2/08/2007

ஐயன் காளி அவர்களுக்கு நன்றி

ஐயன் காளி அவர்கள் தனது இந்தப் பதிவு மூலம் நான் செய்ய நினைத்து ஆனால் செய்ய மறந்ததை நினைவுபடுத்தினார். அவருக்கு முதற்கண் என் நன்றி.

//2005ம் ஆண்டு ஒரு நாள் யூரோப்பா கண்டத்திலுள்ள அரசியல், சமூக, மதத் தலைவர்கள் எல்லாம் நாட்ஸி அடையாளங்களை முற்றிலுமாக அப்புறப்படுத்த வேண்டும் என்றார்கள். காரணம்: ஆங்கில அரச பரம்பரையின் மூன்றாவது வாரிசாக அறியப்படுகின்ற இளவரசர் ஹாரி ஒரு வினோத ஆடை அணியும் நிகழ்ச்சி ஒன்றில் நாட்ஸி அடையாளங்கள் கொண்ட ஆடையை அணிந்தது.//

இதை எதற்கு என் சம்பந்தப்பட்ட பதிவை குறிக்கும்போது சொல்கிறீர்கள்? நாஜிகள் எனது முதல் எதிரிகள் அல்லவா? தீவிர இஸ்ரேலிய ஆதரவாளனான இந்த டோண்டு ராகவனை அவர்களுடன் சம்பந்தப்படுத்துவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். ஆனால் வேறொரு சின்னம் உலக அரங்கில் நாஜிகளின் அழிவுக்கு பிறகு உலக அரங்கில் பெருமிதம் கொண்டு எழுந்தது. தாவூதின் நட்சத்திரம் அது. இஸ்ரேலிய கொடியில் உள்ளது. ரெட் கிராஸுக்கு பதிலாக இஸ்ரேலிய ஆம்புலன்சுகளில் உள்ளது. அதை பார்க்கும்போதெல்லாம் என்னை பரவசம் செய்வதில் அது நம் மூவர்ண கொடிக்கு மட்டுமே அடுத்ததாக என்னை பொருத்தவரை உள்ளது. அந்த மறுமலர்ச்சி எப்படி நடந்தது என்பதை அறிவீரா ஐயன் காளி அவர்களே?

யூதர்கள் கிட்டத்ததட்ட 2000 ஆண்டுகள் பலதுன்பங்களுக்கு ஆளாக்கப் பட்டனர். அவர்கள் மறுமலர்ச்சி பெற்றதில் அவர்களது மதத்தை பற்றிய பெருமிதமே ஆகும்.

//எந்த ஜாதி வெறியை ஹிந்து சமுதாயத்தின் இழிவாக எம் அண்ணல் அம்பேத்கார் "பார்ப்பனீயம்" என்கின்ற அடையாளப் பெயரால் அழிக்கத் துடித்தாரோ, அந்த வார்த்தைக்கு வடிவு கொடுக்க வந்திருப்பவராக தோன்றுபவர் இந்த "ராகவ ஐயங்கார்". கலப்புத் திருமணத்தால் பிரச்சினைகள் உண்டாம். அதுபற்றி விளக்கமாய் ஒரு கட்டுரை எழுதப் போவதாயும் ஒரு அறிவிப்பு - விளம்பரம் எனலாமா இஃதை?//
விளம்பரம் இல்லை. ஒரு முன்னறிவிப்பே. இது கவனத்தை விட்டு போயிருந்தது. அதை நினைவு படுத்தியதற்கு மீண்டும் நன்றி.

//பெரும் புகழ் எடுக்கும் விருப்பத்தால் பிரச்சினைகள் எழாதா?//
என்ன உளறல். கல்யாணம் என்பது யோசித்து செய்ய வேண்டிய விஷயம். பல பிரச்சினைகளை உள்ளடக்கியது. இப்போது இளமை ஜோரில் முடித்து விட்டு, பிற்காலத்தில் வருத்தப்படுபவர் எத்தனை பேர் என்பதை அறிவீரா? அவர்கள் குழந்தைகளுக்கு மணமுடிக்க முடியாமல் வெம்புவரை அறிவீரா?

//ஸ்மார்த்தனாய் பிறந்த ராமானுஜன் வைணவம் ஸ்தாபித்தான். அதன் வழித் தோன்றல் இதைத் தவறு என்கின்றார்.//
எனது இப்பதிவில் அது சம்பந்தமில்லாததுதான். இருப்பினும் கூறுகிறேன். ராமானுஜர் செய்தது மிகவும் பாராட்டத் தக்கது. 12 ஆழ்வார்கள் அத்தனை பேரையும் நான் பூஜிக்கிறேன். இதில் எத்தனை பேர் பார்ப்பனர் என எண்ணுகிறீர்கள்?

//கலப்பு மணம் பிரச்சினைகள் உள்ளது எனும் இம்முதியவர், அந்தண ஆண்டாள் ஆயனை மணம் புரிந்ததை எதிர்ப்பாரா? ஆயன் என்பதால் வணக்கமில்லை. எம் தெய்வம் அந்த மகர நெடுங்குழைக்காதனன்றி வேறில்லை என்பீரெனில், அந்த திருமால் தங்கையின் கணவன் சுடுகாட்டில் அலையும் சூத்திரன் அன்றோ?//
என்ன உளறல் இந்த இளைஞனைப் பற்றி? சூடிக்கொடுத்த சுடர்க்கொடியோ, அவளை ஆட்கொண்ட பாம்பணை மேல் படுத்திருப்பவனோ என் தெய்வங்கள் அல்லவா.

இருந்தாலும் இங்கு ஒரு வார்த்தை சொல்வதால் எனது அப்பன் அரங்கநாதனோ, மகர நெடுங்குழைகாதனோ, திருவிண்ணகர ஒப்பில்லா அப்பனோ, ஒப்பற்ற மாதர்கள் வாழும் திருவல்லிக்கேணியில் அருள் பாலிக்கும் மீசைக் கடவுள் பார்த்தசாரதியோ கோபித்து கொள்ள மாட்டார்கள். ஆண்டாள், அவள் ஆண்டாள். ஐயனுடன் ஐக்கியமானாள். ஆனால் திரும்ப வந்து குடும்பம் நடத்தவில்லை. ஆனால் நான் இங்கு குறிப்பிடும் விஷயம் கல்யாணத்துக்கு அப்புறம்தான் ஆரம்பிக்கிறது சுவாமி.

//அத்தனை சாதியிலும் அரியின் காதலர் அனைவரும் வைணவரே என்று பறையரையும், பள்ளரையும் பார்ப்பனராக்கியதில் உண்டானதன்றோ ஐயங்கார் எனும் குலம்? உமது மரபணுக்களில் இந்தச் சூத்திரர்களின் ஜீன் சுருண்டுள்ளதென்பது சுகமான உண்மையன்றோ?//
அப்படியிருக்க உங்கள் ஜீன்களுடன் தொடர்பு கொண்டவரை மட்டும் ஏன் துவேஷிக்கிறீர்கள்?

//கற்பென்பது கற்பனை என்பீர். ஆயினும் கலப்பு மணம் எனில் கடினம் கடினம் என்கிறீர். அடுக்குமா?//
கற்பு என்பது கற்பனை என்று நான் எங்கு சொன்னேன் ஐயா? ஆனால், கலப்பு மணம் கடினம் என்றுதான் மறுபடியும் கூறுவேன்.

//பதிலாய், "இது எம் சொந்தக் குரல். வைணவத்தின் கூற்றை வெளியிட அடியேனுக்கு பாத்தியம் இல்லை" என்பீர்.//
எப்போது அவ்வாறு சொன்னேன்?

//தனி மனிதரின் குரல் ஒரு சமூகத்தின் தவறுக்கு ஆதரவாகும்போதும் அது தனிமனிதக் குரலாகுமோ? அப்படியே ஆயினும் உம் குரலை ஊருக்கு முன் உரத்துச் சொல்லல் அவசியம் ஏனோ? உமக்கு மட்டும் கேட்கும்வரைதானே உம் குரல்? ஊர்ச்சந்தியில் உரத்து உளறுவது உமக்கு மட்டும் கேட்கவேண்டும் என்பதற்கா? டோண்டு ராகவனாய் சொல்லுவதற்கும், ராகவ ஐயங்காராய் சொல்லுவதற்கும் வேறுபாடு உண்டல்லவா.//
உளறுவது யார் என்பதை இப்போது பார்க்கத்தானே போகிறோம்? ராகவையங்கார் என்று கூறிக்கொண்டது பற்றி பல முறை எழுதியாகி விட்டது. இங்கு மறுபடியும் கூறுவதாக இல்லை.

//"எம் கருத்து இஃது, யாரும் ஏற்றுக்கொள வேண்டும் எனும் எதிர்பார்ப்பு எமக்கில்லை" என்பீர்.//
நான் கூறுவதாக அதை நீங்கள்தான் சொல்கிறீகள். ஆனால் நீங்கள்தான் பார்ப்பன துவேஷம் என்ற அழுக்கு ஆடை அணிந்துள்ளீர்கள்.

//நன்மை செயவே நான் நினைதேன் என்பீராயின், விட அறைக்குள் யூதர்களின் பிண அறை காணப் பணித்த நீதிபதியே தான் அவர்களுக்கு நன்மை செய்ததாகத்தான் நம்புவதாகக் கூறினான் - படித்திருப்பீர்//.
என்ன சிறுபிள்ளைத்தனமாக இருக்கு. நாஜிகள் எனது ஜன்ம விரோதிகள். அவர்களை நான் ஏன் முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும்?

//பரந்தாமன் மெய்தழல் பற்றியதன்றி பற்றுவது ஏதுமிலை எனச் சொல்லி சாதியில் கடையராயினும் பக்தர்கள் தாள் தூசியைத் தலையில் தரித்து, உண்மை பலம் அருளும் உணவாய் கொண்ட தொண்டரடிப்பொடியனும் வைணவனே. வைணவனாய் இருப்பதைவிட தனிமனிதனாய் இருப்பதே சிறந்தது என்பது உம் வாதம் எனில், உமது முன்னோருக்கல்லவா இழுக்கு.//
எனது வைணவ பக்தியில் என்ன குறை கண்டீர்கள்? அப்படி ஏதேனும் இருந்தால் தக்க உதாரணத்துடன் நிரூபியுங்கள்.

//கலப்பு மணத்தால் காழ்ப்புகள் உண்டு. நன்மைகளோடு, தீமைகளுமுண்டு. அவற்றை உரத்துச் சொல்லுவதை சாதி வெறி என்பீரோ?" என்றும் நீங்கள் கேட்கலாம்.//
தீமைகள் என்ன என்பதையும் அறிந்தால்தானே, அவற்றுக்கு சரியான எதிர்வினை தரமுடியும்? அதை பற்றி பேசவே கூடாது என்றால் எப்படி ஐயா?

//தொல்லைகள் இருப்பதாலேயே நன்மைகளை நசுக்கிவிடவேண்டுமா?//
நான் அப்படி சொல்லவில்லையே?

//கலப்பு மணத்தின் கனிகளை கண்டதுண்டா? சாதி சங்கிலிகளை தூளாக்கி மணம் புரிந்தவர்களின் மகவுகளைக் கொஞ்சியதுண்டா தாங்கள்?//
இல்லை என்பதை கண்டீர்களா? எனது மனைவியின் அத்தை கலப்பு மணம் புரிந்தவர். அவர் குழந்தைகள் என் செல்ல பிள்ளைகள். நீங்களாகவே அனுமானம் செய்து உளறக்கூடாது.

//அன்பு கொண்டுவிட்டவள் முகம்மதிய வாரிசு என்று அழித்தா விட்டனர் வைணவர்கள்? அரங்கனுக்கு அருகில் துலுக்க நாச்சியாராய் துணை வைத்ததன்றோ நம் சமயம். அபச்சாரம் செய்துவிட்டீர் எனப் புரிந்து துலுக்க நாச்சியாரிடம் அபராதம் செய்வதன்றோ மனவலிமையின் அடையாளம்.//
துலுக்க நாசியாரை ஏன் இங்கு இழுக்கிறீர்கள்?

//பார்ப்பான் நான் எனப் பகல்வதால் பற்றி எரியப்போவதென்ன? ஒன்றுமில்லை. கொங்கணனுக்காவது கொக்கிருந்தது//

//"என் சாதி இதுவென இயம்புவதை எதிர்க்கிறார். அன்பற்று அழிக்கவும் துடிக்கிறார். இவர் முன் இறுமாந்திருப்பதற்கு இரும்பு இதயம் வேண்டும்" என்பீராயின் அது வெறும் பம்மாத்து என்பதை யாம் பகலவும் வேண்டுமோ? ஐயங்கார் என்று எடுத்தும்பியவது ஏளனத்திற்குரியதுதான் எல்லோர்தம் பார்வையிலும். முதியவரின் மீசைமுடியை முற்றிப் போன கனவுக் கயிறுகளால் முறுக்கப்பெறும் முயற்சி என்பதுதான் தங்களை எள்ளாதவரின் எண்ணம். அற்றை இரவு அருந்திய கூழ் பட்டு மீசையை முறுக்கிய கதையை நீங்கள் சொல்லலாம். கூழ் குடித்த பெருமை உங்களுக்கு. குறை காணும் வாய்ப்பு மற்றோருக்கு.//
என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதே புரியவில்லை.

//தன் சாதி இதுவென்று கூறி தன் பலம் காட்டும் தரணியில் எம் சாதி இதுவென்பதில் நேர்வழி ஏற்றம் எதேனும் உண்டா?//

சரி, நான் கூற நினைத்ததை கூறிவிட்டு போகிறேன். நீங்கள் கூறுவதெல்லாம் ஆதர்சம். யதார்த்தம் என்று ஒன்று உண்டு. உம்மை மாதிரி பலர் இம்மாதிரி ஊருக்கெல்லாம் அறிவுரை கூறிவிட்டு தத்தம் முறை பெண்ணை மணப்பர். அவர்கள் பேசியதை கேட்டு கலப்பு மணம் செய்தவர் படும் கஷ்டங்கள் முன்னவருக்கு ஒரு பொருட்டல்ல.

திருமணம் என்பது ஆணும் பெண்ணும் மட்டும் சேர்வதல்ல. அவரவர் குடும்பங்களும் நல்ல உறவில் இருக்க வேண்டும். இது சாதாரணமாக நடப்பதில்லை. என் நண்பர் ஒருவர். அவர் பர்ர்ப்பனரில்லை, ஒரு மேல் சாதி என்று அழைக்கப்படும் சாதியை சேர்ந்தவர். அவர் ஒரு தாழ்த்தப்பட்ட சாதி பெண்ணை மணந்தார். இருவருமே நன்கு படித்தவர்கள். நண்பரின் தாய் இத்திருமணத்தை ஒத்து கொள்ளவேயில்லை. இன்னும் தன் பேரக் குழந்தையை பார்க்கக் கூட இல்லை. இந்த குழந்தை தந்தை வழி பாட்டியின் அன்பில்லாமல் வளரப் போகிறது. அது பெரியவளாகி, திருமண வயதை எட்டும்போது மணமகன் தேடும்போது எழப்போகும் பிரச்சினை பூதாகாரமாகப் போகப் போகிறது. அவ்வாறு நடக்கக் கூடாது என்பதே எனது வேண்டுகோள். இது காதல் திருமணம். அவர்கள் ஒற்றுமையாகவே வாழ்கிறார்கள். ஆனால் இரு வழி உறவினர்களுக்குள் சுமுகமான போக்குவரத்து இல்லை. கலப்பு திருமணத்தின் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு காதல் திருமணம்தான் முக்கிய வழி. தாய் தந்தையர் நிச்சயம் செய்யும் திருமணம் கடினம். எல்லா பத்திரிகைகளிலும் வரும் திருமண விளம்பரங்களையே பாருங்கள் நான் சொல்வது புரியும்.

கலப்பு திருமணத்தின் இன்னொரு பிரச்சினை வேறுபடும் உணவு பழக்கங்கள். காதல் மயக்கத்தில் திருமணம் செய்து கொள்வார்கள். ஆனால் சில நாட்களிலேயே மோகம் மறைந்து விடும். பிறகு இல்லாத பிரச்சினைகள் எல்லாம் வரும். மற்ற பழக்க வழக்கங்களும் மாறும்.

உண்மை காதல் இவற்றையெல்லாம் முறியடிக்கும் என கூறுவது கேட்பதற்கு நன்றாக இருக்கும். ஆனால் நடைமுறைக்கு வருவது அபூர்வம்.

//குற்றப் பரம்பரையாய் ஆங்கிலக் கொள்ளையர் கூறிய வனஜாரி சாதியில் பிறந்த கோபினாத் முண்டே ஒரு மாநில முதல்வராவது ஈ வே ரா பிறந்த மண்ணில் என்றாவது நிகழுமோ? கோபினாத் முண்டேயை மணந்தது ஒரு பார்ப்பனப் பெண் என்பதறிவீரோ? இவர்களது கலப்பு மணத்தால் என்ன பிரச்சினை வந்தது?
காந்தி கிராமம் கண்ட பார்ப்பனப் பெண்ணின் கணவர் தலித் என்பதை அறிவீரோ? அங்கு சுயமாய் தொழில் செய்து வளமாவாய் வாழ்வோருக்கு இந்த கலப்பு மணத்தால் நேர்ந்த கடுமை என்னவோ?
அரசியல் மேதையாய் ராவும் பகலும் ஆராதனை செய்கிறீர்கள் ராஜாஜியை. அவர் தன் மகளை மணமுடித்தது வைசிய காந்தியின் மகனுக்கன்றோ?//
ஐயா நீங்கள் கூறுபவை அளவில் சிறியவை. அதை பார்த்து எல்லோருக்கும் முடியும் என மனப்பால் குடிக்காதீர்கள். கலப்பு திருமணம் வேண்டாம் என கூற நான் யார். பிரச்சினைகளை உணர்ந்து முடிவெடுக்க சொல்கிறேன். நீங்கள் என்னவோ பிரச்சினைகள் என்னவென்றெல்லாம் பார்க்கக் கூடாது என்று சொல்வது போல படுகிறது. அது உண்மையாயின் அது தவறே.

கல்யாணம் என்பது ஆயிரம் காலத்து பயிர். கல்யாணம் செய்து கொள்பவரை பற்றி மட்டும் சிந்தித்தால் போதாது. அவர்களுக்கு பிறக்கப் போகும் குழந்தைகளையும் பார்க்க வேண்டும். சொந்த சாதியில் திருமணம் செய்தலில் நான் மேலே பட்டியலிட்ட அபாயங்களின் சாதியக்கூறுகள் குறைவு. கலப்புத் திருமணங்களில் அவை அதிகம்.

இதை உணர்ந்து, சாதக பாதகங்களி ஆராய்ந்து மணம் புரிவதே புத்திசாலித்தனம்.

//வாழும் முறைகளும், வாழ்வின் நோக்கங்களும் சாதி அடிப்படையைச் சாராது இருக்கும்போது ஒத்த வாழ்நெறியும், ஒன்றிற்கு மற்றொன்று உவமையாய் அமையும் நோக்கங்களும் கொண்டவர் கலந்தால் எதிர்த்து விண்டுவது டோண்டுவிற்குத் தகுமோ?//
எனக்கு வேறு வேலையில்லையா? இரண்டு வகை திருமணங்களிலும் உள்ள சாதக பாதகங்களை பார்த்து செயலாற்றுதல் நலம் என நான் நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

//ஐயங்கார் எனச் சொல்லுவதில் இருக்கும் பாதுகாப்பும் சமூகப் பெருமையும் ஹிந்து என்பதில் இல்லை என்பதை சமத்காரமாய் தாங்கள் புரிந்துகொண்டிருக்கலாம். ஆனால், இதை வெளிப்படையாய் சொன்னால் வாழ்க்கையை அழிப்பார் என்பதறிந்து குறுகிய பானையில் குதிரையோட்டுவதில் குன்றா பாதுகாப்பு இன்று மட்டும் உண்டுதான். ஐயங்கார் என்று சொல்லி குறுகிய வாழ்க்கை வாழ்வதைவிட இன்பம் நல்கும் ஹிந்துவே நான் எனச் சொல்லுவதற்கு வீரமும், தீரமும், விவேகமும் வேண்டும்தான்.//
இது பற்றி ஏற்கனவே அதிகம் பேசியாகி விட்டது.

இப்பதிவுக்கு பின்னூட்டமிடுபவர் தாங்கள் பரிந்துரைப்பதை தாங்களே செய்கிறார்களா அல்லது உபதேசம் எல்லாம் மற்றவருக்குத்தானா என்பதை சுய பரிசோதனை செய்யுமாறு கேட்டு கொள்கிறேன்.

மறுபடியும் கூறுகிறேன், திரும்ணம் என்பது சம்பந்தப்பட்டவரது சொந்த விஷயம். முடிவு அவர்கள்தான் எடுக்க வேண்டும். அதில் அவர்கள் பார்க்க வேண்டிய பல பிரச்சினைகளை பற்றி பேசவே இப்பதிவு. இதில் என் கருத்ஹ்துக்களை கூறியுள்ளே. படிப்பவர்கள் அவரவர் விரும்புவதை எடுத்து கொள்ளட்டும் அல்லது மொத்தமாகவே நிராகரிக்கட்டும்.

அது சரி, இந்துக்கள் மற்ற மதத்தினரில் பெண் எடுப்பது பற்றி என்ன கருத்து கொண்டுள்ளீர்கள்? இங்கு கூட நீங்கள் துலுக்க நாச்சியாரை விடுத்து வேறு மதக்கலப்புகளை பற்றி பேசாமல் தவிர்த்து விட்டீர்கள் போல?

அன்புடன்,
டோண்டு ராகவன்

62 comments:

Anonymous said...

மிகுந்த ஏமாற்றமளிக்கும் பதிவு. இந்த மாதிரி கலப்பு மணத்தை எல்லாம் எதிர்த்து பதிவு போட்டால் உங்களை ஆதரிப்பவர்கள் கூட ஆதரிக்க மாட்டார்கள். தயவு செய்து இந்த மாதிரி எல்லாம் பதிவு போடாதீர்கள்

dondu(#11168674346665545885) said...

//இந்த மாதிரி கலப்பு மணத்தை எல்லாம் எதிர்த்து பதிவு போட்டால்//

யார் எதிர்த்தது? பார்த்து நடந்து கொள்ளுங்கள் என்று கூறுவது தவறா? கலப்பு மணத்தை ஆதரிப்பவர்கள் தங்கள் திருமணம் நட்க்கும்போது மட்டும் ஏன் சொந்த சாதியில் வரன் தேட வேண்டும்?

உண்மை நிலையை எழுதியுள்ளேன். என் கருத்தை கூறியாகி விட்டது. அவ்வளவுதான்.

அன்புடன்,
டோண்டு ராகவ்ன்

Anonymous said...

டோண்டு சார்! உங்கள் கருத்துக்களில் சில இடங்களில் முரண்பாடு உண்டு.
இருந்தாலும் கலப்புத் திருமணம் குறித்த கருத்தை ஏற்கின்றேன். பிற்க்காலத்தில் குழந்தைகளும் பாதிக்கப்படுவது உண்மை.

Anonymous said...

மிகவும் பழமைவாத தர்கம்.........

25 ஆண்டுகளுக்கு பிறகு வரும் தலைமுறையினர் நாம் பார்கும் பெண்ணையோ, பிள்ளையையோ திருமணம் செய்வார்கள் என்று எண்ணுவதே முட்டாள்தனம். நம்மால் முடிந்தது அவர்களுக்கு நல்ல கல்வியையும் நல்ல பழக்க வழக்கங்களையும் புகட்டுவதே. அவரவர் வாழ்க்கை துணையை அவர்களே தேர்ந்து எடுத்துக் கொள்ள விட்டு விட வேண்டும். இல்லாவிடில் தேவை இல்லாத மனக் கசப்பிற்கு உள்ளாக நேரிடும். அதுதான் practical ம் கூட.

குடும்பம் இணைய வேண்டும் என்பதற்காக நமது வாழ்க்கையை தொலைக்க முடியாது. காலப் போக்கில் சரியாகி விடும் என்று போய்க் கொண்டே இருக்க வேண்டியது தான். உங்கள் காலம் பொன் போன்றது என்று கூறும் நீங்களே, பிடிக்காத பெண்ணை திருமணம் செய்து கொண்டு முழு வாழ்க்கையையும் தொலைக்க இளைஞர்களுக்கு advise செய்கிறீர்களே?

உணவுப் பழக்கம் எல்லாம் ஒரு மேட்டர் என்று argue செய்வீர்களானால் உங்கள் குடும்பத்தில் யாரையும் நீங்கள் வெளி நாட்டிற்கு அனுப்பியிருக்க முடியாதே? அப்போது மட்டும் உணவு ஒரு பிரச்சினை இல்லையா? அசைவம் சாப்பிடுபவர்கள் கூட இங்கே கஷ்டப்பட வேண்டும் சுவாமி. நம் நாட்டில் அசைவம் என்பது அதிக பட்சம் மாட்டு இறைச்சி தான். ஆனால் இங்கே தொடங்குவதே மாட்டிலிருந்து தான்.

கடைசியாக, "நான் கலப்பு திருமணத்தை எதிர்க்கவில்லை. அதில் உள்ள தீமைகளையே எடுத்துக் கூறினேன்." என்பது உங்கள் வாதமானால் அதில் உள்ள நன்மைகளையும் பட்டியலிட்டு இருக்கலாமே? அதை செய்யாமல் தீமைகளை மட்டும் செய்ததால் தான் நீங்கள் கலப்பு திருமணத்தை எதிர்கிறீர்கள் போன்ற நிலை உருவாகிறது.

வடுவூர் குமார் said...

"பார்த்து நடந்துகொள்ளுங்கள்" இது தான் தாங்கள் சொல்லும் அறிவுரை.
கலப்பு கல்யாணத்தில் நல்லதும் இருக்கு கெட்டதும் இருக்கு.
என்ன!! அதெல்லாம் கல்யாணம் முடிந்து அவர் தம் குழந்தைகள் வளரும் போது பூதாகாரமாகிறது,அப்போது, நடந்தவற்றையெல்லாம் அழித்து எழுத முடியாத அளவுக்கு போகிறது.
நீங்கள் சொன்னபடி இது அவரவர்களின் சொந்தப்பிரச்சனை, முடிவு அவரவர் கைகளில் தான்.
டோண்டு சார் சொன்னார் என்று யாரும் முடிவெடுக்கப்போவதில்லை.அப்படி எடுத்தால் அது, தன் மூளையை அடகு வைப்பதற்கு சமம்.
மீதி மேட்டரில் எனக்கு அறிவு பத்தாது.

dondu(#11168674346665545885) said...

என் பதில்களை கூற ஆரம்பிக்கும் முன்னால் இப்பதிவையிட எனக்கு நினைவூட்டிய பதிவை எழுதிய ஐயன் காளி அவர்களது அப்பதிவில் நான் இட்ட பின்னூட்டத்தை இங்கும் முதலில் இட்டு விடுகிறேன்.

ஐயன் காளி அவர்களே,

பதிவு நன்றாக எழுதப்பட்டுள்ளது. அதுவும் கவிதையாக தோன்றும் வரிகளின் சொல்லழகு என்னை கட்டிப் போட்டது.

//ஸ்மார்த்தனாய் பிறந்த ராமானுஜன் வைணவம் ஸ்தாபித்தான். அதன் வழித் தோன்றல் இதைத் தவறு என்கின்றார்.//
ஆதிசேஷன் அம்சமாகிய ராமனுஜனை நான் சாடுவேனா? ஓம் நமோ நாராயணா என்று வாய் நிறைய அழைத்து அந்த மந்திரத்தை ஊரறிய பிரகடனம் செய்த அப்பெரியவரை நினைத்தாலே மோட்சப் பேறு கிட்டுமே. அவரைப் பற்றியும் வைணவ அமுதம் பற்றியும், ஹிந்து மஹா சமுத்திரம் பற்றியும் எத்தனை முறை படித்தாலும் திகட்டாதே.

ஆனால் இங்கு நாம் பார்ப்பது கலப்பு மணம் பற்றியது. அதை பலரும் ஆதரிக்கின்றனர் மற்றவர்கள் விஷயத்தில். அதை ஆதரிப்பதே அரசியல் ரீதியாக சரியானதாகக் கருதப்படுகிறது. ஆனால் நான் கூறவருவது என்னவென்றால் அதன் சாதக பாதகங்களை ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும் என்பதே.

//கலப்புத் திருமணத்தால் பிரச்சினைகள் உண்டாம். அதுபற்றி விளக்கமாய் ஒரு கட்டுரை எழுதப் போவதாயும் ஒரு அறிவிப்பு - விளம்பரம் எனலாமா இஃதை?//
மன்னியுங்கள் ஐயா, இங்கு வந்து உங்கள் பதிவுக்கு பின்னூட்டம் இடுவதை விட பதிவாகவே போட்டு விட்டதை கூறவும், உங்கள் இந்தப் பதிவால் அதை போட மறந்த எனக்கு ஞாபகப் படுத்தியதற்கு நன்றி கூறவுமே நான் இங்கு வந்தேன். ஆனால் வந்த இடத்தில் இப்பதிவில் உள்ள அழகிய தமிழில் மனம் பறி கொடுத்ததில் அதை முதலில் கூற மறந்து விட்டேன். பாருங்கள் எனது பதிலை.

http://dondu.blogspot.com/2007/02/blog-post_07.html
ஐயன் காளி என்ற பெயரே கவிதை மயமாக இருக்கிறது.

நேரம் கிடைக்கும்போது அங்கு வந்து பார்த்து தங்கள் மேலான கருத்துக்களை கூறுமாறு நான், டோண்டு ராகவன் என்னும் பெயருடைய இந்த இளைஞன் வேண்டுகிறேன்.

இப்போது நான் ரசித்த உங்கள் வரிகளை பட்டியலிடுகிறேன்.

//தூணில் தோன்றிய நரசிம்மம் என்ன சாதியெனத் தெரிந்தா திரு மணந்தாள்?
வராகமாய் வளர்ந்து நின்ற அந்த வைணவன் என்ன சாதி?
தேவர்க்கு அமுது தர தன் தேகத்தைத் தந்த அந்த ஆமை என்ன சாதி?//

//பரந்தாமன் மெய்தழல் பற்றியதன்றி பற்றுவது ஏதுமிலை எனச் சொல்லி சாதியில் கடையராயினும் பக்தர்கள் தாள் தூசியைத் தலையில் தரித்து, உண்மை பலம் அருளும் உணவாய் கொண்ட தொண்டரடிப்பொடியனும் வைணவனே.//
பின்னுகிறீர்கள் ஐயா. தமிழ் உங்கள் விரல்களில் துள்ளி விளையாடுகிறது. உங்களது சொல்லாட்சி அபாரம். பொறாமையாக இருக்கிறது. நானும் உங்களுக்கு பதிலளித்துள்ள எனது பதிவில் உங்கள் நடைக்கு ஈடாக எழுத முயற்சி செய்துள்ளேன். வந்து படித்து அது பற்றிய கருத்தும் கூறுமாறு கேட்டு கொள்கிறேன்.

இன்னொரு விஷயம், நேற்று நான் எனது பதிவை அச்சிட்டபோது நள்ளிரவை தாண்டியிருந்தது. ஆகவே உடனே வந்து உங்களுக்கு நன்றி சொல்ல இயலவில்லை.

சூடிக்கொடுத்த சுடர்கொடி அன்னை ஆண்டாளை பற்றி நீங்கள் எழுதியதை படித்ததும்
"வாரணமாயிரம் சூழ வலஞ்செய்து நாரணன் நம்பி நடக்கின்றான்" என்ற வரிகள் என்னுள்ளத்தின் ஊடே செல்கின்றன. அதை நினைக்கும்போதே மனம் விம்முகிறது. அதை வாய்விட்டு கூற யத்தனிக்கும்போதெல்லாம் மனம் குதூகலிக்கிறது. ஆனந்த அழுகையால் குரல் குழறுகின்றது.

மீண்டும் நன்றி கூறி இப்போதைக்கு விடைபெறுகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

தினகர் அவர்களே,

இப்பதிவை போடப்போவதை பற்றி ஏற்கனவே நான் அறிவித்ததுதானே. முழுவதுமாக நான் கூறியதிலிருந்து முரண்படும் நீங்கள் இன்னும் விரிவாகவே எழுதுங்கள் எனக் கேட்டு கொள்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

//கடைசியாக, "நான் கலப்பு திருமணத்தை எதிர்க்கவில்லை. அதில் உள்ள தீமைகளையே எடுத்துக் கூறினேன்." என்பது உங்கள் வாதமானால் அதில் உள்ள நன்மைகளையும் பட்டியலிட்டு இருக்கலாமே?//
அவற்றையெல்லாம் பட்டியலிடுங்கள் சொர்ணாக்கா அவர்களே. ஆனால் ஒன்று கூறுங்கள். காதல் இருக்கும் இடங்களைத் தவிர தாய் தந்தையர் தம் மக்களுக்கு திருமணம் செய்விக்கும் தருணத்தில் வரன்களை எங்கு தேடுவார்கள் என நினைக்கிறீர்கள்?

இன்னும் விரிவாகவே எழுதுங்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

//டோண்டு சார் சொன்னார் என்று யாரும் முடிவெடுக்கப்போவதில்லை.//
நன்றி வடுவூர் குமார் அவர்களே. டோண்டு சாரை பின்பற்றுவதா? அவரை உதைக்காமல் இருந்தாலே போதாதா? :))))

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

அய்யன் காளி அவர்களை திராவிட குஞ்சுகளை போல் அணுகவேண்டாம் என்றும் அவரது வாதத்தில் உள்ள தர்க்கநியாயங்களை திறந்த மனதுடன் அணுகவும் உங்களை வேண்டுகிறேன். உங்களை அவரும், நீலகண்டனும் எதிர்ப்பதற்கும் திராவிட குஞ்சுகள் எதிர்ப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் அறிவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

கற்பு பற்றிய உங்கள் கருத்துக்களையும், பதிவுகளையும் மீண்டும் படியுங்கள். பெண் விடுதலையையும், பெண்ணடிமைத்தனத்தையும் எதிர்த்த சமூகத்தின் மூடப்பழக்கவழக்கங்களை சாடிய ஒரு புரட்சிவீரர் அதில் தென்பட்டார். சுதந்திரத்தை எதிர்க்கும் சமூகத்தை 'போடா ஜாட்டான்' என துச்சமாக எதிர்த்த, தூக்கி எறிந்த ஒரு நவீன பெரியார் அந்த பதிவில் காணப்பட்டார்.

இந்த பதிவில் தெரிவது சமூகத்தின் அடக்குமுறைகளுக்கும், பழமைவாதத்துக்கும் பயந்த ஒரு சராசரி மனிதர்.(சராசரி மனிதனாக இருக்க கூடாத இடத்தில் சராசரியாக இருக்கும் ஒருவர்)

கலப்புமணம் கடினம் தான். ஆனால் நீங்கள் இந்த பதிவில் சித்தரித்திருப்பதுபோல் அது அத்தனை கடினமல்ல. கலப்பு மணத்தையே கைவிடும் அளவுக்கு அது கண்டிப்பாக, நிச்சயமாக உறுதியாக கடினமல்ல. சிந்திக்க வேண்டிய அளவுக்கு அதில் அப்படி ஒன்றுமே இல்லை, இல்லை, இல்லை.

//சரி, நான் கூற நினைத்ததை கூறிவிட்டு போகிறேன். நீங்கள் கூறுவதெல்லாம் ஆதர்சம். யதார்த்தம் என்று ஒன்று உண்டு. உம்மை மாதிரி பலர் இம்மாதிரி ஊருக்கெல்லாம் அறிவுரை கூறிவிட்டு தத்தம் முறை பெண்ணை மணப்பர். அவர்கள் பேசியதை கேட்டு கலப்பு மணம் செய்தவர் படும் கஷ்டங்கள் முன்னவருக்கு ஒரு பொருட்டல்ல.//

நிச்சயம் இல்லை. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக, வழையடி வாழையாக, மனித குலம் தோன்றிய நாளில் இருந்து இன்றுவரை கலப்பு மணங்களும், காதல் மணங்களும் நடந்துகொண்டு தான் இருக்கின்றன. அவர்கள் குழந்தைகள் மிகவும் சந்தோஷமாகவும், நன்றாகவும் தான் வாழ்ந்துள்ளனர். இனியும் அதுதான் நடக்கும்.

கலப்பு மணத்தை ஆதரிப்பவர்கள் ஏன் தமது ஜாதியில் பெண் எடுக்கிறார்கள் என்று கேட்கிறீர்கள்.ஒரு பெண்ணின் மனதை வெல்வதும் அவளை கைபிடிப்பதும் எல்லோராலும் இயன்ற ஒன்றல்ல. டேட்டிங் செய்ய ஒரு திறமை வேண்டும். அது இல்லாதவர்கள் நிச்சயிக்கப்பட்ட திருமணத்துக்கு தான் போக வேண்டும். நிச்சயிக்கப்பட்ட திருமணங்களில் அப்பா, அம்மா,ஜாதி ஆகியவை உள்ளே புகுந்து விடுகின்றன.ஜாதியை நம்பாத,காதல் செய்ய திறமையில்லாத ஒருவன் தன் விருப்பமின்றி இதில் வீழவேண்டியதாகிறது. வேற்று ஜாதியில் அழகான பெண் கிடைத்தால் எவனாவது வேண்டாம் என்றா சொல்லுவான்?:-)

கலப்புமணம் செய்வோரின் குழந்தைகள் இதனால் பாதிக்கப்படலாம் என்கிறீர்கள். கண்டிப்பாக அது நீங்கள் நினைப்பது போன்ற அளவுக்கு இல்லை. காதல் திருமணம் செய்தவர்களை சம்பந்திகளாக ஏற்க நீங்கள் நினைக்கும் அளவுக்கு யாரும் தயங்குவதில்லை. பெரும்பாலும் காதல்மணம் செய்த ஆணின் சாதியிலேயே அவனது குழந்தைக்கும் திருமணம் நடந்துவிடுகிறது. காதல் மணம் செய்தவர்களின் குழந்தைகள் கல்யாண சந்தையில் விலை போக மாட்டார்கள் என்பது தவறு.சாதியை பெரிதாக நினைக்கும் குடும்பத்தில் அவர்களை ஏற்காமல் போகலாம். அந்த மாதிரி குடும்பத்தில் வாழ்க்கைப்படுவது அவசியமே இல்லை என்பதை விடவும் அம்மாதிரி குடும்பங்கள் அருகி வருகின்றன என்பதுதான் உண்மை.

காதல் மணத்தை கைவிடும் அளவுக்கு இது ஒரு பெரிய காரணமல்ல என்பதுதான் நிஜம்.

//திருமணம் என்பது ஆணும் பெண்ணும் மட்டும் சேர்வதல்ல. அவரவர் குடும்பங்களும் நல்ல உறவில் இருக்க வேண்டும்.//

தவறு. திருமணம் என்பது ஆணும், பெண்ணும் சேர்வதுதான். அவர்களின் குடும்பங்களுக்கு இதில் தலையிட எந்த முகாந்திரமும், உரிமையும் இல்லை.

இதை உணர்ந்த தகப்பன்களின் எண்ணிக்கை எராளம்.அப்படி உணராதவர்களுக்கும் உணர வைப்பது இன்றைய இளைஞர்களுக்கு முடியாத ஒன்றல்ல.

/கலப்பு திருமணத்தின் இன்னொரு பிரச்சினை வேறுபடும் உணவு பழக்கங்கள். காதல் மயக்கத்தில் திருமணம் செய்து கொள்வார்கள். ஆனால் சில நாட்களிலேயே மோகம் மறைந்து விடும். பிறகு இல்லாத பிரச்சினைகள் எல்லாம் வரும். மற்ற பழக்க வழக்கங்களும் மாறும்./

உணவு பழக்கம் மாறினால் என்ன ஆகிவிடும்?

எந்த இல்லாத பிரச்சனைகளும் வராது. மிகவும் மிகைப்படுத்தப்ப்ட்ட கூற்று இது என கருதுகிறேன்.

/கல்யாணம் என்பது ஆயிரம் காலத்து பயிர். கல்யாணம் செய்து கொள்பவரை பற்றி மட்டும் சிந்தித்தால் போதாது. அவர்களுக்கு பிறக்கப் போகும் குழந்தைகளையும் பார்க்க வேண்டும். சொந்த சாதியில் திருமணம் செய்தலில் நான் மேலே பட்டியலிட்ட அபாயங்களின் சாதியக்கூறுகள் குறைவு. கலப்புத் திருமணங்களில் அவை அதிகம். /

குழந்தைகளை பற்றி எல்லாம் சிந்திக்க இதில் ஒன்றுமில்லை.இது கி.பி.2007. கி.மு 2007லிலேயே கலப்புமணம் புரிந்து சந்தோஷமாக இருந்தவர்கள் ஏராளம். இனிவரும் தலைமுறை இப்போதைய தலைமுறையை விட முற்போக்கு கருத்துக்கள் கொண்டதாக தான் வரும்.

/அது சரி, இந்துக்கள் மற்ற மதத்தினரில் பெண் எடுப்பது பற்றி என்ன கருத்து கொண்டுள்ளீர்கள்?/

இதில் இந்து, கிறிஸ்தவன் என்று எதுவும் இல்லை.ஆண், பெண் என்று தான் உண்டு.(அதுவும் இப்போது மறைந்து ஆண்- ஆண் , பெண்-பெண் என்று கூட காதலிக்கிறார்கள். கல்யாணம் செய்து கொள்கிறார்கள்)

புதியவன்

dondu(#11168674346665545885) said...

//இதில் இந்து, கிறிஸ்தவன் என்று எதுவும் இல்லை.ஆண், பெண் என்று தான் உண்டு.(அதுவும் இப்போது மறைந்து ஆண்- ஆண் , பெண்-பெண் என்று கூட காதலிக்கிறார்கள். கல்யாணம் செய்து கொள்கிறார்கள்)//
சரி, நீங்கள் பதில் கூறி விட்டீர்கள். ஐயன் காளி என்ன கூறுகிறார் என்பதைப் பார்ப்போம்.

//குழந்தைகளை பற்றி எல்லாம் சிந்திக்க இதில் ஒன்றுமில்லை.இது கி.பி.2007. கி.மு 2007லிலேயே கலப்புமணம் புரிந்து சந்தோஷமாக இருந்தவர்கள் ஏராளம். இனிவரும் தலைமுறை இப்போதைய தலைமுறையை விட முற்போக்கு கருத்துக்கள் கொண்டதாக தான் வரும்.//
சுவாரசியமா இருக்கே. அப்போ அந்த காலண்டர்லே கி.மு. 2007-ன்னு போட்டிருப்பாங்களே. ஐயா ஜாலி. :)))

//உணவு பழக்கம் மாறினால் என்ன ஆகிவிடும்?
எந்த இல்லாத பிரச்சனைகளும் வராது. மிகவும் மிகைப்படுத்தப்ப்ட்ட கூற்று இது என கருதுகிறேன்.//
ஆகி விட்டது என்று கூற பல உதாரணங்கள் பார்த்திருக்கிறேன். அது தெரிவதற்குள் டூ லேட்டாகி விடுமே.

//தவறு. திருமணம் என்பது ஆணும், பெண்ணும் சேர்வதுதான். அவர்களின் குடும்பங்களுக்கு இதில் தலையிட எந்த முகாந்திரமும், உரிமையும் இல்லை.
இதை உணர்ந்த தகப்பன்களின் எண்ணிக்கை எராளம்.அப்படி உணராதவர்களுக்கும் உணர வைப்பது இன்றைய இளைஞர்களுக்கு முடியாத ஒன்றல்ல.//
தந்தை வழிப்பாட்டியின் அன்பைப் பெறமுடியாத அந்த பிஞ்சுக் குழந்தயை பற்றி யோசித்தீர்களா? அந்தக் குழந்தையின் முகம் என் கண்ணுக்குள்ளேயே இருக்கு.

//அதுவும் இப்போது மறைந்து ஆண்- ஆண் , பெண்-பெண் என்று கூட காதலிக்கிறார்கள். கல்யாணம் செய்து கொள்கிறார்கள்//
ஒரே ஒரு ஆறுதல். பிறக்கப் போற குழந்தையை பற்றி கவலை இல்லை. :)))

//அந்த மாதிரி குடும்பத்தில் வாழ்க்கைப்படுவது அவசியமே இல்லை என்பதை விடவும் அம்மாதிரி குடும்பங்கள் அருகி வருகின்றன என்பதுதான் உண்மை.//
ஹிந்து கல்யாண விளம்பரங்களை பார்க்கவும்.

//அது இல்லாதவர்கள் நிச்சயிக்கப்பட்ட திருமணத்துக்கு தான் போக வேண்டும். நிச்சயிக்கப்பட்ட திருமணங்களில் அப்பா, அம்மா,ஜாதி ஆகியவை உள்ளே புகுந்து விடுகின்றன.//

ஆகா, நீங்கள் என் வழிக்கே வருகிறீர்கள். அதைத்தானே நான் சொன்னது. அதிலும் முக்கியமா கலப்புத் திருமணத்தை ஆதரிப்பவர் ஒருவர் தான் மட்டும் தன் சொந்த சாதியில் திருமணம் செய்து கொண்டதை இப்படித்தான் நியாயப்படுத்தினார். அவர் ரொம்ப நல்லவர். என் வயதை பார்க்கும்போது அவர் குழந்தை.

//பெரும்பாலும் காதல்மணம் செய்த ஆணின் சாதியிலேயே அவனது குழந்தைக்கும் திருமணம் நடந்துவிடுகிறது.//
?????????

//இந்த பதிவில் தெரிவது சமூகத்தின் அடக்குமுறைகளுக்கும், பழமைவாதத்துக்கும் பயந்த ஒரு சராசரி மனிதர்.//
பயமா, எனக்கா? எனக்கென்ன, நான் கூறிவிட்டு போய் விடுவேன். ஆனால் என் பேச்சை கேட்டு கலப்புத் திருமணம் செய்து அவதிப்படுபவர் பாவம் என்னை சும்மா விடுமா. இன்னொரு விஷயம். கலப்புத் திருமணத்தை ஆதரிப்பது ஒரு ஃபேஷன். (முதல் பின்னூட்டத்தை பார்க்கவும்). அதை நான் நிராகரிக்கிறேன். ஏனெனில் நான் சுதந்திரத்தை எதிர்க்கும் சமூகத்தை 'போடா ஜாட்டான்' என துச்சமாக எதிர்த்த, தூக்கி எறிந்த ஒருவன். இந்த இடத்தில் சமூகம் என்பது கலப்பு மணத்தை ஊராருக்கு உபதேசம் செய்யும் குழு. :)))

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//தூக்கி எறிந்த ஒருவன். இந்த இடத்தில் சமூகம் என்பது கலப்பு மணத்தை ஊராருக்கு உபதேசம் செய்யும் குழு. :)))
பஞ்ச் லைன் சூப்பர் .;))
கல்ப்பு திருமணமோ கலப்பில்லா திருமணமோ மனைவி அமைவெதல்லாம் இறைவன் கொடுத்த வரம். அழகான மனைவி பண்பான துணைவி அமைந்தாலே பேரின்பமே ..

Anonymous said...

சார் சிறிது நாளைக்கு முன்னர் தான்் 1லட்சம் ஹிட்ஸ் அடிச்சீங்க.
நேத்திக்கு 1,10,000 இருந்தது.
இன்னிக்கு பார்த்தா1 ,11,000 தாண்டி நிக்குது. என்ன சார் ஒரு நாளைக்கு 1,000 ஹிட்ஸிக்கு மேல உங்க பதிவிக்கு வருது. கலக்கல் சார்.

Anonymous said...

தமிழ் மேட்ரிமோனி இணைய தளங்களில் கூட அனைவரும் தனது ஜாதியில் தான் துணையை தேடுகின்றனர். இண்டர் கேஸ்ட் என்ற பிரிவில் வருபவர்கள் நிலைதான் பரிதாபம். தன் பெற்றோர் ஜாதியில் தான் மீண்டும் துணை தேடுகின்றனர்.

கலப்பு திருமணம் தவறு இல்லை. இன்னும் சமூகம் இதை சரியானபடி ஏற்றுகொள்ளவில்லை. கலப்பு திருமணம் செய்து கொண்டு வெளிமாநிலமோ அல்லது நாடோ சென்று விட்டால் வருங்காலம் நன்றாக இருக்கும்.

ஜீன் கலப்பு வினைகளால் கலப்பு திருமணம் செய்தவர்களுக்கு பிறந்த பிள்ளைகள் மற்ற பிள்ளகளோடு அறிவாளிகளாக இருக்கிறார்கள்.

dondu(#11168674346665545885) said...

//என்ன சார் ஒரு நாளைக்கு 1,000 ஹிட்ஸிக்கு மேல உங்க பதிவிக்கு வருது. கலக்கல் சார்.//
அதான் சார் ஒன்றுமே புரியவில்லை. கடந்த திங்கட்கிழமையிலிருந்து இந்த நிலைமை. அன்னிக்கு என்னவோ நடந்திருக்கு என்னவென்பதுதான் புரியவில்லை. :))))))))))

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

செல்வந்தர்கள் கலப்பு திருமணம் செய்தால் அவர்களுக்கு இது சகஜமாக போகிறது. எதிர்வினைகள் இல்லை.

karthik chidambaram + srinidhi
Ellayaraja family
rajinikanth family
Dr. Kalaignar M Karunanidhi Family

Anonymous said...

An intercaste marriage is a myriad of sweet and sour adjustments. Unlike same caste weddings, the differences begin to show up even before the wedding ceremony takes place.

An intercaste marriage raises more than just quizzical eyebrows. Weddings being all about tradition, customs and rituals, the differences are many. By and large these are marriages of choice or what we generally call love marriages where the girl and the boy make the initial decision to come together in a martial alliance. There may be resistance from the parents, making an intercaste alliance into a more complicated "arrangement" than even the arranged ones. But then, customs or traditions are seldom the reasons which can break up relationships. The differences can be easy to handle if you mark out some basic rules for yourself. Especially the bride who may find it unnerving to be amongst people who speak a different language, dress differently, have distinctly different eating habits and follow a different set of customs than what she has been used to in her growing years. Naturally it requires a certain mental steeling of sorts.
-
by sudhakaran

Anonymous said...

News :

IT HAPPENED on a Monday night more than a month ago. Two young people Vishal (20), a Brahmin and Sonu, a Jat, were dragged to the roof of a house in Alipur village of Muzzafarnagar district in Uttar Pradesh, and hanged. Their crime? They were in love. The murderers? Their own parents and relatives. The witnesses? Almost all the inhabitants of Alipur, as the entire village was opposed to this intercaste love affair.

Response from chennai peoples :


Marriage cutting across caste and nationality has not percolated as yet to the middle class, feels Anushka.
Parents seldom agree to young people getting married to those whom they love without raising a storm. When they do give in it is because they do not want to lose their children.

"My mother married for love. But she seems to have conveniently forgotten that now. If I really love a man, I'll just go ahead and marry him, caste and religion are no deterrent,'' says a young woman.

Sunita, Jemy and Roopa in their late teens who are studying in one of the city's leading colleges articulate their views clearly and honestly. Says Sunita who comes from a very religious Christian background. ``My parents are devout Christians. But when I decide to marry, I'm sure they will be very flexible. As for the Alipur incident, the whole thing is cruel and unjust. I respect the values the village holds but not to the extent of taking somebody's life."

Jemy who comes from a village in Kerala, feels attitudes basically have to do with the level of education. ``In my village, there have been quite a few intercaste marriages. Initially there is opposition but generally the families come around. If I went in for one, my parents would certainly agree to it finally. I believe society is changing but very slowly."

Adds Roopa, ``I'm a product of a mixed marriage. I don't think religion, caste or regional differences matter. If at all my parents have an objection, it would be on grounds of compatibility of temperament.

The idealism of the young sometimes manifests itself in romanticism removed from reality. ``Caste is immaterial, nothing depends on it. All that matters is two hearts meet,''

"I'm interested in marrying a girl from another caste but she is reluctant to marry me,'' moans his classmate Ram. ``My relative has married a girl from the Scheduled Caste. The parents however are planning to separate them and have engaged a lawyer to help them do so."

"Caste divisions are deeply embedded in our educational system. It is much worse when it comes to marriage. Our society has a long way to go,'' says their friend, Rajasekhar.

Couples like Lata and Mohan, who got married a few years ago, had to struggle hard to tie the knot. ``The joy of being in love was marred by fear. Fear of being seen around by others - by family members and friends. Luckily we escaped prying eyes and broke the news to our family ourselves,'' says Lata.

The opposition was vehement. ``Not even one person, either friend or family member was in favour of the marriage. The arguments put forward were contained in one line. ``What will people say?"

"When it's time for my children to tie the knot, `society' will be nowhere in the picture", states Lata. ``I will give him/her the green signal irrespective of other considerations - caste, family or class."

Sushmita and Shankar also had a tough time persuading their families to accept their choice. ``Even after marriage we both had problems arising out of not being accepted fully by parents- in- law." When couples want to vault barriers of religion, the hurdles faced are of greater magnitude.

Financial independence matters a great deal when couples determined to marry face opposition, say Shakeela and Sanjay, who managed to overcome family resistance and tie the knot. Love can and does help smoothen out things to a large extent.

But religious differences can make the going tough. "Food and cuisine are hardly important. For a Muslim, the thought of worshipping a deity such as a fearsome goddess may be frightening", says Shakeela. ``More important than all this is the feeling that you never belong — the rituals, the language, the behavioural norms — everything makes you feel like a stranger in your own home."

Social ostracism matters only when you think it matters, says Sanjay. The marriage has been a successful one but Shakeela feels that love marriages still carry a stigma in our society and inter-religious/caste marriages with the blessings of parents are not possible.

Says Mridula who hails from a conservative Kannada Brahmin family, ``I think I was the most surprised in the family when I found myself in love with a Keralite Syrian Christian.
My parents were shell-shocked when I told them I wanted to marry. They put forward many arguments but to their credit, none centred on what society or extended family would say. They spoke of ``culture shock.'' They asked Mridula to take some time and distance herself from the man she loved, by moving to another city to study. ``When I came back our resolve was as strong as ever. Then my parents did a wonderful switch to the positive, support mode. They met the young man's parents who were very worried and reassured them. That was more than ten years ago. Mridula feels people are much more "cool" nowadays though she honestly wonders how her husband and she would react if their daughter were to do the same thing — marry a Muslim for instance.

The arguments for marrying persons from a similar background and caste are put forward clearly by Sushila, the mother of two girls. "I will accept a marriage for my children which cuts across caste, language and nationality but only with misgivings. If they insist, I will give in only for their sake, I won't be jubilant."

She says, ``Unlike in the West, we in India do not entirely let go of our children. Parental care extends beyond the marriage of offspring to taking care of grandchildren, involvement in their marriage, birth of their children ... it goes on. There is so much interaction between the two families they become interdependent after a point of time. It is much better to have an alliance with a family, which is of the same sect, speaks the same language and cooks the same food. Life seems secure for everyone this way,'' she says.

The children expect the parents to step in when they need help — physically, morally and financially, says a parent. Is it too much to expect them to spare the parents anxiety notwithstanding the fact that not all arranged marriages are wonderful and not all so called ``love marriages'' are disasters? But then `love' in our society means meeting for a few hours on a daily/weekly basis and endless telephone calls. It is kept (at least in 80 per cent of the cases) a secret and there is no transparency. Both show the best side to each other and reality dawns only after marriage, says a mother.

"We should raise our children in such as way that they develop the emotional maturity to choose the right partner and you have to be strong enough to stand by their choice. Parenting has a big role to play in providing the correct value system to the child to enable him to take the right decisions when he grows up,'' according to Usha Ramakrishnan, a mother of three sons who have chosen brides from different backgrounds — Rajasthani, Malayali and American. ``There is so much diversity to celebrate when you have members from other religions and nationality in your family. You have so many customs to relish and festivals to celebrate. When your son or daughter decides upon a partner, it is important to accept completely", she adds. ``This is real love, otherwise the emotion you feel is attachment and mere possessiveness. To truly love is to let go."

Usha feels Chennai is changing - slowly perhaps but there is change. One couldn't agree more. At least in a small percentage of the population the barriers are coming down. This was brought home to us recently. Among the last eight weddings we had attended, the one we were going to that evening was the only one that could be called a strictly traditional arranged marriage. Horoscopes scanned, groom, bride selected from the same caste by parents, families matched according to wealth, outlook and status. All the other weddings were love matches.

As we met the parents of these couples at the traditional wedding, they were beaming at the excellent choice their sons and daughters had made. And what was most evident was the sigh of relief that their children had made it easy for them and they couldn't have chosen better for their offspring themselves. (Perhaps they have been just lucky.)

In a small segment of society, people are snapping out of their rigid mindset albeit with a lot of pushing and pulling by their determined young who are increasingly taking their own decisions regarding whom they want to spend their lifetime with — for better or for worse.

Anonymous said...

Continue to keep a successful marriage life is not belong to cast or religion or language. It's depend on both of our mind and behavior. There should not be complex and ego problems In between husband and wife. If both respect each others quality and taste there will be only happy nothing else will happen.

Anonymous said...

marriage requires deep understanding and co-operation,But if inter caste marriage is done without parental consent, u may loose advantage of support and help, in certain matters, which otherwise can shatter marriages.
( addition to my last message)

Anonymous said...

Because of the religion caste and so many things we are separated
this lead india to a stop developing we should not bother about caste & religion.

we should support inter caste marriages.

Anonymous said...

an effort to eliminate caste discrimination, the Indian government has to come with up with an innovative approach -
offering couples payment for marrying into a lower caste. this will work to reduce deep rooted social tensions in Indian society brought about by caste differences. without this kind of approaches the bad outcomes which are mentioned by you will prevail for a longer period.

dondu(#11168674346665545885) said...

//But if inter caste marriage is done without parental consent, u may loose advantage of support and help, in certain matters, which otherwise can shatter marriages.//

அதற்கு நான் பதிவிலேயே உதாரணம் கொடுத்துள்ளேனே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

அரசு கலப்பு மணம் மூலம் பிறந்த குழந்தைகளுக்கு இடஒதுக்கீடு கொடக்ுகாதவரை அவர்கள் பாடு திண்டாட்டம் தான்.
- பாதிக்கபட்டவன்.

dondu(#11168674346665545885) said...

பணக்காரர்களுக்கு பிரச்சினை இல்லை. அவர்களது பணமே அவர்களைக் காக்கும். ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்குத்தான் பிரச்சினைகள்.

ஆகவேதான் இங்கு பின்னூட்டம் இடுபவர்கள் அதையெல்லாம் மனதில் வைக்க வேண்டுகிறேன். நமக்கென்ன நாம் இங்கே ஆதரித்து பேசி முற்போக்கு வாதி என்ற பெயரை வாங்கிக் கொண்டு சென்று விடுவோம். இதில் பொறுப்பற்று நாம் செய்யும் அறிவுரைகள் மற்றவர்கள் வாழ்க்கையை பாதிக்கும் என்ற எண்ணமும் வேண்டும்.

இதுவரை யாரும் தாங்களே கலப்பு மணம் செய்து கொண்டதாகக் கூறவில்லை. அவ்வாறு யாரேனும் பின்னூட்டமிட்டால் நல்ல தகவல்கள் கிடைக்கும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

உங்கள் பதிவை காலை படித்தது முதல் ஏதோ ஒரு ஆதங்கம். என் வாழ்க்கையை தான் நாடி ஜோசியம் பார்த்து சொல்லி இருக்காரோ என்று நினைத்தேன்.நான் கலப்பு திருமணம் செய்து கொண்டவன்( 1984 - விழுப்புரம்). என் மனைவியும் ஒரே இனம் தான் தமிழ் இனம்தான். மனைவியும் நான் வேலை பார்க்கும் அதே வங்கிதான்.செளகரியமான வாழ்க்கைதான்
.இரண்டு பெண் குழந்தைகள்கள்.

இன்று வரை அரசாங்க காகிதங்களில் என் மனைவியின் ஜாதி தான் என் பிள்ளைகளின் எதிர்காலத்தை தீர்மானிக்கிறது. மாற்றலாகி போகும் போது வீடு எடுப்பது முதல் அக்கம் பக்கம் பேச்சு ஏச்சு வரை பல உண்டு அது தனி அத்யாயம்). இனி உங்கள் சாதி தமிழ் ஜாதி என்று சொல்லி எனக்கு திருமணம் செய்வித்தவர் இன்று எங்கள் பகுதி ஜாதி கட்சியில் பசையுள்ள தலைவர்.அவர் இன்று வரை வேறு ஜாதியில் பெண் எடுக்கவுமில்லை கொடுக்கவும் இல்லை.

என் பிள்ளைகளுக்கு திருமணம் என்று வரும்போது என்ன நடக்குமோ.தெரியவில்லை.
(பெயர் வேண்டாம்)

dondu(#11168674346665545885) said...

//இனி உங்கள் சாதி தமிழ் ஜாதி என்று சொல்லி எனக்கு திருமணம் செய்வித்தவர் இன்று எங்கள் பகுதி ஜாதி கட்சியில் பசையுள்ள தலைவர்.அவர் இன்று வரை வேறு ஜாதியில் பெண் எடுக்கவுமில்லை கொடுக்கவும் இல்லை.//
இதைத்தான் இங்கு தமிழ்மண கலப்புமண ஆதரவு வீரர்களும் செய்து வருகின்றனர். ஊருக்கு மட்டும் உபதேசம். :((((

//என் பிள்ளைகளுக்கு திருமணம் என்று வரும்போது என்ன நடக்குமோ.தெரியவில்லை.//
நான் கூறியது தவறாக இருந்திருக்கக்கூடாத என்ற அளவுக்கு என் மனம் கனத்து போனது.

இப்போது கூறுங்கள் நான் கூறியதில் ஏதேனும் மிகைப்படுத்தல் இருந்ததா என்று.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

நண்பர்களே. இப்போது வாடிக்கையாளர் அலுவலகத்துக்கு போக வேண்டிய நிலை. 4 மணிக்கு அங்கிருக்க வேண்டும். எப்போது வேண்டுமானாலும் என்னுடைய கார் வந்து விடலாம். ஆகவே நான் கணினியை இப்போதைக்கு மூடிவிட்டு செல்கிறேன். திரும்பியதும் பின்னூட்டங்களை மட்டுறுத்துவேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

hai said...

தமிழச்சி என்ற பேர் பாத்ததுமே நான் எதிர்வாதம் செய்ய வருவேன் என்று புரிந்திருக்கும்.
இதுதான் இதுதான் நீங்கள் செய்யும் மிகப் பெரிய தவறு/முட்டாள்தனம் எனலாம்.
சாவைப்பத்தி எழுதனும்னா செத்துத்தான் எழுதனுமா என்றால் வேண்டாம்.ஆனால் வாழ்வு நிலைகளை எழுதும் போது அனுபவப்பட்டுத்தான் எழுதணும்.கலப்பு மணமும் அப்படியே.
நீங்களும் உங்காத்து மாமியும் கலப்பு மணமா?உங்க அத்தை கதை இங்கு வேண்டாம்.
ஒரு பொது விஷயம் சொல்லும் போது அதன் சாதக பாதங்களை இரண்டும் சொல்ல வேண்டும்.
சும்மாவேனும் நான் பல உதாரணங்கள் சொல்லமுடியும் என்று உதார் விடக்கூடாது.
உணவுப் பழக்கம் மாறுமா?சுத்த எல்.கே.ஜி யா இருக்கிங்களே?
நேரிடையாகச் சொல்லும்.சைவம்/அசைவம் என்று.பார்ப்பான் தலித் பொண்ணைக் கட்டினா அல்லது வைஸ்வர்சாவா நடந்தா சப்பாடு மாறுமா?அப்ப ஏன் நீர் 'கோழிபிரியாணிய' பியரோடு கலந்து கட்டுறீர்.உணவு பழக்கம் குடும்ப சூழல் மட்டுமல்லாது,ஊரின் வழமைக்குத் தக்கவாறும் மாறும்.யு.எஸ்ல இருக்கற்கோண்டு மாமா மோருஞ்சாதமும் மாவடு மட்டும்மா சாப்பிடுவார்.கறி,மீனு,பீஸா,பர்கர்னு சாப்பிட மாட்டாரா?
அடுத்து குழந்தைகள் பற்றி கவலை .ஹிந்து விளம்பரத்தில்75%வடமா,பரத்வாஜா,வடகலை,தென்கலை மேட்டர்தான் அய்யா.முத்லி,ரெட்டி,செட்டி,எஸ்ஸி எல்லாம் மிகக்குறைவு.அப்புறம் ஏன் உங்காத்து பொண்டு,புள்ளைங்களுக்கு 35 வயசுவரை மேட்ரிமோனியல் பாக்கறீர் நீங்கதான் கலப்படமில்லாத அக்மார்க் ஆச்சே.சாமி இப்பல்லாம் கல்யாணங்கிறது மனப்பொருத்தம் மட்டுமே.ஜாதிப் பொருத்தம் இல்லை.காதல் அடிப்படையானாலும் துவேஷம் பாராட்டாமல் பண்ணிவச்சி ஏத்துப்போம்.ஏதோ ஒரு சில உதாரணங்கள் வச்சி 'கலப்புத்திருமணம்' தெய்வக்குத்தம் மாதிரி பேசுகிறீர்.
ஜாதி வேண்டாம் என்கிறீர்.ஜாதிபற்றிப்பேச இது ஒரு புது 'யுக்தியா'.ஜாதிபாத்து சொந்த ஜாதியில நடந்த திருமணம் எல்லாம் வாழ்கிறதா? எதுவாக இருப்பினும் அவரவர் சுய விருப்பம்,குடும்ப சூழல்கள் பொறுத்துத்தான் வாழ்க்கை இனிமையாகவோ சோதனையாகவோ அமையுமேயன்றி கலப்புத் திருமணத்தால் மட்டுமே கேடு வந்துவிடாது.
இவ்வளவும் சொல்ல எங்கென்ன தகுதியா?அதிகமாகவே இருக்கிறது.ஏனெனில் நானும் அப்படியொரு கலப்பு மணம் புரிந்து அருமையான வாழ்வை நடத்தி வருகிறேன்.எங்கள் குடும்பத்திலும் உறவினர் பிள்ளைகள் அப்படியுள்ளனர்.
மனிதனை மனிதனாக குணவானாகப் பாரும்.ஜாதி அடிப்படையில் பார்க்கும் குறுகிய கண்ணோட்டத்தை மாற்றிக் கொள்ளும்.நட்பு வட்டம் விரியும் மகிழ்ச்சி பெருகும்.

Anonymous said...

டோண்டு செய்த தவறு என்ன? மனச்சாட்சியிடம் பேசிப்பாருங்கள்.
கலப்புத் திருமணத்தில் தமிழ் சமூகத்தில் சர்ச்சை உருவாகவில்லையா?
அவருடைய அனுபவத்தில் ஆயிரம் பார்த்திருப்பார். அவர் அதை எழுதுவதில் என்ன தவறு? அவரை ஐயங்கார் எனப் பார்க்காமல், ஒரு அனுபவமிக்க மனிதனாக பார்க்க ஏன் முடியவில்லை?
ஏனைய சாதிகளுக்குள் உருவாகும் கலப்பு திருமணங்களில் குழப்பம் உருவாகியதை நீங்கள் அறியவில்லையா? இதை நீங்கள் அறியாவிடின்,
ஒன்று உங்களுக்கு வயது போதாது இல்லாவிடின் அனுபவம் இல்லை.
அவ‌ர் முக‌மூடியுட‌ன் வ‌ரவில்லை.

ச‌ரி, பிராமணர்களைவிடுங்க‌ள், ஏனைய‌ சாதிக‌ளுக்கிடையே சாதிய‌ம் நீங்க‌ள் பார்ப்ப‌தில்லையா? உங்க‌ளில் எத்த‌னைபேர் க‌லப்புத் திரும‌ணம் செய்வீர்க‌ள்? பலருக்கு பாரதித‌ச‌ன் கூறிய‌து போன்று காத‌ல் திரும‌ண‌ம் இல‌க்கிய‌த்தில் இனிக்கும், வாழ்க்கையில் கச‌க்கின்றது.

டோண்டு மீது முதல் க‌ல்லெறியும் முன் கல்லெறியும் த‌குதி உங்க‌ளுக்கு உண்டா? என எடை போடுங்க‌ள்.

மனித‌ன்.

Anonymous said...

தமிழச்சி நீர் என்ன கலப்பு திருமணம் செய்தீரோ?
இல்லை உம்ம வீட்ல யாராவது செய்தாங்களா?

சொந்த ஆதாரம் காட்ட சொல்லும் நீர் தான் முதலில் ஆதாரததோடு வரனும்

Anonymous said...

//.ஏனெனில் நானும் அப்படியொரு கலப்பு மணம் புரிந்து அருமையான வாழ்வை நடத்தி வருகிறேன்.எங்கள் குடும்பத்திலும் உறவினர் பிள்ளைகள் அப்படியுள்ளனர்.
மனிதனை மனிதனாக குணவானாகப் பாரும்.ஜாதி அடிப்படையில் பார்க்கும் குறுகிய கண்ணோட்டத்தை மாற்றிக் கொள்ளும்.நட்பு வட்டம் விரியும் மகிழ்ச்சி பெருகும்.//

proof வேனும் சும்மா அடிச்சிவிட கூடாது

Madhu Ramanujam said...

//மிகவும் பழமைவாத தர்கம்.........//

எனக்கு அப்படித் தோன்றவில்லை. இந்த முன்னேற்பாடற்ற கலப்புத் திருமணங்களால் ஏற்பட்ட பிரச்சினைகளை நேரடியாய் இன்றளவும் அனுபவித்து வருபவர்களில் நானும் ஒருவன். அடுத்தவனுக்கு உபதேசம் பண்றது ரொம்ப சுலபம். ஆனால் உங்கள் வாழ்கையில் இத்தகைய கலப்பு மணம் இருந்தால் என்ன செய்திருப்பீர்கள் என சற்றே நாணயத்துடன் யோசித்தல் நலம்.
இந்த பழமைவாத தர்கம் ஏன் இன்னும் நிலைக்கிறது என்பதற்கு ஒரு உதாரணம். என் சொந்தக்காரர் ஒருவர் 50களில் கலப்பு மணம் புரிந்தவர். இதனால் பிற்காலத்தில் குழந்தைகளின் திருமணம் மற்றும் இதர சடங்குகளில் பிரச்சினை வராத என்று கேட்டபோது இருபது வருடங்களில் உலகம் தலை கீழாய் மாறிவிடும் எனக் கூறினார். ஆனால் அவருடைய இரண்டு மகள்களுக்கு இரண்டு மகன்களுக்கும் திருமணம் நடைபெறுவதென்பது இமாலய கஷ்டமாய் இருந்தது. இன்றும் அவரது இளைய மகனுக்கு திருமணம் ஆகவில்லை. திருமண வயதைக் கடந்தும் விட்டார் அவர் (உடனே அதற்கெல்லாம் வயதுண்டா என வெட்டி நியாயம் பேசவேண்டாம் - என் கருத்து நிச்சயம் உண்டு என்பது).
சரி இது போகட்டும். 10 ஆண்டுகளுக்கு முன்னால் என் இல்லத்தில் நடந்த ஒரு கலப்பு மணத்தினைப் பார்ப்போம். இரு வீட்டிலும் பலத்த எதிர்ப்பு. இறுதியில் நாங்கள் சம்மதித்தோம் ஆனால் இன்னொரு பக்கத்தில் இன்று வரை தொடர்பில்லை. மூன்றாவதாய் சமீபத்தில் வெகு சில மாதங்களுக்கு முன்னால் இதே போல் இன்னொரு திருமணம். அத்திருமணம் உண்டாக்கிய மனக் கசப்ப்பானது இன்று வரை எங்கள் மனதில் நீங்காது உள்ளது. அது ஆறுவதற்கு இன்னும் சற்று காலம் பிடிக்கும். இத்தகைய ஒரு நிகழ்ச்சியால் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் வார்தையால் விவரிக்க இயலாதது.
இப்போதும் சொல்கிறேன். மணமுடிக்கும் இருவர் மட்டும் சார்ந்த விஷயமல்ல் திருமணம். You don't maary just a person. You marry into a family. அந்தவகையில் யோசித்து செயல் படுங்கள். வாய் கிழிய அறிவுரை சொல்பவர் பலரிடம் பல லட்ச்சம் பணமுண்டு. அந்தப் பணம் பலர் வாழக்கை தனை பலவாறாய் மாற்றியமைக்கும். ஆயின் அறிவுரை தனை கேட்ப்பவரிடம் அவ்வளவு பணமில்லை அது மேலும் பல பிரச்சினகளுகுக் வித்திடுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

மேற் சொன்ன அனைத்தும் என் வாழ்நாளில் நான் பார்த்தவை மட்டுமல்ல, இன்றும் அனுபவித்து வருபவை. இப்போதும் சொல்வீர்களா இது பழமைவாத தர்க்கம் என ?

Madhu Ramanujam said...

//டோண்டு மீது முதல் க‌ல்லெறியும் முன் கல்லெறியும் த‌குதி உங்க‌ளுக்கு உண்டா? என எடை போடுங்க‌ள்.//

சபாஷ் மனிதன்....

dondu(#11168674346665545885) said...

//தமிழச்சி என்ற பேர் பாத்ததுமே நான் எதிர்வாதம் செய்ய வருவேன் என்று புரிந்திருக்கும்.//
கருத்துடன் நீங்கள் ஒத்துக்கொள்ளாது போனால்தான் எதிர்வாதம் செய்யப் போகிறீர்கள். இப்போது ஒத்துக் கொல்ளவில்லை ஆகவே செய்கிறீர்கள். ஆனால் ஒன்று, துணிந்து தைரியமாக் வந்ததற்கு எனது முதற்கண் நன்றி.

//ஒரு பொது விஷயம் சொல்லும் போது அதன் சாதக பாதங்களை இரண்டும் சொல்ல வேண்டும்.//
ரொம்ப நல்லதாப் போச்சு. உங்களுக்கு தெரிஞ்ச சாதகங்களை சொல்லுங்க. நாங்களும் பாக்கறோம். விவாதிக்கலாம். அதுக்குத்தானே பின்னூட்ட பெட்டியே இருக்கு? என்னைப் பொருத்தவரைக்கும் பாதகங்களே ஆயிரம் உண்டு. உங்கள் கலப்பு மணவாழ்க்கை வெற்றிகரமாக ந்டப்பதற்கு பாராட்டுக்கள். ஆகவே நீங்கள் தாராளமாக மேலும் உங்கள் கொள்கைகளை விளக்கலாம். கேள்விகளுக்கு பதிலளிக்கலாம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//இந்த முன்னேற்பாடற்ற கலப்புத் திருமணங்களால் ஏற்பட்ட பிரச்சினைகளை நேரடியாய் இன்றளவும் அனுபவித்து வருபவர்களில் நானும் ஒருவன்.

10 ஆண்டுகளுக்கு முன்னால் என் இல்லத்தில் நடந்த ஒரு கலப்பு மணத்தினைப் பார்ப்போம். இரு வீட்டிலும் பலத்த எதிர்ப்பு. இறுதியில் நாங்கள் சம்மதித்தோம் ஆனால் இன்னொரு பக்கத்தில் இன்று வரை தொடர்பில்லை. மூன்றாவதாய் சமீபத்தில் வெகு சில மாதங்களுக்கு முன்னால் இதே போல் இன்னொரு திருமணம். அத்திருமணம் உண்டாக்கிய மனக் கசப்ப்பானது இன்று வரை எங்கள் மனதில் நீங்காது உள்ளது. அது ஆறுவதற்கு இன்னும் சற்று காலம் பிடிக்கும். இத்தகைய ஒரு நிகழ்ச்சியால் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் வார்தையால் விவரிக்க இயலாதது.//

நீங்களும் உங்கள் குடும்பமும் விரைவில் அதை மறந்து பழைய நிலைக்கு திரும்புவீர்களாக.

நிற்க. இது யாருடைய problem? யாரோ இருவர் கலப்பு மணம் செய்து கொண்டால் உங்கள் மனம் புண்பட்டால் அதற்கு அவர்கள் என்ன செய்ய முடியும்? யாரோ என்பது உங்களது பிள்ளைகள் பெண்கள் கூடத்தான். அவர்கள் யாரை திருமணம் செய்ய வேண்டும் என்று அவர்கள் தீர்மானிப்பது அவர்கள் உரிமை. உங்கள் மனம் புண்படுகிறது என்று கூறி அதில் தலையிடுவது எந்த விதத்தில் நியாயம்?

//அடுத்தவனுக்கு உபதேசம் பண்றது ரொம்ப சுலபம். ஆனால் உங்கள் வாழ்கையில் இத்தகைய கலப்பு மணம் இருந்தால் என்ன செய்திருப்பீர்கள் என சற்றே நாணயத்துடன் யோசித்தல் நலம்.//

இதற்கு எனது விடை தேவை இல்லாத ஒன்று. நான் என்ன கூறினாலும் நிரூபிக்க வேண்டும் என்றோ, டகால்டி வேலை என்றோ பதில் வரும்.

//என் சொந்தக்காரர் ஒருவர் 50களில் கலப்பு மணம் புரிந்தவர். இதனால் பிற்காலத்தில் குழந்தைகளின் திருமணம் மற்றும் இதர சடங்குகளில் பிரச்சினை வராத என்று கேட்டபோது இருபது வருடங்களில் உலகம் தலை கீழாய் மாறிவிடும் எனக் கூறினார். ஆனால் அவருடைய இரண்டு மகள்களுக்கு இரண்டு மகன்களுக்கும் திருமணம் நடைபெறுவதென்பது இமாலய கஷ்டமாய் இருந்தது. இன்றும் அவரது இளைய மகனுக்கு திருமணம் ஆகவில்லை. திருமண வயதைக் கடந்தும் விட்டார் அவர் (உடனே அதற்கெல்லாம் வயதுண்டா என வெட்டி நியாயம் பேசவேண்டாம் - என் கருத்து நிச்சயம் உண்டு என்பது).//

ஒருவருக்கு திருமணம் ஆகாமல் இருக்க பல காரனங்கள் இருக்கிறது. எனது நன்பருக்கு கூடத்தான், அவர் தூத்துக்குடியில் மாதம் 25000 சம்பளத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணி செய்துகொண்டிருந்தார். அவர் நன்கு படித்தவர். ஆனால் அவருக்கு திருமணம் நடந்த போது அவரது வயது 32. காரனம் அவரது ஊர். எந்த பெண்ணும் அங்கு வந்து குடித்தனம் செய்ய தயாராக இல்லை. அது கூட பரவா இல்லை. தூத்துக்குடியில் பிறந்து வளர்ந்த பெண்களே அவரை திருமணம் செய்ய தயாராக இல்லை. இதை காரனம் காட்டி தூத்துக்குடியில் இருந்தால் கல்யானம் ஆகாது என்று நான் கூறினால்?

//You don't maary just a person. You marry into a family.//
Looks totally absurd for me. Am sure you may have enough strong reasons to hold it tight. No arguement.

//வாய் கிழிய அறிவுரை சொல்பவர் பலரிடம் பல லட்ச்சம் பணமுண்டு. அந்தப் பணம் பலர் வாழக்கை தனை பலவாறாய் மாற்றியமைக்கும். ஆயின் அறிவுரை தனை கேட்ப்பவரிடம் அவ்வளவு பணமில்லை அது மேலும் பல பிரச்சினகளுகுக் வித்திடுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.//

என்னிடம் பல லட்சம் பணமும் இல்லை. நான் யாருக்கும் திருமண விஷயத்தில் அறிவுரை கூறியதும் இல்லை. அதெல்லம் அவரவர் எடுக்க வேண்டிய முடிவு.

//இப்போதும் சொல்வீர்களா இது பழமைவாத தர்க்கம் என ?//
கண்டிப்பாக. மாற்றுக்கருத்திற்கு இடம் இல்லை. சாதி ஒழிய கலப்பு திருமணங்கள் அவசியம்.

dondu(#11168674346665545885) said...

//என்னிடம் பல லட்சம் பணமும் இல்லை. நான் யாருக்கும் திருமண விஷயத்தில் அறிவுரை கூறியதும் இல்லை. அதெல்லாம் அவரவர் எடுக்க வேண்டிய முடிவு.//
அதே. கலப்பு திருமணத்தின் பாதகங்களை சிலர் கூற, சாதகங்களை சிலர் கூற படிப்பவர்கள் அவரவர் முடிவு எடுக்கட்டும். என் கருத்து கலப்பு திருமணத்துக்கு முன் யோசித்து செயல்படும்பட வேண்டும் என்பதே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வஜ்ரா said...

//
an effort to eliminate caste discrimination, the Indian government has to come with up with an innovative approach -
offering couples payment for marrying into a lower caste. this will work to reduce deep rooted social tensions in Indian society brought about by caste differences. without this kind of approaches the bad outcomes which are mentioned by you will prevail for a longer period.
//

this kind of approach will bring in problems like "marriage of convenience".

Get money from gov, live your life separately.

It is the responsibility of society (people like you and me) to get rid of caste evil through myriad ways which are available (one of which is intercaste marriage) and government has no bussiness dealing with people's personal life and decision making.!

Anonymous said...

Dondu sir,

சில வேளைகளில் political correctness கூட சில நல்ல விஷயத்தைச் சொல்லும். அதை ஏற்பதில் தான் சாமர்த்தியம் உள்ளது.

ஐயன் காளி சொல்வது தான் சரி. உங்கள் கண்ணோட்டம் உங்கள் personal கண்ணோட்டம் அது ஒன்றும் இந்து மதம் சார்ந்த கண்ணோட்டம் அல்ல என்று சொல்லிவிட்டு போங்கள். குறந்தபட்சம் நீலகண்டராவது உங்களை விமர்சிக்க மாட்டார்.

as far as ஐயன் காளி is concerned i have nothing to say except that he is right and damn right and you are wrong and damn wrong. Again the only refuge for you here is to go say its only "my very personal view" or say "i take back my points".

dondu(#11168674346665545885) said...

//as far as ஐயன் காளி is concerned i have nothing to say except that he is right and damn right and you are wrong and damn wrong. Again the only refuge for you here is to go say its only "my very personal view" or say "i take back my points".//
அது சரி எது தவறு? ஐயன் காளி அவர்கள் எனது பின்னூட்டத்தை இன்னும் போடாமல் இருப்பது சரி, அவர் பதிவுக்கு பின்னூட்டமாக நான் இந்தப் பதிவை போட்டது, அதை இன்னொரு பின்னூட்டத்தில் அவர் பதிவில் அறிவித்தது தவறு என்றா கூறுகிறீர்கள்?

//ஐயன் காளி சொல்வது தான் சரி. உங்கள் கண்ணோட்டம் உங்கள் personal கண்ணோட்டம் அது ஒன்றும் இந்து மதம் சார்ந்த கண்ணோட்டம் அல்ல என்று சொல்லிவிட்டு போங்கள். குறந்தபட்சம் நீலகண்டராவது உங்களை விமர்சிக்க மாட்டார்.//
நீலகண்டர் என்னை விமரிசனம் செய்வதோ செய்யாததோ அவர் விருப்பம். செய்தால் செய்யட்டுமே. அவர் என்ன சிங்கமா புலியா? பதிலளித்து விட்டு போகிறேன்.

Shalom aleichem.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

Mr.Dondu,
I am regular reader of your post and infact admired your writings. Infact, honestly I would like to say that the counter arguments you have kept for "Iyen kali" is weak. If at you have chosen to answer you could have made better answers.
This just my view regarding this post. Keep up writing.
Murali.

Anonymous said...

I agree for marriage with the same community. We need 'Unity' but no need 'Uniformity'(Uniformity-in the sense of same social practise).
Why I am teeling this?.
The usual comment from the inter-community marriage supporters is that it will help to abolish the community and this will bring uniformity. This is like a communism principle, which is artifical to the human kind.
Take any region in the world, the division based on economic status or region or colour or language etc. is there. (For example, So-called, in High status of US also, the perecentage of marriage between Black and White is not a big number). Hence, it is impossible to attain the 'Uniformity' in human society.
But, using community identity, discriminate with each other is totally wrong. This kind of hypocrtic need to go.
Community served as a scoial capital in our economic. If community is captialised in economy, the particular group will improve a lot. Take example, earlier Nadar and chettiar community in business.

Anonymous said...

//this kind of approach will bring in problems like "marriage of convenience".

Get money from gov, live your life separately.

It is the responsibility of society (people like you and me) to get rid of caste evil through myriad ways which are available (one of which is intercaste marriage) and government has no bussiness dealing with people's personal life and decision making.!//

government is helping old aged peoples without any support with by providing them with some kind of financial support.

the amount may not be sufficient but the moral support that is sponsored by the government.
government is not a such fool to sponsor the entire life of married couples .
if they offer even single ruppee the couples may get good and healthy support in the modern society .

dondu(#11168674346665545885) said...

நண்பர் மதுசூதனன் பெயரில் வந்த போலியின் கமெண்ட் அழிக்கப்பட்டது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Madhu Ramanujam said...

//நண்பர் மதுசூதனன் பெயரில் வந்த போலியின் கமெண்ட் அழிக்கப்பட்டது//

மிக்க நன்றி ராகவன்.

என் பெயரில் போலியாய் ஒரு வலைப்பூவைத் தொடங்கி மஞ்சள் பத்திரிக்கைகளை மிஞ்சும் அளவுக்கு எழுதித்தள்ளும் நண்பருக்கு என் வாழ்த்துக்கள். :)

dondu(#11168674346665545885) said...

ஏதோ ஒரு பழைய படம் பார்த்த உணர்வு மதுசூதனன் அவர்களே. ஆனால் ஒரு ஆறுதல் இதன் ஷாக் வேல்யூ குறைந்து விட்டது. நான் சொன்ன தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டால் போதும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

டோண்டு சார், உங்கள் துணிச்சலுக்கு ஒரு Hats Off!

யுத்தத்தைத் துவங்கி விட்டீர்கள். தைரியமாகப் போராடுங்கள்!
உங்களுக்கு எதிரி நாடுகள் இருப்பதுபோல ஆதரவு நாடுகளும் உண்டு!

உங்கள் கருத்துக்களை - உங்கள் அனுபவங்களை - அது எந்த விஷயமென்றாலும்
தயங்காமல் சொல்லுங்கள் - அதற்கு உங்களுக்கு உரிமை இருக்கிறது.

அதை எதிர்ப்பவர்கள் தங்கள் பதிலை மட்டும் சொல்லட்டும். உங்களைத் தனிப்பட்ட
முறையில் தாக்குவது அநியாயம் - அராஜகம்

அராஜகத்தை எதிர்த்துப் போராடுங்கள். அதில் தவறில்லை!

உங்கள் பாஷையில் சொன்னால் அவர்களைத் துவம்சம் செய்யுங்கள்

கழிப்பறையில் இருந்து கொண்டே ஒருவன் வெள்ளரிக்காய் சாப்பிட, அதைப் பார்த்தவன்
சொன்னானாம், "அடேய் கருமாந்திரம் பிடித்தவனே, ஒன்று சாப்பிடுவிட்டுக் கழி அல்லது
கழிந்துவிட்டுச் சாப்பிடு".

அதைக் கேட்ட தவப்புதல்வன் சொன்னானாம், "நீயாரடா சொல்வதற்கு, அது என்னிஷ்டம்,
கழிந்ததைத் தொட்டுக் கொண்டு கூட சாப்பிடுவேன். உன்னாலலென்ன செய்ய முடியும்?"
என்று கேட்டுவிட்டுத் தொட்டுக்கொண்டு சாப்பிட ஆரம்பித்தானாம்.

அவனைப்போல பல தவப்புதல்வர்கள் உள்ளார்கள். அவர்களுக்கு நியாய, அநியாயம் தெரியாது
அத்துமீறிப் பேச மட்டும் அல்லது எழுத மட்டும்தான் தெரியும்.

கலப்புத் திருமணம் குறித்து நீங்கள் எழுதிய கருத்துக்களில் உள்ள பல நல்ல செய்திகளை
அவர்கள் எடுத்துக் கொள்ளாமல் - சாதி முத்திரை குத்தி உங்களைப் புறந்தள்ளப்
பார்க்கிறார்கள்.

நான் கலப்புத்திருமணத்திற்கு எதிரானவன் அல்ல! அதை வரவேற்கிறேன். அதே நேரத்தில்
அதில் உள்ள அவலங்களையும் எண்ணிப் பார்க்க வேண்டுகிறேன். அதெல்லாம் முக்கியமில்லை
- என்னைப் பெற்று வளர்த்தவர்களின் உணர்வுகள், ஆதரவு, சம்மதம் இது எதுவும் தேவையில்லை
என்ற எண்ணம் இருப்பவர்கள் தாராளமாகக் கலப்புத் திருமணம் செய்து கொள்ளலாம்.

ஜாதி, மதம், மொழி இம்மூன்றையும் தாண்டி செய்து கொள்ளும் திருமணம்தான் உண்மையான
கலப்புத் திருமணம்.

என் உறவுக்கார இளைஞர் ஒருவர் - மும்பையில் இருக்கிறார். அவர் தன்னுடன் பணிபுரியும்
ஜைன மதத்தைச் சேர்ந்த குஜராத்திப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டுள்ளார். அதுவும்
இரண்டு வீட்டாரின் சம்மதத்துடன். அதுதான் உண்மையான கலப்புத் திருமணம்.

25 வயதில், நல்லது மட்டும்தான் கண்ணில் தெரியும். 50 வயதில்தான் அவலங்கள் தெரியும்.

சில பதிவுலக தவப்புதல்வர்களுக்கு - அவர்கள் சார்ந்துள்ள அமைப்புக்களின் Brain Wash
கொள்கைகளால் - இதெல்லாம் இப்போது தெரியாது. சொன்னாலும் கேட்டுக் கொள்ள
மாட்டார்கள்.

ஆகவே உங்கள் கருத்துக்களை மட்டும் சொல்லுங்கள். அவர்கள் கேட்டுத் திருந்த வேண்டும்
என்று எதிர்பார்க்காதீர்கள்.

Donkey is always a donkey and at any cast it will not become a horse!

dondu(#11168674346665545885) said...

//சில பதிவுலக தவப்புதல்வர்களுக்கு - அவர்கள் சார்ந்துள்ள அமைப்புக்களின் Brain Wash
கொள்கைகளால் - இதெல்லாம் இப்போது தெரியாது. சொன்னாலும் கேட்டுக் கொள்ள
மாட்டார்கள்.//
அந்த அமைப்புகளின் தலைவங்க தங்க பசங்களுக்கு தங்க சொந்த ஜாதியிலேயே வரன் தேடறதை பாத்தாலும் இவர்களுக்கு புத்தி வராது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

டோண்டு சார்.
இனி வெளிபடையாக அடித்து நொறுக்குங்கள். நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்.

dondu(#11168674346665545885) said...

//டோண்டு சார்.
இனி வெளிபடையாக அடித்து...//

நண்பர்களே, நன்றி. இனிமேல் பதிவுக்கு சம்பந்தமாக இல்லாத பின்னூட்டங்கள் எற்றுக்கொள்ளப்படமாட்டாது. போதும் நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

19ம் நூற்றாண்டில் வாழ்ந்த அய்யன் காளி கதையெல்லாம்
இப்போது எதற்கு? கேரளாவில் நம்பூதிரிகள் போட்ட ஆட்டமெல்லாம்
நமக்கெதற்கு?

நம் கவலையெல்லாம் ஒடுக்கப்பட்ட மக்களும், தாழ்த்தப்பெற்ற மக்களும்
விடுதலையடைந்து இன்று சுகமாக இருக்கிறார்களா இல்லையா?

சுகமாக இல்லையென்றால் இந்தியா சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் ஆகியும்
அவர்கள் ஏன் வாழ்க்கை ஏன் இன்னும் சீராகவில்லை?

அதற்குக் காரணம் மத்தியில் ஆட்சி செய்தவர்களா அல்லது மாநிலத்தில்
ஆட்சி செய்தவர்களா?

கடந்த 40 ஆண்டுகளாக பெரியாரின் சீடர்களான திராவிடக் கட்சியினர்தான்
தமிழகத்தில் ஏகபோக ஆட்சி செய்துள்ளார்கள்.

அவர்களாவது பெரியார் வலியுறுத்திய சமநீதியை வாங்கித் தந்திருக்க
வேண்டுமா இல்லையா?

வாங்கித் தரவில்லை என்றால் - ஏன் வாங்கித் தரவில்லை?

வாங்கித் தந்துவிட்டார்கள் - தற்போது அனைவரும் சமம் என்ற
சூழல் நிலவுகிறது என்றால் - ஏன் பழைய பஞ்சாங்கத்தையெல்லாம்
பதிவிட்டு எங்கள் (அப்பாவிப் பதிவர்களின்) மண்டையை உடைக்க வேண்டும்?

இதற்கு அவர்கள் பதில் சொல்லிவிட்டுப் பிறகு பெரியாருக்கு அல்லது
அம்பேத்காருக்கு ஜல்லி அடிக்கட்டும் அல்லது பார்ப்பணர்களின்
மீது சேறுபூசட்டும்!

dondu(#11168674346665545885) said...

//19ம் நூற்றாண்டில் வாழ்ந்த அய்யன் காளி கதையெல்லாம்..//

இது அந்த ஐயன் காளி இல்லை சார். அவரைப் பர்றி இங்கு பேச்சு இல்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

Hello

I am new to this blog world. I have started reading the blogs. I want to type in Tamil and I want to create my own blog. Would you help me in this regard.

I am writing to you because we both have same name.

Thanks you
Raghav

dondu(#11168674346665545885) said...

Dear Raghav,

Open the Suratha box at this URL http://www.suratha.com/unicode.htm

Check the radio button Thaminglish and start typing in English alphabets the Tamil words. For example, a-->அ, aa or A-->ஆ, i -->இ, ii or I--> ஈ, ka-->க, nga--> ங, sa-->ச, sha-->ஷ, ksha-->க்ஷ் and so on. ammaa becomes அம்மா. As you type them, you will see the Tamil words forming in Unicode in the lower box. Once finished typing click the copy box at the bottom and the Tamil para gets saved in the clipboard. You can save them in the posting box. Better bookmark the above URL.

If you do not have a blooger account, you can click the appropriate in this page above Preview.

All the best.

Regards,
Dondu N.Raghavan

Anonymous said...

பார்த்து நடந்துகொள்ளுங்கள்" இது தான் தாங்கள் சொல்லும் அறிவுரை.
கலப்பு கல்யாணத்தில் நல்லதும் இருக்கு கெட்டதும் இருக்கு.

M.M.

Anonymous said...

I was a brahmin girl working in a bank and I married my co-worker who was a non-brahmin(Nadar).I married without my family's consent. After the marriage all I had was my husband. I lost everything the moment I married him and I thought that we care for each other so much that nothing matters. But later, I learnt that he cared a lot about his caste people and his family more than he cared about me or our life. I was alone and miserable. I had no problem getting along with his family or never had any issues with food either. But I missed my family and friends so much. I loved my husband more than anything or anyone in the world. But he could not be very supportive for all that I lost. In the mean while his brother got engaged and my husband was the one who made all the arrangements. I was heart broken when I came to know that the reason why my husband hurried the engagement was because his brother was being friendly with a low-caste girl and he wanted to stop that by this same caste wedding arrangement. In the meanwhile I had a daughter and that is when I felt so terrible thinking of all that she lost because of me. I cried almost evry day thinking I have deprived my daughter of so many things from her birth. I was not mad at my family because I had two other sisters to be married and keeping a relationship with me might ruin their chances and choices of their future. But I realised it is not worth it marrying like this especially if you are to loose so much. Because there are no guarantees in life that your lover turned husband will support you and love you so that you could forget you hurt your own family and you lost their relationship. There are many important moments in our life which needs to be shared with your family. If you miss those moments you should have a very strong reason to console yourself, like a bad parents or no parents. After all these my husband died in a road accident and my daughter was 11 months old. We were married for 20 months at that time. The moment my father learnt this my whole family came for me. My daughter is my father's favorite grand-daughter today and she is 15 years old now. I am much content today than I was 15 years ago knowing that my daughter has the support of my whole family. I could not imagine what I would have done without my family's support all these years.

My advice to girls: Unfortunately, our society is not yet ready to forgive girls who falls for a wrong guy, most of the time the girls end up with the same guy because she can not say 'No'. So think before you get into one of these relationships. If you are thinking about marriage make sure your partner has equal or more to bring it to the table. I am not taking about money only. They should respect you and care about you. Even if you have a smallest doubt, never get married thinking it will be okay after the marriage. Most of the time the problems grow bigger and could ruin your life. Get educated and be sure and confident that you will meet the right person one day.

dondu(#11168674346665545885) said...

//I was a brahmin girl working in a bank and I married my co-worker who was a non-brahmin(Nadar).//

நீங்கள் சொலவதை படித்து மனம் கனமாகிறது. ஏதோ, உங்களுக்காவது இப்போது சொந்தக்காரர்களது ஆதரவு உள்ளது. பல பேருக்கு அந்த அதிர்ஷ்டம் கூட இல்லை.

மோகம் முப்பது நாள் ஆசை அறுபதுநாள் என்பது இம்மாதிரி திருமணங்களில் அதிகமாக உணரப்படுகிறது.

நான் கூறுவது. என்னமோ கலப்பு திருமணம் என்றால் சாதி பிரச்சினையே அழிந்து விடும் என்ற ரேஞ்சில் பேசுவது அளவுக்கதிமாக விஷயங்களை எளிமையாக்குவது (oversimplification) போலத் தோன்றுகிறது.

இப்போது இரண்டு சாய்ஸ், பிராக்டிகலாக இருக்கலாம் அல்லது மற்றவர்கள் ஃபேஷனுக்காக கூறி (ஆனால் தங்கள் விஷயத்தில் மட்டும் கடைபிடிக்காது) விடுவதை ஏற்றுக் கொண்டு அவதிப்படுவது.

அவரவர் முடிவை அவரவர்களே எடுங்கள் என்ற நிலைமையைப் பற்றி யோசியுங்கள் என்றே கூறுகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

My advice to girls: Unfortunately, our society is not yet ready to forgive girls who falls for a wrong guy, most of the time the girls end up with the same guy because she can not say 'No'. So think before you get into one of these relationships. If you are thinking about marriage make sure your partner has equal or more to bring it to the table. I am not taking about money only. They should respect you and care about you. Even if you have a smallest doubt, never get married thinking it will be okay after the marriage. Most of the time the problems grow bigger and could ruin your life. Get educated and be sure and confident that you will meet the right person one day.

Need of the hour

Anonymous said...

பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிக்கும் வரை இந்தியச் சமூக ஏற்றத்தாழ்வை
திருத்த முடியாது. ஐயன் காளி போதாது.

Anonymous said...

dondu how was the meeting
what time you will publish the article about meeting

ஐயன் காளி said...

டோண்டு பெருந்தகையாரே,

வணக்கங்கள்.

மனமுதிர்ச்சி பெற்றவர் நீவிர் எனும் என் கணிப்பு இவ்விதயத்தில் இறுதியானது. நண்பரே, நன்மைகள் உமக்கு நடக்கட்டும்.

சேரிவாழ் மக்களுக்கு கடந்த வாரம் ஏற்பட்ட இடர் ஒன்று எனது காலத்தைக் கரைத்துக்கொண்டிருக்கின்றது.

தங்களின் பதிவில் கதைக்கும் ஆசையை இவர்தம் கனவுகள் சிதையாது இருக்கும் நிலை வந்தவுடன் தொடரலாம் என மனத்தில் தொக்கிவைத்த ஆவலோடு இருக்கிறேன்.

உம்மை மீறியது என் வயது மட்டுமே. சற்று பொறுக்க சம்மதிப்பீரா?

dondu(#11168674346665545885) said...

//தங்களின் பதிவில் கதைக்கும் ஆசையை இவர்தம் கனவுகள் சிதையாது இருக்கும் நிலை வந்தவுடன் தொடரலாம் என மனத்தில் தொக்கிவைத்த ஆவலோடு இருக்கிறேன்.
உம்மை மீறியது என் வயது மட்டுமே. சற்று பொறுக்க சம்மதிப்பீரா?//

சேரிவாழ் மக்களின் துயரை வெற்றிகரமாக தீர்த்துவிட்டு வாருங்கள். உங்கள் தமிழை கேட்க எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் காத்திருக்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது