6/03/2010

சாதியே கூடாது என்னும் பதிவர்கள் அடிக்கும் கூத்து

சாதி என்பதே ஏதோ சொல்லக்கூடாத வார்த்தை என கூத்தடிக்கும் பதிவர்களுக்காகவே இப்பதிவு.

எதற்கு இந்த ஆஷாடபூதித்தனம்? சாதி என்பது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஏதேனும் ஒரு முறையில் இருந்து வந்திருக்கிறது என்றால், அதற்கு பலமான சமூக காரணங்கள் இருந்திருக்க வேண்டும்தானே. அதையெல்லாம் மனதில் கொள்ளாது அதனால் விளையும் சில சங்கடங்களை மட்டும் மனதிலிருத்தி, அதை அப்படியே ஒழிக்க வேண்டும் எனக்கூறுவது தவறு என்பதை விட பிராக்டிகல் இல்லை என்றுதான் கூறவேண்டும்.

நான் ஏற்கனவேயே பலமுறை கூறியபடி அவரவர் வீட்டில் கல்யாணம் வீட்டுப் பெரியவர்களால் நிச்சயம் செய்யப்படும்போது சுய சாதியில்தான் வரன் தேடுகின்றனர். அப்படியின்றி ஆரம்ப ஜோரில் கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்களின் குழந்தைகள் படும்பாடு அக்குழந்தைகள் கல்யாண வயதுக்கு வரும்போது வெளிப்படையாக தெரிகிறது. அதையெல்லாம் கூட விட்டு விடுவோம், ஏனெனில் பலமுறை கூறப்பட்டுள்ளவை, ஆகவே இன்னொரு முறை கூறி எப்பயனும் இல்லை.

அதே போல சாதி ஒழிப்புக்காக பாடுபடுவதாக பொய்யுரைக்கும் கட்சிகளும் கூட தேர்தல் சமயத்தில் தங்கள் வேட்பாளர்களின் சாதி அவர்கள் கேட்கும் தொகுதிக்கு மேட்ச் ஆகிறதா என்றுதான் பார்க்கின்றனர்.

அதே சாதி மேட்டர் நமது பதிவுலகில் படுத்தும் பாட்டையும் பார்ப்போம்.

பார்வதி அம்மாள் மேட்டரில் டோண்டு ராகவன் பதிவு போட்டானா? அவ்வளவுதான் சீறி எழும் சாதி எதிர்ப்பு செம்மல்கள் முதலில் அடையாளப்படுத்துவது அவனது பார்ப்பன சாதியைத்தான். இது ஒன்றும் ரகசியமில்லைதான், ஆனால் அவர்களது பார்ப்பன வெறுப்புதான் அப்படி வெளியே வருகிறது. அதற்கு முக்கியக்காரணமே அந்தந்த சாதியினர் தம் குழந்தைகளுக்கு சிறுவயதிலிருந்தே சொல்லிக் கொடுத்ததுதான். பாப்பானுங்களெல்லாம் அப்படித்தான் என சர்வ சாதாரணமாகக் கூறிவிடும் அம்மாதிரி சாதிபுத்தியுடன் செயல்படும் பெரியவர்களை பார்த்து வளர்ந்த அக்குழந்தைகளில் பலர் இப்போது பதிவர்கள். அவர்கள் வேறு எப்படி எழுதுவார்கள்?

பார்ப்பனர் யாரும் தளத்தில் அப்போது இல்லை என்றால் என்ன செய்வார்கள்? பதிவர் வளர்மதி செய்தது போல செய்வதும் உண்டு. சுகுணா திவாகரிடமிருந்து கடனாக வாங்கிய கணிசமான தொகையை திருப்பித்தர மனமில்லையென்றால் என்ன செய்யலாம்? ஆகா கிடைத்து விட்டதே சாக்கு? சுகுணா பிள்ளைமார் சாதியை சார்ந்தவர். அவர் சாதிப்புத்தியைத்தான் காட்டுகிறார். கூடவே போனசாக சுகுணாவின் தோழர் வரவனையானும் பிள்ளைமார் என உண்மையுரைத்தால் வம்புக்கு அலைபவர்கள் வேண்டாம் என்றா கூறப்போகிறார்கள் என்பதும் அவரது அனுமானமாக இருக்க வேண்டும். (இன்னும் க்டன் திருப்பித் தரப்படவில்லை).

அதுவரை தெரியாது இருந்த சுகுணா திவாகர் மற்றும் வரவனையானின் பிள்ளை சாதி வேர்கள் தெரிந்ததுதான் மிச்சம். மற்றவரை வாய் கூசாது பாப்பான், பாப்பார புத்தி என்றெல்லாம் ஏசும், போலி டோண்டு தன் வீட்டுப் பெண்களையும் திட்டினால் கூட அவனுக்கு கருத்து சுதந்திரம் அளிக்க வேண்டும் என்றெல்லாம் பேசிய சுகுணாவே தன்னையும் சாதிபுத்தி எனத ஒருவன் திட்டியபோது மனம் ஒடிந்து பதிவுலகையே விட்டுப் போகிறேன் என்று கூத்தும் நடந்து முடிந்ததில் அவரது இரட்டைநிலை வெளியில் வந்ததுதான் மிச்சம். அதே சமயம் உத்தபுரம் விவகாரத்தில் தனது சாதியினர் செய்த வன்கொடுமை பற்றி அவர் பேசியதாகத் தெரியவில்லையே என்ற உண்மையும் மனதில் படுகிறது.

சமயம் கிடைக்கும்போதெல்லாம் பாப்பான் பாப்பான் என திட்டிய அருள் என்னும் பெருந்தகை ஒரு படையாச்சி என்பது வினவு பதிவு ஒன்றில் அவர் இட்ட பின்னூட்டங்களிலிருந்து தெரிய வர, நான் அதுகுறித்து போட்ட இப்பதிவில் வந்து மேலும் தனது வன்னிய பாசத்தை வெளிப்படுத்திய அவரது வண்டவாளம் மேலும் தண்டவாளமேறியது இன்னொரு தமாஷ்.

நர்சிம் சந்தனமுல்லை விவகாரம் இன்னொரு eye opener. அது பற்றிய வினவின் பதிவில் நர்சிம் பார்ப்பனர், பைத்தியக்காரன் என்னும் சிவராமன் இன்னொரு பார்ப்பனர், ஜ்யோவ்ராம் சுந்தர் பார்ப்பனர் (ஏற்கனவே தெரிந்த விஷயம்தான்), சாருநிவேதிதாவின் மனைவி பார்ப்பனர், இன்று நர்சிம்முக்கு ஆதரவு தரும் யுவகிருஷ்ணா, அதிஷா, இரும்புத்திரை… ஆகியோர் சாருநிவேதிதாவின் அபிமானிகள் என்ற காரணத்திற்காகவே நர்சிம்மை வெட்கம், நேர்மை, சுரணையின்றி ஆதரிக்கிறார்கள் என்றெல்லாம் தாராளமாக ‘உண்மைகள்’ அவிழ்த்துவிடப்பட்டுள்ளன.

ஆனால் சந்தனமுல்லையின் சாதியை கூறாது கவனமாக தவிர்த்துவிட்டது வினவின் அப்பதிவு. அதனால் என்ன அவர் வன்னியர் என்பதை எதிர் கேம்ப் போட்டுக் கொடுத்தது மட்டுமின்றை ஆர்கூட்டில் வன்னியர்கள் குழுவிலும் இருக்கிறார் என்றும் கூறிவிட்டதே. சிவராம் பார்ப்பனீய சிந்தனைகள் இல்லை என வினவு கூறினாலும் அப்படியில்லை என சுகுணா திவாகர் பிள்ளைவாள் அழுத்தம் திருத்தமாக கூறிவிடுகிறார்.

இப்போது என்னவென்றால் யார் யாரை தாக்குகிறார்கள் என்பதே புரியவில்லை. இந்த அழகில் சிவராமன் நர்சிமிடம் கணிசமான கடன் வாங்கியுள்ளார் என்பது வேறு தெரிய வருகிறது. நர்சிம்மின் முதுகில் குத்திய பின்னால் அவர் அந்தக் கடனையெல்லாம் கொடுத்துவிடுவாரா அல்லது இன்னொரு வளர்மதியின் கதை வருமா என்பதை பார்க்க வேண்டியுள்ளது. தன் ந்ண்பரானாலும் அவரை கண்டித்தேன் என பெருமையாகக் கூறிக்கொள்ளும் சிவராமன் தனது நண்பனுக்கு சந்தனமுல்லையால் ஓராண்டுக்கும் மேலாக வந்த டார்ச்சர் பற்றி கணமேனும் நினைத்துப் பார்த்ததாகத் தெரியவில்லை.

மேலும் உதாரணங்கள் கொடுத்துக் கொண்டே போகலாம், ஆனால் எனக்கே போர் அடிக்கிறது. ஆகவே இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். ஒரே ஒரு வார்த்தை. சாதியே பார்க்காதவர்கள் என கூறிக்கொள்ளும் பெருந்தகைகள் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்வது நலம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்


பின்சேர்க்கை
நான் இப்பதிவை இட்ட பிறகுதான் ஜ்யோவ்ராம் சுந்தர் மற்றும் பைத்தியக்காரனின் லேட்டஸ்ட் பதிவுகளை படித்தேன்.

சிவராமுக்குத்தான் எத்தனை இழப்புகள்? தேவையா பைத்தியக்காரன் உங்களுக்கு இதெல்லாம்? நர்சிமிடம் பணம் ‘கடனாக வாங்கியதை’ குறிப்பிட்டதும் நீங்களே. நர்சிம் இதுவரை எங்கும் அதை சொன்னதாக நான் அறியவில்லை. இப்போது அதை நீங்கள் திருப்பித் தருவதைத் தவிர வேறு வழியில்லை. அதற்கு வினவோ சந்தனமுல்லையோ உங்களுக்கு உதவப் போகிறார்களா?

ஒரு சகபார்ப்பனரை இகழ்வதில் அப்படி என்ன மகிழ்ச்சி? அதனால் எல்லாம் உங்களுக்கு இணைய தாசில்தார்கள் ஏதேனும் சான்றிதழ் தந்துவிடப் போகிறார்களா? ஆனால் ஒன்று உங்களை திட்டவும் அதே இணைய தாசில்தார்கள் நீங்கள் பார்ப்பான் என்பதை உபயோகப்படுத்திக் கொள்ளுவார்கள். ஆணாதிக்கம் பார்ப்பனருக்கு மட்டும் உரியதா? மற்ற சாதிக்கார ஆண்கள் அத்தனைபேரும் பெண்ணிய வாதிகளா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

201 comments:

«Oldest   ‹Older   201 – 201 of 201
Unknown said...

Dear arul,

plese look what vasanth told.palli(vanniyar) weared so called poonul because they are warrier clane.ponnul is common to brahmin,warrior,vaishya.

«Oldest ‹Older   201 – 201 of 201   Newer› Newest»
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது