1/15/2006

காந்தியும் கோட்ஸேயும்

நண்பர் மலர்மன்னன் ஒரு அனுபவம் வாய்ந்த எழுத்தாளர். அவருடைய "மெல்லத் திறக்கும் மனக்கதவு" என்ற கதை விகடனில் தொடர்கதையாக வந்த போது, அதை நான் வாரா வாரம் படித்தவன்.

மகாத்மா காந்தி என்றாலே கோட்ஸேயை நினைக்காமல் இருக்க முடியாது. அந்த கேட்ஸே ஏன் காந்தியைக் கொல்ல வேண்டும் என்பது பலர் மனத்தை அரித்து கொண்டிருக்கும். அதற்கு பதில் மலர்மன்னன் திண்ணையில் திஸ்கியில் எழுதிய கட்டுரை. அவர் அனுமதி பெற்று இங்கு யூனிகோடில் தரப்படுகிறது. மலர் மன்னனுக்கு என் நன்றி உரித்தாகுக. அவர் திண்ணையில் கொடுத்த தலைப்பு சற்று நீளமாகத் தோன்றியதாலும், நீளத் தலைப்புள்ள பதிவுகளை ப்ளாக்கர் விழுங்கி விடும் அபாயம் இருப்பதாலும் இங்கு அது சுருக்கப்பட்டுள்ளது.

இப்போது மலர்மன்னன் கூறுவார்:


மோகன்தாஸ் கொலையும், அதற்கு நாதுராம் நிறுவிய நியாயங்களும்
மலர் மன்னன்


(காந்திஜி, கோட்ஸே ஆகிய பெயர்களின் சேர்மானம் காலங் காலமாக ஒரு முன்கூட்டிய அபிப்பிராயத்தை மக்களிடையே உருவாக்கி விட்டிருப்பதால் எனது கட்டுரையின் தலைப்பில் இவ்வாறான பெயர்களைப் பயன்படுத்தியுள்ளேன். இவ்வாறு தலைப்பிடுவதன் மூலம் எவ்வித முன் முடிவுகளோடும் கட்டுரையுள் புகும்விதமாக வாசகருக்கு மனத்தடை ஏற்படாது தவிர்க்கலாம் என்ற நம்பிக்கையில்!)
-மலர் மன்னன்-


போர்க்களத்தில் எதிரெதிர் தரப்பு சிப்பாய்கள் ஒருவரையொருவர் எதிர்கொள்கையில், ஒருவரை இன்னொருவர் கொன்றும் போடுகிறபோது, அதில் ஒருவர் நிராயுதபாணியாகவே இருந்தாலும் கூட அது ஒரு கொலைக் குற்றமாகக் கருதப்படுவதில்லையே, ஏன்?

அந்த இரு மனுஷர்களும் ஒருவரை யொருவர் முன்பின் அறியார். அவர்களில் ஒருவரால் மற்றவருக்கு மரணமே சம்பவித்தாலும், அதற்கு சொந்தக் காரணத்தின் அடிப்படையிலான உள்நோக்கம் ஏதும் இல்லாததால் அது ஒரு கடமையின்பாற்பட்ட கருமமாக அங்கீகரிக்கப்படுமேயன்றி மரண தண்டனை விதிப்பதற்கான குற்றமாகக் கொள்ளப்படமாட்டாது.

பாரத தேசத்துப் பெரும்பாலான அப்பாவி ஹிந்து ஜனங்களும், ஓரளவு கணிசமான கிறிஸ்தவர்களும், மிகமிகக் குறைந்த எண்ணிக்கையிலான முகமதியரும் மஹாத்மா என்றும், பாபு (தந்தையார்) என்றும் அழைக்கும் மாபெரும் சக்தியாக சுதந்திரப் போராட்ட காலத்தில் விளங்கிய, 'காந்திஜி' என மரியாதையுடன் அறியப்பட்ட மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் அரசியல் நடவடிக்கைகள் தொடக்கத்திலிருந்தே அவருடைய மிகப் பெரும்பாலான பக்தர்களான ஹிந்துக்களின் நலனுக்குப் பாதகமாகவே இருந்தன. நமது தேசம் ஹிந்துக்கள் பெரும்பாலானவர்களாக உள்ள ஹிந்துஸ்தானம் என அறியப்பட்ட தேசமாதலால், அவரது அரசியல் நடவடிக்கைகள் இறுதியில் தேசப் பிரிவினை என்ற உச்ச கட்டமாக, ஹிந்து-முகமதியர் என்று மத அடிப்படையில் இரு நாடுகள் தோன்றி, ஹிந்துஸ்தானத்திற்கு இன்றளவும், இந்த நிமிடம் வரையிலும் பாதகமாகவே அமைந்து போயின.

காந்திஜிக்கு ஹிந்துக்களின் பேராதரவு, அவரே எதிர்பாராத வண்ணம் அரசியல் தலைமை ஸ்தானத்தை எளி¤தில் தந்துவிட்டது. எனினும் காந்திஜிக்குத் தேவைப்பட்டது பாரத மக்களனைவர் சார்பிலுமான ஒட்டுமொத்த பிரதிநிதித்துவம், அல்லது தலைமை ஸ்தானம். தம்மை பாரதநாட்டவர் அனைவர் சார்பிலும் பேசும் அரசியல்தலைவராகத்தான் அவர் முன்னிலைப் படுத்திக்கொண்டார். ஆனால் காய் நகர்த்துவதில் சாமர்த்தியம் மிக்க ஆங்கிலேய தர்பார், பெருகிவரும் அவரது செல்வாக்கிற்கு அணைகட்டும் பொருட்டு, சில முகமதியத் தலைவர்களை (ஜின்னாவை அல்ல) கைக்குள் போட்டுக் கொண்டு, 'நீ பாரத நாட்டு மக்களின் ஒட்டுமொத்தமான பிரதிநிதியல்ல, ஹிந்துக்களின் கட்சியான காங்கிரசின் தலைவர் மட்டுமே. குறிப்பாக ஹிந்துக்களுக்கு அடுத்தபடிப் பெரும்பான்மையினராக உள்ள முகமதியர் உன்னைத் தங்கள் பிரதிநிதியாக ஏற்றிருப்பதாகக் கூறுவதற்கு இல்லை. அதற்கான ஆதாரம் ஏதும் இல்லை. எனவே உன்னை ஹிந்துக்களின் பிரதிநிதியாகக் கருத இயலுமே யன்றி பாரத தேசத்தவரின் பிரதிநிதியாக ஏற்கமுடியாது. அதிலும் ஹிந்து சமூகத்திலேயே உள்ள தாழ்த்தப்பட்ட மக்களின் பிரநிதிதியாகக் கூடக் கருத இயலாது. வேண்டுமானால் இதோபார், இந்த முகமதியப் பிரமுகர்களை, இவர்கள் உன்னைத் தங்கள் பிரதிநிதியாக அங்கீகரிக்கவில்லை' என்று கூறியது. காந்திஜி இதற்கு என்ன சொல்லியிருக்க வேண்டும்? "பாரத தேசத்தவரை மதத்தின் அடிப்படையில் பிரித்துப் பேச நீ யார்? இங்கே நகரத்திற்கு நகரம், ஊருக்கு ஊர், ஹிந்து, முகமதியர், கிறிஸ்தவர் ஆகிய அனைவரும் சேர்ந்தே வாழ்ந்து வருகிறோம். 1857-ல் நடந்த எமது முதல் சுதந்திரப் போர்கூட ஹிந்துக்களும் முகமதியரும் இணைந்து உங்களை வெளியேற்றும் முயற்சியாகத்தான் இருந்தது. மேலும் நீ சொல்கிறாற்போல நான் ஒரு தரப்பு ஹிந்துக்களின் பிரதிநிதியாகவே இருந்தாலும் இது ஹிந்துக்கள் மொத்த மக்கள் தொகையில் தொண்ணூறு சதம் இருக்கிற, ஹிந்துஸ்தானம் என்றே அறியப்படுகிற தேசமாதலால் இந்த தேசம் முழுமைக்குமான பிரதிநிதியாக வாதாடும் உரிமை எனக்கு உண்டு'' என்றுதானே? ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த பாரிஸ்டர் ஆங்கிலேய தர்பாரின் சூழ்ச்சிக்குப் பலியாகி, முகமதியரின் ஆதரவையும் தமக்குத் தேடிக்கொள்ளும் முயற்சியில் இறங்கிவிட்டார். அதற்காகவே முகமதியர் மனதில் இடம் பெறுவதற்கான முஸ்தீபுககளை மேற்கொள்ளலானார். அன்றே தொடங்கியது, காந்திஜியால் ஹிந்துஸ்தானத்தில் ஹிந்துக்களுக்குச் சேதாரம். (தாம் தாழ்த்தப்பட்டோரின் தலைமையையும் பெறவேண்டும் என்பது உறைத்ததால்தான் அவர்களின் பக்கமும் அவர் கவனம் செலுத்தத் தொடங்கி, நாமனைவருமே கடவுளின் குழந்தைகளென்ற போதிலும் ஹரியாகிய இறைவனின் ஜனங்கள் என அவர்களுக்குப் பெயர் சூட்டி, முழு மூச்சில் அவர்களுக்கான ஆலயப் பிரவேசம் போன்ற இயக்கங்களையும் ஆரம்பித்துவைத்தார்).

முகமதிய சமயத்தின் பிறப்பிடமான அராபிய தேசமே குப்பையில் தூக்கியெறிந்துவிட்ட, துருக்கியரின் மத ஆளுமைக்கு ஒரு முடிவு வந்தமைக்காக அராபியர் உள்ளூற அகமகிழ்ந்த, ரத்து செய்யப்பட்ட 'கலீபா' என்கிற நடைமுறையைத் திரும்பப் பெறவேண்டும் எனக் கோரி இங்கே கிலாபத் என்கிற போராட்டத்தை காந்திஜி தொடங்கினார். பாரத தேசத்து முகமதியர்களுக்கு அதில் எவ்வித சம்பந்தமும் இல்லை என்ற போதிலும்! கிலாபத் இயக்கத்தின் மூலம் தாம் முகமதியரின் பிரதிநிதியுங்கூட என்பதை அவர் நிறுவ முற்பட்டதால் ஹிந்துக்களுக்குத்தான் பாதிப்பு ஏற்பட்டது. மேலும் கிலாபத் துருக்கியிலேகூட நடந்ததில்லை! அது காந்தியால் காந்திக்காகவே தொடங்கப்பட்ட அரசியல் காய் நகர்த்தல்!

காந்திஜி பாரத தேசத்து ஆங்கில அரசை முன்வைத்து அல்ல, ஒட்டு மொத்த பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்திற்கு எதிராகத்தான் கிலாபத் இயக்கம் தொடங்கினார். ஏனெனில் கிலாபத் என்பது துருக்கி சுல்தானுக்கு கலீபா என்கிற முகமதிய மதத் தலைமை ஸ்தானத்தைத் திரும்ப அளிக்கக் கோரும் இயக்கம்தான். பாரதத்தில் கோலோச்சிய ஆங்கிலேய அரசாங்கத்திற்கு இதில் எவ்விதத் தொடர்பும் இல்லாத போதிலும், பிரிட்டிஷ் சாம்ரஜ்ஜியத்தின் பிரதிநிதியாக அதனை அடையாளப்படுத்தி, அதற்கு எதிராகப் போராட வேண்டும் என்பது காந்திஜியின் திட்டம். ஆங்கிலேய துரைத்தனம் காந்திஜியைவிடப் புத்திசாலித்தனமாக அவரது திட்டத்தை முறியடித்தது. தனது கைக்குள் போட்டுக் கொண்டிருந்த முகமதியப் பிரமுகர்களைத் தூண்டிவிட்டு, 'நீங்கள் கவனக்குறைவாக இருந்தால் உங்கள் சமுதாயத்தில் மதிப்பிழந்து போவீர்கள். காந்தியை உங்கள் மக்களும் தலைவராக ஏற்றுக்கொண்டு விடுவார்கள். ஆகையால் எப்படியாவது காந்தி தொடங்கியிருக்கிற கிலாபத் இயக்கத்தை முறியடிக்க வேண்டியது உங்கள் பொறுப்பு' என்று எச்சரித்தது. முகமதியப் பிரமுகர்களும் அதற்கு இசைந்து கிலாபத் இயக்கத்தை ஹிந்துக்களுக்கு எதிராகத் திசை திருப்பிவிட்டார்கள். ஆக, எவ்வித நியாயமும் இன்றி ஹிந்துக்கள் திடீரென முகமதியரின் வன்முறைத் தாக்குதலுக்கு இலக்கானார்கள். இத்தாக்குதல் கேரளத்தில் மிக உக்கிரமாக நடந்தது.

மலையாளம் தவிர வேறு மொழியெதுவும் தெரியாத முகமதியரான மாப்பிள்ளமார்கள், ஹிந்து தறவாடுகளைத் தாக்கிச் சூறையாடுவதற்கும் ஹிந்துப் பெண்களைக் கடத்திச் சென்று பாலியல் கொடுமைகள் செய்வதற்கும் வாகான வாய்ப்பாக காந்திஜியின் கிலாபத் இயக்கம் பயன்பட்டது. சரி, யாரய்யா இந்த மாபிள்ளமார்கள்? எங்கிருந்து உற்பத்தியானார்கள் இவர்கள்?

நமது மேற்குக் கடலோரம், எப்போதுமே மேற்கிலிருந்து வரும் மாற்றுச் சமயத்தினர் கரை ஒதுங்கி, ஹிந்துக்களுக்கே இயல்பான சமரச மனப்பான்மை, பெருந்தன்மை, ஆகியவற்றின் பயனாக, அந்நியர்கள் பத்திரமாக வசிக்கத் தொடங்குவதற்கு வசதியான சரணாலயமாக இருந்து வந்துள்ளது. தம் தாயகத்திலிருந்து விரட்டப்பட்ட யூதர்கள், பார்சிகள், வியாபாரம் செய்ய வந்த அராபியர், ஐரோப்பிய வணிகர், கிறிஸ்தவ மதப் பிரசாரகர், இப்படிப் பலதரப்பட்டோருக்கும் நுழைவு வாயிலாக அது இருந்து வந்துள்ளது. இப்படி வந்த அராபிய வியாபாரிகள், அதிக காலம் பெண் வாசனை இல்லாமல் இருக்க மாட்டாமல் உள்ளூர் ஹிந்து மலையாளப் பெண்களுடன் சம்பந்தம் வைத்துக் கொண்டார்கள். தாயகம் திரும்பும் தருணம் வந்ததும் அவர்களை அம்போ என்று விட்டுவிட்டு ஓடியும் போனார்கள்(இப்போதுகூட அராபியர்களிடையே இந்த வழக்கம் தொடர்வது தெரியும்தானே? தாற்காலிகத் திருமணம் செய்து, தலாக்கும், பிள்ளையும் ஒருசேரக் கொடுத்துவிட்டு அவர்கள் போய்க் கொண்டிருப்பதும், ஹைதராபாத், கேரளம், மேற்கு கர்னாடகம் ஆகிய இடங்களில் தகப்பன் முகம் தெரியாத பிள்ளைகளின் எண்ணீ¤க்கை முகமதிய சமூகத்தில் அவர்களுடைய காஜிகளின் சம்மதத்துடனேயே அதிகரித்துவருவதும் தெரிந்த விஷயமே அல்லவா?) இதன் விளைவாகக் கேரளத்தில் தோன்றிய ஒரு புதிய வகை வகுப்புதான் மாப்பிள்ளமார்! அதனால்தான் அவர்கள் பெயரே மாப்பிள்ளைகள்!


இந்த மாப்பிளமார்கள் ஹிந்து நிலச்சுவாந்தார்களிடம் குத்தகையாளர்களாகப் பணியாற்றி வந்தனர். உங்களுக்கே நிலம் சொந்தமாகும் என ஆசை காட்டப்பட்டும், சமய உணர்வோடு பொருளதாரக் காரணங்கள் சொல்லப்பட்டும் இந்த மாப்பிள்ளமார்கள் கலவரத்திற்குத் தயார் செய்யப்பட்டார்கள். விளைவு, ஹிந்துக்களுக்கு உயிர்ச் சேதம். பொருள் சேதம், மானச் சேதம்!

மாப்பிள்ளாக் கலவரம் என அறியப்பட்ட இதனை அரசாங்கம் கடுமையாக ஒடுக்கியது. சட்டம் ஒழுங்கு சீர்குலைவதைக் காணச் சகியாமல்! இதுதான் ஆங்கில துரைத்தனத்தின் சாதுரியம்! பிள்ளையைக் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டுதல்!

ஆக, காந்திஜி தமக்கு முகமதியர்களின் அங்கீகாரமும் கிட்ட வேண்டும் என்பதற்காக மேற்கொண்ட முயற்சி ஹிந்துக்களுக்குப் பெரும் பாதகமாக முடிந்தது. அப்படியும் காந்திஜிக்கு ஆசைவிடவில்லை. போக்கிரித்தனம் செய்த மாப்ப்¤ள்ளமார்களை மகத்தான தியாகிகளாக வர்ணித்தார்! அப்படியாகிலும் முகமதியர் மனங்களைக் கவர முடியாதா என்கிற ஆதங்கத்தில்!


(ஒரு தருணத்தில் ஆங்கிலேய தர்பாரை எதிர்க்க ஆப்கானிஸ்தானத்து அமீரை அழைப்பேன் என்றுகூட அவர் சொன்னதுண்டு! ஆனால் அவரே இரண்டாம் உலகப் போரின் போது ஆங்கிலேயரை எதிர்க்க இன்னொரு அன்னிய சக்தியிடம் தஞ்சமடைவதா என்று சுபாஷ் போஸைக் கண்டித்தார்!)


இப்படியாகக் கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் ஹிந்துக்களுக்கு எதிரான முகமதியரின் கலவரத்தைத் தொடங்கிவைத்த புண்ணியம் காந்தியையே சாரும்.


முகமதியருக்கும் சேர்த்துத் தலைமை ஸ்தானம் வகிக்க வேண்டும், ஆங்கிலேயர் ஆட்சி தம்மை பாரத தேசத்து மக்கள் அனைவருக்குமான பிரதிநிதி என்று அங்கீகரிக்க வேண்டும் என்றெல்லாம் தேவையின்றியே தமக்கு அவர் நிபந்தனை விதித்துக்கொண்டு அதற்காக முகமதியருக்கு மேலும் மேலும் பரிவுகள் காட்டிவந்தபோதிலும் முகமதியரின் பிரதிநிதி என்கிற அங்ககாரம் ஜின்னாவுக்குத்தான் கிடைத்தது. தலித்துகளை ஹரியின் ஜனங்கள் எனப் புகழ்ந்து ஆலயப் பிரவேசத்தின் மூலம் அவர்களுக்கு சமூகத்தில் சம அந்தஸ்து கிடைக்கப் பாடுபட்ட போதிலும், தலித்துகளின் பிரதிநிதித்துவங்கூட அம்பேத்கருக்குப் போய்ச் சேர்ந்துவிட்டது. தலித்துகளல்லாத ஹிந்துக்களின் பிரதிநிதியாகவே ஆங்கிலேய அரசு அவரை அடையாளப்படுத்தயது. ஹிந்துக்களின் நலனுக்காக ஏதும் செய்யாதது மாத்திரமல்ல, முகமதியரை மகிழ்விக்க வேண்டும் என்பதற்காக ஹிந்துக்களை விட்டுக் கொடுத்துக் கூடச் செயல்பட்டவருக்கு ஹிந்துக்களின் பிரதிநிதி என்கிற அடையாளம்! இப்படியொரு விசித்திரமான நிலைமை ஹிந்துக்களைத்தவிர வேறு யாருக்கு வாய்க்கும்? அப்படியிருந்தும் "பாபு, பாபு' என்று ஹிந்துக்கள் அவரைக் கொண்டாடிக்கொண்டுதான் இருந்தார்கள்.


முகமதியர் மனம் கவர்வதற்காக காந்தி வரம்பு மீறியே நடந்துகொண்டிருக்கிறார், பல சந்தர்ப்பங்களில்.


சிரத்தானந்தர் என்ற ஆரிய சமாஜத்தைச் சேர்ந்த விடுதலைப் போராளியை ஒரு முகமதியன் கொலை செய்தபோது, அது திடீரென்று ஏற்பட்ட உணர்ச்சிக் கொந்தளிப்பில் நேர்ந்துவிட்ட சம்பவம். அதனால் குற்றவாளிக்குக் கடுமையான தண்டனை வழங்கக் கூடாது என்று சொன்ன காந்தி, பிற்காலத்தில் பகத்சிங் விஷயத்தில் மட்டும் தண்டனையைக் குறைக்குமாறு வாதாடவில்லை. பகத்சிங் மக்களிடையே பிரபலமடைந்து விட்டால் தமக்கு செல்வாக்கு குன்றி விடும் என்பதற்காகவே அவர் வாளாவிருந்துவிட்டார் என்று கருதுவோரும் உண்டு. இதை ஊர்ஜிதம் செய்வது போலத்தான் அவர் அதற்குப் பின் சுபாஷ் சந்திர போஸ் விஷயத்திலும் நடந்துகொண்டார். சுபாஷ் பாபுவுக்கு மின்னல் வேகத்தில் மக்கள் ஆதரவு பெருகுவதைக் கண்டு அவரை முடக்கிப் போட்டார் காந்தி, சுபாஷ் பாபுவை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியே காந்தியின் சொல்லை மீறித் தலைவராகத் தேர்வு செய்த பின்னரும்! காரியக் கமிட்டி உறுப்பினர்களையெல்லாம் விலகச் செய்து, உனக்கு எங்கள் ஆதரவு இல்லை என்று சொல்லாமல் சொல்ல வைத்தார்.


சுபாஷ் பாபுவும் ஹிந்து--முகமதியர் ஒற்றுமையின் அவசியம் உணர்ந்தவர்தான். ஆனால் முகமதியரைத் தமது பக்கம் வரச் செய்யவேண்டும் என்பதற்காக அவர்களுக்குச் செல்லம் கொடுத்துக் கெடுக்கவில்லை! ஒத்துழைக்க மறுத்து விட்ட காங்கிரசில் இனி இருந்து பயனில்லை எனப் புரிந்து கொண்ட சுபாஷ் தம் வழியில் போர்க்களம் காண ரகசியப் பயணம் மேற்கொள்ளுமுன் நம்பிக்கையுடன் சந்தித்த பாரத நாட்டுத் தலைவர், ஹிந்துத்துவக் கோட்பாட்டை நிறுவிய சாவர்கரைத்தான்! சுபாஷின் முன்னோடியான ராஷ்பிகாரி போஸ் ஒருபடி மேலே போய், ஜப்பானில் ஹிந்து மஹா சபையின் கிளையைத் தொடங்கியவர்!


ஹிந்துக்களின் நலனைக் காவு கொடுத்து முகமதியரின் ஆதரவைப் பெற காந்திஜி மேற்கொண்ட முயற்சிகளுக்கு ஏராளமான ஆதாரங்கள் உண்டு. விவரிக்கத் தொடங்கினால் நீண்டுகொண்டே செல்லும். அதன் முற்றுப் புள்ளிதான் தேசப் பிரிவினையில் முடிந்தது என்று பார்த்தால் அதன் பிறகும் அது நீடித்தது!


பாகிஸ்தான் கோரிக்கையை வலியுறுத்துவதற்காக 1946-ல் ஜின்னாவின் முஸ்லிம் லீக் நேரடி நடவடிக்கை என்பதாக ஒரு கிளர்ச்சியினை நடத்தியது. கோரிக்கையை முன் வைக்கும் கிளர்ச்சியென்றால் நியாயப்படி அரசுக்கு எதிரானதாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் முஸ்லிம் லீ¦கர்களின் கிளர்ச்சி ஹிந்துக்களைக் குறிவைத்துக் கொன்றுகுவிப்பதற்கும், சூறையாடுவதற்கும், பெண்கள் மீது பாலியல் வன்முறையைப் பிரயோகிக்கவும்தான் நடத்தப்பட்டது. அப்போது ஒன்றாக இருந்த வங்காள மாநிலத்தை முஸ்லிம் லீக் கட்சிதான் சுரவர்த்தி என்பவர் தலைமயில் ஆண்டுவந்தது. இந்த வசதியைப் பயன்படுத்திக் கொண்டு முகமதியர் ஹிந்துக்கள் மீது தங்கு தடையின்றித் தாக்குதலைத் தொடங்கினார்கள். அதற்கு சுரவர்த்தியின் அரசும் முழு ஒத்துழைப்புக் கொடுத்தது. ஹிந்துக்கள் ஒருவாறு சுதாரித்துக்கொண்டு பதிலடி கொடுக்க முன்வந்தபோது சுரவர்தியின் அரசு விழித்துக் கொண்டு தன் ராஜ தர்மத்தை நிலை நாட்ட முற்பட்டது. போதாக் குறைக்கு காந்தியும் வந்து சேர்ந்தார், சமரசம் என்றபெயரில் முகமதியரைக் காப்பாற்ற! நவகாளி யாத்திரை என்று பேசப்படுகிறதே, அது உண்மையில் ஹிந்துக்கள் முகமதியர் மீது பதில் தாக்குதல் தொடுக்காமல் தடுப்பதற்கு காந்திஜி மேற்கொண்ட முயற்சிதான்!


ஹிந்துக்கள் முகமதியர் மீது பதில் நடவடிக்கை எடுக்கவிடாமல் தடுக்க சுரவர்த்தி சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கவும், அவருக்கு காந்தி ஷஹீத் (தியாகி) என்று பட்டம் வழங்கிப் பாராட்டினார். ஹிந்துக்களை செயலிழக்கச் செய்வதற்காகத் தமது வழக்கமான ஆயுதமான உண்ணாவிரத நிர்ப்பந்தததையும் தொடங்கிவிட்டார்!


காந்திஜியை மஹாத்மா என்றும் பாபு என்றும் கொண்டாடியதற்குப் பிரதியாக ஹிந்துக்கள் எதிர்கொள்ள நேர்ந்த அவலங்களுக்கும் கொடுமைகளுக்கும் எழுதி மாளாத அளவுக்கு ஆதாரங்கள் உள்ளன. பாரதம் துண்டாடப் படுமெனில் அது என் சவத்தின் மீதுதான் நிகழமுடியும் என்று பிரகடனம் செய்த காந்திஜி, பிரிவினையைத் தடுக்கத் தமது வழக்கமான உண்ணாவிரத ஆயுதத்தைக் கையில் எடுக்கவில்லை. அந்த ஆயுதம் ஹிந்துக்களிடம்தான் செல்லுபடியாகும் என்பது அவருக்குத் தெரிந்திருந்தது! தம்மை முகமதியருக்கும் பிரதிநிதியாக முன்னிலைப் படுத்திக்கொண்ட அவர், பிரிவினைக் கோரிக்கையை நீங்கள் கைவிடாதவரை நான் முன்னெச்சரிக்கையாக எனிமா எடுத்துக் கொண்டு, எலுமிச்சைச் சாறு பிழிந்த நீ¦ரை மட்டும் பருகிக்கொண்டு உண்ணாவிரதமிருக்கப் போகிறேன் என்று எச்சரிக்கவில்லை! மாறாக, காங்கிரஸ் காரியக் கமிட்டி தேசப் பிரிவினையை ஏற்றுத் தீர்மானம் நிறைவேற்றியதும், இது தவிர்க்க முடியாத துரதிர்ஷ்டம் என அதற்கு சமாதானம் சொல்லலானார்.


நேருவிலிருந்து காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் சத்தியாக்கிரகம்செய்து சோர்ந்துபோய், எப்போதடா பதவியில் நிரந்தரமாய் உட்காருவோம் என்று தவிக்கும் நிலைக்கு வந்துவிட்டிருந்ததால், போதும் போராடியது, இனி ஆள்வதற்கு வழி பார்ப்போம் என்று பிரிவினைக்கு ஒப்புதல் தந்துவிட்டார்கள். காங்கிரஸ் காரியக் கமிட்டியில் பிரிவினை பற்றிய தீர்மானம் விவாதத்திற்குவந்தபோது ஒரே ஒரு குரல்தான் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது. என் தாயகம் துண்டாடப் பட்டுத்தான் விடுதலை கிடைக்கும் என்றால் அந்த விடுதலை நமக்கு வேண்டாம். நிலைமை சாதகமாகும் வரை காத்திருப்போம் என்று தனி நபராக வாதாடித் தோற்றவர் புருஷோத்தம்தாஸ் தாண்டன்.ஆக, நம் பாரதம் துண்டாடப் பட்டமைக்குக் காங்கிரஸ§ம்தான் பொறுப்பாளி. அதற்குப் பரிசாக நாம் அதற்குத் தந்த பரிசு, நீ¦ண்ட நெடுங்கால பதவி சுகம்! பிரதமர் பதவி பெறுவதற்காகத் தேசம் துண்டாடடப் படுவதை ஒப்புக்கொண்ட நேருவுக்கு தேசமெங்கணும் சிலைகள், சாலையின் பெயர்கள், குழந்தைகள் பெயரால் பிறந்த தினக் கொண்டாட்டங்கள்! அதனால்தான் சோஷலிஸ்ட்கட்சித் தலைவர் ராம் மனோஹர் லோஹியா, தமது விருப்பம் என்னவென்று கேட்கப்பட்டபோது, '' மக்கள் நேரு இழைத்த குற்றங்களைப் புரிந்துகொண்டு, அதற்குத் தண்டனையாக அவரைச் சிறையில் தள்ளும்வரை அவர் உயிரோடு இருக்க வேண்டும் என்பதுதான் எனது ஒரே ஆசை'' என்று சொன்னார்!


ராஜாஜியின் வக்கீல் மூளை, தேசம் என்பது ஏதோ ஸ்தவர ஜங்கம சொத்து என்பதுபோல, சகோதரர்களுக்கிடையே மனவேற்றுமை வந்து விட்டால் பாகப் பிரிவினை செய்துகொள்வதுதான் உத்தமம் என்று அதன் பங்கிற்கு அனைவரையும் முந்திக்கொண்டு பாகிஸ்தான் பிரிவினைக் கோரிக்கைக்கு ஆதரவும் தெரிவித்துவிட்டது! பாகப்பிரிவினை செய்துகொண்டு விட்டால் பங்காளிகளுக்கிடையே பகைமை மறைந்துவிடும், நல்லது கெட்டதுக்கு ஒன்று சேர்ந்துகொள்வார்கள் என்பது ராஜாஜியின் வாதம். அதற்குப் பரிசாக வரப் போகும் பாகிஸ்தானில் அவருக்கு ஓர் உயர் பதவி கொடுக்க ஜின்னாவும் தயாராக இருந்தார்! ராஜாஜிக்கும் திருவிதாங்கூர் திவான் சர் சி.பி. ராமஸ்வாமி அய்யருக்கும் உருவாகப் போகும் பாகிஸ்தானில் ஜின்னா பதவி நாற்காலிகளைத் தயாராகப் போட்டு வைத்திரு ந்தார்! அய்யருக்கு நாற்காலி போடக் காரணம், திருவிதாங்கூர் சமஸ்தானத்தைப் பாகிஸ்தானத்துடன் இணைப்பேன் என்று அவர் மிரட்டியதற்காக! அய்யரின் முதுகெலும்பை முறித்துப் போட்டார், வல்லபாய் பட்டேல்!


சீக்கிரம் எப்படியாவது பிரச்சினைக்குத் தீர்வு வரவேண்டும் என்பதற்காக இறுதியில் காங்கிரஸ் பொறுமையிழந்து பிரிவினயை ஏற்றுக்கொள்ளத்தான் செய்தது. எனவே ராஜாஜி சொற்படி முன்கூட்டியே அதற்கு உடன்பட்டிருந்தால் ஒருவேளை பெருமளவுக்கு உயிர், பொருள் மானச் சேதாரங்களைத் தவிர்த்திருக்க முடிந்திருக்கலாம். ஆனால் எப்படியும் பாகிஸ்தானாக வரையறுக்கப்பட்ட பகுதியில் ஹிந்துக்களின் என்ணிக்கையைக் குறைத்துக் காட்டுவதற்காக அவர்கள் அடித்துக் கொல்லப்பட்டோ, துரத்தப்பட்டோதான் இருப்பார்கள். ஏனென்றால் ஜிஹாத் முகமதியருக்கு மிகவும் அவசியமான சமயக் கடமையாகும்.


பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகும் காந்தியால் ஹிந்துக்களுக்கு சோதனை தொடர்ந்தது. பாகிஸ்தானிலிருந்து குற்றுயிரும் குலையுயிருமாகத் தப்பி வந்த ஹிந்துக்கள் இருக்க இடமின்றி தில்லியில் பாழடைந்து கிடந்த முகமதிய மன்னர்களீன் சமாதிகள், இடிபாடுகளுடன் சிதைந்து போன, வழிபாடு ஏதுமற்ற பள்ளிவாசல்கள் ஆகியவற்றில் ஒண்டிக்கொண்டார்கள். குளிர்காலம் வேறு வந்துவிட்டிருந்தது. குழந்தைகளும் முதியோரும் உடல் நலம் குன்றியவர்களும் சரியான பாதுகாப்பின்றி அவதிப் பட்டுக்கொண்டிருந்தார்கள். ஆனால் முகமதியருக்குச் சொந்தமான கட்டிடங்களை ஹிந்துக்கள் ஆக்கிரமித்துக்கொண்டிருப்பது தவறு; அவை கவனிப்பாரற்றுக் கிடந்தாலும் சரியே. எனவே ஹிந்துக்கள் உடனே அந்த இடங்களைக் காலி செய்து வெளியேறவேண்டும் என காந்தி அறிக்கையிட்டார். அரசுக்கும் ஹிந்துக்களை அக்கட்டிடங்களிலிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு வற்புறுத்தினார். ஹிந்துக்கள் வேறு வழியின்றி சாலை ஓரங்களுக்குக் குடிபெயர்ந்தனர். குளிருக்குச் சரியான பாதுகாப்பின்றிப் பலர் இறந்தனர்.


முகமதியர் புறக்கணித்த இடங்களை ஹிந்துக்கள் சொந்தமாக்கிக் கொள்ளலாகாது என்று சொன்ன காந்தி, நிர்கதியாக வந்த ஹிந்து அகதிகளுக்கு ஒரு மாற்றிடம் கொடுக்க வற்புறுத்தியிருக்கலாகாதா? கூடரங்கள் பல அமைத்திருந்தும் அவை போதாததால்தானே அகதிகளய் வந்தவர்கள் பாழடைந்த சமாதிகளிலும் மசூதிகளிலும் ஒண்ட நேர்ந்தது? காந்திதான் பாரதத்தில் அரசாளுவோருக்கு மாளிகைகள் இருக்கலாகாது என்றவராயிற்றே! பிரதமர் நேருவின் இல்லத்தையும் கவர்னர் ஜெனரல் மவுண்ட் பேட்டன் வசித்த வைசிராய் மாளிகையையும் அகதிகளுக்கு ஒழித்துக் கொடுக்கச் சொல்லியிருக்கலாமே!


அகதிகள் முகாமைப் பார்வையிடத் தம் அருமை மகள் இந்திராவுடன் நேரு ஒருமுறை சென்றபோது, அகதி ஒருவன் இந்திராவின் சேலைத் தலைப்பை லேசாகப் பற்றி இழுத்தான். உடனே நேரு சீறிப் பாய்ந்து அவன் கன்னத்தில் அறைந்தார்.


"பண்டிட்ஜீ, உங்கள் மகளின் சேலைத் தலைப்பை லேசாகப் பிடித்து இழுத்ததற்கே இவ்வளவு ஆத்திரப்படுகிறீர்களே, எங்கள் தாயை, சகோதரியை, மனைவியை, மகளை, எங்கள் கண் எதிரில் பலர் கதறக் கதறப் பாலியல் பலாத்காரம் செய்தார்களே, எங்களுக்கு மட்டும் பொறுமை காக்க உபதேசம் செய்வது சரிதானா?'' என்று அந்த அகதி கேட்டதற்கு நேருவால் பதிலிறுக்க இயலவில்லை.


இவையெல்லாம் பத்திரிகைச் செய்திகளாக வந்தவைதாம், கற்பனை அல்ல.


ஒன்றுபட்டிருந்த பாரத கஜானாவிலிருந்து பாகிஸ்தானின் பங்காக அறுபது கோடி ரூபாய் தர பாரத சர்க்கார் ஒப்புக்கொண்டிருந்தது. ஆனால் அத்தொகையைக் கொடுத்தால் பாகிஸ்தான் அதனை பாரதத்திற்கு எதிராகப் போர் புரிவதற்குத்தான் பயன்படுத்தும் எனத் தெரிந்ததால் அதனைக் கொடுக்க அப்போதைய துணை பிரதமர் வல்லபாய் பட்டேல் முட்டுக்கட்டை போட்டார். கொடுத்த வாக்கை மீறலாகாது, உடனே அறுபது கோடியைப் பாகிஸ்தானுக்குக் கொடுக்க வேண்டும் என்று காந்தி அடம் பிடித்து உண்ணாவிரதமும் தொடங்கிவிட்டார். அவர் பட்டினி கிடப்பதைக் காணச் சகியாது அரசாங்கம் அவரது விருப்பத்திற்கு அடிபணிந்தது.


இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் இன்னொரு காரியமும் செய்தார், காந்தி. பாகிஸ்தானிலிருந்து ஹிந்துக்களும் சீக்கியர்களும் ஓடிவந்தது தவறு, என்ன நேர்ந்தாலும் சரி, எமது உரிமையை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று அங்கேயே இருந்திருக்க வேண்டும். ஆகவே நான் பிப்ரவரி முதல் தேதி அகதிகளாய் வந்த ஹிந்து, சீக்கியர்களையெல்லாம் அழைத்துக்கொண்டு பாகிஸ்தானுக்குப் போய் அவர்களை அங்கே விட்டுவிட்டு வரப் போகிறேன் என்று அறிவித்தார்!


மஹாத்மா சொல்லைத் தட்டாத சில ஹிந்துக்களும் அதற்குத் தயாராக, பாபுதான் சொல்லிவிட்டாரே, அவர்கூடப் போகலாம் என்று துணிந்திருக்கக் கூடும். அப்படி அவர்கள் திரும்பிச் சென்றிருப்பின் என்ன நேர்ந்திருக்கும்? காந்திஜி அவர்களைப் பாகிஸ்தானில் விட்டு வந்த மறுகணமே அவர்களின் மானம் மூதலிலும் உயிர் அதன் பிறகும் பறிக்கப்பட்டிருக்கும் என்பதல்லாமல் வேறென்ன?


பாரதத்தில் முகமதியரின் உயிர், உடமைகளுக்குப் பாதுகாப்பளிக்க நேருவும் பட்டேலும் அவர்களுக்குமேல் காந்தியும் உண்டு. அதுபோல் பாகிஸ்தானில் ஹிந்துக்களின் உயிர், உடமைகளின் பாதுகாப்பிற்கு உத்தரவாதமளிக்க யார் உண்டு?


காந்தியின் பின்னால் போய் ஹிந்துக்களும் சீக்கியரும் மீண்டும் ஒரு கொடிய தாக்குதலுக்கு இரையாகும் அசம்பாவிதம் நிகழாதுதடுக்க என்ன வழி? காந்தியோ பிடிவாதக்கார மனிதர். தம் பேச்சைத் தான் மற்றவர்கள் கேட்கவேண்டுமேயன்றிப் பிறர் சொல்லைத் தாம் கேட்கத் தேவையில்லை என்று இருந்தே பழகிப் போனவர்.


இந்நிலையில் ஹிந்துக்களுக்கு நிச்சயமாக நேரவிருந்த அசம்பாவிததைத் தவிர்க்க நாதுராம் வினாயக கோட்ஸேவுக்கு ஒரு வழிதான் தெரிந்தது. அந்த வழியை அவர் மேற்கொண்டார்.


தமது வாக்குமூலத்தில் கோட்ஸே விடுதலைப் போரில் காந்தியின் பங்களிப்பைப் பெரிதும் போற்றிப் பேசத் தவறவில்லை. அதற்காக காந்திக்கு அஞ்சலி செலுத்தவும் தயங்கவில்லை.


காந்திஜியைக் கொன்ற செயலுக்குத் தாம் மட்டுமே பொறுப்பு என்று நாதுராம் வினாயக கோட்ஸே நீதிமன்றத்தில் குற்றம் முழுவதையும் தாமே ஏற்றுக்கொண்டார். எனினும், வழக்கை ஜோடிப்பதற்காகக் காவல் துறை அதற்கே உரிய வழக்கப்படி, வேறு பலரையும் குற்றவாளிகளாகச் சேர்த்து நாதுராமுடன் கூண்டில் ஏற்றி, கூட்டுச் சதியெனக் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது. அவர்களில் சிலர் நாதுராமின் திட்டத்தை அறிந்திருந்ததோடு அதற்குத் துணை புரியவும் முன்வந்தவர்கள்தான்.ஆனால் சாவர்கரையும் கூடக் கொலையில் பங்குபெற்றவர் எனக் குற்றப் பத்திரிகை கூறியது. விசாரணை முடிவில் அவர் குற்றமற்றவர் என விடுதலை செய்யப்பட்டார். கவனியுங்கள், குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று அல்ல (குற்றத்தைக் காவல்துறை சரிவர நிரூபிக்கத் தவறிவிட்டது, தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் சட்ட நுணுக்க ரீதியாகப் பிழை உள்ளது என்கிற காரணங்களுக்காகக் குற்றவாளிகள் விடுதலை செய்யபட்டால்கூட, நீதிமன்றமே எங்கள் மீது தவறு இல்லையென விடுதலை செய்து விட்டது என்று அரசியல்வாதிகள் தீர்ப்பைத் திருத்திப் பேசுவது இக்காலத்தில் வழக்கமாகிவிட்டிருக்கிறது! அரசியல் நிர்ப்பந்தம் காரணமாகக் காவல் துறை வேறு வழியின்றி வேண்டுமென்றே குற்றப் பத்திரிகையைச் சரிவரத் தாக்கல் செய்யாமல் விடுவதும், குற்றத்தை உறுதிசெய்வதற்கான சாட்சியங்களை முன்னிறுத்தாமல் வழக்கை நீர்த்துப் போகச் செய்வதுமான முறைகேடுகள் இன்று சர்வ சகஜமாகிவிட்டிருக்கின்றன! ராஜீவ் காந்தி மீதான போபர்ஸ் வழக்கு இப்படித்தான் குற்றம் நிரூபணமாவதற்குப் போதிய சான்றுகளைத் தரப் ப்ராசிக்கியூஷன் தவறிவிட்டது என்கிற அடிப்படையில் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால் அதைத் தங்களின் வெற்றியாகக் காங்கிரஸ் கொண்டாடுகிறது ).


1949 நவம்பர் 15 அதிகாலை, தற்போதைய ஹரியாணா மாநிலத்தி லுள்ள அம்பாலா சிறைச்சாலையில் நாதுராம் கோட்ஸேயும் அவருடைய சகா நாரயண் ஆப்தேயும் தூக்கிலிடப்பட்டனர். நாதுராமின் தம்பி கோபால் கோட்ஸே, பஞ்சாபிலிருந்து தப்பி வந்த அகதி மதன்லால் ப?வா, தில்லி விடுதி உரிமையாளர் விஷ்ணு கர்கரே ஆகியோர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டனர். ஆயுத வியாபாரி திகம்பர் பட்கே அப்ரூவராக மாறி சர்கார் தரப்பு சாட்சியம் கூறி, விடுதலையானார். பட்கேயின் பணியாள் சங்கர் கிஸ்தயா தண்டிக்கப்பட்டுப் பின் மேல் முறையீட்டில் விடுதலை செய்யப்பட்டார்.


ஆக, இது ஒரு கூட்டுச் சதி போலத் தெரிந்தாலும், நாதுராம் தாமே எடுத்த முடிவுக்கு மற்றவர்கள் துணையாக இருந்ததாகக் கொள்வதுதான் பொருத்தமாக இருக்கும். மதன்லால் பருவா, தமது கண் எதிரில் தம் தந்தை முகமதியரால் சித்ரவதை செய்து கொல்லப்பட்டதால் இதற்கெல்லாம் மூல காரணம் காந்தியே என ஆத்திரமுற்றுத் தாமும் காந்திஜியைக் கொலை செய்ய முடிவு செய்து எறிகுண்டு சகிதம் அலைந்து பின்னர் கோட்ஸேயுடன் சேர்ந்து கொண்டவர். எனவே இது கூட்டுச் சதியல்ல; ஒத்த சிந்தனையுள்ளவர்களின் ஒருங்கிணைப்பேயாகும். எனவேதான் நாதுராம் முழுக் குற்றத்தையும் தாமே ஏற்றுக் கொண்டார். அதற்கு இணங்கவே நானும் கோட்ஸே தாமாகவே எடுத்த முடிவு எனப் பதிவு செய்துள்ளேன்.


கோட்ஸே காந்தியைத் தவிர வேறு எவரையும் காயப்படுத்த விரும்பவில்லை. எனவே சுடுவதற்குமுன் காந்தியுடன் மிக நெருக்கத்தில் இருந்த ஆபா காந்தி, மனு காந்தி ஆகிய இருவரையும் தள்ளி, காந்தியைத் தனிமைப் படுத்தினார். நீதிமன்றத்தில் தமது மனச்சாட்சி தமது செயல் குறித்து உறுத்தவில்லை என்றும் தமது தரப்பு நியாயங்களை எதிர்காலத்தில் நேர்மையான சரித்திர ஆசிரியர் எரேனும் முறையாகப் பதிவு செய்வார்கள் என்று தாம் நம்புவதாகவும் கூறினார்.


தீர்ப்பளித்த நீதிபதி கோஸ்லா, இங்கு அமர்ந்துள்ளவர்கள் ஜூரிகளாக இருப்பின் கோட்ஸே குற்றமற்றவர் எனத் தீர்ப்பு வழங்கப்பட வேண்டியிருக்கும் எனத் தமது தீர்ப்பில் பதிவு செய்தார்.


கோட்ஸேயின் வாக்குமூலம் "மே இட் ப்ளீஸ் யுவர் ஹானர்' என்பதாகும். இது பல மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளது. இணைய தளத்திலும் படிக்கக் கிடைக்கிறது.கூகிள் மூலம் "கோட்ஸே' எனத் தேடினால் ஏராளமான விவரங்களும், நீதிமன்ற விசாரணை, கோட்ஸே வாக்குமூலம் ஆகியவை கிடைக்கும். இருபது ஆன்டுகளுக்கு முன் இந்த வசதி இல்லை. ஆகையால் நான் மிகவும் சிரமப்பட்டுத் தகவல்களை நேரில் திரட்ட வேண்டியதாயிற்று. எனினும் நாதுராமின் தம்பி கோபால் கோட்ஸே போன்றவர்களை நேரில் சந்திக்கும் அரிய வாய்ப்பும் பிறகு கடிதத் தொடர்பும் அதன் பயனாகக் கிட்டியது. கோபால் கோட்ஸே தற்சமயம் புணேயில் எண்பது பிராயம் கடந்தவராகப் புற்று நோயால் அவ்திப் பட்டுக் கொண்டும் போதிய பொருளாதார வசதியின்றியும், சாவின் நிழல் படிந்தவராக வாழ்ந்துவருகிகிறார்.


இது குறித்து இன்னொரு தகவலையும் பதிவு செய்ய விழைகிறேன், இதற்காக நான் தூற்றப்படுவேன் என்றாலும்!


காந்திஜி மறைவதற்குச் சில நாட்கள் முன்புதான் அவருக்கு உதவியாகத் தட்டச்சு எழுத்தர் ஒருவர் நியமிக்கப் பட்டார். தமிழரான அவர் பெயர் கல்யாணம். அவரை நான் அறிவேன் என்பது மாத்திரமல்ல, பிற்காலத்தில் சென்னை தி.நகரில் அவரது திருமண மண்டபம் ஆரோவில் ஊதுபத்தி முகவர் ஒருவரால் ஆக்கிரமிக்கப் பட்டிருந்தபோது கல்யாணத்திற்கு உதவியாக ஒரு சிறு குழுவுடன் இரவு பகல் திருமண மண்டபத்தில் தங்கியிருந்து, கல்யாணத்திற்கு எதிராகத் தாக்குதல் நடந்தபோதெல்லாம் அடிதடியில் பங்கு வகித்தேன்!


காந்திஜி சுடப்பட்ட போது அவரது அருகில் இருந்தவர்களில் கல்யாணமும் ஒருவர். குண்டு பட்டதும் முதியவரான காந்தி சிறு முனகலுடன் கீழே சாய்ந்தார். அந்த முனகலைத்தான் பிற்பாடு "ஹே ராம்' என்ற அழைப்பாகப் பதிவு செய்துவிட்டார்கள்! காந்திஜி "ஹே ராம்' என்றெல்லாம் சொல்லவில்லை என்பதற்கு கல்யாணம் சாட்சி! மக்கள் மத்தியில் காந்திஜியை ஒரு மஹானாக நிறுவுவதற்காக மேற்கொள்ளப்பட்ட கற்பிதங்களுள் இந்த "ஹே ராம்' சமாசாரமும் ஒன்று!



இந்திரா காந்தி படுகொலையின் போது அதனையும் காந்திஜி படுகொலையினையும் ஒப்பிட்டு துக்ளக்கில் ஒரு கட்டுரை வந்தது. நான் எனக்குத் தெரிந்த நியாயங்களைக் குறிப்பிட்டு அதற்குப் பதில் கட்டுரை எழுதி அனுப்பினேன். ஆனால் துக்ளக் அதனை வெளியிடவில்லை. எனது கட்டுரை ஒரு நல்ல ஆவணம்தான். இப்போது அது இருந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். துரதிர்ஷ்டவசமாக அதன் நகல் என்னிடம் இல்லை.


இந்திரா கொலையையும் காந்திஜி கொலையையும் ஒப்பிடமுடியாது. உளவுத் துறையினர் பிரதமர் இந்திரா காந்தியிடம் அவரது மெய்க்காப்பாளர் குழுவில் சீக்கியர் இடம்பெறுவது வம்பை விலைக்கு வாங்குவது போலாகும் என்று வலியுறுத்திய போது, அப்படி அவர்களை ஒதுக்கி வைத்தால் சீக்கியர்களை நாம் புறக்கணிக்கிறோம் என நாமே ஒப்புக்கொள்வது போலாகிவிடும். எனவே எனக்குப் பாதுகாப்பு அளிப்பவர்களில் சீக்கியர்களும் இருக்கட்டும் என்று சொல்லித் துணிச்சலுடன் அதற்கு உத்தரவிட்டார், இந்திரா. அதற்குப் பரிசாக அவர் அவரது மெய்க் காப்பாளர்களாலேயே சுடப்பட்டு இறந்தார். இது கடைந்தெடுத்த பச்சை நம்பிக்கைத் துரோகமே அல்லவா? கோட்ஸே எனது செயலுக்கு மன்னியுங்கள் என்பதுபோல் முன்கூட்டியே காந்திஜியை வணங்கிவிட்டு காந்திஜிக்கு மட்டும் படுகிறாற்போல் சுட்டார். துவேஷமோ வெறியோ, இந்தக் காரியத்தை முடித்தால் உன் குடும்பத்தைக் காப்போம், இவ்வளவு சன்மானம் தருவோம் என்ற ஆசைகாட்டுதலோ ஏதுமின்றி, தமக்குத் தாமே எடுத்த சொந்த முடிவின் பிரகாரம்,


விளைவினை அறிந்தே கோட்ஸே வினையாற்றினார். இதனைச் செய்து முடித்தால் சுவர்க்கத்தில் பல அழகியர் பணிவிடை செய்ய, சுக போகம் அனுபவிக்கலாம் என்கிற ஆசைகாட்டுதலுக்கு மயங்கியதாலும் அல்ல! மேலும், எழுதிவைத்துக் கொள்ளுங்கள், இந்த வித்தியாசத்தை -- இந்த விஷயத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரியக்கமோ, ஹிந்து மஹா சபையோ, சாவர்கர்ஜியோ எடுத்த முடிவை அவர் செயல் படுத்தவில்லை. பழிவாங்கும் குரோதம் அவரது செயலுக்குப் பின்னணியாக இருக்கவுமில்லை. அரசாங்கத்தையே சங்கடப்படுத்திப் பணியச் செய்யும் அளவுக்கு முரட்டுப் பிடிவாதமும், தாம் செய்வதுதான் சரி, மற்றவர்கள் சொல்வதெல்லாம் தவறு என்று சாதிக்கிற சுபாவமும் கொண்ட ஒரு செல்வாக்கு மிக்க தலைவரை ஹிந்துக்களின் நலனை முன்னிட்டு அரசியல் களத்திலிருந்து உடனடியாக அப்புறப்படுத்த இதைவிட்டால் வேறு வழியில்லை எனக்கருதியதால் கோட்ஸே தமக்குச் சரியெனப்பட்ட முடிவின் பிரகாரம் நிறைவேற்றிய செயல்தான் காந்திஜி படுகொலை (இந்தத் தகவலை நான் பதிவு செய்வதால் காந்திஜியின் கொலையை நியாயப்படுத்துவதாகக் கருதலாகாது. எந்த உயிர்க்கொலையையும் நியாயப் படுத்தும் மனப்போக்கு எனக்கு இல்லை. ஆனால் அதே சமயம், கீதையின் சாரம் தெரிந்தவனாய் இருப்பதால் எமது கீதாசாரியன் அறிவுரைப் பிரகாரம் இம்மாதிரியான நிலைமைகளைப் புரிந்துகொண்டு அவற்றை அவை உருவாகும் அவசியத்தின் பிரகாரம் ஏற்கவும் செயலாற்றவும் தெரிந்தவன்).


இந்திராவைக் கொலை செய்தவர்கள் விஷயத்தில் கோட்ஸேயின் செயலை ஒப்பிடுவது பொருந்தாது என்று நான் எழுதிய கட்டுரையை துக்ளக் ஏனோ நிராகரித்துவிட்டது.



இன்னொரு விஷயமும் இப்போது குறிப்பிட விரும்புகிறேன்: நமது புண்ணிய தேசத்தில் நம்பிக்கைத் துரோகம் செய்து இந்திராவை உடனிருந்தே கொன்றவர்களை ஆண்டுதோறும் தியாகிகள் எனக் கொண்டாட அனுமதியுண்டு. ராஜீவ் காந்தியைச் சதி செய்து கொல்வதற்காக அவரை மட்டுமின்றி ஏராளமான அப்பாவிகளைக் கொன்றும், ஊனப்படுத்தியும் வினையாற்றியவர்களுக்கு வக்காலத்து வாங்குபவர்களுக்கு மேடையேறிப் புகழ்ந்து பேச வாய்ப்பு உண்டு (பிற்பாடு அப்படிபட்டவர்களுக்கு மத்திய மந்திரிசபையிலேயே இடமும் கிடைத்தது!). ஆனால் கோட்ஸேவுக்கு மாத்திரம் வெளிப்படையாக நினைவு தினம் கொண்டாடவோ அவர் செயலை அவரது கோணத்தில் ஆராய்ந்து மேடை போட்டுப் பகிரங்கமாகப் பேசவோ அனுமதி கிடைக்காது!


காந்திஜி கொலைச் சம்பவம் இது நாள் வரை ஒருதரப்பிலிருந்தே அறிமுகம் செய்துவைக்கப்பட்டுள்ளது. கொலையாளியை வெகு எளிதில் ஒரு மதவெறியராகச் சித்திரிப்பதோடு விஷயம் முற்றுப்பெற்றுவிடுகிறது. இதை வைத்துக் கொண்டு எவரும் எப்படியும் மனம் போன போக்கில் தூற்றித் திரிய முடிகிறது. இனியாகிலும் இவ்வாறான மேம்புல் மேய்தல் குறைந்த பட்சம் விவரம் மிக்க வாசகர்கள், வரலாற்றுப் பார்வை உள்ள பதிவாளர்களுக்கேனும் இருக்கலாகாது என்பதாலேயே மிக விரிவாக இதுகுறித்து எழுதினேன்.


சொந்தச் செலவில் தில்லியில் போய் காந்திஜி அமைதி நிறுவன விடுதியிலேயே தங்கியிருந்து ஆவணக்காப்பகங்களிலிருந்தும், நாதுராம் வினாயக கோட்ஸேயின் தம்பி கோபால் கோட்ஸேயிடம் உரையாடியும் திரட்டிய ஆதாரங்களின் அடிப்படையில் பதிவுசெய்யப்படும் தகவல்கள் இவை. வீட்டில் உட்கார்ந்துகொண்டு மேற்கொள்ளும் அரட்டை அல்ல. பாரதத்தின் பத்திரிகைகளுக்கு இம்மாதிரியான ஆய்வுகளை வெளியிடும் திராணியோ பொறுப்புணர்வோ இல்லாததால், ஆர்.எஸ்.எஸ். ஆதரவு இதழான ஆர்கனைசர் கூட 'காந்திஜி கொலையில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திற்குப் பங்கு இருப்பதுபோல் கண்மூடித்தனமாக அவப் பெயர் கற்பிக்கப்பட்டு வருவதால் இது பற்றிய ஆய்வுக்கட்டுரையைப் பிரசுரிப்போமாயின் காந்திஜியின் கொலையை நாம் நியாயப்படுத்துவதாகத் திசை திருப்பி விடுவார்கள் என்று சொல்லி, என்னை ஊக்குவிக்கவில்லை. இந்த ஆய்வுக்காக நான் உழைத்துச் சம்பாதித்த பணத்தில், இருபத்தைந்து ஆண்டுகளுக்குமுன் பத்தாயிரம் ரூபாய்க்கும் அதிகமாகவே செலவழித்து என் குடும்பத்தைக் கஷ்டப்படவைத்தேன்! எழுத்துத் துறையில் பலவாறாக உழைத்து ஏராளமாகச் சம்பாதிக்கத் தெரி ந்தவன். ஆனால் அப்படிச் சம்பாதிப்பதைக் குடும்பத்திற்கு ஒதுக்காமல் இவ்வாறெல்லாம் செலவழித்துவிட்டுப் பிறகு

சிரமப்படுபவனுங்கூட!


இறுதியாக இன்னொரு தகவலையும் தந்து முடிக்கிறேன்:


காந்திஜி கொல்லப்பட்டபோது அவரது மறைவுக்கு அதிகாரப் பூர்வமாக இரங்கல் தெரிவிக்காத ஒரேநாடு ஸ்டாலின் ஆளுகையில் இருந்த சோவியத் யூனியன்தான். அந்த சோவியத் யூனியனுடன்தான் காந்திஜியின் அரசியல் வாரிசான நேரு கூடிக் குலாவி, பாரதத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போடுவதும், சர்வதேச அரங்கில் பாரதம் ரஷ்யாவின் எடுபிடி என்று ஏளனம் செய்யப்படுவதற்கு ஏற்றாற்போல் வினையாற்றுவதுமாக இருந்தார்!

மறுபடியும் டோண்டு ராகவன். மலர்மன்னனுக்கு மீண்டும் நன்றி. இக்கட்டுரை திண்ணையில் வந்தது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

75 comments:

dondu(#11168674346665545885) said...

பதிவு என்னுடையதாக இருந்தாலும் இந்தக் கட்டுரை மலர் மன்னனுடையது. அதற்கு நானும் என் தரப்பில் பின்னூட்டம் தருவேன்.

"இப்படி வந்த அராபிய வியாபாரிகள், அதிக காலம் பெண் வாசனை இல்லாமல் இருக்க மாட்டாமல் உள்ளூர் ஹிந்து மலையாளப் பெண்களுடன் சம்பந்தம் வைத்துக் கொண்டார்கள். தாயகம் திரும்பும் தருணம் வந்ததும் அவர்களை அம்போ என்று விட்டுவிட்டு ஓடியும் போனார்கள்(இப்போதுகூட அராபியர்களிடையே இந்த வழக்கம் தொடர்வது தெரியும்தானே? தாற்காலிகத் திருமணம் செய்து, தலாக்கும், பிள்ளையும் ஒருசேரக் கொடுத்துவிட்டு அவர்கள் போய்க்கொண்டிருப்பதும், ஹைதராபாத், கேரளம், மேற்கு கர்னாடகம் ஆகிய இடங்களில் தகப்பன் முகம் தெரியாத பிள்ளைகளின் எண்ணீ¤க்கை முகமதிய சமூகத்தில் அவர்களுடைய காஜிகளின் சம்மதத்துடனேயே அதிகரித்துவருவதும் தெரிந்த விஷயமே அல்லவா?)"
அப்பாவி இசுலாமியப் பெண்களை அவர்கள் பெற்றோரே பலிகொடுப்பதும், துட்டு கொழுப்புடன் அரேபியர்கள் நம் நாட்டுப் பெண்களை இவ்வாறு சீரழிப்பதும், அதை அவர்கள் இசுலாமியர் என்பதால் கண்டிக்க துணிவின்றி இங்கு பலர் இருப்பதும் வெட்கக்கேடே.

"அகதிகள் முகாமைப் பார்வையிடத் தம் அருமை மகள் இந்திராவுடன் நேரு ஒருமுறை சென்றபோது, அகதி ஒருவன் இந்திராவின் சேலைத் தலைப்பை லேசாகப் பற்றி இழுத்தான். உடனே நேரு சீறிப் பாய்ந்து அவன் கன்னத்தில் அறைந்தார்.
"பண்டிட்ஜீ, உங்கள் மகளின் சேலைத் தலைப்பை லேசாகப் பிடித்து இழுத்ததற்கே இவ்வளவு ஆத்திரப்படுகிறீர்களே, எங்கள் தாயை, சகோதரியை, மனைவியை, மகளை, எங்கள் கண் எதிரில் பலர் கதறக் கதறப் பாலியல் பலாத்காரம் செய்தார்களே, எங்களுக்கு மட்டும் பொறுமை காக்க உபதேசம் செய்வது சரிதானா?'' என்று அந்த அகதி கேட்டதற்கு நேருவால் பதிலிறுக்க இயலவில்லை."
எந்த முகத்துடன் அவர் பதில் கூற இயலும்? மேலும் அவருக்கே கூட காந்தி கூறியது மனத்தளவில் ஒப்புதலாக இருந்திருக்காது என்றுதான் கூறுவேன்.

"காந்திஜி கொல்லப்பட்டபோது அவரது மறைவுக்கு அதிகாரப் பூர்வமாக இரங்கல் தெரிவிக்காத ஒரேநாடு ஸ்டாலின் ஆளுகையில் இருந்த சோவியத் யூனியன்தான். அந்த சோவியத் யூனியனுடன்தான் காந்திஜியின் அரசியல் வாரிசான நேரு கூடிக் குலாவி, பாரதத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போடுவதும், சர்வதேச அரங்கில் பாரதம் ரஷ்யாவின் எடுபிடி என்று ஏளனம் செய்யப்படுவதற்கு ஏற்றாற்போல் வினையாற்றுவதுமாக இருந்தார்!"
அதே ஸ்டாலின் இறந்த போது இந்திய அரசு 2 நாள் விடுமுறை விட்டது. சோவியத் யூனியனிலோ அரை நாள்தான் விடுமுறை. இந்தியா அசடு வழிந்ததுதான் மிச்சம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ஜெ. ராம்கி said...

//ஆக, காந்திஜி தமக்கு முகமதியர்களின் அங்கீகாரமும் கிட்ட வேண்டும் என்பதற்காக மேற்கொண்ட முயற்சி ஹிந்துக்களுக்குப் பெரும் பாதகமாக முடிந்தது. அப்படியும் காந்திஜிக்கு ஆசைவிடவில்லை. போக்கிரித்தனம் செய்த மாப்ப்¤ள்ளமார்களை மகத்தான தியாகிகளாக வர்ணித்தார்! அப்படியாகிலும் முகமதியர் மனங்களைக் கவர முடியாதா என்கிற ஆதங்கத்தில்//

Impulsive statement. I will try to throw some light on this issue.

dondu(#11168674346665545885) said...

வாருங்கள் ரஜினி ராம்கி அவர்களே. இதில் வேடிக்கை என்னவென்றால் சோ அவர்கள் மீட்டிங்கிலும் கிலாஃபத் நிகழ்ச்சி தொடப்பட்டது. அந்த இயக்கத்தை காந்தி அவர்கள் தொடங்கக் கூடாது என்று அவருக்கு தீவிரமாக ஆலோசனை கூறியவர் முகம்மது அலி ஜின்னா அவர்களே. இது பற்றி நான் துக்ளக் 36-ஆம் ஆண்டு விழாவைப் பற்றி எழுதிய பதிவில் குறித்துள்ளேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

வணக்கம் ஜயஸ்ரீ அவர்களே,

மாப்பிள்ளமார்கள் இனக்கலவரத்தை நாகூர் ரூமி சௌகரியமாக மறந்து விட்டார் என்றே தோன்றுகிறது.

கிலாஃபத் போராட்டம் வேண்டாம் என்ற ஜின்னா கூறியதை ஏற்காது குடுகுடுவென்று போய் இவர் செயலாற்றியதன் மூலம் இவரும் ஒரு அரசியல்வாதியே என்பதை நிரூபித்து விட்டார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

நல்லடியார் said...

நீங்கள் சார்ந்த பிராமண சமூகத்தின் தீவிரவாத! முழக்கங்கள் குறித்து வலைப்பூக்களில் விவாதித்துக் கொண்டிருக்கும் சூழலில் மாவீரர் கோட்சே, இந்துமத விரோதி!!! காந்தியாரை கொன்றதை நியாயப்படுத்தி (நான் நியாயப்படுத்தவில்லை; மறுபதிவுதான் செய்தேன் என்று மறுப்பீர்கள்) எழுதி இருப்பதன் நோக்கம் புரிகிறது.

தமிழிணைய வாசகர்கள் மத்தியில் தன் பெயருக்கு பொருத்தமில்லமல் ஆரோக்கியமற்று இஸ்லாத்திற்கு எதிராக அவதூறாக எழுதி வந்தவருக்கும் உங்கள் போன்றோரின் சிந்தனைகளுக்கும் நூலிழை வித்தியாசம்தான் தெரிகிறது.

உங்கள் மறுபதிப்பிற்கு வரிக்கு வரி மறுப்பு எழுதலாம். ஏன் தேவை இல்லாத வேலை என்று சில கருத்துக்களை மட்டும் வைக்கிறேன்.

//போர்க்களத்தில் எதிரெதிர் தரப்பு சிப்பாய்கள் ஒருவரையொருவர் எதிர்கொள்கையில், ஒருவரை இன்னொருவர் கொன்றும் போடுகிறபோது, அதில் ஒருவர் நிராயுதபாணியாகவே இருந்தாலும் கூட அது ஒரு கொலைக் குற்றமாகக் கருதப்படுவதில்லையே, ஏன்?//

அரசியல் காரணங்களுக்கான போர்களில், இராணுவம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று உலகலாவிய ஒப்பந்தம் இருக்கிறது. இஸ்லாம் பரவத் தொடங்கியபோது முஸ்லிம்களுக்கு எதிரானப் போர்களில் எதிரிகளில் நிராயுதபாணிகளையும், பெண்களையும், குழந்தைகளையும், மதகுருமார்களையும் கொல்வதை முஹம்மது நபிகள் தடை செய்திருக்கிறார்கள்.

2:190 உங்களை எதிர்த்துப் போர் புரிபவர்களுடன் நீங்களும், அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள். ஆனால் வரம்பு மீறாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை.

ஸஹீஹ் புஹாரி 3014. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் பங்கெடுத்த புனிதப் போர்களில் ஒன்றில் பெண்ணொருத்தி கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டாள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதைக் கண்டித்தார்கள்.

அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் மீதும் இராக் மீதும் தொடுத்த போர்களிலும் இஸ்ரேல் பாலஸ்தீன மண்ணின் மைந்தர்கள் மீது கட்டவிழ்த்து விட்ட அடக்குமுறைகளிலும் மட்டுமே நிராயுத பாணிகளைக் கொல்வது குற்றமாகக் கருதப்படவில்லை.

//காந்திஜிக்கு ஹிந்துக்களின் பேராதரவு, அவரே எதிர்பாராத வண்ணம் அரசியல் தலைமை ஸ்தானத்தை எளிதில் தந்துவிட்டது. எனினும் காந்திஜிக்குத் தேவைப்பட்டது பாரத மக்களனைவர் சார்பிலுமான ஒட்டுமொத்த பிரதிநிதித்துவம், அல்லது தலைமை ஸ்தானம்.தம்மை பாரதநாட்டவர் அனைவர் சார்பிலும் பேசும் அரசியல்தலைவராகத்தான் அவர் முன்னிலைப் படுத்திக்கொண்டார். //

காந்திஜி அவர்கள் சுயநலமாக ஒட்டுமொத்த பிரதிநிதித்துவத்தை எதிர்பார்த்து சுதந்திரத்திற்குப் போராடியிருந்தால் விடுதலையடைந்த போது நாட்டின் பிரதமராகவல்லவா ஆகி இருக்க வேண்டும்? கட்டுரையாளர் மலர்மன்னன் அதற்கும் ஏதாவது சப்பைக் காரணத்தை சொல்லத் தவறிவிட்டார்.

//இது ஹிந்துக்கள் மொத்த மக்கள் தொகையில் தொண்ணூறு சதம் இருக்கிற, ஹிந்துஸ்தானம் என்றே அறியப்படுகிற தேசமாதலால்...காந்திஜியால் ஹிந்துஸ்தானத்தில் ஹிந்துக்களுக்குச் சேதாரம். (தாம் தாழ்த்தப்பட்டோரின் தலைமையையும் பெறவேண்டும் என்பது உறைத்ததால்தான் அவர்களின் பக்கமும் அவர் கவனம் செலுத்தத் தொடங்கி, நாமனைவருமே கடவுளின் குழந்தைகளென்ற போதிலும் ஹரியாகிய இறைவனின் ஜனங்கள் என அவர்களுக்குப் பெயர் சூட்டி, முழு மூச்சில் அவர்களுக்கான ஆலயப் பிரவேசம் போன்ற இயக்கங்களையும் ஆரம்பித்துவைத்தார்).//

சுதந்திரப் போராட்ட காலங்களில் பாகிஸ்தான் பங்களாதேஷை உள்ளடக்கிய இந்தியாவில் இந்துக்கள் 90% என்ற கூற்றில் உண்மை இல்லை. காந்திஜியால் ஹிந்துக்களுக்கு சேதாரம் என்று சொல்லும் கட்டுரையாளர் மலர்மன்னன், முதலில் இந்துக்கள் என்றால் யார் என்று தெளிவுபடுத்தி விட்டு தனது பிதற்றல்களை தொடரட்டும்.

//நமது மேற்குக் கடலோரம், எப்போதுமே மேற்கிலிருந்து வரும் மாற்றுச் சமயத்தினர் கரை ஒதுங்கி, ஹிந்துக்களுக்கே இயல்பான சமரச மனப்பான்மை, பெருந்தன்மை, ஆகியவற்றின் பயனாக, அந்நியர்கள் பத்திரமாக வசிக்கத் தொடங்குவதற்கு வசதியான சரணாலயமாக இருந்து வந்துள்ளது. தம் தாயகத்திலிருந்து விரட்டப்பட்ட யூதர்கள், பார்சிகள், வியாபாரம் செய்ய வந்த அராபியர், ஐரோப்பிய வணிகர், கிறிஸ்தவ மதப் பிரசாரகர், இப்படிப் பலதரப்பட்டோருக்கும் நுழைவு வாயிலாக அது இருந்து வந்துள்ளது.//

மத்திய ஆசியாவிலிருந்து கால்நடைகளை மேய்த்தவாறு இந்தியாவை ஆக்கிரமித்த பார்ப்பனர்களுக்கும் நம் இந்தியா அடைக்கல பூமியாகவே இருந்திருக்கிறது என்பதை கட்டுரையாளர் வெகு சமார்த்தியமாக மறைத்திருக்கிறார்.

நன்றி.

dondu(#11168674346665545885) said...

வாருங்கள் நல்லடியார் அவர்களே,

"நீங்கள் சார்ந்த பிராமண சமூகத்தின் தீவிரவாத! முழக்கங்கள் குறித்து வலைப்பூக்களில் விவாதித்துக் கொண்டிருக்கும் சூழலில் மாவீரர் கோட்சே, இந்துமத விரோதி!!! காந்தியாரை கொன்றதை நியாயப்படுத்தி (நான் நியாயப்படுத்தவில்லை; மறுபதிவுதான் செய்தேன் என்று மறுப்பீர்கள்) எழுதி இருப்பதன் நோக்கம் புரிகிறது."

காந்தியாரைக் கொன்றதை மலர்மன்னனும் நியாயப்படுத்தவில்லையே. இத்தனை ஆண்டுகளாக ஒருதலைபட்சமாக பேசிவந்த நிலையில் மறுபக்கத்தையும் பார்க்கும் முயற்சியே அது. மேலும் என் ஜாதியை இங்கு எதற்கு இழுக்க வேண்டும்? அதை பற்றிப் பேச என்னுடைய பிராம்மண சங்கத்தை பற்றிய சில வெளிப்படையான எண்ணங்கள் பதிவுக்கு வாருங்களேன்.

சவுதி அரேபிய பணக்காரர்கள் இங்கு வந்து இசுலாமிய இளம்பெண்களை (மைனர் வயதினரும் சிலர் அதில் உண்டு) ஒப்பந்த முறையில் மணம் செய்து அவர்களை பிறகு அம்போ என விட்டு போவது பற்றியும் அப்பெண்களின் பெற்றோர்களே அதற்கு துணைபோவது பற்றியும் பற்றி ஏதாவது சமாதானம் கூற முடிந்தால் செய்யுங்களேன். மாப்பிள்ளமார்கள் பற்றி உங்கள் எண்ணம் என்ன?

இங்கு முகம்மது நபி அவர்களை பற்றி ஏன் திடீரென்று பேச்சு வந்தது?

"மத்திய ஆசியாவிலிருந்து கால்நடைகளை மேய்த்தவாறு இந்தியாவை ஆக்கிரமித்த பார்ப்பனர்களுக்கும் நம் இந்தியா அடைக்கல பூமியாகவே இருந்திருக்கிறது என்பதை கட்டுரையாளர் வெகு சாமர்த்தியமாக மறைத்திருக்கிறார்."
இது உண்மை, உண்மையில்லை என்றெல்லாம் இப்போது சர்ச்சை நடந்து கொண்டிருக்கிறது. வெள்ளையர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி இது. அதற்குள் நான் இங்கு போக விரும்பவில்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

சுட்டுவிரல் said...

//"பண்டிட்ஜீ, உங்கள் மகளின் சேலைத் தலைப்பை லேசாகப் பிடித்து இழுத்ததற்கே இவ்வளவு ஆத்திரப்படுகிறீர்களே, எங்கள் தாயை, சகோதரியை, மனைவியை, மகளை, எங்கள் கண் எதிரில் பலர் கதறக் கதறப் பாலியல் பலாத்காரம் செய்தார்களே, எங்களுக்கு மட்டும் பொறுமை காக்க உபதேசம் செய்வது சரிதானா?'' என்று அந்த அகதி கேட்டதற்கு நேருவால் பதிலிறுக்க இயலவில்லை. //

அப்பாவிகளை கொன்று குவிப்பவர்களும், மஹாத்மாக்களை கொல்பவர்களும் காரணங்களில் வேறுபடுவதில்லை போலும்.

மற்றபடி, 'பாரத', 'முகமதிய' போன்ற வார்த்தைப் பிரயோகங்களே மலரினுள் இருக்கும் 'சங்க முள்ளை' வெளிக்காட்டி விட்டதாக கருதுவதால், இங்கு விவாதம் என்பது வெற்றிகரமான திசைத்திருப்பலாகவே அமையும். நன்றி

aathirai said...

நீங்கள் சார்ந்த பிராமண சமூகத்தின் தீவிரவாத! முழக்கங்கள் குறித்து வலைப்பூக்களில் விவாதித்துக் கொண்டிருக்கும் சூழலில் மாவீரர் கோட்சே, இந்துமத விரோதி!!! காந்தியாரை கொன்றதை நியாயப்படுத்தி (நான் நியாயப்படுத்தவில்லை; மறுபதிவுதான் செய்தேன் என்று மறுப்பீர்கள்) எழுதி இருப்பதன் நோக்கம் புரிகிறது.



புரிந்தும் ஏன் வந்து பதில் கொடுக்கிறீர்கள்?

எனக்கு தெரிந்த பர்சனல் கதையை அவசியம் இங்கு சொல்ல வேண்டும்.
இந்த பிரிவினை சமயத்தில் என் பெற்றோர் ஒரு பெரும்பான்மை முஸ்லீம்
தெருவில் குடியிருந்தனர். சமீபத்தில் கூட இந்த வீட்டை சென்று பார்த்தேன்.
இந்த கலவரத்தின்போது முஸ்லிம் பெண்களை இந்த வீட்டிலும் மற்ற இந்து
வீடுகளிலும் பாதுகாப்புக்காக பூட்டிவைத்திருந்தார்கள் என்று என் அம்மா
அடிக்கடி சொல்லி கேட்டிருக்கிறேன். எதற்காக என்று உங்களுக்கே புரியும்.
இந்தத் தெருவில் இந்து வீடுகளுக்கு வெளியே வசதியாக திரிசூலம் மார்க்
போட்டு வைத்திருப்பதையும் சமீபத்தில் கண்டேன். இதுவும் எதற்காக என்று
சொல்லத் தேவையில்லை.

dondu(#11168674346665545885) said...

"அப்பாவிகளை கொன்று குவிப்பவர்களும், மஹாத்மாக்களை கொல்பவர்களும் காரணங்களில் வேறுபடுவதில்லை போலும்."
கோட்ஸே கொலை செய்ததை யாரும் இங்கு நியாயப்படுத்தவில்லை. ஆனால் ஒன்றை மட்டும் மறக்கக் கூடாது. அவன் காந்தியருகில் இருந்தவர்கள் யாரும் காயப்படக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தான்.

ஸ்ரீபெரும்பதூரில் நடந்தது போல பல அப்பாவிகளைக் கொல்லவில்லை. கொன்றவர்களின் தலைவன் செய்தது போல பின்னாளில் அது ஒரு வெறும் துன்பியல் சம்பவமே என்று இங்கு யாரும் பசப்பவில்லை. அவர்களுக்கு வக்காலத்து இப்போதும் வாங்குபவர்களை போல யாரும் இங்கே சப்பைக்கட்டும் கட்டவில்லை.

"மற்றபடி, 'பாரத', 'முகமதிய' போன்ற வார்த்தைப் பிரயோகங்களே.."
பாரத என்பதே வேண்டாம், நாங்கள் முகம்மதியர்கள் என்று தனியாகப் போனதற்கப்புறம் இப்போது ஏன் ஃபீலிங்க்ஸ் எல்லாம்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

ஆதிரை அவர்களே,

நீங்கள் கூறியது இரு பக்கங்களிலும் நடந்தது. லாஹூர், கராச்சி ஆகிய நகரங்களில் இந்துக்களைக் காப்பாறிய இசுலாமிய பக்கத்து வீட்டுக்காரர்களுக்கும் பஞ்சமில்லை.

அதே போல தில்லியில் சீக்கியர்களை கொன்ற கலவரத்தின்போதும் பல சீக்கியர்கள் பக்கத்து வீட்டு இந்துக்கள் மற்றும் இசுலாமியரால் காப்பாற்றப்பட்டனர். ஒன்று மட்டும் நிச்சயம். வேற்றுமதக்காரனும் நம்மைப் போல சுகதுக்கங்களால் பாதிக்கப்படும் மனிதந்தான் என்பதை உணர்ந்தாலே பாதி துவேஷம் அகன்று விடும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

"புரிந்தும் ஏன் வந்து பதில் கொடுக்கிறீர்கள்?"
பதில் தாராளமாகக் கொடுக்கட்டும் ஆதிரை அவர்களே. பதிலளிக்கப்படும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்

இப்னு பஷீர் said...

தமிழ் இணையத்தில் முஸ்லிம்களை வம்புக்கு இழுப்பதற்கென்றே சிலர் இயங்கிக் கொண்டிருக்கையில், டோண்டு ராகவன் போன்ற மூத்த வலைப்பதிவர்களும் இதை செய்யத்தான் வேண்டுமா?

மலர் மன்னன் என்பவரின் பின்புலம் எனக்கு பரிச்சயம் இல்லாவிடினும், அவரது இந்த ‘திண்ணை’ கட்டுரை மூலம் அவரைப் பற்றி ஓரளவுக்கு புரிந்து கொள்ள முடிகிறது.

கட்டுரையின் மையக்கருத்து என நமக்கு புலப்படுவது இதுதான்; ‘இந்த ஹிந்துஸ்தானம் ஹிந்துக்கள் பெருவாரியாக வசிப்பதால் ஹிந்துக்களுக்கே சொந்தமானது. ஹிந்துக்களின் நலனுக்கு பாதகமாக யாராவது நடக்க முயற்சித்தாலோ, அல்லது அவ்வாறு அவர்கள் நடக்க முயல்வார்கள் என ஒரு ‘தீவிர’ ஹிந்து சந்தேகப்பட்டாலோ, அவர்கள் கதி ‘அதோகதி ‘தான். சம்பந்தப்பட்ட நபர் பெரும்பாலான ஹிந்து மக்களின் அபிமானத்தைப் பெற்ற தலைவராக இருந்தாலும் சரியே. அந்த தீவிர ஹிந்து செய்ய வேண்டியதெல்லாம், அருகில் இருப்பவர்களையெல்லாம் தள்ளிவிட்டு தான் குறி வைத்த அந்த நபரை மட்டும் தாக்குவதுதான். முடியுமானால் ‘எனது செயலுக்கு மன்னியுங்கள்’ என்பதுபோல் முன்கூட்டியே வணங்கிவிட்டு தாக்கலாம். ஆக, மோகன்தாஸ் என்ற அந்த முதியவர் பரிதாபமாக உயிரை விட்டதற்கு முழு முதற் காரணம் அவரது நடவடிக்கைகள்தான். ஹிந்துக்களின் ஹிந்துஸ்தானத்திற்கு சம்பந்தமேயில்லாத முகமதியர்களுக்கும், தலித்துகளுக்கும் இவர் ஏன் பரிவு காட்ட வேண்டும்? அதற்கான கூலியைத்தான் அவர் பெற்றுக் கொண்டார்’.

இப்படி ஒரே ஒரு பத்தியில் சொல்லக்கூடிய சங்கதியை, மலர் மன்னன் அனுபவம் வாய்ந்த எழுத்தாளராக இருப்பதால், ஆங்காங்கு உப்பு, உறைப்பு சேர்த்து ஒரு சுவையான முழு நீள கட்டுரையாக்கி இருக்கிறார்.

கட்டுரையை படித்ததும் எனக்குள் எழுந்த கேள்விகள் சில:

* இந்த கட்டுரையை இப்போது ம.ம. எழுந்த என்ன அவசியம் நேர்ந்தது? ‘தியாகி’ கோட்ஸேவின் நினைவுநாள் எதுவும் வருகிறதா?

* ‘பாரத தேசத்துப் பெரும்பாலான அப்பாவி ஹிந்து ஜனங்களும், ஓரளவு கணிசமான கிறிஸ்தவர்களும், மிகமிகக் குறைந்த எண்ணிக்கையிலான முகமதியரும்’ என்ற சொற்றொடரில் எந்த ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பை ம.ம. குறிப்பிடுகிறார்? இந்த ‘பெரும்பாலான அப்பாவி ஹிந்து ஜனங்களி’ல்’ தாழ்த்தப்பட்டவர்கள் எனப்படும் தலித்துகள் எத்தனை சதவிகிதம்? அவர்களை தாழ்த்தி வைத்திருக்கும் ‘உயர்த்தப்பட்டவர்கள்” எத்தனை சதவிகிதம்?

* ‘நமது தேசம் ஹிந்துக்கள் பெரும்பாலானவர்களாக உள்ள ஹிந்துஸ்தானம் என அறியப்பட்ட தேசமாதலால்…’ ‘இது ஹிந்துக்கள் மொத்த மக்கள் தொகையில் தொண்ணூறு சதம் இருக்கிற, ஹிந்துஸ்தானம் என்றே அறியப்படுகிற தேசமாதலால்…’ திரும்பத்திரும்ப சொல்லப்பட்ட இந்த வாக்கியங்கள் மூலம் மம சொல்ல வருவது என்னவென்றால், ஹிந்துக்கள் அதிகமாக வசிக்கும் பிரதேசம் என்பதாலேயே இந்த நாடு ஹிந்துஸ்தானம் என அறியப்படுகிறது.

ஆனால் வரலாறு வேறு விதமாக சொல்கிறது. இது சிந்து நதிக்கு அப்பால் இருக்கும் பிரதேசம் என்பதால் மொகலாயர்கள் இதனை ‘சிந்துஸ்தான்’ என அழைக்க ஆரம்பித்தனர். அந்த பெயரே நாளடைவில் ‘ஹிந்துஸ்தான்’ ஆயிற்று என்பதாக மதன் எழுதிய ‘வந்தார்கள், வென்றார்கள்’ புத்தகத்தில் படித்த ஞாபகம்.

இங்கு மம-விற்கு சில விஷயங்களை நினைவு படுத்த வேண்டியிருக்கிறது. இந்த ‘ஹிந்துஸ்தானில்’ வசிக்கும் முஸ்லிம்கள் (மம-வின் வார்த்தைகளில் சொல்வதானால் முகமதியர்கள்) அனைவரும் கைபர் போலன் கணவாய் வழியாகவோ அகதிகளாகவோ இந்நாட்டிற்குல் நுழைந்தவர்கள் அல்லர். இவர்கள் எண்ணிக்கையில் எவ்வளவுதான் சிறுபான்மையினராக இருந்தாலும் இந்த நாட்டிலேயே பிறந்து, வளர்ந்து வாழ்ந்து வரும் இந்த மண்ணின் மைந்தர்கள். பெரும்பான்மையான தன் சக மனிதர்களை தாழ்த்தி வைத்ததன் மூலம் தங்களைத் தாங்களே ‘உயர்த்தி வைத்துக் கொண்ட’ ஒரு சிறு பிரிவினருக்கு இந்நாட்டில் என்ன உரிமைகள் இருக்கின்றனவோ, அதைவிட ஒரு படி அதிகமாகவே இந்த இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்றும் இந்தியர்களுக்கு இருக்கிறது.

* ‘மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் அரசியல் நடவடிக்கைகள் தொடக்கத்திலிருந்தே அவருடைய மிகப் பெரும்பாலான பக்தர்களான ஹிந்துக்களின் நலனுக்குப் பாதகமாகவே இருந்தன.’ - மகாத்மா காந்திஜி ஏன் இவ்வாறு செய்தார்? பெரும்பான்மையான ஹிந்துக்களுக்கு பாதகமாக காரியமாற்றி அவர் என்ன பலனை அடைந்தார்? அவரது நடவடிக்கைகள் பெரும்பாலான ஹிந்துக்களுக்கு பாதகமாக இருந்தும் அவர்கள் ஏன் காந்திஜியின் பக்தர்களாக இருந்தார்கள்? அவர்கள் ஏன் ‘மஹாத்மா’ என்றும் ‘பாபு’ என்று அவர் மீது பேரபிமானம் செலுத்தினார்கள்? கோட்ஸே, சாவர்க்கர் போன்ற வெகு சிலரைத்தவிர மற்ற பெரும்பான்மையான இந்துக்கள் அனைவரும், காந்திஜி தங்களுக்கு துரோகம் இழைக்கிறார் என்பதைக்கூட புரிந்து கொள்ள இயலாத அடிமுட்டாள்களாக இருந்தார்கள் என்கிறாரா மம?

* ‘பிரதமர் பதவி பெறுவதற்காகத் தேசம் துண்டாடடப் படுவதை ஒப்புக்கொண்ட நேருவுக்கு தேசமெங்கணும் சிலைகள், சாலையின் பெயர்கள், குழந்தைகள் பெயரால் பிறந்த தினக் கொண்டாட்டங்கள்!’ - ஆக, தேசம் துண்டாடப்பட்டதில் பலனடைந்தது நேருஜிதான், காந்திஜி அல்ல. நியாயமாக பார்த்தால் கோட்சேயின் கோபம் நேருஜியின் மீதல்லாவா சென்றிருக்க வேண்டும்? தள்ளாத வயதுடையவராக இருந்த காந்திஜியை ஏன் தாக்க வேண்டும்?

* ‘..ஆனால் எப்படியும் பாகிஸ்தானாக வரையறுக்கப்பட்ட பகுதியில் ஹிந்துக்களின் என்ணிக்கையைக் குறைத்துக் காட்டுவதற்காக அவர்கள் அடித்துக் கொல்லப்பட்டோ, துரத்தப்பட்டோதான் இருப்பார்கள். ஏனென்றால் ஜிஹாத் முகமதியருக்கு மிகவும் அவசியமான சமயக் கடமையாகும்.’ - இரு நாடுகளுக்கு இடையிலான அரசியல் பிரச்னையில், அதிலும் பெரும்பான்மை ஹிந்துக்களின் தலைவர்களான காந்திஜி, நேருஜி ஆகியோரின் ஒப்புதலுடன் ஏற்பட்ட பிரிவினையில், ‘ஜிஹாத்’ எங்கிருந்து வந்து நுழைந்தது அல்லது நுழைக்கப்பட்டது?

* ‘மஹாத்மா சொல்லைத் தட்டாத சில ஹிந்துக்களும் அதற்குத் தயாராக, பாபுதான் சொல்லிவிட்டாரே, அவர்கூடப் போகலாம் என்று துணிந்திருக்கக் கூடும். அப்படி அவர்கள் திரும்பிச் சென்றிருப்பின் என்ன நேர்ந்திருக்கும்? காந்திஜி அவர்களைப் பாகிஸ்தானில் விட்டு வந்த மறுகணமே அவர்களின் மானம் மூதலிலும் உயிர் அதன் பிறகும் பறிக்கப்பட்டிருக்கும் என்பதல்லாமல் வேறென்ன? ‘

இது போல ஹைபோதடிகல் (hypothetical) கேள்விகள் நமக்கும் ஓரிரண்டு தோன்றியது;
- மஹாத்மாவை அவர் ஒரு முதியவர் என்று கூட பாராது கொடூரமான முறையில் சுட்டுக்கொன்றவன் ஒரு முஸ்லிமாக இருந்திருந்தால், என்ன நிகழ்ந்திருக்கும்? சிறுபான்மையினரான முஸ்லிம்கள் மேலும் சின்னஞ்சிறுபான்மையினராகி இருப்பார்களே! அதைபற்றி மம கட்டுரை எழுத நேர்ந்தால் எப்படி எழுதியிருப்பார்?

- நல்ல வேளையாக நரேந்திரமோடி குஜராத்திற்கு மட்டும் முதல்வராக இருக்கிறார். அவரே முழு இந்தியாவிற்கும் பிரதமராக இருந்தால் என்னவாகி இருக்கும்? எத்தனை முகமதிய கர்ப்பிணிகளின் வயிறுகள் கிழிபட்டிருக்கும்? எத்தனை கிருஸ்துவ பிரச்சாரகர்கள் குடும்பத்துடன் எரிக்கப்பட்டிருப்பார்கள்? நினைத்தாலே குலை நடுங்குகிறது. இதையும் நியாயப்படுத்தி மம கட்டுரை எழுதியிருப்பார். அவர்தான் அனுபவம் வாய்ந்த எழுத்தாளர் ஆயிற்றே!

* கட்டுரையின் ஆரம்பத்தில் மம இவ்வாறு குறிப்பிடுகிறார்; ‘போர்க்களத்தில் எதிரெதிர் தரப்பு சிப்பாய்கள் ஒருவரையொருவர் எதிர்கொள்கையில், ஒருவரை இன்னொருவர் கொன்றும் போடுகிறபோது, அதில் ஒருவர் நிராயுதபாணியாகவே இருந்தாலும் கூட அது ஒரு கொலைக் குற்றமாகக் கருதப்படுவதில்லையே, ஏன்?’

ஏனென்றால், அவர்களில் ஒருவர் நிராயுதபாணியாக இருந்தாலும்கூட, அது போர்க்களம் என்பதாலும், அவர்களின் நோக்கம் போரிடுவதுதான் என்பதாலும், எதிரியை தான் தாக்காவிட்டால் அவன் தன்னை தாக்கிவிடுவான் என்ற நிதர்சனத்தை உணர்வதாலும், அதில் ஒருவர் கொல்லப்பட்டால் அது கொலைக்குற்றமாக கருதப்படுவதில்லை.

ஆனால், மகாத்மா காந்தியை கோட்ஸே சுட்டது போர்க்களத்தில் அல்ல; மகாத்மா கோட்ஸேவை தாக்குவதற்காக துப்பாக்கி ஏந்தி இருக்கவில்லை; அவனை தாக்கும் நோக்கமும் காந்திஜிக்கு இருந்திருக்க வாய்ப்பில்லை; அவன் தன்னை தாக்கப் போகிறான் என்பதைக்கூட அவர் உணர்ந்திருக்கவில்லை. கோட்ஸே இவ்வாறு நடந்து கொண்டது கடைந்தெடுத்த பச்சை நம்பிக்கைத் துரோகமே அல்லவா?

‘அந்த இரு மனுஷர்களும் ஒருவரை யொருவர் முன்பின் அறியார். அவர்களில் ஒருவரால் மற்றவருக்கு மரணமே சம்பவித்தாலும், அதற்கு சொந்தக் காரணத்தின் அடிப்படையிலான உள்நோக்கம் ஏதும் இல்லாததால் அது ஒரு கடமையின்பாற்பட்ட கருமமாக அங்கீகரிக்கப்படுமேயன்றி மரண தண்டனை விதிப்பதற்கான குற்றமாகக் கொள்ளப்படமாட்டாது.’

கவனிக்கவும், மம எடுத்தாண்டிருக்கும் உதாரணத்தையே நான் மேற்கோள் காட்டுகிறேன். போர்களத்தில் சந்திக்கும் இரு தரப்பு வீரர்களும் தாக்கிக் கொள்வதற்கு சொந்தக்காரணமோ, உள்நோக்கமோ இருக்காது. மாறாக, அவர்கள் நாட்டு அரசாங்கங்கள் எடுத்த முடிவை, அவரவர்களின் படைத்தலைவர்களின் கட்டளையை தம் உயிரைக் கொடுத்தாவது அங்கு நிறைவேற்றுவார்கள். அப்படியானால், கோட்ஸேயின் ‘அரசாங்கம்’ எது? அவனது படைத்தலைவர்கள் யார் யார்? அவர்களின் எந்த கட்டளையை அவன் செயல் படுத்தினான்?

மேலும், கட்டுரையின் இறுதியில் மம இவ்வாறு சொல்வது அர்த்தமிழந்து போகிறது, ‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ என்பது போல; ‘மேலும், எழுதிவைத்துக் கொள்ளுங்கள், இந்த வித்தியாசத்தை — இந்த விஷயத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரியக்கமோ, ஹிந்து மஹா சபையோ, சாவர்கர்ஜியோ எடுத்த முடிவை அவர் செயல் படுத்தவில்லை.’

எது எப்படி இருப்பினும், மம தான் சொல்ல வந்த கருத்துக்களை இந்த கட்டுரையில் ஒருவாறு சொல்லி முடித்து விட்டதாகவே தோன்றுகிறது. ஹிந்துஸ்தான் ஹிந்துக்களுக்கே உரித்தானது. கோட்ஸே செய்தது தப்பே இல்லை. காந்திஜி ஹிந்துக்களுக்கு துரோகம் இழைத்தவர். மகாத்மா என அழைக்கப்பட தகுதியில்லாதவர், போன்ற கருத்துக்களோடு மம இஸ்லாம் மீதும் முஸ்லிம்கள் மீதும் அவருக்கு இருக்கும் காழ்ப்புணர்ச்சியையும் திறம்பட வெளிப்படுத்தியுள்ளார்.

எதற்கெடுத்தாலும் முஸ்லிம்களை வம்புக்கு இழுப்பது சிலருக்கு வாடிக்கையாகி விட்டது. அது முஸ்லிம்களுக்கு பழகியும் போய்விட்டது.

அன்புடன்
இப்னு பஷீர்

http://ibnubasheer.blogsome.com/2006/01/16/ghandhi-and-kotse/

நண்பன் said...

ஒரு யுத்த தர்மத்தை எடுத்து, அதை சாதாரண மக்கள் கூடும் இடத்தில், தான் யுத்தத்தில் இருக்கிறோம் என்ற அறிதல் கூட இல்லாத ஒருவர் மீது பிரயோகிப்பதை நியாயப்படுத்த ஒருவர் முனைந்திருக்கிறார்.

மலர்மன்னன் நியாயப்படி, மீண்டும் இந்த விஷயங்கள் விவாதிக்கப்படவேண்டும் - சரிதான். மீண்டும் மீண்டும் ஒரு விவாதத்திற்கு ஒரு விஷயம் உட்படுத்தப்படுவது என்பதில் தவறில்லை. ஆனால், அந்நாளில் நடந்த ஒரு சம்பவத்தைப் பிற்காலத்தில் நடந்த சில சம்பவங்களோடு ஒப்பிட்டு, எதை நிறுவ முயற்சிக்கிறார்?

கோட்ஸே குற்றவாளி என கோர்ட் முறைப்படி தீர்ப்பளித்து விட்டது. அவர் குற்றவாளி தான் என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். ஆனால், அவர் குற்றவாளியே இல்லை என்றல்லவா வாதிடுகிறார்கள்? அவர் குற்றவாளி தான். அந்த குற்றங்களுக்கான காரணங்கள் என்ன என்பதை தான் ஆராய வேண்டுமே தவிர, குற்றவாளியே அல்ல என்று வாதிடுவது நியாயம் அல்ல!! அவர் குற்றம் செய்ததற்கான நியாய அநியாயங்களை எடுத்துச் சொல்லுங்கள் - ஆனால், அதை விட்டு விட்டு, அவர் புகழ் பாடக் கூடாது, அவர் பற்றி மேடை போட்டு பேசக் கூடாது என்று சொல்வது இந்த தேசத்தின் மீது இந்துத்வா தொடுக்கும் வெளிப்படையான தாக்குதல். அதற்கு ஆதரவாகப் பேசுபவர்கள் இந்த தேசத்தினைத் தங்கள் சுயநலங்களுக்காக மீண்டும் மீண்டும் பிளக்கத் தான் செய்வார்கள். அந்தப் பழியை அப்பாவிகள் மீது போட்டு தாங்கள் தேச பக்தர்கள் என்று தாங்கள் விளைவிக்கும் ஊறுகளையெல்லாம் மறைத்துப் பெருமை பேசுவார்கள். ஆனால், வரலாறு இந்தப் போலிகளை எல்லாம் தவிடு பொடியாக்கி விடும். சமீபத்திய உதாரணம் - அதவானியின் பாக்கிஸ்தான பயணத்தின் போது அவர் ஒப்புக் கொண்ட சில உண்மைகள் - Indian politicians demonised Jinnah for their own motives.

மலர் மன்னனின் கருத்துப் படி காந்திஜிக்கு அந்த மோடிவ் கிடையாது. அவர் முகமதியர்களை ஆதரித்தார்? பின்னர் யாருக்கு? நேருவின் அமைச்சரவையில் இருந்த இந்துத்வா வாதி யார் என்பது சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. அத்வானி அன்று ஒப்புக் கொண்டமை உண்மையை அவசரம் அவசரமாக மறுக்க வேண்டிய கட்டாயத்திலும், அதற்கு மாற்றாக துவேஷத்தைத் தூண்டி விட வேண்டிய அவசியத்திலும் இருக்கும் இந்துத்வா அமைப்புகள் பிராந்திய மொழி எழுத்தாளார்களைத் தூண்டி விட்டிருக்கிறது.

காந்திஜியின் அணுகுமுறையில் பல குறைபாடுகள் உண்டு. அவரை psychological blackmailer என்றே அறிந்தவர்கள் குறிப்பிடுகின்றனர். இதே காரணத்திற்காகவே அவரை சர்ச்சில் கூட வெறுத்தார். அதே போல அம்பேதகரும் காந்தியின் தலைமையை மிகமிக வன்மையாகக் கண்டித்திருக்கிறார். சுபாஷ் சந்திர போஸை காங்கிரஸை விட்டு வெளியேற்றி, ஹிம்சை புரிந்தவர் தான் காந்தி. பகத் சிங் தண்டனையை தடுத்து நிறுத்தக் கோரி, அனைவரும் வேண்டுகோள் வைத்த பொழுது மறுத்தவர் தான். இவற்றைப் பற்றியெல்லாம் விமர்சனங்கள் வைக்கலாமே தவிர, இப்படி நம் பாட்டுக்குப் பின் பாட்டு பாட மறுக்கிறாரே - கொன்று விடு அவரை என்று ஒருவர் முனைந்தால், அது நியாயமாகி விடாது. ஆர்.எஸ்.எஸ்.ற்கு அது தான் நியாயம் என்று வாதிட்டு தங்களை வெளிக்காட்டிக்கொள்வது அனைவருக்கும் நல்லதே. எத்தகைய ஒரு மோசமான இயக்கம் இந்த நாட்டின் வரலாற்றை தன் விருப்பிற்கு எழுதத் துடிக்கிறது என்பதை அனைவரும் அறிந்து கொள்ள இது உறுதுணையாக இருக்கும்.

திசை திருப்புதலுக்காக எழுதப்பட்ட கதை தான் இந்த மலர் மன்னன் கொடுத்த கதை. அத்வானி வைத்த வெடியினால் சர்வமும் ஆடிப்போயிருக்கும் ஆர்.எஸ்.எஸ், தங்கள் அமைப்புகள் ஆட்சி அதிகாரங்களைத் தொடர்ந்து இழந்து வருவது கண்டு கவலையும் கொண்டுள்ள தாய் அமைப்பினர் தூண்டி விட்டு, சிலர் ஆடுகின்றனர். இந்த தூண்டுதலில், காந்தியைக் கொலை செய்வதற்கான நியாயங்களில் ஒன்றாக, மாப்பிள்ளமார் கலவரத்தை எடுத்துக் கையாள்கின்றனர். மலர்மன்னனின் வரலாற்றுப் பார்வை வேறெப்படி இருக்க முடியும்? இந்த மாப்பிள்ளைமார் கிளர்ச்சியின் போது, பெருமளவிலான தாழ்த்தப்பட்ட மக்கள் இஸ்லாத்தில் இணைந்தனர் - அதற்குக் காரணம் அவர்கள் மீது திணிக்கப்பட்ட அடக்குமுறைகள். திருமணத்தின் முதல் நாள், மணப்பெண் புரோஹிதருக்கு உரியவள், அந்தப் புரோஹிதருடன் 'தங்கி' இருந்து, தன்னைச் சுத்திகரித்துக் கொண்டபின் தான், அவள் தன் கணவனுடன் இணைய வேண்டும் என்ற கீழ்த்தரமான கொடுமைகள், ஆலயத்தினுள் நுழையத் தடை, தீண்டாமை போன்ற சொல்லொணா துயரங்கள் தான் அவர்களை இஸ்லாத்தின் பக்கம் போகத் தூண்டியது. இந்த உண்மைகளை ஏற்க, இந்துத்வா வாதிகளால் எப்படி இயலும்? அதனால், வழக்கம் போல, பழி தூற்றி, வரலாற்றைத் திருத்திப் பேசி, நல்லிணக்கத்தை சீர்குலைக்க வேண்டும் என்பது தானே எண்ணம்? வரலாறுகளில், வியாபாரிகள் ஊர் ஊராக செல்வதும், சில இடங்களில் மன்னர்கள் அனுமதியுடன் தங்களுக்கென நிரந்தர குடியிருப்புகள் அமைத்துக் கொள்வதும் நடைமுறையில் உள்ள வழக்கம் தான். இத்தகைய இஸ்லாமிய குடியிருப்புகள், மேலைக் கடற்கரை எங்கும் வியாபித்தது. வியாபாரம் செழித்த பொழுது, இந்த வியாபார்களும் அதிகமாயினர். உள்ளூர் பெண்களுடன் திருமண உறவு பூண்டனர். இதெல்லாம், ஒரு சமூகம் தன்னை விரிவுபடுத்திக் கொள்ளும் எளிய நடைமுறைகள். அப்பொழுதெல்லாம், எங்காவது இனக் கலவரம் நடந்ததாக சம்பவங்கள் உண்டா? அமைதியான முறையில், போரின்றி, தங்களை அமைத்துக் கொண்ட சமூக அமைப்பு அது. அதையும் ஆபாசக் கண் கொண்டு பார்ப்பது துவேஷக்காரர்களின் மொழி.

இந்திய வரலாறு இந்தியாவிற்கு மட்டுமான வரலாறு கிடையாது. அதிலே, பாக்கிஸ்தான, இங்கிலாந்து வரலாறுகளும் கலந்து கிடக்கின்றன. ஆகையினால், தங்கள் விருப்பப்படிக்கு, வரலாற்றைத் திரித்துப் பேச இயலாது. ஏனென்றால், இவர்கள் எழுதும் வரலாறு, இவர்களுடன் சம்பந்தப்பட்ட பிற நாட்டு வரலாறுகளுடனும் ஒப்பிட்டு நோக்கப்படும். பொய்கள் நீண்ட நாட்கள் நீடிக்க முடியாது. இனி ஒரு போதும் எந்த விடுதலைப் போராட்டங்களிலும் கலந்து கொள்ளப்போவதில்லையென அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டுத் தான் சாவர்க்கர் விடுதலை பெற்று வந்தார் என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த சாவர்க்கரைத் தான் தன் வழிகாட்டியாக குறிப்பிடுகிறார் கோட்ஸே. அவரைப் பலமுறை சந்தித்திருக்கிறார் தன் சகாக்களுடன். ஆனால், புலனாய்வுத் துறை பெரிதும் முன்னேறாத ஒரு காலத்தில், சாவர்க்கரைத் தீர்க்கமாக இந்தக் கொலை குற்றத்தில் இணைக்க முடியவில்லை. இப்பொழுது, நவீன தொழில் நுட்பங்களுடன் காந்தி கொலை வழக்கு மறுவிசாரணை மேற்கொள்ளப்படுமாயின் பல புனிதர்கள் மீண்டும் குற்றவாளிகளாகும் அபாயம் உண்டு.

மேலும் மலர் மன்னன், தன் நண்பர் அருகே இருந்து கேட்டதாக 'பீலா' விடும் - காந்தி ஏதோ ஒன்றை உளறினார் - அதை பிறர் ஹே ராம் என கூறிவிட்டார்கள் என்ற அவச் சொல், இறந்து போன ஒரு மனிதரை இழிவுபடுத்தும் உள்நோக்குடன், தரங்குறைந்த ஒருவரின் ரசனை தானே தவிர, பண்பட்ட மனிதர்கள் சிந்திக்கும் சொற்கள் அல்ல.

மற்றபடிக்கு கோட்ஸேயின் தத்துவங்களை இன்று வெளிப்படையாகத் தான் ஆர்.எஸ்.எஸ் பேசுகிறது. இன்னும் அவரை பீடத்தில் ஏற்ற இயலவில்லையே என்ற மலர்மன்னனின் ஆதங்கம், இந்த நாடு எத்தனை இழிவடையும் இவர்கள் கையில் கொடுக்கப்பட்டால் என்பதற்கு ஒரு உதாரணமே.

வாசகன் said...

//அவன் காந்தியருகில் இருந்தவர்கள் யாரும் காயப்படக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தான்.//

அச்சமயம் காந்திஜி பக்கத்தில் யாரும் இசுலாமியர் இல்லை என்பதை நாசுக்காகச் சொல்கிறீர்களோ?!

//புரிந்தும் ஏன் வந்து பதில் கொடுக்கிறீர்கள்? //

அதானே, இந்த மாதிரி தனிப்பதிவு போட வேண்டியது தானே.
http://ibnubasheer.blogsome.com/2006/01/16/ghandhi-and-kotse/

dondu(#11168674346665545885) said...

"தமிழ் இணையத்தில் முஸ்லிம்களை வம்புக்கு இழுப்பதற்கென்றே சிலர் இயங்கிக் கொண்டிருக்கையில், டோண்டு ராகவன் போன்ற மூத்த வலைப்பதிவர்களும் இதை செய்யத்தான் வேண்டுமா?"
நிச்சயமாக யாரையும் வம்புக்கிழுக்கவில்லை. ஒருதரப்பாக மட்டும் பேசப்பட்ட விஷயத்தின் மறுபக்கத்தைக் காண்பிக்கும் முயற்சியே இது.

"மேலும் மலர் மன்னன், தன் நண்பர் அருகே இருந்து கேட்டதாக 'பீலா' விடும் - காந்தி ஏதோ ஒன்றை உளறினார் - அதை பிறர் ஹே ராம் என கூறிவிட்டார்கள் என்ற அவச் சொல், இறந்து போன ஒரு மனிதரை இழிவுபடுத்தும் உள்நோக்குடன், தரங்குறைந்த ஒருவரின் ரசனை தானே தவிர, பண்பட்ட மனிதர்கள் சிந்திக்கும் சொற்கள் அல்ல."
கூறியவர் காந்தி இறந்த போது மிக அருகில் இருந்தவர், அவர் நம்பிக்கைக்கு பாத்திரமானவர் என்று கூறப்படுகிறது. அவர் ஏன் பொய்யுரைக்க வேண்டும்?

"வியாபாரம் செழித்த பொழுது, இந்த வியாபார்களும் அதிகமாயினர். உள்ளூர் பெண்களுடன் திருமண உறவு பூண்டனர். இதெல்லாம், ஒரு சமூகம் தன்னை விரிவுபடுத்திக் கொள்ளும் எளிய நடைமுறைகள். அப்பொழுதெல்லாம், எங்காவது இனக் கலவரம் நடந்ததாக சம்பவங்கள் உண்டா? அமைதியான முறையில், போரின்றி, தங்களை அமைத்துக் கொண்ட சமூக அமைப்பு அது. அதையும் ஆபாசக் கண் கொண்டு பார்ப்பது துவேஷக்காரர்களின் மொழி."
அம்மாதிரி இருந்தவர்களைத் தூண்டிவிட்டது பிரிட்டிஷ் அரசு என்றுதானே மலர் மன்னன் கூறுகிறார்?

"கோட்ஸே குற்றவாளி என கோர்ட் முறைப்படி தீர்ப்பளித்து விட்டது. அவர் குற்றவாளி தான் என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். ஆனால், அவர் குற்றவாளியே இல்லை என்றல்லவா வாதிடுகிறார்கள்?"
இங்கு மலர் மன்னன் அவ்வாறு வாதாடியதாகத் தெரியவில்லை. அவரும் காரண காரியங்களைத்தான் ஆராய்கிறார். அதே நேரம் கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாக ஒரு தரப்பு வாதமே கேட்கப்பட்டு வந்து கொண்டிருக்கிறது என்பதையும் மறுக்க முடியாதுதானே.

"- மஹாத்மாவை அவர் ஒரு முதியவர் என்று கூட பாராது கொடூரமான முறையில் சுட்டுக்கொன்றவன் ஒரு முஸ்லிமாக இருந்திருந்தால், என்ன நிகழ்ந்திருக்கும்? சிறுபான்மையினரான முஸ்லிம்கள் மேலும் சின்னஞ்சிறுபான்மையினராகி இருப்பார்களே!"
இப்படியும் யோசித்து பாருங்கள். கோட்ஸே முஸ்லிம் போல வேஷமணிந்து வந்து காந்தியை சுட்டுவிட்டு, குழப்பத்தை பயன்படுத்தி ஓடிப்போய் தப்பியிருந்தால் என்ன ஆகியிருக்கும்? (அவ்வாறு தப்பியிருப்பது அப்படியொன்றும் முடியாத காரியமாக இருந்திராது).

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

வாருங்கள் நாட்டாமை அவர்களே.

நான் நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது எங்கள் ஆசிரியர் பாஷ்யம் ஐயங்கார் வகுப்பறையில் வைத்து கேள்விகள் கேட்டு கொண்டிருந்தார். அதில் மோகனரங்கத்துக்கு ழ சொல்லவராது. ய என்றுதான் சொல்வான். குயந்தை, ஏயை இம்மாதிரி. அவனை ஆசிரியர் கேள்வி கேட்கிறார்.

"மோகனரங்கம், காந்தியைக் கொன்றது யார்?"

மோகனரங்கம் கோட்ஸே பெயரை மறந்து விட்டான். ஆனாலும் இவ்வாறு சமாளித்தான். "சார், பெயர் மறந்துவிட்டது, ஆனால் காந்தியைக் கொன்றது ஒருவயதானவர்" என்றான். ஆசிரியருக்கு தூக்கிவாரிப் போட்டது.

விஷயம் இதுதான். பாடப் புத்தகத்தில் வந்த வாக்கியம்:

ஜனவரி 30, 1948 அன்று மஹாத்மா காந்தியை கோட்ஸே என்றக் கயவன் சுட்டுக் கொன்றான்.

பிறகு அடுத்த சில நிமிடங்களுக்கு ஆசிரியர் கயவன் என்றால் என்ன என்று விளக்கினார்.

நான் இங்கு அதைக் கூறக் காரணமே எல்லா பாடப் புத்தகங்களிலும் கோட்ஸே என்றக் கயவனுடன் விட்டு விட்டார்கள்.

இப்போது மறு பக்கத்தைப் பார்க்கும் போது குயப்பம்தான் (!) வரும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

இப்னு பஷீர் said...

//இப்படியும் யோசித்து பாருங்கள். கோட்ஸே முஸ்லிம் போல வேஷமணிந்து வந்து காந்தியை சுட்டுவிட்டு, குழப்பத்தை பயன்படுத்தி ஓடிப்போய் தப்பியிருந்தால் என்ன ஆகியிருக்கும்? (அவ்வாறு தப்பியிருப்பது அப்படியொன்றும் முடியாத காரியமாக இருந்திராது).//

அப்படியும் ஒரு சதி நடந்திருக்கிறது. அதிர்ஷ்டவசமாக (அல்லது துரதிர்ஷ்டவசமாக!) அது நடைபெறவில்லை. இந்த பதிவைப் பாருங்கள்!

http://urpudathathu.blogspot.com/2006/01/blog-post_16.html

//இவ்வளவு விவரங்களை தாண்டி, காந்தியினை சுடுவதற்கு முன் தன் கையில் "இஸ்மாயில்" என்று பச்சைக் குத்திக் கொண்டார். இதன் மூலம் கொன்றவுடன் தானும் கொல்லப்படுவோம், ஒரு முஸ்லீம் தான் கொன்றான் என்றதும் கலவரம் வெடிக்கும் என்று திட்டம் போட்டார். ஆனால், உயிரோடு பிடிக்கப்பட்டதால் அவரின் திட்டம் நிறைவேறவில்லை. (ஆதாரம்: கே.இ.என் மற்றும் கே.எஸ் ஹரிஹரன் எழுதிய "இந்துத்துவாவின் அரசியல் பரிணாம வளர்ச்சி" )//

'ஒரு செல்வாக்கு மிக்க தலைவரை ஹிந்துக்களின் நலனை முன்னிட்டு அரசியல் களத்திலிருந்து உடனடியாக அப்புறப்படுத்த இதைவிட்டால் வேறு வழியில்லை எனக்கருதியதால் கோட்ஸே தமக்குச் சரியெனப்பட்ட முடிவின் பிரகாரம் நிறைவேற்றிய செயல்தான் காந்திஜி படுகொலை' என்றால் இங்கு 'இஸ்மாயில்' எங்கிருந்து வந்தார்?

இது 'ஒரு கல்லில் ஒரு கொத்து மாங்காய்' அடிக்கும் திட்டம் போல அல்லவா தெரிகிறது? உயர்ஜாதி இந்துக்களின் நலனுக்கு இடைஞ்சலாக இருந்த காந்திஜியை அப்புறப்படுத்தியதோடு, இந்த முகமதிய கூட்டத்திற்கும் ஒரு மரணஅடி கொடுக்கலாம் என்ற திட்டம்தானே?

dondu(#11168674346665545885) said...

நண்பர் ராஜன் அவர்கள் எனக்கு இவ்விஷயமாக அனுப்பிய மின்னஞ்சலை இங்கு அவர் அனுமதியுடன் நகலிடுகிறேன்:

Dear Raghavan

I read your blog regarding Malarmannan's article. One should also read Freedom at MidNight written by the French Authors to know the exact sequence of events. Malan's Janaganamana is Tamil excerpts from Freedom at midnight only. Below is the speech of Godse in the court that moved the Judge and audience to tears. Please read. No doubt Gandhiji crossed his limits and started emotionally blackmailing a free country putting millions of Hindus lives in great danger.

Dondu: You may post the below speech also in your blog

Thanks
Rajan

----------------------------------------------------------------------------------------------


Nathuram Godse's speech at trial .. DO read the Full text of Godse's speech at his trial.....

" On January 13, 1948, I learnt that Gandhiji had decided to go on fast unto death. The reason given was that he wanted an assurance of Hindu-Muslim Unity... But I and many others could
easily see that the real motive...[was] to compel the Dominion Government to pay the sum of Rs 55 crores to Pakistan, the payment of which was emphatically refused by the Government.... But this decision of the people's Government was reversed to suit the tune of Gandhiji's fast. It was evident to my mind that the force of public opinion was nothing but a trifle when compared with the leanings of Gandhiji favourable to Pakistan.

....In 1946 or thereabout, Muslim atrocities perpetrated on Hindus under the Government patronage of Surhawardy in Noakhali made our blood boil. Our shame and indignation knew no bounds when we saw that Gandhiji had come forward to shield that very Surhawardy and began to style him as 'Shaheed Saheb' - a martyr - even in his prayer meetings...

....Gandhiji's influence in the Congress first increased and then became supreme. His activities for public awakening were phenomenal in their intensity and were reinforced by the slogans of truth and non-violence which he ostentatiously paraded before the country... I could never
conceive that an armed resistance to the aggressor is unjust... Ram killed Ravan in a tumultuous fight... Krishna killed Kansa to end his wickedness... In condemning Shivaji, Rana Pratap and Guru Govind as 'misguided patriots,' Gandhiji has merely exposed his self-conceit... Gandhiji was,paradoxically, a violent pacifist who brought untold calamities on the country in the name of truth and nonviolence, while Rana Pratap, Shivaji and the Guru will remain enshrined in the hearts of their countrymen forever...

....By 1919, Gandhiji had become desperate in his endeavours to get the Muslims to trust him and went from one absurd promise to another...He backed the Khilafat movement in this country and was able to enlist the full support of the National Congress in that policy... very soon the Moplah Rebellion showed that the Muslims had not the slightest idea of national unity... There followed a huge slaughter of Hindus... The British Government, entirely unmoved by the rebellion, suppressed it in a few months and left to Gandhiji the joy of his
Hindu-Muslim Unity... British Imperialism emerged stronger, the Muslims became more
fanatical, and the consequences were visited on the Hindus...

The accumulating provocation of 32 years, culminating in his last pro-Muslim fast, at last goaded me to the conclusion that the existence of Gandhiji should be brought to an end immediately... he developed a subjective mentality under which he alone was the final judge of what was right or wrong... Either Congress had to surrender its will to him and play second fiddle to all his eccentricity, whimsicality... or it had to carry on without him... He was the master brain guiding the civil disobedience movement... The movement may succeed or fail; it may bring untold disasters and political reverses, but that could make no difference to the
Mahatma's infallibility... These childish inanities and obstinacies, coupled with a most severe austerity of life, ceaseless work and lofty character, made Gandhiji formidable and irresistible... In a position of such absolute irresponsibility, Gandhiji was guilty of blunder after blunder...

....The Mahatma even supported the separation of Sindh from the Bombay Presidency and threw the Hindus of Sindh to the communal wolves. Numerous riots took place in Karachi, Sukkur, Shikarpur and other places in which the Hindus were the only sufferers...

....From August 1946 onwards, the private armies of the Muslim League began a massacre of the Hindus... Hindu blood began to flow from Bengal to Karachi with mild reactions in the Deccan... The Interim government formed in September was sabotaged by its Muslim League
members, but the more they became disloyal and treasonable to the government of which they were a part, the greater was Gandhi's infatuation for them...

....The Congress, which had boasted of its nationalism and socialism, secretly accepted Pakistan and abjectly surrendered to Jinnah. India was vivisected and one-third of the Indian territory became foreign land to us... This is what Gandhiji had achieved after 30 years of undisputed dictatorship, and this is what Congress party calls 'freedom'...

....One of the conditions imposed by Gandhiji for his breaking of the fast unto death related to the mosques in Delhi occupied by Hindu refugees. But when Hindus in Pakistan were subjected to violent attacks he did not so much as utter a single word to protest and censure the Pakistan government...

Gandhi is being referred to as the Father of the Nation. But if that is so, he had failed his paternal duty inasmuch as he has acted very treacherously to the nation by his consenting to the partitioning of it... The people of this country were eager and vehement in their
opposition to Pakistan. But Gandhiji played false with the people...

....I shall be totally ruined, and the only thing I could expect from the people would be nothing but hatred... if I were to kill Gandhiji. But at the same time, I felt that Indian politics in the absence of Gandhiji would surely be proved practical, able to retaliate, and be powerful with
armed forces. No doubt, my own future would be totally ruined, but the nation would be saved from the inroads of Pakistan...

....I do say that my shots were fired at the person whose policy and action had brought rack and ruin and destruction to millions of Hindus... There was no legal machinery by which such an offender could be brought to book, and for this reason I fired those fatal shots...

....I do not desire any mercy to be shown to me... I did fire shots at Gandhiji in open daylight. I did not make any attempt to run away; in fact I never entertained any idea of running away. I did not try to shoot myself...for, it was my ardent desire to give vent to my thoughts in an open Court. My confidence about the moral side of my action has not been shaken even by the criticism levelled of against it on all sides. I have no doubt, honest writers of history will weigh my act and find the true value thereof some day in future. "

"If devotion to one's country amounts to a sin, I admit I have committed that sin. If it is meritorious, I humbly claim the merit thereof. I fully and confidently believe that if there be any other court of justice beyond the one founded by the mortals, my act will not be taken as unjust. If after the death there be no such place to reach or to go, there is nothing to be said. I have resorted to the action I did purely for the benefit of the humanity. I do say that my shots were fired at the person whose policy and action had brought rack and ruin and destruction
to lakhs of Hindus."

-Shri Nathuram Godse

dondu(#11168674346665545885) said...

"இவ்வளவு விவரங்களை தாண்டி, காந்தியினை சுடுவதற்கு முன் தன் கையில் "இஸ்மாயில்" என்று பச்சைக் குத்திக் கொண்டார்."

இது பற்றி இப்போதுதான் மலர்மன்னனிடம் தொலை பேசினேன். இச்செய்தி உண்மையில்லை என்று கூறுகிறார்.

எனக்குப் பட்டதைக் கூறுவேன். இது மட்டும் உண்மையானதாக இருந்திருந்தால் இதை வெளியில் பரப்ப இந்திய அரசு முழுமையாக அல்லவா முயன்றிருக்கும். நாங்களும் நான்காம் வகுப்பு பாடத்தில் அதை படித்திருப்போமல்லவா? ஏன் இந்திய அரசு அவ்வாறு செய்யவில்லை என்னும் கேள்வி எழும் அல்லவா?

அதோடு இன்னொரு விஷயம். கோட்ஸே அக்காலத்தில் பலருக்கும் அறிமுகமான பத்திரிகை ஆசிரியர். அப்படியே சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டிருந்தாலும் அவரை உடனேயே அடையாளம் கண்டிருப்பார்கள். அதை விட சுலபமான வழி சம்பவம் நடந்த பிறகு அந்த இடத்தை விட்டு குழப்பத்தை பயன்படுத்தி இக்காலத் தீவிரவாதிகள் செய்ததைப் போலத் தப்பித்து சென்றிருக்கலாமே. கோட்ஸே அவ்வாறு செய்யவில்லையே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Amar said...

Nalladiyar and other Moslems posting here,

Overcome your presuppositions or your presuppositions will eventually overcome you!

dondu(#11168674346665545885) said...

Dear Samudra,

Thanks for the comment. If you can't write in tamil due to technical reasons, no problem. Commenting in English as done by you is better than wrting Tamil in English alphabets.

Regards,
Dondu Raghavan

Amar said...

//நீங்கள் சார்ந்த பிராமண சமூகத்தின் தீவிரவாத! //

Personal attacks இல்லாமல் எப்பொழுதாவது எதையாவது எழுதியிருந்தால் சொல்லுங்கள், அதை படித்து பார்க்க அசையாக உள்ளது.

//எதிரானப் போர்களில் எதிரிகளில் நிராயுதபாணிகளையும், பெண்களையும், குழந்தைகளையும், மதகுருமார்களையும் கொல்வதை முஹம்மது நபிகள் தடை செய்திருக்கிறார்கள்.
//

இதை இந்தியாவில் மகத சாம்ராஜ்யம் சந்திர குப்தரின் கால்டியில் இருந்த பொதே நாம் செயல்படுத்தி கொண்டு தான் இருந்தோம்.

dondu(#11168674346665545885) said...

"Personal attacks இல்லாமல் எப்பொழுதாவது எதையாவது எழுதியிருந்தால் சொல்லுங்கள், அதைப் படித்து பார்க்க ஆசையாக உள்ளது."
ரொம்பத்தான் பேராசைப் படுகிறீர்கள் சமுத்திரா அவர்களே.

"//எதிரானப் போர்களில் எதிரிகளில் நிராயுதபாணிகளையும், பெண்களையும், குழந்தைகளையும், மதகுருமார்களையும் கொல்வதை முஹம்மது நபிகள் தடை செய்திருக்கிறார்கள்.
//
இதை இந்தியாவில் மகத சாம்ராஜ்யம் சந்திர குப்தரின் கால்டியில் இருந்த பொதே நாம் செயல்படுத்தி கொண்டு தான் இருந்தோம்."

ஏன் மகத சாம்ராஜ்யம் அளவுக்கு போக வேண்டும்? யுக யுகமாக பாரத தேசத்தில் போர் தருமம் என்று கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளது. பிற்காலங்களில் தைமூர், கஜினி முகம்மது, முகம்மதுகோரி, அல்லாவுத்தீன் கில்ஜி ஆகியோர் வந்துத்தான் எல்லா அனாகரிகங்களையும் அரங்கேற்றினர் என்பது சரித்திரம் அணிந்த உண்மை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

இப்னு பஷீர் said...

//இவ்வளவு விவரங்களை தாண்டி, காந்தியினை சுடுவதற்கு முன் தன் கையில் "இஸ்மாயில்" என்று பச்சைக் குத்திக் கொண்டார்."

இது பற்றி இப்போதுதான் மலர்மன்னனிடம் தொலை பேசினேன். இச்செய்தி உண்மையில்லை என்று கூறுகிறார்.//

மலர் மன்னனின் வார்த்தைகளை நீங்கள் எந்த அளவிற்கு நம்புகிறீர்களோ அந்த அளவிற்கு நான் "இந்துத்துவாவின் அரசியல் பரிணாம வளர்ச்சி" எழுதிய கே.இ.என் மற்றும் கே.எஸ் ஹரிஹரன் ஆகியோரின் வார்த்தைகளை நம்புகிறேன்.

//இது மட்டும் உண்மையானதாக இருந்திருந்தால் இதை வெளியில் பரப்ப இந்திய அரசு முழுமையாக அல்லவா முயன்றிருக்கும். நாங்களும் நான்காம் வகுப்பு பாடத்தில் அதை படித்திருப்போமல்லவா?//

நான்காம் வகுப்பு பாடப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டது மட்டும்தான் வரலாறு என்கிறீர்களா? அன்றும் சரி, இன்றும் சரி, பாடபுத்தகங்களில் உள்ளவை எல்லாமே பாரபட்சமற்ற உண்மைகளல்ல என்ற கசப்பான உண்மையையும் இந்திய முஸ்லிம்கள் அறிந்தே வைத்திருக்கின்றனர்.

மேலும், இந்த சதியை இந்திய அரசாங்கம் ஏன் முழுமையாக வெளியில் பரப்ப வேண்டும்? குற்றவாளி பிடிபட்டு விட்டான். அவனுக்கு தண்டலை வழங்க்ப பட்டு விட்டது. அவன் சார்ந்த இயக்கமும் தடை செய்யப்பட்டுவிட்டது. இந்த விவகாரத்தை மேலும் ஊதி ஊதி பெரிதாக்கி முஸ்லிம்களுக்கும் கோட்ஸே சார்ந்த பிரிவினருக்கும் ஒரு தீராத பகையை ஏன் இந்திய அரசாங்கம் உருவாக்க வேண்டும்?

//அதை விட சுலபமான வழி சம்பவம் நடந்த பிறகு அந்த இடத்தை விட்டு குழப்பத்தை பயன்படுத்தி இக்காலத் தீவிரவாதிகள் செய்ததைப் போலத் தப்பித்து சென்றிருக்கலாமே.//

'காந்தியை கொன்றவுடன் தானும் கொல்லப்படுவோம், ஒரு முஸ்லீம் தான் கொன்றான் என்றதும் கலவரம் வெடிக்கும்' என்பதுதானே திட்டமே. ஓடித்தப்பிக்கும் எண்ணம் இருந்திருந்தால் 'முகமதிய' வேஷம் போட வேண்டிய அவசியமே இல்லையே!

dondu(#11168674346665545885) said...

"நான்காம் வகுப்பு பாடப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டது மட்டும்தான் வரலாறு என்கிறீர்களா?"

நான்காம் வகுப்பு புத்தகத்திலேயே அது வந்திருந்தால் மற்ற வகுப்பு புத்தகங்களிலும் வந்திருக்கும், ஊடகங்களிலும் வந்திருக்கும் என்றுதான் கொள்ள வேண்டும். இது பற்றி ஒரு மூச்சும் வராமல் இந்துத்வா பற்றி எழுதிய ஆசிரியருக்கு மட்டும் தெரிந்து இப்போது எழுதியிருக்கிறார் என்றால் என்ன அர்த்தம். பெரிய பூச்சுற்றலாக அல்லவா உள்ளது.

மலர் மன்னன் இக்கொலையை நியாயப்படுத்தவில்லை என்பதை இங்கு மறுபடி நினைவுபடுத்துகிறேன். மேலும் கோட்ஸே அப்படி ஒன்றும் யாருக்கும் தெரியாத நபர் இல்லை என்பதையும் குறிப்பிட்டுள்ளேன்.

ஓக்கே, உங்கள் நம்பிக்கையில் குறுக்கிட நான் யார்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

டிபிஆர்.ஜோசப் said...

டோண்டு சார்,

உங்க பதிவையும் அதற்கு இதுவரை வந்த பின்னூட்டங்களையும், அதற்கு நீங்கள் எழுதிய விலாவாரியான பதில்களையும் நேற்று இரவு வெகு நேரம் அமர்ந்து படித்தேன்.

என்னத்த எழுதறதுன்னு தெரியலை..

என்னைக்கோ நடந்த விஷயத்தை பத்தி பேசறது எதுக்குன்னாலும் ஒன்னு மட்டும் சொல்றேன்.

மலர்மன்னனின் வாதங்களும், முடிவுகளும் பல இடங்களில் simply rubbish. தயவுசெய்து மன்னித்துவிடுங்கள்.. நீங்கள் எழுதிய பதில்களும் சில இடங்களில் அதுதான்.

இத வாதங்களாக அல்ல மாறாக வெறும் வரட்டு பிடிவாதங்களாகவே தோன்றுகின்றது. Let me ask one thing.Is Malarmannan a historian? நீங்க எதுக்கு அவரோட முட்டாள்தனமான.. சாரி சார்.. வாதங்கள மறுபதிவு செய்து.. எனக்கு புரியலை..

டிபிஆர்.ஜோசப் said...

தாற்காலிகத் திருமணம் செய்து, தலாக்கும், பிள்ளையும் ஒருசேரக் கொடுத்துவிட்டு அவர்கள் போய்க்கொண்டிருப்பதும், ஹைதராபாத், கேரளம், மேற்கு கர்னாடகம் ஆகிய இடங்களில் தகப்பன் முகம் தெரியாத பிள்ளைகளின் எண்ணீ¤க்கை முகமதிய சமூகத்தில் அவர்களுடைய காஜிகளின் சம்மதத்துடனேயே அதிகரித்துவருவதும் தெரிந்த விஷயமே அல்லவா?)"//

காந்திஜி கொல்லப்பட்டபோது அவரது மறைவுக்கு அதிகாரப் பூர்வமாக இரங்கல் தெரிவிக்காத ஒரேநாடு ஸ்டாலின் ஆளுகையில் இருந்த சோவியத் யூனியன்தான். அந்த சோவியத் யூனியனுடன்தான் காந்திஜியின் அரசியல் வாரிசான நேரு கூடிக் குலாவி, பாரதத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போடுவதும், சர்வதேச அரங்கில் பாரதம் ரஷ்யாவின் எடுபிடி என்று ஏளனம் செய்யப்படுவதற்கு ஏற்றாற்போல் வினையாற்றுவதுமாக இருந்தார்!"
அதே ஸ்டாலின் இறந்த போது இந்திய அரசு 2 நாள் விடுமுறை விட்டது. சோவியத் யூனியனிலோ அரை நாள்தான் விடுமுறை. இந்தியா அசடு வழிந்ததுதான் மிச்சம்.//


இதெல்லாம் மிகவும் பொத்தாம் பொதுவான வாதங்கள்.. It is not expectd from a person of your experience and stature...

இது சர்ச்சையை உருவாக்குவதற்கென்றே பதியப்பட்டதாகவே எனக்கு தோன்றுகிறது..

dondu(#11168674346665545885) said...

வாருங்கள் ஜோசஃப் அவர்களே. நீங்கள் கூறுவதை புரிந்து கொள்கிறேன்.

மலர்மன்னன் சரித்திர ஆய்வாளர் இல்லைதான். ஆனால் சம்பவங்கள் நடந்த நேரத்தில் வெளியான விஷயங்களை நேரடியாகப் பார்த்தவர்களில் அவரும் ஒருவர். பத்திரிகையாளர் வேறு. வெவ்வேறு தலைவர்களுடன் நேரடி தொடர்பு வைத்திருந்தவர்.

எனக்கு காந்தி அவர்கள் இறந்தபோது இரண்டு வயதுகூட ஆகியிருக்கவில்லை. நீங்கள் பிறக்கவேயில்லை. அதே நிலை இங்கு வந்து பின்னூட்டமிடும் மற்ற வலைப்பதிவாளர்களுக்கும். ஆக, நேரடி அனுபவம் பெற்றவரின் வார்த்தைகளையும் காது கொடுத்து கேட்போமே.

மற்றப்படி உங்கள் கருதுகளை நான் மிகவும் மதிக்கிறேன். எந்தெந்த இடங்களில் அவரோ நானோ கூறியது ரப்பிஷ் என்று நினைக்கிறீர்களோ, அதை இன்னும் விவரமாகவே கூறலாமே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

"இதெல்லாம் மிகவும் பொத்தாம் பொதுவான வாதங்கள்.."

ஆனால் உண்மையான விஷயங்கள் என்பதை மறுக்க முடியுமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

ஜெ. ராம்கி said...

கிலாபத் கிளர்ச்சி நடந்த காலத்திலேயே எல்லாவற்றுக்கும் காரணம் காந்திஜிதான் என்று குற்றம் சாட்டி இந்துக்களும் முஸ்லீம்களும் இருதரப்பிலிருந்தும் காந்திஜிக்கு கடிதம் எழுத ஆரம்பித்தார்கள். அதையெல்லாம் அப்படியே தனது பத்திரிக்கையில் வெளியிட்டு வைத்தார்.29.5.1924 நாளிட்ட யங் இந்தியாவில் காந்திஜி எழுதியதிலிருந்து...

'மாப்பிள்ளைமார்கள் செய்ததாக சொல்லும் அட்டூழியங்களுக்கும் கிலாபத்து கிளர்ச்சிக்கு பின் ஹிந்துக்கள் நஷ்டமடைந்ததாக சொல்லப்படும் எல்லா கலவரங்களுக்கும் நான்தான் பொறுப்பு என்கின்றனர். கிலாபத் பிரச்சினையில் முஸ்லீம்களுடன் தோழமை கொள்ளுமாறு சொன்னீர்கள். முஸ்லீம்களை ஐக்கியப்படுத்தி விட்டு விழிப்புற்ற முஸ்லீம்களும் இந்துக்களுக்கு விரோதமாக ஜிஹாத்தை ஆரம்பிக்க காரணமாகிவிட்டீர்கள் என்று குற்றம் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால், இருதரப்பிலும் மனக்கசப்பு இருந்தபோதிலும் இரு சாரருமே லாபமடைந்திருக்கிறார்கள். பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. அதை சரியான வழியில் பயன்படுத்துவதில்தான் நமது திறமை இருக்கிறது. கலவரங்களைப் பற்றி நான் தீர்ப்பளிப்பேன் என்று மக்கள் எதிர்பார்க்க மாட்டார்கள். தீர்ப்பளிக்கவும் எனக்கு இஷ்டமில்லை. அப்படியே நான் விரும்பினாலும் என்னிடம் உண்மையான விபரங்கள் இல்லை'

'....அதிதீவிரமான அகிம்சையை எக்காலத்திலும் நான் இந்தியாவில் போதித்ததில்லை. அந்த புராதனமான தத்துவத்தை மீண்டும் போதிப்பதற்கு எனக்கு தகுதியும் இல்லை. எனது வாழ்க்கையில் பலதடவை என்னால் அனுஷ்டித்து பாராத ஒன்றை மற்றவர்கள் செய்யும்படி நான் சொன்னதே கிடையாது'

http://www.tamiloviam.com/unicode/07220405.asp

dondu(#11168674346665545885) said...

தகவலுக்கு மிக மிக நன்றி ரஜினி ராம்கி அவர்களே. காந்தி அவர்களே ஒத்துழையாமை இயக்கத்தைத் தன் இமாலயத் தவறாகச் சித்தரித்தவர்தானே. அவருடைய உண்மையான மகத்துவத்தை இங்கு யாரும் குறைவாக மதிப்பிட முடியாது என்பது நிஜம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Muthu said...

வாஜ்பாய் அளவிற்கு தியாகி போல பில்ட் அப் எல்லாம் கொடுத்து சில நாட்களாக
மலர்மன்னன் திண்ணையில் எழுதி வந்தாலும் மலர்மன்னன் சங் ஆள் என்பது வெளிப்படை.. இது இப்படியிருக்க அவர் காந்தி கொலையை நியாயப்படுத்தவில்லை என்று கூறுவது முழு டைனோசாரை சோத்தில மறைக்கிறது....

கீதை , வெங்காயம் என்றெல்லாம் ஒரு பத்தி எழுதி இருக்காரு..பார்த்தீர்களா?

அதற்காகவே மலர்மன்னன் கூறுவது எல்லாவற்றையும் தவறு என்று கூறுவது தவறு.......
காந்தியை விமர்சன ரீதியாக அணுகுவது சரியே....அவர் சொதப்பிய விசயங்கள் ஏராளம் என்பது உண்மைதான்.அதற்காக கொலை தீர்வு அல்ல...

dondu(#11168674346665545885) said...

வாருங்கள் முத்து (தமிழினி) அவர்களே,

மலர்மன்னன் சங் ஆசாமியா? எனக்கு அப்படிப்படவில்லை. சம்பவம் நடந்த காலகட்டத்தில் அவர் செய்திகளை நேரில் படித்துணர்ந்தவர் என்ற நிலையிலேயே அவரை நான் பார்க்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

நல்லடியார் said...

//நீங்கள் சார்ந்த பிராமண சமூகத்தின் தீவிரவாத! //

Personal attacks இல்லாமல் எப்பொழுதாவது எதையாவது எழுதியிருந்தால் சொல்லுங்கள், அதை படித்து பார்க்க அசையாக உள்ளது.// - posted by Samudra : January 17, 2006 9:30 AM

//ரொம்பத்தான் பேராசைப் படுகிறீர்கள் சமுத்திரா அவர்களே.// - posted by dondu(#4800161) : January 17, 2006 10:11 AM

டோண்டு & சமுத்திரா,

இந்திய முஸ்லிம்களெல்லாம் அரேபியக் கடலில் கரையொதுங்கிய வியாபாரிகளின் நீண்ட நாள் பாலியல் தேவையைப் பூர்த்தி செய்து பிறந்தவர்கள் என்பதை விட "நீங்கள் சார்ந்த பிராமண சமூகம்" என்ற வார்த்தை எந்தளவு வலியை ஏற்படுத்தியது?

காலங்காலமாக யாரோ செய்யும் தவறுகளுக்கெல்லாம் முஸ்லிம்களை குற்றப்பரம்பரையாக சித்தரித்தும், அதற்கு 1400 வருடங்களுக்கு முந்தைய முஹம்மது நபியும், அவருக்கு அருளப்பட்ட குர்ஆனும் காரணம் என்று எழுதியவர்களை விட நான் மோசமாக எழுதிவிடவில்லை.

////புரிந்தும் ஏன் வந்து பதில் கொடுக்கிறீர்கள்? //

அதானே, இந்த மாதிரி தனிப்பதிவு போட வேண்டியது தானே.// - posted by karuththu kandasami : January 17, 2006 1:25 AM

போட்டுட்டா போச்சு!

Muthu said...

மேற்படி நபர் சில காலமாகத்தான் திண்ணையில் எழுதி வருகிறார். அவர் எழுதிய அனைத்து கட்டுரைகளையும் படிக்கவும்.....

"ஆர்.எஸ.எஸ் பேரியக்கம்" போன்ற சொற்றொடர்களை கவனிக்கவும்.....

you too doing this முழு டைனோசாரை சோத்தில மறைக்கிறது....

dondu(#11168674346665545885) said...

தகவலுக்கு நன்றி முத்து அவர்களே. அவர் தொடர்கதைகளை எழுபதுகளிலேயே படித்தவன் நான். அவ்வப்போது அவர் எழுதிய கட்டுரைகளையும் படித்திருக்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

நல்லடியார் அவர்களே,

உங்கள் பின்னூட்டத்துக்கு கொடுத்த பதிலேதான் இங்கும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Muthu said...

//மேற்படி நபர் சில காலமாகத்தான் திண்ணையில் எழுதி வருகிறார்.//

திண்ணையில் அவர் எழுதித்தான் எனக்கு தெரியும்..அதற்குமுன்னரே அவர் பழம்பெரும் எழுத்தாளர் என்றால் ஸாரி எனக்கு தெரியாது....(அவர் எழுத்துக்களும் அப்படி சொல்லவில்லை)

Amar said...

//இந்திய முஸ்லிம்களெல்லாம் அரேபியக் கடலில் கரையொதுங்கிய வியாபாரிகளின் நீண்ட நாள் பாலியல் தேவையைப் பூர்த்தி செய்து பிறந்தவர்கள் என்பதை விட "நீங்கள் சார்ந்த பிராமண சமூகம்" என்ற வார்த்தை எந்தளவு வலியை ஏற்படுத்தியது//

"அனைத்து இந்திய முஸ்லிம்களும்" இப்படி தான் பிறந்தனர் என்று எங்கே சொல்லி இருக்கார்ன்னு(டொண்டு சாரோட வலைபூவில) காட்டுங்க நல்லடியார்.

//காலங்காலமாக யாரோ செய்யும் தவறுகளுக்கெல்லாம் முஸ்லிம்களை குற்றப்பரம்பரையாக சித்தரித்தும், அதற்கு 1400 வருடங்களுக்கு முந்தைய முஹம்மது நபியும், அவருக்கு அருளப்பட்ட குர்ஆனும் காரணம் என்று எழுதியவர்களை விட நான் மோசமாக எழுதிவிடவில்லை.//

இந்த பதிவுல எங்கே அந்த மாதிரி எல்லாம் இருக்குன்னு பாருங்க!

வியாபாரிகள் வருவதும், இங்கே குடும்பம் குட்டி என்று செட்டில் ஆகி பின்னர் அவர்களை விட்டுவிட்டு ஓடி போவதும் அனைத்து ஊர்களிலும், அனைத்து சமுகத்தினரும் செய்த வேலை தானே!

Amar said...

நல்லடியார்,
மாப்பிள்ளைமார்களை பற்றி எதாவது தவறான தகவல் இங்கு கொடுக்கபட்டுள்ளதா ?

ஈழநாதன்(Eelanathan) said...

//ஸ்ரீபெரும்பதூரில் நடந்தது போல பல அப்பாவிகளைக் கொல்லவில்லை. கொன்றவர்களின் தலைவன் செய்தது போல பின்னாளில் அது ஒரு வெறும் துன்பியல் சம்பவமே என்று இங்கு யாரும் பசப்பவில்லை. அவர்களுக்கு வக்காலத்து இப்போதும் வாங்குபவர்களை போல யாரும் இங்கே சப்பைக்கட்டும் கட்டவில்லை.//

நீங்கள் சந்தடி சாக்கில் சிறிபெரும்புத்தூரையும் இழுத்துவிட்டுப் பார்த்ததால்....

கோட்சேக்கும் மறுபக்கம் இருக்கலாம் ஆனால் தாணுவுக்கு மறுபக்கம் இருக்கக் கூடாது என்கிற உங்கள் சோ தனமான போக்கு எல்லாருக்கும் தெரியுமாதலால் அதைப்பற்றி பேசுவதை தவிர்க்கிறேன்

தாயார் இறந்து போனபோது நூற்றுக்கணக்கில் சீக்கியர்கள் அதுவும் சொந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் கொல்லப்பட்ட ஆலமரம் சாய்ந்தால் அடியிலிருக்கும் சிறு சிறு செடிகள் சில நசுங்கத்தான் செய்யும் என்று ராஜீவ் காந்தி பசப்பவில்லை என்று சொல்லுங்கள் பொத்திக்கொண்டு போகிறேன்.

பிரபாகரனுக்காவது துன்பியல் சம்பவம் என்று சொல்லும் குற்ற உணர்ச்சி இருந்திருக்கிறது.ஈழத்தில் பலநூற்றுக்கணக்கானவர்களின் உயிரிழப்பு,வன்புணர்வுகளுக்குக் காரணமாக இருந்ததற்காக ராஜீவுக்கு என்றாவது குற்ற உணர்ச்சி இருந்திருக்கிறதா ஏதாவது பசப்பியிருக்கிறாரா தெரிந்துகொள்ள ஆசை.ஏதாவது சொல்லியிருப்பாரே அமைதி காக்கப் போகும்போது ஆங்காங்கே பெண்களை வன்புணர்வது ராணுவத்துக்கு வழமை என்று

dondu(#11168674346665545885) said...

"ஆனால் தாணுவுக்கு மறுபக்கம் இருக்கக் கூடாது என்கிற உங்கள் சோ தனமான போக்கு எல்லாருக்கும் தெரியுமாதலால் அதைப்பற்றி பேசுவதை தவிர்க்கிறேன்"
ஏன் தவிர்க்க வேண்டும்? அதைத்தான் எல்லா சந்தர்ப்பங்களிலும் சொல்லி வருகிறீர்களே.

"தாயார் இறந்து போனபோது நூற்றுக்கணக்கில் சீக்கியர்கள் அதுவும் சொந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் கொல்லப்பட்ட ஆலமரம் சாய்ந்தால் அடியிலிருக்கும் சிறு சிறு செடிகள் சில நசுங்கத்தான் செய்யும் என்று ராஜீவ் காந்தி பசப்பவில்லை என்று சொல்லுங்கள் பொத்திக்கொண்டு போகிறேன்."

அடேடே இதை மறந்து விட்டேனே, கோட்ஸே அவ்வாறெல்லாம் செய்யவில்லைதான். நான் கூற வந்ததற்கிணங்க இன்னொரு உதாரணம் கொடுத்ததற்கு மிக்க நன்றி ஈழநாதன் அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

நன்றி சமுத்திரா அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

சூர்ப்பனகை சீதையைக் கொல்ல முயன்றாள். அதற்கு லட்சுமணன் தண்டனை கொடுத்தார்.

ராமர் சீதையை காட்டுக்கு அனுப்பியது பற்றி நான் ஏற்கனவே பின் வருமாறு எழுதியுள்ளேன். பார்க்க, கீழே உள்ள பதிவின் பின்னூட்டத்தில்: http://dondu.blogspot.com/2005/11/blog-post_30.html

"1 ஆண்டு தனியாக இருந்தது ராமரும்தானே, ஆதலால் அவரும் அக்கினிப் பரீட்சைக்கு உள்ளாகியிருக்க வேண்டும். ஆனால் அதை சீதையே கேட்கவில்லை என்பதுதான் சோகம். ஆணாதிக்கம் அக்காலத்திலேயே தலைவிரித்து ஆடியிருக்கிறது.

சீதை காட்டுக்கு தனியான போன நிகழ்ச்சியும் ஒத்துக் கொள்ள முடியவில்லை. சீதையை ராமரால் காப்பாற்ற முடியவில்லை என்பதும் நிஜமே. ஆகவே மன்னராக நீடிக்கும் தகுதி அவருக்கு இல்லை. அவர்தான் பதவியைத் துறந்திருக்க வேண்டும் என்று நான் என் டில்லி நண்பர் சர்மாவிடம் கூறிக் கொண்டிருந்த அன்றுதான் ராமானந்த் சாகரின் உத்திர ராமயணத்தில் அன்று அந்த நிகழ்ச்சி காட்டப்பட்டது. என்ன ஆச்சரியம், சாகரின் ராமாயணத்தில் நான் சொன்ன அதே நிலைப்பாட்டைத்தான் ராமர் எடுக்கிறார். ஆனால் சீதைதான் அதை மறுத்து தானே காட்டுக்குச் செல்வதாக எபிஸோட் அமைந்திருந்தது. இதற்கு ஆதாரம் ராமாயணத்தில் உண்டா என்பது எனக்குத் தெரியவில்லை. இருந்தாலும் என் மனதுக்கு அது ஆறுதலாக இருந்ததே."

நான் மேலே கூறியதற்கு எதிர்வினையாக டி. ராஜ் அவர்கள் எழுதியது:
"நம்ம இஷ்டத்துக்கு இதிகாசாங்களை திரிப்பது சரிதானா? உள்ளதை உள்ளவாறே கூறுவதில் என்ன பிரச்சனை?"

அதற்கு என் பதில்:
"சரியில்லைதான். இருப்பினும் என் அப்பன் ராமன் தவறு செய்தான் என்பதைப் பார்க்க என் மனம் இடம் கொடுக்கவில்லையே? நீரில் மூழ்குபவன் சிறுதுரும்பையும் பற்றுவது இதுதான் போலும். இதனால் நான் அஞ்ஞானி என்று யாரேனும் கூறலாம். அப்படியே இருக்கட்டும், எனக்கு கவலையில்லை."

என்ன ஆதிரை அவர்களே, பதில் கிடைத்ததா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

aathirai said...

ippozudhu ramanand sagar ezhudhiyadhudhan most authentic version poliruku

aathirai said...

பதில் கிடைத்ததா,

அக்னியின் வசம் பாதுகாப்பாக செல்ல என்று எழுதியிருக்கிறீர்கள்.
கஷ்டகாலம். தஞ்சாவூரில் வருஷத்திற்கு 100 பெண்கள் இப்படி
பாதுகாப்பாக சென்றார்கள்.

dondu(#11168674346665545885) said...

"ippozudhu ramanand sagar ezhudhiyadhudhan most authentic version poliruku"

கிடையவே கிடையாது. ராமானந்த் சாகரும் என்னைப் போலவே நினைத்திருக்கிறார் என்றுதான் எனக்குப் படுகிறது.

"அக்னியின் வசம் பாதுகாப்பாக செல்ல என்று எழுதியிருக்கிறீர்கள்.
கஷ்டகாலம். தஞ்சாவூரில் வருஷத்திற்கு 100 பெண்கள் இப்படி
பாதுகாப்பாக சென்றார்கள்."
இது என்ன புது கதை. அக்கினியின் பாதுகாப்பில் சீதை ராவணன் வருவதற்கு முன்னமேயே செல்ல, மாய சீதையைத்தான் ராவணன் கொண்டு சென்றான் என்றும் ஒரு ராமாயண வெர்ஷன் உண்டு. அதையா குறிப்பிடுகிறீர்கள்? பிறகு தஞ்சை விஷயம்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

நன்றி நாட்டாமை அவர்களே. நான் கூற நினைத்ததை நீங்கள் கூறிவிட்டீர்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

இப்னு பஷீர் said...

//யுக யுகமாக பாரத தேசத்தில் போர் தருமம்
என்று கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளது.//

//நிராயதபாணியான பெண்ணின்
மூக்கை வெட்டியது என்ன தருமம்.//

//சூர்ப்பனகை நிராயுத்பாணியல்ல.கொடிய அரக்கி.நகமும்,பல்லும்,வலிமை வாய்ந்த கரங்களுமே அரக்கரின் ஆயுதங்கள்.சூர்ப்பனகை சீதையை கொல்ல முயல்கிறாள்.இலக்குவன் தடுத்திராவிட்டால் சீதை கதி அதோ கதிதான்.//

புரியாமல்தான் கேட்கிறேன். கோட்ஸே காந்திஜியை சுட்டுக்கொன்றபோது, யுகம்யுகமாகவும், குப்தர்களின் காலத்திலும் கடைப்பிடிக்கப்பட்டு வந்த போர்தர்மத்தை கடைப்பிடித்தானா, இல்லையா?

dondu(#11168674346665545885) said...

"புரியாமல்தான் கேட்கிறேன். கோட்ஸே காந்திஜியை சுட்டுக்கொன்றபோது, யுகம்யுகமாகவும், குப்தர்களின் காலத்திலும் கடைப்பிடிக்கப்பட்டு வந்த போர்தர்மத்தை கடைப்பிடித்தானா, இல்லையா?"

உங்கள் வழிக்கே வருகிறேன். முகம்மது நபி அவர்கள் 1400 ஆண்டுகளுக்கு முன்னமேயே கடைபிடித்த போர் தருமங்களை குரான் ஆதாரத்துடன் கூறினீர்கள். முகம்மது நபி இறைவன் தூதர். அவர் செய்தார். அதே மாதிரி பிற்காலத்தில் வந்த இசுலாமிய மன்னர்கள் செய்தார்களா என்று கூற முடியுமா. ஆனால் இங்கு பாரத தேசத்தில் தர்ம யுத்தம் என்பது ஒரு அடிப்படை தத்துவம். அதை சாதாரண மன்னர்களும் செய்தார்கள். அவை சரித்திரத்திலும் ஆவணம் செய்யப்பட்டுள்ளன. தைமூர், முகம்மது கஜினி ஆகியோர் அதை கடைபிடிக்காது, அவர்களை எதிர்கொண்ட இந்திய மன்னர்கள் அதனால் குழம்பிப் போனதும் அவர்கள் தோல்விக்கு ஒரு காரணம்.

தூதனைக் கொல்லக் கூடாது என்ற ஜெனீவா ஒப்பந்தத்தை அது வருவதற்கு முன்னமேயே கடை பிடித்தவர்கள் அக்கால இந்திய மன்னர்கள்.

கோட்ஸே விஷயத்துக்கு வருவோம். அவனைப் பொருத்தவரை காந்திதான் அவனுடைய குறி. அவன் கண்ணோட்டத்தின்படி காந்தி நிராயுதபாணி அல்ல. இதை விளக்குவேன்.

காந்தி தன்னிடமிருந்த அபரிதமான அரசியல் சக்தியை வைத்து பாகிஸ்தானுக்கு சாதகமாக செயலாற்றுவார் என அவன் நினைத்தான். அதை மற்றவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதையும் அவன் அறிந்திருந்தான். ஆகவே தன் கடமையை நிறைவேற்றி விட்டு தூக்குமேடை ஏறினான். ஆனால் காந்தியைக் கொல்லும்போது மற்ற யாவரும் அடிபடக் கூடாது என்றே செயலாற்றினான் என்பதும் சரித்திர உண்மை.

ஆனால் இப்போதைய தீவிரவாதிகள்? எத்தனை பேரை கொல்லமுடியுமோ அத்தனைப் பேரையும் அல்லவா கொல்கிறார்கள்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

"கோட்ஸே வாக்குமுலம் என ஒன்று உண்டு என்பதையே நான் மலர்மன்னன் கட்டுரை மூலம் தான் அறிந்தேன்."
பலருக்கும் இங்கு அதே நிலைதான். கோட்ஸே பற்றிய மறுபக்கத்தை பார்ப்பது என்பது அவன் செயலை நியாயப்படுத்துவதாகாது என்பது நிறைய பேருக்கு புரியவில்லை என்பதுதான் நிஜம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

இப்னு பஷீர் said...

மலர் மன்னன் தனது கட்டுரையின் ஆரம்பத்தில் போர்க்களத்தில் சிப்பாய்கள் சண்டையிட்டுக்கொள்வதை உதாரணம் காட்டி இவ்வாறு எழுதியிருக்கிறார்:
"அந்த இரு மனுஷர்களும் ஒருவரை யொருவர் முன்பின் அறியார். அவர்களில் ஒருவரால் மற்றவருக்கு மரணமே சம்பவித்தாலும், அதற்கு சொந்தக் காரணத்தின் அடிப்படையிலான உள்நோக்கம் ஏதும் இல்லாததால் அது ஒரு கடமையின்பாற்பட்ட கருமமாக அங்கீகரிக்கப்படுமேயன்றி மரண தண்டனை விதிப்பதற்கான குற்றமாகக் கொள்ளப்படமாட்டாது."

கோட்ஸே காந்திஜியை சுட்டுக்கொன்றதை தாம் நியாயப்படுத்தவில்லை என மம கூறிக்கொண்டாலும், அவரது மேற்குறிப்பிட்ட வரிகள் கட்டுரையின் நோக்கத்தை தெள்ளத்தெளிவாக எடுத்துரைக்கிறது. இந்தக் கருத்தையொட்டியே போர்தர்மம் பற்றிய கேள்விகளும் எழுகின்றன. கோட்ஸேவின் தாக்குதல் உள்நோக்கம் ஏதும் இல்லாத ஒரு கடமையின்பாற்பட்ட கருமம் என அங்கீகரிக்கப்படுவதென்றால், அவன் யுகம் யுகமாக பாரதத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த போர்தர்மத்தை கடைப்பிடித்திருந்தால் மட்டுமே அது சாத்தியம். ஆனால் அது அப்படி நடக்கவில்லை என்பதுதான் உண்மை.

கோட்ஸே கடைப்பிடித்தது, அவனுக்கு மட்டுமே அல்லது அவன் சார்ந்திருந்த ஒரு பிரிவினருக்கு மட்டுமே நியாயமாக தெரிந்த ஒரு customized போர்தர்மம்.

கோட்ஸேயின் கண்ணோட்டத்தின்படி காந்திஜி நிராயுதபாணி அல்ல, அவரிடமிருந்த அபரிமிதமான அரசியல் சக்தியை, தான் (கோட்ஸே) சார்ந்திருந்த சமூகத்தின் நலனுக்கு பாதகம் விளைவிக்கக்கூடிய ஒரு பயங்கர ஆயுதமாக அவன் உருவகம் செய்திருந்தான் என்கிறீர்கள். அதனாலேயே அவன் காந்திஜியை கொன்றான் என்கிறீர்கள் அல்லவா? உலகில் இதுவரை நடந்துள்ள அரசியல் படுகொலைகளுக்கெல்லாம் இதுதான் ஒரு பொதுவான காரணம் என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா? அரசியல் காரணங்களுக்காக படுகொலை செய்யப்பட்ட தலைவர்கள் அனைவருமே, ஒன்று தன்னிடமிருந்த அரசியல் சக்தியை ஏதோ ஒருபிரிவினருக்கு பாதகமாக பிரயோகித்திருப்பார்கள், அல்லது பிரயோகிக்க முயன்றிருப்பார்கள். கோட்ஸேவைப் பொறுத்த மட்டில் அவன் தன் கடமையைத்தான் நிறைவேற்றினான் என்றால், மற்ற கொலையாளிகளின் விஷயத்திலும் அப்படித்தான் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

//முகம்மது நபி இறைவன் தூதர். அவர் செய்தார். அதே மாதிரி பிற்காலத்தில் வந்த இசுலாமிய மன்னர்கள் செய்தார்களா என்று கூற முடியுமா. ஆனால் இங்கு பாரத தேசத்தில் தர்ம யுத்தம் என்பது ஒரு அடிப்படை தத்துவம். அதை சாதாரண மன்னர்களும் செய்தார்கள். அவை சரித்திரத்திலும் ஆவணம் செய்யப்பட்டுள்ளன.//

//தூதனைக் கொல்லக் கூடாது என்ற ஜெனீவா ஒப்பந்தத்தை அது வருவதற்கு முன்னமேயே கடை பிடித்தவர்கள் அக்கால இந்திய மன்னர்கள்.//

இந்தியாவை ஆண்ட இஸ்லாமிய மன்னர்கள் அனைவரும் இறைத்தூதரின் வழிகாட்டுதல்களை பின்பற்றினார்கள் என்று என்னால் சொல்ல இயலாது. அதேசமயத்தில் பாரததேசத்து யுத்த தர்மங்களை எல்லா இந்திய மன்னர்களும் கடைப்பிடித்தார்கள் என்பதையும் என்னால் ஒப்புக்கொள்ள இயலாது. எதிரி நாட்டு படைத்தலைவனை நிராயுதபாணியாக தனது முகாமிற்கு வரவழைத்து நட்புறவுடன் அரவணைப்பதுபோல நடித்து தனது கைகளாலேயே அவனது உடலை கீறி கொடூரமாக கொன்ற இந்திய மன்னரைப்பற்றியும்தான் சரித்திர ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

//ஆனால் இப்போதைய தீவிரவாதிகள்? எத்தனை பேரை கொல்லமுடியுமோ அத்தனைப் பேரையும் அல்லவா கொல்கிறார்கள்?// தீவிரவாதிகள் யாராக இருந்தாலும் மத, இன வேறுபாடின்றி கண்டிக்கப்பட வேண்டியவர்கள். பல பேரைக் கொல்பவர்கள்தான் தீவிரவாதிகள், தான் குறிவைத்த ஒரே ஒரு நபரை (அவர் வயோதிகராகவோ, நிராயுதபாணியாக இருந்தால் கூட) கொல்பவர் கடமை வீரர் என்று நிலைப்பாடு எடுப்பது மிக ஆபத்தானது. அது மேலும் இத்தகைய 'கடமை வீரர்கள்' உருவாக வழிவகுக்கும்.

Amar said...

//அதேசமயத்தில் பாரததேசத்து யுத்த தர்மங்களை எல்லா இந்திய மன்னர்களும் கடைப்பிடித்தார்கள் என்பதையும் என்னால் ஒப்புக்கொள்ள இயலாது//

இப்னு,

சந்திர குப்தரின் காலத்தில் இந்தியா வந்த கிரேக்க நாட்டு தூதர்(Selecious Nictorஇன் தூதர்?) மெகஸ்தினிஸ்(Megasthenes) இண்டிகாவில் எழுதியுள்ளார் - ஒருபுறம் விவசாயி விவசாயம் செய்வதும், மறுபுறம் படை போர் செய்வதும் சாதாரனம் என்று.

//எதிரி நாட்டு படைத்தலைவனை நிராயுதபாணியாக தனது முகாமிற்கு வரவழைத்து நட்புறவுடன் அரவணைப்பதுபோல நடித்து தனது கைகளாலேயே அவனது உடலை கீறி கொடூரமாக கொன்ற இந்திய மன்னரைப்பற்றியும்தான் சரித்திர ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
//

சிவாஜி தன்னை கொலை செய்ய வந்த எதிரியை தான் கொன்றார்.எதிரி நிராயுதபானி அல்ல என்பதை சரித்திரம் சொல்கிறது.

"As the two men hugged each other, Afzal Khan nearly stuck a dagger at Shivaji's side, but the Maratha passed his arm around the Khan's waist and, to quote from the admiring biography by Jadunath Sarkar, "tore his bowels open with a blow of steel claws". "

dondu(#11168674346665545885) said...

"பல பேரைக் கொல்பவர்கள்தான் தீவிரவாதிகள், தான் குறிவைத்த ஒரே ஒரு நபரை (அவர் வயோதிகராகவோ, நிராயுதபாணியாக இருந்தால் கூட) கொல்பவர் கடமை வீரர் என்று நிலைப்பாடு எடுப்பது மிக ஆபத்தானது."
மிகவும் உண்மை. கோட்ஸே செய்ததை நான் நியாயப்படுத்தவில்லை. அவனுடைய எண்ண ஓட்டத்தைத்தான் கொடுத்தேன். அவனை விட மோசமானவர்கள் சகட்டுமேனிக்கு கொல்பவர்கள் என்பது ஒரு நுண்ணிய வேறுபாடு.

அது இருக்கட்டும், நீங்களும் என்னுடைய புதுக்கல்லூரியில் நண்பர்கள் நல்லடியார் மற்றும் சலாஹுத்தீன் போல படித்தவரா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

நன்றாகச் சொன்னீர்கள் சமுத்திரா Tintin அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Amar said...

ராமாயனம் பற்றி நான் அறிந்த ஒரே விஷயம் இது தான் :

நான் படித்த ராமாயனத்தில் ராவணனின் நல்ல குனங்கள் பற்றியும் எடுத்து சொல்லபட்டு உள்ளது.

அவனின் பத்து தலைகள் என்பது அவனின் பத்து விதமான characterstics என்றும் சொல்வார்கள்.

அதில் நாலு நல்லது, அறு கெட்டது என்றும் நினைக்கிறேன்.

ராவணனின் சிவபக்தி பற்றி புகழ்வது, அதே சிவனை ராமனும் வழிபடுவது....இதையல்லாம் படித்தாலாவது தெரியவேண்டும்....ஹூம்.

dondu(#11168674346665545885) said...

நன்றாகச் சொன்னீர்கள் சமுத்திரா அவர்களே.

அனுமன் இலங்கையின் அழகை நோக்கும்போதும் ராவணன் தூங்குவதைப் பார்க்கும்போதும் அவன் மனதில் ஒரே சோகம். இப்படி பெருமை வாய்ந்த மன்னனும் அவன் அழகிய இலங்கையும் அம்மன்னனின் முட்டாள்தனத்தால் அழியப்போகிறதே என்று.

ராமரின் சிவ பக்தி பற்றி. சிவனே ராமரின் இஷ்ட தெய்வம். அதே போல ராமருக்கு சேவை செய்யவே அனுப்பப்பட்டவர் சிவ அம்சமான அனுமன். மாப்பிள்ளையும் மைத்துனனும் ஒருவர் மேல் இன்னொருவர் கொள்ளும் அன்பில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல. இப்போது நான் போட்ட ஒரு பதிவை இங்கு அப்படியே தருவேன். (பார்க்க: http://dondu.blogspot.com/2005/08/1.html)

ராமர் இலங்கை நோக்கிச் செல்லுமுன் சிவனுக்கு பூஜை செய்கிறார். ராமரின் பூஜையை சிவனும் பார்வதியும் வானுலகத்திலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கீழிருந்த வண்ணம் ராமரும் அவர்களை அவ்வப்போது புன்முறுவலுடன் பார்க்கிறார். பூஜை முடிந்ததும் ராமர் அனுமனிடம் தான் பூஜை செய்த இடம் இனி ராமேஸ்வரம் என்று அழைக்கப்படும் எனக் கூறுகிறார். அந்தப் பெயரின் காரணம் குறித்து அனுமன் வினவ, ராமர் முதலில் ராமேஸ்வரன் பெயருக்கு பொருள் கூறுகிறார். அதாவது யார் ராமனுக்கு ஈஸ்வரனோ அவனே ராமேஸ்வரன் என்று.

அப்போது வானிலிருந்து சிவன் தன் பக்கத்தில் அமர்ந்திருக்கும் பார்வதியை நோக்கிக் கூறுகிறார்: "உமா, பார்த்தாயா? எவ்வாறு என் பிரபு ராமபிரான் ராமேஸ்வரனின் அர்த்தத்தை சாமர்த்தியமாக மாற்றி விட்டார்" என்று. விஷ்ணுவின் தங்கை பார்வதிக்கு அண்ணன் புகழ் கேட்டு ஒரே பெருமை. இருப்பினும் தெரியாதது போலக் கேட்கிறார்.

"அப்படியா சுவாமி, ராமேஸ்வரன் யார் என்று நீங்கள்தான் கூறுங்களேன்" என்று. அதற்கு சிவன் அவர்கள் கூறுகிறார். "யாருடைய ஈஸ்வரன் ராமனோ அவனே ராமேஸ்வரன்" என்று. உமை அவர்கள் "அப்படியா, உங்கள் இருவரில் யார் கூறுவது சரி" என்று கேட்க, சிவன் "நான்தான், ஏனெனில் நான் கள்ளம் கபடமற்றவன் (போலாநாத்) அல்லவா என்று கூற, உமையின் புன்னகை இன்னும் அதிகமாகிறது. சிவனின் திருவிளையாடல்கள் அவருக்கு ஞாபகம் வந்திருக்கும் போல.

ராமர் கீழிருந்து வானத்தை நோக்கி வணங்க, சிவன் வானத்திலிருந்து அவருக்கு பதில் வணக்கம் போடுகிறார். இவை அத்தனையும் ராமானந்த் சாகரால் எடுக்கப்பட்ட ராமாயணத் தொடரில் எண்பதுகளில் நான் பார்த்தேன். ஹிந்தி எனக்கு நன்றாகத் தெரியுமாதலால் நான் இக்காட்சியை முழுமையாக ரசித்தேன்.

இன்னொரு காட்சி. இதை நான் எழுத்தாளர் நாடோடி அவர்கள் எழுதிய கட்டுரையில் படித்தேன். வால்மீகியில் இது உண்டா எனத் தெரியாது.

தன் மனைவியைத் தேடி ராமர் காட்டில் "சீதே, சீதே" என்று பிரலாபித்தவாறு அலைகிறார். மேலிருந்து பார்த்துக் கொண்டிருக்கும் சிவன் ராமரைப் பரம்பொருளாக வணங்க, பார்வதிக்கு ராமரைப் பரீட்சித்துப் பார்க்க வேண்டும் என்ற என்ணம். பூவுலகுக்கு வந்து சீதையைப் போல வேடம் தரித்து ராமர் முன்னால் வருகிறார். ராமரோ அவரைக் கண்டதும் வணங்கி "இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் பார்வதி அவர்களே, சிவன் அவ்ர்களை விசாரித்ததாகக் கூறவும்" என்று கூறுகிறார். இதுவும் நான் ரசித்தக் காட்சி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

இங்கு பலரும் மலர்மன்னன் என்ன historian- ஆ, அவர் சமீபகாலமாகத்தான் எழுதிவருகிறார் என்றெல்லாம் குறிப்பிட்டிருந்தனர்.

அது சம்பந்தமாக மலர் மன்னன் நேற்று இரவு என்னுடன் தொலைபேசினார். அதற்கு முன் ஒரு மின்னஞ்சலும் அனுப்பினார். அவர் தன்னுடைய அறிமுகமாகக் கூறியதை நான் இங்கு சுருக்கிக் கூறுவேன்.

அவர் கோட்ஸே பற்றி எழுதியது திண்ணையில் கற்பக விநாயகம் என்பவர் எழுதியதற்கு எதிர்வினையே. அவருக்கு பதிலளிப்பதுதான் மலர் மன்னன் ராஜாஜி அவர்கள் கல்விக் கொள்கையை பற்றி எழுதியதற்கும் முக்கியக் காரணம்.

திண்ணை கோ. ராஜாராம் மற்றும் வெசா அவர்கள் கேட்டுக் கொண்டதன் பேரிலேயே மலர்மன்னன் திண்ணையில் எழுதினார். மேலும் அவருக்கு உலகின் பல பாகங்களிலிருந்தும் எழுதச் சொல்லி வாசகர்களிடமிருந்து மெயில்கள் வந்தன.

தமிழ் பத்திரிகைகளின் போக்கு பிடிக்காமல் அவர் 20 வருடங்களாக அவற்றில் ஆன் தி ஸ்பாட் ரிப்போர்டுகள் எழுதுவதில்லை. ஆனால் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் தினமணி எடிட்டோரியல் பக்கத்தில் வரும் ரிப்போர்டுகளை எழுதி வந்திருக்கிறார். ஐராவதம் மஹாதேவன் மற்றும் கஸ்தூரிரங்கன் ஆகியோர் அப்போது ஆசிரியர்கள். இம்மாதக் காலச்சுவட்டிலும் அவர் கிரீஷ் காசரவல்லியின் கன்னட படத்ததைப் பற்றியும் பாடநூல்களில் உள்ளத் தகவல் பிழைகளளயும் பற்றி கட்டுரைகள் எழுதியுள்ளார். 2005 அமுதசுரபி தீபாவளி மலரிலும் கதை எழுதியுள்ளளர். பெங்களூரில் அவர் வசித்த போது டெக்கான் ஹெரால்டுக்கும் விஷயததனம் செய்திருக்கிறார். அது பற்றியத் ட்ஹகவல்கள் திண்ணையில் கிடைக்கும்.

அவருடைய ஆராய்ச்சிசார் காலாண்டு சஞ்சிகை '1/4' கல்வியாளர்கள் மற்றும் இலக்கியவாதிகள் வட்டங்களில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்தியவியல் துறை கொண்ட எல்லா கலாசாலைகளும் அந்த சஞ்சிகைக்கு சந்தாதாரர்கள். அவரது சிறுகதை தொகுப்பு Amudhasurabi Publications (Sriram Trust) ஆல் அச்சிடப்பட்டுள்ளது. அதில் உள்ள பெரும்பான்மை கதைகள் பல முன்னணி தமிழ் சஞ்சிகைகளால் கேட்டுப் பெறப்பட்டன. தொகுப்பின் பெயர் “மலர்மன்னன் கதைகள்”.

இன்னொரு விஷயத்தையும் அவர் இங்கே தெளிவுபடுத்தினார். இந்துத்வா என்பது கெட்ட வார்த்தையில்லை. அவர் இந்துத்த்வாவைப் பின்பற்றுபவர். எந்த அரசியல் கட்சியையும் நிறுவனத்தையும் சேராதவர். ஆனால் எல்லா இந்துத்வா நிறுவனங்களுடனும் இந்து நலனைப் பேணும் கட்சிகளுடனும் நெருங்கிய தொடர்பு உண்டு.

அதே சமயம் அவர் அடிப்படையில் ஒரு கடந்த காலப் பத்திரிகையாளர். ஆகவே செய்தி அளிப்பதில் பத்திரிகை தர்மத்தைப் பேணுபவர். அத்தருணங்களில் செய்திகளுடன் தன் கருத்தைப் போட்டு குழப்பிக் கொள்ளாதவர். ஆகவே அவர் அளித்த செய்திகள் எல்லா கட்சிக்காரர்களாலும் நம்பத்தகுந்ததாக ஏற்கப்பட்டன.

மேலும் சரித்திர ஆய்வாளர்கள் என்றெல்லாம் ஒரு தனி க்வாலிஃபிகேஷன் கிடையாது. உண்மையைக் கூறப்போனால் பத்திரிகையாளர்கள்தான் மிக நம்பிக்கைக்குகந்த சரித்திரக்காரர்கள். பத்திரிகைக்காரர்கள் கொடுப்பதை வைத்துத்தான் கடந்த மூன்று நூற்றாண்டுகளாக சரித்திரம் எழுதப்பட்டு வந்துள்ளது. அதே போல பழங்காலப் பிரயாணிகளும் பத்திரிகையாளர் கடமையையே செய்தனர். அவர்கள் எழுதியதே பிற்காலத்தில் சரித்திரமாயிற்று.

மலர் மன்னன் இக்காலத்து 'investigative' magazinesகளின் கிசு கிசு எழுத்தாளர்கள் போல இல்லை. அல்ல. அவர்கள்தான் வாசகர்களைக் கவர வம்பு செய்திகள் அளித்து போட்டி போடுகின்றனர்.

மலர்மன்னன் நிகழ்ச்சிகள் நடக்கும் இடங்களுக்கே சென்று ஆராய்ச்சிகள் செய்து எழுதுபவர். பிறகு அவற்றை ஃப்ரீலேன்ஸ் முறையில் பல பத்திரிகைகளுக்கு அளிப்பவர். அதில் வரும் பணம் அவர் செலவுகளுக்கு பயன்படுகிறது. அவர் எழுதிய ரிப்போர்ட்டுகள் இசுலாமியர் மற்றும் கிறித்துவர்கள் நிலைகளை பலவீனப்படுத்துவதாக இருந்ததால் மதசசர்பர்ற முத்திரை வெண்டி பத்திரிகைகள் அவர் எழுதியதைத் தவிர்க்க ஆரம்பித்தன. அதனால் அவருக்கு பலத்த பொருட்சேதம் ஏற்பட்டது. மக்களுக்கு உண்மை கூறுவதால் அவருக்கு ஏற்பட்ட நஷ்டம் அது. இதனால் எலாம் அவர் வருத்தம் அடையவில்லை. இந்துத்த்வாவைத் தனது கொள்கை என்று அறிவிப்பதில் அவருக்கு எவ்விதத் தயக்கமுமில்லை. இதனால் அவர் எழுதிய ரிப்போர்ட்டுகள் நிராகரிக்கப்பட்டாலும் அவருக்கு கவலை இல்லல. தன் கடமையை செய்வதில் வரும் மகிழ்ச்சியே அவருக்கு போதும்.

அவர் எழுத்தாளர் என்பதை விட ஆக்டிவிஸ்ட் என்றே தன்னை குறிப்பிட்டுக் கொள்கிறார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

பதிவு இற்றைப்பட மாட்டேனென்கிறது. என்னவென்று தெரியவில்லை.

நல்லடியார் said...

1993 இல் நாதுராம் கோட்சேயின் "Why I Assassinated Mahatma Gandhi" என்ற புத்தகத்தை வெளியிட்டுப் பேசிய கோபால் கோட்சேயிடம் FRONTLINE பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில்

"All the [Godse] brothers were in the RSS. Nathuram, Dattatreya, myself and Govind. You can say we grew up in the RSS rather than in our home. It was like a family to us. Nathuram had become a baudhik karyavah [intellectual worker] in the RSS. He has said in his statement that he left the RSS. He said it because [Madhav Sadashiv] Golwalkar and the RSS were in a lot of trouble after the murder of Gandhi. But he did not leave the RSS.” [See issue of 28 January 1994] என்றார். "

கோட்சே சகோதரர்களாகிய நாங்கள் நாதுராம், தத்தரேயா, நான் மற்றும் கோவிந்த் ஆகியோர் RSS இல் இருந்தோம்; அது (RSS) எங்களுக்கு குடும்பம் மாதிரி இருந்தது. நாதுராம் பவுதிக் கார்யவாஹ் (சிந்தனையாளர்) ஆக இருந்தார். கோட்சேயின் வாக்குமூலத்தில் RSS ஐ விட்டு விலகியதாகச் சொன்னது மாதப் சதாசிவ ல்வார்க்கரும் மற்ற கொலையாளிகளும் கடும் நெருக்கடியில் இருந்ததால்தான்; ஆனால் கடைசிவரை RSS இல்தான் இருந்தார்" (பார்க்க ஃப்ரண்ட் லைன் 28-01-1994).

மேலும் காந்தியாரை கோட்சே சுட்ட போது ஆர்.எஸ்.எஸ்ஸில் இல்லை; இந்து மகா சபையில்தான் உறுப்பினராக இருந்தார்" என்று ஒன்றைக் கிளப்பி ஆர்.எஸ்.எஸ்ஐக் காப்பாற்றப் பார்க்கிறார்கள்.

அப்படியே பார்த்தாலும் ஆர்.எஸ்.எஸ் வேறு அல்ல - இந்து மகா சபையும் வேறு அல்ல! பஜ்ரங்தள் வேறு; விசுவ ஹிந்து பரிஷத் வேறு என்று சொல் அளவில் சொல்லலாமே தவிர, உண்மையில் இவை இரண்டும் சங்பரிவார் என்கிற தலைப்புக்குள் வரவில்லையா? 1930-களில் இந்து மகா சபையுடன் ஆர்.எஸ்.எஸ் உறவுகள் சுமூகமாக இல்லை. ஆனால் சில ஆண்டுகளில் பரஸ்பரம் பலன் அளிக்கிற முறையில் மாறின. மகாசபையின் இளைஞர் அணியாக தாருன் இந்து சபாவை நிறுவிய பாபுராவ் சவார்க்கர் 1931-ஆம் ஆண்டில் அந்த ஸ்தாபனத்தை ஆர்.எஸ்.எஸ்ஸுடன் இணைத்தார்.

திரு.டோண்டு அவர்களின் நியாயங்களும் கண்ணோட்டங்களும் விசித்திரமாக உள்ளன. அதாவது காந்தியை சுட்டவன் RSS ஐச் சார்ந்தவனாக இருந்திருப்பின் பள்ளி பாடப்புத்தகங்களில் அப்படி சொல்லப்படவில்லையே? என்று அப்பாவித்தனமாக கேட்டிருந்தார்.

தமிழக அரசு இந்தக் கல்வியாண்டில் பிளஸ் டூ வரலாற்றுப் பாடப் புத்தகத்தில் "சுதந்திரத்துக்குப் பின் இந்தியா" என்ற தலைப்பில் பாடம் ஒன்றை சேர்த்துள்ளது. 157வது பக்கத்தில் உள்ள இந்தப் பாடத்தில் காந்தியைக் கொன்றவர் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்ற வாசகம் இடம் பெற்றுள்ளதையும் இதனை தமிழக ஆர்எஸ்எஸ் தலைவர் மாரிமுத்து மறுத்து வழக்கு தாக்கல் செய்துள்ளதையும் திரு.டோண்டு அவர்கள் அறியவில்லையா?

பாதகன் கோட்சே காந்தியின் சுதந்திரபோராட்ட பங்களிப்பை போற்றத் தவறவில்லை என்றும் காந்தியார் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தான் என்றும் சொல்லும் இவர்கள், காந்தியார் ஓர் அரக்கன் என்றும், அவரைக் கொன்ற கோட்சே கடவுள் என்றும் விளம்பரப்படுத்தும் நாடகத்தை (மை நாதுராம் கோட்சே போல்தே!) சில ஆண்டுகளுக்கு முன்புவரை டில்லியிலும் மும்பை யிலும் நடத்திடக் கூச்சப்படாதவர்கள் எதற்காக கோட்சேயை ஆர்.எஸ்.எஸ்.காரன் அல்லன் என்று சொல்ல முயற்சிக்கிறார்கள் என்பது புரியவில்லை.

மேலும் கோட்சே காந்தியைக் கொல்வதில் மட்டுமே குறியாக இருந்தான், அருகில் இருந்தவர்களைக் கொல்லவில்லை" என்ற வாதம், எப்படி கோட்சேயின் செயலை நியாயப்படுத்தும் என்று தெரியவில்லை. மேலும் கோட்சேயின் பேட்டியில்

"We did not want this man (Gandhi) to live. We did not want this man to die a natural death, even if 10 lives were to be lost for that purpose"

அதாவது இந்த மனிதரை (காந்தியை) நாங்கள் வெருக்கிறோம். இவருக்கு இயற்கை மரணம் சம்பவிப்பதை நாங்கள் விரும்பவில்லை. இதற்காக பத்து உயிர்கள் பலியானாலும் கவலை இல்லை" என்றதையும் வசதியாக மறந்து விட்டனர்.

பி.கு: உங்கள் பதிவின் மேற்கண்ட சுட்டியை என் இணைப்பிலிருந்து சுட்ட முடியவில்லை. மேலும் விரிவாக என் பதிவிலும் பதிந்துள்ளேன்.

மாப்பிள்ளமார் பற்றியும், காந்தியின் கடைசி வார்த்தைகள் பற்றியும் தனிப்பதிவாக வைக்கிறேன்

அன்புடன்,

dondu(#11168674346665545885) said...

"அதாவது காந்தியை சுட்டவன் RSS ஐச் சார்ந்தவனாக இருந்திருப்பின் பள்ளி பாடப்புத்தகங்களில் அப்படி சொல்லப்படவில்லையே? என்று அப்பாவித்தனமாக கேட்டிருந்தார்."

மன்னிக்கவும் நல்லடியார். கோட்ஸே தன் கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்திக் கொண்டு இசுலாமியர்கள் மேல் கொலைப்பழி வர வேண்டும் என முயற்சி செய்தான் என்று இப்னு பஷீர் அவர்கள் எழுதியதைப் பற்றித்தான் நான் அவ்வாறு குறிப்பிட்டேன்.

"மேலும் கோட்சே காந்தியைக் கொல்வதில் மட்டுமே குறியாக இருந்தான், அருகில் இருந்தவர்களைக் கொல்லவில்லை" என்ற வாதம், எப்படி கோட்சேயின் செயலை நியாயப்படுத்தும் என்று தெரியவில்லை."
யாரும் நியாயப்படுத்தவில்லை. இருப்பினும் இப்போதையத் தீவிரவாதிகள் எவ்வளவு பேரை கொல்ல முடியுமோ அவ்வளவு பேரை போட்டுத் தள்ளத்தான் பார்க்கிறார்கள் என்பதை வெறுமனே ஒப்பிட்டேன் (உதாரணம் கோவை வெடிகுண்டு, பார்லிமெண்ட் மேல் தாக்குதல், ஸ்ரீபெரும்பதூர் கொலை, இரட்டைக் கோபுரத் தகர்ப்பு, பெங்களூர் விஞ்ஞானக் கழகப் படுகொலைகள் ஆகியவை).

"உங்கள் பதிவின் மேற்கண்ட சுட்டியை என் இணைப்பிலிருந்து சுட்ட முடியவில்லை."
நானும் கவனித்தேன். ப்ளாக்கர் சொதப்பலே இதற்குக் காரணம். பரவாயில்லை, நீங்கள் குரிப்பிட்டது போல என் வலைப்பூவிலிருந்து இப்பதிவை அடையலாம்தானே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

நல்லடியார் said...

//இப்போதையத் தீவிரவாதிகள் எவ்வளவு பேரை கொல்ல முடியுமோ அவ்வளவு பேரை போட்டுத் தள்ளத்தான் பார்க்கிறார்கள் என்பதை வெறுமனே ஒப்பிட்டேன் //

என்ன டோண்டு சார் இவ்வளவு அப்பாவியாக இருக்கீங்க. சுமார் அறுபது வருடங்களுக்கு முன் இருந்த ஒரு தீவிரவாதியும் இன்று இருப்பவர்களும் ஒன்றா? அன்று கோட்சே வைத்திருந்தது நாட்டுத் துப்பாக்கி. தற்கால தீவிரவாதிகள் யாரும் கோட்சேயினுடையது போன்ற சுதேசி ? துப்பாக்கிகள் வைத்திருக்கவில்லை என்பது கூடவா உங்களுக்கு தெரியாது?

//கோட்சேயின் செயலை நியாயப்படுத்தும் என்று தெரியவில்லை."
யாரும் நியாயப்படுத்தவில்லை/

ஒரு பக்க வாதத்தையும் குற்றச்சாட்டையும் மட்டுமே இதுவரை பார்த்து வந்திருக்கிறோம். அதன் மறுபக்கத்தையும் பார்க்க வேண்டும் என்பதற்கு என்ன அர்த்தம்?

//பள்ளி பாடப்புத்தகங்களில் அப்படி சொல்லப்படவில்லையே? என்று அப்பாவித்தனமாக கேட்டிருந்தார்."

மன்னிக்கவும் நல்லடியார். கோட்ஸே தன் கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்திக் கொண்டு இசுலாமியர்கள் மேல் கொலைப்பழி வர வேண்டும் என முயற்சி செய்தான் என்று இப்னு பஷீர் அவர்கள் எழுதியதைப் பற்றித்தான் நான் அவ்வாறு குறிப்பிட்டேன்//

கோட்சே காந்தியை சுட்டான் என்று சொல்வது மட்டும்தான் பள்ளிக் குழந்தைகளுக்கான வரலாறு. மேற்படி சங்கதியை சுட்டிக் காட்டி மதவெறியை தூண்ட வேண்டும் என்பது அன்றைய ஆட்சியாளர்களின் எண்ணமாக இருந்திராததால், அதை தவிர்த்திருக்கலாம்.

கோட்சே அவ்வாறு பச்சை குத்தியிராவிட்டால் எப்படி அவ்வளவு தெளிவாக "இஸ்மாயில்" என்ற பெயரைச் சொல்லி குற்றம் சாட்ட முடியும் என்ற கோணத்திலும் சிந்திக்கவும்.

அன்புடன்,

dondu(#11168674346665545885) said...

நல்லடியார் அவர்களே,

பள்ளிப்பாடப் புத்தகங்களை விடுங்கள். இஸ்மாயில் நிகழ்ச்சி வேறு எங்குமே இத்தனை நாட்களாகச் சொல்லப்படவில்லையே. அது உண்மையாயிருந்தால் இத்தனை நாட்கள் ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்புப் பத்திரிகைகளில் போட்டுக் கிழித்திருப்பார்கள் அல்லவா.

நான் ஏற்கனவே கூறியிருந்தபடி அவன் முஸ்லிம் வேடமணிந்து வந்து தப்பித்திருந்தால் இன்னும் மோசமான விளைவுகள் அல்லவா ஏற்பட்டிருக்கும். மற்றவர்கள் தன்னைக் கொல்வார்கள் கையில் உள்ள பச்சையை பார்த்து இசுலாமியர் என்று முடிவு செய்வார்கள் என்பதெல்லாம் கொக்குத் தலையில் வெண்ணெய் வைத்துப் பிடிப்பஹ்டு போல அல்லவா உள்ளது?

இஸ்மாயில், அப்துல்லா, ஹுஸையின் என்று எல்லாமே இசுலாமியப் பெயர்கள்தானே. கதை விட்டவருக்கு அப்பெயருடையவரை பிடிக்காது போல. குட்டி ரேவதி பெயரும் சிலருக்கு பிடிக்கவில்லை அல்லவா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

நல்லடியார் said...

//மற்றவர்கள் தன்னைக் கொல்வார்கள் கையில் உள்ள பச்சையை பார்த்து இசுலாமியர் என்று முடிவு செய்வார்கள் என்பதெல்லாம் கொக்குத் தலையில் வெண்ணெய் வைத்துப் பிடிப்பஹ்டு போல அல்லவா உள்ளது?//

தற்கொலைப் படையில் இணைந்து எதிரியைக் கொல்லும் தீவிரவாதிகள் பாகிஸ்தான் லேபில் (Lable) போட்ட காலணிகள் அணிந்திருந்தார்கள், மொபைல் போன் சகிதம் தாக்குதலுக்கு வந்தார்கள் என்பதையும் நாம் நம்பும்போது மேற்சொன்ன குற்றச்சாட்டையும் நம்பித்தான் ஆக வேண்டி இருக்கிறது.

நல்லடியார் said...

"இந்தியா-பகிஸ்தான் பிரிவினை என்பது என் பிணத்தின் மீதுதான் சாத்தியமாகும்" என்று சொன்ன காந்தி பிரிவினைக்கு துணையாகி விட்டார் என்ற கோபத்தில் நியாயம் இருந்தால், பிரிவினைக்குப் பிறகு அரசியல் பலனடைந்த நேரு, படேல் போன்ற உயர் சாதி இந்துக்களின் மீதும் அல்லவா கோட்சேக்கு கோபம் இருக்க வேண்டும்?

78 வருடங்கள் எங்கள் ஆட்சியில் பாதுகாக்கப்பட்ட காந்தியின் உயிரை இரண்டு வருடம் கூட சுதந்திர இந்தியர்களால் காக்க முடியவில்லை என்ற அவப்பெயரும் நமக்கு வந்திருக்காதல்லவா?

dondu(#11168674346665545885) said...

"தற்கொலைப் படையில் இணைந்து எதிரியைக் கொல்லும் தீவிரவாதிகள் பாகிஸ்தான் லேபில் (Lable) போட்ட காலணிகள் அணிந்திருந்தார்கள், மொபைல் போன் சகிதம் தாக்குதலுக்கு வந்தார்கள் என்பதையும் நாம் நம்பும்போது மேற்சொன்ன குற்றச்சாட்டையும் நம்பித்தான் ஆக வேண்டி இருக்கிறது."
என்ன நல்லடியார் இவ்வளவு அப்பாவியாக இருக்கீங்க. சுமார் அறுபது வருடங்களுக்கு முன் இருந்த ஒரு தீவிரவாதியும் இன்று இருப்பவர்களும் ஒன்றா? (!!!!)

(புதுக்கல்லூரியில் என் ஜூனியரை நான் எப்போதுதான் ரேக்கிங்க் செய்வதாம்?)

பிரிவினைக்கு மூல காரணமே காந்தி என்றுதானே கோட்ஸே நினைத்தான்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

இப்னு பஷீர் said...

//மன்னிக்கவும் நல்லடியார். கோட்ஸே தன் கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்திக் கொண்டு இசுலாமியர்கள் மேல் கொலைப்பழி வர வேண்டும் என முயற்சி செய்தான் என்று இப்னு பஷீர் அவர்கள் எழுதியதைப் பற்றித்தான் நான் அவ்வாறு குறிப்பிட்டேன்.//

மன்னிக்கவும் டோண்டு சார், இதை நானாக எழுதவில்லை. கே.இ.என் மற்றும் கே.எஸ் ஹரிஹரன் எழுதிய "இந்துத்துவாவின் அரசியல் பரிணாம வளர்ச்சி" என்ற புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாக திரு.நாராயணன் அவரது பதிவில் எழுதியிருந்ததையே நான் குறிப்பிட்டேன். நாராயணனின் பதிவின் சுட்டியையும் கொடுத்திருந்தேன்.

dondu(#11168674346665545885) said...

கண்டிப்பாக இப்னு பஷீர் அவர்களே. ஹரிஹரன் புத்தகத்தை பற்றி நாராயணன் எழுதி அதை இங்கு இப்னு பஷீர் எழுதி - மூச்சு எடுத்து கொள்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

இறைநேசன் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://copymannan.blogspot.com/2006/01/blog-post_19.html

1) கல்யாணம் அவர்கள் பேட்டியிலிருந்து:
"புத்தகங்கள் வழியேயும் சில திரைப்படங்கள் வழியேயும் ஒட்டு மொத்த மக்களின் மனதில் இடம் பிடித்த ஒரு காட்சி, காந்திஜி "ஹே ராம்" என்று முனகிக் கொண்டு கடைசி மூச்சு விடும் காட்சி ஆகும். அவரின் இறுதிச்சடங்குகள் நடந்த ராஜ்காட் - ஸ்மிருதி மண்டபத்தின் மார்பிள் பலகைகளில் கூட மிக அழகாக "ஹே ராம்" என்று பொறித்து வைத்திருக்கிறார்கள். காங்கிரசில் உள்ள தீவிர ஹிந்துத்துவ வாதிகளான ஒரு சில தலைவர்களின் கூர்புத்தியில் உதித்த சிந்தனை தான் இந்த "ஹே ராம்" என்ற காந்தியின் கடைசி அழைப்புக்கு பின்னால் உள்ளது. காந்திஜி ஒரு அதி தீவிர ராம பக்தராக இருந்தார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் சங்க்பரிவாரின் ராமனல்ல காந்தியின் சிந்தனையில் இருந்த ராமன். அது போலவே பகவத் கீதையின் வரிகளைச் சிந்தையுள் கொண்டு தான் தன்னுடைய ஒவ்வொரு நாளின் தொடக்கமும் இருக்கும் என்று பலமுறை காந்திஜியே கூறியிருக்கிறார்."


2)அப்பேட்டியில் காந்தி அவர்களின் கொலையை கல்யாணம் இவ்வாறு வர்ணித்தார்:

"1948 ஜனவரி 30 அன்று பிரார்த்தனை நேரத்தில் நாதுராம் வினாயக் கோட்சேயின் கையிலிருந்த நாட்டுத் துப்பாக்கியிலிருந்து புள்ளி இடைவெளியில் 5 க்கும் மேற்பட்ட குண்டுகளை தனது நெஞ்சில் வாங்கி ஒரு முறை துடிப்பதற்கு கூட நேரம் கிடைக்காமல் அந்த வயோதிகன் கீழே விழுவதை கண்ட சாட்சிகளில் நானும் ஒருவனாக இருந்தேன். ஒரு முறை முனகுவதற்கு முன்பே ஜீவன் அவர் உடம்பிலிருந்து பிரிந்திருந்தது. டில்லி போலீசை பாதுகாப்பு பரிசோதனைகளில் இருந்து விலக்கிய மகாத்மா, ஒரு கணக்கில் மரணத்தை விலை கொடுத்து வாங்கினார் என்று தான் கூற வேண்டும்."

3)மலர்மன்னன் கூறியது:
"காந்திஜி சுடப்பட்ட போது அவரது அருகில் இருந்தவர்களில் கல்யாணமும் ஒருவர். குண்டு பட்டதும் முதியவரான காந்தி சிறு முனகலுடன் கீழே சாய்ந்தார். அந்த முனகலைத்தான் பிற்பாடு "ஹே ராம்' என்ற அழைப்பாகப் பதிவு செய்துவிட்டார்கள்! காந்திஜி "ஹே ராம்' என்றெல்லாம் சொல்லவில்லை என்பதற்கு கல்யாணம் சாட்சி! மக்கள் மத்தியில் காந்திஜியை ஒரு மஹானாக நிறுவுவதற்காக மேற்கொள்ளப்பட்ட கற்பிதங்களுள் இந்த "ஹே ராம்' சமாசாரமும் ஒன்று!"

ஆக ஹே ராம் என்று காந்தி அவர்கள் கூறவில்லை என்று இருவருமே கூறிவிட்டார்கள்தானே.

4) அற்புத மனிதராம் இறை நேசன் அவர்கள் இப்போது 'பெண் கற்பு நிலை புகழ் திருவாளர் டோண்டு' (ரொம்பத்தான் புகழுகிறீங்க சார்-இது நான் இங்கு கூறுவது) அவர்களிடம்
எழுப்பும் ஒரே ஒரு கேள்வி:
"* கோட்சே கையில் "இஸ்மாயில்" என்று பச்சை குத்தியிருந்தான் என்று யாரோ கூறியவுடன் ஏதோ மலர் மன்னன் பெரிய வரலாற்று ஆய்வாளர் போல் அவரிடம் உடனே போன் செய்து கேட்டு இல்லை என்று கூறினீர்களே! இப்பொழுது கூறுங்கள் காந்தி கொலை விஷயத்தில் யார் கூற்றை ஏற்றுக் கொள்கிறீர்கள்?"

உங்கள் ஆசையைக் கெடுப்பானேன் கோட்ஸே கையில் இஸ்மாயில் என்றெல்லாம் பச்சை குத்திக் கொண்டதாக சம்பவ இடத்தில் இல்லாத கே.இ.என் மற்றும் கே.எஸ் ஹரிஹரன் கூறுவதை ஒத்துக்கொள்வதை விட அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என்று தெளிவாக்கிய கல்யாணத்தைத்தானே நீங்களும் ஒத்துக் கொள்கிறீர்கள் அல்லவா? மிக்க நன்றி.

இப்பின்னூட்டத்தை என் தனிப்பதிவில் போடுவதை விட காந்தியும் கோட்ஸேயும் என்ற என் பதிவிலேயே நகலிட்டு விடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/01/blog-post_15.html

என் நண்பர்கள் பார்த்தால் சந்தோஷப்படுவார்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

பின் குறிப்பு: இரு முறை முயன்றும் அவர் பதிவில் என் பின்னூட்டம் விழவில்லை.

dondu(#11168674346665545885) said...

"இப்போது உள்ளது போல (சக்திவாய்ந்த வெடிகுண்டுகள்) வசதிகள் இருந்திருந்தால் கோட்சேயும் இப்பொழுது தீவிரவாதிகள்
செய்வது போலவே செய்து பலரை கொன்றிருப்பார்.."
மிகவும் நாசம் விளைவிக்கும் கையெறி குண்டுகள் அக்காலத்திலும் உண்டு ஸ்வாமி. எதையோ கூற வேண்டுமென்பதற்காக சொல்லாதீர்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

Dear Netbean,

I inadvertently pressed the accept button. Thanks for the information about Poli Dondu.

But it would have caused complications had this comment found a place here. Hence my deleting it. Please don't mistake me.

Regards,
Dondu Raghavan

K.R.அதியமான் said...

A hypothetical question :

If there were no foreign or
alien invasions and empires
in India (incl Alexander)
and esp the Muslim and Bristish
invasions , would India be
a political union as formed
in 1947 ?

My view is that we would have
become a cluster of nations
like Africa or Europe with
a common culture and heritage
but no political union.

even in 1947, with mass movements
of Congress and awareness of
people, Sardar Patel had a very
tough time in integrating the
reluctunt and rebellioous Princes
and Maharajas with India (or Pak).
Nawab of Hyderabad and Junagedh ;
and Travancore Maharaja with
C.P.Ramasamy Iyer's help
declared independence.....

It is inconceivable that these
warring states (like Chola, Cheras)
would have willingly united to
form unified India.

the British Raj created some very
useful and fruitful institutions
as a side effect. English language,
common civil service, Railways,
Macaluay system of education and
independent judiciary ; and the
rudiments of paliament. We use
the Westminister model of parliamentary
democracy with universal adult
franchise.

the Bristish empire was bad and
exploitative no douubt. But it
gave us political unity like
never before....

K.R.அதியமான் said...

We cannot compare Gandhiji's and Rajiv Gandhi's assasinations. with the security around Rajiv, no one could have pulled a pistol in from of him. and in 1947, belt bombs and RDX were not so easily available. if Gandhiji had the same kind of security as Rajiv and had co-operated with the police, then Godse would have used a belt bomb.

And i find no difference between Godse's act and a jihad sucide bomber. anger, revenge and a self-righteous act. but the jihadis are fighting for a cause or freedom for thier people. (but i don;t justify such violence). but the majority of the 'Hindus' did not concur with Godse. and there were many mis-concepts abot Gandhiji and partition. no one could have prevented it. and the seeds were sown much before with the alienation of muslims by the leadership of Congress by hindu conservatives and the rise of hindu mahasaba.

and Rajaji was far sighted and right as usual in seeing the inevitablity of partition. and fundamental rights of any people are much more important than any concepts of Bharatha desam. i consider myself a citizen of the world and a human being first.
if a group of people wants to go separate (thru democratic means like referendem, etc) then it is their right to do so.
Pls see the plight and violations in Chechenya. no wonder muslims around the world feel alienated and have developed a siege mentality.

and finally, in my native village i have never met any "Hindu" ;
only gounders, chettiyars and daliths. the word or concept "hindu" is totally new and alien there. only caste differences exist even today.

and Bal Thackarey had a excellent defintion for Hinduthva : that is
all 'hindus' shouild vote only for BJP !!

Anonymous said...

Where is the Hindu Holocaust Museum?

Rewriting Indian History: Book review by CJS Wallia:
Atanu Dey, January 29th, 2008

The following is a review of Francois Gautier's Rewriting Indian History. (New Delhi: Vikas Publishing 1996). The reviewer is C J S Wallia who writes:

From my own perspective as a secular humanist, I believe that any whitewashing of historical record is counterproductive. No matter how lofty the ideals of a current cause, any whitewash of history tempts the fates. To forget history will always be fateful; to forgive its horrendous facts can be redemptive. Forgive — but never forget — history.

I, like the millions of others of my generation, grew up basically ignorant of Indian history as I had only been taught the Nehruvian pseudo-secular socialist government-sanctioned propaganda "history." Now it is time that we free ourselves from the government brainwashing by reading alternative viewpoints critically. I bow deep in gratitude to the internet gods for allowing some light to shine through the darkness that Nehru imposed.

The review is continued below the fold.

[The following text is by C J S Wallia.]

Rewriting Indian History is a provocative new book by the French writer Francois Gautier, who currently serves as the political correspondent in India for France's top newspaper, Le Figaro, and for Switzerland's leading daily, Le Nouveau Quotidien. Having lived in India for 25 years has helped him "to see through the usual cliches and prejudices in India to which I subscribed for a long time, as most foreign (and sometimes, unfortunately, Indian) journalists, writers, and historians do."

Rewriting Indian History,the author prefaces, "might well be called an antithesis" for it questions many of the assumptions in the "standard" treatises by Euro-centered colonialist historians and their imitations by Indian Marxist writers.

Gautier focuses mainly on the Muslim period of India's history. "Let it be said right away: the massacres perpetrated by Muslims in India are unparalleled in history, bigger than the holocaust of the Jews by the Nazis; or the massacre of the Armenians by the Turks; more extensive even than the slaughter of the South American native populations by the invading Spanish and Portuguese."

However, the British, in pursuing their policy of divide-and-rule, colluded "to whitewash" the atrocious record of the Muslims so that they could set up the Muslims as a strategic counterbalance to the Hindus. During the freedom struggle, Gandhi and Nehru went around encrusting even thicker coats of whitewash so that they could pretend a facade of Hindu-Muslim unity against British colonial rule. After independence, Marxist Indian writers, blinkered by their distorting ideology, repeated the big lie about the Muslim record.

Gautier cites two eminent historians who wrote free of any colonialist or ideological agendas, basing their accounts on documents by contemporary Muslim chroniclers themselves: Alain Danielou in Histoire de la Inde: "From the time Muslims started arriving, around 632 AD, the history of India becomes a long, monotonous series of murders, massacres, spoilations, destructions. It is, as usual, in the name of 'a holy war' of their faith, of their sole God, that the barbarians have destroyed civilisations, wiped out entire races." And the well-known American historian Will Durant in The Story of Civilization: "…the Islamic conquest of India is probably the bloodiest story in history. It is a discouraging tale, for its evident moral is that civilization is a precious good, whose delicate complex order and freedom can at any moment be overthrown by barbarians invading from without and multiplying from within." (From my perspecive as a secular humanist, and my own experience, I regard a typical liberal Indian Muslim to be as good a human being as any other Indian.)

Gautier should have continued with the Will Durant quote: "The Hindus had allowed their strength to be wasted in internal division and war; they had adopted religions like Buddhism and Jainism, which unnerved them for the tasks of life; they had failed to organize their forces for the protection of their frontiers and their capitals, their wealth and their freedom, from the hordes of Scythians, Huns, Afghans and Turks hovering about India's boundaries and waiting for national weakness to let them in. For four hundred years (600-1000 A.D.) India invited conquest; and at last it came. This is the secret of the political history of modern India. Weakened by division, it succumbed to invaders; impoverished by invaders, it lost all power of resistance, and took refuge in supernatural consolations; it argued that both mastery and slavery were superficial delusions, and concluded that freedom of the body or the nation was hardly worth defending in so brief a life. The bitter lesson that may be drawn from this tragedy is that eternal vigilance is the price of civilization. A nation must love peace, but keep its powder dry."

About Gandhi's whitewash of Muslims, Gautier observes:

"Ultimately, it must be said that whatever his saintliness, his extreme and somehow rigid asceticism, Gandhi did enormous harm to India… The British must have rubbed their hands in glee: here was a man who was perfecting their policy of divide-and-rule, for ultimately no one contributed more to the partition of India, by his obsession to always give in to the Muslims; by his indulgence of Jinnah, going as far as proposing to make him the prime minister of India."

Worse yet, Gandhi's anointed disciple, Nehru, propagated false readings of Indian history in his books and speeches. Gautier quotes Nehru's "amazing eulogy" of the tyrant Mahmud Ghazni, the destroyer of Mathura's great Hindu temples, Gujarat's Somnath, and numerous other Hindu and Buddhist temples. When Nehru, the arrant appeaser of Muslims, became India's first prime minister, he appointed a fundamentalist Muslim, Maulana Abul Kalam Azad, as the first education minister. Under Nehru's pseudo-secular rule, "Hindu-bashing became a popular pastime." Moreover, Nehru "had a great sympathy for communism…. He encouraged Marxist think-tanks such as the Jawaharlal Nehru University [JNU] in New Delhi, which has bred a lot of 'Hindu-hating scholars' who are adept at negating Muslim atrocities and running to the ground the greatness of Hinduism and its institutions." These Marxist "historians," well-ensconced at JNU, have long been masterminding the politically correct textbooks of India's history used in Indian schools. No wonder, JNU is also known as "the Kremlin by the Jumna." For a long time, the Indian Marxists had been so brainwashed that whenever it rained in Moscow — the capital of their "only true fatherland"– they opened their umbrellas in Delhi.

To be sure, dissenting voices were raised against Gandhi's whitewash of Muslims. Before the partition of India, Aurobindo Ghosh, the great Hindu poet-philosopher, posed the question about Islam:

"You can live with a religion whose principle is toleration. But how is it possible to live with a religion whose principle is 'I will not tolerate you'? How are you going to have unity with these people?… I am sorry they [Gandhi and Nehru] are making a fetish of Hindu-Muslim unity. It is no use ignoring facts; some day the Hindus will have to fight Muslims and they must prepare for it. Hindu-Muslim unity should not mean the subjection of Hindus. Each time the mildness of the Hindus has given way. The best solution would be to allow the Hindus to organise themselves and Hindu-Muslim unity will take care of itself, it will automatically solve the problem. …I see no reason why the greatness of India's past or its spirituality should be thrown into the waste basket, in order to conciliate the Muslims who would not be conciliated by such policy."

Another strong dissenter was Sardar Vallabhbhai Patel. Seeing through Nehru's pseudo-secularism, Patel commented, "There's only one nationalist Muslim in India: Jawarharlal Nehru."

Gautier warns:

"Even today, there is no doubt that Islam has never been fully able to give up its inner conviction that its own religion is the only true creed and that all others are kafirs, infidels. In India it was true 300 years ago, and it is still true today. Remember the cry of the militants in Kashmir to the Pandits: 'convert to Islam or die!' … The Hindu-Muslim question is just plainly a Muslim obsession, their hatred of the Hindu pagans, their contempt for this polytheist religion. This obsession, this hate, is as old as the first invasion of India by the original Arabs in 650 AD. After independence, nothing has changed: the sword of Allah is still as much ready to strike the kafirs, the idolaters of many gods."

The source of Muslim's fanatical aggression, Gautier points out, is the Koran itself, from which he quotes: "Slay the infidels, wherever ye find them and prepare them for all kind of ambush"; and "Choose not thy friends among the infidels till they forsake their homes and the way of idolatory. If they return to paganism then take them whenever you find them and kill them."

In the section on Ayodhya, Gautier says that demolishing the Babri Masjid has proved that Hindus too can fight. He criticizes Nehruvian "secularism" as interpreted by the Congress party to mean "giving in to the Muslims' demands, because its leaders never could really make out if the allegiance of Indian Muslims is first to India and then to Islam or vice-versa." For many of India's Hindu journalists, this pseudo-secularism has meant "spitting on their own religion and brothers." Curiously, Gautier does not mention Arun Shourie's well-researched, lucidly articulated columns, which, in recent years, have laid bare the pretentions of Nehruvian pseudo-secularism.

From my own perspective as a secular humanist, I believe that any whitewashing of historical record is counterproductive. No matter how lofty the ideals of a current cause, any whitewash of history tempts the fates. To forget history will always be fateful; to forgive its horrendous facts can be redemptive. Forgive — but never forget — history. A salient example of making sure that the horrors of history are not forgotten is the contemporary German state's law prohibiting any World War II history that whitewashes the holocaust perpetrated by the Nazis on the Jews, Gypsies, and Poles. The Jews rightly insist that the world must never forget what happened to them. Where is the Hindu Holocaust Museum?

The historical record of the Muslim rule in India is soaked in blood — just take a look at the documents left by contemporary Muslim chroniclers. Yet, as a secular humanist, I would like to make a distinction between an ideology and its adherents, especially those born into it. From my own experience, I regard a typical liberal Indian Muslim to be as good a human being as any other Indian.

In the opening chapter, Gautier briefly examines the "tainted glasses" which made Euro-centered historians expound gross "disinformations" about ancient India: the discredited Aryan invasion theory; the deliberate mistranslations of the Vedas; and the erroneous theory of the origin of the caste system.

Throughout the book, Gautier quotes Sri Aurobindo, and in the concluding chapter, "The Final Dream," pays an inspired homage to the great visionary's writings.

Like Konraad Elst's Negationism in India: Concealing the Record of Islam, Francois Gautier's Rewriting Indian History contributes to the growing literature of dissent against the "standard" textbooks of India's history.

[Please note: The above text is not written by me. I did not put it within blockquotes for formatting reasons. The source of the review is here http://www.indiastar.com/wallia10.htm.]

http://www.deeshaa.org/2008/01/29/rewriting-indian-history-book-review-by-cjs-wallia/

Anonymous said...

Sunday 27 January 08–
International Holocaust Remembrance Day

Posted 25-Jan-08
Mauritius Times

It is astonishing that this Remembrance Day, in memory of THE most barbaric genocide in mankind’s modern history, was designated by the United Nations General Assembly only two years ago. 27 January 1945 was the liberation date of Auschwitz-Birkenau, the largest Nazi death camp. It was the shock and awe brought about by the Holocaust that gave birth to the United Nations Charter, replacing the League of Nations; representatives of 50 countries agreed to keep peace, encourage co-operation between nations and defend human rights. There does not seem to be clear primary information sources explaining the reasons that took the parliament of the world -- the UN general Assembly – 60 years after its coming into being, to designate the International Holocaust Remembrance Day. The more so being given that it was the Holocaust itself that triggered the setting up of the UN.

At its sixtieth session, on 21 November 2005, the General Assembly took note of “the fact that the sixtieth session of the General Assembly is taking place during the sixtieth year of the defeat of the Nazi regime.” It honoured “the courage and dedication shown by the soldiers who liberated the concentration camps,” reaffirmed that the Holocaust “will forever be a warning to all people of the dangers of hatred, bigotry, racism and prejudice,” and resolved that the 27 January would be an “annual International Day of Commemoration in memory of the victims of the Holocaust.”

The General Assembly urged Member States “to develop educational programmes that will inculcate future generations with the lessons of the Holocaust in order to help to prevent future acts of genocide.”

It is hoped that the Mauritian government, as a Member State of the UN, will organise some sensitisation programme on the Holocaust; even on its website, which the young probably peruse more than the written press. The lessons learnt from this genocide are not altogether disconnected from our multi-ethnic realities.

Reactions to the Holocaust

Opposing views to the commemoration of the Holocaust serve as yet more reminders to the continuing messy relations among nations. Last year the Iranian President publicly called the Holocaust “a myth” and called for the State of Israel to be “wiped off the map”. The UN resolution rejects denial of the Holocaust.

François Gautier, born in Paris in 1950, arrived in India when he was 19. He was a writer, journalist and correspondent for well-known publications in France, but he fell in love with India and became a staunch supporter of Hindu nationalist movements. His observation, wrongly or rightly, contribute to some food for thought on other past massacres: “The massacres perpetrated by the Muslims in India are unparalleled in history, bigger than the Holocaust of the Jews by the Nazis; or the massacre of the Armenians by the Turks; more extensive even than the slaughter of the South American Native populations by the invading Spanish and Portuguese.”

But that does not mean that the Holocaust Remembrance Day should not be observed with all the dignity it deserves, by all nations.

Full Article
http://www.mauritiustimes.com/250108ramyead.htm

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது