பஞ்சதந்திரம் படத்தில் எல்லாமே அமர்க்களமான சீன்கள்தான். அவற்றில் சிறந்தது வண்டியை போலீஸ் சோதனையிடும் காட்சி. “பின்னாடி, முன்னாடி என்ன இருந்தது என தெளிவாக இன்ஸ்பெக்டர் வாசு விக்ரம் கேட்க ஆரம்பிக்கும் குழப்படி சீனைத்தான் நான் குறிப்பிடுகிறேன்.
அதில் பின்னாடி டிக்கி, ஸ்டெப்னி, மாகி என ஒவ்வொருவராக உளற, ஐஸ் காப்பி என நினைத்து போதை பொருளை உட்கொண்ட நாகேஷ் மாகி ஸ்டெப்னியில்லை, மனைவி என உளற மேலே செல்கிறது அந்த சீன். நமக்கு இங்கு வேண்டியது ஸ்டெப்னி என்னும் சொல்தான். சரியோ தவறோ ஸ்டெப்னி என்பது சின்ன வீட்டைக் குறித்துச் சொல்லப்படும் சொல்லாகி விட்டது. அதே சின்ன வீடு வைப்பாட்டியைக் குறிக்கும் சொல்லாக மாறியது நான் கூற வருவதற்கு வலு சேர்க்கிறது என்றால் மிகையாகாது.
இது எல்லா மொழிகளுக்கும் பொருந்தும். ஹிட்லர் காலத்தில் Endlösung (கடைசி தீர்வு என்னும் சொல் 60 லட்சம் யூத மரணத்தில் முடிந்தது எல்லோருக்கும் தெரிந்தது. இப்போது ஜெர்மனியில் வேறு எந்த பிரச்சினையை தீர்ப்பதற்காக பேசும்போதும் போதும் அதே Endlösung வார்த்தையை பிரயோகிக்கும்போது டிஸ்கியெல்லாம் போட நேர்ந்தாலும் ஆசசரியப்படுவதற்கு இல்லை.
அதே போல அந்த கால கட்டத்தில் ஒரு ஊரிலுள்ள யூதர்களை ஓரிடத்தில் திரட்டி அவர்களை ஒரு வதைமுகாமுக்கு அனுப்புவதும் வழக்கம். அவ்வாறு எல்ல்லோரையும் வரச்சொல்லும் இடத்துக்கு Umschlageplatz (எல்லோரையும் திரட்டி வழி அனுப்பும் இடம்) என்று அழைத்தார்கள். அந்த சாதாரண ஜெர்மன் வார்த்தையை இப்போதும் உபயோகித்தாலும் கேட்பவர் மனதை என்னவோ செய்வதைத் தடுக்க முடிவதில்லை.
முதலிரவு முடிந்ததும் பெண்ணின் தாயார் பெண்ணிடம் சந்தோஷமாக இருந்தீர்களா என கேட்பது வழக்கம். அதற்கு தூய தமிழில் உவத்தல் எனப்பெயர். அதுவே ஓத்தாவாயிற்று. அது பலரது தினசரி வார்த்தையாடல்களில் அனாயாசமாக புகுந்து செல்லும்போது வேறும் ஓசையாகி விட்டது. தன் கையிலிருந்து தங்கை தனது பேனாவை பறித்துக்கொண்டு ஓடுவதை குறிக்க பையன் “அம்மா தங்கச்சி என் கிட்டேயிருந்து பேனாவை ஓத்துட்டு போயிடுத்தும்மா என சொல்லும் அள்விற்குக் கூட சென்று விட்டது.
பல வசை சொற்கள் இவ்வாறு தினசரி வார்த்தையாடல்களில் வருவது குறித்து ஜெயமோகன் இவ்வாறு எழுதுகிறார்.
உதாரணமாக கேரளத்தில் மயிர் என்றால் கெட்ட வார்த்தை. அந்தரங்கமயிரை இது குறிக்கும். முடி என்றால் நல்ல வார்த்தை. ஆக, உடலில் ஒருபகுதியை வெளியே காட்டக்கூடாது, அதைப்பற்றிப் பேசக்கூடாது என்ற சமூகச் சீராக்கத்தின் விதிக்கு எதிரான ஒரு மீறலே இங்கே கெட்டவார்த்தையாக ஆகிறது.
நூற்றுக்கு தொண்ணூறு கெட்டவார்த்தைகள் வரைமீறிய பாலுறவைச் சார்ந்தவை. நம் சமூகசீராக்கத்தின் மிகமுக்கியமான, மிகக் கடுமையான விதி என்பது தாயுடனான பாலுறவை தடைசெய்தல்தான். ஆகவே கெட்டவார்த்தைகளில் தாயோளி போன்ற வார்த்தைகள் பெரிதும் புழங்குகின்றன. இதற்கு அடுத்தபடியாக அக்கா தொடர்பானவை. தாயின் அந்தரங்க உறுப்புகள் தொடர்பான சொற்கள் கெட்டவார்த்தையாக ஆவது அவற்றை எண்ணவும் பேசவும் சமூகத்தடை இருக்கிறது என்பதனாலேயே.
///////////////////////////////////////////////////////////////////////////////////////////
மேலும் கெட்டவார்த்தைகள் எல்லா சமூகங்களிலும் அனுமதிக்கப்பட்டிருக்கின்றன. ஒரு நிபந்தனையுடன் — சொல்லிச்சொல்லி அவை தேய்ந்துபோயிருக்க வேண்டும்! கேட்டால் அது கெட்டவார்த்தையாகவே காதுக்குப் படக்கூடாது. பலவருடங்கள் முன்பு நானும் நண்பரும் சில்வெஸ்டர் ஸ்டாலோன் நடித்த ஒரு படம் பார்த்தோம். அதில் ஸ்டாலோன் ‘·பக்‘ என்ற வார்த்தையை தவிர்த்து நாலைந்து வார்த்தைகள் மட்டுமே சொல்கிறார். ”ஹாலிவுட் படமுல்லா மச்சான்..உலகம் முழுக்க போகணுமில்லா…அதனாலதான் உலகம் முழுக்க தெரிஞ்ச டைலாக்க மட்டும் வச்சிருக்கான்”என்றார் நண்பர்.
///////////////////////////////////////////////////////////////////////////////////////////
எங்களூர் இயக்குநர் ஒருவர் உண்டு. அவருக்கு கமா என்ற எழுத்துக்கான ஒலி தாயளி தான். அது மருவி தாளி. ”எங்கப்பா என்னமாதிரி மேடையிலே பேசுவார்னு நெனைக்கிறீங்க…சைவசித்தாந்தம் பத்தி பேசினா தாளி கொன்னு எடுத்திருவார்” கெட்டவார்த்தைகள் அர்த்தபூர்வமாக அமரும் இடங்களும் உண்டு
மீண்டும் டோண்டு ராகவன். அடப்பாவி என கருணாநிதி எம்ஜிஆரை ஒரு சமயம் குறிப்பிட, எம்ஜீஆரோ பாவி என்றால் சாது எனவும் பொருள் உண்டு எனக்கூறி நிகண்டு ஆதாரம் காட்டியதில் கருணாநிதி அசடு வழிந்ததும் எனக்கு ஞாபகத்துக்கு வருகிறது.
சொற்கள் சிதைவு என்னளவிலும் நடந்துள்ளது. இப்போதெல்லாம் பல பிளாக்கர்கள் சமீபத்தில் என்று குறிப்பிட நேரும்போது டோண்டு ராகவனின் சமீபம் அல்ல என டிஸ்கி போடுவதும் சமீபகாலமாக புழங்கி வருகிறது’
அன்புடன்,
டோண்டு ராகவன்
Les Surhommes de Pondichéry : 1.Bharati : L’élixir d’immortalité, c’est le
« Soi ».
-
Quand le soleil brille, que la neige scintille et que la pluie tombe, la
nature se pare de ses plus beaux atours. Les poètes sont conviés à partager
la fél...
1 day ago

1 comment:
சொற் புதிர் நன்று.........
"நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com"
Post a Comment