4/14/2007

ஆப்பரேஷன் சல்மா அயூப்

Anonymous has left a new comment on your post "ஜவஹர்லால் நேரு அவர்களின் legacy - 3":
xxxxxxxxxxxxxx (censored)
//என்ன நடந்தது என்று டோண்டு அவர்கள் ஒரு பதிவு போட்டு உண்மையை உலகுக்கு உரத்து சொல்ல வேண்டும்.
இப்பின்னூட்டத்தை வெளியிடுவதும், வெளியிடாததும் உங்கள் விருப்பம். ஆனாலும் உங்கள் மீது மதிப்பு கொண்டவர்கள் இவ்விவகாரத்தில் உங்கள் கணிப்பு என்ன என்பதை அறிய விரும்புகிறார்கள்.
Publish this comment.
Reject this comment.
Moderate comments for this blog.
Posted by Anonymous to Dondus dos and donts at April 13, 2007 12:08 PM//

மேலே உள்ளதுபோல பல பின்னூட்டங்கள் வந்தன. என்னைப் பொருத்த வரைக்கும் நான் தெளிவாகவே இருக்கிறேன். ஜயராமன் கண்டிப்பாக இவர்கள் கூறியது போல செய்யக் கூடியவர் அல்ல என்பதே அது.

இந்த விஷயத்தில் நேசகுமார் அவர்களும் பதிவிட்டுள்ளார்.

இப்போது விஷயத்துக்கு வருகிறேன். போன ஆண்டில் ஜோதி என்ற பெயரில் பின்னூட்டங்கள் வரத் துவங்கின. பின்னூட்டங்கள் என்னமோ சாதாரணமானவைதான். ஆனால் நான் வழக்கமான எனது பிரசித்திபெற்ற எலிக்குட்டி சோதனையை செய்து சம்பந்தப்பட்டவர் ப்ரொஃபைலுக்கு சென்று அங்கிருந்து வலைப்பூவுக்கு சென்றால் அதனையும் காமக்கதைகள். அச்சமயம் ஜோசஃப் அவர்களிடமும் இந்த விஷயத்தைக் கூறியுள்ளேன். அவரும் அந்தப் பெயரில் வந்த பின்னூட்டத்தை நீக்கினார்.

இப்போது ஜயராமன் விஷயத்தில் ஜோதி என்று பெயர் வர நான் உஷாரானேன். உடனே எனது ஜீமெயில் ஆர்கைவ்ஸில் தேடியதில் மாயவரத்தானின் இப்பதிவிலும் பின்னூட்டம் இட்டதும், அதை நான் மாயவரத்தானுக்கு சுட்டிக் காட்டியதும் தெரியவந்தது. அதில் வந்த ஜோதியின் ப்ரொபைல் இப்போது சல்மா அயூப்பாக வருகிறது. எல்லாவற்றையும் ப்ரிண்ட் செய்து வைத்துள்ளேன்.

இதில் பாலபாரதிக்கு யாரோ வேண்டுமென்றே தவறாகத் தகவல் தந்துள்ளனர் என நினைக்கிறேன். அவரும் அதை good faith- ல் எடுத்து கொண்டு காரியமாற்றியுள்ளார் என நினைக்கிறேன். ஆகவே அவரையோ, முத்து தமிழினி அவர்களையோ குறை கூற விரும்பவில்லை.

இப்போது முக்கிய கேள்வி, ஜயராமன் ஏன் அவ்வாறு எழுதித் தரவேண்டும்? பயமே காரணம். போலீஸ் என்ற பெயரைக் கேட்டவுடனேயே ஒரு சராசரி மனிதனுக்கு வரும் பயம்தான் காரணம். என்ன இவர் விஷயத்தில் அது ஓவர் என்றே நினைக்கிறேன்.

ஏற்கனவே போலி டோண்டு பொன்ஸ் பேரில் தானே போலிப் பதிவு போட்டதாகவும் பிறகு அவர் சரியான செயல்பாட்டுக்கு வந்ததாகவும் கூறியுள்ளான், எனக்கு அனுப்பியுள்ள பின்னூட்டத்தில். அது என் குடும்பத்தாரை மிக அசிங்கமாகத் தாக்குவதால் அதை வெளியிட மனமில்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

66 comments:

Anonymous said...

அப்போ அந்த ஐ.பி பத்தி என்ன சொல்றீங்க அய்யா?

பாலா

dondu(#11168674346665545885) said...

அந்த ஐ.பி. யார் எங்கிருந்து எப்படி எடுத்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால் ஜெயராமன், வஜ்ரா இன்னும் மற்றும் பலரது ஐ.பி. என்று கூறப்பட்டு பல ஏற்கனவே ஸ்பெஷல் ஆப்புவால் அவனது பதிவில் போடப்பட்டுள்ளன.

அதையெல்லாம் யார் நம்புவது?

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//
அப்போ அந்த ஐ.பி பத்தி என்ன சொல்றீங்க அய்யா?

பாலா


//

Even abdul kalam's ip i have and he has posted porn messages in my blog! would you believe that ?

with ip "oru mayirum pudunga mudiyathu" is the meaning.

All the broadband service providers in India give dynamic ip to its subscribers. Never you will get the same ip once you log off and re login.

So, a stupid will believe that with IP you can catch a culprit.

குழலி / Kuzhali said...

//இப்போது முக்கிய கேள்வி, ஜயராமன் ஏன் அவ்வாறு எழுதித் தரவேண்டும்? பயமே காரணம். போலீஸ் என்ற பெயரைக் கேட்டவுடனேயே ஒரு சராசரி மனிதனுக்கு வரும் பயம்தான் காரணம். என்ன இவர் விஷயத்தில் அது ஓவர் என்றே நினைக்கிறேன்.
//
ஒண்ணும்தெரியாத பாப்பா போட்டாளாம் தாப்பா

யோக்கியர் என்னத்துக்கு முதலில் போகனும்?

Anonymous said...

முதலில் ஸ்டாட் கவுண்டர் அல்லது create blog கவுண்டர் தகவல்கள் காவல்துறையால் எடுத்து கொளளவே படாது. ரவுடிதனமாக மிரட்டி ஒரு அப்பாவிக்கு போலி பட்டம் கட்டி இருக்கிறார்கள் என்பது வெள்ளிடைமலை.

dondu(#11168674346665545885) said...

அப்படியா குழலி அவர்களே. சல்மா அயூப் பற்றி நான் கொடுத்த ஆதாரங்களைப் பற்றி என்ன கூறுவீர்கள்?

ஜயராமன் மிகவும் பயந்தவர் என்பது வேறுவிஷயம். பொன்ஸ் பதிவில் அவர் தான் வலைப்பதிவதை நிறுத்தப் போவதாகக் கூறியதும் அவருக்கு வந்த மிரட்டல்களே காரணம்.

போலி எதற்கும் துணிந்தவன். இப்போது ஆதிசேஷன் என்ற பெயரில் நான் எழுதுஇவது போல பில்ட் அப் கொடுத்து வருகிறான். வேண்டுமென்றே அவந்தான் டோண்டு என்று கூறும் பின்னூட்டங்களையும் அனுமதித்து வருகிறான் என்பதையெல்லாம் நான் ஏற்கனவே உங்களுக்கு கூஉறினேன் அல்லவா? அவ்வளவு அபாயகரமான ஆள் என்னதான் செய்ய மாட்டான்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

//ரவுடிதனமாக மிரட்டி ஒரு அப்பாவிக்கு போலி பட்டம் கட்டி இருக்கிறார்கள் என்பது வெள்ளிடைமலை.//
அந்தச் அளவுக்கு நான் கூற விரும்பவில்லை. பாலபாரதி என்பவர் சின்ஸியராக தான் நம்பியதைத்தான் செய்திருக்கிறார் என்றுதான் இன்னும் நம்புகிறேன். ந்நன் அவரை நேரில் சந்தித்திருக்கிறேன். அவர் நல்லவர் என நம்புகிறேன்.

என்ன, தவாறனதை நம்பி விட்டார் அவ்வளவே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

ரவுடிகள் இன்று நல்லவர் வேசம் போடுவதை பார்க்க நெஞ்சு பொறுக்குதில்லையே

dondu(#11168674346665545885) said...

//ஆதிசேசன் என்ற பெயரில் எழுதும் போலி டோண்டுவின் ஆபாச கதைகளுக்கு ஜெயராமன் பலி ஆடானது வருத்தமான விஷயம்//

ஆம். :(

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//
ஒண்ணும்தெரியாத பாப்பா போட்டாளாம் தாப்பா
//

கற்பழிப்பு குற்றத்தில் மாட்டிய கயவன் சொல்வது போல் கேட்கிறது.

சாரி குழலி. ரவுடிக்கு உருவி விடுவது உங்களுக்கு டைம்பாஸாக இருக்கலாம். ஆனா அதுக்காக எல்லாரும் அதே ரவுடிக்கு உருவி விடனும் அதுவும் வெண்ணை தடவி உருவி விடனும்னு நெனச்சா வேற ஆளப்பாருங்க.

dondu(#11168674346665545885) said...

//ரவுடிகள் இன்று நல்லவர் வேசம் போடுவதை பார்க்க நெஞ்சு பொறுக்குதில்லையே//
சின்ஸியராக்க் தான் நம்பியதைத்தான் செய்தார்கள் என்றுதானே கூறுகிறேன்.

அவர்கள் நல்லவர்கள் என்றுதான் இன்னும் நம்புகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

போலிக்கு நல்லவன் பட்டம் கட்ட சிலர் செய்யும் முயற்சிதான் இது. இருகோடுகள் தத்துவம் மூலம் அவனை நல்லவனாக காட்ட முயல்கிறார்கள்.இந்த விஷயத்தில் நீங்கள் கேட்கும் கேள்விகள் நியாயமானவை.

மாதவன்

(பிளாக்கர் ஐடி இல்லாத புதியவன்)

Anonymous said...

தமிழினி முத்துவிற்க்கும் இந்த போலிக்கும் தொடர்பு இருக்கிறதா? தெளிவுபடுத்தவும்

Anonymous said...

ஜெயராமன் ஏன் பயந்து செல்கிறார்.அல்காட்லில் இவர் மட்டும் தான் வேலை செய்கிறாரா?

Anonymous said...

ஆதிசேஷன் என்ற பெயரில் வலைப்பூ அமைத்து ஆட்டம்போடும் மலேசிய மூதேவி சல்மா அயூப் என்ற பெயரிலும் உலா வந்திருப்பான் என்று தாராளமாக சொல்லலாம். உளவுபார்க்க இப்படிப்பட்ட பெயர்களிலும் வடிவிலும் வருவது அவனுக்கு புதிதல்ல.ஆதிசேஷன் பெயரில் அரவிந்தன் நீலகண்டனிடம் பழகி விவரங்களை அறிய முயன்றவன் தான் இவன்.சல்மா அயூப் வேஷத்தில் நேசகுமார் பற்றிய விவரங்களை அறிய வந்திருக்கிறான் என நினைக்கிறேன்.

இதுபோன்ற புதிய பதிவர்களிடம் அனைவரும் எச்சரிக்கையாக பழகவேண்டும்.இவனை ஏதோ முஸ்லிம் ஆதரவாளன் என யாரும் நினைக்க வேண்டாம்.கண்ணியமாக எழுதிய ஆசாத்பாயை மிககேவலமாக எழுதி வலையுலகை விட்டு துரத்தியவன்.இன்றும் இவனால் மிதவாதிகளான ஆசிப் மீரானும், நண்பன் ஷாஜியும் தாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

(போலி பின்னூட்டங்களை தவிர்க்க) "சல்மா அயூப்" பற்றிய இந்த பதிவில் மாதவனின் பின்னூட்டம் இனி வராது

dondu(#11168674346665545885) said...

//தமிழினி முத்துவிற்க்கும் இந்த போலிக்கும் தொடர்பு இருக்கிறதா? தெளிவுபடுத்தவும்.//
கண்டிப்பாக இல்லை. முத்து தமிழினியை நான் நன்கு அறிவேன். அவர் போலியுடன் உறவாடுவார் என்று நான் நம்பவேயில்லை.

ஒரு முறை போலியுடன் தொடர்பு கொண்டு பல அசிங்கப் பதிவுகளை நிறுத்த நேற்பாடு செய்தார். அவையும் நின்று போயின. ஆனால் பிறகு போலியால் அவை மீள் பதிவு செய்யப்பட்டது அவர் குற்றம் அல்ல.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

//ஜெயராமன் ஏன் பயந்து செல்கிறார்.அல்காட்லில் இவர் மட்டும் தான் வேலை செய்கிறாரா?//
பதிவிலேயே விளக்கியுள்ளேன். அவர் பயந்தவர் அவ்வளவே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

//கற்பழிப்பு குற்றத்தில் மாட்டிய கயவன் சொல்வது போல் கேட்கிறது.

சாரி குழலி. ரவுடிக்கு உருவி வி
டுவது உங்களுக்கு டைம்பாஸாக இருக்கலாம். ஆனா அதுக்காக எல்லாரும் அதே ரவுடிக்கு உருவி விடனும் அதுவும் வெண்ணை தடவி உருவி விடனும்னு நெனச்சா வேற ஆளப்பாருங்க.//
குழலியின் அபிப்பிராயம் அவரது உரிமை. நான் என்ன சொல்வது? ஆனால் என் பெயரில் போலி பின்னூட்டம் இட்டபோது இவராக முன் வந்து என் பெயரை காத்திருக்கிறார் என்பதை நன்றியுடன் நினைத்து பார்க்க கடமைப்பட்டவன் நான்.

அவரையே போலி திட்டினான் என்பதையும் அறிகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

நீங்கள் ஆதிசேஷன் பற்றி கூறுவது கூறுவது முற்றிலும் ஏற்கத் தகுந்ததே மாதவன் அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

This malaysian creature has posted fradulent postings in name of thangamani, peyarili etc.So it is quite possible that he had posted in name of these people also.

உண்மைத்தமிழன் said...

வாங்க ஐயா.. நீங்க ஏதோ சந்திர மண்டலத்துக்கு போயிருக்கிறதா சொன்னாங்க.. வந்துட்டீங்களா?

வீட்ல எழவு விழுந்து ரெண்டு நாளா வீட்லயே வைச்சிருந்து 'முடிஞ்சவங்க' வந்து பார்த்ததுக்கப்புறம் தூக்கிட்டுப் போன பின்னாடி வீட்டையே கழுவி சுத்தமா வைச்சிருக்கோம்.

இப்ப 'மாலை'யும், கையுமா வந்து 'பொணம் எங்க?'ன்னு கேக்குறீங்களே இது நியாயமா?

ஆமா, இப்படி அப்பப்ப உங்களுக்குத் 'தோதான' நேரத்துல சந்திர மண்டலத்துக்கு போயிருவீங்க போல இருக்கு..

Anonymous said...

மலேசிய குரங்கு தான் ஒரே போலி .அந்த சைகோவை பிடிக்க வழி சொல்லுங்கள்

Anonymous said...

சமீபத்தில் ஒரு ரவுடிபதிவர் ஐபி விவரங்களை வெளியிட்டார் என்று ஒரு கருத்து களத்தில் சண்டை நடந்து வந்தது உங்களுக்கு தெரியுமா?

Anonymous said...

உண்மை தமிழன் , உன் வீட்ல இழவு விழுந்திச்சுன்னா ஏன் இங்க வந்து ஒப்பாரி வைக்கிறே.

dondu(#11168674346665545885) said...

//ஆதிசேசன் தனக்கு தானே பின்னோட்டம் எழுதி வருவது அனைவரும் அறிந்தததே. அவன் ஏற்கனவே ஒரு முறை xxxx தொடர்பாக பதிவு ஒன்றை வைத்து இருந்தான். அப்போது அவனிடம் மன்னிப்பு கேட்டு அந்த பக்கத்தை நீக்கியதாக கேள்விபட்டேன். அப்போது எந்தவித ஆர்பாட்டமும் காட்டாதவர்கள் ஏன் தற்போது குதிக்கிறார்கள்??
இந்த ஆபரேசன் என்பதே ஒரு நாடகம் என்பதை அனைத்து பதிவாளார்களும் அறிந்தே வைத்து இருக்கிறார்கள்.//

Anonymous said...

ஜெயராமனை மிரட்டியவர்களில் ஒருவர் இரவு கழுகார் என்ற பெயரில் எழுதி கொண்டு இருந்தார்.

Anonymous said...

'பச்சோந்தி' என்ற பெயரில் பதிவு நடத்திய அப்பாவியை படாதபாடு படுத்திய மலேசிய மூதேவியை ஏன் இந்த சங்அத்துக்கு ஆட்கள் கண்டுகொள்வதில்லை??

dondu(#11168674346665545885) said...

//இந்த ஆபரேசன் என்பதே ஒரு நாடகம் என்பதை அனைத்து பதிவாளார்களும் அறிந்தே வைத்து இருக்கிறார்கள்.//
பாலபாரதி தான் சின்ஸியராக நம்பியதை வைத்துத்தான் செயல் புரிந்திருப்பார் என இன்னும் நம்புகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

ஜெயராமனை மிரட்டியவர்கள் எப்படி அவர் தான் போலி என்று கண்டுபிடித்தார்கள் என்று வெளிபடையாக அறிவிக்க வேண்டும். வெறும் கவுண்டர்களின் உதவி வைத்து தான் பிடித்தார்கள் என்று தெரிகிறது. அந்த தகவல்கள் நம்பகதுகுரியது அல்ல.

Hariharan # 03985177737685368452 said...

//ஜயராமன்,
தயவு செய்து என்ன நடந்தது, நடக்கின்றது என்பதை நீங்களே எழுதுங்கள். இது வரை நீங்கள் காவல்துறையிடம் செல்லவில்லை என்றால், உடனடியாக செல்லுவதே நல்லது. செல்லும்போது உங்களுக்கு எதிராக முஸ்லீம்களுக்கு கோரிக்கை விடுத்து எழுதப்பட்டுள்ள ஷாஜகானின் பதிவு, மற்றும் பதிவுகளின் ப்ரிண்டவுட்டுகளை எடுத்துச் சென்று நிலைமையின் தீவிரத்தை எடுத்துச் சொல்லி பாதுகாப்பு கேளுங்கள்.

தனிப்பட்ட முறையில் இவர்கள் அனைவர் மீதும் நீங்கள் புகார் கொடுப்பது உங்களது பாதுகாப்புக்கு நல்லது என்றே படுகிறது. அலட்சியமாக இருந்துவிட வேண்டாம்.


முஸ்லீம் அமைப்புகளை சம்பந்தப்படுத்தப்படுத்தப் போவதாக மிரட்டல்கள் வந்துள்ள நிலையில், நீங்களும் அரசியல் மற்றும் சமூக அமைப்புகளை நாடுவது நல்லது. பின்பு வருந்துவதைவிட முன்கூட்டியே இவற்றைச் செய்வது நல்லது. //

நேசக்குமாரின் இக்கருத்துடன் உடன்படுகிறேன்!

இம்முறை தமிழ் இணைய போலிப் பிரச்சினை ஆபாச எழுத்து எனும் ஒரு கிரிமினல் குற்றம் எனும் எல்லை தாண்டி பல்வகை கிரிமினல் குற்றங்கள், மததீவிரவாத கொலை மிரட்டல் எனப் பன்மடங்குக்கு கிரிமினல் தனம் ஏற்றம் பெற்று விட்டது.

தன்னை உள் இழுத்த இந்தப் பிரச்சினையில் எந்த அளவுக்கு உண்மை உள்ளது என்பதை திரு.ஜெயராமன் அறிவார்.

இசுலாமியத்தீவிரவாதம் தமிழகத்தில் இல்லவே இல்லை என்று சொல்லும் நிலையில் நிதர்சனம் இல்லை. எனவே காவல்துறையினரிடம் முறையாக முறையீடு திரு.ஜெயராமன் செய்வது மிக அவசியம்!


துப்பறிந்து கையும் களவுமாகப் பிடித்ததற்கான அனைத்து ஆதாரங்கள் வெளிப்படையாகத் தராமலே இவர்தான் குற்றவாளி என்று அவசரமாக வெளிப்படையாக அறிவிக்கும் பாங்கு என்பது ஏற்கனவே தமிழ்வலைப்பூக்களில் பிரதானமாயிருக்கும் திராவிட, ஆரிய விவாத வெறுப்பின் அதீத வெளிப்பாடு என்பதாக இருக்கலாமோ எனும் ஐயப்பாட்டை எழ வைக்கிறது.

நேரடியாக சட்டத்தின் கையில் இப்பிரச்சினையை ஒப்படைத்திருந்தால் மெய்யாகவே இணையத்தில் தமிழில் எழுதும் பலரையும் துன்புறுத்தும் இந்த ஆபாச எழுத்து, அடையாளத்திருட்டு எனும் நீண்டநாள் தொல்லை முறையாக சட்டத்தால் விசாரிக்கப்பட காவல் அதிகாரியால் எடுத்துக்கொள்ளப்பட ஆவன செய்திருந்தால் பாராட்டலாம்!

குற்றம் சாட்டப்பட்டவரைத் தனியாக ஓரிடத்துக்கு வரச்சொல்லி அவரறியாமல் குரல் பதிவு, அழுத்தம் தந்து எழுதிக் கையொப்பமிடச்சொல்லி வாங்குவது என்பது இன்னொரு அத்துமீறல் என்பதால் இப்படி அத்துமீறுகின்றவர்கள் சொல்வது முழு உண்மையாக இருக்குமா எனும் ஐயப்பாட்டையும் இந்த அணுகுமுறை எழுப்புகிறது!

தவறு செய்தவர்கள் எவராயினும் பாரபட்சமில்லாமல் தண்டனைக்கு உள்ளாக வேண்டும்!

அதற்கு குற்றம் சாட்டப்பட்டவர் குற்றம் செய்ததற்கான முழு ஆதாரங்கள் வெளிப்படையாக விசாரிக்கப்பட்டு, வெளிப்படையாக உறுதிசெய்யப்பட்டு இறுதியாகத் தண்டனை வழங்கப்படவேண்டும்!

போலியால் மிக மோசமான வசவுகள் பெற்றவன் நான். என் மெய்யான பெயரில் எனது கருத்து தெரிவிக்கும் பதிவுகளுக்காக என் குடும்பப் பெண்களும், இரு சிறு வயது குழந்தைகளும் இணைய போலியால் மிகவக்கிரமான முறையில் வசைபாடப்பட்டனர்!!

உண்மையான இணைய ஆபாசத் தீவிரவாதியான போலி சட்டத்தின் பிடியில் மாட்டவேண்டும் என்பதை விரும்புகிறவர்களின் நானும் ஒருவன்!

//ஜயராமன்,
தயவு செய்து என்ன நடந்தது, நடக்கின்றது என்பதை நீங்களே எழுதுங்கள். இது வரை நீங்கள் காவல்துறையிடம் செல்லவில்லை என்றால், உடனடியாக செல்லுவதே நல்லது. செல்லும்போது உங்களுக்கு எதிராக முஸ்லீம்களுக்கு கோரிக்கை விடுத்து எழுதப்பட்டுள்ள ஷாஜகானின் பதிவு, மற்றும் பதிவுகளின் ப்ரிண்டவுட்டுகளை எடுத்துச் சென்று நிலைமையின் தீவிரத்தை எடுத்துச் சொல்லி பாதுகாப்பு கேளுங்கள்.

தனிப்பட்ட முறையில் இவர்கள் அனைவர் மீதும் நீங்கள் புகார் கொடுப்பது உங்களது பாதுகாப்புக்கு நல்லது என்றே படுகிறது. அலட்சியமாக இருந்துவிட வேண்டாம்.


முஸ்லீம் அமைப்புகளை சம்பந்தப்படுத்தப்படுத்தப் போவதாக மிரட்டல்கள் வந்துள்ள நிலையில், நீங்களும் அரசியல் மற்றும் சமூக அமைப்புகளை நாடுவது நல்லது. பின்பு வருந்துவதைவிட முன்கூட்டியே இவற்றைச் செய்வது நல்லது. //

நேசக்குமாரின் இக்கருத்துடன் உடன்படுகிறேன்!

இம்முறை தமிழ் இணைய போலிப் பிரச்சினை ஆபாச எழுத்து எனும் ஒரு கிரிமினல் குற்றம் எனும் எல்லை தாண்டி பல்வகை கிரிமினல் குற்றங்கள், மததீவிரவாத கொலை மிரட்டல் எனப் பன்மடங்குக்கு கிரிமினல் தனம் ஏற்றம் பெற்று விட்டது.

தன்னை உள் இழுத்த இந்தப் பிரச்சினையில் எந்த அளவுக்கு உண்மை உள்ளது என்பதை திரு.ஜெயராமன் அறிவார்.

இசுலாமியத்தீவிரவாதம் தமிழகத்தில் இல்லவே இல்லை என்று சொல்லும் நிலையில் நிதர்சனம் இல்லை. எனவே காவல்துறையினரிடம் முறையாக முறையீடு திரு.ஜெயராமன் செய்வது மிக அவசியம்!


துப்பறிந்து கையும் களவுமாகப் பிடித்ததற்கான அனைத்து ஆதாரங்கள் வெளிப்படையாகத் தராமலே இவர்தான் குற்றவாளி என்று அவசரமாக வெளிப்படையாக அறிவிக்கும் பாங்கு என்பது ஏற்கனவே தமிழ்வலைப்பூக்களில் பிரதானமாயிருக்கும் திராவிட, ஆரிய விவாத வெறுப்பின் அதீத வெளிப்பாடு என்பதாக இருக்கலாமோ எனும் ஐயப்பாட்டை எழ வைக்கிறது.

நேரடியாக சட்டத்தின் கையில் இப்பிரச்சினையை ஒப்படைத்திருந்தால் மெய்யாகவே இணையத்தில் தமிழில் எழுதும் பலரையும் துன்புறுத்தும் இந்த ஆபாச எழுத்து, அடையாளத்திருட்டு எனும் நீண்டநாள் தொல்லை முறையாக சட்டத்தால் விசாரிக்கப்பட காவல் அதிகாரியால் எடுத்துக்கொள்ளப்பட ஆவன செய்திருந்தால் பாராட்டலாம்!

குற்றம் சாட்டப்பட்டவரைத் தனியாக ஓரிடத்துக்கு வரச்சொல்லி அவரறியாமல் குரல் பதிவு, அழுத்தம் தந்து எழுதிக் கையொப்பமிடச்சொல்லி வாங்குவது என்பது இன்னொரு அத்துமீறல் என்பதால் இப்படி அத்துமீறுகின்றவர்கள் சொல்வது முழு உண்மையாக இருக்குமா எனும் ஐயப்பாட்டையும் இந்த அணுகுமுறை எழுப்புகிறது!

தவறு செய்தவர்கள் எவராயினும் பாரபட்சமில்லாமல் தண்டனைக்கு உள்ளாக வேண்டும்!

அதற்கு குற்றம் சாட்டப்பட்டவர் குற்றம் செய்ததற்கான முழு ஆதாரங்கள் வெளிப்படையாக விசாரிக்கப்பட்டு, வெளிப்படையாக உறுதிசெய்யப்பட்டு இறுதியாகத் தண்டனை வழங்கப்படவேண்டும்!

போலியால் மிக மோசமான வசவுகள் பெற்றவன் நான். என் மெய்யான பெயரில் எனது கருத்து தெரிவிக்கும் பதிவுகளுக்காக என் குடும்பப் பெண்களும், இரு சிறு வயது குழந்தைகளும் இணைய போலியால் மிகவக்கிரமான முறையில் வசைபாடப்பட்டனர்!!

உண்மையான இணைய ஆபாசத் தீவிரவாதியான போலி சட்டத்தின் பிடியில் மாட்டவேண்டும் என்பதை விரும்புகிறவர்களின் நானும் ஒருவன்!

உலகத் தமிழர்கள் 1500 பேர் இருந்து தமிழால் எழுதி தமிழ் வலைப்பூ மூலம் ஏற்படுத்தும் தொடர்பு மீண்டும் மீண்டும் ஆபாச போலி எழுத்து, தனிநபர் அடையாளத் திருட்டு, மோசடி என்பதிலேயே மீண்டும் மீண்டும் உழன்று வருவது அருவருப்பாக இருக்கிறது.

We The People said...

சார்,

அப்ப ஜெயராமன் அப்ராணின்னு சொல்லறீங்க? அவர் சல்மா ஐயூப் என்ற பெயரில் எழுதவில்லைன்னு சொல்லவறீங்களா? உண்மை அப்படினால் ஏன் அவர் பாலாவை அழைக்க வேண்டும்? ஏன் பாலாவை சந்திக்க வேண்டும்? எப்படி பார்த்தாலும் போலிஸுக்கு போனாலும் அவர் இல்லாத பட்சத்தில் அவருக்கு பிரச்சனை இல்லை என்னும் போது ஏன் அவர் வலிய போய் பாலாவை சந்திக்க வேண்டும்??? இதுக்கெல்லாம் பதில் கிடைத்ததா??

அவர் வேலை செய்யும் கம்பெனிக்கு டைனமிக் ஐ.பி இல்லை. Static IP தான்!!!! அதனால் ஒரே ஐ.பி தான் வரும்!!!

உண்மையை புரிந்து கொள்ளுங்கள்! அதனால தான் அவர் பயந்து போய் காம்ப்ரமைஸ் செய்திருக்கிறார் என்று நான் நினைக்கிறேன்.

போலி டோண்டு வானாலும், ஜெயராமன் ஆனாலும் கேவலமாக எழுதுபவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படவேண்டும் என்று நான் நினைக்கிறேன்!

சரி விடுங்க! புத்தாண்டு வாழ்த்துக்கள்!

Anonymous said...

ஆஹா நல்ல ஆரம்பம் இந்த புத்தாண்டிற்கு. மேலும் இது போல நிறைய ஜாதி-மத
சண்டைகள் வரும் போல இருக்குது.

மலேசியா போலிக்கு நல்ல ஜாலிதான், { நான் மலேசியாவிலிருந்து பத்த வெச்சன் இவனுங்க மெட்ராஸுல எவனையோ போட்டு செம அடி அடிக்கரானுங்க. }

அ.மு.க நன்பர்களே உங்களை போலி-மூதி பயன்படுத்துகிறானா அல்ல நீங்கள் போலி-மூதியை பயன்படுத்துகிரிர்களா??

-தேசிய.முற்போக்கு.அனானி.கழகம்

Anonymous said...

//
முத்து தமிழினியை நான் நன்கு அறிவேன். அவர் போலியுடன் உறவாடுவார் என்று நான் நம்பவேயில்லை.

//

நான் கூட சூரியன் கிழக்குல உதிக்குதுன்னு சொன்னப்ப சத்தியமா நம்பவேயில்ல.

எனக்கும் சூரியன நல்லாத்தெரியும்.

dondu(#11168674346665545885) said...

//உண்மை அப்படினால் ஏன் அவர் பாலாவை அழைக்க வேண்டும்? ஏன் பாலாவை சந்திக்க வேண்டும்?//

அவர் நம்பரை என்னிடம் கேட்டு வாங்கியது முத்து தமிழினி. நான் முதலில் தர மறுத்தேன். ஏனெனில் சில மாதங்களுக்கு முன்னால் ஒரு நம்பிக்கையில் அவர் நம்பரை நான் வேறு ஒருவருக்கு யதார்த்தமாகக் கொடுத்தது அனர்த்தமாகி, அவர் பயமுறுத்தப்பட்டு பிளாக்கர் பதிவுகள் போடுவதிலிருந்தே விலகினார். இது அச்சமயம் எனக்கு மிகுந்த மனக்கஷ்டத்தைத் தந்தது.

ஆகவே இம்முறை ஜயராமனிடம் தனியாக முதலில் பேசி அவர் அனுமதி பெற்றுத்தான் தந்தேன். முத்து அவரிடம் பேசியிருக்கிறார். என்ன பேசினார் ஜயராமனிடம் என்பதை அவரிடம் கேளுங்கள்.

அவர் ஏன் பாலபாரதியை சந்திக்கப் போனார் என்பது தெரியவரலாம்.

எது எப்படியானாலும் நான் இப்பதிவில் காண்பித்த சல்மா அயூப் போலி டோண்டுதான். அது என் உறுதியான கருத்து.

மற்றப்படி புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

முத்து தமிழினி ஏன் அவரை போன் செய்து அழைக்க வேண்டும்? ஐபிகளை தன் பதிவில் போட்டு கூடவே இந்த முகவரிக்கு சென்றால் யார் என்று தெரியும் என்று சொல்லிய போது ஜெயராமனால் என்ன செய்ய முடியும்? ஒரு அப்பாவியை தண்டித்து இருக்கிறார்கள் என்பது உண்மை. இதில் அவரை மிரட்டிய ஒரு பதிவரே பல போலி முகவரிகளை வைத்து இருப்பவர்.

dondu(#11168674346665545885) said...

//முத்து தமிழினி ஏன் அவரை போன் செய்து அழைக்க வேண்டும்?//
முத்து தமிழினியின் நோக்கத்தில் எனக்கு ஏதும் சந்தேகம் இல்லை. அவர் நல்ல எண்ணத்தில் பிரச்சினைக்கு முடிவு கட்டும் நோக்கத்தில்தான் செயல் பட்டுள்ளார் என்பதை உறுதியாக நம்புகிறேன், முத்து தமிழினியை நேரில் நன்கு அறிந்தவன் என்னும் முறையில்.

என்ன அவர்கள் நம்பியபடி சின்ஸியராக அவரவர் செயல் புரிந்துள்ளனர் அவ்வளவே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

ஆனால் ஒன்று புரியவில்லை. விடாது கருப்புதான் போலி டோண்டு என்பதை துல்லியமாகக் கண்டு நண்பர் மாயவரத்தான் கூறும் போது மட்டும் பலர் ஏன் இன்னும் நம்பவில்லை என்பதுதான் அது. இவ்வளவு பெனிஃபிட் ஆஃப் டவுட் அவருக்கு கொடுத்தார்களே. அந்த ஈகை குணம் ஜெயராமன் விஷயத்தில் மட்டும் ஏன் மிஸ்ஸிங்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

எனது இன்றைய மூடுக்கு இணையாக வசூல்ராஜா படம் பார்த்தேன். அருமையான படம். கட்டிப்பிடி வைத்தியம் இங்கு பலருக்குத் தேவை.

நான் நம்ம, எனது ஹிந்து உயர்நிலை பள்ளியில் படித்த ஜயராமனுக்கு அதை மானசீகமாக அளித்தேன். புண்பட்ட அவர் உள்ளம் ஆறுதல் அடையும் என நினைக்கிறேன்.

மூன்றாம் மனிதர்களாகிய எனக்கும் ம்யூசுக்குமே இவ்வளவு டென்ஷன் என வந்தபோது அவர் எவ்வளவு மனக்கஷ்டம் அடைந்திருப்பார் என்பதை கற்பனை செய்யவே மனது கஷ்டப்படுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Muthu said...

டோண்டு சார்,

இதில் பாதிக்கப்பட்ட நபர், பாதிக்கப்பட்ட நபர் சார்பாக பல ஆதாரங்களை எடுத்த நபர் மற்றும் சம்பந்தப்பட்ட நபர் ஆகியோர் தான் கருத்து சொல்லமுடியும்.மற்றபடி பிரச்சினையை சுமூகமாக முடிக்க முயன்ற நான் கூட ஓரளவுதான் பேசலாம்.பேசவேண்டிய இடத்தில் பேசுவோம்.மற்றவர் எல்லாம் அதிகமாக பேசுவது தேவையா?

Muse (# 01429798200730556938) said...

தமிழ்மணத்திலிருந்தும் ப்ளாக் உலகத்திலிருந்தும் முற்றிலுமாக நான் விடுபட்டு பல மாதங்கள் ஆகிவிட்டன. இங்கு மீண்டும் வரப்போவதும் இல்லை.

இருப்பினும், லக்கிலுக்கின் (ப்ளாக் உலகைச் சேராத) நண்பர் ஒருவர் எனக்குத் தெரியப்படுத்திய தகவல்கள் அதிர்ச்சியூட்டியதாக இருந்தது. ஜெயராமன் அவர்களை பலியாடாக்க விடாதுகருப்புவோடு சேர்ந்து ஒரு மிகப் பெரிய கும்பல் ஈடுபடுகின்றதோ என்று சந்தேகம் வருகின்றது.

சல்மா அயூப் என்கின்ற ப்ளாக்கில் எழுதப்பட்ட நடைக்கும் விடாது கருப்புவின் நடைக்கும் பல ஒற்றுமைகளைக் காணமுடிந்தது. ஆதிசேஷன் என்கின்ற பெயரில் எழுதப்பட்ட எழுத்தில் பயன்படுத்தப்பட்ட லாஜிக்கே சல்மா அயூப்பில் பயன்படுத்தப்பட்டுள்ளது. சல்மா அயூப் விடாது கருப்புத்தான்.

இஸ்லாத்தின் பெயரைச் சொல்லி தீவிரவாதம் நடத்துபவர்களை எதிர்ப்பது வேறு. இஸ்லாத்தை எதிர்ப்பது வேறு. விடாது கருப்பு ஏற்கனவே இஸ்லாத்தை எதிர்த்து பதிவு ஒன்றுபோட்டு ஆபாசமாக எழுதினார். சுவனப்பிரியன் போன்றவர்கள் தங்களது வழக்கமான கண்ணியமான முறையில் இதை எதிர்த்து எழுதினார்கள். ஆனால், விடாதுகருப்பு மாட்டிக்கொள்ளவே முடியாது என்கின்ற தைரியத்தில் சல்மா அயூப்பாகியுள்ளார்.

பாலபாரதி எவ்வளவு பெரிய ஆபத்தில் இருக்கிறார் என்பது தெரியாமல் காலை விட்டுவிட்டாரோ என்றும் தோன்றுகின்றது.

காவல்துறை விசாரிக்கும்போது தன்னுடைய FIRல் பாலபாரதியையே முதல் குற்றவாளியாய் சேர்க்கும். மற்றவர்கள் இரண்டாவது, மூன்றாவது குற்றவாளிகள் ஆவர்.

பாலபாரதியை தூண்டி விட்டவர்களின் பின்னால் இருப்பவர்கள் ஏதேனும் தீவிரவாதக் குழுவினராக இருந்து அவரை அச்சுறுத்தியிருக்கலாமோ என்றும் சந்தேகம் வருகின்றது.

எந்தவித சரியான ஆதாரங்களும் இல்லாதபோது அவற்றை உண்மை என நம்பி பாலபாரதி ஜெயராமனை அச்சுறுத்தி கடிதம் வாங்கியுள்ளார். இக்கடிதத்தால் தப்புவதற்கு வாய்ப்பு இருப்பது விடாது கருப்புவிற்கு மட்டுமே. விடாது கருப்புவிற்கு இதனால் எல்லா வகையிலும் லாபம்தான். ஆனால், பாலபாரதியை சட்டம் விசாரிக்குமானால் முன்பின் தெரியாத ஒரு நபர் கேட்டுக்கொண்டதற்கிணங்க இங்கனம் மிரட்டலிலும், அச்சுறுத்துதலிலும் ஈடுபட்டேன் என்று இவர் சொன்னால் அதை ஏற்றுக்கொள்ளாது.

இந்தியாவில் தீவிரவாதிகளை தப்புவிப்பதற்காக அப்பாவிகளுக்குத் தண்டனை பெறச்செய்வது எப்போதும் நாம் காண்பது. தீவிரவாதிகளுக்கு விபரீதம் தெரியாமல் உதவிசெய்திருந்தவர்கள்தான் பெரும்பாலும் துன்பமுறுகின்றனர்.

விடாதுகருப்பு ஒரு தீவிரவாதி. தப்பிப்பது எளிது.

We The People said...

அப்ப முத்துதமிழி மிரட்டித்தான் ஜெயராமன் அப்படி எழுதிக்கொடுக்க செய்தாரா? அதனால் முத்துவுக்கு என்ன லாபம் என்று நினைக்கிறீர்கள்? ஜெயராமன் ஒன்று அவர் விரோதி இல்லையே! ஒன்னும் புரியலை சாமி!!!

Anonymous said...

IF YOU ARE ABUSED ON INTERNET

Dear Friends,

My area of interest is cyber crimes and how to prevent it. I have been doing academic research on this subject for few years. Being a Tamil, I also read Tamil on Internet and reading Tamil blogs for few years. I often read postings accusing of abuse/harassment/stalking/identity theft in Tamil Blogs. Though I see everyone complains big time about it, I have not seen anyone taking any concrete actions to prevent it. People should report the abuses to the police and not to the magazines that will make sales out of it.

Cyber Crime Laws are taking shape even in under developed countries for sometime now. A victim needs some time and perseverance to follow through the complaints to get justice. For example, Malaysia has passed cyber crime laws way back in 1999 or so. You could request Malaysian police to track down any cyber crime culprits through the police department of your country. I am sharing some of the trivial information that could be useful to the victims of cyber crimes on Tamil Internet. The following website has excellent material and guidance to the victims of cyber abuses in Tamil Blogs. Please feel free to contact them.

I have also explained in my research papers few times about the nature of abuses that go on in Tamil Web. However, as I am not affected, I could not give any official complaints. I have tracked poli dondu, karuppupaiyan et all for my research work for sometime and have solid information about them. However, authorities cannot take action without complaints from few current USA residents. So, please use the following links to save yourself. If you need any proof on who is Poli Dondu, after giving a written complaint to your local police authorities, give their e-mail and address in this blog. I will send it to the police department directly.

Go To http://www.wiredsafety.org. This site is a treasure to the victims to get justice.

You can report CyberAbuse online here
http://www.wiredsafety.org/911/index.html

This page has a drop down box to choose the type of complaint. Choose the appropriate one and file your grievances under it. Alternatively, you could also e-mail your complaints to cyber911team AT wiredsafety DOT org.

Abuses of Poli Dondu, Tamil Bartender, Special Aappu, Doondu can be reported under CyberStalking (Online Stalking) or Harassment. This can also be additionally reported under Cyber Bullying.

There is also another easy online reporting form available at
https://www.wiredsafety.org/forms/stalking.html

Please mention that you were abused in Tamil Blogs by so and so blogger. Also if you suspect that blog aggregators collect abuses against you in the name of free speech, you could mention their names too here. Not only the blogger, even those who allow comments of abuse and those who collect or reproduce them can come under the purview of justice.

Karuppupaiyan writes hatred against a section of people (called Brahmins). Most of his writings will fall under the purview of Hate Crimes. Many people including scholars from USA comment on his blog appreciating him. You could ask law enforcement to take action on Karuppupaiyan. For example, even if Karuppupaiyan lives outside USA, you could still complain about him in USA. USA authorities will try to track him down. Also they will put a tab on his supporters in USA and watch them.

Similarly, Sundaravadivel's Savilum pizhaikum parpana kutam post would qualify under racial profiling of brahmins. Any profiling is a crime in USA.

It has been clearly established that Karuppupaiyan is poli dondu and complaints were lodged against him in India, Malaysia and USA already. May be law is giving him a long rope now to catch not only him but also his co-conspirators. USA is not India where they dont care much about cyber crimes. USA takes cyber crimes seriously. So, the chances are more that the guilty will be punished if you report to USA agencies.

Get Live Chat Help from a cybercrime expert if you were one of the affected.

If you were stalked, the following page gives self-help about how to handle it:
http://wiredsafety.org/cyberstalking_harassment//stalking_self_help/

If you were affected by Cyber Crimes and want to prevent others from being affected you may also become a volunteer at CyberCrime Team. They welcome volunteers. Become a volunteer and save someone from being abused.

Is there no way that woman can surf safely online? Surely they can.. Wiredsafety says,

"In the early days of the Web, women had to proceed with caution. They were in the minority and were often targeted by cyberstalkers, scam artists and other predators. As women became more familiar with the technology, things began to change. Equality arrived in the guise of women cyberstalking men and each other and joining the ranks of the cyberabusers, not only the victims.

But women are still targeted by sexual and harassing cyberabuses more than their male counterparts. The ratio is about 3:1, three female victims to every male one.

While many safety and privacy tips apply equally to men and women, there are some situations that are unique to women and some tips that apply to their special vulnerabilities. To learn more, visit the UK site. Learn about how one of our volunteers fought back when she was conned by someone posing as a widower.

There is no longer any reason why women can't be as safe online as men. Most of our senior executives here at WiredSafety.org are women, including our founder and executive director, cyberlawyer, Parry Aftab. If you need someone to speak to your community or women's group about women's online issues, let us know. We're happy to help."

So, all women affected by Poli Dondu/others irrespective of the country they live in, please contact wiredsafety. Crimes against women and children are taken seriously.

When you go to wiredsafety, sometimes they will ask you to go to online FBI website or local police department and give a complaint. FBI or police department gets thousands of complaints everyday like this. At the most, they will give you an interview and hear your case. They may not act beyond it. However, if you go to wiredsafety and inform your complaint details, wiredsafety follows up with the police. When wiredsafety follows up, FBI/Police act normallly and do something.

For example, if you suspect someone as supporting or doing abuses, you could even mention in your complaint that you are suspecting that person. Police will not punish you even if its wrong. Even if you dont mention it, they ask you normally whether you have any list of suspects.

Even if you prove to the world the abuses yourself, no one will be caring much. The guilty will get smarter and move on to a different place or under a different name and continue to harass others. So blogs like this post will serve no purpose.

Few months back, a Canadian movie director was refused entry into USA. What did he do. Directed a movie where the USA President was killed. In Tamil blogs, there is open support for terrorism, violence, punishments by terror groups and justifications for the killings of many foreign leaders/diplomats. Those who do write such posts bring a world of harm to themselves without even knowing about it. A person can also report it to wiredsafety as suspicious activity or support for terror. After 9/11, police encourage people to contact them to report suspicious activities.

I strongly advise you all not to take law in your own hands to expose the guilty. Go to the law enforcement authorities. It may take some time and efforts on your side, but when abusers are put behind the bars, there will be none to write in support of them.

பெங்களூர் American

dondu(#11168674346665545885) said...

//அப்ப முத்துதமிழினி மிரட்டித்தான் ஜெயராமன் அப்படி எழுதிக்கொடுக்க செய்தாரா?//
நான் எங்கு அவ்வாறு கூறினேன்? சரியாகப் பின்னூட்டங்களைப் பாருங்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

ஆக கூடி எல்லோரும் சேர்ந்து ஆதரவு என்ற பெயரில் ஜயராமனைக் காவு கொடுக்க நினைகிறீர்கள். சற்றே சிந்தித்துப் பாருங்கள் ஜயராமன் இந்த பிரச்சனையை அமைதியாக முடிக்க நினைக்கிறார் பால பாரதியும் வார்னிங்கோடு முடித்து விட்டார் ஆனால் நீங்கள் எல்லோரும் சேர்ந்து இரண்டு பேரையும் மேலே செல்ல தூண்டி விடுகிறீர்கள்.

dondu(#11168674346665545885) said...

//சற்றே சிந்தித்துப் பாருங்கள் ஜயராமன் இந்த பிரச்சனையை அமைதியாக முடிக்க நினைக்கிறார் பால பாரதியும் வார்னிங்கோடு முடித்து விட்டார்.//

சல்மா அயூப் என்ற சாதாரண வலைப்பூவில் யாரோ வந்து ஜோதி என்ற அசிங்க வலைப்பூவை இணைத்துள்ளார்கள் என்ற நிலையை எழுதியிருந்தால் ஒரு வேளை நீங்கள் சொன்னதில் அர்த்தம் இருக்கும். இனிமேல் மேலே விஷயத்தை கொண்டு செல்லவில்லை என்றாவது இவருக்கு அவர்கள் எழுதி கொடுத்தார்களாமா?

ஆனால் அவ்வாறு இல்லையே. இவர் தலையில் மற்றவர்கள் செய்ததையெல்லாம் போடுவதற்கல்லவா அடி போடப்பட்டன?

மேலும் இசுலாமிய அமைப்புகள் வேறு துணைக்கு அழைக்கப்படுகின்றன. ஆகவே வெறுமனே வார்ணிங்கோடு விட்டிருப்பார்கள் என நினைக்க ஒரு பிரமேயமும் இல்லை.

இவ்வளவு நேரம் கும்மியடித்துவிட்டு பிறகு போலீசுக்கு போக மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்திரவாதம்? இந்த அழகில் அவரை 22-ஆம் தேதி மீட்டிங்கிற்கு வேறு "அழைக்கிறார்கள்". ஏன்? அங்கு வைத்து செருப்பால் அடிக்கவா?

ஆனால் அசிங்க எழுத்து புகழ் ஜோதி அவர் இல்லை என்று எனக்கு வேறு நம்பகமான வழியில் புலப்பட்ட போது அதை நான் வெளிப்படுத்தாது இருக்க வேண்டும் என நினைக்கிறீர்களா? மேலும் ஜோதிதான் சல்மா அயூப் என்ற பெயரிலும் வந்தார் என்பது இப்போது நான் காட்டியுள்ளேனே.

இதெல்லாம் நான் செய்யாது விட்டு, ஜயராமன் ஏதாவது விபரீதமான முடிவு எடுத்திருந்தால் என் மனநிலை எவ்வாறு இருந்திருக்கும்?

ஆகவே நீங்கள் சொல்வது ஏற்க இயலாதது.

மறுபடி கூறுகிறேன். பாலபாரதி மற்றும் முத்து தமிழினி தங்களுக்கு வந்த செய்தியை முழுதும் நபி செயல்பட்டுள்ளனர். ஆகவே அவர்கள் பேரில் நான் தவறு காணவில்லை.

அவர்கள் நல்லவர்கள்.

அதே சமயம் அவர்கள் தவறான தகவல் பேரில் ஆக்ட் செய்துள்ளனர் என்பதைத்தான் நான் கூற விரும்புகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

பூத் ஏஜண்ட் பேரில் உங்கள் நண்பர் காவல்துறையில் புகார் கொடுத்தால் இந்த ரவுடி கொட்டத்தை அடக்கலாம்.

Anonymous said...

//மறுபடி கூறுகிறேன். பாலபாரதி மற்றும் முத்து தமிழினி தங்களுக்கு வந்த செய்தியை முழுதும் நம்பி செயல்பட்டுள்ளனர். ஆகவே அவர்கள் பேரில் நான் தவறு காணவில்லை.
அவர்கள் நல்லவர்கள்.//
Sir,

I am too uncomfortably reminded of Antony's repeated declaration in Shakespeare's Julius Ceaesar, "But, Brutus is an honorable man!"

Anonymous said...

உங்களது வாதப்படியே யாரோ ஒருவர் ஜயராமன் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி எழுதி இருப்பின் எப்படி IP அட்ரசு அவரின் அலுவலகத்தில் இருந்து வந்தது.

dondu(#11168674346665545885) said...

//உங்களது வாதப்படியே யாரோ ஒருவர் ஜயராமன் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி எழுதி இருப்பின் எப்படி IP அட்ரசு அவரின் அலுவலகத்தில் இருந்து வந்தது?//
என்ன உளறல். நான் எங்கே அப்படி சொன்னேன்? சல்மா அயூப் வலைப்பூவே போலி டோண்டுவுடையது என்று கூறுகிறேன். பதிவை சரியாகப் படியுங்கள்.

மற்றப்படி ஜயராமன் அவ்வாறு கூறியது ஒரு நிர்ப்பந்தத்தின் பேரில்தான்.

நான் கொடுத்த சான்றை யார் வேண்டுமானாலும் சரி பார்க்கலாம். ஆனால் இந்த ஐ.பி. விஷயத்தில் என்னவோ சொல்கிறார்கள். நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும் என்றால் நம்பிக் கொள்ளுங்கள். நான் அது பற்றி ஒன்றும் கூறுவதற்கில்லை. ஆனால் ஒன்று எனது இப்பதிவில் கூறியதை எதிர்த்தரப்பினர் இது வரை எங்கும் எனக்குத் தெரிந்து மறுக்கவில்லை.

அப்படியே ஆல்காடெல் ஐபி இருந்து அதை அவர்கள் சான்றுடன் காட்டினால் கூட, ஆல்காட்டெல் கிண்டி என்பது hub IP. முழு இந்தியாவுக்கும் ஆல்காட்டெல் கிண்டி என்றுதான் காண்பிக்கும் என அறிகிறேன். நம் பதிவர்களில் ஒருவரின் சகோதரர் கூட ஆல்காட்டெல்லில் இருப்பதாக அறிகிறேன். அவர் பதிவு போட்டால் கூட அது ஆல்க்காட்டெல் கிண்டியாகத்தான் வரும்.

ஒரு சமரச முயற்சியாக கையெழுத்திட்டு விட்டால் மேலே தொந்திரவு செய்வதில்லை என்று கூற, வலைப்பதிவை விட்டு ஏற்கனவே பயமுறுத்தலால் விலகிய ஜயராமனும், போலீஸ் பற்றிய பேச்சுக்கு பயந்து, சனியன் விட்டால் போதும் என கையெழுத்தை முட்டாள்தனமாகப் போட, அது இவ்வாறு உருவெடுத்துள்ளது.

ஆனால் நான் காட்டிய ஆதாரம் இந்த சீட்டுக்கட்டு மாளிகையையே தகர்த்து விட்டது.

பார்க்கலாம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//ஆனால் நான் காட்டிய ஆதாரம் இந்த சீட்டுக்கட்டு மாளிகையையே தகர்த்து விட்டது.//

yes it s really true. the people charged against jayaraman is now could not able to speak anything.

Anonymous said...

ஐபி அட்ரஸ் என்ன சூட்சுமத்தில் இயங்குகிறது என்பதை தெரியாத அரைவேக்காடுகள் தாங்கள் ஏதோ பெரிய கண்ணி மேதை போல காட்டி கொள்கிறார்கள்

Anonymous said...

ஜெயராமனுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு காரணமான xxxx மன்னிப்பு கேட்காவிட்டால் xxxx நிறுவனத்தில் அவர் மேல் புகார் கொடுக்க வேண்டும்.

(Comment censored)

dondu(#11168674346665545885) said...

யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் சரி பார்க்கக் கூடிய நிரூபணம் தந்துள்ளேன். அது பற்றி பேச்சு மூச்சில்லை. ஆனால் ஒரு ஐ.பி.அட்ரஸை கையில் வைத்து கொண்டு இவ்வளவு ஆட்டமா? ஐ.பி. அட்ரஸை எங்கிருந்து பெற்றார்கள்? அதை மறுபடியும் லிங்க் செய்து போட்டுக் காட்ட இயலுமா? அதெல்லாம் கூறியதாகத் தெரியவில்லை. அனானி ஒருவர் கூறியது மாதிரி அப்துல் கலாம் ஐ.பி. கூடத்தான் தெரியும். அதிலிருந்து வந்த செய்தி என்று கூறினால் ஒப்புக் கொள்ளக் கூடியதா?

அப்படியே காட்டினாலும் அது ஜயராமன் என்றுதான் கூற இயலுமா? அதெல்லாம் காரியத்துக்காகாது என்றுதானே இந்த எழுதி வாங்கிக் கொள்ளல்? ஒரு அப்பாவியை பயமுறுத்தி வாங்கியிருந்தாலும், அவ்வாறு செய்தவர் ஒரு குட் ஃபைத்தில் செய்திருப்பதாகவே நம்புகிறேன். அவர் நல்லவர் என்றே இன்னும் நம்புகிறேன்.

எனது "படகில் மூவர், அதில் நாயை மறக்கலாமா" என்ற பதிவின் ஒரு பகுதியில் ஒருவன் தனக்கு கடல் நோய் வந்ததே இல்லை எனக் கூறி, அதற்கான நிரூபணத்தைக் காட்டியது போல இதுவரை இந்த ஐ.பி. அட்ரஸை வைத்து விளையாடியிருக்கிறார்கள். அந்த நிரூபணத்தை இப்போது பாருங்கள்.

கடல் பயணங்களின் போது மயக்கம் அடைந்ததாக கரையில் இருக்கும் எவருமே எப்போதுமே ஒத்துக் கொண்டதில்லை. கடல் பயணம் செய்யும்போது நீங்களே அம்மாதிரி பலரை பார்த்திருப்பீர்கள். அவர்கள் ஆயிரக்கணக்கில் உள்ளனர். அத்தனை பேரும் கரையிறங்கியதும் எங்கு போய் ஒளிந்து கொள்கின்றனர் என்பது மிகப் பெரிய புதிரே.

ஆனால் நான் பார்த்த ஒரு மனிதனை உதாரணமாகக் கொண்டால் என்ன நடக்கிறது என்பதை ஊகிக்க முடியும். அவனை ஒரு கடல் பயணத்தின்போது பார்த்தேன். கப்பல் மேல்தளத்தின் ரெயிலிங்கில் அபாயகரமாக சாய்ந்து, ஓங்கார சப்தத்துடன் வாந்தி எடுத்துக் கொண்டிருந்தான். அவன் கீழே விழுந்துவிடப் போகிறான் என்ற ஆதங்கத்தில் நான் அவனை ஜாக்கிரதையாக இருக்கும்படி கூற அவன் அப்படி விழுந்தால்கூட தேவலை என்ற ரேஞ்சில் பேசிவிட்டு வாந்தியை விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தான். மூன்று வாரங்கள் கழித்து அவனை பாத் என்ற ஊரில் உள்ள ஹோட்டல் காபி ஷாப்பில் பார்த்தேன். அவன் சுற்றி இருந்தவர்களுடன் தன் செய்த கடல் பயணங்களை பற்றி உற்சாகமாக பேசிக் கொண்டு வந்தான். தனக்கு கடல் என்றால் உயிர் என்றும் பேசினான். அவன் தனக்கு கடல் நோய் வந்ததே இல்லையென்றும், ஒரே ஒரு முறை தென் அமெரிக்காவில் உள்ள கேப் ஹார்ண் அருகே சற்றே வயிற்றை குமட்டியதாகவும், அடுத்த நாள் கப்பல் மூழ்கியதாகவும் கூறினான்.

நான் சொன்னேன், "உங்களை ஒரு கப்பல் பயணத்தின் போது ஜிப்ரால்டர் அருகே வாந்தி எடுப்பதை பார்த்தேனே" என்று. "எப்போது" என்று அவன் ஆச்சரியத்துடன் கேட்க, "சமீபத்தில் மூன்று வாரங்களுக்கு முன்பு, அது ஒரு வெள்ளிக் கிழமை" என்று விடாமல் கூற, அவனோ, "ஓ, அதுவா? அன்று சாப்பாட்டில் கொடுத்த ஊறுகாயில் பூஞ்சைக் காளான், ஆகவே உடல் நிலை சற்று சரியில்லை, அவ்வளவே. இம்மாதிரி மட்டமான ஊறுகாய் போட்டதற்காக கேப்டனை திட்டி விட்டேன். அவரும் மன்னிப்பு கேட்டு கொண்டு ஒரு புது ஊறுகாய் பாட்டில் கொடுத்தார், இதோ அது" என்று ஒரு ஊறுகாய் பாட்டிலை தன் பையிலிருந்து எடுத்துக் காட்டினான்.


வரவர இந்த ஐ.பி. அட்ரஸ் நிரூபணமும் அம்மாதிரி ஆகி வருகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//அப்படியே ஆல்காடெல் ஐபி இருந்து அதை அவர்கள் சான்றுடன் காட்டினால் கூட, ஆல்காட்டெல் கிண்டி என்பது hub IP. முழு இந்தியாவுக்கும் ஆல்காட்டெல் கிண்டி என்றுதான் காண்பிக்கும் என அறிகிறேன்//

I.P அட்ரசு டெலிபோன் மாதிரி ஒவ்வொரு ஏரியாவுக்கும் மாறுபடும். ஒரு நிறுவனம் VPN network மூலம் தான் இணைக்கப்பட்டு இருக்கும். இந்தியா முழுவதும் ஒரு HUB டன் இணைக்கப்பட வேண்டுமானால் அது ஒரு ராணுவ நெட் ஓர்க்காக மட்டும் அனுமதி உண்டு. எப்படியோ குழு சேர்ந்து வாதிட்டு எதிர் தரப்பினரை தூண்டி விட்டு ஏதோதோ எழுதுகிறீர்கள்.

Anonymous said...

something called proxy server of alcatel is installed in chennai office..and other branches of alcatel in india responds with the proxy server of chennai.
it s simple networking concept.

in tamilnadu bsnl internet connetions will show their address as chennai or delhi..

-L-L-D-a-s-u said...

ஐயா.. வணக்கம்..
ஐ.பியை நம்பக்கூடாது என்கிறீர்கள் .. ஒரு பதிவரை நீங்கள் குற்றம் சாட்டியது..அவருக்கெதிரான நடவடிக்கையை துவங்கியது இவை எல்லாம் எதை ஆதாரமாகக் கொண்டு ? ஐ.பி..தானே..

பழைய சம்பவத்தை நான் உங்களூக்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன் .. உங்கள் (பழைய) அரசியலை எல்லாம் அறியாமல் , ஏதோ எனக்கு தெரிந்த டெக்னிக்கல் விஷயத்தை வைத்து, போலி பின்னூட்டம் வந்த இடத்தை கூறினேன்.. (வேறு யாரும் அப்போது கூறாததற்கு டெக்னிக்கல் விஷயம் தெரியாததல்ல காரணம் என்று அப்போது எனக்கு புரியவில்லை ) அப்போதெல்லாம் அந்த ஐ.பியை வைத்துதானே நீங்கள் சிலம்பம் ஆடினீர்கள்..

இந்த விவகாரம் ரிப்போர்ட்டரில் வந்த நேரம்.. இதற்கு விளக்கம் நண்பர்களிடம் சொல்லி கொண்டிருந்த நேரம். ஒரு பிராமண நண்பர் 'நீங்களெல்லாம் அசிங்கமாக எழுதுவீர்கள்.ஆனால் பிராமணர்கள் யாரும் இப்படி எழுத மாட்டார்கள்' என்று கூறினார். (குழு எப்படி ஆரம்பிக்கிறது பாருங்கள்) ..'ஒருவர் செய்வதற்காக இப்படி எல்லோரையும் கூறாதீர்கள்' என்று மட்டுமே என்னால் வாதிடமுடிந்த்து. அதே நண்பர் இப்போது இந்த கதையை கூறும்போது 'இருக்காது! அவரை மிரட்டியிருப்பார்கள்.. ஐ.பி.யை திருடியிருப்பார்கள்' என்று கூறுகிறார்.. குற்றம் கூறும் இருவரையுமே அறியாமல், ஜாதியை மட்டுமே வைத்து எடைபோடும் ஒருவர் கூறுவதற்கும், நீங்கள் கூறுவதற்கும் என்ன வித்தியாசம் ?

ஒரு வாதத்திற்காக சொல்லுகிறேன்..உங்களுக்கும் மலேஷிய (என்று கருதப்படும்,ஐபியை நம்பக்கூடாதல்லவா) நபருக்கும் உள்ள சண்டை உலகப்பிரசித்தம். நீங்களோ, அல்லது உங்களின் இந்த நண்பரோ, அவருடைய ஐ.பியை வைத்து, ஏன் முதலிலிருந்தே எழுதி, அவருடைய பெயரை கெடுக்க முனைந்திருக்கக்கூடாது ..

அல்லது, அந்த மலேசிய நபரோடு வேறு தளத்தில் வாக்குவாதம் பண்ணினவர்களில் யாரோ(ஏன் நானோ), அவருடைய பெயரை கெடுக்க , அவரின் ஐ.பியை வைத்து எழுதியிருக்ககூடாது..அப்போதெல்லாம் கேள்வி கேட்காமல் அவரை குற்றம் சாட்டினோமே?..

அல்ல, சென்னை அன்பர், ஸ்லோகங்களை எழுதுபவர். அவர் ஆபாசமாக எழுத வாயப்பில்லை என நீங்கள் நம்பும்போது, மலேஷிய அன்பரின் கவிதையை (கல்கியில் வந்தது) அளவுகோலாகக் கொண்டு , எனக்கு போலியிடமிருந்து வந்த 'மதம் மாறிய பறையன் தானடா நீ' என்ற வசவுகளை அந்த மலேஷிய நண்பர் எழுதியிருப்பார் என்று எப்படி நம்பமுடியும்?

ஆபாசதளத்தின் நடை போலியின் நடை போல உள்ளது என்று கூறியிருந்தீர்கள்.. போலியும் சென்னை நபரும் ஒரே ஆட்கள் என்று கருதினால் , இந்த வாதம் அழிந்து போகும் .. வெவ்வேறு ஆட்கள் எனில், போலியின் ஆத்மார்ந்த வார்த்தையான , இட்லி வடையும் குறிப்பிட்டுள்ளதுபோல, 'குச்சிக்காரி', என்ற இந்த வார்த்தையை சல்மா அயூப தளத்தில் நான் வாசித்த ;) அளவில் கிடைக்கவில்லையே.. எவ்வாறு இரு நடைகளும் ஒன்று என்று கூறமுடியும்.

நீங்கள் இந்த பதிவில் கூறியிருந்த படி, ஜோதி என்ற பெயரில் ஏன் சென்னை அன்பரே எழுதியிருக்ககூடாது, போலிதான், அல்லது மலேஷிய அன்பர்தான் எழுதியிருக்கவேண்டும் என்று எந்த ஆதாரத்தில் கூறியிருக்கிறீர்கள்?

ஐபியை வைத்து நம்பக்கூடாது எனும்போது நீங்கள் யாரையும் குற்றம் சாட்டாதீர்கள்.. உங்களுக்கு மட்டுமல்ல இது, பிடிக்காதவரின் பெயர், ஊர் பெயர் போட்டு எழுதிவிட்டு, சென்னை நபரை மட்டும் ஐ.பி கொண்டு நம்பக்கூடாது என சொல்லும் உங்கள் நண்பர்களுக்கும் தான்..

எது எப்படியோ, தமிழ்மணம் எனும் இந்த அழகிய மலர் குரங்குகள் கையில் சிக்கி சின்னாபின்னமாகிறது என்பது மட்டும் என்னவோ உண்மை..

Anonymous said...

Anyone can fake any IP address if he has got the basic tool. These tools are available in the web for a small price. (If you use P2P programs like KaZaa you may get pirated copies for free).

This method is known as IP Spoofing.

If I know the address of Dondu, I can fake many blogs appear as if this is from Dondu's machine.

This is fairly simple. Surprising but true.

Ofcourse, this is illegal, but for a maniac who cares!!!

For a Cyber Crime, IP address is not a proof.

You may refer the details in the net.

http://en.wikipedia.org/wiki/IP_address_spoofing

dondu(#11168674346665545885) said...

//ஐயா.. வணக்கம்..
ஐ.பியை நம்பக்கூடாது என்கிறீர்கள் .. ஒரு பதிவரை நீங்கள் குற்றம் சாட்டியது..அவருக்கெதிரான நடவடிக்கையை துவங்கியது இவை எல்லாம் எதை ஆதாரமாகக் கொண்டு ? ஐ.பி..தானே..//
இல்லை. அது போலி டோண்டுதான் என்பது முதல் நாளிலிருந்தே தெரியும். எனது "என்பெயரில் வெளியாகும் பின்னூட்டங்கள்" பதிவில் நீங்கள் கூட அப்போது துர்வாசர் ரூபத்தில் வந்த பதிவர் எனது பெயரில் பின்னூட்டங்கள் இட்டபோது, அவர் தனது இனிஷியல் தெரியாதவர் என்பதுபோல பேச, போலி உங்களுக்கு எவ்வளவு திட்டுக்களை அனுப்பினான்? அப்போது உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்ததா?

//பழைய சம்பவத்தை நான் உங்களூக்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன் .. உங்கள் (பழைய) அரசியலை எல்லாம் அறியாமல் , ஏதோ எனக்கு தெரிந்த டெக்னிக்கல் விஷயத்தை வைத்து, போலி பின்னூட்டம் வந்த இடத்தை கூறினேன்.. (வேறு யாரும் அப்போது கூறாததற்கு டெக்னிக்கல் விஷயம் தெரியாததல்ல காரணம் என்று அப்போது எனக்கு புரியவில்லை ) அப்போதெல்லாம் அந்த ஐ.பியை வைத்துதானே நீங்கள் சிலம்பம் ஆடினீர்கள்..//
அந்த ஐ.பி. நீங்களாகக் கண்டு கூறியதுதானே. உங்கள் வார்த்தையை நம்பாமல் இருக்க எனக்கு எந்த காரணமும் இல்லை. ஆனால் இப்போது ஐ.பி. பற்றி பேசுபவர்கள் நான் மேலே உள்ள பின்னூட்டம் ஒன்றில் கூறுவதுபோல ஊறுகாய் ஜாடி காட்டுபவர்கள்.

//இந்த விவகாரம் ரிப்போர்ட்டரில் வந்த நேரம்.. இதற்கு விளக்கம் நண்பர்களிடம் சொல்லி கொண்டிருந்த நேரம். ஒரு பிராமண நண்பர் 'நீங்களெல்லாம் அசிங்கமாக எழுதுவீர்கள்.ஆனால் பிராமணர்கள் யாரும் இப்படி எழுத மாட்டார்கள்' என்று கூறினார். (குழு எப்படி ஆரம்பிக்கிறது பாருங்கள்) ..'ஒருவர் செய்வதற்காக இப்படி எல்லோரையும் கூறாதீர்கள்' என்று மட்டுமே என்னால் வாதிடமுடிந்த்து. அதே நண்பர் இப்போது இந்த கதையை கூறும்போது 'இருக்காது! அவரை மிரட்டியிருப்பார்கள்.. ஐ.பி.யை திருடியிருப்பார்கள்' என்று கூறுகிறார்.. குற்றம் கூறும் இருவரையுமே அறியாமல், ஜாதியை மட்டுமே வைத்து எடைபோடும் ஒருவர் கூறுவதற்கும், நீங்கள் கூறுவதற்கும் என்ன வித்தியாசம்?//

யார் அந்த நண்பர்? தமிழ்மண பதிவர் யாராவது கூறியிருந்தாரா? தெரியவில்லையே. ஆனால் ஒன்று பிராம்மணர்கள் அவ்வாறு எழுத மாட்டார்கள் என்று கூறினால், தர்க்க சாத்திர மாணவனான நானே அதை ஒத்து கொண்டிருக்க மாட்டேன். இதை fallacy of hasty generalization என்று குறிப்பிடுவார்கள்.

//ஒரு வாதத்திற்காக சொல்லுகிறேன்..உங்களுக்கும் மலேஷிய (என்று கருதப்படும்,ஐபியை நம்பக்கூடாதல்லவா) நபருக்கும் உள்ள சண்டை உலகப்பிரசித்தம். நீங்களோ, அல்லது உங்களின் இந்த நண்பரோ, அவருடைய ஐ.பியை வைத்து, ஏன் முதலிலிருந்தே எழுதி, அவருடைய பெயரை கெடுக்க முனைந்திருக்கக்கூடாது ..//
வாதமாகத்தானே, தாராளமாக சொல்லிக் கொள்ளுங்கள். ஆனால் மாயவரத்தானது அப்பதிவு போன ஆண்டு ஏப்ரலில் வந்தது. அப்போதே நான் அதை போலி டோண்டு என்று கண்டு கொண்டு மாயவரத்தானும் ஒத்து கொண்டு பின்னூட்டம் போட்டுள்ளார். அதில் உள்ள ஜோதி பெயரை சுட்டினால் சல்மா அயூப்பாக காட்டுகிறது. அப்போது ஜயராமன் தளத்திலேயே இல்லை.

//அல்லது, அந்த மலேசிய நபரோடு வேறு தளத்தில் வாக்குவாதம் பண்ணினவர்களில் யாரோ(ஏன் நானோ), அவருடைய பெயரை கெடுக்க , அவரின் ஐ.பியை வைத்து எழுதியிருக்ககூடாது..அப்போதெல்லாம் கேள்வி கேட்காமல் அவரை குற்றம் சாட்டினோமே?..//
ம்ம்ம் அப்புறம்? ரொம்ப நியாயமாக நடந்து கொள்கிறீர்கள். பலே.

//அல்ல, சென்னை அன்பர், ஸ்லோகங்களை எழுதுபவர். அவர் ஆபாசமாக எழுத வாயப்பில்லை என நீங்கள் நம்பும்போது, மலேஷிய அன்பரின் கவிதையை (கல்கியில் வந்தது) அளவுகோலாகக் கொண்டு , எனக்கு போலியிடமிருந்து வந்த 'மதம் மாறிய பறையன் தானடா நீ' என்ற வசவுகளை அந்த மலேஷிய நண்பர் எழுதியிருப்பார் என்று எப்படி நம்பமுடியும்?//
ஆனால் அக்காலக் கட்டத்தில் நீங்களும்தானே நம்பினது போல இருக்கு? நான் இன்னும் நம்பறேன் சார்.

//ஆபாசதளத்தின் நடை போலியின் நடை போல உள்ளது என்று கூறியிருந்தீர்கள்.. போலியும் சென்னை நபரும் ஒரே ஆட்கள் என்று கருதினால் , இந்த வாதம் அழிந்து போகும் .. வெவ்வேறு ஆட்கள் எனில், போலியின் ஆத்மார்ந்த வார்த்தையான , இட்லி வடையும் குறிப்பிட்டுள்ளதுபோல, 'குச்சிக்காரி', என்ற இந்த வார்த்தையை சல்மா அயூப தளத்தில் நான் வாசித்த ;) அளவில் கிடைக்கவில்லையே.. எவ்வாறு இரு நடைகளும் ஒன்று என்று கூறமுடியும்.

நீங்கள் இந்த பதிவில் கூறியிருந்த படி, ஜோதி என்ற பெயரில் ஏன் சென்னை அன்பரே எழுதியிருக்ககூடாது, போலிதான், அல்லது மலேஷிய அன்பர்தான் எழுதியிருக்கவேண்டும் என்று எந்த ஆதாரத்தில் கூறியிருக்கிறீர்கள்?//
ஆக போலி தனக்கு சாதகமாக திசை திருப்புவதில் வெற்றியடைகிறான் என்றுதான் உங்கள் வாதத்தைப் பார்க்கும்போது புலப்படுகிறது.

//ஐபியை வைத்து நம்பக்கூடாது எனும்போது நீங்கள் யாரையும் குற்றம் சாட்டாதீர்கள்.. உங்களுக்கு மட்டுமல்ல இது, பிடிக்காதவரின் பெயர், ஊர் பெயர் போட்டு எழுதிவிட்டு, சென்னை நபரை மட்டும் ஐ.பி கொண்டு நம்பக்கூடாது என சொல்லும் உங்கள் நண்பர்களுக்கும் தான்..//

நான் ஐ.பி.யை வைத்து மட்டும் பேசவில்லை என்பது உங்களுக்கு புரியவில்லை என்றால் நான் என்ன செய்ய முடியும்?

//எது எப்படியோ, தமிழ்மணம் எனும் இந்த அழகிய மலர் குரங்குகள் கையில் சிக்கி சின்னாபின்னமாகிறது என்பது மட்டும் என்னவோ உண்மை..//
இதுதான் எனக்கும் வருத்தம் அளிக்கிறது. போலி டோண்டுவை வெவ்வேறு அவதாரங்களில் அடையாளம் கண்டு துரத்தினாலும் திரும்ப வந்து விடுகிறான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

[ஆனால் ஒன்று பிராம்மணர்கள் அவ்வாறு எழுத மாட்டார்கள் என்று கூறினால், தர்க்க சாத்திர மாணவனான நானே அதை ஒத்து கொண்டிருக்க மாட்டேன். இதை fallacy of hasty generalization என்று குறிப்பிடுவார்கள்.]

Dear Sir, My respect to you has increased several times with this comment. Even after such illogical and baseless allegations, you are able to argue with civic sense and not getting emotional. I hope others also put forward logical comments in any discussion.

Anonymous said...

Mr. பெங்களூர் American,
http://www.wiredsafety.org/911/index.html -
it does not work.. they say they have blocked it from quite sometime... Any help?

dondu(#11168674346665545885) said...

//Dear Sir, My respect to you has increased several times with this comment. Even after such illogical and baseless allegations, you are able to argue with civic sense and not getting emotional. I hope others also put forward logical comments in any discussion.//

நன்றி கேப்டன் விஜயகாந்த் அவர்களே. முன்னமேயே எனக்கு நீங்கள் இவ்வளவு நல்லவர் எனத் தெரிந்திருந்தால் உங்களை பற்றி கிண்டல் செய்த இப்பதிவில் கடைசியாக எனது மாறுவேட ஃபோட்டோவுக்கு வேலை இருந்திராது.

அதற்காக மன்னிப்பு எல்லாம் கேட்கவில்லை. ஏனெனில் தமிழில் உங்களுக்கு பிடிக்காத ஒரு வார்த்தை மன்னிப்புதானே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

பொத்தாம் பொதுவாக வெளிப்படையாக ஆபரேஷன் என்று ஆரம்பித்து விளம்பரம் செய்த பாலாபாரதி ஏன் ஆதாரங்களை வெளியே காண்பிக்க மறுக்கிறார். அப்படி என்ன ஆதாரம் தான் இருக்கிறது அவரிடம்.

dondu(#11168674346665545885) said...

//பொத்தாம் பொதுவாக வெளிப்படையாக ஆபரேஷன் என்று ஆரம்பித்து விளம்பரம் செய்த பாலாபாரதி ஏன் ஆதாரங்களை வெளியே காண்பிக்க மறுக்கிறார். அப்படி என்ன ஆதாரம் தான் இருக்கிறது அவரிடம்.//

இதை நீங்கள் அவரிடமே கேட்டால் என்ன?

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//பொத்தாம் பொதுவாக வெளிப்படையாக ஆபரேஷன் என்று ஆரம்பித்து விளம்பரம் செய்த பாலாபாரதி ஏன் ஆதாரங்களை வெளியே காண்பிக்க மறுக்கிறார். அப்படி என்ன ஆதாரம் தான் இருக்கிறது அவரிடம்.//

பொத்தாம் பொதுவாக மிரட்டினார், கட்சி பேரைச் சொன்னார் என்று சொல்லியதும் அல்லாமல் சம்பந்தப்பட்டவரே "தயவு செய்து இப்படியே விட்டுவிடுங்கள், பெரிது படுத்தாதீர்கள்" என்று சொன்ன பிறகும் ஆபரேசனில் ஈடுபட்ட அமுகவினரின் பணியிடத்தில் நெருக்கடி ஏற்படுத்துவது வரை முயன்றவர்களிடம் மட்டும் மிரட்டினார்கள் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறதாம்?

enRenRum-anbudan.BALA said...

டோண்டு,

நீங்கள் குறிப்பிட்டு இருக்கும் 'ஜோதி' என்ற ப்ரொபைல் இட்டுச் செல்லும் சல்மா அயூப், 2005 மே மாதத்திலிருந்து இருப்பதாகத் தெரிகிறது. இப்போது "தி கிரேட் ஆபரேஷன்" வாயிலாக எக்ஸ்போஸ் ஆன சல்மா அயூபுக்கும், ஜோதிக்கும் என்ன தொடர்பு என்று நினைக்கிறீர்கள் ? அந்தப் பழம் தான் இந்தப் பழமா ? ஒரு எழவும் விளங்கவில்லை !!!

எ.அ.பாலா

dondu(#11168674346665545885) said...

வணக்கம் பாலா அவர்களே. கரெக்டாக இந்தப் பதிவின் அடிப்படையையே உங்கள் கேள்வியின் மூலம் மேலும் வலுப்படுத்தியுள்ளீர்கள்.

நான் கூற வந்ததும் அதுவேதான்.

இப்போது என்ன தெளிவாகிறது என்றால் போலி டோண்டுவிடமிருந்து மற்ற பதிவர்களது கவனத்தை திசை திருப்புவதில் அவனது அள்ளக்கைகள் வெற்றி பெற்றுள்ளனர். அந்த களேபரத்தில் ஒரு அப்பாவியை பலி கொடுத்துள்ளனர்.

மேலே ஒருவன் இருக்கிறான் அவன் பார்த்து கொள்வான்.

நீங்களும் ஜாக்கிரதையாக இருங்கள் என்றுதான் எல்லோருக்கும் இப்போதைக்கு கூற முடியும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது