சில பதிவுகளிலிருந்தே கோட் செய்கிறேன்.

ஆண் பெண் கற்புநிலை - 2
உடல் இச்சை இருபாலருக்கும் பொதுவானது என்று முந்தைய பதிவில் எழுதியிருந்தேன். அதை பற்றி இங்கு விவரமாக எழுதுவேன்.உடல் இச்சையே எந்த ஒரு இனமும் தன்னை பெருக்கிக் கொள்வதற்கான உந்துதல். ஆகவே அது தவறு என்று கூறுபவர்கள் முட்டாள்கள். திருமணத்தை துறந்து சன்னியாசிகளாக போகிறவர்களில் பலர் பாலியல் குற்றங்களில் ஈடுபடுபடுவது இதனால்தான். இது எல்லா மதத்தினாருக்கும் பொருந்தும்.

இதிலும் ஆண்களுக்கு அவ்வளவு பாதிப்பில்லை. இப்படி அப்படி என்று இருந்தாலும் மற்றவர்களுக்கு தெரியாமல் எச்சரிக்கையுடன் நடந்து கொண்டால் பின்விளைவுகளிலிருந்து தப்பிக்கலாம். ஆனால் பெண்கள் பாடுதான் திண்டாட்டம். கருவுறுவது அவர்களே. ஆண் ஓடிவிடுவான். மாட்டிக் கொண்டு அவமானப்படுவது இவர்களே. சில சமயம் கல்லெறிந்து கொல்லும் தண்டனை வரை அவர்களுக்குக் கிடைத்து விடுகிறது.

இந்த அழகில் ஊடகங்கள் வேறு பாடாய் படுத்துகின்றன. சில உதாரணங்கள் இங்கு கூறலாம். எழுபதுகளில் "இளமை ஊஞ்சலாடுகிறது" என்ற தலைப்பில் ஸ்ரீதர் இயக்கிய படம் திரையிடப்பட்டது. அதில் ஜயசித்திரா ஒரு விதவையாக வருவார். அவர் கூறிய வசனம் ஒன்றில் இவ்வாறு வரும். "பலர் என்னை திருமணம் செய்து கொள்ள முன்வந்தார்கள். ஆனால் எல்லோரும் என் உடலையே விரும்பினார்கள். ஆகவே நான் மறுத்து விட்டேன்." என்ன அபத்தமான கற்பனை இந்த வசனத்தை எழுதியவருக்கு. விதவை திருமணம் செய்து கொள்ள வேண்டும், ஆனால் உடல் உறவுக்காக அல்ல என்று கூற ஆசைப்படுகிறாரா? அதே போல "மன்மத லீலை" என்னும் படத்தில் ஜயப்பிரதா கமலிடம் கூறுகிறார்: "நான் உடல் ஊனமுற்ற போர்வீரனை கல்யாணம் செய்து கொண்டேன். அவரால் தாம்பத்திய உறவில் ஈடுபட முடியாது. ஆக, நான் செக்ஸுக்காக கல்யாணம் செய்து கொள்ளவில்லை." இதில் என்ன பெருமையோ. செக்ஸையே தப்பு என்றெல்லாம் எழுதுவார்கள். அதெல்லாம் பெண்களுக்குத்தான் ஆண் கதாபாத்திரங்களுக்கு ஒன்றுக்கு மேல் துணை வைப்பார்கள்.

சரி நம் விஷயத்துக்கு வருவோம். ஒரு ஆண் ஏன் உடலுறவின் பின்விளைவுகளிலிருந்து தப்பிக்கிறான்? அவன் கருவுருவதில்லை அதனால்தானே? பெண் என்ன செய்வாள்? அறுபதுகளில் கருத்தடை மாத்திரைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. கருவுராமல் தப்பித்துக் கொள்ளலாம் என்ற நிலை வந்ததும் பெண்கள் பொங்கி எழுந்தனர். அமெரிக்க ஆண்களே அஞ்சும் அளவில் உடல் உறவில் ஈடுபட்டனர். செயல்பட இயலாத ஆண்துணையை விடுத்து வேறு துணை தேடினர். இது நல்லதுக்கா கெட்டதுக்கா என்று இன்றும் விவாதங்கள் தொடர்கின்றன. அதில் நான் போக விரும்பவில்லை. கலகம் பிறந்தால்தான் நியாயம் பிறக்கும் என்று மட்டும் கூறுவேன்.

குஷ்பு சொன்னதையே நானும் வழிமொழிகிறேன். பெண்கள் தங்கள் உடல் இச்சையை தணித்துக் கொள்ளட்டும். ஆனால் மிகுந்த தற்பாதுகாப்புடன் செயல்படவேண்டும்.. கருவுறக் கூடாது. கருகலைப்பு உடலுக்கு கெடுதல். பால்வினை நோய்கள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆணுறை உபயோகத்தை வலியுறுத்த வேண்டும். ரொம்ப முக்கியம், பரம ரகசியமாகச் செயல்படவேண்டும். மாட்டிக் கொள்ளக் கூடாது. என்னதான் இருந்தாலும் இப்போது இருக்கும் சமூகக் கட்டுப்பாடுகள் கடுமையானவை. ஆகவே மாட்டிக் கொள்ளக் கூடாது.

ஒருவன் தன்னை கெடுத்துவிட்டால் அவனையே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற கொள்கையிலிருந்து விடுபடவேண்டும். அதெல்லாம் சினிமாவுக்குத்தான் ஒத்து வரும். ஒரு மாதவிடாய் வந்தால் அதற்கு முன் எவ்வளவு உடலுறவு கொண்டாலும் கணக்கில் வராது. ஆகவே தேவையில்லாது குற்ற உணர்ச்சி கொள்ள வேண்டாம்.

(மேலே சொன்னதில் கடைசி பத்தியை மட்டும் அவுட் ஆஃப் காண்டக்ஸ்டாக எடுத்துக் கொண்டு சக ஆணாதிக்கவாதிகள் ஆட்டம் போட்டது இப்போதைக்கு தேவைல்லாத விஷயம் என்பதால் ஒதுக்கி விடுகிறேன்.


ஆண் பெண் கற்பு நிலை - 1
கற்பு நிலையை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவாய் வைப்போம் எனப் பாடினான் முண்டாசுக் கவிஞன். கேட்கவே நன்றாக இருக்கிறது. ஆனால் உண்மை நிலை? இதைப் பற்றி இங்கு பார்ப்போமா.

ஆணும் பெண்ணும் கலவியில் ஈடுபடுகின்றனர். குழந்தை உண்டானால் பெண்தான் சுமக்க வேண்டும். ஆண் ஓடிவிடுவான், அவளுக்குத்தான் கஷ்டம். இதுதான் உண்மை நிலை. இதற்காகவே பெண்ணை ஜாக்கிரதையாக இருக்கச் சொன்னார்கள். சமூகத்தில் கன்னித் தாய்கள் பெறும் அவமானம் கால தேச வர்த்தமானங்களைக் கடந்தது. ஆகவே கர்ணர்கள் கூடையில் வைத்து நதியில் விடப்பட்டனர். அக்குழந்தைகள் பெற்ற அவமானமோ அதற்கும் மேல். கர்ணனின் கதையே இதற்கும் சாட்சி. இந்த பயமும் பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியதற்கு ஒரு முக்கியக் காரணமே.

ஆண் பெண் உடற்கூறுகளே இந்த நிலைக்கு மூல காரணம். விந்துவை அளிப்பதுடன் ஆணின் வேலை முடிந்து விடுகிறது. பெண்ணுக்கோ அப்போதுதான் எல்லாமெ ஆரம்பம் ஆகிறது. மனித நாகரிகம் வருவதற்கு முன்னால் தந்தை என்ற கான்சப்டே இருந்திராது. அதேபோல அப்போதெல்லாம் கன்னித்தாய் என்று பழிப்பவர்களும் இருந்திருக்க மாட்டார்கள். ஏனெனில் கல்யாணம் என்பதே நாகரிகத்தின் அறிகுறிதான். கருவானதும் குழந்தை பெற்று பேணுவது பெண்ணின் வேலையாகவே இருந்தது. அது காரியத்துக்கு ஆகாது என்பதாலேயே குடும்பம், தந்தை என்றெல்லாம் உருவாயின. பகுத்தறிவை பெற்ற மனித இனத்துக்கு மான அவமான எண்ணங்கள் உண்டாயின. தன் மனைவி, தன் பிள்ளை என்ற எண்ணங்களும் உண்டாயின. ஆணை கட்டுப்படுத்துவதற்காக பெண் பல விலைகளை தர வேண்டியதாயிற்று. அவன் தந்தை என்ற கடமையை நிறைவேற்றவேண்டுமென்றால் அவன் மனைவி அவனுக்கு மட்டும் என்ற என்ணம் வேரூன்ற வேண்டும். ஆகவே பெண்ணுக்கு பல கட்டுப்பாடுகள் வந்தன. உண்மையாய் இருந்தால் மட்டும் போதாது, உண்மையாக இருப்பது போன்ற தோற்றமும் தேவைப்பட்டது.

ஆகவேதான் ஆண் எப்படியிருந்தாலும் பெண் மட்டும் கற்புடையவளாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டாயிற்று. இதை பெண்கள் கூட அதிகம் வலியுறுத்தினர். அதே நேரத்தில் மனித இனம் தழைக்க வேண்டுமானால் மக்கள் தொகை பெருக்கம் என்பது கட்டாயமாக்கப்பட்டது. இப்போது நம்மிடம் இருக்கும் அதிக ஜனத்தொகை என்பது மனிதவரலாற்றில் புதியது. இருப்பினும் இப்போது கூட பல ஐரோப்பிய தேசங்களில் ஜனத்தொகை குறைந்து அரசுகள் கூப்பாடு போடுவதையும் நாம் பார்க்கிறோமே. திடீரென்று பெரிய விபத்து ஏற்பட்டு மனிதர்கள் பல்லாயிரக்கணக்கில் அழிந்தால் அப்போது நம் மனநிலைமை எப்படி வேண்டுமானாலும் மாறலாம். ஆகவே இப்போதைய உண்மைகளை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று பார்க்கலாம்.

"ஜாலியான பிரும்மச்சாரியாக இருப்பது எப்படி" என்றெல்லாம் புத்தகங்கள் ஆணுக்காக வந்தால் "கணவன் பெறுவதற்கான வழிகள்" என்று பெண்ணுக்கான புத்தகங்கள் வருகின்றன. பல பெண்களுடன் ஆண் உறவு வைத்தால் அவனுக்கு மச்சம் என்றெல்லாம் பேசுகின்றனர். அதே சமயம் பெண்ணுக்கு ஒன்றுக்கு மேல் ஆண் நண்பர்கள் இருந்தால் அவளுக்கு பெயர் அளிப்பதில் மற்ற பெண்களே முன்னால் நிற்கின்றனர்.

ஆனால் உடல் இச்சை என்பது இருபாலருக்கும் பொதுதான். தற்சமயம் பெண்கள் தங்கள் இச்சைகளை வெளிப்படுத்துவதில் அதிகம் தயங்குவதில்லை. அதற்குள் ஆண்களுக்கு ரத்தக் கொதிப்பு ஏறிவிடுகிறது. ஏறினால் ஏறிவிட்டுப் போகட்டும். உடல் இச்சையை அபாயமின்றி எவ்வாறு பெண்கள் பூர்த்தி செய்து கொள்வது? அடுத்த பதிவில் பார்ப்போம்.


இப்போதைய நிலை என்ன? ரொம்ப மாற்றமெல்லாம் இல்லை என்பதுதான் நிஜம்.

இம்மாதிரியாக இயற்கையின் செட்டிங்ஸால்தான் ஆணாதிக்கம் ஏற்படுகிறது. அவ்வாறு ஓர் ஆண் ஆதிக்கம் காட்டாவிட்டால் அவன் மனைவி கூட அவனை மதிக்காமல் போகும் நிலை கூட சிலதருணங்களில் வந்திருக்கிறது.

இப்பதிவின் நோக்கம் என்ன? ஆணாதிக்கம் பெண்ணடிமை என சீன் காட்டும் சீமான்கள் அடங்கட்டும். உள்ளே புகுந்து பார்த்தால் ஒவ்வொருத்தனும் ஆணாதிக்கவாதியே, அப்படி இல்லை என்றால் அவன் ஆணாகவே மதிக்கப்பட மாட்டான்.

ஆகவேதான் ஈ.வே.ராமசாமி நாயக்கரைக் கூட புரிந்து கொள்ள முடிகிறது. அப்பதிவை நான் போட்டது கூட அவர் ஆணாதிக்கத்தை எதிர்த்து செயல்பட்டார் என பலர் அவதூறாக சொல்வதாலேயே. Setting the record straight என்று கூறுவார்கள். அதுதான் இது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

3/28/2010

குஷ்பு விவகாரம் - விடுதலை சிறுத்தைகளுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை

தலித்துகள் முன்னேற்றம் என்னும் பெரிய கடமை முன்னால் நிற்க கிடக்கிறபடி கிடக்கட்டும், கிழவியை தூக்கி மணையில் வை என்னும் கணக்காக குஷ்பு இந்தியா டுடேக்கு அளித்த பேட்டியை வைத்து கொண்டு விசியினர் இத்தனை ஆண்டுகள் குதித்தாயிற்று. அவர்களுக்கு செவுளில் அடிப்பது போல நீதிபதியின் கேள்விகள் வைக்கப்பட்டன.

அதுவும் குஷ்புவை harass செய்ய வேண்டும் என்பதற்காகவே பல நீதிமன்றங்களில் பல பினாமிகளை விட்டு வழக்கு போட வைத்தனர். அவர் தலைமை நீதிமன்றத்தை அணுகிய நிலையில் நீதிபதிக்ள் வழக்கு போட்டவர்களை பார்த்து கேள்விகள் கேட்டு மானத்தை வாங்கியுள்ளனர்.

தங்கர்பச்சானை குஷ்பு விமர்சித்தபோதே அவருக்கு எதிராக கடுமையாக குரல் கொடுத்தவர் திருமாவளவன் என்பதையும் நாம் மறக்கலாகாது. ஆகவே இந்த வழக்கு விவகாரத்தில் திருமாவளவனுக்கு உள்நோக்க இருக்கிறது என்பது வெள்ளீடைமலை.

இந்த அழகுக்கு தான் அட்டெண்ட் செய்த நிகழ்ச்சியில் குஷ்புவும் இருக்க, அவர் இவருக்கு வணக்கம் தெரிவிக்கவில்லை என்ற பொருமல் வேறு. அவ்வாறு வணக்கத்துக்கு நிஜமாகவே அவர் உரியவரா என்பதை பார்த்துத்தான் குஷ்பு வணக்கம் தெரிவிக்காது இருந்திருக்க வேண்டும். குஷ்பு பிறகு பேச ஆரம்பிக்கும்போது ஒரு வணக்கம் போட்டார். அவர் இடத்தில் நான் இருந்திருந்தால் அதைக் கூட செய்திருந்திருக்க மாட்டேன்.

நான் எனது ஆண்பெண் கற்பு நிலை சம்பந்தமாக இட்ட இப்பதிவில் இவ்வாறு எழுதியிருந்தேன்,
“உடல் இச்சை இருபாலருக்கும் பொதுவானது என்று முந்தைய பதிவில் எழுதியிருந்தேன். அதை பற்றி இங்கு விவரமாக எழுதுவேன்.உடல் இச்சையே எந்த ஒரு இனமும் தன்னை பெருக்கிக் கொள்வதற்கான உந்துதல். ஆகவே அது தவறு என்று கூறுபவர்கள் முட்டாள்கள். திருமணத்தை துறந்து சன்னியாசிகளாக போகிறவர்களில் பலர் பாலியல் குற்றங்களில் ஈடுபடுபடுவது இதனால்தான். இது எல்லா மதத்தினாருக்கும் பொருந்தும்.

இதிலும் ஆண்களுக்கு அவ்வளவு பாதிப்பில்லை. இப்படி அப்படி என்று இருந்தாலும் மற்றவர்களுக்கு தெரியாமல் எச்சரிக்கையுடன் நட்ந்து கொண்டால் பின்விளைவுகளிலிருந்து தப்பிக்கலாம். ஆனால் பெண்கள் பாடுதான் திண்டாட்டம். கருவுறுவது அவர்களே. ஆண் ஓடிவிடுவான். மாட்டிக் கொண்டு அவமானப்படுவது இவர்களே. சில சமயம் கல்லெறிந்து கொல்லும் தண்டனை வரை அவர்களுக்கு கிடைத்து விடுகிறது.

இந்த அழகில் ஊடகங்கள் வேறு பாடாய் படுத்துகின்றன. சில உதாரணங்கள் இங்கு கூறலாம். எழுபதுகளில் "இளமை ஊஞ்சலாடுகிறது" என்ற தலைப்பில் ஸ்ரீதர் இயக்கிய படம் திரையிடப்பட்டது. அதில் ஜயசித்திரா ஒரு விதவையாக வருவார். அவர் கூறிய வசனம் ஒன்றில் இவ்வாறு வரும். "பலர் என்னை திருமணம் செய்து கொள்ள முன்வந்தார்கள். ஆனால் எல்லோரும் என் உடலையே விரும்பினார்கள். ஆகவே நான் மறுத்து விட்டேன்." என்ன அபத்தமான கற்பனை இந்த வசனத்தை எழுதியவருக்கு. விதவை திருமணம் செய்து கொள்ள வேண்டும், ஆனால் உடல் உறவுக்காக அல்ல என்று கூற ஆசைப்படுகிறாரா? அதே போல "மன்மத லீலை" என்னும் படத்தில் ஜயப்பிரதா கமலிடம் கூறுகிறார்: "நான் உடல் ஊனமுற்ற போர்வீரனை கல்யாணம் செய்து கொண்டேன். அவரால் தாம்பத்திய உறவில் ஈடுபட முடியாது. ஆக, நான் செக்ஸுக்காக கல்யாணம் செய்து கொள்ளவில்லை." இதில் என்ன பெருமையோ. செக்ஸையே தப்பு என்றெல்லாம் எழுதுவார்கள். அதெல்லாம் பெண்களுக்குத்தான் ஆண் கதாபாத்திரங்களுக்கு ஒன்றுக்கு மேல் துணை வைப்பார்கள்.

சரி நம் விஷயத்துக்கு வருவோம். ஒரு ஆண் ஏன் உடலுறவின் பின்விளைவுகளிலிருந்து தப்பிக்கிறான்? அவன் கருவுருவதில்லை அதனால்தானே? பெண் என்ன செய்வாள்? அறுபதுகளில் கருத்தடை மாத்திரைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. கருவுராமல் தப்பித்துக் கொள்ளலாம் என்ற நிலை வந்ததும் பெண்கள் பொங்கி எழுந்தனர். அமெரிக்க ஆண்களே அஞ்சும் அளவில் உடல் உறவில் ஈடுபட்டனர். செயல்பட இயலாத ஆண்துணையை விடுத்து வேறு துணை தேடினர். இது நல்லதுக்கா கெட்டதுக்கா என்று இன்றும் விவாதங்கள் தொடர்கின்றன. அதில் நான் போக விரும்பவில்லை. கலகம் பிறந்தால்தான் நியாயம் பிறக்கும் என்று மட்டும் கூறுவேன்.

குஷ்பு சொன்னதையே நானும் பின்மொழிகிறேன். பெண்கள் தங்கள் உடல் இச்சையை தணித்துக்கொள்ளட்டும். ஆனால் மிகுந்த தற்பாதுகாப்புடன் செயல்படவேண்டும்.. கருவுறக் கூடாது. கருகலைப்பு உடலுக்கு கெடுதல். பால்வினை நோய்கள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆணுறை உபயோகத்தை வலியுறுத்த வேண்டும். ரொம்ப முக்கியம், பரம ரகசியமாகச் செயல்படவேண்டும். மாட்டிக் கொள்ளக் கூடாது. என்னதான் இருந்தாலும் இப்போது இருக்கும் சமூகக் கட்டுப்பாடுகள் கடுமையானவை. ஆகவே மாட்டிக் கொள்ளக் கூடாது.

ஒருவன் தன்னை கெடுத்துவிட்டால் அவனையே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற கொள்கையிலிருந்து விடுபடவேண்டும். அதெல்லாம் சினிமாவுக்குத்தான் ஒத்து வரும். ஒரு மாதவிடாய் வந்தால் அதற்கு முன் எவ்வளவு உடலுறவு கொண்டாலும் கணக்கில் வராது. ஆகவே தேவையில்லாது குற்ற உணர்ச்சி கொள்ள வேண்டாம்”.


சும்மா வறட்டுத்தனமாக கற்பை பெண்களுக்கு மட்டும் கட்டாயமாக்குவது பற்றி பெரியார் அவர்கள் பல இடத்தில் சாடியுள்ளார். அவருடைய பல கருத்துக்களில் எனக்கு ஒப்புதல் இல்லாவிடினும் இந்த விஷயத்தில் அவரை முற்றும் ஆதரிக்கிறேன். இப்படி சொன்னவுடனேயே பெரியார் இவ்வாறு நினைத்து சொல்லவில்லை அவ்வாறு நினைத்து சொல்லவில்லை என்றெல்லாம் நீட்டி முழக்கிக் கொண்டு வருவார்கள். வரட்டும், தமாஷாக இருக்கும். முதற்கண் அவர் சொன்னதில் சிலவற்றை பார்ப்போம்:

பெண்களுக்குப் பகுத்தறிவுக் கல்வியும், உலக நடப்புக் கல்வியும், தாராளமாகக் கொடுத்து, மூட நம்பிக்கை, பயம் ஆகியவற்றை ஊட்டக்கூடிய கதைகளையோ, சாத்திரங்களையோ, இலக்கியங்களையோ காணவும் கேட்கவும் சிறிதும் இடமில்லாமல் செய்ய வேண்டும். (வி.22.3.43;4:2)

பெண்ணடிமை என்பதற்குள்ள காரணங்கள் பலவற்றுள்ளும் சொத்துரிமை இல்லாதது ஒன்றே மிகவும் முக்கியமானதாகும். (பெ.சி.மி:170)

ஆண்கள் கற்புடையவர்கள் என்று குறிக்க நமது மொழிகளில் தனி வார்த்தைகளே காணாமல் மறைபட்டுக் கிடப்பதற்குக் காரணம், ஆண்களின் ஆதிக்கமே தவிர வேறில்லை. (கு.8.1.28;6:3)

கற்புக்காகக் கணவனின் மிருகச் செயலையும் பொறுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்ற கொடுமை ஒழிய வேண்டும். (கு.8.1.28;15:1)

பெண்ணுக்குச் சொத்து கூடாதாம், காதல் சுதந்திரம் கூடாதாம். அப்படியானால் மனிதன் தன் தேவைக்குப் பயன்படுத்திக் கொள்ளும் ரப்பர் பொம்மையா அது? (பெ.க.மு.தொ;134)

பெண்களுக்குத்தான் கற்பு: ஆண்களுக்கு வலியுறுத்தக் கூடாது என்கின்ற தத்துவமே தனி உடைமைத் தத்துவத்தைப் பொறுத்தது. ஏன் என்றால்,பெண் ஆணுடைய சொத்து என்பதுதான் இன்றைய மனைவி என்பவளின் நிலைமை. (கு.1.3.36;11:3)

நமது இலக்கியங்கள் யாவும் நியாயத்திற்காக ஒழுக்கத்திற்காக எழுதப்பட்டிருந்தால் பெண்களுக்கு என்னென்ன நிபந்தனை வைத்திருக்கின்றோமோ அவ்வளவு நிபந்தனைகளை ஆண்களுக்கும் வைத்திருக்க வேண்டுமல்லவா? (வி.1.6.68;3:5)

சுதந்திரம், வீரம் முதலிய குணங்கள் உலகத்தில் ''ஆண்மை''க்குத்தான் உரியதாக்கப்பட்டுவிட்டன. ''ஆண்மை''க்குத்தான் அவைகள் உண்டு என்று ஆண் மக்கள் முடிவு கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.உலகத்தில் இந்த “ஆண்மை” மேலோங்கி நிற்கும் வரையில் பெண்கள் அடிமையும் வளர்ந்தே வரும். பெண்களால் ஆண்மை என்ற தத்துவம் அழிக்கப்பட்டாலன்றி பெண்களுக்கு விடுதலையில்லை என்பது உறுதி. (கு.12.8.28;10:2)


குஷ்புவைத் தாக்கியவர்கள் சினிமாவிலும் தொலைக்காட்சியிலும் பெண்கள் சித்திரிக்கப்படும் முறையை எதிர்த்து தொடர் போராட்டங்களை பல முனைகளில் இருந்து முன்னெடுத்திருக்க வேண்டும். ஆனால், கடந்த காலங்களில் இதற்கான அடையாளங்களே இல்லை. பெண்களின் தனித்துவங்கள் அங்கீகரிக்கப்படாமல் சுயமரியாதை நிறுவப்படும் பாத்திரங்களாக அல்லாமல் பாலியல் பண்டமாகவே சித்திரிக்கப்படுகின்றனர். தமிழ் உணர்வாளர்கள் இதற்கெதிராக பெருமளவில் போராடவில்லை.

ஆக, வெறுமனே தங்கர் பச்சானுக்கு எதிராக போராட்டம் நடத்திய குற்றத்துக்காக குஷ்புவை பழிவாங்கத் துணிந்ததே இந்த தமாஷா காட்சிகளின் அரங்கேற்றத்துக்கு காரணம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

10/07/2009

La provocation policière

பிரெஞ்சில் இருக்கும் தலைப்பைப் பார்த்து பயப்பட வேண்டாம். போலீசாரால் தூண்டப் பெற்ற குற்றங்கள் என்றுதான் அதற்கு பொருள் கொள்ளப்படுகிறது. இந்தத் தலைப்பில் சமீபத்தில் 1979-ல் ஒரு புத்தகம் படித்தேன். குற்றவாளிகளை பிடிக்க பாடுபடும் போலீசார், சில சமயம் வேண்டுமென்றே மெனக்கெட்டு இவர்களாகவே குற்றம் புரியும் சூழ்நிலையை உருவாக்கி, சிலரை ஆசைக்காட்டி அழைத்து வந்து, அவர்களை அக்குற்றங்களைச் செய்வித்து பிறகு பிடித்து மெடல் வாங்கும் பல நிகழ்ச்சிகள் அதில் உண்மையான உதாரணங்களுடன் சித்தரிக்கப்பட்டிருந்தன. போலீஸ் என்றாலே உலகம் முழுக்க அப்படித்தானா என்ற ஏக்கமும் வந்தது.

நம்மூரில் கூட பார்த்திருக்கலாம். போக்குவரத்து போலீசார் ஹால்ட் & கோ என்று இருக்கும் போர்டுகளுக்கு சற்று தள்ளி மாருதி ஜிப்சியுடன் ஒளிந்திருப்பார்கள். ஏதேனும் கார்க்காரன் தெனாவெட்டாக அதை கடக்கும் போது பின்னால் துரத்திச் சென்று பிடிப்பார்கள். அப்போதுதானே கேஸ் கிடைக்கும், மாதக் கடைசி தொல்லையும் இல்லாதிருக்க இயலும்?

இதெல்லாம் ஏன் இப்போது சொல்கிறேன்? நடிகை புவனேஸ்வரியை போலீசார்களே போலி வாடிக்கையாளரை ஏற்பாடு செய்து அவரை வரவழைத்து பிடித்த நிகழ்ச்சி முதல் பார்வையிலேயே provocation policière என அறிய முடிகிறது. எழுபதுகளில் சோ அவர்களது நாடகம் யாருக்கும் வெட்கமில்லை பற்றி நான் எழுதிய இப்பதிவில் இவ்வாறு எழுதியிருந்தேன்.

“கதாநாயகி பரிமளா ஒரு விலை மாது. அவ்வாறு அவள் ஆவதற்கு முன்னால் அவளை முதலில் காதலித்து ஏமாற்றியிருப்பான் நாடகத்தின் வில்லன் - கதாநாயகன். பிறகு சந்தர்ப்பச் சூழ்நிலையால் அவள் விலை மாது ஆகிறாள்.

இதில் சோ அவளுக்கு ஆதரவாகப் பேசும் ராவுத்தர் பாத்திரத்தை ஏற்றிருந்தார்.

அதில் ஒரு காட்சி.

முதலில் காட்சியின் பின்புலத்தைப் பார்ப்போம். கதாநாயகனின் தந்தை அப்பாதுரையும் ராவுத்தரும் வியாபாரத்தில் பங்காளிகள். கதாநாயகி ஒரு விலைமாது என்பதை கதாநாயகனின் தாயிடம் கூறுவார் அந்த வீட்டுக்கு வந்திருக்கும் ரங்கநாதன் என்பவர். தான் விலை மாதிடம் போகும் வழக்கம் உடையவன் என்பதையும் அவ்வாறு செல்லும் ஒரு தருணத்தில் கதாநாயகியைக் கண்டதாகவும் அவர் கூறுவார்.

அந்தத் தாய் கதாநாயகியைத் திட்டி விட்டு ரங்கநாதனிடம் இன்னும் ஒரு ஸ்வீட் எடுத்துக் கொள்ளச் சொல்லி உபசரிப்பார். உடனே சோ கூறுவார்:

"அம்மா, நீங்கள் பிரமீளாவைக் குற்றம் கூறியது சரியே. அந்தப் பெண்ணைச் செருப்பால் அடியுங்கள். ஆனால் அதே செருப்பையெடுத்து இந்த ரங்கநாதனையும் ரெண்டு அடி அடிப்பதற்குப் பதிலாக அவனுக்கு இன்னும் ஒரு ஸ்வீட் எடுத்துக் கொள்ள உபசரிக்கிறீர்களே. இது என்ன நியாயம்?"

நான் ரசித்த மிகச் சிறந்த காட்சி இது. அதைத்தான் இப்போது நான் மறுபடியும் உங்கள் முன் வைக்க விரும்புகிறேன்.

விபசார ஒழிப்புச் சட்டம் விபசாரிகளை மட்டும் தண்டிக்கிறது. கொழுப்பெடுத்துப் போய் அவர்களிடம் செல்லும் வாடிக்கையாளர்களை மட்டும் விட்டு விடுகிறது.

இதே கேள்வி "ஜனவாணி" என்ற நேருக்கு நேர் நிகழ்ச்சியில் பொது மக்கள் தரப்பிலிருந்து அப்போதையச் சட்ட மந்திரி பரத்வாஜ் அவர்களிடம் வைக்கப்பட்டது.

ஆனால் அவர் கேள்வியைத் தவறாகப் புரிந்துக் கொண்டு (வேண்டுமென்றே?) பதிலளித்தார்.

கேள்வி: " விபசாரச் சட்டம் ஆண்களை ஏன் தண்டிப்பதில்லை?"

பதில்: " ஏன், நாங்கள் பிம்புகளையும் (pimps) தண்டிக்கிறோமே!"

வாடிக்கையாளர்களைப் பற்றி ஒன்றுமே கூறவில்லை.

நான் இப்போது வைக்கும் இன்னொரு கேள்வி. இச்சட்டம் பால் அடிப்படையில் பாகுபாடு (sexual discrimaination) செய்து பெண்ணை மட்டும் தண்டிக்கிறது. இது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது. ஆகவே இச்சட்டமே செல்லாது என நினைக்கிறேன். இவ்வாறு யாராவது ரிட் பெட்டிஷன் போட்டால் வெற்றி பெருமா?

இவ்வாறு செய்வது பலரது "மாமூல்" வாழ்க்கையைப் பாதிக்கும் என்பதை அறிவேன். ஆனால் எப்போதுதான் ரங்கநாதனையும் செருப்பால் அடிப்பது”?

“இதே நாடகத்தில் இன்னொருக் காட்சி நினைவுக்கு வருகிறது. கதாநாயகி நீதிமன்றத்தில் வைத்துக் கூறுவார்:"என்னுடைய வாடிக்கையாளர் ஒருவரை இங்கு இருப்பதைக் காண்கிறேன். நாளைக்கும் அவர் வந்தால் அவர் யார் என்பதைப் பகிரங்கமாகக் கூறிவிடுவேன்"

அடுத்த நாள் பார்த்தால் வேறு நீதிபதி வந்திருப்பார்”.


அன்புடன்,
டோண்டு ராகவன்

7/05/2007

கோலங்கள் தொல்காப்பியனை நான் கேட்ட கேள்வி

தலைப்புக்கு பிறகு வருகிறேன். நான் ஏற்கனவே இப்பதிவில் கூறியது போல, சீரியல்களை அவ்வளவு சுலபமாக அலட்சியம் செய்துவிட முடியாது. அதிலும் மிகச் சிறப்பாக எடுக்கப்படும் சீரியல்கள் விஷயத்தில் நான் கூறுவது அதிகமாகவே பொருந்தும். கடந்த 25 வருடங்களாக நான் பார்த்த சீரியல்களை வைத்துத்தான் பேசுகிறேன். இப்போது கூட ஹிந்தி சீரியல்களான நுக்கட், ஹம்லோக், புனியாத், தர்பண், கதா சாகர், யே ஜோ ஹை ஜிந்தகி ஆகியவை மனதில் நிற்கின்றன. அதே போலத்தான் விழுதுகள், சித்தி, மெட்டி ஒலி, மலர்கள் ஆகியவையும். இப்போது ஓடும் சீரியல்களில் முக்கியமான கோலங்கள் பற்றித்தான் இப்பதிவு பேசுகிறது.

நேற்று யதேச்சையாக சன் மியூசிக் சேனல் ஆன் செய்ய அதில் திருச்செல்வம் அவர்களை நேயர்கள் கேள்வி கேட்கலாம் என ஒரு டெலிஃபோன் எண்ணை திரையில் தந்தனர். நானும் அதை டயல் செய்ய கனென்க்ஷனும் கிடைத்தது. "தயவு செய்து காத்திருக்கவும்" என்ற அறிவிப்பு அடுத்த 20 நிமிடங்களுக்கு வந்து கொண்டிருந்தது. நிஜமாகவே லைவ் ப்ரொக்ராம்தான். நிகழ்ச்சி அது பாட்டுக்கு சென்று கொண்டிருந்தது. திருச்செல்வம் அவர்களும் நேயர் கேள்விகளுக்கு பொறுமையாக பதில் சொல்லிக் கொண்டிருந்தார். எல்லோரும் அவரை தொல்காப்பியன் என்றே குறிப்பிட்டுப் பேசினர். எனது முறை வந்தது.

எனது பெயர், இடம், நான் என்ன செய்கிறேன் ஆகியவற்றை சம்பிரதாயமாகக் கேட்டு அவற்றுக்கு நான் பதிலளித்தவுடன் எனது கேள்விக்கு வந்தேன்.

முதலில் ஒன்றைத் தெளிவுபடுத்தினேன். அதாவது சீரியல் நல்ல முறையிலேயே படமாக்கப்படுகிறது, ஆகவே பெரும்பான்மையான நேயர்கள் இதில் ஈடுபாட்டுடன் இருக்கின்றனர். ஆகவே சீரியல் தயாரிப்பாளர்களுக்கும் சில கடமைகள் உள்ளன. அந்த வரிசையில் இந்த சீரியல் ஆணாதிக்கத்தை நிலை நிறுத்துகிறதோ என்ற எனது அச்சத்தை வெளியிட்டேன். உதாரணமாக பாஸ்கர் விவாகரத்து கேட்டு அபியிடம் தான் இன்னொரு மணம் செய்து கொள்ள அவளுக்கு ஆட்சேபணை இல்லை என எழுதி வாங்குகிறான். அதே மாதிரி கடிதத்தை அபியும் கேட்டு வாங்குவதாக ஏன் கதையில் காண்பிக்கவில்லை என்பதுதான் என் கேள்வி. அதற்கு தொல்காப்பியன் அபி என்ற பாத்திரம் மறுமணத்தில் நம்பிக்கை வைக்கவில்லை என்றே பதிலளித்தார். ஆனால் எனது பார்வை வேறுவிதமாக இருந்தது. பாஸ்கர் அவளுக்கு மறுதாலி கட்டப்போவதாகத்தான் கதையை இப்போது கொண்டுபோகிறார்கள். ஆகவே அவள் பாஸ்கருக்காகவே புனிதமாக வைக்கப்படுகிறாள் என்ற எண்ணத்தையும் கேள்வியாக வெளிப்படுத்தினேன். அப்படியெல்லாம் பிரெடிக்ட் செய்ய முடியாது என்று மட்டும் கூறினார் தொல்காப்பியன். அதற்குள் எனது நேரம் முடிந்து விட்டது.

இப்போது இங்கு சற்று விஸ்தாரமாக பேசுவோம்.

நான் ஏற்கனவே இப்பதிவில் எழுதியதுதான். ஆணுக்கும் பெண்ணுக்கும் உடல் உணர்ச்சிகள் பொதுதான் என்பதை தைரியமாக ஒத்துக் கொள்ள பலருக்கும் மனம் இல்லை. சீரியல்களில் ஆணுக்கு சர்வசாதாரணமாக இரு மனைவியர் வைப்பவர்கள், ஒரு பெண் மனவேறுபாட்டில் கணவனைப் விவாகரத்து செய்து இன்னொருவனை மணப்பதாக வந்தால் முக்கால்வாசி அப்பெண் வில்லியாகத்தான் கதையில் வருவாள். (உதாரணம் "வரம்" என்னும் சீரியல்). கோலங்கள் சீரியலிலும் அபிக்கு அவளுக்குத் தெரியாமலேயே அவள் மாஜிக் கணவனை விட்டு மறுத்தாலி கட்ட வைப்பதற்கு ஏற்பாடுகள் நடக்கின்றன. எவ்வளவு அபத்தம்? அபி என்னும் பெண் தன் மனவுறுதியால் முன்னுக்கு வருபவள். பாஸ்கர் என்பவன் சரியான சோம்பேறி, நல்ல வேலையில் கூட இல்லை. அவனுக்கு இப்பெண்ணை கட்டிவைக்க அப்பெண்ணின் தாய் முதற்கொண்டு ஏற்பாடு செய்கின்றனர். அந்தத் தாய் சொல்லும் காரணங்கள் குழந்தைத்தனமாகவே உள்ளன. பக்கா ஆணாதிக்கத்தை வலியுறுத்துகிறது இந்த சீரியல். அதே சமயம் எல்லோருமே அற்புதமாகவும் சுவையாகவும் நடித்து சீரியலும் நன்றாக உள்ளது. ஆகவேதான் சீரியல் தயாரிப்பாளர்களின் பொறுப்பு அதிகமாகிறது. நேயர்களுக்கு பல தவறான சமிக்ஞைகள் தரப்படுகின்றன. இவற்றில் பல டிஆர்பி ரேட்டிங் என்ற மாயபிம்பத்துக்காகவே உள்ளன என்பது தெளிவாகத் தெரிகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்
பின் குறிப்பு: இப்பதிவை தமிழ்மணத்தில் சேர்க்க இயலவில்லை. ஆகவே அதுவாகவே சேரும்போது இதை விவாத மேடையில் வகைப்படுத்துமாறு கேட்டு கொள்கிறேன்.

1/10/2006

ஆண் பெண் கற்பு நிலை - 4

மே மாதம் 1981. நான் ஐ.டி.பி.எல்.-ல் ஃபிரெஞ்சு மொழிபெயர்ப்பாளர் தேர்வுக்கு சென்றிருந்தேன். அது பற்றி நான் ஏற்கனவே பதிவு போட்டுள்ளேன். நான் இங்கு பேச வந்த விஷயமே வேறு.

எனக்கு பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர் வாசந்தி. அவர் டில்லியில் சாணக்கியபுரியில் இருக்கிறார் என்று என் மனைவியின் அத்தை கூற நான் அவருடன் வாசந்தி அவர்கள் வீட்டிற்கு சென்றேன். அப்போது பல விஷயங்களைக் குறித்து பேசினோம். அவரிடம் அவர் எழுத்து சம்பந்தமாக சில கேள்விகள் வைத்தேன். அவற்றில் ஒன்றைப் பற்றித்தான் இப்பதிவு.

வெகு நாட்களாக என் மனதை ஒரு கேள்வி அரித்து வந்தது. கற்பழிப்பு காட்சிகளில் கதாநாயகியைக் காப்பது கதாநாயகன் மட்டுமே. அவன் இல்லையென்றால் பூனை பாலை உருட்டும் காட்சியை வைத்து டைரெக்டோரியல் டச் எல்லாம் கொடுத்து விடுவார்கள். கதாநாயகி தனியாக மாட்டிக் கொண்டால் அதோகதிதான். புன்னகை என்னும் படத்தில் ராம்தாஸ் வழக்கம்போல கற்பழிக்க வர, ஜெயந்தி "ஆணையிட்டேன் நெருங்காதே" என்று ஒரு பாட்டை சாவகாசமாகப் பாட பாட்டு முடிந்ததும் ராமதாஸ் தன் கடைமையைச் செய்து விட்டு செல்வார். ஜயந்தியும் கர்ப்பமடைந்து, ஜெமினி கணேசன் வாழ்வு கொடுத்து, என்னத்த, கதையை, எழுதி, என்று நம்மையெல்லாம் என்னத்த கன்னையாவைப் போல சலிப்புடன் கூற வைத்துவிடுவார்கள்.

நான் கேட்கிறேன், ஜயந்தி திடகாத்திரமானப் பெண்தானே, ராமதாஸ் தனியாகத்தானே இருந்தார், அதுவும் குடிபோதையில்? குறிபார்த்து ஒரு உதை விட்டால் ஆட்டம் க்ளோஸ்தானே? அவ்வாறு செய்து ராமதாஸிற்கு பிறகு பெண்ணாசையே வரவிடாமல் செய்திருக்க முடியாதா? அது என்ன எப்போதும் பெண்ணை இந்த ரேஞ்சுக்கு அபலையாக காட்டுவது? காந்தியடிகள் கூறினாரே, "உன் கைநகங்கள் பற்கள் ஆகியவை உன் ஆயுதங்கள், அவற்றைப் பயன்படுத்து" என்று? இந்த கூறுகெட்ட திரைகதையாசிரியர்கள் என்ன கிழிக்கிறார்கள்?

இந்தக் கேள்வியைத்தான் நான் வாசந்தி அவர்கள் முன்னால் வைத்தேன். அவர் மென்றுவிழுங்கினார். பிறகு மிருதுவாக கூறினார். அவ்வாறெல்லாம் எழுதினால் பத்திரிகையில் போடுவது கஷ்டம் என்று கூறினார்.

தாதா கோண்ட்கே என்னும் மராட்டிய நடிகர் பல படங்களும் எடுத்தார். எல்லாம் சாஃப்ட் போர்ணோ வகையைச் சார்ந்தது. இருந்தாலும் அவருடைய ஒரு படம் "ஆகே கீ ஸோச்" நிச்சயம் பார்க்க வேண்டியதே. கதாநாயகியை வில்லன் கற்பழிக்கவர, அவள் ஓர் உதைவிட, அடுத்தக் காட்சியில் வில்லன் தன் கூட்டாளிகளுடன் "ஜய் ஜகதீஷ்கரே" என்று பாடி பஜனை செய்யும் காட்சி. தியேட்டரே சிரிப்பால் அதிர்ந்தது. தாதாவுக்கு இருக்கும் சமூக உணர்வு நம்மூர் இயக்குன சிகரத்துக்கு இல்லையே, எங்கு போய் முட்டிக் கொள்வது?

இந்தத் தருணத்தில் விகடன் தயாரித்துவரும் கோலங்கள் மெகாசீரியலை பற்றி பேசாமல் இருக்கமுடியாது. ஆண் கதாபாத்திரங்கள் டைவர்ஸ் எல்லாம் செய்து வேறுகல்யாணம் எல்லாம் செய்வார்களாம். பெண்கள் மட்டும் பொத்திக் கொண்டு இருக்க வேண்டுமாம். பாஸ்கர் இன்னொரு கல்யாணம் செய்துகொள்ள அபி ஒப்புதல் கடிதம் கொடுப்பாளாம் ஆனால் அதே மாதிரி தான் மறுகல்யாணம் செய்து கொள்ள எதிர் ஒப்புதல் கடிதத்தை அவர் கேட்க மாட்டாளாம். என்ன ஐயா பேசுகிறீர்கள். அபி பாத்திரத்தை பிறகு பாஸ்கருடன் சேர்த்துவைக்கத்தானே அவளைப் புனிதமாக வைக்கும் ஏற்பாடுகள்? இம்மாதிரி எத்தனை நாட்களுக்குத்தான் கேவலன்களுக்காக (இதில் ஸ்பெல்லிங் தவறில்லை) கண்ணகிகளை இவ்வாறு அடக்கி ஆளப் போகிறீர்கள்? இப்படித்தான் பெண் இருக்கவேண்டும் என்று எவ்வளவு நாட்கள் ஜல்லியடிக்கப் போகிறீர்கள்?

நிற்க. நான் கேட்ட குறிபார்த்து உதை சம்பந்தமான கேள்விக்கு உங்கள் பதில்(கள்) என்ன?

பகுதி மூன்றின் பக்கத்திலேயே முதல் இரண்டு பதிவுகளுக்கான சுட்டிகள் உண்டு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

10/15/2005

ஆண், பெண் கற்புநிலை - 3

இந்தப் பதிவுக்கு எதிர்ப்புகள் ஆக்ரோஷமாக வரும் என்பதை முன்னாலேயே எதிர்பார்த்தேன். ஆகவே பிரச்சினை இல்லை. நான் கூற வந்ததை சொல்லிவிட்டு போகிறேன். பதிவு-2-ல் ஒருவர் பின்னூட்டமிட்டது போல் வேறு பெண்கள் யாரும் இப்பதிவுக்கு பின்னூட்டமிடவில்லைதான். ஏன் என்பதையும் புரிந்து கொள்கிறேன்.

ஜனத்தொகையில் பாதிக்கு பெண்கள் இருக்கிறார்கள். இருந்தாலும் சரிசமமாக இல்லை என்பதால் பாதிக்கப்படுபவர்கள்தான் ஏதேனும் செய்ய வேண்டும். ஆண்களுக்கு தற்போதைய நிலை சௌகரியமாக இருக்கிறது என்பதால் அவர்கள் ஏதாவது செய்ய வேண்டும் என எதிர்பார்க்க முடியாது. எல்லா பெண்களும் அவ்வாறு செய்வார்கள் என்று ஏன் பயப்பட வேண்டும்? நல்ல நிலைமையில் இருக்கும் பெண் ஒருவர் ஏன் தேவையில்லாது ரிஸ்க் எடுக்கப் போகிறார்? மாட்டிக் கொண்டால் அவர்களுக்குத்தானே கஷ்டம்?

பாலியல் உறவுக்கு உடல் தயாராகி பல ஆண்டுகள் கழித்துத்தான் ஆணுக்கும் சரி பெண்ணுக்கும் சரி திருமணம் நடக்கிறது. இடைபட்ட காலத்தில் உடல் இச்சை வரவே வராதா? ஆண் இதில் அதிகம் கஷ்டம் அடைவதில்லை. பெண்தான் அவதிக்குள்ளாகிறாள். பழங்காலத்தில் பால்ய விவாகத்துக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம். இந்த முறையில் வேறு சிக்கல்கள் எழுந்தன. உதாரணத்துக்கு பால்ய விதவைகள். அதில் மட்டும் சற்றே கருணையுடன் நடந்து, பால்ய விதவைகளுக்கும் மறு திருமணம் செய்து வைத்திருந்தால் பலரது வாழ்க்கை பாழாகாது இருந்திருக்கும். இந்த பிரச்சினையை ஹிந்தி படம் "ப்ரேம் ரோக்"-ல் ராஜ் கபூர் மிக அழகாக எடுத்துக்கூறியுள்ளார்.

புள்ளி ராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா என்றெல்லாம் கேட்டார்கள். வராமல் இருக்க புள்ளி ராஜா ஆணுறை உபயோகிக்க வேண்டும் என அறிவுறை கூறினார்கள். ஆனால் எய்ட்ஸ் வந்துவிட்டால் புள்ளிராஜாவின் மனைவியின் கதி என்ன என்பதைக் கூறினார்களா? ஒருவனுக்கு ஒருத்தி என்றெல்லலம் இப்போது கூற முடியுமா? கணவனுக்கு எய்ட்ஸ் வந்தால் மனைவி அவனிடம் விவாகரத்து பெற இது ஒரு காரணமாக அமையுமா? தெரியவில்லை. வழக்கறிஞர்கள் யாராவது கருத்து கூறலாம்.

நான் வலைப்பதிவு ஆரம்பித்த புதிதில் SITA சட்டத்தைப் பற்றி ஒரு பதிவு போட்டிருந்தேன். அது இப்போது என் வலைப்பூவில் காணவில்லை. ஆனாலும் நல்ல வேளையாக என் வந்தகட்டில் சேமித்து வைத்திருந்ததால் அதை இங்கு மறுபடியும் இடுகிறேன். பதிவின் தலைப்பு:
"யாருக்கும் வெட்கமில்லை - SITA is ultravires of the Constitution of India"

எழுபதுகளின் துவக்கத்தில் சோ அவர்களால் எழுதப்பட்ட "யாருக்கும் வெட்கமில்லை" என்ற நாடகத்தைப் பார்த்தேன்.

கதாநாயகி பிரமீளா ஒரு விலை மாது. அவ்வாறு அவள் ஆவதற்கு முன்னால் அவளை முதலில் காதலித்து ஏமாற்றியிருப்பான் நாடகத்தின் வில்லன் - கதாநாயகன். பிறகு சந்தர்ப்பச் சூழ்நிலையால் அவள் விலை மாது ஆகிறாள்.

இதில் சோ அவளுக்கு ஆதரவாகப் பேசும் ராவுத்தர் பாத்திரத்தை ஏற்றிருந்தார்.

அதில் ஒரு காட்சி.

முதலில் காட்சியின் பின்புலத்தைப் பார்ப்போம். கதாநாயகனின் தந்தை அப்பாதுரையும் ராவுத்தரும் வியாபாரத்தில் பங்காளிகள். கதாநாயகி ஒரு விலைமாது என்பதை கதாநாயகனின் தாயிடம் கூறுவார் அந்த வீட்டுக்கு வந்திருக்கும் ரங்கநாதன் என்பவர். தான் விலை மாதிடம் போகும் வழக்கம் உடையவன் என்பதையும் அவ்வாறு செல்லும் ஒரு தருணத்தில் கதாநாயகியைக் கண்டதாகவும் அவர் கூறுவார்.

அந்தத் தாய் கதாநாயகியைத் திட்டி விட்டு ரங்கநாதனிடம் இன்னும் ஒரு ஸ்வீட் எடுத்துக் கொள்ளச் சொல்லி உபசரிப்பார். உடனே சோ கூறுவார்:

"அம்மா, நீங்கள் பிரமீளாவைக் குற்றம் கூறியது சரியே. அந்தப் பெண்ணைச் செருப்பால் அடியுங்கள். ஆனால் அதே செருப்பையெடுத்து இந்த ரங்கநாதனையும் ரெண்டு அடி அடிப்பதற்குப் பதிலாக அவனுக்கு இன்னும் ஒரு ஸ்வீட் எடுத்துக் கொள்ள உபசரிக்கிறீர்களே. இது என்ன நியாயம்?"

நான் ரசித்த மிகச் சிறந்த காட்சி இது. அதைத்தான் இப்போது நான் மறுபடியும் உங்கள் முன் வைக்க விரும்புகிறேன்.

விபசார ஒழிப்புச் சட்டம் விபசாரிகளை மட்டும் தண்டிக்கிறது. கொழுப்பெடுத்துப் போய் அவர்களிடம் செல்லும் வாடிக்கையாளர்களை மட்டும் விட்டு விடுகிறது.

இதே கேள்வி "ஜனவாணி" என்ற நேருக்கு நேர் நிகழ்ச்சியில் பொது மக்கள் தரப்பிலிருந்து அப்போதையச் சட்ட மந்திரி பரத்வாஜ் அவர்களிடம் வைக்கப்பட்டது.

ஆனால் அவர் கேள்வியைத் தவறாகப் புரிந்துக் கொண்டு (வேண்டுமென்றே?) பதிலளித்தார்.

கேள்வி: " விபசாரச் சட்டம் ஆண்களை ஏன் தண்டிப்பதில்லை?"

பதில்: " ஏன், நாங்கள் பிம்புகளையும் (pimps) தண்டிக்கிறோமே!"

வாடிக்கையாளர்களைப் பற்றி ஒன்றுமே கூறவில்லை.

நான் இப்போது வைக்கும் இன்னொரு கேள்வி. இச்சட்டம் பால் அடிப்படையில் பாகுபாடு (sexual discrimaination) செய்து பெண்ணை மட்டும் தண்டிக்கிறது. இது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது. ஆகவே இச்சட்டமே செல்லாது என நினைக்கிறேன். இவ்வாறு யாராவது ரிட் பெட்டிஷன் போட்டால் வெற்றி பெருமா?

இவ்வாறு செய்வது பலரது "மாமூல்" வாழ்க்கையைப் பாதிக்கும் என்பதை அறிவேன். ஆனால் எப்போதுதான் ரங்கநாதனையும் செருப்பால் அடிப்பது?

அன்புடன்,
டோண்டு ராகவன்
# posted by Dondu @ 8:55 PM, 1/9/2005"

இவ்வளவு சீரியசான பதிவுக்கு வந்த கருத்துக்களை பாருங்கள்.


2 comments
Comments:
இந்தச் சட்டத்தை விட்டுவிட்டு, மேலை நாடுகள் சிலவற்றைப்போல இதை ஒரு தொழிலாக அங்கீகரித்தால் என்ன விளைவுகள் உண்டாகும்?
# posted by Radhakrishnan : 4:19 AM

அதாவது தண்டனை இருபாலருக்கும் என்றாகிவிடும் என்றால் இந்தத் தொழிலையே சட்டப் பூர்வமாகுவது என்ற முடிவுக்கு ஆண்கள் வந்து விடுவார்கள் என்றுதான் எனக்குப் படுகிறது.

இதே நாடகத்தில் இன்னொருக் காட்சி நினைவுக்கு வருகிறது. கதாநாயகி நீதிமன்றத்தில் வைத்துக் கூறுவார்:"என்னுடைய வாடிக்கையாளர் ஒருவரை இங்கு இருப்பதைக் காண்கிறேன். நாளைக்கும் அவர் வந்தால் அவர் யார் என்பதைப் பகிரங்கமாகக் கூறிவிடுவேன்"

அடுத்த நாள் பார்த்தால் வேறு நீதிபதி வந்திருப்பார்.

அன்புடன்,
டோண்டு
# posted by Dondu : 11:16 AM
இந் நாடகம் திரைப் படமாக எடுத்தபோது பிரமீளா வேடத்தில் நடித்தவர் யாரென்று நினைவிருக்கிறதா?
# posted by Raviaa : 8:46 PM

ஏன் இல்லை?
சிவகுமார்: வக்கீல்,
ஜயலலிதா:பிரமீளா.

அன்புடன்,
டோண்டு
# posted by Dondu : 12:43 PM"

இப்போதைக்கு நான் கூற நினைப்பது இவ்வளவுதான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

10/14/2005

ஆண், பெண் கற்பு நிலை - 2

உடல் இச்சை இருபாலருக்கும் பொதுவானது என்று முந்தைய பதிவில் எழுதியிருந்தேன். அதை பற்றி இங்கு விவரமாக எழுதுவேன்.உடல் இச்சையே எந்த ஒரு இனமும் தன்னை பெருக்கிக் கொள்வதற்கான உந்துதல். ஆகவே அது தவறு என்று கூறுபவர்கள் முட்டாள்கள். திருமணத்தை துறந்து சன்னியாசிகளாக போகிறவர்களில் பலர் பாலியல் குற்றங்களில் ஈடுபடுபடுவது இதனால்தான். இது எல்லா மதத்தினாருக்கும் பொருந்தும்.

இதிலும் ஆண்களுக்கு அவ்வளவு பாதிப்பில்லை. இப்படி அப்படி என்று இருந்தாலும் மற்றவர்களுக்கு தெரியாமல் எச்சரிக்கையுடன் நட்ந்து கொண்டால் பின்விளைவுகளிலிருந்து தப்பிக்கலாம். ஆனால் பெண்கள் பாடுதான் திண்டாட்டம். கருவுறுவது அவர்களே. ஆண் ஓடிவிடுவான். மாட்டிக் கொண்டு அவமானப்படுவது இவர்களே. சில சமயம் கல்லெறிந்து கொல்லும் தண்டனை வரை அவர்களுக்கு கிடைத்து விடுகிறது.

இந்த அழகில் ஊடகங்கள் வேறு பாடாய் படுத்துகின்றன. சில உதாரணங்கள் இங்கு கூறலாம். எழுபதுகளில் "இளமை ஊஞ்சலாடுகிறது" என்ற தலைப்பில் ஸ்ரீதர் இயக்கிய படம் திரையிடப்பட்டது. அதில் ஜயசித்திரா ஒரு விதவையாக வருவார். அவர் கூறிய வசனம் ஒன்றில் இவ்வாறு வரும். "பலர் என்னை திருமணம் செய்து கொள்ள முன்வந்தார்கள். ஆனால் எல்லோரும் என் உடலையே விரும்பினார்கள். ஆகவே நான் மறுத்து விட்டேன்." என்ன அபத்தமான கற்பனை இந்த வசனத்தை எழுதியவருக்கு. விதவை திருமணம் செய்து கொள்ள வேண்டும், ஆனால் உடல் உறவுக்காக அல்ல என்று கூற ஆசைப்படுகிறாரா? அதே போல "மன்மத லீலை" என்னும் படத்தில் ஜயப்பிரதா கமலிடம் கூறுகிறார்: "நான் உடல் ஊனமுற்ற போர்வீரனை கல்யாணம் செய்து கொண்டேன். அவரால் தாம்பத்திய உறவில் ஈடுபட முடியாது. ஆக, நான் செக்ஸுக்காக கல்யாணம் செய்து கொள்ளவில்லை." இதில் என்ன பெருமையோ. செக்ஸையே தப்பு என்றெல்லாம் எழுதுவார்கள். அதெல்லாம் பெண்களுக்குத்தான் ஆண் கதாபாத்திரங்களுக்கு ஒன்றுக்கு மேல் துணை வைப்பார்கள்.

சரி நம் விஷயத்துக்கு வருவோம். ஒரு ஆண் ஏன் உடலுறவின் பின்விளைவுகளிலிருந்து தப்பிக்கிறான்? அவன் கருவுருவதில்லை அதனால்தானே? பெண் என்ன செய்வாள்? அறுபதுகளில் கருத்தடை மாத்திரைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. கருவுராமல் தப்பித்துக் கொள்ளலாம் என்ற நிலை வந்ததும் பெண்கள் பொங்கி எழுந்தனர். அமெரிக்க ஆண்களே அஞ்சும் அளவில் உடல் உறவில் ஈடுபட்டனர். செயல்பட இயலாத ஆண்துணையை விடுத்து வேறு துணை தேடினர். இது நல்லதுக்கா கெட்டதுக்கா என்று இன்றும் விவாதங்கள் தொடர்கின்றன. அதில் நான் போக விரும்பவில்லை. கலகம் பிறந்தால்தான் நியாயம் பிறக்கும் என்று மட்டும் கூறுவேன்.

குஷ்பு சொன்னதையே நானும் பின்மொழிகிறேன். பெண்கள் தங்கள் உடல் இச்சையை தணித்துக்கொள்ளட்டும். ஆனால் மிகுந்த தற்பாதுகாப்புடன் செயல்படவேண்டும்.. கருவுறக் கூடாது. கருகலைப்பு உடலுக்கு கெடுதல். பால்வினை நோய்கள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆணுறை உபயோகத்தை வலியுறுத்த வேண்டும். ரொம்ப முக்கியம், பரம ரகசியமாகச் செயல்படவேண்டும். மாட்டிக் கொள்ளக் கூடாது. என்னதான் இருந்தாலும் இப்போது இருக்கும் சமூகக் கட்டுப்பாடுகள் கடுமையானவை. ஆகவே மாட்டிக் கொள்ளக் கூடாது.

ஒருவன் தன்னை கெடுத்துவிட்டால் அவனையே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற கொள்கையிலிருந்து விடுபடவேண்டும். அதெல்லாம் சினிமாவுக்குத்தான் ஒத்து வரும். ஒரு மாதவிடாய் வந்தால் அதற்கு முன் எவ்வளவு உடலுறவு கொண்டாலும் கணக்கில் வராது. ஆகவே தேவையில்லாது குற்ற உணர்ச்சி கொள்ள வேண்டாம்.

ஆனால் ஒன்று. எந்த செயலுக்கும் எதிர்வினை வரும். ஆகவே அதற்கெல்லாம் துணிந்தவர்கள்தான் இதையெல்லாம் செய்ய வேண்டும். மற்றவர்களுக்கு? fire-தான்.

இன்னும் கூறுவேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

10/13/2005

வரதட்சிணை பற்றிய வெளிப்படையான எண்ணங்கள்

"எழுபதுகளில் காத்தாடி ராமமூர்த்தி தயாரித்து நடித்த "டௌரி கல்யாணமே வைபோகமே" என்ற நாடகம் அரங்கேறியது. அதில் அவர் தன் தங்கையின் கல்யாணத்தை நடத்தி முடிக்க நாய் படாத பாடு படுவார். கடைசி காட்சியில் அவர் தம்பிக்கு பெண்பார்க்கும் முறை வரும்போது அவரும் அவர் மனைவியும் தெம்பாக வரதட்சிணை கேட்க ஆரம்பிப்பார்கள்.

பழைய விகடன் ஜோக் ஒன்றும் நினைவுக்கு வருகிறது. போன வருடம் ராமசாமி வரதட்சிணையை எதிர்த்துப் பேசினான் ஆனால் இந்த வருடம் ஆதரித்துப் பேசினான். இதைப் புரிந்து கொள்ள இயலாமல் ஒருவர் இன்னொருவரிடம் இது ஏன் என்று கேட்க, அவர் பதில் கொடுக்கிறார்: "போன வருடம் ராமசாமி தன் பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடினான், இந்த வருடம் அவன் மகனுக்காக பெண் தேடுகிறான், அவ்வளவுதான்."

அதாவது நிலைமைக்கு ஏற்றவாறு வரதட்சிணைக்கு ஆதரவோ எதிர்ப்போ ஏற்படுகிறது. இதை கருப்பு வெள்ளை என பேதம் கொண்டு பார்க்க இயலாது. இது ஒரு இடியாப்பச் சிக்கல். எப்படி என்று பார்ப்போம்.

என்னுடைய கற்பு பற்றிய பதிவில் பெண்ணிடம் எதிர்ப்பார்க்கப்படும் கற்பின் அளவு ஆணிடம் எதிர்ப்பார்ப்பதில்லை என்று பார்த்தோம். திருமணம் இல்லாமலே ஆண் தன் காம இச்சையை தணித்துக் கொள்ளலாம். அது வெளியே தெரிய வந்தாலும் ஆம்பிள்ளைனா இப்படி அப்படித்தான் இருப்பான் என்று கூறி விடுவார்கள். கால்கட்டு போட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்றும் கூறுவார்கள். ஆனால் பெண் என்ன செய்வாள்? அவள் உடல் உறவை திருமணம் என்ற போர்வையின் கீழ்தான் பெற முடியும். ஆகவே பெண்ணுக்கு திருமணம் அதிக அவசியம் ஆகிறது. கேட்க கசப்பாயிருந்தாலும் இதுதான் உண்மை நிலை. வரதட்சணைக்கு இதுவே முக்கியக் காரணம். இதில் சரி தவறு என்பதையெல்லா பார்க்க இயலாது.

சரியோ தவறோ நாம் யதார்த்தத்தை எதிர்த்து போராடுவது கடினம். என் நண்பர் வரதட்சணையே வேண்டாம் என்று கூறினார். அவர் நல்ல வேலையில் இருந்தார். உடனேயே பெண்வீட்டாருக்கு சந்தேகம் வந்தது. பையனிடம் ஏதோ கோளாறு என்று பேச ஆரம்பித்து விட்டார்கள். அதற்காகவே வரதட்சணை கேட்கிறார்கள் சிலர். இதன் தீர்வு என்ன?

யோசிக்க வேண்டியதுதான். சேர்ந்து யோசிப்போமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

10/11/2005

ஆண், பெண் கற்பு நிலை - 1

கற்பு நிலையை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவாய் வைப்போம் எனப் பாடினான் முண்டாசுக் கவிஞன். கேட்கவே நன்றாக இருக்கிறது. ஆனால் உண்மை நிலை? இதைப் பற்றி இங்கு பார்ப்போமா.

ஆணும் பெண்ணும் கலவியில் ஈடுபடுகின்றனர். குழந்தை உண்டானால் பெண்தான் சுமக்க வேண்டும். ஆண் ஓடிவிடுவான், அவளுக்குத்தான் கஷ்டம். இதுதான் உண்மை நிலை. இதற்காகவே பெண்ணை ஜாக்கிரதையாக இருக்கச் சொன்னார்கள். சமூகத்தில் கன்னித் தாய்கள் பெறும் அவமானம் கால தேச வர்த்தமானங்களைக் கடந்தது. ஆகவே கர்ணர்கள் கூடையில் வைத்து நதியில் விடப்பட்டனர். அக்குழந்தைகள் பெற்ற அவமானமோ அதற்கும் மேல். கர்ணனின் கதையே இதற்கும் சாட்சி. இந்த பயமும் பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியதற்கு ஒரு முக்கியக் காரணமே.

ஆண் பெண் உடற்கூறுகளே இந்த நிலைக்கு மூல காரணம். விந்துவை அளிப்பதுடன் ஆணின் வேலை முடிந்து விடுகிறது. பெண்ணுக்கோ அப்போதுதான் எல்லாமெ ஆரம்பம் ஆகிறது. மனித நாகரிகம் வருவதற்கு முன்னால் தந்தை என்ற கான்சப்டே இருந்திராது. அதேபோல அப்போதெல்லாம் கன்னித்தாய் என்று பழிப்பவர்களும் இருந்திருக்க மாட்டார்கள். ஏனெனில் கல்யாணம் என்பதே நாகரிகத்தின் அறிகுறிதான். கருவானதும் குழந்தை பெற்று பேணுவது பெண்ணின் வேலையாகவே இருந்தது. அது காரியத்துக்கு ஆகாது என்பதாலேயே குடும்பம், தந்தை என்றெல்லாம் உருவாயின. பகுத்தறிவை பெற்ற மனித இனத்துக்கு மான அவமான எண்ணங்கள் உண்டாயின. தன் மனைவி, தன் பிள்ளை என்ற எண்ணங்களும் உண்டாயின. ஆணை கட்டுப்படுத்துவதற்காக பெண் பல விலைகளை தர வேண்டியதாயிற்று. அவன் தந்தை என்ற கடமையை நிறைவேற்றவேண்டுமென்றால் அவன் மனைவி அவனுக்கு மட்டும் என்ற என்ணம் வேரூன்ற வேண்டும். ஆகவே பெண்ணுக்கு பல கட்டுப்பாடுகள் வந்தன. உண்மையாய் இருந்தால் மட்டும் போதாது, உண்மையாக இருப்பது போன்ற தோற்றமும் தேவைப்பட்டது.

ஆகவேதான் ஆண் எப்படியிருந்தாலும் பெண் மட்டும் கற்புடையவளாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டாயிற்று. இதை பெண்கள் கூட அதிகம் வலியுறுத்தினர். அதே நேரத்தில் மனித இனம் தழைக்க வேண்டுமானால் மக்கள் தொகை பெருக்கம் என்பது கட்டாயமாக்கப்பட்டது. இப்போது நம்மிடம் இருக்கும் அதிக ஜனத்தொகை என்பது மனிதவரலாற்றில் புதியது. இருப்பினும் இப்போது கூட பல ஐரோப்பிய தேசங்களில் ஜனத்தொகை குறைந்து அரசுகள் கூப்பாடு போடுவதையும் நாம் பார்க்கிறோமே. திடீரென்று பெரிய விபத்து ஏற்பட்டு மனிதர்கள் பல்லாயிரக்கணக்கில் அழிந்தால் அப்போது நம் மனநிலைமை எப்படி வேண்டுமானாலும் மாறலாம். ஆகவே இப்போதைய உண்மைகளை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று பார்க்கலாம்.

"ஜாலியான பிரும்மச்சாரியாக இருப்பது எப்படி" என்றெல்லாம் புத்தகங்கள் ஆணுக்காக வந்தால் "கணவன் பெறுவதற்கான வழிகள்" என்று பெண்ணுக்கான புத்தகங்கள் வருகின்றன. பல பெண்களுடன் ஆண் உறவு வைத்தால் அவனுக்கு மச்சம் என்றெல்லாம் பேசுகின்றனர். அதே சமயம் பெண்ணுக்கு ஒன்றுக்கு மேல் ஆண் நண்பர்கள் இருந்தால் அவளுக்கு பெயர் அளிப்பதில் மற்ற பெண்களே முன்னால் நிற்கின்றனர்.

ஆனால் உடல் இச்சை என்பது இருபாலருக்கும் பொதுதான். தற்சமயம் பெண்கள் தங்கள் இச்சைகளை வெளிப்படுத்துவதில் அதிகம் தயங்குவதில்லை. அதற்குள் ஆண்களுக்கு ரத்தக் கொதிப்பு ஏறிவிடுகிறது. ஏறினால் ஏறிவிட்டுப் போகட்டும். உடல் இச்சையை அபாயமின்றி எவ்வாறு பெண்கள் பூர்த்தி செய்து கொள்வது? அடுத்த பதிவில் பார்ப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது