2/03/2007

சென்னை வலைப்பதிவர் சந்திப்பு 03.02.2007

எனது எலெக்ட்ரிக் ட்ரெயின் மாம்பலம் ஸ்டேஷனை அடைந்த போது மணி மாலை 4.50. கும்பலை விலக்கிக் கொண்டு ரங்கநாதன் தெரு, ராமேஸ்வரம் தெரு, ராமநாதன் தெரு, மோதிலால் தெரு, தண்டபாணித் தெரு, ஹென்ஸ்மென் சாலை ஆகியவற்றை கடந்து நடேச முதலியார் பூங்காவுக்கு வந்த போது மணி கிட்டத்தட்ட 5.15 ஆகி விட்டது. நடுவில் செந்தழல் ரவி அவர்களின் ஃபோன்கால் வேறு. அப்போதே கணிசமான அளவுக்கு பதிவர்கள் வந்து சேர்ந்திருந்தனர். க்ரெஸண்ட் பார்க்கை தாண்டும் போது மரபூர் சந்திரசேகர் ஃபோன் வேறு. அவர் தான் பூங்காவுக்கு வந்து விட்டதாகக் கூறினார். நானும் இன்னும் சில நொடிகளில் வருவதாகக் கூறி விட்டு உள்ளே போன போது ஒரு பெரிய வட்டமாக பதிவர்கள் அமர்ந்திருந்தனர். நான் அங்கு போன போது இருந்தவர்கள் பாலபாரதி, மரபூரார், செந்தழல் ரவி, லக்கிலுக், வரவனையான், மிதக்கும் வெளி, மா.சிவகுமார், சுந்தர், பாலராஜன் கீதா, முத்து தமிழினி ஆகியோர். சிறிது நேரம் கழித்து வந்தார் சிவஞானம்ஜி அவர்கள். ஹைதராபாத் பிளாக்கர் மதுசூதன் அவர்கள் வருவதாக இருந்தது. கடைசி நிமிடத்தில் அவரிடமிருந்து ஒரு துரித செய்தி வந்தது. தான் ஒரு இடத்தில் மாட்டிக் கொண்டதாகக் கூறினார். அவரால் வர இயலவில்லை.

மேலே குறிப்பிட்டவர்கள் தவிர எஸ். சங்கர், பிரியன், பூபாலன், விக்கி, சோமி ஆகியோரும் இருந்தனர். இன்னும் தாமதமாக வந்து சேர்ந்து கொண்டவர்கள் ஓகை மற்றும் நம்ம ரோசா வசந்த் அவர்கள். மீட்டிங்கிற்கு அஜெண்டா ஒன்றும் இல்லை. அவரவர் ரேண்டம் முறையில் பேசிக் கொண்டோம். திடீரென பாலபாரதிக்கு அழைப்பு செல்பேசியில் வர அவர் பரபரப்புடன் சற்று தூரம் தள்ளிப் போய் பேசினார். பொட்டீக்கடை அவர்கள் ஆஸ்திரேலியாவிலிருந்து கொண்டே செல்பேசி மூலம் லக்கிலுக், முத்து தமிழினி ஆகியோரிடம் பேசினார். நான் வந்திருப்பதை அறிந்து என்னிடமும் பேசினார். மனிதருக்கு செல் பேசி சார்ஜே கணிசமாக எகிறியிருக்கும் எனத் தோன்றியது.

சிவஞானம்ஜி தனது கணினி படுத்தும் விவரத்தைக் கூறினார். அவர் கூறியபடி பார்த்தால் மானிட்டரில்தான் பிரச்சினை எனத் தெரிந்தது. அவர் Windows 98 பாவிப்பதாகத் தெரிகிறது. முதலில் தட்டைத் திரை மானிட்டர் வாங்குமாறு அவரிடம் யோசனை நான் கூறினேன். சிவக்குமார் அவர்கள் அதற்கு கணினி வன்பொருளையும் இற்றைப்படுத்த வேண்டும் என அபிப்பிராயப்பட்டார். இம்முறை விண்டோஸ் எக்ஸ்.பி. க்கு போவதே சிறந்தது என்று நான் ஆலோசனை கூறினேன்.

பூபாலன் அவர்கள் என்னிடம் மனம் விட்டு பேசினார். தான் ஐயங்கார் என்றுகூறிக் கொள்ள முடியுமா என்று கேட்டார். தாராளமாகக் கூறிக் கொள்ளலாம் இதில் என்ன சந்தேகம் என்று பதிலளித்தேன். இதற்காகப் போய் யாரிடமும் அனுமதி பெறத்தேவையில்லை என்றும் கூறினேன். நான் எழுதிய சாதிப் பெயர் சம்பந்தமாக எழுதிய விஷயங்களை அவர்கள் வீட்டு பெரியவர்களிடம் காட்டி கருத்து பெற்று கொள்ளுமாறு கூறினேன். பல விஷயங்கள் அவர் தெரிவித்தது ரொம்ப பெர்சனல் என்பதால் மேல் விவரங்களை பூபாலன் அவர்கள் விருப்பப்பட்டால் பின்னூட்டமாக இடலாம். நான் கூறுவது சரியாக இருக்காது.

நான் பீட்டா பிளாக்கருக்கு மாறிய சூழ்நிலை பற்றி பேசும்போது, என்னை வலுக்கட்டாயமாக அது இழுத்து சென்றது எனக் குறிப்பிட்டேன். ஒரு நிலைக்கு மேல் அது பழைய பிளாக்கருக்கு login செய்வதை முழுமையாகத் தடுத்துவிடுகிறது என்று கூறி ஒரு வார்த்தைப் பிரயோகம் செய்தேன். நல்லவேளையாக பெண்பதிவர்கள் யாரும் வரவில்லை. நான் கூறியதை எல்லோரும் ரசித்தனர். நான் மேலும், அம்மாதிரி பிளாக்கர் ஒரேயடியாக வற்புறுத்தும் நிலை வரும்வரை புது பிளாக்கருக்கு மாற வேண்டாம் என்றும் ஆலோசனை கூறினேன். நான் அவ்வாறு செய்ததால் தமிழ்மண இணைப்புடன் பீட்டா பிளாக்கர் அப்படியே வந்து உட்கார்ந்து கொண்டது என்றும் கூறினார். மேலும் எனது 350-க்கும் அதிகமான அத்தனைப் பதிவுகளும் வெண்ணெய் போல வழுக்கிக் கொண்டு வந்து உட்கார்ந்தன.

தெருக்களில் சாதிப்பெயர் எடுத்தது பற்றி மேலும் பேசப்பட்டது. வலைப்பூக்களில் அவரவர் வெளிப்படுத்திய நிலைப்பாட்டிலேயே அவரவர் இருந்தாலும் விவாதம் சுமுகமான சூழலிலேயே சென்றது. நேருக்கு நேர் ஒருவர் இன்னொருவரை பார்க்கும்போது பேச்சில் கடுமை குறைவது மனதுக்கு நிறைவாக இருந்தது. இதற்காகவே இம்மாதிரி மீட்டிங்குகள் அடிக்கடி போட வேண்டும்.

எனது பிளாக்கர் பிரச்சினை தீர்ந்ததற்காக சிவகுமார் அவர்களுக்கு மீண்டும் நன்றி தெரிவித்தேன். எனது ஹிட் கவுண்டர் மட்டும் மறைந்து விட்டது என்றும் கூறினேன். பழைய டெம்பிளேட்டில் சேமித்து வைத்ததிலிருந்து அதற்கான மீயுரையை எடுத்து புது டெம்பிளேட்டில் போட்டால் பழைய எண்ணிக்கையுடன் அப்படியே வரும் என்று அவர் கூறினார். வீட்டுக்கு வந்ததும் அதை முதலில் முயற்சி செய்தேன். வெற்றி பெறவில்லை. பிறகு பார்க்கலாம் என வைத்து விட்டேன்.

சுமார் 7 மணியளவில் எல்லோரும் பார்க்குக்கு பின் கேட் வழியாக சென்று ஒரு டீக்கடையில் டீ குடித்தோம். பா.க.ச.வில் நானும் உறுப்பினராக சேர்ந்து நம்ம பால பாரதீஐ எனது தரப்பில் கலாய்த்தேன்.

பிறகு தீர்த்த பார்ட்டிக்காக ஒரு கோஷ்டி கிளம்பியது. தி. நகர் பேருந்து நிலையத்துக்கு அருகில் ஒரு பாரில் மீட் செய்வதாகப் பேச்சு. நான் ஓகை சார் அவர்களது காரில் ஏறிக் கொண்டு சென்றேன். ஒரு பியர் (கிங்ஃபிஷர் ஸ்ட்ராங்), சற்று கொறிக்க சில ஐட்டங்கள் கிடைத்தன. பிறகு ஒரு சிக்கன் பிரியாணி. வயிற்றுக்குணவில்லாத போது சிறிது செவிக்கும் ஈயப்பட்டது. அதற்குள் வீட்டிலிருந்து இரண்டு அழைப்புகள் வந்து விட்டன. சுமார் 10 மணியளவில் எல்லோரிடமிருந்து விடை பெற்றுக் கொண்டு மாம்பலம் ஸ்டேஷன் வந்தேன். உடனேயே ரயிலும் வர, மீனம்பாக்கம் வந்து சேர்ந்தேன்.

வழக்கம்போல நான் எழுதியதில் விட்டுப் போனதை ஏனைய பதிவர்கள் எழுதுவார்கள் என எதிர்பார்க்கிறேன். ஏனெனில் ஒன்றுக்கும் மேற்பட்ட குழுக்கள் உருவாகி சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருந்தனர்.

இன்றைய பதிவர் மீட்டிங் பல மன அழுத்தங்களைக் குறைத்தது என்பதே நிஜம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

164 comments:

dondu(#11168674346665545885) said...

"புதிய பிளாக்கரிலாவது அனானி/அதர் தேர்வுகளை கொடுக்க மாட்டீர்களா என்ற லக்கிலுக்கின் வேண்டுகோளை பரீசிலிப்பதாகச் சொன்னார்."

மேலே இருப்பது மா.சிவகுமார் அவர்களின் பதிவில் இந்த வலைப்பதிவர் சந்திப்பை குறித்து எழுதப்பட்டது.

துரதிர்ஷ்டவசமாக புது பிளாக்கரும் அதர் ஆப்ஷனின் அபாயத்தைத் தொடர்கிறது. இருப்பினும் பலர் கேட்டு கொண்டதற்கு இணங்க அனானி வசதியை எனது பதிவில் பரீட்சார்த்தமாகத் துவங்குகிறேன். இது தவறான உபயோகம் ஆகாது என நம்புகிறேன். ஆனால் அதற்காக மற்றவர்களையே நம்ப விருப்பம் இல்லை. நானும் உஷாராக இருக்க வேண்டும். அது முடியாவிட்டால் பிளாக்கர் பின்னூட்டமே கதி என்று போக வேண்டும்.

அந்த பகுத்தறியும் திறமை என்னிடம் உள்ளதா என்பதைப் பார்க்கவே இந்த முடிவை எடுத்துள்ளேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

இனி தாக்குதல் பயன் இல்லாமல் உங்கள் கருத்துகளுக்கு பதில் கருத்து சொல்லாம்.

உங்கள் குறிப்புகள் சுவாரசியமாக இருக்கிறது.

dondu(#11168674346665545885) said...

"இனி தாக்குதல் பயம் இல்லாமல் உங்கள் கருத்துகளுக்கு பதில் கருத்து சொல்லாம்.
உங்கள் குறிப்புகள் சுவாரசியமாக இருக்கின்றன"

நன்றி அனானி அவர்களே. உங்கள் கருத்தை நகலெடுக்கும்போது என்னையறியாமலேயே எழுத்து பிழைகளைத் திருத்தியிருக்கிறேன். நீங்கள் கூறிய கருத்து அப்ப்ச்டியே உள்ளது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

அப்ப்ச்டியே --> அப்படியே

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

அதர் ஆப்சன் வைத்ததுக்கு நன்றி .சமீபத்தில் எங்கே போச்சு .கடந்த சில பதிவுல காணோமே.இதை டெலிட் செய்யாமல் பிரசுரிக்கனும் ஓகே

மா சிவகுமார் said...

சார்,

அதர், அனானி ஆப்ஷன் வைத்து நல்ல வேடிக்கை காட்டப் போகிறார்கள் உங்கள் ரசிகர்கள். யாரும் பிறர் பெயரை மோசடி செய்யாதது வரை தொல்லை எதுவும் இல்லையே :-)

அன்புடன்,

மா சிவகுமார்

dondu(#11168674346665545885) said...

"சமீபத்தில் எங்கே போச்சு .கடந்த சில பதிவுல காணோமே."
இந்தப் பதிவில் சமீபத்தில் என்று சொல்லும் வகையில் ஆண்டுகள் குறிப்பிடப்படவில்லை.

மற்றப்படி எங்கிருந்தாலும் அவை டிஃபால்டாக சமீபத்தில் என்ற குறிப்புடந்தானே வருகின்றன?

அன்புடன்,
டோண்டு ராகவன்

சாலிசம்பர் said...

வலைத்தலைவனுக்கு என் வணக்கங்கள்.நான் முதலாவதும், முழுவதுமாக படித்த பதிவர்கள் நீங்களும்,டூண்டுவும் தான்.உங்கள் சண்டையை பெரிதும் ரசித்து மகிழ்ந்தேன்.தொடரட்டும் உங்கள் சேவை.

dondu(#11168674346665545885) said...

"அதர், அனானி ஆப்ஷன் வைத்து நல்ல வேடிக்கை காட்டப் போகிறார்கள் உங்கள் ரசிகர்கள். யாரும் பிறர் பெயரை மோசடி செய்யாதது வரை தொல்லை எதுவும் இல்லையே :-)"

உங்களை மாதிரி மன உறுதியுள்ள நண்பர்களுக்கு அனானி அதர் ஆப்ஷன் தேவை இல்லைதான். மற்றப்படி அது இப்போது துர் உபயோகம் ஆகாமல் தடுக்க என்னிடம் மட்டுறுத்தல் என்னும் ஆயுதம் உள்ளது. அதை வைத்து சமாளிக்க முடியும் என நினைக்கிறேன். அதர் ஆப்ஷனில் போட்டோ தெரியாது. ஆனால் சம்பந்தப்பட்ட பதிவர் போட்டோ அல்லது இமேஜ் எதுவும் வைத்துக் கொள்ளாத பட்சத்தில் சில தவறுகள் நடக்கும் வாய்ப்பு உண்டு.

ஆகவே யாராவது தங்கள் பெயரில் அதர் ஆப்ஷனை உபயோகித்து என் காவலையும் மீறி பின்னூட்டம் வேறு யாரோ இட்டார்கள் என சுட்டிக் காட்டும் பட்சத்தில் அது தாட்சணியமின்றி நீக்கப்படும். அது ஆபாச பின்னூட்டமாக இல்லாவிட்டாலும் எனது இந்த செயல்பாடு இருக்கும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

நன்றி ஜாலிஜம்பர் அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//ஒரு பியர் (கிங்ஃபிஷர் ஸ்ட்ராங்), சற்று கொறிக்க சில ஐட்டங்கள் கிடைத்தன. பிறகு ஒரு சிக்கன் பிரியாணி.//

டோண்டு ஐயா, ஹேவார்ட்ஸ் 5000 டிரை செய்து இருக்கலாமே.
உங்களுக்கு சிக்கன் சமைபீர்கள் என்று தெரியும் சாப்பிடவும் செய்வீர்களா?

Anonymous said...

// எனது ஹிட் கவுண்டர் மட்டும் மறைந்து விட்டது என்றும் கூறினேன்.

statcounter வைத்து கொள்ளாலாமே

dondu(#11168674346665545885) said...

"statcounter வைத்து கொள்ளாலாமே"

அந்தப் பிரச்சினையும் மா.சிவக்குமார் அவர்கள் உதவியால் தீர்க்கப்பட்டது. என்ன, அதன் எண்ணிக்கை விட்ட இடத்திலிருந்து துவங்கியாது. ஆக, அது செயலில் இல்லாதபோது வந்த ஹிட்டுகள் கவனத்தில் கொள்ளப்படவில்லை. இன்று மீண்டும் போட்டதிலிருந்து 157 பேர் பார்த்துள்ளனர். நான் ஓப்பன் செய்வது கணக்கில் வராது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

"டோண்டு ஐயா, ஹேவார்ட்ஸ் 5000 டிரை செய்து இருக்கலாமே.
உங்களுக்கு சிக்கன் சமைபீர்கள் என்று தெரியும் சாப்பிடவும் செய்வீர்களா"?

எனக்கு பிடித்தது ப்ளடி மேரி. அதை ஓர்டர் செய்ய மறந்து விட்டேன். சிக்கன் ரொம்ப பிடிக்கும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Muse (# 01429798200730556938) said...

எனக்கு பிடித்தது ப்ளடி மேரி.

கர்த்தர் உங்களை மன்னிப்பாராக ;-)!

Anonymous said...

// எனது எலெக்ட்ரிக் ட்ரெயின் //

முன்பெல்லாம் காரில்தான் வருவீர்கள். இப்போது எலெக்ட்ரிக் ட்ரெயினையும் வாங்கிவிட்டீர்களா ?
Congrats. :-))))))

லெனின் பொன்னுசாமி said...

நேரில் பார்த்த உணர்வு...

Anonymous said...

முழு எலெக்ட்ரிக் ட்ரெயினையும் வாடகைக்கு எடுத்து கொண்டு சென்றீர்களா?படா படா ஆசாமிபா

Anonymous said...

very good matured writing.i feel happy now to put my comments again after few months.

Anonymous said...

போண்டா இல்லாத சந்திப்பு என்று இட்லி வடை சைடில் அடிச்சுவுடுறாரு தல

போண்டா சாப்பீடிங்களா இல்லையா ??..
சொல்லு தல..

போண்டா இல்லாதா சந்திப்பு ஒரு சந்திப்பா .

இவன்
தலைவர்
டோண்டு ரசிகர் மன்றம்,
லண்டன்.

Anonymous said...

இது போன்ற வலை சந்திப்பில் எந்த வித உருப்படியான விழயமும் நடக்க போவதில்லை.

சுதந்திர போராட்ட வீரர்களை எல்லாம் தன் குணத்தை போன்று நினைத்து எழுதி(?) வாந்தி எடுத்து கொண்டு இருக்கும் பண்ணாடைகள் உறவு உங்களுக்கு தேவையா?

சீனு said...

//இது போன்ற வலை சந்திப்பில் எந்த வித உருப்படியான விழயமும் நடக்க போவதில்லை.//

பார்றா. உருப்படியான என்றால் எப்படி? உங்களுக்கு கலந்துகொள்ள காசு வேண்டுமா, அனானி.

உருப்படியான விஷயத்தை நாம் தான் உருவாக்க வேண்டும்...

dondu(#11168674346665545885) said...

"போண்டா சாப்பீடிங்களா இல்லையா ??..
சொல்லு தல.."

அதுக்கு மேலேயே சாப்பிட்டேனே, அதையும் எழுதியுள்ளேனே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

"சுதந்திர போராட்ட வீரர்களை எல்லாம் தன் குணத்தை போன்று நினைத்து எழுதி(?) வாந்தி எடுத்து கொண்டு இருக்கும் பண்ணாடைகள் உறவு உங்களுக்கு தேவையா"?

யாரைக் குறிப்பிடுகிறீர்கள் என்று தெரியவில்லை. இருந்தாலும் வசைச் சொற்கள் இல்லாது எழுதுங்கள் நண்பரே.

சீனு அவர்கள் சொன்னது போல நாம்தான் உருப்படியான விஷயங்களை உருவாக்க வேண்டும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

/யாரைக் குறிப்பிடுகிறீர்கள் என்று தெரியவில்லை. இருந்தாலும் வசைச் சொற்கள் இல்லாது எழுதுங்கள் நண்பரே.

சீனு அவர்கள் சொன்னது போல நாம்தான் உருப்படியான விஷயங்களை உருவாக்க வேண்டும்.

அன்புடன்,
டோண்டு ராகவன/

நடிக்காதீங்க டோண்டு ராகவன்,வாஞ்சி நாதன் என்ன சுதந்திர போராட்ட வீரன் இல்லையா?

ஆம் இல்லை பதில் தான் தேவை

dondu(#11168674346665545885) said...

"வாஞ்சி நாதன் என்ன சுதந்திர போராட்ட வீரன் இல்லையா?"
கண்டிப்பாக வீரவாஞ்சி சுதந்திரப் போராட்ட வீரனே. அதில் ஒரு ஐயமும் இருக்க முடியாது.

வாஞ்சிநாதன அவர்களது விதவைக்கு பென்ஷன் தரக்கூடாது என்று விடுதலையில் கட்டுரையே வந்தது. அதில் கூட ஆஷ் துரை என்னதான் இருந்தாலும் கலெக்டர். அவரைக் கொன்றது ராஜத் துரோகம் என்றுதான் எழுதியிருந்தார்கள். மற்றப்படி அக்கிரகார விவகாரம் எல்லாம் ஒன்றும் அக்கட்டுரையில் வரவில்லை என்பதை அக்காலக் கட்டத்திலேயே அதை நேரடியாக விடுதலை பத்திரிகையில் படித்வன் என்ற முறையில் என்னால் தெளிவாகக் கூற முடியும். இது பற்றி ஏற்கனவே நான் பல இடங்களில் எழுதியுள்ளேன்.

வரவனையான் அவர்கள் இந்த விஷயத்தில் சொன்னதை நானும் ஒத்த்துக் கொள்ளவில்லை. இருப்பினும் நட்பு முறையில் கூடிய இடத்தில் அதையெல்லாம் பற்றி பேசாதிருப்பதே நாகரிகம்.

அதே போல என் மேல் அவர்களுக்கு பலவிதத்தில்கோபம். முக்கியமாக நாமக்கல் சிபி பதிவில் அன்றுதான் சண்டை மண்டை எல்லாம் உடைந்தது. இருப்பினும் அந்த கருத்து வேறுபாடு எங்கள் மீட்டிங்கை டிச்டர்ப் செய்ய ஒருவரும் இடம் கொடுக்கவில்லை என்பதே நிஜம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//வாஞ்சி நாதன் என்ன சுதந்திர போராட்ட வீரன் இல்லையா?"
கண்டிப்பாக வீரவாஞ்சி சுதந்திரப் போராட்ட வீரனே. அதில் ஒரு ஐயமும் இருக்க முடியாது.

வாஞ்சிநாதன அவர்களது விதவைக்கு பென்ஷன் தரக்கூடாது என்று விடுதலையில் கட்டுரையே வந்தது. அதில் கூட ஆஷ் துரை என்னதான் இருந்தாலும் கலெக்டர். அவரைக் கொன்றது ராஜத் துரோகம் என்றுதான் எழுதியிருந்தார்கள். மற்றப்படி அக்கிரகார விவகாரம் எல்லாம் ஒன்றும் அக்கட்டுரையில் வரவில்லை என்பதை அக்காலக் கட்டத்திலேயே அதை நேரடியாக விடுதலை பத்திரிகையில் படித்வன் என்ற முறையில் என்னால் தெளிவாகக் கூற முடியும். இது பற்றி ஏற்கனவே நான் பல இடங்களில் எழுதியுள்ளேன்.

வரவனையான் அவர்கள் இந்த விஷயத்தில் சொன்னதை நானும் ஒத்த்துக் கொள்ளவில்லை. இருப்பினும் நட்பு முறையில் கூடிய இடத்தில் அதையெல்லாம் பற்றி பேசாதிருப்பதே நாகரிகம்.

அதே போல என் மேல் அவர்களுக்கு பலவிதத்தில்கோபம். முக்கியமாக நாமக்கல் சிபி பதிவில் அன்றுதான் சண்டை மண்டை எல்லாம் உடைந்தது. இருப்பினும் அந்த கருத்து வேறுபாடு எங்கள் மீட்டிங்கை டிச்டர்ப் செய்ய ஒருவரும் இடம் கொடுக்கவில்லை என்பதே நிஜம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்//

அதற்க்காக சுதந்திர போராட்ட வீரர்களை தன்னை போல நினைத்து கொண்டு இருக்கும் அறிவிலிகளை நீங்கள் தெளிவுபடுத்தவில்லை.அல்லது முயர்சிக்க கூடவில்லை.

நன்றி டோண்டு

நாமக்கல் சிபி said...

// முக்கியமாக நாமக்கல் சிபி பதிவில் அன்றுதான் சண்டை மண்டை எல்லாம் உடைந்தது. இருப்பினும் அந்த கருத்து வேறுபாடு எங்கள் மீட்டிங்கை டிச்டர்ப் செய்ய ஒருவரும் இடம் கொடுக்கவில்லை என்பதே நிஜம்//

கருத்துக்கள் அடித்துக் கொள்ளலாம். ஆனால் கருத்தைச் சொல்பவர்கள் அடித்துக் கொள்ளத் தேவையில்லை என்ற உங்கள் இந்தக் கருத்தோடு ஒத்துப் போகிறேன்.

:))

Anonymous said...

//அதே போல என் மேல் அவர்களுக்கு பலவிதத்தில்கோபம். முக்கியமாக நாமக்கல் சிபி பதிவில் அன்றுதான் சண்டை மண்டை எல்லாம் உடைந்தது. இருப்பினும் அந்த கருத்து வேறுபாடு எங்கள் மீட்டிங்கை டிச்டர்ப் செய்ய ஒருவரும் இடம் கொடுக்கவில்லை என்பதே நிஜம்.//

வெளிபடையாக ஜாதி தாக்குதல் வந்தால் எதிர் கொள் என்று சொன்ன டோண்டு ராகவன் தற்போது உண்மைகளை தட்டி சொல்ல முடியாமல் முடங்கி கிடப்பது வலைப்பூவில் தான் வீரம் என்று எண்ணத்தான் தோன்றுகிறது.

என்னவோ டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

"வெளிபடையாக ஜாதி தாக்குதல் வந்தால் எதிர் கொள் என்று சொன்ன டோண்டு ராகவன் தற்போது உண்மைகளை தட்டி சொல்ல முடியாமல் முடங்கி கிடப்பது வலைப்பூவில் தான் வீரம் என்று எண்ணத்தான் தோன்றுகிறது".

வீரம் வேண்டியதுதான். அதே சமயம் விவேகமும் வேண்டும். வலைப்பதிவர் சந்திப்பு கண்டிப்பாக வாய்ச்சண்டைக்கான இடம் இல்லை என்பதில் நான் உறுதியாகவே உள்ளேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

// இனி தாக்குதல் பயன் இல்லாமல் உங்கள் கருத்துகளுக்கு பதில் கருத்து சொல்லாம்.//
என்னன்னு தெரியல தாக்குதலா?

Anonymous said...

//கருத்துக்கள் அடித்துக் கொள்ளலாம். ஆனால் கருத்தைச் சொல்பவர்கள் அடித்துக் கொள்ளத் தேவையில்லை என்ற உங்கள் இந்தக் கருத்தோடு ஒத்துப் போகிறேன்.

:))//
சிபி ,நீ எல்லாம் ஒரு மனுசன் போலிகளின் பின்னோட்டதை எல்லாம் போட்டு அதில் குளிர்காயும் உமக்கு இதை சொல்ல அருகதை இருக்கா?
இதுல நீ போட்ட ஸிமைலி பார்த்தா உமக்கு போட்டுகொண்ட போலத்தானிருக்கு

Anonymous said...

thanks for allowing anonymous comments dondu sir.

Anonymous said...

அதர்/அனானி ஆப்சன் - ரொம்ப பேஜார் ஆவ போது.

அதர்/அனானி ஆப்சன் வசதிக்கு முன்னாடி, யார் யாரை திட்டுரான், எதை திட்டுரான்னு தெரியும்.

இப்போ, இன்னா நடக்கபோதுனு யாருக்கும் தெரியாது.

அனானி - அனானியை தாக்கும், அய்யங்கார் - அய்யங்காரை தாக்கும், திமுக - திமுகவையும், அதிமுக - அதிமுகவையும் தாக்கும்.

பின்னுட்டம் பாத்தா, இனி 100-த்து கணக்குல போகபோவுது.

இனி காமெடி டைம் பாக்க வேனாம் போல........

ரொம்ப பேஜாரு பா. ஒன்னியும் புரியல...... ல

dondu(#11168674346665545885) said...

அனானிகளாக பின்னூட்டம் இடுபவர்களுக்கு ஒரு வேண்டுகோள். மாற்றுக் கருத்துக்கள் இருக்கும்தான். உண்மை கூறப்போனால் அவை இல்லாமல் வாழ்க்கையே ருசிக்காது. அதற்காக யாரையும் தனிப்பட்ட முறையில் விமரிசனம் செய்யாதீர்கள் என அன்புடன் வேண்டுகிறேன். ஏற்கனவே பல பின்னூட்டங்கள் தவறான வார்த்தை பிரயோகங்களுக்காக மறுக்கப்பட வேண்டியிருந்தது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

டோண்டு சார்

உங்க பதிவில் கும்மி அடிக்க அனானிகளை அனுமதியுங்கள். அனைத்து பதிவுகளையும் சதமடிக்க வைப்பது எங்கள் பொறுப்பு

இவன்
டோண்டு தற்கொலைப்படை

Anonymous said...

வலைபதிவர் சந்திப்புக்கு அடுத்த முறை அனானிகளையும் அழையுங்கள்.

இவன்
செயல்வீரர் டோண்டு பேரவை

dondu(#11168674346665545885) said...

இவன் --> என்பதை இவண் என திருத்திக் கொள்ளுங்கள். :)))

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

பிழைதிருத்தம் செய்த தமிழாசான் டோண்டு வாழ்க.

இரவு 3.46க்கு கூட தூங்காமல் விழித்திருந்து பின்னூட்ட மட்டுறுத்தல் செய்யும் 61 வயது இளைஞரே. நீர் வாழ்க.நும் தமிழ்வாழ்க

இவண்
வாழும் உ.வே.சா டோண்டு பேரவை

Anonymous said...

அனானிகளை அடித்து ஆட அனுமதித்த இந்த வரலாற்று சிறப்பு மிக்க முதல்பதிவை சதமடிக்க வைப்பதென்று அனானிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் முடிவெடுக்கபட்டுள்ளது.

Anonymous said...

அதர் ஆப்ஷனை பயன்படுத்த அனுமதித்த இந்த வரலாறு சிறப்புமிக்க பதிவை சதமடிக்க வைப்பதென்று அதர் ஆப்ஷன் சங்கத்தினர் சார்பிலும் முடிவெடுக்க பட்டுள்ளது

Anonymous said...

நான் ஓகை சார் அவர்களது காரில் ஏறிக் கொண்டு சென்றேன். ஒரு பியர் (கிங்ஃபிஷர் ஸ்ட்ராங்), சற்று கொறிக்க சில ஐட்டங்கள் கிடைத்தன. பிறகு ஒரு சிக்கன் பிரியாணி./

நீங்கள் சிக்கன் பிரியாணி சாப்பிடுவீர்களா? சைவம் என்று தான் நினைத்திருந்தேன்.

இவண்
கொத்து பரோட்டா மாஸ்டர்

பி.கு:அபாயகரமான அதர் மற்றும் அனானி ஆப்ஷனை நீங்கள் வைத்திருப்பதால் இந்த பின்னூட்டத்தை உண்மையான அனானி தான் இட்டான் என்பதை நிருபிக்க என் துண்டை போட்டு தாண்டுகிறேன்.

Anonymous said...

என்னைப்பற்றி மோசமாக எழுதிய தமிழ்பதிவர்களை கண்டிக்கிறேன்.

இவண்
வீர வாஞ்சிநாதன்
சொர்க்கம்

Anonymous said...

வீரவாஞ்சிநாதன் சொன்னது உண்மைதான். வாஞ்சிநாதன் என்னை கொன்றது மிகவும் சரியான நடவடிக்கையே

இவண்
ஆஷ் துரை
நரகம்

Anonymous said...

வீரவாஞ்சிநாதனுக்கு பென்ஷன் தர மறுத்த விடுதலை பத்திரிக்கையை கண்டிக்கிறேன்

Anonymous said...

விஜய் மல்லையா முதலியார் தயாரித்த கிங்பிஷர் பியர்களை இனிமேல் அருந்துவதில்லை என ஜாதி ஒழிப்பு பேரவை சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது

Anonymous said...

நடேசன் முதலியார் பார்க்கை நடேசன் பார்க் என்று மாற்றியவர்கள் மன்மோகன் சிங் பெயரை மன்மோகன் என்று மாற்றுவார்களா?

இப்படிக்கு
சோனியா காந்தி

dondu(#11168674346665545885) said...

"பி.கு:அபாயகரமான அதர் மற்றும் அனானி ஆப்ஷனை நீங்கள் வைத்திருப்பதால் இந்த பின்னூட்டத்தை உண்மையான அனானி தான் இட்டான் என்பதை நிருபிக்க என் துண்டை போட்டு தாண்டுகிறேன்".

இந்த மாதிரி விடியற்காலை 4.20 மணிக்கு படிக்கச்சே இதுதான் தொல்லை. கணினி அறையை இறுக்க சாத்திக் கொண்டு வேலை செய்யும் நான் இத படித்தவுடன் கெக்கெகே என்று வந்த சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்கிக் கொள்ள வேண்டியதாயிற்று. ஏனெனில் எந்தக் கணமும் வீட்டம்மா பிரசன்னமாகி இதென்ன கூத்து என்று கூறி கணினியை மூட உத்தரவிடுவார். :)))

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

பிராமணாள் சமையல் எனும் போர்டை எடுக்க போராடியவர்கள் ஆச்சி பிரியாணி கடை எனும் போர்டையும் எடுக்க போராடுவார்களா?

Anonymous said...

அய்யிரே உனக்கு இது தேவையா ஒய்ங்கா பதிவர் மட்டும் வச்சியிருந்த்த எடுத்துப் ப்ட்ட இப்பப்பாரு கண்ட நாதாறிங்க பூந்து வெள்ளாடுறாங்க.திடீரென்னு உனக்கு இன்னாத்துக்கு நைனா இந்த 100%பின்னூட்ட ஆசை

dondu(#11168674346665545885) said...

"விஜய் மல்லையா முதலியார்"
மல்லையாவே சாதிப் பெயர் என்றுதான் நினைக்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

முதலில் சோனியா காந்தி தன்னை சோனியா என்று அழைத்துக் கொள்ளட்டும் என்று மன்மோஹன் சிங் கொலைவெறிப்படையனர் வருவதுதான் பாக்கி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

ஏனெனில் எந்தக் கணமும் வீட்டம்மா பிரசன்னமாகி இதென்ன கூத்து என்று கூறி கணினியை மூட உத்தரவிடுவார். :)))/

அப்ப உங்க வீட்டில் மதுரைதான் சிதம்பரம் இல்லை என்று சொல்லுங்கள்:-d


துண்டை போட்டு தாண்டிய அனானி

Anonymous said...

மாமி இட்லி வார்த்திருந்தா சூடா ரெண்டு தினுட்டு வந்து பின்னூட்டம் மட்டறுக்கவும் .அப்படியே பில்டர் காபி ஒரு கல்ப் ராவா அடிங்க.மத்தியானம் நம்ம கடைப் பக்கம் வாரும் வாங்ஓழி பிரியாணி தர்ரேன்

Anonymous said...

கடைசியாக பின்னூட்டம் இட்டது போலி பரோட்டா மாஸ்டர்

அனானிக்கெல்லாம் போலி அதுக்குள் வந்துவிட்டார்களா?

dondu(#11168674346665545885) said...

"அப்ப உங்க வீட்டில் மதுரைதான் சிதம்பரம் இல்லை என்று சொல்லுங்கள்:-d"
வீட்டுக்கு வீடு மதுரைதானே. :)))

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

என்க ஊட்ல திருவல்லிகேணி சார் ;))
இவன்
வலைதலைவன் டோண்டு கொலைவெறிபடை,
கலிபோர்னியா கிளை,
சான் பிரான்சிஸ்கோ.

Madhu Ramanujam said...

எவ்வளவு முயன்றும் எனக்கு இந்த முறை பதிவர் சந்திப்பிற்கு வரும் வாய்ப்பானாது கை கூடவில்லை. வருத்தமாக உள்ளது.இருந்தாலும் மனதை தேற்றிக் கொள்வதை தவிர வேறு வழியில்லை. குறைந்த பட்சம் நேற்று டோண்டு அவர்களை இல்லத்தில் சந்திக்க எண்ணினேன். ஆனால் நான் விமான நிலையத்தை அடைந்து டிக்கட் நிலவரம் விசாரிக்கையில் மணி கிட்டத் தட்ட 8 ஆகி இருந்தது. எனக்கோ 9 மணிக்கு விமானம் என்பதால் டோண்டு அவர்களை அவரது இல்லத்தில் சந்திக்கும் வாய்ப்பும் போனது. மன்னிக்க் வேண்டுகிறேன் ராகவன்.

dondu(#11168674346665545885) said...

பரவாயில்லை மதுசூதனன் அவர்களே. நான் கூறியது சரியாகப் போயிற்று பார்த்தீர்களா. நேரடியாக ஏர்போர்ட் சென்று சான்ஸ் பாருங்கள் என்றேனே.

உங்களுக்கு இருந்த குறைந்த காலக்கெடுவில் அதுவே உத்தமம். சமீபத்தில் 1995-ல் நான் தில்லியிலிருந்து சென்னை வர ஜி.டி.எக்ஸ்பிரசில் புக் செய்திருந்தேன். அறு மட்டும் அதை கேன்ஸல் செய்து விட்டனர், ஏனெனில் காலையி வரவிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் பலமணி நேரம் லேட். அதுதான் ஜி.டி.யாக திரும்பியிரூக்க வேண்டியது.

பேசாமல் பாலம் விமான நிலையம் சென்று முயற்சித்தேன். டிக்கட் இருக்கிறது என்று கூறினார்கள். 5000 ரூபாய் கொடுத்தேன். மீதி 5 ரூபாய் கிடைத்தது வேறு கதை.

இப்போது தில்லி சென்னை டிக்கட் எவ்வளவு ஆகும்? ஏதோ குறைந்தால் போலத் தோன்றுகிறது?

அன்புடன்,
டோண்டு ராகவன்

லக்கிலுக் said...

டோண்டு சார்!

என் வேண்டுகோளை ஏற்று அதர்/அனானி ஆப்ஷனை திறந்து விட்டதற்கு நன்றி! உங்களது இந்த முடிவினை காவிரி நதிநீர்மன்ற நடுவரின் தீர்ப்புக்கு இணையான ஒரு வரலாற்று சிறப்பு மிக்க முடிவாக கருதுகிறேன்.

அதர்/அனானி ஆப்ஷனில் அருமையாக கும்மியடிக்க ஏற்ற வலைத்தளம் உங்களுடையது.

நன்றி!

dondu(#11168674346665545885) said...

நன்றாக கும்மியடிப்போம் லக்கிலுக் அவர்களே. ஆனால் யாரையும் புண்படுத்தும் வாக்கியங்கள் இருந்தால் அவை எடிட் அல்லது ரிஜெக்ட் செய்யப்படும்.

அதே போல அதர் ஆப்ஷனில் தப்பித் தவறி போகஸ் பின்னூடங்கள் வந்தால், நண்பர்கள் அதை சுட்டிக் காட்ட வேண்டுகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

அன்புடன்,
டோண்டு ராகவன்

லக்கிலுக் said...

டோண்டு சார்!

இந்தப் பதிவைப் பார்த்தீர்களா? :-))))))

http://vanakkathudan.blogspot.com/2006/12/blog-post_24.html

dondu(#11168674346665545885) said...

பார்த்தேன் லக்கிலுக் அவர்களே. இதற்கு என் நண்பர் கவுண்டமணி பசி நாராயணனுக்கு ஒரு படத்தில் கொடுத்த படத்தில் அளித்த பதில்தான் நான் தருவேன். (அவர் குரலில் இதை படிக்கவும்).

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா.:)))

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

Dear Dondu,

I am shocked. I feel that you have been driven to do this. Me too, commenting only as anonymous, now that anony option is there, as I was afraid.

I fully understand and sympathise.

Anonymous said...

//அனானிகளாக பின்னூட்டம் இடுபவர்களுக்கு ஒரு வேண்டுகோள். மாற்றுக் கருத்துக்கள் இருக்கும்தான். உண்மை கூறப்போனால் அவை இல்லாமல் வாழ்க்கையே ருசிக்காது. அதற்காக யாரையும் தனிப்பட்ட முறையில் விமரிசனம் செய்யாதீர்கள் என அன்புடன் வேண்டுகிறேன். ஏற்கனவே பல பின்னூட்டங்கள் தவறான வார்த்தை பிரயோகங்களுக்காக மறுக்கப்பட வேண்டியிருந்தது.//

தெளிவான இந்த சிந்தனைக்குப் பாராட்டுக்கள்.

வெளிப்படையாகச் சொன்னால் உங்களுடைய பல்வேறு கருத்துக்களுடன் முரண்படுவோம் இங்கே ஏராளம். ஆனால் சில பல நிர்பந்தங்களால் உங்கள் பதிவில் பின்னூட்டமிட முடிவதில்லை ( அந்த "சில பல" என்னவென்று நான் சொல்லமாட்டேனே ) இதற்காக நாங்கள் பிளாக் மெயிலுக்கு அடிபணிகிறோம் என்கிற விமர்சனம் வேண்டாமே பிளீஸ்....!

இனி உங்கள் பதிவில் சூடான விவாதங்களை எதிர்பார்க்கலாம்- ஆனால் ஒரு வேண்டுகோள் உங்களால் பதில் சொல்ல முடியாத தர்மசங்கடமான - ஆனால் நாகரீகமான - கேள்விகள் அனானிமஸ் பின்னூட்டங்களில் வரும் போது அதை நீங்கள் நேர்மையுடன் வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

//பி.கு:அபாயகரமான அதர் மற்றும் அனானி ஆப்ஷனை நீங்கள் வைத்திருப்பதால் இந்த பின்னூட்டத்தை உண்மையான அனானி தான் இட்டான் என்பதை நிருபிக்க என் துண்டை போட்டு தாண்டுகிறேன்.//

இந்தக் கலாய்த்தலை மெய்யாலுமே நான் மிகவும் ரசித்தேன் - இதற்கெல்லாம் வாய்ப்பு கொடுத்த டோண்டுவுக்கு ஒரு - ஓ..!

கொசு said...

எங்கே என் பின்னூட்டம்?

Anonymous said...

http://okkamakkaa.blogspot.com/2007/02/blog-post_04.html

Any comment on the above post ??

Why dont you express your views with your original identity? Afterall you are elder than us and you often speak about 'political-correctness'..

Please behave as a good example for others..

With expectations..

dondu(#11168674346665545885) said...

"I fully understand and sympathise".
Dear Anony, no need to downplay this and I plead no mitigating circumstances.

"http://okkamakkaa.blogspot.com/2007/02/blog-post_04.html Any comment on the above post ??"
I have to only say that that the comment in question would have created a lot of unnecessary extra heat under my own name for reasons too well known here.

"Why dont you express your views with your original identity"?
For the same reason that you are commenting anonymously here.

Regards,
Dondu N.Raghavan

dondu(#11168674346665545885) said...

"எங்கே என் பின்னூட்டம்?"

அதாங்க இது. :))))

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//For the same reason that you are commenting anonymously here.//

I am not a blogger.. Just blog reader.
(Just to clarify Mr.Raghavan. )

thanks for your explanations..

dondu(#11168674346665545885) said...

"I am not a blogger.. Just blog reader.
(Just to clarify Mr.Raghavan).

Sorry sir, I stand corrected. I modify my reply as follows.

For the same reason that many are commenting anonymously here.

Regards,
Dondu N.Raghavan

கொசு said...

முரளி மனோஹர் நீங்கதான்னு ஒத்துகிட்டீங்க.

சர்வாண்டிஸ், ஹேரி பொட்டர், வரதன், பரதன், பஜ்ஜி, சொஜ்ஜி, நாட்டாமை, கண்ணம்மா மற்ற பெயர்கள் எல்லாம் நீங்கதான்னு எப்போ ஒத்துக்கப் போறீங்க ஐயங்கார்வாள்?

dondu(#11168674346665545885) said...

"சர்வாண்டிஸ், ஹேரி பொட்டர், வரதன், பரதன், பஜ்ஜி, சொஜ்ஜி, நாட்டாமை, கண்ணம்மா மற்ற பெயர்கள் எல்லாம் நீங்கதான்னு எப்போ ஒத்துக்கப் போறீங்க ஐயங்கார்வாள்?"
இல்லாததை எதுக்கப்பா நான் ஒத்துக்கணும்? முடிஞ்சா இந்த மாதிரி ப்ரூஃப் கொண்டுவா. பாக்கலாம். உன்னாலே முடியாது, ஏன்னா நான் அவங்க இல்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

- யெஸ்.பாலபாரதி said...

சந்திப்பு பற்றி தெளிவாக எழுதி இருக்கீங்க பதிவுக்கு நன்றி!

ஆனா..

//பார்த்தேன் லக்கிலுக் அவர்களே. இதற்கு என் நண்பர் கவுண்டமணி பசி நாராயணனுக்கு ஒரு படத்தில் கொடுத்த படத்தில் அளித்த பதில்தான் நான் தருவேன். (அவர் குரலில் இதை படிக்கவும்).

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா.:)))//

உங்களின் இந்த பதில் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள்? தெளிவாக சொல்லவும்.

ஒத்துக்கொள்கிறீர்களா?

ராமன் கதை சொல்லுவது போல மழுப்பாமல் நேரடியாக சொல்லுங்க சாமி!

கொசு said...

ஏற்கெனவே செய்த தப்புக்கு என்ன தண்டனை ஓய்?

புரூப் கொண்டு வந்தால்தான் ஒத்துப்பேளோ? எடிட்டர் பையன்னா சும்மாவா?

கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை ஓய்!

dondu(#11168674346665545885) said...

மேலே கூறுவதற்கு ஒன்றுமில்லை பாலபாரதி அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

டோண்டு முரளிமனோகர் என்ற ஐடியில் யாரையாவது கெட்டவார்த்தையில் திட்டினாரா?இல்லையே? அப்புறம் என்ன இதில் தப்பு?வெட்டியாக உளறும் போக்கத்த பசங்களின் உளறலை கண்டுகொள்ள வேண்டாம் டோண்டு சார்.

- யெஸ்.பாலபாரதி said...

//dondu(#11168674346665545885) said...
மேலே கூறுவதற்கு ஒன்றுமில்லை பாலபாரதி அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்
//

அப்ப கீழேயாவது தெளிவாக சொல்லுங்க சாமி!

புரியாததினால் தான் கேட்கிறேன்.

Anonymous said...

பின்னூட்டத்துக்கு ஐடி வைத்தால் தப்பாய்யா?வேறு பெயர்களில் வந்து ஆபாசமாக திட்டினால் தான் தப்பு.

Anonymous said...

//வேறு பெயர்களில் வந்து ஆபாசமாக திட்டினால் தான் தப்பு.//

முரளி மனோஹர் என்ற பெயரில் வந்த ஆபாச பின்னூட்டங்களை நாங்கள் வெளியிடாமல் ரிஜக்ட்டு செய்து விட்டோம். முரளி மனோஹரும் ஆபாச பதிவர் தான்.

Anonymous said...

வெட்டித்தனமான கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டாம் டோண்டு . மோசமாக எதுவும் எழுதாதவரை இவர்கள் கேள்வி கேட்க எந்த உரிமையும் இல்லை. எத்தனை பெயரில் வேண்டுமானாலும் கூகிளில் எழுதலாம். ஆபாசமாக எழுதாதவரை எதுவும் தப்பில்லை

dondu(#11168674346665545885) said...

நடப்பது யுத்தம் பால பாரதி அவர்களே. எனக்கு பின்னூட்டமிடக் கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு எல்லோரையும் பயமுறுத்தி, அதில் பலர் பயந்து ஒதுங்க, எனது யோம் கிப்புர் இரண்டாம் பதிவில் நான் கொடுத்த யோசனையில் எனது நெருங்கிய நண்பர்கள் செர்வாண்டஸ், ஹாரி பாட்டர், கட்டபொம்மன் போன்ற பெயர்களில் வந்தனர். அவர்கள் யார் என்பதை எனக்குக் கூட தெரிவிக்க வேண்டாம் என்றே நான் கேட்டு கொண்டிருந்தேன். ஆகவே எனக்கு அவர்கலில் யார் என்ன பெயரில் வருகிறார்கள் எனத் தெரியாது, தெரிந்து கொள்ளவும் விரும்பவில்லை.

இதனை பேர் வரும்போது நானும் எனக்கு நண்பந்தானே. அதான் முரளி மனோஹர்.

நீங்கள் என் நண்பராக வந்து கேட்பதால் இதை கூறுகிறேன்.

Everything is fair in love and war.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

கொசுபுடுங்கி என்பது உன் சொந்த பெயரா?போலிபெயரில் எழுதும் நீயெல்லாம் கேள்வி கேட்க வந்துவிட்டாய்.

Anonymous said...

உங்க பதில் தெளிவான பதில் தான். ஆனா கொஞ்சம் மீசையில மண்ணு ஒட்டிகிச்சி. துடைச்சி தூரப்போட்டுடுங்க.

- ஆல் இன் ஆல் அழகுராஜா

Anonymous said...

தலைப்பை பத்தி பேசாம... என்ன இது குழப்பம்? விடுங்கப்பு

- ஆல் இன் ஆல் அழகுராஜா

Anonymous said...

100 பின்னூட்டத்துல என் பங்கு 3.

- ஆல் இன் ஆல் அழகுராஜா

Anonymous said...

//நடப்பது யுத்தம் பால பாரதி அவர்களே. எனக்கு பின்னூட்டமிடக் கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு எல்லோரையும் பயமுறுத்தி, அதில் பலர் பயந்து ஒதுங்க, எனது யோம் கிப்புர் இரண்டாம் பதிவில் நான் கொடுத்த யோசனையில் எனது நெருங்கிய நண்பர்கள் செர்வாண்டஸ், ஹாரி பாட்டர், கட்டபொம்மன் போன்ற பெயர்களில் வந்தனர். அவர்கள் யார் என்பதை எனக்குக் கூட தெரிவிக்க வேண்டாம் என்றே நான் கேட்டு கொண்டிருந்தேன். ஆகவே எனக்கு அவர்கலில் யார் என்ன பெயரில் வருகிறார்கள் எனத் தெரியாது, தெரிந்து கொள்ளவும் விரும்பவில்லை.

இதனை பேர் வரும்போது நானும் எனக்கு நண்பந்தானே. அதான் முரளி மனோஹர்.//

straight forward reply , few peoples appreciate themselves as gained respect with beloved ........
does they have any right in questioning you? they have to touch their and should say the answer.


நீங்கள் என் நண்பராக வந்து கேட்பதால் இதை கூறுகிறேன்.

Everything is fair in love and war.

அன்புடன்,
டோண்டு ராகவன

Anonymous said...

//கொசுபுடுங்கி said...
முரளி மனோஹர் நீங்கதான்னு ஒத்துகிட்டீங்க.

சர்வாண்டிஸ், ஹேரி பொட்டர், வரதன், பரதன், பஜ்ஜி, சொஜ்ஜி, நாட்டாமை, கண்ணம்மா மற்ற பெயர்கள் எல்லாம் நீங்கதான்னு எப்போ ஒத்துக்கப் போறீங்க ஐயங்கார்வாள்? //
் விடாது கருப்பு , போலி டோண்டு, போலி மாயவரத்தான். ஆப்பு மற்ற பெயர்கள் எல்லாம் நீங்கதான்னு எப்போ ஒத்துக்கப் போறீங்க.

Anonymous said...

//straight forward reply , few peoples appreciate themselves as gained respect with beloved ........
does they have any right in questioning you? they have to touch their and should say the answer. //

அப்படி போடு மாமு. போலிக்கு இவர் மேல ரொம்ப மரிவாதையாம்.
அடக்கன்றாவி.இந்த பதிவில் யார் கமேண்ட் போட்டாலும் துரத்தி போய் ஒரு நாதாறி ஓளை இட்ட போது நீ என்ன போன ராசா

Anonymous said...

//தலைப்பை பத்தி பேசாம... என்ன இது குழப்பம்? விடுங்கப்பு

- ஆல் இன் ஆல் அழகுராஜா//

நீ உருப்பட மாட்டே

Anonymous said...

டோண்டுல்க்கர் அடித்த செஞ்சுரி அடிக்க போறேள். அப்படியே ஒரு சிக்சர் தூக்குங்கோ

Anonymous said...

//வெட்டித்தனமான கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டாம் டோண்டு . மோசமாக எதுவும் எழுதாதவரை இவர்கள் கேள்வி கேட்க எந்த உரிமையும் இல்லை. எத்தனை பெயரில் வேண்டுமானாலும் கூகிளில் எழுதலாம். ஆபாசமாக எழுதாதவரை எதுவும் தப்பில்லை//
ஆமேன்.

Anonymous said...

செய்த விழயத்தை துணிவாக ஒத்து கொள்ளும் உங்கள் நேர்மைக்கு கலக்கல்.
வாய்மை தலைவன் டோண்டு வாழ்க

- யெஸ்.பாலபாரதி said...

தங்களின் திறந்த மனதுக்கும், ஒப்புதலுக்கும் நன்றி!

Anonymous said...

//தங்களின் திறந்த மனதுக்கும், ஒப்புதலுக்கும் நன்றி!

டபுள் ரீபீட்டே

லக்கிலுக் said...

மறுபடியுமா?

மேலே டெண்டுல்கர் என்ற பெயரில் பின்னூட்டம் போட்டுவிட்டு கீழே அன்புடன் டோண்டு ராகவன் என்று போட்டிருக்கிறீர்களே டோண்டு சார்?

உங்களுக்கு சரியா தப்பு பண்ணத் தெரியலியா? இல்லேன்னா நீங்க பண்ணுறது தப்பே இல்லையா?

நீங்க நல்லவரா? கெட்டவரா?

Anonymous said...

100 வது நம்ம கமேண்ட்

Anonymous said...

நல்லூர் பார்வைகாரன் தான் நைட் கழுகாம். உதார்் அடிக்கும் அது தன் முதுகை 180' பார்க்குமா?

Anonymous said...

//யெஸ்.பாலபாரதி said...

தங்களின் திறந்த மனதுக்கும், ஒப்புதலுக்கும் நன்றி! //

witnessed few sick comments about the same issue in a other blog. do you have any qualification to speak in this issue?

touch your heart and say.

dondu(#11168674346665545885) said...

"உங்களுக்கு சரியா தப்பு பண்ணத் தெரியலியா? இல்லேன்னா நீங்க பண்ணுறது தப்பே இல்லையா?
நீங்க நல்லவரா? கெட்டவரா"?

டெண்டுல்கர் என்ற பெயரில் பின்னூட்டமிட்டவர் பாலபாரதிக்கு நான் இட்ட எனது பின்னூட்டத்தை மொத்தமாக காப்பி பேஸ்ட் செய்து அதில் பகுதி பகுதியாக பதிலை உள்ளிறுத்தி வந்திருக்கிறார். அவ்வாறு செய்யும்போது தவறுதலாக கடைசி பகுதியை அப்படியே விட்டிருக்கிறார்.

நான் கூறுவதை நம்புவதும் நம்பாததும் உங்கள் விருப்பம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Leo Suresh said...

//இதனை பேர் வரும்போது நானும் எனக்கு நண்பந்தானே. அதான் முரளி மனோஹர்.//

டோண்டு சார்,
உங்க பதிவுகளை ரொம்ப நாளாய் படித்துவருகிறேன்.
இப்ப இப்படி செய்வீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை.வருத்தமாயிருக்கிறது.ஆபாசமாய் எழுதவில்லை என்றாலும் இப்படி போலித்தனம் உங்களுக்கு அவசியமா?.
லியோ சுரேஷ்
துபாய்

BadNewsIndia said...

டோண்டு,

முரளி மனோஹர் நீங்கள் தான் என்று ஒத்துக் கொண்டது நல்லது.
அப்படியே, ஒரு தன்னிலை விளக்க பதிவு போட்டுட்டா இன்னும் நல்லது.
நீங்கள் முரளி மனோஹர் பெயரில் 'அசிங்க' பின்னூட்டங்கள் போட்டிருக்கிறீர்கள் என்று சொல்பவர்களுக்கு விவாதக்களம் அமைத்துக் கொடுங்கள்.
'அசிங்க' பின்னூட்டம் உண்மையிலேயே போட்டிருந்தால், பகிரங்க மன்னிப்பு கேட்பது நன்மை பயக்கும்.

every dog will have its day! :)

அனானிகளும் சில STAR பதிவர்களும்

dondu(#11168674346665545885) said...

"ஆபாசமாய் எழுதவில்லை என்றாலும் இப்படி போலித்தனம் உங்களுக்கு அவசியமா"?

எழுத்தாளர்கள் பல பெயர்களில் எழுதுவது சகஜம். ஸ்ரீவேணுகோபாலன் என்ற பெயரில் எழுதியவரே புஷ்பா தங்கத்துரையாகவும் வந்தார். கல்கி அவர்கள் ஒரே நேரத்தில் பல புனைப்பெயர்களில் வந்தார். ஜான் க்ரீஸி என்ற ஆங்கில எழுத்தாளர் ஆந்தனி மார்டன், ப்ரெட் ஹாலிடே என்று ஐந்துக்கும் மேற்பட்ட பெயர்களில் வந்தார். ஒவ்வொரு பெயரிலும் வெவ்வேறு ஸ்டைலில் வெவேறு வித வாசகர்களுக்கு எழுதுவார்கள்.

என் விஷயத்தில் எனக்கு ஏற்பட்ட நிர்பந்தங்கள் வேறு. இருப்பினும் அடிப்படை ஐடியா ஒன்றுதான். அதன் காரணங்களை மேலே பாலபாரதி அவர்கள் பின்னூட்டத்துக்காக இட்ட பதில் பின்னூட்டத்தில் ஏற்கனவே கூறிவிட்டேன். இது ஒரு யுத்தம்.

அவ்வளவுதான் கூற இயலும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

BadNewsIndia said...

டோண்டு சார்,

//ஒவ்வொரு பெயரிலும் வெவ்வேறு ஸ்டைலில் வெவேறு வித வாசகர்களுக்கு எழுதுவார்கள்.
என் விஷயத்தில் எனக்கு ஏற்பட்ட நிர்பந்தங்கள் வேறு. இருப்பினும் அடிப்படை ஐடியா ஒன்றுதான்//

புனைப்பெயரில் எழுதும் எனக்கு உங்கள் காரணங்கள் புரியும்.

ஆனால், புனை பெயர் கொண்டு, 'அசிங்க' பின்னூட்டம் இடுவது, அசிங்கச் செயல் - அதைச் செய்யவில்லை என்று பகிரங்கமாக அறிவித்தல் நல்லது.

செய்வீரா?

சென்ஷி said...

சரி பாலபாரதிக்கு நீங்கள் சொன்ன விளக்கத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். அப்படியானால் உங்களுக்கு இதுநாள் வரை அனானியாய் இல்லாமல் நேரடியாய் என் வலைப்பூ மூலம் பின்னூட்டமிட்டு, போலியின் மூலம் என் சந்ததியினரை வலையில் நாறடித்ததற்கு என்ன பதில் திரு.டோண்டு அவர்களே. உங்கள் மேல் மிகவும் மதிப்பு வைத்திருந்தவன் என்பதால் இந்த கேள்வியை கேட்கிறேன். அப்படியானால் போலி என்பதும் உங்கள் நண்பந்தானா?

சென்ஷி

dondu(#11168674346665545885) said...

"ஆனால், புனை பெயர் கொண்டு, 'அசிங்க' பின்னூட்டம் இடுவது, அசிங்கச் செயல் - அதைச் செய்யவில்லை என்று பகிரங்கமாக அறிவித்தல் நல்லது".

அசிங்கப் பின்னூட்டம் எதையும் நான் இடவில்லை. எங்காவது கடுமையான முறையில் கருத்துக்கள் கூறியிருக்கலாம்.

"புனைப்பெயரில் எழுதும் எனக்கு உங்கள் காரணங்கள் புரியும்".
உங்கள் புரிதலுக்கு நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

"அப்படியானால் உங்களுக்கு இதுநாள் வரை அனானியாய் இல்லாமல் நேரடியாய் என் வலைப்பூ மூலம் பின்னூட்டமிட்டு, போலியின் மூலம் என் சந்ததியினரை வலையில் நாறடித்ததற்கு என்ன பதில் திரு.டோண்டு அவர்களே".

மேலே உள்ள வாக்கியத்தின் பொருள் புரியவில்லை. என்ன கூறவருகிறீர்கள்? நான் உங்கள் வலைப்பூவில் போலி பின்னூட்டம் இட்டேனா? அல்லது போலியா? அந்த ஆள் எப்படி என் நண்பராக இருக்க முடியும்?

சரியாக விளக்கவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

சென்ஷி said...

நாங்கள் எங்கள் சொந்த வலைப்பூ பெயரில் உங்களுக்கு பின்னூட்டமிட்டது போலிக்கு என் எதிர்ப்பை காட்டத்தான். இப்போது நீங்களே இப்படியென்றால்,
1) அனைவரும் கூறுவது (அ) வாருவது போல் நீங்கள் விளம்பரப்பிரியரா?
2) உங்கள் கருத்தை எப்போதும் உங்கள் உண்மையான பெயரில் மட்டும்தான் எதிர்த்து வருகிறீர்களா?

சென்ஷி

dondu(#11168674346665545885) said...

சென்ஷி அவர்களே,

1. இல்லை. விளம்பரப் பிரியனாக இருந்தால் என் பெயரிலேயே எழுதுவேனே.
2. என் கருத்தை நானே எப்படி எதிர்க்க முடியும்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

Madhu Ramanujam said...

//இப்போது தில்லி சென்னை டிக்கட் எவ்வளவு ஆகும்? ஏதோ குறைந்தால் போலத் தோன்றுகிறது?
//

ஒரு 2500 - 3500க்குள் இன்றைய தேதிக்கு ஒரு டிக்கட் கிடைக்கும்

dondu(#11168674346665545885) said...

"ஒரு 2500 - 3500க்குள் இன்றைய தேதிக்கு ஒரு டிக்கட் கிடைக்கும்"
இவ்வளவு குறைச்சலா? ஏசி முதல் வகுப்பு கூட இதை விட அதிகமாகுமே? எப்படி இவ்வாறு குறைந்தது?

அன்புடன்,
டோண்டு ராகவன்

BadNewsIndia said...

டோண்டு,

தன்னிலை விளக்கம் கூறி தனி பதிவு எழுதினால்தான் இந்த பிரச்சனைக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க முடியும்.

அசிங்க பின்னூட்டங்கள் அனானியாக போடுபவனுக்கும், உங்களுக்கும் உள்ள வித்யாசம் காட்ட தன்னிலை விளக்கமும், மன்னிப்பு கோருதலும் தேவை.

இவ்வளவு வருடங்கள் உங்கள் பதிவுகளை நேரம் செலவழித்து படித்த பதிவர்களுக்கு இதை செய்தே ஆகவேண்டும்.

நன்றி!

dondu(#11168674346665545885) said...

"அசிங்க பின்னூட்டங்கள் அனானியாக போடுபவனுக்கும், உங்களுக்கும் உள்ள வித்யாசம் காட்ட தன்னிலை விளக்கமும், மன்னிப்பு கோருதலும் தேவை".

உணர்ச்சிவசப்படாமல் சற்றே நிலைமையை அலசுவோம். நான் ஏற்கனவே குறிப்பிட்டபடி இது ஒரு யுத்தம். அடாவடியாக ஒருவன் எனக்கு பின்னூட்டமிட்டவர்களை மிரட்டி, பிளாக்மெயில் செய்து தடுத்திருக்கிறான். அவர்களில் பலர் நமக்கு எதற்கு வம்பு என்று ஒதுங்கிப் போயினர். நானும் போய் விடுவேன் என எதிர்பார்க்கப்பட்டது.

போயிருந்தால் தாராளமாக பரிதாபம் தெரிவித்து விட்டு தங்கள் வேலையை கவனிக்க போயிருப்பார்கள்தான். ஓக்கே அதில் எனக்கு பிரச்சினை இல்லை. ஆனால் அதே நேரத்தில் நான் மைதானத்தை காலிசெய்ய நினைக்கவில்லை. யுத்தத்தில் எதிரியின் ஆயுதத்துக்கு மாற்று தேடி பிரயோகிக்க வேண்டியது எனது வேலை. எனது பல இணைய நண்பர்கள் புது பதிவர் பெயர்களில் வந்தனர். நானும் வந்தேன்.

யுத்த மைதானத்தில் camoflage என்று கூறுவார்கள். சூழ்நிலையுடன் ஒத்துப் போவதற்காக இலைகள் கலரிலெல்லாம் உடை அணிந்து செடி கொடிகளில் மறைந்து செல்வார்கள். அதில் ஒருவன் camoflage தெரிந்தது. அதனாலேயே எதிரியிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டு சரணடைய வேண்டுமா? அதற்கு நான் ஆள் இல்லை.

இப்போது கூட உங்கள் பதிவுகளில் நீங்கள் நிஜமான அனுதாபத்துடன் எழுதுகிறீர்கள் என்பதை கண்டதாலேயே உங்களுக்கு இவ்வளவு பெரிய விளக்கம் அளித்தேன். சிலர் இப்பதிவில் வந்து விளக்கத்தை ஒப்புக் கொள்வது போல நடித்து வேறு பதிவுகளில் சீ தூ என்றெல்லாம் எழுதுகிறார்கள். அதையும் பார்த்தாகி விட்டது.

இதில் தன்னிலை விளக்கம் ஏற்கனவே கொடுத்தாகி விட்டது. யுத்த நடவடிக்கைக்காக மன்னிப்பு கேட்பதாக இல்லை. என்னை புரிந்து கொண்டவர்கள் புரிந்து கொள்வார்கள். புரியாதவர்கள் என்ன செய்தாலும் கேட்கப் போவதில்லை. ஏற்றட்டும் எனது ஹிட்கவுண்டரை.

இப்போதைய ஆப்ஷன் நிலையில் camoflage இனிமேலும் தேவை இல்லை. தேவையானால் பார்த்துக் கொள்கிறேன்.

இதுவும் கடந்து போகும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

BadNewsIndia said...

OK.
மேலே நீங்கள் சொன்னதே உங்கள் தன்னிலை விளக்கம்.
மன்னிப்பு கோருவது அவசியமில்லை.

உங்களுக்கு பின்னூட்டமிடுவதால் எனக்கு வரும் 'அசிங்க' மடல்களை வைத்துப் பார்க்கும்போது, நீங்கள் எடுத்திருக்கும் நிலை அவ்வளவு ஒன்றும் மோசமானதல்ல என்றே தோன்றுகிறது.

உங்களின் மற்றைய பதிவுகளில் உள்ள கருத்துகளிலெல்லாம் எனக்கு உடன்பாடில்லை.
குறிப்பாக சாதியை இன்னும் தூக்கிப் பிடிக்கும் உங்கள் நிலை என்னைப் பொறுத்தவரை தேவை இல்லாத ஒன்று.

இந்த விவகாரம் வெளி வந்ததனால், 'உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும்' பலரைப் பற்றி அறியவும் முடிந்தது.

நல்லது. தொடரட்டும்!

dondu(#11168674346665545885) said...

புரிதலுக்கு மிக்க நன்றி BadNewsIndia அவர்களே. கெட்டதிலும் நல்லது என்பது போல இந்த நிகழ்ச்சி எனக்கு உண்மை நண்பர்களைக் காட்டியது.

நீங்கள் BadNewsIndia அல்ல GoodNewsIndia. :))

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

ராகவன் சார்,

நானும் ஒரு பிளாக் ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறேன். முதல் பதிவு உங்களைத் தாக்கிததான். (இப்பவே சொல்லிட்டேன் ) அப்போதுதான் சதம் அதுக்கு மேலேயும் போகலாம். எனது பேர் எல்லோருக்கும் தெரியும்.

உங்கள் சில கொள்கையில் எனக்கு உடன்பாடு இல்லாத போதும் தனி ஒரு ஆளாக அத்தனை பேருக்கும் எப்படி அய்யா பதில் கொடுக்கீறீர்கள்.

Santhosh said...

//அப்ப கீழேயாவது தெளிவாக சொல்லுங்க சாமி!

புரியாததினால் தான் கேட்கிறேன்.//
பாலா ஆனாலும் விடாக்கண்டனா தான் இருக்காரு. நம்ம டோண்டு சாருக்கு முன்னாடி எப்படி முடியுமா வாங்கிட முடியுமா பதிலை.

ராஜரிஷிசோரசிகன் அப்புறம் மாவீரன் டோண்டு ரசிகர் மன்றம் இது எல்லாமும் அரசியலில் சகஜம் தானா டோண்டு சார்? இல்ல முடிஞ்சா நிரூபித்து காட்டுங்க கேட்டகிரியா?

// Tendulkar said...

//நடப்பது யுத்தம் பால பாரதி அவர்களே. எனக்கு பின்னூட்டமிடக் கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு எல்லோரையும் பயமுறுத்தி, அதில் பலர் பயந்து ஒதுங்க, எனது யோம் கிப்புர் இரண்டாம் பதிவில் நான் கொடுத்த யோசனையில் எனது நெருங்கிய நண்பர்கள் செர்வாண்டஸ், ஹாரி பாட்டர், கட்டபொம்மன் போன்ற பெயர்களில் வந்தனர். அவர்கள் யார் என்பதை எனக்குக் கூட தெரிவிக்க வேண்டாம் என்றே நான் கேட்டு கொண்டிருந்தேன். ஆகவே எனக்கு அவர்கலில் யார் என்ன பெயரில் வருகிறார்கள் எனத் தெரியாது, தெரிந்து கொள்ளவும் விரும்பவில்லை.

இதனை பேர் வரும்போது நானும் எனக்கு நண்பந்தானே. அதான் முரளி மனோஹர்.//

straight forward reply , few peoples appreciate themselves as gained respect with beloved ........
does they have any right in questioning you? they have to touch their and should say the answer.


நீங்கள் என் நண்பராக வந்து கேட்பதால் இதை கூறுகிறேன்.

Everything is fair in love and war.

அன்புடன்,
டோண்டு ராகவன
//

இங்க பாருய்யா டொண்டூகர் வேற இதுல அரசியலில் இதுவும் சகஜமப்பா. Moral of the story பின்னூட்டம் வராவிட்டால் ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க அனானி பொட்டியை திறந்து நமக்கு நாமே திட்டம் (டோண்டு சாரோட மொழியில் சொல்ல வேண்டும் என்றால் எனக்கு நானே நண்பன்..). நம்ம டோண்டு சாரும் ஜார்ஜ் புஷ்ஷும் ஒரே மாதிரி அவங்களுக்கு லொக்க்லா எதாவது ஒரு பிரச்சனை அப்படின்னா உடனே ரெண்டு பேரும் உங்களுக்கு ஏன் சில சமயம் அவங்களுக்கே புரியாத "War on Terrorism" ஆயுதத்தை கையில் எடுத்துகுவாங்க.

//நீங்க நல்லவரா? கெட்டவரா?//
மீசையில மண் ஒட்டாதவரு.

//நான் கூறுவதை நம்புவதும் நம்பாததும் உங்கள் விருப்பம்.//
டோண்டு சார் நம்பிட்டோம் விடுங்க உங்களை நம்பாம வேற யாரை நம்ப போறோம் சொல்லுங்க.

ஜெய்,
நீங்களா வந்திங்க மன்னிப்பு கேட்கவேண்டும் என்று சொன்னீங்க அவரும் பழைய பல்லவியை பாடிய உடனே சரின்னு மன்னிப்பு எல்லாம் கேட்க வேண்டாம் அப்படின்னு விட்டிங்க. அப்ப முரளிமனோகர் அப்படிங்கிற பெயரில் ஆபாச பின்னூட்டம் வந்து இருக்குன்னு சொன்னவங்களுக்கு எல்லாம் என்ன பதில்? அதே அரசியலில் சகஜமப்பாவா? அவரோட பதிவுகளில் பின்னூட்டம் குறைந்ததுக்கு காரணம். இவரது கருத்துக்கு யாராவது எதிர் கருத்து சொன்னா அவரும் அவரது கோஷ்டியும் சேர்ந்து அடிச்சியே விரட்டுவாங்க அது தானே தவிர ஆபாச கடிதம் எல்லாம் இல்லை.

இவரின் புனித பிம்பம் இமெஜை நிறைய பேர் ஏற்கனவே கிழிச்சிடாலும் ஏதோ என்னோட பங்குக்கு ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு முன்னாடி இங்க http://santhoshpakkangal.blogspot.com/2006/06/88.html கொஞ்சம் கிழிச்சி இருக்கேன் பாத்துகோங்கப்பா.

Anonymous said...

It is "camouflage" not camoflage.

dondu(#11168674346665545885) said...

"It is "camouflage" not camoflage"

Thanks, I stand corrected.

Regards,
Dondu N.Raghavan

Anonymous said...

Dondu Sir,

I am really ashamed of my self for trusting as a good person. I read all your blogs, But the new revelation about your identity is shameful. I worried about you when the poli comments you, your wife and daughter. But Now I can understand how much he might have affected by your cunning comments and identity. Being a Brahman I am ashamed of people like you….

dondu(#11168674346665545885) said...

"அப்ப முரளிமனோகர் அப்படிங்கிற பெயரில் ஆபாச பின்னூட்டம் வந்து இருக்குன்னு சொன்னவங்களுக்கு எல்லாம் என்ன பதில்"?
அப்படீன்னா எடுத்து காண்பிங்கப்பாங்கறதுதான் பதில். அதோட என்னோட ஒரு பழைய பதிவை எடுத்து நான் இன்னும் வேறென்ன அசிங்க பதிவெல்லாம் போடலாம்னு வேற "சென்னீங்க".

"இவரின் புனித பிம்பம் இமேஜை நிறைய பேர் ஏற்கனவே கிழிச்சிடாலும் ஏதோ என்னோட பங்குக்கு ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு முன்னாடி இங்க http://santhoshpakkangal.blogspot.com/2006/06/88.html கொஞ்சம் கிழிச்சி இருக்கேன் பாத்துகோங்கப்பா".
ஆமாமா, ரொம்ப "செல்லியிருந்தீங்க". அதோட நீங்க "சென்னீங்களான்னே" திரும்ப திரும்ப கேட்டு தமிழை கொலை செஞ்சது நீங்கதானே. மேலும் சதயம்னு யாருக்குமே பின்னூட்டமிடவில்லைன்னு "சென்னீஙக". அதை எடுத்து காண்பிச்சதும் வெற்றிகரமாக பின்வாங்கிட்டு அவர் உங்கள் நண்பர்னு நான் குறிப்பிட்டதை வச்சுட்டு தொங்கிக்கிட்டிருந்தீங்க. சதயத்தையே போய் கேட்டீங்க. அவர் உங்களுக்கு கொடுத்த பதிலையும் முடிஞ்சா போய் பாருங்க. விலாங்கு மீன் மாதிரி வழுக்கியிருப்பாரு.

நல்ல வேளையா நீங்க, சதயம் போன்றவர்கள் கூறியதை தமிழ் மணம் ஏற்க மறுத்து மட்டுறுத்தலை வலியுறுத்தியதோ, தமிழ்மணம் பிழைத்ததோ.

மேலும் புனிதன் நான்னு எங்கயுமே சொல்லிக்கிட்டதில்லை. நானும் சராசரி மனிதானுங்கோ. புனிதன்னெல்லாம் "செல்லி" "dont kick me upstairs".

மேலே நான் ஆங்கிலத்துல சொன்னது அமெரிக்க அரசியல் தெரிஞ்சவங்களுக்கு புரியும். அதை அடுத்து வர பதிவுகள் ஒண்ணுத்தல சொல்றேன்.

எது எப்படியோ நண்பர் சந்தோஷ், இங்க வந்ததுல எனக்கு இன்னொரு இடுகைக்கு ஐடியா கிடைச்சுது. நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

"நானும் ஒரு பிளாக் ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறேன். முதல் பதிவு உங்களைத் தாக்கிததான். (இப்பவே சொல்லிட்டேன் ) அப்போதுதான் சதம் அதுக்கு மேலேயும் போகலாம். எனது பேர் எல்லோருக்கும் தெரியும்".

வாழ்த்துக்கள். இன்னும் ஒன்று செய்யவும். முதல் பதிவு போட்டதும் நான் பிழைத்து கிடந்தால் எனக்கு தெரிவிக்கவும். உடனடியாக பின்னூட்டம் இடுகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

//இங்க பாருய்யா டொண்டூகர் வேற இதுல அரசியலில் இதுவும் சகஜமப்பா. Moral of the story பின்னூட்டம் வராவிட்டால் ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க அனானி பொட்டியை திறந்து நமக்கு நாமே திட்டம் (டோண்டு சாரோட மொழியில் சொல்ல வேண்டும் என்றால் எனக்கு நானே நண்பன்..)//

அதுக்கு நான் கொடுத்த பதிலையும் பாத்திருந்தீங்கல்ல? இப்பத்தானே முதல் முறையா அனானி பெட்டியை திறந்திருக்கேன். முன்னாலிருந்தே அதை வச்சிருக்கிற உங்களுக்கு அது நன்றாகவே தெரியும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

"But the new revelation about your identity is shameful".

Pray, what is shameful in that? Please go through my explanations on that aspect in various comments in this post itself.

If you expect me to stand still and get hit by all and sundry, you have got another think coming, my dear anony friend. My identity was just what I said, a strategy.

Regards,
Dopndu N.Raghavan

dondu(#11168674346665545885) said...

This comment was posted by me in another post at http://badnewsindia.blogspot.com/2007/02/star.html

I copy it to this post as well. Now to the comment.

"அவர் அசிங்கப் பின்னூட்டங்கள் இடுபவர் இல்லை என்பது என் எண்ணம். நம்பிக்கை".
Thanks.

"அவரிடம் பிடிக்காத ஒன்று அடுத்தவர் கருத்துக்களை ஏற்றுக் கொள்ளாமல் (ஏற்றுக்கொள்ள முயலாமலும்) தன் கருத்தே சரியென அடம் பிடிப்பதுதான்".
When I am convinced that my stand is correct. I abide by it. I feel that I dont need to post a separate topic for explaining myself as suggested in a gentle manner by my friend BNI. I explained to him why it is so. I am happy to note that he accepted my stand.

Here, I will give you one more aspect in this affair. In my second Jom Kippur Post at http://dondu.blogspot.com/2006/10/blog-post_12.html I had clearly mentioned that as far as I am concerned Poli is no more.

In this matter of my second identity, the one thing which saddened me was that it is now forcing me to talk again of a person, who has been declared by me as being no more. Ok, the damage is done. But I draw a line at dedicating another post to that person, who is no more.

In the same Jom Kippur post I had suggested to my friends to come and comment after taking new ID's, with suitable protections. This resulted in my friends coming under various names such as Harry Potter,Cervantes et al. Funny thing is, I myself asked them not to reveal their new ID's real persons even to me. This is another war strategy. What I dont know, I cannot reveal even inadvertently. This is "need-to-know" concept recommended in ISO certified firms. I call it in jest as "need-not-know" concept.

By the way, now that I have gone in for anony options, this strategy is no longer required. My friends will no longer come, I think. At the same time, they might find this useful and use it to comment wherever they please. It is upto them.

Regards,
Dondu N.Ragahvan

Anonymous said...

Mr Dondu , leave all this negative comments and tactics behind .
we are with you.
we are expecting one more excellent article from you today.
thanks
Rathinam.

dondu(#11168674346665545885) said...

Thanks Rathinam. One topic shall come today. If you are in Chennai, how about attending the blooger meet scheduled coming Sunday. Details at my relevant post.

Regards,
Dondu N.Raghavan

Santhosh said...

நாங்க தமிழ் குழந்தை தான் ஒத்துகிறோம். எங்க தமிழ் உதவாத ஒண்ணு தான் ஒத்துகிறோம். போலி பேர்ல ஏன் பின்னூட்டம் போட்டிங்க அதுக்கு பதிலை சொல்லுங்க. சும்மா திசை திருப்பும் வேலை எல்லாம் வேணாம். இது வரைக்கும் ஒரு 5 அல்லது 6 போலி ஜடிக்களை கண்டு பிடித்து இருக்கிறோம். போற போக்கை பாத்தா போலி டோண்டுவே நீங்க தான் போல தோணுது.

//நல்ல வேளையா நீங்க, சதயம் போன்றவர்கள் கூறியதை தமிழ் மணம் ஏற்க மறுத்து மட்டுறுத்தலை வலியுறுத்தியதோ, தமிழ்மணம் பிழைத்ததோ.//
பின்னூட்ட மட்டுறுத்தலை ஏற்படுத்திடாலும் உங்களை மாதிரியான ஆட்கள் அதுக்கு குறுக்கு வழியை கண்டுபிடிச்சி அடிச்சி ஆடிகிட்டு தானே இருக்கிங்க. பாதிக்கப்பட்டவங்க எங்களை மாதிரியான ஆட்கள் தான்.
//"dont kick me upstairs"//
அப்படியே அடுத்த மாடிக்கு அனுப்பிட்டாலும் அடிக்கடி இந்த மாதிரியான மேட்டர்ல மாட்டி படுபாதாளத்துல இல்ல போறீங்க.

//அதை அடுத்து வர பதிவுகள் ஒண்ணுத்தல சொல்றேன்.//
சொல்லுங்க சொல்லுங்க அனானிங்க தயவுல எப்படியும் உங்க பதிவு இதுக்கு மேல தமிழ்மணத்துல நிரந்தர இடம் புடிக்கும்.. படிச்சி கருத்தை சொல்றேன்.

//எது எப்படியோ நண்பர் சந்தோஷ், இங்க வந்ததுல எனக்கு இன்னொரு இடுகைக்கு ஐடியா கிடைச்சுது. நன்றி.//
உங்க நன்றிக்கு நன்றி டோண்டு சார்.

//முன்னாலிருந்தே அதை வச்சிருக்கிற உங்களுக்கு அது நன்றாகவே தெரியும்.//
சார் நம்ம பதிவுல போயி பாருங்க உங்களை மாதிரி நமக்கு exclusive வாசகர்கள் கிடையாது. அனானி பின்னூட்டங்களின் தரத்தை போயி பாருங்க.

"நானும் ஒரு பிளாக் ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறேன். முதல் பதிவு உங்களைத் தாக்கிததான். (இப்பவே சொல்லிட்டேன் ) அப்போதுதான் சதம் அதுக்கு மேலேயும் போகலாம். எனது பேர் எல்லோருக்கும் தெரியும்".

இந்த மாதிரி என்னை யாரும் நக்கிட்டு இருக்க மாட்டாங்க.

Santhosh said...

// Anonymous said...

Mr Dondu , leave all this negative comments and tactics behind .
we are with you.
we are expecting one more excellent article from you today.
thanks
Rathinam. //
அது எப்படி சார் நீங்க englishல பின்னூட்டத்துக்கு பதில் சொல்லும் பொழுது தொடர்ந்து வரும் பின்னூட்டங்களும் englishலயே வருது. என்னமோ போங்க சார் அடிக்க ஆரம்பிச்சிடிங்க. கலக்குங்க. :))

BadNewsIndia said...

I just read your previous post
http://dondu.blogspot.com/2006/10/blog-post_12.html.

I am relatively new to blogging and didnt knew about your past 'incidents'.

இவ்வளவு நடந்து இருப்பது வருத்தமான செயல்.
போலிகள் பேடிகள்தான்.
அவர்களை எதிர்கொள்ள நீங்கள் வேறு புனைபெயர்கள் உபயோகித்ததி ஒரு தவறும் இல்லை.

வெட்க்கப் பட வேண்டியது அந்த பேடிகள் தான்.

இதையெல்லாம் தெரிந்தும் மற்றவர்கள் உங்களை நையாண்டி செய்வது அதைவிடக் கொடுமை!

இதை பின்தள்ளி, நீங்கள் எழுதி வருவதை தொடர்ந்து எழுதுங்கள். கருத்தில் வேறுபாடு இருந்தால், வந்து சொல்கிறேன்.

Hats off to you for facing the idiots, the right way!

Anonymous said...

Mr Dondu
i request you to close the comments box of this post.
some peoples need just only a fun or gossips. dont encourage them. i have a habit of reading only few quality blogs. yours is one among in my list.
in daily life we are witnessing so many quarrels and street fights . personally i feel disappointed in the way tamil blogger world sails.

it s always a not a bad idea to move forward.
thanks
Rathinam.

Anonymous said...

Whatever be your defense, all your supporters feel cheated :( (
This is simply not done.

dondu(#11168674346665545885) said...

"Whatever be your defense, all your supporters feel cheated :( (
This is simply not done".

Please do not talk in a child-like manner. We are not living in an Ambulimama world. Life is harsh and one has to be constantly on one's guard.

I know what I am doing and am man enough to face the consequences.

Regards,
Dondu N.Raghavan

dondu(#11168674346665545885) said...

"i request you to close the comments box of this post".

இதனால் என்ன பயன் ரத்தினம் அவர்களே. இந்தப் பதிவு அதற்கானது இல்லை, இருப்பினும் கமெண்டுகள் வருகின்றன. இதன் பின்னூட்டப் பெட்டியை மூடினால் என்னுடைய இன்னொரு பதிவுக்கு போவார்கள்.

திட்டுபவர்கள் இருந்தாலும் உங்களை மாதிரி நண்பர்களும்தானே இருக்கிறீர்கள்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//I know what I am doing and am man enough to face the consequences.

60 years young man, well done

Anonymous said...

Dondu saarvaal,

After starting my blog, i had the first hit from Poli Dondu where everyone had same type of which u had big problem everyone knows it, Being one of affected person, nevermind about who gives negative comments. Always there are people to comment and gossip, i believe they are just passing clouds. Once when realised they would feel sorry for it. Keep doing your good work. There are people to support and stand by for you.

Aanipidunganum.

Anonymous said...

//இதனால் என்ன பயன் ரத்தினம் அவர்களே. இந்தப் பதிவு அதற்கானது இல்லை, இருப்பினும் கமெண்டுகள் வருகின்றன. இதன் பின்னூட்டப் பெட்டியை மூடினால் என்னுடைய இன்னொரு பதிவுக்கு போவார்கள்.

திட்டுபவர்கள் இருந்தாலும் உங்களை மாதிரி நண்பர்களும்தானே இருக்கிறீர்கள்?

அன்புடன்,
டோண்டு ராகவன்//

that is what i am saying vidungaa sir. their intention is do sometime pass with this issue. tomorrow they will go and do the same with some one else.

reminder : still you haven't published your next article ;))

thanks
Rathinam.

bala said...

டோண்டு அய்யா,

இப்போ என்ன நடந்துவிட்டதுன்னு குஞ்சுங்க ஆகாசத்துக்கும்,பூமிக்கும் குதிக்கறாங்க?அதுவும்,ஒரு மாதிரியான குழந்தை லக்கி,நியோ போன்ற அரை டிக்கட்டுகள் குதிப்பதைப் பாத்தா வேடிக்கையா இருக்கு.என்னிக்கு தான் இந்த குஞ்சுகளுக்கு புத்தி வந்து உருப்பட போறாங்களோ?

பாலா

dondu(#11168674346665545885) said...

//sometime pass//

டைம் பாஸ் மச்சி? :))

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

"அதுவும்,ஒரு மாதிரியான குழந்தை லக்கி,நியோ போன்ற அரை டிக்கட்டுகள் குதிப்பதைப் பாத்தா வேடிக்கையா இருக்கு".

டைம் பாஸ் மச்சி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ஏமாறாதவன் said...

டோண்டு,

பல விதமாய் பலநாட்களில் பலதும் சொல்லி பல காரியங்கள் செய்திருக்கிறோம். ஆனால், வேறு பெயர் ஐ.டி. நீங்கள் வைத்திருப்பதாக இங்கு குற்றச்சாட்டு.

இதை தீர ஆராய்வோம். முரளி மனோகர் என்ற பெயரில் நீங்கள் பல இடங்களில் பின்னூட்டம் போட்டிருக்கிறீர்கள். இதை நீங்களே ஒத்துக்கொள்கிறீர்கள்.

இதை மறைத்து செய்திருக்கிறீர்களா என்று பார்க்கும்போது அவ்வாறு தோன்றவில்லை. எங்குமே, முரளிமனோகர் நானில்லை என்று நீங்கள் சொன்னதாக தெரியவில்லை. அதுபோல, எங்களுக்கும் அந்த மு.ம. நீங்கள்தான் என்று தோன்றியதில்லை.

இதில் பல பேர் பல i.d வைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது வெளிப்படை. ஏனென்றால், இது தப்பு என்று கத்தும் பல பேர், வேறு ஒருவரும் (ஏன் தாங்களுமே) அவ்வாறு செய்யவில்லை என்று சொல்லக்காணோம்.

இன்னும் சொல்லப்போனால், பல ஐ.டி.க்கள் வைத்துக்கொள்ளலாம், ஆனால், ஆபாசமாகவோ, இரட்டை வேடம் போடவோ உபயோகிக்கக்கூடாது என்றுதான் ஒரு பாகத்தினர் சொல்கிறார்கள்.

மேலும், முகமிலிகளை திட்டிய நீங்கள் இன்று அதே காரியத்தை செய்யலாமா என்றும் ஒரு குற்றச்சாட்டு சொல்கிறார்கள். ஆனால், முகமிலிகளை நீங்கள் திட்டினீர்கள் என்று எங்குமே தெரியவில்லை. அதை செய்தது ஜெயராமன் என்கிறவர். அவர் அட்ரசையே இப்போது காணோம். (அவன் நான் என்று கூட சிலர் உளறுகிறார்கள். அது கிடக்கட்டும்... :-)) ஏதோ உள்குத்து செய்து நீங்கள் அதை கிளப்பிவிட்டதாக இதற்கு பதில் மறுப்பு தெரிகிறது. அதை ஆராய்ந்தாலும் அதிலும் உண்மை புலப்படவில்லை. வெறும் நிரூபிக்காத சந்தேகமாகவே இருக்கிறது.

உங்கள் பக்க வாதங்களை பார்த்தால் ரொம்பவே வீக். நடப்பது யுத்தம் என்று சொல்கிறீர்கள். நடக்கும் யுத்தத்துக்கும் நீங்கள் பிற ஐ.டி.யில் பெரியார் பற்றி கமெண்ட் போடுவதற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. யுத்தம் உங்கள் பதிவில். உங்களுக்கு பின்னூட்டம் இட்டவர்களிடம். அதில் உங்கள் மற்றொரு போலி ஐ.டி. எப்படி உதவும் என்று எனக்கு புரியவில்லை.

அதனால், நீங்கள் பல ஐ.டிக்களுடன் பின்னூட்டம் இடுவது வேறு ஒரு காரணத்துக்காக என்று தெரிகிறது. அது பி.க என்றால், அது எல்லோரும்தான் செய்கிறார்கள். மேலும் அது ஒரு சீரியஸ் குற்றமும் இல்லை. ஆனால், இரட்டைத்தனமான கருத்துக்களை வெளிப்படுத்த என்றால் அது தவறு. மு.ம வின் பின்னூட்டங்களை பார்த்தால் அப்படி தோன்றவில்லை. உங்களின் பெரும்பாலான வெளிப்படை கருத்துக்களுடன் அது ஒத்துப்போகின்றன.

அதனால், இவ்விஷயத்தில் ஒன்றுமில்லாத ஒரு விஷயத்தை ஊதி, ஊதி எழுதுவது ரொம்பவே வருத்தமான விஷயம்.

ஆமாம், நீங்கள் சொல்வதுபோல பல பதிவர்களின் மிகவும் கீழ்த்தரமான பதிவுகள் அவர்களின் அசிங்க முகங்களை காட்டிக்கொடுக்கின்றன. தங்களின் கருத்துக்களுடன் வேறுபட்டாலும், - கிழம், சாதி வெறியன், இந்து துரோகி - என்றெல்லாம் படிக்கும்போது பதட்டமாக இருக்கிறது. தூ என்று தூற்றுபவர்கள் இதைவிட கேவலமான ஐடி வைத்து இரட்டை வேடம் போடும் கருப்பு பூனைகளிடம் சென்று "வாவ், வாவ்..." என்று பின்புலத்தை வருடிக்கொடுப்பதையும் நான் பார்க்கிறேன்.

முடிவாக, ஒரு விண்ணப்பம். மற்ற ஐ.டி.க்களும் என்னிடம் இருக்கிறது என்று பூடகமாக சொல்லியிருக்கிறீர்கள். இது தவிர்க்கப்படவேண்டிய ஒன்று. அதை தவிர்த்து விட்டேன் என்று நீங்கள் நேரிடையாக அறிவிக்கவேண்டும்

dondu(#11168674346665545885) said...

"நடக்கும் யுத்தத்துக்கும் நீங்கள் பிற ஐ.டி.யில் பெரியார் பற்றி கமெண்ட் போடுவதற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. யுத்தம் உங்கள் பதிவில். உங்களுக்கு பின்னூட்டம் இட்டவர்களிடம். அதில் உங்கள் மற்றொரு போலி ஐ.டி. எப்படி உதவும் என்று எனக்கு புரியவில்லை".

இதற்கு நான் கொடுத்த பதில் இதோ.

"http://okkamakkaa.blogspot.com/2007/02/blog-post_04.html Any comment on the above post ??"
I have to only say that that the comment in question would have created a lot of unnecessary extra heat under my own name for reasons too well known here.

"Why dont you express your views with your original identity"?
For the same reason that many are commenting anonymously here.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ராஜசன் said...

சூப்பரா அடிச்சு ஆடரேள் அய்யங்கார்வாள். பிச்சுண்டு போகுது போங்கோ. உங்க வீவீவீவீரப்போர் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

ரவி said...

:))))))) நான் நூத்தம்பது...!

Maya said...

அன்புள்ளவருக்கு

இவ்வளவு காலம் நீங்கள் உங்கள் நிலையை ஆணித்தரமாக வாதிட்டதிற்கு என்ன காரணம் தெரியுமா?? மடியில் கனமில்லை..எனவே பயமில்லை..அதற்கு பெயர்தான் நேர்மை..

நேர்மைக்கு எப்பொழுதும் 'ஒரு' முகம் தான்..அது யுத்தமாக இருந்தால் கூட..உங்களுக்கு நேர்மையைப் பற்றி சொல்வதற்கு எனக்கு வயதோ அனுபவமோ இல்லை..

நான் எதிர்பார்க்கவில்லை..உங்களுக்கு இன்னொரு முகம்(பெயர்) இருப்பதை..

அன்புடன்
மாயக்கூத்தன் கிருஷ்ணன்

dondu(#11168674346665545885) said...

//நேர்மைக்கு எப்பொழுதும் 'ஒரு' முகம் தான்..அது யுத்தமாக இருந்தால் கூட..உங்களுக்கு நேர்மையைப் பற்றி சொல்வதற்கு எனக்கு வயதோ அனுபவமோ இல்லை..
நான் எதிர்பார்க்கவில்லை..உங்களுக்கு இன்னொரு முகம்(பெயர்) இருப்பதை.."
உங்கள் ஏமாற்றத்துக்கு நான் வருந்துகிறேன். ஆயினும் யுத்தம் என்னுடையது. அது எவ்வாறு செய்யவேண்டும் என்னும் முடிவு எடுப்பதும் எனதுரிமை. மற்றவர்கள் ஏமாற்றங்கள், நாலு பேர் என்ன சொல்லுவான்னுல்லாம் நான் பார்த்து கொண்டிருக்க முடியாது.

அவரவர் கருத்திலேயே இருப்போம்.

அது இருக்கட்டும், எல்லா எழுத்தாளர்களும் ஒரு பெயருக்கு மேல் வைத்து கொள்ளக்கூடாது என்று ஏதேனும் சட்டம்? கல்கி, மெரீனா, அண்ணா, கலைஞர்...?

இல்ல, பிளாக்கர்லே யாருமே அனானி பின்னூட்டங்கள் போட்டதேயில்லையா? நீங்க எப்படி? நெஞ்சை தொட்டு சொல்லுங்க? முரளி மனோஹர்ங்கறவர் ஒரு அனானி. என்ன, இந்த அனானிக்கு பிளாக்கர் பதிவு உண்டு, பிளாக்கர் எண் உண்டு. அவ்வளவே.

நீங்கள் தேவைக்கதிகமாக என்னிடம் "நேர்மையை" எதிர்ப்பார்த்துள்ளீர்கள். எதிராளி என்ன அக்கிரம் செய்தாலும் வடிவேலு மாதிரி நின்னு நல்லவன்னு பேரை வாங்க நான் ரெடியில்லை சாமி. ஆளை விடுங்க.

நான் எப்படிப்பட்டவன்? என்னோட லேட்டஸ்ட் பதிவைப் பாருங்க. விட்டாக்க அங்கேயும் என்னை நல்லவனாக்கி சிலுவையில் அறைஞ்சிருப்பாங்க.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

டோண்டு சார்,

உங்களுடைய முழு சூழ்நிலையையும் உங்களுடைய சூழலிலிருந்து பார்த்தால்தான் 'இவிங்களுக்கு' விளங்கும்.

அதை நான் முழுதாக அறிவதுடன், என் முழு ஆதரவை நீங்கள் இந்த விஷயத்தில் நடந்து கொள்ளும் முறைக்கு அளிக்கிறேன்.

நடந்தது நல்லதே எனும் கீதை மொழிப்படி, இந்த சமபவம் உங்களுடன் நட்புடன் இருப்பது போல பதுங்கிப் பழகிய பல சர்ப்பங்களை கோரப்பற்களை வெளிக் கொண்டு வந்திருக்கிறது.

உள்ளத்தனையது உயர்வு என்பது போல திரா'விட' கம்யூன்'விஷ' விகாரங்களே இந்த சிறிய புஸ்வானத்தை மத்தாப்பு கொளுத்தி ஆடுகின்றன.

மனிதற்கு முழுமுதலானாது மானம். அதை அவமானமாக்கி மலையாளபட அசிங்க நடிகர்களை விட அதிகமாக உங்களை சித்தரித்து விளையாண்ட உலக மகா கொடுமை இரவில் உறங்காமல் நீங்கள் விழித்திருந்து பட்ட துன்பம் பார்த்த நண்பர்களுக்குதான் தெரியும்.

பதிவரை மட்டுமன்றி, பெற்ற மகளையும் போரில் துணைக்கழைத்து பெரும்பாதகம் செய்த இழிபிறவியை 'ம்' என்று கூட சொல்லாத **பிறவிகள் சில இன்று எச்சில் இலை பதிவுகளை பட்டியல் போட்டு பரப்புகின்றன.

இரண்டு நாட்களாக சாட்டிலைட் வைத்துத் தேடியும் விகார கொமண்ட் ஒன்று கோட கிடைக்காத போதே இவர்களுக்கு வேர்த்துக் கொட்டினாலும், அடுத்தவன் சதையை மொய்ந்து தின்பதால் வரும் சுவையை விட மன்மில்லாமல், பேரை பார்த்ததும் பாய்ந்து வருகிறார்கள்.

நீங்கள் தளரவில்லை என்பது திண்ணம்.

உங்களால் ஊக்கம் பெற்ற பென்னெடும் இளைய பதிவர்கள் பலர் உங்களுடைய முன்மாதிரி கொள்கைகள் மற்றும் செயல்களை வியந்தே பார்க்கிறார்கள்.

யுத்தம் என்ற கலையில் என்கிருந்து வேண்டிமானாலும் அம்பு வரும் பேராபத்தை பனி போல உருகச்செய்யும் பாடத்தை நீங்கள் நடத்திக் கொண்டிருப்பதை கற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

மந்தையில் நிற்கும் கூட்டங்களுக்கிடையே நீங்கள் நந்தவனத் தேராக ஒளிரும் போது, அடிவருடி மாண்டூகங்களுக்கு மனசு பொருக்காதுதான். இந்த விஷயம் இல்லாவிடினும் எந்த விஷயத்தையாவது வைத்து உங்களை இழுத்து வாங்கிக் கட்டி கொண்டு போவது புதிதா என்ன?
இதில நடப்பதும் அதுதான். இறுதியில் எஞ்சப் போவதும் நீங்கள்தான்.

இந்த குழப்பத்தை கண்டு மனம் கலங்கி சில நீலநண்பர்களும், கால்சிவாக்களும் அர்த்தம் தேடி அடுத்தவரிடம் நல்ல பேர் வாங்க நினைப்பதும் கசப்பானதொன்றே. ஆனாலும் இவர்கள் அறியாமல் செய்கிறார்கள் என்பதை நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமில்லை.

ஆங்கிலம் தெரியாக அறிவிலிகளும், அரபுக்களின் அடிமைகளும் போடும் ஆணவ ஆட்டத்தை புறந்தள்ளி நிற்பதில் நாங்கள் பலர் பக்கத்தில் நிற்கிறோம்.

மூத்த பதிவரான நான் அதிகமாக தற்போது எழுதுவதில்லை. ஆனால் இப்போது எழுதாமல் வேறு எப்போது?

Anonymous said...

டோண்டு பதிவில் பின்னூட்டமிட்டதை அவருக்கு ஏதோ பெரும் உதவி புரிந்தது போல் எண்ணிக் கொண்டு உளறும் சில ஜென்மங்களுக்கு எழுதிக் கொண்டது.

ஒரு பதிவருக்கு நாம் பின்னூட்டம் போடலாமா, வேண்டாமா என்பதை முடிவு செய்யவேண்டியது உங்கள் உரிமை. அந்த உரிமையை உங்களிடம் இருந்து தட்டி பறித்தான் ஒருவன். இதில் பாதிப்பு டோண்டுவுக்கில்லை. உங்களுக்குத்தான். பறிபோனது உங்கள் உரிமை தான். அந்த உரிமையை நிலைநாட்ட நீங்கள் விரும்பவில்லை என்றால் நஷ்டம் டோண்டுவுக்கல்ல.

வேறு பெயரில் ஆபாசம் இல்லாது எழுதிய டோண்டுவை இந்த வாங்கு வாங்குகிறீர்களே? நீங்கள் உண்மையிலேயே ஆம்பளையாக இருந்தால், மானம் என ஒன்று உங்களுக்கு உடலில் அணுவளவேணும் இருந்திருந்தால், உப்பு என ஒன்றை போட்டு சோறு தின்பதாக இருந்திருந்தால் உங்கள் அம்மாவையும், குடும்பத்தையும் போலிப்பெயரில் வந்து இழிவுபடுத்திய அந்த இழிபிறவியை ஒரு வார்த்தையேனும் கண்டித்து எழுதினிர்களா? வெறும் ஐடியில் வந்ததற்கே டோண்டுவை கண்டித்து ஒன்பதாயிரம் பின்னூட்டமும் பத்தாயிரம் பதிவும் போட்ட வக்கிரகுணம் பிடித்த, மானம் கெட்ட ஜென்மங்களே, உங்கள் அம்மா ,அக்கா, தங்கை எல்லோரையும் இழிவுபடுத்தி நரகல் நடையில் எழுதியவனை பற்றி நீங்கள் மூச்சு விட்டதாவது உண்டா?

நீங்கள் எல்லோரும் ஆம்பிளைகள் என்று சொல்வதற்கே தகுதி அற்றவர்கள். தாயையும், உடன்பிறந்தாளையும் இகழ்ந்தவனை ஒரு வார்த்தை கூட கேட்காத பேடி ஜென்மங்கள் போர்க்களத்தில் ஆண்மகனாக நின்று உங்கள் உரிமைக்கு போராடும் டோண்டுவை மட்டும் எதிர்க்க காரணம் என்ன?

அவர் உங்களைப்போல் திருப்பி ஆபாசமாக எழுதமாட்டார், கேவலமாக எழுதமாட்டார் என்ற நினைப்பு தானே காரணம்?

நாயை பார்த்து சத்தம் போட்டால் அதற்கு கூட உணர்ச்சி வந்து திருப்பி கடிக்கும்.ஆனால் உங்கள் குடும்பத்தையே இழுத்து வைத்து கேவலப்படுத்தியவனை ஒன்றும் சொல்லாத தொடை நடுங்கி ஜென்மங்களான நீங்கள் இப்போது மட்டும் வீரம் வந்து துள்ளி குதிப்பது ஏன்?

'தூ' என்று பேடி ஜென்மங்களான உங்களை பார்த்து காறித்துப்ப வேண்டியவர்கள் கோழையை மகனாக பெற்ற உங்கள் தாயும், உடன் பிறந்தவர்களும் தான்.

Anonymous said...

என் பின்னூட்டத்தை வெளியிடுவதும், வெளியிடாததும் உங்கள் விருப்பம். உங்களை மிக மோசமாக நரகல் நடையில் எழுதியதால் தான் அவர்களுக்கு புரியும் அதே மொழியில் பதில் சொல்ல வேண்டியதானது.அதற்கு உங்களிடம் மட்டுமான என் மன்னிப்பையும் கோருகிறேன்.

Anonymous said...

பேரரசு டபுள் ரீபீட்டே :))

Anonymous said...

Dear Dondu,

This is what I commented in Luckylook's blog post. It is self-explanatory.

//Anonymous said...
//Anonymous said...
http://holyox.blogspot.com/2007/01/230out-sourcing.html
Better ask Chelvan to reveal the edited portion.
Anony//
Now go and see in the relevant Selvan's blog//

This is what Selvan's comment says.
//Anonymous said...
இந்த பதிவில் உள்ள முரளிமனோஹரின் முழு பின்னூட்டத்தையும் வெளியிட முடியுமா?அதில் என்ன எழுதப்பட்டிருந்தது?ஆபாசமாக ஏதேனும் இருந்ததா, ஏன் எடிட் செய்தீர்கள் என்று சொல்லும்படி கேட்டுகொள்கிறேன்

2/06/2007 09:15:00 PM
செல்வன் said...
அனானிமஸ்

முரளிமனோகரின் பின்னூட்டத்தில் இருந்தவை இந்த வரிகள் தான்.

"தோழர் வந்தார். "ஏய், அந்த ஆள் அமெரிக்கன். உன் உழைப்பை சுரண்டுகிறான். இனிமேல் அவனுக்கு நீ செருப்பு தைக்ககூடாது என்றார். தொழிலாளி விழிக்கிறான். "ஐயா அந்த ஆள் நான் கேட்ட கூலி கொடுத்தான். நான் தைக்க வில்லை என்றால் அந்த சப்பை மூக்கு தொழிலாளி தைத்துகொடுப்பான். நானும் புள்ளைகுட்டி காரனய்யா" என்றான்".

அடிமைபுத்தியுள்ள இந்தியர்களை திருத்தவே முடியாது என்று தனது சக தோழர் ராஜாவிடம் அசுரத்தனமாக புலம்பினார் இந்தத் தோழர். பிறகு தாங்கள் வேலை செய்யும் --- நிறுவனத்துக்கு சென்றனர் அவர்கள்.
அதானே, அவங்களும் பிழைக்கணும் இல்லே.

முரளி மனோஹர்

(மேலே கோடுபோட்ட இடத்தில் ஒரு கம்பனியின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. பதிவர்கள் வேலை செய்யும் கம்பனியின் தகவலை நான் வெளியிட முடியாது என்பதால் அனுமதிக்கவில்லை.இதை தவிர அந்த பின்னூட்டத்தில் வேறு எதுவும் இல்லை-selvan)

Congrats sir, you stand tall among all.

Anony

Anonymous said...

//Congrats sir, you stand tall among all.

Anony//

ரீப்பீட்டே
- ஒரிஜினல்் அனானி
( ISO தர சான்று பெற்றது)

Anonymous said...

பேரரசு அடித்து தூள் கிளப்ப்புறே.

Anonymous said...

//நாயை பார்த்து சத்தம் போட்டால் அதற்கு கூட உணர்ச்சி வந்து திருப்பி கடிக்கும்.ஆனால் உங்கள் குடும்பத்தையே இழுத்து வைத்து கேவலப்படுத்தியவனை ஒன்றும் சொல்லாத தொடை நடுங்கி ஜென்மங்களான நீங்கள் இப்போது மட்டும் வீரம் வந்து துள்ளி குதிப்பது ஏன்?//

இது மேட்டரு.
இதுங்களுக்கு பரபரப்புதான் வேனும்.
இன்னாத்தே சொல்றது , இவனுங்க பண்ற அநியாயம் எல்லாம் தெரியாம பூடுமா அன்னிக்கு இருக்குடி கச்சேரி

Maraboor J Chandrasekaran said...

have it in Natesan Park only. There are circular benches there

Anonymous said...

சூப்பர் சூப்பர்மா டோண்டு பதிவு சூப்பர்ம்மா
தினமும் எப்போதும் படியுங்கள் டூஸ் அண்டு டோண்ட்ஸ்.
வாரம்் தோறும்- ஏதாவது சண்டை.
தினம் தினம் பரபரப்பு காட்சிகளை பார்க்கலாம்.
சூப்பர் சூப்பர்மா டோண்டு பதிவு சூப்பர்ம்மா
தினமும் எப்போதும் படியுங்கள் டூஸ் அண்டு டோண்ட்ஸ்.
சூப்ப்ப்ப்பபபர்ர்ர்ர்ம்ம்ம்மா

கரு.மூர்த்தி said...

அப்படி என்னய்யா டோண்டு செய்துவிட்டார் ? உங்க அம்மாவை விபச்சாரத்திற்க்கு அனுப்பச்சொல்லி மெய்ல் அனுப்பினாரா , அல்லது மிக மோசமாக உள்ளம் காயப்படுமளவிற்க்கு கெட்ட வார்த்தைகளால் எழுதினாரா எழுதினாரா ?

திமுக பூத் ஏஜண்ட் சொல்கிறார் வாத்தைகளில் அல்லவாம் வன்முறை , கருத்தில்தானாம் , நான் அனுப்பட்டுமா ஒரு மெய்ல் கருத்து வன்முறை இல்லாத வார்த்தை வன்முறை மெய்ல் ? (நானும் திராவிடந்தானே , எனக்கு வராதா அந்த மொழி?)



இதையெல்லாம் செய்தவன் என்பெயருள்ளவன் , ( நான் சொந்த பெயரில் வந்தபோது மோசமாக பேசியதால் இப்போது இப்பெயர் , இந்த பெயரை அவன் கேவல படுத்தட்டுமே )

அந்த மோசமான மனிதன் நிச்சயம் கருப்பு மனிதன் , என் பெயருள்ளவன் , யாருக்கு வேண்டும் ஆதாரம் ? நான் தருகிறேன் அவனை ஆதரிக்கும் நாய்களே .

கரு.மூர்த்தி

dondu(#11168674346665545885) said...

நன்றி கரு. மூர்த்தி அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//திமுக பூத் ஏஜண்ட் சொல்கிறார் வாத்தைகளில் அல்லவாம் வன்முறை , கருத்தில்தானாம் , நான் அனுப்பட்டுமா ஒரு மெய்ல் கருத்து வன்முறை இல்லாத வார்த்தை வன்முறை மெய்ல் ? (நானும் திராவிடந்தானே , எனக்கு வராதா அந்த மொழி?)

பூத் ஏஜண்டை் ரொம்ப ஏசாதீங்க அப்புறம் கழுகுகா மாறி கொத்திபுடுவாரு.

Anonymous said...

ஆதாரத்தை வெளியே காட்டாமல் ஒரு தனிமனிதரின் மேல் பழியா?
அவர் அப்பாவியாக இருந்தால்.
உங்கள் ஆதாரத்தை வெளியிட தயாரா? எங்களிடம் சொல்ல வேண்டாம்.

உங்கள் ஆதாரத்தை மதி, பத்ரி ,காசி,குழலி,ஜோசப் சார் போன்ற நடுநிலையாளர்களிடம் காட்டாலாமே. ஆதாரம் இருக்குதுன்னா வெளியே காட்டலாமே. அது என்ன பேங்க் லாக்கர்லதான் இருக்கனுமா?

Anonymous said...

ஆதாரம் உண்மையாக இருந்தால் கருப்பு மனிதன் , அவனை ஆதரிக்கும் நாய்கள் எல்லாம் தமிழ்மணத்தை விட்டு வெளியேறுமா?

Anonymous said...

கரு.மூர்த்தி ஆதாரம் எங்கே

Anonymous said...

இதை பாத்திங்களா! இப்ப என்ன சொல்றீங்க????
http://kazugu.blogspot.com/2007/02/blog-post_08.html

Anonymous said...

Dear Senier Friend ,

How is Write in Tamil Via Internet

Please tell me

Regards / Rajendran

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது